privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்காவிரியில் வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் மார்ச் 24 முற்றுகைப் போராட்டம் !

காவிரியில் வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் மார்ச் 24 முற்றுகைப் போராட்டம் !

-

பத்திரிக்கைச் செய்தி

21.03.2018

காவிரி ஆற்றில் தமிழக உரிமையை மறுப்பதிலும் நீரைத் தடுப்பதிலும் கர்நாடக முதல்வர் சித்தராமையாவைக் காட்டிலும் கூடுதலான வெறியுடன் செயல்படுகிறது மோடி அரசு. தேச ஒற்றுமைக்கு மொத்த குத்தகைதாரர் போல் வேடம் போடும் மோடி அரசு காவிரித் தீர்ப்பை அமல்படுத்த மறுத்து வருகிறது. கர்நாடக அரசுக்கு பக்க பலமாய்ப் பக்க மேளம் வாசிக்கிறது. மத்திய அமைச்சர் கட்கரி, நீர்வளத்துறை செயலர் உ.பி.சிங் ஆகியோர் காவிரி மேலண்மை வாரியம் அமைக்க முடியாது என்பதை வெவ்வேறு வார்த்தைகளில் பேசுகின்றனர். தமிழக தலைவர்களை சந்திக்கவே மறுக்கிறார் பிரதமர் மோடி.

உச்ச நீதிமன்றம் தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் குறைத்துள்ள நீரைக்கூட தடுக்கும் சதி வேலையில் ஈடுபடுகிறது மோடி அரசு. தனது தீர்ப்புகளை சற்றும் மதிக்காமல் செயல்படும் சித்தராமையா அரசு, மோடி அரசு இவற்றை உச்ச நீதிமன்றம் கடுகளவு கூட கண்டிக்கவில்லை அதேநேரம் காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த ஓ.என்.ஜி.சி -யை முடுக்கி விடுகிறது மோடி அரசு.

தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க ஓ.என்.ஜி.சி -யை எதிர்த்துப் போராடும் விவசாயிகளை ஒடுக்க தற்போது திருவாரூரில் மத்திய துணை ராணுவப் படையைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தமிழ் நாட்டை ஒரு பகை நாடு போலவே நடத்துகிறது பாஜக அரசு. ஒரு புறம் உரிமைகளைப் பறிப்பது, மறுபுறம் வளங்களைச் சுரண்டுவது என்பதே தமிழகத்தைப் பற்றிய பாஜக -வின் கொள்கை. தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசோ எட்டப்பனைக் காட்டிலும் கீழாக தமிழக நலன்களை அடகு வைத்து விட்டு கொள்ளையடிப்பதை மட்டுமே குறியாகக் கொண்டு செயல் படுகிறது. 12 மாவட்டங்களின் விவசாயம் 20 மாவட்டங்களின் குடிநீர், இவற்றின் ஆதாரம் காவிரி ஆறு. காவிரியாற்றின் தமிழக உரிமை வரலாற்று வழிப்பட்டது. சட்டங்களையும் அதன் ஓட்டைகளையும் காட்டி மறுப்பதையோ, இழுத்தடிப்பதையோ ஏற்கவே முடியாது.

எனவே மத்திய அரசு உடனே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்துச் செயல்படுத்த வேண்டும். உச்ச நீதிமன்றம் இழைத்த அநீதி உரிய வழியில் களையப்பட வேண்டும். குறைந்தபட்சம் நடுவர் மன்றம் அளித்த 192 டி.எம்.சி நீர் உறுதி செய்யப்பட வேண்டும். மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசில் தமிழக எம்.பிக்களுக்கு வேலையில்லை; எனவே அவர்கள் அனைவரும் உடனே பதவி விலக வேண்டும்.

இவற்றை வலியுறுத்தி வரும் மார்ச் 24 -ம் தேதி திருச்சியில் தலைமை அஞ்சலக முன் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடைபெறவிருக்கிறது. தமிழக உரிமைக்கான இப்போராட்டத்தில் அனைத்துதரப்பு மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென அறை கூவி அழக்கிறோம்.
நன்றி.

இப்படிக்கு
காளியப்பன்
மாநிலப்பொருளாளர்,
மக்கள் அதிகாரம்

******

திருச்சி முற்றுகை  – அறைகூவல்

“காவிரியைத் தடுக்கும் டெல்லியின் அதிகாரத்தை முடக்கு! நீட் முதல் நெடுவாசல் வரை தாக்குதல் மேல் தாக்குதல்! தமிழகமே கொதித்தெழு!” என்ற முழக்கத்தின் கீழ் வருகின்ற

24.03.2018 அன்று நடைபெறவுள்ள திருச்சி தலைமை தபால் நிலைய முற்றுகை போராட்டத்தையொட்டி திருஅகர் முழுதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

அன்பார்ந்த பெரியோர்களே தாய்மார்களே!

மிழகத்தில் டெல்லியின் அதிகாரத்தை முடக்காமல் பா.ஜ.க அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது. நீட் முதல் நெடுவாசல் வரை தாக்குதல் மேல் தாக்குதல், இனியும் பொறுக்க முடியாது? தமிழகமே கொதித்தெழு!

மார்ச் 24 சனிக்கிழமை மக்கள் அதிகாரம் உங்களை திருச்சிக்கு அழைக்கிறது.

தமிழகத்தின் எண்ணெய் வளத்தையும், எரிவாயு வளத்தையும் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க தமிழகத்தையே பலிகொடுக்கிறது பா.ஜ.க. மோடி அரசு. உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றினோம், பாராளுமன்றத்தில் போராடினோம். ஆனால் எந்த பயனும் இல்லை.

காவிரியில் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இது வரை இல்லை. தமிழகத்தின் நீரை பிடுங்கி பெங்களுர் பன்னாட்டு முதலாளிகளுக்கு தாரை வார்த்து இறுதி தீர்ப்பு வழங்கி வஞ்சித்தது உச்சநீதிமன்றம்.

காவிரி நீர் பங்கீட்டில் ஓரவஞ்சணையாக செயல்பட்டு மத்திய அரசு தொடர்ந்து  தமிழகத்தை வஞ்சிக்கிறது. எத்தனை தீர்ப்புகள் வந்தாலும் தண்ணீர் தரமாட்டோம் என்ற கர்நாடகாவின் அடாவடிக்கு துணைபோகும் பா.ஜ.க. மோடி அரசை ஒரு கை பார்ப்போம். திருச்சிக்கு வாரீர்!

ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற டெல்லியின் தேசிய ஒருமைப்பாட்டை கேள்விக்குள்ளாக்குவோம்!

மக்கள் அதிகாரம் உங்களை அழைக்கிறது. மார்ச் 24 சனிக்கிழமை காலை 11 மணிக்கு திருச்சி, தலைமை தபால் நிலையம் தாங்கள் பெரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மீண்டும் அழைக்கிறோம்.

தமிழன் கிழிச்ச கோட்டை தாண்டாதவன், சட்டத்துக்கு பயந்தவன் தன்னை வருத்தி கொண்டு, மாத கணக்கில் உட்கார்ந்து, கோசம் போட்டு எழுந்து போய் விடுவார்கள் அவனுக்கு எதற்கு மேலாண்மை வாரியம்? என்று நினைக்கும் டெல்லியின் திமிரை அடக்கி காட்டுவோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருச்சிக்கு வாரீர்!

தமிழகத்தை கிள்ளு கீரையாக நடத்தும் டெல்லிக்கு எதிராக தமிழக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய வேண்டும்.

காவிரியை தடுத்து, பெரியார் சிலையை உடைக்கும் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவிற்கு எதிராக தமிழகத்தை போர்க்களமாக்குவோம். டெல்லியின் எந்த அதிகாரமும் தமிழகத்தில் செல்லாது என்ற நிலையை உருவாக்காமல் காவிரி மட்டுமல்ல, நீட், மீத்தேன், கெயில் என எதிலும் தமிழகம் தப்பிக்காது. காவிரி நீர் உரிமை விவசாயிகள் பிரச்சினை மட்டும் அல்ல ஒட்டு மொத்த தமிழினத்தின் உரிமை அனைவரும் திருச்சிக்கு வாரீர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தொடர்புக்கு : 99623 66321.

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க