privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !

இதயத்தை உலுக்கும் ஐ.டி. கதைகள் !

-

அன்பார்ந்த நண்பர்களே,

ஐ.டி துறையின் ஏற்றத்தாழ்வான வளர்ச்சிக்கும், வீழ்ச்சிக்கும் அது அமெரிக்க ஏகாதிபத்திய நலனோடு பின்னப்பட்டிருக்கிறது என்பதை விளக்கியும், புரியவைக்கவும் வினவில் பல கட்டுரைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இதை பலர் பொதுவில் புரிந்து கொண்டாலும் ஐ.டி துறையில் இருக்கும் நண்பர்கள் பிரச்சினையின் பாரிய தன்மையை பொதுவில் இல்லையென்றே கருதுகிறார்கள். எமக்கு வந்த பின்னூட்டங்களிலிருந்து இதை உணர முடிகிறது.

தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த நிறுவனங்களிலிருந்து ஆட்குறைப்பும், சம்பளக் குறைப்பும், இப்போதுதான் நிகழ்கிறது என்றால் இந்த போக்கு உற்பத்தி சார்ந்த தொழில்துறைகளுக்கு முன்பே நடந்து வருகிறது. பின்னி ஆலை, ஸ்டாண்டர்டு மோட்டார் ஆலை போன்ற தொழிற்சாலைகள் மூடப்பட்டு ஓரளவுக்கு நடுத்தர வர்க்க ஊதியம் வாங்கி வந்த பல நூறு தொழிலாளர்கள் இன்று தமது வாழ்க்கைக்காக உதிரி வேலை செய்து போராடி வருகிறார்கள். இவர்களில் சிலர் தற்கொலை செய்து கொண்டதும் உண்டு. இப்போது அமெரிக்க பின்னடைவு காரணமாக இந்தியாவின் தொழிற்சாலைகளிலும் ஆட்குறைப்பும், கதவடைப்பும் நடந்து வருகிறது.ஆண்டுதோறும் வெளிநாடுகளுக்கு அதிக கார்கள் ஏற்றுமதி செய்து வந்த ஹுண்டாய் நிறுவனமே பாதி நாட்களுக்கு மட்டும் இயங்கி வருகிறது என்றால் மற்ற தொழிற்சாலைகளின் நிலைமையை புரிந்து கொள்ளலாம்.

தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் உற்பத்தி சார்ந்த தொழிலாளர்களின் ஊதியத்தை விட பலமடங்கு அதிகம் பெறுகிறார்கள் என்பதும் அதற்கேற்றபடி அவர்களது வாழ்க்கைத்தரம் மாறியிருப்பதும் எவரும் மறுக்க முடியாத ஒன்று. இருப்பினும் அமெரிக்காவோடு பிணைக்கப்பட்டிருக்கும் அவர்களது விதி என்றுமே கழுத்திற்கு மேல் தொங்கக்கூடிய கத்தி போல அபாயகரமாக இருக்கிறது என்பதுதான் உண்மை. சுருங்கக்கூறின் அவர்களது வாழ்க்கை ஓரிரவில் தலைகீழாக மாறலாம். ஆடம்பரமும், நுகரவுக் கலாச்சாரமும் துறந்தே தீரவேண்டுமெனவும் நிலைமை வரலாம்.அப்படி வந்து விட்டது என்பதைத்தான் கீழ்க்கண்ட உண்மைக்கதைகள் எடுத்தியம்புகின்றன.இது மேல்தட்டு நடுத்தரவர்க்கத்தின் சோகம் என்றாலும் அவர்களையும் ஒரு தொழிலாளியின் நிலைமைக்கு காலம் இறக்கியிருக்கிறது.பதிவர் கிறுக்குப்பையன் தளத்திலுருந்து இந்தக் கதைகளின் சில பகுதிகளை இங்கே பதிவு செய்கிறோம்.நாட்டு நடப்பும், அரசியலும் கிஞ்சித்தும் அறியாத இந்த அப்பாவிகளின் கதைகள் பொதுவில் எவரையும் சோகம் கொள்ளவைக்கும். சோகம் எந்த அளவுக்கு இதயத்தை ஊடுறுகிறோதோ அந்த அளவு அரசியல் ரீதியாக அதைப் புரிந்து கொள்வதும் அதிலிருந்து மீள்வதும் சாத்தியம்தான். முதலில் கதைகளைப்படியுங்கள். தீர்வை கட்டுரையின் இறுதியில் பார்க்கலாம்.

சினிமாக்களில் வருவதுபோல ஒரே இரவில் பலரது வாழ்க்கையை உயர்த்திப் போட்டஅதே ஐ.டி. வேலை, இன்றும் ஒரே நாளில் அவர்கள் வாழ்க்கையை நிலைகுலையவைத்திருக்கிறது. உலகப் பொருளாதார வீழ்ச்சி, சுமார் 7,000 கோடிஅளவில் சத்யம் சாஃப்ட்வேர் நிறுவனத்தில் ஊழல்.. ‘விப்ரோ’ நிறுவனத்துக்குக்கொடுத்து வந்த வேலையை நிறுத்திக் கொண்ட உலக வங்கி.. என்று ஊடகங்களில்வரும் தகவல் கள் இப்போதுதான் பயமுறுத்து கின்றன.. ஆனால், இந்திய தகவல்தொழில் நுட்பத் துறையின் தலைநகரமான பெங்களூருவில், சில மாதங்களுக்குமுன்பேயே துவங்கி விட்டிருக்கிறது இந்த ஐ.டி வீழ்ச்சி!

‘கடந்த நான்குமாதங்களில் மட்டும் சிறிதும் பெரிதுமாக சுமார் முந்நூறு ஐ.டி நிறுவனங்கள்மூடப்பட்டு விட்டன.. கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களுமே ஆள் குறைப்பில்இறங்கி விட்டன. விரைவில் இந்தியா முழுக்க இருக்கிற ஐ.டி நிறுவனங்கள்பாதிக்கப்படும்!’ என்கிற அதிர்ச்சித் தகவல் நம் காதுகளை வந்தடைந்தது! விஷயத்தின் தீவிரம் நம்மை உலுக்க, பெங்களூருவின் ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்கிற.. பார்த்த.. தமிழர்களை சந்தித்துப் பேசினோம். அனைவருமே புகைப்படத்துக்கு மறுத்துத்தான் பேசி னார்கள். இல்லை.. இல்லை.. தங்கள் மனக் குமுறல்களைக் கொட்டினார்கள்.

”நான்சென்னையிலிருந்து பெங்களூரு வந்து ஏழு வருஷமாச்சு.. என்னோட ஆரம்ப சம்பளம் 20,000 ரூபா. கடைசியா எனக்கு கம்பெனி கொடுத்த புரமோஷன்ல அறுபதாயிரம்ரூபாயா ஆகியிருந்தது என் சம்பளம்..” என்கிற மீரா கிருஷ்ணனுக்கு இன்றைக்குவேலை இல்லை. ”வீட்டு வாடகை, சாப்பாடு, போக, வர கார் வசதினு எல்லாமேகம்பெனி கொடுத்துடும். வாங்குற சம்பளத்துல எனக்குனு ஒரு செலவு கிடையாது.மூணு வருஷத்துக்கு முன்னால கல்யாணமாகி, குழந்தை பிறந்து சந்தோஷமா போய்ட்டுஇருந்தது வாழ்க்கை.. திடீர்னு ஒரு நாள் எங்க எல்லாரையும் கூப்பிட்டு ‘இனிமே கம்பெனியை நடத்த முடியாது’னு சொல்லிட்டாங்க. அவ்வளவுதான். மறுநாள்என்னை பிக்கப் பண்ண கார் வரல.. வெளியில வேலை தேடுறேன். கிடைக்கல.என்னோட இத்தனை வருஷ அனுபவமும் சுத்த வேஸ்ட்ங்கிறது இப்போதான் தெரியுது” – கட்டுப்படுத்தவே முடியாமல் கேவுகிறார் மீரா.

வேலையிலிருந்து முதலில் தூக்குவது திருமணமான பெண்களைத்தானாம்! அடுத்து, திருமணமான ஆண்களையாம்! அதுபற்றிச் சொல்லி வருந்தினார் தர்மபுரியிலிருந்து இங்கு வந்து வேலைசெய்கிற கல்பனா. ”நூறு பேர் இருந்த இடத்துல இருபது, முப்பது பேரை வச்சுவேலை வாங்கியாகணும். அப்படின்னா, அவங்க ராத்திரி, பகல் பார்க்காம வேலைசெய்றவங்களா இருக்கணும். கல்யாணமான பெண்கள்னா, குறிப்பிட்ட நேரத்துக்குள்ளவீட்டுக்குப் போறதுலயே நோக்கமா இருப்பாங்க. குடும்பம், குழந்தை, பிரசவம்னு லீவ் எடுப்பாங்க. அதனால அவங்களைத்தான் முதல்ல வெளியேத்துறாங்க.

கல்யாணமான ஆண்களும்கூட பேச்சுலர்ஸ் அளவுக்கு ஆபீஸ்ல நேரம் செலவழிக்க முடியாதுஇல்லையா? அதனால, கொஞ்சம்கூட ஈவு, இரக்கமே இல்லாம, ‘ஸ்டார் பர்ஃபார்மரா’ (‘பிரமாதமாக வேலை செய்கிறவர்’ என்று நிறுவனமே ஸ்டார் அந்தஸ்து கொடுக்குமாம்) இருந்தாக்கூட தூக்கிடுறாங்க. எங்க கம்பெனியில போன நவம்பர்மாசம், 30 வயசைத் தாண்டினவங்க எல்லாரையும் வேலையை விட்டு எடுத்துட்டாங்க..நாங்களும் பயந்துட்டுத்தான் இருக்கோம்” என்றவர், ஒரு கண்ணீர்க் கதையைச்சொன்னார்..

”எங்க டீம் லீடர் அவர். பிரமாதமா வேலை செய்வார். போன செப்டம்பர்லதான் அவருக்குக் கல்யாணம் ஆச்சு. அவர் மனைவி இப்போ கர்ப்பமா இருக்காங்க. அவருக்கும் வேலை போய்டுச்சு. போன வாரம் தற்செயலா அவரோட வீட்டுக்குப் போயிருந்தேன். ஐயோ! அந்தக் கொடுமையை என்னனு சொல்லுவேன்! கையில இருந்த காசு மொத்தமும் செலவழிஞ்சு போக, மூணு நாள் பட்டினியாகெடந்திருக்காங்க ரெண்டு பேரும். ‘பேசாம செத்துப் போய்டலாம் போல இருக்கு’னு அவர் குலுங்கிக் குலுங்கி அழ, என்னால தாங்கவே முடியல. ஆபீஸ்ல ஒரு பாஸா மட்டும்தான் அவரை நான் பார்த்திருக்கேன். டீம்லயே ‘ஜூனியர் மோஸ்ட்’ ஆன என்கிட்ட அவர் அப்படி அழுதது.. ச்சே! இந்த உலகம்.. பணம்னு எல்லாத்து மேலயும் வெறுப்பு வந்துடுச்சு” என்கிறார் கண்ணீர் மல்க! கிணறு வெட்ட பூதம் கிளம்பின கதையாக வெளிவரும் ஒவ்வொரு கதையுமே இதயத்தை நொறுக்குகிறது. ”எதுவாஇருந்தாலும் இ-மெயில்தான். இனிமே எல்லாரும் பத்து மணி நேரம் கண்டிப்பா வேலை பார்க்கணும். கார், சாப்பாடு வசதில்லாம் கிடையாது’ன்னு ஒரு இ-மெயில்அனுப்பிட்டா மறுநாளே கையில டிபன் பாக்ஸோட டவுன் பஸ் பிடிச்சு ஆபீஸ்வந்துடணும். அப்படித்தான் வந்துக்கிட்டு இருக்கோம்” என்றார் ரேவதி.

பெங்களூருவின்பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் மாதம் 80,000 ரூபாய் சம்பளத்தில் வேலைபார்த்த பிரகாசம், இன்று 7,000 ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குப் போகிறார்.. ”ஐ.டி.துறையில சம்பளம் ஜாஸ்தினு வெளியில இருக்குறவங்களுக்குத் தோணும். ஆனா, அதுக்கேத்த கமிட்மென்ட்ஸ் எங்களுக்கு இருக்கும். காருக்கு மட்டும் மாசம் இருபதாயிரம் ரூபா இ.எம்.ஐ கட்டினேன். வேலை போனதும் காரை வித்துட்டேன்.ஆனாலும் கார் கடன் இன்னும் முழுசா அடையல. அதுதவிர, கிரெடிட் கார்டு கடன்இருக்கு. ஃபர்னிச்சர், மைக்ரோவேவ் அவன், டிஜிட்டல் கேமரா, ஹோம் தியேட்டர்னு கண்ட பொருளையும் வாங்கிக் குவிச்சிருக்கேன். இதையெல்லாம்வித்தா பைசாகூட தேறாது. தலைக்கு மேல கடனை வச்சுக்கிட்டு திண்டாடுறேன்..” என்றவர் நிறுத்தி, ”என்னையும் என் மனைவியையும் விடுங்க. எப்படியோ போறோம்.பீட்ஸாவும் பர்கருமா சாப்பிட்டுப் பழகின குழந்தைக்கு திடீர்னு தினம் தினம்ரசம் சாதம் போடுற கொடுமை எந்தத் தகப்பனுக்கும் வரவே கூடாதுங்க.. போன மாசம்முழுக்க ரெண்டு வேளை சாப்பாடுதான். கடனை அடைச்சாத்தான் நிம்மதிகிடைக்கும்!” என்றார் கலங்கும் கண்களுடன்.

ஐ.டி. நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாகப் பணிபுரியும் பிரசாந்த் குமார், இந்த அவல நிலையின் காரணம் பற்றியும் ஐ.டி. துறையின் எதிர்காலம் பற்றியும் பேசினார்.. ”தொண்ணூறுகளின்இறுதியில் பெங்களூருவில் 600-க்கும் மேற்பட்ட ஐ.டி. கம்பெனிகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் சென்டர்கள், பி.பி.ஓ-க்கள் இருந்தன.இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பெங்களூருவைத் தேடி வந்து குடியேறினர்மக்கள். ஆனால், சமீபத்தில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் தொடர் சரிவின் காரணமாக, உலகெங்கும் ஐ.டி. கம்பெனிகள் பெரும் பின்னடைவைச்சந்தித்துள்ளன. பெங்களூருவில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள்மூடப்பட்டுள்ளன. இதனால் 8,500 பேர் வேலை இழந்துள்ளனர். சம்பளக் குறைப்பு, ஆட்குறைப்பு, சலுகைகள் குறைப்பும் இதனால்தான்.

சமீபத்தில் ‘யுனைட்ஸ்’ என்கிற தகவல் தொழில் நுட்பம் சார்ந்த சேவை வழங்குவோர் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இன்னும் ஆறு மாதத்தில் இந்தியாவில் மட்டும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை இழக்க நேரிடும்’ என்றுஅறிவித்துள்ளது. கவலை தரும் அறிக்கை இது” என்றவர், ”இருந்தாலும் ‘2009-ல் தகவல் தொழில் நுட்பத்துறை மீண்டும் கோலோச்சும்’ என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. காத்திருப்போம்” என்றார்.இரவிலும் வேலை செய்யும் இவர்களின் எதிர்காலத்துக்கு விடியல் வருமா?

இரக்கம் இல்லாத இ-மெயில்!

ஒருஐ.டி நிறுவனம் தன் ஊழியர்களுக்கு அனுப்பிய ஒரு இ-மெயிலில் இருந்த வரிகள்இவை.. ‘வடை, அப்பளம், காய்கறி, பழங்களை உணவில் குறைத்தால் மாதம் 5 லட்சரூபாய் சேமிக்க முடியும். வருடத்துக்கு 60 லட்சம் ரூபாய் சேமிப்பு. அதனால், நாளை முதல் உணவில் இவை கிடையாது!’

”மறைமுக பாதிப்பு!”

”ஐ.டிதுறையில் நேர்ந்திருக்கிற பாதிப்பு என்பது நேரடியானது. இது தவிர, மறைமுக பாதிப்புகளும் நிறைய இருக்கின்றன. ஐ.டி. நிறுவனங்களை நம்பி மாதத் தவணையில்கார் வாங்கி, ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள் பல இளைஞர்களும். தவிர, ஜிம்கள், கேடரிங்குகள், ஹவுஸ் கீப்பிங்.. என்று பல வகையான தொழில்களும் ஐ.டி-யால்வளர்ந்தன. இன்று அவைதான் முதல் கட்ட பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன.ஐ.டி. துறையினர் ஏற்றி விட்ட ரியல் எஸ்டேட் விலையும் வீட்டு வாடகையும்எப்போது கட்டுக்குள் வரும் என்பது தெரியவில்லை..” என்று வருந்துகிறார்சென்னையைச் சேர்ந்த நிதி ஆலோசகர் ஒருவர்.

”கண்ணு முன்னால நிக்குது இ.எம்.ஐ..”

சமீபத்தில் சரிவைச் சந்தித்த ‘சத்யம்’ நிறுவனம் ‘தன் ஊழியர்கள் யாரும் மீடியாக்களிடம்பேச அனுமதி கிடையாது’ என்று இ-மெயில் அனுப்பி உள்ளது. இருந்தாலும், அந்தநிறுவன ஊழியர்கள் சிலரிடம் பேசினோம்.. தங்கள் அடையாளங்களை மறைத்து அவர்கள் வெளிப்படுத்திய உண்மைகள் இங்கே..

” ‘சத்யம் கம்பெனியை இழுத்து மூடப்போறாங்க. அதுக்குள்ள எல்லாரும் வேற வேலை தேடிக்குங்க’னு சீனியர்ஸ் என்னை நாலு மாசம் முன்னவே எச்சரிச்சாங்க. அவங்களும் வேற கம்பெனிக்கு நல்லசம்பளத்துக்குப் போயிட்டாங்க. ஆனா, அவங்க சொன்னதை நம்பாத நான் சிக்கல்ல மாட்டிக்கிட்டேன்.. இப்ப வேற கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட்டா, பிப்ரவரி வரைக்கும் ஆட்களை வேலைக்கு எடுக்கிறதில்லைனு சொல்லிட்டாங்க!” ”வேலைஇருக்கா.. இல்லையா.. ஜனவரி மாசச் சம்பளம் வருமா.. வராதா..னு எதுவுமேதெரியல. இதுல, தங்கச்சி கல்யாணத்துக்குக் கடன் வாங்கினது.. ஊர்ல அப்பா, அம்மாவுக்கு வீடு கட்டிக் குடுத்தது..னு கட்ட வேண்டிய இ.எம்.ஐ.கள் கண்ணுமுன்னாடியே நிக்குது. பிப்ரவரி ஒண்ணாம் தேதியை நினைச்சா இப்பவே பயமாஇருக்கு!’

நன்றி கிறுக்குப்பையன்

பின்னுரை

ஹுண்டாய் துணை நிறுவனமொன்றில் பணிபுரியும் தோழர் ஒருவரிடம் பேசும்போது அவர் நிறுவனத்தில் சில ஆயிரம் ரூபாய்களுக்கு பணிபுரியும் பொறியியல் பட்டதாரிகள் கூட எங்கே நம்மையும் பணி நீக்கம் செய்து விடுவார்களோ என்ற பீதியுடன் அற்ப விசயங்களைக்கூட அதி ஜாக்கிரதை உணர்வுடன் எச்சிரிக்கையாக பதட்டத்துடன் வேலை செய்வதாகக் கூறினார். இந்த நிலை இப்போது ஐ.டி துறையிலும் விஷம்போல பரவியுள்ளது. இதையெல்லாம் வைத்து முன்பு நாங்கள் சொன்ன விசயங்கள் இப்போது பலித்து வட்டதாக நாங்கள் மகிழ்ச்சி அடைவதாக நண்பர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளக் கூடாது. இந்த நாட்டின் தொழிலாளிக்கும், ஐ.டி துறை ஊழியர்களுக்கும் நடக்கும் அநீதி என்பது எங்களுக்கும் இழைக்கப்படும் துன்பம்தான் என்ற தோழமை உணர்வுடனே இதைப் பார்க்கிறோம்.சாரமாகச் சொன்னால் இது முதலாளித்துவப் பயங்கரவாதம் ஏழைநாடுகளின் மீது நடத்தும் போர். இந்தப் போரில் நாமும் ஆயுதங்களுடன் தயாராகி எதிர்கொள்ளவேண்டும் என்பதுதான் எமது அவா.

அதற்காகத்தான் ஐ.டி ஊழியர்களுக்கு ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் தேவை என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம். வாங்கிய சம்பளத்தை சேமித்து, ஐ.எஸ்.ஓ தரக்கட்டுப்பாடு போன்ற விசயங்கள் மூலம் இந்த இடரை சமாளிக்கலாம் என்ற மூடநம்பிக்கை சில ஐ.டி ஊழியர்களிடன் இருக்கிறது. சத்யம் நிறுவனம் கூட இந்த சான்றிதழும் உலக கார்ப்பரேட் நிறுவன விருதும் பெற்றதும் என்பதிலிருந்து இதன் யோக்கியதையை புரிந்து கொள்ளலாம். நமக்குத் தேவை அரசியல் ரீதியான தெளிவும், ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் கொடுக்கும் “நாம்” என்ற பலமும்தான். இந்த தொழிற்சங்க முயற்சி ஆரம்பித்த உடனே ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கையில் பாலும், தேனும் ஓடும் என்று சொல்லவில்லை. ஆனால் சுயமரியாதையும், கேட்பார் கேள்வியின்றி ஆட்குறைப்பு செய்யும் முதலாளிகளின் திமிரை ஒடுக்கவும் முடியும்.அப்படி பல தொழிற்சாலைகளில் எமது தோழர்கள் சாதித்திருக்கிறார்கள்.

முக்கியமாக இந்த நம்பிக்கையை இணையத்தின் வாயிலாக மட்டும் உங்களுக்கு அளித்து விட முடியாது. அவற்றை நீங்கள் நேரில் காணவேண்டும். அது நிச்சயம் உங்களுக்கு ஒரு நம்பிக்கையையும், போராட்ட குணத்தையும் அளிக்கும்.அதற்கு வரும் ஞாயிறு நடக்க இருக்கும் அம்பத்தூர் மாநாட்டிற்கு வருமாறு உரிமையுடன் அழைக்கிறோம். ஐ.டி துறை ஊழியர்களின் தொழிற்சங்க முயற்சிக்கு வினவும் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும். நாங்கள் 21 -ம் நூற்றாண்டின் கம்யூனிஸ்ட்டுகள். எங்களது தோழமை உங்களது சோர்வையும், அவநம்பிக்கையையும், சலிப்பையும், தோல்வி மனப்பான்மையையும் நிச்சயம் நீக்கி உங்களை புதிய மனிதனாக மாற்றிக் காட்டும். வாழ்வை இழப்பதற்கு நாம் ஒன்றும் அனாதைகளல்ல. தோள் கொடுக்க நாங்கள் இருக்கிறோம். வாருங்கள் புதிய உலகத்தை படைப்போம், முதலாளித்துவ பயங்கரவாதத்தை வேரறுப்போம்.

  1. இதில் இருப்பது சில கதைகளே…இன்னும் பல கதைகள் உண்டு.. எனக்கு தெறிந்தவற்றை அவ்வப்போது இங்கு பின்னூட்டத்தில் பதிவு செய்கிறேன்.

    நல்ல செய்திக்கு நன்றி

  2. பண முதலைகள் பெருத்த லாபம் கிடைக்கும் போது சுருட்டி கொண்டு,
    லாப விகிதம் குறைந்த உடன் அல்லது நட்டம் ஏற்பட்டவுடன் IT பணியாளர்களை வெட்டி விடுகிறார்கள்.

    இதற்கு, “தேவை அரசியல் ரீதியான தெளிவும், ஒரு புரட்சிகர தொழிற்சங்கம் கொடுக்கும் “நாம்” என்ற பலமும் தான்”

  3. தோழர்,

    மிகச்சிறப்பான பதிவு, ஐடி பீபிஓ வில் நடக்கும் உண்மை சம்பவங்கள் வினவில் தொடர வேண்டும்,அவர்களுக்கு சவுக்கால் அடித்து சொல்லுங்கள் நீயும் தொழிலாளி என்று.

    கலகம்

  4. அருமையான முன்-பின் உரைகள்.
    இந்த கட்டுரை கடந்த அவள் விகடனில் வந்துள்ளது.
    இதை வினவு முன்னரிந்து சொன்ன போது தூற்றியவர்கள் இப்போதாவது திருந்தட்டும், இணையட்டும், சங்கமாக சங்கமிக்கட்டும்.
    வாழ்த்துக்கள்…

  5. I T friends did u and all rember the debate went on the importance of association/ union to safeguard jobs in neeya naana in vijay T.V . u people there counter with role of HRA manager for solving ur difficulty.what happen. employer is always employer. employees always employees. be united . fight against

  6. மைன் டிரி கம்பேனியில் கடந்த சில மாதங்களில் 250 பேருக்கு மேல் வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள். இங்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டது போல பலருக்கு தோன்றலாம். ஆனால் உண்மையில் பலரும் இது போன்ற சம்பவங்கள் குறித்த அறியாமையில் இருப்பதுதான் ஐடி துறையின் சாபக் கேடு

    புரச்சி

  7. //இங்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பவங்கள் மிகைப்படுத்தப்பட்டது போல பலருக்கு தோன்றலாம்//

    இந்த முறை அப்படி நினைக்க மாட்டார்கள் என எண்ணுவோம்!
    ஏனெனில்
    1) இது அவள் விகடனில் வெளிவந்த கட்டுரை
    2) இதை மறுத்து இதுவரை பின்னூட்டங்கள் வரவில்லை

    ஐடி துறையினரே திரன்டு வாருங்கள் அம்பத்தூர் மாநாட்டுக்கு… நாங்கள் யாரும் பத்தாம் பசலிகள் அல்ல….நாங்களும் professionals தான்.. எங்களுக்கு code எழுதவும் தெறியும் kodi புடிக்கவும் தெறியும்.

  8. ஐ.டி துறை ஊழியர்கள் ஒரு virtual உலகத்தில் வாழ்கிறார்கள்.. நிலமையின் விபரீதம் அவர்களுக்கு உறைக்க இன்னும் அதிக காலமிருக்கிறது. அப்படியே உறைத்தாலும் –

    “இன்னாது?? கம்யூனிஸ்ட்டாஆஆஆ? அப்ப கொடி, ஸ்ட்ரைக், உண்டியல் எல்லாம் உண்டு தானே காம்ரேட்?”

    என்று இதுநாள் வரையில் அவர்கள் எள்ளி நகையாடியவர்களோடு தோள் கொடுக்க வருவார்கள் என்று நம்புவதற்கு சிரமமாகத் தான் இருக்கிறது – இத்தனைக்கும் பிறகும் எத்தனை முறை அவமதித்தாலும் நம்பிக்கையான வார்த்தைகளோடு திரும்பத் திரும்ப முயற்சிக்கும் உங்களுக்கு என் வந்தனங்களும் வாழ்த்துக்களும்.

  9. //முன்பு நாங்கள் சொன்ன விசயங்கள் இப்போது பலித்து வட்டதாக நாங்கள் மகிழ்ச்சி அடைவதாக நண்பர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளக் கூடாது//

    இந்த வரிகளைக் கொஞ்சம் கொட்டை எழுத்தில் போட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்

  10. எங்கள் நிறுவனத்தில் அமலில் இருந்த ஷேர் ஆட்டோ மற்றும் கேப் வசதியை நிறுத்திவிட்டனர். எங்கள் நிறுவனம் இருப்பதோ அத்துவானத்தில் மெயின் ரோடு வரவே ஒரு கிலோமீட்டர் நடக்கனும் அதுவும் இருட்டில்.. இதில் ஆண்களை விட அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே… பாவம் ஒரு ஆண் துனைக்காக காத்திருக்க வேண்டும், ஒரு அப்பாவி கணவன் வந்து ஆஃபீஸ் வாசலில் தேவுடு காக்க வேண்டும்…குழந்தைகள்ளெல்லாம் வீட்டில் வீட்டுக்குச்செல்வதற்குள் தூங்கி விடுகின்றனர்.
    கான்ட்ராக்ட் ஆட்களையும் அனுப்பி விட்டனர் புதிய ஆட்களையும் எடுக்கவில்லை… இரண்டு மடங்கு வேலை தலையில்… வேலை போகுமோ என்ற பயம்… ஒரு நாளைக்கு குறைந்த்து 14-மணிநேரம் வேலை ….

    என்ன வேலையோ என்ன சம்பளமோ
    லைஃபே வெறுத்து போச்சு சார்!

  11. அரடிக்கட்டு அண்ணே அவங்களுக்கு கோட் எழுத மட்டும்தான் தெரியும்…

    கொடி புடிக்கறது புடிக்காது.. அதெல்லாம் கஞ்சிக்கலையற பனாதைங்க புடிக்கறதாம்..

  12. மனதளவில் தான் ஒரு அடிமை என்பது தெரியாமலேயே இருந்துவிட்ட அல்லது பழக்கப்படுத்திய கூட்டம் அது …
    நாமதான் அலறணும்…

  13. Yow loosu,

    How do you expect that company that is not making enough profit will have to keep and pay unnecessary resources?

    Every IT guy signs agreement that he understood that he could be fired anytime.

    Unga kutathukku oru IT payalum vara maataan. because they are all educated and have too much knowledge to know about foolish communism

    what the hell you have done for kerala? in the name of labour union you have destroyed the whole state, and made the labour guys very lazy. even for unloading my own luggage into my compound, i was threatened to pay Rs.100.

    communism and union like this will be used by union leaders for their own interest. further it will bring in laziness.

    look at government offices. sons of bitches are demanidng bribes for everything and threaten to strike if someone takes action on them

    IT slowdown has its own effects. everybpody understands. it was able to provide lot of money in short time legally. if a guy is unable to save some portion of for two three years expense, he mus be utmost fool himself..

    think yourself. whether that story that this team leader salaried in lakhs didnt have money to eat.. is it logical. even if it is true, where did that huge money went? into drinking or girls? whose fault is it?

    do not spoil educted youth. try your politics somewhere else

    PARAMS

  14. எங்கள் அலுவலகத்தில் திடீரென நீல் கமல் பிளாஸ்டிக் சேர் வாங்கிபோட்டு இருக்கிறார்கள்..கேட்டால் காஸ்ட் கட்டிங் என்கிறார்கள்.

    வாடிக்கையாளர்களுக்கும் மட்டும்தான் நல்ல வசதியான் இருக்கைகளாம்.

  15. ithu ellam summa inga 80000 salary vanginavan 2 velai sappadaranam.
    last month kuda my friend 30000 salary lairunthu 50000 kku job change pannanan.
    avarkal nalla than irukirargal ellam summa,
    last but not least, bangalore la 4000 salary vangaravan 3 times sappaduran avangalala sappada mudiyatha.

  16. Mr. அர டிக்கெட்டு,

    why dont you provide some constructive comment? any intellectual dryness like our commie brothers? or you r behaving like ur name suggests?

    PARAMS

  17. மிஸ்டர் பரம்ஸ்,

    Constructive Criticism begets Constructive Comments.
    Wrath and Anger Begets itself.
    You are in fit of rage, you relax and come back with some Constructive Criticism…I will wait.
    Until then I choose to forgive…
    பரம்பிதாவே… இந்த பரம்பிதாவையும் மன்னியும்!

  18. because they are all educated and have too much knowledge to know about foolish communism//

    அறிவாளி மற்றும் லூசு அல்லாத தலைவரான பிரேமு,
    ஆமா நீங்க ஐடியில் தான் வேல செய்யுறீங்களா? உங்கள இப்படி கொத்து கொத்தா புடிங்கி எறியுறாங்களே ஏன் ஒண்ணு சேர்ந்து கேட்க மாட்டேன்கிறீங்க,அது சரி செத்தாலும் அடிமையா ஆண்டானின் காலை எப்படி சுளுவா நக்குவதுன்னுதான உங்க படிப்புல இருக்கு அது தானே உங்க நாகரீகமும் சொல்லுது.
    இந்த அடிமைத்தனம் தான் ஐடி பீபிஓவில் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு முதல் எதிரி .உன்னை யார் கட்டிப்போட்டு அடிமையாஇ இருக்கச்சொல்வது, விலங்கை உடைத்து வெளியே வா பரந்து பட்ட உலகம் இருக்கிறது மக்களோடு களத்தில் நிற்போம்,இல்லையேல் உனக்கெதிராக வருங்காலத்தில் மக்கள் நிற்பார்கள்

    கலகம்

  19. Dear Commi brothers,

    /// ஆமா நீங்க ஐடியில் தான் வேல செய்யுறீங்களா? உங்கள இப்படி கொத்து கொத்தா புடிங்கி எறியுறாங்களே ஏன் ஒண்ணு சேர்ந்து கேட்க மாட்டேன்கிறீங்க ////

    I very much wokr in same IT. I am very recognized and valued my company for what I deliver. In fact we are using this opportunity (recession) to do a cleanup within the company.

    Obviously skilled guys are retained, empty guys are returned to where they came from. This is part of nature and nature will do such cleanups once in a while to retain only the best. By retaining the best, countyr and inturn everyone gets benefited by their growth and contributions.

    The side effect is crap that has accumulated in between will be naturally affected. As far as I see only those guys who got their education in ‘some’ quota systems and not on ‘merit’ lag behind and get affected.

    Majority IT people like me are not worried as we have enuf investment to overcome any further slowdown.

    So, dont bring in your commie tactics into a good and healthy industry.

    PARAMS

  20. //In fact we are using this opportunity (recession) to do a cleanup within the company//

    I want to see what you will say when you get fired in this cleanup activity.

    //Obviously skilled guys are retained, empty guys are returned to where they came from. //

    கற்றுக்கொள்ளவும் மாடு மாதிரி வேலை பார்க்கவும் திறன் குறையும் போது, நாற்பது வயதுக்குப் பிறகு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று பார்க்க வேண்டும்.

    //Majority IT people like me are not worried as we have enuf investment to overcome any further slowdown.

    இதில் இருக்கும் “enuf investment ” தான் உங்களின் இந்த இறுமாப்புக்குக் காரணம். அதனால் தான் பீதியில் இருக்கும் மற்ற ஊழியர்களின் நிலை உங்களுக்கு Clean up activityயின் byproductஆகத் தெரிகிறது…

    ரோம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்தவர்களின் கதையென்னவானது என்று வரலாற்றில் தெளிவாக பதிவாகியிருக்கிறது..

  21. பரம்பிதா என்ற பெயரில் எழுதும் ஒரு ………. கமெண்டை தலையெழுத்தே என தமிழாக்கம் செய்கிறேன்…….

    //I very much wokr in same IT. I am very recognized and valued my company for what I deliver. In fact we are using this opportunity (recession) to do a cleanup within the company.//

    ஆமா, நானும் ஐடி’ல தான் இருக்கேன். என்னோட தெறமையினால ஏன் கம்பெனி நான் என்ன நல்லா வச்சிருக்காங்க. சொல்லப்போனா இந்த பொருளாதார நெருக்கடிய நாங்க களையெடுக்கறத்துக்கு ஒரு வாய்பாதான் பயன் படுத்தறோம்.

    //Obviously skilled guys are retained, empty guys are returned to where they came from. This is part of nature and nature will do such cleanups once in a while to retain only the best. By retaining the best, countyr and inturn everyone gets benefited by their growth and contributions//

    நல்ல தெறமையானவங்களுக்கெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல, தன்ட பசங்களெல்லாம்தான் அவங்க வந்த இடத்துக்கே விரட்டி உடுரோம். இது இயற்கை, அப்பப்ப இந்த மாதிரி சுத்தம் செஞ்சு நல்லத மட்டும் வச்சுகனும், அப்பதான் அவங்களால எல்லாருக்கும் ஏன் நம்ம் நாட்டுக்கே நல்லது.

    //The side effect is crap that has accumulated in between will be naturally affected. As far as I see only those guys who got their education in ’some’ quota systems and not on ‘merit’ lag behind and get affected.//

    நடுநடுவுல கிடக்குற சானியெல்லாம் சுத்தம்பண்ணா அது பாதிப்பில்லையே. நான் பாக்குற வரைக்கும் ‘தெறமை’யினால இல்லாம ‘ஏதோ கோட்டா’வுல படிச்ச பசங்கதான் பாதிக்கப்படறாங்க

    //Majority IT people like me are not worried as we have enuf investment to overcome any further slowdown.//

    என்ன மாதிரி பெரும்பான்மை ஐ.டி மக்களுக்கு கவலையேயில்லை ஏன்னா என்ன நெருக்கடி வந்தாலும் அத சமாளிக்க போதுமான அளவு காசு இருக்கு.

    //So, dont bring in your commie tactics into a good and healthy industry.//

    அதனால உங்க கம்யூனிச தந்திரத்தையெல்லாம் ஒரு நல்ல ஆரோக்கியமான துறைக்குள்ள கொண்டு வராதீங்க…..
    ………………….

    இந்த ஆளு சொன்னத கேட்டீங்களா..

    களையெடுக்கராங்களாம்…
    கோட்டாவுல வந்தவல்லாம் திறமையில்லாதவனாம்….
    நடுவுல கிடக்குற சானியாம்…
    இதெல்லாம் ஜகஜமாம்…..

    இத படிக்குற மானம் ரோஷம் இருக்குற ”கோட்டாவுல படிச்ச’ ஐ.டி மக்களே…நேர்மையா உங்க கருத்தை பதிவு செய்யுங்க இப்பவும் செய்யலேன்னா ……..

  22. BSc விட பெரியது MSc
    MSc விட பெரியது MCA
    MCA விட பெரியது பூணூல்

    ஏன்டா பூணூல் போட்ட பர(தேசி)ம்ஸ்
    கொஞ்சம் அடங்குடா, இல்லேன்னா உன் வேல காலியாவும் போது கேக்க நாதி இருக்காது.
    சத்யம் ராஜூவையே சொருவிட்டாங்களாம்……

  23. //The side effect is crap that has accumulated in between will be naturally affected. As far as I see only those guys who got their education in ’some’ quota systems and not on ‘merit’ lag behind and get affected.//

    சங்கரன் எம் சாதி பொண்ண தான கெடுத்தான் நோக்கு என்னானு
    எனக்கேட்ட மாபெரும் திறமைக்கு சொந்தக்காரர்கள் பரம்ஸ்கள்,என்ன பரமு கண்னு இப்படி சீன் காட்டுற,டி.எல்லுங்க,எச்.ஆர்,மேனேஜருங்க அடிக்குற கூத்த நாங்க பலமுறை பாத்திருக்கோம்.அப்படியே சம்த்துவம் பொங்கி வழியுதா ஐடியில,ஆபீஸ் டைகர் அப்படீங்குற பன்னாட்டு கம்பெனியில வேலப்பார்த்த சங்கர் தன்னோட அக்கா வேற சாதிக்காரன காதலிச்சு கல்யாணம் செஞ்சதால அப்பனோட சேர்ந்து அடிச்சே கொன்ன கத தெரியுமா உனக்கு,அப்பவெல்லாம் எங்கே போன வாய்திறந்து கொண்டு பேசவேண்டியது தானே. அப்புறம் இன்னொரு திறமயும் எனக்கு தெரியும் அதான் வெள்ளிகிழமை நைட் சரக்கு அடிக்க ஆரம்பித்து ஞாயிறு புல்லா குடிக்குற பார்ட்டி தான நீ.,
    வெங்காயம்,
    திறமை இல்லாமதான் இல்லாம வேலைக்கு யாசகத்துக்கா எடுத்தாங்க,உன்னோட வேலசெஞ்சு வருசக்கணக்குல மூஜ்ச பார்த்து சிரிச்ச எத்தனயோ பேர வேலய விட்டு தூக்கீட்டாங்க ஆனா நி என்ன சொல்லுற அவன் கிட்ட திறம இல்லன்னு ,அடச்சீ நீயெல்லாம் ஒரு மனுசனா

    பரமு கண்ணு நீ இப்படியெல்லாம் ஏன் பேசுறதெரியுமா எவன் செத்தா எனக்கென்ன என்ற அடிமை புத்தி தான் ,அது தான் உன் கம்பெனியில் இப்ப நீ கழுவுற வேலய தப்பாம தினமும் செய்யச்சொல்லுது.ஒரு சங்கம் அப்படின்னு ஐடி,பீபிஓவு ல இருந்தா தான உரிமய கேக்கணும்னு அவசியம் வரும்,உன்ன மாதிரி பலபேரு முதலாளி க்கு சோப்பு போட்டு திறமய காட்றீங்க ,எங்களுக்கு அப்படி மானங்கெட்டு ஒருத்தன தொங்க வேண்டிய அவசியம் இல்லை,
    எங்க இருந்தாலும் சூடு சொரணை உள்ள பாட்டாளிகள் நாங்கள் ,தொழிலாளின்னா,பாட்டாளின்னா ,சங்கம் கட்டுனா கிடைக்குற மரியாதை கண்டிப்பாய் உனக்குதெரியாது,தெரியணும்னா சனவரி 25ம் தேதி உங்கப்பன் ஜேப்பியாருக்கு தொழிலாளிங்க எப்படி ஆப்பு வச்சாங்கன்னு சொல்லப்போறாங்க.கண்ணு அங்க வந்து வாய கீய வுட்டு றாத ,ஆமா நீதான் லீவு கிடச்சா சரக்கு ஏத்திகினு மேயுற ஐடி ஜென்டில் மேனாச்சே,போய் குஞ்சு மோன்கிட்ட சான்ஸ் கேளு.அத விட்டுட்டு இபடி இங்க வந்து ஆடாதப்பா.

    கலகம்

  24. //So, dont bring in your commie tactics into a good and healthy industry.//

    அதாவது ஐ.டி துறை இன்று ஆரோக்கியமாக இருக்கிறதாம்………

    என்ன கொடுமை சார் இது.

    வடிவேலு, விவேக் போன்றவர்களின் காமெடி டிராக்கில் எழுத வேண்டியதையெல்லாம் மறுமொழியில் எழுதுகிறீர்கள்

  25. //Every IT guy signs agreement that he understood that he could be fired anytime.//

    இது போன்ற உடன்படிக்கைகள் கூடாது என்று தானே வினவு கூறுகிறார்.

  26. அவள் விகடன்’ல வந்த கட்டுரையை அப்படியே கட் பண்ணி போட்டுடிங்களா ? பலே பலே !!

  27. பரம்ஸ்,

    முதலாளித்துவ எடுபுடி, கூஜா தூக்கிகளாக இருப்பது உம்மை போன்ற சில அம்பிகளுக்கு எல்லா காலத்திலும் சுபிட்சமாக இருக்கும். ஆனால் உழைக்கும் வர்க்கத்துக்கு முதலாளித்துவம் எப்போதும் சாபக்கேடாகவே இருக்கிறது. பொருளாதாரம் உச்சத்தில் இருக்கும் போதும் தொழிலாளிய குறைஞ்ச சம்பளத்தில் சப்பையா உறிஞ்சிட்டு, முதலைகள் எல்லா லாபத்தையும் சுருட்டிட்டு போயிடுவானுங்க. திவால் ஆனதும் கம்பனிய மூடிட்டு, வேலை செஞ்சவனுக்கு ஆப்பு வைப்பானுங்க.

    முதலாளித்துவத்திற்கு மட்டுமன்றி, முதலாளித்துவ எடுபுடிகள், கூஜா தூக்கிகளுக்கும் ஆப்புகள் தயாராகி கொண்டிருக்கிறது. அதை பார்த்து அம்பிகள் அலறுகிறார்கள்.

  28. பரம்ஸ்,

    ‘தெறமை’யில வேலை கெடைச்சு வந்தவங்க தெறமை என்ன தெரியுமா?
    விப்ரோவிலே தெறமை (அதாவது பிறப்பிலே பார்ப்பனர்)யில் வேலையில் சேர்ந்து 3 வருடம் அனுபவம் உள்ள பெண், செய்முறைக் கையேட்டை வைத்துக்கொண்டு (யூசர் மேனுவல்) மென்பொருள் ஒன்றை நிறுவினார். கையேட்டில் பாஸ்வேர்டை நிரவச் சொல்லி 5 ஸ்டார்கள் வைத்து விளக்கி இருந்தனர். ‘5 முறை ஸ்டார் பட்டனை அடிச்சிட்டேன்.. வொர்க் ஆக மாட்டேங்குது’ன்னு என்னிடம் அப்பெண் முறையிட்டார். அப்பேர்ப்பட்ட தெறமைசாலிகள் நிறைய இத்துறையில் கிடக்கிறாங்க தெரியுமா?

    பாரி

  29. பரமுக்கு உரைக்குமான்னு தெரியல. இது முற்றிலும் உண்மை.

    >>பரமு கண்ணு நீ இப்படியெல்லாம் ஏன் பேசுறதெரியுமா எவன் செத்தா எனக்கென்ன என்ற அடிமை புத்தி தான்

    >>எங்க இருந்தாலும் சூடு சொரணை உள்ள பாட்டாளிகள் நாங்கள், தொழிலாளின்னா, பாட்டாளின்னா, சங்கம் கட்டுனா கிடைக்குற மரியாதை கண்டிப்பாய் உனக்குதெரியாது, தெரியணும்னா சனவரி 25ம் தேதி உங்கப்பன் ஜேப்பியாருக்கு தொழிலாளிங்க எப்படி ஆப்பு வச்சாங்கன்னு சொல்லப்போறாங்க

  30. மிகவும் நல்ல பதிவு…

    உன்மையிலியே இதயத்தை உலுக்கிகிறதுதான்… என்ன தான் விடிவு?

    எனக்கு தெரிந்தே எனது நன்பர்கள் பலர் வேலை இழந்து விட்டனர்.

    விரைவில் சரி ஆகிவிடும் என்று நம்புவோம்

    நட்புடன்
    –குரங்கு

  31. //How do you expect that company that is not making enough profit will have to keep and pay unnecessary resources?//
    //company can make enough profit //
    there is no problem – do you know what is the profit of your company? how it was shared to their workers? why till date they keep somebody as unnecessary resources? how it becomes an unnecessary resource at this time?.
    foolish people now only they open up their eyes???
    //Every IT guy signs agreement that he understood that he could be fired anytime//
    You must put a signature before you go to an operation. Doctor can kill you because you put a signature. Does your family accept this?
    First thing signing these types of agreement is foolishness.
    //Unga kutathukku oru IT payalum vara maataan. because they are all educated and have too much knowledge to know about foolish communism//
    nee entha kutam? [vaieru valarkum kutama?]
    What is communism could you be eloborate something about this?
    //what the hell you have done for kerala? in the name of labour union you have destroyed the whole state, and made the labour guys very lazy. even for unloading my own luggage into my compound, i was threatened to pay Rs.100.//
    What the hell you have done for India?
    Do you think you get salary for your own work [how much the company got and what percentage they share among their workers?] is it OK for you? Have you done all your work by yourself, if we ban Google in India how many of you can solve your problem with your own knowledge [if you have your own knowledge then still, why should you follow the American’s …] with out any third party third man intervention/help can you complete your work?
    Most of the IT people complete their work with the help of Google
    You accept for more salary because you have high demand, then why don’t you accept Rs100 for unloading your luggage? [they also have high demand]
    these are not accepted.
    but You must accept the physical work;
    Don’t go by the head, see the ill-literacy, poor people and mankind nearby you,
    You think you are living because of your cleverness, you fool, with out food you can’t live; you can’t make your food by typing a code executing a query, creating a software … etc
    You have to do physical/mental work and wait for a long time to plug a fruit.
    You know our farmer’s problem. You know how much they got profit???
    There is no profit to them but still they cultivate for your stomach.
    //communism and union like this will be used by union leaders for their own interest. further it will bring in laziness.//
    //look at government offices. sons of bitches are demanidng bribes for everything and threaten to strike if someone takes action on them//
    if you go by the correct way then why should you give any amount to them. do you know about RTI.
    if you had given money, then that is your mistake.
    also for getting a project, sons of bitches gave bribes to government this is also our money. do you know how much government amount stolen by Reliance, TATA, and your MNCs?
    Do you know some company spending how much amount/gift/Treat given for taking a new project from new/old clients.
    //IT slowdown has its own effects. everybpody understands. it was able to provide lot of money in short time legally. if a guy is unable to save some portion of for two three years expense, he must be utmost fool himself.//
    if you understand explain it.
    //think yourself. whether that story that this team leader salaried in lakhs didnt have money to eat.. is it logical. even if it is true, where did that huge money went? into drinking or girls? whose fault is it?//
    Logic is correct,
    Raju is normal man now.
    In that story that team leader is not able to face the world without money, foolish man like you, you think “money is everything”,
    [You are not worrying about your nearby people, then you are not a man(kind)]
    //do not spoil educted youth. try your politics somewhere else//
    We should fight for our rights.
    there is no need for wise think to write a code, create a project, create a query and what you are currently doing…. if we give three month training to a 10std Student can also do all your work.
    fool… don’t think you are the Wise. go to america and do your ……….. duty

  32. PARAMA PITHA
    முடிந்தால் தமிழில் பதிலிடவும் அனைத்து தமிழருக்கும் புரியுமே…
    தமிழ் எழுதி இருக்கிறது.

  33. //மனதளவில் தான் ஒரு அடிமை என்பது தெரியாமலேயே இருந்துவிட்ட அல்லது பழக்கப்படுத்திய கூட்டம் அது …
    நாமதான் அலறணும்…//

    அதிஷா… நீங்களும் அலறுரீங்களா.. ஆச்சர்யமா இருக்கு… சரி 25ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டுல நாங்க அலறுரோம் நீங்களும் வந்து எங்ககூட சேர்ந்து அலறுங்க.. அப்பத்தான் IT ஆளுங்க காதுல கொஞ்ச மாச்சும் விழும்.. வற்றீங்கள்ல இல்ல கீழக்கு பதிப்பகம் சந்திப்புக்கு போறீங்களா?

  34. see how paramitha,godzilla( where he has gone),can comeout with their own agenda even at the hour of crisis(against reservations) they always wllbe saying abt merit ,mannangatti (scientifically there is no proof that the so called merit system alone is best) Did u evr think abt the tenant who was paying rs3000 for his house was asked to double it suddenly , when they were incapable they were forcibly vacated .U ppl will b occupied and started paying even upto rs 10000 .And shamelessly u say abt a man demanding u rs100 for carryng ur luggage.u will never think abt that poor tenant nor abt that coolieman.

  35. பரமா…
    ///and made the labour guys very lazy///

    ஓரிரு வருடங்களுக்கு முன்னாள், MNC -ல் வேலை செய்யும் ஒரு நண்பன் சொன்னது, TT (table tennis) வேலையாடுரதுக்கே ஆப்ஸ் போகவேண்டியதிருக்கு!
    he accepted he use to work only for 3 to 4 hours a day… i remember that time he was with IBM and earning around 40000/.

  36. //ஏன்டா பூணூல் போட்ட பர(தேசி)ம்ஸ்
    கொஞ்சம் அடங்குடா, இல்லேன்னா உன் வேல காலியாவும் போது கேக்க நாதி இருக்காது.
    சத்யம் ராஜூவையே சொருவிட்டாங்களாம்////

    Do I bring caste aspect here or is it you? Why do you relate brhamin community to a Raju who belongs to KShatriyha.

    As for the rest of comments here look towards only if I am wearing poonool, I ignore. We can discuss on facts and logical arguments, not on empty emotional rubbish.

    Ningalthaan manthai mentality ullavarhal enbatharku intha comments vida verenna vendum?

    Doctor Bruno,
    Could you explain why you think IT indusrty is not a healthy industry?

    PARAMS

  37. Ara ticket / Other Naxals / Trade Unionists,
    Why dont you atleast start a tea stall and help the local economy and provide a few jobs to loosing IT people??

    What is the point in fighting the sick IT companies??? Why dont start something on your own and help us???

  38. கீழே உள்ள பின்னூட்டத்தை அதிஷாவின் தளத்தில் இட்டிருந்தேன். பொய்யாக இங்கு ஆவேசம் காட்டி நடித்துள்ள அவர் அதனை பிரசூரிக்காமல் இருந்து தனது நேர்மையை காப்பற்றிக் கொண்டார். இவர்தான் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்கிறாராம்.

    மாநாடு மிக சிறப்பாக நடந்தது. மாலை பொது கூட்டத்தில் ஆறாயிரம் பேர் கலந்து கொண்டனர் என்று தெரிகிறது.

    //மனதளவில் தான் ஒரு அடிமை என்பது தெரியாமலேயே இருந்துவிட்ட அல்லது பழக்கப்படுத்திய கூட்டம் அது …
    நாமதான் அலறணும்…//

    அதிஷா… நீங்களும் அலறுரீங்களா.. ஆச்சர்யமா இருக்கு… சரி 25ம் தேதி முதலாளித்துவ பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டுல நாங்க அலறுரோம் நீங்களும் வந்து எங்ககூட சேர்ந்து அலறுங்க.. அப்பத்தான் IT ஆளுங்க காதுல கொஞ்ச மாச்சும் விழும்.. வற்றீங்கள்ல இல்ல கீழக்கு பதிப்பகம் சந்திப்புக்கு போறீங்களா?

  39. நண்பர் புரட்சி,

    உங்கள் உணர்ச்சி புரிகின்றது, இங்கே வினவின் கட்டுரையின் கருத்தை ஏற்கும் மற்ற வாசகர்களை போல் அதிஷாவும் ஒருவர்.

    நமது கருத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வதே சாதகமான விசயம். இதில் துவங்கி படிப்படியான கருத்து போராட்டத்தின் மூலமே ஒருவரை செயல்படும் தளத்திற்கு கொண்டு வர இயலும். அந்த வகையில் அதிஷா நம் நண்பர், அவர் மாநாட்டு வரவில்லை என்பதனால் அவரை வசை பாடுவது பயனளிக்காது.

    சிந்தித்து பாருங்கள்.

    நட்புடன்
    வினவு

  40. //Doctor Bruno,
    Could you explain why you think IT indusrty is not a healthy industry?
    PARAMS//

    “healthy industry” என்பது “industry is now healthy” என்பதும் ஒன்றல்ல

    “unhealthy industry” என்பது “industry is now not healthy” என்பதும் ஒன்றல்ல

  41. //உங்கள் உணர்ச்சி புரிகின்றது, இங்கே வினவின் கட்டுரையின் கருத்தை ஏற்கும் மற்ற வாசகர்களை போல் அதிஷாவும் ஒருவர்//

    நீங்கள் சொல்லுவது சரிதான்…. அவரை வசை பாடுவது இங்கு நோக்கமல்ல. வசை சொற்கள் எதுவும் அதிஷாவை நோக்கி எழுப்படவில்லை என்பதை குறிப்பிட்டு விடுகிறேன்.

    ஆனால் இது போல ஏதாவது முரன்பட்டு பேசும் போது சிந்தனையில் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கருதுகிறேன். அதிஷா போன்றவர்களை கவனமெடுத்து சிந்திக்க இந்த அனுகுமுறை தூண்டும் என்று கருதினேன். உடனடி விளைவுகள் இல்லாவிடிலும் நீண்ட கால போக்கில் இந்த அனுகுமுறை அதிஷா போன்றவர்களின் சிந்தனையை முறைப்படுத்தும் என்று இப்போதும் நம்புகிறேன்.

    எனினும் சுட்டி காட்டியமைக்கு நன்றிகள்.

    //நமது கருத்தை ஒருவர் ஏற்றுக் கொள்வதே சாதகமான விசயம்.//

    நமது கருத்தை பெரும்பாலனவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர்கள் பொது கூட்டத்திற்கு வர வேண்டும் என்று கூட அவசியமில்லை. ஆனால் கொஞ்சம் கூட சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் சம்பந்தமின்றி நேரெதிரில் நின்றூ கொண்டு செயல்படுவதை சுட்டிக் காடட வேண்டும் என்றே விரும்புகிறேன். இதில் தவறில்லை என்பது எனது கருத்து.

  42. /ஆனால் இது போல ஏதாவது முரன்பட்டு பேசும் போது சிந்தனையில் அது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று கருதுகிறேன்//

    வினவு சொல்லுவதும் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துவதை பற்றித்தான் ஆனால் அது சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ”இவர்களிடத்தில் போனால் அவ்வளவுதான்” என்பதை போன்ற எதிர்மறையாக போக்கூடாது.
    உங்களுடைய அனுகுமுறை நாம் போலிகளிடமும் எதிரிகளிடமும் காட்டவேண்டியது.

    //ஆனால் கொஞ்சம் கூட சிந்தனைக்கும், செயல்பாட்டுக்கும் சம்பந்தமின்றி நேரெதிரில் நின்றூ கொண்டு செயல்படுவதை சுட்டிக் காடட வேண்டும் என்றே விரும்புகிறேன்//

    இதை நான் அப்படியே ஏற்கிறேன். இந்த விமரிசனத்துக்கு அதிஷா பதில் சொல்லவேண்டும்.

  43. அதிஷா விசயத்தில் தவறாக நடந்து கொண்டதாகவே உணர்கிறேன். இது குறித்து ந்ண்பர்களிடம் பேசிய பொழுது அவர்கள் தவறுகளை சுட்டிக் காட்டினர்.

    அதிஷா இவ்வாறு நடந்து கொள்வது குறித்து அவரிடம் நேரடியாக கேட்டிருக்க வேண்டும். மாறாக எதிரியை அம்பலப்படுத்துவது போல அணுகியது தவறு என்று உணர்கிறேன்.

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க