privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்காவிரி : தன்னுரிமைக்காக போராடும் தமிழகம் !

காவிரி : தன்னுரிமைக்காக போராடும் தமிழகம் !

-

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர் போராட்டம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றால் தமிழகத்தின் தன்னுரிமைக்காக போராடுவதே ஒரே தீர்வு என்ற முழக்கத்தை முன் வைத்து, கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் 3.4.2018 அன்று பு.மா.இ.மு தலைமையில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
குடந்தை.

*****

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் போராட்டம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து 3.4.2018 அன்று நண்பகல் 12.00 மணியளவில் நடைபெற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

*****

சென்னை பல்கலைக்கழக மாணவர் போராட்டம்…

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்காததையும் ஸ்டெர்லைட், நியூட்ரினோ, ONGC, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள்விரோத திட்டங்களைத் தமிழகத்தில் செயல்படுத்தக் கூடாது எனவும். மத்திய – மாநில அரசை கண்டித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட (APSC) மாணவர்கள் 3.4.2018 அன்று நண்பகல் 2:00 மணியளவில் சாலை மறியல் போராட்டம் நடத்தினா்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தது போலீசு.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

*****

கும்பகோணம் வழக்கறிஞர்கள் போராட்டம்…

காவிரி பிரச்சனையையொட்டி குடந்தை வழக்கறிஞர் சங்கம் சார்பாக 3.4.2018 அன்று ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
குடந்தை. தொடர்புக்கு : 97892 61624.

*****

காஞ்சிபுரம் பு.ஜ.தொ.மு. பிரச்சாரம்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட பு.ஜ.தொ.மு. சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. பெரும்பான்மையான பயணிகளும், சிறு கடை வியாபாரிகளும் நின்று ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி
காஞ்சிபுரம் மாவட்டம்.

*****

 


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க