privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஃபேஸ்புக் பார்வைசமூக வலைத்தளங்களில் சாமியாடும் மோடி பக்தாஸ் !

சமூக வலைத்தளங்களில் சாமியாடும் மோடி பக்தாஸ் !

-

பெரு முதலாளிகளைக் காப்பாற்றுவதற்காக மோடி அறிவித்த கருப்புப் பண ஒழிப்பு நாடகத்தினால் இதுவரை 50-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போயிருக்கின்றனர். அன்றாட வேலைகளை விட்டுவிட்டு வங்கிக்கு அலையும் இவர்களுக்கு இந்த செல்லாத நோட்டு தோற்றுவித்திருக்கும் துன்பங்கள் அளவிடமுடியாதவை! அதையே எக்காளம் செய்கின்றார்கள், மோடியை ஆதரிக்கும் நபர்கள்! பாசிச மோடிக்கு சற்றும் குறைவில்லாத சிந்னையை இவர்களும்  கொண்டிருக்கிறார்கள். சாதாரண மக்கள் மீதான இவர்களின் வன்மம்தான் முதலாளிகள் மீதான மோடியின் பக்தியை நியாயப்படுத்துகிறது.

– வினவு

Vijay Elumalai

சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்படும் லீ குவான் யூ. போல இந்தியாவில் மோடி பிறந்துள்ளார் என சிங்கப்பூர் நாளிதழ் புகழாரம். ஊர் உலகமும் மோடியை பாராட்டுது. இங்கே உள்ள கூமுட்டை முண்டம் மோடியை தூற்றுது. கேட்டால்…. எங்களை பேங்க் வாசலில் காக்க வைத்து விட்டார் என்கிறார்கள்.
எவனோ ஒரு நடிகன் நடித்த படத்திற்கு டிக்கெட் வாங்க ராத்திரி பகலாக தியேட்டர் வாசலில் காத்தி௫ப்பிங்க.
யாரோ ஒரு தலைவர் வ௫கிறார் என்பதற்காக கொழுத்துற வெயில்ல குவார்ட்ட௫க்கும் பிரியாணி க்கு காத்து௫ப்பிங்க. கிரிக்கெட் என்றால் பைத்தியமாக ஸ்டேடியம் முன்பாக காத்தி௫ப்பிங்க ஆனால் நாடு முன்னேற இரண்டெ௫ நாள் வங்கி வாசலில் காத்தி௫க்க மாட்டீங்க?
நாட்டிற்காக இந்த சிறிய சிரமத்தைக் கூட தாங்கிக் கொள்ள முடியாதவன். இந்த நாட்டில் இ௫க்க தகுதியே இல்லாதவன்.

?மோடி ஜீ…??Baba Ramdev

Muthu Siva

“ஹலோ நான் சாமான்யன் பேசுகிறேன்” அப்டின்னு இந்நேரம் ஒரு உருக்கமான கடிதம் வந்துருக்கனுமே..!!!

பாக்கிய நாதன்

எல்லையில் 24*7 மணிநேரம் துப்பாக்கியைத் தூக்கி கொண்டு நிற்கிறார்கள் நமது நாட்டினை பாதுகாப்பதற்காக ஆனால்,
இங்கே ஒரு கூட்டம் இரண்டு மணி நேரம் கியூவில் நிற்க பொலம்பித் தள்ளுராங்க..ஏண்டா நாட்டோட பொருளாதார வளர்ச்சிக்காக ஒரு ரெண்டு மணி நேரம் கியூவுல நிக்க மாட்டிங்களாடா ?
த்தா எவானாவது கருப்பு பணம் எங்க ? கள்ள நோட்ட ஒழிச்சிங்களானு கேட்டு இந்த பக்கமா வந்துராதீங்க வாயிலயே வெட்டுவேன் ..

 

Haran PrasannaKavarimaan

இரவு பகலாய் எல்லையில் பணிபுரியும் ராணுவத்தினர், மற்றும் காவல்துறை பண மாற்ற அவஸ்தைப்படும் நாமும்…
இதுவும் ஒரு தேசத்தொண்டு! ஜெய்ஹிந்த்

கார்த்திக் முத்தரையர் புதுக்கோட்டை

தயவு செய்து வருவாய்க்கு அதிகமாக வைத்திருக்கும் பணத்தை அண்டை மாநிலத்தில் உள்ள கோவில் உண்டியல்களில் செலுத்தாதீர்கள் அப்படி செலுத்தினால் அந்த மாநிலம் தான் வளர்ச்சி அடையும் , எனவே அப்படி உண்டியலில் செலுத்த விரும்பினால் தமிழ் நாட்டில் உள்ள கோவில்களில் உள்ள உண்டியலில் செலுத்தினால் தமிழகம் வளர்ச்சி அடையும் வல்லரசாக மாறும்…. இது உண்மையென்றால் அதிகம் பகிரவும்…..
இப்படிக்கு,
மக்கள் நலன் கருதுவோர்,
ஜெய்ஹிந்த்…..

பாக்கிய நாதன்

அளவுக்கு அதிகமா பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு யோசனை:
திருப்பதி கோவில் உண்டியல் ல போட்டுருங்கடா கொஞ்சம் புண்ணியமாவது கிடைக்கும்…
( அது ஏன் திருப்பதில போட சொல்ரேன்னு தெரிஞ்சவன் பிஸ்தா )

AcuHealer Krishnan

வங்கியிலிருந்து புதிதாக வாங்கிய இரண்டாயிரம் ரூபாய்த் தாளோடு நண்பர் ஒருவர் வந்து என்னை சந்தித்தார். எங்கே அந்த ரூபாய் நோட்டை காண்பியுங்கள் என்று ஆர்வமிகுதியில் கேட்கவே சிரித்துக்கொண்டே தந்தார். கையில் வந்த பளபளா நோட்டை பார்த்ததும் எனக்குள் ஒரு பூரிப்பு. ” இருங்க என் பாக்கெட் ல வச்சிட்டுத் தர்றேன் ” என சொல்லி பாக்கெட்டுக்குள் வைத்ததும் திடீரென பட பட வென ஒரு சத்தம். நான் வெலவெலத்துப்போய் நண்பரை பயத்துடன் பார்க்க அவரோ குறும்புப் புன்னகை பூத்தபடியே என்னை பார்த்தார்.

பிறகு தான் புது 2000 ரூபாய் நோட்டு பற்றி என்னிடம் விளக்கினார். அதாவது அந்த நோட்டை யார் வேண்டுமானாலும் கையில் எடுத்துப் பார்க்கமுடியும். ஆனால் அதற்கு சம்பந்தமில்லாத யாராவது அந்த நோட்டை பாக்கெட், மணிபர்சு அல்லது வீட்டிலோ வெளியிலோ வேறு எங்காவது வைத்தால் அலாரம் அடிக்க ஆரம்பித்துவிடும். ஒருத்தர் எவ்வளவு நேரம் தான் கையிலேயே 2000 ரூபாய் நோட்டை வைத்திருக்க முடியும்?! எல்லாரும் சொல்வது போல இதுவொன்றும் நேனோ டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்டதல்ல. அதைவிட Advanced நியூரோமார்ஃபிக் டெக்னாலஜி மூலமே இது சாத்தியம் ஆகும். உலகின் வேறெந்த நாட்டிலும் இதுபோன்ற நோட்டு தயாரிக்கப்படவில்லை. இந்தியாவில் தான் முதன்முறையாக இது செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த மூன்றாவது மாதத்திலேயே இது தொடர்பாக ஒரு உயர் தொழில்நுட்ப குழுவை அமைத்து வேலைகளை முடுக்கி விட்டுள்ளார். தனது வெளிநாட்டு பயணங்களின் போதும் அங்குள்ள தொழில்நுட்ப வல்லுநர்களிடம் இதுபற்றி விவாதித்து கடைசியாக இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் …!

நண்பர் சொன்ன தகவல்களைக் கேட்டு ஆச்சரியத்தின் உச்சிக்கே போனேன். ஒரே நாளில் ஒட்டுமொத்த தேசத்தையே கறுப்புப் பணமற்ற தேசமாக மாற்றிக்காட்டிய பிரதமர் மோடி என் மனதிற்குள் மிக உயர்ந்த இடத்தில் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளார். நான் பிறந்தது முதலே என்னை பலரும் ராசியில்லாதவன், அதிர்ஷ்டம் இல்லாத ஆள், போன ஜென்மத்தில் பாவம் செய்தவன் என்றெல்லாம் கேலி செய்வதுண்டு. ஆனால் இன்று அவர்களை தேடிப்பிடித்து சொல்வேன் : இப்படிப்பட்ட ஒரு மனிதர் எனக்குப் பிரதமராக கிடைத்திருக்கிறார் என்றால் நான் எவ்வளவு அதிர்ஷ்டமும் புண்ணியமும் செய்திருக்கவேண்டும்?!
#ஜெய்ஹிந்த்

Omkar BalajiMilton Prabhu

ஓசியா மிக்சி,க்ரைன்டர் ,டீவி வாங்கும்போது பத்துநாள் ஆனாலும் பொழப்ப கெடுத்து கால்கடுக்க நிப்பானுகளாம்…. என்னமோ இருக்க காச அடுத்தவன் அக்கோன்ட்ல போடுறமாதிரி ஓவராதான் சலிச்சுகிறானுவ…. நோகமா நொங்கு துன்னமுமாம் விட்டா அதையும் மோடிதான் ஊட்டி விடனும்னுகூட அடம்புடிப்பானுவ……. திருந்துங்கையா டீ வாங்கி தாறோம்…..

Boopathy Murugesh

எங்க வீட்ல எல்லோரும் அமெரிக்காலயா இருக்காங்க.. நானும் அடுத்த வாரம் வந்துருவேன்..
சரியா வரி கட்டுற யாரும் இதுக்கு பயப்பட அவசியமே இல்ல.. ஏன் அக்கவுண்ட்ல பணத்தை போட்டு கார்டை பயன்படுத்தலாமே? அமெரிக்காவில் கூட அப்படி தான் 😛
ஒருவேளை மோடி இதை செய்யலைனா கருப்பு பணத்துக்கு எதிரா ஒன்னுமே செய்யலைன்னு சொல்லுவிங்க..

Boopathy Murugesh

நான் அமெரிக்காவிலிருந்து டாலரில் அனுப்ப முடியும் எனும்போது நீங்க பெங்களூரிலிருந்து ரூபாய் டிரான்ஸ்பர் பண்ண முடியல என்பதைல்லாம் போய் ராகுல் காந்தி மாதிரி எவன்ட்டயாவது சொல்லுங்க..
பெங்களூரிலிருந்து கார்டை ஊருக்கு குடுத்துவிட்டா போலீஸ் புடிச்சுருமா? இல்ல வீட்ல ஒருவரிடம் கூடவா அக்கவுண்ட் இல்ல? கார்டு இல்ல? உழைத்த பணத்தை பயன்படுத்த என்ன பயம்?

Saran Mass

ஆட்சிக்கு வந்தோமா ஹாயா சம்பாதிச்சோமா குடும்பத்தை கோபுரத்தில் வச்சோமா நாலு பேருக்கு ஜிங்க் ஜக் பண்ணிட்டு கட்டிங்க சுவிஸ்சில் போட்டோமா அடுத்த எலக்ஷன்ல ஜெயிச்சா மீண்டும் அதையே செஞ்சோமா அப்படி தோத்துட்டா எதாவது ஒரு தீவ வாங்கிட்டு அங்க செட்டில் ஆனோமானு இல்லாம ஒரே நாட்ட திருத்தரேன் மக்களுக்கு உழைக்கறேனுட்டு இருக்காரு இந்த மனுஷன்…

இப்ப பாரு ஒன்னுக்கு ஒழுங்கா போகத்தெரியாதவன் கூட உலக பொருளாதாரம் பேசிட்டு இருக்கான்…நாங்க பாட்டுக்கு நாளு ஜோக்கு நாளு கிளுகிளுப்பு படத்தில் ஆசம், சூப்பர்னு கமெண்ட்ட போட்டு நிம்மதியா இருந்திருப்போம்… இவனுங்க வாந்தி எடுப்பதையெல்லாம் பார்க்க வச்சிட்டீங்க

இதெல்லாம் தேவையா மோடிஜி? இவனுங்க ஆட்டு மந்தைங்க..

Modi supporters in Facebook (3)

Ravi Kumar Bjp Thengapattanam

வெளி நாட்டு பத்திரிகைகள் மோடிஜி அவர்களின் கறுப்பு பண ஒழிப்புக்கு பாராட்டு. ஆனால் இந்தியாவில் உள்ள சில தேச விரோத ஊடகங்கள், மீடியாக்கள் மோடிஜி க்கு எதிராக ஒப்பாரி வைக்கின்றன.

elva Mani with Ganesan

முதன் முறையாக மோடிஜி ராஜாங்கத்தை பாராட்டி மோடி பஞ்ச் என்ற தலைப்பில் பல்வேறு கட்டுரைகளை பதிப்பித்துள்ளது விகடன் இதழ். நிறை குறைகளை சுட்டி காண்பித்து தலையங்கமும் எழுதியுள்ளது. மோடிஜியின் பாதை இப்போதுதான் பலருக்கு புரிய ஆரம்பித்துள்ளது.

மரணவியாபாரி எனபொய்பரப்புரை செய்யபட்டஇந்த மாமனிதரின்
உண்மையான உழைப்பும், தேசபக்தியும் அனைவரும் ஒப்புக்கொள்ளும் நாள்விரைவில் வரும்.

Kettavan Da Amar

பேங்க்’ல #Wifi இலவசம்’ன்னு மட்டும்
ஒரு #அறிவிப்ப விடுங்க #மோடிஜி
#நீங்களே அடிச்சு #விரட்டுனாலும்
பேங்க விட்டு #கிளம்ப மாட்டோம்???

Selvar Durai

ஜெய் மோடி_ஜி ……..

கடந்த இரு வருடங்களாக இந்தியாவில் ஒரு இடத்திலும் குண்டு வெடிக்கவில்லையே !!  கடந்த 63 வருடங்களாக … எத்தனை பிரதம மந்திரி… எந்த எந்த நாட்டிற்கு சென்றார்கள்… என்ன .. என்ன .. கிழித்தார்கள் உங்களுக்கு தெரியுமா ?????

பொழுது விடிந்து பொழுது போனால் சீனாகாரன் குதிரையில் நமது எல்லை தாண்டி வந்து பெயிண்ட் அடிப்பதை நிறுத்தி விட்டானே ,,,, ஏன் ????? பன்னிஸ்தான்… எல்லையில் ஆட்டம் போடுவது குறைந்தது ஏன் ??? குட்டிபன்னி ..வங்காளம்… வாலை சுருட்டிக்கொண்டு… இருப்பது ஏன் ??

63 வருடங்களில் ரயில் நிலையங்கள் எப்படி இருந்தன… இப்பொழுது எப்படி உள்ளது தெரியுமா???? 63 வருடங்களில் ரயில்கள் தாமதமாக வருவதை தவிர வேறு என்ன தெரியும்… இப்பொழுது நேரப்படியும்… முன்னதாகவே வருவது தெரியுமா !!!! 3 வருடங்களாக முல்லாவின் ஒட்டு வாங்க கட்டப்பட்ட ராணுவத்தின் கை அவிழ்த்து விட்டபின்… மியன்மாரில் பூந்து வேட்டையாடியதை இதற்கு முன்பு கேட்டது உண்டா..!!!!!!!

பணம் உள்ளவனுக்குத்தான் வங்கி … ஏழைகளுக்கு ஏங்கி ….இது கடந்த 63 வருடங்களில் …. இன்று… கோடிக் கணக்கான ஏழைகள் வங்கி கணக்கு உள்ளது!!! முத்ரா திட்டம் மூலம் 10 லட்சம் வரை கடன் ..பெற்று உள்ளது தெரியுமா. ??? ஜீவன் ஜ்யோதி திட்டத்தில் 2 லட்சம் காப்பீட்டு தொகை கடந்த 63 வருடத்தில் எந்த பாமரனுக்கு கிடைத்ததா ????? சுரக்ஷா பீமா மூலம் வெறும் 12 ரூபாய்க்கு விபத்து காப்பிடு 2 லட்சம் கடந்த 63 வருடத்தில் எந்த பாமரனுக்காவது கிடைத்ததா…??? உஜ்வலா திட்டம் மூலம் 5 கோடி குடும்பகளுக்கு இலவச எரிவாயு திட்டம் கடந்த 63 வருடங்களில் எந்த ஏழைக்காவது கிடைத்ததா….????? கடந்த 63 வருடங்களில் கிடைக்காத 7000 கிராமங்களுக்கு மின் வசதி கிடைத்தது தெரியுமா?????

கடந்த 63 வருடங்களில் எந்த தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு சுய தொழில் செய்ய 10 கோடி ரூபாய்கள் கிடைத்ததா…????? கடந்த 63 வருடங்களில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு OROP எவனாவது கொடுத்தானா….இல்லை …மதித்தானா… ராணுவ வீரர்களை….

மோதி நாடு .. நாடா சுற்றுகிறாராம்…. சொல்ல வந்து விட்டாங்க … பன்னிகளும்… பாவாடைகளும்… வந்தேறிகளும்… டம்பளர்களும்.. .. 2017 வருடம் முதல் வெளி நாட்டில் சுற்றிய சுற்றலுக்கு வேலை வாய்ப்புகள் மலை போன்று வர உள்ளது… அப்ப தெரியும் மோதி … உலகம் சுற்றிய வாலிபனா என்று.. உங்க ஆயா வெளி நாட்டு காரனிடமும் … வெளிநாட்டு இந்தியர்களிடமும் 22,000 கோடி ரூபாய் பெற்றார்களே…. அதை கேட்க மாட்டீர்களே !!!!

நீங்கள் என்னநாட்டிற்கு செய்தீர்கள்….?? ஹெல்மெட் போட சொல்வதை கேட்டீர்களா…???? நோ பார்கிங் இல் தானே வண்டியை நிறுத்துவீர்கள் ????? ONE WAY இல் எதிராக எவ்வளவு வேகமாக வருவீர்கள் ????? எச்சில் துப்பாதே என்ற பலகை மறையும்படி எச்சில் துப்பும் நீங்கள் … கேள்வி கேட்க வந்து விட்டீர்கள் …!!

முதலில் நீங்கள் திருந்துங்க. அப்புறம் மோதியை குறை கூறலாம்…

ஜெய் ஹிந்த்… ஜெய் ஹிந்த்… ஜெய் ஹிந்த்..????

Modi supporters in Facebook (1)Venkat Boss

#மோடிஜி யின் அருமை தெரியாத வெகுசில நன்றிகெட்ட நாய்களின் கவனத்திற்கு!

மாபெரும் தலைவர் ஆகிறார் பிரதமர் மோடி…! பணப்புரட்சி பற்றி பேச ஐ நா அழைப்பு..! உலகம் முழுக்க பணப் புரட்சி..!! மாபெரும் தலைவர் ஆகிறார் நமது பிரதமர் மோடி..! கருப்பு பணத்தை ஒழிக்க மோடி எடுத்த அதிரடி நடவடிக்கை உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது..! இந்திய மக்கள் முதலில் நிறைய இடர்பாடுகளைச் சந்தித்தாலும் பின்னர் புரிந்து கொண்டு அமோக ஆதரவை அளிக்க துவங்கி விட்டனர்..!

பாக். முன்னாள் அதிபர் முஷாரப் தனது பாராட்டுகளைக் கூறினார். ஆஸ்திரிரேலிய அரசும் பணபுரட்சியைத் துவங்கி விட்டது. உலக நாடுகளின் தலைவர்கள் மோடியை தொடர்பு கொண்டு இது எப்படி சாத்தியம் என்று விசாரித்தபடி இருக்கிறார்கள். இந்நிலையில் ஐநா சபை வரை எதிரொலித்தது மோடியின் பணப் புரட்சி..! இது குறித்து ஐநா சபையில் உரையாற்ற அழைப்பு விடுத்துவிட்டது..! அங்கு எழுச்சி மிகு உரையாற்ற தயாராகி விட்டார் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி..!

சல்யூட் மோடி சாப்…!

Modi supporters in Facebook (1)
வெள்ளைக்காரணையே நடுத்தெருவில் நிற்கவைத்து மோடிஜி சாதனை!

Sulthan Dulkarunai

வெள்ளைகாரணைக் கூட நடுதெருவில் நிற்கவைத்து சாதனை மோடிஜி…

Krishna Dhasarathan

குஜிலிவாலுக்கும் மம்தா பேகத்திற்கும் கருப்பு கொடி காண்பித்த டெல்லி வியாபாரிகள். மோடிஜியின் கருப்பு பண ஒழிப்புக்கு எதிராக தர்ணா செய்ய வந்த குஜ்லிவாலுக்கும், மம்தா பேகத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டம் செய்தும், மோடிக்கு ஆதரவாக கோஷமிட்டும் கலக்கிய டெல்லி வியாபாரிகள். கலங்கிய எதிர் கட்சிகள்.

மோடிஜி.. நீங்க கலக்குங்க !!
நல்லவர்கள் எல்லாம் இனி உங்கள் பக்கம் !!

கே.வி.ஆர். திருவாடானை பாண்டியர்வம்சம் சேதுபதிசீமை

தற்போது , பாரத பிரதமர் மோடிஜி அவர்களை விமர்சிப்பவர்கள் எல்லாம் தேச விரோத கும்பலும் , கொள்ளை கும்பலும்தான்….
எவ்வளவோ கஷ்டங்களும் , துயரங்களும் இருந்தாலும் தேச பக்தர்களும் , ஏழைகளும் பிரதமர் மோடிஜி அவர்களை முழு மனதோடு பாராட்டுகிறார்கள் , புகழ்கிறார்கள் ..
R Kesava Raman Konar Singapore ·

மக்கள் எதற்காக எனக்கு வாக்களித்தார்களோ அதை
முடிக்காமல் நான் ஓய போவதில்லை.! “அடுத்த தேர்தலுக்காக வேலை செய்பவன் அல்ல நான் அடுத்த தலைமுறைக்காக வேலை செய்கிறேன்””இந்த முடிவால் எனக்கு என்ன நடந்தாலும் அஞ்ச போவதில்லை”இந்த நாளுக்காகவே எனது குடும்பத்தை தியாகம் செய்துள்ளேன்.!

Modi supporters in Facebook (2)Venky VenkyBoy with Palanivel Rajan and 34 others.

எங்களைபோல் வெளிநாட்டில் கஷ்டபட்டு உழைக்கிறவனுக்குதான் தெரியும் பணத்தின் அருமையும் மதிப்பும்…
நன்றி மோடிஜி… போட்டான்பாரு சீங்கப்பூர் பத்திரிகைல… சிங்கப்பூரை வளார்ச்சியின் உச்சத்திற்க்கே கொண்டு சென்று உலக நாடுகளை திகைக்க வைத்த மறைந்த சிங்கப்பூர் அதிபார் #லீ_குவான்….

இந்தியாவில் பிரதமார் மோடியாக மீண்டும் பிறந்துள்ளாார்.-சிங்கப்பூர் பத்திரிகை..

நல்லதெல்லாம் கண்ணுக்கும் படாதே ! —