privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்பேருந்து கட்டணத்தை செலுத்தாதே ! கலகம் செய் !

பேருந்து கட்டணத்தை செலுத்தாதே ! கலகம் செய் !

-

 

பத்திரிகைச் செய்தி

மிழக அரசு அறிவித்துள்ள பேருந்துக் கட்டண உயர்வு அநீதியானது, எவ்வகையிலும் ஏற்கமுடியாதது. ஜி எஸ் டி, பணமதிப்பழிப்பு ஆகியவற்றால் வருமானமிழந்து வேலை வாய்ப்பையிழந்து நிற்கும் சாதாரண மக்கள் மீது மிகப்பெரும் தாக்குதலை அ.தி.மு.க அரசு தொடுத்துள்ளது. இதனை மக்கள் அதிகாரம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. உடனடியாக  திரும்பப்பெறுமாறு வலியுறுத்துகிறது.

கட்டண உயர்விற்கு அரசு கூறும் காரணங்கள் உண்மையல்ல.போக்குவரத்துக் கழகங்களின் நலிவுக்கும், நட்டத்திற்கும் ஊழலும் பொருப்பற்ற நிர்வாகமுமே காரணம் என்பது ஊரறிந்த உண்மை. இந்தக் கட்டண உயர்வின் மூலம் ஊழல் அதிகரிக்குமேயன்றி போக்குவரத்துக் கழகங்கள் சீர்படப்போவதில்லை. மலிவான பரவலான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டியது அரசின் அடிப்படைக் கடமை. எனவே கட்டண உயர்வு என்ற இந்தத் தாக்குதலை முறியடிக்க அனைவரும் ஒன்று திரள அழைக்கிறோம்.

காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்
தஞ்சாவூர் – 94431 88285

*****

பேருந்து கட்டணத்தை செலுத்தாதே ! கலகம் செய் ! – கண்டன ஆர்ப்பாட்டம் !

நாள் : 22.01.2018, திங்கள் மாலை 4:00 மணிக்கு.
இடம் : BSNL அலுவலகம் எதிரில்.

தகவல் :
மக்கள் அதிகராம்,
தருமபுரி.
தொடர்புக்கு – 81485 73417, 80152 69381.

*****

*****

பேருந்து கட்டண உயர்வை கண்டித்து 20.01.2018 அன்று கும்முடிப்பூண்டியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தோழர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தது போலீசு. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அப்பகுதி புஜதொமு செயலாளர் தோழர் விகேந்தர் தலைமை தாங்கினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் (கிழக்கு) மாவட்டம்.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க