தமிழகத்தைப் பிடித்திருக்கும் சாபக்கேடுகளில் ஒன்று காங்கிரசுக் கட்சி. நூறாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இந்தக் கோமான்களின் கட்சி துவங்கப்பட்டதே வெள்ளைக்காரர்களின் பிச்சையில்தான். அடிமைத்தனத்தோடு பொறுக்கித் தின்பதற்கு இங்கிலாந்து ராணியிடம் மனு கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதே இக்கட்சியின் புல்லரிக்கும் வரலாற்றுப் பெருமை. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இக்கட்சிக்கு தலைமை தாங்கிய திலகர்தான் இந்துத்வ விசமத்தனங்களுக்கு சுளி போட்டவர். விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் யானை முகத்தோனை பிரம்மாண்ட சைசில் பல கெட்டப்புக்களில் வடித்து கடலை நாசமாக்கும் விதத்தில் கரைத்து, இந்த எழவு மும்பையோடு நிற்காமல் எல்லா புண்ணியஸ்தலங்களுக்கும் பயணம் செய்து இப்போது தமிழகத்திலும் ஊன்றிவிட்டது. அமைதியாக இருந்த பல ஊர்கள் இன்று விநாயகர் சதுர்த்தியால் வருடா வருடம் கலவரங்களைச் சந்திக்கின்றன. இன்றைய பா.ஜ.கவின் முன்னோடிகளில் ஒருவராக இருந்த பெருமை இந்த கதர்க் கட்சியினருக்கு உண்டு.
அப்புறம் வந்த காந்தி அஹிம்சை என்ற பெயரில் மக்களிடம் முன்முயற்சியோடு எழுந்து வந்த ஏகாதிபத்தியப் போராட்டங்களைக் காட்டிக் கொடுத்து வெள்ளையனுக்கு வாழ்வு கொடுத்தவர். இதற்கிடையில் இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து தோல்வியுற்றதும் இனிமேல் இந்தியாவைச் சுரண்டுவதற்கு பொருளில்லை என்று காங்கிரசுக் கோமான்களிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அதற்குத் தோதாக பிசினஸ் உடன்படிக்கைகளை போட்டுக்கொண்டு வருமானத்திற்கு வழி ஏற்படுத்தி விட்டு எஸ்கேப் ஆனான் வெள்ளைக்காரன்.
இதைத்தான் கதர் வேட்டி நரிகள் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கித் தந்ததாக கூச்சமேயில்லாமல் ஊளையிட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் 47க்கு முந்தைய காலத்தில் இந்த நரிகளின் தலைவர்கள் எல்லா வகையிலும் பிற்போக்கிற்கு பல்லக்கு தூக்கிக் கொண்டிருந்தனர். தேவதாசி முறையைத் தடை செய்வதை சத்யமூர்த்தி அய்யர் வெறியோடு எதிர்த்தார். சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனர்களுக்கும், மற்ற சாதிக்காரர்களுக்கும் தனிப்பந்தி வைத்து சநாதனத்தை வெறியோடு காப்பாற்றிய வ.வே.சு.அய்யரும் இந்த மாட்டுக்கட்சியில்தான் குப்பை கொட்டினார். இந்தி ஆதிக்கத்தையும், குலக் கல்வித் திட்டத்தையும் கொண்டு வரத்துடித்த ராஜாஜி என்ற துக்ளக் சோவின் தாத்தாவாக இருக்கும் தகுதி கொண்டவரைப்பற்றி பலரும் கேள்விப்பட்டிருக்கலாம். இவருக்குப் பிறகு பதவிக்கு வந்த பச்சைத்தமிழர் காமராஜரின் காலத்தில்தான் பண்ணையார்களாக இருந்த பல நரிகள் தொழிலதிபர்களாக அவதாரமெடுத்தன. இதைத்தான் காமராஜரின் பொற்காலமென்று நரிகள் நிறுத்தாமல் ஊளையிடுகின்றன. அவ்வப்போது இந்தப் பொற்கால ஆட்சியினை மீட்டு வரப்போவதாக பாச்சாவும் காட்டுகின்றன.
இப்படி தோற்றத்திலிருந்தே கோமான்களின் கட்சியாக மேய்ந்து வந்த இந்த நரிகளின் மேல் மக்களுக்குள்ள வெறுப்புதான் திராவிட இயக்கத்தின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அன்றிலிருந்து தொண்டர்களில்லாமல் தலைவர்களாக உள்ள நரிகள் மட்டும் மேயும் ஒரு கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது இந்த நரிகளின் கட்சிதான். மாவட்டத்திற்கு ஒரு நரி வீதம் கோஷ்டி வைத்துக்கொண்டு அடித்துக் கொள்வதும், வேட்டி கிழியும் வண்ணம் ஒரு பாக்சிங் ஸ்டையிலயே இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இந்த குள்ள நரிகளின் கட்சிக்குத்தான் உண்டு என்பதை நாளை பிறக்கப்போகும் ஒரு குழந்தை கூட அறியும்.
நிலப்பிரபுக்களாகவும், தியேட்டர், திருமண மண்டபங்களின் உரிமையாளர்களாகவும், பெட்ரோல், கேஸ் ஏஜென்சிகளின் முகவர்களாகவும், பிரபலங்களுக்கு கடன் கொடுக்கும் மேட்டுக்குடி பைனான்சியர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் ஏஜெண்டுகளாகவும், சிறு, நடுத்தர தொழிலதிபர்களாகவும், சுய நிதி கல்லூரிகளின் அதிபர்களாகவும், தொழில் செய்யும் இந்த நரிகள் இந்தப் பதவிகளை அதிகாரத்தில் இருக்கும் வலிமை கொண்டு பிக்பாக்கட் அடித்திருக்கின்றன. இந்த தொழில் வியாபாரத்தைத் தக்கவைப்பதற்காகவே அரசியல் கட்சி என்ற பெயரில் கூச்சநாச்சமில்லாமல் மூவர்ணக் கொடியை கட்டிக்கொண்டு தமிழகத்தை கேட்பார் கேள்வியில்லாமல் ரைட்ராயலாக மேய்ந்து வருகின்றன.
தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் பலகோடி மதிப்பிலான சொத்துக்களை வைத்திருக்கும் இந்நரிக் கட்சியினர் இதுவரை எந்த மக்கள் பிரச்சினைக்காகவும் தெருவில் இறங்கி போராடியது கிடையாது. தி.மு.கவும், அ.தி.மு.கவும் போடும் பிச்சையினால் தொகுதிகளைக் கைப்பற்றி தொந்தி வளர்க்கும் கூட்டம் என்றுமே மக்களைப்பற்றி கவலைப்பட்டதும் கிடையாது. ராஜீவின் கொலையாளிகளை சோனியா காந்தியே மன்னித்தாலும் இந்த கு.நரிகள் மட்டும் மன்னிக்காதாம். காலையில் எழுந்து தினத்தந்தி பார்த்து யார் நரிகளின் தமிழகத் தலைவர் என்று தெரிந்து கொள்ளும் கொழுப்பெடுத்த அடிமை நரிகள் ஈழத்தின் துயரத்தை கண்டால் ஆவேசத்துடன் மோத வருகின்றன. இது இன்று நேற்றைய விவகாரமல்ல. பகத்சிங்கையே தூக்கில் போடுவதற்கு வெள்ளையனுக்கு முகூர்த்த நாள் குறித்துக் கொடுத்த முண்டங்கள்தான் இந்த நரிகளின் முன்னோர்கள் எனும்போது ஈழத்தில் சாகும் அப்பாவித் தமிழனெல்லாம் எம்மாத்திரம்? ஆனாலும் அடிமைகள் ரோஷம் கொண்டவர்களாக தங்களைக் கருதிக் கொள்ளும் பசப்பலைத்தான் சகிக்க முடியவில்லை.
டெல்லியில் கனைத்தால் சென்னையில் இருமும் இந்த சுயமரியாதை கிஞ்சித்துமற்ற கு.நரிகள், புலிகள் என்றதும் பங்குச் சந்தை காளை போல சிலிர்த்துக்கொண்டு பாய்கின்றன. விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமென்பதால் வாயை மூடிக்கொண்டு போகவேண்டுமாம். விடுதலைப்புலிகளெல்லாம் ஒன்றுமேயில்லை எனுமளவுக்கு பல இலட்சம் ஈராக்கிய, ஆப்கானிய மக்களை கொன்ற பயங்கரவாதி செருப்பு புகழ் புஷ்ஷுவிடம் இந்தியா உங்களை நேசிக்கிறது என்ற நரிகளின் டர்பன் கட்டிய பிரதம நரி பீற்றிக் கொண்டதாம். கோழி மாக்கான் புஷ்ஷை அயோத்தி ராமனுக்கு மேலாக பூஜை செய்யும் நரிகள் ஈழத்தில் தமிழனென்பதால் கொல்லப்படும் போரை மறைமுகமாய் ஆதரித்துக் கொண்டு கூடவே புலி பீதியைப் பரப்பி வருகின்றன. அமெரிக்க பயங்கரவாதி புஷ்ஷையும், இலங்கை பயங்கரவாதி பக்ஷேவையும் ஃபிரண்ட்லியாகப் பார்க்கும் கு.நரிகளிடம் போய் ஈழத்தமிழருக்காக ஆதரவைக் கேட்ட தமிழக அரசியல்வாதிகளை எதைக்கொண்டு அடிப்பது? சத்திய மூர்த்திமேல் சில சிறுகற்கள் பாதிப்பேயில்லாமல் வீசப்பட்டதை வைத்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய்விட்டதாக ஜவுளித் துறை அமைச்சராக இருக்கும் நரியொன்று இதை மத்திய அரசு கவனிக்கும் என்று மிரட்டுகிறது. இப்படி பல அனாமதேயங்களெல்லாம் வாய் திறந்து பேசுவதற்குக் காரணம் கருணாநிதியின் சரண்டர் அரசியல்தான்.
ஈழத்தமிழனைக் கொல்வதற்கு துப்பாக்கியும் கொடுத்து, ரவையையும் திணித்து கூடவே சாகப்போகும் தமிழன் வயிறு ஃபுல்லாக நிரப்பிக் கொண்டு சாக வேண்டுமென்பதற்காக வாய்க்கரிசியையும் கொடுத்த புண்ணியவான்களை வைத்தே போரை நிறுத்தி விடப்போவதாக கருப்பு சிகப்பு மாடுகள் பிலிம் காட்டுவதை எந்த லேப்பில் கழுவி சுத்தம் செய்வது? இதில் பிரணாப் முகர்ஜியை வேறு கொழும்புக்கு அனுப்பி சாதனை படைக்கப் போகிறார்களாம். எதற்கு? ரேடார் வேலை செய்கிறதா இல்லையா என்று பரிசோதிப்பதற்காகவா? ஈழத்தில் நடக்கும் போர் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்படவில்லை, புலிகளுக்கு எதிராக நடத்தப்படுகிறது என்று ராஜ பக்க்ஷே மட்டுமல்ல தமிழகத்து குள்ள நரிகளும் ஒரே சுவரத்தில் ஊளையிடுகின்றன. இந்த நரிகளே இப்படி பேசும்போது சுப்பிரமணிய சுவாமி, துக்ளக் சோ, ஜெயலலிதா, இந்து ராம் போன்ற ஈழத்திற்கு எதிராக துவேசத்தைக் கக்கும் கொட்டை போட்ட நரிகளைப் பற்றி சொல்லவேண்டியதில்லை.
சீமான் உணர்ச்சி வசப்பட்டு பேசியதாக ஈழத்து ஆதரவாளர்கள் சிலர் வருத்தப் பட்டுக் கொள்கிறார்கள். சீமான் ஒரு ரசிகரைப்போல புலிகளையும், பிரபாகரனையும் ரசிப்பதில் எங்களுக்குக்கூட உடன்பாடு இல்லைதான். மேலும் ஈழத்தமிழரின் விடுதலை என்பது பிரபாகரனின் வீரத்தில் முடிந்து வைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் மனமுருகி பேசும் சீமானின் பார்வையில் பல பழுதுகள் உள்ளன. என்றாலும் அப்படி இரசிப்பதற்கு உரிமை கிடையாதா என்ன? அவர் என்ன கொலைக் குற்றமா செய்து விட்டார்? கண்ட கஸ்மாலங்களுக்கெல்லாம் ரசிகர் என்ற பெயரில் பாலபிஷேகம் செய்யும் நாட்டில் பிரபாகரனைப் பற்றி பேசக்கூடாதா என்ன? பேசினால் உடனே ராஜீவின் ஆவியை சாமியாடி வரவழைத்து விடுவார்களாம். ஒருவேளை ஆவி வரவில்லையென்றாலும் இவர்களே போதையேற்றிக் கொண்டு ராஜிவுக்காக உளறுவார்களாம். அப்படி என்னதான் கிழித்து விட்டார் இந்த ராசீவ்காந்தி? டெல்லி சீக்கியர்களிடன் கேட்டால் ராஜீவின் காலத்திய கதர் நரிகள் இரத்தம் குடித்த கதையை ஆத்திரத்துடன் விவரிப்பார்கள். போபால் மக்களிடன் கேட்டால் பல நூறு உயிர்களைக் கொன்ற யூனியன் கார்பைடு நிறுவனம், ராஜீவின் உதவியோடு ரத்த பானம் குடித்த கதையை மறக்க முடியாமல் கதறுவார்கள். இதுபோக ஈழத்திற்கு அமைதிப்படை என்ற பெயரில் ஒரு ஆக்கிரமிப்பு படையை அனுப்பி பலநூறு உயிர்களை கொன்று குவித்த ராஜீவ் காந்தி ஒரு பயங்கரவாதிதான் என்று சீமான் கேட்டதில் என்ன தவறு?
இந்திய இராணுவம் இலங்கை, காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் என எங்கெல்லாம் தனது படையை அனுப்பியதோ அங்கெல்லாம் கொன்ற கணக்கும், தின்ற கணக்கும், கற்பழித்த கணக்கும் பெருக்கிப்பார்த்தாலும் கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பிரம்மாண்டமானவை. எனில் இதற்குக்காரணமான கு.நரிகளின் தலைவர்களை கேவலம் ஒரு வைக்கப்போரில் தைக்கப்பட்ட பொம்மைக் கொடும்பாவியாகக் கூட கொளுத்தக் கூடாதா?
பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கொடும்பாவி கொளுத்தியதற்காக இதுவரை கருப்புதாரின் கறையை மிதிக்காத கதர் வேட்டி நரிகளெல்லாம் உடனே அண்ணா சாலையில் மறியல் என்று சீனைப்போடுகின்றன. சென்னையில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் அடித்தால் எனென்று கேட்க ஆளில்லாத இந்த துப்புக்கெட்ட நரிகள் ஒரு இடத்திற்கு பத்து அல்லது பதினைந்து என்ற கணக்கில் கூடிக் கொண்டு போர் செய்கின்றனவாம். இதையே மானங்கெட்ட தமிழ் தொலைக்காட்சிகள் மாபெரும் போராட்டமாகக் கவரேஜ் பண்ணும் கொடுமையை என்னவென்று சொல்ல?
சீமானும், கொளத்தூர் மணியும், மணியரசனும் கைது செய்யப்பட்டிருப்பது தமிழனுக்கு நேர்ந்த மாபெரும் அவமானம் என்று கருத வேண்டும். ஈழத்திற்காக குரல் கொடுத்தால் அதுவும் நரிகள் விரும்பியபடி கொடுக்காவிட்டால் உடனே கைது என்றால் இந்த அயோக்கியத்தனத்துக்கு ராஜபக்ஷேயே மேல் என்று ஒத்துக் கொண்டு போய்விடலாமே? செத்துக் கொண்டிருக்கும் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுப்பதை விட தமிழ்நாட்டு தமிழனுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்டுவது காலத்தின் கட்டாயம். அதற்காகத்தான் சற்றே காரமான மொழியில் இந்தப் பதிவை எழுதுகிறோம்.
சட்டசபைக்கு ஐம்பது சீட்டும், பாராளுமன்றத்திற்க்கு பத்து சீட்டும் பெற்றுக்கொண்டு ஏதோ தமிழகமே இவர்களின் ஆணைக்கு கீழே செயல்படக் காத்து நிற்பதைப் போல பாவ்லா காட்டும் இந்த கு.நரிக் கட்சியை தமிழக மக்கள் உடனே தடை செய்யவேண்டும். இது ஈழத்தமிழருக்குச் செய்யவேண்டிய உதவியை விட அவசரமான கடமை. இல்லையேல் இந்த நரிகள் ஈழத்திற்காக இங்கயே ஒரு கல்லறையைக் கட்டி சோனியா காந்தியை வைத்து திறப்பு விழாவும் நடத்திவிடுவார்கள்.
i condemn this article. I want Police to arrest these people.
Hi gold ball… On what basis u condemn this article… Can you deny this article points with your facts…
The history mentioned is distorted.What is the origin of Dravidian parties?They were boot lickers to Englishmen.Also when freedom waqs about to be granted,they begged British to atleast keep Madras state under their control.Also it is allged that EVR was involved in looting Tilak memorial fund as a result of which he raised the bogey of Brahmin domination.The misinformation campaign about Rajaji’s education plan was that it favoured Varnashrama.But what Rajaji felt was rural people were not sending children to school because they felt that family income would go down.Only to make3 poor people come to school,he mentioned this.Ofcourse he did not properly communicate.Kamaraj was waiting for an oppotunity to topple him as Congree had become strong by then
Thanks to goldball,bagath and sunder ,thank you guys for your condemnation,atleast ther are somebody to give voice against these kind of street dogs who writes against our freedom fighters and great leaders like Kamaraj and Gandhi.This dog forgets onething that because oft the independance and freedom he his writing here freely his views though its against them .What a shame he copares the terorist dog Pirabagaran with world known ahimsa leaders like ghandi or kamaraj.
gold ball,
On what basis you are calling police to arrest these guys. Really i can’t understand what you are coming to say…. If you are not accepting any of the statements made by them means, you should argue with them or you should list your point of views about the leaders. But here your comment is totally expressed in stupid way
பகுத்தறிவற்ற/அறிவுகெட்ட/மானங்கெட்ட காங்கிரசு குள்ள நரிகள், அரசியல் பிச்சை பொறுக்கிகளுக்கு சரியான செருப்படி, மன்னிக்கவும்.செருப்பு நம்ககாக நாழும் தேய்ந்து நம் காலை காப்பாற்றுகிறது.
இவர்களை, அடிப்பதற்கு தகுதியான கேவலமான் பொருளை மக்கள் கண்டுபிடிக்கட்டும், தேர்தலில் இவர்களுடன் கூட்டு வைப்பவன் முதற்கொண்டு அத்தனை பேரையும் திருப்பி அடிக்கட்டும். (ரோசம் இருந்தால்!!!!!!!!!!!!!!!!!!!!!!!)
உள்ளக்கிடக்கையை சொற்களாக கொண்டு வந்த பதிவு.
Charles,
This article didn’t compare Mr.Kamaraj and Mr.Gandhi with Pirabhakaran, really I didn’t find single place in this article then how you are posting comment like this.
அருமையான பதிவு….
இந்த கதர் வேட்டி நரிகள் ஓட்டுக்காக வாரி வழங்கியுள்ள சலுகைகைகளும், சட்டபூர்வமான பாதுகாப்பும், இட ஒதுக்கீடும்…தான் இது போன்ற பதிவு வெளியிட , சத்யமூர்த்திபவனில் கல்லெறிய, சோனியா காந்தியை உத்தரப் பிரதேசத்தில் நுழைய விடாமல் தடுக்க என எல்லாவற்றுக்கும் மூலகாரணம்..தொடர்ந்து சொரணை வரும் வரை கல்லால், சொல்லால் அடியுங்கள்…நரிகள் சொரணை பெறட்டும்..எல்லாவற்றையும் திரும்பபெறட்டும்..
அய்யா கணவான்களே…
ஆங்கில தொரை, இவர்கள் போராடவில்லை என்றாலும் விட்டு போய் இருப்பான். இல்லை என்றாலும் தலைவன் சுபாசு போசு, அண்ணன் பகத் அவர்களின் போராட்டத்தில் ஆவாது நமக்கு விடியல் பிறந்து இருக்கும். இந்த கேடுகொட்டவர்களின் அதிகார மற்றும் அசையினால் தான் இந்த நாடு இன்னும் அடிமை பட்டுக்கிடக்கிறது.. பேச உரிமையில்லை.. Gold-ball எல்லம் பொலிசை ஏவுகிறார்.
காங்கிரசு கட்சி தமிழகத்தை பொறுத்தவரை ஒரு கோமாளி கட்சி…
சாதாரன கவுன்சிலர் கூட தனி கோஷ்டி நடத்தும் ஈனக்கட்சி.
அந்த கட்சியை விமர்சனம் செய்ய ஒரு பதிவையும் நேரத்தையும் வீணாக்கியதை வன்மையாக கன்னாபின்னாவென கண்டிக்கிறேன்
Yes
nanri vinavu,
antha soranai ketta kevelamana pulu pootha nathari naigalai serupala adikavendum, congress naygalai makkal adiche kollavendum. histori a nalla padikama sila naigal kandathai ellam elu tharanga , muttal
vinavu is the great
// சீமானின் பார்வையில் பல பழுதுகள் உள்ளன. என்றாலும் அப்படி இரசிப்பதற்கு உரிமை கிடையாதா என்ன? அவர் என்ன கொலைக் குற்றமா செய்து விட்டார்? கண்ட கஸ்மாலங்களுக்கெல்லாம் ரசிகர் என்ற பெயரில் பாலபிஷேகம் செய்யும் நாட்டில் பிரபாகரனைப் பற்றி பேசக்கூடாதா என்ன? //
மேற்சொன்ன கருத்தை தமிழகம் முழுதும் மேடை போட்டு பேச வேண்டும். மக்களுக்கு கருத்தும், காங்கிரசுக்கு கருமாதியும் நிறைவேற வழி பிறக்கும். அன்று ராஜீவ் அனுதாப அலையை ஆத்திரத்தோடு எதிர்த்து நீந்தியது போல் இன்று இந்த அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்தி கிளர்ந்தெழ வேண்டும்.
அறிந்தே அமைதி காக்கும்
தானைத் தலைவர்கள்…
அதனால் கிரிமினல்கள்…
அறிந்தும் அறியாமலும்
அமைதி காக்கும் தமிழக மக்கள்…
அதனால் குற்றவாளிகள்…
ஈழத்தின் பிணங்கள் எதிர்காலத்தில்
உங்கள் தூக்கத்தில்
உங்களை குற்றவாளிக் கூண்டில்
நிறுத்தும் பொழுது
உங்கள் முகத்தை எங்கே
வைத்துக் கொள்வீர்கள்?
பின்குறிப்பு:
//gold ball//
நல்ல பெயர்தான். பெயரின் இறுதியில் s மிஸ் ஆகியிருக்கிறது. திருத்தவும். 🙂
Vinavu rocks…!!! Keep going thozhargale..
ஐயா வினைவு அவர்களே,
முதலில் நான் உங்களை நாய் என்று விளித்ததற்கு என்னை மன்னிக்கவும், திவிரவாதத்தை ஆதரித்து அஹிம்சாவாதிகளை கேவலபடுத்துகிறிர்களே அந்த ஆத்திரத்தின் வெளிபாடுதான் அது.
ஐயா இங்கு எனக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று எவருமில்லை.தமிழக காங்கிரஸ்காரர்கள் ஒரு கோமாளிகள் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.நேரத்துக்கு தகுந்த மாதிரி இரண்டு திராவிட கட்சிகளுடன் கூட்டு வைத்துக்கொண்டு கும்மி அடிக்கும் கொமைளிகள் என்பது ஊரறிந்த விஷயம். அதைப்போல் சீமான் நல்ல தமிழ் பற்று உள்ளவர் என்பதும் தெரிந்ததே. அதேபோல தமிழ் என்ற ஒற்றை சொல்லை வைத்துகொண்டு அரசியல் நடத்தி கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் எந்த வகையிலும் சிறந்த கட்சிகள் இல்லை என்பதும் அறிந்ததே.அண்ணல் ஒரு நிச்சயம் ஐயா இந்தியாவில் காங்கிரசை விட்டால் சிறந்த (சுமாரான) ஐதாண்டு கால்ஆட்சியை தர வேறு எந்த கட்சியையாவது உங்களால் சிபார்சு செய்ய முடியுமா ? விடுதலை புலிகள் இலங்கையில் மட்டும்தான் விடுதலை போராளிகள் மற்றநாடுகளில் அவர்கள் கண்டிப்பாக திவிரவாதிகள்தான் அவர்களை ஆதரித்து பேசும் எவரும் தண்டிக்க படவேண்டியவர்கல்தான் ஆவேச்ச பேச்சில் தநிதமிழ்நாட்டை பற்றி பிதற்றினால் கைதுபன்னாமல் மாலை போடுவார்களா ?
ஒன்றை இருக்கும்போதே ஒருவன் தண்ணிதர மறுக்கிறான் ஒருவன் ஒக்கேனகளை சொந்தம் கொண்டாடுகிறான் இதில் தனிநாடு என்றால் சொல்லவே வேண்டியதில்லை .
விடுதலை புலிகள் ஒரு பாசிச இயக்கம் என்று நான் சொல்லவில்லை பத்மநாபா ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் ஸ்ரீதரன் சொல்கிறார்.சந்தேகம் என்றால் 23/11/2008 தேதியிட்ட தினமலரில் தன் வேதனையை கொட்டி திர்திருக்கிறார் படித்து பார்த்துகொள்ளவும்.விடுதலைபுலிகள் சமாதானம் பேசப்போன எந்த தலைவரையும் உரிருடன் விட்டதில்லை. அப்பாவி தமிழர்களின் பின்னாடி நின்று கொண்டு போர்புரிவதுதான் உங்கள் அகராதிகள் விரமா?பேச்சுவார்த்தை என்கிற
காலங்களில் அவர்கள் ஆயுதத்தை பலப்படுத்தி கொள்வார்கள்.ஜனநாயம் பேசும் அஹிம்சாவாதிகளை படுகொலை செய்வார்கள்.மக்களின் நிலையில் நின்று ஆக்க பூர்வமாக சிந்திப்பது அவர்கள் அகராதிகள் கிடையாது .பேச்சிவார்த்தை என்று ஒன்று இருந்தால்தானே சமாதானம் பேசுவதற்கு.
கடைசியாக இந்தியாவில் அழகே வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் சீமான் போன்ற அறிவாளிகளின் ஆவேச பேச்சால் அத்து குலைந்து விடாமல் இருந்தால் சரி.
திரு.சார்லசு அவர்களே, விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு இராணுவ இயக்கம், அது ஒரு அரசியல் இயக்கம் அல்ல. அதனால் மக்கள் விரும்பும் உண்மையான விடுதலைக்கு தடையாக இருக்கும், போலி போராளிகளை கலை எடுப்பட்கு என்பது உலகம் எங்கும் இருக்கும் மக்கள் போராளிகளின் மரபு. அது பற்றி உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை, ஏனெனில் நீங்கள் தினமலம் பத்திரிக்கையை படிக்கிறவர். ஆமா, புலிகள் சமாதானம் பேச சென்ற தலைவர்களைக் கொன்றார்கள் என்று எந்தப் பதிவில் நீங்கள் படித்தீர்கள்.நான் கேட்பது ஆதாரப்பூர்வ பதிவு. விடுதலைப்புலிகளை பற்றியும் அவர்களது சமாதான நடவடிக்கைப் பற்றியும் தெரிந்துக்கொள்ள ஆன்டன் பாலசிங்கம் எழுதிய “போரும் சமாதானமும்” என்ற நூலைப் படிக்கவும். மேலும் தமிழ்நாடு உன்றுப்பட்ட இந்தியாவினுல் இருப்பதனால் தான் எந்த உரிமைகளும் பக்கத்து மாநிலத்திடம் இருந்துக் கிடைப்பதில்லை. சர்வதேச நீர் உரிமைச் சட்டம் பற்றியும் சற்று அறிந்துக் கொள். புலிகளைப் பற்றிப் பேச ஒரு இந்திய நாய்களுக்கும் தகுதியும் உரிமையும் கிடையாது. விருப்பமிருந்தால், தைரியம் இருந்தால் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா? பதில் சொல்.நான் ஏற்பாடு செய்கிறேன் பொதுக் கூட்டத்திற்கு.
அருமையான பதிவு நண்பரே! புலிஎதிர்ப்புக்கு அதன் சூத்திரதாரிகளாலேயே அதை நியாயப்படுத்தி வாதாட முடியாதபோது, அவர்கள் அன்னக்கைகளுக்குமட்டும் எப்படி அதை நியாயப்படுத்தும் வக்கணையைக் பெற்றிருப்பார்கள், சும்மா எதையாவது பிதற்றி வைக்க வேண்டும் என்று செய்வார்கள், அவற்றை நாம் பெரிதுபடுத்த வேண்டியதில்லை.
நன்றி உங்கள் உணர்ச்சிபூர்வமான பதிவிற்க்கு நண்பரே. உங்களின் பணியும் மிக பெறுமதி வாய்ந்தது என்பதை உளப்பூரவமக நம்புகின்றோம் இந்தப்பணி தொடர வாழ்த்துகின்றேன்!
தலைவா இப்போது இருக்கும் நரிகளுக்கும் சுதந்திர தியாகி வேடம் போட்ட நரிகளுக்கும் கூட சம்பந்தம் கிடையாது.. அது இந்திய தேசிய நரிகள் இப்போது ஊளை இடுவது இந்திரா குடும்ப சொத்தான இந்திரா நரிகள்…
charles!!
You are a good loyalist dog for stupid Indian Congress party. How do u tell ///terorist dog Pirabagaran////. Did he rape your mom or sister. OR bombing in India. even in Srilankan civilian are not target. If he decide to make a big holocaust in Srilanka, he can but is not his target or Tamils. They need a state for live with independent or same rights in Srilanka . Still we don’t like to kill any one, but some time we have to kill for save my life.
இறையாண்மை என்ற போலித்தோற்றத்தின் பேயரால் எமது உரிமைகள் பறிபொவதை பார்த்துக் கொண்டிருக்க நாம் கேனைக் கிறுக்கர்கள் அல்ல. அதன் பெயரால் எமதின சகோதரி மானபாங்க படுத்தப்படும் போது எனக்கு எதற்க்கு வேண்டும் இலங்கை இறையாண்மை புத்தரை நாம் தூற்ற வேண்டி வந்ததுயாரால்…
அதே போல நல்ல அரசியற் தலைவர்களையும் தூற்ற வைத்து விட்டார்கள் தற்போதைய கழுசறை காங்கிரஷ் கதர்வேட்டி சொறிநாய்கள்.
I really respect Mr.Kamaraj and Mr.Gandhi . But nowadays congress waste
வினவு உன் பெயரை வெண்ணை என்று வைத்து கொள் சரியாக இருக்கும், ஏன்டா வெண்ணை, உனக்கு விடுதலி புலி தான் வேண்டும் என்றால் அங்கு போக வேண்டியது தானே , அதை விட்டு விட்டு எப பார்த்தாலும் இந்தியா , தமிழ்நாடு குறை சொலி கிட்டு போங்கடா அங்கே போயி புடுன்குங்கடா வெண்ணை
எஙளது வெண்ணையில் நிச்சயம் நெய் கிடைக்கும்..
உங்களது வெண்ணையை உருக்கினால்,இத்தாலி மூத்திரம்தான் வரும்!
வினவு நீங்கள் உண்ர்ச்சி வேகத்தில் பதிவிடுள்ளிர்கள் என்பது நன்றாகவே புலப்படுகிறது.முதலில் காந்தியை பற்றி நீங்கள் கூறியத்ற்க்கு என் கண்டனங்கள்..
சுதந்திரம் பெற்ற உடனேயே காங்கிரஸ் கட்சியை அவர் கலத்துவிடத் தான் சொன்னார்.
காமராஜர் இந்திய ஒற்றுமை என்ற பெயரில் ஏமாற்றபட்டார், அத்னால் பின் நாட்களில் அவர் பெரியாரை ஆதரித்ததும், பெரியார் இவரை ஆதரித்ததும் உலகம் அற்ந்த்தே. அதே சமயம் இறுதி நாட்களில் அவர் காங்கிரஸில் இருந்து ஒதுங்கிகொண்டார்..
ராஜிவ் எவ்வளவு மோசமானவாராக இருந்தாலும் சரி, பதவியில் இல்லதாபோது, ஒரு செய்தியின் கற்பனயை கொண்டு ராஜிவை கொலை ச்ய்த்தை ஆதரிக்க முடியாது.
ராஜிவ் கொலை பின்னர் இந்திய அரசியலை சார்ந்த ஏன் உலக அளவிலும் ஒரு வித கசப்புண்ர்ச்சிக்கு ஆளானதை ம்றுக்க முடியாது..இந்தியாவில் இப்பொதுள்ள நிலையில் மாற்று கட்சியில்லை, பஜகவை எதிர்க்க காங்கிரஸை ஆத்ரிக்க வேண்டியுள்ளது தவிர ..காங்கிரஸ் யாருக்கும் பிடித்த கட்சியில்லை….
இலங்கை பிரச்சனை இந்திர தவிர மீதி அனைவருமே தவறாகவே கையாண்டுள்ளனர்..இப்பொழுதுள்ள நிலையில் விடுதலைபுலிகலையும் குற்றம் சொல்லமுடியாது அது தனி கதை ஆனால் அதரிக்கவும் முடியாது…நீங்கள் சொல்லும் இதே கங்கிரஸ்ல் தான் த்மிழ் அருவி மணியன் போன்றவர்கள் ஈழத்தை ஆதரிப்பதும் அவர் கட்சியில் ஒதுக்கபடுவதும் யாருக்கும் தெரிவதில்லை..சோனியாவை பற்றி நீங்களே குறிபிட்டுவிட்டீர்கள்…
seeman
“சீமான் ஒரு ரசிகரைப்போல புலிகளையும், பிரபாகரனையும் ரசிப்பதில் எங்களுக்குக்கூட உடன்பாடு இல்லைதான். மேலும் ஈழத்தமிழரின் விடுதலை என்பது பிரபாகரனின் வீரத்தில் முடிந்து வைக்கப்பட்டுள்ளது என்றெல்லாம் மனமுருகி பேசும் சீமானின் பார்வையில் பல பழுதுகள் உள்ளன.”
and still they will not see this base of the article.
i feel that this article is about the shameful state of the congress party in the state and not about LTTE. some “tamils” just do not want to see clearly.
we need more posts from vinavu.
நண்பர் சார்லஸ் அவர்களே..
விடுதலைப் புலிகளின் போராட்ட முறையில் பல தவறுகள் உள்ளன.. இங்கு யாரும் அவர்களை ஆதரிக்கவும் இல்லை.. ஆனால் இதே விடுதலைப் புலிகளை இந்திரா காலத்தில் இந்திய உளவுத் துறை பயிற்சி கொடுத்து வளர்த்தே.. தமிழ் மக்களுக்காக போராடும் பல குழுக்களை அழித்து தன்னை மட்டுமே பெரும் சக்தியாக்க அவர்களுக்கு பயிற்சி அளித்து யார்? அடுத்த நாட்டின் உள் விவகாரங்களில் தலை இட்டு நாட்டாமை செய்ய இந்தியாவுக்கு உரிமை உண்டு… இங்கு காங்கிரஸ் கட்சியை ஆதரிப்போர் “ராஜ தந்திரிகள்” ஆனால் தமிழன் என்ற ஒரே காரணுத்துக்காக இனப் படுகொலையை மேற் கொள்ளும் ஒரு அரசிற்கு எதிராக தவறான முறையில் போராடும் ஒரு இயக்கத்தை பற்றி பேச இங்கு யாருக்கும் உரிமை இல்லை..
காங்கிரசை கோமாளிகள் என்று நீங்களே சொல்லிவிட்டு அந்த கோமாளிகளின் ஆட்சிதான் ஓரளவாவது சிறந்தது என்று கூறுவது.. பல வீடுகளில் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் எந்த வீட்டில் கிடைக்கும் எச்சில் சோறு சிறந்தது என்று கூறிவது போல் உள்ளது.. அவனுக்கு உழைத்து சாப்பிடும் உணவின் அருமை என்றும் தெரியாது …
இந்த உலகிற்கு இலக்கியம், இசை, பண்பாடு , கலாசாரம் என பல களஞ்சியங்களை வழங்கிய இந்த தமிழ் நாட்டில் ஒரு நேர்மையான கோமாளிகள் இல்லாத ஒரு அரசியல் கட்சிக்கு பஞ்சம்…? இல்லை இல்லை, எல்லா ஓட்டு பொறுக்கி கட்சிகளுக்கு மத்தியில் குறைவாய் பொறுக்குபவனுக்கு வாக்கு அளிக்கலாம் என்று உங்களைப் போன்ற மக்கள் நினைத்துக் கொண்டு இருக்கும் வரை இந்த பொறுக்கிகளும் கொளுத்து தின்று சோம்பேறிகளாக மக்கள் பணத்தை கொள்ளை அடித்து வளரவே செய்வர்….
Vinavu,
Goldball & sundar seem to be typical “convent educated”, THE HINDU subscribers ( both paper and thought!). They just mirror the “hatred” of dravidian movement on poor eelam tamils. (I would agree the methods adopted by PERIYAR in his times BUT I dont agree the hatred of D.K. etc towards BRAHMINS ..TODAY).
Though I DONT like india being split it is when I see such kind of people I feel India shud be split into some 20-25 nations AGAIN!…becas BRAHMINS are the ones MOST benefitted by the concept of INDIA.
We need to bring dalit and OBC unity ALLOVER india to defeat these people with the concept of INDIA itself!!..
I am of the opinion that RESERVATION shud be REDUCED over a period of time as AMBEDKAR felt..But atleast to quell the “thimir” of these people it SHUD be there FOREVER! (now reservation is completely politicised that it will NEVER be reduced.)
dailit + OBC constitute nearly 85% of the population….these people shud remember that..unless WE feel like reducing the reservation WE need not give these people ANYTHING…only thing is we need to VOTE carefully..
I too dont agree with LTTE on certain issues…but lets ask ourselves…WHERE IN THE WORLD DID AN INDEPENDENT STRUGLE HAPPEN WITHOUT EVEN A SINGLE ATROCITY?..Russia..China..anywhere?
I would even AGREE NEHRU as good leader…BUT I would NEVER agree GANDHI as MAHATMA!!!…He was very CUNNING (this even OSHO said!)..He worked AGAINST Netaji….CONGRESS people talk as tho GANDHI got us independence through AHIMSA…if so…can anyone explain WHY MOST COUNTRIES GOT INDEPENDENCE from 1945-1955??!!!…GANDHI “struggled” for WHOLE WORLD>>??…”MAhatma” brand is being used by CONGRESS for SALE!!..
Periyar is more HONEST than GANDHI…tho he had “not so peaceful” methods…Periyar was OPEN..he had GUTS to call tamils as “KAATTAMIRANDI”s sitting in Tamilnadu….GANDHI was CUNNING baniya…nothing more…
and RAJIV GANDHI was not even CUNNING…he sent IPKF to coverup BOFORS…he RELIED totally on his ADVISORS…people like ROMESH BHANDARI and DIXIT boasted that Indian army will FINISH LTTE in 3 DAYS….it took FOUR YEARS.. SHAME for SECOND LARGEST ARMY in the world!!….in short RAJIV was an IDIOT…and INNOCENT people around him USED him!!!..
Starting from Indira..rajiv..todays RAHUL…who in that family excelled in SCHOOLS…..?..
can anyone deny the CRUELTY in these words of RAJIV….
“WHEN A BIG TREE FALLS THE EARTH SHAKES A BIT”
Mr.”AGNI PARVAI”….WHATS your opinion on the atrocities commited by IPKF on EELAM TAMILS?..
Getting raped by Indian jawan is SACRED?…
ok. on GANDHI…DID you read articles by supporters of NETAJI..?..please read the interview by his DAUGHTER on REDIFF…see what she has to say on GANDHI…friend…U are worshipping a false god!!..
also..explain WHY thrid rate politicians got BHARAT RATNA before NETAJI…
I would say if NETAJI had “eliminated” so called moderates in Congress he would have had a better future (and so wud india have!)…regarding that “ELIMINATION”…may be PRABAKARAN learnt a LESSON from NETAJI example..thats why he “eliminates” so called “amaidhi purakkal”…
note: EELAM struggle was peaceful until mid 70s..WHAT DID SO CALLED GANDHIANS achieve??..
நண்பரே மீண்டு உண்ர்ச்சியின் வேகத்தில் பேசுகிறீர்கள்..
நான் அமைதிபடையை ஆதரிக்கவில்லை , இந்தியனாக அமைதிபடை செய்தமை தவறு..மீண்டும் என் கருத்து எந்த தவறுக்கும் உயிர்பலி தீர்வாகது.
சிங்களவன் தமிழனை கொன்றான், தமிழன் சிங்கள்வனை கொன்றான், சிங்களவன் தமிழனை கொன்றான், தமிழன் சிங்கள்வனை கொன்றான்…. தீவிரவாதம் என்றால் இது தொடரும்…..
காந்தியின் அஹிம்சை எளிமையானது, ஒருவன் உங்களை தக்கும் பொழுது அந்த வலியை ஏற்றுக்கொள்வது மூலம் நிமிர்ந்து உங்கள் கருத்தில் உறுயுதியுடன் நின்று அவனை வெட்கபட செய்வது..இதற்க்கு நெஞசில் உரமும் தைரியமும் வேண்டும்…திலிபனை மறந்துவிட்டீரா…
நான் முதலிலேயே சொன்னதுபோல் இந்திர காந்தியை தவிர இலங்கை பிரச்சனையை லவகமாக யாரும் கையாலவில்லை..ஆனால் அவர் கொல்லப்பட்டுவிட்டர்..
ஒருவனை கொல்லுபவனுக்கு, அவன் குடும்பத்தில் நடந்த கொலைகளை பற்றி பேசமுடியாது, யாரும் கேட்கவும் மாட்டர்.
விடுதலை புலிகள் ஆரம்பத்தில் தன் இனம் அழிய கூடாதென தற்காப்பாக போர் புரிந்தனர், அனைவரும் ஆதரித்தோம், அதையே தான் யாசர் அராஃபட் செய்தார் , பின்பு உலக கவனம் பெற்றதும் அரசியல்வதியாகி அமைதி தேடினார்..
இஙகு என்ன நடக்கிறது, விடுதலை புலிகள் தற்க்கத்தனர், உலக கவனம் பெற்றனர், அடுத்து..தவறு அங்கே தான்.மோசமான நாடாக கருதப்படும் அமெரிக்கவின் ஹிலாரி ஈழத்தை ஆதரிக்கிறார்.. போதும் அரசியல் ஞனத்துடன் அமைதியை நாடும் ஒருவர் ஈழத்து சார்பில் உலகம் முழுவதும் ஆதர்வு திரட்டினாலே போதும்..அதை தான் இந்திய செய்தது, காஸ்ட்ரோ செய்த்து, லெனின் செய்த்து…கவன ஈர்ப்பு, பிரச்சனையை புரிய வைத்தல் வேண்டியதை நிறை வேற்றிக்கொள்ளுதல்……இதன் பெயர் அரசியல்….
காந்தி மனிதர் தான் மஹத்மாயில்லை, ஆனால் அவர் கொடுத்த பாணி நிலையானது தோற்க்காது..எத்தனை போர், ரத்தம் சாதிக்க முடியாத்தையும் அது சாதிக்கும்….
உங்கள் கருத்திற்க்கு நான் மாறுபடுகிறேன், நீங்கள் என்னை கத்தியைக்கொண்டு குத்தலாம், உங்களை எதிர்க்காமல் என் கருத்தில் உறுதியுடன், அதுத்த குத்திர்க்கு தாயாரவேன், நீங்கள் என்னை கொல்லலாம், என் கருத்தையல்ல..என் ரத்ததைக் கண்டு நீங்கள் தலை குனிவீர்களேயானல், என் கருத்தை ஏற்றுக் கொள்வீர்கள்..இது தான் அஹிம்சை…அந்த காந்தி என்ன சொன்னார் தெரியுமா, ஹிட்டலரின் கொடுங்கோளுக்கு போர் தீர்வு என்றார்..ஒரு கை ஓசை எழுப்பது ஒற்றுமை வேண்டும்… இலங்கை அரசை அஹிம்சையாக எதிர்க்க முடியவில்லையா போர் சரி, ஆனால் ஒற்றுமை வேண்டும் இந்தியா மதிரியான ஏதொ ஒரு நாட்டின் ஆதரவு பலத்தை தரும்….தேவை புத்திசாலி தனமான, அகங்காரம் இல்லத தலமை….புரிகிறதா…எந்த பிரச்சனைக்கும் தீர்வுண்டு..திர்வை யோசிக்க நிதனாமான் தெளிவான மனது வேண்டும், உணர்சிச்வச படுதல் கெடுத்துவிடும்…..
இந்தியவிற்க்கு பாகிஸ்த்தான் மீது போர் தொடுக்க நேரமாகாது, ஆனால் பாகிஸ்தானுக்கு உலகளவிய அழுத்தை இந்தய கொடுக்கிறது..இது தான் diplomatic .. மும்பையில் உயிர் பலியாகவிலலிய உண்ர்ச்சிவச படாமல் உலக கவனம் பெருதல், நாடுகளின் ஆதரவை பெருதல் புத்திசாலித்ன்மாக பாகிஸ்த்தனுக்கு அழுத்தை கொடுத்தல்…. போர் இல்லை, ரத்தமில்லை..தெவைபட்டால் தான் இவையெல்லாம்.. இது காந்தியம், அரசியல்……உயிர்கள்….
Vinavu,
This belittling of freedom fighters is incredible – do you actually think that the freedom fight is a waste? Would you have preferred that India stay a British colony?
How does the fact that Congress today has moved away from their ideals justify belittling those ideals? So has every party – do you think DK stays true to Periyar’s ideals? For god’s sake, Veeramani is against the nationalization of Periyar’s writings! Do you think Kalaignar has stayed true to the ideals of DMK? What about the communists?
Attack on Seeman is to be condemned. I expect all right thinking people to condemn it. But Rajiv’s assassination is a good thing? In other words, all attacks on people who don’t think like you are justified. The Mumbai attacks are justified because there is no alternative left for Indian muslims other than depending on Pakistanis to come into India and gun down the rich at Taj and the poor and the middle class in a railway terminus. Rajiv Gandhi’s assassination is justified because of IPKF. If Rajiv’s assassination is revenge, why can’t Congress “kulla naris” feel the need to take revenge for Rajiv? It is OK for Prabhakaran to take revenge, but it is not ok for Congress “kulla naris”? The fact that Rajiv is not a saint is irrelevant! If it were relevant, please explain why Prabhakaran is a saint despite killing Sri sabarathanam, Amirthalingam and scores of fellow Tamil fighters and why it is not justifiable to take revenge against him? If you disagree with someone, it is justifiable to kill them? It is ok for some people to take revenge, but not all? Please explain your theoretical framework first!
அனலாக எழுதியிருக்கின்றீர்கள்.
Siva sir,
I never say Prabakaran as a rapist but he is a terrorrist, please turn the dictionary and find the difference; He is a person who is capable of killing his own brothers of tamil eelam ;The great Padpanaaba’s family massacre is a top most example. Rajiv gandhi’s assasination in tamilnadu is a second example.I say siva , if any indian or tamilian makes a scratch to any one of his soldiers they are finished but the only race in the world who supports a man who has killed a leader in our own soil is tamilians.
once I was a great supporter of prabakaran I did strikes in the 80’s for the support of Tamil Eelam but now his politics is like our vijaikanth politics and i swear siva Iam not a supporter of congress As somebody said here that we accept congress as a standby to BJP which is religious oriented,,, I again say that I won’t support terrorism,,,
If you do not remove this article within another 12 hours, I will make you face severe legal charges. It is up to you to decide though.
Arun, Velachey, Chennai
/* If you do not remove this article within another 12 hours, I will make you face severe legal charges. It is up to you to decide though.*/
இது மாதிரி நிறைய கிறுக்கனுங்க இருக்கானுக, பதில் சொல்ல தெரியாட்டி இப்படிதான் மிரட்டுவானுங்க. இப்பவெல்லாம் பேசினாலே உள்ள பிடிச்சி போட்லாம் அப்படின்னு நினைக்கிறானுங்க. போங்கடா புறம்போக்கு காங்கிரஸ் பரதேசிங்களா.
as I know the congress party its a spineless party.a selfish party have no thought about public..all they wanted is chair or a place nearby or down to chair…ts 100% true….its a definite example how a human being not to survive….I feel sad to say that…but i hope all will change in the due course atleast….or we try to change as in USA now…
mr. charles u have to understand da difference b/w terrorism and freedom fight….there is blood shed on both cases…when u look closely u will feel the difference…u will feel the value of freedom when ur forced to eat food in the toilet ……when ur kinship kidnapped,raped or murdered……..try to visualize from other side as well……
why? let them speak..let them share…let them lead to a revolution……?bcos truth is triump
இது கலகத்தில்
1.குமரன் சொல்வதென்னவென்றால்:
10:39 மு.பகல் இல் டிசம்பர் 22, 2008 திருத்து
சீமான், அமீர்,வைகோ போன்றோரை கைது செய்த கலைஞர் திருமாவளவனை கைது செய்யாத மர்மத்தை நீங்கள் ஏன் சொல்ல வில்லை…??? கலைஞர் போன்றே உங்களுக்கும் திராணியில்லையா..?? துப்பு இல்லையா..?? துணிவு இல்லையா..???
போங்கயா நீங்களும் உங்க சனநாயகமும்…புரட்சியும்…புடலங்காயும்..
இது வினவு-ல்
2.குமரன், மேல் டிசம்பர் 22nd, 2008 இல் 16:43 சொன்னார்:
அருமையான பதிவு….
இந்த கதர் வேட்டி நரிகள் ஓட்டுக்காக வாரி வழங்கியுள்ள சலுகைகைகளும், சட்டபூர்வமான பாதுகாப்பும், இட ஒதுக்கீடும்…தான் இது போன்ற பதிவு வெளியிட , சத்யமூர்த்திபவனில் கல்லெறிய, சோனியா காந்தியை உத்தரப் பிரதேசத்தில் நுழைய விடாமல் தடுக்க என எல்லாவற்றுக்கும் மூலகாரணம்..தொடர்ந்து சொரணை வரும் வரை கல்லால், சொல்லால் அடியுங்கள்…நரிகள் சொரணை பெறட்டும்..எல்லாவற்றையும் திரும்பபெறட்டும்..
யாருங்க அது டபுள் ஆக்சனில் பட்டய கிளப்பறது
இத படிக்கும் போது எனக்கு பழைய ம.க.இ.க பாட்டு ஞாபகம் வருது…
காங்கிரஸ் என்றொரு க்ட்சி
அதன் கருமாதி எழவுக்கு காலம் வந்தாச்சி
காங்கிரஸ் என்றொரு க்ட்சி
(ந்நதவனத்தில் ஒர் ஆண்டி சந்த்ததில் படிக்கவும்)
Hello,While I appreciate your decent reply still you have avoided answering my questions.If EVR was a real patriot,he would have only avoided Congress and not sided with British by joining Justice party.Why did he beg not to give freedom to India?Regarding Rajaji,it was he who worked for Harijan upliftment much before EVR.You are again distoring his plan.Everybody including Brahmins were supposed to learn a vocation.Since EVR,DMK twisted it,you are writing out of ignorance.Also as a passing remark you have mentioned about H.H.Jayendrasarasvathi against whom Police is still unable to give concrete evidence.This is typically a dravidian tactic to spread canards as CNA and MK did against Kamaraj,Bhaktavatsalam etc.,This will not work.To sim up the dravidian movement it was only a buch of hypocrites and self servers.Why did they prevent TN Seshan from revealig the secret of CNA obtaining monet from CIA and start Hindi agitation?
கும்மியடிக்க வந்த என்ன இப்படி கும்முறது நியாமா? ஜனங்களே போதும் விட்டுங்க 🙁
///
Do see my post on questions that you have raised in a differnet context at
http://koottanchoru.wordpress.com/2008/12/22/பார்ப்பனர்கள்-பார்ப்பனீ
///
r.v from kalagam blog
உங்கள் பதிவை நான் படித்தேன் ஆனால் அதெல்லாம் இருக்கட்டும் R.V சார் முதலில் கீழ் கொடுக்கபட்டுள்ள வினவு காடுரையின் வரிகளுக்கு பதில் சொல்லுங்கள்.நீங்கள் சாதி பார்க்காதது பற்றிய உங்களுடைய மற்ற விளக்கங்களுக்கெல்லாம் பிறகு போகலாம்,அதற்கு முன்னால் நான் சாதி பார்ப்பதில்லை என்பதை நீங்களே சொல்லிக்கொள்ள முடியாது என்பதோடு வேறு யாரும் கூட அப்படி தனக்கு தானே யோக்கியன் பட்டம் வழங்கிக்கொள்ளவும் முடியாது ஏனென்றால் இங்கு மதிப்பிற்குறியது அழகான வார்த்தைகள் அல்ல சாதியத்திற்கெதிரான நடை முறை அதில் அவர் என்ன செய்தார் என்பது தான் இங்கே முக்கியம்.
பின்குறிப்பு:
நீங்கள் மட்டும் தான் பார்ப்பனரா என்ன ?
அப்படியே இருந்தாலும் என்ன அது பெரிய உலக அதிசயமா,அதை எதற்கு சொல்ல வேண்டும்,அதுவும் நான் பார்க்க நிங்கள் பலமுறை இதை சொல்லிவிட்டீர்கள். அந்த இடத்திலிருந்து கொண்டு சாதி பற்றிய உங்கள் கருணை பார்வையை ஒடுக்கப்பட்டவர்கள் மீது பொழிவது மேலும் அவமானம் செய்வதாகும்.
நான் இங்கே என்ன சாதி என்பதை உங்களை போல சொல்லிக்கொள்ள எனக்கு விருப்பமில்லை,வெட்கமாய் இருக்கிறது.
//////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
“என்னை தேவர் என்றோ, படையாச்சி என்றோ, பிராமணன் என்றோ நான் கருதிக்கொள்வது இல்லை” என்பது உண்மையானால், தேவர் சாதியையும் பார்ப்பன சாதியையும் இடித்துரைக்கும்போது, அந்தச் சாதியினரின் வரலாற்றுக் குற்றங்களையும், நிகழ்காலக் குற்றங்களையும் சாடும்போது, எனக்கு ஏன் தசையாட வேண்டும்? சாதி அடையாளம் இழிவானது என்று புரிந்து அதனைத் துறந்தவனுக்கு அந்த அடையாளத்தின் பால் ஏன் அனுதாபம் பிறக்க வேண்டும்?
நல்லெண்ணம் கொண்டோராகவும், சாதி உணர்வு இல்லாதவர்களாகவும் தங்களைக் கருதிக் கொள்பவர்கள் இதனைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும். “எம்பேரு கோபாலகிருஷ்ணன்” என்று நீங்கள் சொல்லி, ஊர்க்கார பயக ஒத்துக் கொள்ளாமல் “சப்பாணி” என்று சொன்னால் கோபப்படுவதற்கு, இது ஒரு தனிப்பட்ட மனிதனின் பெயர் சம்மந்தப்பட்ட விவகாரம் இல்லையே. அவனுடைய சமூக நடத்தை தொடர்பான பிரச்சினையாயிற்றே!
ஆனால், “என்னைப் பொருத்தவரை நான் திருடன் இல்லை, பொறுக்கி இல்லை” என்று கூறி ஒதுங்கிக் கொள்ளும்படியான தனிநபரின் ஒழுக்கம் குறித்த விவகாரமல்ல சாதி.
அது மாத்திரமல்ல, “நான் திருடன் இல்லை என்றால், திருடர்களை உதைப்பதற்கு நான் ஏன் முன்வருவதில்லை? என் மாமனோ மச்சானோ சொந்தக்காரனோ அந்தக் குற்றத்தை இழைக்கும்போது அதை எதிர்க்கவிடாமல் என்னை மவுனமாக இருக்கச் செய்வது எது?”
////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
sundar,
when did Periyar say he is a (indian) Patriot??!!
He was with British…we APPRECIATE that!!..for periyar british rule was better than brahmin rule( look..im not against brahmins NOW..but periyars action is understandable in HIS times..i dont support DK NOW..they are beating dead snake..)
Who arrested Jayendrasarasvathi ?..is it US or YOU (hope u wud be happy now..i have interacted with many brahmins..a minority of them is hell bent on FIGHTING with ppl who have softcorner for periyar..i too dont agree 100% with periyar..i wud never forgive him for initial reluctance to support anti-hindi movement)
Dear friends,
i am going to make following requets:
from reading all your comments i understand,
1) some people confuced with our strugle with tamil nadu politics. please dont mixed and dont make gap between some section of tamils.
2) its hard to understand our real postions for those who have not face problem that we are facing every day. we accept some times we are using terroist tactist in war. that is inivitable when facing war with not only sri lankan government, but also from various other government. please understand that we dont have any opporunity to reavel the truth to world about our real situation.
because all media reproducing what government of sri lanka saying.
3) there is few media reporting in such a way to miss guide tamilnadu people. good example is thinamalar published article (EPRLF) which some body mention. please check anybody from sri lankan tamil (ie eelam tamil) wheather they know such a person is in active politics??
so please dont belive by looking one article here and there. but i know “perspective of mind”. so people who allready decided to oppose perabaharan read such type of article.
4) please understand difficulty of uniting all people under one umberlla. anybody can buy few peoples by paying lots of money. this is common to all world. u decide based on people support.
thanks
EVR was not with British.My charge is that when it was alleged that he swindled Tilak memorial funds and when that was sought to be buried by Gandhi,EVR raised the bogey of Brahmin discrimination and quit the Congress.It was not out of his pricipled support the he supported the British.It was due to his turncoat nature which was evident all through his life whenever he found convenient he changed sides at the drop of a hat.Priciples be blowed.He cared for nothing except money
sukran enpavan guru,
If you had actually read my post, then there would be no need for your “pin-kurippu” asking why I keep saying which caste I am born in. It is specifically because people like you don’t actually read what I write, but form their opinions based on which caste I am born in. Did you really read the post? En summa kathai vidareenga?
Who should say what I think and feel? You? This is too absurd for words.
You say that deeds are more important than words. I completely agree. You should practice what you preach. Please let me know about your deeds (and Vinavu’s deeds, if any) against casteism.
My deeds: I haven’t behaved in a casteist way so far. I haven’t done anything else. I haven’t led or participated movements.
On Vinavu’s comments: I consider them stupid beyond words. There are no group crimes. Hitler is guilty of genocide. Thousands of Nazis were individually guilty. Germans are not guilty. The Germans today are don’t even have any passive guilt due to non-action. Crimes are committed by individuals. When I am identified as a parppanan by society (and you and Vinavu), and then I am told that all parappanas are guilty because Manu laid down some laws, what do you expect me to say? Yes, that I am to blamed for Manu’s mistakes?
It is Vinavu (and you) who should change their language. You cannot have it both ways – you cannot identify a group as parppanas due to factors beyond their control, and then say that this group is guilty of their forefather’s faults. Individuals make mistakes; groups don’t. Most terrorist incidents all over the world today have muslims behind them. If you blame all muslims, I would fight you. Most attacks on Dalits in TN today are from people belonging to the thevar caste. If you blame all people belonging to the thevar caste, I would fight you. Read the post! I wouldn’t have to say the same thing again and again.
Every person in the world today probably has an ancestor who killed, robbed etc. So everyone should feel guilty?
In a nutshell, if you want to blame my children because my great grandfather probably practiced untouchability, my response wouldn’t be printable.
My “pin-kurippu” to the previous post: The one time I forgot to mention that I was born in the Iyer caste while replying to a post by Dr. Rudhran, he promptly came back speculating about my genotype.
Sundar,
you are mirroring the hatred shown by Dravidian movement.
Periyars family was very rich in erode. He need not steal from somewhere to become rich. anyway I would study more on ur “Tilak memorial fund thiruttu” accusation….apart from this WHAT OTHER charges u have against him?
1–“sundar, மேல் டிசம்பர் 23rd, 2008 இல் 10:52 சொன்னார்:
Hello,While I appreciate your decent reply still you have avoided answering my questions.If EVR was a real patriot,he would have only avoided Congress and not sided with British by joining Justice party”
2…sundar, மேல் டிசம்பர் 23rd, 2008 இல் 14:09 சொன்னார்:
EVR was not with British
Sundar 1&2 seem to be CONTRADICTORY…kindly clarify your thoughts
if u can give a more EVIDENCE on PEriyars corruptedness I wud be happy to revise my views on him…for me “Tilak thiruttu” seems to be very flimsy evidence
Periyar sitting in Tamilnadu…being a leader of tamils..being a kannadiga..said “tamils are kaattumirandis”…it shows his courage and OPENNESS.. …that is called INTELECTUAL HONESTY…according to me GANDHI did not have even 50% of this honesty…he was MANIPULATIVE…
did u read the interview of NETAJIs daughter on REDIFF?
If not for 2nd WORLD WAR ..BRITISH wud have ruled us FOREVER….non-violence is “noble principle” but It wouldnt give us INDEPENDENCE…we got independence as second world war GIFT…thats y we are NOT able to UNDERSTAND the struggle of EELAM TAMILS!!!…
I know you wont change any of your stand…im just making sincere effort to know more abt periyar ,…gandhi etc…for me its very hard to accept gandhi as MAHATMA…
பெரியார் ஊழல் செய்தாராம்…!
நல்ல தமாஷ்…!
vinavu,
The messages have deviated from the topic of discussion (congress..seeman etc)..can you bring it back to the rails?
my “sorry”s for deviations!!
I have ONE VOTE I will NEVER vote for CONGRESS (and its allies).
BUT…we DONT have good alternative in center…IF BJP is sincere on EELAM I am ready to VOTE for it..(its very hard to even imagine voting for BJP but what alternative we have?..communists dont have a NATIONAL alliance)
ராஜிவ் படுகொலை இன்று வாய் கிழிய பேசும் தமிழ் நாட்டு முக்கிய காங்கிரசு தலைவர்கள் ஒருவர் கூட ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட சமயம் இல்லாத மர்மமென்ன?
சிலருகாக ….
இராணுவம்/தீவிரவாதம் இவற்றிற்கு காந்தியின் அஹிம்சை ஒத்துவராது
அஹிம்சை என்பது அடுத்தவனை அடிவாங்க வைப்பதா? == தெரிந்தால் சொல்லுக
நம் சுதந்திரம் காந்தியின் பின் நின்று உயிர் நீத்த அனைத்து இந்திய தியாகிகள், காந்தியின் கருத்திற்கு எதிர் நின்று உயிர் நீத்த தீவிரவாத தியாகிகள், உலகச் சூழ்நிலை மற்றும் …..
அண்டை நாட்டின் உள் விவகாரத்தில் தலையிடுதல் தவறு, சரி ஆயுதம் கொடுப்பது கால்விடுடவதா? அதன் இராணுவத்திற்கு கோடியாக உதவி செய்வது கைவிடுவதா?
//வெண்ணை// == இருக்கும் வரை இந்தியன் இறக்கும் போது தமிழன், இந்திய தமிழா… மீனும் தமிழ்… தவறு இந்திய இரத்தம் தோய்ந்து வருவது கண்டும் கோபம் வருகிறதா இல்லை இலங்கை போவாயா?
இந்தியஇராணுவம் இந்திய பெண்னை கற்பழித்து கொன்றாலும் இறையாண்மை பேச வேண்டும்?
இந்தியஇராணுவம் ஈழப் பெண்னை கற்பழித்து கொன்றாலும் இறையாண்மை பேச வேண்டும்?? கருத்து கூட சொல்ல கூடாது என்பது இறையாண்மையா
//ராஜிவை கொலை செய்ததை ஆதரிக்க முடியாது//. ஆனால் குழந்தைகள், பொதுமக்கள் கொல்லப் படுவதை எதிர்கமுடியாதா?
தொடரும்…
R.V சார் நான் கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் நீங்கள் உங்கள் இக்ஷ்ட்டப்படி எதை வேண்டுமானாலும் சொல்லிக்கொண்டு போகலாம் அது தான் இங்கு அனைவரும் கடைபிடிக்கும் தந்திரம். நீங்கள் அது போல ஒருமுறை சொன்னீர்களா ஒன்பது முறை சொன்னீர்களா என்பதல்ல மையமான பிரச்சனை,மேலும் நான் போய் அதை இப்போது எண்ணிக்கொண்டிருக்கவும் முடியாது,அது இந்த விவாதத்திற்கு தேவையுமற்றது இன்னும் புரியும்படி சொன்னால் எத்தனை முறை சொன்னால என்ன அது தவறு தான், நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தது அதை அல்ல உண்மையை,தூய உண்மையை ஆனால் அது உங்களிடம் இல்லை போலும்.இணைய உலகில் இந்திய ஜனநாயகம் எப்பேர்பட்டது என்பதை நன்றாகவே தரிசிக்க முடிகிறது.
நல்லது நான் இத்துடன் இதை முடித்துக்கொள்கிறேன்
/////
இளங்கோ,
விவாதம் திசை திரும்புகிறது என்று வருத்தப்படவேண்டும். விசயமே இல்லாமல் அரட்டைக்காக கும்மியடிப்பதற்குப் பதில் ஏதோ ஒரு விவாதத்தை ஆழமாக உரையாடுவதில் தவறில்லையே? மற்றப்படி கட்டுரை தொடர்பாக விவாதித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்பதை ஏற்கிறோம்.
//////
உண்மை தோழரே,
நான் அதை இங்கு கொண்டு வந்து போட்டதற்கு காரணமே அம்பலமாக்கத்தான்
நான் பொருளுக்கு சம்பந்தமற்ற இந்த விவாதத்திலிருந்து முன்னரே விலகிவிட்டேன்
அன்னக்காவடி காங்கிரசு நரிகளுக்கு சிறப்பான செருப்படி…. congress assholes are just clowns among tamilians… Request to congress cock suckers… ” If you ppl just annoyed when others disgraced India’s freedom fighters, then why the hell you talk nonsense about eelam’s freedom fighters”… Think as a tamilian first then think as an Indian… This is a problem of tamil diaspora. There is no reason for us to think India in it… So if you are an indian please don’t tarnish the tamils’ efforts and their struggle… Tamils experienced huge lost and disgrace not only in Srilanka but also in your beloved India..