“கலியுகத்துல நாடு கெட்டுப் போச்சே”ன்னு அவாள்கள் அவ்வப்போது சபிப்பது வழக்கம். இந்த கலியுகப் புலம்பலில் மற்ற பிரச்சினைகளை விட இந்துத்தவத்திற்கு மட்டும் டன் கணக்கில் வில்லங்கம் வந்து சேர்கிறது. நித்தியானந்தா பள்ளியறை பலாபலன்களால் நாடே சிரிப்பாய் சிரித்த அதே பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.
ஜனவரி, 2009 இல் மங்களூரு பஃப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது சிரிராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்துகொண்டது. இப்போது இதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.
இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கம் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.
உரையாடலிலிருந்து சில பகுதிகள்:
நிருபர்: நான் பிரபலமானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்கள், எனக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். இந்த கலவரத்திற்காக நான் போலீசில் புகார் கொடுக்கமாட்டேன், இது நமக்குள்ளே மட்டும் நடக்கும் விசயம். முன்பணமாக எவ்வளவு தரவேண்டுமென்று சொல்லுங்கள், கொடுத்துவிடலாம்.
(இந்த வேலையைச் செய்வதற்கு தயாரான முத்தாலிக் அதற்கான ஏற்பாடுகளை பெங்களூருவிலேயே செய்துவிடலாமென்று சம்மதிக்கிறார்.)
நிருபர்: ஐயா, இதை நான் உறுதி செய்து கொள்ளவேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சில நாட்கள் கழித்துக் கூட நான் வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்குமென்று தெரிந்தால் நான் அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.
முத்தாலிக்: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களது கிளைத் தலைவர்…..
நிருபர்: பெங்களூருவில்…?
முத்தாலிக்: ஆமாம், பெங்களூருவில்தான். அவர், வசந்த் குமார் பவானி, பலமான கை. அவரோடு அறிமுகமாகியிருக்கிறீர்களா?
(இறுதியில் முத்தாலிக் கலவரத்தை நடத்துவதற்கு ஒப்புதல் தந்த உடன் மிச்சிமிருந்த ஒரே வேலை தொகையை நிர்ணயம் செய்வதுதான். அதற்கு முத்தாலிக் தனது தளபதிகளான பிரசாத் அட்டாவர் (சேனாவின் தேசிய துணைத் தலைவர்), மற்றும் வசந்த் குமார் பவானி (சேனாவின் பெங்களூரு தலைவர்) இருவரையும் சந்திக்க சொல்கிறார். இதில் அட்டாவர் என்பவனை சிறையில் சந்திக்கிறார் நிருபர்.)
நிருபர்: நாங்கள் பதினைந்து இலட்சமாக கொடுத்து விடுகிறோம்.
அட்டாவர்: ஆமாம் ஆமாம்? இருந்தாலும் நான் அதை கணக்கட்டு சொல்கிறேன்.
(நிருபர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இருமுறையும், பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்து பேசுகிறார்கள். அட்டாவரும் மங்களூர் பஃப்பில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல செய்துவிடலாமென்று உறுதி கூறுகிறார்.)
அட்டாவர்: எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்வேன்.
நிருபர்: கலவரத்திற்கு எத்தனை நபர்களை கொண்டுவருவீர்கள்?
அட்டாவர்: ஐம்பது.
நிருபர்: ஆக கலவரம் செய்ய ஐம்பது பேர் வருவார்கள்?
அட்டாவர்: நிச்சயமாக. மங்களூர் பஃப்பில் நடந்த மாதிரிதான்.
(ஆனால் கலவரத்தை எப்படி பக்காவாக நடத்த வேண்டுமென்று சொன்னவர் சேனாவின் பெங்களூரு தலைவர் பவானிதான். அவரது உரையாடலைப் பாருங்கள்.)
பவானி: கண்காட்சியைத் திறப்பதற்கு மும்தாஸ் அலியைக் கூப்பிட முடியுமா?
நிருபர்: யார் அது?
பவானி: அவர்தான் கர்நாட வக்ப் போர்டு உறுப்பினர்.
(விசயம் இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் முத்தாலிக் தனது இமேஜூக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார்.)
முத்தாலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ விழுமியங்களின் ஆதரவாளனென்று சமூகத்தில் எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.
நிருபர்: ஆனால் ஐயா, இது யாருக்கும் தெரியாது.
முத்தாலிக்: எல்லாம் சரிதான். ஆனால் எனது மனசாட்சி நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்று எச்சரிக்கிறது.
நிருபர்: எம்.எப். ஹூசைன் மற்றும் மற்றவர்களது கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அது போல.
முத்தாலிக்: ஆமா ஆமாம்.
நிருபர்: அதே மாதிரி என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ, மங்களூருவிலோ இல்லை முசுலீம்கள் இருக்கும் எப்பகுதியிலும் இருக்கலாம்.
முத்தாலிக்: என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள்? அது மங்களூர், பெங்களூரு இரண்டிலும் செய்ய முடியும்.
நிருபர்: அறுபது இலட்சம் போதுமா?
முத்தாலிக்: இதை யார் உங்களுக்கு சொன்னார்கள்?
நிருபர்: வசந்த்ஜியுடன் பேசியிருக்கிறோம்.
முத்தாலிக்: பணத்தை நான் உறுதி செய்ய முடியாது. அது அவர்களின் (சேனாவின் மற்ற தலைவர்கள்) வேலை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
மேற்கண்ட உரையாடலிலிருந்து ராம சேனாவின் தலைவர் முத்தாலிக்கும் அவரது சகபாடிகளும் கூலிக்கு கலவரம் செய்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி பிரமோத் முத்தாலிக்கின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.
______________________________________________
கர்நாடக மாநிலம், பெலகாம் மாவட்டம், ஹுக்கேரியில் பிறந்த முத்தாலிக்கின் தற்போதைய வயது 47. பதிமூன்று வயதாக இருக்கும்போது 1975இல் ஆர்.எஸ்.எஸ்இல் சேர்கிறார். 2004இல் பஜ்ரங்க தள்ளின் தென்னிந்திய அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். தேர்தல் அரசியலில் நுழைந்து ஒரு ஆளாக விரும்பினாலும் இவருக்கு பா.ஜ.க சீட்டு கொடுக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த முத்தாலிக் 2005இல் பஜ்ரங்தளத்தை விட்டு விலகுகிறார். அதே ஆண்டு சிவசேனாவின் கர்நாடக மாநில தலைவராக உருவெடுக்கிறார். பிறகு அதிலிருந்து விலகி 2006இல் ராஷ்ட்ரிய இந்து சேனாவை ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுக்க சுற்றுப் பிரயாணம் செய்து இந்துவெறிப் பேச்சாளராக பிரபலமாகிறார். இதில் மட்டும் இவர் மீது பதினொரு மாவட்டங்களில் வழக்கு இருக்கிறது. 2008இல் சிரிராம் சேனா ஆரம்பித்ததும்தான் முத்தாலிக் நாடு அறிந்த தலைவராக பிரபலம் ஆகிறார்.
முத்தாலிக்கின் சிறிராம சேனாவின் கைங்கரியங்கள் சில:
- 2009 ஜனவரியில் இந்து கலாச்சாரத்திற்கு விரோதமென்று கூறி மங்களூர் பஃப்பில் பெண்களை அடித்து கலவரம் செய்தார்கள். இதில் முத்தாலிக்கும் 27 பேர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
- ஆகஸ்ட்டு 2008 இல் சேனாவின் குண்டர்கள் எம்.எப்.ஹூசைனது கண்காட்சியை டெல்லியில் வைத்து தாக்கி கலவரம் செய்தார்கள்.
- 2008 இல் மதமாற்றம் என்று குற்றம் சாட்டி கர்நாடகாவின் பல கிறித்தவ தேவாலயங்களை தாக்குகிறார்கள். 2009இல் ஆறு தேவாலயங்களை அடித்து நொறுக்குகிறார்கள்.
- 2009 பிப்ரவரியில் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை பிடித்து திருமணம் செய்து வைக்கப் போவதாக முத்தாலிக் அறிவித்தார். இதை எதிர்த்து சில பெண்கள் அமைப்புகள் முத்தாலிக்கு பிங்க் நிற ஜட்டியை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்தன. இது நாடெங்கும் ஆதரவை ஏற்படுத்தியது.
________________________________________
நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாகிப் போன காதலர்தினம், பஃப் இரண்டையும் பாரதக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று முத்தாலிக் செய்த பிரச்சாரம் நடுத்தர வர்க்க பெற்றோர்களான இந்துக்களின் ஆதரவைப் பெறாமலில்லை. இளையவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்றாலும் பொதுவில் இந்துக்களின் சாம்பியனாக காட்டிக் கொள்ள இந்தப் போராட்டங்கள் கைகொடுத்திருக்கின்றது. மேலும் மேட்டுக்குடியின் நிகழ்ச்சி நிரலில் இத்தகைய தாக்குதல்கள் வந்த உடன்தான் தேசிய ஊடகங்கள் இதை கவனம் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்தன. மங்களூரு பஃப்பில் சுமார் 25 குண்டர்களை வைத்தே நடத்திய தாக்குதல் முத்தாலிக் பிரபலம் ஆவதற்கு போதுமானதாக இருந்தது.
இத்தகைய சிறு கும்பலை வைத்து ரகளை செய்யும் இந்தக் கூட்டத்தை இருக்கும் சட்டப்பிரிவுகளின் படியே கூட எளிதாக முடக்க முடியும். ஆனால் அதைச்செய்ய எந்த அரசும் துணியவில்லை என்பதை எந்த ஊடகங்களும் எழுதவில்லை. மேலும் கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரவணைக்கும் வேலையை செய்து வந்தது. இந்துத்தவா கும்பலில் இருக்கும் தீவிர இளைஞர்களை அணிதிரட்டும் வேலையை இவர்கள் செய்துவருகிறார்கள் என்பது பா.ஜ.க கும்பலுக்கு ஒரு போட்டியாக இருக்கிறது.
காதலர் தினத்திற்கு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா என நாடு முழுக்க இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், இந்த சிறு கும்பல்களை அடக்காமல் அரசு விட்டுவைப்பதும், ஊடகங்கள் இவர்களை பிரம்மாண்டமான சக்தி உடையவர்களாக விளம்பரம் கொடுப்பதும் தான் இவர்கள் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றது.
காசுவாங்கிக் கொண்டு இவர்கள் எதுவும் செய்வார்கள் என்பது கூட புதிதில்லைதான். ஏனென்றால் விசுவ இந்து பரிஷத்தின் வேதாந்தி கூட ஹவாலா ஊழலில் கேமராவின் முன்னர் சிக்கியவர்தான். விசுவ இந்து பரிஷத் இயக்கம்தான் நாட்டிலேயே மிக அதிகமான வெளிநாட்டுப் பணத்தைப் பெறும் தன்னார்வ அமைப்பாகும். இந்தப் பணத்திற்கு முறையான கணக்குகள் எதுவுமில்லை என்பதுகூட ஊடகங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.
ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவ வேகம் போதுமானதல்ல என்ற போட்டியின் விளைவாகத்தான் சிரிராம் சேனா, இந்துமக்கள் கட்சி போன்றோர் தோன்றி பிரபலமாகிறார்கள் என்பது உண்மைதான். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நேரடியாக மறுகாலனியாதிக்கத்தின் மூலம் பெரும் ஆதாயத்தை அடையும் போது இந்தப் போட்டிக் கூட்டம் இந்துத்தவக் கற்பை முன்வைத்து இப்படி சில்லறை ஆதாயங்களை அடைகிறது. ஐ.பி.எல் ஊழலைக் காப்பதற்கு பா.ஜ.கவின் அருண் ஜெட்லி துணிவதும், பாரதா மாதாவின் கற்பைக் காப்பதற்கு காதலர் தினத்தை சிரிராம் சேன எதிர்ப்பதும் வேறு வேறல்ல.
இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன.
பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
///இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன/// இராயிரம் ஆண்டாய் இது கவிழ்ந்த இருழடா இருளய் அகற்ற வாளய் உருவடா.
@@@பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும்@@@
ஓ அப்படியா சேதீ.. இந்த லீனாப்போன..ச்சீய், வீனாப்போன மூளைக்கு இது புரியாம போச்சே?????
நீங்களும் சேவத்துலயும் முக்கியமான கட பஜாரிலும் நெறைய ஒவியம் வரைச்சு போடுறீக ஒங்க யாரும் அடிக்க வரலே என்கிற ஆதங்கம் ஒன்னு செய்யுவேம் அவுங்க அடிச்ச நீங்க திருப்பி அடிக்ககூடாது (நம்ம சி.பி.ம்.சி பி.ஐ மாதிரி) அப்பாத்தான் வீரத்தோட ஒங்கள அடிக்க வருவாய்ங்க
மருதமலை என்ற படத்தில் வடிவேலுவும் ஒரு ரவுடியும் போலீஸ் நிலையத்தில் உரையாடிய காட்சிதான் நினைவிற்கு வருகிறது.
இந்த காவிக் காலிக்கும்பலுக்கு பாடம் புகுத்துவது மற்றும் எதிர்கொள்வதென்பது அசலான கம்யூனிஸ்டுகளாகிய மகஇக வினரால்தான் முடியும். இது புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரிதான்
மூளைக்குக்குள் லீணா போனால், மூளை வீணாய்த்தான் போகும்.
இராமர் படத்துல ஜட்டியைப் போட்டு ச்சீ….ஜட்டியில் இராமர் படத்தைப் போட்டு இப்படி புண்படுத்துறேளே உங்களுக்கே ஞாயமா வினவு ?
🙂
கிறிஸ்தவங்க வெப் சைட்டுல இந்து சாமிய அவமானப்படுத்தாம பூ மாலையா போடுவாங்க. இதுங்கள பத்தி நம்ம தான் விழிப்போட இருக்கனும்.
எந்த வெப்சைட் தலைவா? கொஞ்சம் உதாரணம் குடுங்களேன்.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால்…முத்தாலிக்குக்கு இந்துத்வம் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. பணம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்காகப் போராடுவது போல் பாசாங்கு செய்கிறார் என்பதே.
காங்கிரஸ் காரனிடம் பணம் வாங்கிக்கொண்டு ப.ஜ.க வுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தித் தோற்றவன் தான் இந்த முட்டா லிக். தெரிந்தோ தெரியாமலோ இவனை எக்ஸ்போஸ் செய்து இந்துத்துவத்திற்கு மாபெரும் உதவி செய்திருக்கிறீர்கள்.
//இதிலிருந்து தெரிவது என்னவென்றால்…முத்தாலிக்குக்கு இந்துத்வம் மீது எந்த நம்பிக்கையும் இல்லை. பணம் வாங்கிக்கொண்டு இந்துக்களுக்காகப் போராடுவது போல் பாசாங்கு செய்கிறார் என்பதே.///
அப்போ இந்துக்களை வெடி குண்டு வைத்து கொன்று முஸ்லீம் வெறுப்பை உருவாக்கி அரசியல் ஆதாயம் அடையலாம் எனத் திட்டம் போட்டு தான் வைத்த குண்டில், தானே மாட்டிக் கொண்ட ஆர்எஸ்எஸ் பன்னிகளுக்கும் இதே லாஜிக் பொருந்துமில்லையா? (கோவா வெடி குண்டு)
கடந்த காதலர் தினத்தையொட்டி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இளைஞர்கள் சிலர் பிரமோத் முத்தலிக்ககை தர தரவென தரையில் இழுத்து முகத்தில் கரியை பூசினார்கள். இது போன்ற எதிர் நடவடிக்கையை சிவில் சமூகம் செய்தால் தான் இந்த காவி கிரிமினல்களை பின்வாங்க செய்ய முடியும். இந்து மக்கள் கட்சி தமிழகத்தின் ராம் சேனா என்பது சரியான ஒப்பீடு. மத நல்லிணக்கம் என்பது மக்களிடம் இயல்பாக இருக்கும் ஒன்று. இந்து மக்கள் கட்சி, ஆர்.எஸ்.எஸ் கும்பலை ஒழிக்காமல் இது சாத்தியமில்லை.கருணாநிதி கூட அடிக்கடி மத நல்லிணக்கத்தை வளர்ப்போம் என்று சொல்கிறார். உண்மையில் வளர்க்க வேண்டியது மதச்சார்ப்ன்மையே தவிர மத நல்லிணக்கம் அல்ல.
பாப்புலர் ஆகணும்மான என்ன செய்ய?
பாப்புலர் ஆனவனை தேடிப் பிடி!
பாரதமாதவுக்கு லூஸ்மோஷன்னு கொளுத்திப் போடு!
பேதிக்கு வைத்தியம்னு கலவரத்துல காட்டு!
அப்புறம் நீதான் டி.வியில மாஸ்டர்பீட்டு!
பிறகென்ன இனி பிக்ஸ் பண்ணு ரேட்டை!
ஆர்ட் எக்சிபிசனுக்கு இலட்சுத்தல ரேட்டு!
டாஸ்மார்க் அளப்பறைக்கு ஆயிரத்துல ரேட்டு!
அழகிய பெண் கவிதையின்னா இலவசம்ணு காட்டு!
இந்துத்வ மகிமையை பூலோகம் பரப்பு!
பாப்பானின் திறமைக்கு முத்தாலிக்தான் டாப்பு!
ஜட்டியில் ராமர் படத்தை போட்டு ஒரு மததினரை இழிவு படுத்த வேண்டாமே.??
யாரோ ஒருவன் செய்யும் தவறுக்கு ஒரு மதத்தின் கடவுளை இழிவு படுத்துவது அயோக்கியதனம் !!
மின்னது மின்னல்,
முதலில் இந்துக்கள் என்று எல்லோரையும் ஒன்று சேர்ப்பது யதார்த்தமாகவே தவறு. இந்துக்கள் ஒன்று என்றால் அக்ரகாரமும், ஊருக்கு வெளியே இருக்கும் சேரியும் என்னவாம்? அடுத்து ராமன் என்ற கடவுள் இந்தி பேசும் மாநிலங்களின் பார்ப்பன மேல்சாதியினர் பகுதிகளைத் தவிர இந்தியாவில் வேறு எங்கும் கடவுளாக ஏற்கப்படவில்லை. இந்தியப்பழங்குடிகளை வேட்டையாடிதின் தொல்கதையே இராமயணம். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல இந்தியாவின் பெரும்பான்மையினருக்கு இராமன் என்பவன் வில்லன். இந்த வில்லனை உங்கள் கடவுள் என்று மட்டும் சொல்லுங்கள். எங்களுக்கும், எங்கள் மக்களுக்கும் அவன் கடவுள் இல்லை.
எங்களுக்கும்,எங்கள் மக்களுக்கும் என்பது தமிழ் நாட்டில் உள்ள அனைவரையும் குறிக்காது சரியா?
ராமரை கடவுளாக வணங்கு மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு குடுங்கனு தான் சொல்கிறேன்…
இதே ஜட்டியில் முட்டாலிக் படம் இருந்தால் நானும் கொண்டாடுவேன்
ஸ்ரீராம சேனாவின் தலைப்பிலேயே ராமன் இருக்கிறான். ஏதோ தீடிரென்று இந்தப் பெயர் வைக்கவில்லை. ரொம்ப நாளா ஊடகங்களில் அடிபட்ட பெயர்தான். அப்போதெல்லாம் எந்த ‘இந்துவும்’ கொதித்தெழாத மர்மென்ன? இப்போது கூட நீங்கள் ராமன் சேனா பெயரை மாற்ற வேண்டுமென்று சொல்லவில்லை. கர்நாடகாவிலும் அப்படி வீரமுள்ள ‘இந்து’ எவரும் அப்படி கோரமாட்டார்கள். பாபர் மசூதி இடிப்பும், அதை ஒட்டி இந்துமதவெறியர் நடத்திய கலவரமும், பல நூறு முசுலீம் மக்கள் கொல்லப்பட்டதும் கூட இந்த ராமன் பெயரில்தான். இப்படி ரத்தக் கறை படிந்த ராமனை எந்த இந்துவும் இதுவரை ஆட்சேபிக்கவில்லை. இதெல்லாம் இருக்கும்போது பிங்க் ஜட்டி ராமன் எவ்வளவோ மேல்.
இந்தியாவின் பெரும்பான்மையினருக்கு இராமன் என்பவன் வில்லன்.
//
::)
உண்மை வினவு . இந்துக்கள் எல்லாம் ஒன்று என்றால் சில இடங்களில் தலித்துக்கள் கோவிலுக்குள் விடப்படுவதில்லையே அது ஏன்….சங்கரர்
கல்லூரியில் பார்பனர்களுக்கு தனி விடுதி பூணல் இல்லை என்றால் தனி விடுதி …இங்கே ராமர் படம் இருக்கிறது என்று விமர்சனம் செய்பவர்கள்
ஏன் அதை விமர்சனம் செய்வதில்லை
வினவு, உனக்கும் உங்கள் மக்களுக்கும் யார் கடவுள் என்று சொல்லுங்கள். நான் இழிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறன்.
மனிதனை மனிதனாக பார்க்கும் யாரும் கடவுள் தாண்ட , சில சமயம் நீ கூட இப்போ இழிவு பண்ணு டா
ஏன்பா வினவு , இந்த பார்ப்பனீய கூடம் ஒரு முட்டாள் கூட்டம். ஏன் ராமனை கும்பிடுகிறார்கள். அவன் தான் க்ஷத்ரியனாசே.
பாதி பிராமணனான ராவணன் தானே கும்பிடனும் .
அது என்ன “எங்களுக்கு எங்கள் மக்களுக்கும் அவன் கடவுள் இல்லை. ” அப்படின்னு யார் உங்களுக்கு சொன்னங்க. ஊர்ல ராமன் பெற சொல்லி தான் ஏமாத்த செய்ய முடியும், இராவணன் பெற சொல்லி எப்படி செய்யா முடியும்.
இதே உங்க கடவுளான கார்ல் மார்க்ஸ், லெனின் படாத ஜட்டில போட்டா என்ன பீலிங்க்ஸ் காட்டுவீங்க !!!! செத்த பிணத்த ஒன்னு புதைக்கணும் இல்ல எரிக்கணும். அத எதுக்கு பதபடுதறீங்க ??? இது enna நம்பிக்கை. எங்க இதுல எல்லாரும் சமம்னு காமெடி நடத்துறீங்களே . ரஷ்ய ல் எ செத்தவன் எல்லாத்துக்கும் இப்படி தான் பண்நீங்கலாக்கும் . ஊரை குத்தம் சொல்லறதுக்கு முன்ன கொஞ்சம் உங்க முதுகையும் பாருங்க.
//யாரோ ஒருவன் செய்யும் தவறுக்கு ஒரு மதத்தின் கடவுளை இழிவு படுத்துவது அயோக்கியதனம் !!//
மின்னுது மின்னல்,
உங்களது உணர்வுகள் புரிகின்றன உங்களிடம் சில விளக்கங்கள் தேவைப்படுகின்றன.
1)
பிஹாரில் பசு தோலை உரித்த ‘குற்ற’த்திற்காக 5 தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரின் தோலை உரித்துக் கொன்றனர் ஆர்எஸ்எஸ் கும்பல், அவர்களை இழிவுபடுத்துவதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
2)
கிராமங்களில் பொதுக் கிணற்றை பயன்படுத்துவது உள்ளிட்ட ‘குற்றங்க’ளுக்காக தலித் குடும்பங்கள் கொல்லப்படுவது போன்றவற்றை செய்பவர்களை இழிவுபடுத்துவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
3)
தனது மனைவியை வெறும் செக்ஸுக்கான சதைப் பிண்டமாக கருதி அதை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் ஒருவனை இழிவுபடுத்துவது பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?
4)
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண், ஒடுக்கும் சாதியைச் சேர்ந்த ஒருவனிடம் ஐ லவ் யூ சொன்னதற்காக அவளை குத்தி கிழித்து சித்திரவதை செய்பவனை இழிவுபடுத்துவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
5)
ஒருவன் பார்ப்பன சாதியில்லை என்பதாலேயே அவன் கோயிலில் பூசாரியாகக்கூடாது என்று விரட்டியடிப்பது, கொல்வது போன்றவற்றை செய்கின்ற ஒருவனை இழிவுபடுத்துவது பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?
6)
தனது சாதி நம்பிக்கைகளை நம்பாதவர்களை விரட்டியடிப்பது, கொல்வது போன்றவற்றை செய்தவர்களை இழிவுபடுத்துவது பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?
7)
சாதி சரியானது என்று சொல்பவனை இழிவுபடுத்துவ பற்றிஎன்ன நினைக்கிறீர்கள்?
எல்லாவற்றுக்கும் இல்லாவிடினும் முதல் 5க்கும் மட்டும் கூட விளக்கம் சொன்னால் போதும் மின்னுது மின்னல். நம்மிடையே இருக்கும் புரிதல் போதாமையை சரி செய்ய உதவும்
அன்புடன்,
பூச்சாண்டி
5.கருத்துகளுடன் ஒத்துபோகிறேன் தவறு செய்தவர்களை சாட்டையடி அடிப்பதில் தப்பு இல்லை
அதே சமயம் பூச்சாண்டி திருடிவிட்டால் ஒட்டுமொத்த ம.க.இ.க வையும் கூண்டில் ஏற்றுவது சரியில்லையே?
Rama never felt guilty when he tortured Seeta. But he only bereaved for his brother’s demise and committed suicide. Did he really love his wife? Did he really put faith on his half-in-life, Seeta?
When he was roaming around forest after Seeta was missing, He bereaved with lustful memories of Seeta. He worried about he is missing the pleasures of Seeta and he worried about Seeta changes his love towards Ravana. He even says “if he were in Ayodya he may not worry about Seeta is missing, because there are alternatives for pleasure available.” It is only the pleasure of flesh that defines Seeta to him. That is why didn’t bereave for her. Instead he bereaved for his brother, where true love bond them. Is this a right attitude to follow in today’s society?
Laxmanan cut Soorpanagai’s (an Aboriginal Girl) nose and breast because a Suthra girl proposed her love to a Kshatriya Man. If we have to follow Ramayana customs today then we have to give the same punishment to one Woman. Her name is Umabharathi, who is a Suthra girl proposed Brahman Man Govindacharya. (http://www.tribuneindia.com/2000/20001010/nation.htm#10)
மகஇக பெயரைப் பயன்படுத்தி திருடும்போது மகஇக வேடிக்கை பார்த்தால் நீங்க சொல்வது போன்று கூண்டில் ஏற்றலாம். ஆனால்……..
இந்த ஐந்து(மற்றும் 7 தவறுகளையும்) தவறுகளையும் செய்துள்ள அந்த இழிவுபடுத்த வேண்டியவன் வேறுயாருமல்ல சாட்சாத் ராமனேதான்.(ஆதாரம் வால்மீகி ராமாயணம் ஒரிஜினல் வெர்ஷன்)
மேதகு ராமன் செய்த தவறுகளுக்கு அவனை எவ்வாறு இழிவுபடுத்தலாம் என்றும் மின்னுது மின்னல் ஆலோசனை சொல்லலாம்:
Rama’s achievements (Crimes) include:
http://terrorinfocus.blogspot.com/2007/10/rama-rama.html
· Suspected his Wife Seedha and insulted her in front of everybody with ugliest words we could find in dictionaries. He asked her to prove her chastity. (It is the first SATI case). He even suspected Lakshman, Bharadhan, and Hanuman etc.
· Killed Sampookan only because he is a Suthra, who tried to worship god directly, which is against Brahmanism.
· Killed many innocents (tribal people) only because they are against Varnasrama dharma and only because they are against their land being used for Brahmanic rituals.
· Lakshman killed Dadagai’s son. Raman solace Lakshman that he killed a Suthra so no need to worry.
· Before building the bridge he destroyed a Village at the request of Sea king, because untouchable (Panjamas) people of the village have used a common Well in that village.
· Rama himself and by other characters been projected as a Diehard protector of Varnasrama Dharma. The whole text of Valmiki Ramayana is a proof for this. And Ramayana is the literary symbol of re-establishment of the caste society. All other personal characters of him are common to any praised historic beings.
· Killed Vali and Dadagai in a most cowardly manner.
· Lakshman cruelly cut Soorpanagai’s nose and breast when she
expressed her love. It is definitely inhuman act.
· He insulted and chafed old woman kooni. This is surely not a Noble character to embrace.
We cannot consider one as a God only because he is good for his friends, brothers and he is loyal to his father. And when he is anti people, Anti women and pro caste, Pro Sati society, we should actually cast him away from our Society. Rama actually deserves this and that is one of the ways to redeem our old pride of casteless society. He is not a model to be followed.
ஒரு இந்து தீவிரவாதி தப்பு செய்து விட்டால்
இந்துக்கள் அதற்கு ஆதரவோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லையெண்றால்
ஒட்டுமொத்த இந்துக்களும் அதற்கு பொறுப்பா??
இந்து என்று குறிப்பிட்டது உங்களை அல்ல 🙂
பூச்சாண்டி பின்றீங்க
மின்னுது மின்னல் ,
//ஒரு இந்து தீவிரவாதி தப்பு செய்து விட்டால்
இந்துக்கள் அதற்கு ஆதரவோ எதிர்ப்பு
தெரிவிக்கவில்லையெண்றால்
ஒட்டுமொத்த இந்துக்களும் அதற்கு பொறுப்பா??//
இதையே தான் மற்ற மதத்தினரும் கேட்கிறார்கள்.
இப்படி மற்ற மதத்தினரை திட்டமிட்டு அவதூறு
பரப்பினதில் உம்மா கூட்டம் தானேயா
மன்னனிவகித்தது.வகித்துக்கொண்டு இருக்கிறது.
இங்க பூச்சாண்டி ரொம்ப பூச்சாண்டி காட்றார் .
பெரியார் ஸ்கூல் ல ரொம்ப படிசுட்டார் போல இருக்கு.
என்ன படிச்சதெல்லாம் தப்பு நு அவருக்கு தெரியல .
சூர்பனகை “அபோரிகினல் கேர்ள் ” ஆம் . ரொம்ப சுத்தம்.
இல்லாத கதைய நீங்களா கிளப்பி விடறீங்களே . கேக்கறவன் எவனுக்கும் ஒன்னும் தெரியாதுன்னு நீங்களே முடிவு பண்ணிகிறதா ??
பாதி பாப்பாத்தி அவ தெரியுமா ?? மீதியும் அவங்க பங்காளி சஇடு தான். apadi தான் கதை எழுதி இருக்கு.
ஆஅம எனக்கு ஒன்னு புரியவே இல்ல. பூணுல் போட்ட பாப்பான் நான் தாண்டா பெரியவன் ன்னு சொன்னா இந்த க்ஷத்ரியன் வைசியன் எல்லாம் எப்படி நம்பினாங்க ?? அவனுங்க லும் ஏன் பூணுல் போடறானுங்க ??
உங்களுக்கு தான் இந்த மந்திரம் வசியம் ல எல்லாம் நம்பிக்கை இருக்காதுன்னு நினைக்கிறன், வேற என்னவா இருக்கும் ?? ஓஹோ அவனுங்க எல்லாம் முட்டாள் அப்படி தானே ?? அத கார்ல் மார்க்ஸ் தானே கண்டு பிடுச்சு சொன்னார் ?? ரைட் ங்கண்ணா புரிஞ்சுருச்சு
“ராம சென ” பேர் வச்சு ஊற எமதறாங்க
அந்த ” திராவிடர் ” இந்த “திராவிடர் “நு கூட தான் ஊற எமாதரங்க
எதாவது திராவிடன் படத்த ஜட்டில போடறது ??
கம்முநிசம் வர்க்க போராட்டம் நு உலகம் போற கலகம் பண்ணறீங்களே ? உங்களுக்கு காசு குடுக்கற சீனா உங்க பரம எதிரி அமெரிக்காவோட என்ன பண்ணிக்கிட்டு இருக்கு ?? என்ன உறவாடி கேடுகரீங்கள ?? நல்ல பிளான் தான். என்ன இப்போ நீங்க உறவாடற கூட்டம் எல்லாம் ஜாக்கிரதைய இருக்கணும்.
//பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//
உள்குத்து ‘லீலை’ ‘மணி்’ மணியாய் அ’மேக’மாய் இருக்கிறது…
அந்த ஏக இறைவனின் அமைதி நம்மீது நிலவட்டுமாக..
தயவு செய்து வினவு இணையதளம் இந்த கட்டுரைக்கு பயன்படுத்தியிருக்கின்ற இராமர் படத்தினை நீக்கி விட வேண்டும். முத்தாலிக் மற்றும் இந்துத்துவ வெறியர்கள் செய்யும் அயோக்கிய வேலைக்கு கடவுளாக (பலராலோ அல்லது சிலராலோ) நினைத்து வணங்கப்படும் இராமரின் படத்தை கொச்சைப்படுத்துவது சரியல்ல.
உங்களின் கம்யூனிச ஆசான்கள் காரல் மார்க்ஸ், ஸ்டாலின் மற்றும் மாசேதுங் படத்தை இவ்வாறு கொச்சைப்படுத்தினால் நீங்கள் சும்மா விடுவீர்களா? கவிதை எழுதியதற்கே லீனாவை அசிங்கப்படுத்திய நீங்கள்
கடவுள் என்று மக்களால் உருவகப்படுத்தபட்டு வணங்கப்படுகின்ற இராமரை கொச்சைபடுத்துவது எந்த வகையில் நியாயம்? இராமரை பற்றி மாற்றுக் கருத்து இருந்தால் அதை ஆரோக்கியமான வகையில் வெளிப்படுத்த வேண்டுமேயொழிய இத்தகைய அருவருப்பூட்டும் படங்களை போட்டு அடுத்தவர்களின் மனங்களை காயப்படுத்துதல் சரியான வழியாக இருக்காது.
ஆர்.எஸ்.எஸ் மற்றும் அவற்றின் விஷக் கிளைகளாக நாடு முழுவதும் பரவியுள்ள பல்வேறு இயக்கங்களாக இருக்கின்ற வி.எச்.பி, பஜ்ரங் தள், சனாதன் சேனா, சிறிராம் சேனா, இந்து முன்னணி , இந்து மக்கள் கட்சி போன்ற இந்துத்துவ இயக்கங்களின் அடிப்படை சிறுபான்மையினர்கள் மீதான வெறுப்பும் உயர் சாதிய அடுக்குமுறையை தக்க வைப்பதும் தான். எனவே அவர்கள் இந்த நாட்டை விட்டு துடைக்கப்பட வேண்டிய அழுக்குகள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
சொந்த இந்து மக்களையே குண்டுகள் வைத்து சாகடிக்க தயங்காதவர்கள் இந்த கருங்காலி காவிக் கும்பல்கள். குஜராத்தில் கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியை கொளுத்தியதே இந்த இந்துத்துவ கருங்காலிக் கும்பல்கள் தான். இதை தெஹல்கா வீடியோ அம்பலப்படுத்தியதை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. தென்காசியில் தங்கள் அலுவலகத்தில் தாங்களே குண்டுகள் வைத்துக் கொள்ளக் கூட தயங்காத இவர்களை இந்து மக்கள் முதலில் புறக்கணிக்க வேண்டும். சட்டம் இவர்களை தண்டிக்க வேண்டும். ஆட்சியாளர்கள் சட்டத்தை நிலைநிருத்துவார்களா?
ஹாஹாஹா!
நரியின் சாயம் வெளுத்து போச்சா!?
காசுக்கு பீ திங்கிர நாய்களெல்லாம் ஆன்மிகம்/கலாச்சாரம் பேசுதா!?
இன்றைக்கு பெரியார் பெயரை வைத்து இன்று பல அரசியல் கும்பல் கொள்ளை அடிக்கிறது என்பதற்காக பெரியார் படத்தை ஜட்டியில் போடலாமா? முதலில் சக மனிதனை மதிக்க பழகுங்கள். பார்பானர்கள் மட்டுமே இந்துக்கள் அல்ல. கலாசாரத்தை காசுக்கு விட்டுவிடாமல் இன்னும் என்னை போல பல பிற்படுத்தப்பட்டவர்களும் இந்து மதத்தில்தான் உள்ளோம். இந்து மதம் பார்ப்பானால் உருவாக்கப்பட்டது எனில் பிற மதங்களும் பிற நாட்டிலிருந்துதான் வந்தது. எனவே 1000 வருடத்திற்கு முன்னாள் போய் வாழ்வதை விட இப்ப நாட்டுல இருக்குற மக்களை மதிச்சி வாழ கத்துக்குங்க.
யோவ் ஏன்யா எல்லாரும் டென்சன் ஆவுரீங்க.. சங்கரன் கோவணத்த காயவைக்க குச்சியில சுத்தி அத புனிதமாக்குன மாதிரி.. கிடைச்ச பிங்கு ஜட்டியில ராமர் படத்த பிரிண்டு பண்ணி ஸ்ரீராம் சேனாவோட ‘ஆண்’மீகத்துக்கு பாதுகாப்பு குடுத்திருக்காருய்யா முத்தாலிக்கு… வாங்குற 60 லட்சரூபாயில எல்லாருக்கும் பேண்டா வாங்கி குடுக்கமுடியும்???? விவரம் புரியாத ஆளா இருக்கீங்களே….
இன்னும் புரியுற மாதிரி சொல்லனுமின்னா… பொந்து மதத்துல அழிக்குற கடவுள் சிவன், சிவனோட குறி லிங்கம் (என்னா மேட்சிங்கு…) லிங்கமுன்னா என்னான்னு நான் சொல்லி தெரிய வேண்டீதில்ல… எனக்கு தெரிஞ்ச வரைக்கும் லிங்கத்துக்கு பாதுகாப்பு ஜட்டிதான்… பொந்து மத்ததோட பாதுகாக்குற கடவுள் மஹாவிஷ்னு alais ராமன், படத்துல இருக்க இருக்கேவேண்டிய எடத்துல ‘பாதுகாப்பா’ இருக்காரு… வினவு ஜே கிருஷ்ணமூர்த்தியோட சூக்குமமா ஆன்மீகத்த புட்டு புட்டு வச்சிட்டீங்களே????? அட்டா அடட்டடா
அடடடா, அடடடட.. கலக்குறேள் கேள்விகுறி சாரே .. ரொம்ப நல்ல மாட்சிங் பண்ணறே சாரே. உன்ன மாதிரி ஆளுங்கதாம்லே இந்த வினவு கூட்டத்துக்கு லாய்க்கு. என்னா ஒரு thinnkingu . பொந்து கடவுளுக்கு பொறந்த அந்த கோவண கடவுள விட்டுடீங்களே. ஏன் அந்த கடவுள் தமிழ் கடவுளுனால்யா?
அய்யா கேள்விக்குறி , லிங்க வியாக்யானம் சூப்பர்.
உங்க புனைபெயர்ல கூட அது ஓடிகிட்டு இருக்கே ?? என்ன தமிழ்ல இருக்கு…
காமாலை கண்டவனுக்கு கண்ண்டதேல்லாம் மஞ்சள்லம் .
அப்படியே அது ஆண்குறிய குறிச்சாலும், உங்களக்கு அதில என்ன பிரச்சனை ?? அது என்ன உடல் உறுப்பிலேயே மட்டமானதா ???
உங்க வர்ணனைல இருக்க வக்கிரம் உங்களுக்கே தெரியலையோ ??
“லிங்கமுன்னா என்னான்னு நான் சொல்லி தெரிய வேண்டீதில்ல”
சந்து போனதுன்னு பேசிட்டு என்ன decency வேண்டிகிடகுது ???
அது சேரி உன்ன்களுக்கு இந்த அர்த்த யார் சொன்னது ?? பெரியாரா ??
இல்ல சமஸ்க்ரிதம் தெரியுமோ ?? ஆயிரம் அர்த்தம் இருந்தாலும் உங்களுக்கு இது தான் வசதியா இருக்கு , என்ன செய்ய ??
//பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.//
தமிழ்நாட்டு இப்ப என்ன நடக்குதுன்னு ஓரளவு புரியுது ..
இராமனுக்கும் மகஇகவுக்கும் 10 பொறுத்தம்! சீறங்கத்துலேயே இராமன் படத்த கொளுத்துன ஆளுங்க அவங்க… என்னமோ ஜட்டியில இராமன் படத்த போட்டதுக்கு இப்படி பீல்பண்ணுறீங்களே.. இராமனை ஜட்டியில்லாம போடாம விட்டாங்களே அந்தமட்டுமாவது சந்தோசப்படுங்கடே!
//பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். //
தமிழ்நாட்டுல இப்ப என்ன நடக்குதுன்னு ஓரளவு புரியுது ..
.
ஜட்டி காப்பாளர்களுக்கு….
சின்னப் புள்ளைங்க ஜட்டியில் மிக்கி மெளஸ் , டிஸ்னி ப்ரின்சஸ், சூப்பர்மேன் என்று கணக்கு வழக்கு இல்லாமல் இருக்கும்.
தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் தெய்வம் ஜட்டியில் இருக்கக்கூடாதா?
கல்யாண நேரத்தில் சொல்லப்படும் மந்திரங்கள் யோனிக்கு காவலாக சில தெய்வங்களே இருப்பதாகச் சொல்கிறது.
“ஆண் பெண் குறியிரண்டும் அயில்வேல் காக்க…பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க” என்று உடல் உறுப்புகளைக் வேல் காக்கிறது என்று கந்தர்சஸ்டி பாட்டு சொல்கிறது.
ஆண்டாள் உருகி உருகி உடல் உறுப்புகள் எப்படி நோகின்றன என்று பாடுகிறார்.
இவை எல்லாம் பக்தி.
தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் தெய்வம் ஜட்டியில் இருக்குமாறு வினவு படம் போட்டால் தெய்வகுத்தமாம். என்ன கொடுமை?
**
கம்யுனிசச் சாமி கும்பிடும் வினவிற்கு..
1. இதே போல் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த சிலர் செய்யும் பிரச்சனைக்கு ஜட்டியை விடுங்கள்…தூதரை அல்லது கடவுளை விடுங்கள்..சும்மா ஒரு கட்டிடத்தை படமாகப் இப்படிப்போட்டால் உங்களின் கதி?
2. கம்யூனிசக் கடவுள்களை கவிதையில் யோனி குறியுடன் தொடர்பு படுத்திவிட்டார் என்று சொல்லி சாமியாடிய நீங்கள்,
உங்கள் கம்யூனிசச் சாமிகளை ஜட்டியில் படமாகப் போட்டால் என்ன செய்வீர்கள்?
” உன் ஜட்டியில் கம்யூனிசச் சாமி படம் உள்ளதா?” என்று கூட்டமாக வந்து கேள்வி கேட்பீர்களா? :-(((((((
.
.
உங்களுக்கு ஒரு கம்யூனிசத் தலைவர்களின் மீது பக்தி. அவர்களை யோனி குறியிடன் யாராவது கவிதை சொன்னால் கடுப்பு வருகிறது.
.
இந்த ஜட்டியில் உள்ள படத்தில் உள்ள உருவங்களின் மீது சிலருக்கு பக்தி. அவர்களுக்கு கோவம் வருகிறது.
same blood
.
ராமனும் மார்க்சும் ஒன்னு….. அடடட்டா கல்வெட்டுக்கு என்னா அறிவு என்னா அறிவு… ஒன்னு பண்ணேன்.. உன் பொன் மொழியை கல்வெட்டுல பொரிச்சு வச்சுட்டு அது பக்கத்திலேயே நீயும் உக்காந்துக்க..வருங்கால சந்ததியெல்லாம் அத பாத்து படிச்சு விவரமாயிக்குவாங்க…
வந்துட்டானுங்க அறிவாளி பக்கெட்டுன்னு.. ஏன்யா, 2000 முசுலீம கொண்னு போட்டுட்டு மோடி அங்க ஜமாத்தா ஆட்சிக்கு இன்னொரு தடவ வற்றான் அதுக்கே இங்க எவனாலயும் ஒன்னும் புடுங்க முடியல.. படம் போட்டா என்னாத்த கயட்ட முடியும்.. மொதல்ல இந்த ஆர்எஸ்எஸ் வாந்தி எடுக்கறத நிறுத்துய்யா
உலகத்துலேயே கம்மூனிச தலைவருங்களுக்கு இணையா யாருமேல அவதூறு வந்திருக்குன்னு கொஞ்சம் சொல்லேன் பாப்போம்.. லீனாவுக்காக பலூன் ஊதறத்துக்கு முன்னால கொஞ்சம் என்ன நடந்திச்சுன்னு முழுசா விவரம் தெரிஞ்சுக்க… அறைகுறையா இங்க வந்து காத்த பிரிக்க வேணாம்…
கேள்விக்குறி,
அவ்வளவுதானா? இன்னும் திட்டலாம். பக்தர்களுக்கு கோவம்வரும்படி நான் நடந்து இருந்தால் மன்னித்து விடுங்கள். :-((
**
கம்யூனிசம் உங்களைவிட நான் அறிவேன். நான் ஆர் எஸ் எஸ் எஸா என்னவென்று அசுரனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
மக்களுக்கு உழைக்க எனக்கு எந்த உருவங்களும் தேவை இல்லை.
அது போல இறக்குமதிக் கொள்கைகள் எனக்குத் தேவையும் இல்லை.
எந்த உருவங்களின் பக்தனும் அல்ல.
.
புனிதத்தை காயப்படுத்தினால் பக்தனுக்கு கோவம் வரும். உங்களுக்கு கேள்வி கேட்டாலே இந்த அளவு கோவம் வருகிறது.
.
.
“மக்களுக்கு உழைக்க எனக்கு எந்த உருவங்களும் தேவை இல்லை”
மக்களுக்காக உழைப்பவனுக்கு ஒரு க்ண்ணோட்டம் வேண்டும். மக்களுக்காக போராடும் போராளிகளின் போராட்டங்களேல்லாம் ஆண்குறிகளின் சதிகள் என்று இழிவுபடுத்தப்படுவதை சகித்துக்கொள்ளமுடியாது.
உருவங்களுக்காகத் தான் வினவு சாமியடியது என்றால் வினவுக்கு 24 மணிநேரமும் சாமியாடுவதைத் தவிர வேறு வேலையே இருந்திருக்காது.
//நான் ஆர் எஸ் எஸ் எஸா என்னவென்று அசுரனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.//
இதைச் சொல்வதன் மூலம் தான் யாரென்று உணர்த்த விரும்பும் கல்வெட்டு கீழே உள்ளதையும் சொல்கிறார்.
//எனக்கு எந்த உருவங்களும் தேவை இல்லை.
அது போல இறக்குமதிக் கொள்கைகள் எனக்குத் தேவையும் இல்லை.
எந்த உருவங்களின் பக்தனும் அல்ல. //
அப்போ ஆர் எஸ் எஸ் போன்ற உருவங்களுக்கு எதிரியா நீங்கள்? ஆர் எஸ் எஸ் இல்லையெனில் நீங்கள் யார்? NGOவா?
// கம்யுனிசச் சாமி கும்பிடும் வினவிற்கு..
1. இதே போல் இஸ்லாம் மதத்தைச் சார்ந்த சிலர் செய்யும் பிரச்சனைக்கு ஜட்டியை விடுங்கள்…தூதரை அல்லது கடவுளை விடுங்கள்..சும்மா ஒரு கட்டிடத்தை படமாகப் இப்படிப்போட்டால் உங்களின் கதி?
2. கம்யூனிசக் கடவுள்களை கவிதையில் யோனி குறியுடன் தொடர்பு படுத்திவிட்டார் என்று சொல்லி சாமியாடிய நீங்கள்,
உங்கள் கம்யூனிசச் சாமிகளை ஜட்டியில் படமாகப் போட்டால் என்ன செய்வீர்கள்?
” உன் ஜட்டியில் கம்யூனிசச் சாமி படம் உள்ளதா?” என்று கூட்டமாக வந்து கேள்வி கேட்பீர்களா? 🙁 ((((((//
கல்வெட்டுவின் வாதங்கள் அதி புத்திசாலித்தனமாக இருப்பதால் என்னால் பேசவே இயலவில்லை.
இருந்தாலும் என்னோட மரமண்டைக்கு தோணியதை இங்க சொல்லிக்க விரும்புகிறேன்.
ராமன் என்கிற சாதி வெறித் தலைவனின் சாதிவெறி நடவடிக்கைகளை மின்னுது மின்னலுக்கு பட்டியலிட்டுள்ளார் தோழர் பூச்சாண்டி..
இதே போல ஏசு, நபி போன்றோர் மற்றும் கல்வெட்டுவின் வெறுப்புக்கு இரையான கம்யூனிச கடவுளர்கள் பற்றி கல்வெட்டு பட்டியலிட வேண்டும். இந்த அடிப்படையில்தான் ராமனை இழிவுபடுத்துகிறோம். இதை மின்னுது மின்னலும் ஒத்துக் கொண்டுள்ளார்.
இதே போல ஏசு, நபிகள் பற்றி எதுவும் உள்ளதா? அவர்கள் அவர்களது காலத்தில் சமூக சீர்த்திருத்தவாதிகளாகவே இருந்துள்ளனர்,.
அதே போல கல்வெட்டுவின் வெறுப்புக்கு ஆளான கம்யூனிச கடவுளர்களுக்கு இதே போல பட்டியல் போட வருமா?
கல்வெட்டு போன்ற மானமுள்ள, சூடு சொரனையுள்ள நல்லவர் தமது பின்னூட்டத்தில் வழங்கிய தீர்ப்புக்கு ஆதாரம் வழங்குவாரா?
அல்லது என்னோட வேலை எருமை மாடு மாதிரி சாணியடித்துவிட்டு கடந்து சென்று கொண்டே இருப்பதுதான் என்று ஓடிப் போவாரா?
எனக்கென்னவோ இரண்டாவதைத்தான் அவர் இதுவரை செய்துள்ளதாக ஞாபகம்
அசுரன்
//கம்யூனிசம் உங்களைவிட நான் அறிவேன். நான் ஆர் எஸ் எஸ் எஸா என்னவென்று அசுரனிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.//
அசுரன் தான் மேலே கேள்வி கேட்டுள்ளேன் பதில் சொல்லுங்கள். என்ன? உங்களது நடையை அப்படியே அடியொற்றி நானும் எதிர்வினை புரிந்துள்ளேன். நீங்கதான் ‘கருத்துரிமை’ காவ’லா’ளி ஆயிற்றே. பொறுமையாக பதில் சொல்லுங்கள்.
//தலைவரின் உருவத்தின் புனிதத்தைக் காக்க முயல்வீர்களா?
அல்லது
நம்பும் கொள்கையைச் செயல்படுத்த முயல்வீர்களா?
“புனிதம் காக்க சொம்பெடுப்பேன்” என்றால் இராமனைக் கும்பிடும் கூட்டத்திற்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை இந்த விசயத்தில். //
ஏதோ கம்யூனிச தலைவர்களை இதுவரை யாரும் கேள்வியே கேட்க்காதது மாதிரி பேசுகிறார் கல்வெட்டு. இதே வினவு தளத்தில் கூட பலர் விமர்சித்திதுள்ளனர். அதற்கும் பதில்தான் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு விமர்சனம் செய்தவர்களில் பேர்வாதி பேர் கல்வெட்டு மாதிரி முன்முடிவுடன் திமிர்பிடித்த சொல்லாடல்களை பயன்படுத்த வில்லை.
அடிப்படையில் பணிவற்ற ஒருவனால் எந்த மாற்று கருத்தையும் வலுவுடன் விவாதிக்க முடியாது என்பதற்கு கல்வெட்டு ஒரு உதாரBஅம்
அசுரன்.
1. கம்யூனிசம் ஏன் தோன்றியது?
2. அதன் தேவை என்ன அது?
3. எதை எதிர்த்தது அது?
4. அதை எதிர்க்க வேண்டிய தேவை என்ன?
என்று ..உங்கள் கையில் உள்ள இறக்குமதி சித்தாங்களின் மொழி பெயர்ப்புகளைப் படியுங்கள்.
சித்தாங்களும் இசங்களும் ஒருவரின் வழி வந்தது என்பற்காக அவரை ஜன்னி வந்து தொழுதே தீருவேன் என்றால் தொழுது கொள்ளுங்கள்.
***
பொண்டாட்டியை விரட்டிய இராமனை நான் கம்யூனிசத் தலைவர்களோடு ஒப்பிடுவது இரண்டு பேரின் பேரின் கொள்கைக்காக அல்ல.
இரண்டையும் சாமியாகப் பார்க்கும் கருத்துக்காக. மக்களிடம் செல்ல வேண்டியது கருத்துக்களே அல்ல உருவங்கள் அல்ல.
உங்களுக்கான கேள்வி
தலைவரின் உருவத்தின் புனிதத்தைக் காக்க முயல்வீர்களா?
அல்லது
நம்பும் கொள்கையைச் செயல்படுத்த முயல்வீர்களா?
“புனிதம் காக்க சொம்பெடுப்பேன்” என்றால் இராமனைக் கும்பிடும் கூட்டத்திற்கும் உங்களுக்கும் வேறுபாடு இல்லை இந்த விசயத்தில்.
===
Vi> // ..அதி புத்திசாலி
.. என்னோட வேலை எருமை மாடு மாதிரி சாணியடித்துவிட்டு கடந்து சென்று கொண்டே இருப்பதுதான் என்று ஓடிப் போவாரா?
.. எனக்கென்னவோ இரண்டாவதைத்தான் அவர் இதுவரை செய்துள்ளதாக ஞாபகம்
நன்றி அசுரன்.
பக்தப் பதர்கள் இரசிகக் கண்மணிகளுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
பக்தர் கூட்டங்களில் எந்த வித்தியாசமும் இல்லை.
நீங்கள் ஒரு இசத்துக்கு பக்தராக இருக்கும் வரை நான் என்ன சொன்னாலும்..உங்கள் முன் முடிவு இப்படித்தான் இருக்கும்.
நன்றி அசுரன்.
நல்ல உரையாடல்.
.
கல்வெட்டு எனது கேள்விகளுக்கு பதில் சொல்லும் நேர்மைட்யில்லையே உங்களிடம்
//நீங்கள் ஒரு இசத்துக்கு பக்தராக இருக்கும் வரை நான் என்ன சொன்னாலும்..உங்கள் முன் முடிவு இப்படித்தான் இருக்கும். //
கம்யுனிச கடவுளை வழிபடுபவர்கள் என்று தோழர்களை முன்முடிவுட ன் அறிவிக்கும் அராஜகவாதி கல்வெட்டு நம்மை முன்முடிவுடன் அனுகுபவர்கள் என்று விமர்சிப்பது நகைச்சுவையே அன்றி வேறல்ல.
கல்வெட்டுவிடம் குறைந்த பட்ச நேர்மையிருந்தால் கேட்டுள்ல கேள்விகளுக்குப் பதில் சொல்லட்டும்
முத்தாளிக்கை விமர்சிக்க இப்படி ஒரு படம் தேவையில்லை. தெகல்கா உண்மையை சொல்ல அப்படி ஒரு படத்தை போடவில்லை. தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்க வேண்டாம். அதை எடுத்து விடுங்கள்.
//இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன//
இது ஊடகங்களின் மேலோட்டமான போக்கை காட்டுகிறது
தக்க சமயத்தில் அருமையான பதிவு. சுகதேவ் குறிப்பிட்டிருப்பது போல “கடந்த காதலர் தினத்தையொட்டி நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இளைஞர்கள் சிலர் பிரமோத் முத்தலிக்ககை தர தரவென தரையில் இழுத்து முகத்தில் கரியை பூசினார்கள்.” அந்த அற்புதக் காட்சியை கண்ட பொழுது எழும்பிய உவகை, தற்பொழுதும் ஏற்படுகிறது. ஏற்கெனவே கரி பூசப்பட்ட முகத்தில் தற்பொழுது ஓங்கியறைந்ததன் மூலம், தெஹல்கா ஏடு தனது கடுமையான, போராட்டமிக்க பத்திரிக்கைப் பயணத்தில் மீண்டும் ஒரு மைல்கல்லை நிறுவியிருக்கிறது. நாம் அனைவரும் அவசியம் தெஹல்காவுக்கு வாழ்த்துக் கடிதம் எழுத வேண்டும் என வேண்டுகிறேன். பல் பிடுங்கப்பட்ட்ட முத்தாலிக் பாம்பிற்கும் கூட அந்த வாழ்த்துக் கடிதங்களை அனுப்பி வைக்கலாம். என்ன இருந்தாலும், நோயாளிகளை ஒதுக்கி வைக்கக் கூடாதல்லவா?
முத்தாலிக்கின் திருமுகத்தை சாரமாக தொகுத்து அம்பலப்படுத்தி, அதே வேளையில், கேமராவில் சிக்காத தமிழகத்து ‘ஓவியர்களின்’ கலைத் தாகத்தையும், தமிழக இந்து மக்கள் கட்சினருக்கும் அத்தகைய கலகக்கார ‘ஓவியர்களுக்கும்’ இருக்கக் கூடிய கொடுக்கல், வாங்கலையும் வெளிச்சமிட்டு காட்டி, ஒரு சாட்டையடி கட்டுரையை தக்க சமயத்தில் எழுதிய வினவுக்கு வாழ்த்துக்கள், நன்றி.
இந்து makkal கட்சி yenbadhu tamizhnaatil paarppanargalaal நடத்தப்படும் வியாபார niruvanamalla , arjun sambath&kannan aakiyor paarppanarum alla tamizhargalaaga இந்து iyakkathil இருந்துகொண்டு eezha பிரச்சனையில் உண்மையாக seyalpadum unmai tamizhina unarvaalargal என்பதை குறுக்குபுத்தி ullavargal thavira unmai தமிழர்கள் arivaargal!leena மணிமேகலையை ,அவளது seyalai niyaayapaduththum yevarum unmaiyaana தமிழர்கள் அல்ல!
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுமையான அநிதிகள் இலைக்கப்ப்படும்போதல்லாம் ‘நாமெல்லாம் இந்து ‘என்று பரப்புரை மேற்கொள்ளும் அத்வானி முதல் இங்கிருக்கும் ராமகோபாலன் வரை
தன உடம்பில் உள்ள அத்தனை ஒட்டைகளைய்ம் பொத்திகொள்கிரர்கள்
இந்துமதம், இந்து கடவுள் என்று சர்சை வந்து விட்டால் மனம் புண்பட்டு விட்டது என்று கொதிக்கிறார்கள். .இந்து மதம் , இந்துமதத்தை தாங்கி நிற்கும் கடவுள்கள் .. என்று அணைத்து குப்பைககலையம் அசிங்கபடுத்தி அதற்கு உன்டான பிம்பத்தை அடித்து நொறுக்குவதுதான் நமக்கு முன்னிற்கும் முதன்மையான வேலை.அந்த பணிஇல் நிற்கும் வினவுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.
i
குட்டி. இத விட வேடிக்கையான ஒரு விஷயம் எங்க ஊருல நடந்துச்சு ப.ஜ.க இளைஞர் அணியில் இருக்கும் ஆதிதிராவிடரான ஒரு பேச்சாளர் வாஜ்பாய் வழும் அம்பேத்கர் அப்புடின்னு பேசினார் என்னத்த சொல்ல