‘‘கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்” என்ற கம்பனின் கூற்றுப்படி பார்த்தால், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கும் துயரம்தான் கொடிய துயரம். அத்தகைய துயரத்திற்கு, வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவிக்கின்ற நிலைக்கு ஆளாகிப் போனாராம், நம் நாட்டு தரகுப் பெருமுதலாளி ரத்தன் டாடா. பன்னாட்டு முதலாளியாக வளர்ந்துவிட்ட டாடாவிற்குக் கடனா? அதை அடைக்க முடியாமல் தவித்துப் போனாரா? இதைக் கேள்விப்படும்பொழுது இந்திய மக்களுள் பலருக்கு அதிர்ச்சிகூட ஏற்படலாம். இதைவிட அதிர்ச்சியான விசயம் என்னவென்றால், டாடா தனது கடனை அடைக்கச் செய்திருக்கும் தகிடுதத்தங்கள்தான்!
டாடாவின் இந்தக் கடன் துயரம் 2007-ஆம் ஆண்டில் தொடங்கியது. அந்த ஆண்டில் இந்தியாவின் டாடா நிறுவனம் இங்கிலாந்தைச் சேர்ந்த மிகப்பெரிய, ஏகபோக இரும்புத் தொழிற்சாலை நிறுவனமான “கோரஸை’’யும், உலகப் புகழ் பெற்ற ஜாகுவர் மற்றும் லேண்ட் ரோவர் என்ற கார்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையையும் பலத்த போட்டிக் கிடையே விலைக்கு வாங்கியது. முதலாளித்துவ வியாபாரக் கலாச்சாரத்தின்படி, ரத்தன் டாடா தனது சோந்தக் கைக்காசைப் போட்டு இந்தத் தொழிற்சாலைகளை வாங்கவில்லை. சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கித்தான் இந்த நிறுவனங்களை டாடா கைப்பற்றியது. கோரஸை வாங்கிய டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலையில் 450 கோடி அமெரிக்க டாலர் கடனும் (23,850 கோடி ரூபா) ஜாகுவர் கார் தொழிற்சாலையை வாங்கிய டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலையில் 15,900 கோடி ரூபா கடனும் விழுந்தது.
ரத்தன் டாடா இந்த இரு ஏகபோக நிறுவனங்களையும் வாங்க முட்டிமோதிக் கொண்டிருந்தபொழுதே, இந்தியாவைச் சேர்ந்த சில பொருளாதார அறிஞர்கள் உலகப் பொருளாதாரத்தின் போக்கைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவ்வளவு விலைக்கு இந்த அந்நிய நிறுவனங்களை வாங்கத் தேவையில்லை என அவருக்கு அறிவுரை சோன்னார்கள். ஆனால், டாடா நிறுவன அதிகாரிகளும், முதலாளித்துவப் பத்திரிகைகளும் கைகோர்த்துக் கொண்டு, அறிவுரை சோன்ன பொருளாதார நிபுணர்களை, “உலகமயத்தைப் புரிந்து கொள்ளாத கிணற்றுத் தவளைகள்” எனச் சாடினார்கள். இந்த ஏகபோக நிறுவனங்களை டாடா கைப்பற்றியதை, இந்தியா வல்லரசாகிவிட்டதன் வெளிப்பாடாக ஊதிப் பெருக்கிய இந்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் டாடா கடன் வாங்குவதற்குப் பக்கபலமாக நின்றது.
ரத்தன் டாடா, இலாபத்துடன் இயங்கி வந்த இந்த நிறுவனங்களை வாங்கியபொழுது, அடுத்த ஒரே ஆண்டில் உலகப் பொருளாதாரமே அதல பாதாளத்தில் விழுந்துவிடும் எனக் கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். 2008-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கார் விற்பனை படுத்துப்போனதால், ஜாகுவர் லேண்ட் ரோவர் கார் தொழிற்சாலையை இழுத்து மூடிவிட வேண்டிய அபாயம் ஏற்பட்டது.
இத்தாலி, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, அர்ஜென்டினா நாடுகளைச் சேர்ந்த சில நிறுவனங்கள், டாடாவின் “கோரஸ்” இரும்பு உருக்காலையுடன் போட்டுக் கொண்டிருந்த 10 ஆண்டு கால வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்ததால், கோரஸ் ஆலையை விற்க வேண்டிய அல்லது மூடவேண்டிய நிலைக்கு டாடா தள்ளப்பட்டார். பட்ட காலிலே படும் என்பது போல, இந்த நெருக்கடியான நேரத்தில் சர்வதேச நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலக்கெடுவும் நெருங்கியது.
டாடா, கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் இந்திய விவசாயிகளைப் போல சூதுவாது தெரியாத அப்பாவியா? ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையே தனது கடனை அடைக்கும் கருவியாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா.
“நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ள கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களை மீட்பதற்கு இங்கிலாந்தின் வங்கிகளில் இருந்து 50 கோடி பவுண்ட் கடனும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியில் இருந்து 34 கோடி பவுண்ட் கடனும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்; இல்லயென்றால், இந்த நிறுவனங்களை மூடிவிடுவதற்கு அனுமதியுங்கள்” என டாடா இங்கிலாந்து அரசிடம் பேரம் பேசினார். டாடா, தனது கடனை அடைக்க இங்கிலாந்து தொழிலாளி வர்க்கத்தைப் பிணையக் கைதியாகப் பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் இந்த மிரட்டலின் பொருள்.
இந்த பேரத்தின் முடிவில் டாடா, ஐரோப்பிய முதலீட்டு வங்கியிடமிருந்து 17.5 கோடி பவுண்ட் கோடி கடனாகப் பெற்றுக் கொண்டார். இந்தக் கடனை வழங்குவதற்கு கோரஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்களில் ஆட்குறைப்பு செய்யக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டதாகவும், அதனை டாடா ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார் என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து அரசின் தலையைத் தடவிய டாடா, அடுத்து இந்திய மக்களைக் குறி வைத்தார். கடனை அடைக்க முடியாமல் டாடா தலை குனிந்தால், அது இந்தியாவிற்கே ஏற்பட்ட தலைகுனிவாகும் என உருவேற்றிய இந்திய அரசு, டாடாவின் கடன் பிரச்சினையைத் ‘தேசிய’ப் பிரச்சினையாக்கியது. இந்திய அரசு வங்கியும் அதன் பத்து துணை வங்கிகளும், டாடா இந்திய நிதிச் சந்தையில் இருந்து 4,200 கோடி ரூபா கடன் திரட்ட துணை நின்றதோடு, இந்தக் கடன் முழுவதற்கும் தாங்கள் உத்தரவாதமளிப்பதாகவும் உறுதி கூறின. டாடா இந்த 4,200 கோடி ரூபாயை, ஜாகுவார் கார் நிறுவனத்தை வாங்குவதற்கு பட்ட கடனில் ஒரு பகுதியைத் திருப்பிச் செலுத்துவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்.
மேலும், இந்த கார் தொழிற்சாலையைத் தூக்கி நிறுத்துவதற்காக லேண்ட் ரோவர் கார்களை இந்திய இராணுவத்தின் தலையில் கட்டும் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளும் நடந்து வருகின்றன. இவை ஒருபுறமிருக்க, ஜாகுவார் நிறுவனத்தை வாங்கியுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியப் பங்குச் சந்தையில் இருந்து 5,800 கோடி ரூபா அளவிற்கு மூலதனத்தைத் திரட்டிக் கொள்ளவும், அதனைத் தனது சர்வதேசக் கடனை அடைக்கப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்திய நடுத்தர வர்க்கத்திடம் டாடாவின் “நானோ” காரை வாங்குவதற்கு இருந்த ஆசையையும், தனது கடனை அடைப்பதற்கு நரித்தனமாகப் பயன்படுத்திக் கொண்டார், டாடா. டாடாவின் நானோ காருக்கான முன்பதிவு கடந்த ஏப்ரல் 10 தொடங்கி ஏப்ரல் 25 வரை நடந்தது. “காரை முன்பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தின் விலை முன்னூறு ரூபா. வங்கிக் கடன் மூலம் காரை முன்பதிவு செய்யும்பொழுதே காருக்கான முழுத் தொகையையும் வங்கியிடமிருந்து வாடிக்கையாளர் பெயரில் டாடா நிறுவனம் வசூலித்து விடும். அந்தத் தொகைக்கான வட்டியாக கார் மாடலை பொறுத்து ரூ.2,500 முதல் ரூ.4,000 வரை வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே செலுத்த வேண்டும்” என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் 2,03,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இந்த முன்பதிவு மூலம் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2,500 கோடி ரூபாயை இந்திய மக்களிடமிருந்து வசூலித்துள்ளது.
‘‘டிமாண்டில்” உள்ள காரை வாங்குவதற்கு முன்பதிவு செய்யும்பொழுது, அக்காரின் விலையில் நான்கில் ஒரு பங்கைத்தான் முன்பணமாகச் செலுத்தும் வழக்கமும், குலுக்கலில் கார் கிடைக்காதவர்களுக்கு அம்முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடும் வழக்கமும்தான் நடைமுறையில் இருந்து வருகிறதாம். ஆனால், டாடாவோ, பாம்பு-கீரிச் சண்டையைக் காட்டப்போவதாகக் கூறியே அப்பாவிகளிடம் காசு பறித்துவிடும் மோடி மஸ்தான் போல, நானோ பிரியர்களிடம் முழுத் தொகையையும் வசூலித்து விட்டார்.
இந்த 2,03,000 நானோ பிரியர்களுக்கும் கையில காசு வாயில தோசை என்றபடி உடனே கார் கிடைத்துவிடாது. இவர்களுள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இலட்சம் பேருக்கு 2010-ஆம் ஆண்டில்தான் கார் கிடைக்கும். மீதிப் பேருக்கு 2011-ஆம் ஆண்டின் இறுதியில் கிடைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஒரு நானோ காரைத் தயாரிப்பதற்குப் பல்வேறு வரிச் சலுகைகளின் மூலம் 60,000 ரூபாயை மானியமாக ஏற்கெனவே டாடாவிற்கு வழங்கிவிட்டார், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி. இப்பொழுது இந்திய நடுத்தர வர்க்கத்திடமிருந்து எவ்வித ஈடும் இன்றி, வெண்ணிலையாக 2,500 கோடி ரூபாயைச் சுருட்டிக் கொண்டுள்ளார், டாடா.
இந்த 2,500 கோடி ரூபாயும் டாடாவின் கடன் நெருக்கடியைத் தீர்க்கப் பயன்படக் கூடும். டாடா தனது கடனை அடைக்க 2,03,000 இந்தியர்களின் சட்டைப் பைக்குள் கையை விட்டுள்ளார். நடிகர்-நடிகைகள் தங்களது கவர்ச்சியைக் காட்டி அப்பாவி ரசிகர்களை வீழ்த்துவதைப் போல, டாடா தனது நிறுவனத் தயாரிப்புகளுக்கு இருக்கும் கவர்ச்சியைக் காட்டி, இந்திய நடுத்தர வர்க்கத்தை வீழ்த்தியிருக்கிறார். இந்த வேசித்தனத்திற்கு இந்திய அரசும், இந்திய அரசு வங்கியும் மாமா வேலை பார்த்துள்ளன.
டாடா இப்படி ஊரான் பணத்தை விழுங்குவது புதிய விசயமல்ல. இந்தியப் பொதுத்துறை நிறுவனமாக
இருந்த விதேஷ் சன்சார் நிகாமை (வீ.எஸ்.என்.எல்.) ரத்தன் டாடா கைப்பற்றியபொழுது, அந்நிறுவனத்தின் சேமிப்பாக இருந்த 1,000 கோடி ரூபாயை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தனது தொலைதொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்றக் கடத்திக் கொண்டு போனார், அவர். வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே!
_________________________________________
புதிய ஜனநாயகம் ஜூலை 2009
_________________________________________
ரத்தன் டாடா பிளேடு பக்கிரியா?…
வெளியில் அம்பலமாகாத ரத்தன் டாடாவின் நிதி மோசடிகள் இன்னும் எத்தனை இருக்குமோ? மாட்டிக் கொள்ளாதவரை எல்லா முதலாளிகளும் யோக்கிய சிகாமணிகள்தானே! https://www.vinavu.com/2009/07/15/tata/trackback/…
உலகை குலுக்கிய பொருளாதார மந்தத்தால், முதலாளிகள் தனக்கு கிடைக்கும் லாபத்தில் வந்த நட்டத்தை, அரசு மூலமாக பெரும்பான்மை மக்கள் மேல் தூக்கி போட்டுவிட்டார்கள். தனக்கு தொழிலே போச்சு என்பவர்கள் சிறுமுதலாளிகள் தான். பெரிய முதலாளிகள் தப்பித்து விட்டார்கள். ரத்தன் டாடா பழம் தின்று கொட்டை போட்ட முதலை. நஷ்டமடைவரா என்ன?
பொருளாதார மந்தம் அமெரிக்க வால்ஸ்ட்ரீட் தலை குப்புற கவிழ்ந்து கிடந்தது. அதற்கடுத்து வந்த அமெரிக்க செனட் கூட்டத்தில்…இதுபற்றி விவாதிக்க தொடங்கும் பொழுது “விருந்து முடிந்துவிட்டது” என்று தான் தொடங்கினார்களாம்.
அமெரிக்கா, செனட்டில் உட்கார்ந்திருப்பவன்கள், ஜனாதிபதி, பெரிய நிறுவனங்களின் பொறுப்புகளில் இருப்பவர்கள், தரகு முதலாளிகள், எல்லாருமே திருட்டு கம்மனாட்டிகள். ஒருத்தனுக்கும் எந்த இழப்பும் இல்லை. மாறாக இதை வைத்து நிறைய பேர் நிறைய கோடிக்கணக்கில் சம்பாதித்து தான் இருக்கிறார்கள்.
நேற்று இரவு (14.07.09 ) சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்ற சிவனடியார் ஆறுமுகச்சாமி அங்கே வந்த பக்தர்களிடம் பணம் கேட்ட தீட்திதர்களை எதிர்த்துக் கேட்டிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த தீட்திதப் பார்ப்பனர்கள் அந்த முதியவரை வயதானவர் என்றும் பாராமல் தாக்கியிருக்கின்றனர். காயமுற்ற சிவனடியார் தற்போது அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். ம.க.இ.க வின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிவனடியாரின் கனவான தமிழில் பாடுவதும், கோவிலை அரசு கையிலெடுப்பதும் நிறைவேறிய நிலையில் சிதம்பரம் தீட்சிதர்கள் அவர் மீது கொலைவெறியில் இருப்பதும் இப்போது அதை வெளிப்படையாக காட்டியிருப்பதும் அரசு அவாள்களைக் கண்டு பயப்படுவதன் விளைவே.
வினவு
கடுமையாக கண்டனம் தெரிவிக்க வேண்டிய நிகழ்வு இது. அந்தப் பெரியவருக்கு உரிய சிகிச்சையும் அவரைத் தாக்கிய தீட்சித ரவுடிகள் யாரெனக் கண்டறிந்து உடனடியாக தண்டனையும் வழங்க வேண்டும்.
அதே நேரத்தில், போயும் போயும் கோவிலுக்குள் காலை வைத்து கண்டதை மிதிப்பானேன்! காயப் படுவானேன்! காட்டுமிராண்டிகள் இப்படித் தாக்கும் போது கடவுள் காப்பாற்றியதாக எங்கேயாவது சரித்திரம் இருக்கிறதா?
மதங்களைப் பற்றி நான் எழுத முயற்சித்து வரும் கட்டுரை பூர்த்தி அடையும் வரை இந்தக் கோபத்தை அடக்க முடியாமல் இப்போதே கொட்டி விட்டேன்.
உழைக்காமல் தின்று கொழுத்து, கொழுப்பு செய்கிற வேலை இது. (உடனே சிலர் வேகமாக மணியாட்டுவது எவ்வளவு சிரமமான வேலை என்பார்கள்! )
தீட்சிதர்கள் மேலே உள்ள கிரிமினல் மற்றும் திருட்டு வழக்குகளை விசாரிக்க விரைவுப்படுத்த வேண்டும். மக்கள் மத்தியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு, தீட்சிதர்களை அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ, அங்கேயே போக சொல்ல வேண்டும். இல்லையெனில், கோயிலை விட்டு வெளியே துரத்த வேண்டும்.
தில்லையில் பார்ப்பன சதிராட்டம்
அடிவருடிகளின் ஒயிலாட்டம்
http://kalagam.wordpress.com/2009/07/15/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9-%e0%ae%9a%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0/
இதை இப்படியே விட்டுவிடுவதா… உங்கள் நடவடிக்கை என்ன? அரட்டையே பிரதானமாக இருக்கும் வலைப்பதிவுகளிலாவது விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே
சிவனடியார் ஆறுமுகசாமியை தாக்கிய பார்ப்பன தீட்சித ரவுடிகளை கண்டித்து வெள்ளிக்கிழமையன்று சிதம்பரத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம்.
இது மிகவும் திட்டமிட்டதாக்குதல். நேற்று இரவு சில பக்தர்கள் திருச்சிற்றம்பலத்தில் திருவாசகம் பாட சென்றபோது தீட்சித ரவுடிகள் காசு கேட்டிருக்கிறார்கள். அவர்கள் அதை தரமறுக்கவே அவர்களுக்கு ஆதரவாக ஆறுமுக சாமி பேசியவுடன் தாக்கியிருக்கிறார்கள். சில மாதங்களாகவே பார்ப்பன மதவெறிஅமைப்புக்கள் இப்பிரச்சினையை கையிலெடுத்து வருகின்றன.
திருட்டு கம்மனாட்டிங்களை எல்லாம் தலையில தூக்கி கொண்டாடடறதுதான் நம்ம பழக்கம்…கோவை அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் ஊர் முழுக்க திருடிப்பிட்டு மாணவர்களுக்கு ஒழுக்கம் கற்ப்பிக்கும் ஆசான் வேலையில் இருப்பதும் ஒரு உதாரணம். எல்லாம் காலக் கொடுமைங்க சாமி…
http://timesofindia.indiatimes.com/NEWS-City-Chennai-Huge-amounts-flowed-into-trust-run-by-V-Cs-wife/articleshow/4778398.cms
I think all the message are wrong
1. TATA company already informed all the consumer what they are going to do and how they are going to implment also
then when will get the car also
The people and the same guy report this message
Where the guy went last one year (he come to know now only )
THanks
is their car going to come in july?!!!!!!
இந்திய அரசு ‘ஏமாந்தாங்க’ – இங்கிலாந்து அரசி ‘ஏமாந்தாங்க’ – இந்திய மக்கள் வழக்கமா கையில தோசையில்லாம காசுக் கொடுக்க விரும்பாதவங்க – எப்படி ‘ஏமாந்தாங்க’ ?
வாக்க காப்பாத்துவாரோ ?
போதும் நிறுத்துங்கப்பா! பிச்சைக்காரக் கிழவனை பாட சொல்லி நாடகமாடிப்புட்டு, தீட்சிதர்களை மேசும் அசிங்கப்படுத்த அந்தக் கிழவனை வைத்தே சீனப்போட்டுக்கிட்டு இருக்காங்க! உடனே பார்ப்பான திட்டருத்துக்கு பத்து பேர் கிலம்பிடுவானுங்க. இத விட கோடி கோடியா பணம் புரளுர தேவாலயத்துல போய் உங்க வீரத்த காமிங்களேன்ப்பா பாக்கலாம்.
//போதும் நிறுத்துங்கப்பா! பிச்சைக்காரக் கிழவனை பாட சொல்லி நாடகமாடிப்புட்டு, தீட்சிதர்களை மேசும் அசிங்கப்படுத்த அந்தக் கிழவனை வைத்தே சீனப்போட்டுக்கிட்டு இருக்காங்க! உடனே பார்ப்பான திட்டருத்துக்கு பத்து பேர் கிலம்பிடுவானுங்க. இத விட கோடி கோடியா பணம் புரளுர தேவாலயத்துல போய் உங்க வீரத்த காமிங்களேன்ப்பா பாக்கலாம்// இதுதான் பார்ப்பன திமிர் என்பது! கோயில் சொத்துக்களை அமுக்கி, தின்ற திமிர், ஆறுமுகசாமியை பிச்சைக்காரன் என சொல்ல வைக்கிறது. தீட்சிதர்களை கோயிலை விட்டு மக்களே துரத்தியடிக்க வேண்டும். ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
எந்த தேவாலயத்தில் ஜெபம் செய்ய காசு கேட்கிறார்கள்? என்று கூறினால் நன்றாக இருக்கும்.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு, தமிழன் சோற்றை தின்றுகொண்டு, தமிழை பேசியே தமிழனை ஏமாற்றிகொண்டு, கோயிலினுள் தமிழில் பாடாதே என்று கொழுப்பெடுத்து கூறும் பார்ப்பானை திட்டாமல் கொஞ்சவா முடியும்.
கோயிலுக்கு கடவுளை தரிசிக்க வருபவர்களிடம் காசு வாங்கும் தீட்சிதர்கள் தான் பிச்சைக்கார நாய்கள்.
தமிழில் ஏன் பாடக்கூடாது என்று அவர்களிடம் கேட்க உனக்கு தைரியமில்லையா? வெட்கமாயில்லை, தாய்மொழியை அவமானப்படுத்துவது.
திருட்டு தீட்சிதனுக்கு கொழுப்பு அதிகமா இருக்கு. அவனை அங்கிருந்து தூக்குவது தான் தமிழக பக்தர்களுக்கு கிடைக்கும் உண்மையான நீதி.
உண்டியல் காசுக்காக பூசாரி வேசம் போட்டுக்கொண்டு இருப்பது தீட்சிதன் தானே. பக்தர்கள் போடு காணிக்கையை அபேஸ் பண்ணுவது தீட்சிதன் தானே. அரசு உண்டியல் வைத்ததும் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தது தீட்சிதன் தானே. அப்போ பிச்சைகாரன் தீட்சிதன் தான்.
சுயமரியாதை உணர்வோடு தமிழில் வழிபடும் உரிமைக்காக போராடியவர் ஆறுமுகசாமி. அவரை திட்டுரதுக்கு ஆயிரம் பார்ப்பானுங்க கிளம்புறாங்கப்பா!
அதுதாங்க டெக்னிக்கு
எல்லோருக்கும் முந்தி திருடன் திருடன்னு கத்திக்கிட்டே ஓடினா தப்பித்துக்கிடலாம் பாருங்க
தோழமையுடன்
செங்கொடி
டாடா வோட லெவலுக்கு பிளேடு பக்கிரி என்பதெல்லாம் மதிப்பான பெயர்கள்
தோழமையுடன்
செங்கொடி
//டாடா வோட லெவலுக்கு பிளேடு பக்கிரி என்பதெல்லாம் மதிப்பான பெயர்கள் //
ஆமாங்க! ரொம்ப தப்பு பண்ணீட்டீங்க. அந்த மூதேவிக்கு இந்த பேரை வச்சுட்டீங்களே. பாருங்க பாவம் நம்ம சைதாபேட்ட பக்கிரி காலையில இருந்து ஒண்ணுமே சாப்பிடலை. போயும் போயும் அந்த ……மாரியோட கம்ப்பேர் பண்ணீட்டாங்களேன்னு…
நேனோ கார் வாங்க பதிவு செய்தவர்கள், இதையெல்லாம் தெரிந்துதான் செய்துள்ளனர். யாரும் இதுவரை
குறை சொல்லவில்லையே. அதில் எதுவும் தில்லுமுல்லு அல்லது குற்றம் நடந்தாக தெரியவில்லை.
இது, நீங்க சொல்வது போல பெரிய விசியம் அல்ல.
ரட்டன் டாடா அதிக கடன் வாங்கி, அந்நிறுவனங்களை வாங்கியது மடத்தனம். பல வருடங்களாக அரும்பாடுபட்டு உருவாக்கிய டாடா குழுமம் இன்று தடுமாறுகிறது.
இந்த விசியத்தில் தவறு என்றால், அது அய்ரோப்பிய நாடுகளின் அரசுகள், தனியார் முதலாளிகளுக்காக
“உதவி” செய்த விசியங்க:. அது சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு விரோதமானது.
குரோனி காபிடலசித்திற்க்கு வித்திடும் கொள்கை அது. ரோவர் மற்றும் இதர நிறுவனங்கள் திவால் ஆனால்,
அதை அரசு “காப்பாற்ற” வரிப்பணத்தை செலவு செய்வது சரியல்ல. ஆனால் நடைமுறையில் இவ்வாறு
அரசுகள் இருப்பதில்லை. தத்தம் நாட்டின் “முக்கிய” நிறுவனங்கள் திவலாகாமல் பாதுகாக்கவே முயல்கின்றன.
இந்திய அரசு அப்படி பெரிதாக ஒன்றும் செய்வதில்லை. செய்ய பணமும் இல்லை.
குஜராத் அரசு மான்யம் அளிக்கவில்லை. மே.வங்கத்தில் இருந்து டாடா ஆலை, வேறு மாநிலத்திற்க்கு
மாற முயன்ற போது, பல மாநிலங்கள் கடும் போட்டி போட்டன. அதற்காக பல சலுகைகள் அளித்தன.
அதில் சிறந்த பேக்கேஜ் மற்றும் இதர கட்டுமான விசயங்கள், தொழிலாளர்களின் திறமைகள் மற்றும்
மாநில அரசின் லஞ்ச அளவுகள் போன்றவையே, நேனோ கார் ஆலையை குஜராத்திற்க்கு கொண்டு சென்றது.
ஆனால் சுதந்திர சந்தை பொருளாதார சித்தாந்ததின்படி, எந்த ஒரு அரசும், எந்த ஒரு தொழில் நிறுவனத்திற்க்கோ, தொழில் துறைக்கோ எந்த பாரபட்சமும், சலுகையும் அளிக்க கூடாது. காட்டு பூக்கள், தானே மலர்வது போல், இயற்க்கையான போக்கில் அரசு தலையிடக்கூடாது. ஆனால் நடைமுறையில் அந்த அளவிற்க்கு உலகின் எந்த அரசும் இருப்பதில்லை.
அதியமான் ! நானோ கார் வாங்க முன்பதிவு செய்பவர்கள் எல்லாம், கார் வாங்க நெடுநாளாக ஆசைப்பட்ட கீழ் மற்றும் மத்திய நடுத்தர வர்க்க மக்கள். அவர்களின் நீணடநாள கனவினை டாட்டா சாமார்த்தியமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது. பேங்க லோன் பத்திரத்தில் கீழே, * நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்று ஒரு வரி இருக்கும். அது இப்போதுதான் தெரிய வருகின்றது. உங்களைப் போன்ற மில் முதலாளிகளுக்கு நடுத்தர வர்க்கத்தின் குறைபடுவது தெரிய வாய்ப்பு இல்லை. உங்கள் பதிவிலேயே, குஜராத் அரசு மான்யம் அளிக்கவில்லை என்று சொல்லி விட்டு, பின்பு சலுகை அளித்து உள்ளதாக மெழுகுகிறீர்கள். மோடி என்ன தங்கள் பாட்டன் சொத்தையா எடுத்து அளித்தார். தமது கட்சியில் உள்ள அடிபொடிகள், சப்காண்டிராக்ட் எடுத்து துட்டு அள்ளதான் மக்கள் பணத்தை எடுத்து மொய் எழுதினார். உடனே நீங்கள், குஜராத் அரசுக்கு வரி மூலமாக பணம வரும் என்று கதைக் கட்டாதீர்கள். வரியும், மற்ற பணிகளுக்கான கமிழனாக பின்பு மோடியின் பைகளுக்கே செல்லும். //ஆனால் சுதந்திர சந்தை பொருளாதார சித்தாந்ததின்படி, எந்த ஒரு அரசும், எந்த ஒரு தொழில் நிறுவனத்திற்க்கோ, தொழில் துறைக்கோ எந்த பாரபட்சமும், சலுகையும் அளிக்க கூடாது. காட்டு பூக்கள், தானே மலர்வது போல், இயற்க்கையான போக்கில் அரசு தலையிடக்கூடாது// அப்பா சாமி ! அஜித் மாதிரி வசனமா ? காட்டுப் பூக்கள் மாதிரி கேட்பாரற்று இருப்பவர்கள், உழைக்கும் மக்கள்தான்.
இவர் ரத்தன் டாடா இல்லை….rotten tata (அழுகிய டாடா ).
ஒரு குறு விவசாயி ஐயாயிரம் ரூபாய் கடனை கட்டமுடியவில்லை என்றால் அவரது சொத்தை நீதிமன்றம் செல்லாமல் நேரடியாக ஜப்தி செய்யும் வசதி கூட்டுறவு வங்கிகளுக்கு உண்டு. ஆனால் ஆயிரம் கோடிகள் கடனை கூட கட்டாமல் தள்ளுபடி பெறும் வசதி டாடாக்களுக்கு உண்டு. நல்ல நீதி பரிபாலனம்.
அறிவுடை நம்பி,
நான் ஒரு மில் முதலாளி அல்ல ; ஒரு சிறு தொழில் முனைவோன். ஆனால் எதிர்காலத்தில் மில் முதலாளி ஆக விழைகிறேன். பைக்கில் செல்லும் உங்களை போன்ற ஒரு நடுத்தர வரகத்தினன் தான்.
நானே கார் வாங்க பதிவு செய்திருந்தவர்கள், போலிஸில் புகார் அல்லது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
ஆனால் அவர்கள் காத்திருக்க தயராக இருக்கிறார்கள். ஏனெனில் காரின் விலை அப்படி மலிவு அல்லது பிற காரணிகள். ஓ.கே. இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல.
குஜராத் அரசு வரி சலுகை அளிக்கா விட்டால், நேனோ தொழிற்சாலை வேறு மாநிலத்திற்க்கு சென்றிருக்கும்.
வரி சலுகை என்றால் : முழு வரி விதிப்பில் ஆண்டுக்கு 200 ருபாய் வரி வருமானம் இருந்த்தால், இப்போது அளிக்கப்பட்ட சலுகையில் சுமார் 150 ரூபாய் வருமானம் வரலாம். ஆனால் தொழிற்சாலையே அங்கு வராவிட்டால், இந்த 150 ரூ உம் கிடையாது. சுழிதான். இதுதான் வரி சலுகையின் சூட்ச்சமம்.
1972 வாக்கில் உச்ச பட்ச வருமான வரி விகுதம் சுமார் 98 % (ஆம் 98 சதம்). இன்று 33.33 சதம்தான்.
அன்று இருந்த வரி விகிதமே இன்று தொடர்ந்திருந்தால், எத்தனை கோடி கோடிகள் வரி அதிகம் கிடைத்திருக்கும். ஆனால் நடைமுறையில் அன்று இருந்த 98 சத வரி விகுதம், தொழில் துறையை நசுக்கி,
புதிய முதலீடுகள் உருவாகாமல் தடுத்து, இருந்தவர்களையும் வெளிநாட்டிற்க்கு விரட்டியது. பிர்லா தாய்லாந்தில் தனது முதலீடுகளையும், பல முக்கிய தொழிற்சாலைகளையும் விரிவு படுத்தினார். லக்ஸ்மி நிவாஸ் மிட்டல் நாட்டை விட்டே வெளியேறினார்.
அன்று இருந்த வரி அளவோடு ஒப்பிட்டால் இன்று கடுமையான சலுகைதான். அப்ப ?
வரி விகுதம் குறைத்தின் விளைவை தான் பார்க்கவேண்டும். புதிய தொழில்கள் உருவாகி செவ்வனெ வளர்ந்ததால், இன்று பல பல ஆயிரம் மடங்கு அதிக வரி வசூல் மழை கொட்டுகிறது. 1980இல் வரி வசூலையும் இன்றைய அளவை ஒப்பிட்டாலே புரியும்.
மாநிலங்களுக்குள் போட்டி. அதே போல் நாடுகளுக்குள் போட்டி : புதிய முதலீடுகளை. தொழிற்சாலைகளை வரவேற்று வளம் பெற போட்டி. அதன் விளைவாக வரி சலுகை அளிக்க முனைப்பு. புதிதாக வரி வசூலே உருவாகாமல் இருப்பதை விட சிறிது சலுகை காட்டி நல்ல வரி வசூல் மற்றும் வேலை வாய்ப்பை அதிகரிக்க
முயல்வதில் என்ன தவறு ?
பெரும் நிறுவனக்கள் கூட தங்களில் சிறந்த வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளை அளித்து, அவர்களை
தக்க வைக்க முயல்கின்றன. அதற்க்கு இணையானதுதான் இந்த வரி ‘சலுகைகள்’ ;
or the coice is yours. you can show no tax breaks and other saluhaihal and retain status quo with no new investements into your state or nation. that is all.
மக்கள் விரோத செயலையே மக்கள் நலனாக காட்ட முனைகிறார்கள். இப்படிக் காட்டுவதன் மூலம் மக்கள் விரோத பாசிஸ்டுகளை நல்லவர்களாக முலாம் பூசுகின்றனர்.
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தங்களின்(விவசாயிகள்,நெசவாளர்கள்,சிறுவியாபாரிகள்,தொழிலாளர்கள்)எதிர்காலம் கேள்விக்குறியாகி தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவர்களோ வரிச்சுமையினால் முதலாளிகள் நாட்டை விட்டு போய் விட்டதாக கண்ணீர் விடுகின்றனர். ஏதோ முதலாளிகள் தங்கள் சட்டைப் பையிலிருந்து வரி கட்டுவதைப் போல் மோசடியாக கூறுகின்றனர். அதுவே பொதுக்கருத்தாக்க முயல்கின்றனர். உலகின் இன்னல்களுக்கு முதலாளிகளே காரணம் என்று தெரிந்திருந்தும் மோசடியாகவே ம்ழுப்புகின்றனர். இவர்களைப் போன்ற நல்லவர்களின் ஆதரவோடுதான் முதலாளித்துவம் மக்களை ஏய்த்து, ஏறி மிதிக்கின்றது.
askar,
you are generalising and nothing specific but cliches.
///நாட்டின் பெரும்பான்மையான மக்கள் தங்களின்(விவசாயிகள்,நெசவாளர்கள்,சிறுவியாபாரிகள்,தொழிலாளர்கள்)எதிர்காலம் கேள்விக்குறியாகி தற்கொலை செய்துகொள்கிறார்கள்.///
majority are commiting sucide ? prove this with data first.
and argue about the net poverty ratio (some 26 % )when compared to the past.
with data and proof. ok.
I was talking about 1970s when many talented industrialists left India due to very high
tax regime. not now. ok. now reverse is true.
What is makkal virotha seyal ? this cheap internet and PC and cell and millions of new jobs ?
//தோ முதலாளிகள் தங்கள் சட்டைப் பையிலிருந்து வரி கட்டுவதைப் போல் மோசடியாக கூறுகின்றனர். அதுவே பொதுக்கருத்தாக்க முயல்கின்றனர். ///
i didn’t say that. but without running their units successfully and efficiently, how the hell do you
expect tax revenue. and again compare the total tax revenue (adjusted for inflation) now when compared to the past. so what do you suggest. and what about the makkal virotha seyalhal of fascist dictaorhsips in the name communism in former USSR, etc. esp under Com.Stalin who was responsible for mass murder ?
You are totally ignorant of economic realities.and facts. ok.
நண்பரே,
உங்களுடைய கருத்துக்களை தமிழில் எழுதுனால் நன்றாக இருக்கும்.
அதியமானே,
உங்களுக்கு உணவு ம்ற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலையைப் பற்றி தெரியாதா? கம்ப்யூட்டர், செல்போன், முக்கியமா! உணவு முக்கியமா? எது குறைவாக இருக்க வேண்டும்?
//and argue about the net poverty ratio (some 26 % )when compared to the past.
with data and proof. ok.//
கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்த தகவல், 80% பேர் ரூபாய் 20ல் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் என்பது.
சில மாதங்களுக்கு முன்பு வந்த புள்ளிவிவரத்தின் படி உலகில் உள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களில் 50% பேர் இந்தியாவில் உள்ளனர்.
இந்திய விவசாய குடிகளின் ஆண்டு சராசரி வருமானம் வருடத்திற்கே சில நூறு ரூபாய்தான். இதுவும் அரசு புள்ளிவிவரம்தான்.
இத்துனையும் சொன்ன பிறகு அதியமான் பின்வருவதைச் சொல்லுவார்.
“அரசாங்க புள்ளிவிவரத்தப் பத்தி எங்களுக்கு தெரியாதா? அதெல்லாம் நாங்க ஏத்துக்க மாட்டோம். அது தவறான புள்ளிவிவரம்.”
வாழ்த்துக்கள் அதியமான்
//கடந்த முறை ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு அதிகாரப் பூர்வமாக அறிவித்த தகவல், 80% பேர் ரூபாய் 20ல் வாழ்க்கையை ஓட்டுகிறார்கள் என்பது.
///
wronng quote. prove this with links, if you can. this means poverty ratio has INCREASED to some 75 %. and extremet poverty. nonsense.
//You are totally ignorant of economic realities.and facts. ok.//
எல்லாரும் தங்களது பெயருக்குக் கீழே சில ஸ்லோகன் இடுவார்கள். அது போல அதியமானுடைய ஸ்லோகம் மேலே உள்ளது.
You are totally ignorant of historic facts
You are totally ignorant of pure capitalism
You are totally ignorant of Communism Blah blah blah
சிலருக்கு இக்னொரன்ஸ் இஸ் பிலிஸ்…. சிலருக்கு இக்னொரன்ஸ் என்ற வார்த்தையே பிலிஸ்….
பூச்சாண்டி,
I stand by my words. ok
முதலில் நான் எழுப்பிய வினாக்களுக்கும், விவாதத்திற்க்கும் ஆதராபூர்வமாக
பதில் அளிக்க முயலவும். உம்மைப்போன்றவர்கள் பொருளாதார விசயங்களில்
அறியாமை மிக அதிகம் உடையவர்கள்தாம். அதனால் தான் அப்படி
எழுதினேன்.
பூச்சாண்டி பிடிக்கவும் எமக்கு தெரியும். ok.
and for annoymous buggers like you, everything is blahblah blah slogans because of lack of any originality or intellegence. all you can do is write some nonsense like this hiding behind some fake id.
i challege you argue in my blog posts with data and logic, if you can. esp in my post about 1991 crisis and IMF. can you ?
நெறி,,
உணவு, உடை மற்றும் பல அடிப்படை பொருட்களின் விலை உயர்ந்துதான் உள்ளது. ஆனாலும், 60கள் மற்றும் 70களில் இருந்ததை விட ஏழை மக்களின் வாங்கும் திறன், அதைவிட அதிக வேகமாக அதிகரித்துள்ளது. அரிசி விலை, அன்று இருந்த விகுததில் இன்றும் தொடர்ந்திருந்தால், கிலோ 50 ருபாய் இருக்கும். அதனால் தான் விவசாயிகளின் வருமானம் குறைந்துவிட்டது. காரணம் அதிக உற்பத்தி.
உடை : இவ்விசியத்தில், 45 வயதிற்க்கு மேற்பட்டவர்களுக்கு நேரடி அனுபவம் உண்டு. அதவாது 70கள் வரை ஏழைககள் கிழ்ந்த கந்தல்களை அணிவது மிக சகஜம். இன்று ஒரு நாள் உழைப்பின் கூலியில்
ஓரளவு நல்ல உடை / புடவை வாங்க முடிகிறது. காரணம் உற்பத்தி தாரளமயமாக்கபட்டதால். (முக்கியமாக
ரிலயன்ஸ் பாலிஸ்டர் துணி உற்பத்தியல் செய்த புரட்சி மற்றும் மாபெரும் உற்பத்தி அளவு மற்றும் திறன்).
வறுமைக்கோட்டிற்க்கு கீழ் இன்று 26 சதம் மக்கள்தாம். அதாவது 110 கோடி மக்கள் தொகையில், 26 சதம்.
அன்று 50 சதத்திற்கும் அதிகம். ஆனால் போக வேண்டிய தூரம் மிக மிக அதிகம். ஊழல், மற்றும் அராஜகம்
மிக மிக அதிகமாக இருப்பதால், அரசின் செல்வுகள் சரியான மக்களுக்கு செல்லாமல் திருடப்படுகிறது. இது ஒரு முக்கிய காரணி.
1980இல் வந்த “வறுமையின் நிறம் சிகப்பு” படத்தை பார்க்கவும். அன்று இருந்த நிலைக்கு இன்று பரவாயில்லைதான்.
inflation rate is currently far tolerable than the terrible days of 60s and 70s when 20 % was normal which impoverished crores due to high prices. read more about our economic history.
அதியமான் ! ஏழை மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து இருப்பதாக நீங்கள் சொல்வது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். தாராளமயம் அவர்களுடைய சம்பளத்தினை வீழ்ச்சி அடையச் செய்து விட்டது – 10 வேலையிடங்கள் உருவானால், 1000 பேர் அதற்குப் போட்டிப் போடுகிறார்கள். ஆக, சம்பளம் குறைகிறது, தொழிலாளர்களின் பேரம் பேசும் திறம் குறைகிறது. அன்று 1000 வாங்கியவர்கள் இப்போது 3000-6000 குள் வாங்குகிறார்கள். ஆனால் விலைவாசிகள் மட்டும் 10 மடங்கு உயர்ந்து உள்ளது. நீங்கள் சொல்கின்ற லைசன்ஸ் ராஜ்ஜியம் (60 – 70) காலத்தில் கூட லோக்கல் முதலாளிகள் மக்களைச் சுரண்டினார்கள். //அரிசி விலை, அன்று இருந்த விகுததில் இன்றும் தொடர்ந்திருந்தால், கிலோ 50 ருபாய் இருக்கும். அதனால் தான் விவசாயிகளின் வருமானம் குறைந்துவிட்டது. காரணம் அதிக உற்பத்தி.// ஆனால் மேலைநாடுகளில் இந்த நிலை இல்லையே ? அங்கே மட்டும் விவசாயப் பொருட்களின் விலைக்குறையவில்லையே – குறைகின்ற இடங்களில் மான்யம் அளிக்கிறார்கள் – ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை மட்டும் மான்யம் அளிக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். இதுதான் விவசாய உணவு உற்பத்திப்பொருட்களின் விலைகுறைவிற்குக் காரணம். G8 இலேயே ஒத்துக் கொண்டிருக்கிறார்கள் வளரும் நாடுகள் விவசாயத்திற்கு நிதி ஒதுக்குவது குறைவதாக ! ஒருபுறத்தில் விலைபொருட்களுக்கு விலைகிடைப்பது இல்லை – இடுபொருட்களின் விலை உயர்ந்து விட்டது – நவீன ரசாயன உரங்களால் மண்ணின் மலட்டுதன்மை மிகுந்து விட்டது – ஆக அதிகம் செலவு செய்து இந்த விளைச்சலைப் பெற வேண்டி உள்ளது. ஆனால் மறுபுறத்திலோ மற்ற பொருட்களின் விலைகள் மிக அதிகமாக அதிகரித்து விட்டன- விளைவு – வாங்கும் திறன் – விலைவாசிக்கேற்ற விதத்தில் உயர வில்லை.
உடையைப் பற்றிச் சொல்லும் போது, ரிலையன்ஸின் புரட்சி பற்றிச் சொன்னீர்கள் – அண்ணன் அசுரன் ரிலையன்ஸின் பாலியஸ்டர் அயோக்கியத்தைப்பற்றி எழுதிய பதிவை (ஒரு மேல்நாட்டுப் பத்திரிக்கையாளர் எழுதியதை அசுரன் மேற்கோளிட்டு உள்ளார்) நான் நாளை தருகிறேன். பாருங்கள். உடை உற்பத்தி தாரளாமயமாக்கப்பட்டதால் முதலாளிகள்தான் லாபமடைந்தார்கள், மாறாக, மண்ணினை மாசுப்படுத்தும் இந்த தொழில் திட்டமிட்டமுறையில் ஏழைநாடுகளின் தலையில் கட்டப்பட்டது.
அய்யா அதியமானே… கீழே உள்ள இணைப்பை பார்க்கவும்… இந்தியாவில் வருமைகோடு என்பது மாத வருமானம் ரூபாய் 538 நகரத்திலும், ரூபாய் 356 கிராமங்களிலும் அளவுகோலாக இந்திய அரசினால் எடுத்துக்கொள்ளப்படுகிறது.. இந்தக்கனக்குபடியே 28% சதவீத மக்கள் வறுமையில் உள்ளனர்.. இந்தியாவில் வருமான வேறுபாட்டு விகிதம் அதிகரித்துக்கொண்டு வருகிறது எனவும் அறிக்கை கூறுகிறது… இதெல்லாம் உங்களின் முதலாளித்துவத்தின் மகிமையினால்தானே..
அண்ணே…கொஞ்சமாவது கருணை இருந்தால் யோசித்து பாருங்கள் ஒரு குடும்பம் ஏறக்குறைய மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் தன்னுடைய உணவு தேவையை பூர்த்தி செய்யுமா, மருத்துவத்திற்க்காக செலவிடுமா அல்லது அதனை கல்விக்காக செலவிடுமா?
http://en.wikipedia.org/wiki/Poverty_in_India
http://en.wikipedia.org/wiki/Below_Poverty_Line_(India)
//Internationally, an income of less than $1 per day per head of purchasing power parity is defined as extreme poverty. By this estimate, about 45 percent of Indians are extremely poor. If the daily income per head is less than $2, then the family is described as poor and about 80 percent of Indians are poor. Income-based poverty lines consider the bare minimum to income to provide basic food requirements; it does not account for other essentials such as health care and education. That is why some times the poverty lines have been described as starvation lines.//
30 வருடத்திற்கு முன்பு என்ன அளவுகோல் இருந்ததோ அதையே வைத்து இன்னமும் வண்டி ஓட்டி கொண்டு இருக்கிறார்கள்.. எல்லாம் உங்களை மாதிரி ஆட்களின் தயவுலதான்….!
80 கோடி மக்கள் தினமும் ரூ.20இல் வாழ்வதாக ஒரு தகவல். இப்போது 2 டாலர் (ரூ.100) என்று ஒரு தகவல். ஆக இந்த 80 கோடி / ர்ர்.20 என்பது புருடா. அதைதான் சுட்டினேன்.
பகத்,
இந்திய அரசின் புள்ளிவிவரங்கள் பழைய அடிப்படையை வைத்துத்தான். ஆனால் உலக வங்கியின் அறிக்கை : http://www.worldbank.org.in/WBSITE/EXTERNAL/COUNTRIES/SOUTHASIAEXT/INDIAEXTN/0,,contentMDK:21880725~pagePK:141137~piPK:141127~theSitePK:295584,00.html
1991க்கு பின் இந்தியாவில் வறுமை கோட்டிர்க்குள் வாழ்பவர்களின் நிகர விகுதம் வெகுவாக குறைந்துள்ளது.
(ஆதாரம் : உலக வங்கி மற்றும் பல அமைப்புகள்) ; வறுமை கோடு என்றால் குறைந்தது ஒரு நாளைக்கு ரூ.50 (ஆதாவது ஒரு டாலர்).
ரிலயன்ஸ் செய்த பித்தலாட்டங்களை பற்றி உங்க அசுரனை விட நான் அதிகம் அறிவேன். நேரடி அனுபவம் உண்டு. ஆனால் ரிலையன்ஸ் மற்றும் பிர்லா ஆலைகள் உருவாகும் வரை கடுமையான துணி பஞ்சம். கள்ள சந்தைகள். கந்தல் ஆடைகள். அதை பற்றி பெரியவர்களிடம் விசாரித்து பாருங்கள்.
1991வரை மூடப்பட்ட பொருளாதார அமைப்பு. (உங்க மாதுரி ஞானிகளின் வற்புறுத்தலால்); அதை நம்
வறுமையை பல மடங்கு அதிகரித்தது. வேலை இல்லாத் திண்டாட்டம் 70களிலும், 80களிலும் மிக உச்சம் பெற்றது. 1991இல் இந்தியா திவாலன நிலையை அடைந்த்தது.
எமது இந்த பதிவின் http://nellikkani.blogspot.com/2008/05/1991.html இறுதியில் எழுப்பிய வினாவிற்க்கு, இங்கு யாராவது ஆதாரபூர்வமாக பதிலளிக்க முடியுமா ?
சரி. மாற்று வழி என்ன சொல்றீக ? செம்புரட்சியா ? எப்போது ? எப்படி ? அதன் பின் மட்டும் உருப்படியான
தீர்வு பிறக்குமா என்ன ? வரலாறு வேறு விதமாக சொல்கிறதே ?
//India Estimates: Similarly, estimates for India also indicate a continuing decline in poverty. The revised estimates suggest that the percentage of people living below $1.25 a day in 2005 (which, based on India’s PPP rate, works out to Rs 21.6 a day in urban areas and Rs 14.3 in rural areas in 2005 ) decreased from 60% in 1981 to 42% in 2005. Even at a dollar a day ( Rs 17.2 in urban areas and Rs 11.4 in rural areas in 2005 ) poverty declined from 42% to 24% over the same period//
PPP means purchasing power parity and not in actuals.
all estimates by various organisations across the world prove that poverty declined dranstically in India in recent decades. and in practical life we can perceive. that is by people who are over 45 and who have wider experience in life.
/ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகளை மட்டும் மான்யம் அளிக்கக் கூடாது என்று மிரட்டுகிறார்கள். //
yes, but we don’t care or obey them. ok. No one can stop India subsidising its farmers. but the problems is lack of money with govt of India to subsidise. see my old post about Indian agriculture and farmer sucides :
விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்
http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html
also see this :
http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_17.html
விலைவாசி ஏன் உயர்கிறது ?
அதியமான் ! //Even at a dollar a day ( Rs 17.2 in urban areas and Rs 11.4 in rural areas in 2005 ) poverty declined from 42% to 24% over the same period/// ஒரு நாளைக்கு 17.2 என்றால், 30 நாளைக்கு 518. //which, based on India’s PPP rate, works out to Rs 21.6 a day in urban areas and Rs 14.3 in rural areas in 2005 ) decreased from 60% in 1981 to 42% in 2005.// ஒரு நாளைக்கு 21.6 என்றால், 30 நாளைக்கு 648. சரி purchasing power parity என்றே வைத்துக் கொள்ளுங்கள் – 518 அல்லது 648 க்கு என்ன வெங்காயம் purchas செய்ய முடியும் ? ஒன்று செய்யுங்கள் – சென்னையில் எனக்கு 518க்கு ஒரு paying guest ஆகவாவது ஒரு வீடு பிடித்துக் கொடுங்கள்.
arivudainamnbi,
yes this info is in old value of rupee and can you provide the correct and exact data ? that is did poverty ratio decrease or increase since 1991 under the actual line of Rs.50 a day.
and most importantly, answer my question at the end of my post about 1991 crisis.
and about viable alternatives ?
//80 கோடி மக்கள் தினமும் ரூ.20இல் வாழ்வதாக ஒரு தகவல். இப்போது 2 டாலர் (ரூ.100) என்று ஒரு தகவல். //
அதியமான் ஒரு தகவல் என்று கூறி புறம் தள்ளும் இந்த புள்ளிவிவரம் தேசிய புள்ளிவிவரத் துறையால் கொடுக்கப்பட்டது.
Nearly 80 pct of India lives on less than 20 rupees a day
http://in.reuters.com/article/topNews/idINIndia-28923020070810
இந்த புள்ளிவிவரம் வந்த வருடம்2007. இத்ற்கு பிறகுதான் மிக அபரிமிதமாக விலைவாசி உயர்ந்து மக்களின் வாழ்க்கையை படுகுழியில் தள்ளியது. ஆனால் இதே நேரத்தில் மக்களின் வருமானம் பெரிய அளவில் உயரவில்லை.
பூச்சாண்டி
மன்னிக்கவும் தேசிய புள்ளிவிவரத் துறை என்று குறிப்பிட்டுவிட்டேன். அது அமைப்புசாரா தொழில்முனைவு குறித்த தேசிய கமிசன் குடுத்துள்ள புள்ளிவிவரம் (National Commission for Enterprises in the Unorganised Sector (NCEUS) )
1981 க்கும் இப்போதுள்ள நிலைமைக்கும் இவர்கள் அடிபப்டையாக கொள்வது டாலரில் 1.25 அல்லது 1. ஆனால் 1.25 டாலர் என்பதன் ரூபாய் மதிப்பு 1981ல் இருந்ததற்கும், இன்றைக்கும் இருப்பதற்கும் உள்ள வேறுபாடும், அதே 1981ல் 1.25 டால்ர் இந்தியாவின் விலைவாசிக்கு நிகராக பெற்ற மதிப்பிற்க்கும், இன்றைய விலைவாசிக்கு நிகராக பெறுகிற மதிப்பும் ஒன்றா? ஒப்பிடக் கூடியதா?
அதியமான் வறுமைக் கோட்டை அளவிட பயன்படுத்தும் அளவுகோல் மோசடியானது.
மிக சரியாய் சொன்னீர்கள் நண்பரே.. முப்பது வருடமாக ஒரே அளவுகோலை வைத்துக்கொண்டு வறுமையை ஒழித்துவிட்டோம் என பொய் கூப்பாடு போட்டு வருகின்றனர்…
//Around 26 percent of India’s population lives below the poverty line, which is defined as 12 rupees per day, said officials.//
2 டாலர் என்பதை எப்படி வந்தது என்பதை இதைப்படித்தால் உங்களுக்கு புரியும்…
//This figure has been variously reported as either “2 dollars per day” or “0.5 dollars per day”. The former figure comes from the the PPP (Purchasing power parity) conversion rate, while the latter comes from the official exchange rate. Also note that this figure does not contradict the NSS derived figure, which uses calorie consumption as the basis for its poverty line. It just uses a more inclusive poverty line//
ரூபாய் 12 என்பது வறுமைகோடு என்பதுதான் இந்திய அரசின் அளவுகோல்… நண்பர் அதியமானே நீங்கள் பொருளாதாரத்தில் அறிவு பெற்றவராக இருக்கலாம் பல நுண்ணிய விவரங்களை படிக்கும் நீங்கள் சகமனிதனின் வறுமையை பற்றி தெரியாமல் இருப்பது நன்றா..?
இதனை விடுங்கள் ஒரு மனிதன் சராசரியாக உயிர் வாழ 1200 கலோரிகள் தேவை என நினைக்கிறேன்..( சரியாய் நினைவு இல்லை) இந்த அளவுகோலை எத்தனை சதவீத இந்திய மக்கள் பூர்த்தி செய்கின்றனர்… ? உலகிலேயே ஏன் இந்தியாவில் ஊட்டசத்து குறைவாக உள்ள குழந்தைகள் அதிகம் உள்ளனர்…?
ஒரு உதாரணத்திற்கு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு கடந்த மூன்று வருடங்களில் பெரிய அளவில் வேறுபடவில்லை.
ஒரு டாலர் 2006 இறுதியில் Rs 44.25
2007 இறுதியில் 39.81
2008 இறுதியில்
2009 ல் 49.92
கடந்த மூன்று நான்கு வருடங்களில் ஒரு டாலர் என்பதன் மதிப்பு 10 ரூபாய் முன்னே பின்னே சென்றுள்ளது. ஆனால் இதே நேரத்தில் விலைவாசி உயர்வு என்பது பல பத்து ரூபாய்கள் ஏறிவிட்டது. பெட்ரோல் விலையும் 10 ரூபாய் மேல் ஏறிவிட்டது. இதனை ஒட்டி வீட்டு வாடகை, கல்வி தனியார்மயம், மருத்துவ சேவை விலை போன்றவற்றின் விலையோ ஒப்பிட முடியாத அளவு பல ஆயிரங்களில் ஏறிவிட்டது. யதார்த்தம் இப்படி இருக்கும் போது 1981க்கும் இன்றைக்கும் அதே 1.25 டாலர் வைத்து வறுமை கோட்டை அளவிடுவது பிளேடு பக்கிரி மோசடி போன்றது.
இன்னும் சொன்னால் சுத்தமாக வித்தியாசமே இல்லை. 2006ல் 44 ரூபாயாக இருந்த டாலர் இன்று 47 ரூபாயாக உள்ளது. வெறும் மூன்று ரூபாய் ஏற்றம். இதே நேரத்தில் விலைவாசி பல மடங்கு உயர்ந்துள்ளது.
http://www.fxstreet.com/fundamental/economic-time-series/data/fedstl/exinus.aspx
2006 01 44·2010
2006 02 44·2300
2006 03 44.3378
2006 04 44.8245
2006 05 45.1959
2006 06 45·8886
2006 07 46.3675
2006 08 46·4461
2006 09 46.0105
2006 10 45·3552
2006 11 44.7257
2006 12 44.4835
2007 01 44.2062
2007 02 44.0195
2007 03 43·7936
2007 04 42.0176
2007 05 40·5686
2007 06 40·5905
2007 07 40.2738
2007 08 40·6791
2007 09 40.1735
2007 10 39.3661
2007 11 39.3267
2007 12 39·3750
2008 01 39.2676
2008 02 39.6735
2008 03 40.1452
2008 04 39·9668
2008 05 42·0019
2008 06 42.7633
2008 07 42.7027
2008 08 42.9057
2008 09 45.5300
2008 10 48·6155
2008 11 48.8517
2008 12 48.5132
2009 01 48.6995
2009 02 49·2484
2009 03 51.1291
2009 04 49.9655
2009 05 48·5100
2009 06 47·6736
1981ல் ஒரு டாலர் என்பது 8 ரூபாய் இன்றைக்கு ஒரு டாலர் என்பது 49 ரூபாய். 1981ல் ஒரு ஆரஞ்சு மிட்டாய் விலை ஐந்து பைசாவுக்கு ஐந்து(பொடிசா இருக்கும்) இன்று அதன் விலை 25 அல்லது 50 பைசா.
1981ல் இரண்டு அறைகள் கொண்ட ஒரு வீட்டின் மாதாந்திர வாடகை ஒரு மத்தியத்தர நகரத்தில் 75 ரூபாய் அல்லது 100 ரூபாய் இன்று அதே வீட்டின் வாடகை 1500லிருந்து 3000 ரூபாய்வரை.
1981ல் மதிய உணவு உயர்தரமானது 18 அல்லது 25 ரூபாய் இன்று 75 அல்லது 150 ரூபாய்.
1981ன் 8 ரூபாயும் இன்றைய 49 ரூபாயும் ஒன்றா? அதியமான் அப்படித்தான் சொல்ல விரும்புகிறார்.
இது தவிர்த்து 1981ல் அரசுடமை என்ற வகையிலும், தேசிய பொருளாதாரம் ஓரளவு வலுவாக இருந்தது என்ற வகையிலும் குறைந்த விலை அல்லது இலவசமாக கிடைத்து வந்த சேவைகள்(மருத்துவம், பொதுப் போக்குவரத்து, கல்வி போன்றவை) இன்று பல பல மடங்கு உயர்ந்த விலையில் கிடைப்பதையும் ஒப்பிட்டு நோக்கினால் அதியமான் குறிப்பிடும் வறுமை கோட்டாளர் விகிதம் குறைந்த கதையின் உண்மை அர்த்தம் புரியும்.
வினவுல பூமாரி பொழியுது….
உண்மையிலேயே தூங்குபவர்களை எழுப்பி விடலாம். ஆனால், தூங்குப்வர்கள் மாதிரி நடிப்பவர்களை எழுப்ப முயற்சிப்பது, காளை மாட்டில் பால் கறப்பதற்கு சமம். அதியமானிடம் என்ன சொன்னாலும், திரும்ப திரும்ப //சரி. மாற்று வழி என்ன சொல்றீக ? செம்புரட்சியா ? எப்போது ? எப்படி ? அதன் பின் மட்டும் உருப்படியான
தீர்வு பிறக்குமா என்ன ? வரலாறு வேறு விதமாக சொல்கிறதே // என்று கம்பியுனிஸத்தின் மீது சேறு அடித்துக் கொண்டுதான் இருப்பார். இருந்தாலும் ஒரு நப்பாசையோடு அவரின் (திரும்ப திரும்ப அரைபடும் மாவிற்கு) பதில் சொல்ல முயற்சிப்போம்.
விஷம் 1 : .//அன்னிய முதலீடுகளை, உலகமயமாக்கலை ‘எதிர்ப்பவர்கள்’.
1991இல் திவால் நிலையில் இருந்த, மிக மிக மிக அபாயகரமான
நம் நிலைமையினை வேறு எந்த ‘வழிகளில்’ கையாண்டிருப்பர்கள் ?//
பதில் : ஸ்டாலின் 1935 இலேயே அன்னிய முதலீடுகள் இன்றி செய்து காட்டவில்லையா ? மக்களைப் பொறுத்தவரையில் மிகமிக முக்கியமான உண்மை – இறுதியான சமரசமற்ற மக்கள் கட்டுமானங்கள்தான். வேறு எந்த இடைநிவாரணமும் மக்களின் கலகத்தைத் தணிக்கவே பயன்படும்.
விஷம் 2 : திருவாளர் அதியமான் அவர்கள் அவருடைய அடிபொடிகளான டோண்டு, தமிழ்மணி முதலான ரதகஜ துராதிபதிகளாடு நமது பதில் 1 க்கு, வேறு ஒரு மாவையே பதிலாகத் தருவார்கள். அது ‘இயற்கைக்கு விரோதமான கம்பியூனிசம்’ மற்றும் ஸ்டாலின்கால படுகொலைகள். இவர்களுடைய பாட்டன் சோல்யெட்சினுடைய புளுகைகளையே வெளுத்து வாங்கினாலும், இவர்கள் திருந்துவதாக இல்லை – இவர்கள் தான், தூங்குவதாக நடிக்கின்றவர்கள் ஆச்சே ! எப்படி எழுப்புவது ?
ஸ்டாலின் மீதான அவதூறுக்கான பதிலடி சுட்டிகள் :
1) தோழர் ஸ்டாலினும், துரோகிகளும்! (http://poar-parai.blogspot.com/2007/04/blog-post_24.html)
2)
அந்த அமைச்சரும் மயங்கிச் சரிந்தார் – 8 நாட்களாக சாப்பிடவில்லை! (http://poar-parai.blogspot.com/2007/06/8.html)
3) சோல்சனிட்சின் : “அவலத்தில்” பிறந்த இலக்கிய அத்வானி (http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4246:1&catid=67:2008)
4) துரோகியின் மரணம் (http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2507:2008-08-04-19-09-24&catid=74:2008)
விஷம் 3 : லைசன்ஸ் கோட்டா -வினவு முதலிய கம்பியுனிஸ்டுகளின் கோரிக்கை – பதில் 3: அதியமான் முதலானவர்களின் சாதுர்யம் இதிலேயே அடங்கி உள்ளது. ரத்தன் டாட்டா பட்டைநாமம் போட்டார் என்று சொன்னால், அப்படியே 60-70,60-70 என்று கூவிக்கொண்டே, லைசன்ஸ் கோட்டா கெட்டது என்று நாம் பேசாத விடயத்திற்கு – பதிவின் கருப்பொருளிற்கு வெளியே உள்ள , நாம் ஆதரிக்காத ஒன்றினை நமது கருத்தாக அவர்களே கூறி, பின்பு இந்த நமது கூற்றினை அவர்களே மறுக்கவும் செய்வார்கள். ஆக படிப்பவர், பதிவு சொல்லவரும் கருத்தையும் தவறு என்று புரிந்து கொள்வார்.
பதி 3 : நமது பதில், லைசன்ஸ் கோட்டா ஏன் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இந்திய தரகு முதலாளிகளுக்கு எப்படி உதவியது – அந்தக்கால சிறு தொழில்களை ஒழித்துக் கட்ட எப்படி டாடா, அம்பானிகளுக்கு உதவியது என்பதை தெளிவாக விளக்க வேண்டும். (குரு திரைப்பட விமரிசனம் : அம்பானி: முதலாளிகளின் குரு மோசடிகளின் கரு) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=895:2008-04-26-08-52-54&catid=39:2007
– இது லைசன்ஸ் ராஜ் பற்றிய தனிப்பட்ட பதிவு இல்லை என்றாலும், கட்டுரையின் ஒரு அங்கமாக இது விளக்கப்பட்டிருக்கும்.
விஷம் 4 : ரிலையன்ஸின் பாலிஸ்டர் சாதனை
பதில் 3 :
ஒரு வெளிநாடு எழுத்தாளர் ரிலையன்ஸின் பாலியஸ்டர் தில்லுமுல்லுகளைப் பற்றி எழுதிய ஒரு நூல் அது எனக்கு ஞாபகம் இல்லை. யாராவது தெரிந்தால் பதிவிடுங்கள்.
நான் பதிலளிக்க மறந்து போன பல விடயங்களுக்கு பூச்சாண்டி அவர்கள் மிக நன்றாக பதிலளித்துள்ளார். வாழ்த்துக்கள் பூச்சாண்டி.
நண்பர் பூச்சாண்டி , போட்டு தாக்குங்க… 🙂
http://puchandi.com/ – is not working ?
//http://puchandi.com/// அது சும்மா லுலுவாய்க்கி சைட்டு. நான் வீடில்லா புறம்போக்குங்க.. வலையுலக பூச்சாண்டிங்க…..
//விஷம் 1 : .//அன்னிய முதலீடுகளை, உலகமயமாக்கலை ‘எதிர்ப்பவர்கள்’.
1991இல் திவால் நிலையில் இருந்த, மிக மிக மிக அபாயகரமான
நம் நிலைமையினை வேறு எந்த ‘வழிகளில்’ கையாண்டிருப்பர்கள் ?//
பதில் : ஸ்டாலின் 1935 இலேயே அன்னிய முதலீடுகள் இன்றி செய்து காட்டவில்லையா ? மக்களைப் பொறுத்தவரையில் மிகமிக முக்கியமான உண்மை – இறுதியான சமரசமற்ற மக்கள் கட்டுமானங்கள்தான். வேறு எந்த இடைநிவாரணமும் மக்களின் கலகத்தைத் தணிக்கவே பயன்படும்.
//
அறிவுடைநம்பி என்ற பெயர பாத்து ஏமந்துட்டேன்.
1991இல் நாம் இருந்து அபயாகரமான நிலை பற்றி ஒரு விளக்கமான
பதிவு சுட்டியிருந்த்தேன். அதை முழுசா படிக்காமல், 1935இல் ஸ்டாலின்
(உண்மையில் ஸ்டாலின் காலத்தில் உருவான செயற்க்கை பஞசம் பற்றி
உக்ரேன் நாட்டில் விசாரியுங்கள். எது அவதூறு, எது உண்மை என்று
விளங்கும்) உடன் ஒப்பீடாம்.
1991இல் இந்தியா பற்றி எமது சுட்டியில் முடிந்தால், அதற்க்கு ஈடாக
ஆதாரத்துடன் பதிலளிக்கவும். முக்கியமாக அய்.எம்.எஃப் பற்றி.
//பதி 3 : நமது பதில், லைசன்ஸ் கோட்டா ஏன் ஒரு குறிப்பிட்ட காலக் கட்டத்தில் இந்திய தரகு முதலாளிகளுக்கு எப்படி உதவியது – அந்தக்கால சிறு தொழில்களை ஒழித்துக் கட்ட எப்படி டாடா, அம்பானிகளுக்கு உதவியது என்பதை தெளிவாக விளக்க வேண்டும். (குரு திரைப்பட விமரிசனம் : அம்பானி: முதலாளிகளின் குரு மோசடிகளின் கரு) http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=895:2008-04-26-08-52-54&catid=39:2007
– இது லைசன்ஸ் ராஜ் பற்றிய தனிப்பட்ட பதிவு இல்லை என்றாலும், கட்டுரையின் ஒரு அங்கமாக இது விளக்கப்பட்டிருக்கும்///
ராயகரன் எழுதவது ராயகரனுக்கே புரியாது என்று ஒரு கூற்று உண்டு. :))
லைசென்ஸ் ராஜில் நடந்த கொடுமை பற்றி எமது சுட்டி :
ஒரு மார்க்ஸிய வரலாற்று நிபுணாரான, திரு.பிபின் சந்தரா (ஜெ.என்.யு)
எழுதிய India after 1947
நூலில், இந்த லைசென்ஸ் ராஜ் மற்றும் அதன் விளைவுகள் பற்றி
படித்துப் பார்க்கவும். ராயக்ரனை நாங்க சீரியசா எடுத்துக்கரதல்ல.
அதவாது இன்று சுமார் 80 கோடி மக்கள் ரூ.20 இல் தினமும் உயர் வாழ்கிறார்கள் ? அப்படியானால்
பஞ்சம், பட்டினி சாவு மிக மிக மிக மிக அதிகரித்து, குறைந்தது சில கோடிகள் பட்டினியால்
மடிந்திருப்பார்கள். புரட்சி வந்து உங்க வேல சுலுவாயிருக்குமே.
4இல் ஒரு இந்தியன் கடுமையான வறுமையில், பட்டினியில் இருப்பான்.
அப்படி சொல்கிறது இந்த விவரம். நடைமுறையில் அப்படி இல்லையே.
will write more later with stat..
மதவாதிகள் தாம் தம் குரு அல்லது தேவதூதரை பற்றி விமர்சனம் எழுந்தால்,
அவதூறு என்று வெகுண்டெழுவார்கள். ஸ்டாலின், மாவொ பற்றி உலகில்
அனைத்து ஆய்வாளர்களும், (மார்க்ஸிய ஆய்வளர்கள் உள்பட) பெரும்
கொலைகள் மற்றும் பஞ்சங்களுக்கும், மீறலகளுக்கும் காரணமானவர்கள்
என்று ஏற்று கொள்கிறார்கள்.
இன்னும் ஒரு 60 ஆண்டுகள் கழித்து, தமிழர் அல்லது ஒரு குழு,
இலங்கையில் இனப்படுகொலை நடக்கவெ இல்லை. ராஜபக்சே
மீது அவதூறு செய்கிறார்கள் என்று எழுதினால் எப்படி இருக்கும் ?
உங்க கூற்றும் அதே. நாசி படுகொலைகளை மறுப்பவர்களும்
இன்றும் உள்ளனர்தான்.
உக்ரேன் நாட்டில், பல கோடி மக்கள் வாழ்கிறார்கள். அவர்களின்
மூதாதையினர் கடும் துனப்ங்களை ஸ்டாலின் ஆட்சியில் அனுபத்தவர்கள்.
ஹோலடமர் என்று அதை சொல்வார்கள். நினைவு சின்னங்கள்,
ம்யூசியம்கள் இருக்கின்றது. அம்மக்கள் அனைவரையும்,
அமெரிக்க ஏகாதிபத்திய சதியால் அப்படி ந்ம்பச்செய்ய
முடியாது. ஒவ்வோறு குடும்பத்திலும் இழப்பு இருக்கிறது.
அதன் வலிகளை அவர்கள் அறிவார்கள். அதை பற்றி
பல லச்சம் ஆய்வுகள் மற்றும் அறிக்கைகள் அவர்களே
எழுதியுள்ளனர். அதை ஏற்காமல், அவதூறு என்று
ஒற்றை வார்த்தையில் நிரகாரபது பகுத்தறிவல்ல.
நெருப்புகோழியில் கதை தான் நினைவிற்க்கு வருகிறது.
உண்மைகளை யாராலும் அமுக்க முடியாது.
லைசென்ஸ் ராஜில் நடந்த கொடுமை பற்றி எமது சுட்டி :
http://nellikkani.blogspot.com/2008/01/blog-post_9749.html
‘தாரளமயமாக்கல்’ என்றால் என்ன ?
//அன்று நேருவின் சோசலிசம் என்று புகழப்பட்டதும், தற்போது லைசன்ஸ், பெர்மிட், கோட்டா ராச்சியம் என்று இகழப்படுவதுமான அந்த கொள்கை, உண்மையில் தேசிய முதலாளிகளைத் தான் நசுக்கியதேயன்றி, டாடா பிர்லா போன்ற தரகு முதலாளிகளையல்ல. அதிகார வர்க்க முதலாளிகள் மற்றும் தரகு முதலாளிகளின் நலன்களை ஒரே நேரத்தில் பாதுகாக்கும்படி உருவாக்கப்பட்டிருந்த அந்தக் கொள்கையின் ஆதாயங்களை சட்டபூர்வமாகவும் சந்து பொந்துகளில் புகுந்து லஞ்ச ஊழல்களின் மூலமும் அனுபவித்துக் கொண்டே, அவ்வப்போது தம் அதிருப்தியையும் வெளியிட்டுக் கொண்டிருந்தனர் அன்றைய தரகு முதலாளிகள்.
///
இது ராயகரனின் கண்டுபிடிப்பு. :))
தரகு முதலாளிகள் என்றால் யார் அய்யா ? விளக்குக.
அனைத்து தொழில் முனைவோர்களையும் முடங்க செய்தது அந்த
முட்டாள்தனமான லைசென்ஸ் ராஜ். அனைத்து.
அதற்க்கு அடிப்படை நேருவின் சோசியலிச பாணியும்,
திட்டமிடலும்தான். அதனால் தான் நம் நேர்மையை
முழுவதுமாக இழந்தோம். பெரு முதலாளிகள் முதல்
தொழிலாளர் வரை, அரசியல்வாதிகள் மற்றும்
அதிகாரிகள் அனைவரும் அடிப்படை நேர்மையை
இழக்க அந்த அமைப்பு ஒரு முக்கிய காரணம்.
இதை புரிந்து கொள்வது மிக கடினம். பார்க்க : http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html
நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது
//நேருவின் சோசியலிச பாணியும்,
திட்டமிடலும்தான். //
அதியமான் ஒரு பொய்தியமான் என்பதை மேலே மேற்கோள் காட்டப்பட்டுள்ள அவரது கருத்துக்களை முன்பொருமுறை சவால் விட்டு நிரூபித்த பிற்பாடும் அதே பொய்களை வெட்கமின்றி கடைவிரித்து வருகிறார்.
அவரது நோக்கம் என்றைக்குமே நேர்மையானது அல்ல.
அசுரன்
1991 புரட்சி (IMF) என்று பல முறை ஏதோ அரிய கண்டுபிடிப்புபோல் மீண்டும்/மீண்டும் கிளிப்பிள்ளை போல் வினவு தளத்திலும் வேறு சில தளத்திலும் உளரிக்கொண்டு இருக்கிறார். இந்த அரிய கண்டுபிடிப்பை ஏற்கனவே தோழர் மருதையன் நேர்காணல் பின்னூட்டத்தில் ஒருவர் பொய்தியமான் சாயத்தை தோலுரித்து காண்பித்தாயிற்று..இன்னும் எவ்வளவு முறைதான், எமது பதிவு, 1991 புரட்சி, இத்தியாதிகள் என்று கூறிக்கொண்டு இருப்பார் என்று தெரியவில்லை..
அசுரன்,
நான் எழுதுவது பொய் என்று எப்போது நிருப்பித்தீர் ?
நேருவின் “சோசியலிச” பாணி என்பது ஒரு சொல்லாடல்.
சோசியலிசம் என்பது ஒரு சொல். அதற்க்கு உங்க அர்த்தம்
வேற, இந்தியாவில் அர்த்தபடுத்திக்கொண்டது வேறு.
இதை நாம் ஏற்கெனவே பல முறை விவாதித்து, ஒரு
முடிவுக்கு வந்திருக்கிறோம். அதன் பிறகும் பொய்
கிய் என்று ஏன் வார்த்தை விளையாட்டு ? வேண்டாமே.
28 வயது சிறுவன் நீர். இப்போதுதான் பி.ஹெச்.டி
செய்து முடித்திருக்கீக. இன்னும் வாழ்க்கை அனுபவம்
ஏதும் இல்லை. வின்வு தளம் அளவிற்க்கு உங்க
தளத்தில் மக்கள் அதிகம் பின்னோட்டம் இடாததற்க்கு
(அப்படியே இட்டாலும் அனானி அல்லது போலி
பெயர்களில் தான் இடுகிறார்கள்) காரணம் : பயம்.
நாய், பன்னி, கழுதை போன்ற வசவுகள் சர்வ
சாதாரணமாக பிரயோக்கிப்படுவதுதான் காரணம்.
செம்புரட்சி செய்ய இதெல்லாம் தேவை இல்லையே.
நாகரீகமாக, நல்ல சொற்கள் மூலமே பிரச்சாரம்
மற்றும் மாற்றத்தை கொண்டு வரலாமே.
சரி,நாம் கடைசியாக விவாதித்த பின்,
நல்ல நண்பர்களாகவே பிரிந்தோம். அதை அப்படியே
தொடரவே விரும்புகிறேன். சரியா ?
Old Monk,
ஒல்ட் மாங் குடித்தால் அப்படி தான் உளரல் போலத்தெரியும்.
1991 வரை நடந்தது என்ன, ஏன் அதன் பிறகு மாற்றம்
கொண்டுவரப்பட்டது என்பது பற்றி விரிவான பதிவு அது.
ஒரிஜுனல் சரக்கு எதுவும் இல்லாமல், வெத்து வேட்டுகளான
குடிகாரர்களுக்கு இதெல்லாம் உளரலாகத்தான் தெரியும்.
அவரது நோக்கம் என்றைக்குமே நேர்மையானது அல்ல.
அசுரன்
எனது நேர்மை பற்றி என்ன தெரியும் உமக்கு ?
இப்படி பொதுப்படையாக வையாமல், ஆதாரத்துடன்
நிருபிக்கவும். நேர்மையை பற்றி நீர் பேச வேண்டாம்.
இணைய உலகில் இருக்கும் ஆயிரக்கணக்கான
வாசகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு தெரியும்.
எம் நண்பர்களுக்கும், இதர பார்வையாளர்களுக்கும்
தெரியும். you are too young and immature and hence your impertineance and lack of manners.
வறுமை கோடு மற்றும் அளவு அலகுகளின் தன்மை
மற்றும், அளவீடுகளுகளுக்கான மாற்றுவழிகள் பற்றி
ஒரு முக்கிய சுட்டி :
http://www.indiatogether.org/2006/mar/ddz-povline.htm A thin Indian line
அய்.நா சபையின் அறிக்கை சுட்டி :
http://www.unsiap.or.jp/participants_work/cos03_homepages/group4/boon-india-present.htm
அய்யா அதியமானே… அதனைத்தான் நானும் கேட்கிறேன்.. ஏன் இந்தியாவில் உலகிலேயே அதிக குழந்தைகள் ஊட்டசத்து குறைந்து உள்ளன..? இது வரவிருக்கும் கொடிய வறுமைக்கு முன்னுரையே…
மேல்தட்டு மக்களுக்கும், கீழ்தட்டு மக்களுக்கும் உள்ள வருமான வேறுபாட்டு விகிதம் ஏன் அதிகரித்து கொண்டு வருகிறது…
முதலில் 80 கோடி மக்கள் 20 ரூபாயில் வாழ்வது என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள் என மல்லுக்கு நின்றவர்… ஆதாரத்தை காட்டியவுடன் இப்பொழுது அதெல்லாம் சும்மா என பீலா விடுகிறார்… இவர் ஆதரிக்கிற உலகவங்கி, இந்திய அரசின் அறிக்கை தெள்ளதெளிவாக இருந்த போதும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது ஏனோ?
2400 கலோரி உணவு ஒரு நாளைக்கு உட்கொள்ளுபவர்களின் விகிதத்தை எடுத்துக்கொண்டாலும் அதிலும் ஏறக்குறைய 80 சதவீத மக்கள் போதிய சத்துள்ள உணவுகளை உட்கொள்ளுவது இல்லை.. இதனை இந்திய அரசு என்றும் வெளியிடாது… இதற்க்கு ஏதாவதொரு சப்பை காரணத்தை கூறி மறைத்து வருகிறது…
//அறிவுடைநம்பி என்ற பெயர பாத்து ஏமந்துட்டேன்.
1991இல் நாம் இருந்து அபயாகரமான நிலை பற்றி ஒரு விளக்கமான
பதிவு சுட்டியிருந்த்தேன். // அய்யோ அய்யோ ! அதியமான் என்ற பெயரைப் பார்த்தும், நெல்லிக்கனி என்றப் பெயரைப் பார்த்து நாங்கள் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்த கொடைவள்ளல் என்று நாங்கள் ஒன்றும் ஏமாந்து விடவில்லை. // எமது இந்த பதிவின் http://nellikkani.blogspot.com/2008/05/1991.html இறுதியில் எழுப்பிய வினாவிற்க்கு, இங்கு யாராவது ஆதாரபூர்வமாக பதிலளிக்க முடியுமா ? // உங்கள் பதிவின் இறுதியில் இருந்த கேள்வி //”அன்னிய முதலீடுகளை, உலகமயமாக்கலை ‘எதிர்ப்பவர்கள்’.
1991இல் திவால் நிலையில் இருந்த, மிக மிக மிக அபாயகரமான
நம் நிலைமையினை வேறு எந்த ‘வழிகளில்’ கையாண்டிருப்பர்கள் ?” // அதற்கு உங்கள் அடிபொடி டோண்டு அளித்த பதில் //மாற்று வழிகளா? எந்த ஊரில் இருக்கிறீர்கள்? உலகம் முழுதுமே முன்னேறிய எல்லா நாடுகளும் பொருளாதார சுதந்திரம் மூலம்தான் முன்னேறியுள்ளன. சோவியத் யூனியனின் ராட்சச வளர்ச்சியை விதந்தோதுபவர்கள் அது எடுத்து கொண்ட விலை என்ன என்பதை காண மறுக்கின்றனர். ரஷ்ய மக்களின் உழைப்புக்கு அவர்கள் இன்னும் எவ்வளவோ முன்னேறியிருக்க வேண்டும். அதன்றி ஸ்டாலின் என்னும் சைக்கோவின் கொடுங்கோன்மையால் லட்சக்கணக்கானவர்கள் செத்தனர் சைபீரிய அடிமை முகாம்களில். மனித இயற்கைக்கு புறம்பான கம்யூனிசத்தால் நாடே திவாலானது 1991-ல். நல்ல வேளை இந்தியா அந்த நிலை வரும் முன்னரே காப்பாற்றப்பட்டு விட்டது./// ஆக அதற்கு நான் ஸ்டாலினைப் பற்றி சொல்ல வேண்டியதாகி விட்டது. சரி நீங்கள் சொன்ன பிரச்ச்சனைக்கு சரியான வழி – ப.சிதம்பரத்திடமோ யாரிடமோ இல்லை. மாறாக மக்களிடமே இருக்கின்றது. ஸ்டாலின் காலத்தில் உங்கள் தாராளமய பிதாமகர்களே பயப்படும் அளவிற்கு சோவியத் யூனியன் வளர்ந்த்து. சரி !! ‘பணி செய்து கிடந்த உங்கள் ஊழியர் ப.சிதம்பரம் மற்றும் அவரது வாரிசுகள் 90களுக்குப் பிறகு எதிர்க்கட்சிகளான பிறகு, மாத்தத்திற்கு 1 ஒரு கோடி சம்பள்த்திற்கு மட்டி சம்பளத்திற்கு வேலைப்பார்த்தார்கள்.
//ராயகரன் எழுதவது ராயகரனுக்கே புரியாது என்று ஒரு கூற்று உண்டு. )
லைசென்ஸ் ராஜில் நடந்த கொடுமை பற்றி எமது சுட்டி :
ஒரு மார்க்ஸிய வரலாற்று நிபுணாரான, திரு.பிபின் சந்தரா (ஜெ.என்.யு)
எழுதிய India after 1947
நூலில், இந்த லைசென்ஸ் ராஜ் மற்றும் அதன் விளைவுகள் பற்றி
படித்துப் பார்க்கவும். ராயக்ரனை நாங்க சீரியசா எடுத்துக்கரதல்ல.
// அவர் எழுதியுள்ளது இருக்கட்டும், லைசன்ஸ் ராஜ்ஜியத்தில் டாடா, பிர்லாக்களெல்லாம் கல்லா கட்டினார்களே அது எப்படி ? ஆனால் மற்றய சிறு முதலாளிகள் எல்லாம் அழிந்தார்களே அது ஏன் ? // தரகு முதலாளிகள் என்றால் யார் அய்யா ? விளக்குக.// தரகு முதலாளிகள் என்றால் உம்மைப் போன்று மக்களின் உழைப்பைச் சுரண்டி, வெளிநாடுகளுக்கு விற்று டாலரில் எச்சில் பொறுக்குபவர்கள். //ஹோலடமர் என்று அதை சொல்வார்கள். நினைவு சின்னங்கள்,
ம்யூசியம்கள் இருக்கின்றது. அம்மக்கள் அனைவரையும்,
அமெரிக்க ஏகாதிபத்திய சதியால் அப்படி ந்ம்பச்செய்ய
முடியாது//
உக்ரேன் என்ன முழு ரஷ்யாவிலும் உள்ள அரசு ஆவண்ங்களை திறந்து விடும்படி, காடுக்கூச்சல் போட்ட மேற்கு மோசடிகள், கார்ப்பச்சேவ் அதனை திறந்து விட்டதும், வேறு வேலைப் பார்க்க போய் விட்டார்கள். மேலும் உக்ரைன் பட்டினிச்சாவுகள் என்று மேற்கு ஊடகங்கள் எடுத்துக் காட்டிய டாகுமெண்டிரிகள், இரண்டாம் யுத்த காலத்தில் ஜார் ரஷ்யாவில் ஏற்பட்டவை என்பது பின்பு நிருபணமானது. நீங்கள் சொல்கின்ற மியூசியங்கள் எல்லாம் அப்படிப்பட்டவைதான். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். ஸ்டாலினைப் பற்றிய அவதூறுகளைப் பற்றி பதிவு பதிவாக விளக்கிய சுட்டிகளை எல்லாம் நான் கொடுத்துள்ளேன். ஆனால் திரும்ப திரும்ப நீங்கள் சொன்னதைதான் சொல்லி வருகீறீர்கள். தூங்குவது போல நடிப்பவர்களிடம் – விதண்டாவாதம் செய்ப்வர்களிடம் ஒன்றும் சொல்ல முடியாது. //அனைத்து தொழில் முனைவோர்களையும் முடங்க செய்தது அந்த
முட்டாள்தனமான லைசென்ஸ் ராஜ். அனைத்து.
அதற்க்கு அடிப்படை நேருவின் சோசியலிச பாணியும்,
திட்டமிடலும்தான். அதனால் தான் நம் நேர்மையை
முழுவதுமாக இழந்தோம். பெரு முதலாளிகள் முதல்
தொழிலாளர் வரை, அரசியல்வாதிகள் மற்றும்
அதிகாரிகள் அனைவரும் அடிப்படை நேர்மையை
இழக்க அந்த அமைப்பு ஒரு முக்கிய காரணம்.// போடு போடு அட அடா பெருமுதலாளிகள் நேர்மையானவர்கள் என்று சர்டிபிகேட் கொடுத்துவிட்டீர்கள். அந்த பெருமுதலாளிகள் லைசன்சு ராஜ்யம் போனபின்பு செய்த, அரசு நிறுவனங்களில் 49 தனியார் பங்குகள் அனுபதிக்கப்பட்ட பின்பு செய்த தில்லுமுல்லுகள், ரிலையன்ஸ் சகோதரச்சண்டையிலேயே வெளி வந்து விட்டதே. ஏன் vsnl இல் உங்கள் அபிமான டாடா விளையாடியதும் தாராளமயத்திற்கு பிறகுதானே. நேரு ஒரு கடைந்தெடுத்த கிரிமினல் பேர்விழி. பொம்பளைப்பொறுக்கி — அவனைப் பற்றி போலிகள் சர்டிபிகேட் கொடுத்ததர்கெல்லாம் நாங்கள் பொறுப்பெல்ல ! இறுதியாக ஒன்று சொல்கிறேன். இந்த பதிவின் நோக்கம் – டாடாவின் யோக்கியதைப் பற்றியதுதான். லைசன்ஸ் ராஜ்ஜியம் என்பது ஸ்டாலினோ, மார்க்ஸோ கண்டுபிடித்து அல்ல. நாங்கள் அதற்கு வக்காலத்து வாங்கவும் இல்லை. நேரு ‘மாமா’ முதலாளிகளுக்கு சேவைச் செய்ய கண்டுபிடித்த ஒரு முதலாளித்துவ வ்ழிமுறை அவ்வளவுதான். கொய்யா சபையின் அறிக்கையினைப் படித்துப்பார்த்தேன். Population below $1 a day (%) அண்டு வெண்டைக்காய் Poverty gap at $1 a day (%) அண்டு வெங்காயம் என்று ஓரு டாலர் என மோசடியான ஒரு அளவுகோலைதான் கடைப்பிடிக்கிறார்கள். இந்த டெக்னிக் எல்லாம், மக்கள் விழித்துக் கொள்ள கூடாது என்பதற்கே அவர்களைச் சாந்தப்படுத்துவதற்கேப் பயன்படுகிறது. மேலும் உங்கள் கொய்யா சபை, ஈராக் முதல் செச்ன்யா வரை ஏன் நமது ஈழம் வரை யாரைக் காப்பாற்றியது என்பதே கொய்யா சபையின் யோக்கியதப் பற்றி ஒரு சான்றாகும். ஆமாம் பூச்சாண்டி உங்கள் ஒரு டாலர் அளவுகோல் மோசடியானது என்று சொன்னால், கொய்யா சபையின் – அதே ஒருடாலர் அளவுகோல் பற்றிய பதிவைப் பதிலாக தருகிறீர்கள் ? என்ன எங்களைப் பார்த்தால் கேணைப் பயல் போல் தெரிகிறதா ?
சாமி சாமி இனி மேல் விஷ வைரஸ்க்ளான முதலாளித்துவ கோமாளிகளிடம் பேசிப் பயனில்லை. ஆளை விடுங்கள் — வினவு அதியமான் கக்கும் விஷங்களை அம்பலப்படுத்தி ஒரு பதிவிடுங்க்ள்.
பகத்,
கடைசியாக நான் அளித்த சுட்டியை பார்க்கவும்.
இன்னும் சரியான தகவல் இல்லைதான். அளவுகோல்கள்
சரியானவையாக இல்லை.
ரூ.20இல் 80 கோடி மக்கள் வாழ்வது உண்மையென்றால்,
(அதாவது நான்கின், மூன்று இந்தியர்கள்) ; நாடெங்கிலும்
கடும் பஞ்சம், பட்டினி, சாவுகள் (ரவான்டா, எதியோப்பியாவில்
நடந்தைவிட கொடுமையாக) நடந்திருக்கும்.
1944இல் உருவான வங்காள பெரும் பஞ்சத்தை விட கொடிய
பஞ்சம், பட்டினி சாவுகள், நாடு முழுவதும் இருக்கும்.
அப்படி இல்லையே ? 75 சத இந்தியர்கள் தினமும்
அரை வேளை உணவில், கடும் வறுமையில் உள்ளனரா ?
செம்புரட்சி சுலுவாக வந்திருக்கும். 🙂
சரி, என்ன செய்யலாம்கிறீக ?
1991 முன் இருந்த லைசென்ஸ் ராஜ்யம்,
அய்.எம்.எஃப் கடன்களை சார்ந்த வாழக்கை
தொடர வேண்டுமா ?
1991இல் இருந்த நிலை பற்றி ?
அறிவுடை நம்பி,
விவாதத்தில் உண்மைகளை பேசினால் அது விசம் கக்குவதா ?
நல்ல கூத்து.
லைசென்ஸ் ராஜியத்தின் போது டாட்ட பிர்லாவின் நிலை பற்றி
ஒரே ஒரு செய்தி :
In 1968, Tata Chemicals applied for a license to develop a mega petro chemical complex (integrated unti), It was the brain chidl of Darbari Seth, an outstanding corporate leader and builder of Tata Chem. He dreamed of a mega project that wil revolutionise fertiliser and chemical industry in India. It was denied (after 2 years) by Indira Gandhi regime. And Darbari Seth suffered a heart attack.
the reason for denial was poltical and cheap attitude of Indira Gandhi. (that Tatas will grow bigger)
Similarly, Birlas were denied entry into Steel making and many many fields for decades.
Arivudai Nambi : what does this show ? License raaj crushed ALL industrial endeavours indiscriminately. and you are totally ignorant of all this while motuhing gross genralisations and cliches.
1991 ciris : i assue you are incapable of answering my very important question at the last : how we got rid of IMF for good after 1991.
and Dondu Ragahvan is not my adipodi but a good friend who is aged 62. amd a shit like you freely use terms like adipodi simply beacuse of this internet. mavane, try to use that term in person, if you are indeed a veeran. i can use ten times worser terms on you and your mates. ok. but i don;t want to waste my precious time with idiots like you. ok.
/உக்ரேன் என்ன முழு ரஷ்யாவிலும் உள்ள அரசு ஆவண்ங்களை திறந்து விடும்படி, காடுக்கூச்சல் போட்ட மேற்கு மோசடிகள், கார்ப்பச்சேவ் அதனை திறந்து விட்டதும், வேறு வேலைப் பார்க்க போய் விட்டார்கள். மேலும் உக்ரைன் பட்டினிச்சாவுகள் என்று மேற்கு ஊடகங்கள் எடுத்துக் காட்டிய டாகுமெண்டிரிகள், இரண்டாம் யுத்த காலத்தில் ஜார் ரஷ்யாவில் ஏற்பட்டவை என்பது பின்பு நிருபணமானது. நீங்கள் சொல்கின்ற மியூசியங்கள் எல்லாம் அப்படிப்பட்டவைதான். //
try to say this in Keiv, Ukraine. do you know the meaning of the term “HOLODOMOR” ?
yes, the US and western media had exaggerated the number of dead. main reason was total denail of all international and local media into USSR for decades. no one was sure ; but no one denies mass murder and holdomor. Holodomor memorials are maintianed in Ukraine till date by Ukranians themselves. It is eqivalent to Indians manitnaing Jallianwallabagh memorial. ok.
I wish you were borm in Ukraine in 1920 and lived thru holdomor in 1930. It is easy to talk now and here. and by the way, denial of Holodomor is a national crimie in Ukraine now. same as denial of holocaust in Germany.
//நேரு ஒரு கடைந்தெடுத்த கிரிமினல் பேர்விழி. பொம்பளைப்பொறுக்கி — அவனைப் பற்றி போலிகள் சர்டிபிகேட் கொடுத்ததர்கெல்லாம் நாங்கள் பொறுப்பெல்ல ! நேரு ‘மாமா’ முதலாளிகளுக்கு சேவைச் செய்ய கண்டுபிடித்த ஒரு முதலாளித்துவ வ்ழிமுறை அவ்வளவுதான்////
இப்படி எல்லாம் எழுத வெக்கமாயில்லை. தூ..
மாமா வேலை பார்த்தார் என்றால், நீவீர் அப்ப விளக்கு பிடித்தீரோ ?
நேருவின் பொருளாதார கொள்கைகளுடன் கடுமையாக முரண்படுகிறோம்.
ஆனால் அவரின் பங்களிப்பையும், தியாக வாழ்வையும், நேர்மையையும்
போற்றுகிறேன்.
சுதந்திர போராட்டத்தில் சுமார் 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.
அவரின் கால் தூசிக்கூட நீர் இணையாக மாட்டீர்.
பொடாவில் ஒரு 3 ஆண்டு உம்மை உள்ளே தள்ளினால்,
உலகம் வேற மாதுரி தெரியும். அப்ப புரியம் மாமா
வேலை என்றால் என்றும், வாழ்க்கை என்றால் என்னவென்றும்.
கீழ்தரமான இழிபிறவிகள் தாம் இது போன்ற சொல்லாடல்களை
சர்வசாதாரணமாக பயன்படுத்துவர். இப்படி எழுதிதான்
செம்புரட்சி செய்யபோகிறீர்களா ? கிழிஞ்சது போ.
//கடைசியாக நான் அளித்த சுட்டியை பார்க்கவும்.
இன்னும் சரியான தகவல் இல்லைதான். அளவுகோல்கள்
சரியானவையாக இல்லை//
அய்யா அதை எல்லாம் பார்த்து விட்டுதான் சொல்கிறேன்…சரியான தகவல்கள் இல்லை என கூறாதீர்கள், தகவல்கள் உங்களுக்கு சாதகமாக இல்லை என கூறுங்கள்… ஒரு டாலர் மதிப்பு என்பதை பலவிதங்களில் மாற்றி உலக வங்கியும், இந்திய அரசும், ஐ,நா சபையும் அறிக்கை வெளியிடுகின்றன… இதில் பண வீக்க விகிதம், நாணய மதிப்பு, நாணய மதிப்பு PPP முறையில் இப்படி பல பல குளறுபடிகள் அல்லது மிகவும் சிக்கலான கணக்கீட்டு முறைகள்…
கீழுள்ள விளக்கத்தில் 77 சதவிகித மக்கள் அரை டாலரில் வாழ்வது என்பது உணவு கலோரியை அடிப்படையாக கொண்ட அறிக்கையை மறுக்கவில்லை என கூறுகிறது..
////This figure has been variously reported as either “2 dollars per day” or “0.5 dollars per day”. The former figure comes from the the PPP (Purchasing power parity) conversion rate, while the latter comes from the official exchange rate. Also note that this figure does not contradict the NSS derived figure, which uses calorie consumption as the basis for its poverty line. It just uses a more inclusive poverty line////
இதை எல்லாம் விட்டு தள்ளுங்கள்… ஒரு மனிதன் இன்று ஆரோக்கியமாக உயிர் வாழ்வதற்கும் முப்பது வருடம் முன்பு ஆரோக்கியமாக உயிர் வாழ்வதற்கும் தேவைப்படும் குறைந்த பட்ச உணவு கலோரி (2400 கலோரி) என்பதில் மாற்றம் வந்திருக்க வாய்ப்பு இல்லைதானே… அதனுடைய விவரத்தை ஏன் இந்திய அரசு வெளியிட மறுக்கிறது.. ?
உங்களுக்கு தேவையான விவரங்கள் இல்லை என்றால் இந்திய அரசே அளித்த அறிக்கையை “போதிய விவரங்கள் இல்லை” என ஒதுக்கி தள்ளுகிறீர்… திருடனே திருட்டை ஒப்பு கொண்டாலும் உங்களைப் போன்ற நீதிபதிகள் வலக்கை தள்ளுபடி செய்ய முயற்சி செய்கிறீர்கள்…
எதோ ஒரு பேரு நகரத்தில் அமர்ந்து கொண்டு என்னுடைய வீடு வேலைக்காரனுக்கு நான் எழு நூறு ரூபாய் ஊதியம் அளிக்கிறேன்… அவன் எப்படி வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பான்..? இதெல்லாம் சும்மா என எதோ ஒரு வலைத்தளத்தில் எவனோ ஒருவன் எழுதியதி வைத்து பீலா விடுவது… வெறும் உணவுக்கனக்கிலேயே இவ்வளவு மோசமான நிலை..இதை தவிர்த்து, இருப்பிடம், கல்வி, மருத்துவம், உடை இவைகளுக்கான செலவையும் கணக்கில் எடுத்து கொண்டால் உண்மையான நிலவரம் புரியும்…
//லைசென்ஸ் ராஜியத்தின் போது டாட்ட பிர்லாவின் நிலை பற்றி
ஒரே ஒரு செய்தி ://அதியமான் ! காங்கிரஸ் & கோ ஒரு சமயம் ரிலையன்ஸ்க்கு ஆதரவாகவும், மறுசமயம் டாடாவிற்கு ஆதரவாகவும் நிறைய தடவை மாறி இருக்கின்றது. ஏன் ராஜீவ் காலத்தில் கூட ரிலையன்ஸ்க்கும் அவருக்கும் பிரச்சனை வந்த்து. காங்கிரஸ் அண்ட் கோ லைசன்ஸ் கோட்டாவினை தமக்கு சகாயம் தருவதாக பயன்படுத்திக் கொண்டது. அவ்வளவுதான். அப்புறம் நான் தெளிவாக சொல்லி உள்ளேன். லைசன்ஸ் ராஜ்ஜியத்தைப் பற்றிக் கொண்டு நாங்கள் ஒன்றும் தொங்கவில்லை. லைசன்ஸ் ராஜ்யம், தாராளமயம் எல்லாம் மக்களின் விடிவிற்கான வழிகள் அல்ல ! ஆனால் நீங்கள் திரும்ப திரும்ப நான் ஆதரக்காத ஒன்றை என் கருத்தாக திணிக்கிறீர்கள் //(and you are totally ignorant of all this while motuhing gross genralisations and cliches.)// //1991 ciris : i assue you are incapable of answering my very important question at the last : how we got rid of IMF for good after 1991.// நான் இதற்கு முன்பே பதில் சொல்லி உள்ளேன். இதற்கு ஒரு மாற்று புரட்சிகர மக்கள் அரசியல் மட்டுமே. 1991 இல் இந்தியாவிற்கு வந்த இந்த மந்தநிலை 60-70களிலேயே அமெரிக்காவிற்கு வந்தது. அவர்கள் அப்போது கண்டுபிடித்தது தங்கள் சந்தையை விரிவு படுத்தும் தாராளமய கொள்கையை தான். 1934- களில் சோவியத் யூனியன் 1991 இந்தியாவினை விட மிக மோசமான நிலையில் இருந்தது. ஆனால் மக்கள் அரசியல் மூலமாக புரட்சிகர வழியில் அதனை ஸ்டாலின் கடந்து காட்டினார். அந்த ‘பயம்’ தான் உம்மைப் போன்றவர்களை ஸ்டாலின் மீது அவதூறுகளைக் கக்க வைக்கிறது. ஸ்டாலின் பற்றிய் உமது சகல அவதூறுகளுக்கும் நாம் பதில் சொல்லி விட்டோம். வேண்டுமானால் முன்பு கொடுத்துள்ள சுட்டிகளைப் பாருங்கள். //try to say this in Keiv, Ukraine. do you know the meaning of the term “HOLODOMOR” ?
yes, the US and western media had exaggerated the number of dead. main reason was total denail of all international and local media into USSR for decades. no one was sure ; but no one denies mass murder and holdomor.// திரும்ப திரும்ப சொன்னாலும் நீங்கள் கேட்கப் போவதில்லை. ஓத்துக் கொண்டால், உங்கள் 1991 இண்டியா கேள்விக்கு நான் சொன்ன புரட்சிகர அரசியல் பதிலை ஒத்துக் கொள்ள வேண்டிவருமே இதோ உங்கள் ஹோலோக்ராம் பற்றிய ரஷ்யாவின் மறுப்பு : – 1. Dismiss all criticism of Holodomor and other Russian genocides as foreign propaganda –especially Nazi — even though Nazi Germany learned all it knew about propaganda from Bolshevik Russia which had already perfected the big lie technique in the 1920’s. Blaming it on the nefarious anti-Russian interests of American neocons is also a good idea.
2. Try to deflect or trivialize the discussion.
3. Try and excuse the Holodomor genocide by pointing out that others committed genocides too.[This is the psychopath’s justification: Why pick on me? Others were murdering too!”.]
4. Also, deny the Holodomor was genocide because Russia had genocided others too.[“Others suffered too….] Say “the famine cannot be considered an act that targeted Ukrainians, as millions of people from different ethnic groups lost their lives at that time in vast territories in the North Caucasus, the Volga region, central Russia, Kazakhstan, west Siberia, and the south Urals.” Yes indeed this is perverse reasoning to argue that genociding many other nations, like the Kazakhs, discounts the Holodomor, but you never know, it may just work on the less intelligent or naive listener.
5. Blame the victims of Holodomor and other Russian genocide –and always deflect Russia’s guilt onto others –especially Jews, Georgians, Latvians and all other ethnic groups.
6. Try to pretend that the USSR was something other than the Bolshevik Russian empire when convenient. Pretend the USSR was a legitimate union of “republics” rather than the Russian prison of Russian-occupied and colonized nations that it was.
7. Projecting guilt on others is very useful in denials of Russian genocides like Bolshevik Terror-Famine of 1932-1933 [Holodomor] against Ukrainian farmers. Blame Americans, Georgians, Jews, Latvians, the weather, the victims themselves —but never Russia. Imply the victims deserved it. Say they were lazy. Also try to blame figures like Krushchev and try to imply –or just brazenly lie– and claim he was Ukrainian.
8. Vilify groups, Belarusans, Chechens, Estonians, Georgians, Kazakhs, Crimean Tatars, Ukrainians and many others who have struggled to get from under the bloody Russian imperial boot and who raise international awareness of Russian genocides, such as the Russian Bolshevik Terror-Famine [Holodomor] of 1932-1933.
9. Try to minimize the historical and current importance of the Holodomor. “Hey, it happened 75 years ago. Why open old wounds?” Of course, this reasoning would be offensive in any discussions of the Holocaust, but it may work on the Holodomor.
10. Try to deliberately minimize the number of victims of the Holodomor. “….5,000,000 victims? Did you count them?”. மேலும் இந்த ஹோலோடோமார் ஒரு நாசி பிரச்சாரம் என்பதும் ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டுள்ளது. வேண்டுமெனில் சோல்யெட்சின் பற்றிய பதிவுகளைப் பாருங்கள். ஆனாலும் திரும்ப திரும்ப இந்தப் பாட்டினைப் பாடாதீர்கள். ஓருவேளை உணவோடு உயிரைப் பிடித்து கொண்டிருக்கும் மக்கள் தமிழகத்தி ல் அதிகம். மெல்ல மெல்ல நிகழும் இந்த அரைவயிற்றுப் பட்டினி சாவுகள் முதலாளித்துவ ஊடங்கங்களால் வெளியே வருவதே இல்லை. இவர்களைப் பொறுத்த வரை ஒரே இரவில் இறந்தால் படம் போட்டு உச்சுக் கொட்டுவார்கள். மேலும் வேலை தேடி அலைந்த ஒரு இளைஞன் நான். என்னோடு படித்தவர்கள் எத்தனை பேர் முதிர் இளைஞர்களாக வாழ்க்கை ஓட்டி வருகிறார்கள் தெரியுமா ? இதற்கெல்லாம் காரணம் உங்கள் தாராளமயம் தான். இப்படி நிகழ்கால வாழ்க்கையே தாராளமயத்திற்கு ஒரு வெறுக்கத்தக்க உதாரணமாக இருக்கும் போது , தாராளமயம் மட்டும்தான் , 1991 இந்தியாவிற்கு விடிவெள்ளியாக இருந்தது என்று சொல்லாதீர்கள். ஏன், அரைடஜன் நாடுகள் தென் அமெரிக்காவில், தாராளமயத்தினால் போண்டியாகி நீங்கள் விரும்பும் ருவாண்டா நிலைமைக்கு ஆளாகி கம்பியுனிச நாடுகளாக கண்முன்னாலேயே வந்துள்ளனவே. ஆனால்ல் 80 வருடங்களுக்கு முன்னால் நடந்ததாகக் கூறப்படும் பொய்களையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறீர்கள். //இப்படி எல்லாம் எழுத வெக்கமாயில்லை. தூ..
மாமா வேலை பார்த்தார் என்றால், நீவீர் அப்ப விளக்கு பிடித்தீரோ ?
/./ தூ தூ என்று முதலாளிகள் படுக்கைக்கு விளக்கு பிடிக்கும் உங்களை ஓராயிரம் முறை திட்டலாம். நேரு ஒரு கடைந்தெடுத்த அயோக்கியப் பயல் மற்றும் காங்கிரஸ் முகாமில் இருந்த நேச நாடுகளின் ஆதரவினால அணியில் இருந்தவர். “ஒரு கம்பியூனிச துரோகியின் தூரோக வரலாறு” என்ற நூலைப் படித்துப் பாருங்கள். இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனின் நிலை தாழும்போதும், சுபாஸ் சந்திரபோசின் நிலைக்குமாறாக, அமெரிக்கா தலைமையிலான அணியே வெற்றி பெறும் என்று சரியாக கணித்து அவர்களின் காலை நக்கியவர் உங்கள் நேரு. அவருடைய சிறை வாசமெல்லாம், மக்களின் கலகம் கட்டுப்படாத அளவில் வெளிப்படும் போது, அவர்களின் கலகத்தினை திசைதிருப்பும் முகமாக காந்தியால் கடைபிடிக்கப்பட்ட ஒரு யுக்தி. மெளண்ட் பேட்டன் மனைவியோடு தேனிலவு கொண்டாடி தனது சகலை மெளண்ட் பேட்டனுக்கு பதவி உயர்வு வேண்டி பிரிட்டிஷ் அரசிக்க்கு கடிதம் எழுதியவர் உங்கள் நேரு ‘மாமா’. //பொடாவில் ஒரு 3 ஆண்டு உம்மை உள்ளே தள்ளினால்,
உலகம் வேற மாதுரி தெரியும். அப்ப புரியம் மாமா
வேலை என்றால் என்றும், வாழ்க்கை என்றால் என்னவென்றும்.
கீழ்தரமான இழிபிறவிகள் தாம் இது போன்ற சொல்லாடல்களை
சர்வசாதாரணமாக பயன்படுத்துவர். இப்படி எழுதிதான்
செம்புரட்சி செய்யபோகிறீர்களா ? கிழிஞ்சது போ.
/// எங்கள் தோழர்கள் இப்போது கூட கோமான் காந்திகுலக் கொழுந்து ராகுல்காந்திக்கு எதிராக கருப்புகொடி காட்டி சிறைக்கும் நீதிமன்றங்களுக்கும் அலைந்து கொண்டிருக்கிறார்கள். கீழ்தரமாம முதலாளி இழிபிறவியான நீர், செம்புரட்சியினைப் பற்றி எமக்குப் பாடம் எடுக்க வேண்டாம்.
// தூ தூ என்று முதலாளிகள் படுக்கைக்கு விளக்கு பிடிக்கும் உங்களை ஓராயிரம் முறை திட்டலாம். ///
டேய் தாயோளி,
தைரியம் இருந்தா நேரில் சந்திக்கும் போது, என் முகத்த பார்த்து இதே வார்த்தைகளை சொல்லு
பார்க்கலாம். உன்னை மாதுரி கோழை கபோதிங்க, இணைய இருட்டில் மறைந்துகிட்டு தான்
இப்படி எழுத துணிவீர்கள்.
அன்னிய செலவாணி பற்றியும், 1991 நடந்தது மற்றும் மாற்று வழி பற்றியும்
ஒரு வெங்க்யாமும் அறியாவர் நீவீர். புரட்சி வழியில் தீர்வாம். வட கொரியா
வழியா அது ? அதாவது கடத்தல் மற்றும் திருட்டு.
ரஸ்ஸியாவில் ஹோலோடுமர் பற்றி என்ன ? உக்ரேன் நாட்டினர் என்ன நினைக்கின்றன்ர்,
உறுதி செய்கின்றனர் என்பது தான் முக்கியம். and you did not answer my very pertinent example about license raaj thorttling all industrialists indisciriminately.
அதியமான் நீங்கள் அநாவசியமாக
கடும் கெட்டவார்த்தைகளை இங்கு
கொட்டுகிறீர்கள் ?
எங்கள் தோழர்கள் யாரும் இதுவரை உங்களை
இவ்வாறான வார்த்தைகளைப் போட்டு பேசவில்லை.
மேற்கொண்டு இதைப்போன்ற வார்த்தைகளை
பயன் படுத்தாதீர்கள் ?
இது உங்களுக்கு ஒரு எச்சரிக்கை !
இணைய இருட்டில் மறைந்து கொண்டு எழுதுவது யார் ?
மதி இந்தியா, ‘இல்லை’ அய்யா இதுபோன்ற முக்காடு
பார்ட்டிகளை போய் கேளுங்கள்.
எங்களுக்கு முகவரி இருக்கிறது
முடிந்தால் நீங்கள் நேரில் வாருங்கள்
வரவேற்பு அளிக்கத்தயாரா இருக்கிறோம்.
டேய் பொறம்போக்கு தாயோளிப்பயலே! விருந்தாளிக்குப் பிறந்தவனே !!! உன்னை எங்கே வேண்டுமெனாலும் சந்திக்க தயார். யாருடா இணைய இருட்டில் மறைந்து கொண்டிருப்பது ? பன்னிப்பயலே ! நீ தாண்டா முற்போக்கு முகமூடிப் போட்டுக் கொண்டு அலைவது ! நீ என்ன ‘சிறுதொழில்’ முனைவர் என்று எமக்கு நன்றாகவே தெரியும். சுமங்கலி திருமணத்திட்டம் என்ற பெயரில் பெண் நெசவு தொழிலாளரின் இரத்தம் குடிக்கும் காட்டேரி நாயே ! அன்னிய செலாவணி, 1991 என்று திரும்ப திரும்ப கூவகின்ற நாயே ! அமெரிக்காகாரன் எலும்புக்கு உக்ரேன் என்ன தமிழ்நாட்டு நாதாரி நீயே இப்படி குதிச்சு இருக்கும் போது, ஹிட்லர் துட்டுக்கு உக்ரேன் நாட்டுப்பயல் எவ்வளவு கத்தி இருப்பான் என்று எமக்கு தெரியும். //and you did not answer my very pertinent example about license raaj thorttling all industrialists indisciriminately..// ஏண்டா தீவெட்டி ! திரும்ப திரும்ப சொல்கிறேன். லைசன்ஸ் ராஜ் என்பது நாங்கள் ஆதரிக்காத – எதிர்த்த கருப்பு பண முதலைகளை உருவாக்கிய ஒரு அமைப்பு ஆனால் அதற்கு தீர்வு தாராளமயம் இல்லை என்பதுதான் எமது நிலைப்பாடு ! ஆனா இதே மட்டும் காதிலேயே வாங்காதே ! ஸ்டாலின் ஸ்டாலின் என்று கூப்பாடு மட்டும் போடு. முதலில் பகத் எழுப்பிய பின்வரும் கேள்விக்கு பதில் சொல். பிறகு நாம் ஸ்டாலின் பற்றி ஆற அமர பேசலாம். // பகத் – அய்யா அதை எல்லாம் பார்த்து விட்டுதான் சொல்கிறேன்…சரியான தகவல்கள் இல்லை என கூறாதீர்கள், தகவல்கள் உங்களுக்கு சாதகமாக இல்லை என கூறுங்கள்… ஒரு டாலர் மதிப்பு என்பதை பலவிதங்களில் மாற்றி உலக வங்கியும், இந்திய அரசும், ஐ,நா சபையும் அறிக்கை வெளியிடுகின்றன… இதில் பண வீக்க விகிதம், நாணய மதிப்பு, நாணய மதிப்பு PPP முறையில் இப்படி பல பல குளறுபடிகள் அல்லது மிகவும் சிக்கலான கணக்கீட்டு முறைகள்…
கீழுள்ள விளக்கத்தில் 77 சதவிகித மக்கள் அரை டாலரில் வாழ்வது என்பது உணவு கலோரியை அடிப்படையாக கொண்ட அறிக்கையை மறுக்கவில்லை என கூறுகிறது..
// உன்னுடைய தாராளமயத்தினால் அடித்தட்டு மக்களின் நிலை ஒன்றும் மாறவில்லை. மாறாக 100000 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் தென் அமெரிக்க நாடுகள் தாராளமயத்தினை கைகழுவி விட்டு பொதுவுடைமை முறைக்கு திரும்புகிறார்கள். இதற்கு என்ன காரணம் ? அவ்வளவு ஏன் ? அமெரிக்காவிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் பசி பட்டினியோடு நடுத்தெருவில் இருக்கின்றார்களே ? அது ஏன் ? சந்தை சுதந்திரம் வேண்டும் என்று சொன்ன கம்பெனிகள் நஷ்டத்தை அரசுகள் ஏற்க வேண்டும் என்று கேட்பது மட்டும் ஏன் ? இந்த கேள்விகளுக்கெல்லாம் முதலில் பதில் சொல். பிறகு ஸ்டாலினைப் பற்றிப் பேசலாம். பின்குறிப்பு : தூ தூ என்றும் விளக்கு பிடிப்பதாக முதலில் எம்மைச் சீண்டிய்வர் அதியமான். அதற்கும் நாம் அதே வார்த்தைகளை அவரை நோக்கிச் சொன்னோம். ஆனால், அவர் கேவலமான் வார்த்தைகளை உபயோக்கிறார். நாமும் அதனை திருப்பிஅடிக்க வேண்டிய நிலைக்கு ஆளானாம். மீண்டும் சொல்கிறேன். மரியாதையான வார்த்தைகளை உபயோகி ! நானும் அதனையே செய்ய விரும்புகிறென்.
தோழர் அறிவுடை நம்பி
நீங்களும் கெட்ட வார்த்தைகளை
பயன்படுத்தாதீர்கள்.
உங்களை அவ்வாறான வார்த்தைகளை பேச
வைக்கத்தான் அவர்கள் முயற்சிக்கிறார்கள்.
பலியாக வேண்டாம்.
அறிவுகெட்ட நம்பி,
you name the place and time. i am ready always. and mind your words first, you fool. i can use choicest words in person rather than shitting here. if LPG has impoverished Indians, then why don;t anyone try to reverse it you fool ? no one ever talks about revesing them and closing the economy. license raaj : i answered your stupid genralisations. that is all.
அறிவில்லா நம்பி,
மாமா வேலை பார்பது, முதலாளிகளின் படுக்கை அறை பற்றி…
இப்படி எல்லாம் சொன்னது நீ தான்டா. அப்படி சென்னா, உன்ன தாயோளின்னுதான்
திரும்ப செல்வேன். நேரில் வந்த சொன்னால், இது என்ன பிரமாதம், இதை விட
அருமையான சொல்லாடல்கள் எமக்கும் தெரியும்.
புரியுதா. உனக்கு மட்டும் தான் கெட்ட வார்த்தை பேச தெரியும், திட்ட முடியும்ன்னு
நினைச்சுக்காத. மனித நேயம், அறச்சீற்றம், மார்க்ஸிசம் : இதெல்லாம் இருந்தால்,
யார வேணும்ன்னாலும், என்ன வேணும்னாலும் பேச அதிகாரம் வந்திரும்மா ?
போடாங்க..
நீ ஒரு கோழை கபோதிதான். நிஜ வீரன் இப்படி எல்லாம் இணைய இருட்டு
அளிக்கும் மறைவிலிருந்து வைய்ய மாட்டன்.
///சுமங்கலி திருமணத்திட்டம் என்ற பெயரில் பெண் நெசவு தொழிலாளரின் இரத்தம் குடிக்கும் காட்டேரி நாயே /////
no. i am not into it. and i am in Chennai. not Thirupur. ok.
தோழர் வினவு,
இப்படி வைய்யும் உமது தோழர்களை வைத்துகொண்டுதான் செம்புரட்சி
செய்யபோகிறீர்களா ?
///////////////////////////////
மாமா வேலை பார்பது, முதலாளிகளின் படுக்கை அறை பற்றி…
இப்படி எல்லாம் சொன்னது நீ தான்டா. அப்படி சென்னா, உன்ன தாயோளின்னுதான்
திரும்ப செல்வேன். நேரில் வந்த சொன்னால், இது என்ன பிரமாதம், இதை விட
அருமையான சொல்லாடல்கள் எமக்கும் தெரியும்.
புரியுதா. உனக்கு மட்டும் தான் கெட்ட வார்த்தை பேச தெரியும், திட்ட முடியும்ன்னு
நினைச்சுக்காத. மனித நேயம், அறச்சீற்றம், மார்க்ஸிசம் : இதெல்லாம் இருந்தால்,
யார வேணும்ன்னாலும், என்ன வேணும்னாலும் பேச அதிகாரம் வந்திரும்மா ?
போடாங்க.
//////////////////////////////
முதலாளிகளைப் பற்றித் திட்டினால்
உங்களுக்கு ஏன் அதியமான் கோபம் இப்படி
பொத்துக்கொண்டு வருகிறது ?
அனைத்து நாடுகளிலும் அனைத்து தொழிலாளிகளும்
தமது முதலாளிமார்களை கொன்றெடுக்கும் வார்த்தைகளில்
தான் தினமும் திட்டுகிறார்கள்.
அதுபோன்ற வார்த்தைகளை உங்களுக்கு கேட்க வேண்டுமா ?
கின்டி,அம்பத்தூர் பக்கம் போய் பாருங்கள் நல்லாவே காதில் விழும்.
அந்த முதலாளித்துவ பயங்கரவாதிகள் அதையெல்லாம்
நேரடியாக தமது காதுகளால் கேட்டால் உயிரோடு வாழவே
விரும்பமாட்டார்கள்.
இல்லையில்லை தவறாக சொல்லிவிட்டேன்
காசு கொடுத்தால் எப்படிப்பட்ட வசைசொற்களையும்
வாங்கிக்கொள்வார்கள்.
பணம் தானே அந்த பேய்களுக்கு உயிர்
என்று மார்க்ஸ் சொன்னது எவ்வளவு உண்மை.
//தென் அமெரிக்க நாடுகள் தாராளமயத்தினை கைகழுவி விட்டு பொதுவுடைமை முறைக்கு திரும்புகிறார்கள்//
prove this first. Do you what is happening in Chile and Peru ? esp about the miralce of Chile ? and why no one reversed to the pre-Pinochet era policies till date ? you are the one who talking crap.
என்னப்பா அப்படி ஒரு கோவம் எல்லாருக்கும். ஒருதரை ஒருத்தர் திட்டுற வார்தையை நீக்குனா பின்னூட்டமே பாதியாயிடும் போல இருக்கே!
சொன்னதே திரும்ப திரும்ப சொன்னா எல்லோருக்கும சலிப்பாதான் இருக்கும் அதுக்காக வசவு சொல் பக்கம் திரும்புனா பின்ன விவாதமும் அதசுத்தியேதான் இருக்கும்.
விவாதிக்குற யாரும் மொக்கையில்ல நல்லா விளங்குனவங்கதான்… அத கொஞ்சம் விவாதத்துலயும் காமிங்க சாமிகளா!
//மாமா வேலை பார்பது, முதலாளிகளின் படுக்கை அறை பற்றி…
இப்படி எல்லாம் சொன்னது நீ தான்டா. // அடேய் ! மாமா வேலைப் பார்ப்பதாக நேருவை நான் சொன்னால் என்னை தூ என்று இழிபிறவி என்றும் முதலில் திட்டியவன் நீ. IMF பற்றி பேசினால், நீ என்ன வேண்டுமானாலும் திட்டலாமா ? அதற்குதான் நான் பதிலை கொடுத்தேன். பன்னிப்பயலே ! உன் 1991 IMF பற்றி தோழர்கள் முன்பே எழுப்பிய கேள்விக்கு நீ பதில் சொல் .//பொய்களையே தன்னுடைய ஆடைகளாகவும்,புரட்டையே வாழ்க்கை முறையாகவும் கொண்டு உயிர்வாழும் ஆர்.ஸ்.ஸ். அம்பீ அதீய்மானீன் “திவால்” பசப்புகளை மே 29 2008 அன்றெ GGG என்பவர் அவருக்கு தெரிந்த அரசியல் கண்ணோட்டத்தில் அம்பலப்படுத்தியுள்ளார்
ggg said… மே 29, 2008 11:30
1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?
டால்ர் தான்உலகின் ரிசர்வ் கரன்சி இன்று.// யூரோ அதற்கு போட்டியாக இருக்கிறது – டாலர் மாற்றவே முடியாத இடத்தில ஒன்றும் இல்லை இல்லை
நமது மொத்த இறக்குமதியின் டாலர் மதிப்பில், நம் ஏற்றுமதியை விட மிக மிக அதிகம். //
ஆம் உண்மை தான் இந்தியாவின் எற்றுமதி இறக்குமதி பற்றாக்குறை கடந்த ஆண்டு மட்டும் 40சதவிகிதம்
உயர்ந்து 57 பில்லியன் டாலர்களாக உள்ளது. அதாவது கடந்த ஆண்டு எற்றுமதி 125
பில்லியன் டாலர்களாக இருந்தது. இது 2005ஆம் ஆண்டை விட 21 சதவிகிதம் அதிகம்.
ஆனால் இறக்குமதி 26 சதவிகிதம் அதிகமாகி 181 பில்லியன் டாலர்களாக உள்ளது. நாம்
181 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்கி 125 பில்லியன் டாலர்
மதிப்புள்ள பொருட்களை விற்கிறோம். தகவல் தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி
துறையில் பெரு வளர்ச்சி அடைந்து உலக பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா
முன்னேருவதாக நினைத்தாலும் நிகர கணக்கு நமக்கு நட்டம் தான்.
டாலர் பற்றாக்குறையை சமாளிக்க மூன்று வழிகள்தான ///
நீங்கள் சொல்லு இந்த மூன்று வழிகளும் மீண்டும் dolor சேற்றில் போய் விழுந்து மண்ணைக் கவ்வுவதர்க்குதான் உதவும் – அதற்கு பதிலாக மற்று திட்டம் பற்றி கொஞ்சம் பார்க்கலாம் ..
நமது இறக்குமதியில்
பெரும்பான்மையாக இருப்பது பெட்ரோல் தான். அதாவது நாம் மிகவும் கஷ்டபட்டு தகவல்
தொழில் நுட்பம் மற்றும் உற்பத்தி துறையில் ஏற்றுமதி செய்து வாங்கிய டாலரை
பெட்ரோல் வாங்கவே செலவிடுகிறோம். பெட்ரோல், அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க
முடியாத முக்கியமான பொருள். இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருமே தவிர
குறைய போவதில்லை.
இந்த பெட்ரோல் இறக்குமதியை குறைக்க என்னதான் வழி உள்ளது?
இதற்க்கு இரண்டு வழிகள் உள்ளன
# மாற்று எரிபொருள் பக்கம் போவது
# மின்சார சக்தியை அதிகப் படுத்துவது.
மாற்று எரிபொருளாக தர்ப்போது பரிந்துரைக்கப்படும் எத்தனோல் தயாரிப்பது செலவு குறைவான பாதுகாப்பான விஷயம்.
ஒரே கல்லில் பலமாங்க்காய் போல இதில் நமக்கு லாபங்கள் அதிகம்
எத்தனாலை கரும்பு சக்கை, நெய்வேலி காட்டாமணக்கு,
மக்காசோளம் மற்றும் பல பயிர்களிருந்தும் தயாரிக்கலாம். இவற்றில் சில பயிர்கள்
வறண்ட பூமியில் வளர கூடியது. இத்தகைய பகுதிகளில் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள்
மிகவும் பின் தங்கி உள்ளனர். எத்தனால் உற்பத்தி செய்வதன் மூலம் இந்த விவசாயிகள்
மற்றும் தொழிளாளர்களுக்கு சிறிதலவு நிலையான வருமானம் கிடைக்கும். ஒரு கார்
தொழிற்சாலை வந்தால், அதன் மூலம் சில ஆயிரம் நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு
கிடைக்கும். ஆனால் இந்த எத்தனால் திட்டம் அமல் படுத்தப்பட்டால் பல கோடி
பேருக்கு மேல் வருமானமும், வேலைவாய்ப்பும் கிடைக்கும். கரும்பு சக்கையிலிருந்து
எத்தனால் எடுத்தால் கரும்பு விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.
டோலோரும் மிச்சமாகும்.
மின் சக்தியை அதிகப் படுத்துவதன் மூலம் கணிசமான எரிவாயு செலவுகளை மின் அடுப்புகள் பயன் படுத்த பரிந்துரை செய்வதன் மூலம் தவிர்க்கலாம்.
‘சோசியலிச’, ‘சுதேசி’ கொள்கைகளாஇ 1947 முதல் 1991 வரை இந்திய அரசு
மேற்கொண்டதால்,//
1981 இல் இந்தியா வாங்கிய 5000ம் dolor கடன் வட்டி போட்டு குட்டி போட்டது அது வளர்ந்து — 1991 ல் நிதிப் பற்றாக்குறைக்கு வழி வகை செய்தது. இந்திரா காலத்திலிருந்தே நம் தேசம் சுதேசிக் கொள்கை கலை கைவிடத் தொடங்கி விட்டது – எனவே தவறான தகவல்களை புள்ளி விபரமாகத் தராதீர்கள்.
நமது பற்றாகுறை பட்ஜெட்டுகளால் பண வீக்கம் மிக மிக அதிகமாகி, அரசின் மொத்த
கடன் மிக அதிகமாகி, ரூபாயின் நிகர மதிப்பு படிபடியாக பல மடங்குகுறைந்தது. ஆனால் அரசு ‘நிர்ணியத்த’ ரூபாய் (டாலர்) மதிப்பு, ரூபாயின் உண்மையான சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகம்…அதிகாரிகள் மட்டும் அரசியல்வாதிகளின்
‘புண்ணியத்தில்’ அடைந்தவர்கள், கொளளாஇ லாபம் பார்த்தனர்.///
மன்மோகன் சிங் அவர்கள் உடனடியாக ‘தாரளமயமாக்கல்’ கொள்கைகளை அமல்படுத்த தொடங்கினார். அன்னிய முதலீடுகள் பல த…………….கரண்ட் அக்கவுண்ட் கணாக்கில் ரூபாய் / டாலர் அன்னிய
செலவாணி வர்தகம் முதன் முறையாக அனுமதிக்க பட்டது.///
கையாலாகாத இந்த ஆட்சியாளர்கள் – லட்சக் கணக்கான கோடி ரூபாய் வரிபாக்கிகளை வசூலிக்க திராணியில்லாமல் நம்மை உலக கடன் வலையில் சிக்க வைத்து – இப்போது நமை பொருளாஆதார அடிமைகளாக – பொருளாதார காலனி நாடாக வழிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான சாட்சியே மேலிருக்கும் பத்திக்கான விளக்கம்.
அடேங்கப்பா என்ன ஓர் சாதுரியம் ? லட்சக்கணக்கான கொடிகளை குவித்துவிட்டார் மனமோகன சிங்கி !!!
நமது குளத்தின் நீர் எல்லாம் கோகோகோலா குடித்து உரிஞ்சியத்தை வேடிக்கை தானே பார்க்க முடிந்தது ?
அளவுக்கு மீறி – சரியான திட்டமிடல் இல்லாமல் இது போன்ற கொலைக் காரர்களை அனுமதித்ததன் விளைவாக –
என்றான் போன்ற கம்பெனி-கள் மின்சாரத்தை கொள்ளை விலைக்கு விற்றதை பார்த்துக் கொண்டிருந்தைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்?
இன்றும் – சிறு வணிகம் கூட நான்தான் செய்வேன் என்று கூவிக் கொண்டு வலமர்ட் கம்பெனியும் இன்னும் பலரும் தேசத்தின் பொருளாதார ஸ்திரத் தன்மையை கலக்க கட்டியம் கட்டுவதும் இங்கெ தானே நடக்கிறது?
——————————————————————————————————————–
கடைசியாக 1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் என்ன ஆகியிருக்கும் ? ஒன்றும் ஆகியிருக்காது – மக்கள் விழித்துக் கொண்டிருப்பார்கள். திறமையான கொள்ளைக் கூட்டத்தின் கையில் ஆட்சியை கொடுத்ததின் விளைவை உணர்ந்திருப்பார்கள். மீண்டும் ஒரு சுதந்திரப் போர் வெடித்திருக்கும். இன்று – வகுப்புவாதமும் கொள்ளை கூட்டமும் இணைந்த ப.ஜா.க வா? – கொள்ளைகாரர்களும் அரசியல் பூசலும் நிறைந்த காங்கிரஸா ?
மேலே அழுகிய பழமா? – கீழே அழுகிய பழமா? எது வேண்டும் என்ற கேவலாமான கேள்விஇலிருந்து மக்கள் தப்பித்திருப்பார்கள்
சோசியலிச’, ‘சுதேசி’ கொள்கைகள் உருப்படியாக பின்பற்றப் பட்டிருந்தால் இந்த நிலையே வந்திருக்காது அதியமான்
//
இதற்கும் பதில் சொல் — Harward Professor அதியமான் அவர்களே,
“1991 புரட்சி” பற்றீ பேசுகிறீர்கள். இந்த 1991/2000 வருட வெங்காயம் எல்லாம் வேண்டாம். நான் அடிப்படை கேள்வியை கேட்கிறேன்.” உலக அளவில் எப்படி/எப்போது டாலர் ஒரு முக்கியமான FX (Foriegn exchange) கரன்சியாக மாறீயது?” இதன் சூட்சமம்தான் என்ன?.எல்லா நாடுகளூம், குறீப்பாக மூன்றாம் உலக நாடுகளீன் பெரும்பாலான பன்னாட்டு வர்த்தகங்கள் அனைத்தும் எப்படி Dollar dependence ஆக மாறீன? இதற்கு பின்னால்தான், அமெரிக்க ஏகாதிப்பத்தியமும், முதாளீத்துவ பயங்கரமும் இருக்கிறது. இந்த வரலாற்றூ மோசடிகளீ பற்றீ எழுத 500 பக்கங்கள் தேவை. விருப்பம் இருந்தால் google search இல் தேடவும். அப்படியே ஒரு வாதத்திற்க்காக “1991 புரட்சி” அங்கீகறீத்தாலும், என்ன நடந்தது உலக அளவில், குறீப்பாக இங்கு?
SEZ க்காக எவ்வளவு விவசாயிகள் விரட்டப்பட்டும்/மிரட்டப்பட்டும் இருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு மின் வெட்டு? எவ்வளவு யூனிட் மின்சாரம் SEZ க்கு இலவசமாக வழங்கப்படுகிறது என்பது தெரியுமா? WTO ஒப்பந்தப்படி Montessa மற்றூம் Geneticaly modified seed ஆல் எவ்வளவு பேருக்கு பாதிப்பு என்பது உங்களூக்கு தெரியுமா? WTO ஏன் குழந்தை தொழிலார்களீ பற்றீ கள்ள மொளனம் சாதிக்கிறது? எவ்வளவு விவசாயிகள் நகரத்திற்கு பிச்சைக்காரர்களாகவும்/ரிக்ஷா ஒட்டுபவர்களாகவும் மாறீயிருக்கிறார்கள் என்பது தெரியுமா? எவ்வளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார்கள் தெரியுமா? 1975ல் இந்திய GDP ல் விவசாயத்தின் பங்களீப்பு (41%) இதுவே, 2005ல் 17% ஆக குரைந்தது ஏன் தெரியுமா? coke/pepsi வந்தபிறகு எவ்வளவு நிலத்தடி நீர் குறாந்து/மாசுப்பட்டும் இருக்கிறது என்பது தெரியுமா? சரி, “1991 புரட்சி” வேற என்ன கொண்டுவந்தது. IT/Automobile கம்பெனிகள் வந்ததெதன்றால், இதனால் பயன் அடைந்தது யார்? middle class/upper middle class மட்டும்தானே? அதனால்தானே உங்களால் ” எனக்கு மொபைல் போன், இணயதளயம் இத்தியாதிகள்” என்றூ உங்களீ முன்னிருத்தியும்,உங்கள் லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு பேசமுடிகிறது. பொறூளாதாரம், அரசியல் பாதிக்கப்பட்டவர்களீன் பார்வையில்தானே பார்க்க வேண்டும்? அதுதானே அறம்? போகட்டும், 1991 பிறகு, Retail Revolution நடக்கிறதே? இதனால் யார் பாதிக்கபட்டார்கள் என்பது தெரியுமா? Reliance வ்ந்து அண்ணாச்சி காய்கறீகடையை ஒழித்தது. coffee day வந்து, நாயர் டீ கடையை ஒழித்துக்கொண்டிருக்கிறது.. Green Trend/Lime lite Salon(Cavin care group) வந்து சாதாரண ஏழை முடிதிருத்துபவனை அழித்து கொண்டு இருக்கிறது. Feel good store (Naidu hall group) வந்து சாதாரண பேன்சி ஸ்டோர் அழிந்து கொண்டு இருக்கிறது. தாரளமயவாக்கம் தெருவுக்குத்தெரு சாமியார்களாயும்,அறமில்லாத அரசியல்வாதிகளாயும், குட்டி முதலாளீகளயும், இவர்கள் பின்னால் கல்லூரிகளீயும் ( இந்த வியாபரம் தனிக்கதை),பினாமிகளீயும் உருவாக்கி ஏழையை இன்னும் பரம ஏழையாக உருவாக்கிருக்கிறது. இன்னும் முதலாளீகளீ பல திருட்டுத்தனங்களீ செய்ய உதவியிருக்கிறது. இந்த தாரளமயவாக்கத்தின் அடிப்படையே Spending culture அதாவது நுகர்வோர் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதுதான். தொழில்நுட்பம் வேறூ/முதாளீத்துவம் வேறூ. Economic Times/Business india படித்து விட்டு பொருளாதாரம் பேசாதீர்கள். இதையெல்லாம் தெரிந்துகொள்வதற்கு Harward Business Review தேவையில்லை. தாரளமயவாக்கத்தின் மூலமாக உங்களூக்கு கிட்டியிருக்கும் இணயதளத்தில் sainath, vandana shiva, badri raina,Arundhati Roy என்றூ டைப் அடித்து படிக்கவும்.
அடுத்த கேள்வி
– //அதியமான்,
நான் போன மறு மொழியிலே குறிப்பால் உண்ர்த்தினேன்( 1991 வருட வெங்காயம் என்று).
1991 பிரச்சினையை பேசுகிறீர்கள்.
உங்களுடைய மிகப்பெரிய பொய், 1991 IMF ருந்து இந்தியா கடன் வாங்கவில்லை என்பது. கீழ்க்காணூம் சுட்டிகளை படிக்கவும். வரலாற்றை திருப்பாதீர்கள். இந்த சுட்டிகளில், தெளிவாக சொல்லியிருப்பது என்னவென்றால், IMF யிடம் கடன் வாங்குவதற்கு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியா கதவை திறந்துவிட்டது. 45 டன் தங்கம் அடகு வைத்தது வேறு கதை. (இதுவும் நடந்தது)
http://www.blonnet.com/2009/03/22/stories/2009032251230200.htm
http://www.nytimes.com/1991/07/30/business/india-in-talks-with-imf.html
“உத்தமர்” என்ற பட்டம் உங்களுக்கு சரியாக பொருந்தும்.
இன்றளவில், எந்த நாட்டுக்கும் IMF, Condition இல்லாமல் Structural LOan கொடுத்ததில்லை. 1991ல் 4 பில்லியன் டாலர் லோன் கொடுத்தபோது, உலக அளவில் எல்லோருக்கும் ஆச்சிரியமாக இருந்தது . இதற்குப்பின்னால்தான், அமெரிக்க சூழ்ச்சி இருக்கிறது. அதற்கு, இந்தியாவும் வலுக்கட்டாயமாக உடன்பட நிர்பந்திக்கப்பட்டது.அதாவது, இந்தியா தன்னுடைய கதவை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கதவை திறக்கவேண்டும். அதுதானே நடந்தது.அதற்கு பிறகுதானே எல்லா அவலத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறோமே?
I.M.F. கொடுப்பது Structural loan அதாவது ஒவொரு உள் நாட்டின் பண்வீக்கம், பன்னாட்டு வர்த்தகத்தில் டாலர் Fluctuation சரிகட்டுவுது etc…… உலக வங்கி, கொடுப்பது Long term Loan, அதாவது ரோடு, பாலம் கட்டுவதற்கு. W.T.O ,வர்த்தகம் சம்பந்தப்பட்டது. அதாவது, எந்த பொருளை எங்கு,எப்படி,எப்போது விற்ப்பது. Patent etc…. இந்த மூன்று நிறுவனங்களும் ஒன்றுக்கொன்று பின்னியிருப்பவை. இவை அவ்வபோது, சேர்ந்தோ, அல்லது தனியாகவோ மூன்றாம் உலக நாடுகளை மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறது.
IMF ல் ஓட்டளிக்கும் உரிமை (Veto Power) அமெரிக்காவுக்கு மட்டும் தான் உண்டு.( UN ல் 5 நாட்டுக்கு உண்டு). 1980ன் முன்பகுதியில் ரீகனும்,மார்கெரட் தாட்சரும் இந்த IMF யை, மூன்றாம் உலக நாடுகளில் தாரளமயவாக்கத்தை பரப்புவதற்கு ஊதுகுழலாகவும்,மிரட்டியும் செய்தார்கள். இன்று வரையில்,IMF ல் தலைமை பதவிக்கு ஒரு அய்ரோப்பியர், world bank ல் ஒரு அமெரிக்கர் தான் வரமுடியும்.
1980லிருந்து, இன்று வரையில் IMF பல நாடுகளை மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறது. உதாரணமாக bolivia,thailand,indonesia,argentina,africa,ethopia,kenya etc…..( தாய்லாந்தில் ஏன் AIDS யை குறைக்கமுடியவில்லை? IMF இன் “திருப்பணி” தான். அதாவது லோன் கொடுத்து, Health மான்யத்தை நிறுத்த சொன்னது)
இந்த IMF கடனை சாதுர்யமாக சில நாடுகள் மறுத்துள்ளது. உதாரணமாக, சீனா, தென் கொரியா, மலேசியா…( இவர்களுக்கு எந்த அமெரிக்க மிரட்டலும் பலிக்கவில்லை).
IMF ஒவ்வொருவருடமும், எல்லா நாட்டு பொருளாதாரத்தை பற்றியும் அறிக்கை வெளியிடும்( Article 4). இதில் தனக்கு வேண்டாத/ மிரட்டலுக்கு பணியாத நாடுகளைப்பற்றி நச்சுக்கருத்துகளை உமிழ்ந்துகொண்டிருக்கிறது. IMF கடன் கொடுப்பதற்கு, நாட்டின் மேல் போடும் பல condition களை ( அதிக வரி, விவசாய மான்யத்தை நிறுத்துவது)நாம் தெரிந்துகொள்ளவே முடியாது. 1966ல் அமெரிக்காவில் வ்ந்த தகவல் உரிமை சட்டப்படியும், பல அமெரிக்கர்களுக்கே இந்த IMF அல்வா கொடுத்துக்கொண்டிருக்கிறது.
ஆகையால் 1991ல் இந்தியாவுக்கு வந்த பிரச்சினையை, 1980லிருந்துதான் பார்க்கவேண்டும். மிக தந்திரமாக கடனை வாங்குவதற்கு எல்லாவித நெருக்கடிகளையும் உருவாக்கி, பல condition ளோடு (பன்னாட்டு கம்பெனிகளுக்கு கதவை திறந்தது) கொடுக்கப்பட்டது.
இப்படித்தான், எல்லா மூன்றாம் உலக நாடுகள் பெரிய இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. இதிலிருந்து விடுபடுவதற்கு, அவரவர்கள் தங்களுடைய உத்திகளை சொல்கிறார்கள்.
போன மறுமொழியில் நான் எழுப்பிய பல அறம் (Ethics) சார்ந்த கேள்விகளுக்கு, எள்ளவும் உள்வாங்கி ஆராயாமல், உங்கள் புறங்கையால் ஒதுக்கித்தள்ளி, பொருளாதாரத்தை வேதியிலோடும்,இயற்பியலோடும் ஒப்பிட்டு கேணத்தனமான வறட்டு சித்தாந்தம் பேசுகிறீர்கள்.
தயவு செய்து, அருண் ஷோரி, குருமூர்த்தி குப்பைகளை படித்துவிட்டு அரைவேக்காடு பொருளாதாரம் பேசவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.//
do u have any idea about 1960s ? and we were begging IMF for dollars right from 50s. ok. after 1980s situation worsened due to CUMULATIVE effect of the past follies. finally, by following IMF presciprtions we got rid of IMF now !! and India is LESS depependent on US and WEst now than ever before. ok.
அடுத்த கேள்வி – // அதியமான்,
//தாராளமயமாக்கலில் விளைவாகத்தான் இந்த இலவச பிளாகர் / wordpress எல்லாம். அதன் மூலம் வினவு வலைதளம் உலகெங்கும் பலரும் படிக்க முடிகிறது. 1991க்கு முன் இருந்த நிலையே
தொடர்ந்திருந்தால் (பி.எஸ்.என்.எல் மட்டும் இருந்த நிலை) இந்த வாதம் சாத்தியமில்லை. தோழர்கள் பஸ்டாண்டுகளில் ‘புதிய ஜனனாயகம்” இதழ்களை விற்று கொண்டிருக்க வேண்டியதான்.//
இது நல்ல டமாஸு. அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களெல்லாம் முதலாளிகள் வியர்வை சிந்திக் கொண்டுவந்தவை என்கிறீர்களா அதியமான்? அப்படிப் பார்த்தால் பில் கேட்ஸ் இல்லையென்றால் வினவு இல்லை என்று ஒத்துக் கொள்ளவேண்டியதுதான். சரவணபவனின் புதுப்புது அயிட்டங்களையெல்லாம் மாஸ்டர்கள் கண்டுபிடித்து அறிமுகப்படுத்த, அண்ணாச்சி வேறு அயிட்டங்களைப் பார்த்துக் கொண்டிருந்த்தால்தான் இன்று கம்பி எண்ணுகிறார். நீங்கள் ஆப்பிள் ரசத்தைக் கண்டுபிடித்த்தே அண்ணாச்சி தான் என்கிறீர்கள். சத்யம் ராஜூவை வைத்திருக்கும் ஜெயில் வாசலில் கூட “எங்களுக்கு வேல கொடுத்த தலிவா” என்று நாலு பேர் நிற்கிறார்கள் – பிரேமானந்தாவைப் பாக்கப்போன பக்தர்கள் போல. நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் அதியமான்?
1991 புர்ரட்சி வந்தபிறகும், வினவு வந்த பிறகும் தோழர்கள் பஸ் ஸ்டாண்டில்புதிய ஜனநாயகம் வித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இருப்பார்கள். மேற்படி புரட்சியில் வெடித்த அக்வாபினா, பிஸ்லெரி பாட்டில்களைப் பொறுக்குவதற்கு பஸ்ஸ்டாண்டுகளில் ஒரு கூட்டம் தவிக்கிறதே, இதுவும் முதலாளிகளின் சாதனையில் சேருமா அதியமான்?
வினவு
//
அதியமான் செம்புரட்சி இருக்கட்டும், நீங்க நம்பும் முதலாளித்துவம் கூட ஒரு புரட்சி மூலமாகத்தான் சாத்தியமாச்சு, அந்த புரட்சியை யாரு செஞ்சாங்கன்னு நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்ல….
அதியமான் ! உன்னுடைய கீரல் விழுந்த்த கிராமபோண் போன்ற அரசியல் நேர்மையற்ற பின்னூட்டங்களை எல்லாம் இப்போதுதான் மருதையன் நேர்காணல் பேட்டியில் படித்தேன். அதில் தோழர்கள் சொன்ன விளக்கத்திற்கு எல்லாம் ஒரு பதிலும் சொல்லாமல் திரும்ப திரும்ப கிராமபோன் தட்டு மாதிரி கத்தும் உன்னூடு மல்லுகட்ட நான் தயார் இல்லை. கஷ்டப்படும் என் போன்ற தோழ்ர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் புரியும். எது நல்ல பாதை என்று. ஆளை விடு.
ஸ்டாலின், மாவோ பற்றி இதை விட கேவலமான வசவு வார்த்தைகளை எம்மால் மிக சுலபமாக
பயன் படுத்த முடியும்தான். ஆனால் அது நாகரீகம் அல்ல. மற்றும் எதிர்ம்றையான விளைவுகளைதான்
ஏற்படுத்தும். நேருவின் செயல்பாடுகளை விமர்சிக்கலாம்தான். ஆனால் இது போன்ற கீழ்தரமான
வார்தைகளால் அல்ல. தர்க்கம் மற்றும் தக்வல்களுடம் விமர்சனத்தை யாரும் மறுக்க போவதில்லை.
நேரு பற்றிய உமது அறியாமையே வெளிப்படுகிறது. அவரை பற்றி அப்படி கிழ்தரமாக திட்டுனால், நான் உம்மை அதே பாணியில் கீழ்தரமாக திட்டுவதில் என்ன தவறு ? உமக்கு ஒரு நியாயம், நேருவுக்கு ஒரு நியாயமா ? மறுபடியும் சொல்கிறேன் : நேருவின் கால்தூசிக்கு கூட நீர் சமமல்ல.
எம்மைப் பற்றி நீர் எழுதியது :
///தூ தூ என்று முதலாளிகள் படுக்கைக்கு விளக்கு பிடிக்கும் உங்களை ஓராயிரம் முறை திட்டலாம். ///
இதற்க்கு “தக்க” பதில் அளிக்காமல் இளிச்சவாயனாக இருக்க வேண்டுமா என்ன ?
அதற்க்கு வேற ஆளை பார்க்கவும்.
1991 பற்றிய எமது பதிவின் வந்த பின்னோட்டங்களை மறுபதிவு செய்வதுதான் உமது பதிலா.
அந்த பின்னோட்டம் கேனத்தனமாக இருந்தால், அதை நான் பொருட்படுத்தியதில்லை.
மேலும், இப்படி இறுதியா சொல்கிறீர் :
//கடைசியாக 1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் என்ன ஆகியிருக்கும் ? ஒன்றும் ஆகியிருக்காது – மக்கள் விழித்துக் கொண்டிருப்பார்கள். திறமையான கொள்ளைக் கூட்டத்தின் கையில் ////
மிக்க நன்று. 1991 இந்தியா திவலாயிருந்தால், இன்று இந்த விவாதம் நடந்திருக்காது. இன்றைய சிம்பாவே
போல கடும் வறுமை மற்றும் அழிவை சந்தித்திருப்போம். முக்கியமா, உமக்கும், இப்ப பார்க்கும் மென் பொருள் வேலை கிடைத்திருக்காது. (உண்மையில் உம்மை பார்த்து பெறாமையாத்தான் இருக்குலே. நான் அது போன்ற துறைகளில் வேலை வாய்ப்பை தவற விட்டு, இன்று தொழில்துறையில் லோல் படுகிறேன்.
கொடுத்த வச்சவர்கள். அதன் அருமை, வெய்யில் தான்லே புரியும்.)
//you name the place and time.// சென்னையில் ஆவடி, ஆவடி பஸ் ஸ்டாண்ட் தேதி நேரம் நீ சொல்/
///உங்களுடைய மிகப்பெரிய பொய், 1991 IMF ருந்து இந்தியா கடன் வாங்கவில்லை என்பது. கீழ்க்காணூம் சுட்டிகளை படிக்கவும். வரலாற்றை திருப்பாதீர்கள். இந்த சுட்டிகளில், தெளிவாக சொல்லியிருப்பது என்னவென்றால், IMF யிடம் கடன் வாங்குவதற்கு, பன்னாட்டு கம்பெனிகளுக்கு இந்தியா கதவை திறந்துவிட்டது. 45 டன் தங்கம் அடகு வைத்தது வேறு கதை. (இதுவும் நடந்தது)//////
i didnt say from 1991. but from mid 1990s no need for IMF loans as we had built up a large foreign exchange reserve. try to explain how we could do that in a few years after 1991 while until then we were begging IMF. and what about the miracle of chile ?
Avadi is too far from Perungudi, where i am located. we can meet in Marina beach or some bar anytime. call me at : 98415-98733
//a shit like you freely use terms like adipodi simply beacuse of this internet. mavane, try to use that term in person, if you are indeed a veeran. i can use ten times worser terms on you and your mates. ok. but i don’t want to waste my precious time with idiots you. // Adhiyaman, unparliamentary words are first used by you. When you go back to the comment which I have mentioned here, it clearly reveals the truth. So you must apologise for using such words and continuing it.
//அதியமான் ! உன்னுடைய கீரல் விழுந்த்த கிராமபோண் போன்ற அரசியல் நேர்மையற்ற பின்னூட்டங்களை எல்லாம் இப்போதுதான் மருதையன் நேர்காணல் பேட்டியில் படித்தேன். அதில் தோழர்கள் சொன்ன விளக்கத்திற்கு எல்லாம் ஒரு பதிலும் சொல்லாமல் திரும்ப திரும்ப கிராமபோன் தட்டு மாதிரி கத்தும் உன்னூடு மல்லுகட்ட நான் தயார் இல்லை. கஷ்டப்படும் என் போன்ற தோழ்ர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் புரியும். எது நல்ல பாதை என்று. ஆளை விடு.///
அதியமான் ! உன்னுடைய கீரல் விழுந்த்த கிராமபோண் போன்ற அரசியல் நேர்மையற்ற பின்னூட்டங்களை எல்லாம் இப்போதுதான் மருதையன் நேர்காணல் பேட்டியில் படித்தேன். அதில் தோழர்கள் சொன்ன விளக்கத்திற்கு எல்லாம் ஒரு பதிலும் சொல்லாமல் திரும்ப திரும்ப கிராமபோன் தட்டு மாதிரி கத்தும் உன்னூடு மல்லுகட்ட நான் தயார் இல்லை. கஷ்டப்படும் என் போன்ற தோழ்ர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் புரியும். எது நல்ல பாதை என்று. ஆளை விடு.///
All of your comrades, (incl Comrade Marudhaiyan) do not know the basics of economics and esp about 1991 crisis and solutions. no one has till date given a clear and logical alternative solution to the 1991 crisis, because no alternative exists. how did we get rid of IMF loans after mid 90s ? Answer this if you can/. and why couldn;t we get rid of IMF until then. if you cannot answer this question in a staight manner, then bye to you.
for your info : even though, i am not an economist, i have a standing invitation to address the students of Annamalai Unty economic dept from a very laeaned Professor there. I know my self worth and
know something about you guys too. i wonder what you would have done if you were the finance minister of India in 1991 ? :))
actaully, i am the one who is wasting my time in arguing with one liners and ignorants.
finally : you comrades can organise and build the national economy and politcal set up, etc AFTER the red revolution (which is comming soon) as per your marxist ideals, etc.. Until then, pottu kuzapaatheengappa. let free market or whatever polices run its course logically.
sukathev,
“அடிபொடி” என்ற வார்தைய பயன்படுத்தி, இதை ஆரம்பித்தது அறிவுதான்.
இது உமக்கு சர்வ சாதாரணமாக தெரியுது.
இதை நான் “நீங்க எல்லாம் வினவின் அடிபொடிகள்” என்று சொல்யிருந்தால் என்ன
ஆயிருக்கும் ? கற்பனை செய்கிறேன்.
//i didnt say from 1991. but from mid 1990s no need for IMF loans as we had built up a large foreign exchange reserve. try to explain how we could do that in a few years after 1991 while until then we were begging IMF. and what about the miracle of chile ?// அப்படியா ? இப்போது இருக்கின்ற பணம் அன்னிய முதலீடுகள் எப்போது வேண்டுமெனாலும் வெளியே ஓடி விடலாம்.சிலி பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. தெரிந்த தோழர்கள் பதிவிடவும்
ஆனால் வெனிசூலா, பிரேசில் முதலான நாடுகளில் தாராளமயவாதத்தை ஓட ஓட விரட்டிவிட்டார்களே.
//1991 பற்றிய எமது பதிவின் வந்த பின்னோட்டங்களை மறுபதிவு செய்வதுதான் உமது பதிலா// அதற்கே நீர் பதிலளிக்கவில்லையே ?
is it so ? how and explain with proof first. that is, these nations are back to statism and closed economy and are nationalising large companies. i don;t find this there. Chauvez has not nationalised much till date. he is building a welfare state with petro dollars. that is all. rest is just rhetoric. and Brazil is part of the BRIC group (Brazil, India, Russia and China) which are liberalising fast but without much ethics and morals. that is a different issue. all became corrupt due to undue statisim and socialism (Asuran : this in not your socilaism. ok. :)) )
Arivu, முதலில் நான் இங்கு இறுதியாக எழுப்பிய அடிப்படை கேள்விக்கு
பதில் அளிக்க முயற்ச்சிக்கவும். மாற்று வழி என்ன ?
மற்றும் திவால் ஆனால் என்ன ஆகியிருப்போம்.
அதற்க்கு தெளிவான பதில் சொல்லுக, பார்போம்.
//அப்படியா ? இப்போது இருக்கின்ற பணம் அன்னிய முதலீடுகள் எப்போது வேண்டுமெனாலும் வெளியே ஓடி விடலாம்.//
but it didn’t even in 2009 depression. and this parrot cry is there from 1991. and this far better for building a huge USD reserve (now crossed 300 billion, i beilve) than begging from IMF annually. we have ample foreign exchange reserves now and hence rupee strenghtnened against USD for the first time in many many decades after 1947.
you cannot understand all this basic economic facts..
//Chauvez has not nationalised much till date// உம்மைப் போன்ற முதலாளிகளும், படைகளில் உள்ள உயர் வர்க்க அதிகாரிகளும் அதற்கு தடையாக இருக்கின்றார்கள். ஆனால், இப்போதுதான் ஆரம்பித்து இருக்கின்றார். மெல்ல மெல்ல அது வெற்றியாக முடியும்.
அப்படியா. நல்ல கதை. இது போன்ற வெற்று வாதங்கள் தாம்
உமக்க்கு தெரியும் போல. நீர் வேலை செய்யும் பன்னாடு
நிறுவனத்தை இந்திய அரசி தேசியமயமாக்கினால் அதன்
பின் அது என்ன ல்ச்சனத்தில் இயங்கும் என்பதை அறியமாட்டீர்.
இந்தியன் வங்கிக்கான நிலை ஆகும்.
சாவேஸ் அரசில் ஏற்கெனவே, பல தோழர்கள் பி.எம்.டபள்யூ
கார்கள் வாங்கி, ஆடம்பரமாக வாழ்கின்றனர். அதாவது,
60களில், 70களில் இந்தியாவில் உருவான நிலை அது.
அதிகாரிகளும், அரசியல் தலைவகளின் கூட்டுக் கொள்ளை.
அரசுடைமையாக்கப்படும் நிறுவனங்களில்தாம் கொள்ளை
அடிக்க முடியும். அதான்ல் தான் அந்த கோஸம்.
சாவேஸ் இதை உணர்ந்த் இருக்கிறார். யாதர்த்தம்
புரியாதவர் அல்ல அவர். மேல் விவரங்கள் பிறகு
தருகிறேன்.
அப்படின்னா தனியார்மய உலகமான அமெரிக்கா எதனால் அதியமான் திவாலாகி போனது, பிறகு அந்த முதலாளித்துவ சனியன்களுக்கு மக்களுடைய பணத்தை எடுத்து (பிக்பாக்கெட்அடித்து) எதற்கு கொடுத்தார்கள் ?
US model is flawed and is under debate. we prefer the German model which is more correct form of free markets. ok
அதென்ன ஜெர்மன் மாடல்
அதுவும் முதலாளித்துவ பயங்கரவாதம் தானே
that is the only word you know. :))
read about German miracle of 1945 to till date fully first. and what about “communist bayangaravaatham” ? :))
இந்துமதத்துல ‘நல்ல’ இந்துமதம்
இருக்கிறதே என்று சிபிஎம் கோமாளி பண்டிதர்கள்
உளறிக்கொட்டுவதைப் போன்றிருக்கிறது.
முதலாளித்துவத்தில் நல்ல முதலாளித்துவம்
ஜெர்மன் முதலாளித்துவம் என்கிற உங்கள் கூற்று.
முதலாளித்துவமும் பயங்கரவாதம்
இந்துமதமும் பயங்கரவாதம்
இரண்டையும் ஒழிப்பது தான் மக்களுக்கு நல்லது.
//மாற்று வழி என்ன ?
மற்றும் திவால் ஆனால் என்ன ஆகியிருப்போம்// அதியமான் ! எத்தனையோ முறை சொல்லி விட்டேன். திரும்ப திரும்ப அதே கேள்விகளைக் கேட்கிறீர்கள். மாற்று வழி மற்றும் உறுதியான வழி மார்சிசம் மட்டும்தான். திவால் ஆனால் முதலாளிகள் தர்ம அடி வாங்கியிருப்பார்கள். இப்போது பிரான்சில் caterpiller போன்ற நிறுவனங்களின் அதிகாரிகள் வாங்கி கொண்டுள்ளனர். இப்போது அமெரிக்காவிலேயே அதிகம் வாசிக்கப்படும் மனிதர் காரல் மார்க்ஸ் தான். BBC நடத்திய கருத்துக் கணிப்பிலேயே காரல் மார்க்ஸ் தான் – உலகிலேயே அதிகம் பாதித்த மனிதராக தேர்வானார். தோழ்ர் மருதையன் பதிவிலேயே வந்த பின்னூட்டங்களில் இதன் பதில் உள்ளதே ?
/////////////////////////////////
இப்போது அமெரிக்காவிலேயே அதிகம் வாசிக்கப்படும் மனிதர் காரல் மார்க்ஸ் தான். BBC நடத்திய கருத்துக் கணிப்பிலேயே காரல் மார்க்ஸ் தான் – உலகிலேயே அதிகம் பாதித்த மனிதராக தேர்வானார்.
////////////////////////////////////
உலகத்திலேயே சிறந்த கோமாளி,
பித்துக்குளி,
ஒரே ஒரு செருப்படி வாங்கிய
முதலாளித்துவ சிகாமனி ஜார்ஜ் (பு)க்ஷீ
சிறந்த ஏமாற்றுக்காரன்
ஒபாமா.
இந்தியாவில் முதல் முறையாக
(இன்னும் பல முறை உண்டு)
செருப்படி வாங்கிய
சிறந்த பொருளாதார புலி ப.சி.
///மாற்று வழி மற்றும் உறுதியான வழி மார்சிசம் மட்டும்தான். திவால் ஆனால் முதலாளிகள் தர்ம அடி வாங்கியிருப்பார்கள்.///// அப்பனே,
மார்கிஸத்தை அமல்படுத்த காலம் போதாது. எம்ர்ஜென்ஸ் வார்டின் இருப்பவரிடம், சாவகாசமாக
சிகிச்சை அளிப்பதை பற்றி பேசினால் எப்படி இருக்கும்.
1991இல் திவால் ஆயிருந்தால், முதலாளிகளை விட தொழிலாளிகளும், ஏழைகளும்தான் மிக மிக மிக மிக் அதிகம் பாதிப்படைந்திருப்பார்கள். பஞ்சம், பட்டினி, கடும் நெருக்கடி உருவாகியிருக்கும். இந்த இணைய விவாதம் இன்று கண்டிப்பாக நடந்திருகாது. நாம் அனைவரும் எங்காவது அலைந்து கொண்டிருப்போம். பிற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்திருப்போம். உமக்கு இந்த வேலை கிடைத்திருக்காது.
நடைமுறை எதார்த்தங்கள் புரியல உமக்கு.
மார்க்ஸிசம் : கம்யூன்சம் அமலாக பல பல பத்தாண்டுகள் ஆகும். அதை இன்னும் எந்த நாடுகளுக் அடைந்ததில்ல என்று தோழர்கள் தான் சொல்றாக. புரட்சி அரசு உருவானா, உடனே அன்னிய செலவாணி சேர்ந்திடுமா ? இறக்குமதி நின்னு போய், பெட்ரோல் இல்லாம, போக்குவரத்து மற்றும் உற்பத்தி ஸ்தம்பித்து,
நாடே நாசமாகிவிடும். எந்த சித்தாந்தமும் அப்போது இருக்காது. வெறும் குழப்பம் மற்றும் மரணம் தான்.
சிம்பாவே பற்றி படியும். 1923 ஜெர்மனி, 70களுக்கு பின் ரஸ்ஸியா, மவோவொன் சீனா : இதன் வரலாறு படித்தால் விளங்கும்.
////////////////////////////////////////////////////
1991இல் திவால் ஆயிருந்தால், முதலாளிகளை விட தொழிலாளிகளும், ஏழைகளும்தான் மிக மிக மிக மிக் அதிகம் பாதிப்படைந்திருப்பார்கள். பஞ்சம், பட்டினி, கடும் நெருக்கடி உருவாகியிருக்கும். இந்த இணைய விவாதம்
இன்று கண்டிப்பாக நடந்திருகாது. நாம் அனைவரும் எங்காவது அலைந்து கொண்டிருப்போம். பிற நாடுகளுக்கு தஞ்சம் புகுந்திருப்போம். உமக்கு இந்த வேலை கிடைத்திருக்காது.
////////////////////////////////////////
இப்போது மட்டும் ஒன்றுமே ஆகவில்லையா அதியமான் ?
முதலாளித்துவத்தா
ல் அமெரிக்காவில் மக்கள் படுத்துறங்க
கூட இடம் கிடைக்காமல் சாலைகளில் டென்ட் அடித்து
உறங்குகிறார்களே அது பாதிப்பில்லையா ?
சம்பவம் இந்தியாவில் நடந்ததா இல்லை அமெரிக்காவில்
நடந்ததா என்பது அல்ல பிரச்சனை
நீங்கள் கொண்டாடும் முதலாளித்துவ அமைப்பில் தானே
நடக்கிறது.
இந்தியாவில் முதலாளித்துவ பயங்கரவாதம்
அதை விட அதிகமாக மக்களை கொல்கிறது.
நீங்கள் தலையில் வைத்துக்கூத்தாடும் உலகமயம்
பல லட்சம் விவசாயிகளை
படுகொலை செய்திருக்கிறதே அது போதாதா
இந்த அமைப்புமுறையின் தோல்விக்கு ?
தொன்னூறு கோடி மக்களை ஒரு நாளைக்கு 80 ரூபாய்
கூட சம்பாதிக்க முடியாத நிலையில் வைத்திருக்கிறதே
இது தான் உலகமயத்தின் முன்னேற்றமா ?
கோடிக்கணக்கான மக்களின் வறுமைக்கும்,தற்கொலைக்கும்
வேலையின்மைக்கும்
குறிப்பாக தகவல் தொழில் நுட்ப
துறையின் சீட்டுக்கட்டு சரிவுக்கும் காரணம் இந்த
முதலாளித்துவ பயங்கரவாதமாக இருக்கும் இந்த
சூழலிலும் அதாவது முதலாளித்துவம்
சுடுகாட்டுக்கு போக வேண்டிய நேரத்தில்
கல்யாணம்,தேனிலவு என்று பேசும் உங்கள்
துணிச்சலே துணிச்சல் தான் !!!
நண்பர் அதியமானே,
ரசியாவில் ஸ்டாலினும், சீனவில் மாவோவும் (உங்கள் கூற்றுப்படி) மக்களை பட்டினியால் சாகடித்த கொலைகாரர்கள்,சர்வாதிகாரர்கள் என்றே வைத்து கொள்வோம். அவர்கள் கம்யூனிஸ்டுகள். கொலைகாரர்களாத்தான் இருப்பார்கள்! இவ்விருநாடுகளையும் தவிர்த்து பார்த்தால் மற்றவையெல்லம் முதலாளித்துவ நாடுகள். இந்நாடுகள் எல்லாம் கடந்தகாலங்களில் எவ்வாறு நடந்து கொண்டன. கடந்த காலத்தை விடுங்கள், நிகழ்காலத்தில்!
ஸ்டாலினும் மாவோவும் எந்த நாட்டின் மீது எந்த முதலாளிக்காக படையெடுத்து கொள்ளையிட்டனர்? எனக்கு தெரியவில்லை தாஙகளிடம் ஆதாரம் இருந்தால் தெரிவியுங்கள். இங்கிலாந்து,பிரான்ஸ்,ஜப்பான்,அமெரிக்கா,இத்தாலி,ஜெர்மன் போன்ற நாடுகளெல்லம் தங்களின் முதலாளிகளின் இலாப வெறிக்காக அண்டை நாடுகளை அடிமையாக்கவில்லை. ஏன் இந்தியா கூட தனது முதலாளிகளுக்காக தானே அண்டை நாடுகளில் மூக்கை நுழைக்கிறது. அரசும் முதலாளிகளும் வேறுவேறானவர்கள் இல்லை. முதலாளிகளுக்காகத்தான் அரசுகள்.
இயற்கையின் நெறிகளை அழித்த முத்லாளிகளின் இலாப வெறி:
உலகின் நுரையீரல் எனக் கருதப்பட்ட அமேசான் ப்ள்ளத்தாக்கு ஒரு சில பணமுதலைகளின் கொள்ளைக்காக அழித்ததன் விளைவாக உலகின் 20% சுத்ததண்ணீரும் தாவர,விலங்கு வகைகளில் 30% கொண்ட அமேசான் இன்று பொட்டல்காடு. விண்வெளியில் இருந்து பார்த்தால் தீ ஜூவாலைப் போல் எரிகிறதாம் நைஜீரியா. இங்கு செல்,செவ்ரான் போன்ற எண்ணெய்க் கம்பெனிகளால் வெளியேற்றப்படும் தீக்கொழுந்துகளால் காற்று மண்டலமே பாழாகிக் கிடக்கிறது. அண்டார்டிகாவில் காணப்படும் எண்ணெய் வளத்தை சூறையாடிய பன்னாட்டு கம்பெனிகளின் லாப வெறியில் வெளியான வெப்பக்காற்றினால் பூமியை பாதுகாத்த பனிப்பாறைகள் உருகிக்கொண்டுள்ளது. இதனால் கடல் மட்டம் 20 அடி உயரும் அபாயத்தை தடுக்க முடியாது என்கின்றனர் விஞ்ஞானிகள். ஒன்றல்ல இரண்டல்ல இந்த தனிமனிதர்களின் இலாப வெறி இன்று உலக மக்களின் எதிர்காலத்தையே பாழாக்கியுள்ளது. இந்தியாவில் பெப்சியின் லாபவெறிக்கு கேரள பிளாச்சிமாடா தனது நீர் வளத்தை இழந்தது. அங்கிருந்த மக்கள் நீருக்காக 10 மைல் நடக்க வேண்டியதாகியது. இவ்வாறு உலக மக்களின் வாழ்வாதாரங்களையே சூறையாடும் முதலாளிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? அதுவும் தரகு முதலாளிகள்! அவர்களுக்கு லாபம் வேண்டுமானால் சந்தை வேண்டும். அதற்காகத்தான் குறிப்பிட்ட சதவீதத்தினரை வாங்கும் சக்தி கொண்டோராக மாற்ற வேண்டியுள்ளது. லோன் கொடுக்காமல் வாகனங்களை விற்க முடியுமா, வீடு கட்டத்தான் முடியுமா.
இவர்களால் சுரண்டப்படும் இடங்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதியாகியுள்ளனர். அவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு தெரியுமா! இணையத்திலே எதை வேண்டுமானாலும் எழுதுவதால் நீங்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைக்கிறீர்களா? இதோ புதுக்கோட்டை கால்ஸ் சாராய ஆலைக்காக போரடுகிறார்கள் மக்கள். வருகிறீர்களா! ஆர்ப்பாட்டம்,போராட்டம் எதிலாவது கலந்ததுண்டா. அப்பொழுதுதானே தெரியும்,சுதந்திரத்தை. முட்டி பெயர்ந்திடும்.
கொத்துகொத்தாக மக்கள் செத்தால்தான் அதியமான் நம்புவாரோ!
http://kalachuvadu.com/issue-89/pathi03.asp
மாயாவித் திருடர்கள்
சக்கரியா
(about Pilachimadai and Coke)
//ஸ்டாலினும் மாவோவும் எந்த நாட்டின் மீது எந்த முதலாளிக்காக படையெடுத்து கொள்ளையிட்டனர்? எனக்கு தெரியவில்லை தாஙகளிடம் ஆதாரம் இருந்தால் தெரிவியுங்கள். ///
try to argue this point with any East European nation of former communist bloc.
especially, Poland, Hungary. they suffered a lot under Stalin’s rule which was
ruthless dictatorship. and reag Mao : there are tons of material about his
“benevlolance” rule. Idi amin is a better perosn when compared to him.
The Chinese themselves admit this now.
askar,
You are confusing imperialism, fasicsim with free market capitalism. until WW 2, many European nations like UK, France were
not real liberal democracies that they are today. colonialsim was there and it was based on undmeocratic capitalistic state.
the word capitalism is freely used here but is a misnomer.
But in recent decades, liberal democracy has evolvced very much and there is no imperialism or colonialism of old type ;
esp by old colonial powers like UK, France, Germany, Netherlands or Japan. but they are still called as capitalitic states.
ok. so understand the difference.
the best models of free market capitalism is found in Japan, Netherlands, etc and not US model.
and poverty and huger : i have written a lot about the miracle of Japan after 1945. After WW 2,
Japan was totally destroyed and poverty and hunger there was much much worse than India.
but within a few decades , they rebuilt their economy thru free market capitalsim, based on
liberal democracy (and certainly no aggresive imperialism or millitarism). Same story with
war destroyed W.Germany, S.Korea, Taiwan ; even Malaysia and Singapore.
comapare their past 50 years history with India. We messed up and are trying to
re build only recently. and Chinese are far ahead in adapting free markets because
they learnt a bitter lesson under Mao. They are not fools or crazy to abandon
communism / socialism. nor can their actions be called revisionists and phoneys.
unless, you guys are into the actual reality, you may not understand all this.
US model is not the correct form of free market capitalism. and US is NOT bankrupt.
many finanical institutions there are bankrupt and needs “help” now. reasons and
solutions are complicated and i have written extensively in my english blog :
athiyaman.blogspot.com
I prefer the German model of free market capitalism.
தோழர்களே, நண்பர்களே… முதலாளித்துவத்தின் உள்ளடக்கமான பண்பாக வெளிப்படும் ஒவ்வொரு சில வருடங்களுக்கு ஒரு முறை ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளை ஆதரித்து அல்லது முதலாளித்துவத்தின் ஏதாவதொரு மாதிரியை ஆதரித்து நண்பர் அதியமான் இங்கு நீண்ட விவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்..
சமீபத்தில் நடைபெற்ற மார்க்சிசம் 2009 கருத்தரங்களில் இரு பெரும் அறிஞர்களின் உரை இடம்பெற்றது..
1. David Harvey : Distinguished Professor at the City University of New York (CUNY) and author of various books, articles, and lectures. He has been teaching Karl Marx’s Capital for nearly 40
2. Chris Harman : Editor of International Socialism, a former editor of Socialist Worker and a member of the Central Committee of the Socialist Workers Party.
இதனை ஆங்கிலம் அறிந்த அனைவரும் பார்க்குமாறு வேண்டுகிறேன்.. இதில் தற்பொழுது உள்ள பொருளாதார நெருக்கடிகளை பற்றியும், முதலாளித்துவத்தின் பண்புகளை பற்றியும், சோசலிச இயக்கங்களின் செயல்பாடுகள் பற்றியும் அவர்களின் கருத்துக்கள் இடம்பெற்று உள்ளது… இது இங்கு நடைபெறும் விவாதத்திற்கு உதவியாய் இருக்கும் என நம்புகிறேன்…
http://www.youtube.com/watch?v=YYQb0fthNfI
http://davidharvey.org/
அதியமான்,
விவாதங்களின்போது கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது கூடவே கேலி உவமைகளை நீங்கள்தான் முதலில் பயன்படுத்தியிருக்கீறீர்கள். மாமா வேலையென்றால் விளக்கு பிடிப்பீர்களா என நீங்கள்தான் துவக்கியிருக்கீறீர்கள். இதை கைவிட்டுவிட்டு விவாதித்தால் மற்றவர்கள் பொறுமையிழப்பதை தவிர்க்க உங்கள் தரப்பிலிருந்து உதவமுடியும். மற்றபடி முதலாளிகளை யாராவது திட்டினால் அதை உங்களை திட்டியதுபோன்று எடுத்துக் கொள்ளவேண்டாம். தனிப்பட்ட எந்த முதலாளி பற்றியும் அங்கே வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு எப்போதும் நல்ல அபிப்ராயம் இருந்ததே கிடையாது என்பதால் இதை தனிச்சிறப்பான விசயமாக விவாதிப்பதில் பொருளில்லை.
நம்பி, மற்றும் நண்பர்கள், தோழர்கள் விவாதிப்பதினூடாக எந்த சமயத்திலும் பொறுமை இழக்காமல் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். முதலாளித்துவத்தின் மகிமை குறித்தும், கம்யூனசம் பற்றிய அவதூறும் நாம் கருதுவதைக் காட்டிலும் முதலாளித்துவ ஊடகங்களால் மிகுந்த செல்வாக்குடன் நிலவுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அதை நடைமுறை போராட்டத்தினூடாகவும், தொடர்ந்த கருத்தியல் போராட்டங்களினூடாகவும்தான் முறியடிக்க முடியும் என்பதால் இங்கே நாம் ஆத்திரம் கொள்வதை தவிர்க்கலாம்.
அனைவருக்கும்,
புள்ளிவிவரங்களை வைத்து மட்டும் விவாதிப்பது முடிவில்லாமல் இருக்கும் என்று தோன்றுகிறது. இதனால் விவரங்களையும், புள்ளி விவரங்களையும் குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம். புள்ளிவிவரங்களிலிருந்து உண்மையை உருவாக்க முடியாது, மாறாக கண்டுபிடிக்கவேண்டும். அதற்கு ஒரு கோட்பாடு என்ற முறையில் முதலாளித்துவம் சரியா, கம்யூனிசம் சரியா என விவாதிக்கலாம். அதன் போக்கில் விவரங்களை தந்தால் இந்த விவாதம் சரியாக செல்லுமென்று தோன்றுகிறது.
இருநாட்களாக இணையம் பக்கம் வர இயலாத்தால் இந்த விளக்கத்தை தாமதமாக அளிப்பதற்கு மன்னிக்கவும்.
தோழர் வினவு,
மாமா வேலை என்று எதை பற்றியும் யாரும் சொன்னாலும் அது கீழ்தரமான செயல்தான்.
வெகு சினம் வருகிறது. நேருவை அப்படி ஒருவர் (புரியாமல்) விளிக்கும்போது பல மடங்கு வருகிறது.
அப்படி பட்ட சொல்லாடல்களை தவிர்க்க சொல்லுங்கள். அமெரிக்க மற்றும் மேற்கத்தைய முதலாளிகள் மற்றும் அய்.எம்.எஃப் உடன் உடன் பணி செய்ய அல்லது கூட்டாக செயல்படும் இந்திய முதலாளிகளை பற்றி
சர்வ சாதராணமாக அப்படி சொல்லப்படுகிறது, உமது தோழர்களால். உண்மையில் அப்படி பட்ட இழிவான
நிலை அல்ல அது. அதை பற்றி தெரிந்து கொள்ள வாசிப்பனுபவம் மற்றும் ஒரு திறந்த மனமும் தேவை.
அடிவருடி, கைக்கூலி போன்ற சொல்லாடல்களும் அதே வகைதான். இது மிக மிக மட்டமான, குரூடான
மேம்போக்கான முறை. இப்படி பேசுவது மதவாதம் தான். இதனால் ஒன்னும் சாதிக்க முடியாது.
/////தனிப்பட்ட எந்த முதலாளி பற்றியும் அங்கே வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு எப்போதும் நல்ல அபிப்ராயம் இருந்ததே கிடையாது என்பதால் இதை தனிச்சிறப்பான விசயமாக விவாதிப்பதில் பொருளில்லை.
//////
அப்படியா ? இது உங்க அறியாமை அல்லது அனுபமின்மையை கான்பிக்ககிறது. எம் நிறுவனத்தில்
வேலை செய்யும் தொழிலாளர்கள் எம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எமக்கு மிக நன்றாக
தெரியும். எம்மிடம் வேலை செய்து, பிறகு வெளியேறி, தனிதொழில் அல்லது வேறு வேலையில் சேர்ந்து
இன்று மேம்பட்ட முன்னாள் தொழிலாளர்கள், இன்றும் எம்மை வழியில் எங்கு சந்தித்தாலாம் மரியாதையுடனும், அன்புடனும் தான் விளிக்கிறார்கள். மனித சுபாவம் பற்றி எமக்கும் சற்று தெரியும் தான்.
பல வருடங்களுக்கு முன் நானும் ஒரு தொழிலாளியாக இருந்தவன் தான். 1993இல் திருப்பூரில் மாதம் ரூ.800இல் வேலை பார்திருக்கிறேன். என் முதலாளி மீது இன்றும் நல்ல தொடர்பு உண்டு. நண்பர்கள் போல ஆகிவிட்டோம். இதே போல பலரும் உண்டு.
அனைத்து குழுக்களில் இருப்பதை போல, முதலாளிகளில் பலர் அல்லது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர்,
கொடூரமாகவும், ஈவிரக்கமில்லாமலும் நடந்து கொள்கின்றனர் தான். சந்தேகம் இல்லை. பெரிய தொழிற்சாலைகளில், சம்பளம் மற்றும் இதர சலுகைகள் சராசரியை விட மிக அதிகம் இருப்பதால், அங்கு
தொழிலாளர்களின் மனோபாவம் நீங்க சொன்ன மாதுரி இல்லை. ஜாம்செட்பூரின் 100 ஆண்டு வரலற்றை பற்றி
படித்து அறியுங்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் தொழிலாளர்களின் மனோபாவம் மற்றும் உணர்வுகள்
பற்றியும் படியுங்கள்.
ஜே.ஆர்.டி டாடா, திருபாய் அம்பானி, ரஸ்ஸி மோடி, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி,
பொள்ளாச்சி மகாலிங்கம், எஸ்கார்ட்ஸின் ஹரி நந்தா : இவர்களை பற்றி இவர்களிடம் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் இதர பணியாளார்கள் என்ன கருதினார் என்பது பற்றி உமக்கு தெரியாதுதான். கண்டிப்பாக நீங்க நினைக்கிற மாதுரி இல்லை. மனிதவள மேம்பாடு (HR and motivating humans) எனப்து மேனெஜ்மென்ட்டில் ஒரு பகுதி. மேலும் மனிதாபிமானம், மனிதனேயம் மற்றும் சக மனிதர்களின் மீது அன்பு காட்டுவது மார்க்சிஸ்டுகளால் மட்டும்தான் முடியும் ; தொழில்முனைவோர்களால் அப்படி இருக்க முடியாது என்பது மூட நம்பிக்கை. வாழ்க்கையை பற்றியும் மனிதர்களில் இயல்பு பற்றியும் சரியாக உணராதவர்களின் கருத்து இது.
அதியமான், எந்த ஒரு ‘இந்திய – ஆசிய’ முதலாளியும், அவர் எந்த அளவில் இருந்தாலும் தன்னை தனது தொழிலாளிகள் நேசிப்பதாகவே நம்புவார். ஏதோ தான் வேலை கொடுத்ததனால்தான் இந்த தொழிலாளிகளுக்கு ஒரு வாழ்க்கை அமைந்தது போலவும் அதனால் அவர்கள் மேல் வேலையை தான்டி உரிமை எடுத்துக்கொள்ள முயல்வர்
இது ஒரு அரதப்பழசான பண்ணையார் முறை. ஜப்பானிலும் கொரியாவிலும் தொழிலாளிகள் தலை குனிந்து மரியாதை செல்லுத்துவதை பார்த்த கினற்று தவளைகள் இந்தியாவில் கடை விரித்த பின்னர் அதையே எதிர்பார்த்து மூக்குடைபட்ட கதைகள் ஏராளம். உண்மையில் நீங்கள் 25 வருடங்களுக்கு முன்னர் தொழிலாளியாக இருந்த கதையை விடுங்கள், இப்போது நீங்கள் உலகை காண்பது முதலாளி என்ற தகுதியிலிருந்து, இதில் ஒரு விதமான bias வந்துவிடுகிறது….
கம்யூனிசத்தை கட்டோடு வெறுக்கும் ஐடி தொழிலாளர்கள் தங்களது முதலாளிகளை. மனிதவள மேம்பாட்டு மேலாளர்களை எப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்பதை உங்களைவிட அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பும், பேசும் வாய்ப்பும் பொட்டிதட்டும் எனக்கு வாய்திருக்கிறது.. நீங்கள் குறிப்பிட்டு இருப்பவர்களை பற்றி இணையத்தில் பக்கம் பக்கமாக திட்டித்தீர்த்திருக்கிறார்கள்… நீங்களே தேடிப்பிடித்து பார்த்துக்கொள்ளுங்கள்.. இதே கடந்த வருடமாக இருந்தால் உங்கள் பட்டியிலில் சத்யம் கூட இடம் பெற்றிருக்கும் தானே…..
அமெரிக்காவில் சென்டிமென்டுகள் குறைவு, பல ஹாலிவுட் திரைப்படங்கள் அதற்கு சாட்சி.
நடைமுறையில் நீங்கள் ஒரு welfare bourgeoisie ஆக கூட இருக்கலாம், ஒரு டீக்கடை முதலாளியைப்போல தனது தொழிலாளிகளை விட அதிகமாய் வேலை செய்பவராக இருக்கலாம். ஆனால் இந்த முதலாளி தெழிலாளி முரன்பாட்டை விளங்கிக்கொள்ளாதவரை நீங்கள் ஒரு இரண்டும் கெட்டான் நிலையில்தான் இருப்பீர்கள். ஆனால் இந்த விவாதம் தேவையற்றது. தனியுடமை மற்றும் பொதுஉடைமை சிந்தாந்த மோதல்களினூடாக நாம் நம்மை புரிந்து கொள்வதுதான் சரியானதாக இருக்கும் என்பது எனது கருத்து.
அதியமான்! விவாதம் என்பது பொதுவானது அதில் யார் வேண்டுமாலும்
பங்கேற்கலாம் உமக்கு விவாதம் செய்ய திராணியிருந்தால் விவாதம் செய்
அதைவிட்டுவிட்டு தோழர் அறிவுடைநம்பியை எப்படி கெட்டவார்த்தையில்
திட்டலாம், உனக்கு பிடிக்கலைனா விலகிக்கோ அதைவிட்டு ஆபாசம் ஏன்?
தோழர் அறிவுடைநம்பி இந்த மாதிரி மூன்றாம் தர ஆட்களிடம்
விவாதத்தை தவிர்க்கவும் இவனிடம் பேசினால் நம் மதிப்புதான் குறையும்… அவன் அவன் பெயரையே சொல்லியிருக்கிறான் அவ்வளவுதான் தயவு செய்து கவலைப்படதீர்கள்,
//Avadi is too far from Perungudi, where i am located. we can meet in Marina beach or some bar anytime. call me at : 98415-98733//
அதியமான் அப்படியே தங்களுடை வீடு, கரூர் முகவரியையும் கொடுத்தால் நீ வீரன்யா முடிந்தால் வீடு, கரூர் வீடு போட்டோவோடு ரூட் மேப் போட்டு உன் பிளாக்ல் போட்டல் நீ உண்மையிலேயே ஆம்பளை(நீ கண்டிப்பா போடுவ நீதான் தைரியசாலியமே)
//உன்னை மாதுரி கோழை கபோதிங்க, இணைய இருட்டில் மறைந்துகிட்டு தான் இப்படி எழுத துணிவீர்கள்.//கந்துவட்டி அதியமான் நீயும் இணைய இருட்டுலதான் எழுதற ஆனால் இங்கே எழுதும் தோழர்கள் மக்களை நேரடியாக சந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் உன்னால் முடிந்தால் நீ ஒரு பொதுக்கூட்டம் போட்டு முதலாளித்துவ பிரச்சாரம் பண்ணு பார்க்கலாம்(இது சவால்டா தக்காளி)
//டேய் தாயோளி,தைரியம் இருந்தா நேரில் சந்திக்கும் போது, என் முகத்த பார்த்து இதே வார்த்தைகளை சொல்லு//
ஏயா கந்துவட்டி அதியமான் ஓவர் டென்சனாயி பீபி ஏறி போயிடாத ! (நீ கெழுடு வேற)
நிதானம் முக்கியண்டா கண்ணு, உசுரு மேட்டரு
அய்யா அதியமான்,
எனக்கொரு சந்தேகம் எதுக்கு இப்பபடி கெட்ட வார்த்தையெல்லாம் பயன்படுத்துகிறீர்கள், இதில் இதுக்கு மேலயும் தெரியுமென்ற வசனம் வேறு, ரம்ப சந்தோசம் சாமி ,நல்லா யோசிங்க என்னுடைய தாய் நாட்டை விக்குறவன என்னன்னு சொல்லோனும், மாமான்னனு சொல்லாம புகழனுமா என்ன, ஒரு வாட்டி இல்ல 100 வாட்டி சொல்லுவேன் என் நாட்டை விக்குறவன் மாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமா இதே மாரிதான் போனவருசம் நம்பர் தந்தீங்க கரூர் சவுண்டுன்னு பீலா வுட்டீங்க, என்னுடைய உழைப்பினை உறிஞ்சி என் மக்களின் உயிரைத்தின்னும் முதலாளிகளுக்கு செருப்படி நிச்சயம்,அதியமான் நீங்கள் முதலாளியப்பத்தி என்னதான் தூக்கிப்பிடிச்சாலும் உண்மை மட்டுந்தன் செயிக்கும்,
இந்த மாமாப்பசங்களுக்கு நீங்கஏன் சப்போர்ட் பண்ணணுறீங்க, அதான் முன்னாடியே சொல்லிப்புட்டீங்களே இதுக்கு மேலயும் தெரியும்னு, ஆரம்பிங்க ,எப்பவும் போல ஆரம்பிச்சு எல்லாரும் பேசறது தப்புன்னு எஸ்கேப் ஆவுங்க , கடசியா இன்னொருக்கா மாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமாமா புரோக்கர் மாமா புரோக்கர் மாமாபுரோக்கர் மாமாபுரோக்கர் மாமாபுரோக்கர் மாமாதான் என் மக்களை உறிஞ்சவரங்க எல்லாம் புரோக்கர் மாமா
டாட்டா மட்டுமா மாமா
டாட்டவுக்கும்
திருட்டுபயபுள்ள அம்பானிக்கும்
மாமா வேலை பார்க்கும் மன்மோகன் தான் இந்தியாவிலேயே
மிகப்பெரிய மாமா
இவனுங்கெல்லாம் இந்த நாட்டுக்கு தலைவர்கள்.
அப்புறம் ஒரு சந்தேகம்
நேரு ‘மாமா’ தானே..
//ஜே.ஆர்.டி டாடா, திருபாய் அம்பானி, ரஸ்ஸி மோடி, இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி,
பொள்ளாச்சி மகாலிங்கம், எஸ்கார்ட்ஸின் ஹரி நந்தா : இவர்களை பற்றி இவர்களிடம் வேலை செய்த தொழிலாளர்கள் மற்றும் இதர பணியாளார்கள் என்ன கருதினார் என்பது பற்றி உமக்கு தெரியாதுதான். கண்டிப்பாக நீங்க நினைக்கிற மாதுரி இல்லை. மனிதவள மேம்பாடு (HR and motivating humans) எனப்து மேனெஜ்மென்ட்டில் ஒரு பகுதி ////தோழர்களே !! நான் இன்போசிஸில் அதன் தலைவர் நாராயணமூர்த்தி அவர்களுடைய் 8 மணி நேர வேலை என்ற கொள்கைப் பிடித்துப் போய், பணியில் சேர்ந்தேன். சேரும் போதே, என்னை நேர்காணல் செய்தவர்களிடம் அதைப் பற்றி கேட்டேன். அவர்கள், பூம்பூம் மாடு மாதிரி தலையாட்டினார்கள். ஆனால் இன்போசிஸ் வேலையில் இணைந்து ஒரு மாதத்திற்குள்ளாக எனக்கு எல்லாம் விளங்கி விட்டது. நான் உள்ளிட்ட எல்லோரும் இரவு நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும். ஆனால் காலையில் சீக்கிரம் வந்துவிட வேண்டும். அடையாள அட்டையினை ஸ்வைப் பண்ணும் நேரம் பதிவாகி விடும். சம்பந்தப்பட்ட மேலாளர் விடுமுறையில் இருந்தாலும், வந்தபின்பு கூப்பிட்டு காரணம் விசாரிப்பார். ஒருநாள் இரவு 12 மணி வரைப் பணியாற்றி விட்டு வீடு சென்றோம். பிறகு மறு நாள் காலையில் அரைமணி நேரம் தாமதமாக அலுவலகம் சென்றேன். என்னை தனியாகக் கூப்பிட்டு, இந்த மாதிரி வரக் கூடாது என்றார்கள். நான் நேற்றைய இரவு வேலையைப் பற்றிச் சொன்னேன். அதற்கு நீ நேற்றையப் பணி முடித்து இன்று காலை 7.59 க்கு சென்று இருந்தாலும், 8 மணிக்கு இன்றைய நாள் வேலைக்காக இருக்கையில் இருக்க வேண்டும் என்றார்கள். நான் இன்போசிஸ் தலைவரின் கொள்கையை நினைவுபடுத்தியதும் , கிண்டலாக அது அவரின் கொள்கை ஆனால் இன்போஸின் கொள்கை அல்ல என்றும், நானே ஒரு கம்பெனி வைத்து இருந்தால் அதில் மற்றவர்கள் அதிகம் வேலைப் பார்க்க வேண்டும் என்று தானே எதிர்ப்பார்ப்பாய் ஆகவே இரவு பகல் வேலை சொல்லு அனுப்பினார்கள். நான் ஒரு 5 வருட அனுபவம் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநன். ஆனால் நூற்றுக்கணக்கான மற்றைய தொழிலாளர்கள் முன்னிலையிலும், ஏன் அப்போதுதான் கல்லூரி முடித்து பணியில் சேர்ந்த புதியவர்கள் முன்னிலையிலும் நான் அவமானப்படுத்தப்பட்டேன். நல்ல வேலையாக, இன்போசிஸ் வேலைவாய்ப்பு வர தாமதமானதால் வேறு ஒரு நிறுவனத்தில் Offer வாங்கி வைத்து இருந்தேன். பின்பு இன்போசிஸில் பேப்பர் போட்டவுடன் கூப்பிட்டு குழைந்து குழைந்து பேசினார்கள். ஆனாலும், அவர்களிடம் 8 மணி நேர நாடகத்தினை நார் நாராகக் கிழித்து விட்டு வெளியேறி விட்டேன். இத்தனைக்கும் நான் இன்போசிஸிஸ் சேரும் போது சொன்ன சம்பளம் வேறு ஆனால் variable pay என்ற பெயரில் எனக்கு கிடைத்த (குறைவான) சம்பளம் வேறு. அந்த சமயத்தில் இன்போசிஸின் லாபம் விண்ணை தொட்டுக் கொண்டிருந்த்து. உங்கள் 100 வருட பாரம்பரியமிக்க ஜே.ஆர்.டி டாடா அவர்களிடம் என்னுடைய மச்சான் mechanical engineer ஆக ஜாம்ஸெட்பூரில் பணியாற்றியவர். சக்கையாகப் பிழிந்து எடுத்து விட்டார்கள். ஆகவே அதியமானின் பஞ்ச் டயலாக் பற்றி ஒன்றும் கண்டு கொள்ள வேண்டியது இல்லை. மற்ற முதலாளிகள் பற்றி மற்றவர்கள் அதியமானுக்குப் புரிய வையுங்கள்.
//////////////////
மாமா வேலை என்று எதை பற்றியும் யாரும் சொன்னாலும் அது கீழ்தரமான செயல்தான்.
வெகு சினம் வருகிறது. நேருவை அப்படி ஒருவர் (புரியாமல்) விளிக்கும்போது பல மடங்கு வருகிறது.
அப்படி பட்ட சொல்லாடல்களை தவிர்க்க சொல்லுங்கள். அமெரிக்க மற்றும் மேற்கத்தைய முதலாளிகள் மற்றும் அய்.எம்.எஃப் உடன் உடன் பணி செய்ய அல்லது கூட்டாக செயல்படும் இந்திய முதலாளிகளை பற்றி
சர்வ சாதராணமாக அப்படி சொல்லப்படுகிறது, உமது தோழர்களால். உண்மையில் அப்படி பட்ட இழிவான
நிலை அல்ல அது. அதை பற்றி தெரிந்து கொள்ள வாசிப்பனுபவம் மற்றும் ஒரு திறந்த மனமும் தேவை.
அடிவருடி, கைக்கூலி போன்ற சொல்லாடல்களும் அதே வகைதான். இது மிக மிக மட்டமான, குரூடான
மேம்போக்கான முறை. இப்படி பேசுவது மதவாதம் தான். இதனால் ஒன்னும் சாதிக்க முடியாது.
////////////////////
இந்த நாட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டி
கொள்ளையிட வெளி நாட்டு முதலாளிகளுடன்
கூட்டு வைத்துக்கொண்டு அவன் மனம் நோகாமல்
நடந்து கொள்ளும் (விளக்கு பிடிக்கும்) இந்த
நாட்டு மக்களின் காசில் வாழும் முதலாளிகள்
மட்டுமல்ல இந்த முதலாளிகளை எதிர்த்து போராடினால்
ஹீண்டாய் கம்பெனி தொழிலாளிகளின் மண்டையை உடைக்க
போலீசு படையை அனுப்பும் கருணாநிதியும் மாமா தான்
இதைப்போன்று இந்தியா முழுவதும் தொழிலாளர்களின்
மணடையை உடைக்கும் மன்மோகனும் மாமா தான்
சோனியாவும் மாமி தான்
இதில் சந்தேகமே வேண்டாம்.
///////////////////
அனைத்து குழுக்களில் இருப்பதை போல, முதலாளிகளில் பலர் அல்லது ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர்,
கொடூரமாகவும், ஈவிரக்கமில்லாமலும் நடந்து கொள்கின்றனர் தான். சந்தேகம் இல்லை. பெரிய தொழிற்சாலைகளில், சம்பளம் மற்றும் இதர சலுகைகள் சராசரியை விட மிக அதிகம் இருப்பதால், அங்கு
தொழிலாளர்களின் மனோபாவம் நீங்க சொன்ன மாதுரி இல்லை. ஜாம்செட்பூரின் 100 ஆண்டு வரலற்றை பற்றி
படித்து அறியுங்கள். ஜப்பான் போன்ற நாடுகளில் தொழிலாளர்களின் மனோபாவம் மற்றும் உணர்வுகள்
பற்றியும் படியுங்கள்.
/////////////////
முதலாளி மோசமானவன் என்கிற போது அது
ஒரு முதலாளியை மட்டும் குறிக்காது மொத்த
முதலாளி வர்க்கத்தையும் தான் குறிக்கிறது.
அதே போல தொழிலாளி என்கிற போதும்
தனி ஒரு தொழிலாளியை மட்டுமே குறிக்காது
மொத்த தொழிலாளி வர்க்கத்தையே தான்
குறிக்கிறது.
உங்களைப்போன்ற முதலாளிக்கு நல்ல தொழிலாளியாய்
சிலர் இருக்கலாம்.
இப்போது நீங்கள் தொழிலாளிகளுக்கு நல்ல முதலாளியாக
இருப்பதைப் போன்று சிலரும் இருக்கலாம்.ஆனால் மிக மிக மிக சில விதிவிலக்குகளைத்தவிர
(உங்களைப்போல!)
பொதுவில் முதலாளிகள் என்பவர்கள் உயிருள்ள மனிதனை
அடிமையாக்கி கூலி உழைப்பை சுரண்டுவதன் மூலம்
மூலதனத்தை பெருக்கி உயிர்வாழும் மிருகங்கள்.
லாபத்திற்காக விபச்சாரம் கூட செய்யும் பணப்பேய்கள்.
அந்த மிருகங்கள் கோட்,சூட் போட்டுக்கொண்டு
பென்ஸ் கார்களில் போவதால் மட்டும்
நாகரீகமான,ஜனநாயக தன்மை கொண்ட மனிதர்களாகி விட மாட்டார்கள்.
இந்த முதலாளித்துவ பயங்கரவாதிகளைப் பற்றி எங்களை
விட உங்களுக்கு நன்றாகவே தெரியும் என்பது தான் உண்மை
ஆனால் அவர்களின் மனிதாபிமானமற்றது,நியாயமற்றது
என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு முதலாளியின்
இடத்திலிருந்து அதை அறிந்து கொள்ள முடியாது என்பதை நீங்கள்
எப்போது நீங்கள் எப்போது உணருகிறீர்களோ அது வரை உங்களுக்கு
முதலாளிகளைப் பற்றிய எத்தனை ஆரம்ப பாடங்களை எடுத்தாலும்
புரியாது என்பது தான் உண்மை.
எந்த உயிகளுக்கும் தீங்கிழைக்காமல் உண்மையை மட்டுமே பற்றி
நின்று வாழ வேண்டும் என்கிற Mr ‘நோ’ அவர்களுடைய கொள்கைப்படி
இதற்கு என்ன தீர்வு ?
மரண அடி,
மாமா வேலை பார்ப்பவர் என்று விளிப்பது உம்மை பொருத்த வரை சரிதான் என்றால், கெட்ட வார்த்தையில் திட்டுவது எம்மை பொருத்தவரை சரிதான். (வினவு : சரிதானே ?). இப்படி பேசி தான் ‘புரட்சி’ கொண்டு வரப்போகிறீர்களோ ? :))) 10,000 வருடமானாலும் முடியாதுலே. :)))
எம் செல் நம்பர் தான் கொடுத்திருக்கிறேனே. மேற்கொண்டு “பேச” விரும்பவர்கள் என்னிடம் நேரடையாக பேசலாமே. கோழ கபோதிகள் தாம் இணையத்தில் போலி அய்டிகளில் இருந்து வீரம் பேசுவர். இது போல எத்தன பேர பாத்திருக்கேன். :)))
நான் எழுதிய கருத்துகளுடன் மோதாமல், சும்மா உதார் விடுவது சிறிபிள்ளை தனமானது. சுரண்டல் என்று ஒன்றும் இல்லை. உபரி மதிப்பை தானே சுரண்டுவதாக மார்க்ஸ் கூறினார். முதலில் உபரி மதிப்பு என்று ஒன்றும் இல்லை. மேலும் ‘சுரண்ட’ யாரும் விழையவில்லை என்றால், மனிதர்கள் கற்காலதிலேயே இருந்திருக்க வேண்டியதுதான். அதவாது எல்லோரும் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி சும்மா கத்திருந்தால், யார் வேலை குடுப்பது ? சோவியத ரஸ்ஸியாவில், தொழில்சாலை உற்பத்தி முறைகளில் பல வழிகளை கையாண்டு தோல்விதான் அடைந்தனர். ப்ரடக்டிவிட்டி மிக குறைவே. அங்கும் தொழிலாளிகளின் வேலை முறை இங்கு போல் தான். அவர்களை வேலை செய்ய ஊக்குவிக்க பலத்த பிரச்சாரம் நடந்து தோல்வி அடைந்தது. அதை பற்றி பின்னர் விரிவாக. (எமது பிளாகில் தான் ; இங்கு காட்டான்களை போல மாமாமாமா கோஸம் போடும் கிறுக்கர்கள் மத்தியில் அல்ல. மார்க்ஸியவாதியான திரு.சிறீநங்கனும் இங்கு விவாதிக்க விரும்பவில்லை தானே)
அறிவுடை நம்பி,
ஆம். இன்ஃபோசிஸில் வேலை பளு மிக மிக அதிகம் தான். வேலை பிடிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்யலாமே. யாரும் கொத்தடிமை இல்லையே. தொழில் பல முறை நஸ்டம் அடைந்து, நடுத்தெருவிற்க்கு வந்து, தொழிலாளியாக வேலை செய்து, பிறகு மீண்டும் முயற்சி செய்து தொழில் நடத்தும் எம்மை போன்றவர்கள் பார்வையில், நீங்கள் அதிஸ்ர்டசாலிகள். (இன்ஃபோசிஸில் வேலை பார்பதால்).
நாராணயன மூர்த்தியில் தனி மனித நேர்மை மற்றும் எளிமை பற்றி தான் சொன்னேன். பலருக்கும் அவர் ஒரு
ஆதர்சம்.
மா.சே,
நீங்களும் பொட்டி தட்டற வர்கமா ? மாதாம் 40,000 சம்பளம் (எங்க லாபம், அதைவிட மிக மிக குறைவுதான்) உங்கள் போன்றவங்க தொழிலாளர் வர்கமா ? :))) பூஸ்வா என்றால் உமக்கு தெரியல. மேலும் உமது அனுபவம் மற்றும் பார்வை மிக குறைவுதான். வேலையை விட்டுட்டு ஒரு நாலு லேத் வாங்கி தொழில் செய்து பாரும். உலகம் வேற மாதுரி தெரியும். அதென்னா வெல்ஃபேர் பூஸ்வா ? புதுசா இருக்கே. எனக்கு தெரிந்து, வெல்ஃபேர் ஸ்ஃடேட் தான் இருக்கு. உமது வாழ்க்கை அனுபவம் மிக குறைவு. மனித குணம் பற்றி எமக்கும் தெரியும். ஹரி நந்தா அவர்களின் (எஸ்கார்ட்ஸ் நிறுவனர், அகதியாகா பாக்கிஸ்தானிலிருந்து வந்தவர்) சுயசரிதை தமிழில் கண்ணதாசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக படிக்கவும். தொழிலாளர்கள் பற்றி அவரின் கருத்துகளை படிக்கவும். பிறகு பார்க்கலாம். மென்பொருள் துறையில் எமக்கு பல பல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளனர். அவர்கள் யாரும் நீங்க சொன்ன மாதுரி ‘திட்டுவதில்லை’. உங்களுக்குத்தான் ப்யாஸ் என்கிறேன். தமிழ் பதிவுலகில் சில ஆண்டுகளாக இருக்கிறேன். 2007 சென்னை பதிவர் பட்டரையில் இருந்தேன். பல நண்பர்கள் மற்றும் பல தரப்பட்ட பதிவுகளை படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். நிங்க சொன்ன மாதுரி எதுவும் தெரியலையே. பிற துறையின் பொறாமைபடும் அளவில் தான் மென்பொருள் துறையினர் உள்ளனர். (நானும் பொறாமை படுகிறேன். !!)
அதியமான், நீங்களும் எல்லாம் தெரியும் என்ற கருத்திலிருந்துதான் உரையாடுகிறீர்கள், அதனால் வினவு திரு.நோ விடம் கேட்ட 32 கேள்விகளை உங்களுக்கும் பரிந்துரை செய்கிறேன்.
அதை வாசிக்க அவர் அங்கே போய் சிரமப்படாமலிருக்க
நான் அதை இங்கே பின்னூட்டமிடுகிறேன்.
வினவின் 32 கேள்விகள்
நோ,
ஒரு வழியாக நீங்களே பிரகடனப்படுத்தியிருக்கும் இறுதி முழக்கத்தில் ஸ்டாலினை இருபது வருடம் படித்தேன், ஆய்வாளன், பல ஆங்கில நூல்கள் என வாசகரை அச்சுறுத்தும் நோக்குடன் அதாவது இவ்வளவு படித்த பீதாம்பரம் என கர்வம் தலையை விட்டு எகிறும் அளவுக்கு படு ஆபாசமாக மண்டைக் கனத்தை வீசிவிட்டு போயிருக்கீறீர்கள். இந்த ஆபாசம் வேதம், உபநிடதங்களை எத்தனையோ ஆண்டுகள் மன்னம் செய்து தன்னை மாபெரும் அறிவாளி போல சுய இன்பம் காணும் பஞ்சாங்கப் பாரப்பானுக்கு உள்ள திமிரேயன்றி வேறல்ல.
இவ்வளவு படித்து புழுத்த பீதாம்பரம் ஸ்டாலின் சரியில்லை, கம்யூனிசம் மதம் என்றெல்லாம் கூவுகிறதே அன்றி இதற்கு மாற்று என்ன என்பதை தந்திரமாக அக்குளிக்குள் ஒளித்து வைத்திருக்கிறது. அய்யா ஸ்டாலின் காலத்திற்கு போவது இருக்கட்டும், ஈராக்கில் ப்த்து இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களைக் கொன்ற கிளிண்டன், புஷ் இவர்களெல்லாம் மனித குலம் போற்றத்தக்க மகான்களா? குஜராத்தில் 2000 முசுலீம்களை இனப்படுகொலை செய்த மோடி, அந்த கட்சியின் அத்வானி இவாளெல்லாம் யாருங்க? அதென்ன படுகொலை என்றால் ஸ்டாலின்தான் உங்கள் நினைவுக்கு வருகிறார் என்றால் நீங்கள் நிச்சயம் ஒரு மனவிகாரம் கொண்ட நபராகத்தான் இருக்க முடியும்.
கண்டதை தின்று எல்லாம் கழித்து பாதுகாப்பாக மிடில் கிளாஸ் வாழ்க்கை வாழும் நோ போன்ற மேதைகள் பொழுதுபோக்காக கம்யூனிசம் படித்தார் என்றால் நடிகை ரம்பாவுக்கும் கம்யூனிசம் தெரியும் என்று நினைத்து கொள்ளவேண்டியதுதான்.
மனிதகுலத்தை முதலாளித்துவத்தின் ஒடுக்குமுறையிலிருந்து மீட்கவேண்டும் என்ற கடமையை வாழ்க்கையாக கொண்டு வாழும் கம்யூனிஸ்ட்டுகள்தான் உண்மையில் மார்க்கசியத்தை கற்றுத் தேற முடியும்.
ஆங்கிலம், பெயர்கள், நூல்கள் மூலம் சுய இன்பம் காணும் நோவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பதற்கு நாமும் அதே வழிமுறையைத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. இவை நோவுக்கான அறிவு சீவிஇஇஇஇஇஇஇஇஇஇஇ கேள்விகள்.
1. சிந்தனைக்கு வழியில்லாத போது வார்த்தைகள் நேசிக்கத்தக்கதாக இருக்கிறது என்ற பிரெஞ்சு பழமொழியை காரல் மார்க்கஸ் மூலதனத்தில் குறிப்பிடுவது எதற்காக?
2.கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும், ஏங்கெல்சும் முதலாளித்து சமூதாயத்திற்கு முந்தைய சமூகங்களில் படிநிலை அமைப்பு இருக்கும் என்று குறிப்பிடுவதன் விளக்கம் என்ன? அதை இந்திய நிலைக்கு பொருத்த முடியுமா?
3. ஒரு நாட்டின் மக்கள் தொகை, இயற்கைவளம், மொத்த வருமானம், தனிநபர் வருமானம், மொத்த உற்பத்தி முதலான புள்ளி விவரங்களைக் கொண்டே ஒரு நாட்டின் பொருளாதார நிலையை இன்றைய முதலாளித்துவ அறிஞர்கள் விளக்குகின்றனர். ஆனால் மார்க்ஸ் இதை அடியோடு மறுத்து வேறு ஒரு ஆய்வை தருகிறார். எது, ஏன்?
4.சரக்கு உருவாக்கும் பொய்யுணர்ச்சி என மார்க்ஸ் மூலதனத்தில் குறிப்பிடுவது எதை?
5. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ஆலன்கீரீன் ஸ்பேன் முதலாளித்துவத்தின் அமலாக்கங்கள் அனைத்தும் எல்லா அழிவுகளையும் கொண்டு வந்திருக்கிறது எனக் கூறியிருப்பது எதற்காக?
6.முதலாளித்துவ சமூகத்தை உள்ளிருந்து அரிக்கும் 2 முரண்பாடுகள் என மார்க்ஸ் குறிப்பிடுவது எவற்றை? இவற்றை தவிர இன்றைய முதலாளித்துவ வீழ்ச்சிகளை விளக்குவதற்கு வேறு ஏதும் உள்ளதா?
7.லூயி போனபர்ட்டின் பதினெட்டாம் பூரூமர் நூலில் காரல் மார்க்ஸ் வரலாற்றின் சூழ்நிலையில் ஒரு லும்பன் அரசைக் கைப்பற்றுவதை விளக்குவது என்ன வகையான ஆய்வு?
8.வரலாற்றில் தனிநபரின் பாத்திரம் என பிளக்கானோவ் எவற்றைக் குறிப்பிடுகிறார்?
9.ஒரு மனிதனின் தனிநபர் ஒழுக்கம்,அவனது சமூக ஒழுக்கம் இரண்டில் அவனைப் பற்றி மதிப்பிடுவதற்கு எதை அளவுகோலாக பயன்படுத்த வேண்டுமென பிளக்கானோவ் கூறுகிறார், ஏன்?
10. கலை, அறிவியல், மொழி, மதம் அனைத்தின் தோற்றத்தை மார்க்கிசிய நோக்கில் முரண்படாமல் விளக்கிய இங்கிலாந்து மார்க்சிய அறிஞர் ஜார்ஜ் தாம்சனை மறுக்கும் ஆய்வு ஏதாவது உண்டா?
11. ஸ்டாலினின் ஆட்சிகாலத்தில் கம்யூனிச விரோதிகளை நீக்குவதற்கு நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதை மாவோ விமரிசித்து விட்டு அதற்கு மாற்றாக சீனாவில் எதை அறிமுகப்படுத்துகிறார்?
12 மறுமலர்ச்சி கால மனிதர்களை மனிதகுலத்தின் மாபெரும் மனிதர்கள் என ஏங்கெல்ஸ் வருணிப்பது ஏன்?
13. ஆரம்பத்தில் ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தின் அடிமைகளை விடுவிக்க வந்த கிறித்தவம் பின்னர் ஆளும் வர்க்கத்தின் மதமாக மாறியதற்கு காரணமென மார்க்ஸ் குறிப்பிடுவது எதை?
14. புருதோன் எழுதிய வறுமையின் தத்துவம் என்ற நூலுக்கு மாற்றாக தத்துவத்தின் வறுமை எழுதிய மார்க்ஸ் தனது நூலில் என்ன விளக்கமளிக்கிறார்?
15 கோத்தா வேலைத்திட்டத்திற்கு மறுப்பு என்ற நூலில் தொழிலாளி வர்க்கத்தின் அறிவியல் பூர்வமான கண்ணோட்டமென மார்க்ஸ் குறிப்பிடுவது எவற்றை?
16 மார்க்சின் மூலதனம் நூலை பதிப்பதற்காக ஏங்கெல்ஸ் கைவிட்ட ஆய்வு நூல் எது?
17. பொதுவுடமை காலத்தில் சமூகத்தில் நிலவும் பாலியல் ஒழுக்கம் என ஏங்கெல்ஸ் எதைக் குறிப்பிடுகிறார்?
18.முதலாளித்துவ அரசுக்கும் பாட்டாளி வர்க்க அரசுக்கும் உள்ள வேறுபாடுகளென லெனின் குறிப்பிடுவது என்ன?
19 முதலாளித்துவத்தின் உச்சமென ஏகாதிபத்தியத்தை குறிப்பிடும் லெனின் அதற்கு அளித்திருக்கும் வரையறை என்னென்ன?
20. லியோ டால்ஸ்டாயின் இலக்கியம் ரசியாவை பிரதிபலிக்கும் கண்ணாடி என லெனின் கூறியிருப்பது டால்ஸ்டாய் மீதான பாராட்டா, விமரிசனமா, ஏன்?
21சோசலிச இலக்கியத்திற்கும் முதலாளித்துவ இலக்கிய்த்திற்கும் உள்ள அடிப்படை வேறுபாடுகளென கார்க்கி பட்டியல் இடுவது தெரியுமா?
22. புரட்சிக்கு அடிப்படையாக விளங்கும் போர் தந்திரம், செயல் தந்திரம் இரண்டிற்கும் உள்ள இயங்கியல் உறவை ஸ்டாலின் விளக்கியிருப்பது எதனால் கம்யூனிஸ்டுகளுக்கு முக்கியம்?
23, ரஸ்ஸல், ஜார்ஜ் ஆர்வெல் முதலான எழுத்தாளர்கள் கம்யூனிசத்திற்கு எதிராக உளவு வேலையில் ஈடுபட்டு பிரிட்டீஷ் உளவுத்துறையிடம் ஊதியம் பெற்றுக் கொண்டது அம்பலமானது எந்த ஆண்டு?
24. ரசியாவின் பல வருட இயற்கை மரணங்களை ஸ்டாலின் படுகொலை என போர்ஜரி செய்த அமெரிக்க பேப்பர்முதலாளியின் பெயர் என்ன? இந்த சதியை அம்பலப்படுத்தியது யார்?
25 மெக்கார்த்தியிச காலத்தில் கம்யூனிச ஆதரவாளர்கள் என அமெரிக்கவால் அடக்குமுறைக்கு உள்ளானவர்கள் யார்?
26. ஹிட்லரை வைத்து சோவியத் யூனியனை அழிப்பதற்கு மேற்கத்திய நாடுகள் முயன்றதற்கு காரணம் என்ன?
27. ஸ்டாலினைப் பற்றிய அவதூறுகளை இலட்சக்கணக்கான பக்கங்களில் அள்ளி வீசப்படுவதற்கு முக்கிய காரணம் என்ன?
28. தொழிலாளி வர்க்கம் அதிகமில்லாத விவசாயிகள் அதிகம் வாழம் நாட்டில் புரட்சியை எப்படி செய்ய முடியும் என மாவோ நிரூபித்தார்?
29. முரண்பாட்டில் பகை முரண்பாடு, நட்பு முரண்பாடு குறித்து மாவோவின் விளக்கம் என்ன?
30 கம்யூனிச கட்சி உறுப்பினர்களிடம் நிலவும் தாராளவாதங்கள் என மாவோ பட்டியிலிடுவது பற்றி கூற முடியுமா?
31. தற்போதைய காலகட்டத்தில் மா.லெ கட்சிகள் கூறும் மேல்நிலை வல்லரசு என்பதன் விளக்கம் என்ன?
32. ஸ்டாலினுக்குப் பிந்தைய ரசியா ஒரு சமூக ஏகாதிபத்தியமாக சீரழிந்த்து என மா.லெ கட்சிகள் வரையறுத்த்து ஏன்? சமூக ஏகாதிபத்தியம் என்றால் என்ன?
இந்த கேள்விகளில் ஒரு ஐந்து கேள்விகளுக்காகவது நோ பதிலளித்தால் யெஸ், அவர் சுமாராகவாவது மார்க்சியம் அறிந்திருக்கிறார் என சான்றிதழ் அளிக்கலாம். இல்லையேல் சுய இன்ப சுய மோக சுய கயவ மேதை என்ற பட்டத்தை வினவு சார்பில் வழங்குவோம்.
வினவு
////////////////////
மாமா வேலை பார்ப்பவர் என்று விளிப்பது உம்மை பொருத்த வரை சரிதான் என்றால், கெட்ட வார்த்தையில் திட்டுவது எம்மை பொருத்தவரை சரிதான். (வினவு : சரிதானே ?). இப்படி பேசி தான் ‘புரட்சி’ கொண்டு வரப்போகிறீர்களோ ? 🙂 )) 10,000 வருடமானாலும் முடியாதுலே. 🙂 ))
//////////////////
அதியமான்
மாமா வேலை செய்பவர்களை மாப்பிள்ளை என்றா
அழைக்க முடியும் மாமா என்று தானே அழைக்க
முடியும் ?
நாங்கள் சொல்வது (மாமா) கூட சற்று நாகரீகமாக ஒலிக்கிறது.
தொழிலாளிகள் பாடும் வசவுகளோ மிக மிக நாராசமாக
அல்லவா இருக்கும்!
அதையெல்லாம் பார்த்தால் தொழிலை நடத்த முடியுமா ?
தொழிலாளி “உழைப்பால் மட்டுமே உயர்ந்த” முதலாளிகளை
ஏன் திட்ட வேண்டும் ?
தொழிலாளி தன் கண் முன்னாலேயே முதலாளி தன் இரத்தத்தை
உறிஞ்சுவதை கான்கிறான்.அதன் மூலம் தான் முதலாளி வக்கிரமான
தனது சொகுசு் வாழ்வை அமைத்துக்கொள்கிறான் என்பதையும் கான்கிறான்.இது தான்(இந்த சூழல் தான்)முதலாளியை பற்றிய அவனது
பார்வையை,கருத்தை உருவாக்குகிறது.
முதலாளியை பற்றி தொழிலாளிக்கு ‘மார்க்சியம்’ ஒன்றும் கற்பிக்க வேண்டியதில்லை.
அதற்கு முன்னரே தொழிலாளிகள் முதலாளிகளைத் திட்டித்தீர்க்கவும்,
முதலாளியை அடிக்க முடியவில்லை என்பதால் இயந்திரங்களை
அடித்து உடைக்கவும் துவங்கி விட்டார்கள் என்பது நவீன முதலாளிய வரலாற்றின் ஏடுகளின் பல்லாயிரக்கணக்கான வரிகளில் ஒன்று .
எனவே எந்த நாட்டுத் தொழிலாளியும்
‘எங்க முதலாளி தங்க முதலாளி’ன்னு பாட்டு பாட மாட்டார்கள்.
எனவே முதலாளியை தொழிலாளியும்,நாங்களும்,ஏன் மொத்த ஊருமே
கூட மாமா பயல்கள் என்று திட்டுவதற்கு நியாயம் இருக்கிறது.
மேலும் முதலாளியை அப்படித் திட்டலாமா கூடாதா என்பதை அந்த முதலாளியால் கொள்ளையடிக்கப்படுகிற தொழிலாளி தான் முடிவு செய்ய வேண்டும்.ஆனால் தொழிலாளி அப்படி திட்டுவதில் எந்த தவறும் இல்லை என்பது எமது நிலை.
ஆனால் நீங்கள் எங்களை ‘தாயோலி’என்று திட்டுவதற்கு உங்களுக்கு
எந்த ஒரு நியாயமும் இல்லை.
நீங்கள் எங்களை திட்டுகிறீர்கள் என்றால் அது எங்களை விட
கடுமையாகவும்,காட்டமாகவும் முதலாளிகளைத் திட்டும்
உழைக்கும் மக்களையும் நூறு மடங்கு திட்டுவதாகும்.
என்றால் அது மொத்த
இப்படிப் பட்ட வார்த்தைகள்,வசவுகளையெல்லாம்
தொழிலாளிகளிடம் வாங்கிக்கட்டிக் கொண்டும் முதலாளித்துவ
கோமான்கள் ஒன்றுமே நடக்கவில்லை என்பதைப் போல
இருக்கிறார்கள் என்றால் அது ஏன் ?
நீங்கள் தான் தொழிலாளிகள் முதலாளிகளைத் திட்டுவதில்லை
என்கிறீர்கள்.விக்ரமன் பானியில் ஒரு படமெடுத்தால்
வேண்டுமானால் உங்கள் ஆசை நிறை வேறலாம்.
மற்றபடி முதலாளிகளுக்கு தொழிலாளிகள் தங்களை
எப்படியெல்லாம் திட்டுகிறார்கள் என்பது நன்றாகவே தெரியும்.
உண்மையை அறிய நீங்கள் தொழிலாளிகளிடம்
கேட்க வேண்டாம்,உங்களுடைய முதலாளி
நண்பர்களைக் கேளுங்கள் போதும்.
மற்றபடி புரட்சியை கொண்டு வர தொழிலாளிகள்
யோசிப்பார்கள்.
அந்த கவலை முதலாளிக்கு வேண்டாம்.
புரட்சி வரப்போகிறதே என்று வேண்டுமானால் நீங்கள்
கவலைப்பட நியாயம் உள்ளது.
//////////////////
எம் செல் நம்பர் தான் கொடுத்திருக்கிறேனே. மேற்கொண்டு “பேச” விரும்பவர்கள் என்னிடம் நேரடையாக பேசலாமே. கோழ கபோதிகள் தாம் இணையத்தில் போலி அய்டிகளில் இருந்து வீரம் பேசுவர். இது போல எத்தன பேர பாத்திருக்கேன். 🙂 ))
//////////////////
இது போன்ற வாய் சவடால்கள் எல்லாம் எங்களிடம்
வேண்டாம் அதியமான்.
நாங்களும் உங்களைப் போல நிறையப் பேரை பார்த்துவிட்டோம்.
நெட்டில் மட்டுமல்ல நடு ரோட்டிலும், நடுத்தெருவிலும்..
///////////////////////////
அறிவுடை நம்பி,
ஆம். இன்ஃபோசிஸில் வேலை பளு மிக மிக அதிகம் தான். வேலை பிடிக்கவில்லை என்றால் ராஜினாமா செய்யலாமே. யாரும் கொத்தடிமை இல்லையே. தொழில் பல முறை நஸ்டம் அடைந்து, நடுத்தெருவிற்க்கு வந்து, தொழிலாளியாக வேலை செய்து, பிறகு மீண்டும் முயற்சி செய்து தொழில் நடத்தும் எம்மை போன்றவர்கள் பார்வையில், நீங்கள் அதிஸ்ர்டசாலிகள். (இன்ஃபோசிஸில் வேலை பார்பதால்).
/////////////////////////
எங்களுடைய உழைப்பில் தான் இந்த முதாலாளித்துவ
அட்டைகளே உயிர் வாழ்கின்றன.
நாங்கள் எதற்கு வேலையிலிருந்து விலக வேண்டும் ?
எமது உரிமைகளை பெற யூனியன் அமைப்போம்
பெறுவோம்.
இறுதியாக உழைப்பால் உயர்ந்த உத்தமர்
நாராயண மூர்த்தியை அவருடைய பதவியிலிருந்து
ராஜினாமா செய்யச்சொல்லிவிட்டு மீண்டும்
அவரை உழைப்பால் உயருங்கள்
உங்களுக்கு சுரண்டல் ஏதுமற்ற உண்மையான
ஊதியம் வழங்கப்படும் என்று கூறி
இன்ஃபோசிசை தொழிலாளிகளே ஏற்று நடத்துவார்கள்
//////////////////////////////////////////////////////////////////////
நீங்களும் பொட்டி தட்டற வர்கமா ? மாதாம் 40,000 சம்பளம் (எங்க லாபம், அதைவிட மிக மிக குறைவுதான்) உங்கள் போன்றவங்க தொழிலாளர் வர்கமா ? 🙂 )) பூஸ்வா என்றால் உமக்கு தெரியல. மேலும் உமது அனுபவம் மற்றும் பார்வை மிக குறைவுதான். வேலையை விட்டுட்டு ஒரு நாலு லேத் வாங்கி தொழில் செய்து பாரும். உலகம் வேற மாதுரி தெரியும். அதென்னா வெல்ஃபேர் பூஸ்வா ? புதுசா இருக்கே. எனக்கு தெரிந்து, வெல்ஃபேர் ஸ்ஃடேட் தான் இருக்கு. உமது வாழ்க்கை அனுபவம் மிக குறைவு. மனித குணம் பற்றி எமக்கும் தெரியும். ஹரி நந்தா அவர்களின் (எஸ்கார்ட்ஸ் நிறுவனர், அகதியாகா பாக்கிஸ்தானிலிருந்து வந்தவர்) சுயசரிதை தமிழில் கண்ணதாசன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. முழுமையாக படிக்கவும். தொழிலாளர்கள் பற்றி அவரின் கருத்துகளை படிக்கவும். பிறகு பார்க்கலாம். மென்பொருள் துறையில் எமக்கு பல பல நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளனர். அவர்கள் யாரும் நீங்க சொன்ன மாதுரி ‘திட்டுவதில்லை’. உங்களுக்குத்தான் ப்யாஸ் என்கிறேன். தமிழ் பதிவுலகில் சில ஆண்டுகளாக இருக்கிறேன். 2007 சென்னை பதிவர் பட்டரையில் இருந்தேன். பல நண்பர்கள் மற்றும் பல தரப்பட்ட பதிவுகளை படித்துக்கொண்டு தான் இருக்கிறேன். நிங்க சொன்ன மாதுரி எதுவும் தெரியலையே. பிற துறையின் பொறாமைபடும் அளவில் தான் மென்பொருள் துறையினர் உள்ளனர். (நானும் பொறாமை படுகிறேன். !!)
/////////////////////////////////////////////////////////////////////////
பிறகு பொட்டி தட்டற வர்க்கம்
என்ன முதலாளி வர்க்கமா ?
முதலாளியை தவிர மற்ற எல்லோரும்
பல்வேறு அளவுகளில்
சுரண்டப்படுகிறவர்கள் தான்.
சிறு முதலாளியே கூட முதலாளிய
சுரண்டலால் தான் ஒழித்துக்கட்டப்படுகின்றான்.
உங்க தொழிலை விட்டுட்டு நீங்க ஒரு நாலு வருசத்துக்கு
தொழிலாளியா இருந்து பாருங்க உலகம் உங்களுக்கு
வேற மாதிரி தெரியும்.
நீங்க ஏற்கெனவே அப்படி இருந்திருக்கலாம் அது அப்ப..
நான் சொல்றது இப்ப
இப்ப அப்படி இருந்து பாருங்க அப்படியும் உங்களுக்கு
ஒன்றும் புரியவில்லை என்றால் அதற்கு தான் முன்பு ஒரு
பின்ணூட்டத்தில் சொன்னேனே
தொழிலாளி என்கிற போது
தனி ஒரு தொழிலாளியை மட்டுமே குறிக்காது
மொத்த தொழிலாளி வர்க்கத்தையே தான்
குறிக்கிறது.
எனவே ஒரு தொழிலாளியை அல்லது ஒரு சில தொழிலாளிகளை
வைத்துக்கொண்டு தொழிலாளி வர்க்கத்தின் அரசியல்,நேர்மை,
உணர்வு ஆகியவற்றையும் மற்றதையும் மதிப்பிடக்கூடாது.
ஹரி நந்தா அவர்களின் புத்தகம் மாதிரி ஆயிரம் புத்தகம்,
ரெண்டாயிரம் கதைகள் இருக்கின்றன.
எல்லாத்தையும் நாங்களும் படிச்சிட்டுல்ல வந்திருக்கோம்.
நீங்கள் எங்களுடைய முனுசாமி,கந்தசாமியோட
வாழ்க்கையை நல்லா படிங்க.
உண்மையை அறிய வேண்டும் என்கிற விருப்பத்துடன்
படியுங்கள்.
//சுரண்டல் என்று ஒன்றும் இல்லை. உபரி மதிப்பை தானே சுரண்டுவதாக மார்க்ஸ் கூறினார். முதலில் உபரி மதிப்பு என்று ஒன்றும் இல்லை. மேலும் ‘சுரண்ட’ யாரும் விழையவில்லை என்றால், மனிதர்கள் கற்காலதிலேயே இருந்திருக்க வேண்டியதுதான். அதவாது எல்லோரும் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி சும்மா கத்திருந்தால், யார் வேலை குடுப்பது ?//
இது ஒரு சுவாரசியமான “வரலாற்றுப் பார்வை” அதியமான்! உங்கள் கூற்றுப்படி கல்லை எய்து மானை அடித்து தின்று கொண்டிருந்த மனிதனின் உள்ளத்தில், அடுத்தவனை சுரண்டவேண்டும் என்ற எண்ணம் வந்த்தனால்தான் ஈட்டியைக் கண்டுபிடித்தான் என்று வருகிறது. இப்படி ஒரு வரலாற்றுப் பார்வையை கடைந்தெடுத்த முதலாளித்துவ வெறி பிடித்த வரலாற்று ஆசிரியர் கூட எழுதியதாக நான் கேள்விப்பட்டதில்லை. உங்கள் பார்வையை அப்படியே நீட்டிப்போம். இதுவரையான அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய விஞ்ஞானிகள் எல்லோருடைய உள்ளத்திலும் சுரண்டல் தீ கொளுந்து விட்டு எரிந்த்தனால்தான் அவர்கள் கண்டுபிடிப்பில் இறங்கினார்கள் என்று வருகிறது. கம்யூனிச எதிர்ப்பு என்று தொடங்கும் உங்கள் பார்வை, கடைசியில் மனிதனையும் மனிதகுலத்தையும், மனித குலத்தின் ஆகச்சிறந்த மனிதர்களையும் பிளேடு பக்கிரி, மடோஃபின் (அமெரிக்காவில் மணி செய்ன் நடத்தி, உலக முதலாளிகளுக்கே அல்வா கொடுத்து, அதன் காரணமாக தற்போது சிறையில் இருப்பவர். மேற்கொண்டு விவரங்களுக்கு கூகுல் செய்க) தரத்துக்கு இறக்கி விடுகிறது. ஆகவே, உங்கள் கம்யூனிச எதிர்ப்பு கண்ணாடியைக் கழட்டி கொஞ்ச நேரத்துக்காவது கழட்டி சட்டை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு உண்மையையும் வரலாற்றையும் பார்க்கவும்.
சுரண்டல் இல்லை, உபரி மதிப்பும் இல்லை என்கிறீர்கள். இது நல்ல பொருளாதார ஜோக். அப்படீன்னா இலாபம் என்பதற்கு என்ன விளக்கம்? சொல்லுங்கள். rent on investment என்பதெல்லாம் கிழிந்து கந்தலாகிப்போன பழைய குப்பைகள். வேறு ஏதாவது புதிய விளக்கம் இருந்தால் கூறவும். டாடாவுக்கு மோடி கொடுத்த நிலம், அம்பானிக்கு மகாராட்டிர அரசு வழங்கியுள்ள நிலம், கொடநாடு எஸ்டேட், ஒபாமா general motors க்கு கொடுத்திருக்கும் bail out இதெல்லாம் எந்த investment மீதான rent? உபரி மதிப்பையெல்லாம் விடுங்கள். நாம் மார்க்ஸ் காலத்திலிருந்து ரொம்ப தூரம் தள்ளி வந்துவிட்டோம். ஏகாதிபத்திய காலம் என்று இதை லெனின் சொன்னார். அது உங்களுக்கு பிடிக்காது. இப்போது சுதந்திர சந்தை, போட்டி இதுக்கெல்லாம் வேலை கிடையாது என்பதை நாராயணமூர்த்தி கூட ஒப்புக்கொள்வாரே! அவருடைய பங்காளி சத்யம் ராஜு போட்டி போட்டதனாலா உள்ளே இருக்கிறார்? அல்லது இராக்கில்சுதந்தர சந்தையில் அமெரிக்க இராணுவம் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறதா? முதலாளித்துவத்தின் கொடுமைகளை தெரிந்து கொள்ள நீங்கள் மார்க்ஸையோ வினவு வையோ படிக்கத் தேவையில்லை. capitalists! you are the crisis! என்று பானர் பிடித்துக் கொண்டு g20 எதிராக லண்டனில் பல்லாயிரக்கணக்கானவர்கள் போராடினார்களே, அவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகளா, அல்லது மார்க்சின் பேரப்பிள்ளைகளா? முதலாளித்துவத்தின் நீதியைப் பற்றி தெரிந்து கொள்ள கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது ஒரு அமெரிக்கன் சைட்டை கிளிக் செய்யுங்கள். முதலாளிகளைப் பற்றி அமெரிக்கா காரன் சொன்னால் ஒருவேளை உங்கள் கருத்தை நீங்கள் மறுபரிசீலனை செய்யக் கூடும்.
வினவு,
உபரி மதிப்பு, சுரண்டல் மற்றும் மார்க்ஸியத்தின் தவறுகள் பற்றி விரிவாக எமது பிளாகில் எழுத இருக்கிறேன். (சிறிது காலம் கழித்து).
கற்காலத்தில் மட்டுமல்ல, இப்போதும், மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட சதத்தினர் initiative, pioneering spirit, enterprising nature உடையவர்களாக இருப்பதால் தான் வளார்சி, கண்டுபிடிப்புகள் மற்றும் அனைத்து. அவர்களை motivate செய்க்வது செய்வது எது அல்லது எப்படி என்பதை பற்றிதான் கருத்து வேறுபாடு. சுரண்டல் என்பது ஒரு மாயை வார்த்தை. சக மனிதர்களின் volountary free co-coperation மற்றும் volountary free exchange of goods and labour தான் சந்தை பொருளாதாரத்திற்க்கு அடிப்படை. அதன் அடிப்படையில் தாம் மாற்றங்கள் நிகழ்ந்தன.
நீங்கள் எழுப்பிய 32 கேள்விகளுக்கும் எமக்கு பதில் தெரியாதுதான். ஆனால் நான் ஜப்பான், தைவான் மற்றும்
சிங்கபூர்ப் போன்ற நாடுகள் இரண்டாம் உலக்ப்போருக்கு பின், இந்தியாவை விட மிக மிக மோசமான அழிவில், வறுமையில் இருந்து சில ஆண்டுகளிலேயே வளர்ந்த நாடாக உயர்ந்தது எப்படி என்ற கேள்விக்கு யாரும் இன்னும் பதிலளிக்க வில்லை. Miracle of Chile, Miracle of Germany after 1945 போன்ற விசயங்காளை பற்றி பல தடவை எழுதியும் யாரும் அதை பற்றி விவாதம் செய்ய முடியவில்லை.
உபரி மதிப்பு என்பது வாங்குபவரின் கோணத்தில் தாம் நிர்ணியக்கப்படுகிறது என்பதே மாற்று கருத்து.
மேலும் தொழில் முனைவோர்களின் உழைப்பு, ஊக்கம் மற்றும் organising and enterpising ablity and leadership skills மார்க்ஸால் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. கம்யூனிச நாடுகளிலும் இந்த managerial and leadership talent மிக தேவைதான். அதை உருவாக்க வழி தெரியாமல் விழித்தார்கள். இதை பற்றியும் விரிவாக எழுத உள்ளேன்.
மார்க்ஸ் சொன்னபடி பொருளாதார சுழற்ச்சிகள் ஒவ்வொறு முறையும் முன்பவை விட மோசமாக உருவாகி, பெரும் முதலாளிகள் “மட்டும்” இறுதியில் இருக்க வேண்டும். நிகர உபரி மதிப்பு படிப்படியாக குறைந்து, பின்பு, பெரும் அழிவு உருவாகியிருக்க வேண்டும் ஆனால் நடைமுறையில் அப்படி நிகழவில்லை. 1930இல் பொருளாதார மந்ததிற்க்கு பின் அதை விட மோசமான மந்தங்கள் உருவாகவில்லை. மேலும் தொழிலாளர்களின் நிலை (வளார்ந்த நாடுகளில்) படிப்படியாக மேம்பட்டது. அதாவது அவர்களின் standard of living உயர்ந்தன. இது மார்க்ஸ் கூறியதற்க்கு நேர் எதிர்ன நிலை. எப்படி நடந்தது இது ?
இந்த அனானிமஸ் கொஞ்ச காலம்
கழித்து வந்து எழுதுவாராம் !
அதை நாம் நம்பனுமாம்
அதுவரைக்கும்
உபரி மதிப்பு என்பதும் மாயை,
சுரண்டல் என்பதும் மாயை
என்று எண்ணிக்கொண்டு நாமெல்லாம்
மாயா மாயா மாயா எல்லாம் மாயா
என்று பாட்டுப்பாட வேண்டுமாம் .
முதலில் இந்த அனானிமஸ் ‘நோ’ இல்லை
என்றும் ‘நோ’ என்பவர் தமிழ்மணி
இல்லை என்றும் நம்புங்கள் அவ்வாறு
எண்ணுவதும் ஒரு மாயை என்பதை
அனைவரும் நம்புங்கள்.
உபரிமதிப்பின்,சுரண்டலின் மாயை பற்றி
நீங்கள் இன்னும் ஒரு ஆறு மாதம் கழித்து
எழுதப்போவதை,அதன் மூல வாதத்தை
இங்கு வைக்க வேண்டியது தானே ?
அய்யா எல்லாவற்றையும்
ஒன்றாகப் போட்டு
குழப்பும் எண்ணமா ?
அவ்வாறு குழப்புவதன் மூலம்
முதலாளித்துவத்தை
நியாயப்படுத்துவது.
என்னா.. டெக்னிக்கு !
அய்யா அறிவாளி முதலாளித்துவத்தைப்பற்றி
மார்க்ஸ் சொன்னபடி தான் நடக்கிறது.
பொருளாதார சுழற்சிகள் ஒவ்வொறு முறையும்
முன்பவை விட மோசமாக உருவாகி,பெரும்
முதலாளிகள் “மட்டும்” தான் இறுதியில் இருக்கிறார்கள்
என்று மார்க்ஸ் சொன்னது நடக்கவில்லையா?
அமெரிக்காவில் என்ன குடிசை தொழிகளா நடக்கிறது.
எல்லாவற்றையும் ஏகாதிபத்தியம்
எப்போதோ விழுங்கி ஏப்பம் விட்டுவிட்டது.,
சிறு முதலாளி வர்க்கம் கிடையாது.
அங்கு விரல்விட்டும் எண்ணிவிடும் அளவிற்கு தான்
கம்பெனிகள் இருக்கின்றன
அதுவும்
பகாசூர கார்ப்பரேட் பங்கு கம்பெனிகள்.
மார்க்ஸ் சொன்னது,
இப்போது நம் கண் முன்னால்
நடக்கிறதா இல்லையா ?
பெரும் அழிவு உருவாகவில்லையா ?
அப்படியானால் அமெரிக்காவில்
தற்போது நடப்பது என்ன?
முதலாளித்துவ பயங்கரவாதத்தை
இந்த சுட்டியில் போய் பாருங்கள்
மக்களே
https://www.vinavu.com/2008/10/13/recession/
https://www.vinavu.com/2008/11/06/usuicide2/
1930இல் பொருளாதார மந்தத்திற்கு பின்
அதை விட மோசமான
மந்தங்கள் தான் உருவாகவில்லையே தவிர
ஏகாதிபத்தியம் அமைதியாக
இல்லை.
மந்த நிலை உருவாகாமல் தடுக்க
பிற நாடுகளில் போர் நடத்தி கொள்ளையடித்தார்கள்,
கம்யூனிச பூச்சாண்டி காட்டி மக்களை
அச்சத்திலேயே வைத்திருந்தார்கள்.
தொழிலாளர்களின் நிலை (வளார்ந்த நாடுகளில்)
படிப்படியாக மேம்பட்டதற்கான காரணத்தையும்
அதாவது அவர்களின் வாழ்க்கத்தரம் உயர்ந்ததற்கான
காரணத்தையும் மார்க்ஸ் தான் சொல்ல வேண்டும்
என்பதில்லை.
ஏன் என்றால் அப்போது மார்க்ஸ் இல்லை
அதற்கான காரணத்தை லெனின் சொன்னார்.
முதலாளித்துவம் இன்னொரு நாட்டில் அடிக்கிற
கொள்ளையில் தான்,சுரண்டலில் தான்
தன்னுடைய நாட்டு தொழிலாளிகளை
மேட்டுக்குடி தொழிலாளிகளாக பராமரிக்கிறது.
ஆசிய,ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்க,ஐரோப்பிய
முதலாளிகள்
அடித்த கொள்ளையில் தான் தன் நாட்டு
தொழிலாளிகள் போராட்டம் பற்றி எண்ணிப்பார்க்காத
ஒரு வாழ்க்கைச்சூழலை
அவர்களுக்கு உருவாக்கி கொடுத்தார்கள்
அதன் மூலம் அவர்களை
காயடித்தார்கள்.
சுரண்டாத,உபரி மதிப்பை திருடாத
இந்த முதலாளித்துவ யோக்கியர்கள்
எதற்காக
காங்கோவில் புகுந்து லுமும்பாவை கொன்றார்கள்,
சிலியில் ஏன் ஆட்சியை கவிழ்ப்பை நடத்தி
படுகொலை செய்தார்கள்
தற்போது ஏன் ஈராக்கில் நுழைந்தார்கள் ?
ஜனநாயகத்தை நிலை நாட்டவா ?
முதலாளித்துவத்தால்
ஒரு இடத்திலிருந்து திருடாமல்
இன்னொரு இடத்தில்
கொழிக்க முடியாது நண்பரே
அதாவது உங்க பாக்ஷையில்
சொல்லனும்னா தொழிலாளிகளுடைய
standard of living உயர முடியாது.
//
மரண அடி,
மாமா வேலை பார்ப்பவர் என்று விளிப்பது உம்மை பொருத்த வரை சரிதான் என்றால், கெட்ட வார்த்தையில் திட்டுவது எம்மை பொருத்தவரை சரிதான். ))//
திட்டு உன்ன வேண்டானு சொல்லல ஆனா உங்கப்பன் பேர வெச்சி திட்டாத
மாமா என்ற வார்த்தையும் ‘தா,,,,, ‘ என்ற தரங்கெட்ட வார்த்தையையும்
ஒரே அர்த்தத்தில் பார்க்கும் அதியமான் போன்ற முதலாளித்துவ ஆதரவு கழிசைடகளை திருத்துவது என்பது சூரியன் மேற்கில் உதிப்பது போல்
the previous annoy comment was mine. typing error. Comrade Vinavu : it is a big problem to type comments here. and your site is too heavy and loading takes long time in slow connections. can you reduce the home page load with links only. photos can be avoided in home page.
வறுமை ஒழிப்பு பற்றி சில முக்கிய சுட்டிகள் :
Free Trade and the Climb Out of Poverty
http://www.fee.org/pdf/the-freeman/horwitz0305.pdf
Global Capitalism: Curing Oppression and Poverty
http://www.fee.org/pdf/the-freeman/bernstein1203.pdf
Scratching By: How Government Creates Poverty as We Know It
http://www.fee.org/pdf/the-freeman/0712Johnson.pdf
The History of “Underdevelopment”
http://www.fee.org/pdf/the-freeman/davies6-06.pdf
The Persistence of Poverty in India: Culture or System?
By Parth J. Shah
http://www.thefreemanonline.org/featured/the-persistence-of-poverty-in-india-culture-or-system/
மரண அடி,
மாமா வேலை பார்பது / தாயோளி : இவற்றை பற்றி ஒப்பிட்டு வாதம் செய்து தான் செம்புரட்சி கொண்டு வரப்போகிறாயா ? போலே வெங்காயம். புண்ணாக்கு கூட ஆட்ட முடியாது உன்னை போன்ற லூசுகளால்.
:)))
கண்ணு டெனச்னாகாத ராஜா
பீபி-ய மறந்துடாத கண்ணூ
அப்பறம் நான் விடுதல வாங்கிக்கறேன்
சம்முவம் உட்றா வண்டிய பூலாம்பாளையத்துக்கு………………..
கண்ணு டெனச்னாகாத ராஜா
பீபி-ய மறந்துடாத கண்ணூ
அப்பறம் நான் விடுதல வாங்கிக்கறேன்
சம்முவம் உட்றா வண்டிய பூலாம்பாளையத்துக்கு………………..
//
எம் செல் நம்பர் தான் கொடுத்திருக்கிறேனே. மேற்கொண்டு “பேச” விரும்பவர்கள் என்னிடம் நேரடையாக பேசலாமே. கோழ கபோதிகள் தாம் இணையத்தில் போலி அய்டிகளில் இருந்து வீரம் பேசுவர். ))
//
ஏயா நீ கொடுத்ததே டுபாக்கூர் நம்பரு இதுல வெத்து ஜம்பம் வேற
ஒரிஜனல் நம்பர குடுலே,
வீராதி வீரன் கிழட்டு நரி அதியமான் அவர்களே முதாலாளித்துவ நன்மைகளை விளக்கி ஒரு பொதுக்கூட்டம் போடுங்கள்
அங்க நேர்லயே வர்றோம் பேசிக்கலாம் அங்க பாத்துக்கலாம் நீ வீரனா
சூரனா சூரையனான்னு பார்த்துடலாம் (நீ ஒரு கேப்மாரி,வெத்துவேட்டு உதார் பார்ட்டி இல்லைனு நீரூபி) //இது போல எத்தன பேர பாத்திருக்கேன்.//
ஆனா நான் உன்ன மாதிரி ஒருத்தனதான் பாத்துருக்கேன்(பொதுவா நான் இந்த மாதிரி அரைவேக்காடுங்களோட பழகறதில்லிங்கோ)
that is my correct cell no. i don’t find any missed calls. you are a lier and fool and a coward. ok.
அதியமான் மற்றும் தோழர்கள் தயவு செய்து வசைபாடலை நிறுத்துங்களேன், இது வினவு தளத்திற்கு மட்டுமல்ல உங்கள் எல்லோர் மீதும் ஒரு முன்முடிவுகளை கொண்டுவரும் என்பதை உணருங்கள். நாளை நீங்கள் சரியாக எழுதினாலும் இந்த பிணங்கள் மீண்டும் மீண்டும் தோன்டி எடுக்கப்படும்.
மரண அடி
உங்கள் கண்ணோட்டத்தில் அதியமான் திருத்தப்பட முடியாத நபராகக் கூட இருக்கட்டும். அதனால் நீங்களே வசைகளையும் முடிவுகளையும் வைத்து விவாதிப்பதை தயவு செய்து நிறுத்துங்கள். உள்ளடக்கம் குறித்து ம்ட்டும் அதியமானின் பொருளாதாரக் கொள்கைகளில் உள்ள வேறுபாடுகளை மட்டும் பேசுங்கள். இங்கே உங்களைத் தவிர பலரும் அவருடன் விவாதிக்கிறார்கள். யாரும் அப்படி வார்த்தைகளை அள்ளிக்கொட்டாமல் கட்டுபாட்டுடன்தான் விவாதிக்கிறார்கள். மற்றவர்களின் நேரம் உழைப்பு அனைத்தையும் கருத்தில் கொண்டு மறுமொழிகளின் பொருளாதார விசயங்களை மட்டும் வைத்து விவாதியுங்கள். ஒவ்வொரு முறையும் இதை திரும்ப திரும்ப எழுதுவது வெறுப்பாகவும் நேரத்தை விரயம் செய்வதாகவும் இருப்பதை தயவு செய்து புரிந்து கொண்டு பரிசீலீயுங்கள்.
அதியமான்
நீங்களும் இத்தகைய வசை விவாதங்களை தவிர்த்து விட்டு விசயம் குறித்து மட்டும் விவாதியுங்கள். உங்களுக்கு முதலாளித்துவத்தின் மேல் எவ்வளவு பற்று இருக்கிறதோ அந்த அளவு அதை வெறுப்பதற்கும் எங்களுக்கு ஏராளமான காரணங்கள் இருக்கிறது. அந்த உணர்ச்சியை நீங்கள் புரிந்து கொண்டு இந்த சண்டைகளை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
vinavu, this site is too slow and loading takes long time. and entering comments is a hellish affair. pls redesign. and the annoy comment above is mine . error.
என்னங்க இது, மாமா வேலை, தாயோளி மாதிரி தத்துவங்களை எல்லாம் விவாதித்து இப்படி எல்லார் நேரத்தையும் வீணடிக்கிறீர்களே! அதுவும் அதியமானா இப்படி நாகரீகம் குறைந்த வார்த்தைகளை பயன்படுத்துவது?
அதியமான், அனுபவத்தில் சொல்கிறேன் – வினவு தளத்தில் மாற்று கருத்து உள்ளவர்களை விமர்சிக்கும் சில மறுமொழிகளில் உள்ள தரம் குறைந்த வார்த்தைகளை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதுதான் உத்தமம். வசவுக்கு வசவு என்று போனால் போய்க்கொண்டே இருக்கும். இதை சொல்வது சுலபம், செய்வது கஷ்டம் என்று எனக்கும் தெரிகிறது. கலகம் கூசாமல் என்னை பற்றி பொய் சொன்னபோது, என்னாலும் கண்டு கொள்ளாமல் விடமுடியவில்லைதான். இருந்தாலும் இப்போதெல்லாம் வாரத்துக்கு ஒரு முறை இரு முறை இங்கே வரும் என் போன்றவர்களின் நிலையையும் கொஞ்சம் யோசித்து பாருங்கள்!
பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறதே, அங்கே போவோமே? எனக்கும் உங்களை போலத்தான் பார்த்தால் மக்களின் நிலை முன்னேறி இருப்பதை போலவும், ஏழைமை குறைந்து இருப்பதை போலவும் தோன்றுகிறது. ஆனால் இந்திய அரசே கொடுக்கும் புள்ளி விவரங்களை வைத்து பார்த்தால் நிலைமை வேறு மாதிரி இருக்கிறதோ என்று சந்தேகம் வருகிறதே! நகர்ப்புற மத்திய தர, கீழ் மத்திய தர குடும்பங்களை வைத்து நமக்கு ஏற்பட்டிருக்கும் – சரி எனக்கு ஏற்பட்டிருக்கும் – ஏழ்மை குறைந்திருக்கிறது என்ற impression சரிதானா? வீட்டு வேலை செய்பவர்களும், ஆட்டோ ஓட்டுபவர்களும் இன்று டிவியும், செல் ஃபோனும் வைத்துக்கொண்டிருக்கிறார்கள்தான். ஆனால் துவரம்பருப்பு கிலோ நூறு ரூபாய் என்றால் எல்லாராலும் சமாளிக்க முடியுமா? Liberalization சரியான விஷயம், தேவை என்றெல்லாம்தான் நானும் நினைக்கிறேன். ஆனால் social security, medicare, unemployment benefits என்று எந்த வித safety net-உம் இல்லாத நாட்டில் மார்க்கெட் காபிடலிசம் தறி கெட்டு போகும்போது எப்படி சமாளிப்பது? இவை எல்லாம் இருக்கும் அமெரிக்காவிலேயே கொஞ்சம் ததிங்கினத்தோம் ஆகத்தான் இருக்கிறது. liberalization சாதாரண இந்தியர்களின் வாழ்க்கை நிலையை உண்மையிலேயே உயர்த்தி இருக்கிறதா இல்லையா?
போச்சுடா..
அதியமானுக்கு எங்கெங்கிருந்தெல்லாம்
ஆப்பு வருது பாரு.
அண்ணன் RV சுத்தமான முதலாளித்துவ ஜனநாயகவாதி
என்பது அவரை தொடர்ந்து பார்ப்பவர்களால் அறிய முடியும்
ஆனால் அதியமானை ஒரு முறை பேசினாலே தெரிந்துவிட