privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபூவரசியின் கொலையும், ‘தற்கொலையும்’ !!

பூவரசியின் கொலையும், ‘தற்கொலையும்’ !!

-

நான்கு வயது குழந்தையை கொலை செய்த பூவரசியின் வாழ்க்கையில் இருக்கும் சகல அம்சங்களும் ஊடகங்களால் பரபரப்பாக விற்கப்பட்டு விட்டன. பூவரசி வந்தடைந்த முடிவிற்கு அவர் மட்டுமா, வேறு யாரும், எதுவும் காரணமாயிருக்க முடியுமா என்ற ஆய்வின் தேவையை, கொலை தோற்றுவித்திருக்கும் பெரும் அனுதாபம் ஒரே அடியில் தூக்கிப் போட்டுவிட்டது. என்ன சொன்னாலும் யாருக்கும் ஆத்திரத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தும் சிறுவன் ஆதித்யாவின் கொலையை ஒரு இளம்பெண் இரக்கமற்று எதனால் செய்திருப்பார்?

கள்ளக்காதல் என்று ஒரே வார்த்தையில் ஊடகங்கள் முடித்துக் கொண்டன. அதற்கு தோதாக வெளியிடப்பட்ட செய்திகளை கண்ணும் காதும் வைத்து மக்கள் அலசுகிறார்கள். சித்தியின் கொடுமை, கள்ளக்காதலியின் ஆத்திரம், இதற்கு முன்னரே வேறு ஒருவனைக் காதலித்திருக்கிறாள், காமாந்தகி, பழிவாங்கினாள் என்று பல வகைகளில் பூவரசி பரிசீலிக்கப்படுகிறார்.

வாழ்க்கை முழுவதும் வெறுப்புடன் தொடரப் போகும் அந்த குற்ற உணர்வின் அச்சுறுத்தலிலேயே பூவரசி இனி காலம் முழுவதும் பிதற்றப் போகிறார். தண்டனைகளோ, சிறைவாசமோ இந்த உளவியல் தண்டனையிலிருந்து விடுதலையை அளித்து விடாது. ஆத்திரத்தின் பின்விளைவுகள் இத்தனை அகோரமாய் இருக்குமென்று அவருக்கு போலீசில் பிடிபட்டதற்கு முன்னரே தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதனால்தான் நாகப்பட்டினத்தில் பெட்டியை வைத்துவிட்டு சென்னை தேவாலயத்தில் பாவமன்னிப்பு கேட்பதற்கு சென்றிருக்கிறார். ஆனால் அத்தனை சுலபத்தில் மன்னிக்கக் கூடிய பாவமா அது?

ஆதித்யாவின் தாய் ஆனந்தலட்சுமிக்கு குழந்தையை இத்தகைய கொடூரமாக இழந்த சோகம் ஒருபுறமிருக்க,  மணவாழ்க்கைக்கு வெளியே கணவன் வைத்திருந்த காதல்தான் தனது பிள்ளையை மட்டுமல்ல தனது இல்லறத்தையும் சேர்த்து பிடுங்கியிருக்கும் என்ற கசப்பை அத்தனை சுலபத்தில் மறந்துவிடமுடியுமா என்ன? வேறுவழியின்றி அந்த கணவனுடன்தான் வாழமுடியும் என்றிருந்தாலும் விரிசல் விரிசல்தானே? ஆதலால் ஆனந்த இலட்சுமிக்கும் இனி நிம்மதி கைக்கெட்டும் தூரத்தில் இல்லை. பிள்ளை வலியும், மணவலியும் அவரை நெடுங்காலம் துரத்தும்.

ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் இரண்டு விதமாக ஊருக்கொன்று, மனதுக்கொன்று என்று வாழ்ந்த ஜெயக்குமாரும் இனி சனியன் விட்டது என்று சகஜநிலைக்குத் திரும்ப முடியுமா? பிள்ளையைப் பறிகொடுத்த சோகத்தை விட அதற்கு காரணம் நான்தான் என்ற குற்ற உணர்விலிருந்து அவர் விடுதலை அடைய முடியுமா? சட்டத்தின்படியும், சந்தர்ப்பசூழலின் படியும் அவருக்கு தண்டனை ஏதும் கிடைக்காது என்றாலும் மனதை அழுத்தும் பாரம் பெரும் தண்டனை இல்லையா?

சிறையிலும் மனமுடைந்து காணப்படும் பூவரசியை சக பெண் கைதிகள் தாக்கியதாகவெல்லாம் தினசரிகள் செய்து வெளியிட்டு சூட்டை தணிக்காமல் பார்த்துக் கொள்கின்றன. ஆனால் இந்த சூட்டின் இதத்தை இப்போது ருசிப்பவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அதன் சூட்டை அறியாதவர்களா என்ன? நல்ல உறவிலும், கள்ள உறவிலும் மாறி மாறி விதிகளுக்கு உட்பட்டு ஆடிவரும் சமூகம் தானும் இந்த ஆட்டத்தில் உண்டு என்பதை அறியாமல் ஆதித்யாவின் மேல் கொண்ட மனிதாபிமானம் என்ற நிழலில் கிசுகிசு அரிப்பை தேடி நிறைவு செய்கிறது.

ஆனந்தலட்சுமியை மணப்பதற்கு முன்னர் ஜெயராமனும், பூவரசியும் காதலித்திருக்கிறார்கள். பூவரசியும் கருக் கொண்டு இரண்டு முறை காதலனது வேண்டுகோள்படி கலைத்திருக்கிறார். காத்திருக்கிறார். ஆனாலும் அந்தக் காதலன் கைவிட்டுவிட்டார். கைவிட்டவரை கயவன் என்று ஒதுக்காமல் அவரிடமே காதலை வலிந்து பெறவேண்டிய அவசியமென்ன?

இதில் பூவரசிக்கு முன்னமே ஒரு காதலன் இருந்து அவர் ஏமாற்றியதாக புகார் கொடுத்து வழக்கு நடந்திருப்பதாக தினசரிகள் சொல்கின்றன. ஏன் ஒரு பெண் தற்போதைய வாழ்வுக்கு முன்னர் யாரையும் காதலித்திருக்க கூடாதா என்ன? அந்தக் காதலன் கைவிட்டுவிட்டான் என்பதால் அவனைத் தண்டிக்க சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திருப்பது ஒழுக்கக்கேடா என்ன?

ஒருத்திக்கு ஒருவன்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒருவனுக்கு எத்தனை ஒருத்தி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த சமூக நியதியை வைத்தே பூவரசியின் ஒழுக்கத்தை வாசிப்பு மனங்கள் மதிப்பிடுகின்றன. அதனால் ஜெயராமனை தண்டிக்க முடியாமல் ஒரு அழகான குழந்தையை பதட்டமில்லாமல் கொன்று அப்புறப்படுத்தியது கூட அந்த ஒழுக்கக்கேட்டின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகின்றது.

ஜெயராமனை தப்பானவர் என்று தெரிந்தும் பூவரசி ஏன் விடாது காதலித்து வந்தார்? அவர் மேலாளர் பொறுப்பில் பெரும் ஊதியம் வாங்குகிறவர் என்பதாலா? அப்படிப் பார்த்தால் பூவரசியும் நல்ல மதிப்பெண்களோடு, உயர் படிப்பில், வசதியான வேலை பார்த்து வந்தவர்தான். தனது வளமான எதிர்காலம் என்ற கனவோடு கூட அவர் ஜெயராமனை துண்டித்துவிடக்கூடாது என்று நினைத்திருக்கலாம். இந்த பாதுகாப்பு பிரச்சினை பூவரசியுடையது மட்டுமா இல்லை எல்லாப் பெண்களுக்கும் உரியதா?

காதல், பாலுறவு, திருமணம் முதலானவற்றில் ஏமாறும் போது சமூக ரீதியாக பாதிப்படைவது பெண்தான். ஆணைப் பொறுத்தவரை அது அந்த அளவுக்கு பாதிப்படைவதாக இல்லை. மைனாராக சுற்றிய ஒரு ஆண் எந்த கூச்சநாச்சமும் இல்லாமல் ஊரார் மெச்ச ஒரு திருமணம் செய்து கொள்ள முடியும். ஒரு பெண் ஒரு காதலில் தோல்வியடைந்தாலே அது விபச்சாரமென்று சமூகம் சான்றிதழ் கொடுத்து விடும். ஆகவேதான் பெண்ணைப் பாதுகாக்கும் வண்ணம் சட்டங்களும், திருமண ஒப்பந்தங்களும் தேவைப்படுகின்றன.

பெண்களைப் பொறுத்தவரை நவீன சீர்கேடுகள் எல்லாவற்றையும் தாண்டி காதல் என்பதன் இருப்பை பாதுகாப்பான வாழ்வுக்காக மட்டும் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அதற்காக காதலில் கூட சமரசம் செய்துகொள்கிறார்கள். தன்னை காதலித்து கைவிட்ட பிறகும் ஜெயராமனை கைவிடுவதற்கு பூவரசி தயாரக இல்லை. எப்படியாவது அவருடன் வாழ்வில் செட்டிலாக வேண்டுமென்பது அவரது விருப்பம் பெண் என்ற பாதுகாப்பற்ற நிலையில் வந்திருக்க வேண்டும்.

ஒரு நிலையில் அதுவும் கைகூடாது என்ற பிறகு அவரை தண்டிக்க வேண்டும் என்று பூவரசி யோசித்திருக்கலாம். அந்த தண்டனையை சட்டபூர்வமாகவோ, ஜனநாயகப் பூர்வமாகவோ செய்யாமல் பயங்கரமான வழிமுறையை அவர் ஏன் தேர்வு செய்தார்? அவருடைய முதல் காதல் துரோகத்தை அப்படி சட்டபூர்வமாக தண்டிப்பதற்கு முயன்றும் பயனில்லை என்ற எதார்த்தம் ஒன்று இருக்கிறது.

இன்றைய சமூகத்தில் பெண்கள் தமது எதிர்ப்பை காட்டுவது என்பது அவர்களது அடிமைத்தனத்தோடு தொடர்புடையதாகவே இருக்கிறது. பலவீனமான பாலினம் என்ற முறையில் சமூகம் விதித்திருக்கும் கட்டுக்களை தகர்த்துவிட்டு சுதந்திரமாக எதையும் யோசிக்கும் நிலையில் அவர்கள் இல்லை. அவர்களது நிலை அடிமைத்தனம் என்பதால், அடிமைகள் ஜனநாயக போராட்டம் நடத்துவது நடக்காது என்பதும் அதனுள்ளே உறைந்திருக்கிறது.

அதனாலேயே உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பரவசமான முடிவுகளை பெண்கள் எடுப்பதை பார்க்கிறோம். அழுவது, ஆராசனை, அவமானப்படுத்துவது, என்ற போராட்ட முறைகள் ஆண்களை விட பெண்களே அதிகம் செய்கிறார்கள். இந்த சமூகத்தில் தன்னை ஏமாற்றிய கயவனை எப்படியும் தண்டிக்க முடியாது, தன் கருவைக் கூட கலைப்பதற்கு காரணமான அவனது குடும்ப வாழ்க்கையை எப்படியாவது சீர்குலைக்க வேண்டும் என்ற விபரீதமான முடிவு இப்படித்தான் வந்திருக்க வேண்டும்.

ஆதலால் இந்த சமூக அமைப்புதான் பூவரசியை இந்த நிலைக்கு தள்ளியதா? எனில் அது பூவரசியின் கொடூரமான நடவடிக்கையை நியாயப்படுத்திவிடாது. அவருக்கு பல தெரிவுகள் கண்முன்னால் இருந்திருக்கின்றன. ஆனால் அதிலெல்லாம் நம்பிக்கை வைக்கும் வண்ணம் சமூகம் இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம்.

முக்கியமாக அவர் காதலைப் பற்றிக் கொண்டிருக்கும் பழமைவாதக் கருத்துதான் குறிப்பாக விமரிசிக்கப்படவேண்டியது. காதலித்து, கருவும் கொடுத்துவிட்டு பின்னர் வேண்டாம் என்று ஓடும் ஒரு ஓடுகாலியை ஏன் அவர் வெறுக்க வில்லை? இந்தக் கயவனையா காதலித்தோம் என்று அவனை தலைமுழுகுவதை விட்டுவிட்டு ஏன் உறவைத் தொடர வேண்டும்? பூவரசியின் படிப்பு, வேலைக்கு இன்னொரு நல்ல வாழ்வைத் தேடியிருக்கலாமே?

இரண்டாவது மனைவியாக இருந்தாலும் கூட பரவாயில்லை என்று ஒரு படித்த பெண் முடிவெடுப்பது அத்தனை சரியாகப் படவில்லையே? ஒருவனை நினைத்துவிட்டோம், ஆயுள் முழுவதும் அவன் என்ன அயோக்கியத்தனம் செய்தாலும் அவனுடன்தான் வாழ்வேன் எனும் கற்புக்கரசி அடிமைத்தனம் இன்னும் செல்வாக்கோடு நிலவுகிறது. அதனால்தான் ஜெயராமன் போன்றவர்கள் ஒன்றுக்கு இரண்டாய் மண உறவை அமைத்துக்கொண்டு பதட்டமில்லாமல் வாழமுடிகிறது.

ஆண்களின் பொறுக்கித்தனம் பெண்களால் ஒன்றும் செய்யமுடியாது என்ற யதார்த்தத்திலிருந்து பலமடைகிறது. பெண்களின் பலவீனம் அவர்களது அடிமைத்தனத்திலிருந்து விபரீத முடிவுகளுக்கு கொண்டு செல்கிறது. இறுதியாகப் பார்க்குமிடத்து இன்னும் சமூகவாழ்வில் ஜனநாயகத்தின் வாசனையை அறியாமல் சாதி, மதம், இனம், பால் என பலவகை அடிமைத்தனங்களோடு வாழும் நமது நாட்டைப் பொறுத்தவரை இன்னும் இந்த விபத்துக்கள் அதிகம் நடக்கும் என்றுதான் தோன்றுகிறது.

ஒருதாரா மணஉறவில் பரஸ்பரம் நம்பிக்கை என்பதே அந்த உறவை நீடித்திருக்க வைக்கும். நம்பிக்கை குலைவு ஏற்படும் போது படக்கென்று உடனே விவாகரத்து, கைவிடுதல் பொன்ற முடிவுகளை இந்தியப் பெண்கள் அத்தனை சுலபத்தில் எடுத்து விட முடியாது. ஆண்களைப் பொருத்தவரை பிரச்சினை ஏதுமில்லை என்றால் மண வாழ்க்கைக்கு வெளியே உறவு வைத்துக் கொள்ளத் தயார். அதே கள்ள உறவை பெண்கள் நிகழ்ச்சிப் போக்காக சரியாகச் சொன்னால் மணவாழ்க்கையில் கிடைக்காத அன்புக்காக , இன்பத்திற்காக நாடுகிறார்கள். அந்த முடிவை ஒரு ஆண் எடுப்பதற்கும், ஒரு பெண் எடுப்பதற்கும் பாரிய வேறுபாடு உண்டு.

எனினும் கள்ள உறவு என்பது எப்படிப் பார்த்தாலும் நியாயப்படுத்த முடியாது. இது பழமைவாதம் அல்ல. பெண்களின் பாதுகாப்பற்ற நிலை காரணமாக சமூகம் வைத்திருக்கும் ஒரு ஒழுக்க விதி. இந்த ஒழுக்கத்தை மற்றவர்கள் அறியாத வகையில் மீறலாம் என்றே கள்ள உறவுகள் இயங்குகின்றன. ஆனால் அது என்று தெரியவருகிறதோ அன்று கள்ள உறவு மட்டுமல்ல, எல்லா உறவுகளும் சீர்குலைந்து போகின்றன.

காதலில்லை என்பதற்காக விவாகரத்து வெளிப்படையாக நடக்கும் போது மட்டுமே இந்தப் பிரச்சினைகளை நாம் ஓரளவுக்கு கடந்து செல்ல முடியும். ஆனால் காதலை தவிர்த்து விட்டு மற்ற காரணங்களுக்காக மட்டும் அதிகம் விவாகரத்து நடக்கின்றது. காதலின் பொருட்டு மண முறிவு என்பது எப்போது சாத்தியமாகிறதோ அப்போதுதான் கள்ள உறவுகள் முடிவுக்கு வரும். வேறு வகையில் சொன்னால் பெண்கள் சமூக சுதந்திரத்தை முற்றாக அடையும் போது கள்ள உறவுகளுக்கான தேவை இருக்காது.

எனவே பூவரசி செய்த இந்தக் கொடுமையான நடவடிக்கை என்பது அவரோடு முடிந்து விடக்கூடிய ஒன்றல்ல. நான்கு வயது குழந்தையை நினைத்துப் பார்க்க முடியாத அளவில் கொலை செய்த அவரது நடவடிக்கைக்குப் பின்னர் நமது சமூகத்தின் யதார்த்தத்தை சற்றே நினைத்துப் பார்க்க வேண்டிய கடமையில் நாம் உள்ளோம். இல்லையேல் இந்த சம்பவம் மறந்து விடக்கூடிய மற்றுமொரு கிசுகிசு செய்தியாய் அழிந்து விடும். புதிய செய்திகளுக்காக மனம் காத்திருக்கும்.

_______________________________________________________________________

  1. பூவரசியின் கொலையும், ‘தற்கொலையும்’ !!…

    ஒருத்திக்கு ஒருவன்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒருவனுக்கு எத்தனை ஒருத்தி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த சமூக நியதியை வைத்தே பூவரசியை ஒழுக்கத்தை வாசிப்பு மனங்கள் மதிப்பிடுகின்றன….

  2. சமீபத்தில் நான் படித்த மிகச் சிறந்த கட்டுரை இதுதான். இதில் மிகப் பெரிய வேதனை என்னவென்றால் நம் சமூகத்தில் பெண்ணுக்குப் பெண்ணே எதிரியாக இருப்பதுதான். தான் நன்றாக இருக்க வேண்டுமென்றால் இன்னொரு பெண்ணின் அழிவைக் கண்டு கொள்ளவே மாட்டாள்.

  3. நல்ல கட்டுரை. ஆனால் பின்னூட்டத்தில் ராமலிங்கம் குறிப்பிட்டது போல, ஒரு திருமணம் ஆன நபரை பூவரசி போன்ற படித்த பெண் காதலிப்பது மடமை தனம்.

    இதே சூழ்நிலை தான் இன்று நம் கண் முன்னே நடக்கின்றது (உண்மையா, வதந்தியா என்று தெரிய வில்லை. செய்தி). திருமணம் ஆன பிரபுதேவாவை (அதுவும் ஆறு மாதம் முன்பு சிறுவயது மகனை இழந்த தந்தையை) நயன்தாரா காதலிக்கிறார்.

    நானோ நீங்களோ நமது சமூகமோ நயன்தாராவை புறக்கணிப்பது இலையே, நயன்தாரா சினிமாக்களை புறக்கணிப்போம், பிரபுதேவாவை, நயன்தாராவை கண்டிப்போம் என்று நாம் யாரும் முயற்சி செய்வது இல்லையே.

  4. Vinavu,
    I have been reading your writings for long time. Never so far I came across one post where I completely agree with your motives.
    But in this one I got a real surprise that your post is exactly reflecting the picuture I have in mind. This is a good analysis.
    Just to add few cents. Women might feel to take revenge. But why did this girl took this particular way. Can we say the current serials motivated them for a move in this direction. Covering that angle might throw light into another dimension of our social problems.
    Murali.

  5. Dear Vinavu,
    This article is a fantastic show of reality . I have to thank you for giving us a deep in sight and thought provoking essay on this issue. The author is having a perfect balance of theory and practice . I am a social person … even i was wrongly thinking about the incident but after reading the article i my self blame how stupid am i ?
    Lot of articles i have read in Vinavu , but this one is outstanding in its simplicity and straight forwarness and it clarified my mind. One thing is really hurting is the whole media is in one direction and Vinavu and a small team is on the other direction. that is the right ddirection…:

  6. பூவரசியின் செயல் சமூகத்தில் பல விதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறது. உங்கள் கண்ணோட்டம் ஒரு விதம். இதையே வேறு விதமாக பார்த்தால் , பூவரசி தன் பழைய காதலன் மேல் புகார் அளித்திருக்கிறார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. அப்படியிருக்கையில் திருமணமான தனது மேல் அதிகாரியையும் காதலித்திருக்கிறார். ஒருவேளை அந்த பழை காதலன் பூவரசியை மணப்பதற்க்கு கோர்ட்டில் ஒத்துக்கொண்டால், இந்த புதிய காதலனின் கதி??? அவர் பூவரசியின் மேல் எந்த புகாரையும் கொடுக்க முடியாது. நம் சட்டங்கள் அப்படித்தான் இருக்கிறது. அவ்வளவு ஏன், பூவரசியின் நடத்தை சரியில்லாத காரணத்தால் அந்த பழைய காதலன் அவளை மணம் செய்துக் கொள்ள மறுத்திருக்கலாம் அல்லவா? ஆனால் எந்த ஒரு ஆணும் தன்னை காதலித்து ஏமாற்றியதாக ஒரு பெண் மேல் புகார் அளிக்க முடியாது.. இவ்வளவு பாதுகாப்பான(கேவலமான) சட்டங்கள் இருந்தும் அவள் ஜெயக்குமார் மீது சட்டப்படி புகார் அளித்திருக்கலாம். அதைவிடுத்து 4 வயது சிறுவனை கொன்றது ஒரு படுபாதக செயல் தான். அரசியல் சரிநிலைகள் என்ற போர்வையில் தொடர்ந்து இதுபோன்ற தவறான கருத்துக்கள் எப்போதும் ஆண்களை மட்டுமே குற்றம் சாட்டி சில அறைகுறை முற்போக்குவாதிகளால் பரப்பப் படுகிறது… உதாரணமாக, ஒரு ஆண் தன்னுடன் பணிபுரியும் ஏற்கனவே மணமாகி குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண்ணோடு கள்ளக்காதலில் ஈடுபட்டு, அவள் கருவுற்று , அவளே முடிவுசெய்து அந்த கருவை கலைத்து விட்டதாக வைத்துக் கொள்வோம். அந்த ஆண் சமூக மற்றும் சட்டத்திற்கு உட்பட்டு என்ன செய்ய முடியும்/செய்ய வேண்டும். பொதுவாக இதுப்போன்ற பாரபட்சமான கட்டுரைகள் எதை சாதிக்க விரும்புகிறன???????

    • கண்ணன்,

      பூவரசியின் கொலை சமூகத்தில் பல கேள்விகளை எழுதிப்பியது மாதிரி தெரியவில்லையே? ஊடகங்கள் வெளிப்படுத்திய விதத்தில் சமூகம் அடைந்திருக்கும் ஒரே உணர்ச்சி கொடூரமான கொலை என்பதே. இரண்டாவது நீங்கள் எந்த இடத்திலும் ஜெயராமனைக் கேள்விக்குட்படுத்தவில்லையே. அவரது செயல்பாடுகள் எல்லாமே தற்செயலானது என்பது பொல கண்டுகொள்ளாமல்விட்டிருப்பது தற்செயலானதா? பூவரசியின் நடத்தை சரியில்லாத காரணத்தால் என்று நீங்கள் ஊகிப்பதற்கு என்ன அடிப்படை கண்ணன்? ஒரு ஆண் காதலை மறுத்துவிட்டால் உடனே அந்தபெண் நடத்தை கெட்டவளாகிவிடுவாளா? காதலிட்டு ஏமாற்றப்பட்டதில் ஆணை விட பெண்ணுக்கே இங்கு இழப்பு அதிகம். பூவரசி விவகாரத்தில் கூட அவர்தான் இருமுறை கருக்கலைப்பு செய்திருக்கிறார். ஜெயராமன் கருக்கலைப்பு செய்த மாதிரி தகவல் (!) இல்லையே?

  7. சினிமா, தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் விதைத்திருக்கும் காதலின் சமூக யோக்கியதையை அலசும் மற்றுமொரு அருமையான கட்டுரை இது.

    காதல், பாலியல் உறவுமுறைகள், ஒழுக்கக்கேடுகள் அனைத்திற்கும் உள்ள சமூகப் பின்புலத்தை மறைத்து, ஏதோ தனிநபர் சார்ந்த பிரச்சினைகளாக இச்செய்திகளை உருமாற்றுகின்ற வேலையையே ஊடகங்கள் செய்யத்துடிக்கின்றன.

    ஜெயேந்திரன், தேவநாதன், நித்தியானந்தா போன்ற ஆன்மீகக் கேடிகளின் மோசடிகளையே தனிநபர் பிரச்சினையாக மாற்றி பரபரப்பான விற்பனையை மட்டும் பராமரித்துக் கொண்ட ஊடகங்கள், பூவரசி போன்றவர்களையா விட்டுவைத்துவிடும்? கேட்டவுடனேயே பதறச்செய்யும் குழந்தைப் படுகொலையைவேறு பூவரசி செய்திருக்கிறார்.

    சுனாமிப் பேரழிவின்போது குவியல் குவியலாக அடக்கம் செய்யப்பட்ட உடல்களைக்கூட விளம்பர இடைவேளைகளுக்கு இடையில்தானே காட்டியது சன் டி.வியும் இதர சேனல்களும்?

    மானாட மயிலாட என்ற ஆபாசக்கூத்தை நடத்துகின்ற, தமிழக முதல்வரின் கலைஞர் டி.வி. பூவரசியின் கொலையையும் பூவரசியின் நடவடிக்கைகளையும் பொறுப்பாக அலசுகிறது! உண்மையிலேயே ஆகக்கேவலமான ஆபாசம் எது தெரியுமா நண்பர்களே? இந்த ஊடகப் பொறுக்கிகள் தங்களுக்கும் சமூகப் பொறுப்பு இருப்பதாக அவ்வப்போது காட்டிக்கொள்ளுகின்ற காட்சிதான் ஆகக் கேவலமான ஆபாசம்.

  8. THE FIRST&FOREMOST REASON IS THE DIRTY NASTY OBSCENE MEGA SERIALS BEING TELECAST RY ALMOST ALL CHANNELS. THEY POISON THE MINDS OF ALL ESPECIALLY LADIES&mostly HOUSEWIFES.SO FIRST BAN ALL THE SERIALS OR ATLEAST IMPOSE CENSOR

  9. வினவு ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
    இவ்வளவு குறுகிய நேரத்தில் பதில் அளித்தமைக்கு நன்றி. பூவரசியின் விடயம் சமூகத்தில் பல கேள்விகள் எழுப்பி இருப்பதாக நான் சொல்வதற்கு காரணம், செவ்வாய் அன்று சன் செய்திகளில் ஒளிப்பரப்பான ஒரு செய்தியே.
    ” இந்த செயலுக்கு காரணமான ஜெயராமன் மேல் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென சில சமூக ஆர்வலர்கள் கருத்து ”. இந்த சமுக ஆர்வலர்கள் யார் என அதில் சொல்லப்படவில்லை. இருப்பினும் பொதுப்புத்தியை தாண்டிய இது போன்ற செய்திகள் வருவது, சமூகத்தில் ஒரு விவாதம் தொடங்கிவிட்டதற்கான அடையாளம்தான். ஜெயராமனை நான் எந்த இடத்திலும் நியாயப்படுத்த வில்லை. அதனால்தான் ஜெயராமன் மேல் பூவரசி புகார் அளித்திருக்கலாம் என்று சொன்னேன். ஒருவேளை பூவரசியின் புகாரை போலிசார் ஏற்க மறுத்திருந்தாலும், அவர் மகளிர் ஆணையம் மாதிரியான இடங்களீல் முறையிட்டு இருக்கலாம். இவை எல்லாம் ஊழல் நிறைந்தவை என வாதிடுவீர்களானால்… நாம் செய்ய வேண்டியது அந்த ஊழலுக்கு எதிரான கருத்துருவாக்கங்களை தான். என் உதாரணத்தில் நான் சொல்லிய அந்த ஆண் என்ன செய்ய முடியும்/செய்ய வேண்டும் என்பதற்கு தாங்கள் ஏதும் பதில் அளிக்கவில்லை.. அடுத்து , பூவரசியின் நடத்தை சரியில்லாத காரணத்தால்தான் என்று நான் அடித்துக் கூறவில்லை. ஒருவேளை அப்படி இருந்திருந்தால்… அந்த பழைய காதலன் சட்டப்படி அவளை திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் அல்லது ஜெயிலுக்கு செல்ல வேண்டும். அவளை நிராகரிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை. கடைசியாக, ஜெயராமன் கருக்கலைப்பு செய்யவில்லை என்கிறிர்கள், ஒரு வேளை கருவுறாமலே பூவரசியை காதலித்து ஏமாற்றி இருந்தால் அதை சரி என்பீர்கள

    • பெயருக்கு ஏற்றாற்போல் கருத்து சொல்கிறீர்கள் `கண்ணன்’ !!! வாழ்த்துக்கள்! 🙂

      வினவு!, ஒரு சிலர், வினவு கட்டுரை என்றாலே ஒரு சிலருக்கு அலர்ஜி யாகி ஏதாவது எதிர்கருத்து சொல்லியே ஆகவேண்டும் என்று வந்து விடுகிறார்கள்! கண்ணன் அப்படியானவர்களில் ஒருவரா இல்லையா என்பதை கண்னனும் வினவும் தான் விளக்கவேண்டும்!
      இப்படியானவர்களுக்கு வினவு பதிலளிக்கவேண்டுமா?

      • sorry for inconvenience! this is the corrected one!

        பெண்ணை காதலிக்கும் போது அவரை படுக்கைக்கு வீழ்த்துவதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் நாய்கள், அது முடிந்தவுடன் அவரை நடத்தை கெட்டவள் என்ற பெயரில் தான் நிராகரிக்கின்றன!
        அதே அப்பெண் திருமணதிற்கு முன் படுக்கைக்கு சம்மதிக்காவிடிலும் பெரும்பாலான யோக்கியர்கள் அப்பெண்ணுக்கு கொடுக்கும் பட்டங்கள் ஆய்வுக்குரியவை! (யாருடைய ஆய்வுக்கு???)
        சில மேன்மக்கள்(!!!) தனது அதிமேதாவி அறிவால், திருமணத்திற்கு முன் பெண் படுக்கைக்கு சம்மதிக்காத ஒரே விடயத்திற்காக, அப்பெண்ணை முன்னர் வீழ்த்த முயற்சித்தது குறித்த வெட்கமே இல்லாமல், அவர் புனிதமானவர் என்று கூவி, தான் அவரை உண்ணதமாக (!!!) காதலிப்பதாக கதை விடுகிறார்கள், திருமணமும் செய்துகொள்கிறார்கள்!!!!!!!!!!!!!!!!!!!!
        இது தான் சமூக நிலை! இங்கு சிலர் செவ்வாய் கிரகத்திலிருந்து இப்போது தான் குதித்தது போல பேசலாம், அவர்கள் கொஞ்சம் கட்டிங் அடித்து விட்டு வரவும்! அப்ப தான் குண்தாங்குறையாக உளர முடியும்!

        பூவரசியின் மீதான் ஆகக்கேவலமான, அவர் நடத்தை கெட்டவர் என்ற ஒரு அவதூறு கிளம்ப, அவரது நிறம் மற்றும் தோற்றமும் காரணம் என்றே நான் அறிந்த வரையில் ஊகிக்கிறேன்! இது உண்மையானால்……………. வருணாசிரமம் மக்களின் மனதில் ஊண்றிப்போய் இருக்கும் போது, அதை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், அடியோடு வேரறுக்க இங்கே, பூவரசியின் நடத்தை பற்றி பின்னூட்டம் இடும் எத்தனை ‘யோக்கியர்கள்’ முன்வருவார்கள்???

        -அக்காகி

        • ///வருணாசிரமம் மக்களின் மனதில் ஊண்றிப்போய் இருக்கும் போது, அதை எதிர்க்காமல், வேரறுக்க இங்கே////////

          தவறுக்கு வருந்துகிறேன்!!!

          வருணாசிரமம் மக்களின் மனதில் ஊண்றிப்போய் இருக்கும் போது, அதை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல், அடியோடு வேரறுக்க இங்கே, பூவரசியின் நடத்தை பற்றி பின்னூட்டம் இடும் ‘யோக்கியர்கள்’ எத்தனை பேர் முன்வருவார்கள்???

          -அக்காகி

  10. பெண்கள் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பதும் பின்பு அதை நினைத்து வாழ்நாள் முழுவதும் புலம்புவதும் கண்கூடாக காண்கிற உண்மை.பெண்கள் உடனடியாக உணர்சிப்படுவார்கள் என்பதை ஜெயராமன் போன்றவர்கள் வசதியாக பயன்படுத்திகொள்வது எல்லாமட்டத்திலும் காணப்படுகிற ஓன்று .

  11. இந்த நிகழ்வின் மூலம் கள்ள உறவை சமூகம் பெரிதுபடுத்தியதாக தெரியவில்லை, குழந்தையின் மரணம்தான் மக்களை பாதித்து இருக்கிறது.இதுவும் சில நாள்களில் மறைத்துவிடும்.

  12. அங்கொன்றும் இங்கொன்றும் ஆக நடந்துகொண்டிருந்த அல்லது தெரிந்துகொண்டிருந்த இந்த உறவுகள் தற்போதைய ஊடகங்களில் தினசரி காண்பிக்கப்படும் சீரியல்கள் அதை நியயபடுதுவது அதை ஆதரிப்பது போன்ற பேட்டிகள் (குஷ்பூவின் பேட்டியில் திருமணத்திற்கு முன்பே பாதுகாப்பான உடலுறவு என்பது தவறில்லை )சமூகத்தின் அடிப்படை ஒழுக்க கட்டமைப்பையே தகர்த்துவிடுகிறது .

  13. i think i think pouvarase should not given punishement.. the reason behind his jayraman.. but society blame her alone.. i think society should chance the concpet.. oruvanuku oruthi yenrala.. intha seyalluku karanama antha men thaindanai elaya.. either concept should change.. women should be given mutual right which missing.. i think it will not change in day..slowly step should betaken to improve.. other wise the rule should followed very stirctly….this male dominant world..

  14. முன்ன ஒருத்தர் சொன்ன மாதிரி, உங்க கட்டுரைகளிலே ஒத்துக்கொள்ளக் கூடியதா இது தானிருக்கு.. இதுல மூலத் தவறு ஜெயராமனோடது தான்..

  15. ஒரு குழந்தையை கொன்ற பூவரசி தண்டிக்கபட்டால், மூன்று குழந்தையைக் கொல்ல காரணமாயிருந்த ஜெயராமனும் தண்டிக்கப்படவேண்டும்!!

  16. பூவரசியின் தன் மூப்பான செயலுக்கு முழுமுதற் காரணமே ஜெயராமன்தான். அன்புக்கு ஏங்கிய பெண்ணுக்கு காதல் மற்றும் காமம் என்ற போதையை ஏற்றி அவரை வஞ்சித்த கொடியவன் அவன்…அதற்காக பூவரசி செய்தது நியாயம் என்று சொல்ல வரவில்லை. அந்தப் பிஞ்சுமுகத்தின் கள்ளமில்லா சிரிப்பினை அவன் அப்பன் செய்த நாச வேலைகளினால் அகோரியாக மாறிய பூவரசியின் செயல் மன உளைச்சலாலும் அவரின் தாழ்வு மனப்பான்மையினாலே அவரின் கண்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. கொலைக்குரிய தண்டனையை நீதிமன்றம் கொடுத்துவிடும் …. ஆனால் கொலைக்கு முழுமுதற்காரணமான நயவஞ்சகன் ஜெயராமனை கோர்ட்…சமுகம்…என்ன செய்ய போகிறது. இம்மாதிரி ஊர் மேயும் நாய்களுக்கு நல்ல பாடம் தரும் வகையில் சட்டம் என்ன செய்ய போகிறது…

  17. Dear Vinavu

    This is first time I am writing to your article. It is incontestable fact that Islamic law only can prevent from happening such this act. If anybody disagree with – please go and live in Saudhi and compare with other country.

    Regards
    KS.SUKURULLAH

  18. All the serials in tamil channels either directly or indirectly show this kind of
    realtionship in their daily telecast.This has its effect in the minds of the weak
    who think what they are doing is right and regret only after they committed the
    crime.It his high time that there should censor for all the serials in which a sociologist
    and a physiatrist should be in the panel.

    • நண்பர்கள் எழுதிய பின்னூட்டத்திற்கு நன்றி. அக்காகி அவர்களுக்கு, என்னுடைய கேள்வியை நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள். பொதுவாகவே அரசியல் சரிநிலைகள் என்று நம் அறிவிஜீவிக்கள் நிறுவியிருக்கும் கருத்தை கேள்விக்குட்படுத்தும் போது இதுபோன்ற வசைகளை மட்டுமே பதிலாக பெறுவது இது முதல் முறையல்ல. பூவரசியின் வழக்கை தாண்டித் தான் நான் எனது வாதங்களை முன்வைக்கிறேன். நம் சமூகத்தில் ”பொதுபடுத்தும்”(HASTY GENERALISE) பழக்கம் நிறைந்திருக்கிறது.உதாரணமாக, இஸ்லாம் ஒரு தீவிரவாத, வன்முறையான மதம். முஸ்லிம்கள் எல்லோருமே தீவிரவாதிகள் என்ற பொதுபுத்தி பரவலாக மக்களிடத்தில் காணலாம். அதேபோன்று அறிவுஜீவிக்களும் சில விஷயங்களை பொதுப்படுத்துகிறார்கள். ( ஆண்கள் எல்லோருமே கெட்டவர்கள்). செக்ஸ்க்கு நாயாய் அலைகிறார்கள். செக்ஸ் முடிந்த பின் பெண்ணை ஏமாற்றி விடுகிறார்கள். பெண்கள் புனிதமானவர்கள். அவர்கள் காதல் தெய்வீகமானது. இன்னும் இதுபோல் பட்டியலிட நிறைய இருக்கிறது. மெல்ல மெல்ல இந்த செய்தி மக்களின் எண்ணமாகவும் மாறிவிடுகிறது அல்லது மாற்றப்படுகிறது. அதன்பின் அது மாற்றமில்லா தத்துவம் போல் ஆகிவிடுகிறது. மிக்கியமாக மனிதாபிமான போர்வை போர்த்தப்படுவதால், அதை கேள்விக்குட்படுத்துபவர் மனிதாபிமானம் இல்லாதவர் என்று வசை கூறி அந்த வாதத்தை முன்னெடுத்து செல்லாமல் தவிர்க்கலாம். இது ஒரு அரசியல் யுக்தி. வினவு போன்ற ஒரு விவாத தளத்தில் இந்த யுக்தி தேவைதானா????

      • பெண் ஒருவரை காதலித்து, அவரால் ஏமாற்றப்பட்டோ அல்லது வேறு காரணங்களால் அது கை கூடாமல் போய், இன்னொருவரை காதலித்தால் அப்பெண்ணை நடத்தை கெட்டவர் என கூறும் பொது புத்தியை என்ன சொல்லவது கண்ணன்?
        ஒருவரை காதலித்து, அவரால் ஏமாற்றப்பட்டோ அல்லது வேறு காரணங்களால் அது கை கூடாமல் போயிருக்கும் போது அப்பெண்ணை தனது காம இச்சைக்கு மட்டுமே பயன்படுத்த துடிக்கும் ஆண் மனங்களின் பொதுப்புத்தியை என்ன செய்வது கண்ணன்??

        இந்த யுக்தி தேவை தானா? தேவை தானா?

  19. இடுகையை வாசிக்காமலேயே என்பதில். மன்னிகவும் செய்தியில் ஏற்கனவே படித்ததால்.

    இது பழிவாங்குவதாற்காக செய்யப்பட்டது என குற்றவாளியே ஒப்புக் கொண்டார். தன் கருவில் இருந்த குழந்தையை இருமுறை கலைக்கச் செய்து தன்னை ஏமாற்றியவனின் உயிருள்ள குழந்தையை கொலை செய்ததாக.

    குற்றம் குற்றமாக இருப்பினும், குற்றம் புரிந்த மற்றும் குற்றம் புரிய காரணமாயிருந்த ஆணை இந்த சமூகமோ சட்டமோ ஏதும் செய்ய வில்லை என எனது மனைவி எடுத்துரைத்தார். நானும் அதில் உடன் படுவதால் அதை இங்கு பதிவு செய்கிறேன்.

  20. DEAR VINAVU, My comments may sound a bit different ; But the truth is EROSION of social values is causing these things.

    If you watch any Tele serial (Fortunately I dont own a TV!) all type of immoral and illicit relationships are justified and IT can cause an great and HEAVY IMPACT on unsuspecting Young minds…

    This am writting from various reviews I gathered at magazines and newspapers.

    A recent study by chennai ploice revealed an big leap in Passion crimes (Read crimes commited for SEX!) …

    Like Cinema we must have an censor board for Tv serials .It may curb the menance.

    Our deepest sympathy to the mother of the Child,…

  21. நண்பர் அக்காகி அவர்களுக்கு,
    மீண்டும் மீண்டும் எனது கேள்வியை நிராகரிக்கிறீர்கள். சரி உங்கள் விருப்பப்படியே வருகிறேன். ஆண் ஒருவரை காதலித்து, அவரால் ஏமாற்றப்பட்டோ அல்லது வேறு காரணங்களால் அது கை கூடாமல் போய், இன்னொருவரை காதலித்தால் அந்த ஆணை குற்ற்வாளி என கூறும் பொது புத்தியை என்ன சொல்லவது அக்காகி? காதலிக்க ஆரம்பிக்கும்போது இருபாலருமே தங்கள் பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். சில நாட்களுக்கு பின் உண்மையாண சொரூபம் தெரிந்தபின், பெண்கள் மட்டுமே தங்கள் காதலனை நிராகரிக்க முடியும். ஆண்களால் இயலாது(சட்டப்படி). இந்த கேள்விக்கு நீங்கள் மட்டுமல்ல. பல முற்போக்காளர்களும் பதிலலிப்பதில்லை. மேலும் பூவரசி விஷயத்திலும் அவரது நடத்தை பற்றிய என் கூற்று ஒரு ஐயவினா தான். உறுதியாக என்று எங்கேயுமே சொல்லவில்லை.

    • கண்ணனுடைய கருத்துக்களோடு நானும் ஒத்துப் போகிறேன். ஆண்களை எப்போதும் நாய்களாகவேயும், பெண்களை எப்போதும் காதலுக்காக கருகிய மலர்களாகவேயும் மட்டுமே பார்க்கவேண்டியதில்லை.

      பூவரசி சிறுவனைக் கொல்ல முக்கிய காரணம் அவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டதே அன்றி ஜெயக்குமார் அயோக்கியன் அல்லது பூவரசி பரிசுத்தமானவர் என்பதால் அல்ல. கல்யாணமான ஜெயக்குமாரை மனைவி, குழந்தைகளைத் தாண்டி தன்னுடன் வரவேண்டும் என விரும்பிய பூவரசியும், கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்பாமல் ஏமாற்றி அவரை தொடர்ந்து உபயோகித்துக் கொண்ட ஜெயக்குமாரும் காதல், கல்யாணம், சமூக சாத்தியங்கள் போன்ற எல்லா சமூக நியதிகளையும் அறிந்தவர்கள் தான்.

      இங்கு நாம் உண்மையில் கண்டிக்க வேண்டியது பத்திரிக்கைகளும் ஊடகங்களும் பூவரசியை அரக்கி எனச் சித்தரித்ததைத் தான். அவர் மனம் மிகவும் பேதலித்துத் தான் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார் என்பதற்கு நிறைய தகவல்கள் நமக்கு கிடைக்கின்றன. அவர் ஜெயக்குமாரைக் கொன்றிருந்தால் கூட இந்த அதிர்ச்சி மக்களுக்கு தோன்றியிருக்காது. பிரச்சனையில் சம்பந்தமே இல்லாத குழந்தை கொல்லப்பட்டது என்பது தான் மக்கள் அடையும் வெறுப்பிற்கு பிரதான காரணம். பூவரசி மனம் நிறைய பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது ஊடகங்களில் வெளிவந்திருந்தால் அவர் மேல் இவ்வளவு கொடுமையான அரக்கி பட்டம் விழுந்திருக்காது. ஜெயக்குமார் எவ்வளவு (அ)யோக்கியன் என்பது அவரது வாக்குமூலங்களில் வெளிவரும்போது நிகழ்வின் மொத்த காரணமும் தெளிவாகிவிடும்.

  22. நல்ல அலசல்! ஆனால் விவாதங்கள் (பின்னூட்டங்கள்) சரியில்லை. கொலை செய்தது குற்றம் தான். இந்த உறவிற்கு இருவரும் குற்றவாளிகள் அதுவும் சமூகத்தின் பார்வையில் மட்டும். சமூகத்திற்கு தெரியாத வரை. அது வரை அவர்கள் நல்லவர்கள்.

    ஒருவர் கேட்கிறார்” அப்பொழுது பழய காதலனின் நிலை என்ன என்று. வெறு ஏதாவது பெண்ணைத்தான் பார்க்கணும். காதலிசசா திருமணம் செய்ய வேண்டுமா என்ன?

    சரி! ஜெயராமன் திருமணம் செய்து விட்டு அடுத்த நாளே பூவரசியை விவாக ரத்து செய்தால். முதலில் அந்த அந்த திருமணம் செல்லுமா. எவ்வளவோ பணம் செய்து செய்யும் திருமணங்கள் ரத்தில் முடிகிறது.

    MR. Radha ரத்தக் கண்ணீரில் சொன்னமாதிரி இந்த நாட்டிலே எவனுக்கும் ஏன் கலியாணம் செய்து கொள்ளுகிரோம் என்பதே உண்ணும தெரியலை.
    இதுலே கல்யாணமாம் கல்யாணம்! இது இந்த விஷயத்தில் உண்மை.

    ஜெயராமன் முதல் மனைவியை ரத்து பண்ணிவிட்டு பூவரசியை திருமணம் செய்து அடுத்த நாள் எனக்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை அவளோட உடல் உறவு வைத்துக் கொள்ள விருப்பம் இல்லை என்றால் என்றால், என்ன செய்ய முடியும். நீதிமன்றமும் நீதிபதியும் என்ன உடல் உறவு வைத்துக் கொள்ள உதவியா செய்ய முடியும்? செயாது என்று நினைக்கிறன்!

    கொலை கொலை தான். வேண்டுமென்றால் சாதி வெறி பிடித்த அதிமேதாவிகள் தங்கள் பூவரசி தங்கள் சாதி பெண்ணாக இருந்தால் கருணை கொலை என்று சொல்லலாம் . இந்த கேடு கேட்ட விஷயத்தை பார்லிமென்டிலும் விவாதிப்பார்கள்.

    சாதி வெறி பிடித்த பெற்றோகள் பெத்த மகளையே கொலை செய்வது கருணைக் கொலை என்றால் தனக்கு பிறக்கப் போகும் குழநதை தன் சாதியில் மட்டும் தான், மறுபடியும், தன் சாதியில் மட்டும் தான் இருக்கவேண்டும் என்று பூவரசி அந்த சிறுவனை கருணைக் கொலை செய்து இருக்கலாம்.

    ஆகவே பூவரசியும் மன்னிக்க்கப் பட வேண்டும்.

    • //ஒருவர் கேட்கிறார்” அப்பொழுது பழய காதலனின் நிலை என்ன என்று. வெறு ஏதாவது பெண்ணைத்தான் பார்க்கணும். காதலிசசா திருமணம் செய்ய வேண்டுமா என்ன?//

      நண்பர் ஆட்டையாம்பட்டி அம்பி அவர்களுக்கு நன்றி. ஏனெனில் நீங்கள் மட்டும் என் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள். என்னுடைய கேள்வியும் அதுதான். பூவரசி , தன் பழைய காதலன் திருமணம் செய்ய மறுத்தால் வேறு ஏதாவது ஆணை தான் பார்த்திருக்கணும். அதை விட்டுவிட்டு போலிஸில் புகார் அளித்திருக்கிறார். இந்த பாரபட்சமான சட்டம் ஏன் தேவை என்ற காரணம் எனக்கு புரியவில்லை. அதை தெளிவுபடுத்திக் கொள்ளவே நான் இந்த விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறேன்.

      • அண்ணே kannan, ////பூவரசி , தன் பழைய காதலன் திருமணம் செய்ய மறுத்தால் வேறு ஏதாவது ஆணை தான் பார்த்திருக்கணும். அதை விட்டுவிட்டு போலிஸில் புகார் அளித்திருக்கிறார். இந்த பாரபட்சமான சட்டம் ஏன் தேவை என்ற காரணம் எனக்கு புரியவில்லை.//// ஒங்களுக்கு எப்படி புரியும் நீங்க கர்ப்பமாகவும் வாய்ப்பில்ல கருவை கலைப்பதால் ஏற்படுகின்ற உடல் மற்றும் மணவேதனையை அறிந்துக்கொள்ளவும் முடியாது அந்த வலி ஒங்களுக்கு தெரிய வந்தால் போலிசு ஏ போனங்க என்ற சிதம்பர ரகசியமும் ஒங்களுக்கு புரியுமுன்னு நேனைக்கீறேன்

        • நண்பர் ஹைதர் அலி அவர்களுக்கு, அந்த பதில் நண்பர் ஆட்டையாம்பட்டி அம்பி அவர்களுக்காக எழுதியது. அவருடைய பின்னூட்டத்தில் இருந்த வாக்கியத்தை அப்படியே கத்தரித்து அதில் இருந்த பாலினத்தை மட்டும் மாற்றி நான் திருப்பிக் கேட்டிருந்த கேள்வி அது. உங்களுடைய பதில் சரியானதே.
          ஆனால் மீண்டும் நான் பழைய கேள்வியையே கேட்க வேண்டியுள்ளது.
          நான் முன்பொரு முறை சொன்னது போல் பூவரசியின் விஷயத்தை தாண்டி தான் என்னுடைய வாதங்களை வைக்கிறேன். ஒரு பெண் தான் காதலித்த காதலனோடு, எந்தவித உடல் ரீதியான உறவும் வைத்துக் கொள்ளாமல் பழகியதாக வைத்துக் கொள்வோம். ஏதோ ஒரு காரணத்தால் காதலன் நிராகரிப்பதாகவும் வைத்துக்கொள்வோம். இந்த வழக்கில் அந்த பெண் தன் காதலனை தன்னோடு சேர்த்து வைக்க சொல்லி புகார் அளிக்க இயலுமா? இயலாதா? சட்டப்படி அவளால் இயலும். ஒருவேளை இந்த பெண் காதலனை நிராகரித்தால், அவனால் எந்த நடவடிக்கையும் எடுக்க இயலாது?
          இந்த விவாதம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. என்னுடைய பின்னூட்டங்கள் என் வாதத்தின் தொடக்கம்தான். இந்த விவாதம் முன்னெடுத்து செல்லப்படும் பட்சத்தில், தெளிவான, பிடிவாதமில்லாத, ஆழமான பதில்கள் நண்பர்கள் மூலம் கிடைக்கப் பெற்றால் என்னுடைய முடிவை மாற்றிகொள்ள தயாராகவே உள்ளேன். என் நோக்கம் வாதத்தை நிறுவுவதல்ல , பதிலை கண்டடைவதே.

        • நண்பர் ஹைதர் அலி அவர்களுக்கு,

          காதலிப்பவர்கள் கர்ப்பம் ஆகவேண்டும் என்று செக்ஸ் வைத்துக் கொள்வது இல்லை. கர்ப்பம் எனபது காதலர்களுக்கு ஒரு வேண்டாத தொல்லை. ஏன் தடுக்கக் கொள்ள வில்லை. சரி அதை விடுங்கள். இதற்க்கு என்னுடய கேள்வி?

          போலீஸ் தொல்லையால் ஜெயராமன் முதல் மனைவியை ரத்து பண்ணிவிட்டு பூவரசியை திருமணம் செய்து அடுத்த நாள் எனக்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை அவளோட உடல் உறவு வைத்துக் கொள்ள விருப்பம் இல்லை என்றால் என்றால், என்ன செய்ய முடியும். நீதிமன்றமும் நீதிபதியும் போலீசும் என்ன உடல் உறவு வைத்துக் கொள்ள உதவியா செய்ய முடியும்? செய்யாது என்று நினைக்கிறன்! போலீச செய்வது கட்டப் பஞ்சாயத்து. அவ்வளவே…

          இல்லை பூவரசியை ரத்து பாணினால் என்ன செய்ய முடியும். நான் சொல்ல வந்தது என்ன வென்றால் ஒரு ஆணோ ஒரு பெண்ணோ காட்டயப் படுத்தி செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது குடும்பமும் நடத்த வைத்துக் கொள்ள முடியாது. அப்படி செய்ய சட்டத்தில் இடம் கிடையாது.

          அதை புரிந்து கொள்ளுங்கள்…..

  23. நண்பர் ஆட்டையாம்பட்டி அம்பி அவர்களுக்கு நன்றி. தங்கள் கருத்துடன் நான் உடன்படுகிறேன். ஆனால் செய்திதாள்களில் அடிக்கடி இடம்பிடிக்கும் விஷயம் தாங்கள் அறிந்ததே. “ காதலித்து திருமணம் செய்யாமல் ஏமாற்றிய வாலிபர் கைது”. பிறகு அவன் ஒன்று தன் காதலியை திருமணம் செய்ய வேண்டும் அல்லது சிறைக்கு செல்லவேண்டும். இது ஒன்றும் சட்டத்தை மீறி செய்யப்படுவதில்லை. சட்டத்திற்குட்பட்டே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. எந்த இடத்திலும் காதலித்து திருமணம் செய்ய மறுத்த பெண் கைது என்ற செய்தியை நான் கண்டதும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை.

    • ///எந்த இடத்திலும் காதலித்து திருமணம் செய்ய மறுத்த பெண் கைது என்ற செய்தியை நான் கண்டதும் இல்லை. கேள்விப்பட்டதும் இல்லை.////

      நீங்கள் சொல்வது சரி அனால் எனது கேள்வி அது அல்ல.

      இதற்க்கு நேரிடையாக பதில் சொல்லுங்கள்: இது வறை எதாவது நீதி மன்றத்தில் திருமணம் செய்து தான் ஆக வேண்டு என்று தீர்ப்பு கொடுத்து இருக்கிறார்களா? அப்படி தீர்ப்பு கொடுத்து ஏதாவது திருமணம் நடந்ததா??? நடந்ததா? இல்லையா? இதற்க்கு பதில் வேண்டும்.

      போலீஸ் station – இல நடக்கும் திருமனததை நான் சொல்ல வில்லை. மறுபடியும் station – இல நடக்கும் திருமனததை குறிப்பிடாதீர்கள். இது தவறு. இதை விடுங்கள் எனது முதல் கேள்விக்கு மட்டும் பதில் வேண்டும்.

      அடுத்த கேள்வி???

      எப்படி நடந்தாலும் அடுத்த நாளே விவாக ரத்து செய்தால் யார் என்ன செய்ய முடியும்??

      இதற்க்கம் பதில் கூறுங்கள்…..

  24. //ஒருத்திக்கு ஒருவன்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒருவனுக்கு எத்தனை ஒருத்தி வேண்டுமானாலும் இருக்கலாம். இந்த சமூக நியதியை வைத்தே பூவரசியின் ஒழுக்கத்தை வாசிப்பு மனங்கள் மதிப்பிடுகின்றன. அதனால் ஜெயராமனை தண்டிக்க முடியாமல் ஒரு அழகான குழந்தையை பதட்டமில்லாமல் கொன்று அப்புறப்படுத்தியது கூட அந்த ஒழுக்கக்கேட்டின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படுகின்றது.//
    vashippu manankalin yokaiyathi alla poovarashiyin yokiyathai alla oru kulanthai kolaikku vakkaalathu vankupavanin yokiyathai kelvikullaakkapadavendum sir

  25. நண்பர் ஆட்டையாம்பட்டி அம்பி அவர்களுக்கு,
    உங்கள் முதல் கேள்விகான பதில் – “இல்லை”
    இரண்டாவது கேள்விகான பதில் – “ யாரும் எதுவும் செய்ய முடியாது”

    • திருமணம் செய்ய சொல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக கேள்விபட்டதில்லை. ஆனால் காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியாதல் தண்டணை வழங்கியதை கேள்விபட்டிருக்கிறேன். இது நான் சொல்ல முனைவது

  26. //ஆனந்தலட்சுமியை மணப்பதற்கு முன்னர் ஜெயராமனும், பூவரசியும் காதலித்திருக்கிறார்கள். பூவரசியும் கருக் கொண்டு இரண்டு முறை காதலனது வேண்டுகோள்படி கலைத்திருக்கிறார். காத்திருக்கிறார். ஆனாலும் அந்தக் காதலன் கைவிட்டுவிட்டார். கைவிட்டவரை கயவன் என்று ஒதுக்காமல் அவரிடமே காதலை வலிந்து பெறவேண்டிய அவசியமென்ன?//

    இந்த‌ க‌ற்பு என்கிற பெ‌ண்க‌ளுக்கான‌ ம‌திப்பீடுதான் பூவ‌ர‌சியின் நிலைமைக்கு காரண‌ம். காதலித்தார்க‌ள் ச‌ரி.அவ‌ன்தான் வேறு க‌ல்யாண்ம் செய்து கொண்டானே அவ‌னை சட்டப் படி த‌ண்டிக்க‌ ஏதாவது முய‌ற்சி எடுத்து இருக்க‌லாம்.அல்ல‌து அவ‌னை ம‌ற்ந்து விட்டு வேறு திரும‌ண‌ம் செய்து இருக்க‌லாம்.எப்ப‌டி அவ‌ன் ம‌ற‌க்கும் போது பூவ‌ர‌சியால் ம‌ட்டும் முடியாதா?.

    //இதில் பூவரசிக்கு முன்னமே ஒரு காதலன் இருந்து அவர் ஏமாற்றியதாக புகார் கொடுத்து வழக்கு நடந்திருப்பதாக தினசரிகள் சொல்கின்றன. ஏன் ஒரு பெண் தற்போதைய வாழ்வுக்கு முன்னர் யாரையும் காதலித்திருக்க கூடாதா என்ன? அந்தக் காதலன் கைவிட்டுவிட்டான் என்பதால் அவனைத் தண்டிக்க சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்திருப்பது ஒழுக்கக்கேடா என்ன?//
    இந்த‌ விஷ‌ய‌த்தை வைத்துதான் ஜெயராம‌ன் பூவ‌ர‌சியை ஏமாற்றி இருக்கிறான்.
    ஏற்கென‌வே ப‌ட்ட‌ காய‌த்தினால் துவ‌ண்டு போன‌ பெண்ணை த‌ன் அடிமையாக‌வே மாற்றி விட்டான். அவ‌ன் காத‌லிப்பானாம் உற‌வு கொள்வானோம். வேறு க‌ல்யாண‌‌ம் செய்வானாம்.இந்த பெண் அவன், அவ‌ன் குடும்ப‌தின‌ர் மீது அன்பை பொழிய‌ வென்டுமாம்.இந்த‌ பெண்ணும் வேச‌ம் போட்டு இருக்கிறார்.ஒரு நாள் அவ‌ன் மீது உள்ள‌ வெறுப்பு க‌ள்ள‌ம் க‌ப‌ட‌ற்ற‌ குழ‌ந்தையின் மீது விழுந்த‌து மிக‌வும் துர‌திஷ்ட‌வ‌ச‌மான‌து.
    ஆனால் ஒரு ந‌ன்கு ப‌டித்த‌ பெண் இந்த‌ அள‌விற்கு முட்டாள் தனமாக நடந்தது ஆய்வுக்குறிய‌ விஷ‌ய‌ம். அவ‌ன் திரும‌ண‌த்திற்கு பின் அவ‌னை விட்டு ஒதுங்கி இருந்தால் இச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்திருக்காது.த‌ண்டிப்ப‌து என்றால் ஜெய‌ராமனும் த‌ண்டிக்க‌ப் ப‌ட‌ வேண்டும்.

  27. ///kannan
    நண்பர் ஆட்டையாம்பட்டி அம்பி அவர்களுக்கு,
    உங்கள் முதல் கேள்விகான பதில் – “இல்லை
    இரண்டாவது கேள்விகான பதில் – “ யாரும் எதுவும் செய்ய முடியாது

    kannan

    திருமணம் செய்ய சொல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக கேள்விபட்டதில்லை. ஆனால் காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியாதல் தண்டணை வழங்கியதை கேள்விபட்டிருக்கிறேன். இது நான் சொல்ல முனைவது////

    இது, காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியாதல், நான் கேள்விப் படாத ஒன்று! அப்படி தண்டனை வழங்கி இருந்தால் அது ஒரு பொய் கேசு போட்டுத தான் தண்டனை வழங்கி இருக்கும். இங்கு நிறைய பேருடைய கருத்துக்களை பார்த்தேன். அவர்கள் “சட்டப்படி” நடவடிக்கை எடுக்க முடியும் என்று கூறுவது தவறு. சட்டப்படி என்றால் இருக்கும் சட்டத்தை வைத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    போலீஸ் கஞ்சா கேஸ் அல்லது வெறு ஏதாவது பொய் கேஸ் போட்டு காதலனை உள்ளே தள்ளுவது “சட்டப்படி” அல்ல. அது சட்டப்படி அல்லவே அல்ல. ஆனால் நடப்பது நீ கல்யாணம் பண்ணவில்லை என்றால், வரதட்சனை அல்லது கஞ்சா கேஸ் போடுவோம் உள்ளே தள்ளுவோம் என்பது சட்டப்படி அல்லவே அல்ல. இதற்க்கு பெயர் தான் கட்டப் பஞ்சாயத்து. இந்தியாவின் ஜனநாயகம் குடிமகன் ஓட்டுப போடுவதோடு நின்று விடுகிறது. அதற்க்கு மேல் அந்த குடிமகனுக்கும் எந்த உரிமையும் கிடையாது. இந்தியா ஒரு ஜனநாயக் நாடே அல்ல அது ஒரு ஜனநாயகக் காடு!

    ////ஆனால் காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றியாதல் தண்டணை வழங்கியதை கேள்விபட்டிருக்கிறேன். இது நான் சொல்ல முனைவது////

    நீங்கள் சொல்வது போல் அப்படி “தண்டணை வழங்க முடியும்” என்ற பட்சத்தில், நான் இந்தியாவில் இருந்தது அந்த காதலனுக்கு நான் வக்கீலாக “legal representation” செய்தால் முள்ளை முள்ளால் தான் எடுப்பேன். I would prepare two affidavits; one my client is willing to marry the girl proving the court that there was no intention to cheat or break the breach of trust. A second affidavit would be filed after a couple of days stating that my client would no longer fulfill the marriage NOW as a man. NOW, (read, now) my client says he is not in a position to fulfill the basic and essential need of the marriage. Conducting medical exams is absurd; a man can still have an erect pexis, yet there is no necessity that he should be able to have sex with THAT WOMAN. He could still be unable to consummate the marriage. Even if he had sex before he could still become impotent. Finally, courts ordering medical exams is height of stupidity. What are they trying to prove? Sexual desire stems from the mind and the body fulfills it. If there is no desire, sex is gone so as marriage. இதை தமிழி எழுதினால் ஆபாசம் என்பார்கள். ஆன்கிலத்தில் எழுதினால் தான் ஆபாசம் கிடையாதே நம்ம ஊர் வழக்கப்படி.

    There are thousands of valid reasons one could state for not having sex with his lover or wife A simple “not interested ” anymore with that woman would suffice.

    My final argument: Would the court still want my client to marry that woman, my judge or Mr.XXX, the honorable judge (no “my lord business”)?

  28. நண்பர் அம்பி அவர்களுக்கு,
    செய்தித்தாள்களில் வரும் தகவல்களின் அடிப்படையில் மட்டும் நான் சொல்லவில்லை. என் வாதத்தில் உங்களுக்கு ஐயம் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு நெருங்கிய வழக்கறிஞர் யாரிடமாவது விசாரித்து பாருங்கள்.

    • ///என் வாதத்தில் உங்களுக்கு ஐயம் இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு நெருங்கிய வழக்கறிஞர் யாரிடமாவது விசாரித்து பாருங்கள்.///

      செய்தித் தாள்களில் வருவத தான் நான் கூறுகிறேன். மேலும எதை விசாரிக்க சொல்கிறீர்கள்? புரியவில்லை?

Leave a Reply to kannan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க