privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்பணம் தர மறுத்த புதுவை வங்கியை பணிய வைத்த மக்கள் அதிகாரம்

பணம் தர மறுத்த புதுவை வங்கியை பணிய வைத்த மக்கள் அதிகாரம்

-

கோப்பு படம்: 09-11-2016 அன்று புதுவையில் மோடியின் 00, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து பு.ஜ.தொமு. நடத்திய ஆர்ப்பாட்டம்
கோப்பு படம்: 09-11-2016 அன்று புதுவையில் மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து பு.ஜ.தொமு. நடத்திய ஆர்ப்பாட்டம்

டந்த 8 ஆம் தேதி இரவு 8 மணிக்கு 500 – 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற  அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள  உழைக்கும் சாமானிய மக்களை பெரும் துயரத்தில் தள்ளியது. இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து சொன்னார்கள். இந்த அறிவிப்பு திண்ணும் சோற்றில் மண் விழுந்தது போல் இருந்தது.  அன்று இரவு முதல் இருட்டில் கண்ணை கட்டி விட்ட நிலையில் மக்கள் தடுமாறினார்கள். நடுத்தர வர்க்க மக்களுக்கும், அன்றாடம் உழைப்பில் ஈடுபட்டு 500 – 600 – 1000 ரூபாய் கூலி வாங்கி வந்து அரிசி கடையில் நிற்கும் போது இந்த அறிவிப்பு மிகவும் கொடூரமானதாய் இருந்தது. பால் வாங்க வழியின்றியும், அன்று உணவுக்கு வழியின்றியும் உழைத்த பணம் கையில் இருந்தும் வக்கற்றவர்களாக திக்கு முக்காடினார்கள்.

அந்த அறிவிப்பு இதனுடன் நிற்கவில்லை பசியில், நோயில் மடிந்த குழந்தைகள் முதல் பணத்தை மாற்ற கீயூவில் நின்ற முதியவர்கள் வரை 60 பேருக்கு மேல் இறந்துள்ளனர். இந்த சூழலில் புதுவையில் இயங்கி வரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர்கள்  மோடியின் கருப்பு பண ஒழிப்பு மோசடியை, பாசிச நடவடிக்கையை மாநில முழுவதும் வங்கியின் வாசலில் கால் கடுக்க நிற்கும் உழைக்கும் மக்களுக்கு அம்பலப்படுத்தி கருப்பு பணத்தின் ஊற்றுக் கண் மோடி தான் எனவே இந்த அரசு கட்டமைப்பை ஒழிக்காமல் கருப்பு பணம் ஒழியாது என பிரச்சாரம் செய்தனர்.

அதன் அடிப்படையில் நவம்பர் 17-ம் தேதி காலை 11 மணிக்கு புதுவை எஸ்.பி.ஐ. தலைமை வங்கிக்கு சென்றோம். வங்கியில் நூற்றுக்கணக்கான மக்கள் கால் கடுக்க வேதனையில் கீயூவில் நின்றிருந்தனர். அங்கே மக்கள் அதிகாரம் தோழர்கள் மோடியின் கருப்பு பண நடவடிக்கையை அம்பலப்படுத்தியதும் வங்கியில் உள்ளே இருந்து இரண்டு போலீஸ் ஓடிவந்து பிரச்சாரம் செய்த தோழரை வாயில் கை வைத்து பேசவிடாமல் தடுத்தனர். இங்கே இப்படி பேசக்கூடாது. அனுமதி வாங்கினிங்களா என்றார்கள். அதற்கு அந்த தோழர் மக்கள் துன்பத்தை மக்களிடம் பேசுவதற்கு எதற்கு அனுமதி வாங்க வேண்டும், அதுவும் மைக்கு இல்லாமல் தானே பேசுகின்றோம் என்றதும் அதெல்லாம் முடியாது இங்கிருந்து இடத்தை காலி பண்ணுங்க என்று மிரட்டினார்கள்.

போக முடியாது. இது எனது ஊர், எனது மக்கள். இவர்களின் உழைப்பை கொள்ளையடிக்க வந்த திட்டத்தை பற்றி பேசித்தான் ஆகவேண்டும் என்றும் ஜனநாயக உரிமையை தடுத்து அராஜகம் செய்த போலிசை அம்பலப்படுத்தி மக்கள் மத்தியில் பேசியதும் இரண்டு போலிசும் உள்ளே ஓடி ஒளிந்து கொண்டார்கள். மீண்டும் தோழர்கள் பிரச்சாரம் தொடங்கி முழுவதும் பேசி முடித்ததும் மக்கள் மத்தியில் ஒரு உற்சாகமும் நம்பிக்கையும் ஏற்பட்டது. அந்த வங்கியில் நிற்கும் மக்களுக்கு தண்ணீர் கொடுத்து உதவி செய்து கொண்டிருந்த ஒரு இளைஞர், போலிசின் அடக்கு முறைக்கு எதிராக துவண்டு விடாமல் துணிவுடன் எதிர்த்து போலிசை ஓட வைத்துவிட்டு மீண்டும் உங்கள் பிரச்சாரத்தை முழுமையாக பேசியது  எனக்கு உணர்வை தூண்டியதாக இருக்கின்றது என்றார்.

பேசிய தோழருக்கு தண்ணீர் பாட்டில் கொடுத்து பாராட்டினார். அங்கே நின்றிருந்த அரசு ஊழியர் ஒருவர் அவர் சி.பி.எம் தோழர் என்று அறிமுகம் செய்து கொண்டு ”நீஙகள் பேசியதை கேட்டேன், இது நமது நாடு முன்னேற்றத்திற்கு கொண்டு வந்த திட்டம், கீயூவில் நிற்பது தவறு இல்லை என்று நினைத்திருந்தேன். நீங்கள் விளக்கும் போதுதான் புரிந்தது. கருப்பு பணம் மோடியிடம் தான் குவிந்து இருக்கின்றது என்றும், நமது சேமிப்பை கொள்ளையடிக்கதான் இந்த திட்டம் என்று இப்போது விளங்கிவிட்டது” என்று கூறி அவரை வந்து பார்க்க சொன்னார். பாராட்டி சென்றார். மக்கள் அதிகாரம் தான் தீர்வு என்று சொன்னார். இந்த பாராட்டு தோழர்களுக்கு உற்சாகத்தை கொடுத்தது. தொடர்ந்து வேறோரு வங்கியின் வாசலை நோக்கி சென்றார்கள்.

chennaiநவம்பர் 18 ஆம் தேதி  மதியம் 11:30 மணிக்கு புதுவை முத்தியால் பேட்டையில் உள்ள இந்தியன் வங்கி முன்னால் கூடி நின்றிருந்த மக்களிடம் இரண்டு மக்கள் அதிகாரம் தோழர்கள் பிரசுரம் கொடுத்து பேசும் போது அங்கிருந்த மக்கள் வங்கியின் முன்னாடி பிளாட்பாரத்தின் சுவற்றுக்கு அருகே வெயிலில் சுருண்டு தயங்கி நின்றிருந்தார்கள் அவர்களிடம் மோடியின் கருப்பு பண பாசிசத்தை பேசும் போது புரிந்து கொண்ட மக்கள் கேள்வி கேட்க வலுவிழந்து இருந்தார்கள்.

அந்த வங்கியில் இரண்டு இரும்பு கேட் இருந்தது வெளி கேட்டில் இரண்டு போலீசு, உள்ளே உள்ள கேட்டில் வங்கி ஊழியர் ஒருவர். யார் போனாலும் விடுவதில்லை ஆனால் பணம் போடபோறேன் என்றால் உள்ளே விடுகின்றனர். பணம் எடுக்க விடுவதில்லை. இந்த முறையை கேட்டறிந்த தோழர்கள் அந்த மக்களை பார்த்து நீங்கள் கேள்வி கேட்காமல் எதுவும் கிடைக்காது, எனவே பணம் வேண்டும் என்று கேளுங்கள் என்றனர். அதற்கு மக்களில் ஒருவர் கேட்டுவிட்டோம் சார், எந்த பதிலும் இல்லை, பணமும் இல்லை என்று சொல்றாங்க சார், போய் போய் வர்றோம் பணமில்லை என்ற பதில் தான் வருகின்றது என்றதும் தோழர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். இந்த மக்களுக்கு ஒரு வழிகாட்டாமல் அடுத்த வங்கிக்கு போவது இல்லை என்று.

அதனடிப்படையில் மக்களிடம் ஒரு கோரிக்கை வைத்தனர் தோழர்கள். அது கேள்வி கேட்டால் பதில் வரும், போராடினால் பணம் வரும் என்ன செய்யலாம் என்றதும் முதலில் ஒரு பெரியவர் நேத்திலிருந்து வந்து வந்து போறேன் எந்த பதிலும் இல்லை தம்பி உங்களுடன் நான் நிற்கின்றேன் என்று தோழர்களுடன் சேர்ந்தார். அங்கிருந்த பெண்களிடம் பேசியதில் நாங்களும் வருகின்றோம் என்று அங்கிருந்த மக்கள் அனைவரையும் கிட்டதட்ட 55 பேர் இருப்பார்கள் ஒன்று திரட்டி போலிசின் கேட்டை உடைத்து கொண்டு எங்கள் பணம் எங்கே? எங்கள் பணத்தை திருப்பி கொடு என முழக்கமிட்டனர். உடனே போலீசு அவர்களை தடுத்து வெளியில் போங்க இங்க இந்த மாதிரி கத்தக்கூடாது என்று தள்ளினார். மேலும் சத்தம் கேட்டு ஒரு வங்கி பெண்  அதிகாரி ஓடி வந்து இங்கு ஏன் சத்தம் போடுரிங்க பணம் இருந்தால் தான் கொடுக்க முடியும் இப்போதைக்கு பணம் இல்லை போய்ட்டு நாளைக்கு வாங்க என்றார்.

தோழர்கள் இப்போ எங்களுக்கு பசிக்குது சோத்துக்கும் குழந்தைக்கு பாலு வாங்கவும் பணமில்லை, எங்க பணத்தை பேங்க்ல போட்டுட்டு நாங்க ஏன் நடுத்தெருவுல நிக்கனும் என்று கேள்வி கேட்டதும் அந்த பெண் அதிகாரி கோவப்பட்டு இப்படி சொன்னா உங்களுக்கு புரியாது எஸ்.ஐ.யை கூப்பிடு என்றதும் மக்களிடம் இருந்து ஒரு குரல் ’அந்த அதிகாரி பொம்பளையை பிடித்து வெளியில் இழு’ என்றதும் “எஸ்.ஐ வந்தா மயிரைப் புடுங்குவாரா? எங்க பணத்தை கேட்டா உங்களுக்கு என்ன நோவுது, நாயே” என்று கூடி இருந்த பெண்கள் திட்டினார்கள். உடனே அந்த பெண் அதிகாரி உள்ளே போய் விட்டார். தோழர்கள் மக்களை மேனேஜர் வரும் வரை பணம் வேண்டும் என முழக்கம் போடுங்கள் என்றதும் அதே போல் மக்கள் போட்ட முழக்கத்தில் உள்ளே வேலை செய்ய முடியாமல் வங்கியின் தலைமை அதிகாரி ஓடி வந்தார்.

என்ன இங்க சத்தம் பணம் இருந்தா உங்களுக்கு தருவோம். இல்லை. மேலும் ஏதாவது பேசனுமா மேல பேசுங்க என்றார். எங்களுக்கு மேல நீங்கதான் இருக்கிறிங்க எங்க பணமும் இங்கதான் இருக்கு எங்களுக்கு  எங்க பணம் வேண்டும் இல்லை என்றால் வங்கியை பூட்டு போட்டு எங்களுடன் நடு ரோட்டுக்கு வாங்க என்றார்கள் தோழர்கள். உடனே கொஞ்சம் இருங்க என்று உள்ளே போய் திரும்பி வந்து ஒன்றரை மணி நேரம் அவகாசம் கொடுங்க உங்களுக்கு பணத்தை தருகின்றோம் என்றார் அந்த அதிகாரி. மக்களுக்கு நம்பிக்கை இல்லை. ’நேற்று முதல் இன்று வரை போய் போய் வருகின்றோம் எந்த பதிலும் இல்லை இந்த வாக்குறுதியை எப்படி நம்புவது’ என்று மக்கள் கேட்க ’உங்கள் எல்லோருக்கும் டோக்கன் ஏற்பாடு செய்கின்றேன். அதன் பிறகு இங்கிருக்கும் எல்லோருக்கும் பணத்தை தருகின்றேன் கொஞ்சம் அமைதியாக இருங்க என்றார்’.

பத்து நிமிடத்தில் டோக்கன் கொடுக்கபட்டது. மக்களிடம் கேட்டார்கள் தோழர்கள் ’மக்களே வங்கி அதிகாரி இருபது லட்சம் ரூபாய் வருவதாய் கூறி நமக்கு டோக்கன் கொடுத்துள்ளார் .நம்பலாமா’ என்றதும் நம்பலாம் என்று அனைவரும் சொன்னார்கள்.  உடனே தோழர்கள் வேறு வங்கிக்கு போக வெளியே வந்தனர். தோழர்களுக்கு பின்னாடி நான்கு இளைஞர்கள் அண்ணே எங்களுக்கு ஒரு பத்து பேருக்கு டோக்கன் வரவில்லை என்றார்கள். தோழர்கள் சொன்னார்கள் என்னப்பா பணமோ டோக்கனோ எப்படி வாங்க வேண்டும் என்று இப்போதானே சொல்லி கொடுத்தொம். அந்த பத்து பேரையும் சேர்த்து நீங்க கேளுங்க என்றதும் தயங்கினார்கள் .உடனே தோழர்களே போய் அந்த மேனேஜரை பார்த்து என்னங்சார் பத்து பேருக்கு டோக்கன் தராம ஏமாத்தி இருக்கிங்க என்றதும் பதறிப் போய் ஏமாத்தலை சார் டோக்கன் தீர்ந்திடுச்சு எடுக்க போனேன் அதற்குள் ஒரு கம்ப்ளைண்டா இந்தாங்க இத நீங்களே கொடுங்க சார் என்று தோழர்களிடம் கொடுத்தார். இல்லைங்க சார் நீங்களே கொடுங்கள் என்று அதிகாரியை வேலை வாங்கியது மக்கள் அதிகாரம் தோழர்கள், ”டோக்கன் வாங்கிய யாரும் வெளியில் காத்திருக்க தேவையில்லை. அனைவரும் உள்ளே போய் பணம் கொடுத்தால் தான் வெளியே வரவேண்டும். இல்லை என்றால் வரவே கூடாது.

மேலும் போராடாமல் நமக்கு எதுவும் கிடைக்காது. நமது உழைப்பில் உருவான சேமிப்பு கூட கிடைக்காது எனவே போராடுங்கள் மக்கள் அதிகாரமாய்” என தோழர்கள் மக்களுக்கு போராட்டத்தை கற்றுக் கொடுத்துவிட்டு வந்துவிட்டனர். சரியாக ஒன்றரை மணி நேரம் கழித்து தொடர்பு கொண்டு பேசிய போது ”பணம் கொடுத்து கொண்டிருக்கிறார்கள். ரொம்ப நன்றிங்க தோழர்களே” என்று அடைய முடியாத சந்தோஷத்தை அடைந்த மாதிரி தோழர்களிடம் நன்றியுடன் பகிர்ந்து கொண்டனர். இதில் ஒருவர் மனித உரிமை இயக்கத்தில் இருப்பதாகவும் நீங்கள் செயத முறைதான் சரியானது, நீங்கள் இல்லை என்றால் பணம் இன்று கிடைத்து இருக்காது என்று கூறி பாராட்டி அவரின் தொடர்பு எண் கொடுத்துள்ளார்.

மக்கள் அதிகாரம்
புதுவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க