Sunday, October 26, 2025
முகப்பு பதிவு பக்கம் 9

கவின்களை காவு வாங்கும் ஆதிக்கச் சாதி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலும்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கிராமத்தைச் சார்ந்தவர், 26 வயதான கவின் செல்வகணேஷ். இவர் சென்னை டி.சி.எஸ். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தேவேந்திர குல வேளாளர் சாதியைச் சார்ந்த கவினும், திருநெல்வேலி கே.டி.சி. நகரில் வசித்துவரும் மறவர் சாதியைச் சார்ந்த சித்த மருத்துவரான சுபாஷினியும், பள்ளிப்பருவம் முதலே நட்பாக பழகி அதன்பிறகு பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

போலீசு துணை ஆய்வாளர்களாக பணியாற்றிவரும் சுபாஷினியின் பெற்றோர்களான சரவணக்குமார், கிருஷ்ணகுமாரி ஆகிய இருவரும் கவின்-சுபாஷினியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். கவினின் தாயார் தமிழ்ச்செல்வியை தொடர்புகொண்டும் மிரட்டியிருக்கின்றனர்.

இந்நிலையில், ஜூலை 27-ஆம் தேதி கவினின் தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாததால் தன் குடும்பத்தினருடன் அவரை அழைத்துக்கொண்டு, சுபாஷினி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு கவின் சென்றுள்ளார். இதனை அறிந்துகொண்ட சுபாஷினியின் தம்பி சுர்ஜித், மருத்துவமனைக்கு சென்று, “நீங்கள் என் அக்காவை காதலிப்பது எனக்கு தெரியும். இதுகுறித்து உங்களிடம் பேசுவதற்காக என் அப்பா, அம்மா காத்திருக்கின்றனர். நீங்கள் என்னோடு வாருங்கள்” என்று கவினிடம் நைச்சியமாக பேசியிருக்கிறான். அவன் கூறியதை நம்பி கவினும் அவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார்.

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரின் ஓரிடத்தில் சுர்ஜித் வண்டியை நிறுத்திவிட்டு, கவினை கீழே இறங்க சொல்லியிருக்கிறான். “உனக்கு எவ்வளவு திமிரு இருந்தா என் அக்காவ காதலிப்ப பள்ளத் தேவடியா மகனே” என்று கூறிக்கொண்டே தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினின் கழுத்து, தலைப்பகுதியில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்திருக்கிறான் மறவர் சாதிவெறியனான சுர்ஜித். படுகாயமடைந்த கவின் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இச்சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கல்லூரியில் தங்கப் பதக்கம், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வருமானம் என கல்வி, வேலை அனைத்திலும் சிறந்து விளங்கினாலும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காக கவின் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கியது.

கல்வி கற்றால் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து வெளிவந்து விடலாம், சமூகத்தில் மரியாதையுடனும் பாதுகாப்பாகவும் வாழ்ந்துவிடலாம் என்ற கருத்து பொதுச் சமூகத்தில் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், கவினின் சாதி ஆணவப் படுகொலை இந்த சாதிய கட்டமைப்பின் கோரத்தை நம் முகத்தில் அறைந்துள்ளது.

மேலும், தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த இளைஞர்கள் ஜீன்ஸ் பேண்ட், கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு, ஆதிக்கச் சாதி பெண்களை காதல் என்ற பெயரில் ஏமாற்றுவதாகவும் நாடகக் காதல் செய்வதாகவும் ஆதிக்கச் சாதி வெறியர்கள் செய்துவந்த பொய் பிரச்சாரத்தின் மீது கவினின் ஆணவப் படுகொலை காறி உமிழ்ந்துள்ளது.

திசைதிருப்பப்பட்ட விவாதம்

கவின் சாதி ஆணவப் படுகொலை அரசியல் தளத்தில் சாதி ஆணவப் படுகொலைகள் குறித்த விவாதங்களை தொடங்கிவைத்த நிலையில், ஆளும் தரப்பும் ஆதிக்கச் சக்திகளும் அதனை திட்டமிட்டே திசைதிருப்பின.

தி.மு.க. ஆதரவு நாளிதழான தினகரனின் ஜூலை 29 தேதியிட்ட செய்தித்தாளில், சுபாஷினி கவினை காதலிக்கவில்லை என்று போலீசிடம் கூறியதாக பொய்யான செய்தியை வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுபாஷினி மீது  தனிநபர் தாக்குதல் தொடுக்கும் வகையில் விவாதங்கள் திசைதிருப்பப்பட்டன. 2023 மழைவெள்ளம் தொடங்கி அஜித் குமார் லாக்கப் படுகொலை வரை அனைத்து சம்பவங்களிலும் தி.மு.க. மீதான அதிருப்தியை மடைமாற்றும் வகையில் விவாதங்களை திசைதிருப்பிவரும் தி.மு.க. ஆதரவு சமூக ஊடகப் பக்கங்கள் இதிலும் முன்னின்று செயல்பட்டன.

அதேபோல், கவின் தனது பெண் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் சமூக ஊடகங்களில் பரப்பிய ஆதிக்கச் சாதிவெறியர்கள் கவினின் நடத்தையை கொச்சைப்படுத்தத் தொடங்கினர். இதன்மூலம் ஆணவப் படுகொலை, ஆதிக்கச் சாதிவெறி குறித்தான விவாதம் தனிநபர் ஒழுக்கம் சார்ந்ததாக மாற்றப்பட்டது.

அதுமட்டுமின்றி, கோகுல்ராஜை ஆணவப் படுகொலை செய்த சாதிவெறியன் யுவராஜை கொண்டாடுவது போல, கவினை ஆணவப் படுகொலை செய்த சுர்ஜித்தை, தங்கள் சாதியைக் காக்க வந்த நாயகனைப் போல சித்தரித்து ஆதிக்கச் சாதிவெறி கும்பல் சமூக வலைத்தளங்களில் காணொளிகளை பரவச் செய்தது. ஹரி நாடார் போன்ற ஆதிக்கச் சாதி வெறிப்பிடித்த மிருகங்கள் கவினின் ஆணவப்படுகொலையை நியாயப்படுத்தி பேசின.

ஆனால், இவர்கள் மீதெல்லாம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைக்கட்டி வேடிக்கைப் பார்த்தது தமிழ்நாடு போலீசு.

குற்றவாளிகளைப் பாதுகாக்கும் அரசு

கவின் ஆணவப் படுகொலை தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் மற்றும் அவனின் பெற்றோர்கள் இருவரது பெயரும் இடம்பெற்றிருந்தன. அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதியப்பட்டது. ஆனாலும், சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்யாமல் காலம் தாழ்த்தியது போலீசு.

பல வழக்குகளில் சந்தேகம் என்ற பெயரில் அப்பாவி மக்களை விசாரணைக்கு அடித்து இழுத்துச் செல்லும் போலீசு, சுர்ஜித்தின் பெற்றோர்கள் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்று நாடகமாடியது.

ஆனால், ஜூலை 27 அன்று பிற்பகல் 2:30 மணியளவில் சுர்ஜுத், கவினை படுகொலை செய்த நிலையில், அடுத்த அரை மணி நேரத்தில் சுர்ஜித்தை அவனது தந்தை சரவணக்குமார் தானே அழைத்துச் சென்று போலீசு நிலையத்தில் சரணடைய வைத்திருக்கிறார். இது, சரவணக்குமாருக்கு தெரிந்துதான் கவின் ஆணவப் படுகொலை செய்ப்பட்டிருக்கிறார் என்பதை உறுதி செய்கிறது. அப்படியிருந்தும் சரவணக்குமாரை போலீசு உடனே கைது செய்யவில்லை.

மேலும், குற்றவாளியான சுர்ஜித்தின் புகைப்படத்தைக்கூட வெளியிடாமல் போலீசும் ஊடகங்களும் கொலைகாரனை பாதுகாத்தன. ஜனநாயக சக்திகள்தான் சுர்ஜித் அரிவாளுடன் நிற்கும் புகைப்படங்களையும் அவனது பெற்றோர்களின் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

ஆனால், சுர்ஜித்தின் பெற்றோர்களை கைது செய்தால்தான் மருத்துவமனையிலிருந்து கவினின் உடலை வாங்குவோம் என்று கவினின் குடும்பத்தினர் ஐந்து நாட்களாக உறுதியாக போராடினர். கவின் ஆணவப் படுகொலைக்கு நீதி கேட்டும் சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரையும் கைது செய்யக்கோரியும் தமிழ்நாடு முழுவதும் புரட்சிகர-ஜனநாயக சக்திகள் போராட்டத்தில் இறங்கினர். இதன் விளைவாகவே சுர்ஜித்தின் தந்தை சரவணக்குமாரை மட்டும் ஜூலை 30 அன்று போலீசு கைது செய்தது. ஆனால், இன்றுவரை சுர்ஜித்தின் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்யவில்லை.

அதிகரிக்கும் சாதியத் தாக்குதல்கள்

சமீபத்தில், கவினின் சாதி ஆணவப் படுகொலை மட்டுமே பொதுச் சமூகத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஆனால், 2017-ஆம் ஆண்டிலிருந்து தற்போதுவரை தமிழ்நாட்டில் 65 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்திருப்பதை சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர் அம்பலப்படுத்தியுள்ளார். கடந்த 2024-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் மட்டும் தமிழ்நாட்டில் ஏழு ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன.

இதனைக் கண்டும் காணாமல் இருக்கும் தி.மு.க. அரசு, அவை சிறிதளவு பேசுபொருளானாலும் மூடிமறைப்பதற்கான வேலையை செய்கிறது. சான்றாக, “தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் சாதிப் பிரச்சினை இல்லை. திருநெல்வேலியில் இல்லவே இல்லை” என்று தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு பேசியது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தென்மாவட்டங்களில் சாதியக் கொலை-தாக்குதலுக்கு உள்ளாகிவரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அப்பட்டமாக துரோகம் இழைத்து வருகிறது.

ஆனால், தென்மாவட்டங்களில் ஆதிக்கச் சாதிவெறித் தாக்குதல்கள், ஆணவப் படுகொலைகள் இதுவரை இல்லாத வகையில் அதிகரித்துவருவது குறித்தும் அதற்குப் பின்னால், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சதித்திட்டம் உள்ளதையும் “புதிய ஜனநாயகம்” தொடர்ச்சியாக அம்பலப்படுத்தி வருகிறது.

குறிப்பாக, தென்மாவட்டங்களில் நூற்றுக்கணக்கில் இயங்கும் தேவர் (முக்குலத்தோர்) மற்றும் நாடார் சாதி சங்கங்கள் மக்களிடத்திலும் குறிப்பாக இளைஞர்கள்-மாணவர்களிடத்திலும் சாதிவெறியூட்டி வருகின்றன. இதன்விளைவாக இளைஞர்கள், பள்ளி மாணவர்களிடையே அரிவாள் கலச்சாரம் அதிகரித்துவருகிறது. நாங்குநேரி சின்னதுரை, தூத்துக்குடி தேவேந்திரராஜா போன்ற பள்ளி மாணவர்கள் சக மாணவர்களாலேயே வெட்டப்பட்டது இதனை உணர்த்தியது.

கவினை படுகொலை செய்த சுர்ஜித்திற்கும் 24 வயதுதான். ஆங்கிலப் புலமை, படிப்பு, பணம் இருந்தும் கேடுகெட்ட சாதிவெறியனாக சுர்ஜித் இருந்திருக்கிறான் என்று எவிடென்ஸ் கதிர் தன்னுடைய கள ஆய்வில் தெரிவிக்கிறார். சுர்ஜித்தின் அரிவாள் வெட்டுகள் கூலிப்படைக் கும்பல் போன்று இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.

மேலும், சுர்ஜித் தன்னுடைய சமூக வலைத்தளங்களில், அரிவாளுடன் கூடிய தன்னுடைய புகைப்படங்களை ஆதிக்கச் சாதிவெறி பாடல்களுடன் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளான். “தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவன் எப்படி தன் அக்காவை காதலிக்கலாம்” என்ற சுர்ஜித்தின் ஆதிக்கச் சாதிவெறியே கவினை படுகொலை செய்வதற்கான அடிப்படை. இந்த ஆதிக்கச் சாதிவெறியை சுர்ஜித் போன்ற இளைஞர்களிடையே ஊட்டிவரும் வேலையைத்தான் ஆதிக்கச் சாதி சங்கங்கள் மேற்கொண்டுவருகின்றன.

அதிலும், ஆதிக்கச் சாதிவெறியனான திருமாறன் ஜி போன்ற ஆர்.எஸ்.எஸ். கைக்கூலிகள் தென்மாவட்டங்களை கலவர பூமியாக்க வேண்டும் என்ற சதித்திட்டத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றனர்.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலால் தமிழ்நாட்டில் இந்து முனைவாக்கத்தின் மூலம் மதக்கலவரங்களை தூண்ட முடியவில்லை. இதனால், ஆதிக்கச் சாதி சங்கங்களில் ஊடுருவி சாதியமுனைவாக்கத்தை தீவிரப்படுத்தி, தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல்களையும் ஆணவப் படுகொலைகளையும் கலவரங்களையும் நிகழ்த்தி, தன்னுடைய அடித்தளத்தை விரிவுப்படுத்திக்கொள்ள ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் திட்டமிடுகிறது.

மறுபுறம், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற கருங்காலிகள் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களையும் தன்னுடைய அடித்தளமாக திரட்டிக்கொள்ள ஆர்.எஸ்.எஸ். கும்பல் முயல்கிறது. இந்த கருங்காலிகள் தேவேந்திர குல வேளாளர் மக்களிடத்தில் சுயசாதி பெருமையையும் சாதிவெறியையும் ஊட்டி வருகின்றனர். தற்போது கூட கவினின் ஆணவப் படுகொலையை கண்டித்து நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், கிருஷ்ணசாமியின் மகனான ஷியாம், “உன் அரிவாள் மட்டும் பேசாது; எல்லார் அரிவாளும் பேசும்” என்று இரு சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு ஆதிக்கச் சாதி சங்கங்களினாலும் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலாலும் கவின்கள் காவு வாங்கப்பட்டு வருகின்றனர். சின்னதுரைகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆர்.எஸ்.எஸ். கும்பலோ தனது ஊடுருவலை தீவிரப்படுத்தி தமிழ்நாடு முழுவதும் இத்தகைய சாதியக் கொடூரங்களை கட்டவிழ்த்துவிட முயற்சித்து வருகிறது.

ஆதிக்கச் சாதி சங்கங்கள் – ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்!

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்கு சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும் என்று பல்வேறு ஜனநாயக சக்திகளும் தி.மு.க-வின் கூட்டணி கட்சிகளும் கூட வலியுறுத்தி வருகின்றனர். எதிர்க்கட்சியாக இருந்தபோது ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றுவோம் என்று வாக்குறுதியளித்திருந்த மு.க.ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து  முதல்வரான பிறகு, “தனிச்சட்டம் தேவையில்லை. ஏற்கெனவே இருக்கும் சட்டப்பிரிவுகளின் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறுகிறார். இது தி.மு.க. அரசின் அப்பட்டமான சந்தர்ப்பவாதமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் துரோகமும் ஆகும்.

“கடந்த 30 ஆண்டுகளில் ஏழு ஆணவக் கொலைகளுக்கு மட்டுமே மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்துள்ளது. அதிலும் குற்றவாளிகள் மேல் முறையீடு செய்து தண்டனையிலிருந்து விடுதலை ஆகிவிடுகின்றனர் அல்லது தண்டனையை குறைக்கச் செய்து விடுகின்றனர். இதனால், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு இதுபோன்ற சிறப்புச் சட்டம் தேவையாக உள்ளது” என்று எவிடென்ஸ் கதிர் கூறுகிறார்.

இவ்வாறு இயற்றப்படும் சிறப்பு சட்டங்களில், ஆணவப்படுகொலைகளில் ஈடுபடும் குடும்பங்களின் சொத்துகளை பறிமுதல் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவது; ஆணவப் படுகொலைகளை ஊக்குவிக்கும் வகையில் பேசும், சமூக வலைத்தளங்களில் பதிவிடும் ஆதிக்கச் சாதிவெறியர்களை கைது செய்து சிறையிலடைப்பது; ஆணவப் படுகொலைகளுக்கு மூளையாக செயல்படும் ஆதிக்கச் சாதி சங்கங்கள் மீது நடவடிக்கை எடுத்து தடை செய்வது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற வைக்கவும்  வலியுறுத்த வேண்டிள்ளது.

அதேசமயம், களப்போராட்டங்களே இச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதற்கும் முக்கியப் பங்காற்றுகிறது. குறிப்பாக, கவினின் ஆணவப் படுகொலையில் ஈடுபட்டுள்ள, சுர்ஜித்தின் பெற்றோர்கள் இருவரும் போலீசுதுறையை சார்ந்தவர்கள். அதாவது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் இடத்தில் உள்ளவர்களே ஆதிக்கச் சாதி வெறிப்பிடித்தவர்களாக உள்ளனர்.

மேலும், தென்மாவட்ட போலீசுதுறையில் ஆதிக்கச் சாதியைச் சார்ந்தவர்கள் திட்டமிட்டு நிரப்பப்பட்டு வருகின்றனர். போலீசுதுறையில் ஆர்.எஸ்.எஸ்-இன் ஊடுருவல் தீவிரமடைந்து வருகிறது. இந்த அதிகார வர்க்கத்தின் பலத்துடன்தான் தென்மாவட்டங்களில் ஆதிக்கச் சாதிவெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

எனவே, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றுவது என்பதுடன், ஆதிக்கச் சாதி சங்கங்கள் – ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்வதற்கான போராட்டங்களை புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கட்டியமைக்க வேண்டியுள்ளது.

மேலும், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பல் ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பையும் பாசிசமயமாக்கிவரும் இச்சூழலில் இக்கட்டமைப்பானது முன்னெப்போதும் இருந்ததைவிட தலித் மக்களுக்கு விரோதமானதாக மாறி வருகிறது. எனவே, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உரிமைகளையும் உண்மையான ஜனநாயகத்தையும் அதிகாரத்தையும் வழங்கக்கூடிய பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை அமைப்பதற்கான போராட்டத்தில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டியுள்ளது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜூன் 1-30, 1999 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 14-15 | ஜூன் 1-30, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: காஷ்மீர் பிரச்சினைக்கு எல்லைப் போர் தீர்வாகுமா?
  • தொழிலாளர்களின் போர்க்குணம் தொழிற்சங்கங்களின் துரோகம்
  • நாட்டை அடகு வைக்கப் போவது யார்? “இத்தாலி” சோனியாவா? “இந்தியர்” வாஜ்பாயியா?
  • கோயில் நிலங்கள் யாருக்குச் சொந்தம்? விவசாயிகளுக்கா? மடாதிபதிகளுக்கா?
  • தனியார் மருத்துவக் கல்லூரிகள்: தாராளமயம் பரப்பி வரும் கொள்ளை நோய்
  • உலகப் பொருளாதாரத்தின் உண்மை நிலை
  • இராஜீவ் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு: தகர்ந்த “தடா”!
  • ஆந்திராவில் தொடரும் அரசு பயங்கரவாத வெறியாட்டம்
  • ‘பெரிய ஐயா’வுக்கு இந்தியன் வங்கி ‘சின்ன ஐயா’வுக்கு சிட்டி யூனியன் வங்கி
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு | 6வது நாளாக தொடரும் போராட்டம்

தூய்மைப் பணியாளர்களை வஞ்சிக்கும் தி.மு.க. அரசு
6வது நாளாக தொடரும் போராட்டம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 | அச்சு இதழ்

புதிய ஜனநாயகத்தின் ஆகஸ்ட் 2025 மாத அச்சு இதழ் வெளிவந்துள்ளது. வாசகர்களும் தோழர்களும் வாங்கிப் படித்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறோம்..

சந்தா பற்றிய விவரம் :
ஓராண்டு சந்தா – ரூ.360
இரண்டாண்டு சந்தா – ரூ.720
ஐந்தாண்டு சந்தா – ரூ.1,800

புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2025 இதழின் அச்சுப் பிரதியைப் பெற கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல்: puthiyajananayagam@gmail.com

அச்சு இதழ் விலை: ரூ.30 + தபால் செலவு ரூ.5 = மொத்தம் ரூ.35
G-Pay மூலம் பணம் செலுத்த: 94446 32561

வங்கி மூலம் செலுத்த:
Bank : State Bank of India
Branch: Kodambakkam
Account Name: PUTHIYA JANANAYAGAM
Account No: 10710430715
IFS Code: SBIN0001444

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:


தோழமையுடன்
நிர்வாகி,
புதிய ஜனநாயகம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஏப்ரல் 16-30, மே 01-31, 1999 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 11-13 | ஏப்ரல் 16-30, மே 01-31, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஓட்டுக் கட்சிகளின் நெறிமுறை: “நாட்டு நலனை முன்னிட்டு துரோகம் தவிர்க்க முடியாதது”
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • ஆட்சிக் கலைப்பும் அடுத்த தேர்தலும் – யாருக்கு வேண்டும் நிலையான ஆட்சி
  • காஷ்மீர்: இந்திய – பாக். மதவெறியர்களின் சூழ்ச்சிகள் – சதிகள் – கொலைகள்
  • ஆயுதக் கலாச்சாரமும் இந்து முன்னணியும்
  • யுகோஸ்லாவியா – ”நேட்டோ” போர்: அமெரிக்காவின் மேலாதிக்கவெறி செர்பியாவின் பாசிச இனவெறி
  • டி.வி.எஸ். நிர்வாகத்தின் காட்டு தர்பார்
  • மருத்துவர் போராட்டம் நியாயமானதா?
  • புதிய வடிவங்களில் தொடரும் தீண்டாமை
  • ஈக்வடார்: குமுறும் எரிமலை
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



மசூதியில் ஒலிபெருக்கி வைக்கக் கூடாதா? | திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | ராமலிங்கம் கண்டனம்

மசூதியில் ஸ்பீக்கர் வைக்கக் கூடாதா?
| திருப்பரங்குன்றம் போலீசு அடாவடி | தோழர் ராமலிங்கம் கண்டனம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1999 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 9-10 | மார்ச் 16-31, ஏப்ரல் 1-15, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: கொசோவா எண்ணெய் கிணறுகளுக்காக அல்பேனிய சிறுபான்மை மக்களை பலியிட்டு நடக்கும் போர்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • போலீசு அராஜகத்துக்கு “தீவிரவாத” சாக்கு
  • சாதி – தீண்டாமை எதிர்ப்பில் சி.பி.எம்.-இன் இரட்டை வேடம்
  • பஞ்சாலை நெருக்கடி: கோவையில் வெடிக்கக் காத்திருக்கும் குண்டு
  • மூன்றாவது அணியைத் தேடி… மண்குதிரை மீதேறி ‘இடது’களின் புரட்சிப் பயணம்
  • நீதி – மாண்பு பற்றிப் பேச சட்டமன்றம் – நீதிமன்றத்திற்கு அருகதையுண்டா?
  • இந்து மதவெறி அமைப்புகளின் வரி ஏய்ப்பு மோசடிகள்
  • நாட்டை அடகுவைப்பதில் பா.ஜ.க. கூட்டணி அரசின் நாலுகால் பாய்ச்சல்
  • ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. மோதல் நிழலா? நிஜமா?
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஈரான் மீதான போர்: அமெரிக்க வல்லரசின் படுதோல்வி

மூன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் உக்ரைன்-ரஷ்யா போரிலும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கொண்டிருக்கும் காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரிலும் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்றுக் குவிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கடந்த மாதத்தில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் அடாவடியாக போர் தொடுத்து மூன்றாவது போர்முனையை திறந்தது, உலக அமைதியை விரும்புவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஈரான் – அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோதே, “ஈரான் இன்னும் சில வாரங்களில் அணு ஆயுதங்களை தயாரிக்கப் போகிறது” என்ற பொய் குற்றச்சாட்டை சுமத்தி, ஜூன் 13 அன்று ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. “ஆபரேஷன் ரைசிங் லையன்” (Operation Rising Lion) எனப் பெயரிடப்பட்ட இத்தாக்குதலை எந்தவித முன்னறிவிப்புமின்றி நிகழ்த்தி ஈரானின் இறையாண்மையையும் சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்தது.

ஈரானின் அணுசக்தி தளங்கள், எண்ணெய் வயல்கள், ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள், மக்கள் குடியிருப்புகளைப் போர் விமானங்கள் மூலம் தாக்கிய இஸ்ரேல், மறுபுறம், இஸ்ரேலின் மொசாத் (Mossad) உளவுப் பிரிவின் மூலம் ஈரானின் “இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படை”-இன் முக்கியத் தலைவர்கள், மூத்த விஞ்ஞானிகள், ராணுவத் தளபதிகளை ட்ரோன்களால் குறிவைத்துக் கொன்றது. ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் கார் குண்டுகள் (Car bombs) மூலம் தற்கொலைப்படை தாக்குதலை நடத்தி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. போர் என்ற பெயரில் அப்பட்டமான பயங்கரவாதத் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது. மேற்கத்திய ஊடகங்களோ துளியும் கூச்சமின்றி இஸ்ரேலின் மனிதத்தன்மையற்ற இத்தாக்குதலை “தற்காப்பு தாக்குதல்” என்று குறிப்பிட்டன.

இதனையடுத்து, ஜூன் 15 அன்று இரவு “ட்ரூ ப்ராமிஸ் 3” (True Promise 3) என்ற பெயரில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் பதில் தாக்குதல் தொடுத்தது.

இதற்கிடையே, ஜூன் 22 அன்று இரவு “மிட்-நைட் ஹாம்மர்” (Midnight Hammer) என்ற பெயரில் ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது உலக மக்களை ஆத்திரங்கொள்ளச் செய்தது. அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் என்பது குறித்து துளியும் கவலைப்படாமல் மேலாதிக்க வெறிப்பிடித்து அமெரிக்கா இத்தாக்குதலை தொடுத்தது.

இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவத் தளபதிகள், விஞ்ஞானிகளுக்கான இறுதி சடங்கில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள்.

இந்நிலையில், ஜூன் 23 அன்று ஈரான்-இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் அமலாவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததையடுத்து இரு நாடுகளும் அதனை உறுதிப்படுத்தின. அமெரிக்க மேலாதிக்க நலனிற்காக 12 நாட்களாக தொடர்ந்த இப்போரில் நூற்றுக்கணக்கான மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டுள்ளனர். குறிப்பாக, இனவெறி இஸ்ரேல் அரசு காசாவை போலவே ஈரான் மக்களின் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீதும் குழந்தைகள், பெண்களை குறிவைத்தும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 627 ஈரான் மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஏறக்குறைய 5,000 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதேபோல், ஈரான் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 3,000-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

உலக அமைதி அல்ல, மேலாதிக்கவெறியே காரணம்

ஈரான் இன்னும் சிறுது காலத்தில் அணு ஆயுதங்களை உருவாக்க உள்ளதாகவும் அதனை தடுப்பதற்காகவே ஈரான் மீது போர் தொடுத்ததாகவும் அமெரிக்காவும் இஸ்ரேலும் நாடகமாடுகின்றன. ஆனால், “ஈரான் அணு ஆயுதங்களை பெற்றிருக்கவில்லை. இப்போது இருக்கும் நிலையிலிருந்து அது அணு ஆயுதங்களை பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும்” என்று அமெரிக்காவின் உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்டே அம்பலப்படுத்தியிருந்தார் (இவர் ட்ரம்ப் அரசால் மிரட்டப்பட்டு தற்போது மாற்றிப் பேசியுள்ளது தனிக்கதை).

அதேபோல், தங்கள் நாட்டின் எரிசக்தி உற்பத்திக்காகவே யுரேனியத்தை செறிவூட்டி வருவதாக ஈரானும் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. மேலும், அணு ஆயுதங்களை உருவாக்கவோ பெறவோ கூடாது; அதிக செறிவூட்டப்பட்ட துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அது நாசவேலை எனக் கருதப்படும் போன்ற நிபந்தனைகளை கொண்ட அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT – Treaty on the Non-Proliferation of Nuclear Weapons) ஈரான் கையெழுத்திட்டுள்ளது. ஐ.நா-வின் சர்வதேச அணுசக்தி நிறுவனம் (IAEA – International Atomic Energy Agency) ஈரானின் அணுசக்தி திட்டங்களை கண்காணிப்பதற்கும் ஒத்துழைத்து வருகிறது.

அதேசமயம், ஈரான் மீது அபாண்டமாக பொய் குற்றஞ்சாட்டும் இஸ்ரேல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) இதுவரை கையெழுத்திடவில்லை. அதுமட்டுமின்றி, தற்போதைய சூழலில் இஸ்ரேலிடம் 90 அணு ஆயுதங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது; மேலும் 187 முதல் 277 வரையிலான அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கு போதுமான புளூட்டோனியத்தையும் வைத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து வெளிப்படையாகக்கூட அறிவிக்காத இஸ்ரேல், “தங்களிடம் அணு ஆயுதம் உள்ளது என்பதை மறுக்கவும் மாட்டோம், ஒப்புக்கொள்ளவும் மாட்டோம்” என்ற அடாவடியான கொள்கையை கொண்டுள்ளது. அதேபோல், வரலாற்றில் இருமுறை அணு ஆயுதங்களை பயன்படுத்திய இழிபுகழ் கொண்ட அமெரிக்கா, 5,550 அணு ஆயுதங்களைக் கொண்டு உலகை மிரட்டி வருகிறது. இதுதான் இவ்விரு நாடுகளின் யோக்கியதை. இந்நாடுகள் ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கக் கூடாது என்று கூறுவது அயோக்கியத்தனமாகும்.

இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஈரானின் ராணுவத் தளபதிகள், விஞ்ஞானிகளுக்கான இறுதி சடங்கில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான மக்கள்.

உண்மையில், மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கும் அதன் பேட்டை ரவுடியான இஸ்ரேலுக்கும் சவாலாக வளர்ந்துவரும் ஈரானின் செல்வாக்கையும் அதன் அணு ஆற்றலையும் முடக்குவதும், ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடிப்பதும்தான் அமெரிக்காவின் நோக்கம். இதற்காக அமெரிக்கா பல ஆண்டுகளாக பல்வேறு சதி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, 2015-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில், ஈரான் அணு ஆயுதங்களை தயாரிப்பதைத் தடுக்கும் நோக்கில், “செயலுக்கான ஒட்டுமொத்தத் திட்டம்” (JCPOA – Joint Comprehensive Plan of Action) என்ற ஒப்பந்தம் ஈரானுடன் போடப்பட்டது. பதிலுக்கு, ஈரான் மீதான மேற்குலக நாடுகளின் பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன. ஆனால், 2018-இல் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அதிலிருந்து விலகுவதாக அறிவித்துவிட்டு, ஈரான் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தார். ஆனால், இத்தடைகள் ஈரானின் அணு ஆற்றலை கட்டுப்படுத்தவில்லை.

இந்நிலையில், ஈரானுடன் போடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தம் அக்டோபர் 2025-இல் முடிவடைவதால், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட வேண்டும் என்றும் இதற்கு இணங்காவிட்டால் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஈரான் மீது குண்டு வீசப்படும், ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார். இதனால், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான அபாயம் எழுந்தது. எனவே, ஈரான் மீது அமெரிக்கா எவ்விதமான இராணுவ நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது என்ற நிபந்தனையுடனும், தனது நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை நீக்கும் நோக்கத்துடனும், ஓமனின் மத்தியஸ்தத்தில் அமெரிக்காவுடன் மறைமுகப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஈரான் முன்வந்தது.

பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், கடுமையான கண்காணிப்பின் கீழ் வரையறுக்கப்பட்ட அளவிற்கு ஈரான் யுரேனியத்தை செறிவூட்டிக் கொள்ளலாம் என்று வாதங்களை முன்வைத்த அமெரிக்கா, பின்னர் ஈரான் யுரேனிய செறிவூட்டலையே கைவிட வேண்டும் என்று அநியாயமான வாதத்தை முன்வைத்தது. ஒருபக்கம் 60 நாட்களுக்குள் ஒப்பந்தம் எட்டப்பட வேண்டும் என்று ட்ரம்ப் காலக்கெடு விதித்துவிட்டு, இன்னொருபுறம் பூஜ்ஜிய செறிவூட்டல் (Zero Enrichment) என்று நிபந்தனை விதிப்பது பேச்சுவார்த்தையை சீர்குலைப்பதற்கான முயற்சி எனக் கண்டனங்கள் எழுந்தன.

உண்மையில், கடுமையான உள்நாட்டு நெருக்கடியில் சிக்கியுள்ள அமெரிக்காவால், அதனால் முடக்கி வைக்கப்பட்டுள்ள பல பில்லியன் டாலர் மதிப்புள்ள ஈரானின் சொத்துகளை விடுவிக்க முடியாது. இதன் காரணமாகவே ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே மறுபக்கத்தில் இஸ்ரேல் மூலம் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வந்தது. இப்பேச்சுவார்த்தை நடப்பதையே விரும்பாத இஸ்ரேலும் இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டது. எனவே, ஈரான் மீதான போரானது ஈரானின் அணு ஆற்றலை முடக்கி மேற்காசியப் பிராந்தியத்தில் அதன் செல்வாக்கை வீழ்ச்சியடைய செய்வதற்கான போரே ஆகும். தவிர, ‘உலக அமைதி’-க்காக நடத்தப்படும் போர் என்று அமெரிக்கா கூறும் கதைக்கும் இதற்கும் துளியும் சம்பந்தமில்லை.

இஸ்ரேல்-அமெரிக்காவின் படுதோல்வி

ஈரான் மீதான போர் தொடங்கிய சமயத்தில், “அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளால் பொருளாதார நெருக்கடியில் ஈரான் உள்ளது. அதனிடம் நவீன ஆயுதங்கள் இல்லை. அதனால் ஈரானால் இப்போரில் தாக்குப்பிடிக்க முடியாது” என்றே பலரும் பேசி வந்தனர். ஆனால், அக்கருத்துகளையெல்லாம் சுக்குநூறாக்கி அமெரிக்கா-இஸ்ரேலை இப்போரில் பின்வாங்கி ஓடச்செய்துள்ளது ஈரான்.

குறிப்பாக, இஸ்ரேலிடம் ஐயன் டோம் (Iron Dome), டேவிட்’ஸ் ஸ்லிங் (David’s Sling) மற்றும் ஆர்ரோ 3 (Arrow 3) ஆகிய வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளதால் அந்நாடு இரும்புக்கோட்டை உள்ளது, அதன் மீது தாக்குதல் தொடுக்க முடியாது என்ற பிம்பம் ஊதிப்பெருக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போரில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் ஏவியது. மேலும், இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டின் பதுங்குக் குழிகளும் சேதமடைந்தன. இதனையடுத்து போர் தொடங்கிய சில நாட்களிலேயே தன்னால் இனி தாக்குப்பிடிக்க முடியாது என்பதை உணர்ந்த இஸ்ரேல் அமெரிக்காவை போருக்குள் இழுத்து தனது தோல்வியை பகிரங்கப்படுத்தியது.

இந்நிலையில், ஃபோர்டோவ் (Fordow), நடான்ஸ் (Natanz), இஸ்ஃபஹான் (Isfahan) ஆகிய ஈரானின் மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்காவின் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியதையடுத்து, “ஈரானின் அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக தகர்க்கப்பட்டுவிட்டன. அதனால், ஈரானால் யுரேனிய செறிவூட்டலை மேற்கொள்ள முடியாது. அமெரிக்காவின் தாக்குதல் வெற்றி” என்றெல்லாம் ட்ரம்ப் பெருமை பீற்றி வந்தார். ஆனால், செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தாக்குதலுக்கு முன்னரே ஈரான் அப்புறப்படுத்திவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில், “அணுசக்தி தளங்கள் இருந்த இடத்தில் கதிர்வீச்சுகள் இல்லை” என்று சர்வதேச அணுசக்தி நிறுவனமும் தெரிவித்தது. இது ட்ரம்புக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதற்கிடையே, “இஸ்ரேலின் தாக்குதலின் விளைவாக ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம்”, “ஈரான் மக்கள் சுதந்திர நாளை எதிர்நோக்கியுள்ளனர்” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசினார். இது இப்போரின் ஊடாக ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற சதித்திட்டத்தையும் அமெரிக்கா-இஸ்ரேல் கொண்டிருப்பதை அம்பலப்படுத்திக் காட்டியது. அதன்படி, ஈரானின் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் இராணுவத் தலைவர்களைக் கொல்வதன் மூலமும், மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குவதன் மூலமும் ஈரான் அரசுக்கு எதிராக மக்களின் ஆத்திரத்தைத் தூண்டிவிடலாம் என்று இஸ்ரேலும் அமெரிக்காவும் கனவு கண்டன. ஈரானின் உச்சத் தலைவரான அயத்துல்லா அலி காமெனியை கொல்வதற்கான சதி நடந்ததாக செய்திகள் வெளியானதும் இத்திட்டத்தின் அங்கமே ஆகும். ஆனால், இவையெல்லாம் நேரெதிரான விளைவுகளையே ஏற்படுத்தின.

இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக ஈரானில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். “எங்களுக்கான ஜனநாயகத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உள்ளே வர வேண்டாம்” என்று உரக்க முழங்கினர். இஸ்ரேலின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஈரான் அரசை நிர்பந்தித்தனர். ஈரான் மட்டுமின்றி மேற்காசிய நாடுகள் முழுவதிலும் இஸ்ரேல்-அமெரிக்காவின் போர்வெறிக்கு எதிராக ஏராளமான போராட்டங்கள் நடந்தன. இதனால், இஸ்ரேல்-அமெரிக்காவின் ஆட்சி மாற்றத் திட்டம் படுதோல்வியடைந்தது.

மறுபுறம், இஸ்ரேல்-அமெரிக்கா நாடுகளில் அரசியல் நெருக்கடி தீவிரமடையத் தொடங்கியது. இஸ்ரேல் இப்போரை தொடங்குவதற்கு முந்தைய நாளான ஜூன் 12 அன்று, இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா வாக்கெடுப்பிலிருந்து நெதன்யாகு அரசு நூலிழையில் தப்பித்திருந்தது. காசா மீதான இஸ்ரேலின் போருக்கு எதிரான போராட்டங்களும் அந்நாட்டில் தீவிரமடைந்திருந்தது. இந்த எதிர்ப்பை மடைமாற்றுவதற்கு நெதன்யாகு இப்போரை பயன்படுத்திக்கொள்ள எத்தனித்த நிலையில், இஸ்ரேலை போர் சூழலுக்குள் தள்ளிய நெதன்யாகு அரசுக்கு எதிரான போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

அதேபோல், அமெரிக்காவிலும் ஈரான் மீதான போருக்கு எதிராக பல போராட்டங்கள் வெடித்தன. மேலும், அமெரிக்காவின் காங்கிரசில் அனுமதி பெறாமலேயே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்ததை எதிர்க்கட்சிகளும் ஆளும் பிரிவில் ஒரு தரப்பினரும் கண்டித்து வருகின்றனர். மேலும், உலகம் முழுவதும் போருக்கு எதிரான உணர்வு அதிகரித்துள்ள நிலையில், ஈரான் மீதான போருக்கு எதிராக கண்டனக் குரல்கள் உலகம் முழுவதும் எழத் தொடங்கின. இதன் விளைவாகவே ட்ரம்ப் வேறு வழியின்றி போர் நிறுத்தம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இதனை ஊடகங்கள் ஊதிப்பெருக்கி ட்ரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்குமா என்று பிரச்சாரம் செய்துவந்த நிலையில், “அமெரிக்கா கெஞ்சியதால்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டோம்” என்று ஈரான் கூறியது ட்ரம்பின் மூக்கை உடைத்தது.

மேலும், அமெரிக்க-இஸ்ரேலின் போரை சுட்டிக்காட்டி, அணுசக்தி பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து (NPT) விலகுவதற்கான மசோதாவை நிறைவேற்றப் போவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் போர் தொடுப்பதற்கு அப்பட்டமாக துணைபோன சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை இடைநிறுத்துவதற்கான மசோதாவிற்கும் ஈரான் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தாக்குதலுக்கு முன்னர் நடந்துவந்த அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையிலிருந்து ஈரான் விலகியுள்ள நிலையில், ஈரானுக்கு சில சலுகைகளை அளித்து அதனை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் ஒற்றைதுருவ உலக மேலாதிக்கம் கடும் வீழ்ச்சி

இப்போர் சமயத்தில் ஈரானின் மக்கள் விரோத போக்கையும் அது பிராந்திய மேலாதிக்க வல்லரசாக வளர விரும்புவதையும் காரணம் காட்டி இப்போரில் ஈரானை ஆதரிக்க முடியாது என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், ஈரான் மீதான இப்போர் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான போராகும். அமெரிக்காவின் ஒற்றைதுருவ உலக மேலாதிக்கம் கடும் வீழ்ச்சியடைந்துவரும் சூழலில் பல்துருவ உலக மேலாதிக்கத்திற்கான போக்கு வளர்ந்து வருகிறது. இதில் மேற்காசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அடியாளான இஸ்ரேலுக்கு போட்டியாக ஈரான் வளர்ந்து வருகிறது.

மேலும், அமெரிக்காவின் உலக மேலாதிக்கத்திற்கு போட்டியாக வளர்ந்துவரும் ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஈரானின் நெருக்கமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சீனா, ரஷ்யா, ஈரான் ஆகிய மூன்று நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி அணுசக்தி திட்டங்களில் தங்களது நிலைப்பாடுகளை அனைத்துலக அரங்கில் வெளிப்படையாக அறிவிக்க தீர்மானித்துள்ளன. இதற்கான முதல் சுற்று கூட்டத்தையும் மார்ச் 14 அன்று சீனாவின் பெய்ஜிங் நகரில் நடத்தியுள்ளன.

மேலும், மேற்காசிய நாடான சிரியாவில் ரஷ்ய ஆதரவு பஷர் அல்-அசாத் அரசாங்கம் வீழ்த்தப்பட்டதையடுத்து ரஷ்யா ஈரானுடன் அதிக நெருக்கம் பாராட்டத் தொடங்கியுள்ளது. அதேபோல், முன்பு ஷாங்காய் கூட்டுறவில் பங்குதாரராக இருந்த ஈரான் தற்போது அதில் உறுப்பினராகியுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பிலும் உறுப்பினராகியுள்ளது.பல ஆண்டுகளாக பகையாக இருந்த சவுதி அரேபியா-ஈரானுக்கு இடையில் சீனாவின் முயற்சியில் நல்லுறவு ஏற்படுத்தப்பட்டதும் அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்தது.

இதன் காரணமாகவே, ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது, அதனுடன் வர்த்தக உறவு கொண்டுள்ள நாடுகளை மிரட்டுவது என பல்வேறு வழிகளில் ஈரானை அடக்கி ஒடுக்குவதற்கு அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலின் இப்போரை பார்க்க வேண்டியுள்ளது. அமெரிக்க மேலாதிக்கத்திற்கான இப்போரில் தனது சுயாதிபத்தியத்தை பாதுகாத்துகொள்வதற்காக போராடிய ஈரானை ஆதரிக்காதது அமெரிக்க அடிமைத்தனமும் துரோகமும் ஆகும்.

அதேசமயம், ஈரான் மீதான போர் முடிவுக்கு வந்திருப்பது நிரந்தரமானது அல்ல. எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான போர் வெடிக்கலாம் என்பதே எதார்த்த நிலை. சரிந்துவரும் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள உலகின் எங்கு வேண்டுமானாலும் அமெரிக்கா தனது போர் முனையை உருவாக்கி அதன் சுமையை உலக மக்களின் தலையில் சுமத்தும்!


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1999 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 7-8. | பிப்ரவரி 16-28, மார்ச் 1-15, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வாஜ்பாய் – நவாஸ் செரீப் சந்திப்பு: உள்நாட்டில் தேசிய வெறியூட்டி ஆதாயம் உலக அரங்கில் நட்புறவு மாய்மாலம்
  • பா.ம.க.: சமூக விரோதிகளின் கூடாரமா?
  • ஜெயா ஊழல் வழக்கு: திருடனே நீதிபதி
  • “ரேஷன் கடைகளை மூடு” உலக வங்கி உத்தரவுக்கு குரங்காக ஆடும் பா.ஜ.க
  • பீகார்: மேல்சாதி நிலப்பிரபுக்களின் கொலைவெறி பா.ஜ.க.வின் பதவி வெறி
  • வாழ்க்கையைப் பறித்தது தமிழக அரசு உயிரைப் பறித்தது கள்ளச் சாராயம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • அகமலை கிராம மக்கள் வனத்துறையின் கொத்தடிமைகளா?
  • முசுலீம் மதவெறியர்களின் காட்டு தர்பார்
  • திருமானூர் அம்பேத்கர் சிலை அவமதிப்பு: த.மா.கா.வினரின் சாதி வெறியாட்டம் துணைபோகும் தமிழக போலீசு
  • ஜெயா வழியில் கேரள முதல்வர் நாயனார் நடத்திய ‘புரட்சி’ திருமணம்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



கீழடி: அறிவியல் உண்மைகளை வெறுக்கும் பாசிச கும்பல்

கீழடி குறித்த உண்மைகளை வெளிக்கொண்டு வந்ததற்காக பாசிச மோடி அரசால் தொடர்ந்து வேட்டையாடப்படும் தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா

கீழடி அகழாய்வு தமிழர்களின் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய வைகை நதிக்கரை நாகரிகத்தை உலகறியச் செய்த வரலாற்று மைல்கல் ஆகும். இந்த ஆய்வு தமிழர்களின் எழுத்தறிவு, நகர அமைப்பு, நீர்மேலாண்மை மற்றும் வணிகத் தொடர்புகளை அறிவியல்பூர்வமாக நிறுவியது. ஆனால், இந்த அறிவியல் உண்மைகள், “வேத காலம் = இந்தியாவின் தோற்றம்” என்ற பார்ப்பனியப் பொய்ப் பரப்புரைக்கு எதிராக இருப்பதால், ஒன்றிய பா.ஜ.க. அரசு இவற்றை மறைக்கவும், தடுக்கவும் தொடர்ந்து முயன்று வருகிறது. தற்போது, இரண்டாம் கட்ட ஆய்வறிக்கையை வெளியிட மறுப்பது, அதில் “அறிவியல்பூர்வ” திருத்தங்களைக் கோருவது என்னும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு வருகிறது.

கீழடி அகழாய்வு: அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில்

தொல்பொருள் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தலைமையில் 2014-2016 வரையில் நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட ஆய்வுகள், கி.மு.6-ஆம் நூற்றாண்டு குடியிருப்புகள், தமிழ்-பிராமி எழுத்து, உறைக் கிணறுகள் மற்றும் சாயத் தொழில் உலைகள் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தன. கார்பன் டேட்டிங் மூலம் இவை கி.மு.580 முதல் கி.மு.800 வரையிலானவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மாநிலத் தொல்லியல் துறை 2017 முதல் நடத்தி வரும் ஆய்வுகளில், 20,000-க்கும் மேற்பட்ட தொல்பொருட்களை (பானை ஓடுகள், செங்கல் சுவர்கள், கறுப்பு-சிவப்பு மட்பாண்டங்கள், தங்க ஆபரணங்கள், செம்பு மற்றும் தந்தப் பொருட்கள்) கண்டறிந்துள்ளது. இவற்றில் 18,000 பொருட்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்-பிராமி எழுத்து கொண்ட 120-க்கும் மேற்பட்ட பானை ஓடுகள், எளிய மக்களின் எழுத்தறிவை உறுதிப்படுத்துவதோடு, தொல்லியல்துறை அறிஞர் ஐராவதம் மகாதேவன் குறிப்பிட்ட, “புழங்கு பொருட்களில் பெயர் எழுதும்” பண்டைய மரபை நிறுவுகின்றன. மேலும், 1,001 கிராஃபிட்டி குறியீடுகள், சிந்து சமவெளி எழுத்துகளுடன் ஒற்றுமை கொண்டிருப்பதாக, ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தமிழ்-பிராமி எழுத்தின் தொன்மையை கி.மு.7-ஆம் நூற்றாண்டு வரை கொண்டு செல்கிறது.

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட மண் குழாய்கள், திறந்தவெளி வாய்கால்கள் மற்றும் சிறு நீர்தேக்கங்கள் ஆகியவை பண்டைய தமிழர்களின் மேம்பட்ட நகர அமைப்பு மற்றும் நீர்மேலாண்மையை வெளிப்படுத்துகின்றன. குறிப்பாக 2024-இல், 10-ஆம் கட்ட ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட மண் குழாய்கள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய மேம்பட்ட நீர்மேலாண்மையை உறுதிப்படுத்தின. இவை, சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையாக தமிழர் நாகரிகத்தை நிறுவுகின்றன.

அருகிலுள்ள கொந்தகையில் கண்டெடுக்கப்பட்ட 24 உருளைக் கலன்கள் மற்றும் குழந்தை எலும்புக்கூடு ஆகியவை இப்பகுதி இறுதிச் சடங்கு தளமாக இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. இதுவரையிலான கீழடி ஆய்வுகளில் சாதி – மத அடிப்படையிலான இறைவழிபாடுகளோ, வாழ்வியல் முறைகளோ இருந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் வெளிப்படவில்லை.

இதன்மூலம், கீழடியின் தொல்லியல் சான்றுகள் வர்ணாசிரம ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமூகத்தை சங்க இலக்கியங்களில் வெளிப்படும் சமத்துவ வாழ்வியலுடன் இணைக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், கீழடி அகழாய்வு தமிழர்களின் மதச்சார்பற்ற, சமத்துவ நாகரிகத்தை அறிவியல்பூர்வமாக நிறுவி வருகிறது. எனவேதான், சமத்துவத்திற்கும் ஜனநாயகத்திற்கும் எதிரான பொய்களையும் ‘நம்பிக்கைகளையும்’ மட்டுமே ஆதாரங்களாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வரும் பார்ப்பன பாசிச கும்பலால், கீழடி கூறும் உண்மைகளை ஏற்க முடியவில்லை.

இந்துத்துவ சித்தாந்தமும், கீழடியை மறுத்தலும்

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இந்துத்துவ சித்தாந்தம், “ஒரே நாடு – ஒரே மதம் – ஒரே பண்பாடு- ஒரே மொழி” என்னும் ஒற்றைமயப்படுத்தும் பார்ப்பன – பாசிச திட்டத்தை செயல்படுத்தும் நோக்கமுடையது. இது ஏற்கெனவே, நிலவிவரும் பல்வேறு மொழி-பண்பாடு-தேசிய இன அடிப்படை கொண்ட இந்திய மக்களின் பன்முகத்தன்மையை மறுக்கிறது. வேத காலமே இந்திய நாகரித்தின் துவக்கம்-அடிப்படை என்னும் பார்ப்பன மேலாதிக்கக் கொள்கையை பாடத்திட்டங்களிலும், வரலாற்று ஆய்வுகளிலும் திணித்து, திரித்துப் புரட்டுவதைச் செய்து கொண்டிருக்கிறது.

ஆனால், பண்டைய இலக்கியங்களும் அவற்றை நிரூபிக்கும் வகையிலான தொல்லியல் ஆய்வுகளும் பார்ப்பனப் புரட்டுகளைத் தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருக்கின்றன. சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது தமிழர் நாகரிகம் என்பதை அறிவியல் பார்வை கொண்டோர் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றனர். 1939-இல் இந்தியத் தொல்லியல் துறையின் தலைவராக இருந்த கே.என்.தீக்‌ஷித் என்பவர், “வைகை மற்றும் தாமிரபரணி நதிக்கரைகளில் அகழாய்வு செய்தால், சிந்து சமவெளிக்கு இணையான நாகரிகம் கிடைக்கும்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கீழடியில் கிடைத்த முத்துகள், கார்னிலியன் மணிகள், எழுத்துகள் மற்றும் குறியீடுகள் கொண்ட பானையோடுகள் ஆகியவை தமிழர்களின் தொழில்நுட்ப அறிவு, கடல் வணிகம் மற்றும் சிந்து சமவெளியுடனான உறவு ஆகியவற்றைப் புலப்படுத்துகின்றன. அதன் மூலம், பார்ப்பனியத்தின் “ஆரியர் சாதனை” என்னும் கற்பனைக் கோட்பாட்டை கேள்விக்கு உட்படுத்துகின்றன.

இந்தப் பின்புலத்திலிருந்தே, கீழடியில் நடந்த இரண்டாம் கட்ட ஆய்வு குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணா 2023-இல் சமர்ப்பித்த 982 பக்க அறிக்கையை வெளியிடாமல், ஒன்றிய அரசு இருட்டடிப்பு செய்ய முயல்வதைப் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். இந்த அறிக்கையை விரைந்து வெளியிடக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு தொடரப்பட்டு,  அறிக்கையை ஒன்பது மாதங்களுக்குள் வெளியிட வேண்டுமென 2024 பிப்ரவரியில் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஒன்றிய அரசோ இந்த உத்தரவைத் துளியும்  மதிக்கவில்லை.

மாறாக, 2025 மே 23-இல், இந்திய தொல்லியல் ஆய்வு மையம், “போதிய அறிவியல் ஆதாரங்கள் இல்லை” எனக் கூறி, அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் அறிக்கையைத் திருத்தக் கோரியது. “போதிய தரவுகள் – அறிவியல் ஆதாரங்களுடன்தான் அறிக்கை உள்ளது. எனவே திருத்த வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறி ஒன்றிய அரசு விரும்பும் ‘திருத்தங்களைச்’ செய்ய மறுத்து விட்டார் அமர்நாத்.

ஒன்றிய அரசின் இந்த கயமைத்தனமான போக்கு பொதுவெளியில் அம்பலப்பட்டு கடும் எதிர்ப்புகளுக்கு உள்ளான பிறகும் கூட, ஒன்றிய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “ஒரு கண்டுபிடிப்பு வரலாற்றை மாற்ற முடியாது” என்றும், இத்தகைய அறிக்கைகள் பிராந்தியவாதப் போக்குகளுக்கு பயன்படுகிறது என்றும் திமிர்த்தனமாகக் கூறி வருகிறார். கீழடி பிரச்சினையை அரசியலாக்க வேண்டாமென ஒன்றிய அமைச்சரும், தமிழ்நாட்டு பா.ஜ.க. நிர்வாகிகளும் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், இவர்கள் செய்யும் தமிழின விரோத அரசியல் எத்தனை கயமைத்தனம் நிறைந்தது என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள்.

அயோத்தி – ராமர் பாலம்: பார்ப்பனியத்தின் அறிவியல் விரோத முகம்

அயோத்தியில் “கோயில் இருந்ததற்கு ஆதாரமில்லை” என 2003-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை வெளியிட்ட அறிக்கையைப் புறக்கணித்து, மத நம்பிக்கைகளை முன்னிறுத்தியே ராமன் கோயில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. கடவுளை வேண்டிக்கொண்டு தீர்ப்பை எழுதியதாகக் கூறியதன் மூலம் அந்த நம்பிக்கை எத்தகையது என்பதை பின்னாளில் நீதிபதி சந்திரசூட் அம்பலப்படுத்திக் கொண்டார். ஆனால், இத்தீர்ப்பு அறிவியல் அடிப்படையில் வழங்கப்படவில்லை என எந்த ஒன்றிய அமைச்சரும் பா.ஜ.க. நிர்வாகியும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. மாறாக, இந்துராஷ்டிரத்திற்கான பாதையில் ஒரு மைல்கல் என கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதேபோல, ராமர் பாலம் விவகாரத்தில் நாசாவின் புவியியல் ஆய்வுகள் பாலம் இயற்கையாக உருவான பவளப்பாறை அமைப்பு என உறுதிப்படுத்தின. ஆனால், பார்ப்பன பாசிச கும்பலோ இதை ராமாயணத்துடன் இணைத்தும் இந்துக்களின் நம்பிக்கை என்றும் கூறி அறிவியல் ஆய்வுகளை ஏற்க மறுத்தனர்.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசு சிந்துவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் எனப் பெயர் சூட்டுவது, வரலாற்றிலேயே இல்லாத சரஸ்வதி நாகரிகத்தைப் பற்றிய ஆய்வுக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இத்தகைய அறிவியலை ஏற்க மறுக்கிற முட்டாள் பாசிஸ்டுகள்தான், இப்போது கீழடி ஆய்வில் கார்பன் டேட்டிங் மற்றும் தொல்லியல் ஆதாரங்களை மறுக்கின்றனர். இதுவரை கிடைத்த ஆதாரங்கள் எல்லாம் போதாது என்கின்றனர். தமது சித்தாந்தம் – பொய்ப்பரப்புரைக்குப் பயன்படும் என்றால் அறிவியலை மறுப்பதும், தமிழர் பண்பாட்டு வரலாறு என்றால் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று பேசும் இரட்டைநாக்கே இவர்களின் இயல்பு.

கீழடி அடையாளம் காட்டும் துரோகிகள்

கீழடி ஆய்வறிக்கையை முடக்க நினைக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகத் தமிழ்நாட்டின் புரட்சிகர – ஜனநாயக சக்திகளும், தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. அ.தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும் பா.ஜ.க-விற்கு எட்டப்பன் வேலை பார்க்கின்றன.

தமிழின – தமிழர் விரோதத் தன்மையை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க-வுடன் கூச்சமே இல்லாமல் கூட்டணி வைத்திருப்பதோடு, அவர்களின் அயோக்கியத்தனங்களுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையையும் செய்து வருகிறது அடிமை அ.தி.மு.க.. கீழடி விசயத்தில் எடப்பாடி பழனிச்சாமி கள்ள மௌனம் சாதித்து வருகிறார்.

“கீழடி அகழாய்வைப் பொதுவாகப் பேசி விட முடியாது, அதற்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும், ஆதாரம் இல்லாமல் கொடுக்கப்படும் அகழாய்வறிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளாது” என்றும், “மத்திய அரசு கூடுதல் தரவுகளைக் கேட்டுள்ளது. அதை கீழடி ஆய்வாளர்கள் கொடுக்கத்தான் போகிறார்கள். அது ஒப்புதல் ஆகத்தான் போகிறது. கீழடி அகழாய்வு நிராகரிக்கப்பட்டால், அதனை உண்மையாக எதிர்க்கும் முதல் குரல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரலாகத்தான் இருக்கும்.” என்று தமிழ்நாடு பா.ஜ.க. நிர்வாகியைப் போல ஆர்.பி.உதயகுமார் பேசியிருக்கிறார்.

இது மட்டுமின்றி, “மதுரை முருக பக்தர் மாநாட்டில் அரசியல் பேசமாட்டார்கள் என நினைத்துத்தான் கலந்து கொண்டோம்”,  “கொள்கை வேறு கூட்டணி வேறு”, “அண்ணாவை ஒருநொடி கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்” என்று பேசுவதெல்லாம் இவர்கள் எத்தகைய துரோகிகள் என்பதை நாள்தோறும் காட்டிக் கொண்டிருக்கின்றன.

கீழடியில் தோண்டத் தோண்ட தமிழரின் தொன்மை நாகரிகம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது; ஆனால் அதைக் குழிதோண்டிப் புதைக்கும் ஈனச்செயலில் இத்தகைய துரோகிகள், தமிழின விரோதிகளுக்குத் துணை நிற்பதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.

இந்தியாவின் பல்தேசிய இனங்களின் அடையாளங்களை முற்றாக ஒழித்து விட, முன்னெப்போதையும் விட தீவிரமாக வேலை செய்து கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பல். அவற்றின் குறுக்கே, பன்மைத்துவத்தின் அடையாளமாய், தமிழ் மரபின் கேடயமாய் சீன மதிலைப் போல உயர்ந்து எழுந்து வருகிறது கீழடி. கீழடியை மூடி மறைப்பது என்பது தமிழரின் பழம்பெரும் பாரம்பரியத்தை மூடி மறைப்பதற்குச் சமம். கீழடியைக் காப்பது என்பது பழைய செங்கற்களையோ, மட்பாண்டங்களையோ காப்பதல்ல. அவை வெளிக்கொண்டு வந்துள்ள தமிழரின் வரலாற்று உண்மையைக் காப்பது! இது, பார்ப்பனியப் போலி வரலாறுகளின் கொடுமையிலிருந்து நமது மூதாதையரின் பெருமையைக் காப்பது!


தமிழ்ச்சுடர்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1999 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 5-6 | ஜனவரி 16-31, பிப்ரவரி 1-15, 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: ஈரோ நாணயம்: உலக மேலாதிக்கக் கொள்ளைக்கு புதிய ஆயுதம்
  • இந்தியா – பாக். கிரிக்கெட் போட்டி: சிவசேனாவின் தேசியவெறியும் பா.ஜ.க.வின் பசப்பலும்
  • இந்து அதவெறியாட்டத்தை இனியும் பொறுப்பதா?
  • ஈராக் மீதான தாக்குதல்: ஒடுக்கப்படும் நாடுகளுக்கு அமெரிக்காவின் மிரட்டல்
  • இலவச வேட்டி – சேலை
    மக்களின் அவலமு அதிகார முறைகேடுகளும்
  • தமிழ்நாடு. மேல்சாதி வெறியர்களின் சொர்க்க பூமியா?
  • அபலைப் பெண் அஞ்சனாவும் காமவெறி அரசு எந்திரமும்
  • கிரிமினல் மாஃபியாவின் கோரப் பிடியில் மும்பய்
  • நாய்ச் சண்டையில் இராணுவம்… நாட்டைக் காக்குமா?
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



நுகர்வு வெறி – இந்து மதவெறிக்கு பலியிடப்படும் மக்கள்!

ஜூன் மாத தொடக்கத்தில், கர்நாடக மாநிலம் பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் 2025 ஐ.பி.எல். போட்டியில் ஆர்.சி.பி. அணி வெற்றிபெற்றதைக் கொண்டாடுவதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் படுகாயமடைந்தனர்.

பெரும்பாலும் இதுபோன்ற கூட்டநெரிசல் விபத்துகளில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதைத் தாண்டி, விபத்துக்கு காரணமானவர்களைத் தண்டிப்பது அரிதினும் அரிதாகவே நடக்கும்.

பெங்களூருவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்திலும் கூட கர்நாடக காங்கிரசு அரசு, போலீசு, கர்நாடக  மாநில கிரிக்கெட் சங்கம், நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான “டி.என்.ஏ. என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் பிரைவேட் லிமிடெட்”, ஆர்.சி.பி. அணி என அனைவரும் ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், இந்த விபத்திற்கான குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விசாரணை நடத்தப்படவில்லை என்பதே உண்மை.

ஐ.பி.எல். எனும் கார்ப்பரேட் சூதாட்டப் போட்டியில், ஆர்.சி.பி. எனும் ஒரு கார்ப்பரேட் அணி வெற்றிப் பெற்றதற்கு அரசு ஏன் விழா எடுக்க வேண்டும்? கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் விமான நிலையத்திற்கே சென்று ஏன் வீரர்களை வரவேற்க வேண்டும்? என்ற கேள்விகளை நாம் எழுப்பினால்,  இவ்விவகாரத்தில் கர்நாடக காங்கிரசு அரசுதான் முதலில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

ஐ.பி.எல். போட்டியின்போது தனது குறுகிய லாபவெறிக்காக, திட்டமிட்டு கன்னட, தமிழ் மக்களின் தேசிய இன உணர்வைத் தூண்டிவிடுகிறது கார்ப்பரேட் கும்பல். மக்களும் கார்ப்பரேட்டுகளின் இந்த நுகர்வு வெறிக்கும், தேசிய இனவெறிக்கும் பலியாகி மாறிமாறி அடித்துக் கொள்கின்றனர். சமூக வலைத்தளங்களில் நடந்துக்கொண்டிருந்த சண்டை தற்போது வீதிகளுக்கு வந்துவிட்டது. 11 பேர் விபத்தில் உயிரிழந்த பிறகும், ஒருவேளை பஞ்சாப் அணி வெற்றிப் பெற்றிருந்தால் இந்த விபத்து நிகழ்ந்திருக்காது என வன்மத்தை கக்கும் அளவிற்கு இவர்களுக்கு வெறியூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், கார்ப்பரேட்டுகளால் தூண்டிவிடப்படும் இந்த தேசிய இன உணர்வை பயன்படுத்திக் கொள்வதற்காகவே, கர்நாடக அரசு ஆர்.சி.பி. அணியின் வெற்றியை கன்னடர்களின் வெற்றியாக கர்நாடகாவின் வெற்றியாக சித்தரிக்க முயன்றது. எனவே, இத்தகைய கோரமான விபத்து நிகழ்ந்துள்ளதற்கு ஆர்.சி.பி. அணியின் வெற்றியைப் பயன்படுத்தி ஆதாயம் பார்க்க வேண்டும் என்ற கர்நாடக அரசின் குறுகிய நோக்கமும், விளம்பரவெறியுமே அடிப்படை காரணம்.

கர்நாடக அரசு மட்டுமல்ல, பல்வேறு மாநில அரசுகளும் கர்ப்பரேட்டுகளின் லாப நோக்கத்திற்காகவும், தங்களுடைய விளம்பர வெறிக்காகவும் பொழுதுபோக்கு என்ற பெயரில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை அனுமதிக்கின்றன.

கார்ப்பரேட்-அரசு லாபவெறிக்கு பலியிடப்படும் மக்கள்

2023-இல் சென்னையில் ஏ.ஆர்.ரஹ்மானின் “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் ஏற்பட்டது. இதில் பலருக்கும் மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டது. 25,000 பேர் மட்டும் பங்கேற்க முடியும் என்பது தெரிந்தும் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த கார்ப்பரேட் நிறுவனம் 50,000 டிக்கெட்டுகள் வரை விற்பனை செய்ததே இதற்கு முக்கிய காரணம். மேலும், இந்நிகழ்ச்சியில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. தற்போது, பெங்களூருவில் ஏற்பட்ட விபத்திலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நுகர்வு வெறிக்கு பலியாகி அதிகளவு மக்கள் கூடும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது பொதுத்தன்மையாக உள்ளது.

அதேபோல், 2024-ஆம் ஆண்டு இந்திய விமானப் படையின் 92-ஆம் ஆண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 5 பேர் உயிரிழந்தனர். 240 பேர் மயக்கம் அடைந்தனர். விமான சாகச நிகழ்ச்சியை பார்ப்பதற்கு சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததாக மதிப்பிடப்பட்டது. ஆனால், இவ்வளவு மக்களை கையாளும் வகையிலான குடிநீர், மருத்துவ வசதி போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதேபோல், ஹைதராபாத் திரையரங்கம் ஒன்றில் “புஷ்பா-2” திரைப்படத்தைப் பார்ப்பதற்கு வந்த ரேவதி (39 வயது) என்ற பெண்ணும் அவரது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். அல்லு அர்ஜூன் திரையரங்கத்திற்கு வருகை தந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறி அல்லு அர்ஜூன் மற்றும் திரையரங்கம் மீது வழக்குப்பதிவு செய்தது தெலுங்கானா அரசு. ஆனால், இதுபோன்று விபத்துகள் ஏற்படும் என்பதை அறிந்திருந்தும் தெலுங்கானா அரசு இத்திரைப்படத்திற்கு சிறப்புக் காட்சிக்கான அனுமதி வழங்கியதே இவ்விபத்திற்கு அடிப்படையான காரணமாக உள்ளது.

இவ்வாறு, ஒவ்வொரு கூட்ட நெரிசல் விபத்துகளும் தடுத்து நிறுத்தக்கூடியதாக இருந்தாலும் அரசும் சரி கார்ப்பரேட்டுகளும் அதை வேண்டுமென்றே அனுமதிக்கின்றன. கூட்ட நெரிசலில் மக்கள் உயிரிழக்கும்போது அவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்கும் முயற்சிக்கின்றன.

அதேசமயம், ஆயிரக்கணக்கில் பணம் செலவழித்து எப்படியாவது இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும் என்று மக்கள் காட்டும் ஆர்வம் கார்ப்பரேட்டுகளின் நுகர்வு கலாச்சாரத்தின் வீரியத்தைக் காட்டுகிறது. குழந்தையின் பள்ளிக் கட்டணத்தைக் கூட பொருட்படுத்தாமல், ஐ.பி.எல். டிக்கெட் வாங்கியதை ஒரு தந்தை பெருமையாகப் பேசுகிறார் என்றால், எந்தளவிற்கு மக்கள் நுகர்வு வெறிக்கு அடிமையாகி வருகின்றனர் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

அதுவும், இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற சமூக வலைத்தளங்கள் வேகமாக வளர்ந்துவரும் சூழலில், இன்ஃப்ளூயன்சர்கள் (Influencers) என்ற பெயரில் புதிய கூட்டம் ஒன்று உருவாகியுள்ளது. இன்ஃப்ளூயன்சர்கள் என்ற பெயரில் உலாவுபவர்களில் பெரும்பான்மையானோர், நுகர்வு மட்டுமே வாழ்க்கை என்பதை மக்களிடம் திணித்து வருகின்றனர். உணவு, சுற்றுலாத்தலம் தொடங்கி அன்றாடம் பயன்படுத்தும் பொருள் வரை எதுவாயினும், இவர்கள் மூலம் விளம்பரப்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களால் எளிமையாக மக்களிடம் திணித்து விட முடிகிறது.

மதவெறிக்கு பலியிடப்படும் மக்கள்

ஒருபுறம் கார்ப்பரேட்டுகள் மக்ககளிடையே நுகர்வு வெறியைத் தூண்டிவரும் நிலையில், மறுபுறம் ஒன்றியத்தில் ஆட்சியிலிருக்கும் பாசிச மோடி அரசு தீவிரமான மதவெறியைத் தூண்டிவருகிறது. இந்தியாவில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசல் விபத்துகளில் அதிகளவிலான விபத்துகள் மத நிகழ்ச்சிகளில்தான் நடைபெறுகிறது.

இந்தாண்டு நடந்த கும்பமேளா கூட்ட நெரிசல் விபத்தே இதற்கு போதுமான சான்றாகும். ஜனவரி 29-ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி 37 பேர் பலியாகியிருப்பதாக யோகி அரசு தெரிவித்திருந்தது. ஆனால், சமீபத்தில் “பி.பி.சி.” செய்தி நிறுவனம் நடத்திய கள ஆய்வில் குறைந்தது 82 பேர் உயிரிழந்திருப்பதாக அம்பலப்படுத்தியது. மேலும், பிப்ரவரி 15-ஆம் தேதி இரவு டெல்லி ரயில் நிலையத்தில் கும்பமேளாவிற்குச் செல்வதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். ஆனால், இதே கும்பமேளா நிகழ்விற்கு அம்பானி குடும்பம் தொடங்கி நாட்டிலிருக்கும் பல கார்ப்பரேட் நிறுவன முதலாளிகள், அரசு அதிகாரிகள், எம்.பி-க்கள் பாதுகாப்பாக வந்து சென்றபோது உழைக்கும் மக்களுக்கு மட்டுமே இந்த அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

பாசிஸ்டுகளை பொறுத்தவரை இதுபோன்ற பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் மூலம் இந்து மதவெறியைத் தூண்ட வேண்டும் என்பதே நோக்கம். அதற்காக மக்களை கொன்றொழிப்பதற்கும் தயங்க மாட்டார்கள். கடந்த 2021-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலிலிருந்த காலத்தில் மருத்துவர்கள் எச்சரிக்கையும் மீறி உத்தரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளாவை நடத்தி ஆயிரக்கணக்கான மக்களை கொரோனாவிற்கு பலியிட்டது பாசிச கும்பல்.

அதேபோல், உத்தரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தின் புல்ராய் கிராமத்தில் ஜூலை 2 அன்று போலே பாபா எனும் போலி சாமியாரின் மத நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 121 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியடைய வைத்தது. ஆனால், நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைக் குடித்த போலே பாபாவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் கூட இடம்பெறவில்லை.

இவ்வாறு, மத நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிற்போக்குத்தனமாக மூட நம்பிக்கைகளை விதைப்பதுடன், எந்தவித முறையான பாதுகாப்பு ஏற்பாடுமின்றி மதவெறியைத் தூண்டுவதற்காக பிரம்மாண்டமான மத நிகழ்ச்சிகளை நடத்தி மக்களின் உயிரையும் பறித்து வருகிறது பா.ஜ.க. கும்பல்.

ஒருபுறம் கார்ப்பரேட்டுகள் லாபவெறிக்காக தூண்டப்படும் நுகர்வு வெறி, மறுபுறம் பாசிஸ்டுகளால் தூண்டப்படும் இந்து மதவெறி ஆகிய இரண்டுக்கும் திட்டமிட்டே மக்கள் பலியிடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நாடு முழுவதும் பாசிச அபாயம் படர்ந்துவரும் சூழலில் மக்கள் இவ்வாறான நுகர்வு வெறி, இந்து மதவெறிகளுக்கு அடிமையாகிக் கொண்டிருப்பது அபாயமிக்கதாகும்.


மதி

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | டிசம்பர் 1-31 1998, ஜனவரி 1-15 1999 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 14, இதழ் 2-4 | டிசம்பர் 1-31 1998, ஜனவரி 1-15 1999 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: வடமாநிலத் தேர்தல் முடிவுகளும் போலி கம்யூனிஸ்டுகளின் பசப்பல்களும்
  • நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
  • ஈராக் மீதான தாக்குதல்: ஒடுக்கப்படும் நாடுகளுக்கு அமெரிக்காவின் மிரட்டல்
  • சட்டன் என் கையில்! நீதி என் பையில்!! ஜெயாவின் ஊழல் கொள்ளைக்கு பா.ஜ.க.வின் வக்காலத்து
  • விபச்சாரத்திற்கு பெண்கள் ஏலம் நாட்டிற்கே அவமானம்
  • விவசாயத்தை நாசமாக்க அமெரிக்காவின் புதிய சதி
  • புதைக்கப்பட்ட உண்மைகள் பூதமாகக் கிளம்பும்
  • திவாலான ஏழைநாட்டில் ஏகாதிபத்திய சூறையாடல்
  • பாலியல் குற்ற வழக்குகள்: ‘நீதி’ மன்றங்களின் ஆணாதிக்க கழிசடைத்தனம்
  • “அனுபவ் நிலங்களைப் பறிமுதல் செய்வோம்!”
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



ஆந்திர அரசின் மாம்பழத் தடை: கூட்டாட்சிக் கோட்பாட்டின் போலித்தனம்

மிழ்நாடு மற்றும் கர்நாடகாவிலிருந்து வரும் தோத்தாபுரி மாம்பழங்களை ஆந்திர அரசு தடை செய்துள்ளது. ஆந்திர மாம்பழ விவசாயிகளுக்குரிய விலை கிடைப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர அரசு கூறியுள்ளது.

ஆந்திர அரசின் இந்நடவடிக்கையால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாம்பழ விவசாயிகள் மாம்பழங்களை சாலைகளில் கொட்டித் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில், ஆந்திர அரசின் தடையை நீக்க வேண்டும்; தமிழ்நாடு அரசு டன் ஒன்றுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும்; குறைந்தபட்ச ஆதாரவிலையாக டன் ஒன்றுக்கு ரூ.15,000 வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மா விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஜூன் 11 அன்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். அதில், ஆந்திர அரசின் மாம்பழத் தடை என்பது திடீரென்று எடுக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்றும், இது கர்நாடகாவில் தோத்தாபுரி மாம்பழங்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், இந்த விவசாயிகள் நீண்டகாலமாக ஆந்திராவின் சித்தூரில் உள்ள கூழ் பிரித்தெடுத்தல் தொழிலுடன் வலுவான இணைப்புகளைக் கொண்டிருக்கின்றனர்; இத்தடையால் ஆயிரக்கணக்கான கர்நாடக விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளது எனவும் சித்தராமையா கூறியுள்ளார்.

மாநில அரசுகளுக்கிடையில் எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லாமல் இத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது எனவும் சித்தராமையா விமர்சித்துள்ளார்.

அதேசமயம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ ஆந்திர அரசின் சட்டவிரோத நடவடிக்கையை கண்டிக்காமலும் மாம்பழ விவசாயிகளின் கோரிக்கைகளைப் பற்றி வாய் திறக்காமலும் விவசாயிகளுக்கு விரோதமான போக்கை கடைப்பிடித்து வருகிறார்.

கர்நாடக அரசிடமோ, தமிழ்நாடு அரசிடமோ எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடத்தாமல், விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து எந்தவித பொறுப்புணர்ச்சியுமின்றி ஆந்திர அரசு எடுத்துள்ள இந்நடவடிக்கை தான்தோன்றித்தனமானதும், சட்டவிரோதமானதுமாகும். சொல்லிக்கொள்ளப்படும் கூட்டாட்சிக் கோட்பாட்டிற்கே எதிரானதாகும்.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்றால், உடனே அரசியலமைப்புக்கு எதிரானது என்று கூப்பாடு போடும் ஒன்றிய பாசிச பா.ஜ.க. அரசு, ஆந்திர அரசின் இந்த சட்டவிரோத நடவடிக்கையைப் பற்றி வாய் திறக்கவில்லை.

அதேசமயம், ஆந்திர அரசின் இந்நடவடிக்கை அம்மாநில மா விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டதாகவும் கருத முடியாது. ஏனெனில், ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் மாங்கூழுக்காக தோத்தாபுரி மாம்பழங்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு சித்தூர் மாவட்ட நிர்வாகம் டன்னுக்கு ரூ.30,000 விலை நிர்ணயித்திருந்த நிலையில், இந்த ஆண்டு டன்னுக்கு ரூ.12,000 மட்டுமே நிர்ணயித்துள்ளது. ஆந்திர அரசு, விவசாயிகளின் மீது அக்கறைக் கொண்டிருந்தால், கூடுதல் விலை நிர்ணயித்திருக்கலாம்.

அவ்வாறு செய்யாமல், விவசாயிகளின் பிரச்சினைக்கு அடிப்படையாக இருக்கும் கார்ப்பரேட்மய கொள்கைகளைப் பற்றிய விடயத்தை திசைதிருப்புவதற்காக இத்தடையை மேற்கொண்டுள்ளது.

இதன்மூலம், நமது நாட்டில் கூட்டாட்சிக் கோட்பாடு என்ற அம்சம் அரசியல் உள்நோக்கத்தோடும், சந்தர்ப்பவாத நோக்கிலும்தான் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பது அம்பலமாகிறது. அதாவது இந்திய அரசுக் கட்டமைப்பு என்பது தேசிய இனங்களின் சிறைக்கூடமாகத்தான் இருக்கிறது.

இதன் காரணமாகத்தான் இவ்வளவு ஆண்டுகளாகியும் மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பிரச்சினையைத் தீர்க்க முடியாமல், அது தேசிய இன முரண்பாடாக வெடிக்கிறது.

உண்மையான விவசாயிகள் நலன், தேசிய இனங்களுக்கிடையேயான அரசியல், பொருளாதார, சமூக ரீதியான ஒற்றுமை ஆகியவற்றை இந்தக் கட்டமைப்பில் சாத்தியப்படுத்த முடியாது என்பதையும், இப்பிரச்சினைகள் மேலும் மேலும் தீவிரமடையும் வகையில்தான் இப்போலி ஜனநாயகக் கட்டமைப்பு உள்ளது என்பதையும் இத்தகைய நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன. மாநில அரசுகளின் சமரச, சந்தர்ப்பவாத அணுகுமுறைகளால் ஒருபோதும் இப்பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்பதே யதார்த்தம். விவசாயிகள் நலனை முதன்மைப்படுத்துகின்ற, தேசிய இன முரண்பாடுகளை தீர்க்கும் வகையிலான மாற்றுக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்பது ஒன்றே இதற்கான தீர்வாகும்.


அய்யனார்

(புதிய ஜனநாயகம் – ஜூலை 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



புதிய ஜனநாயகத்தின் வரலாற்றுச் சுவடுகள் | நவம்பர் 01-30, 1998 இதழ்

அன்பார்ந்த வாசகர்களே,

1985 நவம்பர் 7 ரசியப் புரட்சி நாளன்று மார்க்சிய-லெனினிய அரசியல் ஏடு என்கிற தன்னடையாளத்துடன் புரட்சிகர அரசியலை உயர்த்திப்பிடித்து வெளியான “புதிய ஜனநாயகம்” வெற்றிகரமாக 40-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

இத்தருணத்தில், கடந்த 40 ஆண்டுகளாக வெளிவந்த புதிய ஜனநாயகம் இதழ்களும் கட்டுரைகளும் வினவு வலைத்தளத்தில் பதிவு செய்யப்படும் என்கிற மகிழ்ச்சியான செய்தியை வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாசகர்கள் இக்கட்டுரைகளைப் படித்து தங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்து தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

***

புதிய ஜனநாயகம், ஆண்டு 13, இதழ் 24, ஆண்டு 14, இதழ் 01 | நவம்பர் 01-30, 1998 பி.டி.எஃப் வடிவில் தரவிறக்கம் செய்ய

இணைப்பு (pdf)

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  • தலையங்கம்: தமிழக ‘அமைதி’க்கு தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளைப் பலியிடுவதா?
  • கடைச்சரக்கான கல்வி காவிமயமாகும் அபாயம்
  • நாற்காலிக்கு தேசியம் மேடைக்கு திராவிடம்
  • டாலருக்கு பஞ்சு ஏற்றுமதி! தமிழகப் பஞ்சாலைகளுக்குச் சாவுமணி!!
  • நாகபூஷண் பட்நாயக் மறைவு: துரோகிகளின் புரட்சி வேடமும் மறைந்தது
  • வை.கோ., இராமதாசு: பார்ப்பன பாசிச பல்லக்குத் தூக்கிகள்
  • கருணாநிதியின் விசாரணை நாடகம்! ஜெயாவின் முதலைக் கண்ணீர்!!
  • இன்று வீழும் முதலாளித்துவம் உலகை வெல்லும் கம்யூனிசம்
  • தமிழ் வழியில் உயர் கல்வி ஏட்டுச் சுரைக்காய் தானா?
  • ’மார்க்சிஸ்ட்’ கட்சி மாநாடு: சேற்றிலிருந்து புதை குழியை நோக்கி…
  • நகர்ப்புற குட்டி முதலாளிகள் கூடாரமாக போலி கம்யூனிஸ்ட் கட்சிகள்
  • நோபல் பரிசும் ஏகாதிபத்திய நலனும்
  • பா.ஜ.க.: சாதியவாதிகள் – கிரிமினல்களின் கூடாரம்
  • சிவந்த கண்கள் கவனிக்கட்டும்
  • இதுதான் இன்றைய இந்தியா

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram