privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்நாராயணா... இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா...

நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா…

-

நாராயணா... இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா...அய்யா அறிவு ஜீவி அம்பிகளே, உங்க பின்னூட்டத்தையெல்லாம் படிச்சு, பொறுத்துப் பொறுத்தப் பாத்துட்டு பொறுக்கமுடியாமத்தான் இத எழுதுறேன். “அது ராமர் பிறந்த இடம்னு நீதிபதி சர்மா மட்டும்தான் சொல்லியிருக்காரு. மத்தவங்க இந்துக்களின் நம்பிக்கைன்னுதான் சொல்லியிருக்காங்க”ன்னு ஒரு பயங்கரமான மேட்டரை புடிச்சிட்ட மாதிரி ஒருத்தர் விவாதம் பண்ணிகிட்டிருக்காரு. வினவு கட்டுரை பதிவேற்றம் பண்ணின நேரம் என்னான்னு பாத்தீங்களா? நேத்து ராத்திரி தீர்ப்பு என்ன சொல்லுதுன்னு என்.டி.டி.வி யில பர்கா தத்தும், டைம்ஸ் நௌ வில அர்னாப் அம்பியும் ஆராய்ச்சி பண்ணிகிட்டிருந்த நேரத்துல எழுதின பதிவு அது. அதான் தீர்ப்பின் சாரம்னு போட்ருக்காங்கள்ல விடு..  பிறந்த இடம்னு சொன்னா என்ன, நம்பிக்கைன்னு சொன்னா என்ன ரிசல்டு ஒண்ணுதானே. பிறந்த இடம்னு சர்மா சொன்னதாவது பரவாயில்லை. அவரு கோசலைக்கு பிரசவம் பார்க்கும்போது கூட இருந்திருப்பாருன்னு ஒத்துக்கலாம். அங்கதான் பொறந்ததா இந்துக்கள் நம்பறாங்கன்னு சொல்லி, அந்த இடத்த பட்டா போட்டு கொடுத்திருக்கிறானே, அதுக்கு என்னாப்பா சொல்ற?

“இந்து” “நம்பிக்கை” ரெண்டு வார்த்தையுமே ஃபிராடு. இந்த லட்சணத்துல அந்த மசூதியில மினாரெட் இல்லயாம். மற்றவர்கள் வழிபாட்டுத் தலத்தை இடிச்சு கட்டினா அது இசுலாத்துக்கு விரோதமாம். அதுனால இசுலாமிய முறைப்படி மசூதி இல்லையாம்.

“இந்து” வுக்கு அந்த முறையெல்லாம் கிடையாதாம். அம்பிகளுக்கு ஆகம விதி தெரியுமா? 12 வருசம் ஒரு கோவிலுக்கு கும்பாபிசேகம் பண்ணலன்னா, அந்தக் கோயில் சிலையில கடவுள் கிடையாது. செத்துப்போயிட்டாருங்குது ஆகம விதி. அப்படின்னா ராமன் செத்துப்போன இடம்னுதான் அதை சொல்லணும். அத வுடு. இந்தியா முழுவதும் 12 வருசமா கும்பாபிசேகம் நடக்காத கோயிலையெல்லாம் இடிச்சு கக்கூசு கட்டிடலாமா? தயாரா? கடவுள் செத்துப்போன கோயில்ல பார்ப்பான் மணியடிச்சு வசூல் பண்றது நியாயமா?

இன்னொருத்தன் வழிபாட்டுத்தலத்தை இடித்து அங்கே மசூதி கட்றது இசுலாமுக்கு விரோதம்னு சட்டம் பேசுறாரு சர்மா. பரவாயில்லயே. அது யோக்கியமான மதமா இருக்கே. புத்த விகாரையையும், சமணப் பள்ளியையும் இடிச்சு கட்டினதுதானே பல தென்னாட்டு கோயில்கள்? நாகப்பட்டினம் புத்தவிகாரையிலிருந்து புத்தரின் தங்கச் சிலையை திருடி உருக்கித்தான் சீரங்கம் கோயிலுக்கு திருப்பணி செஞ்சேன்னு திருமங்கையாழ்வார் எழுதி வச்சிருக்காரே, அந்த திருட்டு சொத்த என்ன செய்யலாம்? ஹிந்துக்களுக்கு அது தோஷம் இல்லையா?

மசூதின்னா அதுக்கு மினாரெட் இருக்கணுமாம். ஆனா விநாயகருக்கு அதெல்லாம் தேவையில்ல. பிள்ளையார்னா அத சாக்கடை மேல வக்கலாம். இடம் பிடிக்கணும்னா கக்கூசுக்குள்ளயும் வக்கலாம். குப்பை மேட்டிலயும் வக்கலாம். நாலு பொறுக்கிப் பசங்க மரத்தடில மங்காத்தா ஆடணும்னா அங்க ஒரு கல்லை நட்டு, குங்குமத்த பூசி அதையும் பட்டா போட்டுக்கலாம். ஏன்னா, ஹிந்துக்களை பொருத்தவரை பரம்பொருள் எங்கும் இருக்கிறார்னு சொல்றார் நீதிபதி. வெக்கமாயில்ல. தூ.

சரி. சாணியக்கூட கடவுள்னு ஒத்துக்குற அளவுக்கு இலக்கணம் வகுத்த பரந்த நம்பிக்கை கொண்டது இந்து மதம். விட்டுத்தள்ளு. இந்துவுக்கு என்ன இலக்கணம். இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்லுது அம்பிகளுக்கு தெரியுமா? யார் இசுலாமியன் இல்லையோ, கிறித்தவன் இல்லையோ, பார்சி இல்லையோ அவனெல்லாம் இந்து. இதுதான் விளக்கம்.

இந்த விளக்கத்தையே சிவில் வழக்குக்கு மொழிபெயர்த்தா எப்படி வரும்? எதுடா உன் வீடுன்னு கேட்டா கோவிந்தசாமி வீடு, எது குப்புசாமி வீடு, சிவசாமி வீடு தவிர மிச்சமெல்லாம் என் வீடுதான்னு பதில் வரும். அதான் இப்ப வந்திருக்கிற தீர்ப்பு. மத்தவனெல்லாம் பட்டாவைக் காட்டணும். இவுக மட்டும் நம்பிக்கை, பரம்பொருள்னு அடிச்சு விடுவாங்க.

“வெள்ளைக்காரன் மட்டும் இல்லைன்னா நாமள்ளாம் சைவம், வைஷ்ணவம், சாக்தம், கௌமாரம், காபாலிகம்னு ஒத்தருக்கொத்தர் அடிச்சுண்டு செத்திருப்போம். ஹிந்து மதம்னு ஒண்ணை உற்பத்தி பண்ணி நம்ம எல்லோரையும் ஒண்ணா சேத்தவன் வெள்ளைக்காரன்தான்” அப்டீன்னு காஞ்சி மகா பெரியவா எழுதி வச்சிருக்காள். அம்பிகளுக்குத் தெரியுமோ?

அயோத்தி ஒரு புனித ஸ்தலம்னு எந்த இந்துவும் எந்த காலத்திலயும் தீர்த்தயாத்திரை போனதில்லை. அது இந்தியா முழுவதும் புகழ் பெற்ற புனித ஸ்தலமானது 1980 களில்தான். அதுக்கு முன்னால ராமர் எப்படி இருப்பார்னு கேட்டா என்டி ராமராவ் மாதிரி இருப்பார்னு தான் மக்களிடமிருந்து பதில் வரும். ராமராவைப் பார்த்து மூஞ்சியில ராமர் கலரை பூசிக்கிட்டு, கூட ஒரு அனுமாரையும் கூட்டிகிட்டு, ஆர்மோனியப் பெட்டியோட சென்னை வீதிகளில் இன்னைக்கும் பாட்டுப்பாடி பிச்சை எடுக்கிறார்கள் தெலுங்கு தேசத்து ஏழைகள். அப்புறம் அதே வேசத்தை வச்சி ஆந்திராவின் முதலமைச்சர் ஆனார் என்டி ராமாராவ். 1980 களில் தூர்தர்சனில் ராமாயணம் போட்டு பிரபலமாக்கியதற்கு அப்புறமாதான், இந்த ராமனை வச்சி நாடு பூரா பிச்சை எடுக்கலாமே ங்கிற ஐடியா அத்வானிக்கு வந்தது. இதான் ராமஜன்ம்பூமியின் கதை. 1949 இல சிலைய அங்கே திருட்டுத்தனமா வச்சி கலவரத்தை உண்டுபண்ணப் பாத்தும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகளால முடியல. அப்புறம் பசுவதைத் தடுப்பு, உள்ளூர் கலவரம், ஏகாத்மத யாத்ரான்னு என்னென்னமோ பண்ணிப்பாத்து முடியாம கடைசியில கிளிக் ஆன ஐடியாதான் ராம ஜன்ம பூமி. மசூதிக்கு உள்ளே திருட்டுத்தனமா வச்ச சிலைக்கு வழிபாடு நடத்த திறந்து விட்டா உ.பியில இந்து ஓட்டை கவர் பண்ணிடலாம்னு நம்பி கதவைத்திறந்தாரு ராஜீவ் காந்தி. ஆனா அவர் நம்பிக்கைய அத்வானி பிக்பாக்கெட் அடிச்சிட்டாரு. இதான் கதை.

ஒரு பக்கம் நம்பிக்கைன்னு பேசுறது. இன்னொரு பக்கம் மசூதிக்கு அடியில கோயில் இடிபாடு இருந்தது, “ஆர்க்கியலாஜிகல் சர்வேயே சொல்லியிருக்காள்”னு அவுத்து விடறது. கோயில் இடிபாடு மட்டுமா இருந்த்து, பாரதிய ஜனதா ஆட்சியில நடத்திய அந்த ஆய்வுல எலும்பெல்லாம் கூடத்தான் கெடச்சது. அப்போ கோயில்ல உக்காந்து கறி தின்னது யாரு? அயோத்தி பல நூற்றாண்டுகள் தொன்மையான நகரம். ஏற்கெனவே அது பவுத்த மையம். இசுலாமியர்கள் ரொம்ப லேட்டா வந்தவங்க. அங்க வந்து மசூதி கட்ட ஆப்கானிஸ்தானிலேர்ந்தா நெலம் கொண்டு வர முடியும்? இந்தியாவுல வெள்ளைக்காரன் கட்டியிருக்குற கட்டிடங்களை தோண்டிப்பாத்தா எங்கயுமே அடியில கோயில் இருக்காதா? இல்ல இந்துக் கோயிலையெல்லாம் தோண்டிப்பாத்தா அடியில பவுத்த சமண விகாரைகள் இருக்காதா? அவ்வளவு ஏன், நீங்க நங்கநல்லூர், மடிப்பாக்கத்துல கட்டி கணபதி ஹோம்மஃ பண்ணி கிரகப் பிரவேசம் நடத்தின வீடுகளெல்லாம் கை படாத கன்னி நிலத்துல கட்டினதா? “சூத்ராள் சுடுகாடு இருந்த இடம்தான், இருந்தாலும் இந்தக் காலத்துல இதெல்லாம் பார்க்க முடியுமோ, சீப்பா கிடைக்கும்போது விடமுடியுமோ? பரிகாரம் பண்ணிட்டா போச்சு”ன்னு பூமிபூஜை போட்டு கட்டின வீட்ட இப்போ தோண்டிப்பாத்தா அடியில சுடுகாடு இருக்காதா? ஒரு முனீஸ்வரன் கோயில், ஒண்டிக் கருப்பணசாமி கோயில்கூட இருக்கதா? தோண்டிப் பார்க்கலாமா, தயாரா?

மத்தவனெல்லாம் கோயிலை இடிச்சு மசூதியோ, சர்ச்சோ கட்டினான். பார்ப்பன மதம் கடவுளய திருடின மதமாச்சே. சமண தீர்த்தங்கர்ருக்கு மூஞ்சியை மறச்சி நாமத்த போட்டு, கோயிந்தா கோயிந்தான்னு கதய முடிக்கலயா? ஒரே ஒரு நாள் வெங்கடாசலபதி டிரஸ்ஸைக் கழட்டி தண்ணி ஊத்திக் கழுவி ஒரிஜினல் உருவத்த காட்டச்சொல்லுங்க. அது சிரவண பெலகொலா விலேர்ந்து சுட்டுகிட்டு வந்தமாதிரி தெரியிதா இல்லயா பார்ப்போம்.

1980 களில் மகந்த், சாமியார், ராம கோபாலன் மாதிரி வேட்டி கட்டிய பார்ப்பனர்கள் டர்ரு புர்ருன்னு விட்ட அக்கிரகாரத்துக் குசுவையெல்லாம் இந்த தேசம் ஒரு மாதிரி சமாளிச்சிடுச்சி. ஆனா அவுகளோடு புத்திர சிகாமணிகள், ஜீன்ஸை மாட்டிகிட்டு கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து கிட்டு, சத்தம் வெளியே கேக்காம நசுக்கி நசுக்கி விடுற குசு இருக்கே… நாராயணா, இந்த குசுத்தொல்லை தாங்க முடியலடா….

________________________________________

தொரட்டி.
________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

 

 

  1. நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா… | வினவு!…

    ராம கோபாலன் டர்ரு புர்ருன்னு விட்ட குசுவையெல்லாம் சமாளிச்சிச்சோம், ஆனா கம்பீட்டர் முன்னால, சத்தமில்லாம நசுக்கி நசுக்கி விடுற குசு இருக்கே.. நாராயணா, இந்த குசுத்தொல்லை தாங்க முடியலடா…

  2. […] This post was mentioned on Twitter by வினவு and MUTHU KRISHNAN S, ஏழர. ஏழர said: நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா… http://bit.ly/a9xYt5 #MustRead #Retweet #AlmostSatire #Vinavu […]

  3. நாராயணா… இந்தக் குசுத்தொல்லை தாங்க முடியலடா…/////

    கையிருக்கும்ல. மூக்கை பொத்திகங்க. இது சொல்றதுக்கு ஒரு பதிவா.

  4. அனைத்து வரலாறுகளும், கால காலமாக பலவாறு திரிந்து, ஒவ்வொருவருக்கும் சாதகமாக, எழுதப்பட்டு வருகிறது! இன்று பலமிருக்கிறது என்பதற்காக, ஒருவர் வரலாற்றை மாற்ற முயன்றால், அது நம்மை கற்காலத்திற்கு கூட்டிச் சென்றுவிடும்!

  5. சரி! பாபர் தான் ராமர் கோவிலை இடித்து விட்டு மசூதி கட்டினார் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம்!
    இஸ்லாத்தை முறையாக பின்பற்றும் ஒரு இஸ்லாமிய மன்னர், கோவிலை இடிச்சிருந்தாலும், அங்கு மசூதியோ தர்காவோ கட்டினால் அது இஸ்லாத்துக்கு விரோதம் என்று தெரியாமல் அங்கேயாவா மசூதி கட்டுவார்? இடித்திருந்தாலும் வேறெங்கேயாவது தானே மசூதி கட்டி இருப்பார்! இல்லை, அவர் இஸ்லாத்தையே சரியா பின்பற்றவில்லை அதனால் இடித்த இடத்துல தான் கட்டுனார்ன்னு சொல்லவர்ராங்களா???

    இல்லை இடித்துவிட்டு அங்கே தான் கட்டினார் என்று சொன்னால், அதுக்கு ஆதாரம்??? ஆதாரமும் கிடையாதாம்… நம்பனுமாம்! ஏன்னா அது அவுங்க நம்பிக்கையாம்…..
    ஏண்டா நீங்களா ஒன்னு நினைசுக்குவீங்க, அதை எல்லாரும் நம்பனும், அது தான் உண்மை…. அப்படித்தானே?

    இதுவும் ஒரு தீர்ப்பு, நாடு இன்னுமா இந்த நீதிமன்றங்களை நம்புது??? 🙂

  6. சிந்தனையை இழந்தவர்களும், தனது (தகுதி) நிலை பறிபோய்விடுமென்ற பயமும் கொண்டவர்கள், அவசரத்திலும் ஆவேசத்திலும் ஆத்திரத்திலும் எழுதுவது போல் எழுத
    வினவிற்கு என்ன அவசரம்? ஆவேசம்? அல்லது ஆத்திரம்?

    வினையாற்றுதலும், நிகழும் தவறான வினைகளுக்கு எதிர்வினையாற்றுதலையும் விட்டுவிட்டு, இதுபோல் – மொக்கையென்று கூடச் சொல்ல முடியாத பதிவொன்றை வினவு பதித்ததற்கான காரணம் என்னவோ?

    கருத்துப் பரிமாற்றங்களும், ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் பஞ்சம் வரவில்லையே?

    • Dear Nambi,
      Today, Romila Thapar, the great historian of our living time says in
      ‘The Hindu’ that this verdict has annulled the respect of history and seeks to replace faith in the place of history’. How dangerous this trend would be. So it is apt to to criticise this judgment with a suitable language it deserves which has neither the merit of historical evidence and not stood on any hard facts. To hear ‘it is the belief of every Hindu that Ram was born under the dome of Babri Masjid’ is least expected from an honorable judge. He could well have been an RSS SPOKES PERSON, rather occupying a constitutional position. In Ayodhya, there are several Ram temples where the local folks believe Ram was born in there respective temples. More so, Ram is not worshipped by ‘all Hindus’ as God. In Kamba Ramayana his stature is mere a King. He was generally worshiped as God only after 12th century. But the events of Ramayana were considered to have taken place Before Christ. So in all respects this verdict is one-sided, anachronistic and judicial over-reach.

  7. நல்ல எள்ளல்…!

    //எதுடா உன் வீடுன்னு கேட்டா கோவிந்தசாமி வீடு, எது குப்புசாமி வீடு, சிவசாமி வீடு தவிர மிச்சமெல்லாம் என் வீடுதான்னு பதில் வரும். அதான் இப்ப வந்திருக்கிற தீர்ப்பு. மத்தவனெல்லாம் பட்டாவைக் காட்டணும். இவுக மட்டும் நம்பிக்கை, பரம்பொருள்னு அடிச்சு விடுவாங்க.//

  8. இஸ்லாமிய குடியிருப்புகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் காவலர் நாய்கள் அதிகமாக வேட்டைக்கு நின்றது. தங்களுக்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து செய்த பின்பும் இந்துக்கள் முகத்தில் மலம் அடித்தது போல எந்தவொரு வன்முறை சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆக பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண் இந்துத்துவம் என்பதை காலம் காட்டிக்கொடுத்துவிட்டது. இதே இந்து பயங்கரவாதத்திற்கு எதிராக கட்டப்பஞ்சாயத்து செய்யப்பட்டிருந்தால்???
    இஸ்லாமிய தீவிரவாதிகளிடமிருந்து இந்துக்களைத் [obscured] பாதுகாத்துக் கொண்டிருக்கிற பாரதமாதாவோடு இப்போது நீதிதேவதையும் கால்கோர்த்து பாதுகாத்து நிற்கிறாள் கண்ணைக்கட்டிகொண்டு! வாழ்க பெரும்பான்மை.

  9. கேலிக்குரிய இந்து பாசிச பயங்கரவாத தீர்ப்புகளும், கட்டைப்பஞ்சாயத்து செய்யும் சட்டமும் நீதியும்

    பதிவேற்றியது பி.இரயாகரன் Saturday, 02 October 2010 08:53 பி.இரயாகரன் – சமர் 2010

    400 வருடமாக இருந்த பாபர் மசூதியை இடித்து, மூஸ்லீம் மக்களைக் கொன்று குவித்த செயலை சரி என்கின்றது இந்திய நீதிமன்றம். சட்டம் அதைத்தான் சொல்லுகின்றதாம். அதாவது 400 வருடத்துக்கு முன் இதில் மசூதி இருக்கவில்லை, எனவே இடித்தது சரி. நீதிமன்றம் ஒரு தீர்ப்பு மூலம் இடிக்க வேண்டியதை, இந்து வானரக் கூட்டம் சட்டத்தை கையில் எடுத்து செய்தது சரியானது என்பதுதான் தீர்ப்பின் உள்ளடக்கம். 400 வருடத்துக்கு முன் சென்ற வரலாற்றை இந்து பாசிச கும்பலின் ரவுடிக் கும்பலாக மாறி புரட்டியுள்ளது.
    தீர்ப்பைச் சுற்றி வளைத்துச் சொன்னது, இந்திய இந்துத்துவ பார்ப்பனிய நாடு. யாரும் இதற்கு எதிராக வாலாட்ட முடியாது. இப்படி இந்துத்துவ காவிகளின் பாசிசப் பயங்கரவாத செயல்கள் சரியானது என்று நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதை அவர்கள் சொன்ன விதம் தான் வேறு. இந்து பாசிட்டுகள் எதைக் கோரினரோ, அதை நீதிபதிகள் ….

    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=7500:2010-10-02-08-57-09&catid=322:2010

  10. best thing that should have been done is to throw away the ram statues that are kept inside the masjid and acquire the land. this govt doesnot have the guts to do it.
    s seshan

  11. அயோத்தி தீர்ப்பு: புளுகும் இந்துத்வ கூட்டம்.

    அயோத்தி தீர்ப்பில் சர்ச்சைக்குரிய இடம் “இராமர் பிறந்த இடம்” என்று நீதிமன்றம் கூறிவிட்டதாக பரப்புரை செய்யப்படுகிறது. ஆனால் அவ்வாறு தீர்ப்பில் கூறப்படவில்லை.

    விரிவாக இங்கே:

    http://arulgreen.blogspot.com/2010/10/blog-post.html

  12. இப்போதுதான் படித்தேன்.
    இந்து என்கிற தவறான கற்பிதத்தை வைத்துக்கொண்டு, இவர்கள் பண்கிற அழிச்சாட்டியங்களை டிரெஸ் உரித்து இல்லை, தோல் உரித்துக் காட்டி இருக்கிறீர்கள். எள்ளலோடு, உண்மைகளை எடுத்து வைத்திருக்கிறீர்கள்.

    வினவுத்தோழர்களுக்கு சல்யூட்!

  13. What happened to vinavu? Ithu pola oru mattamana writing nan padichathu illai.Neeyum ithe internetla than KUSU VIDURADA . oru velai antha natham thangama ezuthitta pola.Pithamagan moviela Oru dialogue irukku ” Eppo KUSU vittavan unmiya othukittu irukkan. athu pola KUSU vitta nee aduthuvana parthu sonuda vidura.

    Eppothan unmiyana problem ku pesa poringalo.

  14. hai vinavu, i also do not accept caste and religion. but i dont know why you always support for muslim religion. point out mistakes from all the religion, not only from hindu. that is why many terrorists were came from muslim.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க