Friday, March 24, 2023
முகப்புஉலகம்ஈழம்சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

சீமாட்டி லீனாவும் சில கிருஷ்ண பரமாத்மாக்களும் !!

-

vote-012“என் கவிதைகளுக்கு எதிர்த்தல் என்று பெயர் வை” என்ற ரொமான்டிக்கான தலைப்பில், சென்னை மாநகரத்தில்  ஒரு கூட்டம் நடக்கப் போகிறதாம். பெயர் வைக்கும் உரிமையை நமக்குக் கொடுத்திருப்பதால் ஒரே ஒரு சொல்லை மட்டும் இந்த தலைப்பில் சேர்க்க விரும்புகிறோம். “என் கவிதைகளுக்கு கம்யூனிசத்தை எதிர்த்தல் என்று பெயர் வை” என்பதே அவர்கள் சொல்லத் தயங்குகின்ற உண்மையான தலைப்பு.

எதற்கு இந்தக் கூட்டம்? உலகின் அழகிய முதல் பெண்ணும், பெண் படைப்பாளிகளின் ஏகப் பிரதிநிதியுமான லீனா மணிமேகலை எனும் பெயர் தாங்கிய சீமாட்டியின் கவிதைகளுக்காக அவர் மீது வழக்கு போடச்சொல்லி இந்து மக்கள் கட்சியின் யாரோ ஒரு தல போலீசில் பெட்டிசன் கொடுத்தானாம். அந்தப் புகார் மீது போலீசு எப்.ஐ.ஆர் கூடப் போடாமல், அந்தக் காகிதத்தைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது.

போடாத அந்த வழக்கின் விளைவாக பெண் படைப்பாளிகளுக்கு நேரக்கூடிய ஆபத்து பற்றி மீடியாவில் கவரேஜ். ஏனென்றால் இந்து மக்கள் கட்சி ஸ்ரீமான்கள், கவிதாயினியாகிய ஸ்ரீமாட்டி ஆகிய ரெண்டு தரப்புக்குமே மீடியாவில் ஆள் உண்டு. இப்படியாக கமிசனர் ஆபீஸ் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட புகார் வரலாற்று ஆவணமாகிவிட்டது.

பெண் படைப்பாளிகளுக்கு நேர்ந்திருக்கும் இந்த ஆபத்து இணையம் வரைக்கும் வந்துவிட்டதாம். அதனை எப்படியாவது தடுத்து நிறுத்துவதற்காக இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்களாம். தனக்கு ஏற்பட்ட ஆபத்தை ஒண்டியாக நின்று சமாளிக்கும் கலை தெரியாதவரல்ல சீமாட்டி. அவருக்கு பெரிய்ய்ய இடத்திலெல்லாம் ஆள் இருக்கிறது. என்ற போதிலும், சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒரு 20, 30 அறிஞர்களை பக்கவாத்தியம் வாசிக்க வைத்தால், அப்படியே தானும் ஒரு பாடகியாக (படைப்பாளி) அரங்கேற்றம் பெற்று விடலாம் என்பது சீமாட்டியின் திட்டமாக இருக்கக் கூடும். பக்கவாத்தியக் கலைஞர்கள் இந்த மேட்டர் புரிந்துதான் போகிறார்களா என்று தெரியவில்லை.

சரி. மெய் உலகில் இந்து மக்கள் கட்சியால் ஆபத்து. மெய்நிகர் உலகில் யாரால் ஆபத்து? சீமாட்டியோ அவரது படைப்பு உரிமைக்கு காவல் நிற்கும் ஸ்ரீமான்களோ அதனை வெளிப்படையாகச் சொல்லவில்லை. கவிதாயினி என்பதால் தனது உதடுகளுக்குள் அந்த கவித்துவ உண்மையை அவர் ஒளித்து வைத்திருக்கக் கூடும்.

அந்தச் சொல் வினவு.

லீனா மணிமேகலை – ஷோபாசக்தி – செங்கடல் விவகாரம் குறித்து முதன்முதலில் வினவு தளத்தில்தான் எழுதினோம். தினத்தந்தி கிரைம் நியூஸ் பகுதியின் வாயிலாகத்தான் லீனா என்ற படைப்பாளி எங்களுக்கு அறிமுகமானார். செங்கடல் என்ற ஆவணப்படத்தின் படப்பிடிப்புக்குப் பின், தமக்குரிய பேட்டாவை ஒரு வாரமாக கேட்டும் பெறமுடியாத தொழிலாளிகள் படப்பதிவை எடுத்துச் சென்றுவிட்டனர்.  தீபக் என்ற தொழிலாளிதான் (காமெரா அசிஸ்டென்ட்)  இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டி, மேற்படி படைப்பாளிகள் தீபக்கைத் தாக்கினர். தீபக் போலீசிலும், தனது தொழிற்சங்கத்திலும் புகார் கொடுத்தார். மேலிடத்துத் தொடர்புகளைப் பயன்படுத்தி, சிறைக்குப் போகாமல் ஃபைன் மட்டும் கட்டிவிட்டு, எஸ்கேப் ஆனார்கள் இந்தப் படைப்பாளிகள்.

சம்பள பாக்கியோ வேறு வில்லங்கங்களோ இருந்தால், பாக்கியைக் கொடுக்கும் வரை படச்சுருளை லேப் இலேயே முடக்கி வைப்பது திரையுலகின் விதி. பிரசாத் லேப் முதலாளியாக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார். தொழிலாளியை அடித்த படைப்பாளிகள் அந்த முதலாளியை அடித்திருப்பார்களா?

அம்மையாரின் படைப்புத்திறனால் பாதிக்கப்பட்டவர் தீபக் மட்டுமல்ல, இன்னும் பலர் என்ற விவகாரமும் தெரிய வந்தது.  எழுதினோம். கேஸ் போடுவேன் என்று மிரட்டினார் சீமாட்டி. பணத்தைப் பறிகொடுத்த ஈழத்தமிழர் லீனா செய்த மோசடியை தேசம் நெற் தளத்தில் எழுதி, “தைரியமிருந்தால் கேஸ் போடு” என்றார். அப்புறம் அடிபட்ட தொழிலாளி தீபக்கின் பேட்டி இனியொரு தளத்தில் வெளிவந்தது.

லீனாவும் ஷோபாசக்தியும் படவேலை முடிவதற்காக அமைதி காத்தார்கள். “ஆமா அடிச்சேன், 1700 ரூபாய் அபராதம் கட்டினேன். அடிச்சது சரிதான்” என்று தெனாவெட்டாய் திமிருடன் தனது தளத்தில் எழுதினார் ஷோபாசக்தி. அந்தக் கட்டுரையைத் தனது தளத்தில் வெளியிட்டு வன்மத்துடன் ஆமோதித்தார் லீனா.

மீண்டும் வினவுக்கு வருவோம். தீபக்கை அடித்த சம்பவத்தைப் பார்த்த பிறகுதான், ‘தோழர்’ லீனாவும், ‘தோழர்’ ஷோபாசக்தியும் சித்தாந்த ரீதியிலும், நடைமுறையிலும் வெறி கொண்ட தொழிலாளி வர்க்க எதிரிகள் என்பது தெளிவானது. அம்மாவின் கவிதையில் வழியும் கொழுப்பும், திமிரும் தீபக்கின் மீது விழுந்த அடியில் வெளிப்பட்ட கொழுப்பும் வேறு வேறல்ல என்பதை அவரது கவுஜையைப் படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும். இவையிரண்டுக்கும் உள்ள உறவை நாங்கள் அம்பலப்படுத்தினோம். அதைத்தான் தனிப்பட்ட தாக்குதல் என்று கூவுகிறார் சீமாட்டி.

__________________________________________

உக்கிரமான அல்லது உன்மத்தமான நிலையில் வெளிப்படுவதல்லவோ கவிதை. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் லீனா குழுவினர் தொழிலாளிகளின் கன்னத்தில் எழுதிய கவிதையையும் (பிளஸ் ஆர் மைனஸ் மொழி) இணையத்தில் எழுதிய கவிதையையும், அதாவது உணர்ச்சி வெளிப்பாட்டின்  இந்த இரு களங்களையும் ஒன்றாக்கி விட்டோம் என்பதுதான் இவர்களது குற்றச்சாட்டு.

புஷ் முதல் மார்க்ஸ் வரை அனைவரது வழித்தோன்றல்களும் ஆணாதிக்கப் பொறுக்கிகளே என்பது அவரது கருத்து. சுதந்திரப் பாலுறவு பற்றிய லெனினுடைய கருத்து எள்ளி நகையாடத்தக்கது என்றும் அவர் ஃபிராய்டைப் புணர்ந்து பாலியல் உறவு குறித்த தனது கண்ணோட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதும் லெனினுக்கு அவர் வழங்கும் உபதேசம். தனது மாற்றுக் கருத்துகளை அம்மையார் தாராளமாக கருத்தியல் தளத்தில் விவாதத்துக்கு கொண்டு வந்திருக்கலாம். மாறாக கவிதைக்குள் புகுந்து கொள்கிறார். மூளையின் இடது பகுதிக்கு அதிகம் வேலை கொடுக்காததால் சற்று ஊனமுற்றவர்கள், அதனை சரிக்கட்ட வலது பகுதியை சார்ந்திருக்கும் முயற்சி இது. யோனி, குறி என்று எழுதி புரட்சிப் பட்டம் வாங்கும் இந்த அறிவுத்துறை தப்பிலித்தனத்துக்கு கவிதை என்று பெயர் சூட்டிக் கொள்வதும், எனது வெளிப்பாட்டு மொழி கவிதை என்பதும் ஒரு தரம் தாழ்ந்த தந்திரம். அல்லது சீமாட்டியின் தரத்துக்குப் பொருத்தமான தந்திரம்.

_____________________________________________

சீமாட்டியின் கவிதையில் வழியும் கொழுப்பை அம்பலப்படுத்தினால் அது தனிப்பட்ட தாக்குதலாம். பிரதிகளை முடிவின்றி கட்டுடைக்கும் உரிமை அவர்களுக்கு மட்டும்தானா, மற்றவர்களுக்கு கிடையாதா?

தெரியாமல்தான் கேட்கிறோம். லீனாவின் கவிதையை நாங்கள் விமரிசித்திருக்கிறோம். அதற்கு லீனாவும், லீனா ரசிகர் மன்றத்தினரும் பதில் சொல்லியிருக்கிறார்கள். மறுபடி நாங்கள் எழுதுவோம். நீயும் எழுது. இதில் எது சரி என்பதை படித்து வாசகன் முடிவுக்கு வரட்டுமே? இதில் படைப்பாளி சுதந்திரத்திற்கு என்ன ஆபத்து?

உன் வாதம் என்ன? உன் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. அல்லது நீ விரும்புகிற முறையில் விமரிசிக்க வேண்டும் என்பதுதானே! இதுதான் உண்மையான பாசிசம்.

லீனாவின் மீதான விமரிசனம், பெண் எழுத்தின் மீதான கலாச்சார அடிப்படை வாதிகளின் தாக்குதலாம்! இப்போது குரல் கொடுக்காவிட்டால், இனி பெண்கள் எழுதவே முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுமாம். அடேங்கப்பா, சீமாட்டி இப்போது பெண்குலத்தின் பிரதிநிதியாகிவிட்டார். “பெண்ணென்றும் பாராமல் என்னை… ” என்று டயலாக் பேசி முதல்வர் நாற்காலியைக் கைப்பற்றிய அம்மாவின் ஞாபகம்தான் வருகிறது.

படைப்பாளி என்று அழைத்துக்க கொள்ளும் ஒரு பாசிஸ்டு குழு தனது உரிமையை நிலைநாட்டிக் கொள்வதற்கு, இன்னொரு பாசிஸ்டு கும்பலான இந்து மக்கள் கட்சியை வில்லனாக சித்தரிக்கிறது. லீனா – இந்து மக்கள் கட்சி சண்டை என்பது அசப்பில் ஜெயல்லிதா பாரதிய ஜனதா சண்டை மாதிரியே இருக்கிறது. நல்ல தமாஸ்தான்.

இந்து மக்கள் கட்சி பெரியார் சிலையை உடைத்த போது ம.க.இ.க தோழர்கள் சீரங்கம் கோயில் வாசலில் ராமன் படத்தைக் கொளுத்தினார்கள். ஓசூரில் மோதி மண்டை உடைந்து சிறை சென்றார்கள். பெரியார் தி.க காரர்கள் என்.எஸ்.ஏ வில் சிறை சென்றார்கள். சிதம்பரத்துல தீட்சிதனுக்கு காவல் நிற்கும் இந்து மக்கள் கட்சியை நேருக்கு நேர் சந்திக்கிறார்கள் எங்கள் தோழர்கள்.

சீமாட்டி என்ன செய்தார்? ஜீன்ஸ் பேண்டும், சே குவேரா டி ஷர்ட்டும் போட்டு திரியுறதெல்லாம் புரச்சிப் பெண்ணா? அப்படிப்பட்ட புரச்சிதான் நூத்துக்கணக்கில ஸ்பென்சர் பிளாசாலயும், சிட்டி சென்டர்லயும், ஸ்கை வாக்குலையும், மாயஜாலிலும் திரியுதே? அந்த டி சர்ட் புரச்சிக்கும் இந்தக் கவுஜைப் புர்ச்சிக்கும் என்ன வித்தியாசம்?

அயோத்தி கேஸ் முதல் குஜராத் கேஸ் வரை எதிலும் எந்த இந்து பாசிஸ்டும் தண்டிக்கப்படவில்லை. அதைக் கேக்க ஆளைக்காணோம். இல்லாத கேசுக்கு கண்டனக் கூட்டமாம். விற்காத படத்துக்கு புரடியூசரே காசு கொடுத்து பொதுநல வழக்கு போடச்சொல்லி படத்தை புரமோட் செய்யும் கதை மாதிரில்ல தெரியுது?

_________________________________________________

ஒரு விநோதமான பேச்சாளர் கலவை இந்தக் கூட்டத்தில் உரையாற்றப் போகிறது. த.மு.எ.க.ச (மார்க்சிஸ்டு கட்சியின் கலை இலக்கிய அமைப்பு) முந்திக் கொண்டு அறிக்கை விட்டிருக்கிறது.

இடது தீவிரவாதம் பேசும் ஒரு சிறு குழு இலக்கியவாதிகளை மிரட்டுவதாகவும், லீனாவையும் அப்படி மிரட்டியிருப்பதாகவும் கூறுகிறது அவர்களது கண்டன அறிக்கை. இராக் பற்றி கொச்சையாக எழுதிய ஒரு “படைப்பாளியிடம்” கவிதைக்கு பொருள் கேட்டோம். கவிதைக்கு அர்த்தம் கேட்பது குற்றம் போலும்! லீனாவைப் பற்றி எழுதியதோடு சரி. நேரிலெல்லாம் போகவில்லை. ஜெயலலிதா, லீனா மாதிரியான மாதர்குல மாணிக்கங்களை தனியாக சென்று சந்திக்கும் தைரியம் தீவிரவாதிகளான எங்களுக்கு கிடையாது. லீனாவின் சார்பில் லீனாவின் கவுஜைகளுக்கு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம் விளக்கம் கூறிவிடுமானால் மகிழ்ச்சியே.

“உபரி என யோனி மயிரை விளித்தாய்..
முலைகளைப் பிசைந்து சே என்றாய் பிடல் என்றாய்..”

என்பன போன்ற கவித்துவம் வாய்ந்த வரிகளைத் தெரிவு செய்து விளக்கம் சொன்னால் கூடப்போதும்.

கலாச்சார போலீஸ் வேலைக்கு எதிராக முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உறுதியாகப் போராடும் என்று தமிழ்ச்செல்வன் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். நித்தியானந்தா என்ற பரிதாபத்துக்குரிய 32 வயது இளைஞனின் படுக்கையறை உரிமைக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் தமிழ்ச்செல்வன் என்பது நமக்குத் தெரியும். அந்த பாக்கியம் வரதராசனுக்கும் கிடைக்கவில்லை, பால் சக்கரியாவுக்கும் கிடைக்கவில்லை.

சிங்குர், நந்திக்கிராமில் மக்கள் மீது ஏவப்பட்டது கலாச்சார போலீசு இல்லையே. அது சட்டம் ஒழுங்கு போலீசு. அந்தப் போலீசு மார்க்சிஸ்டுகளின் தோழன்.

கூட்டத்துக்கு ஆதவன் தீட்சண்யா வருகிறார். அவர் சிங்கள பாசிசத்தின் நண்பர். அதாவது, டக்ளஸ் தேவானந்தாவின் நண்பர். ஷோபா சக்திக்கும் நண்பர். இருந்தாலும் கலாச்சார போலீசை எதிர்க்கும் ஜனநாயகவாதி. எல்லாம் ஓ.கே தான். ஆனால் வரதராசனை கட்சிக்காரனுக கொன்னுட்டாங்கன்னு ஷோபா சக்தி எழுதியிருக்கிறார். ஆதவனுக்கு அதுவும் ஓ.கேயா இருக்கலாம். கட்சிக்கு ஓ.கேயான்னு தெரியவில்லை.

அப்புறம், சி.பி.ஐயின் தேவ. பேரின்பன் வருகிறார். பின் நவீனத்துவத்தின் கம்யூனிச எதிர்ப்பு முகமூடியைக் கிழித்து எழுதியவர். இந்த கவிதைக்கு அவரிடம்தான் பொருள் விளக்கம் கேட்கவேண்டும்.

காமெடி என்னவென்றால் பெண் கவிஞர்கள் பலரை இந்தப் பட்டியலில் காணவில்லை. அவர்கள் லீனாவை பெண்ணென்று ஒப்புக்கொள்ளவில்லையா அல்லது படைப்பாளியென்று ஒத்துக்கொள்ளவில்லையா தெரியவில்லை. இது தொடர்பான உண்மை அ.மார்க்சுக்குத்தான் தெரியும் என்கிறார்கள். எனவே அவர் அதை கூட்டத்தில் விளக்குவார் என்று நாம் நம்பலாம்.

சீமாட்டியின் உரிமை நிலைநாட்டு விழாவில் மொத்தம் 54 பேர் உரையாற்றுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பத்திரிகையில் கண்டுள்ள பெயர்களைப் பார்க்கும் போது கல்யாணப் பத்திரிகையில் போட்டிருக்கும் தாய்மாமன் லிஸ்ட்தான் ஞாபகத்துக்கு வருகிறது. இவுங்கள்லாம் தெரிஞ்சு வாராகளா, இல்ல இதெல்லாம் இந்த சீனுக்கு தேவையான “அட்மாஸ்பியர்”னு முடிவு பண்ணி லிஸ்டை அச்சடிச்சுட்டாங்களா தெரியல. ஆளுக்கு 10 நிமிடம் என்று வைத்தாலும் 540 நிமிடம். அதாவது பத்து மணி நேரம். மாலை 6 மணிக்கு தொடங்கி அதிகாலை 3 மணி வரை கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.

இருந்தாலும், நாங்கள் எல்லோர் பெயரையும் குறிப்பிட்டு எழுதவில்லை. நாலைந்து பேரைத்தான் இந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறோம். “ஏண்டா என்னா ஏதுன்னு மேட்டரே தெரியாம எதுன்னாலும் பத்துப்பேர் கூட்டமா வாரீங்களே, உங்களுக்ககெல்லாம் வேற வேலயே கிடையாதா?” ன்னு வடிவேலு கேக்குற மாதிரி நாம கேக்க முடியாதில்லையா?

_______________________________________

தொழிலாளியை அடிப்பது படைப்பாளியின் உரிமை. 1700 ரூபாய் அபராதம் கட்டினால் போதுமென்பது ஷோபாசக்தி-லீனாவின் வாதம். அப்படி என்றால் அந்தப் படைப்பாளியை தொழிலாளி திருப்பி அடிக்க விரும்பினால், எவ்வளவு அபராதம் கட்டவேண்டியிருக்கும் என்பதற்கு அறிவாளிகள் பதிலளிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம். எப்படிப் பார்த்தாலும் தொழிலாளிகளின் உரிமையை விட படைப்பாளிகளின் உரிமை கொஞ்சம் மேம்பட்டதாகத்தான் இருக்க முடியும். எனவே, தமது உரிமையை நிலைநாட்டிக் கொள்ள விரும்பும் பெப்சி (தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்களின் சம்மேளனம்) தொழிலாளர்கள் 1700 ரூபாய்க்கு மேல் ஆயிரம், இரண்டாயிரம் கூடுதலாக எடுத்து வரவும்.

அடுத்தது கேள்வி பெண் படைப்பாளிகள் படைப்புரிமை பற்றியது. லீனாவின் கவிதையை வாசித்து, வாசிப்பு அனுபவத்தையும் கவிதை வெளிப்படுத்தும் உணர்வையும் செல்மா பிரியதர்சன் போன்ற கவிஞர்கள் நிச்சயமாக விளக்குவார்கள். கம்யூனிஸ்டுகளுக்கும், ஜிகாதிகளுக்கும், இந்து பாசிஸ்டுகளுக்கும் வேறுபாடு இல்லை என்பதை பெண்ணியப் பார்வையில் லீனாவும் கட்டுடைத்துக் காட்டுவார். கவிதை அறிவோ, ரசனையோ இல்லாத சராசரி உழைக்கும் பெண்கள் இவற்றைக் கேட்டு புதிய தரிசனங்களைப் பெறலாம்.

இறுதியாக, லீனாவின் கவிதையை தமது கொள்கையின் மீதும், தங்கள் மீதுமான தனிப்பட்ட தாக்குதலாகப் புரிந்து கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு: உபரி மதிப்புக்கும் யோனி மயிருக்கும், உற்பத்தி உறவுக்கும் தொப்புளுக்கும், அந்தரத்தில் தெறிக்கும் விந்துவுக்கும் கார்ல் மார்க்ஸின் பிரகடனத்துக்கும் உள்ள கவித்துவப் பிணைப்பு பற்றி “கம்யூனிசப் பாரம்பரியத்தில் பிறந்த” சீமாட்டி வகுப்பெடுப்பார்.

ஆமாம். தான் கம்யூனிச குடும்ப பாரம்பரியத்தில் வந்தவர் என்றுதான் லீனா சொல்லிக் கொள்கிறார். தேவர் மகன் தேவர், கவுண்டர் மகன் கவுண்டர் மாதிரி கம்யூனிஸ்டின் மகனோ, பேத்தியோ கம்யூனிஸ்டு என்று அம்மையார் நினைத்துக் கொண்டிருக்கிறார். போலி கம்யூனிஸ்டுகளும் அதை அங்கீகரித்து சீமாட்டியை தோழர் என்று அரவணைக்கிறார்கள்.

குரங்கையும் மனிதனையும் பிரிப்பது அறிவு. அந்த அறிவிலிருந்துதான் மனிதனின் படைப்புத்திறன் பிறக்கிறது என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதற்காக விலங்குகளுக்குப் படைப்புத் திறனே கிடையாது என்று நாம் சொல்லி விட முடியுமா? இயற்கை அளித்திருக்கும் அந்தப் படைப்புக் உறுப்புக்களின் மீதே மையம் கொண்டிருக்கும் சிந்தனையை ‘படைப்பூக்கம்’ என்று அழைப்பது தகுமாயின்,

“கவிதை என்பதற்கு வேறு ஏதாவது பெயர் வை” என்று கோருகிறோம்.

__________________________________________

vote-012

தொடர்புடைய பதிவுகள்

  1. அருமையான படைப்புக்கு மகிழ்ச்சி, செந்தழல் ரவிக்கு புரிந்ததில் டபுள் மகிழ்ச்சி, கீற்றுவில் மினர்வா கட்டுரையை வாசித்ததில் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி…………

    • வினவு நேத்து கூட்டத்துக்கு நானும் வந்தேன். படு அமர்க்களம். நிறைய துணுக்ஸ் சேகரிச்சு வச்சுருக்கேன். எப்ப கூட்டத்தோட ரிப்போட் போடுவீங்க.? சீக்கிரம் போட்டா பின்னூட்டத்துல கொஞ்சம் அடிச்சு ஆடலாம். சீக்கிரம் போடுங்க தோழரே!

  2. இக்கட்டுரை சரியாக புரியவில்லை. புரிந்த வரையிலும் சரியான பதிலாக தெரியவில்லை.

  3. மார்ச் 4 அன்று சோபா சக்தி பழி நாணுவார் கட்டுரையை வெளியிட்ட அன்றே அதை தன் தளத்தில் லீனா மறுபிரசுரம் செய்ததற்க்கான ஆதாரம் (சுட்டிகள்) இது .. இது மற்றும் இது இப்போது தீடேரென அந்த பக்கத்தை காணவில்லை.. ஹூம் .. ஏன் இந்த பதட்டம் லீனாவுக்கு?

  4. ஈழப் படுகொலையயே மறுத்த பாசிஸ்ட்டுப் பொறுக்கி, விளம்பரம்தேடி அமார்க்ஸு பொய்யா.. ஸாரி அய்யாவப் பத்தி ஒண்ணும் எழுதலியே.. சிம்பாலிக்கா படத்துல மட்டும் அவரு திருவுருவக் காமிச்சிருகீங்க.. என்ன சங்கதி?

    • மேற்கண்ட தோழர் அரைடிக்கெட்டின் இணைப்பிலுள்ள நண்பர்கள் ஜமாலன் மற்றும் பெருந்தேவி தளத்தில் வினவு சார்பில் இட்டுள்ள பின்னூட்டத்தை இங்கும் வெளியிடுகிறோம். இதன் நோக்கம் இந்த விவாதத்தை மற்றவர்களும் அறிய வேண்டும் என்பதற்காகவே. ஜமாலன், பெருந்தேவி இருவரும் இதை தவறாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன்………

      அந்த பின்னூட்டம்

      அன்புள்ள பெருந்தேவி,ஜமாலன்
      அல்லது
      அன்புள்ள ஜமாலன், பெருந்தேவி

      //”அரசியல்சரி” நிலைப்பாட்டுக்கும் கவிதையாக அறிவிக்கப்பட்டிருக்கிற பிரதிக்கும் இடையே சில வார்த்தைகள்//

      அறிவிக்கப்பட்ட கவிதைக்கும் பின்னேயும், அரசியல் சரி நிலைப்பாட்டிற்கு பின்னேயும், இரண்டுக்கும் இடையே இருக்கும் ‘நடுநிலைமை'(எனக்குத் தெரிந்து நடுநிலை என்ற ஒன்றை எங்கேயும் கேள்விப்பட்டதில்லை அல்லது உணர்ந்து கொண்டதில்லை) தரப்புக்கு பின்னேயும் இருப்பது அரசியல்தான்.இப்படி தான் என்று போட்டு பேசுவது ‘நிலைப்பாட்டுவாதிகளுக்கு’வழக்கம்தான் என்பதைக்கூட நீங்கள் ஆராயலாம்.

      //ஒரு படைப்பாளி எதற்காக இலக்கியம் படைக்கிறார் என்பது நுட்பமான வாசிப்பாளனுக்கும், விமர்சகனுக்கும் அசட்டுத்தனமான கேள்விகளாக மட்டுமே இருக்கமுடியும்.//

      //இலக்கியம், கவிதை என்கிற முகாந்தரத்தில் ஒரு பிரதி வாசிக்கக் கிடைக்கும்போது, அதை அப்படித்தான் வாசிக்கவேண்டுமே தவிர எழுத்தாளரின் தனிப்பட்ட, சொந்த மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களைக் கணக்கிலெடுத்து அப்பிரதியை நிராகரிப்பது தவறு. //

      //ஈழம், போஸ்னியா இன்னும் எண்ணற்ற நாடுகளில் பாலியல் வன்புணர்ச்சி என்பது போரின், அரசின், இறையாண்மை அரசியல்களின் அதிகார ஆயுதமாகவே உள்ளது.//

      //தவிர, அரசு, எதிர்ப்பு, கலகம் இவை எல்லாவற்றிலும் அதிகாரம் செயல்படும் என்றாலும், இவற்றைச் சமன்படுத்துவதிலும் பிரச்சினைகள் உள்ளன. //

      //ஆண்மை, பெண்மை என்கிற முரண்களின் அடிப்படையிலான சமூக, கலாச்சார ஒழுங்குவிதிகள் ஒட்டுமொத்த உடல்களில் பதிவுறுத்தப்படுகின்றன, இருமைக்கட்டமைப்பில் உடல்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த விதிகள்தான் இன்று எதிர்க்கப்படவேண்டியவை, வெளிப்படுத்தி அம்பலப்படுத்த வேண்டியவை. ஆனால் கவிதை விதிகளை நோகாமல் மேலோட்டமாக விளைவுகளை நோகிறது. //

      //குறிப்பாய் மார்க்சிய புரட்சியாளனை இங்கு எதிர் உடலாக முதன்மைப்படுத்துவதன் வழியாக பாலியலில் “தூய்மைவாத” கருத்துகள் கொண்ட மார்க்சியர்களை (மார்க்சியர்களின் இத்தகைய பார்வைகளில் நமக்கு விமர்சனம் உண்டு என்றாலும்), பாலுறவுக்காகவே அலைபவர்களாகச் சித்தரிக்கிறது. //

      //நாங்கள் அவதானித்தவரை இப்பிரச்சனையில் பேசப்பட்டவை எல்லாம் கவிஞர் லீனா மணிமேகலையை தனிப்பட்ட முறையில் தாக்குவது அல்லது போற்றுவது என்ற அளவிலேயே நின்றுபோனதே தவிர மொழி அர்த்தமாதல் குறித்த விவாதம் நடக்கவில்லை. இலக்கியம் சார்ந்த உரையாடலை முன்வைத்து இவ்வரிகளை அணுகவேண்டும். //

      நண்பர்களே, மேற்கண்ட உங்கள் மேற்கொள்களின் மொழிவிளையாட்டை நான் உணர்ந்த வரையில் “இடையே சில வார்த்தைகள்” என்ற பிரகடனத்தை தரிசிக்க இயலவில்லை.

      தான் மனச்சோர்வுறும் சமயங்களில் ஜமாலனனின் கட்டுரை உற்சாகத்தை டன் கணக்கில் வாரி வழங்குவதாக மகிழ்வுற்று கொண்டாடிய சீமாட்டி லீனா இனி தான் மொழிவிளையாட்டில் இல்லை என்பதை நினைத்து வருந்துவார். பாவம்.

      லீனா எப்படி கவிதை எழுதவேண்டும் என்றும், நிலைப்பாட்டுவாதிகள் எப்படி தவறாக விமரிசனம் செய்திருக்கிறார்கள் என்பதையும் குறித்து சற்றே அலூப்பூட்டும் விதத்தில் வகுப்பு எடுத்திருக்கிறீர்கள். இதனால் உங்களை பேராசிரியர்கள் என்று சுட்டியதாக தவறாக எடுக்க வேண்டாம்.

      ஆயினும் மேற்கண்ட மேற்கோள்களின் வழி நீங்கள் லீனாவைக் கைவிவிடவில்லை என்பதையும் நிலைப்பாட்டுவாதிகளை குறுக்கு விசாரணை செய்யவேண்டிய லா பாயிண்டுகளையும் அர்த்தம் குமைகின்ற மொழியில் எடுத்தியிம்பிருப்பதால்…………..

      மொழி விளையாட்டிற்கும், வாழ்வின் நிர்ணயிக்கப்பட்ட எல்லைக்கும் இடையில் எது பிரதானமானது, எது இரண்டாம் பட்சமானது, என்ற ‘அலுப்பூட்டும்’ மார்க்சிய இயங்கியலில் எழுதுவதற்கு ஆவலாக உள்ளோம். எப்போது என்பது தெரியவில்லை. நேரம்தான் என்றால் ஏற்பீர்களா?

      மற்றபடி எல்லோரையும் ஒரே போல விமரிசிப்பதாக நீங்களும் எங்களைக் கருதமாட்டீர்கள் என்ற தோழமையுடன்

      வினவு

  5. சபாஷ்! லீனாவுடன் நல்ல கூட்டணி! அத்தனையும் யோனிகள்.!லீனாவின் ராஜ்யத்தில் குறிகள் அனைத்தும் ஒழிக்கப்படட்டும்.கிருஷ்ணனின் லீலைகளை பக்தியுடன் வணங்கும் இந்து பக்தர்கள் லீனாவின் இந்து யோனியையும் விழுந்து வணங்கும் நாள் விரைந்து வரும்.அ.மார்க்ஸ் யோககு யோவாகவும் குக்கு குவாகவும் மாறும் வித்தை கற்றவர்.இவர்கள் மற்றவர்களுக்கு நிறையக் கற்றுக் கொடுப்பார்கள்.தமிழ்செல்வன் வேறு கூட்டணி கிடைக்கும் வரை இதில் இருப்பார்! ஜெய் யோனி சாரி லினி நோ லீனா !

  6. இதில் 99 % காழ்ப்புணர்ச்சியும், 1 % சங்கதியும் மட்டும் தெரிகிறது. அதுவும் சந்தியாகவே, உண்மையாக நிறுவப்படவில்லை. வினவு சமூகத்தை மேம்படுத்தும் கட்டுரைகளை எழுதுங்கள். தனி மனித தாக்குதல்கள் உங்களிடம் எதிபார்கவில்லை.

    • நாவன், இந்தக்கட்டுரையில் எது காழ்ப்புணர்ச்சி, எது தனி மனித தாக்குதல் என்று விளக்கினால் உங்கள் விமரிசனங்களை முழுமையாக புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நன்றி

  7. வரிக்கு வரி ஆமோதிக்கிறேன் தோழர். (தோழர் என்ற சொல்லை இதுவரை நான் உபயோகித்ததில்லை…நிறைய ஆசை இருந்தும்கூட… ஏனெனில் நானும் தரகு வர்க்கத்தினன் என்பதினால்)…. அப்புறம் எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவேயில்லை. யோனி என்பதை விட அதற்கு தமிழில் வேறு வார்த்தை இருக்கின்றதே….அதை உபயோகித்து கவிதை எழுதினால் கவுஜைப்புர்ச்சி சூப்பரா இருக்குமே… இதையும் யாராவது லீனாவுக்கு சொல்லுங்களேன்….

    • நண்பர் ராசாராமனே,

      தாங்கள் “தோழர்“ என்ற சொல்லை பயன்கொள்ளாததில் உள்ள நியாயம் உங்கள் ஆலோசனையை படித்ததும் புரிந்துக் கொள்ளமுடிகிறது

  8. அறிவும் ஆராச்சியும் கூட ஓர் அளவோடு இருத்தல் வேண்டும்.
    அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இதற்கு சாட்சியாக உள்ளது இன்றைய தமிழினம். கல்தோன்றாக் காலத்து முன்தோன்றி மூத்த தமிழன், சங்கம்வளர்த்து வாழ்ந்த முதுபெரும் அறிஞன், இன்றைய உலகில் குடியிருக்க அவனுக்கென்று சொந்தமாக ஒரு குடில் இல்லை. இந்தக்கட்டுரையிலும் அதற்கான கருத்துக்களிலும் தமிழன் அறிவு கட்டுப்பாடின்றி மடைதிறந்து பாய்கிறது.

  9. //உன் வாதம் என்ன? உன் கருத்துக்கு யாரும் மறுப்பு சொல்லக்கூடாது. அல்லது நீ விரும்புகிற முறையில் விமரிசிக்க வேண்டும் என்பதுதானே! // இதுதான் உண்மையான vinavisam

    • மூட்டு அண்ணே, எப்பவாச்சும் உங்க விமரிசன சுதந்திரத்துல தலையிட்டிருக்கிறோமா, ஏண்ணே இப்படி பொய் சொல்றீங்க?

  10. தொடர்ச்சியாக இவ்விசயங்களை படித்து… கோடை வெயிலும் சேர்ந்து மண்டை காய்கிறது.
    வினவை எதிர்த்து கூட்டம் போடுவதற்கு.. சற்றும் சளைக்காமல்… எவ்வளவோ பிரயத்தனங்கள் செய்து… ஒருவரும் தன் பக்கம் நிற்காமல்.. நொந்து போன லீனாவுக்கு… இந்து மக்கள் கட்சியின் பெட்டிசன் உதவி செய்திருக்கிறது. கொடுக்க சொன்னதே ‘லீனாவாக’ இருப்பார் என நண்பன் சொன்னான்.

    லீனா இப்படி சிந்திக்ககூடியவர் தான் என அவர் பற்றிய செய்திகள் சொல்கின்றன.

  11. லீனாவிற்கு அவர் குழுவினரில் உள்ள ஒருவர் எடுத்து சொல்லுங்கள்! இது அவருக்காகவே விசேஷமாக தயாரித்து நடத்தப்படும் “கண்டனக்கூட்டம்” என்று! இல்லையெனில்.. ஒரு ஐமபடிக்கு ஒரு கட் அவுட்… அநேகமாக இந்நேரம் வாயிலில் ஆள் வைத்து கட்டிக்கொண்டிருக்க போகிறார். பார்வையாளர்கள் அமர்ந்திருக்கும் இரு பக்கங்களிலும், லீனாவின் ‘அழகிய படங்களை” ஓவியக் காட்சிகளைப் போல(!) பார்வைக்கு வைத்துவிடப்போகிறார்.

  12. ஆக கடைசியில் லீனாவை எல்லோரும் சேர்ந்து பெரிய ஆளாக ஆக்கிவிட்டீர்கள்.கட் அவுட் வைக்காத கூறைதான்.போலிஸ்காரர்கள் கவிதையையும், கம்பெள்யிடையும் சேர்த்து குப்பை தொட்டியில் எறிந்தாலும் இதைப் பற்றி எழுதி எழுதி அவருக்கு ஆதரவு திரட்ட உதவியிருக்கிறீர்கள். இந்த நன்றிக்கடன்களை அவர் எப்படித் தீர்ப்பார்?:). ஆயிரம் பக்க நாவல் எழுதி உசுப்புவதை விட
    அம்ப்து வரி கவிதை எழுதி ஈசியாக உசிப்பிவிடலாம் என்பதை லீனா
    காட்டிவிட்டார். ஜமாலன்,பெர்ந்தேவி இருவரும் எழுதியுள்ளது என்ன
    மொழி, தமிழ் எழுத்துக்கள் போலிருக்கிறது, தமிழா என்று தெரியவில்லை.

  13. ஹா ஹா…. சூப்பர்!

    வினவு எழுதிய பிறகு அவரின் போர்ட் போலியோவை தூக்கினார், இப்ப சோபா சக்தி கட்டுரையை தூக்கி இருக்கார்! இன்னும் என்னத்த எல்லாம் தூக்க போறாரோ?? போறபோக்க பாத்தா கவித எழுதுறதையே விட்டுடுவாரோ?
    அப்படி ஏதாவது நடந்தால், கலகக்கார கவிதையை படிக்க ஆவலோடிருக்கும் ஆறு கோடி தமிழர்களின் சார்பாக வினவை கண்டிக்கிறேன்.!
    அப்புறம் லீனா எப்படி தன் பிளாக்குக்கு பார்வையாளர்களை வரவழைப்பார்!
    அய்யோ எனக்கு ஒன்னுமே புரியலையே….. சோபா சக்தி, சீ மன்னிக்கவும், அமார்க்ஸ் விளக்குவாரா??

  14. ///குரங்கையும் மனிதனையும் பிரிப்பது அறிவு. அந்த அறிவிலிருந்துதான் மனிதனின் படைப்புத்திறன் பிறக்கிறது என்று நாங்கள் நம்பிக் கொண்டிருக்கிறோம். அதற்காக விலங்குகளுக்குப் படைப்புத் திறனே கிடையாது என்று நாம் சொல்லி விட முடியுமா? இயற்கை அளித்திருக்கும் அந்தப் படைப்புக் உறுப்புக்களின் மீதே மையம் கொண்டிருக்கும் சிந்தனையை ‘படைப்பூக்கம்’ என்று அழைப்பது தகுமாயின்,

    “கவிதை என்பதற்கு வேறு ஏதாவது பெயர் வை” என்று கோருகிறோம்.//////////

    நச்….

  15. லீனா தனது ஆபாசக் கவிதைகளில் இத்தனை துணிச்சலாக கம்யூனிச ஆசான்களைக் கொச்சைப்படுத்தி எழுதுகிறாரே, எப்படி இது சாத்தியம் என்று முதலில் நானும் வியந்தேன். ஆனால் நாம் எல்லோரையும் விட லீனாவுக்குத்தான், தா.பாண்டியன், சி.மகேந்திரன் மற்றும் சி.பி.எம். காமெடியன்களின் தோலின் தடிப்பு பற்றி தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதன் விளைவே இப்படிப்பட்ட துனிச்சலை அவருக்கு வழங்கியிருக்கும் போலும். இத்தனை இழிவான வரிகளைக் கண்டபிறகும், கம்யூனிச ஆசான்கள் கொச்சைப்படுத்தப்பட்டிருப்பது அறிந்தபிறகும் லீனாவின் எழுத்துக்கு முறையான கண்டனத்தைக் கூட பதிவு செய்யத் திராணியற்ற கூட்டம், இன்று அந்த கழிசடை வரிகளுக்கு நியாயம் கற்பித்துக்கொண்டு வலம் வருகிறது என்றால் அவர்களின் மான உணர்வு குறித்து எழும் சந்தேகம் நியாயமானதுதானே!

    மேலும் இந்த கம்யூனிச போலிகளுக்கு அப்பால் கம்யூனிசத்திற்காக இயங்கும் ‘ஒரு சிறு குழு’ (சி.பி.எம்.மின் திக்கதிர் நமக்கு கொடுத்திருக்கும் அடையாளம்) இருப்பது குறித்து பாவம் லீனா அறிந்திருக்க மாட்டார் போலும்!

    மேற்குவங்கத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விரட்டப்படும் பழங்குடியின மக்கள் மாவோயிஸ்டுகளின் தலைமையில் போராடுகின்ற வர்க்கப் போராட்டத்தை, ”மம்தா-மாவோயிஸ்டு கூட்டு சதி…” என்பதாகத் திரித்து அதனையும் ஒரு ஓட்டுப் பொறுக்கும் குழாயடிச் சண்டைதான் என்கிற அளவுக்கு கீழாகக் காட்டிவரும் சிபிஎம்-கட்சி, லீனாவின் இப்பிரச்சினை குறித்தும் “இந்து மக்கள் கட்சியும், வாயளவில் இடது தீவிரவாதம் பேசுகின்ற சிறுகுழுவினரும் கூட்டு…” என்பதாக உருவகப்படுத்துகிறது.

    ஏற்கெனவே ஒரு முறை அதே தீக்கதிரில் “பல்லாவரத்தைச் சுற்றிய மலைப் பகுதிகளில் ஆயுதப் பயிற்சி எடுத்துவருவதாக….” ஆள்காட்டி வேலை செய்தது. லீனாவுக்காக நடத்தப்படும் இக்கூட்டம் மற்ற அனைவரையும் விட இந்த போலி மார்க்சிஸ்டுகளின் அரிப்புகளைச் சொறிந்து கொள்வதற்குத்தான் பயன்படும். லீனாவைவிட இந்த கம்யூனிச போலிகள்தான் நமது அரசியலால் சகல முனைகளிலும் அம்பலப்படுத்தப்படுகிறார்கள். நமது அரசியல் விமர்சனங்கள் லீனாவுக்கு மாறாத இரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், தா.பாண்டியன்களுக்கும் ச.தமிழ்ச்செல்வன்களுக்கும் புரையோடிப் போன, இரத்தமும் சீழும் வடியும் காயங்களை அல்லவா ஏற்படுத்தியிருக்கிறது! அந்த வலியின் முனகல்களைத்தான் இன்று மாலை அந்த அரங்கத்தில் கேட்டவிருக்கிறோம். ஆர்வமுடன் காத்திருக்கிறோம்.

    • ஏகலைவன் தோழரே ?!
      சி.பி.எம் மை விமர்சிப்பது இருக்கட்டும்
      உங்கள் பத்திரிக்கைகள் பு.ஜ மற்றும் பு.க வில் வாசகர் கடிதங்களை கூட நீங்கள் அனுமதிப்பதில்லை. நீங்கள் ஒன்றும் உங்கள் கட்சி அடிமைகளுக்கு மட்டும் பத்திரிக்கை நடத்தவில்லை பேருந்து,
      ரயில்கள் பொது இடங்களில் தான் உங்கள் பத்திரிக்கையை விற்பனை செய்கிறீர்கள் எனக்கு உங்கள் பத்திரிக்கைகளில் வரும் கட்டுரைகளுக்கு மாற்று கருத்து இருக்க கூடாதா ?
      நீங்கள் எழுதகூடிய அதே பக்க அளவுகளில் என்னிடம் பதில் இருக்கும் அதை உங்கள் பத்திரிக்கைகளில் பதிவு செய்ய அனுமதிப்பீர்களா
      ஏனென்றால் நீங்கள் தான் புதிய ஜனநாயகம், கலாச்சாரம் எல்லாம் பேசுபவர்கள்.
      உங்கள் பொது கூட்டங்களில் பார்வையாளனாக பங்கெடுக்கும்போது
      அசதியின்காரனமாக தவிர்ர்க்க முடியாமல் அல்லது தவிர்க்க விரும்பி
      தூங்குபவனை குச்சியை வைத்து தட்டி எழுப்பி தூங்காதிங்க தோழர் என்று எச்சரிப்பது எந்த வகை ஜனநாயகம் தோழர்
      உங்கள் கூட்ட உரைகளை கேட்பதற்கு தான் ஒருவர் வருவார் தூங்குவதற்கு அல்ல உடல் அசதியின் காரணமாக தூங்குவரை தட்டி எழுப்புவதை நிச்சயம் ஜனநாயகம் என்றோ உங்கள் உரிமை என்றோ சொல்ல முடியாது.
      அது ஒரு பாசிசம் .
      அதிகாரம் என்ற ஒன்று உங்களுக்கு இல்லாத போதே அல்லது அதிகாரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை உங்களுக்கு சாத்தியம் இல்லாத போதே இது போன்ற அதிகாரத்தை நீங்கள் கையில் எடுக்கும் போது muppathu aandukalukku melaaka அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் சி.பி.எம் enna seyvaarkal

      • //தூங்குபவனை குச்சியை வைத்து தட்டி எழுப்பி தூங்காதிங்க தோழர் என்று எச்சரிப்பது எந்த வகை ஜனநாயகம் தோழர்//

        தூக்கம் வந்தால் வேறெங்காவது சென்று தூங்குவதுதான் ஜனநாயகம். பெரும்பான்மை மக்கள் உணர்வுடன் விழித்து கூட்டம் கேட்கும் இடத்தில் எனது வசதிப்படி தூங்குவேன், சலம்புவேன், குதிப்பேன் என்று பெரும்பான்மையின் உணர்வைக் கெடுப்பது ரமேஸ்குமார் பார்வையில் ஜனநாயகமாம். உங்க டிக்ஸனரில எல்லாமே தலைகீழாக இருக்குமா மிஸ்டர் குமார்?

        உங்க வீட்டுக்குள்ளேயா வந்து தூங்காதே என்று தட்டியெழுப்பினார்கள் தோழர்கள்? தொழிலாளர்களிடம் ஐந்து பத்து என்று வாங்கி கூட்டம் நடத்தினால் ரமேஷ்குமார் மாதிரி ஆட்கள் வந்து அங்கு தூங்குவேன் என்று அடம்பிடிப்பதுதான் பாசிசம்

      • யப்பா ரமேசு, நீ எங்களிடம் வேறு எங்கேயோ பட்ட அடிக்கு இங்கே ஏதாவது மருந்து கிடைக்குமா என்று வந்திருப்பது புரிகிறது. நீ ரமேசு குமாரா அல்லது ரமேசுபாபுவா என்பதான கேள்விகளைத்தான், உமது மேற்கண்ட புலம்பல் வரிகள் ஏற்படுத்துகின்றன. நீ யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போ விசயத்திற்கு வருவோம்.

        இந்தப் பதிவுடன் தொடர்புடைய கருத்தென்று உங்களுக்கு ஏதுமிருந்தால் இங்கு பதிந்து விவாதிக்கலாம், புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் இதழ்களில் நீங்கள் கடிதமெழுதி தெரிவிக்க எண்ணுகின்ற கருத்துக்களை இங்கே வெளியிடப்படுகின்ற மின்னிதழ்களிலும் வெளியிட்டு விவாதிக்கலாமே, உங்களை யார் தடுத்தது? முதலில் அதற்கு முயலுங்கள் பிறகு பார்க்கலாம். உங்களது ஏனைய புலம்பல்களுக்கு தோழர் பூச்சாண்டி பதிலளித்திருக்கிறார், அது போதுமென்று கருதுகிறேன்.

        • நான் கேட்டது புதிய ஜனநாயகம் மற்றும
          புதிய கலாச்சாரம்
          இதழ்களில் ஏன் வாசகர் கடிதம் போடுவதில்லை
          என்றுதான் நீங்கள் அதீத ஜனாயகம் பேசுகிறீர்கள்
          அதனால்தான்
          உங்களிடம் கேட்கிறேன். முதலாளித்துவ
          பத்திரிக்கைகளில் இருக்கும் ஜனநாயகம் கூட
          உங்களிடம் இல்லை. உங்களிடம்
          அடிப்படை ஜனநாயகமே இல்லாத போது லீனாவை
          பற்றி பேசுவதற்கு என்ன உங்களுக்கு என்ன
          யோக்கியதை இருக்கிறது.
          நான் உங்களை மரியாதையுடன் நீங்கள் என்றே
          பதிவுருகிறேன் நீங்களோ நீ போ வா
          இது தான் உங்கள் இயக்கம் கற்று கொடுத்த
          மார்க்சியமா.
          நான் உங்களிடம் அடி வாங்கிட்டு செல்லவில்லை
          உங்கள் ஆபாசம், உங்கள் வக்கிரம் பிடிக்காமல்
          உங்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய ஆள்
          தான்
          எனக்கு கந்தர்வக்கோட்டை பெரியசாமி யார்
          என்றும் தெரியும் தஞ்சாவூர் ராவணன் யார்
          என்றும் தெரியும்
          வீராசாமி, மருதையன் இன்னும் உங்கள்
          யோக்கிய சிகாமணிகள் பற்றியெல்லாம்
          எனக்கு நல்லாவே தெரியும்
          நீங்கள் அனைவரும் எவ்வளவு பெரிய
          ஆணாதிக்கவாதி என்பதுவும் தெரியும்
          நிலவுடமை சிந்தனாவாதிகள் உங்கள் எவ்வளவு
          பேர் இருக்கிறீர்கள் என்பதுவும் எனக்கு
          தெரியும்.
          முதலில் உங்களை உங்கள் இயக்கத்தை நவீன
          படுத்துங்கள் அப்புறம்
          லீனா விஷயத்திற்கு வருவோம்.
          உங்களை போல் நானொன்றும் பெயருக்குள்
          ஒளிந்து கொள்ளும் ஆள் அல்ல
          அந்த ஈனத்தனம் உங்களுக்கு கை வந்த
          கலை
          கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்
          பெயரை பற்றி கேள்விஎழுப்பி திசை
          திருப்பும் திருகுதாளம்
          எல்லாம் எனக்கும் தெரியும்.

          என்பதுவும்

        • பத்திரைக்கையில் வாசகர் கடிதம் போடாவிட்டால் உடனே அது ஜனநாயக விரோதமா அப்போ 2 வருசம் முன்னாடி வரைக்கும் வாசகர் கடிதம் வந்ததே அப்ப வரைக்கும் மகஇக ஜனநாயக அமைப்பு என்று ஏற்றுக்கொண்டிருந்தீர்களா? இதுதான் ஜனநாயகத்தின் அளவுகோலா., வாசகர் கடித பகுதி போட்டால் பாராட்டி வரும் கடிதங்களை பிரசுரிக்க முடியுமே அந்த வாய்ப்பை நழுவ விட்டது கூட ஜனநாயக விரோதமா?

          நாங்கள் மற்ற பத்திரிக்கையை போல மக்கள் தொடர்பற்று இல்லை ,மக்களிடம் பிரச்சாரம் செய்து விற்கிறோம், அதே பஸ்ஸ்டாண்ட் அதே ஊர் என தமிழகம் முழுதும் எப்போதும் எங்கள் தோழர்களை பத்திரிக்கை வாங்கும் படிக்கும் மக்கள் பார்க்கத்தானே செய்கிறார்கள் கருத்தை தெரிவிக்கத்தானே செய்கிறார்கள்.

          பேப்பர் விற்கும் விலையில் பத்திரிக்கை கொண்டு வருவதே சாத்தியமற்ற விசயமாயிருக்கிறது.. இதில் வாசகர் கடிதம் என்று ஒரு பக்கத்தை வீண்டிக்காமல் அதிலும் செய்தியை சொல்வது நல்ல விசயம்.

          அமைப்பிலிருந்து ஓடிப்போனவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் அப்படி ஓடிப்போய் எங்கே சேருகிறார்கள் என்பதிலிருந்துதான் அவர்கள் ஏன் ஓடிப்போனார்கள் என்பதை பரிசீலிக்க முடியும். உங்களுக்கு துணிவிருந்தால் நீங்கள் சார்ந்த அமைப்பின் பெயரை சொல்லவும்

          தோழமையுடன்

        • //////உங்கள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய ஆள்
          தான்///////

          இப்போதுதான் புரிகிறது. காதலிக்காக அரசியலைத் ‘தியாகம்’ செய்த முன்னாள் தோழர் ஒருவர் இருக்கிறார். ரமேஷ்குமாரின் புலம்பல்கள் அவரை மறுபடியும் ஏனோ நினைவுபடுத்துகிறது.

          இதனை நான் தவறாகவோ, கொச்சைப்படுத்தியோ சொல்லவில்லை, காதலியை அந்த அளவுக்கு மதிக்கின்ற பக்குவம் பெற்ற, பெண்ணியத்தைப் பாதுகாக்கின்ற அவரைப் போன்றவர்களை தவிர்க்கவியலாமல் நினைவுகொள்ள நேரிடுகிறது.

          காதலி பெரிதா, கொண்ட அரசியல் பாதை பெரிதா என்கிற பரிதவிப்பிலிருந்த அந்த முன்னாள் தோழர், அரசியலுக்காக காதலியை இழப்பது ஆணாதிக்கத் தன்மையாதலால், அரசியலை காதலிக்காக கைவிடுவது என்கிற ‘பெண்ணியம்’ சார்ந்த முடிவுக்கு வந்திருப்பார் போலும்!

          அந்த முன்னாள் தோழரின் தர்மசங்கடமான நிலையைச் சரியாகப் புரிந்து கொள்வதற்கு என்னால் முடியாமல் போனதற்குக் காரணம், என்னிடமிருக்கும் ’ஆணாதிக்க’ப் புத்திதான் என்பதை உணர்த்திய ரமேஷ்குமாருக்கு நன்றி!

        • ரமேஷ் குமார் சார், வினவுல இவ்வ்வளு பெரிய வாசகர் கடிதங்கள், விவாதங்கள், அதற்குரிய தொழில் நுட்ப சேவைகள், பதிலுக்குப்பதில், அதற்குப் பதில், என்று இவ்வ்வளையும் இரத்த சாட்சியமாக வைத்துவட்டு எங்களுக்கு ஜனநாயகம் இல்லையே என்று பச்சைப்பொய் சொல்வது என்ன நியாயம் சார்?

        • காதலிக்காக‌ அரசியலை 'தியாகம்' செய்ததாய் சொல்லப்படுபவன்

          நண்பர் ஏகலைவனுக்கு,

          இங்கு நடந்திருக்கும் பின்னூட்ட விவாதத்தை இப்போதுதான் கண்ணுற்றேன். மேலே ரமேஷ் குமார் என்ற பெயரிலான பின்னூட்டத்தை நான் இங்கு பதியவில்லை. ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருக்குமெனில் வினவு குழுவினரிடம் ஐ.பி முகவரியை வாங்கி சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

          எனக்கு தஞ்சை ராவணன் யார் என்றும் தெரியாது அப்படி தெரிந்தாலும் இங்கு வந்து அதை பேச வேண்டிய ஆட்காட்டித்தனமோ அல்லது அரைவேக்காட்டுத்தனமோ எனக்கு கிடையாது. நண்பர் ஏகலைவன், இனி இது போன்ற ஏதாவது உளறல் பின்னூட்டங்கள் வந்து அந்த சமயத்தில் என்னை பற்றிய நினைவு உங்களுக்கு வரும் பட்சத்தில் இயன்ற அளவுக்கு என்னுடைய மின்னஞ்சலில் உறுதிபடுத்திக் கொண்டு பின்பு கேலி பேசுங்கள். உங்களோடு ஒப்பிட முடியாவிட்டாலும் நானும் சில பணிகள் செய்திருக்கிறேன் என்பதன் பொருட்டாவது என‌க்கு இந்த சலுகையை தாருங்கள். மின்னஞ்சல் முகவரி உங்களுக்கு தெரியுமென நினைக்கிறேன். சமீப காலங்களாக அதிகமாக வலைப்பூக்கள் வாசிப்பதில்லை. எனவே நீங்கள் சொன்னால் மட்டுமே என்னால் விளக்கமளிக்க இயலும்.

          இன்று இந்த பின்னூட்டம் என் கண்ணில்பட்ட காரணத்தால் விளக்கமளிக்க முடிகிறது, இல்லாவிட்டால் ரமேஷ்குமார் போன்ற ‘மகா ஜனநாயகவாதிகள்’ எவனோ எப்படியோ போகட்டும் என்று கமுக்கமாக போய்விடுவார்கள். என் நினைவு உங்களை துன்புறுத்த, நீங்களும் என்னை வார்த்தைகளால் ‘காய்ச்சி’ எடுப்பீர்கள். இத்தளத்தில் நான் பின்னூட்டமிடுவதில்லை என்பதை மீண்டும் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன்., எனவே இது போன்ற உளறல் பின்னூட்டங்களுக்கு அடியேன் பொறுப்பாளியல்ல.,

          நன்றி

        • தோழர் ஏகலைவன் ஏன் இப்படி ஆதாரம் இல்லாமல் பேசுகிறீர்கள் ?
          அரசியல் வாழ்க்கையில் ஒருவர் தவறு செய்வது சாதாரன‌மானது தான், இவர் அப்படி என்ன தவறு செய்து விட்டார் ? காட்டியா கொடுத்துவிட்டார் ? இல்லையே. ஆனாலும் இது தவறு தான், தவறு செய்திருக்கிறார். எனினும் அது முடிந்து போன விசயமாகி விட்டது. அதை அவரும் தவறு என்றே உணர்கிறார் என்று கருதுகிறேன், எனவே மேற்கொண்டு அதை சரி செய்து கொண்டு மீண்டும் செயல்பட வருவது தான் தவறை உணர்ந்து கொண்டார் என்பதற்கான சான்று. நாம் அதற்கு தான் உதவி செய்ய வேண்டும். எனவே நாம் மீண்டும் மீண்டும் அதே பழைய விசயத்தை கிளர வேண்டியதில்லை. எனவே இனி வரும் நாட்களில் இதை நினவு படுத்தி பேசுவதை தோழர்கள் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

  16. நீங்கள் லீனா கவிதை குறித்து எழுதிய விமர்சனம் அயோக்கியத்தனமானது அருவெருப்போட்டக்கூடியது.
    லீனா எழுதிய கவிதை ஆபாசம் கம்யூனிஸ எதிர்ப்பு என்றால் நீங்கள் அக்கவிதைக்கு எழுதிய விமர்சனம் கம் யூனிஸ பாசிசம்.
    செரால்டுக்கு குறி இல்லையா பாரதிராஜாவுக்கு குறி இல்லையா என்ற விமர்சனத்தை எந்த வகை இல் சேர்ப்பது.
    அது சரி உங்களுக்கு ஆபாசமாக தெரியும் ஒரு படைப்பு இந்து மக்கள் கட்சிக்கும் ஆபாசமாக தெரிகிறதே அது எப்படிங்க தோழர்

    • /////உங்களுக்கு ஆபாசமாக தெரியும் ஒரு படைப்பு இந்து மக்கள் கட்சிக்கும் ஆபாசமாக தெரிகிறதே அது எப்படிங்க தோழர்///////

      மேலே தோழர் நொந்தகுமரன் தெரிவித்திருப்பது போல இந்து மக்கள் கட்சியெல்லாம் ஒரு செட்டப்பாகக் கூட இருக்கலாம் ஐயா. இருப்பினும் இந்து மக்கள் கட்சி கம்யூனிச ஆசான்கள் இழிவுபடுத்தப்படுவதையும், சமூகவிடியலுக்காகப் போராடுகின்ற புரட்சியாளர்கள் இழிவுபடுத்தப்படுவதையும் எதிர்த்து வழக்கு பதியவில்லை, மாறாக லீனாவின் ஆபாசப்படைப்பு என்பதோடு அவர்கள் நின்றுவிடுகிறார்கள். லீனா எந்த தொழில் வேண்டுமானாலும் செய்துகொள்ளட்டும், சமூக விடியலுக்கான புரட்சிக்காகப் போராடுபவர்கள் என்கிற அடிப்படையில் நாங்கள் கேட்கிறோம் எங்களை ஏன் இவ்வாறு இழிவுபடுத்துகிறீர்கள் என்று. எங்களை இழிவுபடுத்த லீனாவுக்கு உரிமையுண்டு என்றால் அதனினும் கடுமையாக எதிர்வினையாற்ற எமக்கும் உரிமையுண்டு, என்பதை தாழ்மையுடன் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றுக்கு, லீனாவால் பதில் சொல்லத் திராணியில்லை என்றால் அவரது பிரதிநிதியாக வந்து வாதிடும் நீங்களாவது பதில் சொல்லவேண்டும், ஐயா!

      • மார்க்ஸ், எங்கெல்ஸ், போன்ற ஆசான்களுக்கு
        நீங்கள் தான் அத்தாரிட்டியா
        அப்படியென்றால் அந்த அதாரிட்ட்யை
        உங்களுக்கு யார் கொடுத்தது

        • உங்களுக்கு உண்மையிலேயே அக்கரையும் சுரணையும் இருந்தால் இந்த கேள்வியை
          லெனின் பிராய்டை புணரவேண்டும் என்று எழுதிய லீனாவிடம் போய் முதலில் கேளுங்கள்

        • மார்க்ஸை பத்தி பேசினா மார்க்ஸியவாதி வராம வேற யார் வரணும்ன்னு எதிர்பாக்குற? அத்தாரிட்டிய யார் குடுக்கனும்ன்னு நினைக்குற?

          உலக மக்களின் விடுதலைக்காக தத்துவத்தை
          படைத்தவர்களை அவதூறு செய்யும் போது, அத்ததுவங்களை பின் பற்றுபவர்களும், மக்களை நேசிப்பவர்களும் தானே வருவார்கள்?
          அப்புறம் சிபிஎம் காரனா வருவான்?

          என்ன டா இது எழவாப் போச்சு, சித்தாந்தம் தான் பேச தெரியாது, லாஜிக்கா கூட பேச சொல்லி தரமாட்டாங்களா உங்க கட்சியில?

    • அண்ணே இங்கே என்ன நடக்குது ஏ இப்புடி கத்திகிட்டு கேடக்றிக

    • டேய் ரமேஷு பெரிய பருப்பு போல பேசுற ஏன் நீ லீனா யோனிய பார்திய.  இன்னும் செங்கடல் ல வேலை செஞ்ச யாருக்கும் பணம் தரள லீனையும் , ஜெரால்டும் கொள்ளை யடிக்கேரங்க. அது உனக்கு தெரியுமா. செங்கடல் படமே ராஜபக்ஷே, மன்மோகன் சிங்க், கலைஞர்ய புகழ்ல்றதுக்கு தான். 

    • அய்யா,

      இத்தனை நீண்ட கட்டுரைகளை வாசித்த பிறகும், இத்தனை நீண்ட விவாதங்களைப் பார்த்த பிறகும், இவை வெறும் குறிக்காக நடைபெறுகிற சண்டைதான் என்று மதிப்பிடுகின்ற ஞானக்கண் படைத்த நீங்கள், காரல்மார்க்ஸ் என்கிற பெயரை சாருநிவேதித்தா என்று மாற்றி வைத்துக் கொள்வது சிறப்பாக இருக்கும். உங்களுடைய ‘அத்தகைய’ அறிவுக்கும், திறமைக்கும் சாருவின் பெயர்தான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன் சாமி!