இன்குலாப்
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரக் கோரிக்கைகளைப் புறக்கணிக்கும் திமுக அரசு!
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை கலைந்து செல்லமாட்டோம் என்று மாற்றுத்திறனாளிகள் உறுதியாக இருந்தனர். ஆனால் தி.மு.க அரசு போலீசைக் கொண்டு அடாவடித்தனமாக அனைவரையும் கைது செய்தது.
இந்தியா: கிறிஸ்தவர்கள் மீதான மதவெறி தாக்குதல் 500% அதிகரிப்பு
2014 முதல் 2024 வரை கிறிஸ்தவ மக்கள் மீதான மதவெறித் தாக்குதல் 500 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்ற அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் கிறிஸ்தவர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள் சராசரியாக ஆண்டுக்கு 69.5 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
நிச்சயமற்றதாக மாறும் ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை!
அமேசான் நிறுவனத்தில் உலகளவில் 15.5 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற 3,50,000 ஊழியர்களில் 14,000 பேரை அக்டோபர் 28 அன்று அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
பி.எம் ஸ்ரீ: கேரள சி.பி.எம் அரசின் சந்தர்ப்பவாதம்!
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாலேயே பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இணைய முடியாது என்று கூறி வந்த சி.பி.எம் அரசின் நிலைப்பாடு தற்போது ஆட்டம் காண்பது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. சந்தர்ப்பவாதத்தால் ஏற்பட்ட சறுக்கலாகவே இதை நாம் பார்க்க வேண்டியுள்ளது.
கேரள சி.பி.எம். அரசின் ‘தீவிர வறுமை’ ஒழிப்பா? ஒளிப்பா?
கேரளாவில் 90 சதவீத பழங்குடி குடும்பங்களுக்கு இன்னும் நிலம் இல்லை என்றும், பலர் மின்சாரம், கழிப்பறைகள், குடிநீர் இல்லாமல் பிளாஸ்டிக்கால் மூடிய கூடாரங்களில் மிகவும் அவலநிலையில் வசித்து வருவதாகவும் பழங்குடி ஆர்வலர்கள் கேரளாவின் உண்மை நிலையை அம்பலப்படுத்தியுள்ளனர்.
மதுரையில் தலித் இளைஞர் கொட்டடிப் படுகொலை
மதுரை மாவட்டம் யாகப்பா நகரைச் சேர்ந்த தலித் இளைஞரான தினேஷ் குமார் போலீசால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதக் கலவரத்திற்கு அழைப்பு விடுக்கும் காவி பயங்கரவாதி பிரக்யா சிங் தாக்கூர்!
“உங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும். அவற்றைக் கூர்மையாக வைத்திருங்கள். நம் மகள்கள் கடத்தப்பட்டு அவர்களின் உடல்கள் சாலையில் வீசப்படும்போது அது மிகுந்த வலியை ஏற்படுத்துகிறது. அந்த வலியிலிருந்து மீள்வதற்கு எதிரி (இஸ்லாமியர்கள்) வரும்போது அவர்களைப் பாதியாக வெட்ட வேண்டும்” என்று கூறி இஸ்லாமிய மக்களைப் படுகொலை செய்வதற்கும் மதக்கலவரத்திற்கும் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார்.
போக்குவரத்து தொழிலாளர்களின் தலைமைச் செயலக முற்றுகையை ஒடுக்கிய போலீசு
தலைமை செயலகத்தை முற்றுகயிடுவதற்காக சென்ற தொழிலாளர்களை பாதி வழியிலேயே கைது செய்து முற்றுகையை போலீசு ஒடுக்கியுள்ளது. இதனையடுத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கியுள்ளது தமிழ்நாடு போலீசு.
தமிழ்நாட்டில் தீவிரமடையும் கார்ப்பரேட் எதிர்ப்பு போராட்டங்கள்
தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு கொண்டுவரும் கார்ப்பரேட் மற்றும் மக்கள் விரோதத் திட்டங்களுக்கு எதிராக மக்கள் தீவிரமாகப் போராடி வருகின்றனர். அக்டோபர் 6 அன்று மட்டும் கார்ப்பரேட் ஆதரவு திட்டங்களுக்கு எதிராக குறைந்தது மூன்று போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன.
ம.பி-யில் இருமல் மருந்தால் 20 குழந்தைகள் பலி: இறப்பல்ல, படுகொலை!
மத்தியப்பிரதேசத்தில் 20 குழந்தைகள் இருமல் மருந்து குடித்து உயிரிழந்திருப்பது அரசின் திட்டமிட்ட அலட்சியத்தாலும் தனியார் நிறுவனங்களின் லாப வெறியாலும் நிகழ்த்தப்பட்ட பச்சைப் படுகொலையாகும்.
எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமான விபத்து: அரசின் அலட்சியத்தால் பறிபோன ஒன்பது உயிர்கள்!
எண்ணூரில் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது செப்டம்பர் 30 அன்று சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒன்பது வடமாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல்
மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காகவே பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நாடகமாடுகின்றன.
உத்தராகண்ட்: இஸ்லாமிய பள்ளி சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல்
அர்சலனன் என்கிற அச்சிறுவன் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றுள்ளான். இதற்காக சிறுவனின் வகுப்பு ஆசிரியர் ராகேஷ் சைனி சிறுவனின் முழங்கையில் எலும்பு முறியும் அளவிற்கு ஈவிரக்கமின்றி கம்பால் அடித்துள்ளார். பள்ளியின் முதல்வர் ரவீந்திரனோ தனது ஷூவை சிறுவனின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளான்.
கொடூர ஆயுதங்களால் குத்தி கிழிக்கப்படும் காசா குழந்தைகள்
காசாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக குழந்தைகளே உள்ள நிலையில், அவர்களில் பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். மூளையில் சிறு துண்டுகள், மார்பில் தோட்டாக்கள் மற்றும் குண்டு வெடிப்புகளால் சிதைந்த கைகால்களுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர்.
மயிலாடுதுறை இளைஞர் சாதி ஆணவப் படுகொலை: தி.மு.க. அரசே குற்றவாளி!
தான் தலித் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தாலும், தன்னுடைய மகள் தலித் இளைஞனை காதலித்து திருமணம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிவெறி காரணமாகாவே, விஜயா தனது மகன்கள் மூலம் வைரமுத்துவை ஆணவப் படுகொலை செய்துள்ளார்.















