Tuesday, February 17, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by இன்குலாப்

இன்குலாப்

இன்குலாப்
71 பதிவுகள் 0 மறுமொழிகள்

ஒடிசா: தலித் பெண் சமையலரைப் புறக்கணிக்கும் ஆதிக்கச் சாதிவெறி

0
தலித் பெண் சமையலராக நியமிக்கப்பட்டதை எதிர்ப்பதும், அங்கன்வாடிக்குச் செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்களைத் தடுப்பதும் அப்பட்டமான சாதிய தீண்டாமையாகும். இதனைத் தூண்டிவிடும் சாதிவெறியர்கள் மீது எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப் பதிந்து தண்டிக்க வேண்டும்

மேற்குவங்கம்: பூட்டிய உணவுக்கிடங்கில் கருகிய தொழிலாளர்கள்

0
தொழிலாளர்களின் பாதுகாப்பில் அலட்சியமாகச் செயல்பட்ட தீயணைப்புத் துறை அமைச்சர் சுஜித் போஸ் உள்பட இப்படுகொலையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிந்து சிறையில் அடைக்க வேண்டும். அப்பகுதியில் உள்ள நிறுவனங்கள் அனைத்திலும் பாதுகாப்பு சோதனை நடத்தி தொழிலாளர்களின் பாதுகாப்பு  உத்தரவாதம் செய்யப்பட வேண்டும்.

குஜராத் மாடல் போலிகளின் மாடல்!

0
புகார்களின் அடிப்படையில் ஸ்ரீசத்யா டெய்ரி பிராடக்ட்ஸ் நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டதில் ஐந்து ஆண்டுகளாக பால் மற்றும் பால் பொருட்களில் யூரியா, டிடர்ஜென்ட் பவுடர் போன்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனங்களைக் கொண்டு செயற்கையான பால் பொருட்களைத் தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் தொடர் போராட்டம் – வஞ்சிக்கும் தி.மு.க அரசு!

0
ஆந்திராவைப் போன்று தமிழ்நாட்டிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற வாழ்வாதாரக் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று (பிப்ரவரி 10) சென்னை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவமனைகளில் கட்டணம்: மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசின் பாசிசம்

0
உழைக்கும் ஏழை மக்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்குக் கட்டணம் விதித்து அவர்களின் வயிற்றில் அடித்துள்ள இந்த அரசு, எம்.எல்.ஏ., எம்.பி-க்கள், அரசு ஊழியர்கள், நீதிபதிகள் போன்ற உயர் வகுப்பினருக்கு இலவச மருத்துவம் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

டெல்லி: 15 நாட்களில் காணாமல் போன 807 பேர்!

0
அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல் என்னவென்றால், கடந்த பத்து ஆண்டுகளில் டெல்லியில் மட்டும் 2,32,737 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் தோராயமாக 1,80,000 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்; கிட்டத்தட்ட 52,000 பேரின் வழக்குகள் தீர்க்கப்படாமல் உள்ளன என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

திருப்பூர்: சாதி வெறியால் சிறுவன் தீயில் வீசப்பட்ட கொடூரம்!

0
பதின்மூன்று வயது மாணவர்கள் சக மாணவரின் சாதி குறித்து இழிவாகப் பேசி சாதி வெறியுடன் எரிந்து கொண்டிருக்கும் தீயில் தூக்கி வீசிய கொடூரம் ஆதிக்க சாதிவெறி பிஞ்சுகளின் மனதில் நஞ்சாக விதைக்கப்பட்டிருப்பதையே வெளிக்காட்டுகிறது.

ஊடகக் குழுவினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.!

0
நியூஸ் தமிழ் செய்திக் குழுவை மிரட்டி காரில் கடத்திக் கொண்டுபோய் குவாரி அறையில் அடைத்து கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். அந்த கும்பலிடமிருந்து தப்பித்த சமூக ஆர்வலர் சுடலைக்கன்னு செய்திக் குழு தாக்கப்பட்டது குறித்து தெரிவித்த பிறகே இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மணிப்பூர் கலவரம்: பாலியல் வன்கொடுமையால் மன அதிர்ச்சிக்கு ஆளான இளம்பெண் மரணம்!

0
“அடிக்கடி ஏற்பட்ட கனவுகளால் தூக்கமின்மை ஏற்பட்டது. பயத்தால் தூங்க முடியாமல், உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது. ஜனவரி 8 அன்று, திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. மருத்துவரைப் பார்த்து மருந்து கொடுத்தோம். ஆனால் ஜனவரி 10-ஆம் தேதியன்று உயிரிழந்துவிட்டாள்”

உ.பி: தொழுகை நடத்துவது சட்டவிரோதம்; கலவரங்கள் நடத்த சங்கிகளுக்கு சுதந்திரம்!

0
கைது செய்ய வந்த போலீசாரிடம் வீட்டின் உரிமையாளரான ருஷானா உள்ளூர் மசூதி பழுதுபார்க்கப்பட்டு வருவதால், காலியாக இருந்த தனது வீட்டைப் பிரார்த்தனைக்காகப் பயன்படுத்த அனுமதி அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதனையெல்லாம் பொருட்படுத்தாத போலீசு சங்கிகள் கொடுத்த பொய்ப் புகாரைக் கொண்டு 12 இஸ்லாமியர்களைக் கைது செய்துள்ளது.

ஒடிசா: பாதிரியார் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய பஜ்ரங் தள் குண்டர்கள்!

0
பாதிரியார் முகத்தில் குங்குமத்தைப் பூசியும், கழுத்தில் செருப்பு மாலை அணிவித்தும் ஊர்வலமாக இழுத்துச் சென்று கிராமத்திலுள்ள அனுமன் கோவிலில் கட்டிவைத்து சாக்கடை நீரையும், மாட்டுச் சாணத்தையும் பாதிரியாரின் வாயில் வலுக்கட்டாயமாகத் திணித்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடக் கட்டாயப்படுத்தியுள்ளது, பஜ்ரங் தள் கும்பல்.

உத்தரப்பிரதேசம்: மீண்டும் ஒரு தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

0
பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் காமவெறிப்பிடித்த மிருகங்களால் தலித் சிறுமிகள், இளம் பெண்கள் வயது வரம்பின்றி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதுடன், கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டும் வருகின்றனர். பா.ஜ.க. கும்பல் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பேரணி, ஆர்ப்பாட்டம், மிரட்டலில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி வருகிறது.

ஹரியானா: ஓடும் காரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

0
ஹரியானா மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் பா.ஜ.க ஆட்சியில் தலித் சிறுமிகள், இளம்பெண்கள் காமவெறியர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது.

இந்துராஷ்டிரத்தின் சோதனைச்சாலையாக மாற்றப்படும் பீகார்!

0
பீகாரையும் ‘இந்துராஷ்டிர சோதனைச்சாலை’ என்ற படையணியில் இணைத்துக்கொள்ள பாசிச கும்பல் துடிக்கிறது. பீகாரில் உள்ள பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் இதனை களத்தில் நின்று முறியடிக்க வேண்டியது இன்றைய அவசர அவசியமாக உள்ளது.

2025ஆம் ஆண்டு: உலகம் முழுவதும் 128 பத்திரிகையாளர்கள் படுகொலை!

0
இந்தியாவில் நான்கு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் பா.ஜ.க ஆட்சி செய்யும் சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜாப்பூர் மாவட்டத்தில் சாலை கட்டுமான திட்டத்தில் நடந்த ஊழலை அம்பலப்படுத்திய ”யபஸ்தர் ஜங்ஷன்” என்ற யூடியூப் சேனலின் பத்திரிகையாளர் முகேஷ் சந்திகாரி படுகொலை செய்யப்பட்டதை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.