Wednesday, October 22, 2025
முகப்பு பதிவு பக்கம் 3

புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 19, இதழ் 01 | நவம்பர் 01-30, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: இலங்கை: அதிகார சண்டையில் பலியாகும் சமாதான முயற்சி
  • எங்கெங்கு காணினும் கட்டப் பஞ்சாயத்து!
  • காவிரி சவடாலும் வறண்டு போனது
  • அமெரிக்கா தயாரித்து வழங்கும் உலகமய எதிர்ப்பு
  • தொழிலாளர் போராட்டத்திற்கு எதிராக புலிகள்
  • கிடா வெட்டும் போராட்டம்: “பார்ப்பனியத்தைப் பலி போடுவோம்!”
  • ஒரு அபலைக்கெதிரான ஈனச் செயல்
  • பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்! | பகுதி 5
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள் | பாகம் 1

“தூய்மைப் பணியாளர்கள்: நவீன நகரங்களின் அடித்தளங்கள்” என்ற தலைப்பில் புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2025 இதழில் (சிறப்பிதழ்) வெளியான இந்த சிறப்புக் கட்டுரை, மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டு வினவு தளத்தில் வெளியிடப்படுகிறது. இது கட்டுரையின் முதல் பாகம்.

***

ணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் உப்பு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கும் இச்சமூகம் எந்த அளவிற்கு கடமைப்பட்டுள்ளதோ, அதனைவிட கூடுதலாக, கழிவுகளைத் தூய்மை செய்யும் தொழிலாளர்களுக்குக் கடமைப்பட்டுள்ளது. அத்தொழிலாளர்களின் வேலை நிலைமை ஜனநாயகமாக இருப்பதையும் அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் இந்தச் சமூகம் உறுதி செய்ய வேண்டும்.

யார் இந்த தூய்மைப் பணியாளர்கள்?

தூய்மைப் பணியாளர்களைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்றால், இந்தியா போன்ற ஜனநாயகமும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடையாத நாடுகளின் பெருநகரங்களின் உருவாக்கத்தையும் அதன் கட்டமைப்பையும் நாம் புரிந்துகொள்வது அவசியமாகும்.

தூய்மைப் பணியாளர்கள் என்பவர்கள் அராஜகமான முறையில் வளர்கின்ற நகரங்களின் ஆக அனைத்துக் கழிவுகளையும் அகற்றுபவர்களாகவும் சுகாதாரக் கட்டமைப்பின் பெரும் சுமையைத் தாங்குபவர்களாகவும் விளங்குகின்றனர்.

மக்கள்தொகை அதிகரித்தல், விவசாயத்தை விட்டு விவசாயிகள் வெளியேற்றப்படுதல், பழங்குடி மக்கள் காடுகளை விட்டு வெளியேற்றப்படுதல் ஆகியவற்றால் தீவிரமடைந்துவரும் நகரமயமாக்கல் என்பது அதன் இயல்பிலேயே அராஜகமான வளர்ச்சியைக் கொண்டுள்ளது. அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் முன்னரே மக்கள் குடியேற்றம் செய்யப்படுவது அதன் இயல்பாக அமைந்துள்ளது.

இதனால், இந்திய நகரங்கள் என்பதே தொடர்ச்சியாக மறுகட்டமைப்பு செய்யப்படுவதாகவும் விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் அமைந்துள்ளதை நாம் பார்க்க முடியும். இதனால், மலை போன்று கட்டடக் கழிவுகள் குவிவதையும் நாம் காண்கிறோம்.

இத்துடன், அதிகரித்துவரும் சமூக இடைவெளியானது, சமூக உற்பத்தியின் பெரும் பகுதியை மேட்டுக்குடி சமூகம் நுகர்வதற்கேற்ப இந்நகரங்கள் விரிவாக்கமும் நகர ஆதிக்கமும் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், சமூகத்தின் இந்த மேட்டுக்குடி பிரிவின் மூலமாக, பெரும் கழிவுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இத்துடன், நகர வளர்ச்சியின் முதுகெலும்பாக இருக்கும் கோடிக்கணக்கான மக்கள் குறைவான அளவே நுகர்கின்றனர். அதன் விளைவாக இன்னொரு பகுதி கழிவுகளும் சேருகின்றன.

முதலாளித்துவத்தின் இந்த அராஜகமான வளர்ச்சியானது, சுற்றுச்சூழல் சீர்கேடுகளை வளர்த்துவிட்டு, அதனைக் கட்டுப்படுத்த துப்புக்கெட்டு நிற்பதைப் போன்று, அராஜகமான உற்பத்தியின் விளைவாக உருவாகும் கழிவுகளையும் மேலாண்மை செய்வதில் திறனின்றி நிற்கிறது.

மேலும், சமூகம் முழுவதும் அதிகரித்துவரும் நுகர்வுவெறி – குறிப்பாக, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் (Use and throw) வகையிலான பொருட்களின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்தல், சுற்றுச்சூழலுக்குக் கேடான நெகிழி போன்ற பொருட்களின் பயன்பாடுகள் அதிகரித்தல், வகைவகையான நுகர்வுப்பொருட்கள் அதிகரிப்பு இவற்றின் காரணமாக, ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுடன் இணைந்த வகையில், நகரங்களின் கழிவுகள் மிகப்பிரம்மாண்டமாகப் பெருகுகின்றன.

உலகம் முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 2.1 முதல் 2.3 பில்லியன் டன் நகர்ப்புறக் கழிவுகள் உருவாகின்றன என்று உலக வங்கி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2050-ஆம் ஆண்டிற்குள் இந்த அளவு 3.4 பில்லியன் டன் முதல் 3.8 பில்லியன் டன்னாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 62 மில்லியன் டன் குப்பைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மிதமிஞ்சிய கழிவு உற்பத்தி, வசதி படைத்த முன்னேறிய பிரிவினருக்கு மட்டுமான கழிவு மேலாண்மை என்ற அராஜகமும் இத்துடன் இணைந்து கொள்கிறது. ஒவ்வொரு பகுதியின் ஆட்சியாளர்களின் தன்மைக்கேற்ப சமூகத்தின் பிற பிரிவு மக்களுக்கான சுகாதார மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அராஜகத்தின் மொத்த சுமையும் தூய்மைப் பணியாளர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதுதான் அவர்களது வாழ்நிலையை மிகவும் அவலம் நிறைந்ததாக மாற்றியுள்ளது.

நாட்டின் மையப்பகுதியாக கருதப்படும் தொழில் நகரங்களில் உற்பத்தி செய்யப்படும் கழிவுகளை அகற்றுவதற்காக அந்நகரங்களின் கடைக்கோடி விளிம்பில், எவ்வித பாதுகாப்புமின்றி, கடுமையான அடக்குமுறைகளை எதிர்கொள்ளும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

நிலக்கரி சுரங்கங்களிலும் அணு உலைகளிலும் பாதுகாப்பற்ற முறையில் வேலை செய்யும் தொழிலாளர்களைப் போல, மிக உயரமான கட்டடங்களில் அந்தரத்தில் கயிறுகளில் தொங்கிக்கொண்டு வேலை செய்யும் கட்டடத் தொழிலாளர்களைப் போல, மிக ஆபத்தான நிலையில் வேலை செய்பவர்கள்தான் தூய்மைப் பணியாளர்கள்.

எனினும், மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் இழிவான நிலையிலும் அவர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். இத்தகைய, அராஜகமான சுகாதாரக் கட்டமைப்பினால் சமூகத்தில் ஏற்படும் மொத்த அழுத்தத்தையும் தாங்குபவர்களாகவும் அவர்களே இருக்கின்றனர்.

எந்தவொரு நாட்டிலும் மக்களுக்கான சுகாதாரக் கட்டமைப்பை உத்தரவாதப்படுத்துவதில் கழிவுகள் மேலாண்மை முக்கியப் பங்காற்றுகிறது. ஆனால், நமது நாட்டில் கழிவுகள் உற்பத்தியாவதிலும் அதனை அப்புறப்படுத்துவதிலும் ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் கையாளும் வழிமுறைகளும் கொள்கைகளும் பெரும்பாலும் மக்கள் விரோதமாகவே இருக்கின்றன. கழிவுகளை சுகாதாரமான முறையில் அகற்றுவதற்கும் மறுசுழற்சி செய்வதற்கும் போதிய கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு அரசு நிதி ஒதுக்குவதில்லை; போதுமான அளவு நவீனப்படுத்துவதில்லை; மேற்கொள்ளும் சில நவீனப்படுத்துதல்களும் கார்ப்பரேட் நலனிலிருந்தும் வேண்டாவெறுப்பான முறையிலுமே மேற்கொள்ளப்படுகின்றன.

கழிவு மேலாண்மையில் அரசு காட்டிவரும் அக்கறையின்மையால், பொதுமக்கள் குறிப்பாக ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பெரும் சுகாதாரச் சீர்கேட்டாலும் பல்வேறு நோய்த் தொற்றுகளாலும் அவதிப்படுகின்றனர். அவர்களில் இந்தச் சீர்கேடுகளை முன்வரிசையில் நின்று எதிர்கொள்பவர்களாக இருப்பதால், தூய்மைப் பணியாளர்களின் நிலை மிகவும் ஆபத்து நிறைந்ததாக மாறி வருகிறது.

அராஜகமான நகரமயமாக்கம்
அரசின் அலட்சியம்
பொது அறிவில்லாத பொதுமக்கள்
சாதி ஆதிக்க – ஆணாதிக்க மனநிலை

“மலம் அள்ளும் வேலையை நாங்கள் செய்யவில்லை என்றாலும் நகரத்தின் குப்பைகளில் மனித மலம், நாய், மாடுகள் போன்ற விலங்குகளின் கழிவுகளும் கலந்தே இருக்கின்றன. அவற்றைத்தான் நாங்கள் அள்ளுகிறோம்.”

“பயன்படுத்தப்பட்ட நேப்கின்கள், பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், குழந்தைகளின் டயப்பர்கள் என அனைத்தையும் சேர்த்தே அள்ளுகிறோம்.”

“திடக்கழிவுகளை அள்ளுவதுதான் எங்களது வேலை என்றாலும் சிறுநீர் கலக்கப்படாத திடக்கழிவுகள் மிகக்குறைவு.”

“உலர்ந்த கழிவுகளை சேகரிக்க வேண்டும்; குப்பைகளைப் பிரிக்க வேண்டுமென்று வழிகாட்டப்படுகிறது. ஐந்து நாட்கள், பத்து நாட்களாகக் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் வீட்டுக் கழிவுகளில் வெளிப்படும் துர்நாற்றமும் அவற்றில் இருக்கும் சமையல் கழிவுகளும் மிகவும் அருவருப்பானவை.”

“மருத்துவக் கழிவுகள், ஆபத்தான ரசாயனக் கழிவுகள், குப்பைகளில் கொட்டப்படும் கண்ணாடித் துண்டுகள், உடைந்த பாட்டில்கள், துருப்பிடித்த கம்பிகள், துருப்பிடித்த தகரங்கள், உடைந்த பல்புகள் போன்ற அனைத்தும் குப்பைகளில் கலந்துள்ளது. அந்தக் குப்பையைத்தான் அள்ளவேண்டியுள்ளது.”

“டிரான்ஸ்பார்மர்கள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. அவற்றின் அருகிலேயே குப்பைகளைக் கொட்டுகின்றனர். அக்குப்பைகளைச் சேகரிக்கச் செல்லும்போது மின்சாரம் தாக்கி இறந்தவர்கள் பலர், நிரந்தரமாக உடல் உறுப்புகளை இழந்தவர்கள் மேலும் பலர்”

“மழைக்காலங்களில் திடக்கழிவு, திரவக் கழிவு என்றெல்லாம் கிடையாது; சாக்கடைக் கழிவுகளையும் மலங்களையும் சேர்த்துதான் அள்ளுகிறோம்”

“எலி இறந்தாலும் தெருவில்தான், நாய் இறந்தாலும் தெருவில்தான். செத்துக் கிடக்கும் எலி, பூனை, நாய் முதல் கேட்பாரற்ற பிணங்கள் வரை, அவை அழுகி, புழுவைத்து எந்த நிலையில் இருந்தாலும் இறந்த உடல்கள் அனைத்தையும் நாங்கள்தான் அள்ளுகிறோம்.”

“தெருக்களில் முளைக்கும் புல்பூண்டுகள், மர விழுதுகள் முதல் அனைத்தையும் நாங்களே அகற்ற வேண்டும். சுடுகாடுகளிலும் இடுகாடுகளிலும் உள்ள குப்பைகளையும் அங்கே போடப்படும் இறந்தவர்களின் பொருட்களையும் நாங்கள்தான் அப்புறப்படுத்த வேண்டும்.”

“அரசியல் கட்சிகளின் கூட்டங்கள், திருவிழா, பண்டிகை என்றால் ஊருக்குத்தான் கொண்டாட்டம், எங்களுக்கு வேலைச்சுமை. திருவிழாவுக்கு முன்னதாக மருந்து போடுவது முதல், திருவிழா முடிந்து குப்பைகளை அகற்றுவது வரை அனைத்தையும் நாங்கள்தான் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல, தீபாவளி குப்பைகளை அள்ளுவது என்பது ஆபத்தானதும் கூட.”

“மழை வெள்ளம் வந்தாலும் கொரோனா போன்ற நோய் தொற்றாக இருந்தாலும் மக்கள் வீட்டிற்குள்ளேயே அடங்கிவிடுவர். நாங்கள்தான் அந்த ஆபத்துகளை எதிர்கொண்டு வேலை செய்ய வேண்டும்.”

இவை, தூய்மைப் பணியாளர்கள் மேற்கொள்ளும் வேலையின் கொடூரத் தன்மை மட்டுமல்ல, இவை அராஜகமான நகரமயமாக்கம், ஜனநாயகப்படுத்தப்படாத சமூகத்தின் இழிந்த நிலைக்கு சாட்சிகள்.

கொரோனா ஊரடங்கின்போது பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களின் தூய்மைப் பணியாளர்கள் தெரிவிக்கும் இந்த பொதுவான அனுபவங்கள், உலகத்தின் நான்காவது பொருளாதாரம் என்று மார்தட்டிக்கொள்ளும் நமது நாட்டின் யோக்கியதையை எடுத்துக்காட்டுகிறது.

பராமரிப்பு இல்லாத பொதுக்கழிவறைகள் ஒருபக்கம், கழிவறைகளுக்கு வெளியே சிறுநீர், மலம் கழிக்கும் அராஜகம் இன்னொரு பக்கம்; பராமரிப்பு இல்லாத குப்பைத் தொட்டிகள் ஒருபக்கம், குப்பைத் தொட்டியில் குப்பைகளைப் போடாமல் கொட்டிவிட்டுச் செல்லும் அராஜகம் இன்னொரு பக்கம் என பொது இடங்களைப் பராமரிப்பதில் அரசின் அலட்சியமும் பொது அறிவு இல்லாமல் பொதுமக்கள் நடந்துகொள்ளும் அராஜகமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து தூய்மைப் பணியாளர்கள் மீதான சுமையாக மாறுகின்றன.

இதுபோல, மலம் அள்ளுதல், குப்பைகளை அள்ளுதல், சாக்கடை தூர்வாருதல், கொசு மருந்து அடித்தல், கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தல், செப்டிக் டேங்க் சுத்தம் செய்தல், குடிநீர் குழாய்களைப் பராமரித்தல், மழைநீர் வடிகால்களைப் பராமரித்தல், தேசிய நெடுஞ்சாலைகளைத் தூய்மை செய்தல் போன்ற பணிகள் ஒவ்வொன்றிலும் அரசின் அலட்சியங்கள், அராஜகமான நகர மேலாண்மை, பொது அறிவு இல்லாமல் மக்கள் கையாளும் வழிமுறைகள் அனைத்தையும் தூய்மைப் பணியாளர்களே எதிர்கொள்கின்றனர். இந்த துன்பங்களை விவரிக்கத் தொடங்கினால் அது பெரும் தொடர்கதையாக நீளும்.

‘கழிவுகளை சுகாதாரமான முறையில் அகற்றுவது’ என்பதற்குப் பதிலாக ‘கண்களுக்குத் தெரியாமல் மூடி மறைப்பது’ என்பதே ஒன்றிய, மாநில அரசுகளின் கொள்கையாக இருக்கிறது. இந்நிலையில், இத்தகைய பணிகளை தனியார் வசம் ஒப்படைப்பது கழிவு மேலாண்மையை மேலும், அபாயகரமான சூழலுக்குத் தள்ளுவதுடன் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக காலங்காலமாக ஒடுக்கப்பட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை முற்றிலும் கைவிடுவதாகவும் அமைகிறது.

000

இவை அனைத்திலும் மக்களின் பொது அறிவில்லாத செயல்பாடு, அரசின் அலட்சியம் ஆகியவை மட்டுமல்ல, சாதி ஆதிக்க மனநிலை முக்கியமான பங்கு வகிக்கிறது. தாங்கள் வீசும் குப்பைகளை அள்ளுவதற்கு ஒருவர் இருக்கிறார், தான் கழிக்கும் மலத்தை அள்ளுவதற்கு ஒருவர் இருக்கிறார் என்ற மனநிலையும் அல்லது அது பற்றிய அக்கறையில்லாத உணர்வும் இந்நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

குறிப்பாக, சாதி ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் தலித் மக்கள், கல்வி கற்க வாய்ப்பில்லாத நிலையில், வேறு தொழில் எதுவும் தெரியாததால் மீண்டும் மீண்டும் தூய்மைப் பணிகளுக்கே திரும்புகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பிற வகைகளிலும் குறிப்பிட்ட அளவு பிற சாதியினர் இப்பணிக்கு வந்தாலும் சாதி ரீதியாக இழிவானவர்கள் செய்யும் தொழிலாகவே இத்தூய்மைப் பணியானது சமூகத்தின் பொதுப்புத்தியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது தூய்மை குறித்து அதிக அக்கறை கொள்ளும் ஒவ்வொருவரும் நகரங்களில் தமது வாழ்க்கைமுறையே தூய்மைப் பணியாளர்களுக்கு சுமையை ஏற்படுத்துகிறது என்பதை உணர்வதில்லை. இப்பணியை இழிவானதாகக் கருதும் மனநிலையும் சாதி ஆதிக்க மனநிலையும் இந்த உணர்வின்மைக்கு அடிப்படையான காரணமாக அமைந்துள்ளது.

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக சாதி ஆதிக்கத்தை வெளிப்படுத்துவதில் அரசே முதல்நிலையில் இருக்கிறது. 2016-இல் சென்னை பெரு மழை வெள்ளப் பணிகளை மேற்கொள்வதற்காக கோவை, நெல்லூர் என தொலைதூரங்களில் இருந்து தூய்மைப் பணியாளர்களைக் குப்பை வண்டிகளில் அழைத்து வந்த கொடுமைதான் இதற்கு சான்றாகும். அத்தொழிலாளர்களுக்கு குப்பை வண்டிகளின் மூலமாகவே குடிநீரும் உணவுப் பொட்டலங்களும் வினியோகம் செய்யப்பட்டது. இவை ஊடகங்களில் வெளிவந்தபோதும், அரசு அதிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. இது, அரசின் அலட்சியம் மட்டுமல்ல, அரசிலும் அதிகார வர்க்கத்திலும் நிலவும் சாதியாதிக்க மனநிலையின் வெளிப்பாடாகும்.

முக்கியமாக, நாடு முழுவதும் உள்ள தூய்மைப் பணியாளர்களில் 77 சதவிகிதம் பேர் தாழ்த்தப்பட்ட, பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களாவர். எனவே, தூய்மைப் பணியாளர்களின் உத்தரவாதமற்ற வாழ்க்கை நிலை என்பது, சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை மென்மேலும் விளிம்பு நிலையில் அழுத்தி வைப்பதற்கான பார்ப்பனிய சாதியாதிக்க கண்ணோட்டத்தை உள்ளடக்கியதாகும்.

000

நமது நாட்டின் தூய்மைப் பணியாளார்களில் பெரும்பான்மையினர் பெண்கள். அதிலும் மலம் அள்ளும் வேலையில் பெண்கள்தான் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர். கையினால் மலம் அள்ளும் முறையை ஒழித்துவிட்டதாக அரசுகள் கூறிக்கொண்டாலும் எல்லா இடங்களிலும் “பயோ கழிவறைகள்” அமைக்காமையே இதற்கு சிறந்த சான்றாகும். இத்துடன், பாதுகாப்பான கருவிகள் வழங்காமை, முறையாக கழிவறைகளை பராமரிக்காமை, நீரில்லாத கழிவறைகள் போன்றவை, கையினால் மலம் அள்ளும் பணியை தூய்மைப் பணியாளர்கள் மீது இன்னும் சுமத்திதான் உள்ளது. ஆகையால், தூய்மைப் பணியாளர்களில் கீழ் நிலையில் இருக்கும் பெண்களே, கையினால் மலம் அள்ளும் வேலையில் பெரிய அளவில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும் குறைந்த கூலி என்ற வகையிலும் தூய்மைப் பணியில் பெண்களே அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றனர். பணியிடங்களில் இப்பெண்கள் மீது தொடுக்கப்படும் ஆணாதிக்கப் பாலியல் துன்புறுத்தல்கள் மிக அதிகம். தலித்தாகவும் பெண்ணாகவும் தூய்மைப் பணியைச் செய்பவர்களாகவும் இருப்பதால், ஆணாதிக்கத்தின் அனைத்துக் கொடுமைகளையும் இப்பெண் தொழிலாளர்களே சுமக்கின்றனர்.

புதிய ஜனநாயகம் செப்டம்பர் 2025 சிறப்பிதழின் பின் அட்டை

நச்சுச் சுழலுக்குள் சிக்கிக் கொண்ட
தூய்மைப் பணியாளர்கள்

“பொதுவில் திடக்கழிவுகளை அள்ளுவதற்கான கருவிகளை மட்டுமே எங்களுக்கு வழங்குகின்றனர். 2013 மனிதக் கழிவுகளை அள்ளும் தடைச் சட்டம் 44 வகையான பாதுகாப்புக் கருவிகளை தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிறது. ஆனால், நடைமுறையில் கையுறைகளைக் கூட முறையாக வழங்குவதில்லை. அவ்வாறு வழங்கப்படும் கையுறைகள் கூட ஊசி குத்தினாலோ, பிளேடு கீறினாலோ, சேதமடைந்த கண்ணாடிகள் குத்தினாலோ உடனே கிழிந்து விடும் அளவிற்கு தரமற்றவையாக உள்ளன. அந்த ரப்பர் கையுறைகளே மிகவும் மோசமான துர்நாற்றம் வீசுபவையாக உள்ளன” என்கின்றனர் தூய்மைப் பணியாளர்கள்.

மற்றொருபுறம், அபாயகரமான தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுகளும் முறையாக கையாளப்படுவதில்லை. நச்சுத்தன்மை வாய்ந்த, தோல் அரிப்பை உண்டாக்குகின்ற, வெடிக்கும் தன்மை கொண்ட வேதிப்பொருட்கள், ஆபத்தான நோய்களை உண்டாக்கக்கூடிய மருத்துவக் கழிவுகள் ஆகியவை மருத்துவமனைகள் மற்றும் தொழில் நிறுவனங்களால், முறையாக சுத்திகரிக்கப்படாத நிலையில் அப்புறப்படுத்தப்படுகின்றன. இதில் அரசு மருத்துவமனைகளும் அடக்கம் என்பது மிகப்பெரும் அவலநிலையாகும்.

பாம்புகள், பூரான்கள் மற்றும் ஆபத்தான பூச்சிகள் நிறைந்த சாக்கடைகளுக்குள் எவ்வித பாதுகாப்புமின்றி இறங்கி கழிவுகளை அகற்றி வருகின்றனர். இவற்றால் அன்றாடம் தூய்மைப் பணியாளர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் வேலை செய்து வருகின்றனர்.

மேலும், மழைக்காலங்களில் மின்கசிவினால் தூய்மைப் பணியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போதிய படிப்பறிவு மற்றும் விழிப்புணர்வு இல்லாத தொழிலாளர்கள் வெறும் கைகளால் குப்பைகளைக் கையாளும் போது விபத்துகள் ஏற்படுகின்றன. இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் சமயத்தில் சென்னை கண்ணகி நகரில் வரலக்ஷ்மி என்ற தூய்மைப் பணியாளர் அதிகாலையில் தூய்மைப் பணி செய்துக் கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

2009-ஆம் ஆண்டுக்கு முன்னதாக, பணியில் இருக்கும்போதே இறந்த 1,244 சென்னை மாநகராட்சி பணியாளர்களின் வாரிசுகளுக்கு 2009-2010 ஆம் ஆண்டில் பணி வழங்கப்பட்டது. இவ்வாறு இறந்தவர்களில் 924 பேர் தூய்மைப் பணியாளர்களாக இருந்திருக்கின்றனர். இந்த எண்ணிக்கையானது, தூய்மைப் பணியின் ஆபத்தை உணர்த்துகிறது.

இத்துடன், மருத்துவக் கழிவுகள் ஏற்படுத்தும் தொற்றுகள் தூய்மைப் பணியாளர்களின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்குகின்றன. நமது நாட்டில் ஆண்டுதோறும் 2,71,000 டன் மருத்துவக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 90 சதவிகிதம் மட்டுமே முறையாக அப்புறப்படுத்தப்படுகின்றன. மீதமுள்ள மருத்துவக் கழிவுகள் பொதுக் கழிவுகளுடன் கலக்கப்படுகின்றன. இவற்றில், 15 சதவிகிதம் ஆபத்தான கழிவுகளாகும். இது அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள்தான். உண்மை நிலை இன்னும் அதிகமாகவே இருக்கும்.

இக்குப்பைகளைத் தரம் பிரிப்பதில் ஈடுபடும் தொழிலாளர்கள் பல்வேறு ஆபத்தான நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்படுகின்றனர். உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், நமது நாட்டில் குப்பைகளைக் கையாளும் பணியாளர்களில் 33,800 பேருக்கு எச்.ஐ.வி. தொற்றும், 1,70,000 பேருக்கு ஹெபடைட்டிஸ் பி தொற்றும், 3,15,000 பேருக்கு மஞ்சள் காமாலை (ஹெபடைட்டிஸ் சி) தொற்றும் ஏற்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றுகள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், பொருளாதார நெருக்கடியினாலும் போதிய மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளாமல் ஒரு கட்டத்தில் உயிருக்கே அச்சுறுத்தலான நிலையில் தூய்மைப் பணியாளர்கள் கைவிடப்படுகின்றனர். இவ்வாறு தீவிர நோய் தாக்கம் கொண்ட தொழிலாளர்கள் வேலை செய்ய இயலாமல் சிறிது காலம் வீட்டிலேயே முடங்கிப் போய், விரைவிலேயே மரணமடைந்து விடுகின்றனர்.

குடும்பச் செலவுகளை தாங்கி நிற்கும் இப்பணியாளர்களின் மரணம் இவர்களின் அடுத்த தலைமுறையை வேறு வழியின்றி இத்தொழிலுக்குள் ஆழ்த்துகிறது. ஒரு நச்சுச் சுழலுக்குள் சிக்கிக் கொண்ட இம்மக்கள் அதற்குள்ளேயே தங்களது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் முடித்துக் கொள்கின்றனர்; தலைமுறை தலைமுறையாக இப்பணியிலேயே உழல்கின்றனர்.

(தொடரும்…)

பகுதி 2, பகுதி 3


பாரி, தங்கம்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தண்டகாரண்யம் – எழுப்பும் கேள்விகளும், எழுப்பப்பட வேண்டிய விவாதங்களும்

1

டத்தின் முதல் காட்சியில் வரும் வசனத்தில் துணை ராணுவப் படையில் பயிற்சியில் இருக்கும் சிப்பாய்களின் முன்பு பின்வருமாறு ராணுவ அதிகாரி பேசுகிறார். “நம்ம ISGS நாட்டுக்குப் பெரிய சேவைகளைச் செய்து வந்தாலும், இம்மண்ணில் புதைந்துள்ள தங்கம், இரும்பு, பாக்சைட், நிலக்கரி போன்ற கனிம வளங்களை நம்ம நாட்டு முதலாளிகள் மட்டுமல்லாது, உலக நாட்டு முதலாளிகளும் இங்கு தொழில் செய்ய வருவதற்கு (அதாவது, கொள்ளையடிப்பதற்கு) பெரும் தடையாகவும், அச்சுறுத்தலாகவும் இருந்து வரும் நக்சலைட்டுகளை விரட்டியடிக்கும் பணியில் நம்ம ISGS முதன்மையானது. நம்ம ஜார்க்கண்ட் மட்டுமல்லாமல், ஆந்திரா, ஒடிசா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலடங்கிய தண்டகாரண்ய காடுகள் முழுக்க நக்சலைட்டுகள் பரவியுள்ளனர். இவர்களை அழிக்கும் பணியில் நீங்கள் எல்லோரும் இணையறது உங்களுக்கும் பெருமை. நம்ம நாட்டுக்கும் பெருமை” என்று அவர் பேசுகிறார்.

இந்த முதல் காட்சியிலேயே அரசு கார்ப்பரேட்டுகளின் சேவகன் என்பதையும், நக்சலைட்டுகள் எதற்காக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதையும் நேரடியாக அம்பலப்படுத்துகிறார் இயக்குநர் அதியன் ஆதிரை. இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சார்பான படைப்புதான் என்பதை ஒளிவுமறைவின்றி தனது முதல் காட்சியிலேயே கடத்தும் இயக்குநரின் செயல் பாராட்டுக்குரியது.

தண்டகாரண்யம் படம் நக்சலைட்டுகளை ஒழிப்பது என்ற பெயரால் நிகழ்த்தப்படும் போலி மோதல் படுகொலைகளைப் பற்றி கூர்மையாக விமர்சனப்படுத்துகிறது. நக்சல்பாரிகளை கைது செய்து பின்பு சுட்டுக் கொல்லும் போலி மோதல் கொலைகளை நாம் அறிவோம். ஆனால், இங்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து, அப்பாவி இளைஞர்களை ராணுவ ஆசை காட்டி அழைத்து வந்து, அவர்களை சரணடைந்த நக்சலைட்டுகள் என்றும், அவர்களுக்கு மறுவாழ்வு தருகிறோம் என்று கூறி, அவர்களை ராணுவப் பயிற்சியில் ஈடுபடுத்தி, அதன் பின்பு அவர்களை போலி மோதல் படுகொலை செய்வதை இத்திரைப்படம் பதிவு செய்கிறது. அரசின் நயவஞ்சகத்தையும், அது செய்யும் பயங்கரவாதப் படுகொலைகளையும் காட்சிகளின் மூலம் மக்களுக்குக் கடத்துகிறார் இயக்குநர்.

அப்படி இராணுவத்தில் வேலை கிடைக்கும் என்று ஏமாற்றப்பட்டு, நக்சலைட் மறுவாழ்வு மையம் என்ற பெயரில் நடக்கும் சட்ட விரோத கேம்ப்-பிற்கு அழைத்து செல்லப்படுபவர்களில் ஒருவர்தான் கதையின் முன்னிலை கதாபாத்திரமான முருகன் (கலையரசன்).


படிக்க: ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!


கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி மலைக்கிராமப் பகுதியில் உள்ள தொழுவபெட்ட கிராமத்திலிருந்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற இலட்சியத்தில் உள்ள பழங்குடி இளைஞர் முருகன். அந்தக் கனவு நிறைவேற வேண்டுமென்பதற்காக அங்கு வனத்துறையில் ரேஞ்சருக்கு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.

முருகனின் அண்ணன் சடையன் (தினேஷ்). வனத்துறை தன் மக்களை விதிமுறைகள் என்ற பெயரில் ஒடுக்குவதைக் கேள்வி எழுப்புபவராக, அவர்களைப் பாதுகாப்பவராக இருக்கிறார்.

“இராவோடு இராவா கோட்டையில் உக்காந்துகினு புதுப்புது திட்டம் போடுவீங்க, தூங்கி எழுந்துப் பாத்தா நாங்க குற்றவாளியா, இதான உங்க நியாயம்” என்று போலீசு அதிகாரியிடம் சடையன் எழுப்பும் கேள்வி, கார்ப்பரேட்டுகளின் இயற்கை வளச் சூறையாடலுக்காக வனப் பாதுகாப்பு சட்டங்கள் திருத்தப்படுவதையும், பழங்குடி மக்களும், நக்சல்பாரிகளும் சமூக விரோதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு அன்று ஆபரேசன் க்ரீன் ஹன்ட் என்றும், இன்று ஆபரேசன் ககர் என்ற பெயரிலும் கொல்லப்பட்டுக் கொண்டிருப்பதையும் அம்பலப்படுத்தும் கேள்வியாக நாம் உணர வேண்டியுள்ளது.

வனத்துறை போலீசின் பழங்குடி மக்கள் மீதான ஒடுக்குமுறை, வனப்பகுதியில் கஞ்சா பயிரிடும் வியாபாரிக்கு ஆதரவாக வனத்துறை செயல்படுவது, இதனை சடையன் அம்பலப்படுத்துவது, இதனால் போலீசின் வன்முறையை எதிர்கொள்வது, பழங்குடி மக்களின் நிலங்களைப் பறிப்பதற்காகத் துடிக்கும் பண்ணையார் ஒருவனுக்கு போலீசு ஆதரவாகச் செயல்படுவது என்பதன் ஊடாக தொழுவபெட்ட கிராமப் பழங்குடிகளின் வாழ்க்கையைக் காட்சிப்படுத்துவதன் மூலம் உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது இத்திரைப்படம்.

வனத்துறையின் சமூக விரோதிகளுக்கு ஆதரவான நடவடிக்கையை வெளிக் கொண்டு வந்ததில் சடையனோடு சேர்ந்து முருகனும் செயல்பட்டது தெரிந்து, முருகனை வேலையை விட்டு தூக்குகிறார்கள். அப்போது முருகன் உடன் பணியாற்றும் ஒரு போலீசு “என்னதான் அண்ணன் தம்பியா இருந்தாலும், டிபார்ட்மெண்ட் விசயத்த வெளில சொல்லக் கூடாதுனு உனக்குத் தெரியாதா? இருக்குற வேலைய காப்பாத்திக்க தெரியல” என்று முருகனுக்கு அறிவுரை கூறுகிறார்.

அதிகார வர்க்கத்தின் சமூக விரோதச் செயல்பாடுகளை அங்கிருப்பவர்கள் வெளியில் அம்பலப்படுத்தினால், அப்படிப்பட்டவர்கள் அங்கு நீடிக்க முடியாது என்பதற்கு இந்த வசனம் ஒரு சாட்சி. எத்தனையோ சகாயம்கள் அதற்கு நடைமுறை சாட்சி.


படிக்க: ஆபரேஷன் ககர்:  மாவோயிச அழிப்பா? இயற்கை வள சுரண்டலா?


உளவுத்துறை அதிகாரி ஒருவனின் நயவஞ்சகத்தால் இராணுவத்தில் வேலைக்கு சேரும் ஆசையை ஏற்படுத்திக் கொள்கிறார் முருகன். அதற்கு பணம் கட்ட வேண்டும் என்று கூறி ஏமாற்றுகிறான் அந்த உளவுத்துறை அதிகாரி. முருகனுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நிலத்தை விற்கிறார்கள் அவனது அப்பாவும், அண்ணன் சடையனும்.

இன்று எல்லாத் துறைகளும் தனியார்மயமாக்கப்பட்டு, அரசு வேலை என்பதே சுருங்கிப் போய் கானல்நீராக மாறியிருக்கும் சூழலில், அரசு வேலைவாய்ப்பு என்பது அதிகாரிகளின் கொழுத்த ஊழலை திருப்திப்படுத்திப் படுத்தினால்தான் சாத்தியமாகும் என்ற நிலையில், தன் பிள்ளைகளை எப்படியாவது அரசு வேலைக்குச் சேர்த்து விட வேண்டும் என்பதற்காகத் துயருறும் ஆயிரக்கணக்கான பெற்றோரின் அவலம் கண்முன்னே வந்து செல்கிறது.

சடையன் ஏன் நக்சல்பாரியாக மாறுகிறான், நக்சல்பாரிகள் யாருக்காக போராடுகிறார்கள், அரசுக்கும் மக்களுக்குமான உறவு, கார்ப்பரேட்டுகளுக்கும் அரசுக்குமான உறவு ஆகியவற்றைக் காட்சிப்படுத்துவதில் இன்னும் அழுத்தம் இருந்திருக்க வேண்டும் என்பது போன்ற குறைகள் படத்தில் உள்ளதையும் உணர முடிகிறது.

அதைத் தாண்டி, நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் நடத்தப்படும் போலி மோதல் படுகொலைகள் பற்றி அழுத்தமாக இத்திரைப்படம் வெளிக்கொணர்ந்து அரசு பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியுள்ளதும், அரசு மக்களுக்கானதாக இல்லை என்பதை பல்வேறு காட்சிகளின் மூலம், வசனங்களின் மூலம் நிறுவ இயக்குநர் எடுத்துக் கொண்ட முயற்சியும் முக்கியமானது.

கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும் திரைக்கதையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் அரசின் கோர முகத்தை பார்வையாளர்களின் மனதில் இன்னும் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்க முடியும்.

கனிம வளக் கொள்ளைக்காக பழங்குடிகள் மற்றும் மாவோயிஸ்டுகள் மீதான ஆபரேசன் ககர் என்ற அரச பயங்கரவாதம் அரங்கேறிவரும் இச்சூழலில் இத்திரைப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.

அதேபோது, தண்டகாரண்யம் திரைப்படம் முடியும் இடத்திலிருந்து, நாம் தீவிரமான விவாதத்தைத் தொடங்க வேண்டியுள்ளது. அரசே சட்டவிரோதமாகச் செயல்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதனால் சட்ட வரம்பிற்குள் மட்டும் நின்று போலி மோதல் படுகொலைகளையோ, காடுகளும், மலைகளும் அழிக்கப்படுவதையோ, பழங்குடிகள் ஒடுக்கப்படுவதையோ ஒருபோதும் தடுக்க முடியாது.

எனவே, அரசின் கார்ப்பரேட் கொள்கைகளுக்கு மாற்றாக, நாம் மாற்று அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை முன்வைத்து மக்கள் எழுச்சியைக் கட்டியமைத்தே ஆக வேண்டியுள்ளது.

அப்படிப்பட்ட மக்கள் எழுச்சியின் ஊடாக, உண்மையில் மக்களைப் பாதுகாக்கும், மக்கள் அதிகாரத்தை நிறுவுகின்ற மாற்றுக் கட்டமைப்பை, ஒரு பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை, நிறுவுவது குறித்தான விவாதத்தைத் தீவிரமாக முன்னெடுப்பது என்பதே தண்டகாரண்யம் முடியும் இடத்திலிருந்து நாம் தொடங்க வேண்டியதாகும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | அக்டோபர் 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 12 | அக்டோபர் 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: உச்சநீதி மன்ற பாசிசத்தின் புதிய வெளிப்பாடு
  • பயங்கரவாத பீதியில் ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதிகள்
  • இறால் பண்ணைகள் அழிப்பு: கிள்ளை கிராம மக்களின் எழுச்சி
  • உ.பி.யில் முலாயம் ஆட்சி: போலி மதச்சார்பின்மை வேடமும் கலைந்தது
  • “கலாச்சார காவலன்” – தமிழக போலீசின் புதிய அவதாரம்
  • கர்நாடக விவசாயிகள் தற்கொலை: தாராளமய பயங்கரவாதம்
  • கான்கன் மாநாடு: வல்லரசுகளின் திட்டம் மண்ணைக் கவ்வியது
  • கொடி கட்டிப் பறக்குதடா கல்வி வியாபாரம்
  • பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | செப்டம்பர் 01-30, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 11 | செப்டம்பர் 01-30, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நீதிமன்ற பாசிசம்: சட்டவாதத்தில் சிக்கிய சங்கங்கள்
  • கோக் – பெப்சி போதையில் ஆட்சியாளர்கள்
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி எழுதிய தீர்ப்பு
  • இந்தியா திவாலாகிறது – உலக வங்கியின் எச்சரிக்கை
  • கிசுகிசு பத்திரிகைகளின் எழுத்து விபச்சாரம்
  • ஈராக்: ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் வலுக்கிறது
  • லைபீரியா: சாவு வியாபாரிகள் திணித்த ‘சமாதானம்’
  • பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்!
  • கல்வி அதிகாரிகளைப் பணிய வைத்த வி.வி.மு.வின் போராட்டம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கேளாத செவிகள் கேட்கட்டும்.. | பகத்சிங் படுகேஷ்வர் தத்துக்கு எழுதிய கடிதம்

மத்திய சிறைச்சாலை, லாகூர்,
நவம்பர், 1930

ன்புள்ள சகோதரனுக்கு,

தீர்ப்பு கூறப்பட்டு விட்டது. எனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிறையறைகளில் என்னைத்தவிர தூக்கிலிடப்படுவதற்காக காத்திருக்கும் கைதிகள் பலர் இருக்கின்றனர். எப்படியாவது தூக்குக் கயிற்றில் இருந்து தப்பிவிட வேண்டும் என்பதே இவர்களின் ஒரே பிரார்த்தனை. ஒரு வேளை அவர்களுள் நான் ஒருவன் மட்டுமே என்னுடைய கொள்கைகளுக்காக தூக்குமரத்தை ஆரத்தழுவும் பெரும் பேறை அடையப்போகும் அந்த நாளுக்காக ஆவலோடு காத்திருக்கும் மனிதனாக இருக்கலாம்.

நான் அக மகிழ்வோடு தூக்குமேடையில் தாவியேறுவேன். இலட்சியத்திற்காக தங்களது இன்னுயிரையும் தியாகம் செய்யும் புரட்சியாளர்களின் நெஞ்சுரம் எப்படிப்பட்டது என்று இந்த உலகத்திற்குக் காட்டுவேன்.

நான் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளேன். ஆனால் உனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீ உயிருடன் வாழப் போகிறாய். நீ வாழும் போது, புரட்சியாளர்கள் தங்களது இலட்சியங்களுக்காக உயிரை விடுபவர்கள் மட்டுமல்ல; எத்தனை பேரிடர்களையும் வீரத்துடன் தாங்கவும் கூடியவர்கள் என்பதை இந்த உலகத்திற்கு நீ காட்ட வேண்டும். உலகத்தின் சிரமங்களில் இருந்து தப்பிச் செல்வதற்கானதொரு வழியாக மரணம் இருக்கக் கூடாது. எதிர்பாராத வகையில் தூக்குமரத்தில் இருந்து தப்பிய புரட்சியாளர்கள், தாம் இலட்சியத்திற்காக தூக்குமரத்தை தழுவக்கூடியவர்கள் மட்டுமல்ல, இரகசியமான அழுக்கடைந்த சிறையறைகளில் செய்யப்படும் மிக மோசமான சித்திரவதைகளையும் தாங்கக் கூடியவர்கள் என்பதை இந்த உலகிற்கு வாழ்ந்து காட்ட வேண்டும்.

உன்
பகத்சிங்.

ஆதாரம்: ”தியாகி. பகத்சிங்கின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்” சிவவர்மா, 1986 வெளியீடு.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஆகஸ்ட் 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 10 | ஆகஸ்ட் 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: நிழல் மனிதர்களும் உளவுத் துறையும்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • உலக வங்கி உத்தரவில் அமலாகிறது புதிய தொழிலுறவுக் கொள்கை
  • வாஜ்பாயியின் முகமும் முகமூடியும்
  • குஜராத் இனப்படுகொலை வழக்குகள்: தயார் நிலையில் தீர்ப்பு
  • விதை நெல்லுக்கும் வந்தது ஆபத்து!
  • வறட்சி – விவசாயிகளுக்கு நிவாரணம் – யாருக்கு?
  • தொழிற்சங்க தரகர்களின் பிடியில் கோவை தொழிலாளர்கள்
  • பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்! | தொடர் கட்டுரை: பகுதி 2
  • கும்பக்குடியில் கள்ளர் சாதிவெறி அட்டூழியம்
  • மாமூல் கொடுக்க மறுத்த சாராய வியாபாரி கொலை!
    கலால் பிரிவு போலீசாரின் பயங்கரவாதம்!
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூலை 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 9 | ஜூலை 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: சமூக விரோதிகளின் கூடாரமாக சுயநிதிக் கல்வி நிறுவனங்கள்
  • பாமரர்களின் பக்தியே ஆர்.எஸ்.எஸ்.-இன் அடித்தளம்!
  • அயோத்தி சமரசம்: ஜெயேந்திரனின் கரசேவை
  • தருமபுரியில் காலரா சாவுகள்: அரசின் கொலை!
  • ஜெயா ஆட்சி
    உல்லாசம்-ஊதாரித்தனம்-ஊழல்
  • கோகோ-கோலாவின் தண்ணீர்க் கொள்ளை
  • ‘காணாமல்’ போகும் காசுமீரிகள்
  • ஈராக்: புஷ்-பிளேரின் “பேரழிவுப் பொய்”
  • போலீசு அதிகாரி பிரேம்குமாருக்கு தரும அடி!
    மதுரை வழக்குரைஞர்கள் வழங்கிய தீர்ப்பு!
  • இவரல்லவோ வீராங்கனை!
  • ஓசூர்: நவீன கொத்தடிமைகளின் நகரம்
  • ஏகாதிபத்திய பொறியில் சிக்கிய புலிகள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



அவன் ஜென் சி, நீ பகத்சிங்!

(கட்டுரையை பி.டி.எஃப் வடிவில் டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்)

அவன் ஜென் சி, நீ பகத்சிங்!

வனை உனக்குத் தெரிந்திருக்கலாம்,
அதில் வியப்பேதுமில்லை.
உன்னை அவனுக்குத் தெரியும்,
அதற்கு
நீ வியப்படையத் தேவையில்லை,
ஏனென்றால்,
அவன் பகத்சிங்!

அவனுக்கும் உனக்கும்
கால இடைவெளி
ஒரு நூற்றாண்டு.
அவனையும் உன்னையும்
சூழ்ந்திருக்கும்
அரசியல் இடைவெளியோ
சில நூலிழைகள்!

இதைப் புரிந்து கொள்ளும் போது
நீ வியப்படையப் போவதில்லை.

000

1907
அப்போதுதான் அவன் பிறந்தான்.
அப்பனும் சித்தப்பனும் சிறைக்கொட்டடியில்.
மத அடிப்படையில் வங்கப் பிரிவினை
அதனை எதிர்த்துப் போராடியது
அவர்கள் செய்த ‘குற்றம்’

1913
அப்போது அவன் சிறுபிள்ளை.
தோட்டத்தில் துப்பாக்கியை நட்டு
விளையாடிக் கொண்டிருந்தான்.
“எதற்கு துப்பாக்கியைப் புதைக்கிறாய்?”
இது தாத்தா கேட்டது.
“விடுதலைப் போராட்டத்திற்கு
துப்பாக்கிகள் வேண்டுமே,
அதற்காக நடுகிறேன்”.
இந்த பதில்,
அவனிடம் ஊற்றெடுத்துக் கொண்டிருந்த
விடுதலை உணர்வின் வெளிப்பாடு.

1915
அவன் விடுதலைப் போராட்டத்திற்கான
மாணவர் சங்கத்தில்
உறுப்பினரானான்!
அப்போது அவனுக்கு வயது 8.

1919
ரௌலட் சட்டத்திற்கு எதிரான
போராட்டங்கள் அரங்கேறின.
ஏப்ரல் 13 ஜாலியன் வாலாபாக்கில்
பச்சைப் படுகொலை அரங்கேறியது.
உடனே அமிர்தசரஸ் சென்றான்.
அப்போது அவனுக்கு வயது 12.
ரத்தம் தோய்ந்த மண்ணை
வீட்டுக்கு எடுத்து வந்தான்.
அவற்றியே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
மக்களின் குமுறல்
மனதில் ஒலித்துக் கொண்டிருந்தது.
பல நாட்கள் உறங்காமல் தவித்தான்.
அவனுக்குள் குமுறிக் கொண்டிருந்தது
வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு.

1922
ஒத்துழையாமை இயக்கத்தை
திருப்பப் பெற்றார் காந்தி.
காந்தியின் மீதிருந்த மதிப்பை
திருப்பிக் கொண்டான் பகத்சிங்.
அரசியலில் துரோகத்தை
உணர்ந்த தருணமது.
அப்போது அவனுக்கு வயது 15.

1924
கான்பூருக்குச் சென்றான்.
அக்காலத்தில்
அவன் அரசியல் கட்டுரையாளன்.
விடுதலை உணர்வூட்டும்
கட்டுரைகளை எழுதினான்.
அப்போது அவன் கட்டிய மாணவர் அமைப்பு (சபா)
இந்துஸ்தான் குடியரசு சபா.
அது, அவன் அமைப்பாளனாக வளர்ந்த காலம்.

1927 அக்டோபர்,
தசரா குண்டுவெடிப்பில்
மக்கள் பலர் பலியாகினர்.
தோழர்கள் மீது
பொய்வழக்கைப் போட்டது,
பிரிட்டீஷ் போலீசு.
பகத்சிங் சிறை சென்றான்,
குற்றம் நிரூபிக்கப்படவில்லை,
விடுதலையானான்.
அவனது தீவிரமான செயல்பாட்டின்
எதிர்வினையை உணர்ந்த தருணமது.

1928 ஜூலை,
டெல்லியில் மாநாடு.
புரட்சிக் குழுக்களை ஒருங்கிணைத்தான்.
இங்குதான்
இந்துஸ்தான் குடியரசு சபா
இந்துஸ்தான் சோசலிச குடியரசு சபாவாக
பரிணமித்தது.
அவன் மார்க்சிய-லெனினிய
சித்தாந்ததைத் தழுவினான்.
இது, அவன் கம்யூனிஸ்ட் தலைவராக பரிணமித்த காலம்.
இப்போது அவனுக்கு வயது, 21.

இதோ,
இந்த கட்சியின் மத்திய செயற்குழு.
அக்குழுவில்
அவனுடன்
ஆசாத், சுகதேவ் மற்றும்
பல தோழர்கள்.
அதன் கீழ் ஒரு படை.
அதன், காமாண்டராக ஆசாத்.
“சைமன் கமிசனுக்கு எதிராக
மக்கள் இயக்கத்தைத் துவங்குதல்”
இது, அதன் உடனடி அரசியல் நடவடிக்கை.
தீர்மானத்தை செயலுக்குக் கொண்டு சென்றான்.

1928 அக்டோபர் 30
லாலா லஜபதிராய் தலைமையில்
அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம்.
பகத்சிங்கும் அவன் தோழர்களும்
கருப்புக் கொடிகளுடன் முன்னணியில்.
“சைமனே திரும்பிப் போ!
புரட்சி ஓங்குக!”
இது, அவர்களின் முழக்கங்கள்!

ஸ்காட்,
போலீசு கண்காணிப்பாளர்.
லஜபதிராயை மிருகத்தனமாக தாக்கினான்.
17 நாட்கள் உயிருக்குப் போராடி
நவம்பர் 17, லஜபதிராய் மறைந்தார்.
நாடே கொந்தளித்தது.
பகத்சிங்கும் அவனது தோழர்களும்
ஸ்காட்டுக்கு நாள் குறித்தனர்.
அது, டிசம்பர் 17.
குறி தவறியது
சாண்டர்சன் கொல்லப்பட்டான்.
அவன் துணைக் கண்காணிப்பாளர்.

ஓரிரு நாட்களில்
தோழர்களின் துண்டுபிரசுரப் பிரச்சாரம்.
“லாலாஜியின் மறைவுக்கு பழித் தீர்ப்பு,
நாட்டிற்கு நேர்ந்த அவமானம் துடைப்பு!”
நாடெங்கும் பரவியது இச்செய்தி!
ஆம், அவனும் அவனது தோழர்களும்
நாடறிந்த தலைவர்களான காலமது.
அப்போது, அவன்
21 வயதைக் கடந்து கொண்டிருந்தான்.

1929, ஏப்ரல் 8,
நாடாளுமன்ற அவை நிறைந்திருந்தது.
பொது பாதுகாப்பு மசோதா,
தொழில் தகராறு மசோதா
தாக்கல் செய்யப்பட்டன.
கருத்துரிமையை நசுக்கவும்
தொழிலாளர்களைக் கொத்தடிமையாக்கவும்
கொண்டுவரப்பட்ட மசோதாக்கள் இவை.

“பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் ஒழிக,
புரட்சி ஓங்குக!”
பகத்சிங்கும் படுகேஷ்வர் தத்தும்
நாடாளுமன்றத்தில் முழங்கிய  முழக்கங்கள்.
நாடாளுமன்ற மண்டபத்தின் மத்தியில்
வெடிகுண்டுகளை வீசி முழங்கிய முழக்கங்கள்.

“கேளாத செவிகள் கேட்கட்டும்”
இது, அவர்கள் பறக்கவிட்ட
துண்டு பிரசுரத்தின் தலைப்பு!
“அடக்குமுறைகள், முடிவுறப் போவதில்லை,
விடுதலை கிடைக்கப் போவதுமில்லை”
“நாட்டின் விடுதலையை
அகிம்சையால் அல்ல,
ஆயுதத்தால் மட்டுமே சாதிக்க முடியும்”
“புரட்சி நீடூழி வாழ்க!”
இவை, அந்த பிரசுரம்
நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்த செய்தி!

1929, ஜூன் 6
‘குற்றத்தை’ மறுக்கவில்லை.
பகத்சிங்கும் தத்தும்
வெளியிட்ட வாக்குமூலம் இது.

“போலி நாடாளுமன்றம்,
இந்திய அடிமைத்தனத்தின் அடையாளம்”
“தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள்
பறிக்கப்படுகின்றன”
“கேளாத செவிகள் கேட்கட்டும்!”
“மனித உயிர்கள் மதிப்புமிக்கவை”
“தனிநபர்களை அழிப்பது எங்களது நோக்கமல்ல”
“எங்களை அழிப்பதன் மூலம்
இந்நாட்டை அழிக்க முடியாது”
“புரட்சி என்பது வெடிகுண்டுகளின் வழிபாடு அல்ல”
“பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் நிலைநாட்டப்படும்”
இவை, அவர்கள் விளக்கிய கொள்கைகள்.

இப்போது அவனுடைய தோழர்களுடன்
அவனும் சிறையில்.
“அரசியல் கைதிகளை
திருடர்களைப் போல நடத்தாதே!”
தொடங்கியது சிறையிலும் போராட்டம்!
அது,
63 நாட்கள் நீடித்த உண்ணாநிலைப் போராட்டம்!
ஜதீந்திர தாஸ் மரணம்.
தற்காலிகமாக பின்வாங்கியது அரசு.
மீண்டும் தொடங்கியது
அரசியல் கைதிகள் மீதான அடக்குமுறைகள்.
மீண்டும் உண்ணாநிலைப் போராட்டம் அறிவிப்பு.
சிறையில் இருந்து பறந்தன
அறிக்கைகள், கடிதங்கள்.
நாட்டு மக்களைக் கொந்தளிக்கச் செய்தன.
“தோழர்களை விடுதலை செய்!”
போராட்டங்கள் வெடித்தன.
காந்தியின் துரோகம் திரைகிழிந்தது.
விடுதலைக் கனல் மூண்டெழுந்தது.
தனது போராட்டத்தால்,
மக்களை இயக்கினான் அவன்.

வழக்கை விரைந்து முடிக்க வேண்டும்
வேகமாக தண்டனை வழங்கிவிட வேண்டும்
இது, அரசுக்கு இருக்கும் நிர்பந்தம்.
அரசுக்கு மட்டுமா,
துரோகிகளுக்கும் அதே நிர்பந்தம்.
அதன் வெளிப்பாடு,
லாகூர் சதிவழக்கு அவசரச் சட்டம்,
எதிர்வாதத்திற்கான வாய்ப்புகள் மறுப்பு
இன்ன பிற அடக்குமுறைகள்.

இனி என்ன செய்வது,
“பிரிட்டிஷ் அரசாங்கத்தின்
நீதிமன்றத்தைப் புறக்கணிக்கிறோம்”
இது,
எதிர்வாதம் செய்ய
அனுமதி மறுக்கப்பட்டவர்களின் வாக்குமூலம்.
வாக்குமூலம், அரசியல் அனலைக் கிளப்பியது.
“என்ன செய்தாலும் அரசியல் செய்கிறார்களே”,
இது, துரோகிகளுக்கு எதிரிகளுக்கும்
வாக்குமூலம் ஏற்படுத்திய கலக்கம்.

பகத்சிங், இராஜகுரு, சுகதேவ்
மூவருக்கும் மரண தண்டனை.
மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை.
தோழர்களுக்கும் தந்தைக்கும் எழுதினான்
கடிதங்கள்.

“எல்லாம் முடிந்துவிட்டது;
இனி செய்வதற்கு ஒன்றுமில்லை”
என்று சோர்வுறத் தேவையில்லை
“தற்கொலை தவறான அரசியல்”
“மரண தண்டனை
மக்களைத் தட்டியெழுப்புவதற்கு
கிடைத்த வாய்ப்பு”
இது, தோழர்களுக்கு அவன் சொன்ன செய்தி.

“சட்டவாதங்களைப் பயன்படுத்தி
விடுதலைப் பெறுவது,
அரசியல் நோக்கத்தைப் பின்னுக்குத் தள்ளுவதாகும்”
“இதன் மூலமாக, நீங்கள் எனது முதுகில் குத்திவிட்டீர்கள்”
“ஒவ்வொருவரின் மனவுறுதியும்
சோதிக்கப்படும் தருணம் இதுவே.
நீங்கள் அதில் தோற்றுவிட்டீர்கள்”
இது, தந்தைக்கு அவன் சொன்ன விமர்சனம்.

பகத்சிங், இராஜகுரு, சுகதேவ்
விடுதலைக்கான போராட்டங்கள்
நாட்டையே உலுக்கி எடுத்தன.
காந்தி-இர்வின் பேச்சுவார்த்தை
நடந்து கொண்டிருந்தது.
காங்கிரசு கட்சிக்குள் ஒலிக்கத் தொடங்கியது
மூவரின் மரண தண்டனைக்கெதிரான குரல்.
கராச்சியில் காங்கிரசு மாநாடு தொடங்க இருந்தது.
மாநாடு நடந்தால்,
மூவரின் மரண தண்டனைக்கெதிரான தீர்மானம்
நிறைவேற்ற வேண்டியிருக்கும்.

1931, மார்ச் 24
மூவருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நாள்.
“தூக்கிலிடாதீர்கள், சுட்டுக்கொல்லுங்கள்”
இது, விடுதலை வீரர்களின் முழக்கம்.

ஆனால்,
கராச்சி காங்கிரசு மாநாட்டிற்கு
முன்தினமே
அவசர அவசரமாக தூக்கிலிடப்பட்டனர்.
அது, மார்ச் 23.
மூவரின் உடல்களை மறைத்து எரித்தனர், எதிரிகள்.
கராச்சி மாநாட்டில் இரங்கல் தெரிவித்தனர், துரோகிகள்.
கொதித்தெழுந்து காந்தியை முற்றுகையிட்டனர், மக்கள்.
கருப்பு கொடிகளால் சூழப்பட்டது,
கராச்சி மாநாடு.
காந்தியின் முகத்திரை கிழிந்து தொங்கியது.

1931, மார்ச் 22.
பகத்சிங்
இசைத்துச் சென்ற
புரட்சியின் கீதத்தைக் கேள்!

“ஒரு சிறைக் கைதியாகவோ
நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ
வாழ எனக்கு விருப்பமில்லை.
என் பெயர்
இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னமாகியுள்ளது.
புரட்சிகரக் கட்சியின்
கொள்கையும் தியாகமும்
ஒருவேளை நான் உயிர் வாழ்ந்தாலும்
என்னால்
ஒருபோதும் அடைய முடியாததொரு
உயரத்திற்கும் அப்பால்
என்னை ஏற்றி வைத்துள்ளன.”

“… துணிச்சலோடும் புன்னகையோடும்
நான் தூக்குமேடையேறினால்,
அது,
இந்தியத் தாய்மார்களின்
உணர்வுகளைத் தூண்டும்.
தங்களது பிள்ளைகளும்
பகத்சிங்கைப் போல
ஆகவேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள்.
இதன் மூலம்,
நமது நாட்டின் விடுதலைக்காக
தங்களது உயிர்களையும் தியாகம்
செய்யச் சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை
பெருமளவில் அதிகரிக்கும்.
அதன் பிறகு,
புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு
ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்!”

இந்த இறுதி கீதத்தை
அவன் இசைத்த போது,
வயது 23-ஐ தாண்டவில்லை.

1931 மார்ச் 23,
மாலை 7.35 மணிக்கு
லாகூர் சிறை மதில்களுக்குள்
ஓங்கி ஒலித்தன,
அந்த வீரர்கள் இறுதியாக முழங்கிய முழக்கங்கள்.
“ஏகாதிபத்தியம் ஒழிக”,
“புரட்சி ஓங்குக!”
தூக்குக் கயிறுகள்
அவர்களது குரல்வளையை நெறித்தன.
அவர்களது உணர்வுகள்
நமக்குள் ஊடுறுவின,
தலைமுறை தலைமுறையாக.

000

இப்படித்தான்
உன்னை அவனுக்குத் தெரியும்.

பகத்சிங்கும்
அவனது தோழர்களும்
அன்றைய இளந்தலைமுறை.
அதற்கு அவன் தலைவன்.
இந்தியப் புரட்சியின் அடையாளச் சின்னம்.
நூற்றாண்டுகளைக் கடந்தும்
அவன் மூட்டியக் கனல்
எரிந்து கொண்டிருக்கிறது.
செரபண்டராஜ், பாலன்,
முத்துக்குமார், அனிதா…
இளந்தலைமுறைகள்
அனைத்தினதும்
நம்பிக்கைச் சின்னம், அவன்.
உனக்கும்தான்.

நூற்றாண்டுகளுக்கு முன்பு,
காலனியாதிக்கம்.
இன்று, மறுகாலனியாதிக்கம்.
அன்று, காங்கிரஸ்,
இன்று, ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி.
அன்று, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சர்வாதிகாரம்,
இன்று, அம்பானி, அதானிகளுக்காக பாசிச சர்வாதிகாரம்.
அன்றும் இன்றும்
தேவை, விடுதலைப் போராட்டம்!

நாட்டுப்பற்று, சோசலிச உணர்வு,
பார்ப்பனிய எதிர்ப்புணர்வு,
தியாகம், அர்ப்பணிப்பு…
இவை, இளந்தலைமுறையின் இயல்புகள்.
இன்றைய இளந்தலைமுறையை
“ஜென் சி”, “ஆல்ஃபா” என்று
வகைப் பிரித்துள்ளது முதலாளித்துவம்.
பெயர்களை மாற்றிவிடுவதால்
இளந்தலைமுறைகள் என்பது
மாறிப் போய்விடுமா என்ன?

ஆம்,
அன்றைய ஜென் சி,
அன்றைய ஆல்ஃபா பகத்சிங்!
இன்றைய பகத்சிங், நீதான்!


பரமேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 01-30, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 8 | ஜூன் 01-30, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தா.கிருட்டிணன் படுகொலை: அரசியல் கிரிமினல்மயமாவது முழுமையடைந்தது
  • காட்டிலே ஒரு வீரப்பன் ஓட்டுக்கட்சிகளிலே பலநூறு வீரப்பன்கள்
  • வெட்டு, குத்து விளையாட்டு… மணல் தேச மர்மக் கூட்டணி!
  • தனியார் வசமாகும் மருத்துவக் கல்வி
    தோற்றது மாணவர்கள் மட்டும்தானா?
  • “பொடா” பெண் கைதிகளைக் கொடூரமாக ஒடுக்கும் ‘குடிமகள்’ ஜெயா அரசு
  • இந்தியா-பாக். உறவு: கையைக் குலுக்கிக் கொண்டே… காலை வாரிக் கொண்டே…
  • தொடரும் சாதிவெறியாட்டங்கள்
    இதுவா சமூகநீதி?
  • பட அதிபர் ஜீ.வி. தற்கொலை: ஒட்டுண்ணியின் சாவுக்கு ஒப்பார் ஏன்?
  • மே.வங்கத்தில் நடப்பது போலீசு ஆட்சிதான்! – மனித உரிமை அமைப்புகள் பகிரங்க குற்றச்சாட்டு
  • உப்பு ஆலையா? நச்சு ஆலையா?
  • போர்க் கைதி மீட்பு: அண்டப் புளுகு… ஆகாசப் புளுகு… அமெரிக்கப் புளுகு
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மே 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 7 | மே 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: மு.க.வின் பொடா எதிர்ப்பு: கசாப்புக்காரனிடம் கருணை மனு
  • உலக ரவுடி அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்வெறியைக் கண்டித்து
    புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள்
  • ஜெயாவின் காட்டுத் தர்பார் கருணாநிதியின் அமைதிப் புரட்சி
  • மதிப்புக் கூட்டு வரி: சிறுவணிகத்துக்குச் சுருக்கு
  • போலீசு: மக்களின் நண்பனா? ரவுடியின் தோழனா?
  • பயங்கரவாத மோடியின் அரண்மனைக் கொலை
  • லாரி உரிமையாளர் போராட்டம்: பாதி வழியில் நின்றது…
  • ஜெயா-எதிர்க்கட்சிகள் இணைந்து வழங்கும்
    சட்டமன்ற சடுகுடு
  • ஈராக்: ஆக்கிரமிப்புப் போர் முடிந்தது மறுகாலானியாதிக்க எதிர்ப்புப் போராட்டம் தொடங்கியது
  • அன்னியப் பொருட்கள் புறக்கணிப்புப் போராட்டம்: போலிகளின் சந்தர்ப்பவாதம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 01-30, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 6 | ஏப்ரல் 01-30, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: உலக வங்கிக் கைக்கூலி அரசின் மிகக் கொடிய தாக்குதல்
  • ஈராக்: ஏகாதிபத்திய பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்புப் போர்
  • “தடா”வை விஞ்சும் “பொடா”
  • அயோத்தியில் அகழ்வாராய்ச்சி நீதிமன்றத்தின் கரசேவை
  • தியாகத் தோழர் பீட்டர் அந்தோணி
    மக்களுக்காக வாழ்ந்து மரணத்தை வென்றார்!
  • கிரிமினல்களாக போலீசு: நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
  • கிரிக்கெட் ரசிகர்களா? ஆர்.எஸ்.எஸ்.இன் கூடாரங்களா?
  • மைய அரசின் பட்ஜெட்: கோவணத்திற்கும் வந்தது ஆபத்து
  • அமெரிக்க “அம்பி” இந்தியனாம்! வங்கதேச முசுலீம் அந்நியனாம்!
  • இரத்தக் காடாக வயநாடு: நிலத்தைப் பறித்தவர்கள் உயிரையும் பறிக்கிறார்கள்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 01-31, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 5 | மார்ச் 01-31, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஜெயலலிதாவின் அராஜகத்தை எதிர்த்தாக்குதல்கள்தாம் வீழ்த்தும்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • பெரியார் மண்ணில் பார்ப்பன வெறிக்கூச்சல்
  • பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு: புரட்சிகர ஜனநாயகச் சக்திகளின் புதிய எழுச்சி
  • பார்ப்பன பண்பாட்டுக்கெதிரான போர்முழக்கம்
  • இந்துத்துவ மூலவருக்கு படத்திறப்பு போலி கம்யூனிஸ்டுகள் முகத்தில் கரிப்பூச்சு
  • புரட்சிகர அமைப்புகள் மீது பாய்ச்சல்: த.தே.பொ.க.வின் மூளைக் காய்ச்சல்
  • “காசேதான் கல்வியடா!” – சுயநிதி கல்லூரி முதலாளிகள் கொட்டம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 01-28, 2003 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 18, இதழ் 4 | பிப்ரவரி 01-28, 2003 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: பா.ஜ.க. அரசின் அப்பட்டமான துரோகம்!
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது
  • ஜெயா ஆதிக்கத்தில் தேர்தல்கள்
    கையுறு நிலையில் எதிர்க்கட்சிகள்
  • இசுலாமிய மதப் போர்வையில் தீவிரவாதிகளின் வெறிச் செயல்கள்
  • ஆக்கிரமிப்புப் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்: அஞ்சி நடுங்கட்டும் அமெரிக்கா!
  • தனிக்குவளை, கொத்தடிமைத்தனம், பாலியல் வன்கொடுமை
    விளக்கப்பாடியில் வன்னிய சாதிவெறியர்களின் கொட்டம்
  • மெரினாவை அழகுப்படுத்தும் திட்டம்
    மீனவர் வாழ்வைப் பறிக்கும் வக்கிரம்
  • திரவியம் தேடிப் போனவர்களின் துயரக் கதை
  • அடி முதல் நுனி வரை அழுகி நாறுது நீதித்துறை
  • எங்கே மனித உரிமை?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: சென்னையை உலுக்கிய உரிமைக் குரல்!

“தூய்மைப் பணியை தனியார்மயமாக்காதே”, “பணி நிரந்தரம் செய்”, “தி.மு.க. அரசே தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்று”, “இராம்கி நிறுவனத்திற்கு விலை போக மாட்டோம்”. இவை சென்னை மண்ணின் பூர்வகுடிகள், மாநகரத்தின் மையத்திலுள்ள ரிப்பன் கட்டடத்தை முற்றுகையிட்டு, ஓங்கி முழங்கிய உரிமை முழக்கங்கள்.

சென்னை மாநகரத்தின் பரபரப்பான பெருந்திரளை அரசியல்படுத்திய, ஆளும் அரசையும், திட்டமிட்டே புறக்கணித்த கார்ப்பரேட் கைக்கூலி ஊடகங்களின் மௌனத்தையும் உடைத்த, சாதிய பொது சமூகத்தை சலனப்படுத்திய, அரசியல் சக்திகளுக்கு நம்பிக்கையூட்டிய தூய்மைப் பணியாளர்களின் உறுதிமிக்க இப்போராட்டமானது ஒரு வரலாற்றுப் பதிவு.

தி.மு.க. அரசின் நெருக்கடிகள், சூழ்ச்சிகள், மழை, வெயில் என எல்லாவற்றையும் எதிர்கொண்டு 13 நாட்கள் உறுதியாக போராடிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் நீண்ட நெடிய பின்னணியையும் அவர்களது முழக்கங்களின் ஆழத்தையும் அறிந்துகொள்வது அவசியமானது.

தூய்மைப் பணியாளர்களின் உறுதிமிக்க போராட்டமும்
தி.மு.க. அரசின் அடக்குமுறையும்

சென்னை மாநகராட்சியின் ஐந்து (இராயபுரம்) மற்றும் ஆறாவது (திரு.வி.க. நகர்) மண்டலங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள்தான், தங்களுடைய உறுதியான போராட்டத்தின் மூலம் தற்போது ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனத்தையும் ஈர்த்தவர்கள்.

இந்த ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் மட்டும் தேசிய நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டத்தின் (NULM) கீழ் 2,000 ஒப்பந்த தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். சுமார் 15 ஆண்டுகளாக மாநகராட்சியின் கீழ் ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்தும் இவர்கள், தற்போதுவரை பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருக்கின்றனர்.

இதற்கெதிராக, தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி இவ்விரு மண்டலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் தொழிற்சங்க உதவியுடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இவ்வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஜூலை 18-ஆம் தேதியன்று ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களின் தூய்மைப் பணியை இராம்கி குழுமத்திற்கு கீழ் வரும் “எம்.எஸ்.டபிள்யூ சொல்யூஷன்ஸ் லிமிடெட்” (MSW Solutions Limited) என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு தாரைவார்த்து 10 ஆண்டுகளுக்கு ரூ. 276 கோடிக்கு ஒப்பந்தம் போட்டது தி.மு.க. அரசு.

தி.மு.க. அரசின் திட்டமிட்ட வன்முறை

இந்த இரண்டு மண்டலங்களில் 10 முதல் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8,000 ஊதியத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியத் தொடங்கிய தூய்மைப் பணியாளர்கள், பல்வேறு கள, சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தற்போதுதான் ரூ.22,000 வரை ஊதியம் பெறத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், இராம்கி நிறுவனமோ ரூ.16,950 மட்டுமே மாதச் சம்பளம் வழங்குவதாக அறிவித்துள்ளது. அதிலும் காப்பீடு, வைப்பு நிதி பிடிக்கப்பட்டு ரூ.14,000 மட்டும்தான் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தூய்மைப் பணியாளர்களின் இத்துணை ஆண்டுகால உழைப்பை உறிஞ்சிவிட்டு, தற்போது குறைந்தக் கூலிக்கு இராம்கி கார்ப்பரேட் நிறுவனத்திடம் காண்ட்ராக்ட் முறையின் கீழ் கொத்தடிமையாக்கப் பார்க்கிறது தி.மு.க. அரசு.

இதனைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம், மனு கொடுப்பது என பல வழிகளில் தொடர்ச்சியாக தொழிலாளர்கள் போராடி வந்தனர். ஆனால், தொழிலாளர்கள் போராட்டத்தைத் துளியும் மதிக்காத சென்னை மாநகராட்சி நிர்வாகம், ஜூலை 31-ஆம் தேதி ஐந்து மற்றும் ஆறு மண்டலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களை கைபேசியில் அழைத்து, ”நீங்கள் நாளையிலிருந்து வேலைக்கு வர வேண்டாம், வந்தால் தனியார் நிறுவனத்தின் கீழ்தான் வேலை செய்ய வேண்டும்” என்று தெரிவித்து அடாவடித்தனமாக நடந்துகொண்டது.

இதன் பிறகுதான் தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் ரிப்பன் கட்டடம் முன்பு எல்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி. ஆகிய தொழிற்சங்கங்களின் தலைமையில் தொடர்ச்சியாக 13 நாட்கள் போராடினார்கள்.

ஆனால், தொழிலாளர்களின் அமைதியான போராட்டத்தை, அவர்களின் கோரிக்கைகளை துளியும் பொருட்படுத்தாமல், மிகவும் அராஜகமான முறையில் தி.மு.க. அரசு நடந்துகொண்டது.

சென்னை மேயர் பிரியா, “அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் 11 மண்டலங்கள் தனியாருக்கு வழங்கப்பட்டது. நாங்கள் இரண்டு மண்டலங்களைத்தான் மாற்றுகிறோம்” என தி.மு.க. அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை நியாயப்படுத்திப் பேசினார்.

மற்றொருபுறம், “தேர்தல் வாக்குறுதி எண் 285-இன் படி பணி நிரந்தரம் வழங்கு” என முழக்கமிட்டு தொழிலாளர்கள் போராடிக் கொண்டிருக்கும் போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆதிக்கத் திமிருடன், “பணி நிரந்தரம் செய்வதாக நாங்கள் எங்கே வாக்குறுதி கொடுத்தோம் காட்டுங்கள்” என கூசாமல் பொய் பேசினார்.

மேலும், போராடும் தொழிலாளர்களுடன் நியாயமான பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பதிலாக ஐந்து மற்றும் ஆறு மண்டலங்களைச் சேர்ந்த கவுன்சிலர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மூலம் போராட்டக் களத்தில் இருக்கும் பெண்களிடம் போராட்டத்தில் இருந்து வெளியேறச் சொல்லி பேரம் பேசுவது, மிரட்டுவது என கிரிமினல்தனமாக பல வழிகளில் போராட்டத்தைக் கலைக்க முயற்சித்து, அம்பலப்பட்டுப் போனது தி.மு.க. அரசு.

போராடுகின்ற பெண் தூய்மைப் பணியாளர்களை கழிவறைக்கு கூட அனுமதிக்காமல், ரிப்பன் கட்டட வாயிலை அடைத்தது. இரவு உணவைத் தடுப்பது, மின் விளக்குகளை அணைத்து மிரட்டுவது, போலீசை குவித்து பீதியூட்ட நினைத்தது என தி.மு.க. அரசின் பல்வேறு அடக்குமுறைகளைக் கடந்து உறுதியாக போராடினர் தூய்மைப் பணியாளர்கள்.

நாளுக்கு நாள் மாணவர்கள், மக்கள் மத்தியில் தூய்மைப் பணியாளர்களுக்கான ஆதரவு பெருகத் தொடங்கியது. இனிமேலும், தொழிலாளர் போராட்டத்தை அனுமதித்தால் முழுமையாக அம்பலப்பட்டு விடுவோம் என்று தி.மு.க. அரசு அஞ்சியது. அதனால், தன்னுடைய ஆதரவாளர் ஒருவர் மூலம் தூய்மைப் பணியாளர் போராட்டம் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகவும், பொது ஒழுங்கை பாதிப்பதாகவும் போலியாக சித்தரித்து பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுக்கச் செய்தது. இதற்காகவே காத்திருந்ததுபோல், உயர்நீதிமன்றம் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்தக் கூறி அநீதியாக தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பைக் காரணம் காட்டி ஆகஸ்ட் 13-ஆம் தேதி இரவு ஆயிரக்கணக்கான போலீசை குவித்து அமைதியாக போராடிய தூய்மைப் பணியாளர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது தி.மு.க. அரசு. பெண்கள் என்றும் பாராமல் போலீசு அவர்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை செலுத்தியது. போராடிய பெண்களின் ஆடைகளை கிழித்து, மார்பகங்களில் கைவைத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது. பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்களை திட்டமிட்டு தாக்கியது. போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலால், பலருக்கு இரத்த காயங்கள் ஏற்பட்டது. பல்வேறு தொழிலாளர்கள் மயங்கி விழுந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சைக்கூட அளிக்காமல் கைது செய்து பேருந்துகளில் ஏற்றிச் சென்றது. இரவோடு இரவாக திட்டமிட்ட அரசு வன்முறையின் மூலம் போராடிய தொழிலாளர்களை குப்பைகளைப் போல அப்புறப்படுத்தியது தி.மு.க. அரசு.

கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் சென்னை முழுவதும் பல்வேறு இடங்களில் பிரித்து அடைத்து வைக்கப்பட்டனர். காயமடைந்தவர்கள் போதிய மருத்துவ வசதி இல்லாமல், போராடியவர்களின் கைப்பேசிகள் பறிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டனர். மறுநாள் ஆகஸ்ட் 15 ‘சுதந்திர தினம்’ என்பதால், கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்யாமல் காலம் தாழ்த்தி அலைக்கழித்தது போலீசு.

அடக்குமுறையின் மூலம் உழைக்கும் மக்களின் உரிமைக்கான போராட்டத்தை அடக்கி, அந்த அழுகுரல் ஓய்வதற்குள், தி.மு.க. அரசு அமைதியாக கொண்டாடத் துடித்த சுதந்திர தினம் யாருக்கானது? என்ற கேள்வியை நாம் இங்கு எழுப்ப வேண்டியுள்ளது.

கொலைகார இராம்கி போன்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கா? ஒடுக்கப்பட்ட, மண்ணின் பூர்வகுடி மக்களுக்கா?

தனியார்மயமாக்கத்திற்கு எதிராக
தொடரும் போராட்டம்

தூய்மைப் பணியை தனியார் – கார்ப்பரேட் மயமாக்குவதற்கு எதிராக தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாகவே தற்போதைய போராட்டத்தையும் பார்க்க வேண்டியுள்ளது.

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் என்.யூ,எல்.எம். திட்டத்தின் கீழ் நேரடியாக மாநகராட்சியால் வேலைக்கு எடுக்கப்பட்டார்கள். இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு 60 சதவிகித நிதியும் மாநில அரசு 40 சதவிகித நிதியும் அளித்து வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பி.எஃப். / ஈ.எஸ்.ஐ. (PF/ESI) பணிக்கொடை ஆகியவை வழங்கப்படுவது கிடையாது. இத்திட்டமே அரசின் திட்டமிட்ட சுரண்டல்தான். இருப்பினும், பத்து ஆண்டுகளுக்கும் மேல் என்.யூ,எல்.எம். கீழ் பணி புரிந்தால், பணி நிரந்தரம் செய்யப்படுவோம் என்ற நம்பிக்கையில்தான் பெருவெள்ளம், பேரிடர் காலம், கொரோனா நெருக்கடி என எல்லா காலங்களிலும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காத நிலையிலும் உயிரைப் பணயம் வைத்து தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வந்தார்கள்.

ஆனால், சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மையை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரைவார்க்கும் நடவடிக்கையில் இறங்கி, தூய்மைப் பணியாளர்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக்கியது, அன்றைய அ.தி.மு.க. அரசு.

2020-இல் சென்னை மாநகராட்சியின் ஏழு மண்டலங்களின் தூய்மைப் பணியை ஸ்பெயின் நாட்டின் உர்பெசர் மற்றும் இந்திய நிறுவனமான சுமீட் இணைந்த உர்பெசர் – சுமீட் (Urbaser – Sumeet) என்னும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆண்டிற்கு ரூ. 447 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் அளித்தது. அதற்கான துவக்க விழா அ.தி.மு.க. அரசால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

அதற்கடுத்து, 2021 பிப்ரவரியில் ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்ட “இராம்கி என்விரோ என்ஜினியர்ஸ் லிமிடெட்” (Ramky Enviro Engineers Ltd) என்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனத்திற்கு மேலும் நான்கு மண்டலங்களின் தூய்மைப் பணிக்கு டெண்டர் அளித்தது, அ.தி.மு.க. அரசு.

இவ்வாறு மொத்தம் 11 மண்டலங்களில் என்.யூ.எல்.எம். திட்டத்தின் கீழ் பணியாற்றிவந்த 12,000 தொழிலாளர்களும் ஒரு சில மாதங்களில் படிப்படியாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு காண்ட்ராக்ட் கொத்தடிமைகளாக விற்கப்பட்டனர்.

ஏற்கெனவே, கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த தொடக்க காலங்களில் எட்டு மாதங்களாக வேலையில்லாமல், அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே போராடிக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. அரசு இழைத்த அநீதி பேரிடியாக இருந்தது. அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியானது.

ஆனாலும் தூய்மைப் பணியாளர்கள் சோர்ந்து போகவில்லை, அ.தி.மு.க. அரசின் துரோகத்திற்கு அடிபணியவும் இல்லை.

உழைக்கும் வர்க்கத்திற்கே உரிய போர்க்குணத்துடன், வைராக்கியமும் சுயமரியாதையும் மேலோங்கிய தூய்மைப் பணியாளர்களான பெண்கள் தலைமையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 2020 அக்டோபர் முதல் 2021 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்கள் வரை மண்டல வாரியாக மாநகராட்சி அலுவலங்களிலும், ஒருங்கிணைந்த முறையில் ரிப்பன் கட்டடத்திற்கு அருகிலும் தொடர்ச்சியாக காட்டுத்தீ போல தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் பரவிக்கொண்டிருந்தது.

இச்சூழலில்தான், சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருந்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார். 10 முதல் 12 ஆண்டுகளுக்கும் மேல் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக பணிபுரிந்த 12,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், அவர்களுக்கு உடனடியாக உயர்நீதிமன்ற வழக்கின் முடிவிற்கு காத்திராமல் பணி நிரந்தரம் வழங்கக் கோரியும் தி.மு.க. பெயரில் மாநகராட்சி ஆணையருக்கு 19.01.2021 தேதியிட்ட ஒரு கடிதத்தை அனுப்பினார்.

அதிலும், குறிப்பாக இன்றைய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தூய்மைப் பணியாளர்களுடன் களத்தில் நின்று ரிப்பன் மாளிகையில் மனு கொடுத்ததோடு, அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி முழங்கினார். தி.மு.க. தங்களது தேர்தல் அறிக்கையிலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பணி நிரந்தரம் உறுதி செய்யப்படும் என வாக்குறுதியளித்தது.

ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. என்.யூ.எல்.எம். திட்டத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட 11 மண்டலத்தைச் சேர்ந்த 12,000 தொழிலாளர்கள் தங்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி முதல்வர் ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என அனைவரையும் நேரில் சந்தித்து முறையிட முயன்றனர். ஆனால், அவர்களை நேரில் சந்திக்கக்கூட தி.மு.க. அமைச்சர்கள் தயாராக இல்லை.

அதன் பிறகு, செனாய் நகர், அண்ணா நகர் பகுதிகளில் தொடர்ச்சியாக சுமார் எட்டு மாதங்களுக்கும் மேல் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இறுதியாக, ரிப்பன் கட்டடத்திற்கு அருகில் அனைத்து மண்டலத் தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து தங்களை மீண்டும் என்.யூ.எல்.எம். திட்டத்தின் கீழ் இணைத்திட வேண்டும் என்றும் பணி நிரந்தரம் செய்யக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டம் அனைவராலும் கவனம் பெற்றது. அப்போதும் தி.மு.க. அமைச்சர்களோ, முதல்வரோ தூய்மைப் பணியாளர்களை ஏறெடுத்துக் கூட பார்க்கவில்லை. அதிகாரிகளையும் போலீசையும் வைத்து மிரட்டினார்கள். ஆனால், அதன் பின்னரும் தனித்தனியாக தொடர்ச்சியாக போராட்டங்கள் நடந்து கொண்டேதான் இருக்கிறது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பணியிலிருந்து நீக்கப்பட்ட 12,000 தூய்மைப் பணியாளர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அப்போது போடப்பட்ட ஒப்பந்தங்களை இரத்து செய்யாமல் தூய்மைப் பணியாளர்கள் முதுகில் குத்திய தி.மு.க. அரசு, புதிதாக அரசாணைகள் 152, 10, 139 ஆகியவற்றை வெளியிட்டு தூய்மைப் பணிகளை உள்ளடக்கிய பொதுத்துறைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் சதித்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

தனது குறுகிய சுயநலமான வெறும் தேர்தல் கதகதப்பிற்காக தி.மு.க. செய்த இந்த துரோகம் 13 நாட்கள் நடந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில் பட்டவர்த்தனமாக தோலுரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரத்திற்காக 15 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்த தூய்மைப் பணியாளர்களை தெருவில் நிறுத்திவிட்டு, அவர்களது போராட்டத்தை பற்றி தரம் தாழ்ந்த, கீழ்த்தரமான அவதூறுகளை பரப்புகிறது, தி.மு.க. அரசு. மறுபுறத்தில், இராம்கி என்ற கார்ப்பரேட் நிறுவனத்திற்கு நற்சான்றிதழ் கொடுப்பதற்கு தி.மு.க. அரசு போராடுகிறது. நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் இராம்கி நிறுவனத்தை ஒரு பன்னாட்டு நிறுவனம் என வாழ்த்தி பேசுகிறார். தி.மு.க. அரசின் இந்த சாதிய – வர்க்க விசுவாசத்தின் துர்நாற்றம் நம்மை மூச்சுத் திணற செய்கிறது.

கொலைகார இராம்கி நிறுவனத்தின் பிடியில்
தூய்மைப் பணியாளர்கள்

கழிவு நீர் சுத்திகரிப்பு, கழிவு மேலாண்மை உள்கட்டமைப்பு, கழிவு – ஆற்றல் போன்றவற்றில் இந்தியாவின் முன்னணி நிறுவனம், இந்த நிறுவனத்திற்கு கீழ் செல்வதால் ஊதிய உத்திரவாதம், பணிப்பாதுகாப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாது என இராம்கி நிறுவனத்தை தி.மு.க. அரசு தூக்கிப்பிடிக்கிறது.

ஆனால், தென் தமிழ்நாட்டில் 20-க்கும் மேற்பட்ட கிராமத்தின் சுற்றுச்சூழலை பாழ்படுத்தி, நூற்றுக்கணக்கான மக்களின் உயிர்களை பலிவாங்கிய, கருப்பை பாதிப்பு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் ஆகிய பாதிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான மக்களை உட்படுத்திய ஒரு கொலைகார நிறுவனம்தான் இந்த இராம்கி நிறுவனம்.

2006-ஆம் ஆண்டு முதல் விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்சுழி வட்டத்தை அடுத்துள்ள அ.முக்குளம் ஊராட்சியில் இராம்கி நிறுவனத்தின் பொதுவான உயிரி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு மையம் (Common Bio-Medical Waste Treatment Facility – CBMWTF) செயல்பட்டு வந்தது. மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், இராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து சுமார் 2,646 சுகாதார நிலையங்களிலிருந்து மருத்துவக் கழிவுகளை சேகரித்து சுத்திகரிக்கும் பணியை செய்து வந்தது. இதில் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியும், அனுமதியை மீறி அண்டை மாநிலங்களிலிருந்தும் மருத்துவக் கழிவுகளை மறைமுகமாக கொண்டுவந்து சுத்திகரிக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

மேலும், விதியை மீறி 12 ஆழ்துளை போர்கள் போடப்பட்டதால் அப்பகுதியின் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டது. ஒருபுறம் சுத்திகரிப்பு மையத்திலிருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகை காரணமாக அப்பகுதிகளில் கால்நடைகள் தொடர்ச்சியாக இறக்க ஆரம்பித்தன. விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் சுவாசக் கோளாறு, சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகினர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பலியாகினர். ஐந்து முதல் பத்து வயதுடைய குழந்தைகளுக்கு கூட டயாலிசிஸ் சிகிச்சை செய்ய வேண்டிய கொடிய நிலை உருவானது.

பாதிக்கப்பட்ட மக்கள் இந்த ஆலையை மூட வேண்டும் என 12 கிராம பஞ்சாயத்துகளில் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். மக்கள் இயக்கங்கள், சிவில் சமூக அமைப்புகள், சூழலியல் செயற்பாட்டாளர்கள், ஜனநாயக சக்திகளின் தொடர் போராட்டத்தால் 2013 ஜூன் 26-ஆம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் குழு ஆலையை சோதனையிட்டது. இதில் குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபணமானது. இதற்கு இராம்கி நிறுவனம் அளித்த விளக்கத்தை ஏற்க மறுத்த மாவட்ட நிர்வாகம் 2013 ஜூலை 4 அன்று ஆலையை மூடியது.

அதன் பின்னர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல் முறையீடு செய்து மீண்டும் ஆலையை இயக்க அனுமதி பெற்ற இராம்கி நிறுவனம், தற்போதுவரை சட்டப்பூர்வமாக 20 கிராம மக்களின் வாழ்வாதாரத்தை சீரழித்து வருகிறது. நோயால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் சொந்த ஊரை விட்டு காலி செய்துவிட்டனர். ஏராளமானோர் மருத்துவமனைக்கு அலைந்து கொஞ்சம் கொஞ்சமாக மடிந்துக்கொண்டு இருக்கின்றனர்.

இவ்வாறு இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களை கொண்ட துணை நிறுவனங்கள் மூலம் காண்ட்ராக்ட் எடுத்து இராம்கி நிறுவனம் இயங்கி வருகிறது. ஹைதராபாத்தில் ஜவஹர் என்ற பகுதியில் இந்நிறுவனத்திற்கு சொந்தமான குப்பை கிடங்கில் பலர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டுள்ளது. தற்போது கூட ஆந்திராவில் இந்த இராம்கி நிறுவனத்தை நடத்திவரும் அயோத்ய ராமிரெட்டியை ரூ.143 கோடி நில மோசடி வழக்கில் சி.பி.ஐ. பிரதான குற்றவாளியாக இணைத்திருக்கிறது.

குறிப்பாக, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இராம்கி நிறுவனம் தூய்மைப் பணிகளை காண்ட்ராக்ட் எடுத்து இயக்கி வந்தபோது, பத்து ஆண்டுகளாக தொழிலாளிகளிடம் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட பி.எஃப். (PF) தொகையான ரூ.300 கோடியை வங்கியில் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டு, 2021-ஆம் ஆண்டு மாநகராட்சியால் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இராம்கி நிறுவனம் ஊழல், மோசடிகள் நிறைந்த கொலைகார கொள்ளைக்கார நிறுவனம் என்பதை நன்கு அறிந்திருந்தும் தி.மு.க. அரசு இராம்கி நிறுவனத்திற்கு தூய்மைப் பணியாளர்களை தாரைவார்க்கத் துடிப்பது அவர்களை புதைக்குழியில் தள்ளுவதற்குச் சமம்.

000

பொய் பிரச்சாரங்கள், வெறுப்புப் பேச்சுக்கள், அவதூறுகள், சூழ்ச்சிகள், அடக்குமுறைகள் என ஆளும் தி.மு.க. அரசின் எல்லா தகிடுதத்தங்களையும் முறியடித்து கொலைகார இராம்கி நிறுவனத்திடம் விலைப்போக மாட்டோம் என தங்களது பணி நிரந்தரக் கோரிக்கைக்காக போராடிய தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தனியார்மயத்திற்கு எதிரான பொதுக் கருத்தை பலப்படுத்தியுள்ளது. தமிழ்நாடெங்கும் வஞ்சிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு வழிகாட்டியிருக்கிறது.

ஆனால், தூய்மைப் பணியாளர்களின் மையமான கோரிக்கையை மழுங்கடிக்கவும், மடைமாற்றவும் தொடர் முயற்சிகள் நடக்கின்றன.

சான்றாக, இரவோடு இரவாக அரசு வன்முறை மூலம் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்திவிட்டு காலையில் தூய்மைப் பணியாளர்களை அழைத்து உணவுப் பரிமாறுவது போன்று கீழ்த்தரமான நாடகங்கள் அரங்கேற்றப்படுகின்றன. 2016–இல் முக்குளத்தில் இராம்கி நிறுவனத்திற்கு எதிராக போராடிய தற்போதைய நிதித்துறை அமைச்சர் தென்னரசு மூலமாகவே தூய்மைப் பணியாளர்களை ஏமாற்றுவதற்கான திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. “பணிநிரந்தம் செய்யக் கூடாது” என சாதி ஒழிப்பையும், பணி நிரந்தரக் கோரிக்கையையும் எதிர்நிலைப்படுத்தும் விதமாக விவாதங்கள் கட்டமைக்கப்படுகின்றன.

இவையெல்லாம், ஆளும் தி.மு.க. அரசு, தூய்மைப் பணி கார்ப்பரேட்மயம் எனும் தன்னுடைய கொள்கை முடிவிலிருந்து பின்வாங்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகின்றன. கார்ப்பரேட்டுகளின் நலனுக்கேற்ப சென்னை உட்பட அனைத்து நகரங்களையும் மறுகட்டமைப்பு செய்துவரும் தி.மு.க. அரசு, அதன் ஓர் அங்கமாக தூய்மைப் பணியை கார்ப்பரேட்மயமாக்குவதிலும் தீவிரமாக உள்ளது.

ஆனால், இதற்காக தூய்மைப் பணியாளர்களும் ஓய்ந்துவிடப் போவதில்லை. “காண்ட்ராக்ட் முறையை இரத்துச் செய்! மாநகராட்சி பணிகளை தனியார்மயமாக்காதே! தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்!” என்ற இலக்கை அடையும் வரை தூய்மைப் பணியாளார்கள் போராட்டங்கள் தொடரும். போராடும் தூய்மைப் பணியாளர்களோடு துணைநிற்போம்!


பூபாலன்

(புதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram