பார்ப்பன பேஷ்வாக்களை வீழ்த்திய பீமா கோரேகான் யுத்தத்தின் 200 -ம் ஆண்டு
நினைவு நாளில் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட காவிக் கும்பலை எதிர்த்து மகாராஷ்டிரா மாநிலம் முழுதுமான ஒருநாள் (03.01.2018) கடையடைப்பிற்கு தலித் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்தன.
அதை தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தால் முடங்கிய மும்பை மாநகரின் சில காட்சிகள் :
தலித் சமூகத்தினர் மும்பையில் நடந்த ஒரு எதிர்ப்புப் பேரணியில் முழக்கங்களை எழுப்புகின்றனர்.
மும்பையின் போராட்டங்கள் நடைபெறும் தருணத்தில் நெடுஞ்சாலை ஒன்று தலித் சமூகத்தினரால் மறிக்கப்பட்டதால் மக்கள் அதில் நடந்து செல்கின்றனர்.
மும்பையில் போராட்டம் ஒன்றின் போது சாலை மறியலுடன் தலித் மக்கள் முழக்கங்களை எழுப்புகிறார்கள்.
மும்பையில் போராட்டம் நடக்கும் போது காவல்துறையினர் ரோந்து செல்கின்றனர்.
மும்பை, நெடுஞ்சாலை ஒன்றில் தலித் மக்களின் மறியல், முழக்கம்!
மும்பையின் போக்குவரத்து சந்திப்பு ஒன்றில் பாதுகாப்பிற்கு நிற்கும் காவல்துறையினர்.
“மகாராஷ்டிரா பந்தை” முன்னிட்டு தானே தொடர்வண்டி நிலையத்தில் போராட்டம்.
பீமா கோரேகான் வன்முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மும்பையில் புதன்கிழமை அன்று “மஹாராஷ்டிரா பந்திற்கு” தலித் மக்கள் அழைப்பு விடுத்த பின்னர் ஆளரவமற்ற சாலையில் சிறுவர்கள் சைக்கிளில் கொடியை ஏந்தி செல்கின்றனர்.
நன்றி : தி வயர்