இன்குலாப்
எண்ணூர் அனல் மின்நிலைய கட்டுமான விபத்து: அரசின் அலட்சியத்தால் பறிபோன ஒன்பது உயிர்கள்!
எண்ணூரில் அனல் மின் நிலைய கட்டுமானப் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது செப்டம்பர் 30 அன்று சாரம் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஒன்பது வடமாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
பாலஸ்தீனத்திற்கு தனிநாடு அங்கீகாரம்: ஏகாதிபத்தியங்களின் திசைதிருப்பல்
மக்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காகவே பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நாடகமாடுகின்றன.
உத்தராகண்ட்: இஸ்லாமிய பள்ளி சிறுவன் மீதான கொடூரத் தாக்குதல்
அர்சலனன் என்கிற அச்சிறுவன் ஒரு நாள் விடுமுறை எடுத்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றுள்ளான். இதற்காக சிறுவனின் வகுப்பு ஆசிரியர் ராகேஷ் சைனி சிறுவனின் முழங்கையில் எலும்பு முறியும் அளவிற்கு ஈவிரக்கமின்றி கம்பால் அடித்துள்ளார். பள்ளியின் முதல்வர் ரவீந்திரனோ தனது ஷூவை சிறுவனின் முகத்தில் வைத்து அழுத்தியுள்ளான்.
கொடூர ஆயுதங்களால் குத்தி கிழிக்கப்படும் காசா குழந்தைகள்
காசாவின் மக்கள்தொகையில் 40 சதவிகிதத்திற்கும் அதிகமாக குழந்தைகளே உள்ள நிலையில், அவர்களில் பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனைக்கு வருகிறார்கள். மூளையில் சிறு துண்டுகள், மார்பில் தோட்டாக்கள் மற்றும் குண்டு வெடிப்புகளால் சிதைந்த கைகால்களுடன் வரும் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் குறித்து மருத்துவர்கள் விவரித்துள்ளனர்.
மயிலாடுதுறை இளைஞர் சாதி ஆணவப் படுகொலை: தி.மு.க. அரசே குற்றவாளி!
தான் தலித் ஒருவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தாலும், தன்னுடைய மகள் தலித் இளைஞனை காதலித்து திருமணம் செய்வதை சகித்துக்கொள்ள முடியாத ஆதிக்க சாதிவெறி காரணமாகாவே, விஜயா தனது மகன்கள் மூலம் வைரமுத்துவை ஆணவப் படுகொலை செய்துள்ளார்.
சென்னை: தலித் சிறுவன்மீது சாதிவெறியர்கள் கொலைவெறித் தாக்குதல்!
சரவணனும் அவனுடைய சகோதரர் லோகேஷ் இருவரும் சாதிவெறி தலைக்கேறி சிறுவனின் ஆடையைக் கழற்றி நிர்வாணப்படுத்தி, சிறுவன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். சரவணன் என்பவன் சிறுவனின் சாதியைக் குறிப்பிட்டு இழிவான முறையில் வசைபாடிக் கொண்டே அடித்துள்ளான்.
இஸ்ரேலிய இனவெறி பாசிஸ்டுக்கு சிவப்பு கம்பளம் விரித்த மோடி அரசு!
மேற்கத்திய நாடுகளால் தங்களது நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இனவெறி பாசிஸ்டான இஸ்ரேல் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்-ஐ தான் செப்டம்பர் 8 ஆம் தேதியன்று பாசிச மோடி அரசு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றுள்ளது.
ம.பி. மருத்துவமனையில் எலி கடித்துக் கொல்லப்பட்ட குழந்தைகள்: பா.ஜ.க. அரசின் பச்சை படுகொலை!
மருத்துவமனையின் உயிராதாரமான பணியான பூச்சுக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார மேலாண்மைக்கு அரசும் மருத்துவமனையும் பொறுப்பெடுத்துக் கொள்ளாமல் அயல்பணி மூலமாக அஜில் எனும் தனியார் நிறுவனத்திற்குத் தாரைவார்க்கப்பட்டிருப்பது அம்பலமாகியுள்ளது.
அனிதா நினைவு நாள்: வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!
தகுதியான மருத்துவர்களை உருவாக்கப் போவதாக மார்தட்டிக் கொண்ட மோடி அரசு, மருத்துவத்துறையை கார்ப்பரேட் கும்பலின் வணிக வேட்டைக்காடாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
சத்துணவு பணியாளர்களின் தொடர் போராட்டமும் தி.மு.க அரசின் துரோகமும்
காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவுப் பணியாளர்கள் ஆகஸ்ட் 28-ஆம் தேதி தொடங்கி சென்னை எழிலகம் வளாகத்தில் இரண்டு நாள் காத்திருப்புப் போராட்டத்தை நடத்தினர்.
இஸ்ரேலின் இனவெறிப் படுகொலைகளும் பத்திரிகையாளர்களின் தியாகமும்
ஆகஸ்ட் 25 அன்று நாசர் மருத்துவமனை மீது ஆளில்லா டிரோன் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தியதில் உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்பதற்குச் சென்ற மீட்புக் குழுவினரையும், தாக்குதல் குறித்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும் குறிவைத்து மீண்டுமொரு தாக்குதல் நடத்தி படுகொலை செய்துள்ளது இனவெறி இஸ்ரேல்.
அசாம்: பழங்குடியினரின் மாவட்டத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு
அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு சுரங்கம் அமைப்பதற்கு “மகாபால் சிமெண்ட்” எனும் கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
9-வது நாளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க அரசு!
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் செயல்படுத்தபடும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.
குஜராத்: மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காவி கும்பல்
‘சுதந்திர தின’ கொண்டாட்டத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், இஸ்லாமியர்கள் அணியும் பர்தா உடையணிந்த மாணவிகள் பயங்கரவாதிகள் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர்: கிறிஸ்தவர்கள் மீது தீவிரமடையும் பாசிச தாக்குதல்!
ஆகஸ்ட் 10 ஆம் தேதியன்று சத்தீஸ்கர் மல்லம் ராய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த காவி குண்டர்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாக பாதிரியார்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.