Wednesday, June 10, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by ஆசாத்

ஆசாத்

ஆசாத்
60 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஈரான் போர்: மூலப்பொருள் தட்டுப்பாட்டால் முடங்கும் தீப்பெட்டித் தொழில்!

0
ஏற்கெனவே, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் லைட்டர்களால் (lighter) தீப்பெட்டித் தொழில் அழிந்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பது தீப்பெட்டி தொழிலை முடக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. இத்தொழிலை நம்பியுள்ள ஐந்து லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகள்

0
தி.மு.க. அரசு தொடரும் பெண்கள் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்தவும், அவற்றை நிரந்தரமாக ஒழிக்கவும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்ற பிரச்சாரத்தை மட்டுமே முன்னெடுத்து வருகிறது.

கமேனி படுகொலை: அமெரிக்க – இஸ்ரேலுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்!

0
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கப் போகிறது என்று பொய்யாகக் குற்றம் சாட்டி ஏகாதிபத்திய போர்வெறி பிடித்த அமெரிக்காவும் பயங்கரவாத இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈரானின்...

யு.ஜி.சி புதிய விதிமுறைகளுக்குத் தடை: போராடத் தயாரான ஜனநாயக சக்திகள் – மாணவர்கள்!

0
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தலித் மாணவர்கள் தொடர்ந்து சாதியத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படும் நிலையில், புதிய விதிமுறைகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து நடைபெற்றுள்ள பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

டெல்லி: குடிசைப் பகுதி மக்களை விரட்டியடிக்கும் மோடி அரசு

0
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜங்புராவில் உள்ள மதராஷி முகாமில் 370 தமிழர் வீடுகளை பாராபுல்லா வடிகாலை ஆக்கிரமித்துள்ளது என்று பொய்க் குற்றஞ்சாட்டி வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன. தற்போது ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மூன்று குடிசைப் பகுதி மக்களை வெளியேற்ற வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

உத்தரப்பிரதேசம்: 18 பேரின் கண் பார்வையைப் பறித்த தனியார் மருத்துவமனை!

0
கண் அறுவைச் சிகிச்சைக்குப் பயன்படுத்திய கருவிகளில் உள்ள நுண்ணுயிரிகளை முற்றிலுமாக நீக்காமல் அலட்சியமான முறையில் பயன்படுத்தி இருக்கின்றனர். மருத்துவமனையின் அலட்சியத்தால் 18 பேர் கண்களையும் பார்வையையும் இழந்து கடும் வேதனையிலும் கடும் பொருளாதார நெருக்கடியிலும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இணையவழிப் பணப் பரிமாற்றத்திற்குக் கட்டணம் விதிப்பு: எஸ்.பி.ஐ. வங்கியின் பகற்கொள்ளை

0
சேவைக் கட்டணம் என்ற பெயரில் உழைக்கும் மக்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கின்ற வங்கிகள்தான் கார்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கான வாராக் கடன்களை எந்தவித அபராதமும் விதிக்காமல் தள்ளுபடி செய்கின்றன. ஆக, சேவை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானது.

தொழிலாளர்களைப் பழிவாங்கும் சாம்சங் நிறுவனம்! வேடிக்கை பார்க்கும் தி.மு.க அரசு!

0
தென்கொரியத் துணை தூதரகத்தில் மனு அளிக்கச் சென்ற சங்க நிர்வாகிகளைக் கைது செய்தது மட்டுமின்றி, தொழிற்சங்கத்தின் 27 நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்த சாம்சங் நிறுவனத்தின் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கிறது தி.மு.க அரசு.

பிப். 12: அமெரிக்க-இந்திய ‘இரகசிய’ ஒப்பந்தத்திற்கு எதிராக நாடுதழுவிய போராட்டம்!

0
இந்திய-அமெரிக்க இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து SKM, AIKS உள்ளிட்ட பல விவசாய அமைப்புகள் பிப்ரவரி 12-ஆம் தேதியன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. அதன் பகுதியாக, கிராமங்களில் ஆர்ப்பாட்டங்களில் மோடி-டிரம்ப் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளன.

ஆறாவது நாளாகத் தொடரும் சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள் போராட்டம்!

0
சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களின் 13 கோரிக்கைகளையும் முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பிப்ரவரி 3-ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் அலுவலகங்கள் முன்பாக காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உத்தராகண்ட்: காஷ்மீரி இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய இந்துமதவெறி கும்பல்!

0
சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக பாசிச பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் காவி கும்பல்களால் காஷ்மீரி இஸ்லாமியர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவது அதிகரித்து வருகிறது.

ம.பி: கழிவுநீர் கலந்த நீரைக் குடித்து மக்கள் பலியான அவலம்!

0
பாசிச கும்பலால் எட்டாவது முறையாக இந்தியாவின் ‘தூய்மையான நகரம்’ என்று தேர்வு செய்யப்பட்ட இந்தூரில் நீர் மேலாண்மையும், சுகாதாரமும் இவ்வளவு கேவலமான நிலையில் உள்ளது. எனவே, மலம் கலந்த நீரைக் குடித்து மக்கள் உயிரிழந்தது விபத்து அல்ல.

உ.பி மதம் கடந்த காதல்: ஆணவப்படுகொலை செய்யப்பட்ட இளம் காதலர்கள்!

0
இஸ்லாமியரான முகமது அரமானும் இந்து பெண் காஜல் சைனியும் இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத பெண்ணின் சகோதரர்கள் இருவரையும் மண்வெட்டியைக் கொண்டு கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

ம.பி: குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. இரத்தம் ஏற்றப்பட்ட கொடூரம்

0
தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை ஏற்றிய கொடூர சம்பவத்தில், முறையான பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றாமல் செயல்பட்ட மருத்துவமனை நிர்வாகமும் – மருத்துவத்துறையைத் திட்டமிட்டுச் சீரழித்துவரும் பாசிச பா.ஜ.க. அரசுமே குற்றவாளி.

உமர் காலித்துக்கு ஜாமீன் மறுப்பு: பாசிசத்தின் அங்கமாக உச்சநீதிமன்றம்!

0
பா.ஜ.க. கூடாரத்தைச் சேர்ந்த பாலியல் பொறுக்கிகளை வெளியில் சுற்றித்திரிய அனுமதித்துவரும் நீதிமன்றம், மக்கள் போராளிகளைச் சிறைக் கொட்டடியிலேயே படுகொலை செய்ய எத்தனிக்கிறது.