Thursday, July 16, 2026
முகப்பு ஆசிரியர்கள் Posts by இன்குலாப்

இன்குலாப்

இன்குலாப்
104 பதிவுகள் 0 மறுமொழிகள்

ம.பி: குதிரை ஊர்வலம் சென்ற தலித் மணமகனைத் தாக்கிய ஆதிக்கச் சாதிவெறியர்கள்!

0
“என் சகோதரரைக் குதிரையிலிருந்து கீழே தள்ளி எங்களை அடித்தனர். நால்வர் எங்களைத் தாக்கினர். இந்த மாதிரி குதிரை ஊர்வலம் உங்களுக்கு கிடையாது என்று வெளிப்படையாகக் கூறினர்” என்று ஆதிக்கச் சாதிவெறியர்களின் வெறியாட்டம் குறித்து தாக்குதலுக்கு ஆளான கோலுவின் சகோதரி விவரித்துள்ளார்.

விருதுநகர்: சாதிய வன்கொடுமைக்கு எதிராகத் தேர்தலைப் புறக்கணிக்கும் அச்சந்தவிழ்த்தான் மக்கள்

0
வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு எனப் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு மனுக்களை அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த மக்கள், தங்களது கிராமத்தின் பெயரை “வடக்கு அச்சந்தவிழ்த்தான்” என அதிகாரப்பூர்வமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர்: வேதாந்தா மின் நிலைய விபத்தில் 20 தொழிலாளர்கள் பலி!

0
கொதிகலனை டர்பைனுடன் இணைக்கும் உயர் அழுத்தக் குழாய் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியுள்ளது. இதனால் அதிக வெப்பமுள்ள நீராவி தொழிலாளர்களைத் தாக்கியதில் சில தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே எரிந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையாக தீக்காயமடைந்தனர். பலி எண்ணிக்கை தற்போது 20 ஆக உயர்ந்துள்ளது.

கேரளா: பேராசிரியர்களின் சாதி வெறிக்கு பலியான தலித் மாணவன்!

0
தனக்கு பேராசிரியர்களால் ஏற்படுகின்ற சாதி வன்கொடுமைகள் குறித்து கல்லூரி முதல்வரிடம் மாணவர் புகார் அளித்தும் பேராசிரியர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கல்லூரி முதல்வரும் தன்னுடைய சாதி வெறியை வெளிப்படுத்தியுள்ளார். எனவே மாணவர் உயிரிழந்திருப்பது பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தால் அரங்கேற்றப்பட்ட நிறுவனப் படுகொலையாகும்.

“எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”: மலக்குழி மரணங்களுக்கு எதிரான போராட்டம்

0
புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு அருகில் கூடிய தூய்மைப் பணியாளர்கள், “எங்களைக் கொல்வதை நிறுத்துங்கள்”, “சாக்கடைகளிலும், மலக்குழிகளிலும் ஏற்படுகின்ற மரணங்களை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்”, “பிரதமரே, நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேளுங்கள்” போன்ற முழக்கங்களை முன்வைத்துப் போராடினர்.

சிலிண்டர் தட்டுப்பாட்டால் வாழ்வாதாரத்தை இழக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்!

0
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவு கிடைக்காமலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டும் புலம்பெயர் தொழிலாளர்கள் துன்பப்பட்டு வருகின்றனர். ஆனால் பாசிச மோடி அரசு சிலிண்டர் தட்டுப்பாட்டை மறைத்து வருகிறது; தேவையான கையிருப்பு உள்ளதாக நாடகமாடிக் கொண்டிருக்கிறது. இதன் மூலம் மக்களைப் பட்டினி போட்டும் வறுமைக்குள் தள்ளியும் வருகிறது.

மீண்டும் “நோ கிங்ஸ்” போராட்டம்: வீதிகளில் இறங்கிய அமெரிக்க மக்கள்!

0
தற்போது நடைபெற்ற போராட்டத்தில் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றிருப்பது பாசிச டிரம்பிற்கு எதிரான மக்களின் எதிர்ப்புகள் தீவிரமடைந்து வருவதைத் துலக்கமாக வெளிக்காட்டுகிறது.

நாமக்கல்: அங்கன்வாடியில் தீண்டாமை கொடூரம்!

0
புதுக்காலனி பகுதியில் சுமார் பத்து அடி இடைவெளியில் பட்டியல் சமூக மக்களுக்கு என்று தனியொரு அங்கன்வாடி மையமும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கென தனி அங்கன்வாடி மையமும் அமைந்துள்ளன. அரசு நடத்தும் அங்கன்வாடியில் இவ்வளவு அப்பட்டமாக தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது.

குஜராத்: தீவிரமடையும் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு!

0
பாசிச கும்பலினால் ‘வளர்ச்சி மாடல்’, ‘டபுள் இஞ்சின்’ அரசு என்று ஊதிப்பெருக்கப்பட்ட குஜராத்தில் 40 சதவிகித குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருப்பதும், அதில் பழங்குடியினக் குழந்தைகள் அதிகமான அளவில் உள்ளதும் பேரவலமாகும்.

‘டிஜிட்டல் இந்தியா’வில் தொடரும் மலக்குழி மரணங்கள்!

0
2017 ஆம் ஆண்டு முதல் ஒன்பது ஆண்டுகளில் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் மலக்கழிவுத் தொட்டிகளில் சுத்தம் செய்யும் போது 622 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் 25 பேரின் குடும்பங்களுக்கு பாதி இழப்பீடும், 52 பேரின் குடும்பங்களுக்கு எந்தவித இழப்பீடும் வழங்கப்படவில்லை.

நாமக்கல்: மின்சார இணைப்பின்றித் தவிக்கும் மக்கள் – ஏமாற்றும் தி.மு.க. அரசு

0
கர்ப்பிணிப் பெண்களும் முதியவர்களும் குழந்தைகளும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் விசப்பூச்சிகள் கடித்து விடுமோ என்ற அச்சத்திலும், குழந்தைகள் விளக்கின் ஒளியில் படிக்கும் நிலையிலும் இருந்து வருகின்றனர். அதிலும், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடந்துவருவதால் மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திரா: பட்டாசு ஆலை வெடிவிபத்தில் கருகிய 21 உயிர்கள்!

0
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இதே போன்றதொரு விபத்து ஏற்பட்டபோது, இரண்டு நபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், அதன் பரிந்துரைகள் எதுவும் நடைமுறைப்படுத்தப் படவில்லை. எனவே, 21 பேரைப் படுகொலை செய்த ஆலை நிர்வாகமும் அரசும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் அவதியுறும் பொதுமக்கள்!

0
ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை அமைப்பு மற்றும் மாநகரப் போக்குவரத்துக் கழகத்துடன் முறையான ஆலோசனை நடத்தாமல், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ரயில்களைக் குறைத்த தெற்கு ரயில்வே நிர்வாகம் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஏ.ஐ துறையில் அதானி முதலீடும் பாசிச கும்பலின் கார்ப்பரேட் சேவையும்!

0
தரவு மையங்களை அமைப்பதற்கு ஏக்கர் கணக்கில் நிலங்கள் கையகப்படுத்தப்படும். அவற்றை இயக்க அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படும். இதனால் மக்களுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்படும் அபாயம் உள்ளது. இதுதவிர தரவு மையத்தின் சர்வர்களை குளிர்விப்பதற்காகத் தினந்தோறும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.

உ.பி: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான தலித் சிறுமி தற்கொலை!

0
உத்தரப்பிரதேசத்தில் தலித் சிறுமிகள், பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதும், பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்படுவதும் தீவிரமடைந்து வருகின்றது. போலீசில் புகார் அளித்தாலும் சாதி வெறிபிடித்த போலீஸ் உரிய சட்டத்தின் கீழ் வழக்குப் பதியாமல் பாலியல் பொறுக்கிகளைப் பாதுகாத்து வருகிறது.