privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்வீழ்ந்தது ஈழம்! 'மார்க்சிஸ்டு' மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்!!

வீழ்ந்தது ஈழம்! ‘மார்க்சிஸ்டு’ மனமகிழ் மன்றம் கொண்டாட்டம்!!

-

Aftermath_IDP_TamilNational_00

“இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைக் கருத்தரங்கம்” என்றொரு பானரை 17.8.09 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தின் வாசலில் பார்த்தேன். “ஈழத்தமிழர் என்று சொல்லக்கூடாது இலங்கைத்தமிழர் என்றுதான் சொல்லவேண்டும்” என்ற கொள்கை உறுதி கொண்ட கட்சிகளில் யார் இந்தக் கருத்தரங்கத்தை நடத்தக் கூடும் என்ற ஆவலுடன் எட்டிப்பார்த்தேன்.

“இந்த முள்கம்பி வேலிக்குள் எப்போது ரோஜா பூக்கும்?” என்று ரொம்ப கவித்துவமான ஒரு கேள்வியுடன் விளம்பரத் தட்டி வரவேற்றது. சோறும், தண்ணியும், கழிவறையும் இல்லாமல் சேறும் சகதியும் சூழ்ந்த மண்ணில் பன்றிக் கொட்டகைகளில் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழ் மக்களின் நிலையை மேற்கண்டவாறு வருணிக்கும் மெல்லிதயம் படைத்தவர்கள் நிச்சயமாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினராகத்தான் இருக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளே கால் வைத்தேன்.

அருணன் பேசிக்கொண்டிருந்தார். “மாநில சுயாட்சிதான் தீர்வு என்று நாங்கள் சொன்னபோது சில நண்பர்கள் தனி ஈழம்தான் தீர்வு என்று சொன்னார்கள். 25 ஆண்டுகளுக்குப்பின் மாநில சுயாட்சிதான் தீர்வு என்பதை காலம் நிரூபித்திருக்கிறதா, இல்லையா?” என்று முழங்கினார். கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக ராஜபக்சே மேடையில் உட்கார்ந்திருக்கிறாரா என்று தேடிப்பார்த்தேன். மார்க்சிஸ்டு கட்சியின் இந்தக் கொள்கையை 25 ஆண்டுகளுக்குப்பின் நிரூபித்துக் காட்டியவரே அவர்தானே! ஆனால் ராஜபக்சேயைக் காணோம். தோழர்.என்.ராமையும் காணோம். செந்தில்நாதன், தமிழ்ச்செல்வன், அ.சவுந்தரராசன் ஆகியோர்தான் அருணன் பேச்சுக்கு தலையாட்டி ஆமோதிப்பு வழங்கிக் கொண்டிருந்தனர்.

“மாநில சுயாட்சியே தராதவன் எப்படி தனி ஈழம் கொடுப்பான்?” என்று தனது அடுத்த கணையை ஏவினார் அருணன். அதானே, குறைந்த பட்சக் கூலியே கொடுக்காத முதலாளி, சோசலிசத்துக்கு எப்படி ஒத்துக் கொள்வான்?

சி.ஐ.டி.யு சவுந்தர்ராஜன் தலையாட்டிக் கொண்டிருந்தார். ஆனால் இந்த கொள்கை பூர்வமான கேள்வியை தேர்தல் பிரச்சாரத்தின்போது புரட்சித்தலைவியிடம் ஏன் இவர்கள் எழுப்பவில்லை என்பது பற்றி அருணன் ஒன்றும் சொல்லவில்லை.

உண்மையை ஊடுருவிப்பார்க்கும் ஆய்வுக் கண் கொண்ட அருணன், நடந்து முடிந்த ஈழப்போர் குறித்த தனது ஆய்வு முடிவை வெளியிட்டார். “ஒரு வேளை புலிகளை ஒழித்து விட்டோம் என்று இந்திய அரசு மகிழ்கிறதோ என்று கூட எனக்கு ஐயம் ஏற்படுகிறது.” அருணன் கண்டுபிடித்துச் சொன்ன இந்த உண்மை இத்தனை நாள் நம்முடைய மண்டைக்கு உரைக்கவில்லையே என்று எண்ணியபோது ரொம்ப கூச்சமாக இருந்தது.

அடுத்து வந்தார் வழக்குரைஞர் செந்தில்நாதன். “சில தமிழ் ஆங்கிலப் பத்திரிகைகள் பெரிய துரோகம் செய்கின்றன. இங்கிருந்து இலங்கைக்கு சென்றுவந்த ஒரு பத்திரிகை ஆசிரியர் அதை சொர்க்கம் என்கிறார். அவர் நினைத்தால் ராஜபக்சேவுக்கு போன போட்டு பேசுவார்” என்று ஆரம்பித்தார். சரி, இந்து ராமை உண்டு இல்லை என்று பிரித்து மேயப்போகிறார் நம்ம வக்கீல் என்று ஆவலாக எதிர்பார்த்தேன். அந்த மேட்டரை அப்படியே விட்டு விட்டு அங்கே இங்கே என்று கொஞ்ச நேரம் போக்கு காட்டினார். பிறகு, திடீரென்று “இந்து போன்ற பத்திரிகைகள் மாற வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார். இந்து தான் ஏற்கனவே கெட் அப்பை மாற்றி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் போட்டியாக பொம்பளை படமெல்லாம் போட ஆரம்பித்து விட்டதே, இன்னும் என்ன மாறச்சொல்கிறார் செந்தில்நாதன் என்று யோசித்தேன். அப்புறம்தான் விசயம் புரிந்தது. கட்சியின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டு ஜாடையாக இந்து பத்திரிகையை ஒரு குத்து குத்தியிருக்கிறார் செந்தில். மாநிலக்குழு கேட்டால் “இல்லை” என்று நிரூபித்து விடலாம். சக தோழர்களிடம் “பார்ப்பானை ஒரு பிடி பிடித்துவிட்டதாக பெருமையும் பேசிக்கொள்ளலாம்” வக்கீலா கொக்கா?

அப்புறம் ஜெயவர்த்தனா எப்படி ராஜீவ் காந்தியை ஏமாற்றினார் என்று விளக்கினார் செந்தில்நாதன். அடுத்து, ராஜீவ் காந்தி புலிகளை எப்படி ஏமாற்றினார் என்பதையும் விளக்காமலா போய்விடுவார் என்று காத்திருந்தேன். “80 களில் அமைதிப்படை சென்றதைப் போல இப்போதும் இந்தியா அங்கே போகவேண்டும். அதற்கு முழு நியாயமும் உண்டு” என்றார். முல்லைத்தீவில்தான் கடைசி வரை இந்திய இராணுவம் களத்தில் நின்றதே, இவருக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது?

“இந்தியா தலையிட வேண்டும். அதற்கு கருணாநிதி அழுத்தம் கொடுக்க வேண்டும். கருணாநிதிக்கு நாம் அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார் செந்தில்நாதன். கூட்டணிக் கட்சித்தலைவி அம்மாவுக்கு அழுத்தம் கொடுப்பதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. காரியம் நடக்க வேண்டுமென்றால் எங்கே, எவ்வளவு அழுத்த வேண்டும் என்பதையெல்லாம் மார்க்சிஸ்டுகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்?

அடுத்து வந்தார் ச. தமிழ்ச்செல்வன். “ஓராண்டாக எங்களை எவ்வளவெல்லாம் அவதூறாகப் பேசினார்கள்? ஆனால் நாங்கள் வார்த்தைகளைப் பார்க்கவில்லை, அந்த உணர்ச்சிகளை மதிக்கிறோம்” என்றார். அடேயப்பா, எப்பேர்ப்பட்ட ஜனநாயகப் பண்பு! நம் காதில் விழும் சொற்கள் உண்மைதானா? காதை கசக்கி விட்டுக் கொண்டேன்.

“நமக்கும் மற்றவர்களுக்கும் ஒரே ஒரு கருத்து வேறுபாடுதான். இலங்கைப் பிரச்சினைக்கு என்ன தீர்வு என்பதில்தான் கருத்து வேறுபாடு. மாநில சுயாட்சிதான் நமது தீர்வு” என்று பிரச்சினையின் இதயத்தைத் தொட்டார் தமிழ்ச்செல்வன்.

மாநில சுயாட்சி X சுய நிர்ணய உரிமை போயும் போயும் இந்தச் சின்ன கருத்து வேறுபாட்டுக்காகவா மார்க்சிஸ்டுகளை எல்லோரும் கரித்துக் கொட்டினார்கள்? அநியாயம்தான். சிங்குர் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் இப்படித்தான். ஆலைக்கு நிலம் ஒதுக்க வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும், வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எல்லா விசயங்களிலும் சிங்குர் விவசாயிகளுக்கும் மார்க்சிஸ்டு அரசுக்கும் கருத்தொற்றுமை இருந்த்து. மூணு போகம் விளையும் அந்த ஆயிரம் ஏக்கரை டாட்டாவுக்கு கொடுக்கலாமா, கூடாதா என்ற சின்ன விசயத்தில்தான் அங்கேயும் கருத்து வேறுபாடு. இது சின்ன விசயம் என்பது அந்த முட்டாள் விவசாயிகளுக்கும் புரியவில்லை. இங்கே ஈழத்தமிழ் மக்களுக்கும் புரியவில்லை.

“மே 18 அன்று நடந்த மனித அவலம் துயரம் தருகிறது. அதைவிட துயரம், புலிகளும் மக்களைக் கொன்றார்கள் எனபதை அறிந்த போது ஏற்பட்டது. ஒரு எழுத்தாளன் என்கிற நிலையிலிருந்து யோசிக்கும்போது, அமைப்புகள், அதிகாரங்கள் எல்லாம் மக்களைக் கொல்வதாகத்தான் இருக்கிறது என்கிற விரக்தி ஏற்படுகிறது” என்றார் தமிழ்ச்செல்வன். கட்சி,அதிகாரம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு எழுத்தாளன் இதற்கு மேல் என்ன பேச முடியும்? இலக்கியவாதிகளும், என்.ஜி.ஓக்களும், பின் நவீனத்துவவாதிகளும் யோசிக்கவேண்டும். நந்திக்கிராம், லால்கர் சம்பவங்களின் போதும் இதே மாதிரியான விரக்தி தமிழ்ச்செல்வனுக்கு ஏற்பட்டிருக்கும். அதைத்தான் இப்படி சூசகமாகச் சொல்கிறார் என்பது புரிந்தது. “லால்கர்: சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கிகளில் எப்போது கேப் வெடிக்கும்?” என்ற தலைப்பில் த.மு.எ.ச ஒரு கூட்டம் போட்டிருந்தால் நிச்சயமாக தமிழ்ச்செல்வன் தனது விரக்தியை வெளியிட்டிருப்பார்.

இப்படிப் பேசியதற்காக “கட்சிக் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக” யாரேனும் தலைமைக்கு போட்டுக் கொடுத்து விடுவார்களோ என்ற ஐயம் தமிழ்ச்செல்வனுக்கு வந்திருக்கும் போலும். மாநில சுயாட்சியில் தொடங்கியவர் மாநில சுயாட்சியிலேயே முடித்துடன், தமிழ் ஈழம் தீர்வல்ல என்பதையும் அழுத்தமாக வலியுறுத்தினார். கொள்கை பிறழ்ந்து விட்டதாக யாரும் அவரைக் குற்றம் சாட்டவே முடியாது.

கடைசியாகப் பேசிய சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராசன்தான் ஈழப்பிரச்சினையில் மார்க்சிஸ்டு கட்சியின் வர்க்கப்பார்வையைத் “தெளிவு” படுத்தினார். “அண்டை நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற அடிப்படையில் கூட இந்தியா தலையிடக் கூடாதா? இதனை சீனா பயன்படுத்திக் கொள்ளவோ, பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளவோ வாய்ப்பு தரலாமா? இதையெல்லாம் நாம் பேசவே தேவையில்லை. இது அடிப்படையில் இந்திய முதலாளிகளின் பிரச்சினை. தலையீடு செய்வதற்கு தனக்குள்ள ராஜீய வாய்ப்புகளை இந்தியா முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்” என்றார்.

இதைவிட வெளிப்படையாகவும் நேர்மையாகவும் யாராவது பேச முடியுமா? இந்திய மேலாதிக்கம் என்பது இந்திய முதலாளிகளின் நலனுக்கானதுதான். ஆனால் இந்திய முதலாளி வர்க்கமோ தன்னுடைய நலனைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடத் துப்பில்லாமல் சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் கோட்டை விடுகிறது. இந்திய முதலாளி வர்க்கத்துக்கு நாம்தான் வேட்டி கட்டி விட வேண்டியிருக்கிறது என்ற தனது குமுறலைப் பதிவு செய்தார் சவுந்தரராசன்.

கருணாநிதியைக் கேலி செய்து பேசியபோது மட்டும் கூட்டத்தினர் கை தட்டி ஆர்ப்பரித்தனர். மார்க்சிஸ்டு கட்சி இன்னமும் திமுக கூட்டணிக்கு மாறவில்லை என்பதை அதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. மற்றப்படி த.மு.எ.ச வின் கலை இரவுக் கூட்டத்தில் காணும் களிப்பையும், சலசலப்பையும் இந்தக் கூட்டத்திலும் காண முடிந்தது.

கூட்டம் முடிந்து வெளியே வந்த போது எனக்கு ஒரு குழப்பம். “மாநில சுயாட்சி, மாநில சுயாட்சிங்கிறாய்ங்களே, அத்த ராஜபக்சே தமிழர்களுக்கு ஏற்கனவே கொடுத்துட்டாரா? அத்த வாங்கிக்காம எங்களுக்கு ஈழம்தான் வேணும்னு சண்டித்தனம் பண்ணினதுனாலதான் இவ்வளவு பிரச்சினையா?” என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.

“என்ன தோழர் புரியாம பேசறீங்க, இவுங்க ஈழம், ஈழம்னு கேட்டுகிட்டிருந்தா அவர் எப்படி மாநில சுயாட்சியை கொடுக்க முடியும்? என்றார்.

“அப்டீன்னா இப்பொ கொடுத்துடுவாரா?” என்றேன்.

“படிப்படியா தானேங்க போக முடியும். அகதி முகாம் கொடுத்திருக்காரு, அப்பறம் குடியேற்றம், அப்பறம் ஊராட்சி தேர்தல், அப்பறம் நாடாளுமன்றத் தேர்தல், அப்பறம்தான் மாநில சுயாட்சி தர முடியும். முள் கம்பி வேலியையே எடுக்கல. நீங்க மாநில சுயாட்சி கேட்டா எப்பிடி?” என்றார்.

“அப்டீன்னா கம்பி வேலிக்குள்ள ரோஜாப்பூன்னு எழுதியிருக்கே அது என்ன?”

அதான் மாநிலசுயாட்சி. எழுத்தாளர் சங்கமில்லையா, கவித்துவமா சொல்லியிருக்காங்க” என்றார்.

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

‘கோலி’வுட்டை வளைக்க ‘போலி’ கம்யூனிஸ்டுகள் சதி!

அடிவாங்கினால் பொன்னாடை! இந்து முன்னணி vs த.மு.எ.ச Exclusive!!

  1. வீழ்ந்தது ஈழம்! ‘மார்க்சிஸ்டு’ கொண்டாட்டம்!!…

    இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைக் கருத்தரங்கம்” என்றொரு பானரை 17.8.09 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தின் வாசலில் பார்த்தேன். https://www.vinavu.com/2009/08/20/tmaks/trackback/

    • ஏன்னே மாதவராசு யாரு பெரிய்ய கோவகாரராட்டம் போஸ் கொடுத்து போட்டோ போட்டு, நெம்புகோல் அதுஇதுன்னு வசனம் எழுதி, அப்புறம் கொழாயடி சன்டைக்கெல்லாம் நைட்டு ஃபுல்லா யோசிச்சு மனம் தளராதேன்னு பொரட்ச்சிகரமா கடுதாசி எழுவாறே….அவரா?

  2. //மாநில சுயாட்சி X சுய நிர்ணய உரிமை – போயும் போயும் இந்தச் சின்ன கருத்து வேறுபாட்டுக்காகவா மார்க்சிஸ்டுகளை எல்லோரும் கரித்துக் கொட்டினார்கள்? அநியாயம்தான். சிங்குர் பிரச்சினையை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் இப்படித்தான். ஆலைக்கு நிலம் ஒதுக்க வேண்டும், தொழில் வளம் பெருக வேண்டும், வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எல்லா விசயங்களிலும் சிங்குர் விவசாயிகளுக்கும் மார்க்சிஸ்டு அரசுக்கும் கருத்தொற்றுமை இருந்த்து. மூணு போகம் விளையும் அந்த ஆயிரம் ஏக்கரை டாட்டாவுக்கு கொடுக்கலாமா, கூடாதா என்ற சின்ன விசயத்தில்தான் அங்கேயும் கருத்து வேறுபாடு. இது சின்ன விசயம் என்பது அந்த முட்டாள் விவசாயிகளுக்கும் புரியவில்லை. இங்கே ஈழத்தமிழ் மக்களுக்கும் புரியவில்லை. //

    //கூட்டம் முடிந்து வெளியே வந்த போது எனக்கு ஒரு குழப்பம். “மாநில சுயாட்சி, மாநில சுயாட்சிங்கிறாய்ங்களே, அத்த ராஜபக்சே தமிழர்களுக்கு ஏற்கனவே கொடுத்துட்டாரா? அத்த வாங்கிக்காம எங்களுக்கு ஈழம்தான் வேணும்னு சண்டித்தனம் பண்ணினதுனாலதான் இவ்வளவு பிரச்சினையா?” என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.

    “என்ன தோழர் புரியாம பேசறீங்க, இவுங்க ஈழம், ஈழம்னு கேட்டுகிட்டிருந்தா அவர் எப்படி மாநில சுயாட்சியை கொடுக்க முடியும்? என்றார்.

    “அப்டீன்னா இப்பொ கொடுத்துடுவாரா?” என்றேன்.

    “படிப்படியா தானேங்க போக முடியும். அகதி முகாம் கொடுத்திருக்காரு, அப்பறம் குடியேற்றம், அப்பறம் ஊராட்சி தேர்தல், அப்பறம் நாடாளுமன்றத் தேர்தல், அப்பறம்தான் மாநில சுயாட்சி தர முடியும். முள் கம்பி வேலியையே எடுக்கல. நீங்க மாநில சுயாட்சி கேட்டா எப்பிடி?” என்றார்.

    “அப்டீன்னா கம்பி வேலிக்குள்ள ரோஜாப்பூன்னு எழுதியிருக்கே அது என்ன?”

    “அதான் மாநிலசுயாட்சி. எழுத்தாளர் சங்கமில்லையா, கவித்துவமா சொல்லியிருக்காங்க” என்றார்.//

    🙂 நல்ல எள்ளல்!

  3. வழக்கம் போல உங்கள் கோ.க.மு.க வேலையைக் காட்டியுள்ளீர்கள். கூட்டம் முடிஞ்சு இவர் வந்தாராம். ஒரு தோழரைப் பாத்துப் பேசினாராம். இவர் அவரை மடக்கி விட்டாராம். ஆஹா… என்ன சுவாரஸ்யமா எழுதுறீங்கப்பா…

    இதுவரை இலங்கைத் தமிழர்கள் என்றால் அது விடுதலைப்புலிகள்தான். மாற்று இயக்கமே இருக்கக்கூடாது என்று கங்கணம் கட்டித் திரிந்த அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் மட்டுமே இலங்கைப் பிரச்சனையைப் பற்றிப் பேச லாயக்கு என்ற பாசிசக் கருத்தை பலரும் திணித்து வந்தார்கள். நீண்ட காலம் கழித்து இப்போதுதான் தமிழ் மக்களைப் பற்றிக் குறிப்பிடும் வார்த்தைகளாக அவை மாறியுள்ளன.

    இலங்கைப் பிரச்சனையை பல கட்சிகளும் புழக்கடையில் போட்டுவிட்டன. ஆனால் அந்தக்கட்சிகள் பேசிய பேச்சுகள் கொஞ்சமா நஞ்சமா…?? விடுதலைப்புலிகளின் உத்தி பலன் தராது என்று கூறிய மார்க்சிஸ்ட் கட்சியின் மீதுதான் எவ்வளவு ஏச்சுகள்… பேச்சுகள்… மார்க்சிஸ்ட் கட்சி கூறியது உண்மையானதால்தான் தைரியமாக தீர்வு என்ன என்பதை இன்னும் முன்வைக்க முடிகிறது. இதைத்தான் இலங்கை அரசுக்கும் மார்க்சிஸ்ட் கட்சி கூறுகிறது.

    ராணுவத்தீர்வு என்பதற்கு சாத்தியமில்லை என்பதுதான் அது. விடுதலைப்புலிகளை ஒழித்துவிட்டோம் என்று ஹாயாக உட்கார்ந்து கொள்ளாதீர்கள். தமிழர்களுக்கு உரிய உரிமைகளைக் கொடுக்காமல் முழுத்தீர்வு கிடைக்காது என்று தெளிவாகக்கூறுகிறது. இதற்கு ராஜபக்சே செவிமடுக்காவிட்டால் இவர்கள் கண்ட தற்காலிக வெற்றியும் நிலைக்காது. ஆப்கானிஸ்தானில் இறங்கி கொலை வெறியாட்டம் போட்டபோது அமெரிக்காவுக்கு எதிராக எழுந்த குரல்களுக்கு புஷ் சொன்ன பதில் இதுதான். நீங்கள் எங்களோடு இல்லையென்றால், அவர்களோடுதான் இருக்கிறீர்கள்.

    ஒன்று விடுதலைப்புலிகள் அல்லது ராஜபக்சே. இரண்டில் எந்தப்பக்கம் என்பதோடு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் நிறுத்திக் கொண்டார்கள். தமிழ் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை. ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மதவெறி தலிபான்கள் என்று எந்தப்பக்கமும் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கவில்லையே… அதுபோலத்தான் இங்கும்.

    • அடேங்கப்பாஆஆஆஆ தீக்கதிர் உதவி ஆசிரியர் பிண்ணி பெடலெடுக்கறாரே..

      // அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மதவெறி தலிபான்கள் என்று எந்தப்பக்கமும் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கவில்லையே… அதுபோலத்தான் இங்கும்// என்னா தீப்பொறி பறக்கும் வரிகள்ள்ள்ள்ள்ள்… கடவுளே இந்த நார்சிஸ்டு கட்சியை நீதாம்பா காப்பாத்தனும்…sigh

    • ///தமிழ் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை. ///

      அண்ணா என்னா சொல்றார்… ஈழம்னு சொன்னாலே அபச்சாரம்னு கூப்பாடு போடறார்.. அமைதின்னு பொத்தாம் பொதுவா சொன்னா…அது என்ன ஏசு ஜீவிக்கிறார்னோ, சாமி பாத்தப்பார்ன்னோ பாப்பான் பேசறத போலவா…? ஏன் சுத்தி வளைக்கணும்… இந்திய முதலாளி வர்க்கதின் முகம் கோணாமல் என்ன வேண்டுமோ அதை வாங்கிக் கொள்ளுகன்னு பளிச்சு சொல்லாம.. எங்காத்துக்காராரும் கச்சேரிக்குப் போறார்னு கூட்டம் போட்டு மாநாடு போட்டு.. சேச்சே….டயம் வேஸ்டு சாரே

    • //ஒன்று விடுதலைப்புலிகள் அல்லது ராஜபக்சே. இரண்டில் எந்தப்பக்கம் என்பதோடு விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் நிறுத்திக் கொண்டார்கள். தமிழ் மக்களுக்கு அமைதியான வாழ்க்கை என்பதுதான் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை. ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மதவெறி தலிபான்கள் என்று எந்தப்பக்கமும் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கவில்லையே… அதுபோலத்தான் இங்கும்//

      எந்த பக்கமும் அல்ல. எங்குமே நிற்கவில்லை. சும்மா இருந்து விட்டீர்கள் !
      பொது இடங்களில் கேட்டா மட்டும் சிலர் “ஆதவன் தீட்சண்யா” போல் உளறி கொட்டினீர்கள் !

    • நமது மார்க்ஸிஸ்ட் கட்சியினரை பற்றி ஒரு நகைச்சுவை சொல்வார்கள். அதாவது, இன்று மாலை ஏதாவது ஒரு ஊரில் ரோடு போடப்போவதாக அறிவிப்பு வெளியானால் அன்று காலை ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தி, மறுநாள் காலை யெங்களின் போராட்டம் வெற்றி என்று போஸ்டர்கள் ஒட்டுவார்களாம். அது போல புலிகளை பாஸிஸ்டுகள் யென்று ஆரம்பம் முதலே விமரிசனம் செய்து, ஈழப்போராட்டம் திசைதிரும்பியதை சுட்டிக்காட்டியது நக்ஸல்பாரிகள்ட தான். ஆனால் இப்போது அதற்கு உரிமை கொண்டாட மட்டும் மார்க்ஸிஸ்ட் கட்சியினர் வந்துவிட்டனர்……… இவங்களுக்கு இதே வேலையா போச்சு…

  4. Koduppatharkku singalavanukku immi alavum manam illai, appuram enna maanila suyaatchi, thani eelaam? Tamil makkal thuyaram maranthu, ungalin kolkai ventrathu enru santhosam ponkum neengala makkalin kaavalarkal?

  5. //. ஆப்கானிஸ்தான் பிரச்சனையில் அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் மதவெறி தலிபான்கள் என்று எந்தப்பக்கமும் மார்க்சிஸ்ட் கட்சி நிற்கவில்லையே… அதுபோலத்தான் இங்கும்.//

    அமெரிக்க் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அகில இந்திய அளவில் போர் எதிர்ப்பு போராட்டம் நடத்திய சிபிஎம் என்ற டாடாயிஸ்டு கட்சி, ஈழப் பிரச்சினையில் அப்படி எதுவும் செய்ய வில்லைஎயெ ஏன்?

    ஏன் இந்த பாராபட்சம்…?

  6. ஞானத்தை தேடி திருமலை
    பழனி,சபரிமலை
    கோயில்
    கோயிலாய் அலைவோரே
    கோடிகோடியாய் கோட்டினாலும்
    சொர்க்கத்துக்கு கடவு சீட்டு
    சீபீஎம் உறுப்பினர் சீடு….

    வர்க்கமென்ன வர்க்கம்
    வாடத முகமுண்டு
    யாரையும் வளைக்கும் திறனுண்டு
    அதற்கு மார்க்சிஸ்டு என்றோர் பெயருண்டு
    நரியை பரியாக்கியவன்
    சிவனெனில் யானையை
    எறும்பாக மாற்ற மந்திரம்
    ஓதிக்கொண்டிருக்கிறார்
    தலைமை பூசாரி பிரம்மசிறீ காரட்ஜீ….

    சாதுகடவுளென நினைத்தயோ
    அற்பனே நக்சல் பரி
    நந்திகிராம்,காரப்பட்டென
    தேவையெனில் ஆங்கார தரிசனமும்
    உண்டு
    சோதிபாசு, நாயனார்,நம்பூதிரி
    சுர்ஜிட்,டாங்கே என ஆயிரம்
    பூசாரி வந்தாலும்
    மாறாத துரோகத்துக்கு
    காரணம் கண்டறிந்தாயோ
    புழுவே அதுதான் பிரம்மம்
    பரப்பிரம்மம்
    இன்னும் புரியவில்லையா
    புரியும் படி
    செப்புகின்றேன் அதுதான்
    சீபீஎம்

    http://kalagam.wordpress.com/2009/01/04/%e0%ae%aa%e0%ae%b0%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8d/

  7. குகராத்தில் முசுலிம்கள் கொத்து கொத்தாக இந்து மதவெறி கும்பலால் கொல்லப்பட்ட போது சி.பி.எம். கட்சியினர் மக்கள் ஒற்றுமை மாநாடு என்று அரங்குகளில் பாதுகாப்பு தேடினர். காங்கிரசுக்கு மதவெறியை கட்டுப்படுத்த புத்தி சொல்லிக் கொண்டிருந்தனர். தங்கள் மாநிலங்களில் RSSஐ கட்டுப்படுத்தியிருப்பதாக மார் தட்டிக் கொண்டனர். ஈழத்தில் இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப்பட்ட பின்னரும் கருணாநிதியை விஞ்சும் மவுனத்தைக் கடைப்பிடித்து விட்டு இப்போது திடீர் அக்கறை வந்ததற்கான காரணத்தை ஒரு வரியிலாவது — தள்ளுபடி விளம்பரத்தின் கிழே இருக்கும் ‘கண்டிசன்ஸ் அப்ளை’ சைசிலாவது த.மு.ஏ.ச சொல்லியிருக்கலாம். ஈழம் தொடர்பாக தா. பாண்டியன் நிலைப்பாட்டையே கேலி செய்தவர் CPMன் மாநிலக் செயலாளர் வரதராசன். ஈழப் பிரச்சினையில் அதிக ஆர்வம் கொள்ளுவது இனவாதிகளுடன் தம்மை அடையாளப்படுத்தும் என்று அடக்கி வாசிக்கும சர்வ தேசியக் கொள்கையை எடுத்தது CPM. இப்போது த.மு.எ.ச கூட்டம் கட்சியின் கொள்கையை மீறுவதாக ஆகாதா என்ற கேள்விக்கு பதிலை இங்கு பின்னூட்டம் இடும் CPM நண்பர்கள் யாரேனும் சொன்னால் நல்லது.

    • ஏதோ உங்க கும்பல் வீச்சரிவாளோட களத்துல குதிச்ச மாதிரில சிபிஎம்மக் குறை சொல்றீங்க… அதெல்லாம் சரி… போலி சுக்தேவ் அவர்களே… நீங்களாவது இலங்கைக்குப்போய் எங்களுக்கெல்லாம் புத்தி வர்ற மாதிரி செஞ்சு காமிங்களேன்…

      நீங்களாக சொல்லிக்கொள்வதா, மார்க்சிஸ்ட் கட்சியினர் மவுனம் சாதித்ததாக… உங்களுக்கும், ராஜபக்சேவுக்கும் பிடிக்காத விஷயங்களைப் பேசினோம். அவ்வளவுதான். இப்போதும் மார்க்சிஸ்ட் கட்சி பேசுகிறது. அதனால்தான் எரிச்சல்பட வேண்டியவர்களுக்கு இயல்பாகவே எரிகிறது. இதில் கொள்கை மீறல் ஒன்றும் கிடையாது.

      • ஏனுங்க கணேஷ், கூட்டணி எல்லாம் தேர்தல் சமயத்துல மட்டும்தானுங்களா… இப்போ அம்மாவுக்கு ஒத்தாசை ஏதும் பண்றது இல்லீங்களா?

      • வாங்க கணேஷ்,வினாயகர் சதூர்த்தி பிஸியில இருப்பீங்க, இருந்தும் நேரம் ஒதுக்கி தானே முன்வந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததற்கு மிக்க நன்றி!

        தயவு செய்து மார்க்ஸிஸ்டு கட்சியின் ஈழம் குறித்த நிலைப்பாடு, மற்றும் அங்கு எப்படி புரட்சி செய்வது அல்லது எப்படிப்பட்ட போராட்டம் செய்வது ஈழத்தின் தற்போதைய நிலைக்கு என்ன காரணம் என்பதை கோர்வையாக கணேஷ் விளக்கினால் விவாதம் செய்ய வசதியாக இருக்கும்.

        உதவி ஆசிரியரிடம் கற்றூக்கொள்ள நிறையவே இருக்கிறது.

      • சந்தர்ப்பவாதத்தின் கவசம் வசை. கணேஷுக்கு வேறு வழிமுறை என்ன இருக்க முடியும். 60 MP க்களை வைத்து தொடையைத் தட்டிக் கொண்டிருந்தவர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு பதிலில்லை. ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்ற கும்பலிடம் அரசியல் நாணயத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்.

      • கொள்கை…..? ஏங்க கனேஷ்…? நீங்க மார்க்ஸிஸ்ட்தானே..? அப்புறம் யென் கொள்கை அது இது என்று பினாத்துகிறீர்.

    • சுகதெவ் உன் பெயருக்கும் விவாதத்திற்கும் சம்பந்தமே இல்லை. தயவு செய்து பெயரை மாற்றிக் கொள். மார்க்சிஸ்ட்டுகளைப் பற்றி தவறாகப் பேசுபவன் மடையன் என்பது என் கருத்து. களத்தில் மக்களுடைய பிரச்சனைகளை நேரடியாக சந்தித்துப் போராடுபவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். உங்களைப் போல் வெட்டி விவாதம் செய்பவர்கள் அல்ல. உண்மையான போராளியாக இருந்தால் களத்தில் இறங்கி போராடு கம்யூட்டர் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பிதற்றலாம் என்ற முடிவுக்கு வராதே. பெண்ணை ஒருவன் கற்பழிக்கும் போது அவளை காப்பாற்றாமல் பெண் விடுதலை பற்றி கவிதை எழுதும் கவிஞனும் நீயும் ஒன்றுதான்.
      இப்படிக்கு பாரதி கண்ட புதுமைப் பெண்

      • அம்மா பாரதி கண்ட புதுமைப் பெண்ணே!….? பெயரை மாற்றிக் கொல்ள வேண்டியது சுகதேவ் அல்ல. மாறாக நீங்கள் தான்… பார்ப்பன பாரதியின் புதுமைப் பெண் யென்பவள் பார்ப்பன இந்து தேசத்திற்கு வீரதிருமகனை(மகளை அல்ல)பெற்றுக்கொடுப்பதும், கணவர்களை பராமரிப்பதும் தானேயொழியே…. வேறு புரட்சி ஏதும் இருந்ததாக தெரியவில்லை….. எதற்கும் பாரதி பற்றிய நூல்களை சிரத்தையுடன் படிப்பது நல்லது….. குறிப்பாக அவரின் கட்டுரைகளை.

  8. கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தத்தை தங்கள் பதிவு தீர்த்துவிட்டது.

    என்ன ஒரு வருத்தம்! உங்க பதிவு டிரைய்லர். போயிருந்தா… முழு நீள படம் பார்த்திருக்கலாம்.

  9. ஏன் ஈழத்தமிழர்கள் மேல் திடீர்ப்பாசம் இவர்களுக்கு? ஈழத்தமிழனின் பிரச்சனை என்னவென்றே தெரியாமல் ஈழப்பிரச்சனைக்கு தீர்வும் சொல்லும், புலிகளை விமர்சனம் செய்யும் இதுபோன்ற கூட்டத்தின் இம்சை தாங்க முடியவில்லை.

  10. ellaludan kalanthukaddi saakadiththirukkireerkal.ippadi oru ezhuththu padiththu neenda naadkalaayitru.yaarenre theriyaamalirukkum kadsikal ellaam eezhaththaarukku iranga vanthu viddaarkal.thodarnthu ippadiyaana methaavilaasangalai muriyadiyungal…vaazhththukkal..-raavan rajhkumar.

  11. THE MAKAAL KALAI ILAKIYA KAZHAGM is a ISO 9000:2009 Communist Part.. Rest of All parties are DUPLICATE.. this was cerified by MR.MARUTHIYAN, Scientist, International Standerd Certificate For Communist Parties ..
    SPECIAL NOTE:-1. They are very expect in MAAN KARATE..

    2. THEY ARE STILL FIGHT WITH POSTER AND NOTICES ..

    3. THEY WERE NEVER MADE ANY AGITATION AGAIST CAPITALIST, BECAUSE THEY ARE SPONSERS OF THEM.

      • அண்ணே கணேசு அண்ணே… நீங்கதான் எந்த வேசம் போட்டாலும் ரத்த கவிச்சி காட்டி குடுக்குதே ஆள்காட்டின்னு… அடுத்த தபா ஹிட்லர் வேசம் போடுங்க make up இல்லாம வரலாம்…

    • போலிகம்யூனிஸ்ட் நீங்கள் ஒரு டம்மி பீஸ்‍‍‍னு நினைக்கிறேன். என் கணிப்பு சரிதானே……?

  12. இந்த கம்ம்யூனிஷ்டுகளை பார்க்கும் போது முதலாளிகளே பரவாயில்லை, நெஞ்சிலே குத்திக்கொண்டு இருக்கிறார்கள்.

  13. 🙂

    நானும் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தேன். உங்கள் பதிவைப் படித்ததும் நடந்த நிகழ்வின் பரிணாமமே மாறிவிட்டது 🙂

    உங்களது எள்ளல் மற்றும் திட்டல் நடை எனக்கு எப்பவுமே உவப்பானது!

  14. அதுதான் எல்லாம் சிரி்ப்பாச் சிரிச்சுப் போச்சே..:( நீங்களும் சிரிக்க வைக்கிறீர்கள்… இது வேறு சிரிப்பு:) இந்தக் குத்தல், எள்ளல், நக்கல், நையாண்டி எல்லாம் பார்த்துத்தான் மனசு ஆறவேண்டியிருக்கு.

  15. சபாஷ் சரியான போட்டி. போர் தொடருட்டும். உங்க கும்பலின் வண்டவாளங்கள் வெளியே வரட்டும்.

    பொரட்சி ஓங்குக. வாழ்க கம்யுனிசம்.

  16. பகத் அவர்களுக்கு, சும்மா ஒப்புக்கு வர்றது… ஒரு கேள்வியப் போட்டுட்டு, பக்கத்துல உங்கள மாதிரியே வேலை வெட்டி இல்லாம உக்காந்துக்குட்டு இருக்குறவருகிட்ட பாரு… இப்ப அந்த கணேசு மூளையக் கசக்கிட்டு இருப்பான்னு கமெண்டு அடிக்குறது… முதல்ல போய் உங்க மகஇக ஆட்களுக்கு ஏதாவது ஒத்தாசை பண்ணுங்க…

    கலகம் அவர்களுக்கு – பரவாயில்லையே… கலகம்தான் பண்ணப்போறீங்களோன்னு நெனச்சேன்… முருகர் ரசிகர் போலருக்கு… எப்பவும் விநாயகர் நினைப்பா இருக்கீங்க… கலகம்னா ஏதோ புரட்சியத்தான் சொல்றீங்கன்னு தப்பா நெனச்சுட்டேன். மன்னிச்சுக்கோங்க…

    1. தனி ஈழம் தேவையில்லை.

    2. தமிழ்-சிங்களப் பாட்டாளிகள் இணைஞ்சுதான் புரட்சி.

    3. தற்போதைய நிலையில், இனரீதியாக பாகுபாடு இல்லாத சம உரிமைகளைக் கொண்ட அணுகுமுறைக்காகப் போராடுவது.

    அது சரி… இப்புடி எத்தனை பேரு கேள்வி கேட்டே பொழப்பு நடத்துறதுன்னு கௌம்பியிருக்கீங்க…

    நான் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியமில்லை… அனுபவமே பாடம் நடத்தும். நன்றி…

    • pls pls
      pls pls
      pls pls
      pls pls
      அங்கு எப்படி புரட்சி செய்வது அல்லது எப்படிப்பட்ட போராட்டம் செய்வது ஈழத்தின் தற்போதைய நிலைக்கு என்ன காரணம் ?

    • ஆமா இங்கு நீங்கள் புரட்சி செய்வது போலவே ஈழத்திலும் புரட்சி செய்ய வேண்டுமா?
      சிங்கள பாட்டாளிகளும் தமிழர்களும் இணைந்து புரட்சி செய்ய் வேண்டுமா ரொம்ப நல்ல விசயம். மார்க்சிஸ்டுக்குள்ள இப்படி ஒரு நல்ல மனுசன் இருக்குறது தெரியாமப்போச்சே 🙂

      • கேள்விய மட்டும் கேக்குறோம்ன்னு தப்பா எடுத்துக்கிடாதீங்க, நீங்க மட்டும் சட்ட மண்றத்துலயும் நாடாளுமன்றத்துலயும் கேள்வியா கேக்குறீயளே யாராச்சு தப்பு சொன்னாகளா? அட சொல்லுங்க 😎 :poke:

    • தனி ஈழம் தேவை,இல்லை தேவையில்லை.

      தமிழ்-சிங்களப் பாட்டாளிகள் இணைஞ்சுதான் புரட்சி.
      இல்லை புரட்சியும் இல்லை
      மாநில சுயாட்சி தான் தீர்வு என்று இதைப்பற்றியெல்லாம்
      ஆருடம் சொல்வதற்கு முதலில் நீங்கள் யார் ?

      இதற்கு முதலில் பதில் சொல்லுங்கள்.

  17. தீக்கதிர் சார்ப்பாகவும் தீக்கதிரின் தரத்திலும் எழுதிக் கலக்கும் கணேஷ் அவர்களே!

    ஈழம் சம்பந்தமாகவும் ஜெயா மாமியோடு கூட்டணி கட்டி நீங்கள் ஓட்டுப் பொறுக்கியதற்காகவும் மட்டுமே உங்கள் கட்சியின் நேர்மையான அணிகள் பலர் காறி உமிழ்ந்துவிட்டு வெளியேறியது அனைவருக்கும் தெரியும். இந்த இரண்டு விசயங்களும் கீழ் மட்டத்தில் கடுமையான அதிருப்தியைச் சம்பாதிக்கத் தொடங்கியதுமே ‘மார்க்சிய வகுப்பு’ எனும் பேரில் ஈழ (மன்னிக்கவும்) இலங்கைத் தமிழர் மீதான சி.பி.எம்.மின் நிலைப்பாட்டிற்காகவும் ஜெயாமாமியுடன் கொல்லைப்புறக் கூட்டு வைத்ததற்காகவும் சப்பைக்கட்டு கட்டினீர்கள். அதனுடைய பலனை தேர்தல் தோல்வி முடிவுகளின் மூலம் அறிந்து கொண்டீர்கள். போகட்டும்.

    ’இலங்கைத் தமிழர்’ களுக்காக நீங்கள் வடிக்கும் கண்ணீர் ஒரு புறமிருக்கட்டும். கடந்த அக்டோபர் அல்லது நவம்பர்’2008 -ல் ‘ஹிந்து’ பத்திரிக்கையின் மாலினி பார்த்தசாரதி எழுதிய ஈழ மக்கள் மீதான அவதூறுக் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கோவையிலும் அதனைத் தொடர்ந்து ஈரோட்டிலும் போராட்டம் நடத்தினார்கள். ‘’இலங்கைத் தமிழர்களுக்கு எந்தவிதமான பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக ராஜபக்‌ஷே போர் நடத்துகிறார்’’ என்றும் ‘’ஈழத் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக இங்கே (தமிழகத்தில்) பேசுபவர்கள் எல்லோரும் புலி ஆதரவாளர்கள்தான்’’ என்றும் மாலினி தனது பத்திரிக்கையில் எழுதியிருந்தாரே அதைக் கண்டித்துதான் பெ.தி.க. வின் போராட்டம் இருந்தது.

    ஆனால், உங்கள் தீக்கதிர் அப்போது என்ன செய்தது தெரியுமா? மாலினி பார்த்தசாரதி எழுதியது அவதூறு என்று கூட சொல்லியிருக்கத் தேவையில்லை ‘’அது ஏற்புடையதில்லை’’ என்றாவது சொல்லியிருக்கலாமல்லவா? அப்படியா தீக்கதிர் எழுதியது? மாலினி பார்த்தசாரதி மாமிக்கும் ‘ஹிந்து’ கும்பலுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கடுமையாக விமர்சித்து இரண்டுநாட்கள் தொடர்ந்து தலையங்கமே எழுதியது தீக்கதிர். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

    இது ’மார்க்சிஸ்ட்’ இயக்கத்தின் ஈழப் புரட்டுகளுக்கு ஒரு சோற்றுப் பதம். நீங்கள் இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு சொல்வது ஒருபுறமிருக்கட்டும் இங்கே காஷ்மீரத்து பிரச்சினைக்கும் அஸ்ஸாமுக்கும், இன்னபிற இந்தியாவிற்குள்ளான தேசிய இனச் சிக்கல்களுக்கும் உங்களுடைய பதில் இந்திய ஆளும் வர்க்கத்தின் பதில்தானேயொழிய, சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் மார்க்சிய-லெனினிய முறையிலான தீர்வை நீங்கள் எங்கும் எப்போதும் வலியுறுத்தியதே கிடையாது.

    இந்திய தேசிய சிக்கலுக்கு ஒரு நேர்மையான, நியாயமான தீர்வை முன்வைத்துவிட்டு பிறகு அந்நிய தேச சிக்கலுக்கு தீர்வு சொல்ல வாருங்கள்.

    ஏகலைவன்

    • ////////இந்திய தேசிய சிக்கலுக்கு ஒரு நேர்மையான, நியாயமான தீர்வை முன்வைத்துவிட்டு பிறகு அந்நிய தேச சிக்கலுக்கு தீர்வு சொல்ல வாருங்கள்.////////

      இதற்கும் பதில் தெரியவில்லையா கணேஷ்?!

    • மதிப்பிற்குரிய, மரியாதை கொடுக்கமுடியாத ஏகலைவனே. தமிழகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் பாதிக்கப்படும் போதும், சாதியின் பெயரால் ஒதுக்கப்படும் போதும் ஏகலைவன் போன்றவர்கள் எங்கே போனீர்கள்? அவனை அடிமை என்று ஒதுக்கித் தள்ளும் போதும் அவர்களுக்காகவும் அனைத்துத் தமிழனுக்காகவும் குரல் கொடுத்து களம் கண்டு போராடியது மார்க்சிஸ்டுகள் மட்டுமே.
      ஏகலைவன் போன்றவர்கள் இங்கு பாதிக்கப்படக் கூடிய தமிழர்களை பார்த்ததில்லை போல. ஏகலைவனே இங்குள்ள இலங்கைத் தமிழர்களின் அகதிகள் முகாம்களில் போய் பார் அவர்கள் படும் துயரை, அதனை துடைக்கப்போராடுவது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும், மார்க்சிஸ்டுகளும் தான். களத்தில் போய் பார் உனக்கு உண்மை புரியும்.

      • //தமிழகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் பாதிக்கப்படும் போதும், சாதியின் பெயரால் ஒதுக்கப்படும் போதும் ஏகலைவன் போன்றவர்கள் எங்கே போனீர்கள்?\\ ஜோதிபாசுவின் பேரனுக்கு பூணூல் கலியாணம் நடத்தும் போது எங்கே போனீர்களோ அங்கே தான் தோழரெ…………………………..

  18. //ஆனால், உங்கள் தீக்கதிர் அப்போது என்ன செய்தது தெரியுமா? மாலினி பார்த்தசாரதி எழுதியது அவதூறு என்று கூட சொல்லியிருக்கத் தேவையில்லை ‘’அது ஏற்புடையதில்லை’’ என்றாவது சொல்லியிருக்கலாமல்லவா? அப்படியா தீக்கதிர் எழுதியது? மாலினி பார்த்தசாரதி மாமிக்கும் ‘ஹிந்து’ கும்பலுக்கும் வக்காலத்து வாங்கிக்கொண்டு பெரியார் திராவிடர் கழகத் தோழர்களைக் கடுமையாக விமர்சித்து இரண்டுநாட்கள் தொடர்ந்து தலையங்கமே எழுதியது தீக்கதிர். இது அனைவருக்கும் தெரிந்த உண்மை//

    தோழர் கணேஷ் இது உண்மையா? நீங்கள் என்னை போன்றவர்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்

      • இந்தக்கேள்விக்குதான் நான் பதில் சொல்லவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்கள். கடந்த ஆண்டு அக்டோபர் 21 அன்று வெளியான அந்தத் தலையங்கத்தை திரும்பவும் படித்தால் இது பொய்யான குற்றச்சாட்டு என்பது புரியும். கருத்துரிமைக்கு மதிப்பு தர வேண்டும் என்பதுதான் அந்தத் தலையங்கத்தின் மையக்கருத்து. எப்.எம்.உசேன் மீது பாஜக கும்பல் தாக்குதல் நடத்துவதற்கும், இதற்கும் என்ன வித்தியாசம்…??

  19. நண்பர்களே!
    இந்தக் கட்டுரை படித்ததில் என்று ஒன்றுமட்டும் புலப்படுகிறது. செய்யாத பாவத்திற்கு சிபிஎம்-காரர்கள் தண்டனை அனுபவிக்கிறார்கள். யாணை இளச்சிடுச்சினு காக்கா மேல ஏறி உட்கார்ந்த கதையாக இருக்கு உங்கள் விமர்சனம். தமிழகத்தில் ஈழத் தமிழர் என்ற பெயரால் நடக்கும் அட்டூழியங்களை பார்க்கும்போதும், உலக நிலைமைகளை கவனிக்கும் போதும் சிபிஎம் காரர்கள் சொல்லும் கருத்துதான் சரியானது என்று படுகிறது. இன்றைய தினமணி நடுபக்க கட்டுரையை படிக்கவும்.

    • நண்பர் கவாஸ்கர் அவர்களே!

      உங்களைப் போன்ற அப்பாவிகள் இருக்கும் வரை சி.பி.எம். கட்சியின் மக்கள் விரோத செயல்களை ஒன்றும் செய்துவிட முடியாது. தமுஎச என்கிற பெயரில் நடத்தப்படும் மனமகிழ் மன்றம் நடத்திய கூட்டத்தின் கேவலங்களை இக்கட்டுரை பட்டியலிட்டுள்ளது. இதற்கு ஒரு பதிலை நீங்கள் நேர்மையாக யோசித்துப் பாருங்கள்.

      ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கு எதிராக உங்கள் கட்சி கடைபிடித்துவருகின்ற நிலைப்பாடுகளை உங்கள் தீக்கதிரிலிருந்தும், சந்திப்பின் வலைதளத்திலிருந்தும் ஆதரங்களாக இங்கே தொகுத்திருக்கிறார்கள் தோழர்கள். இவ்வளவையும் பார்த்த பிறகும் சி.பி.எம்.மிற்காக பரிதாபபடுகிறீர்கள் என்றால் இதனை என்னவென்பது. உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்கள் நீங்கள்தான் நண்பரே!

  20. //கடைசியாகப் பேசிய சி.ஐ.டி.யு தலைவர் சவுந்தரராசன்தான் ஈழப்பிரச்சினையில் மார்க்சிஸ்டு கட்சியின் வர்க்கப்பார்வையைத் “தெளிவு” படுத்தினார். “அண்டை நாட்டில் அமைதி நிலவவேண்டும் என்ற அடிப்படையில் கூட இந்தியா தலையிடக் கூடாதா? இதனை சீனா பயன்படுத்திக் கொள்ளவோ, பாகிஸ்தான் பயன்படுத்திக் கொள்ளவோ வாய்ப்பு தரலாமா? இதையெல்லாம் நாம் பேசவே தேவையில்லை. இது அடிப்படையில் இந்திய முதலாளிகளின் பிரச்சினை. தலையீடு செய்வதற்கு தனக்குள்ள ராஜீய வாய்ப்புகளை இந்தியா முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்” என்றார். //
    இதைப் படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது.

    இவ்வளவு பச்சையாக ஏகாதிபத்திய வேலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை சொல்கிறதே!

    • ///////////இவ்வளவு பச்சையாக ஏகாதிபத்திய வேலைக்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆலோசனை சொல்கிறதே!///////

      இக்கருத்தை மறுக்காமல் நீங்களெல்லாம் மவுனம் சாதிப்பது இவ்விமர்சனத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டிருப்பதாகத்தான் அர்த்தம். அதற்காக சி.பி.எம். நண்பர்களுக்கு எமது நன்றி!

      • அதெப்புடி இந்த மாதிரி விஷயத்துல தினமலரு, ஜூ.வி., குமுதம், நக்கீரனயெல்லாம் தூக்கி சாப்புட்டுறீங்க… இவர் இப்படி சொன்னார்னு அங்கங்க பேச்சுல வெட்டிப்போட்டு உங்க தோள்ல நீங்களே தட்டிக்கொடுத்துக்குறீங்க… மதம் ஒரு அபின்னு மார்க்° சொல்லிட்டாருன்னு கூக்குரல் இட்டவங்கள அப்புடியே பின்பற்றி போறீங்க… நடக்கட்டும்… நடக்கட்டும்…

  21. …“மாநில சுயாட்சிதான் தீர்வு என்று நாங்கள் சொன்னபோது சில நண்பர்கள் தனி ஈழம்தான் தீர்வு என்று சொன்னார்கள். 25 ஆண்டுகளுக்குப்பின் மாநில சுயாட்சிதான் தீர்வு என்பதை காலம் நிரூபித்திருக்கிறதா, இல்லையா?” என்று முழங்கினார். கூட்டத்தின் சிறப்பு விருந்தினராக ராஜபக்சே மேடையில் உட்கார்ந்திருக்கிறாரா என்று தேடிப்பார்த்தேன். மார்க்சிஸ்டு கட்சியின் இந்தக் கொள்கையை 25 ஆண்டுகளுக்குப்பின் நிரூபித்துக் காட்டியவரே அவர்தானே! ஆனால் ராஜபக்சேயைக் காணோம். தோழர்.என்.ராமையும் காணோம். செந்தில்நாதன், தமிழ்ச்செல்வன், அ.சவுந்தரராசன் ஆகியோர்தான் அருணன் பேச்சுக்கு தலையாட்டி ஆமோதிப்பு வழங்கிக் கொண்டிருந்தனர்.

    “மாநில சுயாட்சியே தராதவன் எப்படி தனி ஈழம் கொடுப்பான்?” என்று தனது அடுத்த கணையை ஏவினார் அருணன். அதானே, குறைந்த பட்சக் கூலியே கொடுக்காத முதலாளி, சோசலிசத்துக்கு எப்படி ஒத்துக் கொள்வான்?…

    கூட்டம் முடிந்து வெளியே வந்த போது எனக்கு ஒரு குழப்பம். “மாநில சுயாட்சி, மாநில சுயாட்சிங்கிறாய்ங்களே, அத்த ராஜபக்சே தமிழர்களுக்கு ஏற்கனவே கொடுத்துட்டாரா? அத்த வாங்கிக்காம எங்களுக்கு ஈழம்தான் வேணும்னு சண்டித்தனம் பண்ணினதுனாலதான் இவ்வளவு பிரச்சினையா?” என்று மார்க்சிஸ்டு கட்சிக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.

    “என்ன தோழர் புரியாம பேசறீங்க, இவுங்க ஈழம், ஈழம்னு கேட்டுகிட்டிருந்தா அவர் எப்படி மாநில சுயாட்சியை கொடுக்க முடியும்? என்றார்.

    “அப்டீன்னா இப்பொ கொடுத்துடுவாரா?” என்றேன்.

    “படிப்படியா தானேங்க போக முடியும். அகதி முகாம் கொடுத்திருக்காரு, அப்பறம் குடியேற்றம், அப்பறம் ஊராட்சி தேர்தல், அப்பறம் நாடாளுமன்றத் தேர்தல், அப்பறம்தான் மாநில சுயாட்சி தர முடியும். முள் கம்பி வேலியையே எடுக்கல. நீங்க மாநில சுயாட்சி கேட்டா எப்பிடி?” என்றார்.

    “அப்டீன்னா கம்பி வேலிக்குள்ள ரோஜாப்பூன்னு எழுதியிருக்கே அது என்ன?”

    “அதான் மாநிலசுயாட்சி. எழுத்தாளர் சங்கமில்லையா, கவித்துவமா சொல்லியிருக்காங்க” என்றார்….

    சூப்பர்…போலிக்கம்யூனிஸ்ட்டுகளை கிழிங்க… இவ்வளவு நாளும் வாயை மூடிக்கிட்டு இருந்துட்டு… இப்போ திடீர்னு இந்த அறிவாளிகளுக்கு அக்கறை வந்துடுச்சு…

    • நண்பர் பாலாவின் ஆதரவுக்கு நன்றி! அவருக்கு பதிலளிக்கமுடியாமல் ஓடிப்பதுங்கும் சி.பி.எம்.மின் ரமேஷ்பாபுக்களுக்கும் நன்றி!!

    • பாவம் பாலா. பாலாவைப் போன்றவர்களை மூளைச் சலவை செய்வதுதானே. ஏகலைவன் போன்றவர்களின் வேலை. மார்க்சிஸ்டுகள் பேசியதைக் கூட புரிந்துகொள்ள ஞானம் இல்லாதவர்களாகத் தான் பாலா போன்றவர்கள் இருக்கிறார்கள்.
      மார்க்சிஸ்டுகளை பார்த்து இவர் தூற்றுவது இது ஒன்றும் புதிதல்ல. மார்க்சிஸ்டுகள் எதைச் சொன்னாலும் குற்றம் கூறுவதே இவர்கள் வேலையாக வைத்துக் கொண்டிருக்கும் போது கிராமங்களில் எனது பாட்டி சொன்ன பழமொழிதான் ஞாபகம் வருகிறது.
      சூரியனைப் பார்த்து ————- குரைத்தால்—————க்குத்தான் வாய்வலிக்கும்.

  22. அப்படியே CPM கோயபல்ஸ் கும்பல் அசுரனில் பதியப்பட்டிருந்த பின்வரும் கருத்துக்களுக்கும் பதில் சொல்லட்டும்:

    சந்திப்பு என்கிற CPM பாசிஸ்டு விட்டுள்ள சரடுகள்.

    //இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இதனை இனஅழிப்பு என்று கோயபல்ஸ் போல பிரச்சாரம் செய்வதின் நோக்கம் என்ன?//

    சிங்கள அரசு இன வெறி அரசு அல்ல, அங்கே தமிழர்கள் மீது எந்த ஒரு அழித்தொழிப்பும் நடைபெறவில்லை, இன்னும் சொன்னால் அங்கே தமிழர்கள் போராடுவதே கொழுப்பெடுத்துதான் என்று சொல்ல வருகிறாரா இந்த இணைய கோயபல்ஸ்?

    மருத்துவமனையில் குண்டு வீசியுள்ளது, பாதுகாப்பு வளையம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் கொத்து கொத்தாக குண்டுகள் வீசியுள்ளது எல்லாம் ஏதோ வேற்று நாட்டவர்கள் மீது வீசப்பட்டது போல இந்த கோயபல்ஸ் நடிக்க முற்படும் போது புரட்சிகர அமைப்புகள் எதை செய்தாலும் எதிர்க்கும் பொறாமைதான் நம் கண்ணுக்கு தெரிகிறது. அய்யோ பாவம்.

    கிழக்கில் துரோகி கருணாவுக்கு பதவி கூட கொடுக்கப்பட்டுள்ளது இதன் அர்த்தம் இப்போதைக்கு வன்னி பகுதியை முடித்துவிட்டு பிறகு உங்களை கவனிக்கிறேன் என்பதுதான். சிங்கள இன வெறி ராணுவ தளபதி வெளிபப்டையாகவே சொல்லியுள்ளான், தமிழர்கள் இனிமெல் இரண்டாம் தர குடிமகன்களாக வாழ பழகிக் கொள்ளுங்கள் என்று.

    அது சரி, ஒரு நியயமான போரை நடத்தும் சிங்கள இன வெறி அரசை எதிர்த்து ஏன் சிங்கள ஜனநாயகவாதிகளே போராட/எழுத வேண்டும்? அதனை ஏன் ராஜபக்ஷெ அழித்தொழிக்க வேண்டும்?

    இதற்க்கெல்லாம் சந்திப்பிடம் பதில் இருக்காது. ஹிந்து ராம் வாந்தியெடுத்ததை திருப்பி எடுக்கும் இந்த ஜந்துவிடம் அதனை எதிர்பார்க்க முடியாது.

    ///
    தற்போது இலங்கை அரசின் இராணுவம்தான் புலிகளுக்கு எதிராக மோதல் தொடுத்து வருகிறது. அங்குள்ள சிங்கள மக்களுக்கும் – தமிழ் மக்களுக்கும் எந்தவிதமான மோதலும் நடைபெற்றதாக எந்தச் செய்தியும் வராத நிலையில் இப்படி கயிறு திரித்து தமிழ் இனவாத குளிரில் பிழைப்பு நடத்தலாமா? பெரும்பான்மை சிங்கள மக்கள் சோராம் போயிருந்தால் ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களும் அல்லவா தற்போது பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியிருக்கையில் அங்குள்ள யாழ்பாணத் தமிழர்கள் எல்லாம் ஏன் புலிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று போராட வேண்டும். உண்மையை பேசுங்கள் அய்யா!//

    மீண்டும் அதேதான் சிங்கள இனவெறி என்று ஒன்று இல்லைவேயில்லை என்று நம்மை நம்ப சொல்கிறார் இந்த கோயபல்ஸ். சிங்கள இனவெறியின் பின்னே மறைந்து கொண்டுதான் இலங்கையை கூட்டிக் கொடுக்கும் வேலையையே அங்குள்ள ஆளும் வர்க்கம் செய்து வருகிறது.

    அடுத்த CPMனுடைய சமீபத்திய நிலைப்பாடு(ஐநாவுக்கு போவோம் என்பதற்கு முன்பு வரை) இந்தியாவே தலையிடு என்பதுதான். உண்மையில் இந்தியா தலையிடாதே என்பதுதான் நியாயமான கோரிக்கையாக இருக்கும். அப்படி ஒரு கோரிக்கை வைத்த பொழுது அது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என்று குன்சாக ஒரு கதை விட்டார் இந்த இணைய கோயபல்ஸ்.

    இப்போது இந்தியா தலையிடுவது தெரிந்துவிட்டது. அதுவும் எதிர்மறையில் தமிழர்களை கொல்வதற்கு நேரடியாக ராணுவம் அனுப்பி தலையிடுவது தெரிந்துவிட்டது என்றவுடன் இப்போது சந்திப்பு குரலை மாற்றி பேசுகிறார், அதாவது இந்தியா உதவவில்லை என்றால் பாகிஸ்தான், அமெரிக்கா உதவுமாம்.

    போடாங்… இந்த பொழப்புக்கு…..

    marxistindia : news from the cpi(m): February 5, 2009

    Press Statement

    The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

    Safeguard Tamil Civilians in Sri Lanka

    The Polit Bureau of the CPI(M) expresses serious concern at the continuing reports of casualties among the Tamil civilian population who are trapped in the war zone in Mullaithivu district of Sri Lanka. The latest report from the United Nations representative confirmed that 52 people were killed and 80 wounded in the fighting in a day. There are incidents of two hospitals being shelled or bombed.

    There are over two lakh civilians who are trapped in the areas where the fighting is going on. Both the Sri Lankan government and the LTTE have to ensure that the civilians are given safe passage into areas where there are no hostilities or safe zones.

    The CPI(M) is also disappointed that the Sri Lankan government is not making any progress in working out a political settlement on the Tamil question, despite assurances.

    The government of India should seek the assistance of the United Nations to ensure the safety of the Tamil civilian population in the northern province. It should also step up its diplomatic and political efforts to ensure that the Sri Lankan government immediately take up the provision of genuine autonomy for the Tamil-speaking areas within a united Sri Lanka as promised during the visit of the External Affairs Minister to Colombo.

    eom

    +++++++++++++++++++++

    //The government of India should seek the assistance of the United Nations to ensure the safety of the Tamil civilian population in the northern province.//

    இத்த சொல்லிருக்குறது CPMனுடைய தலைமை கோயப்ல்ஸான காரத். இந்தியாதான் அங்க நேரடியாக யுத்தம் நடத்துவது அம்பலமாகியுள்ளதே பிறகு எப்படிடா அதே இந்தியா யுத்தத்தை நிறுத்த சொல்லி ஐநாவுல போய் முறையிடும்?

    இதெல்லாம் கரத்துக்கு தெரியாதது அல்ல. ஆனால் கொடுத்த கூலிக்கு எதாவது செய்யனுமில்லையா அதான் இப்படி.

    ++++++++++++++++

    CPMயை அம்பலப்படுத்தும் ஒரு அனானியின் பின்னூட்டம்:

    Anonymous said…

    hi cr. asuran … this is my response to Feb’2009’s DYFI “ilaingar muzakkam”s editorial

    முட்டாள்தனமான தலையங்கம் இது. வேலையில்லை சுகாதர வசதியில்லை என்பதற்காக நடப்பதல்ல ஈழ மக்களின் போராட்டம். உங்களுக்கு ஆயுத்ம்தான் பிரச்சினை என்றால் அதனை நேரடியாக சொல்லலாமே..ஏன் ஒளிவு மறைவு..

    தேசிய இனங்கள் எந்த சூழலில் பிரிந்து செல்லலாம் என தோழர் லெனின் சொன்னது இது. ”எந்த ஒரு தேசத்துக்கோ அல்லது மொழிக்கோ சிறப்பு சலுகை எதுவும் கிடையாது; ஒரு தேசிய சிறுபான்மையினரைப் பொறுத்தவரை மிகச் சிறு அளவுகூட ஒடுக்குமுறையோ அநீதியோ இருக்கக்கூடாது. இவைதாம் உழைக்கும் வர்க்க ஜனநாயகத்தின் கோட்பாடுகள் ஆகும். (லெ.தொ.நூ. 19.91, ஒப்: 243).
    வரப்போகிற உலகப் புரட்சியின் தீர்மானமான போர்களில் தேசிய விடுதலை என்பதை முதல் குறிக்கோளாகக் கொண்டுள்ள உலக மக்களில் பெரும்பான்மையோரது இயக்கம், முதலாளியத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் எதிரானதாகத் திரும்பும் என்பதும், நாம் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் மிகக் கூடுதலான புரட்சிகரப் பங்கை வகிக்கக் கூடும் என்பதும் தெளிவாகிவிட்டது. (லெ.தொ.நூ. 32. 482)

    தேசிய ஒடுக்குமுறையைத் துடைத்தெறிய, தன்னாட்சிப்பகுதிகளை உருவாக்குவது மிகவும் முக்கியம், அவை எவ்வளவு சிறியதாகவும் இருக்கலாம். இவை முற்றிலும் ஓரின மக்கள் தொகையினரைக் கொண்டவையாக இருக்க வேண்டும். நாடு முழுவதிலும் – ஏன் – உலகம் முழுவதிலுமே சிதறிக் கிடக்கின்ற அந்தந்த தேசிய இன மக்களை ஈர்க்கக்கூடிய பகுதிகளாக இருக்க வேண்டும். அவர்கள் எல்லாவகை உறவுகளையும் சுதந்திரமான இணைப்புகளையும் ஏற்படுத்தி கொள்ளக்கூடிய தன்னாட்சிப் பகுதிகளாக இருக்க வேண்டும். (லெ.தொ.நூ. 20.50)
    ஐடியலான முரணற்ற முழுமையான ஜனநாயக குடியரசு பற்றிய லெனின் (லெ.தொ.நூ. 19.427) சொன்னது ” இவ் அடிப்படை சட்டம், எல்லா தேசங்களுக்கும் மொழிகளுக்கும் முழுச் சமத்துவத்தை உத்திரவாதம் செய்ய வேண்டும்; எந்த ஒரு கட்டாய ஆட்சி மொழியையும் ஏற்காததாக இருக்க வேண்டும். சொந்த மொழிகள் அனைத்திலும் கல்விபுகட்டுகிற பள்ளிகளை மக்களுக்கு வழங்குகிற ஒன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு தேசத்துகக்கும் தனிச்சலுகை வழங்குவதையும், தேசிய சிறுபான்மையினரின் உரிமைக்ள் மீது கை வைப்பதையும் தடை செய்கின்ற சட்டமாக இருக்க வேண்டும்.”

    So லெனின் முட்டாள்தனமாக பேசி உள்ளாரா ? அல்லது நீங்களா ? என்பதை தெளிவு படுத்துங்கள்.

    தொன்மை சமூகம் நாடாள வேண்டும என்ற ஆவலில் தோன்றியதா ஈழமக்களின் போராட்டம்? வரலாறு பாமர மக்களுக்கு தெரிந்த அளவு கூடவா தங்களை மார்க்சியவாதிகள் என்ச் சொல்லிக் கொள்பவர்களுக்கு தெரியாது. அதிகாரத்தின் மீதான பற்று என நீங்கள் சொல்லியிருப்பது சுதந்திரத்திற்கான தாகத்தை. மேலே கண்ட லெனின் வாசகங்களை மீண்டும் படியுங்கள். நீங்கள் ஈழத்தை கேவலப்படுத்தவில்லை. மாறாக லெனினைக் கேவலப்படுத்தி உள்ளீர்கள்.
    /“இதற்கும் மேலே சென்று’’ இந்திய அரசு இலங்கையை வலியுறுத்துவது என்ற எதிர்பார்ப்பு ஒரு வித மேலாதிக்க உணர்வை வெளிப்படுத்துகிறது” என்பதை நாம் புரிந்து கொள்ள மறுக்கிறோம்./
    இது உண்மையான கூற்று நீங்கள் எதனையும் புரிந்து கொள்ள மறுப்பது என்ற ஜனநாயப்பண்பை எப்போதே பெற்று உள்ளீர்கள். பிராந்திய வல்லரசாக, அமெரிக்காவின் தெற்காசியப் பேட்டை ரவுடியாக இந்தியா உள்ளது என அறிவுஜீவிகள் விமர்சித்தால் பாஜக வைவிட உங்களுக்குதான் கோபம் வரும்போல தெரிகின்றது. என்ன செய்ய உங்களது கொள்கையை விட சொம்நாத் சட்டர்ஜி காட்டிய நாடாளுமன்ற விசுவாசம் அதற்கு வவாய்ப்பு கிடைக்காத தங்களைப் போன்றோருக்கு தேசாபிமானமாக வெளிப்படுகின்றது, தேச ஆளும் வர்க்கம் ஒரு பேட்டை ரவுடியாக இருந்தால் கூட.
    / தமிழகத்தில் நீண்ட காலமாக இருக்கிற சமூகக் கொடுமைகளில் ஒன்றாக தீக்குளிப்பும் நீடிக்கிறது. போராடி வெல்வது, வெல்வதற்காகப் போராடுவது, தமிழ் இலக்கிய சான்றாக இருக்கிறபோது, தன்னைத் தானே அழித்துக் கொல்வதும், அதை அரசியலாக்க முயற்சிப்பதும், இரைஞ்சுவதற்கு ஒப்பாகும்/தீக்குளிப்பது சமூகக் கொடுமைதான் அது சதி என்ற வடிவில் வந்தால். சக மனிதர்கள் மீது இன ஒழிப்பு நடக்கும்போது வாளாவிருக்கும் உங்களைப் போன்ற இளைஞர் இயக்கங்கள் இருக்கும் தேசத்தில் தீக்குளித்துதான் ஒரு இளைஞன் உங்களது கள்ள மவுனத்தை உடைக்க முடிகின்றதென்றால் அதற்காக முத்துக்குமரன் வெட்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. முத்துக்குமரன் இந்திய அரசுட்ன போராடவில்லை, கள்ள மவுனம் இன்றளவும் சாதிக்கும் போலி ஜனநாயக, கம்யூனிச வாதிகளின் மன்ச்சாட்சிக்கு எதிராகத்தான் போராடி உள்ளான். வரலாறு தெரிந்தால் வியத்நாம் புத்தபிக்குகள் அமெரிக்க ஏகாதிபத்திய போர்வெறிக்கு எதிராக அறுபதுகளில் நிகழ்த்திய தீக்குளிப்பு வடிவத்தை என்னவென்று சொல்வீர்கள்.

    அதெல்லாம் இருக்கட்டும். தமிழக இளைஞர்களை வாயைக் கட்டி போராட்டம், நாமம் போட்டு போராடுவது, கழுதையிடம் மனுக் கொடுத்து அதிகார வர்க்கத்தை எதிர்த்து போராடுவது, திருவோடு எடுத்து போராடுவது, கோவணம் கட்டிப் போராடுவது, ….இப்படி இரைஞ்சுகினற் வடிவங்களையெல்லாம் போராட்டம் என அழைத்துக் கொண்ட ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள்தான் தாங்கள் என்பது மறந்துவிட்டதா?
    / “தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழிப்போம்” என்றான் பாரதி. இதற்கு முரணாக ஒருவன் அழிந்து தமிழனை காக்கலாம் என்பது, பகுத்தறிவு அற்றது./
    சுய அறிவில்லாமல் அல்லது லாஜிக் இல்லாமல் எழுதப்பட்ட ஒரு வாக்கியம் பகுத்தறிவு பற்றிப் பேசுவது முரண்நகை. கடைசியாக பேச்சுவார்த்தை அதாங்க அரசியல் தீர்வுன்னு நீங்க சொல்ற கட்டப்பஞ்சாயத்துதான் வேண்டும் என்கிறீர்கள். நீங்கள் சமத்துவவாதிகள். இப்போரை ராஜபக்ஷ நிறுத்தவும் கோருவீர்கள் எனக் கருதுகிறேன். அது சரி… அதுக்கு யாரிடம் வலியுறுத்து போராடுவீர்கள். இந்தியாவிடமா? ஒரு நிமிசம். இந்தியாவும் டாங்கிகள், ரேடார்களோடு தனது ராணுவத்தையும் அனுப்பியுள்ளது. என்ன சொல்லி தப்பிக்க போறீங்க..

    ++++++++++++++++++++++++++++++++

    • தோழர் அசுரனின் வருகையும் பதிவும் அவர்களை கதிகலங்கடித்திருக்கும். மற்ற எல்லோரையும் விட அசுரனிடம் அவர்கள் பட்ட அடியை அவ்வளவு எளிதாக மறந்திருக்க மாட்டார்கள்.

      சி.பி.எம். கோமாளிகளால் பதிலளிக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் நமது கேள்விகளெல்லாம் இணைய வட்டங்களில் அவர்கள் செயல்படுமிடங்களிலெல்லாம் பதிவுகளாக, மின்னஞ்சல்களாக, ஆர்குட்டில் கூட சுழன்றடிக்கட்டும்.

  23. ஏகலைவனின் கட்டுரை ஒன்று

    http://yekalaivan.blogspot.com/2009/02/blog-post_08.html

    சி.பி.எம்.(மோடியிஸ்ட்) கும்பலின் கழிப்பறைக் காகிதம் – தீக்கதிர்!…. மற்றும் ’கோயபல்ஸ்’ செல்வப்பெருமாள்!!…

    அன்பார்ந்த தோழர்களே!

    ஈழப் போராட்டங்கள் குறித்தும், அங்கு சிங்கள பேரினவாத ராணுவத்துடன் கூட்டு சேர்ந்து இந்திய மேலாதிக்க அரசு நடத்திவரும் மாபெரும் தமிழின அழிப்பு பாசிச நடவடிக்கைகள் குறித்தும், விடுதலைப் போராட்டத்தில் மக்களுடன் ஒன்றுபடாமல், சிங்கள இனவெறி இராணுவத்தையொத்த பாசிச முகத்தோடு மக்களைப் பராமரித்து வரும் புலிகள் குறித்தும் தொடர்ந்து எதிர்த்துப் பேசவேண்டிய எழுதவேண்டிய, போராட வேண்டிய சூழ்நிலையில் நாம் இருந்து வருகிறேம். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டை எட்டப் போகும் இந்த இனவிடுதலைப் போரினை மார்க்சிய-லெனினியக் கண்ணோட்டத்தில், சரியான நிலைப்பாட்டில் அனுகுவதன் கடமையை உணர்ந்தே எமது தோழர்கள் இயங்கி வருகின்றனர்.

    இந்நிலையில், போலி கம்யூனிச கட்சியாக இருந்து, டாடாயிஸ்ட், ரவுடியிஸ்ட், என்கிற படிநிலைகளில் ‘முன்னேறி’, குஜராத் இந்து பாசிஸ்டுகள் மக்கள் மீது ஏவிய பாலியல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல் முறைகளைக் கையாண்டு, கடந்த 30 ஆண்டுகளாக ஓட்டுப்போட்டு ஆதரித்துவந்த மேற்குவங்கது மக்கள் மீது பிரயோகித்ததன் மூலம் சி.பி.எம்.(மோடியிஸ்ட்)ஆக பரினமித்த போலிகள், இப்போது, போலித்தனமேயல்லாத, கலப்பில்லாத, ’அக்மார்க்’ பாசிஸ்ட்டாக ‘உயர்ந்திருக்கிறார்கள்’.

    ஈழப் போராட்டம் குறித்த தமது கட்சியின் நிலைப்பாடு(!) ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த நிலைப்பாட்டைவிடக் கேவலமாக நாறிக்கொண்டிருக்கிறது; தமது கட்சியின் அணிகள் மத்தியில். கட்சியின் நேர்மையான அணிகள் பலர் சந்தடியில்லாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளதோடு, கட்சியில் செயல்படும் அணிகளும் கடுமையான அதிருப்தியோடு இருப்பதை எதிர்கொள்ளமுடியாத தலைமை, அவர்களுக்கு ‘வகுப்பு’கள் நடத்தி புரியவைக்கக் கோரியிருக்கிறதாம். ஜெயாமாமியுடன் இவர்கள் கொண்டுள்ள ‘மதச்சார்பற்ற’ கூட்டணி குறித்து பிறகு பேசலாம். ஈழ போராட்டம் பற்றி இவர்கள் பிதற்றி வருவது குறித்து இப்பதிவில் எனது கருத்துக்கள் சிலவற்றைப் பதியலாம் என்றிருக்கிறேன்.

    சி.பி.எம். கட்சியின் தீக்கதிர் என்கிற கழிவறைக் காகிதத்தையும், கூலிக்கு அவதூறு பரப்பும் கோயபல்சு செல்வப்பெருமாளின் சில பதிவுகளையும் எடுத்துக் கொண்டு சுருக்கமாக இவ்விடயத்தை அனுகலாம் என்று நினைக்கிறேன்.

    ஈழப் போராட்டத்தில் அப்பாவி மக்கள் யாரும் சாகடிக்கப்படவேயில்லை, இங்குள்ள புலிகளின் ஆதரவாளர்கள் சிலர்தான் மக்கள் சாகடிக்கப்படுவதாக பேசிவருகின்றனர், என்கிற ’ஹிந்து’ராமின் கருத்துக்களின் தமிழாக்கத்தைத்தான் தீக்கதிரின் பக்கங்களில் நாம் காணமுடிகிறது. ஈழ மக்கள் கேட்பாரில்லாமல் அழிந்து கொண்டிருக்கும்போது, இலங்கையில் நடக்கும் கிரிக்கெட் போட்டி குறித்து சிலாகித்து எழுதுகிறான் தீக்கதிரில். அதுவும் முதல் பக்கத்திலேயே “யுவராஜ் சிங் அபார சதம்….” என்று படத்துடன் செய்தி வெளியிடுகிறான். அதனைப் பார்க்கும்போதே வயிறு பற்றியெறிகிறது. அங்குள்ள அப்பாவித் தமிழ்மக்களின் மரணஓலம் இவன் காதுக்கு கேட்கவில்லையாம், ’கிரிக்கெட் ரசிகர்களின்’ விசில் சத்தத்தைச் சிலாகிக்கிறான்.

    கேட்டால், “கிரிக்கெட் ரசிகர்களும் கட்சிக்குள் வந்து கம்யூனிஸ்டாகலாம் அல்லவா?.. அதற்காகத்தான் கிரிக்கெட் செய்திகள்” என்று சொல்கிறான். கிரிக்கெட் ரசிகர்கள் கம்யூனிஸ்டாகலாம், தமிழர்கள் கம்யூனிஸ்டாவதற்கு அருகதையற்றவர்களா? இங்குள்ள உணர்வுள்ள மக்களின் மீது மலம் கழிப்பதைப் போல்தான் அவன் வெளியிடும் கிரிக்கெட், சினிமாச் செய்திகள் இருக்கின்றன. அதனால்தான் அப்பத்திரிக்கையினை கழிப்பறைக் காகிதம் என்று சொல்கிறேன்.

    அதேபோல சி.பி.எம்.மின் இணையக் கோமாளி ‘சந்திப்பு’ என்கிற கே.செல்வப்பெருமாள் வேறு, இப்போது எங்கெங்கேயோ சுற்றி மேய்ந்து லெனினிடத்தில் சரணடைந்து ’இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு’ என்கிற தலைப்பில் ஒரு பதிவினைப் பதிந்துள்ளான். அப்பதிவில் அவன் மேற்கோள் காட்டியுள்ள தோழர் லெனினின் வரிகளைத் தவிர மற்றவையத்தனையும் வடிகட்டிய பொய்களாகவும், பிதற்றலாகவுமே இருக்கின்றன. அவன் மேற்கோள் காட்டியுள்ள வரிகளிலிருந்தே தோழர் லெனின் சி.பி.எம்.மின் போலித் தேசிய நிலைப்பாட்டைத் துவைத்து வெளுக்கிறார்.

    ///////தேசங்களுக்குத் தன்னாட்சி உரிமை என்பதை எச்சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு பிரிந்து செல்வதற்கான தகுதி உண்டு என்பதுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. பிரிவினைப் பிரச்சனை ஒவ்வொன்றையும் சமூக வளர்ச்சி முழுவதன் நலன்கள், சோசலிசத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள் ஆகியவற்றுடன் அது பொருந்துகிறதா என்ற தகுதியை மட்டுமே கொண்டு சமூக ஜனநாயகக் கட்சி தீர்மானிக்க வேண்டும்.(லெ.தொ.நூ.19.429)
    பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை//// – இது அவன் குறிப்பிட்டுள்ள தோழர் லெனினின் மேற்கோள்களில் ஒன்று.

    ‘சோசலிசத்திற்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள்…’ என்பதைப் பற்றிப் பேசுவதற்கு இவர்களுக்குத் தகுதியிருக்கிறதா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் ஈழப் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள், சிங்கள பேரினவாத அரசிடம் பொங்கி வழிவதாக இவர்கள் உருவகப்படுத்துகின்ற கேவலமான நிலையில், லெனினின் மேற்கோள்கள் இவர்களது தேசிய நிலைப்பாட்டின் மீது காறி உமிழ்வதாகத்தானே இருக்கிறது!

    ’மாநில சுயாட்சி…’ என்கிற இவர்களது பசப்பல்வாதம் இந்தியாபோன்ற ‘ஜனநாயகம் பூத்துக்குலுங்கும்’ நாட்டிலேயே சாத்தியப்படவில்லை என்பதை நாங்கள் சொல்வது ஒருபுறமிருக்கட்டும், அதை இவர்களது கட்சியே சொல்லிவருகிறதே! மே.வங்கத்தில் இவர்கள் கோட்டைவிட்ட துறைகளின் முன்னேற்றமில்லாத நிலை குறித்து கேள்வி கேட்டால், நேரடியாக மத்திய அரசைக் காட்டுகிறார்களே, அது ஏன்? இவர்கள் போதிக்கும் ‘மாநிலத்திற்கான சுயாட்சி…’ அங்கே அம்மனமாக நிற்கிறது. இதே நிலைதான் இந்திய தேசியம் என்கிற பார்ப்பன-இந்துதேசியத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ள அனைத்து மாநிலத்தின் அவலநிலைகளாகக் காட்சியளிக்கின்றன. இவன் என்னடான்னா இலங்கை அரசிடமிருந்து மாநில சுயாட்சி பெற்றுக் கொள்ள பரிந்துரை செய்கிறான், இதனால்தான் இவனைக் கோமாளி என்று சொல்ல வேண்டியுள்ளது.

    தனி ஈழம் அல்லது ஒன்றுபட்ட இலங்கை என்கிற இருவேறு கருத்துக்களுக்கும் மத்தியில், தீர்வினை ஒடுக்கப்படுகின்ற மக்களின் சுயநிர்ணய உரிமையின் மூலமாகத்தான் எட்டமுடியும் என்று சொல்பவர்களெல்லோரும் திரிபுவாதிகளாம். சுயநிர்ணய உரிமை என்பது என்ன? ஒடுக்கப்படுகின்ற தமிழ் இனமக்கள், இத்தனையாண்டுகாலம் தம்மை ஒடுக்கியழித்த சிங்கள பேரினவாதத்தோடு இணைவதையோ அல்லது விலகுவதையோ தமது சொந்த அனுபவத்தின் மூலமாக முடிவு செய்வதுதான் சுயநிர்ணய உரிமையாகும். அது தனி ஈழக் கோரிக்கையினை ஆதரிக்கலாம், அல்லது எதிர்க்கலாம். அதேபோல் ஐக்கியத்தையும் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். சுய நிர்ணய உரிமை என்பது தனி ஈழத்தை மட்டுமே கோரிக்கையாகக் கொண்டது அல்லவேஅல்ல. இதில் நாம் தெளிவாக இருக்கிறோம்.

    சி.பி.எம்.செல்வப்பெருமாளோ, சுயநிர்ணய உரிமையை தனி ஈழக் கோரிக்கையோடு மட்டும் பொருத்தி தனது பிழைப்புவாத அரசியலுக்கு சுதிசேர்க்கத் துடிக்கிறான். மார்க்சிய ஆசான் லெனினது மேற்கோள்களை தமக்கேற்றவாறு சுருக்கி, வெட்டி எடுத்து மோசடியாக ஒட்டவைத்துக் கொள்கிறான். இவனைப் பொட்டிலறைவது போல தோழர் லெனின் தமது ‘தேசிய இனப்பிரச்சினை குறித்த விமர்சனக் குறிப்புகள்…’ எனும் நூலில் கீழ்கண்டவாறு சொல்கிறார்.

    “ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றூம் கருதுவது நமது உரிமையும், கடமையுமாகும்.” – லெனின். (தே.வி.பா.ச. – பக்கம்’ 245)

    ஒடுக்கும் இனத்திலிருக்கும் தொழிலாளர்களின் சர்வதேசிய உணர்வினை வளர்த்து ஒடுக்கப்படுகின்ற இனத்திற்காகப் போராடச் செய்கின்ற வகையிலா இவர்கள் வழிபடும் ஜே.வி.பி. இருந்துவருகிறது? எனவேதான், ஜே.வி.பி.யின் அடியொற்றி நடக்கும் இப்போலிகளை ஏகாதிபத்தியவாதிகள் என்றும் கயவர்கள் என்றும் போலிகள் என்றும் நாம் உறுதியாகக் கூறுகிறோம். தோழர் லெனின் தான் நம்மை அவ்வாறு கருதச் சொல்கிறார்.

    (பதிவின் நீளம் கருதி தோழர் இரயாகரன் அவர்களின் ‘தேசியம் எப்பொழுதும், எங்கும் முதலாளித்துவ கோரிக்கைய ஒழிய, பாட்டாளி வர்க்க கோரிக்கையல்ல…’ என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்ட பல்வேறு குறிப்புகளை இங்கே பதிவதைத் தவிர்க்கிறேன். அதேபோல தோழர் லெனின் சி.பி.எம். என்கிற திரிபுவாத கும்பலை அம்பலப்படுத்துவதற்காகவே எழுதிய குறிப்புகள் பலவற்றையும் தவிர்க்கிறேன்.)

    பொதுவாக இனப்போராட்டங்கள் குறித்து இந்த போலிக்கும்பல் எடுக்கும் நிலைப்பாடுகள் பாட்டாளிவர்க்க நிலைப்பாடுகளாக இல்லாது பார்ப்பனவாத நிலைப்பாடுகளாக வெளிப்பட்டு அம்பலமாகிவிடுகிறது. பார்ப்பன-இந்து தேசியத்தினை இந்திய தேசமென்றும் தேசத்தின் புனிதமென்றும் ஏனைய பார்ப்பனிய-முதலாளித்துவ ’தேசிய’க் கட்சிகளான காங்கிரசு, பாஜக வோடு ஒத்த குரலெழுப்புவதில் போலிகளின் பங்கு கனிசமானது. காஷ்மீர் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் இப்போலிக் கும்பல் கொண்டிருக்கும் நிலைப்பாடு பார்ப்பன-இந்துவெறி பாசிஸ்டுகளின் நிலைப்பாட்டோடு ஒன்றிப்போவதுதான் இதற்கான நேரடி சாட்சியாக இருக்கிறது. போதாக்குறைக்கு, விடுதலைக்காகப் போராடும் காஷ்மீர் மக்களை “பிரிவினைவாதிகள்…” என்று முத்திரைகுத்தி செய்திவெளியிடுகின்றன, இவர்களின் ஏடுகள்.

    எனவே, ஈழப் போராட்டமும் இவர்களது பார்ப்பன-இந்து தேசியக் கண்ணோட்டத்தில்தான் விமர்சிக்கப்படுகிறதேயொழிய அதிலொன்றும் மார்க்சியக் கண்ணோட்டமுமில்லை, வேறெந்த மண்ணாங்கட்டியுமில்லை. இந்த பார்ப்பன அரிப்புதான் இலங்கையின் ஜே.வி.பி.யோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டே இல்லையென்று மோசடியாக மறுத்தும் வருகிறது. இதனை அம்பலப்படுத்தி போலிகளை நேர்மையானவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கும் அணிகளின் மத்தியில் கேள்வியெழுப்ப வேண்டும்.

    கடைசியாக, முத்துக்குமாரின் மரணம் குறித்த இவர்களது மதிப்பீடுகள், அவரது தீக்குளிப்பை சாதாரண தற்கொலையாக்கி அவரது தியாகத்தைக் கொச்சைப்படுத்துகிறது. தீக்குளிப்பதற்கு முன் அவர் வெளியிட்ட அந்த அற்புதமான மரணசாசனத்தை பெயரளவுக்கேனும் பரிசீலிக்கத் தயங்கி, அதனை மொத்தமாக புறக்கனிக்கிறது, இக்கும்பல். முத்துக்குமார் தன்னுடலை எரிப்பதற்கு வைத்த தீ, கண்டும் காணாதமாதிரியிருக்கும் இச்சமூகத்தின் அமைதியின் மேல் வைக்கப்பட்ட தீயாக இருப்பதால் பதறுகிறது இப்பாசிசக் கூட்டம். அவர் தன் மரணத்தின் மூலமாக சொல்கின்ற செய்தியினை உயர்த்திப்பிடிப்பவர்களை ‘பிணவாத அரசியல்’ நடத்துபவர்கள் என்று தூற்றுகிறது.

    யார் பிணவாத அரசியல் நடத்துபவர்கள்? ஒரு இளைஞன், எந்தவிதமான தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அல்லாமல், சமூகத்தின் இழிநிலையைப் போக்க தன் உடலைக் கொளுத்திக் கொண்ட தீயை எடுத்து, அவனது புரட்சிகர விருப்பத்தினை ஏற்று, அத்தீயினை சமூக அற்பத்தனத்தின் மீது வைப்பது பிணவாத அரசியல் என்றால்; 44பேரை குழந்தைகள், பெண்கள் என்று தீயிலிட்டுப் பொசுக்கிய வெண்மணியினை வைத்து நீங்கள் நடத்துவது என்ன புரட்சிகர அரசியலா? இல்லை, அதுதான் பிணவாத அரசியல். வெண்மணியின் தாக்கத்தை நீங்கள் ஓட்டுகளாக்கிப் பொறுக்கியது அன்றி, அதனைக் கொண்டு வேறு ஏதேனும் சிறு துரும்பையேனும் இதுவரை அசைத்திருக்கிறீர்களா?

    கூலி உயர்வுக்காக நிலப்பிரபுவுடன் களம் கண்ட வெண்மணியில் நீங்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டை, கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், அப்போராட்டத்தினையொத்த போராட்டமாக வெடித்த நக்சல்பரியில் உமது கட்சி ஏன் மாறுபட்டு நின்றது? ஜோதிபாசு தன்னுடைய போலிசு துறையினைக் கொண்டு தமது சொந்த அணிகளையே சுட்டுத்தள்ள உத்தரவிட்டது எப்படி நேர்ந்தது? அதனால்தான் சொல்கிறேன், வெண்மணியில் நீங்கள் செய்தது பிணவாத அரசியல். அதனால்தான், வெண்மணிக் குற்றவாளியான கோபாலகிருஷ்ண நாயுடுவை போற்றிப் பாதுகாத்த தி.மு.க.வோடு அடுத்த தேர்தலிலேயே கூட்டணி வைத்து சோரம்போக முடிந்தது உங்களால்.

    44 பேரை பலிகொடுத்த உழைக்கும் மக்கள், கருக்கறிவாள், வேல்கம்புகளுடன் லட்சக்கணக்கில் திரண்டு நின்றபோது, சட்டப்போராட்டத்தின் மூலமாகப் பார்த்துக்கொள்ளலாம் என்று பசப்பல்வாதம் பேசி அவர்களின் உணர்வுகளை மழுங்கடித்தீர்கள். ஆனால், நக்சல்பரியில் விதைக்கப்பட்ட தியாகிகளின் உடல்களிலிருந்து எழுந்த புரட்சித்தீ இன்றுவரை, (உங்கள் மொழியில் சொல்வதானால்) சுக்குநூறாகப் பிளவுண்டிருந்தாலும் ஆளூம்வர்க்கத்தை குலைநடுங்கச் செய்துகொண்டிருக்கிறது. எதிர்கால சமூகமாற்றத்திற்கும் நம்பிக்கையூட்டக்கூடியவர்களாக நக்சல்பரிகளே இருந்துவருகின்றனர்.

    எனவே, ஓட்டுப்பொறுக்கி பிழைப்பதற்காக நீங்கள் நடத்திக் கொண்டிருக்கும் பிணவாத அரசியலை ஒருபோதும் மற்றவ்ர்கள்மீது நீங்கள் சுமத்த முடியாது. நீங்கள் மற்றவர்களின் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கள், உங்களையே மீண்டும் மீண்டும் கேள்விக்குட்படுத்தி அம்பலப்படுத்துகின்றன.

    ஈழப் போராட்டத்தில் ஹிந்து ராம் என்பவனோடு நீங்கள் வைத்திருக்கும் கருத்தொற்றுமையும், பார்ப்பன-இந்து தேசியப் பார்வையும் உங்கள் கட்சியின் சீரழிவிற்கு பெரும் பங்காற்றியிருக்கிறது. இதே சமகாலத்தில், ஜெயாவுடன் நீங்கள் கொண்டிருக்கும் கூட்டணியும் அதற்கு கூடுதல் பங்குவகிப்பதன் மூலமாக உங்களின் இருத்தலைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. இன்னும் மிச்சமிருப்பது கொடியும் கோவணமும்தான். அதனை உருவி எறிகிற வேலைகளை எஞ்சியிருக்கும் நேர்மையான அணிகள் செய்வார்கள்.

    புரட்சிகர வணக்கங்களுடன்!

    ஏகலைவன்.

    தொடர்புடைய பதிவுகள்…..

    1. சி.பி.எம். கோயபல்ஸ் பீரோவின் பித்தலாட்ட நிலைப்பாடும், டவுசர் கழன்ற சந்திப்பும்

    2. இந்திய அரசே தலையிடாதே! சிபிஎம் பாசிஸ்ட்டே கோயபல்ஸ் தனத்தை நிறுத்து!!

    3. ஈழ மக்கள் மீது மலம் கழிக்கும் சந்திப்பு: இந்திய மேலாதிக்கத்துக்கு கம்பளம் விரிக்கும் போலி கம்யூனிஸ்டுகள்…

    4. ஈழம்: இந்தியா முதுகில் குத்துவது ஏன்?

    5. ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!

    6. மனித அவலத்தை நிறுத்த, யுத்த நிறுத்தம் ஒரு தீர்வா!? அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா?
    Posted by ஏகலைவன் at 2:40 PM

    • //ஒடுக்கப்படுகின்ற தமிழ் இனமக்கள், இத்தனையாண்டுகாலம் தம்மை ஒடுக்கியழித்த சிங்கள பேரினவாதத்தோடு இணைவதையோ அல்லது விலகுவதையோ தமது சொந்த அனுபவத்தின் மூலமாக முடிவு செய்வதுதான் சுயநிர்ணய உரிமையாகும். அது தனி ஈழக் கோரிக்கையினை ஆதரிக்கலாம், அல்லது எதிர்க்கலாம். அதேபோல் ஐக்கியத்தையும் ஆதரிக்கலாம் அல்லது எதிர்க்கலாம். சுய நிர்ணய உரிமை என்பது தனி ஈழத்தை மட்டுமே கோரிக்கையாகக் கொண்டது அல்லவேஅல்ல. //

      இந்த கட்டுரையையும் படித்துப்பாருங்கள்.

      http://articles.seeman.in/2009/07/04/separate-state-for-tamils-in-srilanka-a-right–francis-boyle-bruce-fein.aspx

  24. ஆகா இப்பத்தானே கம்யுனிஸ்டு கும்பல்களின் பித்தலாட்டங்களும், கோமாளித்தனங்களும் வெளி வருகின்றன.

    இப்படியே மாற்றி மாற்றி கிழியுங்க. உங்க கேப்மாரித்தனமேல்லாம் மக்களுக்கு விளங்கும்.

    செத்து துர்நாற்றமேடுத்த புதைகுழிக்கு போன ஒரு போலி தத்துவத்தை வைத்து பிழைப்பு நடத்தும் காட்டு கும்பல்களின் முகமூடிகள் கிழியட்டும்.

    பொரட்சி ஓங்குக.. ஆகா இப்பத்தானே கம்யுனிஸ்டு கும்பல்களின் பித்தலாட்டங்களும், கோமாளித்தனங்களும் வெளி வருகின்றன.

    இப்படியே மாற்றி மாற்றி கிழியுங்க. உங்க கேப்மாரித்தனமேல்லாம் மக்களுக்கு விளங்கும்.

    செத்து துர்நாற்றமேடுத்த புதைகுழிக்கு போன ஒரு போலி தத்துவத்தை வைத்து பிழைப்பு நடத்தும் காட்டு கும்பல்களின் முகமூடிகள் கிழியட்டும்.

    பொரட்சி ஓங்குக..

  25. ஆகா இப்பத்தானே கம்யுனிஸ்டு கும்பல்களின் பித்தலாட்டங்களும், கோமாளித்தனங்களும் வெளி வருகின்றன.

    இப்படியே மாற்றி மாற்றி கிழியுங்க. உங்க கேப்மாரித்தனமேல்லாம் மக்களுக்கு விளங்கும்.

    செத்து துர்நாற்றமேடுத்த புதைகுழிக்கு போன ஒரு போலி தத்துவத்தை வைத்து பிழைப்பு நடத்தும் காட்டு கும்பல்களின் முகமூடிகள் கிழியட்டும்.

    பொரட்சி ஓங்குக..

  26. ISO 9000:2009 COMMUNIST PARTY COMRDES….. YOU HAVE NO LOCUS STANDI TO SPEAK ABOUT CPIM. BECAUSE YOU HAVE NOT A LEGITMATE COMMUNIST PARTY.. FIRST YOU DECLARED YOUR PARTY PROGRAM AND PLAN BEFORE THE PEOPLE OF INDIA, THEREAFTER YOU SAID CPIM IS DUBLICATE.. TILL THE DATE YOU HAVE NOT A PROGRAM, THEN HOW YOU QUESTIONED CPIM? NONE OF YOU HAVE NO ABOUT YOUR LEADER CREDINTIALS… YOUR ONLY POLITICS TO CRITISISE CPIM NOT ANY CAPITALIST… YOU GO TO TOLD THE PEOPLE OF INDIA, THAT THE PARLIMENTARY DEMOCRACY IS EXISTING… THE PEOPLE SURELY SAID YOU ALL ARE MAD…

  27. ஈழம்; உள்ளும் புறமும் எழும் குரல்கள்

    உ. ரா. வரதராசன்

    `ஈழப்போர் 4’ஞு முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு கடந்த மே 19 அன்று அறிவித்து விட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த செய்திகளும் மறுப்புகளும் ஊடகங்களிலும் இணையதளப் பதிவுகளிலும் உலா வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கி நடத்துவார் என்று சுட்டிக்காட்டப்பட்ட செல்வராசா பத்மநாதன் கைது செய்யப்பட்டு கொழும்புவிற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இது விடுதலைப்புலிகள் இயக்கம் தொடர்ச்சியான பின்னடைவுகளைச் சந்தித்து வந்துள்ளதை எடுத்துக் காட்டுகிறது.

    கைது செய்யப்படுவதற்கு முன்பாக, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சர்வதேசப்பிரிவின் இணையதளக் கட்டுரைகளில் அந்த இயக்கத்தின் அடுத்த கட்டப் பயணம் பற்றிய விளக்கங்களை பத்மநாதன் அளித்திருந்தார். ஞுவிடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதங்களை மவுனிக்கச்செய்து அரசியல் இராஐதந்திரப் பாதையைப்பின்பற்றஞு முடிவு செய்துள்ளது என்பது அதன் தலைவர் முள்ளிவாய்க்காலில் வைத்து எடுத்த தீர்மானம் என்று அழுத்தமாகக் கூறும் பத்மநாதன் இரண்டு முக்கிய சர்வதேச நிலைமைகளை கவனப்படுத்தியுள்ளார்:

    “1. தென்னாசியாவினதும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினதும் புவிசார் அரசியல் நலன்கள் அடிப்படையில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற வல்லாண்மைச் சக்திகள் இலங்கைத் தீவினை ஒரே நாடாகப் பேணியவாறு தமது நலன்களை அடைந்து கொள்வதே உசிதமானதாகக் கருதியமை. இது தமிழீழம் என்ற நமது இலட்சியத்திற்கு எதிரான உலக நிலைப்பாட்டுக்கு வழிகோலியது.

    2. இலங்கைத் தீவில் ஆயுதப்போராட்டம் ஏதோ ஒரு வழியில் முடிவுக்கு வரவேண்டும் என்பதிலும் அனைத்துலகம் ஒரே கருத்துக்கு வந்திருந்தது. இதனால் தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்போராட்டத்திற்கும் உலக ஆதரவினைத் திரட்டுவது சாத்திமற்றதாகவிருந்தது.”

    இந்தப்பின்புலத்தில், ஞுதமிழீழ விடுதலைப் பொராட்டம்ஞு எதிர்கொண்ட பெரும் பின்னடைவைக் கருத்தில் கொண்டு அரசியல். இராஐதந்திர வழிமுறையே சாத்தியமானதும் வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப புலிகள் இயக்கம் வந்தது. ஞு”இந்த அரசியல் இராஐதந்திரப் பாதையை முன்னெடுக்கும் அதே வேளையில் ஆயுதப் போராட்டத்தினையும் சமநேரத்தில் முன்னெடுப்பது முரணான இருதிசைகளில் பயணிப்பதற்கு ஒத்ததாகவிருக்கின்றது. இது எமது மக்களின் நலன்களை மையப்படுத்தும் விடுதலைப் போரினை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்வதற்கு பலவித நடைமுறைத் தடைகளை ஏற்படுத்தும்” என்றும் பத்மநாதன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

    ஐரோப்பிய யூனியனில் செயல்படும் உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு ஒன்றை bஐர்மனியில் நடத்தியது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் கூர்ந்து கவனிக்கத் தக்கவையாகும்.

    வன்னியிலிருந்து இராணுவ நடவடிக்கையினால் வெளியேற்றப்பட்டு முட்கம்பி வேலிகளுக்குள் இராணுவம் சுற்றிவளைத்துள்ள முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அவர்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களில் மீள் குடியமர்த்தப்படுவதற்குரிய நடவடிக்கையை இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும்; இலங்கை அரசிடம் சரண் அடைந்ததாகக் கூறப்படும் சுமார் பத்தாயிரம் இளைஞர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்கி அவர்களின் புனர்வாழ்வுக்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்; முகாம்களில் உள்ளவர்களில் குற்றவாளிகளென இலங்கை அரசு அடையாளம் காட்டுபவர்களை நீதி விசாரணைக்கு உட்படுத்தவேண்டும்; முகாம்களில் அடைக்கப்பட்டவர்கள் குறித்த முழு விபரங்களை மனித உரிமைகள் நிறுவனங்களுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இலங்கை அரசு அறிவிக்க வேண்டும்; சர்வதேச உதவிகள் அந்த மக்ககளின் புனர்வாழ்விற்காகப் பயன்படுதத்தப்பட வேண்டும்; மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவி வழங்கிய நான்கு தமிழ் மருத்துவர்களையும் முல்லை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரையும் தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும்; ஏற்கனவே அகதிகளாக உள்ள முஸ்லிம் தமிழ் மக்களளையும் சமகாலத்தில் தத்தம் இடங்களில் மீள் குடியேற்ற வேண்டும்; என்ற தீர்மானங்களை உலகின் பல நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் ஏற்று ஒற்றுமையாகச் செயற்படுவதற்கு ஒத்துழைக்குமாறு அந்த இயக்கம் கேட்டுக் கொண்டது.

    விடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்திலும் வவுனியாவிலும் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்றது. இலங்கை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை வரையறுத்து வருவதாகவும் அதனை விரையில் வெளியிடுவதாகவும் தெரிவித்த அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள், `தனித்துவமான சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ் மக்களுக்கு அனைத்து அதிகாரங்களுடனான முழுமையான சுயாட்சி தேவை. காணி, பாதுகாப்பு, விவசாயம், கைத்தொழில் என முக்கிய அதிகாரங்கள் எங்களுடைய கையில் இருக்க வேண்டும்’, என்ற வகையில் இந்த திட்டம் அமையும் என்று கோடிட்டுக் காட்டினர். கூடவே `இலங்கை இனப்பிரச்சினைக்கு இந்தியாவுடன் இணைந்தே தீர்வைக் காண முடியும்’ என்றும், ` இலங்கை அரசுடனும் அனைத்துலக சமூகத்துடனும் பேசுவதற்குத் தயாராக உள்ளோம்’ என்றும் அவர்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

    இலங்கைக்கு வெளியே நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பதற்கான ஆலோசனைக்குழு ஒன்று இயங்கி வருகிறது. நாடு கடந்த தமிழீழ அரசின் கட்டமைப்பினையும் அதனது ஆட்சிக்குழுவினைத் தோற்றுவித்து நடைமுறைப்படுத்தும் பாதையையும் ஆராய்ந்துகொண்டிருக்கும் இக்குழு அதே வேளையில் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய அபிலாசைகளை ஜனநாயக, அமைதிவழிகளில் வென்றெடுப்பதிலும் தன் கவனத்தைச் செலுத்துமென உறுதி கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இந்த அறிவிப்புகள் எல்லாம் அரசியல் ராஜதந்திர தீர்வு என்பதை முன்னிலைப்படுத்தி உள்ள போதிலும், இவற்றில் தனித்தமிழ் ஈழம் என்ற கோரிக்கை கைவிடப்படவில்லை என்பதை நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.. ஈழத்தமிழர் தேசம், தமிழர் தேசியம், தாயகம், தனித்துவமான சுயநிர்ணயம் என்ற வாசகங்களில் இது உள்ளடக்கப்பட்டிருக்கிறது. இது புரிந்து கொள்ளக்கூடியதே. தமிழ் ஈழம் என்ற கோட்பாடு இந்த இயக்கங்களின் இருப்புக்கு அடிப்படையானது. எனினும் அது நீண்ட கால லட்சியம் என்ற அளவில் மட்டும் தொலை தூரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. உடனடிக் கோரிக்கையாக அரசியல் தீர்வு முன்வந்துள்ளது என்பது ஒரு நல்ல அம்சம்.

    ஆனால் இலங்கையில் இருந்து வெளியாகும் தகவல்கள் அங்குள்ள தமிழ்மக்களின் எதிர்காலம் குறித்த ஆழமான கவலைகளை எழுப்புகின்றன.
    வவுனியாவில் உள்ள முகாம்களில் 60 வயதுக்கும் அதிகமான முதியவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களை முன்னுரிமை அடிப்படையில் சொந்தக் குடியிருப்புகளுக்குச் செல்ல அனுமதிப்பதாகக் கூறும் இலங்கை அரசு அவர்களின் குடும்பத்தாரை மட்டும் முகாம்களிலேயே நீடிக்க வலியுறுத்துகிறது. இதன் காரணமாக இத்தகைய முதியவர்களில் 400 பேர் மட்டுமே முகாம்களை விட்டு வெளியேற மற்றவர்கள் குடும்பத்தோடு முகாம்களிலேயே அல்லல் படுகின்றனர்.

    இதே முகாம்களில் குடும்பத்தினர் அனைவரையும் இழந்து அனாதைகளாக அடைபட்டுக் கிடக்கும் ஆதரவற்ற சிறுவர் சிறுமியர்களைப் பராமரிக்க முன்வரும் தன்னார்வ அமைப்புகளுக்கும் இலங்கை அரசு அனுமதி அளிக்க மறுக்கிறது. மாறாக. 13 வயது முதல் 18 வயது வரையிலான சிறார்களைத் தனியாக பிரித்து ஒரு புனர்வாழ்வு முகாம் அமைக்க இலங்கை அரசு முற்பட்டுள்ளது. இது அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பில் வைப்பதற்கான ஏற்பாடாகத் தெரிகிறது.

    180 நாட்களுக்குள் முகாம்களில் உள்ளவர்களை மீள் குடியமர்த்துவோம் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த பணி கண்ணிவெடிகளை அகற்றுவது என்ற பெயரால் தாமதப்படுத்தப்படுகிறது. இலங்கை அதிபரின் சகோதரரும் அவரது அரசியல் ஆலோசகருமான பாசில் ராஜபக்சே, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஐரோப்பாவை உதாரணங்களாகச் சுட்டிக்காட்டி அங்கெல்லாம் உள்நாட்டிலேயே அகதிகளாக இருந்தவர்களைக் குடியமர்த்துவதற்குப் பல பத்தாண்டுகளும், ஒரு நூற்றாண்டு காலம் கூடப் பிடித்திருக்கிறது என்று பேசியுள்ளது இந்த இழுத்தடிப்பை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது.

    இலங்கையில் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான அரசுப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் கருணாரத்ன எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்: “போரினால் பாதிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட இலட்சக்கணக்கிலான மக்கள் இன்று அகதி முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களைச் சென்று பார்வையிடவும் அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் எமக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது. இங்கு ஊடகவியலாளர்கள் கூட அனுமதிக்கப்படுவதில்லை. முட்கம்பிகளால் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் கம்பிகளுக்கு அப்பால் தாயும் மறுபக்கத்தில் பிள்ளையும் என்ற நிலைமையே காணப்படுகின்றது.தொடர்ந்தும் அந்த மக்களின் உரிமைகள், சுதந்திரம், சகவாழ்வு மறுக்கப்படுவதாக இருந்தால் முகாம்களுக்குள்ளேயே அவர்கள் சத்தியாக்கிரகம் மற்றும் ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார் அவர். சிங்கள இனவாதத்தின் குரலாகச் சித்தரிக்கப்படுகிற ஜேவிபியின் நடாளுமன்ற உறுப்பினரே இவ்வாறு பேச நேரிட்டுள்ளது என்பது அங்குள்ள சற்றொப்ப மூன்று லட்சம் தமிழ் அகதிகளின் மனிதப் பேரவலத்திற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

    சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிறுத்தப்பட்டுள்ள இந்தத் தமிழ் மக்களின் துயர்துடைப்புப் பணியும் அவர்கள் முகாம்களிலிருந்து சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்பக் கொண்டு செல்லப்பட்டுக் குடியமர்த்தப்படுவதும் இலங்கை அரசின் முன்னுள்ள அவரச அவசியக் கடமை. கடுமையான சர்வதேச நிர்ப்பந்தம் இருந்தால் ஒழிய ராஜபக்சே அரசு இதில் வெளிப்படையாகவும் உள்ளார்ந்த அக்கறையுடனும் செயல்படும் என்றும் எதிர்பார்க்க வாய்ப்பில்லை.

    இலங்கைத் தமிழர் பிரச்சனையில் “13 வது அரசியல் சட்டத் திருத்தத்திற்கும் கூடுதலாக” அரசியல் தீர்வு காண இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறி வருகிறது. ஆனால், தமிழர் வாழும் பகுதிகளில் தனி மாநிலம் என்பதையோ, சுயாட்சி அதிகாரம் என்பதையோ ஏற்க முடியாது என்றும், வடக்கு கிழக்கு பகுதிகளில் சிங்களர்கள் குடியேறுவதைத் தடுக்க இயலாது என்றும் இலங்கை ஆட்சியாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்த செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இவை இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கான அரசியல் தீர்வை நோக்கி ராஜபக்சே அரசு அடியெடுத்து வைக்குமா என்ற ஐயப்பாட்டை எழுப்புகின்றன. இந்தப் பின்னனியில் இலங்கைக்கு உள்ளும் புறமுமாக அரசியல் தீர்வை வலியுறுத்தி எழுந்துள்ள குரல்களும் இது குறித்து இந்திய அரசின் தலையீடு குறித்த எதிர்பார்ப்புகளும் இந்திய அரசு தன் செயல்பாட்டில் வேகத்தையும் விவேகத்தையும் காட்ட வேண்டியதை வலியுறுத்துவனவாக உள்ளன. மன்மோகன் சிங் அரசு இத்திசையில் இனியேனும் பயணிக்குமா?

    • //இலங்கைத் தமிழர் பிரச்சனையில் “13 வது அரசியல் சட்டத் திருத்தத்திற்கும் கூடுதலாக” அரசியல் தீர்வு காண இலங்கை அரசு உறுதியளித்துள்ளதாக இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறி வருகிறது.//

      ஈழத்தமிழர்களுக்கு ஏதாவது தீர்வு என்றவுடன் எல்லோரும் 13 வது திருத்தச்சட்டம் என்று ஆரம்பித்து விடுகிறார்கள். இந்த சட்டதிருத்தத்தின் மூலம் வடக்கும் கிழக்கும் (தமிழர் தாயகம்) இணைந்து அது எங்களின் சுயநிர்ணய ஆட்சிக்கு வழியமைக்குமானால் எங்களுக்கும் சந்தோசம் தான். ஆனால் எந்த அதிகாரப்பகிர்வும் இல்லாத பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை இந்தியா வேண்டுமானால் விரும்பலாம். காரணம், ராஜிவ்காந்தியின் ஒப்பந்தத்தை அது மீண்டும் புதுப்பித்தாலும் புதுப்பிக்கும் என்ற எண்ணமாக இருக்கலாம்.

      சாத்வீக முறையில் போராடி, ஈழத்தமிழர்களால் தேர்தல் என்ற சட்டரீதியான வழிமுறை மூலம் 1977 ஆண்டு முன்வைக்கப்பட்டதுதான் “வட்டுக்கோட்டை தீர்மானம்”. அதாவது சுயநிர்ணய ஆட்சிதான் தீர்வு (External Self Determination) என்ற TULF கட்சியின் தேர்தல் பிரகடனம் தமிழர்களால் அங்கீகரிக்கப்பட்டது. இதைப் பொறுக்காத சிங்கள ஆட்சியாளர்கள் கொண்டுவந்தது தான் 6 வது திருத்தச்சட்டம். இந்த சட்டத்தின் கீழ் யாரும் இலங்கையிலிருந்து, குறிப்பாக தமிழர்கள் பிரிந்து செல்வதையே பேசக்கூடாது என்று ஆக்கிவிட்டார்கள். இந்த சட்டத்த்தின் மூலம் தான் நாங்கள் பிழையேதும் செய்யாமலேயே தண்டிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

      ஆகவே, யாரவது எங்களுக்கு சுயநிர்ணய ஆட்சி கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், பேசுபவர்கள் தயவுசெய்து 6 வது திருத்தச்சட்டத்தை பற்றியும் பேசுங்கள். 13 வது சட்டத்தை திருத்துவதால் மட்டும் ஈழத்தமிழனுக்கு எதுவும் விடிந்துவிடாது.

      6 வது, 13 வது???? எந்த சட்டத்தையும் சிங்கள ஆட்சியாளர்கள் திருத்தப்போவதில்லை.

  28. வேசம் போடாதீங்கடா போலி கம்யூனிஸ்டுகளே உண்மையான காங்கிரஸ்காரர்களே,
    தினமணி பார்ப்பான் வைத்திக்கு ஜால்ரா தட்டும் விதமாக நோகாமல் எழுதும் உ.ரா வரதராஜனையெல்லாம் ஒரு நல்ல‌ மாமா என்று தான் சொல்ல முடியும்.

  29. POLI COMMUNIST என்ற பெயரில் இங்கே பின்னூட்டமிட்டுள்ள சி.பி.எம். நண்பருக்கு வணக்கம்.

    கட்சித் திட்டத்தைப் பற்றி விவாதிப்பதற்கு முன்னால் திட்டத்தின் அடிப்படையில் இயங்குகிற ஒரு கட்சியில் நீங்கள் இருந்து கொண்டு பேசுங்கள், நாமும் பேசத்தயாராகவே இருக்கிறோம். திட்டம் என்பது குப்பைக்காகிதம் அல்ல. ஒருவேளை உங்கள் கட்சி அதன் திட்டத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது என்றால், டாடாவுக்காகவும் சலீமுக்காகவும் இன்னபிற ஏகாதிபத்திய நிறுவனங்களுக்காகவும் சாதாரண உழைக்கும் மக்களைச் சுட்டுக் கொன்றுவிட்டு நிலத்தைத் தாரை வார்க்கலாம் என்று உங்கள் கட்சி ஏற்கெனவே திட்டமிட்டுள்ளதா என்பதையும் கொஞ்சம் கூடுதலாகத் தெரியப்படுத்தவும்.

    முதலாளித்துவத்தைத் திட்டுவதற்கு பதிலாக சி.பி.எம்.மை விமர்சிக்கிறார்கள் என்று பாய்ந்து பிடுங்குகிறீர்கள். இரண்டும் ஒன்றுதானே. லால்காரில் சி.பி.எம். யார் பக்கம் நின்றது? முதலாளிகளின் பக்கமா ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்களின் பக்கமா? ஏகாதிபத்தியத்திற்கு சேவையாற்றுவதற்கு ஏனைய ஓட்டுப் பொறுக்கிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு கைக்கூலித்தனம் செய்யும் உங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தனிமைப் படுத்துதல் என்பது முதலாளித்துவ சுரண்டல்வாதத்தை ஒழிப்பதற்கான ஒரு வழிமுறைதான்.

    பினராயி விஜயன் செய்த லாவலின் ஊழல் விவகாரத்தில், அச்சுதானந்தன் அரசு கோப்பில் இருந்த ஆதாரங்களையெல்லாம் பொலிட்பீரோவில் வைத்து விவாதிக்க வரும்போது அதனை வாங்கி தொடைத்து அவர் மூஞ்சியிலேயே வீசியெறிந்துவிட்டு நீக்கிவிட்டீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? 390 கோடி ஊழல் ஆதாரங்களை விவாதித்து நடவடிக்கை எடுப்போம் என்று நேர்மையாக பேசமுடிந்ததா உங்கள் தலைமையால்?

    இங்கே ஈழப் பிரச்சினை குறித்து சி.பி.எம். பேசுவதற்கு முன்னால் இந்தியாவில் இருக்கும் காஷ்மீர், அஸ்ஸாம் போன்ற தேசிய ஒடுக்குமுறைக் குற்றங்கள் குறித்த உங்கள் கட்சியின் கண்ணோட்டத்தை நியாயப்படுத்தி கருத்து தெரிவிக்க நான் மேலே கேட்டிருந்தேன். இதுவரை நீங்கள் யாரும் அந்த கருத்தில் நின்று விவாதிக்கவில்லை. எனவே, கருத்து மோதலை அற்ப விவாதமாக மடைமாற்றுவதைத் தவிர வேறெந்த அரசியலும் உங்களுக்குக் கிடையாது என்று நிரூபனமாகிறது.

    முடிந்தால் ஏதாவது கருத்தில் ஊன்றி நின்று விவாதிக்கப் பழகுங்கள்.

    • தோழர் உங்க கேள்விக்கெல்லாம் பதில் சொல்ற திராணி இந்த ச்சீப்பீஎம் பிராணிகளுக்கு இல்ல

      • பாவம் இந்த சி.பி.எம் காரங்க !
        கேள்வி கேட்டா பதில் இல்லை !
        கட்சி தலைவர் புலம்பியதை இவர் இங்கே எடுத்து போட்டிருக்காரு !

        ஆமா இந்த சந்திப்புன்னு ஒருத்தர் எங்கெ ! ஆள் எதுனா மென்டல் ஆசுபிடல்ல சேர்ந்துட்டாரா ?

      • சந்திப்பப் பத்தி நினைக்கையில துக்கம் தொண்டையை அடைக்குது தோழர். மூனுமாசமா சம்பளப்பட்டுவாடா நின்னுபோச்சி. சி.பி.எம். தேர்தலில் மண்ணைக் கவ்வியதற்கு கட்சியின் அணிகள் சரிவர வேலை செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு அனைத்து கமிட்டிகளிலும் பரிசீலனைக் கூட்டங்களில் வைத்து பேசப்படுகிறது. ஒருவேளை சி.பி.எம். மண்ணைக் கவ்வியதற்கு அண்ணன் சந்திப்புவும் காரணம் என்று சொல்லி சம்பளத்தை நிறுத்திவிட்டார்கள், போலும்!

        கரெக்டா 31-ந்தேதியே கில்லிமாதிரி சம்பளம் வழங்கும் தமிழ்மணி அண்டு கம்பெனிக்கு அண்ணன் சந்திப்பு தாவியிருக்கலாம். ஏனெனில் முன்னமேயே இரண்டு கம்பெனிகளிலுமே சந்திப்பு உள்குத்து வேலை பார்த்தவர்தானே!

        போதாததற்கு இப்போது ரமேஷ்பாபு போன்ற் அரைவேக்காட்டு அனாமதேயங்கள் வந்துவிட்டபடியால் சந்திப்பின் தேவை இனி இணையத்தில் சி.பி.எம்.ஐப் பொறுத்தவரை முக்கியமில்லைதான்.

  30. தோழர்களே!

    சி.பி.எம். கம்பெனியின் புரட்டுக்கள் குறித்தும் பல்வேறு மோசடிகள் குறித்தும் நாம் நிறைய பார்த்துவிட்டோம். அதனை தர்க்கப்பூர்வமாக மறுக்கத் திராணியற்ற நிலையில் அவர்கள் பரிதாபகோலம் நமக்கே சற்று சங்கடத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. இங்கே சி.பி.எம்.கட்சிக்காக கருத்து பதிந்து வரும் நண்பர்கள் கணேஷ், கவாஸ்கர் போன்ற தோழர்கள் தீக்கதிரின் ஊழியர்கள். தங்களால் இயன்ற வகையில் இங்கு நேர்மையாக விவாதிக்கிறார்கள். ஆனால், இப்படிப்பட்ட விவாதங்களில் நேர்மையாக பங்கெடுக்க திராணியின்றியும், நாமே தேடிச்சென்று விவாதித்தாலும் நமது கருத்துக்களை இருட்டடிப்பு செய்துகொண்டும், இங்கேயே போலிவிடுதலை போன்ற பல்வேறு பெயர்களில் உலாவந்து கொண்டிருக்கும் ரமேஷ்பாபு என்கிற அற்பவாதியின் பதிவு ஒன்றை தமிழ்மணத்தில் பார்க்க நேரிட்டது. அதன் சுட்டி இதோ… http://natputanramesh.blogspot.com/2009/08/blog-post_14.html

    கவாஸ்கர் போன்ற சாதாரண தோழர்களின் நேர்மையான கருத்துக்களின் முன்னால் வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருக்கும் ரமேஷ்பாபுவின் பிதற்றல் அம்மனமாகக் கிடக்கிறது. இதனையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    எங்கெங்கோ பீறாய்ந்து வார்த்தைகளைப் பொறுக்கிவந்து நம்மை ‘வார்த்தைப் பொறுக்கிகள்’ என்று அவர் வசைபாடுகிறார். சி.பி.எம். மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் ஏதாவது ஒன்றிற்காகவது கவாஸ்கர், கணேஷ் போன்றவர்களுக்கு இருக்கும் பெயரளவுக்கான அறிவு நாணயத்தோடு அப்பதிவில் ரமேஷ்பாபு பதிலளித்திருக்கிறாரா என்று தோழர்கள் அந்த வலைதளத்தில் சென்று பார்த்து காறி உமிழ்ந்துவிட்டு வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    தோழமையுடன்,
    ஏகலைவன்

    • //உ.ரா வரதராஜனையெல்லாம் ஒரு நல்ல‌ மாமா என்று தான் சொல்ல முடியும்// இப்படி எழுதியுள்ளவரை என்ன சொல்றது… அதுதான் ரமேஷ்பாபு சொல்லிருக்காரு… ஏன், நீங்க இந்து தினமணி ஜங்ஜக்க ஜங்ஜா எழுதுனத கண்டிக்கலாமே…

  31. தோழர் ஏகலைவன் ரமேசின் தளத்துக்கு போய் படித்து பார்த்தேன்
    உடல் முழுவதும் விசம் உள்ள பாம்புதான் இந்ந ரமேசு (நெ1 கேப்பமாரி)
    கொள்கையுமில்ல ஒரு வெங்காயமுமில்ல இதுல ஏனதான் இந்த முக்கு முக்கறானுங்களோ தெரியல. அதுல ஒரு செம காமெடி தீபான்னு ஒரு பொறம்போக்கு அவர்களிடம் நிறைய கேள்வி கேட்ட அனுபவம் எனக்கும் உண்டு.
    பதிலுக்கு என்னையோ அல்லது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ வசை பாடினார்களே தவிர வேறெந்த உருப்படியான விவாதத்திற்கும் வந்ததில்லை அவர்கள்.
    என்று டாவு போட்டுள்ளது, நான் கேட்பது இது தான் உருப்படியான விவாதம்னா என்னா? எப்டி திருடி திங்கறதுன்னு பேசுனா அது
    உருப்படியான விவாதம். நந்திகிராம்ல சீபீஎம் பண்னுனது சரியானு கேட்டா அது
    வசை 🙂 சரி வசை பாடும்போது இதுங்க என்ன பாட்டுபாடிக்கிட்டா இருந்ததுங்க. திருப்பி பேச வேண்டியதுதான (பேசுனா சீபீஎம் வரலாற புட்டு புட்டு வெச்சு தோழர்கள் கிழிச்சிருவாங்க) மேற்படி தளத்துல ரமேசு மகஇக காரங்க அநாகரீகமா பேசறாங்கன்னு எழுதியிருக்கான் ஏண்டா மூதேவி நந்திகிராம்ல பொம்பளைங்கள கெடுத்த கேடுகெட்ட சீபீஎம் நாயிங்கள மரியாதையாவா திட்டமிடியும்?

    • உன் பெயர் மரண அடியா அல்லது ம___ர்அடியா. உண்னைப் போல் எங்களால் தளத்தில் கூட கேளலமாகப் பேசத் தெரியாது. விவாதம் என்றால் என்ன என்று கற்றுக்கொள்.
      உன்னைப்போல் மு_________ம் பேசுவது, விவாதம் செய்வது நல்ல தோழனுக்கு அழகில்லை.

    • ரொம்ப நன்றி என்.எஸ்.மணி எனும் பெயரில் இங்கு வந்திருக்கும் ரமேஷ்பாபு அவர்களே!

      இந்திய ’ஜனநாயக’ வாலிபர் சங்கத்தின் மாநில நிர்வாகியே இந்த யோக்கியதையில் இருக்கையில் அந்த அமைப்பைக் குறித்து நாம் தெளிவாக வரையறுத்துக் கொள்ளலாம். ஆனால் கீழ் மட்ட சாதாரண தோழர்களின் அடிப்படையான நாகரீகமோ அறிவு நாணயமோ சிறிதுமின்றி வசைபாடிக்கொண்டும், கருத்து ரீதியாக விவாதிக்கத் திராணியற்றும் பிதற்றித்திரியும் ரமேஷ்பாபு தன்னைத் தானே அம்பலப்படுத்திக் கொண்டு நிற்கிறார். அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

      நீங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வசைபாடிக்கொள்ளுங்கள். அவதூறுகளை அள்ளி வீசிக்கொள்ளுங்கள் ஆனால் எமது விமர்சனங்களும் கேள்விகளும், இதர வாசகர்களின் கேள்விகளும் இங்கே உங்களால் பதிலளிக்கப்படாமல் மிச்சமிருக்கும் வரை இவ்விவாதம் நிறைவுறாத விவாதமாகவே இருக்கும். உங்களது வசை மொழிகள் உங்களையே அம்பலப்படுத்தித் திரைகிழிக்கும்.

      • nan ramesh babu illai , nan sathrna vasakan , ungal vimarsanangali padikum pothu , nee thani nabaraye vimarsanam chiegirai , oru pen (femal) ketta kelvigu ungalidathil pathil illai , ungalin unmaiyana kolgai than enna ?

      • அன்புள்ள என்.எஸ் மணி,

        தனிநபர் விமர்சனம் என கூப்பாடு போடும் நீங்கள் இங்கே உங்கள் கம்பேனியின் இலவச/சம்பள கொ.ப.செ.வாக உளரிக் கொண்டிருக்கும் POLI COMMUNIST( INVENTED BY MARUTHYAIN).. என்பது தனிநபர் விமரிசனம் இ-ல்-லை-யா- ஆ!…

        அப்புறம் அது என்ன ஒரு femal -pen கேட்ட கேள்வி? கேட்பவர் பெண்ணாயிருப்பது கேள்வியை விட முக்கியமா?

        உங்கள் கம்பெனியைப்போல உண்மையான, சாத்தியமான, தேர்தலுக்கான, கூட்டணிக்கான, கட்சிக்கான, அணிகளுக்கான, தலைமைக்கான, தோல்விக்கான, வெற்றிக்கான இன்னும் சந்து, பொந்து, இன்டு. இடுக்கு என இத்தனை கொள்கையெல்லாம் எங்களுக்கு இல்லை சார்… ம.க.இ.க ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி, பொதுவுடைமைதான் எங்கள் கொள்கை

  32. HON,BLE ISO 9000:2009 COMMUNIST EGALAIVAN, OUR PARTY PROGRAM AWARE ABOUT THE TRIBES WELFARE…. THAT IS “5.6 The Adivasi and tribal people who constitute seven crores of the population, are victims of brutal capitalist and semi-feudal exploitation. Their lands are alienated from them, the right to forests denied and they are a source of cheap and bonded labour for the contractors and landlords. In some states there are compact areas inhabited by tribal people who have their own distinct languages and culture. The tribal people have been roused to new consciousness to defend their rights for advancement while preserving their identity and culture. Due to the threat to their identity and very existence and the callous policies of the bourgeois-landlord rulers, separatist tendencies have grown among some sections of the tribal people. Regional autonomy for protecting their rights in the areas which are contiguous and where they are in a majority is a democratic and just demand. The capitalist-landlord-contractor nexus constantly seeks to disrupt their traditional solidarity with some concessions to their leadership, denies their legitimate rights and suppresses them with brutal force. ”
    THIS IS ANSWER YOUR QUESTIONS ABOUT TRIBES.. THEN THE LALGAR ISSUE YOU HAVE SUPPORTED BY MAMTA.. WHO IS SHE? SHE IS WORKING CLASS LEADER ? OURT PATY RIGHTLY GUIDE US… DONT CONCERN ABOUT OUR CADERS…. I THINK YOU CONTINUISLY READING MURASOLI AND TAMIL DAILIES, …. NOW OU HAVE JOINED HAND WITH MAMTA AND TRY TO ESTABLISH CPIM IS WORST PARTY …WHAT A GOOD PARTNER FOR ESTABLISH SOCIALISM IN INDIA…

    #############################################################################
    1
    The Marxist, Vol. XXIII, 1, January to March, 2007
    On Industrialisation in West Bengal?
    Buddhadeb Bhattacharjee
    I would like to discuss our overall outlook on the development of West Bengal’s
    economy after the formation of the Left front Government on the issues of
    agriculture, industry and services. Some differences have been expressed
    regarding our purpose and objectives. The controversy has been triggered off by
    those parties that are directly opposed to us—the BJP, the Congress, the
    Trinamul Congress. On the other side there are Naxalites and the SUCI and then
    there are some NGOs. The disagreement with us and opposition to our policy
    has varied in form and character. There is a tenor of opposition from within the
    Left Front itself. Thus, we really need to state clearly what we precisely aim to
    achieve. Some theoretical postulates and ideological positions have surfaced. The
    need is to state our position with precision.
    It is generally acknowledged that we have no ‘model’ in front of us to
    emulate and follow. It will indeed be a mistake to follow a specific model. We
    have closely observed and seen the changes in and the development of the
    Chinese economy and the Vietnamese economy. We are trying to ascertain facts
    there. In Latin America, a kind of new leftism has appeared and changes have
    occurred. We have gone through an interesting book called Dispatches from Latin
    America. We have gathered from the book the thoughts and ideas of the Brazilian
    president Lula, of the Venezuelan head of state Chavez, and of the Chilean
    Socialist Party.
    We are trying to understand and realise the purport of the changes taking
    place. However, the fact is that we have to determine our own path, taking into
    account the reality of the situation in India and the constraints of the Left forces
    in the state within the present framework. We have to offer a workable
    alternative. The late CPI(M) Polit Bureau member and secretary of the West
    Bengal unit of CPI(M) Comrade Saroj Mukherjee, used to speak about an
    ‘untravelled path’.
    With regard to the agricultural situation, we must look back to the 1960s
    when a strong peasant movement started. During the two short-lived United
    Front governments of 1967 (9 months) and 1969 (13 months) the movement got
    accentuated. That movement saw economic and political changes taking place in
    rural West Bengal in a remarkable way. The zamindari system received a severe
    blow. Land was transferred to the kisans through a struggle for possession.
    Politically, the influence of the Congress based on the zamindari system was
    curbed, resulting in change in the political correlation in favour of the Left. The
    ? Based on a speech to the Central Party units in West Bengal, February 9, 2007.
    2
    land that was with the kisans could be preserved, with a small number of
    exceptions, even during the period of bloody violence of the 1970s.
    After the installation of the Left Front Government in 1977 the land
    movement gathered further momentum and the transfer of land from the
    zamindars to the poor and marginal farmers was given administrative
    recognition. This was done through the granting of ‘patta’ rights to the kisans in
    possession of what was previously zamindari land parcels. The LF government
    has distributed ‘patta’ rights for 1.3 million acres of land—the bulk of the
    agricultural land, in fact, of this state. 83% of the agricultural land is in the
    possession of the poor and marginal kisans. We have won several court cases
    relating to land. Recently we have got possession of 30,000 acres of land after
    winning court cases. 800 acres of land have been distributed at Khejuri in
    Midnapore East amongst 1200 poor farmers.
    The process of distribution of ‘patta’ rights has been accompanied by
    ‘Operation Barga’ (recognition of the right of share-croppers)—something that is
    new and unique, a process that has received high praise from those who are
    engaged in research in agrarian relations and matters related to agriculture. It is
    important to recall here that without the surge of kisan struggles, the distribution
    of barga rights would not have been possible. The administrative efforts would
    not have been enough to accomplish the task. A part of the process of
    redistributive land reforms, the recording of barga rights has covered 1.5 million
    in number.
    There was once a debate within the government and the Party as to the
    viability of small plots of land. Our experience has proved that these plots are
    viable. Meanwhile, with the three-tier Panchayati system in place, the poor of the
    rural sector started to become assertive. It is noteworthy that in our state both the
    bulk of the agricultural land and the majority of the panchayats are in the hands
    of the rural poor. This is the consequence of the process of land reforms. This will
    never happen in states where the zamindars own the land and the lathi-wielding
    pehelwans run the Panchayats.
    A direct result of the land reforms programme is the increase in
    agricultural production. Against the disastrous all-India agricultural growth rate
    of less than 2 per cent, West Bengal has been able maintain a sustainable growth
    rate of 4 per cent for more than last ten years. With massive aman and boro paddy
    production this year, the foodgrain production itself will exceed 15 million
    metric tonnes (MT). We have been self-sufficient in the production of paddy for
    the last three years. There have been difficulties in crop diversification. Besides
    paddy production, we are trying to concentrate on pulses and oil seeds—but not
    with notable success. We were able to procure 1.7 million MT of paddy last year.
    This year the target is 2.1 lakh MT. It means that we will be able to ensure supply
    for the PDS, especially for the Annapurna Antodaya and the BPL schemes.
    We have also been successful in producing the highest quantity of
    vegetables in the country since last year (despite the paucity of land). We could
    3
    produce 11.6 million MT of vegetables on 5.4 million hectares of land. Paddy
    production this year will exceed 11.6 million MT. We also hold the top position
    in the production of fish. Our fish production is 1.4 million MT. We do lag
    behind somewhat in deep-sea fishing because we have a shorter coastline
    compared to Tamil Nadu and Andhra Pradesh. We shall have to initiate different
    and scientific methods to increase fish production. The fishing folk cannot hold
    on to sibling (sprawn) for some years. The sprawns are taken to Andhra Pradesh,
    made to grow, brought back to Bengal, and sold to consumers in the markets.
    The fisheries university is being asked to look into the process of how to shorten
    the usual period.
    Our success is reflected in the increased purchasing power of the kisans in
    the villages. Our kisans possess the highest purchasing power of industrial
    goods in the whole of the country today in the retail sector, be it cement, radio,
    cycle, motorcycle, or apparel. No other state has 8 per cent growth rate. Only
    Punjab and Haryana are slightly ahead of us in terms of productivity. The
    success has undoubtedly pushed us ahead by one-and-a-half decades,
    economically and politically. However some problems are developing in the
    agricultural sector. Agricultural universities have been asked to probe the
    problems. The special committee of the State Planning Board carried on research
    on landlessness and the problem of rural indebtedness.
    A few negative tendencies were mentioned in the primary report that we
    received on the eve of the Assembly elections last year. The fragmentation of
    land in the wake of the land reforms among the successors of the original owners
    have contributed to the reduction of the produce. This fragmentation of land is a
    major problem.
    Owing to the country’s economic policies, the prices of all inputs such as
    irrigation, water, seeds, pesticide, and fertiliser have increased manifold. It is
    becoming difficult for farmers to get minimum procurement prices for their
    products. The question of remunerative prices does not arise. With expenditure
    rising high, the cost of agricultural production has gone up. There are other
    specific problems. Because of lack of viable marketing mechanism, many
    vegetables produced are left to rot in the fields—tomatoes in Coochbehar or
    cabbage in Murshidabad, for example. Of the total production of 11.6 milliom
    MT, 10-15 per cent is spoilt in the field because we do not have adequate means
    of preservation. Another problem is value addition. Currently, we can fix added
    value for 3 per cent of the produce only.
    Another problem concerns the society and the mind-set. The members of a
    kisan family till the land through generations. The first generation, despite
    having received education, may yet be willing to accompany the father to the
    field. The second generation does not. They are not willing to go back to the
    fields after passing out from schools and colleges. We must ponder whether this
    is a progressive or a regressive frame of mind. We must preserve the success of
    the agricultural production and ensure our food security. Any deviation will
    4
    harm us. Then if the success in vegetable production can be conserved through a
    marketing mechanism and value is added to the produce, the scope for
    employment in the food processing industry will increase.
    A few important facts need to be mentioned at this point. The greatest
    amount of investment in the state is in the iron and steel sector. The next in line
    are chemicals, petrochemicals, and food processing. Among the big companies,
    Frito-lay, Dabur in North Bengal are functioning. Dabur went for processing
    mangoes and pineapple. Later, they are going to undertake processing of
    tomatoes. In the food processing industry, (China could add value upto 40 per
    cent), employment will go up. We have to increase the production condiments.
    This will further guarantee our food security. Horticulture is another important
    area where development can take place further. Flower markets in the
    Netherlands sell roses and lotuses from Kolkata. If the trend can be expanded,
    our flowers will fetch ten times the price that they do here.
    The basic issue that involves the attitude of the opposition and of some
    others is that we need not proceed any further and stay in place. We do believe
    that if we try to stay in place and enjoy the success we have achieved we will
    stagnate and drift backwards. What then is the alternative? We have to note
    certain facts before dealing with the issue of industrialisation. In the economy of
    West Bengal, the share of agriculture is 26 per cent, industry 24 per cent, and
    services 50 per cent. This is better than the situation in other states. The service
    sector includes education, health, entertainment, hotel, tourism, telecom,
    software, call centres, etc. The trend of the service sector occupying a 50 per cent
    share of the economy is in keeping with that in the rest of the world.
    Look at the relative figures of the agricultural sector and the industrial
    sector. It is not correct to hold that this is the end of the road and the end of
    history. We must bring about changes gradually, and I use the word with
    deliberation. We must maintain food security but increase the share of the
    industrial sector, gradually reducing that of agriculture. This is the general trend of
    the economy. Marxists hold that development is from agriculture to industry. We
    reiterate that we do not have a model to follow. In China, the share of agriculture
    in the GDP is just 14 per cent. We do not say that the Chinese model is our
    model. They had to struggle when they were ushering in change. Wage
    differential between urban and rural areas is a fact. The migration of population
    from the rural to the urban areas has been a problem. However, the transition
    from agriculture to industry is an inevitable phenomenon both in capitalism and
    in socialism.
    A few facts can be cited to bolster this line of argument. 65 per cent of the
    population of this state is involved with economic activities. They are involved
    with agriculture and allied activities like animal resources and fisheries. Is this a
    picture depicting high standards? We cannot agree with the postulate that
    agriculture is the last and final stage of development and that we have to stay at
    the place that we have reached. 63 per cent of land in this state is agricultural.
    5
    This includes, as in Purulia and Bankura, 4 per cent rain-fed land where
    agriculture depends on rainfall for irrigation. Fallow land amounts to just 1 per
    cent. The all-India figure here is 17 per cent. We have started to experiment in
    fallow land to grow plants and a variety of fruits. 13 per cent of land is under
    forest cover, which we are trying to increase further to improve the environment,
    keeping in view the issue of global warming. Thus, we are left with 23 per cent of
    land that is urban and industrial. The opposition asks us not to go beyond that 23
    per cent and stay in place with 126 municipalities and corporations—and with no
    more urbanisation and industrialisation. This is a position which is not
    acceptable.
    Under capitalism, in India, the expropriation of the land of the peasantry
    is taking place in a brutal manner. In our drive for industrialisation in West
    Bengal, we will not proceed this way. We are committed to protect the interests
    of the farmers. If land needs to be taken, it will be done by providing those
    owning and dependent on land a fair deal, without coercion.
    We have ascertained facts through a land survey, and I have kept the Left
    Front informed. We have received detailed report of vested land, and nonagricultural
    land district-wise, mouza-wise, block-wise. This is needed for the
    purposes of a land bank. Urbanisation cannot be stopped. When we assumed
    office, there were only 80 urban local bodies, and now the figure is 126. There is a
    long pending list of areas that want to urbanise and become municipalities. How
    can we tell them to remain in the Panchayat areas and in villages? We can tell
    investors and entrepreneurs about the locational alternatives that are there and
    they can choose. In a market economy, we can hardly ignore their priorities. The
    priorities have a practical basis. Iron and steel industries cannot be set up away
    from coal mines. IT industries require airport facilities. The IT investors would be
    reluctant to move out of urban areas. However, we will try our best to keep them
    within certain circles.
    Now I would like to concentrate my discussion on some specific
    industries. The State Government’s industrial policy was declared by former
    Chief Minister Jyoti Basu in 1994. During visits abroad, the attempt was made to
    convince investors about the investment-friendly role of our government. It was
    stressed that investment would be made on the basis of mutually advantageous
    terms. They would earn profits and at the same time create employment
    opportunities. They would come here for the purposes of capitalist development.
    The opposition accuses us of having agreed to capitalist development. Is it
    possible to talk of socialist development in one state of our country? What we
    can do at the most in this structure is to bring in some alternative Left policies.
    This comprises land reforms, protecting public sector, some initiatives in
    education and health, and so on. The Party Congress and the Central Committee
    have said that this means there is no need for foreign investment where we have
    the technology. We are not to allow FDI in retail trade. Do we need foreign
    6
    entrepreneurs to sell our agricultural products as one Indian entrepreneur told
    us some time back?
    IBM, Cognizant, and GE Capital have evinced interest in investing in the
    IT sector and we need their units. We will await the final denouement of the
    software debate. We must do something about our young men and women who
    are computer-literate and know English. Mitsubishi Chemicals invested Rs 1.7
    billion at Haldia, and they are willing to open a second unit there—we really
    cannot refuse them. Videocon is willing to set up a TV factory in North Bengal.
    Shall we dissuade them? Jindals have chosen to set up a Rs 35.5 billion steel plant
    at Salboni in Midnapore West. The message that we would like to send to
    entrepreneurs abroad is that we need private capital. The Party Programme has
    been changed. Earlier it talked about state takeover of all monopoly and foreign
    capital. We do not really hold that position now. The last Party Congress
    resolved that there would be no FDI in the retail trade. West Bengal has not
    moved an inch outside the assessment of the Party on the issue.
    The opposition is of the view (and a few Left Front partners) that the
    foreign capitalists are rushing in on their own to exploit us. The actual picture is
    different. There is tough competition all around. We cannot discourage
    investment. Had there been an alternative to the present form of investment we
    would have opted for it. The idea is that we do need private capital, with limits
    set, and not everywhere.
    The electoral success in the seventh Assembly elections with our majority
    increasing from two-thirds to three-fourths of the seats has sent a message to the
    corporate houses that the people’s verdict is with the Left Front government. The
    year we set up the Haldia unit, there was total investment of Rs 60 billion. In
    2006–07, the figure stands at 300 billion. The corporate houses prefer West Bengal
    because of natural resources, human resources, and skilled labour. The skill of
    the labour in West Bengal has found international recognition. The young men
    and women of West Bengal are also at the forefront of IT. We have 68,000
    primary schools, 16,000 secondary schools, 450 colleges, 68 engineering colleges
    and 18 universities. Agriculture and villages are important but they alone cannot
    comprise the Left alternative for the torch-bearers of the 21st century.
    We cannot deny the viability of IT and bio-technology. We have set up a
    bio-technology park in association with Kharagpur IIT. The emphasis is on small,
    medium, and manufacturing industry. The chemical hub once set up will
    produce employment in the ancillary and downstream units as they have done at
    Haldia. We are also going in for clusters—foundries in Howrah for example, and
    also plastic manufacturing clusters and apparel manufacturing clusters. The
    manufacturing and IT industries would absorb vocationally trained students and
    science graduates. We have also spread the industrial units around the state. 50
    jute and plastic industrial units have come up in Coochbehar. IT would be set up
    in Siliguri. Food processing will be done in Siliguri and in Malda. There will be
    more sponge iron units at Bankura and Purulia besides the ones that we already
    7
    have in Durgapur and in Asansol. The environmental issue will be tackled for
    the sponge iron units.
    Then there is the Singur issue. Tata Group almost decided to set up the
    motor car factory project at Uttarakhand. The Union government offers full tax
    concessions to investor for setting up units in north-east Indian states, Sikkim
    and Uttarakhand (the Union Government bypasses North Bengal in this respect).
    These concessions include sales tax, income tax and excise duties. For the small
    car project the Tatas would get a concession of Rs 18,000 per 0.1 million rupees.
    First, we had to persuade the Tatas to come to West Bengal with the small car
    project. They were shown locations in Kharagpur and in some other places. They
    preferred Singur because of several reasons. Important among them were the
    Durgapur expressway and Singur’s proximity to Kolkata. We have no modern
    automobile manufacturing unit in West Bengal except the sick Hindustan
    Motors. The alternative was to tell the Tatas to go away to Uttarakhand. The unit
    once set up will create many employment opportunities in the ancillary and
    downstream sectors.
    The land that was identified for the production unit at Singur was singlecrop
    and double-crop. We calculated and found that the motor car factory at
    Singur would create large job opportunities and improve the quality of life there.
    Mandays produced will be much more. The work of setting up the boundary
    wall for the factory itself has created jobs for 3,000 people. By 2008, the
    production will take off. The Tatas will set up primary schools and health
    services and they have started training local people. The Singur Company has
    commenced training of women in tailoring. A canteen run by women has started
    to function. It is the moral responsibility of the government to ensure that the
    affected people benefit from the economic opportunities, which will be created
    by the motor car factory.
    There has been a kind of unbalanced zeal about Special Economic Zones
    (SEZs) in Delhi. In states like Maharashtra, 25,000 to 40,000 acres of prime land
    are being given away for real estate development. Is the SEZ for industry or is it
    for real estate development? This is a crucial question. Proposals for SEZs are
    coming. Tamil Nadu alone has submitted proposals for 86 SEZs. In China SEZs
    have been set up for technology-transfer in which the people of China are very
    efficient. They started with six SEZs. We have started with 450 in India. The Left
    has sent important amendments to the SEZ Act and rules.
    In this background, I may state that the decision to set up a chemical hub
    in Nandigram in Midnapore East was not taken by us. The Union government
    preferred our proposal for a chemical hub over all others. (The Union
    government called for the hub to be set up in Haldia. Haldia alone we realised
    would not do, as we needed another sea port. Kolkata and Kulpi would be
    ancillary ports.) There was a mistake on the part of the local authority, for it
    initiated steps without informing the local people. The local people were not
    aware of the alternative. We have decided not to proceed further here. There is
    8
    no need to hurry. Let the debate over SEZ come to a conclusion and then we can
    look at the project again. I have asked the Party to see that the SEZ debate is
    brought to a conclusion. We do need the chemical hub where the Indian Oil
    Corporation is the primary investor. The downstream units will produce textiles
    from polymer, and rubber from butadiene. This is needed for economic
    development of the area and the state.
    The opposition has brought hoodlums from outside of Nandigram and
    engaged in sheer violence. We did commit the initial error and we need to
    proceed with great caution. The land issue is a very sensitive issue. The
    unrecorded bargadars of Nandigram and Singur feel deprived and they have
    turned violent. They are poor people. We must carry them with us. If we fail to
    do that, the distinction between us and the governments in states like
    Maharashtra and Gujarat will be gone. The Left always looks after the interests of
    the poor. The effort should also be on to develop industries. We feel that we are
    at a crucial phase of development. With agriculture as the basis, we shall build
    industry. This process must be well-planned and the interests of the poor must
    be safeguarded. There can be no development without the poor. We have to take
    due note of criticism, which is legitimate in a democracy. We have to convince
    our people from the ideological and theoretical point of view based on our
    programme. We must not move away from our class outlook.

  33. நந்தி கிராமத்தில் நடந்தது என்ன? ஓர் உண்மைக் குறிப்பு

    நந்திகிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை ஜனவரி 3-ம் தேதி பஞ்சாயத்து உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளைத் தாக்குவதில் தொடங்கியது. அதன் பிறகு நடைபெற்ற விபரங்கள் கீழே வருமாறு:-

    1. முழு சுகாதார மாவட்டமாக கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டம் அறிவிக்கப்படுவ தாக இருந்தது. மாவட்டம் முழுவதற்கு மான சுகாதார சாதனைகளுக்காக அந்த மாவட்டம் அத்தகைய பெருமையைப் பெற்றது. இந்த நோக்கத்திற்காக ஜன வரி 13, 14 தேதிகளில் மத்தியக்குழு ஒன்று நந்திகிராமத்திற்கு வருவதாக இருந்தது. உண்மையில் மத்தியக்குழு ஏற் கெனவே அந்த மாவட்டத்தில் பல பகுதி களுக்குப் பயணம் செய்து இத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றி பெற்றிருப்பதை அறிந்திருந்தது. இதற்கான தயாரிப்புக் கூட்டம் ஜனவரி 3-ம்தேதியன்று காளிச் சரண்பூர் கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்து கொண்டிருந்தது.

    காலை சுமார் 11.30 மணியளவில் சில திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அந்த அலுவலகத்தின் முன்னால் கூடி னார்கள். ஹால்டியா வளர்ச்சிக்குழுமம் சார்பில் வழங்கப்பட்ட நிலம் கையகப் படுத்தப்பட்ட தாக்கீதை கைவிடப்பட வேண்டுமென்றும் நிலம் கையகப்படுத் தப்படமாட்டாது என்று பஞ்சாயத்து நிர்வாகம் அறிவிக்க வேண்டுமென்றும் கோரினார்கள். பஞ்சாயத்து தலைவர் சமருன்பீவி அதை ஏற்றுக் கொள்ள வில்லை. இதனால் திரிணாமுல் காங்கி ரஸ் தொண்டர்கள் அவரை கேவலமாக திட்டியதோடு வன்முறையிலும் ஈடுபட் டார்கள். பஞ்சாயத்து அலுவலகத்தை சூறையாடினார்கள். பஞ்சாயத்து அலு வலக செயலாளர் இந்த தாக்குதலில் காய மடைந்தார். இந்தக் கும்பல் அங்கிருந்த துணை சுகாதார நிலையத்தின் மீதும் தாக்குதல் நடத்தியது.

    இதன் பிறகே பஞ்சாயத்து தலைவர் நந்திகிராமம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். போலீஸ் வாகனம் கிராமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஆயுதந்தாங்கிய கும்பலால் தாக்கப்பட்டது. இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 11 காவல்துறையினர் இத்தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். போலீஸ் வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது. காவலர்களிடமிருந்த ஒரு கைத்துப் பாக்கி அக்கும்பலால் பறிக்கப்பட்டது. இதைப் பின்னர் சுபேந்து அதிகாரி என்கிற திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு நந்தி கிரா மத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலுள்ள கெஜுரி காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல்துறைக்குச் சொந்தமான காரை தீயிட்டுக் கொளுத்த இன்னொரு கும்பல் முயற்சித்தது. அதன் பிறகு போலீஸ் அப்பகுதிக்குள் நுழைய வில்லை.

    2. வன்முறையாளர்கள் ஆயுதங் களை எடுத்துக் கொண்டு பாலங்களை யும், சாலைகளையும் இணைக்கும் கல்வெட்டுக்களையும் உடைக்க ஆரம்பித் தனர். அக்கும்பல் கலவர பீதியை உரு வாக்கியது. ஜனவரி 4, 5 தேதிகளில் நந்திகிராமம் மற்றும் கெஜுரியை வெளி யுலகோடு இணைக்கும் அனைத்து சாலைகளையும் பாலங்களையும் அழித்து விட்டது. மேலும் அக்கும்பல் 25 கிலோ வோல்ட் துணை மின் நிலையத்தையும் எரித்து விட்டது. துப்பாக்கி ஏந்திய ஒரு கும்பல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ராஜாராம் சவுக் வட்டாரக்குழு அலு வலகத்தை தாக்கி தீயிட்டுக் கொளுத்தி யது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சில இயக்கங்களின் ஊழியர்கள் மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களையும், ஆதரவாளர்க ளையும் தேடித்தேடி கடுமையான விளை வுகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என்று பயமுறுத்தினர். அந்த இரண்டு நாட்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் ஊழி யர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வீடு கள் சூறையாடப்பட்டன.

    மார்க்சிஸ்ட் கட்சியின் ஏராளமான ஊழியர்கள் கிராமத்தை விட்டு வெளி யேற நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஆயுத மேந்திய இந்தக் கும்பல்களின் படங்கள் உள்ளூர் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட் டிருக்கின்றன. இவையனைத்தும் கச்சித மாகத் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப் பட்டுள்ளது.

    3. வெளியேற்றப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும், அவர்களது குடும் பங்களும் கெஜூரி பகுதியில் பங்கபேரா பாலத்தின் தென்பகுதியிலுள்ள முகாமில் தங்கியிருந்தனர். ஜனவரி 6-ம் தேதி யன்று ஜமிரக்கா கமிட்டி (திரிணாமுல் காங், எஸ்யுசிஐ, நக்சலைட் குழுக்கள் ஜாமியாத் உலைமா – இ- ஹிந்த் இவற்றை உள்ளடக்கிய குழு) இந்த முகாமை அதிகாலை 3 மணிக்குத் தாக்கியது. தாக்குதலுக்காகவே அவர் கள் பதுங்கு குழிகளைக் கூட அமைத் திருந்தார்கள். இம்முறை முகாமிலிருந்த வர்கள் திருப்பித் தாக்கியதில் கலகக் காரர்கள் 3 பேர் இறந்து போயினர். இறந்து போனவர்களில் ஒருவரான ஷேக் சலீம் என்பவர் அங்கிருந்து 12 கி.மீ. தொலைவிலுள்ள தெற்கு கேந்தமரி என்ற இடத்தைச் சேர்ந்தவர். இதிலி ருந்தே அவர்கள் திட்டமிட்டு முகாமில் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

    4. ஜனவரி 7-ம்தேதி காலையில் விஷமிகள் சங்கர் சமந்தா என்கிற மார்க்சிஸ்ட் கட்சி பஞ்சாயத்து உறுப்பின ரின் வீட்டைத் தாக்கி, கொள்ளையடித்து, தீ வைத்து கொளுத்தி விட்டனர். அவர் கள் சமந்தாவை சிப்பாரா என்கிற இடத் துக்கு இழுத்துச் சென்று வைக்கோல் போரில் தூக்கியெறிந்து உயிரோடு கொளுத்தி கொன்று விட்டனர்.

    5. பூதேப் மண்டல் என்கிற இன் னொரு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவாள ரைக் கடுமையாகத் தாக்கி அவர் இறந்து விட்டார் என்று கருதி விட்டு சென்று விட்டனர். அவர் உணர்வு பெற்று அப் படியோ ஒரு உறவினரின் வீட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்.

    பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒட்டுமொத்தமாக 153 வீடுகள் சூறையாடப்பட்டன. லட்சு மண் மண்டல் என்கிற சோனாச்சுரா பஞ்சாயத்து தலைவரின் வீடுகளும், கடைகளும் எரிக்கப்பட்டன. காளிச் சரண்பூர் பஞ்சாயத்து தலைவர் சமருன் பீவி மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி ஊழி யர்கள் அர்ஜூன் மைத்தி, டாக்டர் பிரதாப் பால், ரபியுல், அன்னபூர்ணதாஸ் அனை வரின் கடைகளும் வீடுகளும் எரிக்கப் பட்டன.

    6. கிராமத்தை விட்டு விரட்டப்பட்ட வர்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட் டக்குழு உறுப்பினர்கள் இருவர், வட் டாரக் கமிட்டிச் செயலாளர் இருவர், பகு திக்குழு உறுப்பினர்கள் ஆறு பேர், ஸ்த லக் கமிட்டி உறுப்பினர்கள் 16 பேர் மற் றும் கட்சி உறுப்பினர்கள் 56 பேர் அடங் குவர். 200-க்கும் அதிகமான குடும்பங் கள் தாக்குதலின் காரணமாக நிவாரண முகாம்களிலோ, உறவினர் வீடுகளிலோ தஞ்சம் புகுந்துள்ளனர். அதன் பின்னர் இந்த எண்ணிக்கை 2000-ஐத் தாண்டி யது. அவர்களது வீடுகள் சூறையாடப் பட்டு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள் ளன. நூற்றுக்கணக்கான மக்கள் பெரிய தொகையை நிந்தம் செலுத்தியுள்ளனர்.

    7. இத்தாக்குதல் கெஜூரி மற்றும் அதன் அருகிலுள்ள ஹால்டியாவின் புறநகர்ப் பகுதிகளுக்கும் பரவியது. ஜனவரி 7-ல் ஒரு போலீஸ் குழு நிலை மையை விவாதிக்க கிராமத்திற்குச் சென்றது. அவர்கள் எவ்வித கோபமூட்ட லுமின்றி மிருகத்தனமாகத் தாக்கப்பட்ட னர். ஆயினும் போலீஸ் திருப்பித் தாக் காமலேயே திரும்பி வந்தது. வயதான சாதுசரண் சட்டர்ஜி என்கிற போலீஸ் காரர் இழுத்து வரப்பட்டு விஷமிகளால் கொல்லப்பட்டார். மூன்று நாள் தேடலுக் குப் பின்னர் அவரது உடல் ஆற்றில் கண்டெடுக்கப்பட்டது.

    8. பிப்ரவரி 10ல் சுனிதா மொண்டல் என்கிற பத்தாம் வகுப்பு மாணவி சித்ர வதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் கயிற்றில் கட்டி மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. அவரது தந்தை அதற்கு முன்பு ஊரிலிருந்து விரட் டப்பட்டிருந்தார். இத்தனைக்குப் பிறகும் போலீசால் ஊருக்குள் நுழைய முடிய வில்லை. இவ்விஷயம் குறித்து விசா ரிக்கச் சென்ற மாநில பெண்கள் ஆணையத்தினருக்கும் இதே கதிதான்.

    9. பிப்ரவரி 17 மற்றும் 18 தேதிகளில் மேலும் 22 வீடுகள் திரிணாமுல் காங் கிரஸ்காரர்களால் கொளுத்தப்பட்டது. மீதமிருந்த ஊர்க்காரர்களில் பலர் வெளி யேற்றப்பட்டனர்.

    10. மார்ச் 3-ம்தேதி ஒரு குடும்பத் தலைவி (பெயர் தவிர்க்கப்பட்டிருக்கிறது) உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலை வர் ஸ்ரீவாரி சமந்தா தலைமையில் கூட் டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள் ளார். அவர் மார்க்சிஸ்ட் ஆதரவாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதற்கா கவே இக்கொடுமைக்கு உள்ளாக்கப்பட் டுள்ளார். அவர் தற்போது மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட் டுள்ளது.

    11. நந்திகிராமத்தில் கட்டாய நிலம் கைய கப்படுத்துதல் இருக்காது என்று முதலமைச்சர் திட்டவட்டமாக அறிவித் துள்ளார். பிப்ரவரி 9-ம்தேதி கெஜுரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் நந்திகிராமம் மக்களின் ஒப்புதலின்றி எதுவும் செய்யப் படமாட்டாதென உறுதியளித்துள்ளார்.

    கடந்த ஒரு மாத காலத்தில் பல்வேறு கட்டங்களில் நந்திகிராமம் மக்கள் விரும்பவில்லை எனில் ரசாயனத் தொழிற்சாலைகள் அங்கு வராது என திரும்பத் திரும்ப உத்தரவாதமளித்துள் ளார். இதன் பிறகும், ‘நிலப்பாதுகாப்புக் குழு’வினரின் வன்முறை வெறியாட்டம் குறையவில்லை. இவையெல்லாம் நிலம் கையகப்படுத்துவதல்ல பிரச்சனை; நந்தி கிராமத்தை வலுக்கட்டாயமாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கான திரிணாமுல் நக்சலைட் கூட்டணியின் அரசியல் தந்திரமே.

    12. இதற்கிடையில் மாவட்ட நிர்வாகம் பலமுறை அனைத்துக் கட்சி கூட்டங்க ளையும், சமாதானக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது. அவற்றையெல்லாம் திரிணாமுல் காங்கிரசும், காங்கிரசும் நிலப்பாதுகாப்புக் குழுவும் புறக்கணித்து விட்டன. கடைசியாக இத்தகைய கூட்டம் மார்ச் 10-ம்தேதி நடைபெற்றது. இதில் இடது முன்னணியிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்டு பிளாக், புரட்சி சோசலிஸ்ட் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர். திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் மற் றும் நிலப் பாதுகாப்புக்குழுவினர் அழைப்பை ஏற்க மறுத்து விட்டனர். இந் தக் கூட்டத்தில்தான் நிர்வாகம் மறு சீர மைப்புப்பணிகளை மேற்கொள்ள வேண் டும். சுமூக நிலையை உருவாக்க வேண் டும். எதிர்ப்பை சட்டப்படி சந்திக்க வேண்டுமென முடிவெடுக்கப்பட்டது.

  34. , மேற்கு வங்க மாநிலத்தில், மேற்கு மிட்னாப்பூர் மாவட் டத்தில், லால்காரில் மாவோயிஸ்ட்டுகளால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள கம்யூனிஸ்ட் எதிர்ப்பு தீ வைப்பு வன்முறைச் சம்பவங்கள் கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து கொண் டிருக்கின்றன. கடந்த மூன்று தினங்களில் மட்டும் பதினைந்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழி யர்கள், மாவோயிஸ்ட்டுகளால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சி யின் பல அலுவலகங்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இவ்வனைத்து வன்முறை நடவடிக்கைகளிலும், மாவோ யிஸ்ட்டுகள் அப்பாவி பழங்குடியினரை மிரட்டி, மனிதக் கேடயங்களாக முன்னால் நிற்க வைப்பதற்கு உபயோகித்து வருகின்றனர்.

    திரிணாமுல் காங்கிரசால் அமைக்கப் பட்ட கம்யூனிஸ்ட் விரோத சக்திகள் அனைத்தும் அமைத்திட்ட ‘வானவில்’ கூட் டணி, அனைத்துவிதமான சக்திகளுக்கும் அடைக்கலம் கொடுத்து, மாவோயிஸ்ட்டு களின் நடவடிக்கைகள் அனைத்தையும் சட் டப்பூர்வமானதாக ஆக்குகிறது. இத்தகைய கம்யூனிஸ்ட் எதிர்ப்புக் கூட்டணியால் இதற்குமுன் சிங்கூரிலும், நந்திகிராமத்திலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட முந்தைய வன்முறைச் சம்பவங்கள் மாவோயிஸ்ட்டுகளுக்குத் தங் களை வலுப்படுத்திக் கொள்ள உதவின. நந்தி கிராமத்தில் திரிணாமுல் காங்கிரசாரின் பின் னணியில் மாவோயிஸ்ட்டுகள் செயல்பட்டார் கள். அதுமாதிரி இல்லாமல் இப்போது லால் காரில், மாவோயிஸ்ட்டுகள் தங்கள் வன் முறைச் சம்பவங்களைக் கட்டவிழ்த்துவிடுவ தற்கு திரிணாமுல் காங்கிரஸ் வெளிப்படை யாகவே உதவிசெய்துகொண்டு வருகிறது, உடந்தையாய் இருந்துவருகிறது.

    மாவோயிஸ்ட்டுகள், போலீஸ் அட்டூழி யங்கள் எதிர்ப்பு மக்கள் குழு (பிஏபிஜேசி) என் னும் பெயரில் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள். சமீபகாலம் வரை திரிணாமுல் காங் கிரசில் இருந்த சத்ரஹார் மஹாடோ என் பவர் இதனை நடத்துகிறார். சென்ற நவம்பர் மாதத்தில் முதல்வர் புத்ததேவ் பட்டாச் சார்யாவையும் அவருடன் பயணம் செய்த மத் திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானையும் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொண்ட சசோபார் மஹாடோவின் சகோதரர்தான் இந்த சத்ரஹார் மஹாடோ. அவர்களது இலக் கை எய்துவதற்காக வைக்கப்பட்ட கண்ணி வெடி, லால்காரிலிருந்து 40 கிலோ மீட்டர் தூரத்திலிருந்த சல்போனியில் வெடித்தது.

    ஜூன் 16 அன்று, வன்முறை வெறியாட் டங்கள் நடத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தைக் கொளுத்திய மாவோயிஸ்ட்டுகள் கும்பலுடன் உள்ளூர் திரிணாமுல் காங்கிரசாரும் இருந்திருக்கிறார் கள். திரிணாமுல் காங்கிரசின் தலைவர், ஊட கங்களிடம், “இதில் ஒரு பக்கத்தில் கம்யூ னிஸ்ட்டுகளும் எதிர்ப்பக்கத்தில் மற்ற அனைவரும் இப்போது இருக்கிறார்கள்” என்று சொல்லியிருந்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் நேரடியாக சம்பவ இடத்தில் இல்லை என்றாலும், ‘‘மேலேயிருந்து வந்த கட்டளைப் படிதான் அனைத்தும் நடக்கிறது’’ என்று தன் உறவினர் ஒருவரிடம் கூறியிருக்கிறார்.

    கொலை செய்யப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை, அவர்தம் குடும்பத்தினர் இறு திச் சடங்குகள் மேற்கொண்டு, பிணத்தை உரிய மரியாதையுடன் புதைக்கக்கூட அனு மதிக்கப்படாமல் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். அப்பகுதி முழுவதுமே பாதுகாப்புப் படையின ரும் காவல்துறையினரும் அங்கே வரமுடி யாதபடி பல இடங்களில் கண்ணிவெடிகளை புதைத்து வைத்திருக்கிறார்கள், நந்திகிராமத் தில் ஓராண்டுக்கு முன் அவர்கள் செய்ததைப் போலவே, லால்கார் பிராந்தியத்திலும், அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைப்பதற்கு அவர் கள் முயற்சிகள் மேற்கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவு. இவ்வாறு, உள்ளூர் மக்களை மிரட்டி அடிபணியவைத்து தங்களுடைய நட வடிக்கைகளை விரிவாக்கி ‘‘ஒரு விடுவிக் கப்பட்ட மண்டலத்தை’’ (ய டiநெசயவநன ணடிநே) உரு வாக்கிட வேண்டும் என்பதே அவர்கள் திட் டம். சென்ற வாரம் கெஜூரியில் திரிணாமுல் காங்கிரசார் செய்ததைப்போல இங்கே இவர் களும் தங்கள் செய்முறையை (அடினரள டியீநசயனேi) மேற்கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை வலுக்கட்டாயமாக அப் புறப்படுத்திவிட்டு, சாமானிய மக்களை மிரட் டிப் பணிய வைத்து, அங்கே தங்கள் அரசியல் தளத்தை நிறுவுவதே அவர்கள் குறிக்கோள். திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் இத்தகைய மிக மட்டரகமான ஜனநாயக விரோத மற்றும் பாசிச செய்முறை யானது மாவோயிஸ்ட்டுகள் அந்தப் பகுதிக் குள் ஊடுருவுவதற்கு வசதி செய்து தந்துள்ளது.

    மாவோயிஸ்ட் வன்முறை குறித்து பிரதமர் பேசி இருப்பது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அவர், ‘‘மாவோயிஸ்ட் வன்முறை என்பது நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு தனிப் பட்ட முறையில் மிகப்பெரிய ஆபத்தாக விளங்குகிறது’’ என்று கூறியிருக்கிறார். நந்தி கிராமத்தில் வன்முறைச் சம்பவங்கள் நடை பெற்று வந்த சமயத்தில், “மாவோயிஸ்ட்டு கள் 2007 ஜனவரியில் நந்திகிராமத்திற்குள் நுழைந்திருக்கிறோம். விரைவில் அங்கே ஒரு கட்சிக் கிளையை ஏற்படுத்துவோம். 350 பேர் கொண்ட ஒரு வலுவான மக்கள் சேனையை ஏற்படுத்திப் போராடுவோம்’’ என்று மாவோ யிஸ்ட்டுகளே பிரதானமான ஊடகங்களில் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர். மேலும், “எங்களின் வெடிகுண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துப் பொருள்களை உள்ளூர் திரிணாமுல் காங்கிரசாரே அதிக அளவில் விநியோகம் செய்தனர்” என்றும் அவர்கள் கூறினர்.

    கடந்த சில ஆண்டுகளாக, மாவோயிஸ்ட் டுகள் பல்வேறு துப்பாக்கித் தொழிற்சாலை கள் மற்றும் புறக்காவல் நிலையங்களில் பல் வேறு சமயங்களில் புகுந்து, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகளைக் கள வாடிச் சென்றுள்ளனர். மத்திய பாதுகாப்புத் துறை சார்பாக வெளியிடப்படும் ‘தி டிஃபன்ஸ் குவார்டர்லி’ (கூாந னுநகநnஉந ணுரயசவநசடல) என்னும் இதழ் தன்னுடைய 2007 ஆரம்பத்தில் வெளி யிட்ட ஏட்டில், ‘‘2006 அக்டோபர் வாக்கில் இந்திய ராணுவம் மேற்கு வங்க மாநிலத்தின் கிழக்குப் பகுதியிலிருந்து ஏராளமான அள வில் ராணுவத்தளவாடங்களையும் வெடி மருந்துப் பொருள்களையும் கைப்பற்றி இருக் கிறது. இதுதொடர்பாக ஒரு ராணுவவீரர் உட் பட மூவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தது.

    2006 அக்டோபர் 3 அன்று வெளியான பிபிசி அறிக்கை ஒன்றில், ஒரு ராணுவ செய் தித்தொடர்பாளர், “இவ்வாறு கைப்பற்றப்பட்ட வெடிமருந்துப் பொருட்கள் மற்றும் துப் பாக்கிகள், மேற்கு வங்க மாநிலத்தின் கிழக் குப் பகுதியிலும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் செயல்பட்டுவரும் மாவோ யிஸ்ட்டுகள் மற்றும் பல்வேறு பயங்கர வாதக் குழுக் களுக்கானவைகளாகும்,” என்று கூறியிருந்தார்.

    நந்திகிராமத்தில் வன்முறைச் சம்பவங் கள் நடைபெற்று வந்த சமயத்தில், திரிணா முல் காங்கிரசினை எள்ளிநகையாடி ஒரு மாவோயிஸ்ட் தலைவர், ‘‘தாங்கள்தான் இவ் வியக்கத்தை நடத்துவதாக திரிணாமுல் காங் கிரசார் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அது கிடையாது. உண்மையில் நாங்கள்தான் இப்பகுதியை எங்கள் முழுமையான கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறோம்’’ என்று கூறினார். லால்காரில் இப்போது நடை பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களிலும், வன்முறை வெறியாட்டங்கள் மாவோயிஸ்ட்டு களால் ஏவப்பட்டிருக்கிறது என்பதும், திரி ணாமுல் காங்கிரசாரும் மற்றவர்களும் மாவோயிஸ்ட் தலைவர்களின் பின்னே சென்றுகொண்டிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படையாகவே ஒப்புக்கொள்ளப்பட்டி ருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஜனநாயகபூர்வமாக நடைபெற்றுவரும் மாநில அரசாங்கத்தை, மாவோயிஸ்ட் வன்முறை வெறியாட்டத்தின் மூலம் பலவீனப்படுத்திட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம் என்பது தெளிவு.

    இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுள்ள மத்திய அமைச்சர்கள், இவ்வாறு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் சட்டவிரோதமாக வும் வன்முறைச்சம்பவங்களில் ஈடுபட்டு மிகப்பெரிய அளவில் மனிதப் படுகொலைக ளையும், சொத்துக்களுக்கு நாசத்தையும் ஏற் படுத்திடும் வன்முறைச் சம்பவங்களை நடத்துவதும், அவற்றில் பங்கேற்பதும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையே முற் றிலுமாக துஷ்பிரயோகம் செய்யும் செயலாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினை முழு மையாக மீறும் இத்தகைய பேர்வழிகளுக்கு, மத்திய அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சியும் உடந்தையாக இருந்து வருகிறது.

    சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய அரா ஜக வன்முறைச் சம்பவங்களை எந்த ஒரு நாகரிக சமுதாயமும் சகித்துக்கொள்ள முடி யாது. இத்தகு நிலைமையைச் சமாளிக்க, மேற்கு வங்க மாநில அரசு, மத்திய அரசின் உதவியைக் கேட்டிருக்கிறது.

    நாட்டின் நலன்களைக் காத்திடவும், நாட் டின் அரசியலமைப்புச் சட்டத்தைக் காத்திட வும், மத்திய அரசும் மாநில அரசும் இப்பிரச் சனையில் முழுமையாக ஒத்திசைந்து செயல்பட்டு, மேற்கு வங்கத்தின் கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் இயல்பு நிலையைத் திரும்பக் கொண்டுவரு வதும், நாட்டின் சட்டத்தையும் மத்திய – மாநில அரசுகளின் நிர்வாகச் செயல்பாட்டையும் மீண்டும் நிறுவுவதும் அவசர அவசியமாகும்.

    • மிஸ்டர் ஆல் இன் ஆல் அழகுராசா.. CPM பத்தி நாங்க ஏதும் சொன்ன, எதோ வயித்து எரிச்சலில சொல்றாங்கன்னு நெனப்பீங்க… எதோ எழுஎட்டு காலேஜ் பசங்க ஒண்ணா சேர்ந்து லால்கருக்கு போய் நேரடியா பார்த்து எதோ அறிக்கை கொடுத்து இருக்காங்க… அவங்க அறிக்கையை பார்த்தீங்களா… பக்கம் பக்கமா எதோ இங்க மறுமொழி போடறீங்க, இதை எல்லாம் பார்த்த நீங்க எதோ முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கரமாதிரி இருக்குது… 😀 …!

      http://kalaiy.blogspot.com/2009/07/blog-post_16.html

      • நான் எதோ சின்ன புள்ளதானுங்க.. உங்க கட்சியில லால்கர்ல, நந்தி கிராமத்தில் வன்முறை நடந்ததுக்கு அப்புறம் இது மம்தாவின் சதின்னு உங்க கட்சி அறிக்கை விட்டதே… அதுக்கும் இந்தியாவில எங்க குண்டு வெடிச்சாலும் அது ஐ.எஸ்.ஐ சதின்னு அறிக்கை விடுமே அத்துவானி கட்சி தலைமை அதுக்கும் என்ன வித்தியாசங்கோ…?

        இரண்டு கட்சிகளுக்கும் உள்ள 5 வித்தியாசங்களை கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு “டாடா நேனோ” கார் இலவசம்…

      • அண்ணா என்ன இப்படி சொல்லீட்டீங்க… இது உங்களுக்கே நல்லா இருக்கா.. சும்மா வெட்கப்படாம சொல்லுங்க, இது மம்தா + காங்கிரஸ் கட்சிகளின் சதின்னு சொல்லுங்க… இப்பெல்லாம் சனங்க அவ்ளோ லேசில ஏமாறது இல்ல.. அதனால உங்க பொய்யை இவ்ளோ சின்ன வார்த்தைல சொன்னீங்கன்னா யாரும் நம்ப மாட்டாங்க…
        அப்புறம் ஒரு வேலை ஈழத்துல சீனாவோட ஆதிக்கம் இப்போ இருந்ததுன்னா , ஒரு இந்தியனா இருந்து என்னால ஈழத்துல ஆதிக்கம் செய்ய முடியலையேன்னு அழுது ஆர்பாட்டம் பண்ணி… நாடு முழுவதும் கலவரம் பண்ணி இப்பவே ஒரு நல்ல நீதி, நியாயம் எல்லாம் கிலோ கணக்குல வாங்கிக் கொடுப்பீங்கதானே..?

  35. லாவாலின் : உண்மைகளும் அரசியல் பரிமாணங்களும்
    -உ.ரா.வரதராசன்
    ஊழலும் இன்றைய அரசியலும் பின் னிப்பிணைந்துவிட்ட – பிரிக்க முடியாத இரட் டைப் பிறவிகளாக மாறி நிற்கின்றன என்ற கருத்து மக்கள் மனங்களில் அழுத்தமாகப் பதிந்துள்ளது. இந்தப் பின்புலத்தில்தான் இன்று கேரள மாநிலத்தில் கடுமையான அர சியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிற லாவாலின் வழக்கின் சில அடிப்படை உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டியுள்ளது.

    லாவாலின் என்பது கனடா நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம். எல்என்சி லாவாலின் என்ற அந்த நிறுவனத்துடன் கேரள மாநில மின்சார வாரியம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத் தைச் செய்து கொண்டது. பள்ளிவாசல், செங் குளம், பண்ணியார் என்ற மூன்று மின் உற் பத்தி நிலையங்களைப் புதுப்பிக்கவும், நவீனப்படுத்தவும் இது மேற்கொள்ளப்பட்டது.

    இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கை யெழுத்திடப்பட்ட நாள் 1995 ஆகஸ்ட் 10. அப் போது கேரள முதலமைச்சராக இருந்தவர் ஏ.கே.அந்தோணி. அன்றைய ஐக்கிய ஜன நாயகக் கூட்டணியில் மின்துறை அமைச்ச ராக இருந்தவர் கார்த்திகேயன். அந்த அரசு கோரிப்பெற்ற தொழில் நுணுக்க அறிக்கை யின்படி, இந்த மூன்று மின்உற்பத்தி நிலை யங்களின் இயந்திரங்கள், கண்ட்ரோல் சிஸ் டம் அனைத்தும் முற்றிலுமாக மாற்றியமைக் கப்பட வேண்டும் என்று முடிவானது.

    அதே ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சிக்காலத்திலேயே 1996 பிப்ரவரி 24-ல் மூன்று தனித்தனியான, ஆனால் ஒரே வாசகத்தைக் கொண்ட செயல்திட்ட – ஆலோசனை உடன்பாடுகளும் செய்துகொள் ளப்பட்டன. இந்த ஒப்பந்தங்களின் கீழ் எல்என்சி லாவாலின் நிறுவனத்திற்கு ரூ.24.04 கோடி ஆலோசனைக் கட்டணமாக வும், ரூ. 157.40 கோடி இயந்திர சாதனங்களின் விலையாகவும், 1995 விலைவாசி அடிப்படை யில் வழங்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட் டது. இதற்குத் தேவைப்படும் இயந்திர சாத னங்களை கனடாவிலிருந்து விலைக்கு வாங்குவது என்ற நிபந்தனையோடு கனடா ஏற்றுமதி வளர்ச்சி என்ற நிறுவனம் இதற் கான கடனைக் கொடுத்து உதவும்.

    இதில் பொதிந்துள்ள மையமான பிரச்சனை, ஒரு வெளிநாட்டு நிறுவனத்தோடு கேரள மாநில மின்சார வாரியம் நேரடியாக ஏன் ஒப் பந்தம் செய்து கொண்டது? என்பதுதான். மின் உற்பத்தி நிலையங்களைப் புனரமைப்பது, நவீனப்படுத்துவது என்பதற்கு சர்வதேச அளவில் ஒப்பந்தப்புள்ளி கோருகிற வழக்க மான நடைமுறை கையாளப்படவில்லை என்பதும் பிரச்சனைக்குரிய அம்சம்.

    1996 மே மாதம் நடைபெற்ற கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி தோற்று, ஈ.கே. நாயனார் தலைமையில் இடது சாரி ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற் றது. அந்த அமைச்சரவையில்தான் இன்றைய கேரள மாநில மார்க்சிஸ்ட் செயலாளர் பினராயி விஜயன், சுமார் இரண்டாண்டு காலம் மின் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.

    இடதுசாரிக் கூட்டணி, புரிந்துணர்வு ஒப் பந்தம் என்ற நடைமுறையை இந்த லாவா லின் நிறுவனம் சம்பந்தப்பட்ட திட்டத்தைத் தவிர, வேறு எந்தத் திட்டத்திற்கும் கையாள் வது இல்லை என்று கொள்கை முடிவெடுத்து, சர்வதேச ஒப்பந்தப்புள்ளி முறையையே பொதுவான வழிமுறையாக வரையறுத்துச் செயல்பட்டது.

    லாவாலின் பிரச்சனையில் மட்டும் ஏன் இந்த விதிவிலக்கை மேற்கொள்ள நேரிட் டது? இதற்கு இரண்டு பின்னணி விவரங் களைக் கருதிப் பார்க்க வேண்டியிருந்தது.

    ஒன்று, 1996-ல் நாயனார் அமைச்சரவை பதவியேற்றபோது, கேரள மாநிலத்தில் கடும் மின்சாரத் தட்டுப்பாடு நிலவியது. இந்த நிலை யில் லாவாலின் ஒப்பந்தத்தை ரத்து செய்தால், மின் நிலையங்களின் புனரமைப்புப் பணியை மேற்கொள்வது, மேலும் காலதாமதத்திற்கு இட்டுச்செல்லும்.

    இரண்டாவது, இடதுசாரிக் கூட்டணி அரசு, முந்தைய அரசு செய்து கொண்டிருந்த ஒப்பந்தம் ஒன்றை ரத்து செய்து, ஒரு கசப்பான அனுபவத்தை இன்னொரு திட்டத்தில் பெற்றி ருந்தது. நேரியமங்கலம் புனல் மின்நிலையத் தைப் புனரமைக்கவும், நவீனப்படுத்தவும் காங்கிரஸ் கூட்டணி அரசு, ஏபிபி என்ற சுவிஸ் நாட்டு நிறுவனத்தோடு, இதே பாணி யிலான புரிந்துணர்வு ஒப்பந்த வழியை மேற் கொண்டது. இடதுசாரிக் கூட்டணி அரசு அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. சுவிஸ் நிறுவனம் வழக்குத் தொடுக்க, ஐந்தாண்டு கள் விசாரணைக்குப் பிறகு நீதிமன்ற உத்தர வின் பேரில் மீண்டும் அதே ஏபிபி நிறுவனத் திற்கு அந்தத் திட்டத்தை இடதுசாரிக் கூட் டணி அரசு ஒப்படைக்க வேண்டிய நிர்பந்தம் நேரிட்டது. 5 ஆண்டுகள் கால தாமதம் மட் டுமே மிஞ்சியது.

    இந்த இரண்டு அம்சங்களையும் கணக் கில் எடுத்துக்கொண்டு ஈ.கே. நாயனார் அரசு, லாவாலின் நிறுவனத்தோடு மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி, சில மாற்றங்களைச் செய்ய முடிவு செய்தது. மின்துறை அமைச்சர் பின ராயி விஜயன், 1996 அக்டோபர் மாதம் கனடா சென்று லாவாலின் நிறுவனத்தோடு பேச்சு வார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த் தையின் முடிவில், லாவாலின் நிறுவனத்துக்கு வழங்குவதாக ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப் பட்ட ஆலோசனைக் கட்டணம் ரூ. 24.04 கோடியிலிருந்து ரூ. 17.88 கோடியாகக் குறைக்கப்பட்டும், கனடாவிலிருந்து இறக்கு மதி செய்யப்பட வேண்டிய இயந்திர சாதனங் களின் விலை ரூ. 157.40 கோடியிலிருந்து ரூ. 131.27 கோடியாகக் குறைக்கப்பட்டும், புரிந்து ணர்வு ஒப்பந்தத்தில் திருத்தங்கள் செய்யப் பட்டன. இந்தத் திருத்தங்கள் மட்டுமே பின ராயி விஜயன் அமைச்சராக இருந்த காலகட் டத்தில் கேரள மாநில மின்வாரியம் செய்து கொண்ட துணை ஒப்பந்தத்தில் இடம்பெற்றன.

    இதற்குப் பின்னர் 1997 ஜூன் மாதத்தில் முதலமைச்சர் ஈ.கே. நாயனாரும், பினராயி விஜயனும் கனடாவுக்குச் சென்றபோது, கனடா அரசு வழக்கமாக வளரும் நாடுகளில் மேற் கொள்கிற சமூகநல உதவித் திட்டங்களின் ஒரு பகுதியாக, கேரள மாநிலம் தலைச்சேரி யில் மலபார் புற்றுநோய் மையம் ஒன்று நிறுவு வது என்ற புதிய அம்சம் இதில் இணைந்தது. இந்த மையம் நிறுவப்படுவதற்கான நிலம் மற் றும் கட்டமைப்பு வசதிகளைக் கேரள மாநில அரசு ரூ. 5 கோடி செலவில் மேற்கொள்ளும் என்றும் முடிவானது. இதுவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற வகையிலேயே மேற்கொள் ளப்பட்டது.

    இதற்கிடையில் சிபிஎம் கேரள மாநிலச் செயலாளராக இருந்த சடையன் கோவிந்தன் மறைவை அடுத்து, பினராயி விஜயன் 1998-ல் மின்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகி, மாநிலச் செயலாளர் பொறுப்பை ஏற்றார். அதே பொறுப்பில் இன்றுவரை நீடித்து வருகிறார்.

    2001-ல் கேரள மாநிலத்தில் ஆட்சி மாற் றம் ஏற்பட்டது. இடதுசாரிக் கூட்டணி அரசு பதவியிழந்தது. காங்கிரஸ் கூட்டணி ஆட் சிக்கு வந்தது. ஏ.கே. அந்தோணி முதலமைச் சராகவும், கடகூர் சிவதாசன், மின்துறை அமைச்சராகவும் இருந்த நிலையில், மலபார் புற்றுநோய் மையம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாமல் கைவிடப்பட்டது.

    லாவாலின் நிறுவனம் மின்நிலையப் புனர மைப்புப் பணியை 2001-ம் ஆண்டு தொடங்கி, 2003 ஜனவரியில் முடித்தது. கனடாவிலிருந்து லாவாலின் தருவித்த இயந்திர சாதனங்க ளின் விலை மதிப்பு ரூ. 149 கோடி என்றிருக்க, கேரள மின்வாரியம் உள்நாட்டிலேயே ரூ. 90 கோடிக்கு இயந்திரங்களை வாங்கியது என் பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்டப் பணி களுக்கான செலவைத் தணிக்கை செய்த கணக்குத் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கையில், மொத்தத் திட்டச் செலவு ரூ. 349 கோடியாக உயர்ந்துவிட்டது சுட்டிக்காட் டப்பட்டது. இந்த உயர்வு, கனடா நாட்டு டால ரின் செலாவணி மதிப்பு உயர்வு, வட்டித் தொகைகள், ஊழியர் ஊதியச் செலவினம் ஆகியவற்றால் நேரிட்டது.

    லாவாலின் நிறுவனம், மலபார் புற்றுநோய் மையத்திற்காக ரூ. 12 கோடி வரை செலவிட்டு, 2001 முதல் அந்த மையம் செயல்படத் தொடங் கியது. ரூ. 13 கோடி வரை இந்த மையம் நன் கொடையாக அந்நியச் செலாவணியில் பெற் றிருந்ததிலும் எந்த முறைகேடும் நேரிட வில்லை என்று மத்திய உள்துறை அமைச் சகம் சான்றிதழ் வழங்கியிருந்தது.

    காங்கிரஸ் ஆட்சியில் நிலவிய உள்பூசல் காரணமாக ஏ.கே.அந்தோணி முதலமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டு, உம்மன் சாண்டி முதல்வரானார். உம்மன்சாண்டி இந்த லாவாலின் விவகாரத்தை 2003 மார்ச்சில் மாநில அரசின் கண்காணிப்புத் (லஞ்ச ஒழிப்பு) துறையின் விசாரணைக்கு அனுப்பி உத்தர விட்டார். அத்துறையின் இயக்குநர், இந்த விவ காரத்தில் பினராயி விஜயன் தரப்பில் எந்தத் தவறும் நேரிடவில்லை என்று 2006 பிப்ரவரி யில் அறிக்கை சமர்ப்பித்தார். உம்மன்சாண்டி அந்த இயக்குநரைப் பதவியிலிருந்து நீக்கிய தோடு, மார்ச் 2006-ல் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

    சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுக் கழ கம் ஒரு சுயேட்சையான அமைப்பாகச் செயல்படுவதல்ல. மத்திய ஆட்சியாளர் களின் கைப்பாவையாகவே, அவர்களின் அர சியல் (உள்) நோக்கங்களை நிறைவேற்றும் விதமாகச் செயல்படுகிறது என்பதை சிபிஐ-யின் இயக்குநர்களாகக் கடந்த காலத்தில் செயல்பட்டவர்கள் மட்டுமின்றி, அண்மை யில் நீதிமன்றத்திலேயே பதவியில் இருக்கும் இயக்குநரே ஒப்புக்கொண்டுள்ளார்.

    இந்தப் பின்னணியில்தான், மத்தியில் மன்மோகன் சிங் அரசுக்கு 2008 ஜூலையில் இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொண்ட நிலையில், பினராயி விஜயனுக்கு எதிராக சிபிஐ விசாரணை திசைதிருப்பி விடப்பட்டது. பினராயி விஜயன் மீது சிபிஐ வழக்குத் தொடுக்க மாநில ஆளுநரிடம் அனு மதி கோரிய அதன் அறிக்கையில், லாவாலின் ஒப்பந்தத்தில் இரண்டாவது மட்டத்தில் இடம்பெற்ற சதியின் ஆரம்ப கர்த்தா காங்கிரஸ் கூட்டணி அரசின் மின்துறை அமைச்சரான ஜி.கார்த்திகேயன் என்றும், இந்தச் சதியில் பினராயி விஜயன் பொருளாதார வகையில் எந்தவிதச் சொந்த ஆதாயமும் பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. எனினும், பினராயி விஜயனை சிபிஐ, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தது; கார்த்திகேயனை சேர்க்காமல் விட்டது!

    வழக்குத் தொடுக்க கேரள மாநில ஆளுநர் உத்தரவிட்டது, ஓர் அப்பட்டமான மரபு மீறலா கும். மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் அறிக்கையையும், மாநில அமைச்சரவையின் பரிந்துரையையும் நிராகரித்துவிட்டு மாநில ஆளுநர், பெயர் குறிப்பிடப்படாத ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரின் ஆலோசனையைப் பெற்று இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த நிலையில் சிபிஐ தொடுத்துள்ள லாவாலின் வழக்கை அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் எதிர்கொள்வது என்ற முடி வை நேர்மையற்றதாக எப்படிக் கருத முடியும் என்பதே கேள்வி! லாவாலின் வழக்கை கேர ளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் உள்பூசலொடு தொடர்புபடுத்தி சாயம்பூசுவது, அரசியல் கட்சிகளின் நடைமுறையாக இருப்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஆனால், லாவாலின் வழக்கின் உண்மைகளையும் அரசியல் பரிமா ணங்களையும் புறந்தள்ளுவது, தர்மம் ஆகுமோ?

    நன்றி : தினமணி (17.7.2009)

    • அய்யா போலி கம்யூனிஸ்டு!

      உன்னோட சொந்த கருத்தைப் பதியாமல், விமர்சனங்களை நேர்மையாகப் பரிசீலிக்காமல் எவனோ எங்கேயோ கழிந்துவைத்தவற்றை இங்கே அளிவந்து வைக்கிறீரே இது நியாயமா?

      சி.பி.எம்.மின் பொறுப்பாளரது வீட்டைச் சூறையாடியதோடு உங்க போலிக் கூட்டத்தையே அடியோடு அடித்து விரட்டினார்கள் லால்காரின் பழங்குடியின மக்கள். அதுக்கு என்னடா காரணம்ன்னு கேட்டா மாவோயிஸ்டு-மம்தா-காங்கிரசு கூட்டணின்னு ஒப்பாறி வைக்கிற. எதுக்கெடுத்தாலும் உன்னோட பிரச்சினைய இன்னொரு ஓட்டுப்பொறுக்கி கட்சியோடேயே ஒப்பிட்டுப் பார்த்து ஒப்பாறிவைப்பது உங்களது வாடிக்கையாகிப் போய்விட்டது.

      சிங்கூர், நந்திகிராமம் முதல் லால்கார் வரையிலும் உங்களுக்கு எதிரான கூட்டணி என்பது ஏகாதிபத்திய பொருளாதாரச் சுரண்டலை எதிர்த்து நிற்கும் பழங்குடியின, விவசாய, உழைக்கும் மக்களும் மாவோயிஸ்டுகளும்தான். மம்தா-காங்கிரசு-உங்க போலி கம்யூனிச சி.பி.எம். போன்ற ஓட்டுப்பொறுக்கிகள் எல்லாரும் ஏகாதிபத்திய நிறுவனங்களின் பக்கம்தான் இது எல்லோருக்கும் தெளிவாகத் தெரிந்த உண்மை.

      உங்களுடைய முதலாளித்துவ கைக்கூலிப் பாரம்பரியம் நீண்ட, நெடிய பின்புலங்களைக் கொண்டது. நக்சல்பரி முதல் இப்போது லால்கார் வரை அதற்கான ஆதாரங்கள் பல. முதலாளிகளுக்கும் ஏகாதிபத்தியத்திற்கும் நீங்கள் கைக்கூலித்தனம் செய்வதற்கு எமது உழைக்கும் மக்களின் ரத்தத்தில் கை நனைக்கத் தயங்காதவர்கள்தான்நீங்கள் என்பது உலகறிந்த உண்மை. 1967-ல் நக்சல்பரி போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தின் (சி.பி.எம். கட்சிக்கு உட்பட்ட சங்கம்தான் இது) தோழர்களைச் சுட்டுத் தள்ள போலீசுக்கு உத்தரவிட்ட ஜோதிபாசுவிற்கும், சிங்கூர், நந்திகிராம், லால்கார் என்று இன்றும் போலீசு எனும் கொடும் பற்களால் உழைக்கும் மக்களைக் குதறிக் கொண்டிருக்கும் புத்ததேவுவிற்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.

      நீங்கள் இங்கே வந்து கொட்டியிருக்கும் இந்த குப்பைகள் உங்கள் கோயபல்சு நிறுவனத்தின் பொய்களும் புரட்டுக்களும்தான் என்பது தர்க்கப்பூர்வமாக பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. தமது இருத்தலை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பொய்களையும் புனை சுருட்டுக்களையும் எழுதித்தள்ளும் இதுபோன்ற பதிவுகளைத் தவிர்த்து உருப்படியாக உமது சொந்த கருத்தென்று ஏதாவது இருந்தால் பதிந்துவிவாதிக்க முயன்றுபாருங்கள்.

      • YOU ARE A COOLIGANS, YOU HAVE NO RIGHT TO SAY , WHAT I AM DOING? BECAUSE ITS MY LIBERTY … WHEN YOU ESTABLISH WHAT I STATED IN MY POST ARE WAST AND USELES? WHERE IS YOUR CETRAL COMMITEE OFFICE? WHO IS YOUR GENERAL SECRETARY? WHAT IS YOUR AGENDA? WHERE IS PARTY PROGRAM? AND WHERE IT IS AVIALBLE? TELL THE ALL … THERE AFTER COME TO DEBATE WITH IDIOLOGICAL …. ATLEAST TELL YOUR UNIT SECRETARY NAME ,…..

      • /////////////Posted on August 22, 2009 at 2:27 pm
        YOU ARE A COOLIGANS, YOU HAVE NO RIGHT TO SAY , WHAT I AM DOING? BECAUSE ITS MY LIBERTY … WHEN YOU ESTABLISH WHAT I STATED IN MY POST ARE WAST AND USELES? WHERE IS YOUR CETRAL COMMITEE OFFICE? WHO IS YOUR GENERAL SECRETARY? WHAT IS YOUR AGENDA? WHERE IS PARTY PROGRAM? AND WHERE IT IS AVIALBLE? TELL THE ALL … THERE AFTER COME TO DEBATE WITH IDIOLOGICAL …. ATLEAST TELL YOUR UNIT SECRETARY NAME ,…./////////////

        டேய் போலி!

        தமிழ்ல எழுத மாட்டியா டுபுக்கு. உங்க்கு ஒரு யோக்கியமான பெயரை மொதல்ல வச்சிக்கிட்டு பேசவாடா அம்பி.

        கட்சி திட்டத்தை பற்றி ஏற்கெனவே நான் மேலேயே சுட்டிக்காட்டியுள்ளேன். திட்டம் என்பது குறித்து பேசுவது உங்கள் அரசியல் போன்று பொழுதுபோக்கு நடவடிக்கை அல்ல. எமது திட்டம் குறித்து பேச வேண்டுமென்றால் நீ யோக்கியமாக திட்டத்தின் அடிப்படையில் வேலை செய்யும் ஒருகட்சியில் இருந்து கொண்டு எமது திட்டம் குறித்து விவாதிக்க வாடா அம்பி.

        ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் தேர்தலுக்குத் தேர்தல் எடுபிடி வேலை செய்யறதத் தவிர உமது கட்சிக்கு எந்தத் திட்டமும் கிடையாது. கட்சிக்குள் கோஷ்டி சண்டை முதல் குழாயடி சண்டைகள் வரை பராமரிப்பது, சகதோழனை ’நக்சலிச பங்கரவாதி”யின்னு பீதியூட்டி போலீசிடம் காட்டிக் கொடுக்கும் கைக்கூலி வேலைகளைத் தவிர உமது கட்சிக்கு என்ன திட்டம் இருக்கிறது?

        நீ யோக்கியவானாக இருந்தால் உனது கட்சியின் திட்டத்தையும் அதிலிருந்து பிறழாமல் நீங்கள் செலபட்டுவருவதாகவும் நிரூபித்து விவாதிக்கவாடா, நாங்களும் காத்திருக்கிறோம். அதுக்கெல்லாம் முன்னாடி உனக்குன்னு சொந்தபெயர் எதாவது இருந்தா அதையாச்சும் போட்டுக்கிட்டு எழுது. இப்படி அனாமதேயமா புலம்பாதேடா, அம்பி!

      • ஐயா போளி, இந்த கேள்விய கேட்டு உங்களுக்கே போரடிக்கலியா?

        இந்த கேள்வி அல்லது ஒப்பாரிக்கு 8 மாசம் முன்பே சொல்லப்பட்ட பதில்
        ……………………………….
        Posted on December 26, 2008 at 8:02 pm
        மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில முகவரி:
        இரா.சீனிவாசன்,
        என்.4, ஐந்தாவது தெரு, செகந்நாதபுரம்,
        சேத்துப்பட்டு, சென்னை – 600 031
        தொலைபேசி 044- 2836 0344
        செல்பேசி – 94446 48879
        இந்த முகவரியில்தான் ம.க.இ.கவின் மாநில பொருளாளர் தோழர் சீனிவாசன் குடும்பத்தோடு குடியிருக்கிறார். எமது அமைப்பின் எல்லா வெளியீடுகளிலும் இந்த முகவரிதான் இடம் பெறுகிறது. செல்பேசி சென்னை ம.க.இ.க வின் செயலர் தோழர் வெங்கடேசனிடன் உள்ளது. ஒரு அமைப்பின் பிரசுரத்தில் தனது வீட்டு முகவரியைக் கொடுத்து செயல்படும் ஒரே அமைப்பு எங்களுடையதுதான். சி.பி.எம் பிரசுரங்களில் பாதுகாப்பிற்காக அவர்களது கட்சி அலுவலகங்களின் முகவரிதான் இடம் பெறும். இதிலுருந்து யார் தைரியசாலி, யார் கோழை என்பதையும், யார் இரகசியமாக செயல்படுகிறார்கள் என்பதையும் வாசகர்கள் புரிந்து கொள்ளலாம்.
        வினவு
        …………………..

        இன்னமும் நிரைய விவரங்களோடும், இந்த போளிகம்மூனிஸ்டு ஓட்டுப்பொறுக்கி கூட்டத்தை அம்பலப்படுத்தும் விறுவிறுப்பான பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்….

        கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா [ரவுடியிஸ்ட்] !

      • தோழர் ஏகலைவன்,
        விவசாயிகளை கொன்று, தொழிலாளிகளுக்கு துரோகம் செய்து, டாலர்களை நக்க, நாட்டை அடகு வைக்க நாக்கை தொங்க போட்டு அலையும் CPI(M) கட்சி கருங்காலிகளை போலி கம்யுனிஸ்டுகள் என சொல்லி கம்யுனிஸ்டுகளை கேவலப்படுத்த வேன்டாம். அவர்களை போலி மனிதர்கள் என சொல்லலாம். அல்லது முன்னாள் மனிதர்கள் என சொல்லலாம். அல்லது உன்மையான பாஸிஸ்டுகள் என்று சொல்லலாம்.

  36. திட்டம் பற்றி கேட்ட பதில் கிடையாது … இவரு மட்டும் சி பி எம் திட்டம் பற்றி குறை சொல்வாரம்… முதலில் உங்கள் திட்டம் சொல்லு , பிறகு சி பி எம் குறை சொல்லு …

    • கூட்டணி மு.க கூட இருந்தா அம்மா உங்களுக்கு அம்மா ஒரு பாசிஸ்டாகவும் … அதே அம்மா இப்போ உங்களுக்கு சோசலிஸ்ட் ஆகவும் தெரியிராரே… அது எப்படிங்கண்ணே… ?

    • உங்க திட்டத்தைத் தந்தால்தான் எங்களது திட்டம் குறித்து பேசுவோம் என்று நான் சொல்லவில்லை, ஐயா.

      திட்டத்தின் படி இயங்குகிற ஒரு கட்சியின் சார்பில் நீங்கள் பேசுவதாக நெஞ்சைத் தொட்டு உண்மையாகச் சொல்ல முடியுமா உங்களால்?

      இதனைக் கொஞ்சம் தெளிவுபடுத்திவிடுங்கள் உங்களுக்கு புண்ணியமாப் போகுமய்யா!

  37. நாங்கள் திட்டத்தின் படி நடகிறமோ இல்லையா என்பது நீ சொல்லி தெரிய வேண்டியாயதிலை . முதலில் நீ திட்டத்தின் படி நடகிறைய என்று தெரிய உன் திட்டத்தை சொல்லு … கொறஞ்சபட்சம் அது எங்க கெடைக்கும் சொல்லு .. அட்ரஸ் சொல்லு … நான் படிச்சிட்டு ,சி பி எம் விட சிறந்த திட்டம் என்றால் நான் உன்னோட கருத்தை ஏற்று கொள்கிறேன்…

  38. திட்டம்னு கேட்டவுடனேயே எங்க போய் பதுங்கிட்டாங்க…. இவ்வளவு நேரம் கேள்வி கேட்டப்ப சட்டமன்றத்துல நீங்க கேக்கலையான்னு கேட்டவங்கள்ளலாம் துண்டக் காணோம், துணியக் காணோம்னு ஓடிட்டாங்களே…

    ஹலோ… யாருங்க அது… ரூம் போட்டுட்டீங்களா…

    என்ன.. எதுக்கா… திட்டம் போட யோசிக்கணுமே…

    • அய்யா கணேசு!

      திட்டத்தைப் பற்றி கேட்டதுமே பம்மிப் பதுங்குவது நீங்கள்தான். நீங்கள் நியாயபப்டுத்தி வாதிடுகின்ற கட்சியில், அதன் திட்டத்தின் அடிப்படையில் விரும்பி ஏற்றுக் கொண்டு வேலை செய்வதாக உங்களால் சொல்ல முடியவில்லை. உங்கள் கட்சியின் திட்டம் பொலிட்பீரோ போலிகளால் துடைத்து உங்களைப் போன்றவர்களின் மூஞ்சியில் வீசியடிக்கப்பட்டு வெகுநாட்களாகிவிட்டது. அதை முதலில் சரி செய்துவிட்டோ அல்லது உதறியெறிந்துவிட்டோ வாருங்கள் எமது திட்டம் குறித்து விரிவாக விவாதிப்போம்.

      மேலே, தோழர்கள் நொந்தகுமாரன், கார்டூனிஸ்ட் பாலா, இன்னபிற தோழர்களும் நானும் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கிறோம், அதற்கெல்லாம் பதிலளிக்கத் துப்பில்லாமல் ஓடி ஒளிந்தது யார், கணேஷ்?

      எல்லாப் பின்னூட்டத்திற்கும் யோக்கியமான பதிலைப் பதியச் சொல்லி உங்களுக்கு நினைவூட்டி நான் பதிந்த பின்னூட்டங்கள் அப்படியே காட்சிக்கு இருக்கின்றன, மேலே சென்று பாருங்கள்.

      சிங்கூர், நந்திகிராம், லால்கார் என்று நீங்கள் முதலாளித்துவ – ஏகாதிபத்திய கைக்கூலிகளாக மாறி சாதாரண உழைக்கும் மக்களையும் விவசாயிகளையும் கொண்று குவித்தீர்களே, அது எந்த திட்டத்தின் அடிப்படையில் உங்கள் கட்சியினால் செய்யப்பட்டது?

      தேர்தலுக்குத் தேர்தல் அணிமாறி ஓட்டுப்பொறுக்கிய நீங்கள், பார்ப்பன பாசிச ஜெயாவோடு இம்முறை கூட்டு வைத்தது எப்படி? ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்களை போலீசு குண்டர்களைக் கொண்டு கடுமையாகத் தாக்கி ‘எஸ்மா’, ‘டெஸ்மா’ போட்டு வேலையைப் பிடுங்கிய அந்த பாசிச வெறியாட்டத்தையும், இந்துமதவெறி நடவடிக்கைகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டு ‘அம்மா’வுக்காக ஓட்டுக் கேட்க நீங்கள் பெற்ற கைக்கூலி எவ்வளவு? இதுவும் சி.பி.எம். கட்சியின் திட்டத்தின் அடிப்படையில் நடந்ததுதானா? இதையெல்லாம் நேர்மையாகப் பரிசீலித்து பதில் சொல்லிவிட்டு பிறகு வாருங்கள், எமது திட்டம் குறித்துப் பேசலாம்.

      • இது இப்புடி இருக்கக்கூடாது என்று சொல்றவங்க, அது எப்புடி இருக்கணும்னு சொல்லணுமே… மாற்றுத்திட்டத்தோடு வந்து விவாதிங்க…

      • நீங்கள் மம்தா உடன் ஜோடி சேர்ந்தது உங்கள் திட்டத்தின் ஒரு பகுதியா? உங்கள் புரட்சி கூட்டில் மம்தா உங்களுக்கு பங்களியா? அமெரிக்கா இடம் பணம் பெற்று வாய் கூசாமல் மக்கள் சீனத்தை முதலாளித்துவ நாடு என்று சொன்னது உன் திட்டத்தின் பகுதியா? முதலில் உன் திட்டத்தை மக்கள் முன் கொண்டு செல் ல முயற்சி எடு … பிறகு வந்து யார் தவறுகிறார்கள் என்று மக்கள் முடிவு செய்வார்கள் .. எங்கள் பாதை சரியானதே .. எங்கள் லட்சியம் சரியானதே .. எங்கள் திட்டம் சரியானதே … இதற்கு மட்டும் நீ நாகரிகமாக பதில் சொல்லு … நிச்சயம் உன்னிடம் அதை எதிர் பார்க்க முடியாது …

      • ///////////இது இப்புடி இருக்கக்கூடாது என்று சொல்றவங்க, அது எப்புடி இருக்கணும்னு சொல்லணுமே… மாற்றுத்திட்டத்தோடு வந்து விவாதிங்க…/////////////

        நிச்சயமா விவாதிப்போம் கணேஷ்,

        ஆனால், திட்டத்திற்கும் செயல்பாட்டிற்கும் சம்பந்தமில்லாத போலிப் பிழைப்புவாத கூடாரத்திலிருந்து வெளியேறிவிட்டு வாருங்கள் பேசுவோம். இல்லை, திட்டத்தைக் குப்பையில் போட்டுவிட்டு சீட்டுப் பிச்சை எடுக்கும் இந்த போலி அரசியல் எனக்கு உகந்ததாக இருக்கிறது என்று நீங்கள் மார்தட்டுவீர்களேயானால், பிற அமைப்புகளின் திட்டம் குறித்து அறிந்து என்ன பயன்?

        நீங்கள் இப்போது சார்ந்திருக்கும் கட்சியில் நீங்கள் இயங்கிவருவதற்கு காரணம் அக்கட்சியின் திட்டம் அல்ல என்று நீங்களே வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும்போது எமது திட்டம் குறித்து நீங்கள் கேள்வி எழுப்புவதெல்லாம் சும்மா பம்மாத்துதான்.

        திட்டம் குறித்து விவாதிப்பதற்கு முன்னால் மேலே சில தோழர்கள் சி.பி.எம்.மின் தேசிய அரசியல் அயோக்கியத்தனங்களைக் கண்டித்து பதிந்தவற்றுக்கு ஏதாவது பதில் இருந்தால் பதிந்துவிட்டு தொடருங்கள்.

    • அட அறிவாளிகளா !
      நீங்க கீழைக்காற்றுக்கு கூட போனதில்லையா ?
      எமது புரட்சி திட்டம் அங்கு கிடைக்கும் போய் வாங்கி படிங்க‌
      அப்புறமாவது திருந்துங்க.

      • மாபெரும் அறிவாளிகளே … உங்கள் கீழை காற்றில் உங்கள் திட்டம் என்று எந்த கட்சின் திட்டத்தை கேட்பது….. அதை முதலில் கூறுங்கள் .. வெறுமனே புரட்சி திட்டம் என்றால் எதை படிப்பது.. திட்டத்தை வெளிபடையாக விவாதிக்க தயார் இல்லாத நீங்கள் , எங்களை பார்த்து போலி என்கிறைய இது நியாயமா ? கட்சி பெயரை சொல்ல முடியாத நீங்கள் புரட்சிஐ மக்களிடம் எவ்வாறு கொண்டு செல்வீர்கள் … குறுங்குழு வாதிகளே ….. வாய் சொல் வீரர்களே .. !

  39. அருணன் பேசிக்கொண்டிருந்தார். “மாநில சுயாட்சிதான் தீர்வு என்று நாங்கள் சொன்னபோது சில நண்பர்கள் தனி ஈழம்தான் தீர்வு என்று சொன்னார்கள். 25 ஆண்டுகளுக்குப்பின் மாநில சுயாட்சிதான் தீர்வு என்பதை காலம் நிரூபித்திருக்கிறதா, இல்லையா?” என்று முழங்கினார். //

    ஒரு கருத்துருவாக்கம் தோற்றுப்போனதால் மட்டுமே அது தவறு என்று ஆகிவிடாது என்ற எளிய உண்மையைக் கூட புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லாத இவர்களெல்லாம் என்ன எழவுக்கு ஈழத்தைப் பற்றி பேசி அவர்களும் குழம்பி , மக்களையும் குழப்புகிறார்கள்????????

    முதலில் தீர்வு என்னவென்பதை ஈழத்தமிழர்கள் தான் முடிவெடுக்க வேண்டுமே தவிர தமிழகத்திலேயே எந்த முடிவும் எடுக்கவியலாமல் திமுக , அதிமுக என்று மாறி மாறி சீட்டுப்பிச்சை எடுக்கும் மார்க்சிஸ்டுகள் அல்லர்…..!

    அட ஈழத்துக்கு படையனுப்புவேன் என்று செயலலிதா சொன்ன போது வாய்மூடி , கைகட்டி நின்ற காரணம்தான் என்ன? கொள்கையை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டார்களா என்ன?

    • வணக்கம் அண்ணாச்சி .. உங்க திடம் பத்தி கேட்டா,விஜயகாந்துக்கு போட்டியா ஆட்சிக்கு வந்த பிறகு வறுமையை ஒழிக்கதிட்டம் சொல்லுவேன் என்று சொல்லுற மாதிரி , நீயும் உன் கட்சி திட்டத்தை , சேர்ந்த தான் சொல்லுவேன் சொல்லுற…. மக்களை வச்சு காமெடி கிமெடி பண்ணலியே ?

  40. நண்பர் கணேஸூக்கு முதலில்‍‍‍‍‍‍‍ ‍‍‍…. முட்டுச்சந்தில் திண‌ரும் சி.பி.எம் …. நூலைப் படியுங்கள். அதன் மீதான கருத்தைப் பதிவு செய்யுங்கள். அதற்கு முதலில் தைரியம் இருக்கிற‌தா? என்பதைப் பார்த்துவிட்டு பிறகு பேசலாம். தெக்கூர் பிச்சை

  41. தோழர் வினவு தமிழ்ச்செல்வன், மாதவராஜ் தமக்கு ஆதரவான காமெண்டுகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள். அவர்களை விமர்சிக்கும் காமெண்டுகளை எல்லாம் தரக்குறைவு காட்டகரிக்குள்ளே போட்டு அமுக்கிவிடுகிறார்கள்.

    நேத்திக்கு தமிழ்ச்செல்வன் போட்ட அழுகுனிபதிவுக்கு தோழர் ஒருவர் போட்ட காமெண்டு இது. இதை அமுக்கிவிட்டு தமது கட்சித்தோழர் தீட்சண்யா, தீபா போடற காமெண்டுகளை மட்டும் அனுமதித்திருக்கிறார். இதுதான் இவர்களின் கட்சியின் ஒற்றை ஆட்சி.
    இந்துவா பாசிசிட்டுகளுக்கும் மக்கள்கலை இலக்கியகட்சிபாசிசிட்டுக்களுக்கும் வித்தியாசமே இல்லீங்க. மக்களை கொன்னு மோடி பொழைக்கிறான். மக்களை வித்து இவனுங்க பொழைக்கிறானுங்க. கதைமட்டும் கிலோமீட்டரு நெடுஞ்சாலையா வாயால மொழம் போடுவானுங்க.

    அய்யா எப்படியாக உங்களால் இப்படியாகப் பாசாங்குத்தனமாகப் பேசமுடிகின்றது?

    முஸ்லீம் மக்களை விடுதலைப்புலிகள் கலைத்தார்களென்றால், கடந்த 1995 இலிருந்து உங்கள் சிபிஎம் ஆதரிக்கும் சிங்கள அரசுதானே யாழ்ப்பாணத்திலேயிருக்கின்றது. குடியேற்றியிருக்கமுடியாதா?

    அமிர்தலிங்கம் நிச்சயமாக இந்தியக்கூலியாகவும் நீங்கள் பணியாற்றிய இந்திய இராணுவத்துக்கு ஆணுறை தயாரிப்பாளராகவும் இருந்திருப்பார். தமிழ்மக்களுக்கு ஆகியிருக்கக்கூடியதென்ன?

    சோகமென்பதாகப் பசப்புவார்த்தைகளிலே எழுதிக்குவிக்கின்றீர்களே? சரி புலிகள்தான் எல்லாத்தவறுகளுக்கும் காரணம். இப்போது போய்விட்டார்களே? என்னத்தினை நீங்கள் பசப்புவார்த்தைகளாலே உருகிச்சொல்லும் தமிழ்மக்களுக்குச் செய்கின்றீர்கள்? உங்கள் ஆங்கிலத்திலே எழுதும் எசமான் ராம் எழுதுவதைப்போல இப்படியாக எழுதுவதையா?

    /சிங்களப்பகுதியில் உள்ள இடதுசாரி சக்திகள் மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் பகுதி தம் வரலாற்றுக் கடமையை ஆற்றத்தவறியதும் இந்தப் பேரழிவிற்கு ஒரு முக்கியக் காரணம் என்றும் சொல்கிறோம்/

    வரட்டு அரசியலையும் குருட்டுச்சித்தாந்தைத்தையும் நிதர்சனநோக்கின்றி அடுத்தானுக்குப் போதிப்பதே தமிழகத்தின் இடதுசாரிகளுக்கு வழக்காயிற்றென்பதை நாம் அறிந்ததே. ஆனால், கேக்கிறவனை எத்தனை நாட்களுக்குத்தன கேனையனென்று எண்ணிக்கொள்வீர்கள்? சொன்னதற்காக மாற்றுக்குழுக்களிலே கட்சிகளிலே போட்டு எம்மை அமுக்காதீர்கள். சொல்ல வருவதென்னவென்ரால், இடதுசாரிகள்,
    மார்க்சிய சித்தாந்தத்திலே நம்பிக்கை கொண்டவர்கள் என்று நம்மைப் பற்றிச் சொல்வதையெல்லாம் உங்களைப் போன்ற சொல்லுக்கும் நோகாமல் மக்கள்புரட்சி செய்துகொண்டும் அசல் வலதுசாரிப்பிற்போக்கு அரசுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரிக்கும் ஆட்களைப் பார்ப்பதினாலே நிறுத்தி வைக்கவேண்டியதாயிருக்கின்றது. நந்திகிராம் முதல் நந்திக்கடல்வரை ஆங்கிலத்திலே பாசிசம்
    பேசும் இந்திய சிபிஎம் பெரிசுகளும் தமிழிலே அதற்குப் பாஷ்யம் தரும் முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கச்சிறுசுகளும் செய்வதெல்லாம்
    அசல் மக்கள்விரோதச்செய்கைகளே.

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் கருத்தரங்குகள் பொதுக்கூட்டங்கள் நடத்தி என்னத்தினைச் செய்வீர்கள். உங்களுக்கும் நோகாமல், அரசுக்கும் நோகாமல், நொந்துகொண்டிருக்கும் தமிழ்மக்களின் கையறுநிலையின் ஆழம் அகலம் புரியாமல் சொற்களைக் கொட்டித் தள்ளுவீர்கள். உங்களுக்கு இது வெறும் விளம்பரப்பாணியும் பணியும்.

    முரணான கருத்துகளையெல்லாம் கட்சியைக் கேள்வி கேட்காதே என்ற நிலையிலே அமுக்கிவிடுவதுபோல, இங்கும் அமுக்கிவிடுங்கள். உங்களை நோக்கிக் கேள்வி கேட்பதையெல்லாம் கெட்டவார்த்தைகளின் கந்தகச்சரங்கள் என்று நீங்கள் பெரியமனுஷத்தோரணையோடு அமுக்கிவிடலாம்.

    முற்போக்கு ஆட்களான உங்களைப் போன்றவர்கள் தொடக்கம் பிற்போக்கு ஆட்களான அ. மார்க்ஸ் ஊடாக நற்போக்கு ஜமாலன்வரை “சிங்கள இடதுசாரிகளுடனும் புத்திஜீவிகளுடனும் தமிழ்மக்கள் பேசுங்கள். பேசாததுதான் இப்போதைய நிலைக்கான காரணம்” என்பதுபோல ஈழத்தமிழர்களை ஒன்றுமே அறியாத டப்பாங்குத்து சினிமா பார்க்கும் பாப்பாக்கள் கதிரைகளிலே வைத்துப்பேசுகின்றீர்களே?
    இடதுசாரிகளென்றால் ஜேவிபியா? வரதராஜன் அண்ணல் வாயாரவாழ்த்தி கைவிரித்து நெஞ்சாரத்தழுவிக்கொண்ட ஜேவிபியா? அல்லது, ஈழத்தமிழர்களின் கொலைகளைப் பயங்கரவாதமென்று அடித்து கியூபா, இந்தியா, சீனா, ரஷ்யா, வியட்னாம் ஆதரவோடு ஜெனிவாவிலே விசாரணைவராதுதடுத்த தயான் ஜயதிலகாவா? (காஸாவிலே இஸ்ரேல் செய்ததைக் கேள்விகேட்டுக்கொண்டு, வன்னியிலே அதைவிடமோசமாக ஸ்ரீலங்கா அரசு செய்ததை
    நியாயப்படுத்த தயானாலும் உங்கள் ஆங்கிலம்பேசும் ஆண்டை ராமினாலும் மட்டுமே முடியும்). நீங்கள் சொல்லுங்கள் எந்த இடதுசாரியை நீங்கள் சொல்கிறீர்கள்? சிங்களத்தொழிற்சங்கங்கள் தமிழ்த்தொழிலாளர்கள் பற்றி எவ்வித அக்கறையும் பிரக்ஞையும் கொண்டிருக்கின்றன? என்றைக்காவது இலங்கைவரலாற்றினை வாசித்துப் புரிந்துகொண்டபின்னாலே, வழவழாச் சித்தாந்தங்களையும்
    நியாயங்களையும் கொட்டவேண்டுமென்று தோன்றியதுண்டா?

    அய்யா, பேசாமல் இருக்கின்றோமென்பதற்காக, நாங்கள் பித்தர்களோ, முட்டாள்களோ அல்லர் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். தமிழகத்தின் எல்லாவிதமான பசப்பும் புசத்தும் புல்லர்களோடு நியாயம் பேசிப்பேசி அலுத்தும் வெறுத்தும் விட்டதாலேயே எம்மைப்போலப் பலரும் ஒதுங்கியிருக்கின்றோம். உங்கள் அரசியலுக்கு எங்கள் செத்த உடலமும் விற்குமென்று தெரிகிறது. அந்த விற்பனையை
    வாங்கும் அப்பாவித்தமிழகப்பொதுஜனத்துக்காகவும் சேர்த்து வருந்துகிறோம். அதேநேரத்திலே அவர்களிடமிருக்கும் அக்கரிசனையை – உங்கள் அடாவர்த்தகத்தினை செய்யவைக்கும் அக்கரிசனையை- மதிக்கிறோம்.

    ஒன்றுமட்டும் உண்மை. உங்கள் இனிய நண்பர்கள் என்ன கெட்டவார்த்தைகள் உள்ளடக்கிக் கேள்விகேட்டார்களென்று தெரியவில்லை. ஆனால், அதை உள்ளடக்காமலே கேட்கிறேன்:

    “எல்லாம் முடிஞ்சு போன பிறகு இப்ப என்ன அற்புதத்துக்கு கூட்டம் போடறீங்க? கூவிக்கூவிப் பேசறீங்க?”

    தூ! செத்தவன் பிணத்திலே ஏறிநின்று வெட்டியான் வருமானம் வசூல்பண்ணும் நீங்களெல்லாம் மனுசங்கதானா? அந்த அசல் கார்ல் மார்க்ஸ் வந்தால், துப்பாக்கி கற்று முதல் உங்களைத்தான் சுட்டுத்தள்ளூவார்.

    இப்பின்னூட்டத்தை பத்தாயிரம் காரணம் சொல்லி அமுக்குங்கள். அட! இவனுக்கென்று ஒரு பதிவு இருக்காதென்ற தீக்கோழி உணர்வு சிபிஎம் மூடியசித்தாந்தத்திலிருந்தால், நாமென்ன செய்ய?

  42. உண்மையில் காஷ்மீர் ஒரு தனிநாடு,அருணாசலப் பிரதேசம் சீனாவுக்கு சொந்தமானது. இதனை இந்தியா ஒத்துக்கொள்வது தான் சாலச் சிறந்தது.

Leave a Reply to கம்யுனிஸ்டுகளை காயடிப்போர் சங்கம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க