Friday, January 17, 2025

கார்ப்பரேட் - காவி பாசிசம்.. எதிர்த்து நில் !
ஏன் இந்த மாநாடு ?

இந்தியா ஒரு ஜனநாயக நாடுதானா? நம் நிலத்தில் மீத்தேன் கிணறு வேண்டாமெனப் போராடினால் சிறை! நமது ஊரில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் எனப் போராடினால் துப்பாக்கிச் சூடு. எட்டு வழிச் சாலையைப் பற்றி பேசினாலே சிறை. போராடுபவர்களுக்கு தேசவிரோதி பட்டம் ! தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இதுதான் நிலை.

நீதித்துறை முதல் ஊடகங்கள் வரை ஜனநாயகத்தின் அனைத்துத் தூண்களையும் கார்ப்பரேட் நலனுக்காக காவி மயமாக்கியிருக்கிறது சங்க பரிவாரம். எதிர்த்தால் கொலை! கவுரி லங்கேஷ், கல்புர்கி, பன்சாரே… தொடர்கிறது பாசிசத்தின் பலிகள் ! மாட்டுக்கறியின் பேரில் அக்லக் முதல் பெஹ்லுகான் வரை தினமும் இந்துமதவெறியர்களால் கொல்லப்படுவதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட் காவி பாசிசம் என்பது தேர்தலால் மட்டும் முடிந்து விடும் பிரச்சினை அல்ல. உலகம் முழுவதும் இத்தகைய பாசிசக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்து எதிர்ப்போரையும், சிறுபான்மையினரையும் ஒடுக்கி வருகிறார்கள். மறுபுறம் கார்ப்பரேட் நிறுவனங்களின் பொருளாதார நெருக்கடியின் சுமை உழைக்கும் மக்கள் மீது ஏவிவிடப்படுகிறது. பிரான்சின் மஞ்சள் சட்டை போராட்டம் போன்று உலகம் தெருவில் இறங்கினால் என்ன ஆகும்? அதற்குத்தான் இந்த அடக்குமுறைகள்! இதில் மோடி அரசு மட்டும் தனியாக இல்லை.

ஒடுக்க வரும் கார்ப்பரேட் காவி பாசிசத்தை வேரறுப்பது நம் கடமை. களம் காண, கருத்தறிய வாருங்கள், மக்கள் அதிகாரத்தின் மாநாட்டில் பங்கெடுங்கள்!

மாநாடு நிகழ்ச்சி நிரல்

மாநாடு பிரசுரம்

நிகழ்ச்சி நிரல்

தொடக்க உரை

அருந்ததி ராய்

எழுத்தாளர்

உரை

தீஸ்தா சேதல்வாத்

கம்யூனலிசம் காம்பாட்

உரை

மருதையன்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

தலைமை

சி.ராஜு

மக்கள் அதிகாரம்

கலை நிகழ்ச்சி

ம.க.இ.க. கலைக் குழு

உரை

தியாகு

உரிமை தமிழ்த் தேசம்

உரை

ஆளூர் ஷாநவாஸ்

விடுதலை சிறுத்தைகள் கட்சி

உரை

பாலன்

பெங்களூரு உயர்நீதிமன்ற வழக்கறிஞர்

நாம் பேச வேண்டிய நேரமிது !

அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள்
நான் எதுவும் பேசவில்லை ஏனெனில், நான் ஒரு யூதன் இல்லை !

அவர்கள் கம்யூனிஸ்டுகளைத் தேடி வந்தார்கள்
நான் அமைதியாக இருந்தேன்
ஏனெனில், நான் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல!

அவர்கள் தொழிற்சங்கத்தினரைத் தேடி வந்தார்கள்
அப்போதும் நான் எதுவும் பேசவில்லை
ஏனெனில் நான் எந்த ஒரு தொழிற்சங்கத்திலும் இல்லை !

கடைசியாக, அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்
இப்போது
எனக்காகப் பேச யாருமே இல்லை !

– மார்ட்டின் நீமோலர்

ஆதரியுங்கள் !

கார்ப்பரேட் காவி பாசிச அபாயம் பற்றியும், அதனை முறியடிக்க வேண்டிய அவசியம் குறித்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து, மக்களை அணிதிரட்டி, வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் ! மாநாடு.

பிரசுரம், போஸ்டர், டிஜிட்டல் திரை என பெரும் பொருட்செலவைக் கோரிய இந்த மாநாட்டிற்கு வினவு வாசகர்கள் பலரும் மாநாட்டு செலவுகளுக்கு பங்களிப்பு செய்துள்ளனர். இந்த மாநாட்டை ஆதரித்த அனைவருக்கு எங்களது மனமார்ந்த நன்றி ! இம்மாநாட்டின் முழுச் செலவுகளைக் கணக்கில் கொண்டு உங்களிடம் நிதி கோருகிறோம் !

 

நிதி உதவி செய்யுங்கள் !

100 துண்டுப் பிரசுரங்கள்

Rs.100

$2


500 துண்டுப் பிரசுரங்கள்

Rs.500

$7


1000 துண்டுப் பிரசுரங்கள்

Rs.1000

$15


100 சுவரொட்டிகள்

Rs.5,000

$70


200 சுவரொட்டிகள்

Rs.10,000

$140


500 சுவரொட்டிகள்

Rs.25,000

$350


மாநாடு குறித்த தகவல்கள்

மாநாடு குறித்து மேலும் அறிய

தொடர்பு கொள்ள

+91 97100 82506

vinavu@gmail.com

நாள்

23 பிப்ரவரி

நேரம்

மாலை 4 மணி

இடம்

உழவர் சந்தை , திருச்சி