Saturday, November 22, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by ஆசாத்

ஆசாத்

ஆசாத்
26 பதிவுகள் 0 மறுமொழிகள்

கர்நாடகா: கொலைகார சாமியாரும், நீதிக்காகப் போராடும் மக்களும்

0
ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்த முக்கியக் குற்றவாளியான சாலூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி, உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகக் கூறி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தான். இதனால் மனமுடைந்து போன கர்நாடக உயர்நீதிமன்றம் ‘பிரசாதத்தில்’ நஞ்சு கலந்து 17 பேரைக் கொன்ற கொலைகாரனுக்கு கருணையுடன் சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ம.பி. விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. தலைவர்

0
பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாகர், அவருடைய அடியாட்கள் என 18 பேர் கொண்ட கும்பல் விவசாயி ராம் ஸ்வரூப் சுற்றிவளைத்து மரக் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆத்திரம் அடங்காமல் அவர் மீது டிராக்டரை ஏற்றியுள்ளது. இதில் அவருடைய கால்கள் முற்றிலுமாக நொறுங்கி வலியில் துடித்துள்ளார்.

மயிலாடுதுறை: ஆதிக்கச் சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட தலித் இளைஞர்!

0
தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படம் ஒட்டியிருப்பதைப் பார்த்த அக்கும்பல் அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக வசைபாடியுள்ளது. இரு சக்கர வாகனத்தின் சாவியைக் கொண்டு தமிழரசனின் முதுகில் கிழித்து கொடூரத் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளது.

மேற்குவங்கத்தில் மீண்டுமொரு மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை

1
ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவது உள்ளிட்டு தண்டனைகளைக் கடுமையாக்கும் சிறப்புச் சட்டத்தை மம்தா அரசு நிறைவேற்றியது. ஆனால், அதன் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்கதை ஆகியிருப்பதானது, அரசின் திசைதிருப்பல் நாடகங்களை திரை கிழிக்கிறது.

உ.பி-யில் தலித் இளைஞரை அடித்துக் கொன்ற கொடூரம்!

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலியில் அக்டோபர் 1-ஆம் தேதியன்று தலித் இளைஞரை ஆதிக்க சாதிவெறி கும்பல் அடித்து படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா: கழிவுநீர் தொட்டியில் விசவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி!

1
கேரள மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ்நாட்டைச் சார்ந்த மூன்று தொழிலாளர்கள், விசவாயு தாக்கி பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

உ.பி: இஸ்லாமியப் பெண்ணிற்கு பிரசவம் பார்க்க மறுத்த சங்கி மருத்துவர்

0
ஜான்பூர் மாவட்ட மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 30 அன்று காலை இஸ்லாமியக் கர்ப்பிணிப் பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், அவர் இஸ்லாமியர் என்ற காரணத்திற்காக இந்து மதவெறி பிடித்த பெண் மருத்துவர், கர்ப்பிணிப் பெண்ணிற்குப் பிரசவம் பார்க்க மறுத்துள்ளார்.

மின்வாரிய ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் தி.மு.க. அரசு

0
வாக்குறுதி 153-இல் மின்வாரியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்யப்போவதாக தி.மு.க வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில், மின்வாரியத்தில் 13 வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்ற 10,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை தற்போது வரை பணி நிரந்தரம் செய்யாமல் வஞ்சித்து வருகிறது.

வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலுக்கு பச்சைக்கொடி காட்டும் உச்சநீதிமன்றம்

0
பாசிச கும்பலின் எதிர்ப்பிற்கு ஆளாகாமல் இருப்பதற்கு சட்டத்தை இரத்து செய்யாமல், சில விதிகளுக்கு மட்டும் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனை எவ்வாறு இஸ்லாமிய மக்களுக்கு ஆதரவான நடவடிக்கை என்று வரவேற்க முடியும்? இது இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாகும்.

உத்தரப்பிரதேசம்: தலித் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் சாதிய அடக்குமுறைகள்!

0
பா.ஜ.க-வை சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசத்தில் தலித் மக்கள் தன்னுடைய பணத்தைத் திருப்பிக் கேட்டதற்காகவும், பொதுசாலையில் ஆடு அசுத்தம் செய்ததற்காகவும் ஆதிக்கச் சாதிவெறியர்களால் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இயற்கைப் பேரிடர், அமெரிக்க பொருளாதாரத் தடை – இருமுனைத் தாக்குதலில் ஆப்கான்

0
குனார் மாகாணத்தில் நிலநடுக்கத்தினால் கட்டட இடிபாடுகளில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட அதிகளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,205 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 3,640 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உமர் காலித்திற்கு ஜாமீன் மறுப்பு: பாசிசத்தின் அங்கமாக டெல்லி உயர்நீதிமன்றம்!

0
மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட ஏழு காவி பயங்கரவாதிகளை என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் விடுவித்தது. ஆனால், எந்தவொரு குற்றமும் செய்யாத உமர் காலித் உள்ளிட்டோருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் தர மறுப்பது, சனாதன விதிகளின்படியே நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதை நிரூபிக்கிறது.

சுங்கக் கட்டண உயர்வு: நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் வழிபறிக் கொள்ளை

0
ஏற்கெனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வால் லாரி உள்ளிட்ட வாகன ஓட்டுநர்கள் பல்வேறு வாழ்வாதார சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த சுங்கக் கட்டண கொள்ளையானது அவர்களுக்கு கிடைக்கின்ற சொற்ப ஊதியத்தையும் பறித்து அவர்களது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்துகின்றது.

குஜராத் பள்ளிகளில் குறிவைக்கப்படும் இஸ்லாமிய மாணவர்கள்

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் குஜராத் மாநிலத்தில், பள்ளிகளில் மாணவர்களுக்கிடையே நடைபெறுகின்ற சண்டையைப் பயன்படுத்தி, இஸ்லாமிய மாணவர்கள் மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது, பாசிச கும்பல்.

அழுவதற்குக் கூட தெம்பின்றி பசியால் மடியும் காசா குழந்தைகள்

0
“காசா பகுதியில் பசியால் வாடும் குழந்தைகள் மிகவும் பலவீனமாக உள்ளனர். அவர்களுக்கு அழுவதற்குக் கூட வலிமை இல்லை. பசியிலிருந்தாலும் பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை. பேசுவதும் இல்லை”