privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்லீனா மணிமேகலை: அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி !!

லீனா மணிமேகலை: அதிகார ஆண்குறியை மறைக்கும் விளம்பர யோனி !!

-

vote-012நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும்.

1.முதல் கவிதை:
நான் லீனா
நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில்
ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில்
ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில்
வாழ்கிறேன்

என் வேலை
என்னிரு தொடைகளையும் எப்பொழுதும்
பரப்பியே வைத்திருப்பது

நாடு கோருபவ்ர்கள்
ஜிகாத் தொடுப்பவர்கள்
புரட்சி வேண்டுபவ்ர்கள்
போர் தொடுப்பவர்கள்
ராஜாங்கம் கேட்பவர்கள்
வணிகம் பரப்புபவர்கள்
காவி உடுப்பவர்கள்
கொள்ளையடிப்பவர்கள்
நோய் பிடித்தவர்கள்
எவன் ஒருவனும்
வன்புணர்வதற்கு ஏதுவாய்
யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு
கருங்குழியென செதுக்கி வைத்துக் கொள்ள
சொல்லித் தந்திருக்கிறார்கள்

அம்மா அம்மம்மா அப்பத்தா அத்தை எல்லாரும் ஒருவரே
அவ்வப்போது
காலக்கெடுவில்
லிட்டர் கணக்கில் சேர்ந்துவிடும் விந்துவை
தூர் வாருவதையும்
படிப்பித்திருக்கிறார்கள்

எனக்கு தெரியும்
அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
லும்பன் தரகன் மகாராஜா தளபதி
திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
கணவன், தந்தை, சகோதரன், மகன்
எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
என்ற ரகசியம்

எனக்கு மொழி தெரியாது
நிறம் கிடையாது
நாகரிகம் தேசம் கொடி அரசாங்கம்
வரலாறு ராணுவம் சட்டம் நாணயம்
ஏதொன்றையும் முகர்ந்துப் பார்த்தாலும்
என் உதிர வீச்சமடிக்கும்

பிரம்மா விஷ்ணு சிவன் புத்தன்
யேசு அல்லா இந்திரன் வர்ணன்
சூரியன் கருப்பசாமி அய்யனார்
ஆகமங்கள் இதிகாசங்கள் காவியங்கள்
யாவும்
கலைக்க முயன்றும்
என் சூலகத்தில்
தங்கிவிட்ட கருக்கள்

அணுகுண்டோ ரசாயனத்துப்பாக்கியோ
ராக்கெட்டோ கன்னிவெடியோ
எறியப்படும் குண்டுகளுக்கு
உடல் செத்தாலும்
யோனிக்கு சாவில்லை
யோனியிலும் சாவில்லை
——————————
2. இரண்டாவது கவிதை:

ஒரு புணர்தலின் உச்சியில் விலகி
அந்தரத்தில் விந்தைப் பீய்ச்சி
தோழர் என்றெழுதினாய்
உடலை உதறி கொண்டு எழுந்து
உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள் என்றார் மார்க்ஸ்
என்று பிதற்றினாய்

கால்களுக்கிடையே தலையை இழுத்தேன்
உபரி என யோனி மயிரை விளித்தாய்
உற்பத்தி உறவுகள் என தொப்புளை சபித்தாய்
லெனின் ஸ்டாலின் மாவோ சி மின்
பீடத்தை ஒவ்வொருவருக்காய் தந்தாய்
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்
மனம் பிறழந்த குழந்தை போல மம்மு குடித்தாய்
பிரஸ்த்ரோய்கா, க்ளாஸ்னாஸ்ட் என்று மென்று முழுங்கினாய்
இடையின் வெப்பத்தில் புரட்சி என்றாய்
மூச்சின் துடிப்பில் பொதுவுடைமை என்றாய்
குறியை சப்ப குடுத்தாய்

பெர்லின் சுவர் இடிந்தது
சோவியத் உடைந்தது
எழுச்சி என்றாய்
அமெரிக்கா என்று அலறி ஆணுறை அணிந்தாய்

கீழே இழுத்து
உப்பை சுவைக்க சொன்னேன்
கோகோ கோலா என்று முனகினாய்
மயக்கம் வர புணர்ந்தேன்
வார்த்தை வறண்ட
வாயில் ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப் போட்டேன்
இது கட்டவிழ்ப்பு என்றேன்

-லீனா மணிமேகலை


கவிதை எழுதியோ, கோட்ம்பாக்கத்தில் புகுந்தோ, என்ன செய்தாவது எப்படியாவது பிரபலமாக விரும்பும் லீனா மணிமேகலை என்னும் பெண் இப்படியான இரண்டு கவிதைகளை தனது பிளாக்கில் எழுதியிருந்தார். அந்தக் கவிதை சொல்ல வருகிற கருத்து அல்லது வெளிப்படுத்த விரும்பும் உணர்ச்சி இதுதான். மத்திய கிழக்கில் அமெரிக்கா வீசிக் கொண்டிருக்கும் குண்டுகளுக்கும்., வன்னியில் பேரினவாத இலங்கை அரசு நடத்திய கொலைகளுக்கும், ஆபகானில், பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கும் மனிதப் படுகொலைகளுக்கும் இன்னும் இன்னும் உலகில் ஏகாதிபத்தியங்கள் மக்கள் மீது தொடுத்துள்ள போர்களுக்கும் இலட்சியம் ஒன்றே ஒன்றுதான். அது ஆண் குறியின் வெறி….. தவிரவும் மதவாதிகள், பாசிஸ்டுகள், உழைக்கும் ஏழை மக்கள், புரட்சிகர சக்திகள், என எல்லோரையும் ஒரே கூண்டில் அடைத்து அத்தனை பேரையும் ஆண்குறியின் வடிவமாகக் காணும் மணிமேகலை, மயங்கி மல்லாந்து கிடந்தபடியே காறித்துப்புகிறார். கவிதை தெறிக்கிறது.

சில காலங்களுக்கு முன்பு தமிழில் பாலியல் கவிதைகளை பெண்கள் எழுதுவதில்லை என்ற மனக்குறையை சிலஅறிவுஜீவிகள் வெளியிட்டிருந்தனர். 60, 70 களில் சரோஜாதேவி என்ற பெயரில் பலான இலக்கியங்களைப் படைத்து வந்த படைப்பாளி ஒரு ஆணாகத்தான் இருக்கமுடியும் என்று உண்மை கண்டுபிடிக்கப்படவில்லை. ஏனென்றால் அமைப்பியல்வாதம், கட்டுடைத்தல் போன்றவை அப்போது அறிமுகமாகவில்லை என்பது மட்டுமல்ல, இந்த அறிவுஜீவிகளும் அப்போது ( நடுத்தர) வயதுக்கு வரவில்லை. பிறகு ஐரோப்பிய கலகத் தத்துவங்களால் கிளர்ச்சியூட்டப்பட்ட நடுத்தரவர்க்க கலகக் காரர்களின் குழு “பலான கதைகளையும் கவிதைகளையும் பெண்களே எழுதினால் எப்படி இருக்கும் என்று தங்களது நடுத்தர வயதில் ஆசைப்பட்டது. இந்த எழுத்தியக்கத்தையும் தொடங்கி வைத்தது. தம்மை பிரபலப்படுத்திக் கொள்ள வேறெந்த தனித்திறமையும் வாய்க்கப்பெறாத, மாதர்குல மாணிக்கங்களில் சிலர், புணர்ச்சி இலக்கியம் என்ற இந்தப் புதிய ஜெனரை (Genre) படைக்கத் தொடங்கினர்.

தனியார்மயப் புரட்சி, நுகர்வியப் புரட்சி, பாலியல் புரட்சி ஆகிய புரட்சிகளை மூன்று மாதத்துக்கு ஒருமுறை தொடர்ந்து அட்டைப்படத்தில் செய்துவரும் இந்தியா டுடே எனும் பூணூல் அணியாத என்.ஆர்.ஐ இந்து தேசியப்பத்திரிகை, இத்தகைய கவிதாயினிகளுக்கு மேடை அமைத்துக் கொடுக்கவே, லீனா மணிமேகலை போன்றோர் ஆடத்தொடங்கினர். மேலை நாடுகளில் கால்பந்து ஆட்டத்தின் நடுவே ஆடையை அவிழ்த்துப் போட்டு ஓடி, கலகம் செய்து, பிரபலமாகும் பரிதாபத்துக்குரிய பைத்தியங்கைப் போல, ஆணுறுப்பு, பெண் உறுப்பு போன்றவற்றை ‘பச்சையாக’ எழுதுவதனால் உலகமே தங்களையும் தங்கள் எழுத்தையும் கண்டு அஞ்சி நடுங்குவதைப் போல இவர்கள்  கற்பித்துக் கொண்டனர். இதற்கு ஆமாம் போடுவதற்கு சில விசிலடிச்சான் குஞ்சுகள். இந்த நவீன ரசனைக்கு ஒரு ரசிகர் கூட்டம். இந்தக் கட்டுரை மேற்படிக் கும்பலை குறிவைத்து எழுதப்படுவதால், அவர்களது கலகச் சொற்களையும் ‘குறி’யீடுகளையும் இதில் அவ்வாறே பயன்படுத்துகிறோம். மற்றப்படி உண்மைகளை உரைக்க வைப்பதற்கு உள்ளாடைகளைக் கழற்ற வேண்டும் என்ற கருத்தோ, விருப்பமோ எங்களுக்கு இல்லை.

லீனாவின் மேற்படி கவிதையில் உலகப் புரட்சியாளர்கள், பிற்போக்கு வாதிகள், மதவாதிகள், லும்பன்கள் போன்ற அனைவரது குறிகளும் இடம்பெறுகின்றன. சீரியல் இயக்குநர்கள் மற்றும் சினிமா இயக்குநர்களது குறிகள் மட்டும் இடம்பெறவில்லை. மேலும்  ஆண்குறி வரிசையில் லீனாவின் கணவரான சி.ஜெரால்டின் பெயரும் இடம்பெறவில்லை. காரணம் புனிதமா, அல்லது வேறு ஏதேனும் புதிரா என்று நமக்குத் தெரியாது.

பாலியல் நூல்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம் கொண்ட, ஆனால் கடையில் அதைக் கேட்டு வாங்கும் தைரியம் இல்லாத, இணையத்தில் பலான சைட்களை மேயும் ஆசை கொண்ட, ஆனால் மனைவியிடமோ, பெற்றோரிடமோ சிக்கிக் கொள்வோம் என்ற அச்சமும் கொண்ட “ஆண்குறிகளுக்கு”  தீனி போடுவதுதான்  லீனாவின் நோக்கம் என்று தெரிகிறது. இத்தகைய கோழைகளின் சந்தையை சார்ந்திருக்காமல், ஷகிலா ரசிகர்கள் போன்ற தைரியசாலிகளை லீனா நம்பலாம். ஷகிலா பட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் சேர்ந்து கொள்ளலாம். லீனாவின் தைரியத்துக்கு அதுதான் பொருத்தமான இடம்.

லீனா எழுதியுள்ள இந்தக் கவிதையை ஓபாமாவோ, கொலைகாரன் ராஜபட்சேவோ பார்த்தால் லீனாவின் தோளில் கையைப் போட்டுக் கொண்டு வரவேற்று அழைத்துச் செல்வார்கள். அப்படியே ஆண்குறி குறித்து ஒரு ஆவணப்படம் எடுக்க ஒரு மில்லியன் டாலரும் கூட கொடுக்கலாம். காரணம், அமெரிக்காவின் ஏகாதிபத்திய பயங்கரவாதம் உலகெங்கும் நடத்தும் ரத்த வெறியாட்டத்தை அந்த ரத்தக் குளியலில் கொல்லப்படும் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைகளை, வன்னியில் கொல்லப்பட்ட ஐமப்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஈழ மக்களின் படுகொலையை மறைத்து அப்படுகொலைகளை ஆப்ட்ரால் ஒரு ஆண் குறி பிரச்சனை என்று எழுதும் லீனாவை ராஜபட்சேவும், ஓபாமாவும் கொண்டாடாமல் என்ன செய்வார்கள் என்ற கேள்வியோடு கட்டுரையைத் துவங்குகிறோம்.

ஆண்குறி கவிதைகள் போக லீனா தற்போது என்ன செய்கிறார் என்று விசாரித்தோம். அவர் செங்கடல் என்றொரு ஆவணப்படமோ, திரைப்படமோ எடுத்துக் கொண்டிருப்பதாகவும், இந்தப் படப்பிலில் கலந்து கொள்ள இலங்கை எழுத்தாளர் ஷோபா சக்தி ராமேஸ்வரம் வந்திருப்பதாகவும், செங்கடல் குழுவினர் படப்பிடிப்பை வெற்றிகரமாக ராமேஸ்வரத்தில் நடத்திக் கொண்டிருப்பதாகவும் தகவல் சொன்னார்கள்.

அந்த நேரத்தில்தான் தமிழ் மக்களின் ஆண் குறியான தினத்தந்தி நாளிதழில் அந்தச் செய்தியை படிக்க நேர்ந்தது.செய்தி இதுதான். வேலை பார்த்த தொழிலாளர்களுக்கு பல நாள் ஊதியத்தை கொடுக்க மறுத்த லீனா தலைமையிலான படப்பிடிப்புக் குழுவினரிடம் தொழிலாளர்கள் ஊதியம் கேட்ட போது அவர்களை அலைக்கழித்தார்களாம். வெறுத்துப் போன தொழிலாளர்கள் படம் பிடித்த ஒளிச்சுருளை அல்லது டேப்பை எடுத்துக் கொண்டு சென்னை கிளம்பிய போது படப்பிடிப்புக் குழுவினருடன் சேர்ந்து கொண்டு லீனா மணிமேகலை, ஷோபா சக்தி ஆகியோரும் சேர்ந்து அவர்களை தாக்கினார்களாம். கடைசியில் அடிவாங்கியவர்கள் போலீசுக்குப் போக, போலீசும் அடித்தவர்களை ஸ்டேஷனுக்கு அழைத்திருக்கிறது.

உடனே லீனா போலீசிடம் சீறிப்பாய்ந்ததாகவும் அப்படிச் சீறியதை படம் பிடித்த காவல்துறையினரை லீனா தள்ளி விட்டதாகவும் கடைசியில் ஷோபா சக்தி, லீனா ஆகியோர் ஸ்டேசனில் இருந்து பத்திரமாக வெளியேறி வந்து விட்டதாகவும் நாம் அறிய முடிகிறது. காவல் நிலையத்தில் மட்டுமல்ல பல இடங்களில் தனது முற்போக்கு முகத்தை காட்ட அஞ்சாதவர் லீனா மணிமேகலை.

ஒரு முறை லயோலாக் கல்லூரிக்கு ஒரு கூட்டத்திற்காக சென்றிருந்தார். ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட்டோடு சென்ற அவரை மறித்தது ஒரு கிறிஸ்தவ ஆண் குறி. தன்னை மறித்து நின்ற அந்த ஆண் குறிக்கு எதிராக சினந்து வெடித்தார் லீனா. அதையும் உலக மகா பிரச்சினையாக அதாவது ஈராக், ஆப்கான், குஜராத், ஈழம் போன்ற சில்லறைப் பிரச்சினைகளை விட முக்கியமானதாக சித்தரித்தார் லீனா. அப்போது அவர் காட்டிய ஆவேச எழுச்சிக்கு நிகராக இராமநாராயணன் படங்களில் வரும் அம்மன்களின் வேப்பிலை ஆட்டத்தை மட்டுமே ஒப்பிடமுடியும்.

பல பதிவர்கள், வேலையில்லாத முற்போக்குவாதிகள், விளம்பரங்களுக்காக வேடம்போடும் பெண்ணியவாதிகள் அனைவரும் லீனாவுக்காக திரண்டு வந்தனர். ‘அற்பமான’ உலக அரசியல் பிரச்சினைகளுக்காக சினமடையாதவர்கள் இந்த ஜீன்ஸ் பேண்ட், டீ ஷர்ட் பிரச்சினைக்காக ஆர்ப்பரித்தது ‘நல்ல’ விசயம்தான். இருக்கட்டும். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் ஒரு கவிதைக் கூட்டத்தை ஒருங்கிணைத்திருந்தார் லீனா. ( சுகன் வந்து இலங்கை தேசிய கீதம் பாடினார் அல்லவா? அந்த கூட்டம்தான்) அந்தக் கூட்டம் நடத்தப்பட்ட இடம் – முன்னர் லீனாவை  கிறிஸ்தவ ஆண் குறி ஒன்று மறித்து நின்ற அதே இடம்தான்.அந்த கிறித்தவ ஆண்குறிக்கு நேர்ந்த கதி சுகனுக்கு நேரவில்லை. இலங்கை தேசிய கீதத்தில் அத்தகைய ‘குறி’யீடுகள் எதுவும் அவருக்கு தெரியவில்லை போலும்!

சரி லீனாவின் தாக்குதலுக்கு ஆளான சினிமாத் தொழிலாளிகளுடைய  கோடம்பாக்கத்துக்கு வருவோம். சினிமாத் தொழிற்சாலையை (இது தொழிற்சாலையா என்பது வேறு விசயம்) கனவுத் தொழிற்சாலை என்பார்கள். சினிமாக்கனவுகளோடு வரும்  ஆயிரக்கணக்கான இளைஞர்களை மென்று துப்பும் தொழிற்சாலை என்பதனால் இப்படி சொல்ல்லாம். அல்லது கற்பனைக் குதிரையில் இரசிகர்களை ஏற்றி விட்டு, தான் மட்டும் காசில் குறியாக இருக்கும் கயமை காரணமாகவும் இந்தப் பெயர் வாய்த்திருக்கலாம். இந்தக் கனவுத் தொழிற்சாலைக்கு ஆண் குறி உண்டா, அல்லது தொழிற்சாலையே ஒரு ஆண்குறிதானா என்பது  லீனாவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த கனவுத் தொழிற்சாலையை இயக்குவது 24 சங்கங்கள் என்று சொல்வதை விட 24 துறைகள் என்று சொல்லலாம். இந்த 24 துறைகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஒரு திரைப்படம் உருவாக முடியும்.இயக்குநர், கேமிராமேன், டச்சப் பாய், மேக்கப்மேன், டான்ஸ் மாஸ்டர், சாப்பாடு பரிமாறுகிறவர்கள், லைட்ஸ் மேன், புகை போடுகிறவர்கள், மழை பெய்ய வைப்பவர்கள், வெடி குண்டுகள் வைப்பவர்கள் என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு துறை. இந்த வெவ்வேறு துறைகளுக்கும் தனித்தனி சங்கங்களும் உண்டு.  ஏ.வி. எம். களும், ஷங்கர்களும், ரஜினிகாந்துகளும், கமலஹாசன்களும் தமிழ் மக்களின்  ரத்தத்தை உறிஞ்சிக்  கோலோச்சும் இந்தத் துறையில்  ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் என்று ஒரு பிரிவினரும் உண்டு. சினிமாவில் கதாநாயகியாகும் கனவுகளோடு வந்து அந்த ஆசைகளாலேயே தூண்டிலில் சிக்கிய புழுக்களாக மாறி, ஆண் குறிகளால் எளிதில் சூறையாடப்பட்டு கடைசியில் இரவு நேர பாலியல் தொழிலாளிகளாக காலத்தை கழிக்கிறவர்கள்தான் இந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள். இவர்களில் 95% பேர் பெண்கள்.

இவர்கள்  லீனாவைப் போன்று கவிதைகளில் கற்பனையான ஆண்குறிகளை கட்டமைக்கும் வாய்ப்பு பெற்றவர்களல்லர். மாறாக ஆண் குறியின் கோரத்தை ஒவ்வொரு இரவிலும் அனுபவித்து அன்றாடம் கோடம்பாக்கத்தில் தங்களின் உதிரத்தை இழந்து நாற்பது வயதுக்குள்ளாகவே வனப்புகளை இழந்து வாழ்விழ்ந்து கடைசியில் பிச்சைக்காரிகளாகவும், மன நோயாளிகளாகவும், லீனாவின் மொழியில் சொன்னால் செக்ஸ் தொழிலாளிகளாகவும் மாறிப் போகிற பரிதாபப் பெண்கள் இவர்கள்.

இவர்களைப் போன்றே இன்னொரு வகையினரும் உண்டு. இவர்கள் உதவி இயக்குநர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள். 95% பேர் ஆண்கள். ஆமாம் லீனாவின் மொழியில் சொன்னால் ஆண் குறிகள். இவர்களின் ஊதியங்களை ஒழுங்கு செய்யும் விதமாக எந்த விதமான யூனியன்கள் எதுவும் கிடையாது. இவர்களுக்காக இருக்கிற யூனியன்கள் பெரிய தலைகளின் அல்லக்கை யூனியன்களாக மட்டுமே செய்லபடும். பெரும்பலான இயக்குநர்களும் ஒளிப்பதிவாளர்களும் தமது உதவியாளர்களுக்கு முறையாக ஊதியம் வழங்குவதில்லை. உதவி இயக்குநர்களுக்கும், ஒளிப்பதிவாளர்களுக்கும் இருக்கும் ஒரே வருமானம் பேட்டா. ஆமாம், அதுவும் ஷூட்டிங் நடக்கிற நாட்களில் ஷூட்டிங் முடிந்த பிறகு எல்லோருக்கும் செட்டில் செய்த பிறகு கடைசியாய் வழங்குவார்கள். அந்த பேட்டாவுக்காக அந்த ஆண் குறிகள் காத்திருப்பார்கள். வறுமை, மரியாதையின்மை, வாய்ப்புகள் மறுக்கப்படுதல், அவமானம் என பல அவமானங்களைச் சுமந்தே ஒவ்வொரு உதவி இயக்குநரும் உருவாகி கடைசியில் ஒரு ‘ தமிழ் ஆண் குறி’ சினிமாவைப் படைக்க முடியும்.

லீனா சென்னை வந்த உடன்  இயக்குநர் இமையம் பாரதிராஜாவிடம்  போய்ச்சேர்ந்தார் ( பல உதவி இயக்குநர்கள் அவரை இன்று வரை நேரில் கூட பார்க்க முடியாமல் வீட்டு வாசலிலேயே காத்திருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்) அப்புறம் சேரன் … அப்புறம் தமிழ் சமூகத்தின் ஆகப் பெரிய சீரியல் இயக்குநரான சி. ஜெரால்டுடன் திருமணம். வடபழனியில் பல லட்சம் ரூபாயில் சொந்தமான அப்பார்ட்மெண்ட் வீடு, ஆயிரம் விளக்கில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள எடிட் ஷூட் , பணக்காரர்கள் பயன்படுத்தும் காஸ்டிலியான கார் என லீனாவின் வளர்ச்சி சடுதியாக வந்து வாய்த்த ஒன்று………………….

யோனிகளை சென்டிமெண்டில் ஆழ்த்தி அடிமைப்படுத்தும் பாரதி ராஜா, சேரன் முதலானவர்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்வதில் லீனாவுக்கு வருத்தம் இல்லை. அத்துடன் தமிழக யோனிகள் அத்தனையையும் கண்ணீர் சிந்தவைக்கும் சீரியல் இயக்குநரை கை பிடித்ததிலும் அவருக்குப் பிரச்சினையில்லை. உலகத்தின் சகல பிரச்சனைகளுக்கும் ஆண் குறி ஒன்றே காரணம் என்று எழுதும் லீனாவுக்கு தனது ‘செங்கடல்’ படத்தில் பணியாற்றிய உதவியாளர்கள் பேட்டா கேட்டவுடன் ஆண் குறிகளே தன்னிடம் வந்து பேட்டா கேட்டது போல் தோன்றியிருக்கும்.

இனி, செங்கடல் பற்றி நாம் கேட்டறிந்த செய்திகள் வருமாறு:

பல பீ வண்டி சீரியல்களின் இயக்குநரான சமுத்திரக்கனி என்பவர்தான் செங்கடல் படத்தின் தயாரிப்பாளராம்.  ஒரு கோடி ரூபாய் இந்த செங்கடலுக்காக லீனாவிடம் கொட்டப்பட்டிருக்கிறதாம்.  சமுத்திரக்கனி மீனவ சமூகத்தைச் சார்ந்தவராம். அதனால் தனக்கு வருகிற வரும்படிகளில் கொஞ்சம் பணத்தை மீனவர் பற்றிய படைப்பு ஒன்றிற்காக செலவு செய்யும் ‘நல்ல’ எண்ணம்தான் அவருக்கு.

இந்தப் படம் குறித்து விசாரித்தபோது….செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை,  தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது.  மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். முழுக்க முழுக்க வெளி நாடுகளில் மட்டுமே காண்பிக்கப்படுமாம்.  நேர்மையான நோக்கத்துக்காக புலிகளைப் பற்றி விமரிசிப்பது என்பது வேறு, இலங்கை அரசையும் இந்திய அரசையும் நத்திப்பிழைக்கும் வாய்ப்புக்காக புலிகளை விமரிசிப்பது என்பது வேறு. செங்கடலின் ‘ஆழத்தை’ பார்க்கும் போது படத்தில் நிச்சயமாக வில்லங்கம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.

சரி இதை இத்தோடு விட்டு விட்டு லீனாவிடமே வருவோம்.

இதற்கு முன்னரும் லீனா  மாத்தம்மா, தேவதை, உள்ளிட்ட சில ஆவணப் படங்களை தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எடுத்திருக்கிறார். இந்தப்படங்கள் கிறிஸ்தவப் பாதிரிகள், தன்னார்வக்குழுக்களுக்காக எடுக்கப்பட்ட படங்களாகவே இருக்கின்றன. தன்னார்வக்குழுக்களிடம் பொறுக்கித் தின்னும் பன்னாடைகளும் லீனாவின் ஆண்குறி லிஸ்டில் வரவில்லை. மாத்தம்மா விஷயமே ஓவர் பில்டப் பண்ணி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் அப்போது வந்தன. லீனா ஆவணப்படம் எடுக்கிறேன் என்று பலரையும் மோசடியும் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் சில ஈழத் தமிழர்களிடம் இவ்விதமான தொடர்புகளோடு இருந்து கடைசியில் ஏமாற்றி அது பஞ்சாயத்து செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். லீனா தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு தன்னார்வக்குழுவே வழக்குக் கூடத் தொடர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

லீனா எடுத்த படங்கள் உழைக்கும் மக்கள் தொடர்பானது. அதில் எவ்விதமான யோனி அரசியலையும் நாம் காணவில்லை. தேவதைகள் என்றொரு படம் எடுத்திருந்தார். அதில் உழைக்கும் பெண்களை வைத்து fantasy பண்ணியிருந்தார். ஆனால் அந்தப் பெண்கள் சந்திக்கும் ஆண் குறிகள் பற்றியும்  அக்கறைப்படவில்லை.அரசியல் பற்றியும் அக்கறைப்பட வில்லை. ஒரே அக்கறை பணம் பணம் பணம் மட்டுமே…..

எப்போதும் ஆண் குறியை தோளில் தூக்கிப் போட்டுக் கொண்டு அலையும் ஒரு ஈழத்து எழுத்தாளருடனும் லீனா சினிமா முயற்சியில் ஈடுபட்டிருந்தார். நமது நாட்டின் ஏழைகள், உழைக்கும் மக்களின் வறுமை, தலித்துக்கள் மீதான சாதிக்கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, விளிம்பு நிலை மனிதர்கள் என 90களுக்குப் பிற்பகுதியில் தன்னார்வக்குழுக்கள் எப்படி இவர்களை குறி வைத்து பணம் பண்ணியதோ அதே வேலையை செய்து கொண்டுருப்பவர்தான் லீனா. சிறிதும் நேர்மையற்ற லீனா தனது படங்களில் வேலை பார்க்கும் யாருக்கும் முறையான ஊதியம் கூட வழங்குவதில்லையாம். எவனாவது ஊதியம் கேட்டால் தனது ‘பெண்மையை’ அவனுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி அமர்க்களம் பண்ணி விடுவாராம்.

இராமேஸ்வரம் பிரச்சினையில் போலீஸ் கையில் இருந்த கேமிரா மொபைலை பிடுங்கிய லீனாவின் ‘தைரியத்தை’ நாம் பாராட்டியே ஆக வேண்டும். எனினும் அந்த காக்கி ஆண் குறிகளுக்கு எதிராக போராடிய லீனா போலீசிடம் இருந்து தன் போர்க்குணத்தால் விடுபட்டார் என்று நீங்கள் எண்ணிவிடக் கூடாது.  போலீசிடம் மாட்டிக் கொண்ட ஷோபா சக்தியும், லீனாவும் வெளியில் வர நம்பியது ஒரு அதிகார ஆண் குறியை,,,, ஆமாம் அவர்களை செல்வாக்கான மனிதர்கள் தலையிட்டே விடுவித்திருக்கிறார்கள்.

உங்களுக்கு நினைவிருக்கும் என நினைக்கிறேன். சிதம்பரம் காவல் நிலையத்தில் கணவனின் கண் எதிரிலேயே பாலியல் வன்முறைக்குள்ளான பத்மினியின் கதை, கடைசியில் கணவனைக் கொன்று விட்டு, பத்மினியை வேட்டையாடின காவல் நாய்கள். அந்தியூர் விஜாயாவையும் நீங்கள் மற்ந்திருக்க முடியாது. வழக்கு ஒன்றிற்காக காவல் நிலையம் சென்றவரை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்தார்கள் காவல்நாய்கள். வாச்சாத்தி, விழுப்புரம், சென்னை என்று ஊர் ஊருக்கும் காக்கி ஆண் குறிகள் குதறிய கதைகள் உண்டு. ஆனால் அந்த காவல்நாய்களையே எதிர்த்து நிற்கிற லீனாவின் துணிச்சல், ஆண் குறிகளின் வக்கிரங்களுக்கு பலியான ஏனைய பெண்களுக்கு ஏன் வரவில்லை? லீனாவிடம் இருப்பது துணிச்சலா,  அல்லது அதிகார பீட ஆண்குறிகளுடனான  தொடர்பு  தரும் திமிரா  என்பதுதான் நமது கேள்வி. சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறையால் கைது செய்யப்பட்ட புவனேசுவரியும் லீனாவைப் போன்றே போலீசை மிகுந்த தைரியத்துடன் எதிர்கொண்டார் என்பது இந்த இடத்தில் நினைவுக்கு வருகிறது. புவனேசுவரிக்கு ஏதாவது பிளாக் இருக்கிறதா, அவர் கவிதை எழுதுகிறாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம். பதிவர்கள் தெரிவித்தால், ஆணாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்துக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

இனி லீனாவின் ஈழப் போராட்ட முகங்கள்…..

போருக்கு எதிராக புதிய அமைப்புத் தொடங்கி டில்லி வரை சென்று போராடியவர் லீனா. சென்னையில் கவிஞர்களை ஒருங்கிணைத்து ஒப்பாரிப் போராட்டம் நடத்தியவர் லீனா.  இதெல்லாம் ஈழத்து ஆர்வலர்களிடம் லீனா பற்றி உருவாகியிருக்கும் பிம்பங்கள். இந்த பிம்பங்களை வைத்து லீனா தனது இமேஜை கூட்டிக்கொள்ள முயன்றார் என்பதே உண்மை. அதனால்தான் டெல்லி போராட்டத்திற்குச் சென்று வந்தவுடன்,  தானே முன்னின்று அப்போராட்டத்தை நடத்தியது போன்ற பேட்டிகளைக் கொடுத்தார். விளைவு – அவரது இலக்கிய நண்பர்களும், பெண்ணியவாதிகளும் அவர் மீது கடும் கோபம் கொண்டனர்.

ஈழத்திற்கான கடற்கரைப் போராட்டம் ஆர்ப்பட்டமாகத் துவங்கியது. ஆனால் சிறிது நேரத்தில் லீனாவின்  மகா யோக்கியத்தனம் தெரிந்தது. பேச்சாளர் ஒருவர் போருக்கு துணைபோன யுத்தக் குற்றவாளி சோனியா காந்தி பற்றி பேசத் தொடங்கினார்.  மைக்கைப் பிடித்த லீனா “யாரும் இங்கே மத்திய மாநில அரசுகளை விமர்சனம் செய்து பேசக் கூடாது” என்று நிபந்தனை போட்டார்.இது யோனிக்கு யோனி செய்யும் உதவி. இதில் ஆண்குறிக்கு தொடர்பில்லை போலும்!

அடுத்து வந்தவர், சரி மத்திய மாநில அரசுகளைத் தானே திட்டக் கூடாது, குறைந்த பட்சம் நமது கோபத்தை ராஜபட்சே மீதாவது காட்டுவோம் என்று ராஜபட்சே பற்றி பேசத் தொடங்கினார். உடனே தலையிட்ட  லீனா  “இங்கே யார் மனமும் புண்படாமல் பேசுங்கள், யார் மனமும் புண் படாமல் போராடுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

லீனாவின் கவிதையில் இராஜபக்சே பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று இப்போதுதான் புரிகிறது.  ஜெரால்டு, பாரதிராஜா, சேரன்.. இன்னும் நமக்குத் தெரியாத லீனாவுக்குத்  தெரிந்த பலருக்கும்…..  கடைசியாக இராஜபக்சேவுக்கும்  ஆண் குறி கிடையாது போலிருக்கிறது. இல்லையென்றால் லீனா சும்மா விட்டு விடுவாரா? இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார்: முன்னர் புலிகள் செல்வாக்கோடு இருந்த காலத்தில் புலிகளுக்காக திலீபன் பற்றி ஒரு படம் பண்ணும் முயற்சியில் கூட லீனா இருந்தாராம்.  இப்போது புலிகள் தோற்றவுடன் – செங்கடல்! அரசியலில் இந்த மாதிரி பிழைப்பவர்களை அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் என்று சொல்வார்கள். இதே வேலையை கலைத்துறையில் செய்வதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.

பொதுவாக  போர்ட் போலியோ எனப்படும் சுய படங்களை எடுத்து வைத்துக் கொண்டு தனது புகைப்படங்கள் ஊடகங்களில் அதிகம் வரவேண்டும் என்று ஆசைப்படுவாராம் லீனா. அதற்காகவே தொழில் முறை ஒளிப்பதிவாளர்களை வைத்து மேக்கப் போட்டு நடிகைகள் போல ஆல்பம் வைத்திருக்கிறார். “இதைத்தானே நமீதா, த்ரிஷா, தமன்னா எல்லோரும் செய்கிறார்கள். இத்தகைய ஆல்பங்களைத்தானே, கன்னடப் பிரசாத் போன்றவர்கள் கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்?” என்று நீங்கள் கேட்க நினைக்கலாம். கேட்டால் அடுத்த கவிதையில்  இராக், ஆப்கான் வரிசையில் உங்கள் பெயரும் இடம்பெறும் வாய்ப்பு உண்டு.

எதுவும் கேட்கவில்லை. சும்மா பார்த்துக் கொள்கிறோம் என்கிறீர்களா? கேட்டால்தான் பிரச்சினை, பார்த்தால் பிரச்சினையே கிடையாது. …. பார்ப்பதற்குத்தானே ஐயா, போர்ட் போலியோ! அதில் ஆணாதிக்கம் எதுவும் கிடையாதே!

——————————–

பின் ‘குறி’ப்பு: மைனர் கெட்டால் மாமா என்பார்கள். போலி கம்யூனிஸ்டு குடும்பத்தில் பிறந்தது மட்டுமல்ல, வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களுடன் நெருக்கமான பழக்கமும் உள்ளவர் லீனா. அதான் இந்த லச்சணம்!

ரெண்டு மூணு சீட்டுகளுக்காகத்தன் அந்த அம்மாவிடம் மானத்தை அடகு வைத்திருக்கிறார்கள் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம்.  லீனாவின் அலப்பரைகளும் கூட இவர்களுடைய தோலில் கொஞ்சம் கூட உரைக்கவில்லையே! மழுங்கத்தனம் என்றால் என்ன என்று ஒரு நண்பர் விளக்கம் கேட்டார். அதுக்கு அகராதியில் எல்லாம் விளக்கம் கிடையாது. தா.பாண்டியனையும், மகேந்திரனையும் பார்த்துக் கொள்ளுங்கள். இதான் அது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. எழுதட்டுமே. எழுதும்போதே வாசிப்பவன் புரிந்துகொள்ளமாட்டானா? புரிந்து கொள்ள வேண்டாமென்று முடிவெடுத்தவன் எதைப் படித்து என்ன செய்யப்போகிறான்?
    ஆனாலும் பெண்கள் எழுதவேண்டும் என்பதற்கான எதிர்ப்பாய் இதை யாரும் திசை திருப்பாமல் இருக்க வேண்டும்.

    • அன்பார்ந்த நண்பர்களே,
      வேலை நெருக்கடி காரணமாக இந்தக்கட்டுரைக்கான விவாதங்களில் உடனுக்குடன் கலந்து கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். கூடிய விரைவில் எமது கருத்துக்களை தெரிவிக்க முயல்கிறோம். மற்றபடி பொருளார்ந்த முறையில் விவாதம் நடப்பதற்கு வாழ்த்துக்கள்.

    • கை.அறிவழகனின் பதிவில் காணப்படும் நேர்மையைப் பாராட்ட வேண்டும், மேலும் பெண்ணியம் என்றால் உறுப்புகளைப் பற்றியது போன்ற மாயத்தோற்றம் உருவாக்கும் பெண்ணியவாதிகளையும் தொளுரித்திருக்கிறார். ஆனாலும் இவர்கள் யாரும் திருந்த மாட்டார்கள். நன்றி அர டிக்கெட்டு, இணைப்புகளுக்கு.

    • தன்னை முன்னிலைப்படுத்த ஏதாவது ஒரு கருவியைத் தேடிக்கொண்டிருக்கும் சூழலில் , உடல் அரசியலை வைத்து லீனா மணிமேகலை , யோனி – ஆண் குறி என்று கவிதை எழுதிப் பிழைப்பதெல்லாம் அபத்தம் .

      புரட்சி – முற்போக்கு என்று சொல்லிக் கொண்டு , தழைகீழாய் நடந்தால் உலகம் உடனே நம்மைத் திரும்பிப் பார்த்து விடுமென்ற நினைப்பு இவருக்கு ….!

  2. சபாஷ். அப்படி போடுங்க அருவாளை.
    நாட்டாமை வந்துட்டார். சொம்பை எடுத்து மறைச்சு வையுங்க.
    லீனாவின் கவிதைகள் சரோஜாதேவி புக் படித்த எப்பெக்டு குடுக்குது.
    லீனா மணிமேகலை பல ஆண்குறிகளை பார்த்து பக்குவப்பட்டவர் போல் உள்ளதே.
    இந்த லீனா லீனா ன்னு சொல்றீங்களே அது யாருங்கோ. வேலு பிரபாகரனின் ஒரு படத்தில் அவுத்து போட்டு நடிச்சதே அதுவாங்கோ.

  3. நிறைய கோபத்தோடு எழுதியிருக்கிறீர்கள். நியாயமான கோபம்.

    சிபிஐ க‌ட்சி தொட‌ர்பால், கட்சி ரீதியான ப‌ல‌ மாநாட்டுகளுக்கு பல நாடுகளுக்கு சென்ற‌வ‌ர் இந்த‌ லீனா. நீங்க‌ள் சொல்வ‌து ச‌ரிதான்.

  4. “ஒவ்வொரு மயிறாய் பிடுங்கிப்” போட்டு “கட்டவிழ்ப்பு” செய்வது எப்படி என்று, இந்தப் பதிவைப் படித்து லீனா தெரிந்து கொள்ளலாம். இந்தப் “பிரதி”யிலிருந்து தான் எத்தகைய பிரகிருதி என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

  5. மார்க்ஸ் செல முன்னாடி கவுண்டமணியே கூசிப்போகுற அளவுக்கு என்னா பக்தியோட கையகட்டி நிக்குறாவுக.. பக்கத்துல சோபா வேற.. என்னமோ போங்க 

  6. ஜார்ஜ் கார்லின் தன்னுடைய நகைச்சுவையான அமெரிக்க விமர்சனத்தில் கூறியவற்றை எல்லா தளத்திற்கும் லீனா பொருத்திப் பார்க்கிறாரா?

  7. இதைப்போன்ற வெங்காயங்கள் நிறையவே உலாவுகின்றன. அனைத்து பிரச்சினைகளையும் தன் பெண்ணுறுப்பு ஊடாகவே எதிர்கொள்வது என்ற கொள்கையை கொண்ட எழுத்து நாய்கள். இவர்களெல்லாம் தன்னை எங்கும் பெண்ணுறுப்பாக எதிலும் போய் காண்பித்துக்கொள்கின்றனர். இவர்கள் ஏகாதிபத்தியத்துக்கு தப்பாமல் பிறந்தவர்கள் எதற்கும் எல்லா பிரச்சினைக்கும் காரணம் வர்க்கமல்ல பெண்ணுறுப்புதான் என்று புளங்காகிதமடைகிறார்கள்.

    சாதாரண உழைக்கும் வர்க்கத்திலிருந்து சினிமாவுக்கு சான்ஸ் கேட்க போயிருந்தால் அவரின் கவிதைகளுக்கு மேலேயே உறுப்புகள் முனகியிருக்கும். லீனாமுதல் பெண்ணிய கவிதைகள் எழுதிக்கொள்வதாய் கூறும் பலரும், பலருக்கும் ஒரே அப்பன் தான் அது ஏகாதிபத்திய அடிமைத்தனம். இவர்களின் கவிதைகளைப் பார்த்தோ படித்தோ ஏதாவது இப்போது சான்ஸ் கிடைக்கலாம். ஆனால் உழைக்கும் வர்க்கத்தை உறுப்பாக கொச்சைப்படுத்தும் இவர்கள் கிழிக்கப்பட வேண்டியதுதான் இன்றைய தேவை.

    ஒரு சந்தேகம் லீனாக்கள் தாங்கள் ஹோட்டலில் சாப்பிடும் போது சர்வரையோ, ரோட்டில் நடக்கும் போது மற்றமக்களையோ உறுப்புக்களாகத்தான் பார்ப்பார்கள் போலிருக்கிறது என்றாவது அதிகாரவர்க்கத்தின் உறுப்புகளை சீண்ட தயராயிருப்பார்களா!!!!!!!

    கலகம்

    • அப்புறம் வினவு ,

      இதையெல்லாம் பெண் என்று சொல்லவேண்டாம், உறுப்போட பிறந்த ஜந்து எனச்சொல்லுங்கள்,
      தன்னை மதிக்காத மக்களை மதிக்காத இவர்களை எப்பவோ மனுசங்க லிஸ்ட்லிருந்து தூக்கியாச்சு.
      இன்னொரு சந்தேகம்
      எல்லோர் உறுப்பையும் ஆராயுறாங்களே
      ஊதைவாயன் சங்கரன் உறுப்பையும் ஆராஞ்சாங்களா
      எதற்கெடுத்தாலும் உறுப்பு, உறுப்பு உறுப்புன்னு புலம்புற இவங்கள Dr.ருத்ரன் மாதிரி நல்ல சைக்காலஜிஸ்ட்ங்ககிட்டதான் அனுப்பனும்

      • What she wrote is ” obscene ” and it is a penal offence under I.P.C. Those who don’t like it can go and file complaint in Police station and let the court decide it .

    • கலகம், உங்கள் விமரிசனங்களில் பொருளின்றி திட்டுவதே அதிகமிருக்கிறது. தோழர்கள் என்றால் இப்படித்தான் என்று முத்திரை குத்துதவதற்கே பயன்படும். வாதத்தில் முன்னேறுவதற்கு உங்கள் சிந்தனை கஷ்டப்படுகிறது என்பதே எனது கருத்து.

  8. உங்களின் இந்த பதிவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எல்லாவற்றையும் கேட்டே தீர்ப்பெழுதிவிடுவதும் சொந்த வாழ்வில் அத்து மீறி நுழைவதும் விமர்சனத்திற்கும் வினவிற்கும் அழகில்லை.

    • உழைக்கும் மக்களின் வாழ்வினைப்பற்றி, போரில் சாகும் மக்களைப்பற்றி கொச்சைப்படுத்த இது அவர்களை கேட்டதா? மக்களை மதிக்காத வாழ்க்கையை கிழிப்பது தப்பில்லை. டென்சன் ஆவாதீங்க அய்யனாரே !!!!!!
      இதெல்லாம் ஒரு குரூப்பாத்தான் திரியுதுங்க இப்புடி ஒரு வாய்ப்ப கொடுத்த வினவுக்கு நன்றி

      • தகுந்த ஆதாரம் இல்லாமல் “அவர் சொன்னார்” “இவர் சொன்னார்” என்று எழுதுவதைத்தான் அய்யனார் குறைசொல்கிறார். சம்மந்தபட்டவர்களிடம் அனுமதி பெற்றுதான் அவர்களைப்பற்றி எழுதவேண்டும் என்று நீங்கள் புந்துகொண்டீர்கள்.

        என்னைப் பொருத்தவரை லீனாவைப் போல எத்தனையோ ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களை விமர்சிக்கும் போது பெயர், சாதி,மதம், வர்க்கம் என்றுதான் அடையாளப்படுகிறார்களே அன்றி பாலிலனம் (ஆண்) சார்ந்து அல்ல.

        ஆனால் எந்த பெண்ணை குற்றம்சாட்டும் போதும் பாலிலனம் சார்ந்து – போலி பெண்ணியவாதிகளை மட்டுமே சொல்கிறோம் என்கிற பெயரில் – பெண்கள் அனைவரையும் பொதுமைப்படுத்தும் பொது ஆணாதிக்குரலில் எனது நணபர்களும் சில நேரம் என்னையும் அறியாமல் நானும் விவாதித்த சமயங்கள் தான் இந்த விவாதங்களை படிக்கும் போது எனக்கு நினைவுக்கு வருகிறதன.

    • இந்த ப‌திவில் உங்களை எது வருத்தமடையச் செய்தது என்று குறிப்பாக சொல்லாமல் பொதுவாக ‘பதிவு மிகுந்த வருத்தத்தை தருகிறது’ என்று கூறினால் அதற்கு என்ன அர்த்தம் ஐயனார் ? அப்படியானால், பதிவே எழுதியிருக்கக் கூடாது என்கிறீர்களா ? விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌லாமா கூடாதா என்ப‌தை தெளிவாக‌ கூறுங்க‌ள்.

      பிறகு, நீங்கள் ஏன் இதை லீனாவின் க‌விதையை க‌ட்டுடைத்த‌ ப‌திவு என்று எடுத்துக்கொள்ள‌க்கூடாது ? எல்லாவற்றையும் கட்டுடைக்கும் உங்களுடைய கலகக்கார தத்துவத்திற்கு இது ஏற்புடைய பதிவு தானே ?

  9. லீனாவுக்கு சென்னையில் மூன்று வீடுகள். ஒன்று வடபழனியில் உள்ளது அதை இப்போது வாடகைக்கு விட்டிருக்கிறாராம். இன்னொன்று சென்னையில் கோடீஸ்வரக் கோமான்கள் வாழும் அல்லையன்ஸ் பிராஞ்சைஸ் அலுவலகம் இருக்கும் நுங்கம்பாக்கத்தில் இருக்கிறதாம். இன்னொன்றூ தாம்பரத்திற்கு வெளியே இருக்கிறதாம். இதெல்லாம் அவரது வர்க்க நலன் சார்ந்த விஷயங்கள். ஆனால் அப்படி வசதியாக வாழ்கிற லீனா புரட்சிகர அரசியலுக்காக சுக போக வாழ்வை மறுத்து செயல் படும் தோழர்களை ஆண் குறிகள் என்று எழுதியிருப்பதை படிக்கும் போது லீனாவை அம்பலப்படுத்தியே ஆக வேண்டிய தேவை எழுந்ததை ஒட்டியே இதை எல்லாம் நாம் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. தவிறவும் அவரது தேவதை படத்திற்காக இந்திய அரசு உயரிய விருது ஒன்றையும் வழங்கியிருக்கிறதாம். ஆனால் அதில் லீனா கடைபிடித்த தந்திரம்தான் இங்கு பேசப்பட வேண்டியது. அந்தப் படத்திற்கு கேமிராமேனாக பணியாற்றியது ஒரு மலையாளி….. அவர் மத்திய அரசின் விருது வழங்கும் குழுக்களில் ஜூரியாக இருக்கும் பெரும்பாலானவர்கள் மலையாளிகள்தான் இதை நாம் இங்கு இனவாதமாக முன் வைக்கவில்லை.யதார்த்தம் அதுதான். அபப்டி ஜூரிக்களாக இருக்கும் மலையாளிகளுக்கு நெருக்கமாக இருக்கும் அந்த மலையாளக் கேமிராமேன் இந்தப் படத்திற்கு எப்படியும் விருது வாங்கிடலாம் என்று உத்திரவாதம் கொடுத்ததன் பேரிலேதான் அவரை கேமிராமேனாகவே போட்டாராம். லீனா மேலும்……இப்போது எடுத்துக் கொண்டிருக்கும் செங்கடல் என்னும் படமும் அப்படி கேன்ஸ் விழாவை குறிவைத்தே எடுக்கப்படுகிறதாம். இங்கே நாம் முன் வைக்க விரும்பும் கேள்வி. இந்திய உழைக்கும் பெண்களின் உண்மையான பிரச்சனைகளை தனது தேவதை படத்தில் லீனா வெளிப்படுத்தியிருந்தால் எப்படி இந்திய அரசு லீனாவுக்கு விருது கொடுத்திருக்கும் என்பதுதான்? உழைக்கும் பெண்களை காட்டிக் கொடுத்து அவர்களின் பிரச்சனைகளை திசை திருப்பியே லீனா வளர்ச்சியடைந்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிகிறது. என்பதோடு அதன் அடுத்தக் கட்ட சர்வதேச வளர்ச்சிதான் கேன்ஸ் திரைப்பட விழாவை குறிவைத்து எடுக்கப்படும் செங்கடல் படமும். அதற்காக அவர் எடுத்திருப்பது இப்போது மீனவர்களை. தேவதையில் மீனவப் பெண்கள்…. இப்போது மீனவ ஆண்களா? லீனா பதில் சொல்வாரா?

    • ஆமாங்க பிரகாஷ், என்னோட நண்பன் ஒருத்தன் கூட நீங்க சொன்ன‌ இதே டயகலாக்கை தான் சொன்னான். இது தான் லீனா மணிமேகலை, இதுக்கு மேல நீங்கள்ளாம் (என்னோட நண்பனையும் சேர்த்து தான்)அந்த கவிதாயினிக்கிட்ட என்னத்த எதிர்பார்த்தீங்க? ‌அந்த மடையன் (அதாங்க ஏன் பிரெண்ட்) அவங்களை ஏதோ அருந்ததி ராய் ரேஞ்சுக்கு நினைச்சிட்டு இருந்திருக்கான் போல, அப்புறம் தான் அய்யய்யோ இவங்க இவ்வள‌வு தானா என்கிறான். ஆரம்பத்திலிருந்தே இவங்க இவ்வளவுதாங்க!

  10. மாதர் குல மாணிக்கம், தியாக சிற்பி, நம் உலகின் ஒரே புரட்சி தேவி..மகளிரின் விடிவெள்ளி, சித்தாந்த ஸ்வரூபம்.. அன்னை,
    தியாக திருவிளக்கு, ஏழைகளின் வைகறை.. சகோதரிகெல்லாம் சகோதரி முற்போக்கு நட்சத்திரம்.. லீனா மணிமேகலை பற்றி வினவு இப்படி எழுதி இருக்க கூடாது..

  11. //உங்களின் இந்த பதிவு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எல்லாவற்றையும் கேட்டே தீர்ப்பெழுதிவிடுவதும் சொந்த வாழ்வில் அத்து மீறி நுழைவதும் விமர்சனத்திற்கும் வினவிற்கும் அழகில்லை.//
    திரு அய்யனார்,
    இதில் வருத்தப்பட எதுவுமே இல்லை, அவரது வலை பதிவிலேயே இந்த கவிதை இடம் பெற்றிருக்கிறது. இணைய தளம் என்பது ஒரு பொது தளம். அவரே பொது இடத்திற்கு வந்து விட்ட பிறகு யார் வேண்டுமென்றாலும் விமர்சனம் செய்யலாம். வீட்டுக்குள் இருக்கும் வரை தான் அது சொந்த விசயம்.
    திரு வினவு,
    உங்களை பாராட்டுகிறேன், பெண் விடுதலைக்கு போராடுகிறேன் என்று கூறி சுய விளம்பரம் தேடும் இவர்களால் பெண்களுக்கு ஐந்து காசுக்கு கூட பலனில்லை. இவர்கள் போராடுவது பெண் சுதந்திரத்திற்கு அல்ல, அவர்களின் சொந்த செக்ஸ் சுதந்திரத்திற்கு. நாட்டின் பிரதம மந்திரியே அவரின் சேவையை போற்றி காலில் விழுந்து வணங்கினாரே, மதுரை சின்னபிள்ளை என்ற மூதாட்டி, அவரும் பெண்தான், பெண்கள் முன்னேற்றத்திற்கு தான் அவரும் உழைத்தார் அவரின் கால் தூசிக்கு கூட ஈடாக மாட்டார் இந்த பெண். இது போன்ற வெளி வேடதாரிகளின் வேடங்களை அம்பலபடுத்துவது மிக அவசியம். இது போன்ற பெண்கள் தன் தகப்பனையும், சகோதரனையும் எந்த கண்ணோட்டதில் பார்ப்பார்கள்.

    • “எனக்கு தெரியும்
      அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
      லும்பன் தரகன் மகாராஜா தளபதி
      திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
      போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
      கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
      கணவன், தந்தை, சகோதரன், மகன்
      எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
      என்ற ரகசியம்”

      அவரது கவிதையில் அவரே கூறியுள்ளார் அவர் அதை எப்படி பார்பார் என்பதை.

      • நண்பர் kanbro அவர்வளே,

        இந்த கவிதையில் ஆண்குறி என்பது பெண்கள் பற்றிய ஆண்களின் பெதுவான பார்வையை குறிப்பதாகவே தெரிகிறது. ஆண் ஒருவன் நல்வனோ, கெட்டவனோ- உறவுக்காரனோ,வெளியாளோ யாராக இருந்தாலும் பெண் என்று வந்தால் எல்லா ஆண்களும் ஒன்றுதான் என்பதே பொருள்படுகிறது. உங்களுக்கு லீனா மேல் உள்ள கோபத்தை இந்த கவிதை மேல் ஏன் காட்டவேண்டும்

        குறிப்பு – எப்பொருள் (குரல்)

  12. வினவு, உங்களுக்கு ஒன்றை நினைவு படுத்த விழைகிறேன்.

    எனக்கு வத்தல் குழம்பும், வடு மாங்காயும் நிரம்பப் பிடிக்கும். என்னைச் சந்திக்கும் நண்பர்களிடமிருந்தும், எழுதும் எழுத்து வரை வடுமாங்காயும், வத்தல் குழம்பும் இடம் பெறும். ஏனென்றால் என் அடி மனதில் வத்தலும், வடு மாங்காயும் பதிந்து கிடக்கிறது.

    எனக்குப் பிடித்தது என்னவோ அதைத்தானே நான் செய்வேன். எழுதுவேன், பேசுவேன். இது அனைவருக்கும் பொதுவான ஒன்றுதானே. இதில் என்ன ஆச்சரியம் இருக்கவியலும் ?

    • வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு எனக்கு ராஜபட்சேவை பிடிக்கும், பொன்சேகாவை பிடிக்கும் என்று தாராளமாக உங்கள் வீட்டுச்சுவர் பூராக‌ கிறுக்கிக்கொள்ளுங்கள், (சொந்த வீடு என்றால் பிரச்சனை இல்லை வாடகை வீடாக இருந்தால் ஹவுஸ் ஓனர் கூட‌ கேட்பார்) அது உங்கள் சொந்த விசயமாக முடிந்துவிடும் ஆனால் அதற்கு மாறாக‌ தெருவில் இறங்கி மேற்கண்ட வாசகத்தை எழுதினால் அமெரிக்க ஏஜெண்ட் சுப்பிரமணியசாமிக்கு முட்டாபிக்ஷேகம் செய்ததைப் போல தான் மக்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவார்கள். ஆனால் வினவு மிகவும் நாகரீகமான முறையில் தான், அதாவது லீனாவின் மொழியின் வரம்புகளில் நின்று தான் பதிலளித்துள்ளது. இதில் உங்களுக்கு என்ன கேள்வி ?

      • கருத்துச் சுதந்திரம் அவசியம் தேவை. விமர்சனமும் தேவை. ரியல் என்கவுண்டர் முதலில் நான் என்ன சொல்லி இருக்கிறேன் என்று புரிந்து கொள்ள முயலுங்கள். நான் கேள்வி எதையும் கேட்கவில்லை என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள். லீனாவை விமர்சனம் செய்திருக்கிறேன் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

        • சரிதான் பாலகிருஷ்ணன், உங்கள் விமரிசனத்தை புரிந்து கொள்ளாமல் அவசரப்பட்டு தவறாக எழுதிவிட்டேன். மன்னிக்கவும். இனி கவனமாய் வாதிடுகிறேன்.

  13. அய்யனார்….. லீனாவின் தனிப்பட்ட வாழ்வை தாக்கியிருப்பதாக எழுதியிருக்கிறீர்கள். அவர் எழுதியுள்ள கவிதை பற்றி நீங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லை. உங்கள் வருத்தம் என்னவென்றால் அவரது கவிதையைத் தாக்காமல் லீனாவைத் தாக்கி விட்டதாகவும். இது தனிப்பட்ட தாக்குதல் என்பதுதான் உங்கள் கவலை.உங்களின் நியாயபப்டியே கேட்கிறோம். கார்ல் மார்க்ஸ் எழுதிய மூலதனம் குறித்து எழுதாமல் மார்க்ஸை ஆண் குறித்து என்று எழுதலாமா?( எப்படி எழுதினாலும் அதை எதிர்கொள்வோம் என்பது வேறு விஷயம்)
    தவிறவும். லீனா என்கிற பெண் எழுதிய மேலே உள்ள கவிதை குறித்த உங்கள் கருத்தைச் சொல்லவும்….. அய்யனார் யோனி, ஆண் குறி என்பது தனிப்பட்ட விஷயமா? அந்தரங்கமானதா? அல்லது பொதுவான விஷயமா? என்பதோடு லீனா எழுதும் போது மட்டும் ஆண் குறித்து பொதுவான விஷயமாகவும். அதையே அம்பலப்படுத்தி லீனாவிடம் இருப்பது ஆண்குறிதான் என்றூ எழுதினால் அது மட்டும் தனிப்பட்ட விஷயமா? அய்யனார் பதில் சொல்ல வேண்டும்.

  14. நண்பர்களுக்கு,

    யோனி
    கவிதையை ஆண் எழுதினால் புரட்சியாகவும் குறி கவிதையை பெண் எழுதினால் அலைபவளாகவும் சித்தரிப்பது எத்தகைய முற்போக்குத் தனம் என்பது எனக்கு விளங்கவில்லை. பிரதிக்குள் ஆண் பெண் தன்மைகளை புகுத்திக் கொண்டு அதை விமர்சிப்பதோ அல்லது பிரதியை வைத்து எழுதுபவனை/ ளை கீழ்த்தரமாக சித்தரிப்பதோ நீங்கள் கட்டமைத்துக் கொண்டிருக்கும் முற்போக்கு பிம்பத்திற்கு எதிரானதா சாதகமானதா என்கிற அனுமானங்களையெல்லாம் உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

    • @@@யோனி
      கவிதையை ஆண் எழுதினால் புரட்சியாகவும் குறி கவிதையை பெண் எழுதினால் அலைபவளாகவும் சித்தரிப்பது எத்தகைய முற்போக்குத் தனம் என்பது எனக்கு விளங்கவில்லை. @@@

      இது போன்ற ஒரு கருத்து வினவு தளத்தில் இதுவரை வெளிவரவில்லை. மற்றபடி உங்கள் கருத்தான பிரதியை வைத்து எழுதுபவனை மதிப்பிடக்கூடாது என்றால் ஒருவனை பாலியல் வன்முறையாளனை ‘பாலியல் வன்முறையாளன்’ என்று எப்படி மதிப்பிடுவீர்கள்????

    • யோனி, குறி என்று ஆண் எழுதினால் மட்டும் அது புரட்சிகரமானது, முற்போக்கானது என்று உங்களுக்கு எந்த புரட்சியாளன் சொன்னான் ?

      உங்களுடைய தத்துவமற்ற தத்துவத்தின்படி ஆசிரியன் (ஆண்,பெண்) தான் பிரதி பிரசவித்ததும் மரித்துவிடுகிறானே அப்புறம் அவ‌னை யார் கீழ்தரமாக சித்தரித்தால் என்ன மேல்தரமாக சித்தரித்தால் உங்களுக்கென்ன கவலை ? ஆசிரியன் தான் அதற்கு பதில் சொல்லக் கடமைப் பட்டவன் அல்லவே. பிறகு எதற்கு வருந்துகிறீர்கள் ?

  15. வினவு தளத்தில் இடும் முதல் மறுமொழி. அய்யனரின் பொருட்டு.

    அய்யனார், லீனா, [அம்மணி என்றோ அக்கா என்றோ அழைத்தால் அவர் கடும் கோபம் கொள்வதாக நெருங்கிய நண்பர்கள் சொல்லக்  கேள்விப்பட்டிருக்கிறேன் ;)] தனது கவிதைகளை ‘புரச்சிப் பாலியல் பெண் கவிதைகள்’ என்று முன்னிறுத்திக் கொண்டிருப்பவர்.

    நான் சொல்ல வருவது புரிகிறதோ? :)) லீனா தான் கவிதை எழுதுகிறேன் என்று பொதுவாகச் சொல்வதில்லை. ‘பெண்ணியப் புரச்சிப் பாலியல் கவிதைகள்’ எழுதுவதாகச் சொல்கிறார். அப்படியானபின் நீங்கள் “கவிதையை ஆண் எழுதினால் புரட்சியாகவும் குறி கவிதையை பெண் எழுதினால் அலைபவளாகவும் சித்தரிப்பது எத்தகைய முற்போக்குத் தனம் என்பது எனக்கு விளங்கவில்லை” என்று எழுதுவது அசட்டுத்தனமான பிரதியியல் விமர்சனம். 

    தனது கவிதை பெண் தன்னிலையை முன்னிறுத்தும் பிரதி என்று ஒருவர் சொல்லும்போது அது அப்படியில்லை என்று காட்டவும் ஒருவர் முயற்சி செய்யலாம். அதைத்தான் வினவு செய்திருப்பதாகக் கருதுகிறேன். 

    நீங்கள் இன்னமும் ஒரு பிரதிக்கு எத்தனை ஆயிரம் அர்த்தங்கள் வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு திரியலாம் – unlimited semiosis – என்ற கருத்தில் இருந்தீர்களானால் ஒரு குப்பையும் கொட்ட முடியாது. unlimited semiosis என்ற கருத்தாக்கம் எத்தனை அபத்தம் என்பதை பலமுறை என்னால் முடிந்தவரை சுட்டிக்காட்டிவிட்டேன். 

    எல்லாம் புரிந்த நபராக நீங்கள் மாறிவிட்டிருந்தால் வாழ்த்துகிறேன்.
    நன்றிகள்.

  16. வினவின் இந்தக் கட்டுரை மிகுந்த ஏமாற்றத்தையும், ஆயாசத்தையும் தருகிறது. பாலியல் குறித்த விஷயங்களில் வினவு பலமுறை இவ்வாறன ‘நீதிமானாக’ நின்று தீர்ப்பு சொல்லியிருப்பதால் இது வியபளிக்கவில்லை என்பதும் உண்மையே.

    வர்க்கப் போராட்டதிற்கு பாலின வேறுபாடு தெரியாது என்கிறாரா கட்டுரையாளர்? மார்க்ஸ், லெனின் வரிசையில் பெண் ‘தலைவர்கள்’ இல்லாமல் போனது எதேச்சை என்று சொல்ல வருகின்றீர்களா? ஒருவேளை கம்யுனிசம் போன்ற ‘உயரிய’ சித்தாந்த வாழ்க்கைமுறை/போராட்டம் பெண்களுக்குப் புரியாது போலும்.

    பெண்களை விற்பனைப் பொருளாக்குவது முதலாளி வர்க்க ஆண்கள், அவர்களிடமிருந்து பெண் ‘மானத்தை காப்பவர்கள்’ உழைப்பாளி வர்க்க ஆண்கள். போரிட வந்தவர்களும் ஆண்கள், எதிரே போர்கொண்டு மாண்டவர்களும் ஆண்கள். இதில் பெண்களின் agency எங்கே ஐயா போயிற்று?

    ஒடுக்கப்பட்டவர்களுள் ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள். bell hooks எழுத்துக்கள் சிலவற்றை படித்தல் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.

    • வின‌வை ஏன் நீங்க‌ள் நீதிமானாக‌ க‌ருதிக்கொள்கிறீர்க‌ள் ? பாலியல் குறித்த விஷயங்களில் வினவு சில‌ க‌ருத்துக்க‌ளை சொல்லியிருந்தா‌ல் நீங்க‌ள் உங்க‌ளுடைய‌ க‌ருத்து என்னவோ அதைச் சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு வெறுமனே அங்க‌லாய்த்துக்கொள்வ‌து ஏன் ?

      பெண்களுக்காக எந்த காலத்திலும் ஆண்கள் மட்டும் போராடி அடிமைத்தனத்தை ஒழிக்க முடியாது. நாங்கள் அப்படி சொல்லவும் இல்லை, அப்படி எங்கும் நடந்ததும் இல்லை, நடக்கவும் முடியாது.

      கடைசியாக,
      பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களுள் ஒடுக்கப்பட்டவர்கள் தான் ஆனால் அது உழைக்கும் பெண்களுக்குத்தானே தவிர இது போன்ற எதிர் பெண்ணியம் பேசிக்கொண்டு ஆணாதிக்கத்திற்கு தீனி போடும் மேட்டுக்குடிகளுக்கு அல்ல. பெண்களுக்கும் வர்க்கம் உண்டு.

      • நான் அங்கலாய்பதாய் நீங்கள் கூறுவதை மறுக்கிறேன். அது எனது கருத்து. அதற்கான ஆதாரம் கட்டுரையிலே உள்ளது. அதை ஒவ்வொன்றாகக் கட்டுடைத்து இங்கே எழுத பொறுமை இல்லை. மன்னிக்கவும். கீழே நந்தா அவர்கள் அதைச் செய்துள்ளார் என்றே நினைக்கிறேன், உடன்படுகிறேன்.

        ‘potential rape’, ‘potential abuse’ என்பது உழைக்கும் பெண்களுக்கு மட்டும் உருவாகும் சூழ்நிலை அல்ல. நீங்கள் கூறும் மேட்டுக்குடி பெண்டிரையும் அது வெவ்வேறு வடிவங்களில் அச்சுறுத்தத்தான் செய்கின்றன. “அவ பணக்காரி, அவ சேலைய பணக்கார பயலுவ உருவுனா தப்பில்லா”; “இப்புடி மினிக்கிட்டு திருஞ்சா ரோட்ல போறவன் கைய புடிச்சு இழுக்கத்தான் செய்வான்” போன்ற கற்பிதங்களை நான் வன்மைய எதிர்கிறேன். (உங்கள்நிலைப்பாடும் அதுவே எனில் விட்டுவிடலாம்.) வர்கத்தின் வெளியே நின்று எதிர் குரல் எழுப்ப வேண்டிய பல விஷயங்களுள் இதுவும் ஒன்று.

        உழைக்கும் மக்களின் குமுரலுக்கிடையே இது போன்ற பாலின ஒடுக்குமுறைகள் எல்லாம் பெரிது இல்லைதான். அதேபோல் தமிழ் திரைப்பட நடிகைகளின் ‘அறசீற்றம்’ நகைப்புக்குரியதுதான். ஆனால் குஷ்புவுக்கு எதிராகத் திரண்ட — அவரை அண்ணா சாலையில் உயிரோடு கொளுத்துவோம் என்று மிரட்டிய — ‘உழைக்கும்’ பெண்களுக்கு என்றும் என் ஆதரவு இல்லை.

        அதேபோல லீனா உழைகின்றாரா/மேட்டுக்குடியா இல்லையா போன்ற முடிவுகளுக்கு வர என்னிடம் எந்த அவசியமோ ஆதாரமோ இல்லை (கட்டுரையாளருக்கு இருப்பது போல(!)). எது பெண்ணியம் என்று நீங்கள் கூறினால் லீனா எப்படி எதிர்பென்னியவாதி என்று சொல்லிகிறீர்கள் என்பதும் புரியும். (அப்போதும் உங்களின் சட்டகத்திற்கு உடன்படுவேன் என்பது நிச்சயம் அல்ல.)

  17. முன்குறிப்பு. நான் இதுவரை லீனா மணிமேகலையை பார்த்ததும் இல்லை, அவரிடம் பேசியதுமில்லை.

    வினவு பல சமயங்களில் உங்கள் கட்டுரையின் முழு உள்ளடக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடிந்ததில்லை. ஆனால் உங்களது கட்டுரையின் தொடர்ச்சியான அறச்சீற்றமும், ஒடுக்குமுறைகளின் மீதான ரௌத்ரமும் கூடிய உங்களது கட்டுரைகளை வாசிக்க தவறுவது மட்டும் இல்லை. சொல்லப்போனால் பல கட்டுரைகள் “அப்பாடா இவர்களாவது இதைப் பற்றிப் பேசினார்களே” என்ற சந்தோஷத்தைத் தந்திருக்கிறது.

    இந்தக் கட்டுரையின் பல இடங்கள் முகம் சுளிக்க வைப்பதாய் இருக்கிறது. அது குறி, யோனி போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் மீதான பொது ஜனம் சார்ந்த முகம் சுளித்தல் அல்ல. உங்களது கருத்தாக்கங்கள் மீதானது. அதீத கோபமோ அல்லது இனம் காண முடியா உணர்வோ சற்றே உங்களது கட்டுரையை திசைதிருப்புகிறதோ?

    //பொதுவாக போர்ட் போலியோ எனப்படும் சுய படங்களை எடுத்து வைத்துக் கொண்டு தனது புகைப்படங்கள் ஊடகங்களில் அதிகம் வரவேண்டும் என்று ஆசைப்படுவாராம் லீனா. அதற்காகவே தொழில் முறை ஒளிப்பதிவாளர்களை வைத்து மேக்கப் போட்டு நடிகைகள் போல ஆல்பம் வைத்திருக்கிறார். “இதைத்தானே நமீதா, த்ரிஷா, தமன்னா எல்லோரும் செய்கிறார்கள். இத்தகைய ஆல்பங்களைத்தானே, கன்னடப் பிரசாத் போன்றவர்கள் கையில் வைத்துக் கொண்டு அலைகிறார்கள்?” என்று நீங்கள் கேட்க நினைக்கலாம். கேட்டால் அடுத்த கவிதையில் இராக், ஆப்கான் வரிசையில் உங்கள் பெயரும் இடம்பெறும் வாய்ப்பு உண்டு.//

    எவ்வளவு மோசமான வரிகள் இவை. என்.டி.திவாரி குறித்து பெரும்பாலான ஊடகங்களில் வந்த செய்திக்கட்டுரைகள் ஏறக்குறைய இது மாதிரிதான் எழுதப்பட்டவை. ”அவர் அதிக மாத்திரைகளை உட்கொள்வாராம். பல பெண்களை மிரட்டினாராம், பெண்கள் அவருடன் சந்தோஷமாக இருந்தார்களாம்.” இந்த “ஆம்” என்ற விகுதி எவ்வளவு மோசமான வரிகளை வெகு எளிதாய் தயாரித்து விடுகிறது. செய்திக்கட்டுரைகளின் நோக்கம் உண்மையை உணர்த்துவது போய், இப்போது மக்களின் மன விகாரங்களுக்கு எப்படி தீனி போடுவது என்பதற்கு வெகு அழகாய் உபயோகப்பட்டு வருகிறது.

    உங்களது கட்டுரைக்கு வருகிறேன். இதெல்லாம் ஒரு குற்றச்சாட்டா வினவு?கொஞ்சம் தள்ளி நின்று யோசித்துப் பாருங்கள். ஒருவர் தனது போர்ட்ஃபோலியோ புகைப்படங்களை வைத்திருக்கிறார் என்ற ஒரு தகவலை வைத்து எவ்வளவு தூரம் கொண்டு செல்கிறீர்கள்? உங்களுக்கே இது தவறாக தெரியவில்லையா?

    உங்களது கட்டுரையில் தொழிலாளர்களுக்கெதிரான அவரது செயல், மத்திய, மாநில மற்றும் ராஜபக்‌ஷே, சோனியாக்களை கூட விமர்சிக்க விரும்பாத மொக்கைத்தனமான போராட்ட முறை போன்ற பல இடங்களில் ஒத்துப் போகின்றேன்.

    ஆனால் லயோலா கல்லூரி விவகாரம் குறித்தான பிரச்சினையை நீங்கள் எள்ளல் செய்து பேசிய வரிகள் மகா அபத்தம். அதற்கு முன்பும், பின்பும் தொடர்ச்சியாக போராட்டங்களில் அவர் கலந்துக் கொண்டுதான் இருந்தார். அவரது அரசியல் கொள்கைகள் நமக்கு ஏற்புடையதா இல்லையா என்பது வேறு. ஆனால் தொடர்ச்சியாய் அவரது அரசியல் சார்பு போராட்டங்களில் அவரது பங்களிப்புகள் இருந்துக் கொண்டுதான் இருந்தன. என்னமோ அவர் லயோலா கல்லூரி பிரச்சினையைத் தவிர வேறு எதைப்பற்றியும் கவலைப்பட்டதே இல்லை என்ற ரீதியில் எழுதி இருந்ததை என்னவென்று சொல்வது.

    ஏன் நீங்கள் கூடத்தான் கொஞ்ச நாளைக்கு முன்பு சுமஜ்லா விஷயத்துக்காக எல்லாம் ஒரு பதிவு போட்டிருந்தீர்கள். ஏன் உங்களுக்கு அப்போது ஈராக், ஆப்கான், குஜராத், ஈழம் போன்ற சில்லறைப் பிரச்சினைகளை விட முக்கியமானதாக சித்தரிக்கும் அளவுக்கு அவை தோன்றியதா?

    அது ஒரு நிகழ்வு. அனுமதி மறுத்ததும், அதற்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் அவர் போராட்டம் நிகழ்த்தியதும், உடை சார்ந்து பெண்களின் கட்டுப்பாடுகள் குறித்தும் எழுந்த விமர்சனமும் அதன் விளைவுகள். ஆனால் நீங்கள்தான் அதற்கு ஓவர் ரீயாக்ட் செய்கின்றீர்கள். ராமநாராயணன், அம்மன் வேப்பிலை போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் சத்தியமாய் கட்டுரையின் மையமாய் நீங்கள் சொல்ல வந்ததை மீறி விகாரமாய் துருத்திக் கொண்டிருக்கிறது.

    உங்களது கட்டுரையின் சாராம்சம் என்ன? பலரும் முற்போக்குவாதி என்று நம்பிக்கொண்டிருக்கும் லீனா அப்படிப்பட்டவரல்ல என்பதை நிறுவ முயல்வதும், அவரது இரண்டாவது கவிதையில் இருக்கும் வன்மமான அரசியலையும் வெளிப்படுத்துவதுதானே? இதை இவ்வளவு மோசமாகவா வெளிக் கொணருவது?

    முதல் கவிதை குறித்தான உங்களது புரிதலிலிருந்து நான் வேறுபடுகின்றேன். அதிகார ஒடுக்குமுறைக்கும், போர்களுக்கும், ஏகாதிபத்தியத்திற்கும் ஆண்குறி மட்டுமே காரணம் என்று அவர் நிறுவ முயன்றதாய் உங்களது புரிதல். ஆனால் என்னுடைய புரிதல் உலகின் எந்த ஒரு மூலையில் நடக்கின்ற போர்களின் போதும் வன்புணரப்படும் பெண்களின் ஓலமாய் இதை நான் பார்க்கின்றேன். இந்த புரிதலிலேயே நாம் வித்தியாசப்படும் போது இந்தக் கவிதை குறித்தான உங்களது விமர்சனங்களுக்கு நான் என்னவென்று சொல்ல? (அந்த கவிதையின் ”புரட்சி வேண்டுபவர்கள்” என்ற வரிகளின் மீது எனக்கு மறு வாசிப்பு தேவைப்படுகின்றது)

    2 வது கவிதை மட்டுமே என்னைப் பொறுத்த வரை மிகத் தவறான ஒன்று. அதை நீங்கள் கருத்தியலாக விமர்சிக்கலாம். ஆனால் இப்படி ராமநாராயணன், கன்னட பிரசாத், குடும்ப ஆட்களை இழுப்பது என்று கீழ்மட்ட விமர்சனம் தேவையா? அது எப்படி நீ எங்களையே தப்பு சொல்லலாம் என்பதால் உணர்ச்சி வசப்பட்டு விட்டீர்களா? அப்புறம் சாரு என்னைப்பத்தியே சொல்றியா என்று கொதித்து எழுவதற்கும், உங்களுக்கும் என்ன வித்தியாசம் இருந்து விடப் போகின்றது.

    அது எப்படி நீ குறியை வைத்தே எழுதிக் கொண்டிருக்கலாம் என்ற கேள்வியை கேட்பதற்குப் பதில் இப்படி கேட்கின்றீர்களா வினவு? ஏன்னா இந்தப்பதிவில் கலகத்தின் பின்னூட்டங்கள் அந்த கேள்வியை நோக்கியே இருக்கின்றது. உங்களது அமைப்பு சார்ந்த ஒருவரிடமிருந்து இவ்வளவு பிற்போக்குத்தனமான பின்னூட்டமா?

    //மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். முழுக்க முழுக்க வெளி நாடுகளில் மட்டுமே காண்பிக்கப்படுமாம். நேர்மையான நோக்கத்துக்காக புலிகளைப் பற்றி விமரிசிப்பது என்பது வேறு, இலங்கை அரசையும் இந்திய அரசையும் நத்திப்பிழைக்கும் வாய்ப்புக்காக புலிகளை விமரிசிப்பது என்பது வேறு. செங்கடலின் ‘ஆழத்தை’ பார்க்கும் போது படத்தில் நிச்சயமாக வில்லங்கம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது.//

    //மாத்தம்மா விஷயமே ஓவர் பில்டப் பண்ணி எடுக்கப்பட்டது என்ற விமர்சனங்கள் அப்போது வந்தன. லீனா ஆவணப்படம் எடுக்கிறேன் என்று பலரையும் மோசடியும் செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு. அவர் சில ஈழத் தமிழர்களிடம் இவ்விதமான தொடர்புகளோடு இருந்து கடைசியில் ஏமாற்றி அது பஞ்சாயத்து செய்து முடிக்கப்பட்டும் இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். லீனா தன்னை ஏமாற்றி விட்டதாக ஒரு தன்னார்வக்குழுவே வழக்குக் கூடத் தொடர்ந்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.//

    //சிறிதும் நேர்மையற்ற லீனா தனது படங்களில் வேலை பார்க்கும் யாருக்கும் முறையான ஊதியம் கூட வழங்குவதில்லையாம். எவனாவது ஊதியம் கேட்டால் தனது ‘பெண்மையை’ அவனுக்கு எதிரான ஆயுதமாக மாற்றி அமர்க்களம் பண்ணி விடுவாராம்.//

    //ஆமாம் அவர்களை செல்வாக்கான மனிதர்கள் தலையிட்டே விடுவித்திருக்கிறார்கள்.//

    //இதை எழுதிக் கொண்டிருக்கும்போது ஒரு நண்பர் சொன்னார்: முன்னர் புலிகள் செல்வாக்கோடு இருந்த காலத்தில் புலிகளுக்காக திலீபன் பற்றி ஒரு படம் பண்ணும் முயற்சியில் கூட லீனா இருந்தாராம். இப்போது புலிகள் தோற்றவுடன் – செங்கடல்! அரசியலில் இந்த மாதிரி பிழைப்பவர்களை அரசியல் விபச்சாரம் செய்பவர்கள் என்று சொல்வார்கள். இதே வேலையை கலைத்துறையில் செய்வதற்கு என்ன பெயர் என்று தெரியவில்லை.//

    “தாம், ராம், சொல்கிறார்கள், அப்படித்தான் தோன்றுகிறது, பேசிக்கிறாங்க” என்னங்க இது? நான் வினவு தளத்தின் கட்டுரையைதான் படித்துக் கொண்டிருக்கிறேனா இல்லை நக்கீரனை படித்துக் கொண்டிருக்கிறேனா?

    மிக முக்கியமாய் அய்யனாரின் கேள்வி இப்போது உங்கள் முன் வெகு தீவிரமாய் வைத்தாக வேண்டி இருக்கின்றது. எல்லாவற்றையும் கேட்டே தீர்ப்பெழுதி விடுவீர்களா? அப்புறம் ஜூனியர் விகடன், ரிப்போர்ட்டர், நக்கீரன் வகை கட்டுரைகளுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் தேவையில்லை என்று நீங்களே முடிவு செய்து விட்டீர்களா? அல்லது உங்கள் தளத்தின் வாசகர்கள் இது போன்று எழுதுவதைத்தான் விரும்புபவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் நான் ஜட்டி விலையை சொல்லும் கட்டுரைகளையே விரும்பி படித்து விட்டு போயிருப்பேனே? இங்கே வந்து எதிர்பார்த்து ஏமாநதது என் தவறோ?

    வினவு தளத்தின் தீவிர வாசகனாய் இருந்தாலும் இங்கே பின்னூட்டங்களில் பல சமய்ங்களில் கருத்தியல் ஜனநாயகமே இருப்பதில்லை என்று உங்கள் அமைப்பைச் சேர்ந்த நண்பரிடம் பலமுறை வருத்தப்பட்டிருக்கின்றேன். ஒரு கட்டத்தில் ரொம்ப வெறுத்துப் போய் தனிமடலாவது இடலாம் என்று நினைத்த போது செல்வநாயகி அவர்களின் முற்போக்கு குறித்தான பின்னூட்டம் சற்றே ஆசுவாசப்படுத்தியது. இப்போது ஒன்றுமே முடியாமல் இவ்வளவு பெரிய பின்னூட்டத்தை இடுகின்றேன்.

    மறுபடியும் சொல்கின்றேன். கட்டுரையின் சாராம்சமாக லீனா அவர்களின் வன்மமான பொதுவுடைமை எதிர்ப்பு, இலங்கைக்கெதிரான மொக்கைத்தனமான போராட்ட முறை, சம்பள விவகாரம், ஆகிய பிரச்சினைகளில் உங்களது கருத்தை நான் கை தட்டி வரவேற்கின்றேன்.

    ஆனால் மட்டமான வார்த்தைப்பிரயோகங்களும், தேவையற்ற காழ்ப்புடன் கூடிய விமர்சனங்களும், ஓவர் ரீயாக்ட் செய்வதும் ஆகிய உங்களது செயல்களை பலமாய் எதிர்க்கின்றேன். இந்த கட்டுரையை இன்னும் பல மடங்கு நன்றாக எழுதி இருக்கலாம்.

    ஒரு பெண் குறியைப் பற்றி எழுதி விட்டாள், இவ எல்லாம் என்ன ஆளு என்ற பிற்போக்குத்தனமான ரீதியில் வினவு தளம் இயங்காது என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் உங்களது கட்டுரையின் பல இடங்கள் அப்படி ஒரு எதிர்ப்பைத்தான் எனக்கு உணர்த்துகின்றது. அது எனது புரிதலின் தவறா அல்லது உங்களது கட்டுரையின் சொல்லாடல்கள் தவறா என்பதை உங்களது முடிவுக்கே விட்டு விடுகின்றேன்.

    இந்தப்பின்னூட்டத்திற்கு மறுமொழி வேண்டும் என்று எதிர்பார்க்க வில்லை. ஆனால் மறுமொழி கூறுபவர்கள் கருத்தியல் விமர்சனங்களை வைத்தால் மட்டுமே நான் மீண்டும் பதிலளிப்பேன். வெறுமனே வசைபாடல்கள் மட்டுமே தாங்கிய பின்னூட்டத்திற்கு எனது மௌனத்தை மட்டும் பதிலாய் வழங்குகின்றேன்.

    • //இந்தக் கட்டுரை மேற்படிக் கும்பலை குறிவைத்து எழுதப்படுவதால், அவர்களது கலகச் சொற்களையும் ‘குறி’யீடுகளையும் இதில் அவ்வாறே பயன்படுத்துகிறோம். மற்றப்படி உண்மைகளை உரைக்க வைப்பதற்கு உள்ளாடைகளைக் கழற்ற வேண்டும் என்ற கருத்தோ, விருப்பமோ எங்களுக்கு இல்லை.//

      நந்தா இது உங்கள் பார்வைக்கு!

    • நந்தா, புரட்ச்யும், ஜிகாதும், ராஜபட்சேவும், மார்க்சும் ஒன்றெனும்போது, லீனாவின் போர்ட்போலியோவும் கன்னடபிரசாதின் போர்ட்போலியோவும் ஒன்றாக முடியாதா? சில விசயங்கள் உரைக்க வேண்டுமானால் அதை செல்லவேண்டிய விதத்தில்தான் சொல்ல வேண்டும்

    • நந்தா @@பார்ப்பதற்குத்தானே ஐயா, போர்ட் போலியோ! அதில் ஆணாதிக்கம் எதுவும் கிடையாதே!@@ இந்த வரி உங்களுக்கு நிஜமாவே புரியலயா? லீனா எனும் பெண்ணிய போராளியின் முகத்திரை கிழியவில்லையா

    • நந்தா எனக்கு இது புரியவில்லை. தயவு செய்து விளக்கவும் @@@இங்கே பின்னூட்டங்களில் பல சமய்ங்களில் கருத்தியல் ஜனநாயகமே இருப்பதில்லை என்று உங்கள் அமைப்பைச் சேர்ந்த நண்பரிடம் பலமுறை வருத்தப்பட்டிருக்கின்றேன்.@@@

      • கேள்விக்குறி இப்போதுதான் இதை பார்த்ததால் தாமதமாய் பதிலிடுகின்றேன். இது குறித்து நாம் இங்கு பேசுவது ஒரு வேளை கட்டுரையை திசை திருப்பலாம். உங்கள் அமைப்பைச் சேர்ந்த சரவணராஜாவிடம் இது குறித்து பல முறை பேசி இருக்கின்றேன்.

  18. அய்யனார், 

    தமிழ் எழுத்துச் சூழலில் இருந்து குறைந்தது ஒரு ஆறு மாத காலமாவது விலகி இருப்பது – இழந்த என் நிதானப் பண்பைத் திரும்ப வளர்த்துக் கொள்ளவும், என் மன நிம்மதியின் பொருட்டும் – என்ற என் முடிவையும் மீறி இங்கு பின்னூட்டமிட்டதற்கு காரணம் உண்டு. 

    நேற்று ”இனியொரு” இணைய இதழில் வெளியாகியிருந்த இச்செய்தியையும், “தினத்தந்தி”யில் அச்செய்தி வெளியாகியிருந்ததையும் குறிப்பிட்டு ஃபேஸ்புக்கில் எனது பக்கத்தில் நான் எழுதிய குறிப்பிற்கு பல்லிளித்து மட்டும் சென்ற நீங்கள் இங்கு ‘கவிதைக்கு’ வக்காலத்து வாங்கியது பெரும் சந்தர்ப்பவாதமாக எனக்குப் பட்டது. இது குறித்து மீண்டும் எனது ஃபேஸ் புக் பக்கத்தில் குறிப்பு எழுதியும் இருக்கிறேன்.

    இது இரட்டை வேடமா அல்லது இடத்திற்கு ஏற்றவாறு நபர்களுக்கு ஏற்றவாறு பேசும் ‘நட்பு’ நிமித்தமா? 

    என்ன கழுதையோ! அய்யனார் கோவிலில் நிற்கும் நாய்ச் சிலைக்காவது புரிந்தால் தேவலை.

  19. அய்யனாருக்கான குறிப்பாக மட்டுமல்லாமல் பொதுவான நோக்கிலும் இது குறித்து எனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று இக்கட்டுரைக்கு இணைப்பு கொடுத்துவிட்டு எழுதிய பின்னூட்டங்கள் [இதற்கு முன்பாக ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன் லீனா, ஷோபாசக்தி, அ. மார்க்ஸ் இவர்களிடையேயான உறவுகளில் என்ன அரசியல் இருக்கு என்று ‘வண்டை வண்டையாக’ எழுதப் போய் – அதை காப்பி – பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டு பல இடங்களில் அனானிகளாக பின்னூட்டமிட்ட சிலர் யாரென்ற பலமான ஊகமும் உண்டு; இங்கும் அவை அனானிப் பின்னூட்டமாக இடப்படலாம் – எனக்குக் கவலையில்லை; அவற்றை வைத்து என் மீது சைபர் க்ரைமில் கேஸ் குடுத்திருக்காம் அம்மிணி :))] 

    ஃபேஸ் புக்கில் எனது பக்கத்தில் எழுதிய குறிப்புகள்: 

    ஒன்று: இங்கே இது குறித்த செய்தியை வெளியிட்டபோது இளித்துவிட்டுச் சென்ற அய்யனார் வினவு பதிவில் போய் “தனிப்பட்ட தாக்குதல் ஏன்” என்கிற ரீதியில் கேள்வி கேட்டிருப்பது புரியவில்லை.  

    இரண்டு: லீனா குறித்த சர்ச்சை தனிப்பட்ட விடயங்கள் சார்ந்ததில்லை; ஆரோக்கியமான ஒரு அரசியல் கலாச்சாரத்தை வெகுவாக சீரழித்ததில் மிகச் சமீக காலத்தில் முனைப்பாக இருந்தவர் என்பதாலேயே அந்த ஈனப்பிறவி மீது கடுப்பாகிறது; இதில் வினவு எழுப்பிய கேள்விகள் மிக நியாயமானவை; சில விடயங்களை குறிப்பிட மறந்துவிட்டார்கள் என்ற போதிலும். உதாரணமாக, தில்லியில் நிகழ்த்திய ‘ஆர்ப்பாட்டத்திற்கு’ யார் முதலில் ஏற்பாடு செய்தது? அதை லீனா எப்படி ஹைஜாக் செய்தார் என்ற கேள்வி … 

    மூன்று: ஒரு ஆவணப் படத்திற்கு ஒரு கோடி ஆட்டையைப் போட்டிருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் … Sundance, ITVS போன்ற சர்வதேச நிறுவனங்கள் கூட அவ்வளவு தொகை கொடுப்பதைல்லை; ஒரு வருடத்திற்கு முன்பான UNESCO வின் சர்வே ஒன்றின்படி ஒரு 30 நிமிட டாக்குமெண்டரியை இந்தியாவில் எடுப்பதற்கான தயாரிப்பு செலவு 5 லட்சங்கள் மட்டுமே.

    நான்கு: ஈனம் மானம் கெட்ட ஜென்மங்களிடம் எந்த தரவுகள் ‘உண்மைகளைப்’ பேசினாலும் பிரயோசனமில்லை; அவ்வளவே 🙁 

    ஐந்து: நான் கண்ட வரையில் இத்தகைய நபர்களுக்கு ஒரு குறைந்தபட்ச குற்ற உணர்ச்சி கூட இருப்பதில்லை; யாரையும் எப்படியும் ஏப்பம் விட்டுவிட முடியும் என்ற திடகாத்திர நம்பிக்கை இத்தகைய ஆட்களுக்கு இருப்பதை உணர்ந்திருக்கிறேன்; எல்லாம் காலப்போக்கில் ஆட்கள் மறந்துவிடுவார்கள் என்ற அதீத நம்பிக்கையில் எதையும் செய்யத் தயாரகவும் இருப்பதையும் கண்டிருக்கிறேன்; ஒன்னும் செய்ய முடியாது. இதுகளாகவே அசிங்கப்பட்டுப் போனாலும் இதுகளுக்கு உடம்பு கூசாது.

  20. பெண் இனத்திற்கு எதரி ஒரு பெண் அல்லாமல் வேறு யாரும் இல்லை…………..எங்கே பொய்கொண்டிருக்கிறது நம் பண்பாடும் கலாச்சாரமும்…………சுதந்திரம் அனைவர்க்கும் உண்டு ஆனால் அதை தவறான வழிகழில் பயன்படுத்தாதே நல்லவர்களையும் கெடுக்காதே ………………….வேறென்ன சொல்ல ……………………….

  21. மனிதர்க்கும் மிருகத்திற்கும் உள்ள ஒரே ஒரு வித்தியாசம் இந்த பாலுறவு மட்டுமே அவை களிலும் சிலவை ஒரே ஒரு ஜோடியுடன் மட்டுமே…………………………………………………………………………….

  22. அவ இவன்னு எல்லாம் மறியாதைக்குறைவாக‌ பேசாதீங்க, அது விவாதத்தை திசை திருப்பும்.அப்புறம் முக்கியமான விச‌யத்தை விட்டுவிட்டு அதை பிடித்துக்கொண்டு தொங்குவார்கள்.

  23. vetkam yeanbathu yeathu namakku! Sathiyam Sonnaal pen!

    Puratchi patri paadiya mundaasu kavignan Than mundasai kazhartri Mukkaadaai pottu kolvaan!
    Irantha pinam Thirantha vaaiyaal thuppiyathu keattean! Penne pennirku yeathiri Aanalla Arivizhanthavale! Kaamam kaasu kodukum yeanbathu penniyathil ondu! Kaamam yeanbathaal Kaasiai izhanthu Viyaathiaium vaanga vendum yeanbathanaal Thalli ponathu Aaniyam! Pantri Seatril puralum, Athai oru poruttaaha Karutha Veandiathu namathu velai alla! Pirasurika panam veandum! Pirasavikka manam veandum!

  24. கட்டுரை ஒடுக்கும் மக்கள் சார்பு பற்றிப் பேசினாலும் அதன் அணுகுமுறை சராசரி வலதுசாரி அணுகுமுறையாகவே உள்ளது.
    தீராநதி மற்றும் குமுதத்திற்குப்  பொருத்தமான கட்டுரை எப்படி வினவுவில் வெளியானது என்று நான் ஆச்சரியப்படவில்லை. ஏற்கெனவேயும் வினவுவில் இவ்வாறான கட்டுரைகளைப் படித்ததுண்டு. அதேவேளை வினவுவில் பல குறிப்பிடத் தகுந்த நல்ல கட்டுரைகளையும் படித்திருக்கிறேன் என்பதையும் இங்கு குறித்துக்காட்டுதல் வேண்டும். 
    1.லீனாவும் ஷோபாசக்தியும் பட்டா கேட்டதற்காக தொழிலாளர்களைத் தாக்கியது.2.கூட்டத்தில் மத்திய மாநில மற்றும் இலங்கை அரசுகளை விமர்சிக்க அனுமதிக்காமை 3.நீங்கள் குறிப்பிட்ட இரண்டாவது கவிதை போன்ற விடயங்களில் எனக்கு தங்களுடைய விமர்சனத்துடன் உடன்பாடு உண்டு. (முதலாவது கவிதை பற்றிய எனது பார்வை வேறானது.)
    ஆனால், அவற்றை அடிப்படையாக வைத்துக் கொண்டு லீனாவை விமர்சிக்க தாங்கள் எடுத்துக் கொண்ட அணுகுமுறை, கையாண்ட சொற்கள் துணைக்கழைத்த உதாரணங்கள் என்பவற்றில் எனக்கு உடன்பாடு காண முடியவில்லை. இவை ஒரு சராசரி வலதுசாரி அணுகுமுறையாகவே உள்ளன. 
    லயோலாக்கல்லூரிக்கு அவர் பாரம்பரிய(?) உடையில் போகாததால் அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்தது எப்படித் தவறாகும்? அதற்கு ஆதரவளித்தவர்களில் லீனாவுக்காக ஆதரவளித்தவர்களை விட அத்தகைய கலாசாரக் காவல்தனத்தை எதிர்த்து ஆதரவளித்தவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய போராட்டம் நியாயமானதும் முற்போக்கானதுமாகும். தங்களுடைய விமர்சனம் அத்தகையவர்களை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல்  வலதுசாரி கலாசாரக் காவலர்களுக்கு ஆதரவளிக்கும் ஒன்றாகவும் ஆகிவிடுகிறது.
    மாத்தம்மா மிகைப்படுத்தப்பட்ட படம் என்பதைத் தவிர தங்களிடமிருந்து வேறு விமர்சனமேதுமில்லை. அந்தப் படத்தை நான் பார்த்திருக்கிறேன். அது ஒரு நியாயமான படம் நல்ல முயற்சி என்பது தான் எனது அபிப்பிராயம். லீனா குறித்த விமர்சனத்தில் இதையும் சாட்டுக்கு இழுப்பது தங்களது கட்டுரையை அல்லவா பலவீனப்படுத்தியிருக்கிறது. அது மட்டுமல்லாமல் அவ்வாறான பெண்கள் மீதான ஒடுக்குமுறை இல்லை. இது லீனாவின் மிகைப்படுத்தல் என்று ‘இடதுசாரி’களே சொல்லிவிட்டார்கள் என்று அவ்வொடுக்குமுறையை திரை போட்டு மறைத்து விடவும் உதவும் என்பதை தாங்கள் ஏன் எண்ணவில்லை. இங்கு தான் தங்களுடைய பலவீனம் இருக்கிறது. ஓடுக்கப்பட்ட அந்தப் பெண்களுடைய நலனை விட லீனாவைத் தாக்குவது என்பது உங்களுக்கு முக்கியமாகப் போய்விட்டது. ( அதற்காக லீனாவை விமர்சிக்கக்கூடாது என்று நான் சொல்லவில்லை)
    1.அதேபோல் ஈழத்து நண்பர்கள் சிலரை படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஏமாற்றியதாகவும் எழுதி இருக்கிறீர்கள்.  ஈழத்து நண்பர்கள் எவராவது லீனா தன்னை ஏமாற்றியதாக சொன்னதாக நான் அறியவில்லை. அது தொடக்கம் மேலும் பல குற்றச்சாட்டுக்கள் எவ்வித ஆதாரமுமற்ற சராசரிக் குமுத எழுத்தாகப் போய் விட்டது. 
    இந்த இடத்தில் தான் நியாயமான விமர்சனப் பார்வை அவசியம் என்கிறேன். ஓரு வருடைய சரியையும் தவறையும் நிதானமாக அணுகும் பக்குவத்தை நான் இடதுசாரிகளிடம் எதிர்பார்க்கிறேன். ஆனாலும் மறுபடியும் மறுபடியும் ஏமாந்து போவது தான் நிகழ்கிறது. 
    உங்களுடைய தர்க்கத்தின்படி லீனாவால் குறித்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக நீங்கள் பரிந்து பேசுவது கூடத் தவறு. ஏனெனில் அவர்களும் நீங்களே குறிப்பிடுகிறபடி இறுதியில் ஒரு தமிழ் ஆண்குறி சினிமாவையே படைப்பார்கள் என்று ஒருவர் வாதிடக் கூடுமல்லவா?    

     

    • –.அதேபோல் ஈழத்து நண்பர்கள் சிலரை படம் எடுக்கிறேன் பேர்வழி என்று ஏமாற்றியதாகவும் எழுதி இருக்கிறீர்கள்.  ஈழத்து நண்பர்கள் எவராவது லீனா தன்னை ஏமாற்றியதாக சொன்னதாக நான் அறியவில்லை. — 
      லீனா சுவிஸ் நபர் ஒருவருக்கு ஆவணப்படம் எடுப்பதாகக் கூறி ஏமாற்றி ஆட்டையைப் போட்டது பற்றி அந்த நபர் இன்னமும் ஆத்திரத்துடன் இருக்கிறார்… 

  25. அன்புள்ள நந்தா நீங்கள் எழுதிய பின்னூட்டத்திற்கான எனது மறுப்பு……….

    ஒரு கட்டுரை லீனா பற்றி எழுதப்பட்டது வேதனைதான் அளிக்கிறது. ஆனால் அவரது கவிதைகளைப் படிக்கும் முற்போக்காக சிந்திக்கும் எவருக்குமே இதே வேதனைகள் உருவாகும். அவர் ஏன் அப்படி எழுதினார் என்று தெரியவில்லை. இப்போதெல்லாம் கலகம், கட்டுடைப்பு, போஸ்ட் மார்டம் என்கிற பெயரில் எல்லாவற்றையும் உடைக்கிறார்கள். ஆனால் இப்படி உடைப்பதால் பார்ப்பன இந்து தர்மத்துக்கோ, இந்து பெருங்கதையாடலுக்கோ எவ்வித இழப்பும் ஏற்படவில்லை. ஆனால் தாங்கள் நம்பிய கொள்கைக்காக வாழ்வை தியாகம் செய்து போராடிய புரட்சிகரத் தோழர்களின் தியாகங்களை பின் நவீனத்துவம் என்ற பெயரில் இழிவு செய்தார்கள். தியாங்கள் ஏளனபப்டுத்த்ப்பட்டன. எளிய வாழ்க்கை வாழ்கிறவர்கள் பிழைக்கத் தெரியாத மனிதர்கள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். பினநவீனத்துவ விமர்சன முறை இடது சாரி தோழர்களையும் இடது அமைப்புகளையும் பெரிதும் பாதித்தது. அதை வைத்து வயிறு வளர்த்த சில அறிவு ஜீவிகள் இன்று வசதியாக செட்டில் ஆகிவிட்டார்கள். சிலர் தேர்தல் அரசியலில் பதவிகளும் அடைந்து விட்டார்கள். ஆனால் தோழர்கள்?
    இன்றும் தாங்கள் நம்பிய கொள்கைக்காக நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகம் முழுக்க பல் வேறு வ்ழக்குகளில் தோழர்கள் சிறையில் இருக்கிறார்கள். ஆக லீனா எதை வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் எழுதி விடலாம் என நினைத்தால் இதுதான் நடக்கும். வினவு எழுதியதை தவறு என்று சொல்லும் நண்பர்கள். லீனா எழுதியதை நியாயபப்டுத்துகிறார்கள்; என்னைப் பொறுத்தவரையில் லீனா எழுதியது சரி என்றால் வினவு எழுதியதும் சரிதான். லீனா எழுதியது தவறு என்றால் வினவு எழுதியது தவறு. முதலில் லீனா செய்த அநாகரீகமான கவிதையை மனச்சாட்சி உள்ளவர்கள். படித்து பதில் சொல்ல வேண்டும்.

    தவிறவும் சுவிஸ் நாட்டைச் சார்ந்த அஜீவன் என்பரை லீனா பல லட்சம் மோசடி செய்தது உண்மைதான். கடைசியில் சென்னையில் வைத்து கட்டைப்பஞ்சாயத்து செய்துதான் அந்தப் பணத்தை மீட்டார் அஜீவன். அது போல தன்னார்வக் குழு ஒன்று லீனா மீது பண மோசடி தொடர்பாக வழக்குத் தொடர்ந்ததும் உண்மைதான்.அது போல இதற்கு முன்னரும் வேலை பார்த்த எவருக்கும் ஊதியம் கொடுக்காமல்,,,,,,,,, பணியாளர்களை மட்டுமல்ல ஆவணப்படம் எடுக்கும் மக்களுக்குக் கூட வாக்குரிதிகளை வாரி வழங்கி படம் எடுத்து விட்டு எஸ்கேப் ஆகிவிடுவதுதான் லீனாவின் வேலை. இதை எல்லாம் நக்கீரன், கிசு கிசு என்றெல்லாம் எழுதுகிறீர்களே? தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் ஆவரை அடித்து உதைத்த நாய் ஷோபா சக்தியின் செயலை நியாயப்படுத்துகிற போக்கு உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக இல்லையா? பெரும் மேல்தட்டுப் பெண்ணான லீனா மீது உங்களின் கரிசன் என்பது பெண் என்பதால் ஏற்பட்டதா? அல்லது பணக்காரி…… ஃபாரின் சரக்கு ஊற்றிக் கொடுப்பார் என்பதால் ஏற்பட்டதா? அல்லது லீனாவை ஆதரித்தால் அதை நோக்கிய பயணத்தில் நமக்கும் வசதியாய் இருக்கும் என்பதால் உருவானதா?

    இந்திய அரசு தேவதை படத்திற்கு விருது கொடுக்க இவர் எப்படி இந்தியாவை விமர்சித்து செங்கடல் படம் எடுக்க முடியும். தவிறவும் புலிகளின் ஜென்ம எதிரியான ஷோபா சக்தியோடு சேர்ந்ஹ்டு கொண்டு தமிழக மீனவர் பிரச்சனை பற்றி இவர்கள் எபப்டி படம் எடுக்க முடியும். லீனாவுக்கும் கடலோரத்திற்கும் என்ன சம்பந்தம்…. அந்த ஒரு கோடியையும் சில விருதுகளையும் தவிற……………

  26. இடது சாரித் தோழர்கள் மீதான ஆபாச வன்முறைக் கவிதையின் வெளிப்பாடாய் நாம் வெளியிட்ட ”லீனா மணிமேகலை: அதிகார ஆண்kuriயை மறைக்கும் விளம்பர யோni !! “ கட்டுரை நமது இலக்கிய பிதாமகன்கள் இடையே கடும் கோபத்தை உருவாக்கியுள்ளது. கம்யூனிசம் என்றாலே கசக்கும்….. நமது முற்போக்கு அறீவு ஜீவிகள் நம்மை ஆணாதிக்கவாதிகள்…. என்றும் ஆண் வக்கிரவாதிகள் என்றும் கடுமையாக எழுதியுள்ளார்கள். ரோசா வசந்த் அவரது பகுதியில் எழுதியுள்ள கட்டுரையில் நமது கட்டுரையை செங்கடல் படத்திற்கான விமர்சனமாக சுருக்கி திசை திருப்பியிருக்கிறார். வினவின் கட்டுரை முழுக்க முழுக்க லீனா கவிதை தொடர்பான எதிர்வினைதான். தவிறவும் செங்கடல் படம் குறீத்து எவ்விதமான தீர்ப்பையும் நாம் எழுதவில்லை. இப்படித்தான் எழுதியிருக்கிறோம் .”இந்தப் படம் குறித்து விசாரித்தபோது….செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை, தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது. மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். முழுக்க முழுக்க வெளி நாடுகளில் மட்டுமே காண்பிக்கப்படுமாம். நேர்மையான நோக்கத்துக்காக புலிகளைப் பற்றி விமரிசிப்பது என்பது வேறு, இலங்கை அரசையும் இந்திய அரசையும் நத்திப்பிழைக்கும் வாய்ப்புக்காக புலிகளை விமரிசிப்பது என்பது வேறு. செங்கடலின் ‘ஆழத்தை’ பார்க்கும் போது படத்தில் நிச்சயமாக வில்லங்கம் இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. “ இதுதான் நாம் எழுதியது. தவிறவும் இம்மாதிரி படம் எடுபப்தில் வருமானம் வராது என்றூ எழுதியிருக்கிறார் ரோசா வசந்த்…. பல கோடி ரூபாய் கொட்டி அதை மேலும் பல கோடியாக எடுத்துக் கொள்ளும் கோடம்பாக்கம் சினிமாவை மட்டுமே அறிந்த சோசாவுக்கு. சர்வதேச அளவில் இம்மாதிரியான ஆல்டர் நேட் சினிமாக்கள் என்று சொல்லப்படும் சினிமாக்களுக்கு உள்ள வர்த்தக வலைப்பின்னல் தெரியாமல் போனது வேடிக்கைதான்…. ஒரு வேளை இது வீடியோ வடிவில் எடுக்கப்பட்ட குறும்படமாக இருந்தால் ரோசா சொல்வது பொறுந்தும்….. ஆனால் அவரே முழு நீள சினிமா என்று சொல்லி விட்டு இம்மாதிரி படங்களை வாங்க போட்டி போடும். சர்வதேச மார்க்கெட்டிங் குறித்து லீனாவிடமே ரோசா தெரிந்து கொள்ளலாம். மற்றபடி ரோசாவின் விமர்சனங்கள் முழுக்க கம்யூனிச எதிர்ப்பில் இருந்து உருவாவதாகவே நாம் எடுத்துக் கொள்கிறோம்.

  27. வினவு… நீங்கள் வலைதளத்தில் உலவிக்கொண்டுதான் இருந்திருப்பீர்கள்.(நம்புகிறேன்) அவர் வலை ஆரம்பித்த நாள் முதல் இப்படிதான் எழுதிக்கொண்டு வருகிறார், இவ்வளவு நாட்கள் இல்லாத அக்கறை இப்போது எப்படி திடீர் என்று? அவரின் ஆரம்ப்ப பதிவில் நான் இதை பற்றி “என்னதான் சொல்ல வருகிறீர்கள்” என்று கேட்டேன். இதை பற்றி அறிந்துதான் இருப்பீர்கள். ஆரம்பத்திலயே நீங்கள் கண்டித்திருக்கலாம்… இப்போது ஏன்? அவரின் “றி” க்கள் இப்போதுதான் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்ததா???

  28. //தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்காமல் ஆவரை அடித்து உதைத்த நாய் ஷோபா சக்தியின் செயலை நியாயப்படுத்துகிற போக்கு உங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக இல்லையா?//

    பாஸ் நீங்கள் எனது பின்னூட்டத்தை முழுதாய் படித்தீர்களா இல்லையா? இதை நான் எங்கே நியாயப்படுத்தி இருக்கின்றேன்.

    //பெரும் மேல்தட்டுப் பெண்ணான லீனா மீது உங்களின் கரிசன் என்பது பெண் என்பதால் ஏற்பட்டதா? அல்லது பணக்காரி…… ஃபாரின் சரக்கு ஊற்றிக் கொடுப்பார் என்பதால் ஏற்பட்டதா? அல்லது லீனாவை ஆதரித்தால் அதை நோக்கிய பயணத்தில் நமக்கும் வசதியாய் இருக்கும் என்பதால் உருவானதா?//

    :). என்ன சார் பிரச்சினை உங்களுக்கு. வாவ், கலக்கிட்டீங்க, சூப்பர் கட்டுரைன்னு மட்டும் பின்னூட்டம் போட்டுட்டுபோகச் சொல்றீங்களா? பத்தி பத்தியாய் பின்னூட்டம் போட்டிருந்தாலும், கட்டுரையாளரின் நோக்கத்தை நான் கொச்சைப்படுத்தவோ, அல்லது நக்கல் செய்யவோ இல்லை. ஆனால் உங்களுக்கு மட்டும் எனது ஒற்றைப்பின்னூட்டத்தை வைத்துக் கொண்டு எனது பயணத்திலிருந்து, ஊற்றிக் கொடுப்பது வரை பேசுகின்றீர்கள். நாம் ரெண்டு பேரும் இன்னும் கொஞ்சம் மெச்சூரிட்டியாய் பேசிக் கொள்ளலாமே?

    ஒரு தடவைக்கு இரண்டு தடவை நான் சொல்லி விட்டேன். லீனாவின் தோழர்களின் மீதான வன்மமான அரசியல் எதிர்ப்பு குறித்தான கட்டுரையாளரின் வாதத்தை நான் கைதட்டி வரவேற்கின்றேன். ஆனால் தரவுகள் சிறிதும் இல்லாத “பொதுவா சொன்னேன்” வகையான கிசு கிசு வகையான எழுத்துக்களை நான் பெரிதும் சாடியிருக்கின்றேன். இன்னமும் அதில் உறுதியாய் இருக்கின்றேன்.

    அதான் வரி, வரியாய் எடுத்து மேற்கோள் காட்டி அதில் என்ன தவறு என்பதை சொல்லியிருக்கின்றேன். இன்னமும் புரிய வில்லை என்றால் நான் சொல்ல ஒன்றுமில்லை.

    உங்களது முதல் பாராவில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எதிர் வினை ஆற்றுபவர்களை எதிரிகளாகவே பார்க்கும் பழக்கத்தை மெல்ல மாற்றிக் கொள்ளுங்கள்.

  29. நீங்கள் என்னதான் கரடியாய் கத்தினாலும், தாக்கினாலும், இதையெல்லாம் “ஆண்குறி”-யின் ஆவேச விந்து தெளிப்பாகத்தான் அவர் பார்க்கக்கூடும். நீங்கள் முதலில் அவரது படங்களை ஏதோ சினிமா ஹீரோயின் போல் வெளியிட்டுள்ளீர்கள். அருவித் தண்ணியில் விளையாடும் சினிமா ஹீரோயின், புணர்ச்சிக்கு முந்தைய அல்லது பிந்தைய சினிம நடிகை டேபிள் போஸ். ஒரு சமூக சேவகப்படம். பப்ளிசிட்டி பிரியைக்கு நீங்களே பப்ளிசிட்டி கொடுத்துள்ளீர்கள். மேலும் முதல் கவிதை ஒன்றும் அவ்வளவு மோசமான கவிதையாகத் தெரியவில்லை. அவர் “திறமைக்கு” இதைவிட பல மோசமான கவிதைகளை எழுதியுள்ளார். ஒட்டு மொத்தமாக எடுத்து ஒரு பிடி பிடியுங்கள். ஆனால் திட்டினாலும், அடித்தாலும் எல்லாமே பப்ளிசிட்டியாக மாறிவிடும் ஒரு காலக்கட்டத்தில் வாழ்ந்து வருகிறோம். Post Vadivelu era…. eh?

  30. இதை கவிதை என சொன்னதை வன்மையாக மறுக்கிறேன்

    எல்லா தத்துவங்களும் என் பெண்குறிக்கு முன்னால் தோற்று ஓடும் என சொல்ல ஒரு வேசிக்கு கூட அறுகதை இருக்கலாம்

    ஆனால் யார் அதை கேட்பார்கள்

  31. சூப்பரான கட்டுரைலீனா(கேனா?)  மாதிரி பொறம்போக்கு ஜென்மங்களுக்கு இது மண்டையில ஏறுமா?

  32. முதல்  போடாத முதலாளிகள்   கம்யுனிசுடுகள்

    மூலதனம்  வர்க்கம்  பேசி  விலைக்கு  விற்பது

    வாங்குபவன்  எதிர்பார்ப்பது  குறி

    விற்பவனுக்கு  அதுவே   குறி

    எந்த குறியானால் என்ன

    குறியை  பொதுவில்  வைப்போம்

    குறியே   சரணம்

  33. /.செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை, தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது. /

    இதை எந்த அடிப்படையில் எழுதுகிறீர்கள் தோழர்? ஷோபாசக்தி புலிகள் மீதான விமர்சனங்களை முன்வைப்பதாலா? அவர் எங்காவது இதற்கு முன் ‘’புலிகளால்தான் மீனவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்” என்று கூறியிருக்கிறாரா? நீங்களும் கூடத்தான் புலிகளை அரசியல் ரீதியாக விமர்சிக்கிறார்கள். இதனால் உங்களையும் இந்திய அரசின் உளவாளிகள் என்று த.தே.பொ.க உள்ளிட்ட தமிழ்த்தேசிய அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. எனக்கு அதில் நம்பிக்கையில்லை. ஆனால் புலிகளை விமர்சிப்பதாலேயே ராஜபக்‌ஷேவிடம் பணம் வாங்கியவர் என்றும் உளவாளிகள் என்றும் முத்திரை குத்திப்போகிற கண்மூடித்தனமான புலி ஆதரவாளர்களின் மொழியிலேயே நீங்கள் எழுதுவது யாரைத் திருப்திப்படுத்த என்று தெரியவில்லை. ஆனால் வருத்தமாயிருக்கிறது.

  34. முற்போக்குத் தத்துவங்கள் எதையும் முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் லந்தடிப்பது தான் லீனாவின் பிரச்சனை.

    ஏற்கெனவே ஒருவர் எழுதியிருக்கறது மாதிரி, இந்த விமர்சனமும் அவருக்கு விளம்பர பேனர் தான்!

  35. ஆண் குறி ஆய்வுக்கு பதில் இனி அரசியல் ஆய்வு செய்யவும் பெண்ணே . இப்படிக்கு ஒரு ஆண் குறி

  36. nctps vada chennai anal min nilayathil 10 வருடங்களாக contract labour pani purindha 261 thozilaligal velai nirutham seiyapattu ulllanar.melum avargal velai vendum endru poratam nadathiyadharku kaidhu seiyapattu meenjur baalakotti thirumana mandabathi adaithu vaikapattu maalai vidhudhalai seiyapattanar

  37. நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளுக்கான உங்கள் விளக்கம், “நாய் கடித்தால் அதை திருப்பி கடிப்பேன்” என்று சொல்வது போல் உள்ளது. அவர்களை குறி வைத்து எழுதப் பட்டது என்ற காரணத்தால் இவ்வளவு பண்பு குறைந்த வார்த்தைகளையா பயன் படுத்தவேண்டும். நந்தா அவர்களின் மிக கூர்மையான விமரிசனத்திற்கு அளித்த பதில்கள் எவ்வளவு அரைவேக்காட்டுத் தனமானவை? எதற்காக அந்த ஜெரால்ட் பற்றியெல்லாம்…? அவர் சொந்த வீடு வைத்திருப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்…? விளம்பர மோகம் பிடித்து ஆட்டுவது லினாவையா? அல்லது வின்வையா….? தீப்பொறி ஆறுமுகம் தோற்றார் போங்கள்.

    • //ங்கள் பயன்படுத்திய வார்த்தைகளுக்கான உங்கள் விளக்கம், “நாய் கடித்தால் அதை திருப்பி கடிப்பேன்” என்று சொல்வது போல் உள்ளது. //

      தப்பில்லை என்று நினைக்கிறேன்.. நன்றாகவே அடித்து துவைத்ததுவிட வேண்டும் நாயை…. கடிப்பதது ஒன்றுதான் வழி எனில் கடித்து குதறியும் விடலாம்…

      இங்கு அதுதான் செய்யப்பட்டுள்ளது….

  38. சுகுணா திவாகர்,

    நீங்கள் அ.மார்க்ஸ் தொண்டரடிப் பொடியாளரிலிருந்து ஷோபா சக்தியின் பி.ஆர்.ஓ வாக எப்போது மாறினீர்கள்? அவரைச் சொன்னால் எங்கிருந்தாலும் ஓடிவந்து ‘அவர் அவரில்லை’என்கிறீர்களே…!!!

  39. இந்தப் பதிவை வினவிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. தனிப்பட்ட முறையில், குடும்ப உறுப்பினர்களை எடுத்து விமர்சனம் செய்வது தேவையில்லாத ஒன்று.

    எத்தனையோ பெண்கள் செக்சியா கவிதை எழுதுறாங்க. ஆனால், உங்கள் எதிர்ப்பின் நோக்கம் அது அல்ல. இரண்டாவது கவிதையில் ஒட்டுமொத்த கம்யூனிசத்தையும் பயங்கரமாக விமர்சித்திருக்கிறார். அதை எதிர்க்க நீங்கள் பதிவிட்டாலும், தனிப்பட்ட விமர்சனங்கள் ஆரோக்கியமானதல்ல. அதுவும், வினவு தளத்தில் இதனை எதிர்பார்க்கவில்லை.

    • //இரண்டாவது கவிதையில் ஒட்டுமொத்த கம்யூனிசத்தையும் பயங்கரமாக விமர்சித்திருக்கிறார்.//

      என்னாது விமர்சனமா? கபிலன், தயவு செய்து அந்த கவுஜையில் இருக்கும் கம்யூனிச விமர்சனம் என்னவென்று சொன்னால் பதில் அளிக்கலாம்.

  40. என்னைப்போன்ற பத்திரிகையாளர்கள் பலருக்கும் லீனாவின் கவிதைகள் மீதும் படைப்பாளி என்கிற போர்வையில் அவருடைய செயல்பாடுகள் மீதும் கடுமையான விமர்சனம் உண்டு. அவரை விமர்சிப்பதை விட கண்டுகொள்ளாமல் இருப்பது சிறந்தது என்ற அடிப்படையிலேயே நாங்கள் ஒதுங்கியிருக்கிறோம். ஆனால் வினவு, விமர்சனம் என்கிற போர்வையில் கிசுகிசு பாணியில் “தாம்” “தாம்” போட்டு எழுதியிருப்பது ஆரோக்கியமான விமர்சன போக்காகத் தெரியவில்லை. அதுவும் உங்களைப் போன்ற சமூக அக்கறை கொண்டவர்களிடமிருந்து இதுபோன்று இரண்டாம்தரமான கட்டுரை வெளிவருவது தவறான வழிகாட்டுதலில்தான் போய் முடியும். பெண்கள் எதை எழுதினாலும் குற்றம் சொல்லி அல்லது மிரட்டி எழுத இனி பலருக்கு இந்தப் பதிவு உற்சாகமூட்டக்கூடும்.
    தேவர் சாதி பெண்ணின் சாதி பற்று குறித்து எழுதியதற்காக சக பத்திரிகையாளரிடமிருந்து பகிரங்க எச்சரிக்கை வந்தது இந்தத் தருணத்தில் நினைவுக்கு வருகிறது. இதற்கும் லீனாவின் செயல்பாடுகளை விமர்சிப்பதற்கும் என்ன தொடர்பு எனக் கேட்கலாம். இருக்கிறது… முற்போக்கு பேசுகிற, எழுதுகிற பெண்கள் எல்லோருமே இப்படித்தான் என்று பொதுபுத்தியில் படிந்துவிடுகிறது. அப்புறம் நாங்கள் என்ன எழுதினாலும் “கிளுகிளுப்பு கவிதை” எழுதுகிறவர்களாகத்தான் தோணுகிறது. ஆயிரம் பிரச்சினைகள் உண்டு நாங்கள் எழுத, பிறகு இதெல்லாம் எங்களுக்கு தேவையா? இதைத்தான் வினவு எதிர்பார்க்கிறதா? இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் பொதுபுத்திக்குத் தெரியுமா? தயவுசெய்து இதுபோன்று பெண்களை அவர் எப்படிப்பட்டவராகிலும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதுவதை தவிர்க்கவும்.

  41. இந்த மாதிரி கட்டுரையை வினவிடமிருந்து நான் எதிர் பார்க்கவில்லை. இதில்ருந்து புரியம் கருத்து , பணக்கார பெண்கள் முற்போக்காக பேசினால் புரட்சி அல்ல. வினவு பேசினால் மட்டுமே புரட்சி. தனிப்பட்ட விமர்சனங்கள் ஆரோக்கியமானதல்ல. அதுவும், வினவு தளத்தில் இதனை எதிர்பார்க்கவில்லை.

  42. //பல பீ வண்டி சீரியல்களின் இயக்குநரான சமுத்திரக்கனி என்பவர்தான் செங்கடல் படத்தின் தயாரிப்பாளராம். ஒரு கோடி ரூபாய் இந்த செங்கடலுக்காக லீனாவிடம் கொட்டப்பட்டிருக்கிறதாம். சமுத்திரக்கனி மீனவ சமூகத்தைச் சார்ந்தவராம். அதனால் தனக்கு வருகிற வரும்படிகளில் கொஞ்சம் பணத்தை மீனவர் பற்றிய படைப்பு ஒன்றிற்காக செலவு செய்யும் ‘நல்ல’ எண்ணம்தான் அவருக்கு.

    இந்தப் படம் குறித்து விசாரித்தபோது….செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை, தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது. மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம்.

    பல பீ வண்டி சீரியல்களின் இயக்குநரான சமுத்திரக்கனி என்பவர்தான் செங்கடல் படத்தின் தயாரிப்பாளராம். ஒரு கோடி ரூபாய் இந்த செங்கடலுக்காக லீனாவிடம் கொட்டப்பட்டிருக்கிறதாம். சமுத்திரக்கனி மீனவ சமூகத்தைச் சார்ந்தவராம். அதனால் தனக்கு வருகிற வரும்படிகளில் கொஞ்சம் பணத்தை மீனவர் பற்றிய படைப்பு ஒன்றிற்காக செலவு செய்யும் ‘நல்ல’ எண்ணம்தான் அவருக்கு.

    இந்தப் படம் குறித்து விசாரித்தபோது….செங்கடல் என்கிற படம் மீனவர் தொடர்பான படம் என்றும், “புலிகளால் மட்டுமே தமிழக மீனவர்களுக்கு பிரச்சனை, தமிழக மீனவர்களின் வாழ்க்கை ஆதாரம் விழவும், கடலின் மீதான உரிமை பறி போகவும் காரணமாக இருந்தவர்கள் அவர்கள்தான் என்றும் சித்தரித்தும் உண்மையான பிரச்சனையை மடைமாற்றுவதுதான் கதை” என்றும் சொல்கிறார்கள். ஷோபா சக்தி இந்தக் குழுவில் இருப்பதால் ஓரளவு நம்பும் படியாகவும் இருக்கிறது. மேலும் இப்படம் இந்தியாவில் வெளியிடப்படாதாம். //

    இப்படி உங்கள் கட்டுரை முழுவதும் வெறும் கேள்விபட்ட யாரோ சொல்லிய ஆதாரமில்லாத விடயங்களே இருக்கிறன. லீனா மீது உள்ள கோபம் நன்றாகவே தெரிகிறது. கோபத்தில் நிலை தடுமாறி உள்ளமை வெளிப்படையாக தெரிகிறது. வினவின் வாசகன் என்ற முறையில் இதை நான் உங்களிடமிருந்து எதிர் பார்க்க வில்லை. தயவு செய்து லீனா பற்றிய ஆதாரங்களை திரட்டி கொண்டு முறையாக எழுதவும். இந்த கட்டுரையிலும் பின்னூட்டங்களிலும் லீனா எவ்வளவு பெரிய மோசடி பேர்வழியாக இருக்க முடியும் என்பதை ஊகிக்க முடிகிறது. இது போன்ற பன்னாடைகளின் முகமூடிகள் கிழிக்கப்பட வேண்டும். தனது பெண்மையை வைத்து ஆண்களை பயன்படுத்தி குறுக்கு வழியில் முன்னேற முயலும் பெண்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். எனவே தயவு செய்து தகவல்களை திரட்டி மீண்டும் ஒரு கட்டுரையை எழுதும்படி தயவாக வேண்டுகிறேன்.

  43. அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
    லும்பன் தரகன் மகாராஜா தளபதி
    திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
    போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
    கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
    கணவன், தந்தை, சகோதரன், மகன் இவ்வளவு குறிகளையும் அளந்து பார்த்து ஒரே மாதிரியானவை என்று சொன்ன யோனிக்கு சீ.. லீனாவுக்கு “ஆயிரம் குஞ்சாமணி கண்ட அபூர்வ சிந்தாமணி” என்ற பெயர் இந்தபூ உலகில் நிலைக்கப்பெறுவதாக…!

  44. வினவின் இந்த கட்டுரை விமர்சனம் நன்றாக இருக்கிறது.ஆனால் ஆபாசம் என்று சொல்லுவது பிற்போக்குதனமாக தெரிகிறது. அப்படி ஆபாசமாக நீங்கள் நினைத்து இருந்தால் அவர்கள் அளவுக்கு நீங்களும் கீழ் இறங்கி இருக்கிறீர்கள். லீனாவின் கட்டுரையை ஒரு பிழைப்புவாதம் என்று சொல்கிறேன். ஆனால் வினவின் ஆபாசம் என்ற வார்த்தையை ஆணாதிக்கமாக பார்க்கிறேன்.

    • Nanbargal sindhika! Aabaasam Yeantraal yeanna!? Kavithai yeanbathu yeanna? Pizhaipuvaatham, Aanaathikam Yeanbathu yeanna?
      Oru pen yeazhuthiyathaal athu thavaru yeanbathu alla!, Konjam Aazhnthu sinthithaal Purium onmai, “Thol, athan ollil thasai, narambu, iratham ealambu, majai ithu odalil yeallorukum ollathu allavaa? Athu pol Kavithai yeanbathirkum oru Vivaram,Artham,Porul ondu” ipothu yaarum atahi patri kavalai padaamaal Irupathu veathanaiku oriyathu! Ammaa,Sahothari,Manaivi,Mahal Yellorum pen thaan Aanaal Ovvoruvarukum oru Oravumurai ondu, Athu pinpatravillai LEENA MANIMEHALAI, yeanna kuzhapamaaha ullatha? Sinthithu paar Silimisam purium!

    • சரியான கருத்து நண்பரே… உங்கள் உணர்வுக்கு பாராட்டுக்கள்

  45. தயவு செய்து உண்மையான விபரங்களோடும, ஆதாரங்களோடும் இதனை மீண்டு எழுதுங்கள்.

  46. “முற்போக்கு பேசுகிற, எழுதுகிற பெண்கள் எல்லோருமே இப்படித்தான் என்று பொதுபுத்தியில் படிந்துவிடுகிறது. அப்புறம் நாங்கள் என்ன எழுதினாலும் “கிளுகிளுப்பு கவிதை” எழுதுகிறவர்களாகத்தான் தோணுகிறது. ஆயிரம் பிரச்சினைகள் உண்டு நாங்கள் எழுத, பிறகு இதெல்லாம் எங்களுக்கு தேவையா?”

    என்ற வார்த்தைகளை நான் வழிமொழிகிறேன்.

  47.  லீனா மணிமேகலை இயக்கும் ‘செங்கடல்’ படத்தை இயக்குநர் சமுத்திரக்கனி தயாரிப்பதாக இருந்தது. அந்தக் கதை விடுதலைப் புலிகளுக்கு எதிரான சில கருத்துகளையும் பதிவு செய்யும் வகையில் இருப்பதாக சில நலன் விரும்பிகள் சொல்ல… உடனடியாக தயாரிப்பை வாபஸ் வாங்கிவிட்டாராம் சமுத்திரக்கனி. படத்தை எடுத்தாதானேங்க ஆதரவா எதிர்ப்பா என்பதெல்லாம் புரியும்?
    ஜூனிய விகடன் 13.01.2010 
    லீனா மணிமேகலை சோபா சக்தியுடன்  என்றைக்கு சேர்ந்தாரோ அன்றைக்கு தமிழனத்துக்கு எதிராக குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டார். 
    புலிகள் அழிந்தபின்னரும் இவர்கள் புலிகள் மேல்கொண்டு காண்டு குறையவில்லை. தமிழர்களுக்கு இவர்களிடம் இந்த தீர்வும் இல்லை
    ஜூவியின் செய்திக்கு லீனா மணீமேகலை என்ன சொல்லபோகின்றார். 

  48. எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் எல்லாம் சுதந்திரம் என்று ஆகிவிட்டது . வருத்தத்திற்கு உரிய விஷயம் …..

  49. கவிதைகள் என் வெளிப்பாட்டுத் தளம். என் படைப்புகளை ஏற்றுக்கொள்வதோ, அதிலிருக்கும் அரசியலை விமர்சிப்பதோ வாசிப்பவர்களின் தெரிவு.படைப்புக்கு வெளியே என் மீதான தனிநபர் தாக்குதல்களுக்கோ அவதூறுகளுக்கோ என்னிடம் பதில்கள் இல்லை. செங்கடல் திரைப்படத்தில் நானும் ……………..http://ulaginazhagiyamuthalpenn.blogspot.com/2010/01/blog-post_07.html

    • உங்களை போன்ற ஆட்களிடமிருந்து இப்படிபட்ட பதில்களைத்தான்எதிர்பார்க்கிறோம்
      லீனா பண விசயத்தில் ஒரு பிராடு என்பது அஜீவனின் பின்னூட்டத்தில் நிரூபணமாகியிருக்கிறது,
      பணம்… பணம்… பணம்… பணம்…அதை எப்படியாவது அடையவேண்டும்இதற்காகத்தான் முற்போக்கு முகமூடி
      பெண்களுக்கெதிராக பெண்ணியத்தை எடுத்துச் செல்வது லீனா போன்றவர்களின் இலக்கு என்பதை சகோதரிகள் புரிந்து கொள்ள வேண்டும் 

  50. அஜீவன் on January 9, 2010 12:54 pm //Nesan on January 8, 2010 8:31 am ஈழத் தமிழர்களிடம் பணம் வாங்கவில்லை என்று கூறும் அம்மணி அஜீவனிடம் கறந்ததைக் கூடவா மறுக்கிறார். ஆதாரத்திற்க்கு நடிகர் நாசரைக் கேளுங்கள். நாசரிடம் இருந்த படத் தொகுப்புக் கருவிகளைக் கொண்ட நிறுவனத்தை பங்காளிகள் அடிப்படையில் வியாபாரம் செய்யலாம் என்று அஜீவனுக்கு கூறி அஜீவனும் தனது சேமிப்பெல்லாம் கொடுத்த பின் தரமுடியாது பண்ணுவதைப் பண்ணிப்பார் எனறு கூறியவர் என்று அஜீவன் ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.//

    இங்கே சில திருத்தங்களை சேர்க்கலாம் என நினைக்கிறேன். லீனா சுவிஸில் இடம் பெற்ற குறும்பட விழாவுக்கு மாத்தம்மா எனும் ஆவண குறும்படத்தை நிழல் பத்திரிகை ஆசியர் திருநாவுக்கரசு மூலம் அனுப்பியிருந்தார். அதன் பின்னர் நிழல் திருநாவுக்கரசுவிடம் தொடர்பு கொண்டு, திரைப்பட விழாவுக்கு வர உதவுமாறு கேட்டதோடு, தனது ஆவணப்படத்தை சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யுமாறு பல முறை தொலைபேசியில் பேசினார். அதே போல திருநாவுக்கரசு ஒரு குறும்படத்தை சிறந்த குறும்படமாக தேர்வு செய்யுங்கள் என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவை தேர்வுக் குழுவின் விடயம் என கடுமையாக சொன்னேன். இருந்தாலும் சுவிஸில் நடைபெற்ற குறும்பட விழாவுக்கான குறும்படங்களை அனுப்ப செலவாகும் பணத்தை திருநாவுக்கரசுவுக்கு அனுப்பினேன். இவை பொதுவான நடைமுறையல்ல. இலங்கை தமிழரது குறும்படங்கள் சில அரசியல் வட்டத்துக்குள் சிக்கியிருந்ததால் அவற்றை முதன்மைப்படுத்த முடியாத நிலை எமக்கு இருந்தது.

    அதே நேரம் நல்ல குறும்படங்களை தேர்வு செய்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அவற்றை பார்த்தாவது புலத்து படைப்பாளிகள் வித்தியாசமான படைப்புகளை கொண்டு வர வேண்டும் எனும் எண்ணம் காரணமாக உலக தமிழர் படைப்புகளை விழாக்கள் வழி பார்க்க வழி செய்தல் நல்லது என நினைத்தேன். இக் காலத்தில் இலவச குறும்பட பயிற்சிப் பட்டறைகளையும் நான் சில நாடுகளில் செய்யத் தொடங்கியிருந்தேன். இதன் முதல் முயற்சிக்கு கரம் கொடுத்தவர் தேசம் ஜெயபாலன். ஐரோப்பிய திரைப்பட விழா எனும் குறும் – ஆவண பட விழாவை சுவிஸிலும், லண்டனிலும் நடத்துவது என முடிவெடுத்து தொடங்கினாலும், இறுதியில் சுவிஸில் மட்டுமே நடைபெற்றது. அது முதலும் கடைசியுமானது.

    தேசம் ஜெயபாலன், லண்டனில் ஈழத்து படைப்பாளிகளின் படைப்புகளை மட்டும் லண்டன் விழாவில் காட்ட வேண்டும் என தெரிவித்ததால், நான் லண்டன் விழாவை ரத்துச் செய்தேன். அதற்கு காரணம் படைப்புகளை, படைப்பாளிகளிடம் கோரும் போது சுவிஸ் – லண்டன் நாடுகளில் விழா நடைபெறும் என தெரிவித்திருந்தேன். சுவிஸில் அனைத்து குறும்படங்களும், திரையிடப்பட்டு சுவிஸ் திரைப்படத் துறையினரால் தேர்வுகளும் நடந்து முடிந்து பரிசுகளும் சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டன. இந் நிலையில் ஈழத்து படைப்பாளிகளின் (புலம்பெயர் ஈழத்தவர் படைப்புகள் உட்பட) படைப்புகளை மட்டும் லண்டனில் திரையிடுவது முறையல்ல எனும் காரணத்தால் அதை ரத்து செய்தேன். அது பல மனவேதனைகளை உண்டாக்கினாலும், இதில் நான் எடுத்த முடிவு சரியானதாக கருதினேன். எனக்கு சுமார் 6,000 சுவிஸ் பிராங் அளவு இழப்பு ஏற்பட்டது.

    இதனிடையே பரிசு கேடயங்களையும், சான்றிதழ்களையும், சென்னையில் விழா நடத்துவதற்குரிய பணத்தையும் நிழல் திருநாவுக்கரசுக்கு அனுப்பினேன். ஆனால் திருநாவுக்கரசு தமது விழாவாக நடத்தி கேடயங்களை மட்டும் சில பிரமுகர்களை வரவழைத்து சென்னை சோவித் திரைப்பட அரங்கொன்றில் கொடுத்து, நான் சுவிஸ் குறும்பட விழாவில் பணம் சம்பாதித்ததாக அவரது நிழல் திரைப்பட சஞ்சிகையில், வந்தவர்களது எண்ணிக்கையை வைத்து மோசமான கட்டுரை ஒன்றை அண்ணாதுரை எழுதியதாக வெளியிட்டிருந்தார். அக் கட்டுரையில் சிறப்பாக நடந்ததாக விழாவையும், வந்தவர்கள் தொகையோடு அனுமதிக் கட்டணத்தை போட்டு எமது குறும்படங்கள் வழி, புலத்தவர் பணம் சம்பாதிக்கிறார்கள் எனும் தொணியில் இருந்தது அக் கட்டுரை.

    திரைப்பட ஒழுங்கு, திரையரங்கு, காலை முதல் மாலை வரையான உணவு, இணைய தள உருவாக்கம், கேடயங்கள், சான்றிதழ்கள் என செலவானதை திருநாவுக்கரசு கணக்கெடுக்காமல் பணத்தை குறியாக கட்டுரை வரைந்திருந்தார். சென்னையில் நடந்த விழாவின் படங்களை திருநாவுக்கரசின் “நிழல்” சஞ்சிகையிலும், “சொல்லப்படாத சினிமா” ( http://www.viruba.com/final.aspx?id=VB0000466) எனும் புத்தகத்திலும் பிரசுரித்தாலும், அதற்கும் எமது அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததாக காட்டி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எமது விழா குறித்து ஒரு பக்க குறிப்போடு திருநாவுக்கரசு நிறுத்திக் கொண்டார்.

    இக் கால கட்டத்தில் ஜெர்மன் நாடு இந்தியாவில் உள்ள கல்வியையையும், ஜொமன் கல்வியையும் இணைத்து ஒரு ஜேர்மன் தொலைக் காட்சி உருவாக்கிய ஆவணப்படத்தில் பணிபுரிய வந்த லீனா, படப்பிடிப்பு முடிந்தும் ஜேர்மனியில் இருக்க விரும்பி, ஏதோ தில்லு முல்லு செய்யப் போக, அவரை இருந்த விடுதியில் இருந்து உடனடியாக வெளியேற சொன்ன நிலையில், என்னைத் தொடர்பு கொண்டார். கவிஞர் அறிவுமதி யாருக்கோ உதவ சொல்ல, அவர்களும் உதவவில்லை என்று தத்தளித்து இருப்பதாக சொன்னார். நான் உடனடியாக அங்கு சென்று, அவரை பார்த்த போது, அவர் ஜெர்மனிக்கு வரும் போதே, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் உத்தேசத்துடன் வந்திருப்பதாகவும், தமிழர்களை சந்திக்கும் நோக்கில் வந்திருப்பதாக சொன்னார். அதற்காக அவர் பலரோடு பேசியிருந்தார். இவர்களில் முக்கியமானவர்கள் சுவிஸ் ரஞ்சி, லண்டன் கலைஞர் ராஜா மற்றும் பிரான்ஸ் சோபா சக்தியாகும். ஆனால் இவரது கையில் பணம் மட்டும் இருக்கவில்லை.

    ஏதோ ஒரு வகையில் இவர்களை சந்திக்கவும், சந்திப்புகளை நடத்தவும் உதவினேன். ஆனால் இவர் போன இடமெல்லாம் நாத்தியிருந்தார் என்பதை காலம் தாழ்த்தியே அறிந்தேன். இவற்றை இத்தோடு விடுகிறேன்.

    இவர் சென்னை சென்ற பின், இவரது கணவரான இயக்குனர் ஜெரால்ட் மற்றும் குறும்பட இயக்குனர் சிவா ஆகியோரது நட்பு கிடைத்த போது, அவர்களோடு ஒரு எடிட்டிங் கலையகத்தை உருவாக்கலாம் எனும் எண்ணத்தை முன் வைத்தார்கள். நல்லா ஐஸ் வைத்தார்கள் என்றால் தவறில்லை. லீனா, ஜெரால்ட் மற்றும் சிவாவோடு ( இவர் ஒரு வழக்கறிஞரின் மகன்) இணைப்பை உருவாக்கி விட்டு, விலகி நின்றார். நானும் லீனா இருப்பதை விரும்பவில்லை. நான், பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தேன். மீடியா கிராப்ட் எனும் பெயரில் நடிகர் நாசரது எடிடிங் சூட்டை வாங்கி, இடம் எடுத்து ஆரம்பமானது. நான் விமானம் ஏறினேன். எனது நண்பர்களை, இவர்கள் சந்திக்க விடவில்லை. தொடர்பு கொண்ட போது பலரிடம், நான் வெளியே சென்றிருப்பதாகவே சொல்லியிருக்கிறார்கள். இருந்தும் என பழைய நண்பர்கள் சிலரை, அவர்களை விட்டு, தனியே சென்று சந்தித்தேன். அவர்களால் அதை தடுக்க முடியவில்லை. அவர்களிடம் என் பிஸ்னஸ் குறித்த தகவல்களை சொல்லி, கண்ணோட்டம் விடுமாறு சொல்லி விட்டு வந்தேன். நான் விமானம் ஏறிய அடுத்த நாள், மீடியா கிராப்ட், கனவுப் பட்டறையாக மாறியது.

    இரு வாரங்களுக்குள், என்ன செய்யாலாம் என ஆராய்ந்தேன். என் பாட்டனர்கள் எனக்கு பசப்பு வார்த்தைகளால் பொய் கதை விட்டுக் கொண்டிருந்தனர். நான் எதுவும் சொல்லாமல், சென்னைக்கு சென்று இறங்கி, நண்பர்களோடு காரியாலயத்துக்கு சென்ற போது அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. என்னோடு சென்றவர்களை பார்த்த போது அவர்களால், துள்ளவும் முடியவில்லை. காரியாலயத்தில் இருந்த லீனாவிடம், என்ன நடக்கிறது எனக் கேட்டேன். “என்னோடு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு, ஜெரால்டோடு பேசக் கொள்ளுங்க” என்று கத்தினாள். என்னோடு வந்தவர்கள் “வாங்க, ஜெரால்டை தேடுவோம்” என்றார்கள். ஆந்திரா போயிருப்பதாக லீனா பொய் சொன்னாள். ஆனால் ஜெரால்டை கோடம்பாக்கத்தில் வைத்து பிடித்தோம். ” அஜீவன், மோசமான ஆக்களோடு சேர்ந்திருக்கீங்க, நாம பேசலாமே” என்றார். பணத்தை திருப்பி தரணும் என்றேன். “காரியாலத்தை எடுத்துக்கிட்டு விட்டுடுங்க” என்றார். காரியாலத்தில் கொடுத்த பணத்துக்கு பொருட்கள் இல்லை. லீனா, தனது தாய்க்கு வீடு கட்ட அதில் பணம் கொடுத்திருப்பது தெரிய வந்தது. வக்கீலிடம் அழைத்துச் சென்று பணத்தை திருப்பி தர எழுதி தருமாறும் செக் தருமாறும் சொன்னோம். இழுத்தடித்தார். பிரச்சனை கடினமாக, லீனா, “அஜீவன், நான் பொறுப்பா, வாங்கித் தர்ரேன். பிரச்சனை பண்ணாதீங்க” என அழுது சந்திக்க விரும்புவதாக சொன்னார். ” உன்னோடு இனி பேச்சு கிடையாது. நான், ஜெரால்டோடு பார்த்துக் கொள்கிறேன்” என்றேன். பெண்களை இழுத்தால், அது வேறு மாதிரியாகி விடும் என்பதால் ஆரம்பத்திலேயே லீனாவை ஒதுக்க நான் எடுத்த முடிவு, இப்போது கை கொடுத்தது. லீனா, ஒரு பெண் ஐபீஎஸ் போலீஸ் அதிகாரி வரை சென்றும் சரியாகவில்லை. அவரது உறவினரான எனது நண்பர், என் பிரச்சனையில் ஈடுபட்டிருந்தார். அடுத்த நக்கீரனிடம் சென்றார். அங்கும், அஜீவனது உறவுகளும், நண்பர்களும் எதுவும் செய்வாங்க என்று சொன்னதால், இறுதியில் எனது பணம் கறுப்பு பணம் என்றும். நான் விடுதலைப் புலி என்றும், கதையை மாற்ற திட்டம் போட்டு, என்னோடு சண்டைக்கு தயாரானார்கள்.

    நிலை உணர்ந்த நண்பர்கள் பவர் ஒப் அட்டார்னியை எழுதிக் கொடுத்து விட்டு வெளியேறுங்கள். உங்கள் பணம் வரும். உங்களுக்கு ஆபத்து வரக் கூடாது என்றார்கள். அது சரியாக பட்டது. மிரட்டியும்,……….. எல்லாம் நடந்த பின்னர் 3 செக்கில் வங்கி மூலம் பணம் போட எழுதிக் கொடுத்தார்கள். கடைசியில் பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டி வந்தது. இருந்தாலும் நான் மனதளவில் தேவையற்ற பிரச்சனைகளை எதிர் நோக்கினேன். அதன் பின்னர் அமெரிக்காவில் இருந்து ஒரு பெண் தொடர்பு கொண்டார். லீனா, காவேரி சம்பந்தமான ஆவணப்படுத்துகாக என 10ஆயிரம் அமெரிக்க டாலர்களை வாங்கி, படத்தையும் செய்யாமல் பணத்தையும் தராமல் இருப்பதாக சொன்னார். ஒளிப்பதிவாளர்களுக்கோ அல்லது வேலை செய்வோருக்கும் பணம் கொடுப்போர் அல்ல ஏமாற்றுவோரே? அவதானம்.

  51. தேசம்னேட்டில் இருந்து ஒரு பின்னுட்டம்…….

    அஜீவன் on January 9, 2010 12:54 pm

    //Nesan on January 8, 2010 8:31 am ஈழத் தமிழர்களிடம் பணம் வாங்கவில்லை என்று கூறும் அம்மணி அஜீவனிடம் கறந்ததைக் கூடவா மறுக்கிறார். ஆதாரத்திற்க்கு நடிகர் நாசரைக் கேளுங்கள். நாசரிடம் இருந்த படத் தொகுப்புக் கருவிகளைக் கொண்ட நிறுவனத்தை பங்காளிகள் அடிப்படையில் வியாபாரம் செய்யலாம் என்று அஜீவனுக்கு கூறி அஜீவனும் தனது சேமிப்பெல்லாம் கொடுத்த பின் தரமுடியாது பண்ணுவதைப் பண்ணிப்பார் எனறு கூறியவர் என்று அஜீவன் ஒருமுறை என்னிடம் கூறியிருக்கிறார்.//

    இங்கே சில திருத்தங்களை சேர்க்கலாம் என நினைக்கிறேன். லீனா சுவிஸில் இடம் பெற்ற குறும்பட விழாவுக்கு மாத்தம்மா எனும் ஆவண குறும்படத்தை நிழல் பத்திரிகை ஆசியர் திருநாவுக்கரசு மூலம் அனுப்பியிருந்தார். அதன் பின்னர் நிழல் திருநாவுக்கரசுவிடம் தொடர்பு கொண்டு, திரைப்பட விழாவுக்கு வர உதவுமாறு கேட்டதோடு, தனது ஆவணப்படத்தை சிறந்த ஆவணப்படமாக தேர்வு செய்யுமாறு பல முறை தொலைபேசியில் பேசினார். அதே போல திருநாவுக்கரசு ஒரு குறும்படத்தை சிறந்த குறும்படமாக தேர்வு செய்யுங்கள் என்று அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தார். அவை தேர்வுக் குழுவின் விடயம் என கடுமையாக சொன்னேன். இருந்தாலும் சுவிஸில் நடைபெற்ற குறும்பட விழாவுக்கான குறும்படங்களை அனுப்ப செலவாகும் பணத்தை திருநாவுக்கரசுவுக்கு அனுப்பினேன். இவை பொதுவான நடைமுறையல்ல. இலங்கை தமிழரது குறும்படங்கள் சில அரசியல் வட்டத்துக்குள் சிக்கியிருந்ததால் அவற்றை முதன்மைப்படுத்த முடியாத நிலை எமக்கு இருந்தது.

    அதே நேரம் நல்ல குறும்படங்களை தேர்வு செய்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அவற்றை பார்த்தாவது புலத்து படைப்பாளிகள் வித்தியாசமான படைப்புகளை கொண்டு வர வேண்டும் எனும் எண்ணம் காரணமாக உலக தமிழர் படைப்புகளை விழாக்கள் வழி பார்க்க வழி செய்தல் நல்லது என நினைத்தேன். இக் காலத்தில் இலவச குறும்பட பயிற்சிப் பட்டறைகளையும் நான் சில நாடுகளில் செய்யத் தொடங்கியிருந்தேன். இதன் முதல் முயற்சிக்கு கரம் கொடுத்தவர் தேசம் ஜெயபாலன். ஐரோப்பிய திரைப்பட விழா எனும் குறும் – ஆவண பட விழாவை சுவிஸிலும், லண்டனிலும் நடத்துவது என முடிவெடுத்து தொடங்கினாலும், இறுதியில் சுவிஸில் மட்டுமே நடைபெற்றது. அது முதலும் கடைசியுமானது.

    தேசம் ஜெயபாலன், லண்டனில் ஈழத்து படைப்பாளிகளின் படைப்புகளை மட்டும் லண்டன் விழாவில் காட்ட வேண்டும் என தெரிவித்ததால், நான் லண்டன் விழாவை ரத்துச் செய்தேன். அதற்கு காரணம் படைப்புகளை, படைப்பாளிகளிடம் கோரும் போது சுவிஸ் – லண்டன் நாடுகளில் விழா நடைபெறும் என தெரிவித்திருந்தேன். சுவிஸில் அனைத்து குறும்படங்களும், திரையிடப்பட்டு சுவிஸ் திரைப்படத் துறையினரால் தேர்வுகளும் நடந்து முடிந்து பரிசுகளும் சான்றிதழ்களும் கொடுக்கப்பட்டன. இந் நிலையில் ஈழத்து படைப்பாளிகளின் (புலம்பெயர் ஈழத்தவர் படைப்புகள் உட்பட) படைப்புகளை மட்டும் லண்டனில் திரையிடுவது முறையல்ல எனும் காரணத்தால் அதை ரத்து செய்தேன். அது பல மனவேதனைகளை உண்டாக்கினாலும், இதில் நான் எடுத்த முடிவு சரியானதாக கருதினேன். எனக்கு சுமார் 6,000 சுவிஸ் பிராங் அளவு இழப்பு ஏற்பட்டது.

    இதனிடையே பரிசு கேடயங்களையும், சான்றிதழ்களையும், சென்னையில் விழா நடத்துவதற்குரிய பணத்தையும் நிழல் திருநாவுக்கரசுக்கு அனுப்பினேன். ஆனால் திருநாவுக்கரசு தமது விழாவாக நடத்தி கேடயங்களை மட்டும் சில பிரமுகர்களை வரவழைத்து சென்னை சோவித் திரைப்பட அரங்கொன்றில் கொடுத்து, நான் சுவிஸ் குறும்பட விழாவில் பணம் சம்பாதித்ததாக அவரது நிழல் திரைப்பட சஞ்சிகையில், வந்தவர்களது எண்ணிக்கையை வைத்து மோசமான கட்டுரை ஒன்றை அண்ணாதுரை எழுதியதாக வெளியிட்டிருந்தார். அக் கட்டுரையில் சிறப்பாக நடந்ததாக விழாவையும், வந்தவர்கள் தொகையோடு அனுமதிக் கட்டணத்தை போட்டு எமது குறும்படங்கள் வழி, புலத்தவர் பணம் சம்பாதிக்கிறார்கள் எனும் தொணியில் இருந்தது அக் கட்டுரை.

    திரைப்பட ஒழுங்கு, திரையரங்கு, காலை முதல் மாலை வரையான உணவு, இணைய தள உருவாக்கம், கேடயங்கள், சான்றிதழ்கள் என செலவானதை திருநாவுக்கரசு கணக்கெடுக்காமல் பணத்தை குறியாக கட்டுரை வரைந்திருந்தார். சென்னையில் நடந்த விழாவின் படங்களை திருநாவுக்கரசின் “நிழல்” சஞ்சிகையிலும், “சொல்லப்படாத சினிமா” ( http://www.viruba.com/final.aspx?id=VB0000466) எனும் புத்தகத்திலும் பிரசுரித்தாலும், அதற்கும் எமது அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததாக காட்டி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். எமது விழா குறித்து ஒரு பக்க குறிப்போடு திருநாவுக்கரசு நிறுத்திக் கொண்டார்.

    இக் கால கட்டத்தில் ஜெர்மன் நாடு இந்தியாவில் உள்ள கல்வியையையும், ஜொமன் கல்வியையும் இணைத்து ஒரு ஜேர்மன் தொலைக் காட்சி உருவாக்கிய ஆவணப்படத்தில் பணிபுரிய வந்த லீனா, படப்பிடிப்பு முடிந்தும் ஜேர்மனியில் இருக்க விரும்பி, ஏதோ தில்லு முல்லு செய்யப் போக, அவரை இருந்த விடுதியில் இருந்து உடனடியாக வெளியேற சொன்ன நிலையில், என்னைத் தொடர்பு கொண்டார். கவிஞர் அறிவுமதி யாருக்கோ உதவ சொல்ல, அவர்களும் உதவவில்லை என்று தத்தளித்து இருப்பதாக சொன்னார். நான் உடனடியாக அங்கு சென்று, அவரை பார்த்த போது, அவர் ஜெர்மனிக்கு வரும் போதே, ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் உத்தேசத்துடன் வந்திருப்பதாகவும், தமிழர்களை சந்திக்கும் நோக்கில் வந்திருப்பதாக சொன்னார். அதற்காக அவர் பலரோடு பேசியிருந்தார். இவர்களில் முக்கியமானவர்கள் சுவிஸ் ரஞ்சி, லண்டன் கலைஞர் ராஜா மற்றும் பிரான்ஸ் சோபா சக்தியாகும். ஆனால் இவரது கையில் பணம் மட்டும் இருக்கவில்லை.

    ஏதோ ஒரு வகையில் இவர்களை சந்திக்கவும், சந்திப்புகளை நடத்தவும் உதவினேன். ஆனால் இவர் போன இடமெல்லாம் நாத்தியிருந்தார் என்பதை காலம் தாழ்த்தியே அறிந்தேன். இவற்றை இத்தோடு விடுகிறேன்.

    இவர் சென்னை சென்ற பின், இவரது கணவரான இயக்குனர் ஜெரால்ட் மற்றும் குறும்பட இயக்குனர் சிவா ஆகியோரது நட்பு கிடைத்த போது, அவர்களோடு ஒரு எடிட்டிங் கலையகத்தை உருவாக்கலாம் எனும் எண்ணத்தை முன் வைத்தார்கள். நல்லா ஐஸ் வைத்தார்கள் என்றால் தவறில்லை. லீனா, ஜெரால்ட் மற்றும் சிவாவோடு ( இவர் ஒரு வழக்கறிஞரின் மகன்) இணைப்பை உருவாக்கி விட்டு, விலகி நின்றார். நானும் லீனா இருப்பதை விரும்பவில்லை. நான், பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தேன். மீடியா கிராப்ட் எனும் பெயரில் நடிகர் நாசரது எடிடிங் சூட்டை வாங்கி, இடம் எடுத்து ஆரம்பமானது. நான் விமானம் ஏறினேன். எனது நண்பர்களை, இவர்கள் சந்திக்க விடவில்லை. தொடர்பு கொண்ட போது பலரிடம், நான் வெளியே சென்றிருப்பதாகவே சொல்லியிருக்கிறார்கள். இருந்தும் என பழைய நண்பர்கள் சிலரை, அவர்களை விட்டு, தனியே சென்று சந்தித்தேன். அவர்களால் அதை தடுக்க முடியவில்லை. அவர்களிடம் என் பிஸ்னஸ் குறித்த தகவல்களை சொல்லி, கண்ணோட்டம் விடுமாறு சொல்லி விட்டு வந்தேன். நான் விமானம் ஏறிய அடுத்த நாள், மீடியா கிராப்ட், கனவுப் பட்டறையாக மாறியது.

    இரு வாரங்களுக்குள், என்ன செய்யாலாம் என ஆராய்ந்தேன். என் பாட்டனர்கள் எனக்கு பசப்பு வார்த்தைகளால் பொய் கதை விட்டுக் கொண்டிருந்தனர். நான் எதுவும் சொல்லாமல், சென்னைக்கு சென்று இறங்கி, நண்பர்களோடு காரியாலயத்துக்கு சென்ற போது அவர்கள் முகத்தில் ஈயாடவில்லை. என்னோடு சென்றவர்களை பார்த்த போது அவர்களால், துள்ளவும் முடியவில்லை. காரியாலயத்தில் இருந்த லீனாவிடம், என்ன நடக்கிறது எனக் கேட்டேன். “என்னோடு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கு, ஜெரால்டோடு பேசக் கொள்ளுங்க” என்று கத்தினாள். என்னோடு வந்தவர்கள் “வாங்க, ஜெரால்டை தேடுவோம்” என்றார்கள். ஆந்திரா போயிருப்பதாக லீனா பொய் சொன்னாள். ஆனால் ஜெரால்டை கோடம்பாக்கத்தில் வைத்து பிடித்தோம். ” அஜீவன், மோசமான ஆக்களோடு சேர்ந்திருக்கீங்க, நாம பேசலாமே” என்றார். பணத்தை திருப்பி தரணும் என்றேன். “காரியாலத்தை எடுத்துக்கிட்டு விட்டுடுங்க” என்றார். காரியாலத்தில் கொடுத்த பணத்துக்கு பொருட்கள் இல்லை. லீனா, தனது தாய்க்கு வீடு கட்ட அதில் பணம் கொடுத்திருப்பது தெரிய வந்தது. வக்கீலிடம் அழைத்துச் சென்று பணத்தை திருப்பி தர எழுதி தருமாறும் செக் தருமாறும் சொன்னோம். இழுத்தடித்தார். பிரச்சனை கடினமாக, லீனா, “அஜீவன், நான் பொறுப்பா, வாங்கித் தர்ரேன். பிரச்சனை பண்ணாதீங்க” என அழுது சந்திக்க விரும்புவதாக சொன்னார். ” உன்னோடு இனி பேச்சு கிடையாது. நான், ஜெரால்டோடு பார்த்துக் கொள்கிறேன்” என்றேன். பெண்களை இழுத்தால், அது வேறு மாதிரியாகி விடும் என்பதால் ஆரம்பத்திலேயே லீனாவை ஒதுக்க நான் எடுத்த முடிவு, இப்போது கை கொடுத்தது. லீனா, ஒரு பெண் ஐபீஎஸ் போலீஸ் அதிகாரி வரை சென்றும் சரியாகவில்லை. அவரது உறவினரான எனது நண்பர், என் பிரச்சனையில் ஈடுபட்டிருந்தார். அடுத்த நக்கீரனிடம் சென்றார். அங்கும், அஜீவனது உறவுகளும், நண்பர்களும் எதுவும் செய்வாங்க என்று சொன்னதால், இறுதியில் எனது பணம் கறுப்பு பணம் என்றும். நான் விடுதலைப் புலி என்றும், கதையை மாற்ற திட்டம் போட்டு, என்னோடு சண்டைக்கு தயாரானார்கள்.

    நிலை உணர்ந்த நண்பர்கள் பவர் ஒப் அட்டார்னியை எழுதிக் கொடுத்து விட்டு வெளியேறுங்கள். உங்கள் பணம் வரும். உங்களுக்கு ஆபத்து வரக் கூடாது என்றார்கள். அது சரியாக பட்டது. மிரட்டியும்,……….. எல்லாம் நடந்த பின்னர் 3 செக்கில் வங்கி மூலம் பணம் போட எழுதிக் கொடுத்தார்கள். கடைசியில் பணத்தையும் திருப்பி கொடுக்க வேண்டி வந்தது. இருந்தாலும் நான் மனதளவில் தேவையற்ற பிரச்சனைகளை எதிர் நோக்கினேன். அதன் பின்னர் அமெரிக்காவில் இருந்து ஒரு பெண் தொடர்பு கொண்டார். லீனா, காவேரி சம்பந்தமான ஆவணப்படுத்துகாக என 10ஆயிரம் அமெரிக்க டாலர்களை வாங்கி, படத்தையும் செய்யாமல் பணத்தையும் தராமல் இருப்பதாக சொன்னார். ஒளிப்பதிவாளர்களுக்கோ அல்லது வேலை செய்வோருக்கும் பணம் கொடுப்போர் அல்ல ஏமாற்றுவோரே? அவதானம்.

  52. ஒரு சின்ன thirutham, director samuthirakani is not belongs to Fishermen society. he is from Virudhunagar dist. so Mr.VInavu, you expose such things whatever you hear.. with out analysis…

    • இல்லையே சமுத்திரகனி மீனவர் சமுகத்தை சேர்ந்தவர் அதனால்தான் பெயரை ‘சமுத்திரகனி’ என்று வைத்துள்ளார் என்பதுதான் கோடம்பாக்கத்தின் மவுத்டாக். இது அவருக்கும் தெரியும், அவர் அதை மறுத்ததேஇல்லை. உங்கள் விவரம்தான் விசாரிக்கப்படவேண்டியது

      • கோவிந்த் அய்யா.. பெயர வைத்து சாதி கண்டு பிடிக்க முடியுமா..? இப்டி தான் பாண்டியன் நு சொன்ன அது நாங்க மட்டும் தான் நு ஒரு சாதி வெறி பிடித்த கூட்டம்
        அலையுது..சரி அத விடுங்க..

        எனோட அப்பா பெயர் சமுத்திரம் @ சமுத்திர பாண்டியன்; (his actaul name is samuthira pandiyan,but his school head master entered his name as “Samuthiram” only,because of caste partialism,he remove the surname “PANDIAN”. ).coming to the Point,did my father belongs to Fishermen society?
        another thing im from the same native place of Director Samuthira kani.
        i’m not blame Mr.Vinavu, just to notify only..

  53. தோழர் கலகம் அவ்வாறு குறிட்டது தவறு என்பதை உணர வேண்டும். பெண்ணியம் புடலங்காய் என்கிற பெயரில் கோடம்பாக்கத்தில் பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் லீனா மணிமேகலை என்கிற இந்த‌ பிழைப்புவாதிக்கு, ஏழைப் பெண்களின் பசி பற்றியோ வறுமை பற்றியோ, அவர்களின் இன்ன பிற வழ்க்கைத் துயரங்கள் குறித்தோ ஒன்றும் தெரியாது. எப்போதும் யோனி ‘குறி’த்தும் குறியை ‘குறி’த்தும் குறிப்புகள் எழுதிக்கொண்டிருக்கும், அது குறித்தே பெரிதும் கவலை கொண்டிருக்கும் இந்த பணக்கார‌ மேட்டுக்குடி ‘பெண்’ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களையும், அவர்கள் தமது வாழ்வின் பெரும்பகுதிகளை செலவிட்டு இந்த மனித குலத்திற்காக படைத்தளித்த‌ வரலாற்று முக்கியத்துவம் கொண்ட தத்துவங்களையும், ஆய்வுரைகளையும் உடலுறவுடன் தொடர்புபடுத்தி இழிவுபடுத்துவது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டிய‌ செயல், இதற்கு உடனடியாக‌ நம‌து ‘பெண்கள் விடுதலை முண்ணனி’ அமைப்பின் சார்பாக இவருடைய வீட்டின் முன்னால் நின்று ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டும், அங்கேயே நின்று ரோட்டில் போவோர் வருவோரிடம் எல்லாம் இதை அம்பலப்படுத்தி பிரசுரங்கள் கொடுத்து அம்பலப்படுத்தியிருக்க வேண்டும். அது ஒரு பக்கம் இருக்கட்டும், இணையத்தில் நடக்கும் இந்த‌ விவாதத்தில் இந்த மேட்டுக்குடி சீமாட்டிக்கு நமது கண்டணத்தை தெரிவிக்க நாம் தக்க முறையில் பதிலளிக்க வேண்டும். அது தான் சரியானது, மாறாக இது போன்று வசை பாடினால் ம.க.இ.க காரங்க‌ என்னைத்திட்டிட்டாங்க, என்னைத்திட்டிட்டாங்க என்று ஊர் பூராவும் பிரச்சாரம் செய்து கொண்டிருப்பார்கள் மட்டுமின்றி இது போன்ற அணுகுமுறை அவர்களின் தவறை மற்றவர்களிடம் அம்பலப்படுத்துவதற்கு பதிலாக‌ அவர்களுக்கு அனுதாபம் தேடித்தருவதாகவும் அமைந்து விடும்.

    எனவே தோழர் உணர்ச்சிவயப்பட்டு செய்த இந்த‌ தவறை தவறு என்று ஏற்று சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.‌

    • தோழரின் விளக்கமும்,விமர்சனமும் மிகவும் சரியானது. முதலாளித்துவ ஆதரவுக்காரர்களும்,உல்லாசபிரியகளும்,பெண்னை உடல்ரிதியாகவும்,மனரிதியாகவும் புணர்ந்துக்கொண்டு இருக்கும் நாய்களும் இந்த கட்டுரையின் விமர்சனத்துக்கு ஆணாதிக்க செயல் என்று கூறி லீனாவின் தரங்கெட்ட செயலுக்கு வக்காலத்து வாங்கி அணுதாபத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

  54. எண்- 55, 56 பின்னூட்டங்கள் தனிப்பதிவாக இட வேண்டியவை. இதை லீனாவின் ரசிகர்கள் படித்து திருந்த வேண்டும்.

  55. பெண்களின் எதிரி லீனாவின் மழுப்பல்களும், பசப்பல்களும்

    //கவிதைகள் என் வெளிப்பாட்டுத் தளம். என் படைப்புகளை ஏற்றுக்கொள்வதோ, அதிலிருக்கும் அரசியலை விமர்சிப்பதோ வாசிப்பவர்களின் தெரிவு.படைப்புக்கு வெளியே என் மீதான தனிநபர் தாக்குதல்களுக்கோ அவதூறுகளுக்கோ என்னிடம் பதில்கள் இல்லை. செங்கடல் திரைப்படத்தில் நானும் ஊதியம் பெற்றுக் கொண்டு வேலை செய்யும் ஒரு தொழிலாளியே. ஷோபா சக்தி ஊதியம் கூட பெற்றுக் கொள்ளாமல் தான் செங்கடலில் திரைக்கதை, வசன இலாகாவில் வேலை செய்கிறார். படத்தில் பேட்டா பிரசினை என்பது பொய்க்கதை. மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படம் என்பதால் எல்லோரும் மாதச் சம்பளத்தில் தான் வேலை செய்கிறார்கள்.

    இரண்டு நாள் படச் சுருளை எடுத்துக் கொண்டு ஓடிய குற்றத்தை விசாரிக்க நடந்த தகராறில், ஏற்பட்டது தான் போலீஸ், விசாரணை குழப்பம் எல்லாம். யாரும் கைது செய்யப்படவில்லை. தவறான செய்தி வெளியிட்ட தினத்தந்தி, தினமலர் விஷமிகளிடம் ஆதாரங்களை கேட்டுப் பார்த்தால் உண்மை புரியும். எந்த தார்மீகமும் இல்லாமல் சகட்டுமேனிக்கு செய்திகளை வெளியிடுபவர்களும், பரப்புபவர்களும் அந்த பொய்ச் செய்திகளை வைத்து கட்டுரை எழுதுபவர்களும் நாச சக்திகள் என்பதை தவிர என்ன சொல்ல? என்ன வக்கிரமோ , என்ன காழ்ப்போ, மனிதர்களின் கீழ்மைத் தனங்களுக்கு யார் தான் பொறுப்பேற்க முடியும்? படம் முடிவடைந்து பார்வைக்கு வருவதற்கு முன்னே அதைப் பற்றிய அனுமானங்களும் வெட்டிப் பேச்சும் அநாகரிகமானது. அருவருப்பானது. 

    பிறகு என்னை காலத்துக்கும் தொடர்ந்து வரும் அவதூறு, நான் ஈழத் தமிழர்களிடம் காசு வேண்டி குறும்படம் செய்தேனென்றும், வேலைசெய்தவர்களுக்கு காசு தரவில்லையென்பதுமான செய்திகள்.. இந்த வதந்திகளை விடாமல் பரப்பி வருபவர்கள் ஆதாரத்தை தந்து நிரூபிக்காமல் பேசுவது அயோக்கியத்தனம். இதுவரை நான் எந்த ஈழத் தமிழரிடமும் காசு வாங்கியதில்லை, என்னோடு வேலை செய்தவர்களோடு ஒவ்வொரு படத்தின் பட்ஜெட்டை பகிர்ந்தே வேலை செய்திருக்கிறேன். ஆரம்ப காலத்தில் அரசு சாரா நிறுவனங்களோடு இணைந்து வேலை செய்தது உண்மை. பலிபீடம், அலைகளைக் கடந்து, பிரேக் தி ஷக்க்லஸ் என்று படங்கள் எடுத்தபோது ஏற்பட்ட அனுபவங்கள் ஒப்ப வில்லை என்பதால், நிறுவனங்களோடு வேலை செய்வதை நிறுத்தி விட்டேன். எடிடோரியலாக என்னை சுதந்திரமாக வேலை செய்ய அனுமதிக்கும் சூழலில் மட்டுமே என்னால் இயங்க முடியும்.
    தவிர, தமிழ்க் கவிஞர் இயக்கம் மற்றும் ஈழத் தமிழர் தோழமைக் குரல், லீனா மணிமேகலை என்ற தனிநபர் சார்ந்த இயக்கங்கள் அல்ல. பொறுப்பாளர்கள் குழு, ஒருங்கிணைப்பாளர்கள் குழு, என்று ஒரு பெரிய டீம் அதற்காக வேலை செய்தது. அதில் பங்காற்றியவர்கள் ஒரு குறைந்த பட்ச அரசியல் இணைவு வேலைத் திட்டத்தின் அடிப்படையில் பணி செய்தார்கள். போராட்ட வடிவங்களின் மேல் விமர்சனம் வைப்பவர்கள் ஒட்டுமொத்த குழுவை கேள்வி கேட்க வேண்டும். குழுவின் அங்கத்தினராக நானும் அதற்கு பதில் சொல்வேன். அதை விட்டு கேலி பேசும் கையலாகாதவர்களுக்கு என் நேரத்தை வீணாக்க முடியாது. 
    இதைத் தவிர என் புகைப்படங்கள் பற்றியோ, என் குடும்ப விவகாரங்கள் பற்றியோ, என் நண்பர்கள் பற்றியோ ஒரு மஞ்சள் பத்திரிக்கை தரத்திற்கு ஆபாசமாக எழுதுபவர்களை என் கால் தூசுக்கு கூட கருத முடியாது. 
    லீனா மணிமேகலைPOSTED BY LEENA MANIMEKALA //

    • லீனாவின் சாகச கவர்ச்சி எழுத்துகள்பதிந்தவர் தமிழன், January 06, 2010 இது ஓரு பரம்பரை சாகச எழுத்து முறை. லீனாவின் தகப்பனார் தமிழ்வாணன் கல்கண்டு வெளியிட தொடங்கிய காலத்தில் இருந்தே அறிமுக படுத்தபட்ட கவர்ச்சி எழுத்துமுறை. தமிழ்வாணன் அக்காலத்தில் கல்கண்டில், அவர் ஓரு இயற்கை வைத்தியர் என்றும் சகல துறைகளிலும் ஓர் அறிஞன் என காட்டுவதற்கு அக் காலத்தில் வெளியிடபட்ட கலைக்கதிர் மற்றும் பல மருத்துவ, விஞ்ஞான, சோதிட புத்தகங்களை கொப்பியடித்து எழுதிவந்தார். ஓரு கலைக்கதிரையோ அல்லது மற்றும் விஞ்ஞான வெளியீடுகளை சிலரால் மட்டுமே வாங்க முடிந்தது. ஆனால் கல்கண்டு எல்லாவற்றையும் உள்ளடக்கிய சிறிய மலிவு விலை வெளியீடு என்றபடியால் கூலித் தொழிலாளர்களையும் தம்வசம் இழுத்து வியாபாரத்தை நன்றாகவே நடத்தியும் நடத்திகொண்டும் இருக்கிறார்கள். …http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6619:-kuri-ni-&catid=148:2008-07-29-15-48-04

      • லீனாவுக்கும் லேனாவுக்கும் குழப்பம் தெரிகிறது. லேனா தமிழ்வாணன் என்றுமே நகரிக்கமாகவும் நாசூக்காகவும் பேசும் பழகும் ஒரு நல்ல மனிதர். அவரது வியாபாரங்களைப்பற்றியல்ல தனிப்பட்ட குணத்தைப் பற்றிதான் சொல்கிறேன். லீனாவுக்கும் தமிழ்வானனுக்கும் தொடர்பு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

  56. இப்படி ஒரு கவிதையை (?) ஆண் கூட எழுத துணியமாட்டான் .இதை ஒரு பெண் (?) எழுதியிருக்கிறது .அசிங்கம் .
    தமிழ் சினிமாவில் உள்ள காவாலி கவிஞ்சர்கள் கூட இப்படி அசிங்கம் பண்ணவில்லை.
    பெயர் எடுப்பதற்கு ஏனென்னவெல்லாம் எழுதுகிற கழிசடைகள் எழுதும் குப்பைகளை போட்டு வினவு தன்னை தாழ்த்த வேண்டாம் .

  57. பெண்ணியம் பேசிக்கொண்டு இப்படியெல்லாம் மற்றவரை ஏமாற்றி பிழைக்க முடியுமா??? லீனா பெண்ணியதிட்கே இழுக்கு. இவளது ஏனைய தில்லுமுல்லுகளையும் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தவும்.

  58. ஒரு பெண்ணை இப்படி கொத்துக்கறி போடுகிறீர்களே மக்கா. நான் இந்த பெண்ணின் செயல்பாடுகளை ஆதரிக்கவில்லை. ஆன்னல் அவரின் கவிதைகளை ஒரு பிரதியாக்கமாக பார்க்க விரும்புகிறேன். பெயர் தெரியா ஒரு பெண் இக்கவிதைகளை எழுதியிருந்தால் நமது பார்வை எப்படி இருக்கும்? நரேந்திர மோடி ஒரு அருமையான காதல் கவிதை எழுதினால் அதை நாம் எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

  59. லீனா கவிதை தவறு இல்லை.லீனாவின் வாழ்க்கையும் அப்படிதானே இருக்கிறது………லீனாவிடம் இருக்கிற யோனியின் அழகு எதையும் செய்ய துணியும்.

    • Dear EditorI’m Devendhira poopathy. yesterday I came to know from selmapriyadharsan over phone call that somebody posted a reply in my name in your blog for an article written about Mrs. LeenaManimekalai.In this regard I would like to record my objections.I have not posted any reply to your article and I never replied to any blog posts so for,and your blog is new to me and  I’ ve never seen before.The editor of this site should ensure the correctness/authenticity of the name and name style  and the email ID ‘s of the individual before they post the reply.It is an moralresponsibility of the any blogger.kindly remove that post which you have posted in my name immediately and kindly disclose the source or the email id ,from where you got the replyFurther I ‘m going to lodge the complaint against the individual who sent a reply in my name.Kindly post this reply in your site and put a word about that  bogus reply too. with regards B.DEVENDHIRA POOPATHY 

      • தேவேந்திர பூபதி, உங்கள் விளக்கத்தை வெளியிட்டுள்ளோம். எங்கள் தளத்தில் பொதுவில் பின்னூட்டங்களை மட்டறுப்பதில்லை. இது விவாதங்களை உக்குவிப்பதற்காக செய்யப்பட்ட்டுள்ள வசதி. அதே சமயம் சிலர் பொய்யான மின்னஞ்சல் முகவரிகளில் விதவிதமான பெயர்களில் பதிலளிக்கிறார்கள். அந்தப் பெயர்களில் காரல் மார்க்ஸ், லெனின் போன்ற பெயர்களும் உண்டு. மற்றபடி இதையெல்லாம் யாரும் சட்டை செய்வதில்லை. நீங்களும் பதட்டம் அடையவேண்டியதில்லை. செல்மா பிரியதர்ஷனை ‘விசாரித்த்தாக’ கூறவும்.நன்றி

        • இந்த பதிவை நண்பர் தேவேந்திர பூபதி அவர்களின் பெயரில் பதிவு செய்த முட்டாளை நான் கடுமையாய் கண்டனம் செய்கிறேன். அந்த ஜந்து தன் பொந்துக்குள் இருந்து மறுபடியும் வெளியேறாமல் இருந்தால் நல்லது.

          sorry for that reply by me boopathi sir.

  60. ஏனிந்தக் குறிவெறி? தற்குறி கவிதைக்கு சொற்குறி விமர்சனம். போர்குறி சிந்தனைகள் இடுகுறிக்கு வீணடிப்பதேன்? அறிகுறி சரியல்ல

  61. இந்த கவிதைகள் இணையத்தில் மட்டும் வரவில்லை மணல்வீடு என்னும் சிற்றிதழிலும் வெளிவந்துள்ளது கட்டுரை எழுதும் போது கவனிக்க வேண்டாமா ……… மற்றபடி இது வருத்தம் அளிக்கும் பதிவு 

  62. ஒரு மன நல மருத்துவரை  (மருத்துவர் ருத்ரனை கூட) அணுகலாமே லீனா  ? எந்த நோயும் குணப்படுத்தக்கூடியதுதான்.

  63. அன்பே, ஆரமுதே
    கண்ணே, கண்ணாளா
    அரங்கத்தில் கூற
    அதிரும் கைத்தட்டு

    மம்மு கூடி
    மற்றும் சில வார்த்தைகள்
    அரங்மேறா
    அந்தரங்கமே

    நான்கு சுவர்களுக்குள்
    நாலுபேர் அறியா
    உலகமே பேசும்
    ரகசிய சொற்கள்

    அவற்றை
    அரங்கத்தில் கூறின்
    அருவருப்பாய் நினைக்கும்

    ஆதலின்
    சுதந்திரம் இழந்தேன்
    என்றல்ல பொருள்

    தலைவனும் தலைவியும்
    காமத்தின் பால்
    கதைப்பதை
    கவிதையாயிருந்தாலும்….
    கத்திரிப்பது ஒழுக்கம்

    ஒப்புமை, உவமானம்
    கவிதையின் அழகு
    ஒவ்வாமை
    யாருக்கு அழகு

    எதற்கு எதை ஒப்புவது
    அதனால் என்ன சொல்வது
    சொல்பவருக்கு தெரியவேண்டும்
    இங்கே இரண்டுமில்லை

    “அச்சம் தவிர்” என்பதை
    அவரவர் விருப்பமாய்
    பொழிப்புரை ஏழுதுவது
    பிழைப்புக்கா, பெயருக்கா

    பதரா
    விதையா என்பது
    பாலினத்தின்பால் இல்லை
    பகர்வது என்ன என்பதில்தான்

    ஆக
    முடிவெடுங்கள்
    முற்போக்கு என
    முலாம் பூசாதீர்கள்

  64. ஆண் குறி என்று DECENT அக கூறாமல் ‘பூல்’ என்று கவிதையில் வைத்திருந்தாலும் இந்த கவிதைகளின் தரம் குறைந்திருக்காது

  65. பெண்ணிய சுதந்திரம் என்ற பெயரில் தன் மன வக்கிரத்தை velப்படுத்தி உள்ளார்.. .குறும்படம் என்ற பெயரில் அரசியல் அற்ற alumvarkkankaluku sathakamana படங்களை mosadiy.iseithu தயாரித்து உள்ளார்.amballa படுத்தியதற்கு நன்றி.sethu

  66. தற்சசெயலாக மருத்துவர் ருத்ரன் அவர்களின் தமிழ் பதிவை படித்தபோது அங்கே கண்ட ‘வினவு’ மூலம் புதிதாக வினவின் பக்கம் கண்டேன், இதில் என் கண்ணில் பட்ட ‘லீனா மணிமேகலை’யின் ‘லீலா’ என்னை வசீகரிக்கவில்லை,
    அவருடைய இரண்டு கவிதைகள் பற்றிய பதிவை படித்து, அதற்க்கு எழுதபட்டிருந்த விமரிசனங்களையும் [ஒருசில மட்டும்] படித்தேன், என்னைப் பொறுத்தவரை எளிதாக புரிந்துகொள்ள முடிந்தது ஒன்றுதான், தன்னை பிரபலமாக்கிகொள்ள அவர் எடுத்த சிறிய முயற்ச்சிதான் அவரது கவிதைகள். மேற்கண்ட விமரிசனங்களையும் விவாதங்களையும் பார்க்கும்போது அதற்குரிய பலனை அவர் அடைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.

  67. தைரியம் இருந்தால் அம்பேத்கரை பற்றி, அவரது அம்பேத்கரிய கருத்துக்களை பற்றி லீனா இப்படி ஒரு கவிதையை எழுதட்டும். என்ன நடக்கிறது என்று பாருங்கள்…
    இடதுசாரிகள் இத்தனை சொரனைகட்டவர்களாக போவார்களா? மார்க்ஸை அவர்கள் மறந்து வருடங்கள் ஆகிவிட்டது என்பது அவர்களின் அமைதியிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது.

  68. லீனா மணிமேகலை

    ’தொழில் ஒற்றுமை’ காரணமாக எப்படி ஒரு ஓட்டுப்பொறுக்கி செய்யும் அயோக்கியத்தனத்தை மற்றொரு ஓட்டுப்பொறுக்கியால் கண்டிக்கவோ தடுத்து நிறுத்தவோ முடிவதில்லையோ அதே நிலைதான் லீனா மணிமேகலை விசயத்தில் தா.பாண்டியனுகும் சி.மகேந்திரனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. சமீபத்தில் சி.பி.ஐ.கட்சியின் சி.மகேந்திரனுக்கு எதிராக ஒரு பெண்மணி பாலியல் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்திருந்த்தை நாம் இங்கு நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

    அரசியல் விபச்சாரம் செய்யும் இந்த போலிகம்யூனிசக் கட்சியின் விளைவுதான் கலை விபச்சாரியான லீனா போன்றவர்களின் தோற்றத்திற்கும் இருத்தலுக்கும் காரணம். ”நல்லவேளையாக நம்ம ஆள் யாரும் லீனாவுடன் சிக்கிக் கொள்ளவில்லையே…” என்கிற பெருமூச்சொன்று மற்றொரு போலி கம்யூனிச முகாமாகிய சி.பி.எம்.-மிலிருந்து (அநேகமாக) வெளிப்பட்டுக் கொண்டிருக்கலாம்.

    ஒரு லீனா மட்டுமல்ல; இவரைப் போன்ற வேறு சில, மாலதிமைத்ரி போன்ற (காரிய) பைத்தியங்களுக்கும்கூட ‘படைப்புச் சுதந்திரம்’ என்கிற பெயரில் இந்த கலைவிபச்சாரிகளுக்கு வரிந்துகட்டிக் கொண்டு வக்காலத்து வாங்கியிருக்கிறது சி.பி.எம். முகாம். ஆக லீனா சி.பி.ஐ. கட்சியுடந்தானே தொடர்புடையவர் என்று சி.பி.எம்.-ஐ நாம் இதிலிருந்து விலக்கிவிட முடியாது. தேர்தல் பேரத்தின் போது ‘அம்மா’ காலடியில் யார் முதலில் விழுந்து கடைசியாக எழுந்திருப்பது என்கிற போட்டியில் இவ்விரு போலிகளும் தங்களுக்குள் எந்த வேறுபாட்டையும் காட்டிக்கொள்ளாமல் ஒற்றை உருவமாக விழுந்துகிடந்த காட்சியினை நாம் எளிதில் மறந்துவிடமுடியாது. ஆக, இந்த கலைவிபச்சாரிகளை உருவாக்கிப் பாதுகாப்பதிலும் இவ்விரு போலிகளும் ஒன்றிணைந்தே செயல்படுகின்றனர்.

    வினவு மேலே சுட்டியுள்ளதைப் போல; குஜராத் படுகொலைகளை தெகல்கா அம்பலப்படுத்திய போது அமைதிகாத்த சி.பி.எம். முகாம் பல வேளைகளில் லீனா போன்ற கழிசடைகளுக்கு வக்காலத்து வாங்கி ‘முற்போக்கு’ பேசத் தயங்கியதே கிடையாது. அதற்கு எண்ணற்ற ஆதாரங்கள் இருக்கின்றன.

    லீனாவுக்கு மட்டுமல்ல அவர் போன்றவர்களுக்கு போலியான முற்போக்கு முலாம் பூசி இதுபோன்ற இழிவான படைப்புகளை அவர்கள் வெளிப்படுத்துவதற்கு காரணமாக இருக்கும் போலி முற்போக்குவாதிகளுக்கு வினவின் இப்பதிவானது சாக்கடையில் தோய்த்தெடுத்த செருப்படியாக அமைந்திருக்கிறது. வினவுக்கு எனது பாராட்டுக்கள்! போலிகளுக்கு (மீண்டுமொருமுறை) எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!!

    தோழமையுடன்,
    ஏகலைவன்.

  69. அற்ப புத்திககாரர்கள் மற்றவர்களை தங்களின் நிலைக்கு தாழ்த்த எப்போதும் முயற்சிக்கிறார்கள் . அதற்கு பலியாகிறவர்கள் அற்பராகிவிடுகின்றனர். முற்போக்கு வேடத்தில் சம்பாத்தித்த பிம்பத்தில் பிழைத்து கொண்டே வக்கிரங்களை உமிழ்ந்திருக்கும் லீனாவின் வாந்திக்கு எதிர்வினையாக அவரின் பாணியை கையாண்டதன் தாக்கத்தை தாங்கள் வாசகர் கருத்துகளில் உணரலாம்

  70. இக்கட்டுரையையும் இதன் நீண்ட பின்னூட்டங்களையும் படித்தேன். நந்தன்,ஜீவா, நந்தினி, நந்தா, விஸ்வன், வளர்மதி, சுரேஷ் போன்றவர்களின் கருத்துக்களையொட்டித்தான் எனக்கும் கட்டுரை பற்றித் தோன்றுகிறது.

    இரண்டு விஷயங்கள் சேர்ந்து குழப்பப்பட்டதால் நிகழ்ந்தது இந்தக் கட்டுரையில் ஏற்பட்ட சறுக்கல்.
    1. சமூக மனிதராய் லீனா தனிப்பட்ட முறையிலும், பொருளாதார ரீதியாகவும், அரசியல், சமூகச் சிந்தனைகளிலும் சூழ்ந்திருப்பவரை ஏமாற்றும் விதமாய் செய்யும் / செய்திருப்பதாய் சொல்லப்படும் விஷயங்கள்.

    2. பின்நவீனத்துவ அடையாளம் கொண்டுள்ள அவருடைய இரண்டு கவிதைகள் மீதான விமர்சனம்.

    இரண்டையும் கட்டுரையில் தனித்தனியாகக் கையாண்டிருந்தால் இது தனி மனித தாக்குதலாய் இல்லாமலிருந்திருக்கக் கூடும்.

    முதலாவது – மனிதர்கள் பற்றி:
    முதலாவது விஷயம் சம்பந்தமாக தமிழன் அவர்களின் பின்னூட்டம் நிறைய தகவல்களை அளிக்கிறது. லீனா மோசடிகளில் ஈடுபடுகிறார் எனச் சந்தேகம் எழுப்பும் குற்றச்சாட்டை இப்பின்னூட்டம் சில நிகழ்ச்சிகளின் தொடர்ச்சியாக வெளிக்காட்டுகிறது. இதற்குப் பதிலளிக்க வேண்டியவர் லீனாவே. அதே சமயம் இந்த சந்தேகத்தை எழுப்புவதன் மூலம் அது உண்மையாய் இருக்கும் பட்சத்தில் அவருடன் கூட்டு முயற்சியில் ஈடுபட இருப்பவர்களுக்கான ஒரு முன்னெச்சரிக்கையாகவும் இது ஆகிவிடுகிறது. லீனா மார்க்ஸ், லெனின் போன்றோரை தனிப்பட்ட முறையில் அவமதித்ததால் நாங்களும் லீனாவையும் ஜெரால்ட்டையும் அவமதித்தோம் என்ற எண்ணம் குழந்தைத்தனமானது. மார்க்ஸ், லெனின் போன்றவர்கள் தனி மனிதர்களே ஆனாலும் அவர்கள் வரலாற்றின் மீது செலுத்திய பெரும் தாக்கங்களால் சமூகத்தின் குறியீடுகளாக மாறிப் போனவர்கள். அவர்களை லீனா கவிதையில் அப்படித்தான் உபயோகித்துள்ளார். அவர்களுக்கு இணையாக லீனாவை நாம் ஒப்பிட வேண்டியதில்லை. லீனாவின் கவிதைக்குப் பதிலாக வினவிலேயே வெளிவந்த காக்டெயில் தேவதை கவிதை அதற்கான தளத்தில் அக்கவிதைக்கு மிகச் சரியான கருத்துப் பதிலடி(தலைப்பில் மட்டும் லீனா என்று பெயர் குறிப்பிட்டிருக்க வேண்டியதில்லை) என்று எனக்குப் படுகிறது. தனது வரிகளிலிருக்கும் லயத்தின் மூலம் லீனாவின் கவிதையானது மார்க்சிய மற்றும் இசுலாமிய அடையாளங்களைச் சிதைக்கும் அதே லயத்தில் பின்நவீனத்துவத்தின் இலக்கற்ற, எதையும் செய்யத் தூண்டும், நுகர்வியல் தன்மையை வெளிச்சமிட்டது இந்தப் பதில் கவிதை.

    இரண்டாவது – கவிதைகள் பற்றி:
    அவருடைய இரண்டு கவிதைகளையும் படித்த போது எனக்குத் தோன்றியது இது தான். அவருடைய இரண்டு கவிதைகளிலும் பெண் என்கிற அடையாளமே வேறு எதையும் விட பெரியதாயும், முக்கியமானதாயும் முன்னிறுத்தப்படுகிறது.

    முதல் கவிதையில் பெண் காலங்காலமாக வன்புணர்வுக்கே ஆட்பட்டு வருகிறாள் என்கிற உணர்வு வெளிப்படுத்தப் படுகிறது. “புரட்சி வேண்டுபவர்கள், ஜிகாத் வேண்டுபவர்கள்… வன்புணர்வதற்கு ஏதுவாய்” என்கிற வரிகளில் புரட்சிக்காரர்களையும், இசுலாமிய புரட்சி பேசுபவர்களையும் இந்த லிஸ்டில் வெளிப்படையாகக் குறிப்பதானது, அரசியல் ரீதியாக அவர்களை சிறுமைப் படுத்தும் நோக்கம் கொண்டது. அவ்வரிகள் மார்க்சியம் மற்றும் இசுலாமிய விடுதலையாளர்களுக்கு எதிரானது. கண்டிக்கத் தக்கது. யோனிக்குச் சாவில்லை… யோனியிலும் சாவில்லை என்ற வரிகள் உலகில் மக்கள் எல்லோரும் யோனியின் வழியே தான் பிறக்கிறார்கள் / பிறந்தாகவேண்டும் என்கிற அடிப்படையான உண்மையை (சகலமும் சக்தி மயம்) பிரதிபலிக்கிறது.

    இரண்டாவது கவிதையில் கட்டுடைப்பின் உடைப்பு ரகசியம் இன்னும் தீவிரமாக வெளியாகிறது. மார்க்சிய எண்ணங்களை, பாலியல் எண்ணங்களோடு வித்தியாசமாகக் கலந்து கடைசியில் எல்லாமே ‘புணர்ச்சி’க்கான பிரயத்தங்களே என்பதாக முடிக்கிறது. இதன் மூலம் மார்க்சீயம் போன்ற சித்தாந்தங்களையும், சமூக விழிப்புணர்விற்கான சிந்தனைகளையும் எல்லாம் உடலின்பத்துக்கே என்று அபத்தமாக குறுகிய வரையறை செய்கிறது. பின்நவீனத்துவம் அதிர்ச்சியான சில விஷயங்களை செய்வதன் மூலம் கட்டுடைப்பு செய்கிறது. அத்தைகய அதிர்ச்சி வரிகள் தான் உடலுறுப்புக்களை மார்க்சிய சிந்தனையாளர்களாகவும், மார்க்சிய வார்த்தைகளாகவும் காட்டும் வரிகள். ஆனால் அதிர்ச்சியூட்டும் வகையான வரிக்கோர்ப்புகளைத் தவிர ‘கட்டுடைப்பு’ என்று எதுவும் புதிதாக இவ்வரிகளில் இல்லை. பாலியல் கிளர்ச்சி மட்டுமே நோக்கமாகவும் சில வரிகளில் தெரிகிறது. முலைகளின் வருணனை, மம்மு குடித்தல் வரிகள் இத்தகையவை. லெனின் ப்ராய்டைப் புணரவேண்டும் என்று வேறு ஒரு கவிதையில் எழுதியிருக்கிறாராம். லெனினை சமூகம், பொது, பிறர் என்பதன் அடையாளமாகவும், ப்ராய்டை தனி மனிதன், அவனுடைய சுய தேவைகளே, இன்பம் துய்த்தலே பிரதானம் என்பதன் அடையாளமாகவும் வைத்துக் காட்ட முயற்ச்சித்திருக்கலாம். முழுக்கவிதை தெரியவில்லை.

    இந்த இரண்டு கவிதைகளும் (வேண்டுமென்றே ?) பின்நவீனத்துவ அடையாளம் கொண்டவை. எனவே அவை இம்மாதிரி இருக்கக் கூடாது என்று வரையறை செய்ய இயலாது. அதே சமயம் பின்நவீனத்துவம் இலக்கற்ற, கட்டற்ற போக்கினை முன்னிறுத்துவதன் மூலம் சமூகம் என்கிற அமைப்பில் வாழும் மனிதனை சமூக ரீதியான போராட்டங்களிலிருந்தும், வரைமுறைகளுள்ள வாழ்க்கையிலிருந்தும் விலக்கி நுகர்தல் இன்பத்தை மையமாக்கி இழுத்துச் செல்லும் தவறான வேலையைச் செய்வதற்கு இந்தக் கவிதைகள் துணை போகின்றன என்பதும் உண்மை. கவிதை எழுதுவது அவர் உரிமை, சுதந்திரம். அதைத் தடுக்கக் கூடாது. அதற்குப் மறுப்புகள், கண்டனக் கவிதைகள் எழுதி அவருடைய உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துவது நம் கடமை. அதை இந்தக் கட்டுரையாசிரியரும், என்னைப் போல பின்னூட்டமிட்டவர்களும் பல்வேறு விதமாக வெளிக்காட்டியிருக்கிறோம்.

  71. வினவு தோழர்களே,

    சோபா சக்தி தன்னுடைய தளத்தில் வெளியிட்டுக் கொண்டிருக்கும் சமீபத்திய பதிவுகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறீர்களா? மார்க்ஸ் குறித்து தன்னுடைய பதிவுகளில் அவர் வெளியிட்டிருக்கும் கருத்துக்களையும் அதன் தொடர்ச்சியாக ‘தேசம் நெட்’ மற்றும் தமிழரங்கம் தளங்களில் நடந்த விவாதங்களையும், அதற்கு பதிலளிக்கும் முகமாக அவர் எழுதியிருக்கும் ‘அன்புள்ள ஹெலன் டெமூத்’ பதிவையும் படித்தீர்களா?

    ”இவர்கள் ஒன்று இப்படியே சைலண்டாவார்கள் அல்லது இவையெல்லாம் ‘முதலாளித்துவ சதி’ என்பார்கள். ” என்று தன்னுடைய கட்டுரையில் மார்க்ஸியவாதிகளை ஏளனம் செய்திருக்கிறார் சோபா சக்தி.

    எனவே வினவு தோழர்கள் சோபா சக்திக்கு தகுந்த பதிலளிப்பார்கள் என்று நம்புகிறேன்.

    சுட்டிகள் கீழே.

    பழி நாணுவார் – http://www.shobasakthi.com/shobasakthi/?p=574

    அன்புள்ள ஹெலன் டெமூத்… http://www.shobasakthi.com/shobasakthi/?p=593

    கால்மாக்ஸ் தன் வேலைக்காரியுடன் தகாத உறவு வைத்து.. என்று எழுதியுள்ளார்? இதற்கான ஆதாரத்தை சோபாசக்தி முன்வைக்க முடியுமா? – http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=6812:2010-03-08-21-14-42&catid=75:2008-05-01-11-45-16

    அன்புடன்
    ஆசீவகன்

  72. MADAM LEENA, AS A READER, I WANT SOME DETAILS ABOUT THESE LINES IN YOUR SUPER HIT POEM : “எனக்கு தெரியும்
    அறிவாளி ரோகி ஆசிரியன் கலைஞன்
    லும்பன் தரகன் மகாராஜா தளபதி
    திருடன் கணிப்பொறிக்காரன் போராளி
    போதைப்பொருள் விற்பவன் மருத்துவன்
    கூலித்தொழிலாளி மாலுமி விவசாயி
    கணவன், தந்தை, சகோதரன், மகன்
    எல்லோர் குறிகளும் ஒன்றுபோலிருப்பது எப்படி
    என்ற ரகசியம்” 1. Is this true? 2. How did you know?

  73. லீனா ஒரு நவீன சைகோ தேவதை.  அவளுக்கு தெரிந்தது எல்லாம் பெண்ணியம், பெண்ணியம், பெண்ணியம், பெண்ணியம், …..  தன்னிடம் வேலை செய்யும் ஆண்கள் ஒரு பொய், பித்தள்ள்டகரன், என்ற எண்ணம்.  தன் காரியம் முடிந்தால் போதும் மற்றவன் எப்படி போனால் என்ன என்ற எண்ணம் படைத்தவள்.  ஊரை மயக்கி, எம்மதி செங்கடல் படம் பிடித்தல். படம் ஷூட்டிங் முடிந்தும் இன்னும் யாருக்கும் சம்பளம் தரவில்லை. தன் தம்பி இளங்கோவுடன் சேர்ந்து நல்ல கொள்ளை லாபம் பார்க்கிறாள். இவள் தன்னை இலங்கை மக்களின் தூதுவனாக கட்டிகொள்கிறாள். 

  74. Respected leena,
    Read your ‘poetic’ lines again. They represent the worst kind of yellow journalism. Can you teach your poem to your child or can you read it in a public seminar? Dont you know other ways to express your anger against male chauvinism?

    My request to Vinavu team…
    pl dont follow the path of Leena while criticizing her. She represents a cancerous trend in feminism. This trend has to be kept away. Spreading cancer can not be a solution to the threat of cancer.

    As a positive journalist I am really worried about the level of debate in Tamil sites.

    My kind request to other women writers as well as responsible male writers… Pl condemn the cheap publicity stunt of Leena. She might have passed the test for vulgar film world. But she has miserably failed in her social responsibilty.

    susi thirugnanam

  75. ஆகா லீனாவின் புகழ் வீணாக போகவில்லை நம் காலம் தவிர . எதற்காய் எழுதினாரோ அது நன்றாகவே நடக்கிறது. அனைத்து ஆண் மற்றும் பெண் குறிகள் சேர்ந்து இன்னொரு குழந்தையை (திசை மாறும் கருத்துக்களில்) பெற்றெடுக்க துடிப்பது போல் இருக்கிறது.

  76. வீணாகிப் போன தமிழ் சமூகத்திற்கு இரண்டு எடுத்துக்காட்டு ஒன்று லீனா, இன்னொன்று அவருக்கு பதிலடி கொடுத்திருப்பவர்கள்.

  77. பாவம் லீனா மணிமேகலை .. சினிமா வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக .. அவருக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமைகளின் உச்சத்தில் எழுதி இருப்பார் என்று நினைகிறேன் ..
    சரி .. கோபத்தை எங்கே கொண்டு போய் கொட்டுவார் பாவம் ..?.. சிநிமாக்காரனை திட்டினால் இவ்வளவு நாள் கால் பரப்பி படுத்தது வீணாகி போய்விடும் ..
    பிழைக்கவும் வேண்டும் .. பலி தீர்க்கவும் வேண்டும் .. பாவம் கம்யுநிச்ட்டுக் காரர்களை காட்டி எடுத்திருக்கிறார் ..
    பெண்ணுரிமையை பல ஆண்குறிகளில் நிலை நிறுத்திய போலி கம்யுநிச்டுக்கு மார்சிச்ட்டு கட்சியில் பெரும் பதவி தருவார்களா ?..

  78. தெரியாமல் இணையதளத்தில் நுழைந்து விட்டேன் அப்பா தாங்க முடிய்லடா. எவ்வளவு மனிதர்கள் இந்த அறிவியல் சாதனத்தை+நேரத்தை இப்படி வீனடிகிரார்கள் என்று அறிந்து அதிர்ந்து போனேன். உலகத்தின் baathippai பெண் குறியாகவும் அதன் kaaranathai aan குறியாகவும் oru pen ezhuthi irukkiraar enraal avarukku andha irandai thavira samooga அரசியல் porulathara kaarangal edhuvum தெரியவில்லை என்றுதான் பொருள். thevai nalla maruththuvar. v.alagarasan

  79. லீனா சிறிய பெண், சிக்மன் பிரைட் படித்திருப்பர் என்று நினைக்கிறன். ஆனால் சரியாக படிக்கவுமில்லை சரியாக தியரியை புரிந்துகொள்ளவும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கருத்தை நடைமுறைக்கு பயன்படுத்த வேண்டுமென்றால் ஆடை எதிரிகளின் மேல் பயன்படுத்தியிருக்க வேண்டும். வேடங்களும் புராணங்களும் அணிந்திருக்கும் வேடத்தை கலைந்திருக்கலாம். அதுதான் ஒரு தோழருக்கு அழகு. லீனா புரிந்துகொள்ள வேண்டியது, புரட்சி மானிட சமுதாயத்தை மிருக பரிணாமத்துக்கு இட்டுச்செல்ல அல்ல. கவிதைகளில் பார்பனிய புராண வாடை அடிக்கிறது. கம்பன் வியாசர் இப்படி காவிய இடையிடையே எழுதுவதுண்டு. ஆகவே பார்பனியத்தை விட்டு வெளியே வந்து கம்யுனிசம் படிக்கவேண்டும் லீனா.

    • தங்களுக்கு கம்பரும், வியாஸரும் பார்ப்பனர்கள் என்று யார் சொன்னது. அல்லது உங்களுக்குப் பிடிக்காத கருத்தைக் கூறுபவர்கள் எல்லாரும் பார்ப்பனர்களா. அவர் கம்யூனிஸம் படிக்க வேண்டுமோ இல்லையோ. நீங்கள் இராமாயாணமும், பாரதமும் படிக்கவேண்டும். இந்து மதத்தைப் படிக்க வேண்டும். நீங்கள் இந்துவாகப் பிறந்ததால் அதன் தாக்கத்தோடு எழுதி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அல்லது கர்த்தரையோ, முகமதுவையோ எழுதினால் கழுத்துக்குமேல் தலை இருக்காது என்ற பயமோ. தெரியாது. நீங்கள் முதலில் சித்தாந்தங்களை விட்டு வெளியே வந்து மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கப் பழகுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆபாசத்திற்கும், கவிதைக்கும் இடையில் என்ன வேறுபாடு என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். கம்பனும், வியாசனும் ஆபாசமென்றால், தமிழ் இலக்கியங்கள் எல்லாமே ஆபாசமாகத்தான் இருக்கும், தி.க இலக்கியங்களைச் சொல்லவே வேண்டியதில்லை. உடல் உறுப்புகளிலோ, அவற்றைப் பற்றிய சொற்களிலோ, அவற்றைப் பற்றி பேசுவதிலோ, அவற்றைக் காட்டுவதிலோ அதாவது தெரிவதிலோ ஆபாசம் கிடையாது. அப்படியானால் தாவரங்கள் ஆபாசமானவை. விலங்குகள், குழந்தைகள், குளிக்கும்போது, கழிக்கும்போது, களிக்கும்போழ்து எல்லாருமே ஆபாசமானவர்களே. எனக்கு
      மார்பிலே பால் இல்லை, சக்கரையிலே எறும்பு கடித்து வீங்கி விட்டது, அவள் தீட்டாய் இருக்கிறாள் என்பது ஆபாசமில்லை. பிரசவம் பார்க்கிற வைத்தியர், காட்டுகிற பெண் ஆபாசமானவர் இல்லை. நோக்கத்தில் பழுது, அறத்திற்கு பொருந்தாத, பணம் பண்ணுகிற, முறையில்லாத இன்பத்திற்கு ஆபாசம் என்று கூறலாம்.
      கெட்ட வார்த்தை என்று எதைக் கூறுகிறோம். ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத வார்த்தைகளை, தகுந்ததல்லாத வார்த்தைகளை, பயனற்ற வார்த்தைகளை.
      அதுபோல இல்லாத ஒன்று இருப்பதாகத் தோன்றுவதற்கு, பொய் உண்மைபோல் தோன்றுவதற்கு ஆபாசம்/ தோற்றம்/ பொய் என்று பொருள். புரட்சியில்தான் ஆபாசம் அதிகமாக இருக்கிறது. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்தோ என்று ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார்கோவில் ஆண்டி என்பதுபோல் பேசக்கூடாது. குரான் படித்து முகமது நபி ஆபாசமானவர் என்று உங்களுக்குத் தோன்றினாலும் வெளியே சொல்லுவீர்களா.

  80. மிக மிக அதிர்ச்சி அடைந்தேன். மீண்டும் மீண்டும் படித்த பின்பு தான் புரிந்தது இவருக்கு ஏன் இவ்வளவு பேர் எதிரியாக இருக்கிறார்கள் என்று. மிக மிக வன்மையாக கண்டிக்குறேன்.

  81. //மழுங்கத்தனம் என்றால் என்ன என்று ஒரு நண்பர் விளக்கம் கேட்டார். அதுக்கு அகராதியில் எல்லாம் விளக்கம் கிடையாது. தா.பாண்டியனையும், மகேந்திரனையும் பார்த்துக் கொள்ளுங்கள். இதான் அது.//

    தேவ பேரின்பனையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்

  82. லீனாவின் உலகின் அழகிய முதல் பெண் தளத்தை தற்செயலாக இப்போதுதான் பார்த்தேன் அதன் அதிர்வலைகளே இந்தக் கவிதை

    – தமிழ்வாணனின் கல்கண்டு
    படித்திருக்கிறேன்
    லேனாவின் சொற்கண்டு துடித்திருக்கிறேன்
    லீனாவின் பெண்குறியைப் பார்த்தேன்
    ஒரு பெண்குறிக்குள்
    இத்தனை பெருச்சாளிகளா?
    பாவம் லேனா!
    லீனாவின் இருகால் விரிய
    வெப்சைட் பக்கம் தேவையா?
    உள்ளறையின் ஒர் தரைவிரிப்பு போதுமே!
    லீனாவுக்கு என்னதொரு பேராசை
    உலக சரித்திரத்தை எல்லாம்
    ஒரு குறிக்குள் அடக்க
    உலகின் ஆண்களை எல்லாம்
    இரு கால் விரிப்புக்குள் முடக்க
    லீனா
    பெண் இனமே வெட்கப்படும்
    உன் பேனாப்புழை கண்டு துக்கப்படும்.
    பிரபலமாக
    உனது புழை மயிர்தானா கிடைத்தது?
    வேறு எந்தத் துறையிலுமே
    சாதிக்கமுடியாத கோழைபோலும்
    எனவேதான்
    எதை எதையோ விரிக்கிறாய்
    எதை தையோ பிடுங்குகிறாய்
    பிடுங்கி பிடுங்கி சக்தியை விரயம் செய்யாதே
    சேவிங் செய்
    இந்தக் கணினிக் காலத்திலும்
    இன்னுமா பிடுங்கிக் கொண்டிருக்கிறாய்?
    கற்காலத்துக் காட்டுமிராண்டியாய்
    உன் பெண்டு பிள்ளைகள் பேரப்பிள்ளைகளாவது
    உனக்கதை சொல்லித் தரட்டும்
    சேவிங் செய் பயிராவது வளரட்டும்
    காலம் உன் கரும்புள்ளிகளை
    வார்த்தை வடுக்களை அழிக்கட்டும்.

    கவிஞர்.தணிகை

    • இங்கே கவிஞர் தணிகை என்ற பெயரிலான பின்னூட்டத்தை நீங்கள் தவிர்த்திருக்கலாம். இது போல இன்னும் சில பின்னூட்டங்களும் இங்கே அவசியம் இல்லாமல் வெளியிடப்பட்டிருக்கின்றன. கருத்து வன்மை அற்ற வெறும் தனி மனித தாக்குதல் மட்டும் கொண்ட பின்னூட்டங்களை மட்டுறுத்தாமல் விடுவது தோழர்களை அவதூறுக்குள்ளாக்க மட்டுமே பயன்படும். தயவு செய்து நீக்கவும்.
      பார்க்க ( http://tamilcause.blogspot.com/2010/06/blog-post_7110.html?showComment=1275980911656#c2609684417479004486 ).

      தோழமையுடன் , பால்வெளி. (தனி மடல்)

  83. லீனா எழுதும் போது மட்டும் ஆண் குறித்து பொதுவான அதையே அம்பலப்படுத்தி லீனாவிடம் மண்டைக்குள் இருப்பது ஆண்குறிதான் என்றூ எழுதினால் அது மட்டும் தனிப்பட்ட விஷயமா?போலிகம்முநிஸ்ட் யோனியும்+குறியும் சேர்ந்து போட்ட குட்டி முடை நாற்றம்,வீச்சம் வீசும்.அமெரிக்க அம்மண நோயின் புதிய சதி முகமுடி, உலகமயமaக்களின் suudhratharigal தான் பதில் சொல்ல வேண்டும்……………………………………..,பெண்ணிய வாதிகள் அல்ல………….,

  84. லீனா போலி கம்யூனிஸ்டுகளை விமர்சித்தால் உங்களுக்கு என்ன? அவரது குடும்பத்தை (கணவரை) இதில் இழுத்திருப்பது கண்டிக்கத் தக்கது.

    • அனானி சார் லீனா போலி கம்யூனிஸ்டுகளை விமர்சனம் (அதெல்லாம் பெரிய வார்த்தை)  செய்யல சார்.. அவர் கம்யூனிச ஆசான்களை கேவலமாக திட்டி எழுதியிருக்கிறார் எ.க. லெனின் பிராய்டை புணர etc.etc மற்றபடி மறுபடியும் ஆரம்பத்திலேருந்து படிங்க

  85. எவ்வளவு எழுதினாலும் இவர்களை போன்றவர்கள் உணர்வதி்லை. புரட்ச்சியை செயலில் காட்டாமல் வெறும் வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிருந்தால் இன்னும் பல லீணா”க்கள் உருவாகதான் செய்வார்கள்………..

  86. இயேசு உயிரோடு இருந்தால் கொழுப்பெடுத்த விபச்சாரிகளின் மீது முதல் கல்லை எறிபவர் அவராகதான் இருப்பார்.
    வறுமைக்கு விலை போகிறவள் விபச்சாரி அல்ல. ஆனால்
    லீணாவை போன்றவர்கள் வறுமையில் வாடுபவர்களும் அல்ல…

  87. இக்கட்டுரை தாமதமாக ந்ன்ான் படிட்ததர்க்கு முதலில் மன்னிப்பஉ கோருகிறேன், லீனாவின் கவிதைஙளை கண்டதும் அவள் பெரிய ஆள்தான் என்று நினைட்தேன் ஆனால் கட்டுரையை படிடதும் பெண்ணிய போர்வையில் ஒரு புலி என்று அரிந்துகொண்டேன்,.
    எதார்ட்தம் என்ற பெயரில் சில பெண்ணிய் படைப்பாளர்கள் ஆபாசமாக எழுதுகிறார்களே
    சல்மா, குட்டி ரேவதி போன்றவர்களின் பகைப்புகளையும் வினவு கொக்சம் திரனாய்வு செய்யலாமே.

  88. மறுபடியும் பூக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஒருவர் செய்யும் தவறு வாழ்நாள் முழுதும் அவரின் அடியுறைவது போல- வள்ளுவர் சொல்லியது போல அவரின் தவறு புதிதாகப் படிக்கும் அனைவரிடமும் பாதிப்பேற்படுத்துவது உண்மைதான் .சரவணன் அது உங்களுக்கும் பொருந்தும். அதன் பதிலாக: நான் எழுதிய :லீனா;லேனா;பேனா;வீணா? என்ற கவிதையையும் நீங்கள் படித்திருப்பீர் என்று நம்புகிறேன். சிலர் எழுத்து என்ற பேரில் எதை எதையோ எழுத -அதற்கும் சில பேர் சப்பை கட்டிக் கொண்டிருப்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை.பெண் என்றால் பேயும் இரங்கும் என்பர். எனும்போது சில ஆண்கள் அசடு வழிவதில் என்ன வியப்பு? கவிஞர்தணிகை.visit” http://www.marubadiyumpookkum.wordpress.com. for leena;lena; pena; veena? vanakkam. Thanks.

  89. விசயம் சரி; சொன்ன விதமும், பயன்படுத்தப்பட்ட சொற்களும் சமூக ஒழுங்காக இல்லை. உடலில் இதேல்லாம் இருக்கின்றன, ஏன் அதை மூட வேண்டும், உண்மையை வெளியில் காட்டவேண்டியது தானே என்று நடுத்தெருவிற்கு அம்மணமாக வரமுடியுமா என்ன? மற்றபடி எழுத்தாளரின் மனநிலையையும் அது அவ்வாறு பாதிக்கப்பட்டதற்குக் காரணமாக அவருக்கு இருந்த அவருடைய சமூக சூழலையும் தான் நாம் குறை கூற முடியும். ஆண்களின் வெறி அது ஏகாதிபத்தியங்களாக இருக்கட்டும், மதவாதிகளாக இருக்கட்டும், ஏனைய அயோக்கியர்களாக இருக்கட்டும், அவர்கள் முதலில் குறிவைப்பது பெண்ணின் உடலையே. புரட்சியில் இறங்கியிருக்கும் எல்லா தோழர்களையும் அப்படி ஒரே தட்டில் வைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. ஆனால் இயல்பான காதல் மற்றும் காம உணர்வை வடிகால் படுத்த ஒரு ஒழுங்குமுறை வைத்திருக்க வேண்டும். பெண்ணுக்கு மட்டும் என்ன ஆணின் உடலிம் மீது காமமும், வெறியும் இல்லமலா போய்விடுகிறது? இது இருபாலினருக்கும் சமம். ஆதிக்கத்தில் ஆண் இருப்பதால் பெண் பலியாகிறாள். முன்னொரு காலத்தில் ‘பெண்வழிச் சமூக’த்தில் பெண் பல் ஆண்களைப் புணர்ந்த எதார்த்தங்கள் இல்லாமல் இல்லை. ராகுல்ஜீ தனது ‘வால்கா முதல் கங்கை வரை’ நூலில் பெண்வழிச் சமூகத்தில் ஒரு தலைமைப் பெண்ணின் புணர்ச்சி பற்றி சித்தரித்திருக்கிறார். எந்த ஒரு மனித உணர்வையும் வெளிப்படுத்துவதில் ஒரு ஒழுங்கு வேண்டும் என்பது மட்டுமே நமது கருத்து. அந்த ஒழுங்கு சமூக ஒழுங்காக இருக்கவேண்டியது அவசியம். சமூக ஒழுங்காக இல்லாவிட்டாலும் ஒரு நாகரிகம் இருக்க வேண்டும். மற்றபடி யாருக்கும் இவ்விசயத்தில் அறிவுரையோ போதனையோ வழங்க யாருக்கும் அருகதை இல்லை. நன்றி.

  90. ஒரு சோகம் என்னன்னா அறிவு ஜீவிகள்ங்கற இமேஜ் இருக்கிற ஆண்கள் கூட பெண்ணை,அவள் எழுத்தை மெலிதான அலட்சியம்,மற்றும் நக்கீரத்தனத்துடனேயே அணுகுகிறார்கள்.

    நான் உங்கள் விமர்சனத்துக்கு எதிர்வினையாற்ற விரும்பவில்லை.

    எப்பவோ என் ப்ளாக்ல எழுதின ஒரே ஒரு வரி உங்களுக்கு பதிலாகட்டும்.

    உலகத்துல எந்த மாற்றம் ,முன்னேற்றம், ஏற்றம்,இறக்கம் வந்தாலும் மொதல்ல பெண் மட்டும்தான் பாதிக்கப்படறாள்.

    இதைத்தான் அந்தம்மா வயிறெரிஞ்சு
    எழுதியிருக்காய்ங்க.

    புரிஞ்சுக்கப்பாருங்க துரை

  91. மனதில் உள்ளது தான் வெளியில் வரும் என்பார்கள். எப்போழுதும் ‘குறிகளைப்’ பற்றியே சிந்தித்து கொண்டிருப்பதால் தான் கவிதாயினி ‘யோனி’ லீலாவிற்கு பார்ப்பது அனைத்தும் குறிகளாக தெரிகின்றது போல. அமெரிக்கா ஈராக்கை பிடித்தது பெட்ரோலிற்காக. இலங்கை தமிழனை கொன்றது மண் ஆசைக்காக. குழந்தைகளுக்கும் தெரியும் இந்த உண்மைகள் ஏனோ கவிதாயினிக்கு குறிகளாக காட்சியளித்துள்ளது. ஏன், உலகத்தை தன் கால் (யோனி) அடியில் போட்டு நசுக்கிய பிரிட்டிஷின் தலைமையாக இருந்தது ஒரு மகா யோனி தானே?! இப்போது பல லட்ச தமிழர்கள் கொல்லப் படுவதற்கு காராணம் ஓர் இத்தாலிய யோனி தானே?! யோனிகள் செய்யும் அராஜகம் உன் கண்களுக்கு தெரியவில்லையா?

    தந்தை, சில சமுதாய குறிகள் அடக்கி ஒடுக்கி வளர்ததால் லீலா போன்ற யோனிகளுக்கு அனைத்து ஆண்குறிகளின் மீதும் பெறுப்பு வருகின்றது. சுதந்திரம் என்பது வாங்குவதல்ல, எடுத்துக்கொள்வது. அது கால்களுக்கு இடையே தலைகளை இழுப்பதாலும் வருவதல்ல. சுதந்திரம் என்பது ஓர் உணர்ச்சி. அது போலி பெண்ணிய யோனிகள், ஆண்குறிகளின் மீது அமிலத்தை தெளிப்பதால் உணரக்கூடியது அல்ல.

    நான் தமிழ் இலக்கியம் பற்றி அறிந்தவன் அல்ல. பள்ளியில் நேர்+நேர்=தேமா என்று படித்ததோடு சரி. இப்போது தமிழ் இலக்கியத்தில் சிறந்தவர்கள் யார் என்றும் தெரியாது. ஆனந்த விகடன் குமுதம் வாயிலாக சில பெயர்கள் மட்டும் தான் தெரியும். ஆனால் உன் போன்ற முட்டாள் யோனிகள் சமுகத்தில் விசத்தை கலப்பதை பார்த்துகொண்டிருக்க முடியாது. உன் பெயர் பிரபலமாக வேண்டும் என்றால் சரோஜாதேவி புத்தகம் போல் எழுது, பமீலா ஆன்டர்சன் போல் திரி. பிரபலமாகி விடுவாய். ஆனால் தயவு செய்து குறி கிறி என்று சமூக பிரச்சனைகளுக்கு காமப் பசை தடவி மக்களை முட்டாளாக்காதே.

    எங்களுக்கும் குறி என்னும் பேனாவை யோனி என்னும் மைக்கூட்டில் நனைத்து பேப்பர் என்னும் ஆகாயத்தில் பீச்சியடிக்க முடியும். யார் வேண்டுமானாலும் பாலியலைப் பற்றி எழுதலாம். ஆனால் சமுதாயத்தை அதை வைத்து திசை திருப்பி ஏமாற்றக் கூடாது.

    வாழ்த்துக்கள்.

    • இந்த கட்டுரை அனைத்து தமிழ் சார்ந்த வலை பக்கங்களிலும் வருமாறு செய்யுங்கள். அப்போதுதான் இவர்களின் முகத்திரை கிழிபடும். சவுக்கு தளம்

  92. ருத்ரன் அவர்களே,

    //புரிந்து கொள்ள வேண்டாமென்று முடிவெடுத்தவன் எதைப் படித்து என்ன செய்யப்போகிறான்?//

    குறள் மாதிரி க்யூட்டா இருக்கு.

    ஓஷோ சொல்வாரு ” மனிதன் எது சொல்லப்படுதோ அதை கேட்கிறதில்லையாம், தான் எதை கேட்க விரும்பறானோ அதைத்தான் கேட்கிறானாம்.

    எழுத்துக்கும் இந்த விதி பொருந்தும்

  93. பாலியல் நூல்களை வாங்கிப் படிக்கும் ஆர்வம் கொண்ட, ஆனால் கடையில் அதைக் கேட்டு வாங்கும் தைரியம் இல்லாத, இணையத்தில் பலான சைட்களை மேயும் ஆசை கொண்ட, ஆனால் மனைவியிடமோ, பெற்றோரிடமோ சிக்கிக் கொள்வோம் என்ற அச்சமும் கொண்ட “ஆண்குறிகளுக்கு” தீனி போடுவதுதான் லீனாவின் நோக்கம் என்று தெரிகிறது. இத்தகைய கோழைகளின் சந்தையை சார்ந்திருக்காமல், ஷகிலா ரசிகர்கள் போன்ற தைரியசாலிகளை லீனா நம்பலாம். ஷகிலா பட இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் சேர்ந்து கொள்ளலாம். லீனாவின் தைரியத்துக்கு அதுதான் பொருத்தமான இடம்./////////வெல் செய்ட்!

  94. லீனா ஒரு மறை கழன்ற பெண் என்று நினைத்தேன். ஆனால், படித்தவர்களையும் சிந்திக்க விடாமல் ஒரு பயத்துடன் தன்னை பார்க்கும்படி செய்து தன் பேச்சை கேட்கும்படி செய்யக்கூடிய ஜகஜால கில்லாடி. எல்லா மனிதர்களுக்கும் ஒரு சிறிதளவு பயம் உண்டு தன் பகிரங்க பேச்சால் அவர்களுடிய பயத்தை தனக்கு சாதகமாகி கொள்ளும் மனோதத்துவம் தெரிந்து வைத்துள்ள பிளைக்கதேரிந்த பெண்மணி. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.

  95. கசமாலங்களை விமர்சனம் செய்வதில் வினவும் சார்லி தான்

    //லீனாவின் மேற்படி கவிதையில் உலகப் புரட்சியாளர்கள், பிற்போக்கு வாதிகள், மதவாதிகள், லும்பன்கள் போன்ற அனைவரது குறிகளும் இடம்பெறுகின்றன. சீரியல் இயக்குநர்கள் மற்றும் சினிமா இயக்குநர்களது குறிகள் மட்டும் இடம்பெறவில்லை. மேலும் ஆண்குறி வரிசையில் லீனாவின் கணவரான சி.ஜெரால்டின் பெயரும் இடம்பெறவில்லை. காரணம் புனிதமா, அல்லது வேறு ஏதேனும் புதிரா என்று நமக்குத் தெரியாது.//

  96. சார்லிக்கு அண்ணன் வினவு

    //லீனாவின் கவிதையில் இராஜபக்சே பெயர் ஏன் இடம்பெறவில்லை என்று இப்போதுதான் புரிகிறது. ஜெரால்டு, பாரதிராஜா, சேரன்.. இன்னும் நமக்குத் தெரியாத லீனாவுக்குத் தெரிந்த பலருக்கும்….. கடைசியாக இராஜபக்சேவுக்கும் ஆண் குறி கிடையாது போலிருக்கிறது.//

Leave a Reply to மாங்காமடையன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க