privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்நூல் அறிமுகம்கீழைக்காற்று வெளியீட்டு விழா! அறிவுப்பசிக்கு விருந்து !!

கீழைக்காற்று வெளியீட்டு விழா! அறிவுப்பசிக்கு விருந்து !!

-

ஓவியர் மருது நூல் வெளியிட கவிஞர் தமிழேந்தி பெற்றுக்கொள்கிறார்
ஓவியர் மருது நூல் வெளியிட கவிஞர் தமிழேந்தி பெற்றுக்கொள்கிறார்

வெஜிட்டபிள் கட்லெட், மசால் தோசை, மசாலா இல்லாத தோசை, இஞ்சி டீ, சாதா டீ, சமோசா இதெல்லாம் புத்தக வெளியீட்டுக்கு முன்பு, முடிந்த பின் காக்டெயில், அப்சல்யூட் ஓட்கா, ரெமி மார்ட்டின். இந்தக் காட்சிகள் எல்லாம் சமீபத்தில் சென்னையில் நடக்கும் சில நூல் வெளியீட்டு விழாக் காட்சிகள். நுகரும் மூக்கின் வாசனை உணர்வுக்கும், நாக்கின் ருசிக்கும் எச்சிலை ஊற வைத்து கூவிக் கூவி அழைக்கிறார்கள், அந்த நூல் அறிமுக கூட்டங்களுக்கு. அப்படியும் அங்கே அரங்கு நிறைய சிரமப்படுகிறது.

மருத்துவர்-ருத்ரன்-நூல்-வெளியிட-பதிவர்-சந்தனமுல்லை-பெற்றுக்கொள்கிறார்
மருத்துவர் ருத்ரன் நூல் வெளியிட பதிவர் சந்தனமுல்லை பெற்றுக்கொள்கிறார்

கட் அவுட் இல்லை, கட்லெட் இல்லை, சமோசா இல்லை முக்கியமாக சொறிந்து விட அல்லக்கைகள் இல்லை, ஆனால் அந்த திறந்த வெளி அரங்கில் நூற்றுக் கணக்கில் போடப்பட்டிருந்த அத்தனை இருக்கைகளும் நிரம்பி பரந்த அந்த மைதானத்தில் நின்ற படியே கடைசி வரை கலையாமல் நின்றார்கள் மக்கள். 26-12-2010  அன்று ஞாயிற்றுக் கிழமை கீழைக்காற்று பதிப்பகத்தின் எட்டு நூல்கள் வெளியீட்டு விழாவில்தான் இந்த காட்சிகள்.  கூட்டம் துவங்குவதற்கு முன்னரே வந்திருந்த பார்வையாளர்கள் தள்ளுபடி விலையில் நூல்களை வாங்கிக் கொண்டனர்.

புரட்சிகர-மாணவர்-இளைஞர்-முண்ணனி-தோழர்களின்-பாடல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனி தோழர்களின் பாடல்

முன்னர் எல்லாம் தோழர்களின் கூட்டம் என்றால் ஒரு சில உளவுத்துறையினரே வருவார்கள். சமீபகாலமாக பல பத்து பேர் வந்து சத்தமில்லாமல் வந்து அமர்ந்து குறிப்பெடுக்கிறார்கள். தோழர்கள் என்ன பேசுகிறார்கள் என்று பதிவு செய்கிறார்கள். நூல் வெளியீட்டுக் கூட்டத்தில் கூட புரட்சிகர கருத்துகள் வெளியிடப்படும் ‘அபாயம்’ குறித்து அரசுக்குத்தான் எத்தனை கவலை!

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா- உரையாற்றிய மருத்துவர் ருத்ரன்
மருத்துவர் ருத்ரன்

ஓவியர் மருது, மருத்துவர் ருத்ரன், கவிஞர் தமிழேந்தி, பதிவர் சந்தனமுல்லை,தோழர் மருதையன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவரையும் வரவேற்றுப் பேசிய கீழைக்காற்று பதிப்பக பொறுப்பாளர் தோழர் துரை. சண்முகம் பேசும் போது, தமிழகத்தில் படைப்புலகத்தை  நாசமாக்கி வருமானம் ஈட்டும் தொழிலாகப் பார்க்கும் பதிப்பக அரசியலை அம்பலப்படுத்திப் பேசினார். அரசு படிப்பகங்களுக்கு வாங்கும் நூல்களுக்காக பதிப்பகங்கள் எப்படி ஆளும் வர்க்கங்களுக்கு கால் கழுவி வாழ்கிறார்கள் என்பதைப் பேசிய துரை. சண்முகம் புத்தகக் கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கிற்கு வாசகர்களிடம் கிடைத்திருக்கும் பெரும் வரவேற்பை குறிப்பிட்டார்.

துரை-சண்முகம்
உரையாற்றிய துரை சண்முகம் – கீழைக்காற்று

“எங்கள் கடையில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்குக் கூட நூல்களை விற்பனை செய்கிறோம். அப்படி வாங்குகிறவர்களை மரியாதையாகவும் கௌரவத்தோடும் நடத்துகிறோம். ஏனென்றால் அவர்கள் வாடிக்கையாளர்கள் என்பதால் அல்ல, நாங்கள் ஒரு உயரிய அரசியல் நோக்கத்திற்காக இதை நடத்துகிறோம் என்பதால். நாங்கள் வெளியிடும் புரட்சிகரத் தலைவர்களின் நூல்களைப் பார்த்து விட்டு இப்போது சிலர் லெனின், மாவோ நூல்களை வெளியிடத் துவங்கியுள்ளார்கள். முன்னர் தோழர் ஸ்டாலினை  பாசிஸ்ட் என்று சொன்னவர்கள் இவர்கள். நாளை எங்களைப் பார்த்து இந்தப் பதிப்பகங்கள் ஸ்டாலின் நூலைப் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை”” என்று விற்பனை வெறியும், லாப வெறியும் கொண்டு இயங்கும் பதிப்பகங்களை விமர்சனம் செய்து பேசினார்  தோழர் துரை. சண்முகம்.

உரையாற்றிய கவிஞர்-தமிழேந்தி
கவிஞர் தமிழேந்தி

அடுத்துப் பேசிய கவிஞர் தமிழேந்தி கீழைக்காற்று நூலகத்தின் தேவை குறித்தும் அது புரட்சிகர இடதுசாரித் தோழர்களுக்கு மட்டுமல்லாது ஜனநாயகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரின் அறிவுத் தேடலுக்கான களமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். வாழ்த்திப் பேசிய மருத்துவர் ருதரன் தனக்கும் தோழர்களுக்குமான நெருக்கம் குறித்து நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். “தன் மீது சொல்லப்படும் விமரிசனங்கள் குறித்து கவலைப்படவில்லை. எங்கும் எப்போதும் என்னை நான் மறைத்துக் கொண்டதுமில்லை” என்று பேசினார்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-ஓவியர்-மருது
ஓவியர் மருது

தனது ஓவியங்கள் குறித்துப் பேசிய ஓவியர் மருது “எனது ஓவியங்கள் எப்படியான வடிவில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்று விரும்பினேனோ அப்படி அதை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் தோழர்கள். அந்த வகையில் எனக்கு இது மிகப்பெரிய மகிழ்ச்சியளிக்கிறது”” என்று பேசினார். பதிவரும் தோழருமான சந்தனமுல்லை ஒரு பெண்ணாக பதிவுலகிலும், சமூகத்திலும் எதிர்கொள்ளும் ஆணாதிக்கத்தை நடமுறை வாழ்வியல் அனுபவத்திலிருந்து பேசினார். மிக இயல்பாகவும் எளிமையாகவும் இருந்த சந்தனமுல்லையின் உரையை முழுமையாக வினவும் விரைவில் வெளியிட இருக்கிறது.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-பதிவர்-சந்தனமுல்லை
பதிவர் சந்தனமுல்லை

இறுதியில் ””படித்து முடித்த பின்”” என்னும் தலைப்பில் மிகச் சிறந்த ஒன்றரை மணி நேர உரையை  நிகழ்த்தினார் தோழர் மருதையன். “அறிவுத்தேடல், ஏகாதிபத்திய அறிவுஜீவிகளை எப்படி எதிர்கொள்வது? வாசிப்பனுபவம், மூளையை ஊனமாக்கும் நவீன ஊடகச் செயல்பாடுகளை எப்படி எதிர்கொள்வது? எதை வாசிப்பது, எப்படி வாசிப்பது? எதிரிகளின் பிரச்சாரங்களை எப்படி எதிர்கொள்வது” என்று இன்றைய மறுகாலனியாக்க உலகில் நாம் எதிர்கொள்ளும் எல்லா சம காலப் பிரச்சனைகளையும் மிக அற்புதமாக படம் பிடித்துக் காட்டினார். விரைவில் தோழர் மருதையனின் முழு உரையும் வினவில் வெளிவரும்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-உரையாற்றிய-தோழர்-மருதையன்
தோழர் மருதையன்

மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடந்த கூட்டத்தில். கட்டுக்கோப்பாக இருந்து கடைசி வரை அமர்ந்திருந்து தோழர்களை உற்சாக மூட்டினார்கள் மக்கள்.  பசிதாங்க முடியாத நடுத்ததர வர்க்கத்தின் அறிவுப் பசிக்கும், நாக்கு ருசிக்கும், பந்தி வைத்து பரிமாறும் இலக்கிய மொக்கைகளின் கூட்டங்களுக்கு மத்தியில் மக்கள் விடுதலையை  நெஞ்சிலேந்தி அறிவை விசாலாமாக்கி அனைவருக்கும் உண்மையான விருந்தளித்த கூட்டம் இதுதான்.

கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா- மக்கள்-திரள்
மேடையில்

நிகழ்ச்சிக்கு பல பதிவர்களும், வாசகர்களும் வந்திருந்தார்கள். விழாவில் எட்டு நூல்களும் செட்டாக நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விற்பனை ஆனது. அனைவருக்கும் கீழைக்காற்று, வினவு சார்பாக நன்றிகள்.கீழைக்காற்று-வெளீயீட்டு-விழா-மக்கள்-திரள்

____________________

– வினவு செய்தியாளர்
____________________