Friday, February 20, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by ஆசாத்

ஆசாத்

ஆசாத்
38 பதிவுகள் 0 மறுமொழிகள்

தொழிலாளர்களைப் பழிவாங்கும் சாம்சங் நிறுவனம்! வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு!

0
தென்கொரியத் துணை தூதரகத்தில் மனு அளிக்கச் சென்ற சங்க நிர்வாகிகளைக் கைது செய்தது மட்டுமின்றி, தொழிற்சங்கத்தின் 27 நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்த சாம்சங் நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கிறது தி.மு.க அரசு.

பிப். 12: அமெரிக்க-இந்திய ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்!

0
இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து SKM, AIKS உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் பிப்ரவரி 12-ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் பகுதியாக, கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.

ஆறாவது நாளாகத் தொடரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் போராட்டம்!

0
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களின் 13 கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் அலுவலகங்கள் முன்பாக காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தராகண்ட்: காஷ்மீரி இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்துமதவெறி கும்பல்!

0
சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காவி கும்பல்களால் காஷ்மீரி இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

ம.பி: கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து மக்கள் பலியான அவலம்!

0
பாசிச கும்பலால் எட்டாவது முறையாக இந்தியாவின் ‘தூய்மையான நகரம்’ என்று தேர்வு செய்யப்பட்ட இந்தூரில் நீர் மேலாண்மையும், சுகாதாரமும் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது. எனவே, மலம் கலந்த நீரைக் குடித்து மக்கள் உயிரிழந்தது விபத்து அல்ல.

உ.பி மதம் கடந்த காதல்: ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளம் காதலர்கள்!

0
இஸ்லாமியரான முகமது அரமானும் இந்து பெண் காஜல் சைனியும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெண்ணின் சகோதரர்கள் இருவரையும் மண்வெட்டியைக் கொண்டு கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

ம.பி: குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்ட கொடூரம்

0
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை ஏற்றிய கொடூர சம்பவத்தில், முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகமும் – மருத்துவத்துறையைத் திட்டமிட்டுச் சீரழித்துவரும் பாசிச பா.ஜ.க. அரசுமே குற்றவாளி.

உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு: பாசிசத்தின் அங்கமாக உச்சநீதிமன்றம்!

0
பா.ஜ.க. கூடாரத்தைச் சேர்ந்த பாலியல் பொறுக்கிகளை வெளியில் சுற்றித்திரிய அனுமதித்துவரும் நீதிமன்றம், மக்கள் போராளிகளைச் சிறைக் கொட்டடியிலேயே படுகொலை செய்ய எத்தனிக்கிறது.

மகாராஷ்டிரா: கந்துவட்டிக் கொடுமையால் கிட்னியை விற்ற விவசாயி

0
ரோஷனிடம் தினமும் ₹10,000 வட்டி என்ற மனிதாபிமானமற்ற முறையில் கொள்ளையடித்து வந்துள்ளனர் கந்துவட்டி கொள்ளையர்கள். வாங்கிய ஒரு லட்சம் ரூபாய்க்கு அநியாய வட்டி போட்டு 74 லட்சம் கட்ட வேண்டும் என்று கந்துவட்டிக் கும்பல் ரோஷனை மிரட்டி வந்துள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்களின் போராட்டம் – வஞ்சிக்கும் தி.மு.க. அரசு

0
பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். ஆனால், ஆளும் தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளைக் கடந்தும் பேராசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.

வேண்டாம் தனியார்மயம்!: நூறு நாட்களைக் கடந்து தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

0
தூய்மைப் பணியாளர்கள் மீதான அக்கறையிலிருந்து வெளியிடப்பட்டது போன்ற பிம்பத்தை மூன்று வேளை உணவு உள்ளிட்ட அறிவிப்புகள் ஏற்படுத்தினாலும், போராட்டத்தை மட்டுப்படுத்துவதும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதுமே அவற்றின் உண்மை நோக்கமாகும்.

கோவை அரசு மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

0
இருப்பிட மருத்துவ அதிகாரி சரவண பிரியா, பணிச் சுமையை அதிகப்படுத்துவது, விடுமுறை எடுத்தால் பணி நீக்கம் செய்து விடுவதாக மிரட்டுவது, போலீசில் புகார் அளித்து கைது செய்துவிடுவேன் என்று அச்சுறுத்துவது தூய்மைப் பணியாளர்களிடம் அடாவடித்தனமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

கர்நாடகா: கொலைகார சாமியாரும், நீதிக்காகப் போராடும் மக்களும்

0
ஆறு ஆண்டுகளாக சிறையில் இருந்த முக்கியக் குற்றவாளியான சாலூர் மடத்தின் இளைய மடாதிபதி மகாதேவசாமி, உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாகக் கூறி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தான். இதனால் மனமுடைந்து போன கர்நாடக உயர்நீதிமன்றம் ‘பிரசாதத்தில்’ நஞ்சு கலந்து 17 பேரைக் கொன்ற கொலைகாரனுக்கு கருணையுடன் சமீபத்தில் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ம.பி. விவசாயியை டிராக்டர் ஏற்றிக் கொன்ற பா.ஜ.க. தலைவர்

0
பா.ஜ.க. தலைவர் மகேந்திர நாகர், அவருடைய அடியாட்கள் என 18 பேர் கொண்ட கும்பல் விவசாயி ராம் ஸ்வரூப் சுற்றிவளைத்து மரக் கம்புகள் மற்றும் இரும்பு கம்பிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளது. ஆத்திரம் அடங்காமல் அவர் மீது டிராக்டரை ஏற்றியுள்ளது. இதில் அவருடைய கால்கள் முற்றிலுமாக நொறுங்கி வலியில் துடித்துள்ளார்.

மயிலாடுதுறை: ஆதிக்கச் சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட தலித் இளைஞர்!

0
தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படம் ஒட்டியிருப்பதைப் பார்த்த அக்கும்பல் அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக வசைபாடியுள்ளது. இரு சக்கர வாகனத்தின் சாவியைக் கொண்டு தமிழரசனின் முதுகில் கிழித்து கொடூரத் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளது.