1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 7-8 | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
மதுரையில் நடந்த ‘முருக பக்தர்’ மாநாட்டில் பேசிய பா.ஜ.க., இந்து முன்னணி தலைவர்கள், நீதிமன்றம் விதித்த ‘கட்டுப்பாடு’களை ‘மீறி’விட்டதாக ஜனநாயக சக்திகள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் பேசக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை இந்து முன்னணி கும்பல் மீறிவிட்டதை முன்வைத்து, நீதிமன்றத்திலும் அதிகாரிகளிடமும் முறையிட்டு இந்து முன்னணி கும்பலுக்கு நெருக்கடி கொடுத்துவிடலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
ஆனால், மதக்கலவரத்திற்கு வித்திடும் மதுரை ‘முருக பக்தர்’ மாநாடே பா.ஜ.க. – இந்து முன்னணி சங்கப் பரிவாரக் கும்பலும் அதிகார வர்க்கமும் நீதிமன்றமும் ஒன்றிணைந்து நடத்தியதுதான் என்ற உண்மை இவர்களுக்கு புரியவில்லை.
அதிகார வர்க்கம்-நீதிமன்றத்தின் துணையுடன் தொடங்கிய கலவர முயற்சிகள்
1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஒரு முன்மாதிரியாகக் கொண்டு நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்கும் ஒரு விரிந்த இந்துராஷ்டிரத் திட்டத்தின் அங்கம்தான் திருப்பரங்குன்றம் மலை தொடர்பான பிரச்சினையாகும். அந்தவகையில், 1994-லிருந்தே திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபமேற்ற வேண்டுமெனக் கூறி இஸ்லாமியர்களுக்கெதிராக மதக்கலவரத்தைத் தூண்டும் நோக்கத்தில் இந்து முன்னணி கும்பல் செயல்பட்டு வருகிறது.
அரசு அதிகார மட்டத்தில் தனது விசுவாசிகளையும் சங்கிகளையும் பொருத்திக் கொண்டு சரியான அரசியல் தருணத்திற்காகக் காத்திருந்த இக்கும்பல், 2023-லிருந்து மீண்டும் திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென்ற பிரச்சினையைக் கிளப்பி வந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிகார வர்க்கத்தின் துணையுடன் சிக்கந்தர் தர்காவில் ஆடு-கோழி பலியிடுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
எந்த ஆதாரமுமின்றி இந்து முன்னணி கும்பலும் போலீசு-அதிகார வர்க்கமும் திட்டமிட்டு சதித்தனமாக இஸ்லாமியர்கள் ஆடு-கோழி பலியிட்டு வணங்குவதைத் தடுத்தது. நீதிமன்றமும் திருப்பரங்குன்ற மலை விவகாரத்தை, தாவாக்குரிய விவகாரமாக்கி இஸ்லாமியர்கள் ஆடு-கோழி பலியிட்டு வணங்குவதைத் தடுத்து நிறுத்தியது.
இஸ்லாமியர்களின் மத உரிமையைப் பறிக்கின்ற, மத நல்லிணக்கத்தை சிதைக்கின்ற இந்த நடவடிக்கைக்கெதிராக கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக சக்திகள் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு அனுமதி கோரியபோது, 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகச் சொல்லி போலீசும் நீதிமன்றமும் அனுமதி மறுத்தன.
ஆனால், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதாகக் கூறும் அதே காலத்தில் பிப்ரவரி 4-ஆம் தேதியன்று இந்து முன்னணி கும்பலின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியதும் இதே அதிகார வர்க்கமும் நீதிமன்றமும்தான்.
பிப்ரவரி 4-ஆம் தேதி நடத்தப்பட்ட இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில்தான் எச்.ராஜா, “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று கொக்கரித்தார். சங்கப் பரிவாரக் கும்பலின் கூலிப்படை ஊடகங்களும் இஸ்லாமியர்களுக்கெதிராக தொடர்ச்சியான அவதூறுகளைப் பரப்பி வந்தன.
மாநாடு தொடர்பான மூன்று வழக்குகள்
இந்த பின்னணியில்தான் ஜூன் 22, ‘முருக பக்தர்’ மாநாட்டை அறிவித்தது இந்து முன்னணி கும்பல். சங்கிகளின் இந்த மாநாட்டிற்கு தடைவிதிக்க வேண்டுமென்று மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராமலிங்கம் சார்பாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத் தலைவர் அரங்கநாதன் சார்பாகவும் இம்மாநாட்டுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இத்துடன், இந்து முன்னணியின் மாநாட்டிற்கு அனுமதி வழங்கிய மதுரை போலீசு 52 கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளில் ஆறு கட்டுப்பாடுகளை இரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்து முன்னணி கும்பலும் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இவ்வழக்கில் மாநாட்டிற்கு கட்டுப்பாடுகள் விதிப்பதற்கு, அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாதங்கள் மிகவும் மொன்னையாக இருந்தன. இந்து முன்னணியின் கடந்த கால இந்துமதவெறி நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவொரு வாதத்தையும் போலீசு முன்வைக்கவில்லை.
கலவரங்களைத் தூண்டுவதற்காக இந்து முன்னணியினர் மேற்கொண்ட 15-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகள் குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக போலீசு உயரதிகாரிகளுக்குக் கொடுக்கப்பட்ட புகார் மனுவில் பட்டியலிடப்பட்டிருந்தது. ஆனால், அதுபோன்ற எந்தவொரு சரியான ஆதாரத்தையும் முன்வைத்து வாதிடாமல், மாநாடு எந்தவித இடையூறும் இல்லாமல் நடப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுப்பதாகவே போலீசின் அணுகுமுறை இருந்தது.
அரசியல் பேசக்கூடாது:
கட்டுப்பாடல்ல, சலுகை!
இம்மூன்று வழக்குகளும் நீதிபதி புகழேந்தி முன்னிலையில் ஜூன் 13 அன்று இறுதி விசாரணைக்கு வந்தது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் லஜபதிராய், இந்த மாநாடு கலவரத்தைத் தூண்டுவதற்கான மாநாடு என்பதை பலவித ஆதாரங்களையும் முன்வைத்து விரிவாக வாதாடினார்.
திருப்பரங்குன்றம் பிரச்சினையையொட்டி இந்து முன்னணி கும்பலால் சிறுபான்மையினருக்கு எதிராக மதவெறியூட்டும் விதமாக இரண்டு பாடல் காணொளிகள் வெளியிடப்பட்டதையும் அதற்கெதிராக தோழர் இராமலிங்கம் புகார் அளித்த விவரங்களையும் ஆதாரங்களோடு எடுத்து முன்வைத்தார். பா.ஜ.க-வினரும், இந்து முன்னணியினரும் வெளியிட்ட இரண்டு பிரசுரத்தில் அரசியல் சாசனத்திற்கு விரோதமாகவும் கலவரத்தை தூண்டும் விதமாகவும் முழக்கங்கள் முன்வைக்கப்பட்டிருந்ததையும் எடுத்துக்காட்டினார்.
இவற்றையெல்லாம், ஒரு பொருட்டாகக் கூட நீதிபதி எடுத்துக்கொள்ளவில்லை. மாறாக, “இது முருக பக்தர் மாநாடு என்று அவர்களே கூறுகிறார்கள், பிறகு அதையெல்லாம் இங்கு ஏன் காட்டுகிறீர்கள்” என்று இந்து முன்னணியினரின் வாதத்தை அப்படியே வழிமொழிந்தார்.
இந்து முன்னணியின் வசனங்களையே தீர்ப்பாக எழுதிய நீதிபதி புகழேந்தி
குறிப்பாக, பிப்ரவரி 4-ஆம் தேதி இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எச்.ராஜா, “திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்” என்று மதக் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதையும் அவர் மீது போலீசு வழக்கு பதிவு செய்திருப்பதையும் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் குறிப்பிட்டார்.
அனைவரும் அறிந்த வகையில், நடந்த இந்த ஆதாரத்தைக் கூட நீதிபதி புகழேந்தி எடுத்துக்கொள்ளவில்லை. இதற்கு பதில் வாதமாக இந்து முன்னணி வழக்கறிஞர், “எச்.ராஜா இந்து முன்னணியைச் சேர்ந்தவர் அல்ல” என்ற விளக்கத்தைக் கொடுத்தார். மோசடித்தனமான இந்த விளக்கத்தை நீதிபதி ஏற்றுக்கொண்டு, இந்து முன்னணி மாநாட்டில் “அரசியல் பேசக்கூடாது” என்றுக் கூறி மாநாட்டிற்கு அனுமதியை வழங்கினார்.
மதவெறியைத் தூண்டும் வகையில் எச்.ராஜா பேசிய ஆதாரங்கள் கண் முன்னே இருந்தபோதும், இந்து முன்னணி கும்பல் நீதிமன்றத்தின் எந்தக் கட்டுப்பாடுகளையும் மதிக்காது என்று தெரிந்திருந்தும், இந்து முன்னணியின் வாசகங்களையே தீர்ப்பாக எழுதிவிட்டார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி.
இந்து முன்னணியினருக்கு வழங்கிய இதே நீதியை, போராடும் ஜனநாயக சக்திகளுக்கு மட்டும் இந்த நீதிமன்றம் வழங்கவில்லையே, அது ஏன்?
மார்ச் 9-ஆம் தேதி மத நல்லிணக்கக் கூட்டமைப்பு சார்பாக, மாநாடு நடத்துவதற்கு இதே அதிகார வர்க்கமும் நீதிமன்றமும் அனுமதியை மறுத்தன. ஆடு-கோழி பலியிட்டு வணங்கும் உரிமைக்காக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக மனு தாக்கல் செய்தபோது போலீசும், நீதிமன்றமும் ம.க.இ.க. வெளியிட்ட பிரசுரத்தில் இருக்கும் வாசகங்களை எடுத்துக்காட்டி, மக்களின் உணர்ச்சியைத் தூண்டுவதாக இருப்பதாகக் கூறி அனுமதி மறுத்தன.
ஆனால், இந்து முன்னணிக்கு மட்டும் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடாமல், இந்து முன்னணி சொல்லும் விளக்கத்தை அப்படியே ஏற்றுக்கொள்கிறது, இந்த பூணூல் மன்றம்.
ஆகையால், இந்து முன்னணி மாநாட்டில் ‘அரசியல் பேசக் கூடாது’ என்று நீதிபதி போட்ட உத்தரவு என்பது, இந்து முன்னணிக்கு கொடுக்கப்பட்ட சலுகையாகும். இந்த சலுகையையே, இந்து முன்னணி கும்பலுக்கு நீதிபதி கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துவிட்டதாக, தி.மு.க. ஆதரவு ஊடகங்கள் கொஞ்சமும் வெட்கமின்றி பேசியது, தி.மு.க. அரசுடைய அதிகார வர்க்கத்தின் துரோகத்தை மறைக்கும் இழிந்த நடவடிக்கையாகும்.
சனாதனத்தின் ஆட்சி
இவ்வழக்கில் முன்னதாக, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார்பாக தொடரப்பட்ட மனு மீதான விவாதம் நடந்தது. ஆகம விதிகளைக் காட்டித்தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமையைத் தடுத்து வருகிறது நீதிமன்றம். எனவே, ஆகம விதிகளுக்கு உட்பட்டுதான் முருக பக்தர் மாநாட்டில் அமைக்கப்படும் அறுபடை வீடுகள் மாதிரி (செட்டப்) அமைக்கப்பட வேண்டும், இல்லையேல் அதற்கு அனுமதி வழங்கக் கூடாது. மேலும், முருகனின் அறுபடை வீடுகள் அனைத்தும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனவே, அறுபடை வீடுபோல மாதிரி செய்து தற்காலிக வழிபாட்டு மையங்களை அமைக்க அறநிலையத்துறையிடம் அனுமதி வாங்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி, ஆகம விதிகளைக் கடைப்பிடிப்பீர்களா என்று இந்து முன்னணியின் வழக்கறிஞரைப் பார்த்து கேள்வி எழுப்பினார். அதற்கு இந்து முன்னணியின் வழக்கறிஞர், சானதன விதிகளின்படி பூசைகள் நடக்கும் என்று தெரிவித்தார். இதனை எந்தவித எதிர்ப்புமின்றி நீதிபதி ஆமோதித்து ஏற்றுக்கொண்டார்.
மேலும், இது போன்று கடவுள் உருவங்களின் சிறிய அளவிலான மாதிரிகளை வைத்து வழிபடுவது ஆகம விதிகளுக்கு எதிரானது என்பதற்கு எவ்வித சான்றுகளையும் நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி இந்த வாதத்தையே நிராகரித்துவிட்டார்.
இதன் பொருள் என்ன?
ஆம், பார்ப்பன ஆதிக்கத்திற்கு அவசியம் எனில் ஆகமவிதி என்று ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி மக்களின் உரிமைகளைப் பறிக்கும். அதுவே, தனது பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக இருக்கிறது என்றால், எந்த முகாந்திரமும் இல்லாமல் அதைத் தூக்கியெறிந்துவிடும். இவ்வாறு இரட்டை நாக்கையே தனது கோட்பாடாகக் கொண்டு பார்ப்பன சனாதனத்தை நிலைநாட்டி வருகிறது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
ஆம், சனாதன பயங்கரவாதம் மதுரையில் பரவி வருகிறது. அதை எதிர்க்கவேண்டிய நீதிமன்றத்திலோ, சனாதனமே ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ‘திராவிட மாடல்’ அரசின் அதிகாரிகள், அங்கு சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர். மதுரை மாநாட்டில் விதைக்கப்பட்டுள்ள சனாதன பயங்கரவாதத்தின் விதைகள் தமிழ்நாடெங்கும் பரவக் காத்திருக்கின்றன. தமிழர்களே எச்சரிக்கை!
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 5-6 | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1998பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
தர்மஸ்தலா பாலியல் படுகொலைகள்;
இந்து அறநிலையத்துறையின் கீழ்
அனைத்து கோயில்களையும் மடங்களையும் கொண்டு வருவதே தீர்வு!
நீதிமன்றத்தின் GAG உத்தரவுக்கு எதிராக போராடுவோம்!
பத்திரிகை செய்தி
கர்நாடகா, மங்களூரில் உள்ள தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயில் வளாகத்தில் 1995 முதல் 2014 வரை பல பெண்களின் உடல்களை புதைக்க வற்புறுத்தப்பட்டதாக மேனாள் துப்புரவு பணியாளர் ஒருவர், நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்திருந்தார்.
தன்னால் புதைக்கப்பட்ட இளம் பெண்களின் உடல்களில் பாலியல் வன்கொடுமையின் அறிகுறிகளுடன் இருந்ததாகவும், சில உடல்கள் பள்ளி சீருடையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். பிரச்சனைக்குரிய இந்த தர்மஸ்தலா அமைந்துள்ள இடமான மங்களூர் ஆர்.எஸ்.எஸ்-இன் செல்வாக்கு மிகுந்த பகுதியாக இருப்பதும், அந்த தர்மஸ்தலா இந்து அறநிலையத்துறையின் கீழ் இல்லாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. தர்மஸ்தலாவில் நடைபெற்ற பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் படுகொலைகளுக்கு எதிராக நாடு முழுவதும் அடுத்தடுத்து போராட்டங்கள் நடைபெற்றன. தர்மஸ்தலாவின் தர்மகர்த்தா பி.ஜே.பி-யின் எம்.பி வீரேந்திர ஹெக்டெ என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதனையடுத்து, இது குறித்து விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்தது.
தர்மஸ்தலா கோயிலின் தர்மகர்த்தா டி. வீரேந்திர ஹெக்டேயின் சகோதரர் ஹர்ஷேந்திர குமார் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் அடிப்படையில், ஊடகங்கள் எந்தவொரு அவதூறு செய்திகளையும் வெளியிட வேண்டாம் என பெங்களூரு சிவில் நீதிமன்றம் கடந்த ஜூலை 18 ஆம் தேதி இடைக்காலத் தடை உத்தரவு (GAG) பிறப்பித்தது.
தர்மஸ்தலா வழக்கு தொடர்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட உள்ளடக்கம் தொடர்பான சுமார் 8,000 தொடுப்புகளை (Links) நீக்கவும் உத்தரவிட்டது.
தர்மஸ்தலா படுகொலைகள், பாலியல் வன்முறை தொடர்பாக பெரும் தேசிய ஊடகங்கள் வாயை மூடி அமைதியாக இருப்பதும், சிறிய ஊடகங்கள் வழியாக வெளியே வந்த செய்திகள் அனைத்தும் நீதிமன்றத்தால் நீக்கப்பட்டதும் நாட்டின் மிக இழிவான பத்திரிக்கை சுதந்திர நிலையை எடுத்துக்காட்டுகிறது.
பெங்களூர் சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக யூடியூப் நிறுவனம் ஒன்று மேல்முறையீடு செய்துள்ளது தவிர, கர்நாடக மாநில காங்கிரஸ் அரசு மேல்முறையீடு செய்யவில்லை.
அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமையான 19 (1)-இன் கீழான அடிப்படை உரிமைகள் மேற்கண்ட தீர்பின் வழியாக பறிக்கப்பட்டுள்ளதை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிச கும்பல் அறநிலையத்துறையை ஒழிக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில்தான் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத தர்மஸ்தலாவில் இந்த பாலியல் படுகொலைகள் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
தர்மஸ்தலாவில் நடைபெற்ற பாலியல் படுகொலைகள் தொடர்பான விசாரணை வெளிப்படையாக நடைபெற வேண்டும் என்றும் நாடு முழுவதும் அனைத்து கோயில்களையும் மடங்களையும் இந்து அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் கோருவதுடன் ஊடக சுதந்திரத்தை காப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் தொடர்ந்து மக்கள் போராட வேண்டும் என்று ம.அ.கழகம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன் தோழர் சி. வெற்றிவேல் செழியன், மாநிலப் பொதுச் செயலாளர், மக்கள் அதிகாரக் கழகம், தமிழ்நாடு – புதுவை 9962366321
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 1-4 | நவம்பர் 16-30, 1997 – ஜனவரி 1-15 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 23-24 | அக்டோபர் 16-31, நவம்பர் 01-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 10, இதழ் 21-22 | செப்டம்பர் 16-30, அக்டோபர் 01-15, 1995 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
தமிழ்நாட்டில் புதிதாக எட்டு இடங்களில் சிறிய துறைமுகங்கள் அமைப்பதற்கு தி.மு.க அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக தூத்துக்குடி மீனவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தொழில் துறையால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களைக் கொண்டு செல்வதற்கு ஏதுவாக எட்டு சிறிய வர்த்தக துறைமுகங்களை உருவாக்க தி.மு.க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக செங்கல்பட்டு மாவட்டம் முகையூர் மற்றும் பணையூர், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கடலூர் மாவட்டம் சிலம்பிமங்களம், மயிலாடுதுறை மாவட்டம் வான்கிரி, நாகை மாவட்டம் விழுந்தமாவடி, தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, குமரி மாவட்ட கடற்கரைப் பகுதி போன்ற வளமான இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
அரசின் அறிவிப்பை ஏற்று முன்வரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இத்துறைமுகங்கள் 30 ஆண்டு முதல் 99 ஆண்டுகள் வரை நீண்ட குத்தகைக்கு விடப்படும் என்றும் அதற்கு ஏற்றார் போல் ”நெகிழ்வான துறைமுக கொள்கை” உருவாக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உருவாக்கப்படும் துறைமுகங்கள் கடலோர சுற்றுலா, கப்பல் கட்டும் தொழில்கள் மற்றும் கடல் உணவு பதப்படுத்துதலை ஊக்குவித்தலுக்குப் பயன்படும் என்றும் தமிழ்நாட்டுக் கடற்கரையில் உள்ள ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் கார்ப்பரேட்டுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அதாவது, தமிழ்நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்துச் செல்லுங்கள் என கார்ப்பரேட்டுகளுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து தி.மு.க அரசு அழைக்கிறது. தி.மு.க அரசின் இந்த கார்ப்பரேட் நலத் திட்டத்திற்கு தூத்துக்குடி மணப்பாடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஏற்கெனவே, தூத்துக்குடியில் கடற்கரை பகுதிகளான பழையகால் பகுதியில் சிர்கோனியம் தொழிற்சாலை, கல்லாமொழி பகுதியில் நிலக்கரி இறங்குதளம் மற்றும் அனல்மின் நிலையம், குலசேகரன்பட்டினம் பகுதியில் இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் என மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பல்வேறு நாசகரத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் இத்துறைமுகத் திட்டம் அமைந்துள்ளது என்று கூறி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இத்திட்டத்திற்கு எதிராக மணப்பாடு மீன் ஏலக்கூடத்தில் வைத்து ஊர்நலக்கமிட்டி தலைவர் கிளைட்டன் தலைமையில் மீனவர்கள் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில், மீனவர்களிடம் எவ்வித கருத்துகளும் கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ள தி.மு.க அரசிற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், துறைமுகம் அமைக்கும் பணியைக் கைவிட நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவது என்றும், இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என்றும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மணப்பாடு ஊர்நலக்கமிட்டி நிர்வாகிகள் கூறும்போது, ”ஏற்கெனவே மணப்பாட்டிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில்தான் நிலக்கரி இறங்குதளம் அமைக்கப்பட்டுள்ளது. அனல்மின் நிலைய பணிக்கென கடலுக்குள் 8.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாலம் அமைக்கப்பட்டுள்ளதால் மீனவர்களின் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் மணப்பாட்டில் துறைமுகம் அமைத்தால் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக் கூடிய சூழல் உருவாகும். எனவே, துறைமுகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களை நடத்தி இந்த திட்டத்தைத் தடுப்போம்” என்று அறிவித்துள்ளனர்.
தூத்துக்குடி மட்டுமின்றி சிறிய வர்த்தகத் துறைமுகங்கள் அமைக்கப்படும் அனைத்து இடங்களிலும் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடிய அபாயம் உள்ளது.
ஏற்கெனவே, தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் அதானியின் ஆதிக்கத்தின் கீழ் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பாசிச மோடியின் ஆட்சியில் துறைமுகங்கள், மின்சாரத் துறை ஆகியவற்றில் அதானியின் ஆதிக்கம் வேகமாக விரிவடைந்து வருகிறது. இந்நிலையில், சிறிய வர்த்தக துறைமுகங்கள் என்ற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்கு தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளைத் தாரைவார்ப்பது அதானியின் ஆதிக்கத்தை விரிவுபடுத்திக் கொள்வதற்கே சாதகமாக அமையும்.
மேலும், 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்றுகிறோம் என்ற பெயரில், நகராட்சி விரிவாக்கம், போக்குவரத்துத் துறை மற்றும் கல்வித்துறையை தீவிரமாக கார்ப்பரேட்மயமாக்குவது, டிஜிட்டல்மயமாக்கம் என்கிற பெயரில் பொதுத் துறைகளை தனியார்மயமாக்குவது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது தி.மு.க அரசு. தற்போது, அறிவிக்கப்பட்டுள்ள இந்த எட்டு புதிய துறைமுகங்களை அமைப்பதற்கான திட்டமும் ”ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார”த்தின் அங்கமே.
எனவே, தி.மு.க அரசின் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது தமிழ்நாட்டை கூறுபோட்டு கார்ப்பரேட்டுகளுக்கு விற்பனை செய்வதே என்பது மீண்டுமொருமுறை அம்பலமாகியுள்ளது. இத்துறைமுகத் திட்டத்திற்கு எதிராக தூத்துக்குடி மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுப்பதைப்போல இத்திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மற்ற பகுதி மீனவர்களும் ஒன்றிணைந்து உறுதியாகப் போராடுவதன் மூலம்தான் இத்திட்டத்திலிருந்து தி.மு.க அரசைப் பின்வாங்க வைக்க முடியும்.
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 24 | நவம்பர் 01 – 15, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 22-23 | அக்டோபர் 01 – 31, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 19-21 | ஆகஸ்ட் 16 – 31; செப்டம்பர் 01 – 30, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 17-18 | ஜூலை 16 – 31; ஆகஸ்ட் 01 – 15, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 14-16 | ஜூன் 01-30; ஜூலை 01-15, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 12-13 | மே 01-31, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய
1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
***
புதிய ஜனநாயகம், ஆண்டு 12, இதழ் 10-11 | ஏப்ரல் 01-30, 1997 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய