privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

ரூ 3,74,937 கோடி ஊழல்!

-

ஆண்டுதோறும் (இந்திய) மத்திய அரசின் நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கை – அதனைத் தொடர்ந்து அந்தந்த மாநில அரசின் பட்ஜெட்.  அதற்கு 3 தினங்களுக்கு முன்பிருந்தே சம்பளப்பிரிவினர் என்று சொல்லப்படுகின்ற 2 சதவீதமாகவுள்ள நடுத்தர வர்க்கம், அன்றாடங் காய்ச்சிகளாக இருக்கிற திருவாளர் பொதுஜனம் ஆகிய அனைவரும் பரபரப்பாக இதில் அளிக்கப்படவுள்ள‌ சலுகைகளில் பெருமளவு தனக்குத்தான் கிடைக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்போடு இருப்பார்கள். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட மறுநாள் செய்தித்தாள்களில் நிதியமைச்சர் பெரிய பெட்டியுடன் வரும் படம், பாராளுமன்ற உறுப்பினராயிருக்கின்ற தனது அபிமான நடிக, நடிகையரில் எவ‌ரேனும் இருவரது புகைப்படங்களுடன் செய்திகள் வந்தவுடன் மேலோட்டமாக சம்பளத்தில் பிடிக்கப்படும் வருமான வரிக்கு என்ன சலுகை என்பதைப் பார்த்து விட்டு முனகி க்கொண்டே சம்பளப் பிரிவினர் ஒதுங்கி விடுவர்.  திருவாளர் அன்றாடங் காய்ச்சியோ சிகரெட், பீடி விலை உயர்ந்திருக்கிறதா, இல்லையா என்று பார்ப்பதோடு அவரது கடமை முடிந்தது. ஆளும் ஓட்டுக் கட்சியினர் எதையும் படித்துப் பார்க்காமல் எளியோருக்கான மிகச்சிறந்த பட்ஜெட் என்ற பேட்டியையும், எதிர் கட்சியானால் வருகின்ற தேர்தலைக் குறி வைத்து தயாரிக்கப்பட்டிருக்கிற ஆசை வார்த்தை பட்ஜெட், மற்றபடி ஏழை எளியோருக்கு எதுவும் சொல்லப்படவில்லை.  இதில்லை – அதில்லை என்று அறிக்கையோடு அவர் பணியும் முடிந்து விடும்.  மாவட்டந்தோறும் இருக்கிற சேம்பர் ஆப் காமர்ஸ் என்ற முதலாளிகளின் சங்கத்தில் யார் தலைவராக இருக்கிறாரோ அவர் சார்ந்த வணிகத்திற்கு சலுகை இருந்தால் அதைச் சிறந்த பட்ஜெட் என்றும், அவருக்கு சலுகை இல்லையெனில் அந்த வியாபாரத்தைக் குறிப்பிட்டு அதற்கு சலுகை வழங்கியிருக்க வேண்டும் என்ற கருத்தை தெரிவிப்பதுடன் அவர்களது பணி முடிந்து விடும்.

சம்பளப் பிரிவினரிடமும், அப்பாவி பொதுமக்களின் அன்றாட வாங்கும் உணவு உள்ளிட்ட பொருட்களிலும் கராராக வரி வசூல் செய்யும் அரசு, வரிச்சலுகை, வரி வசூலாகா விட்டால் தள்ளுபடி என்பதெல்லாம் அனைத்து பட்ஜெட்களிலும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்குத்தான் என்பதை ஆதாரப்பூர்வமாக  பி.சாய்நாத், தி இந்து ஆங்கில நாளிதழுக்கு எழுதியிருக்கிற கட்டுரையில் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

Corporate socialism's 2G orgy
படம் - http://www.thehindu.com

 

ஸ்பெக்டிரம் விஞ்சும் கார்ப்பரேட் ஆபாசம் !

– பி.சாய்நாத்

இந்திய அரசின் பட்ஜெட் அறிவிப்பின்படி, நாளொன்றுக்கு கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து அரசிற்கு வர வேண்டிய வருமான வரி பாக்கி ரூ 240 கோடி வரை வசூலிக்க முடியாதவை எனக் குறிப்பிட்டு அது தள்ளுபடி செய்யப்படுகிறது. அந்தத் தொகை தினசரி சட்டவிரோதமாக அந்நிய நாட்டு வங்கிகளுக்கு முதலீடுகளாகச் சென்று கொண்டிருக்கிறது. 2005-06 முதல் கடந்த 6 ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி அடுத்தடுத்த நிதிநிலை அறிக்கைகளில் (பட்ஜெட்) வராக்கடனாக  தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இது 2ஜி ஊழல் தொகையை விட இரண்டு மடங்கிற்கும் சற்று அதிகமாகும். கையிலுள்ள புள்ளி விபரங்களின்படி இந்தந் தொகை ஆண்டுதோறும் உயர்ந்து கொண்டுதானிருக்கிறது.

2005-06இல் கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வசூலாக வேண்டியிருந்த வருமான வரி ரூ 34,618 கோடி வராத வகை என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  நடப்பு நிதிநிலை அறிக்கையில் அந்தத் தொகை ரூ 88,263 கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 155 சதவீதம் உயர்ந்துள்ளது.  இந்த தேசம் தினசரி கார்ப்பரேட் முதலாளிகளிடமிருந்து தனக்கு வர வேண்டிய ரூ. 240 கோடியை தள்ளுபடி செய்து கொண்டிருக்கிறது.  குறிப்பாக வாஷிங்டனைச் சேர்ந்த உலக நிதி நாணய நிறுவன அறிக்கையின்படி, நம் நாட்டிலிருந்து கள்ளத்தனமாக வெளிநாட்டு வங்கிகளுக்கு செல்லும் தொகையும் அந்த அளவிற்கு உள்ளது.

ரூ 88,263 கோடி என்பது கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கான வருமான வரியை வராக்கடன் என‌ தள்ளுபடி செய்த வகை  மட்டுமே.  இதில் பொதுமக்களில் பெரும் பகுதியினருக்கு உயர் விதிவிலக்கு வரம்பை மாற்றுவதால் குறையும் வருவாய் என்பது சேர்க்கப் படவில்லை.  இந்த வருவாய் இழப்பு என்பது மூத்த குடிமக்களுக்கோ, அல்லது பெண்களுக்கோ முந்தைய பட்ஜெட்டில் வழங்கப்பட்ட சலுகைகளினால் அல்ல.  கார்ப்பரேட் பெருமுதலாளிகள் செலுத்த வேண்டிய வருமான வரி மட்டுமே இந்தத் தொகையாகும்.

பிரணாப் முகர்ஜியின் சமீபத்திய பட்ஜெட்டில் இந்த அளவிற்கான மிகப்பெரும் தொகை கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு தள்ளுபடி என்பது ஒரு புறமிருக்க, மறுபுறம் விவசாயத்திற்கான ஒதுக்கீடு என்பது ஆயிரக்கணக்கான கோடிகளில் குறைந்துள்ளது.  டாடா இன்ஸ்டிடியூட் ஆப் சோசியல் சயின்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த திரு ஆர்.ராம்குமார் குறிப்பிடுவதைப் போல – அந்தப் பகுதிக்கான வருவாய் செலவினம் என்பது ரூ. 5568 கோடி வரை குறைந்துள்ளது.  விவசாயத்திற்குள்ளே பயிர்ப்பாதுகாப்பு என்பதற்கு மட்டும் உள்ள தொகையில் ரூ. 4477 கோடி குறைக்கப்பட்டுள்ளது.  அந்தப் பிரிவில் விரிவாக்கத்திற்கான வாய்ப்பு மறைந்துவிட்டதாகவே கருத வேண்டியுள்ளது.  உண்மையில்  பொருளாதார சேவையில் விவசாயம் மற்றும் அது சார்ந்த பணிகளுக்கு பெருமளவில் நிதி குறைக்கப்பட்டுள்ளது.

இவை கருத்தளவிலான வருவாய் இழப்பு மட்டுமே என கபில் சிபல் கூட வாதிட முடியாது.  ஒவ்வொரு பட்ஜெட்டிலும் இது போன்ற எண்கள் ‘வராத வருவாய்ப் பட்டியல்‘ என்ற அளவில் சேர்த்துக் கொண்டே செல்லப்படுகிறது.  இது கார்ப்பரேட் முதலாளிகளின் கடலில் விழும் மழையோடு, ஆயத்தீர்வை மற்றும் சுங்க வரிகளில் அரசு விட்டுக்கொடுக்கும் சலுகைளையும் சேர்த்தால் சமூகத்தில் நல்ல நிலையிலுள்ள பெருமுதலாளிகளுக்குத்தான் பெரிய அளவில் பயன் முழுவதும் சென்று சேருகிறது.  தொகைகளைப் பார்த்தால் மனதை அதிர வைக்கிறது.  உதாரணத்திற்கு பெரிய அளவில் சுங்க வரி அரசிற்கு வர வேண்டியதை விட்டுக் கொடுக்கும் சில இனங்களைப் பார்ப்போம்.  வைரத்தையும், தங்கத்தையும் எடுத்துக் கொள்வோம்.  இந்த நடப்பு பட்ஜெட்டில் மிக அதிக அளவிலான சுங்கவரி விட்டுக் கொடுத்தல் இதற்கு ரூ. 48,798 கோடியளவிற்கு வழங்கப்பட்டுள்ளது.  அதாவது ஒட்டுமொத்த பொது விநியோக முறைக்கு ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கும் தொகையில் பாதி இது.  கடந்த 3 ஆண்டுகளில் வைரம், தங்கம், தங்க நகைகளுக்கான சுங்கவரி வராக்கடன் என்ற வகையில் தள்ளுபடி மாத்திரம் ரூ. 95,675 கோடியாகும்.

இந்த இந்தியாவில்தான் தனியார் லாபத்திற்காக கொள்ளையடிக்கப்படுகிற பொதுமக்களது பணப்புழக்கம் என்பது வளர்ச்சிக்கான அளவாக சொல்லப்படுகிறது.  வளர்ந்து வரும் பொருளாதாரச் சிக்கலில் தங்கத்திற்கும், வைரத்திற்கும் பெரிய அளவிலான வரிச்சலுகை என்பது, ஏழை தொழிலாளர்களின் பணியைக் காப்பதற்கான நடவடிக்கையே என்ற ஒரு வாதத்தை நீங்கள் ஏற்கெனவே  கேள்விப்பட்டிருக்கலாம்.  மனதைத் தொடுகிறது. சொல்லப்போனால் அது சூரத்திலோ, வேறு எங்குமோ ஒருவரின் வேலையைக் கூட காப்பாற்றவில்லை.  சுரங்கத் தொழிலில் வேலையின்றி பல ஒரிசா தொழிலாளர்கள் சூரத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.  இன்னும் பிற தொழிலாளர்கள் விரக்தியில் தங்கள் வாழ்வை ஓட்டிக்கொண்டு இருக்கின்றனர்.  தொழிற்சாலைகளுக்கான சலுகை என்பது 2008ஆம் ஆண்டு நெருக்கடிக்கு முன்னரே இருந்து வருகிறது.  மத்திய அரசின் கார்ப்பரேட் பொதுவுடைமையினால் மகாராஷ்டிர தொழிற்சாலைகள் பெரும் அளவில் பயனடைந்துள்ளன.
ஆம் 2008 நெருக்கடிக்கு முந்தைய 3 ஆண்டுகளில் அந்த மாநிலத்தில் தினத்திற்கு 1800 பேர் வீதம் வேலை இழந்துள்ளனர்.

பட்ஜெட்டிற்கு திரும்ப வருவோம்.  ’இயந்திரங்கள்’ என்ற தலைப்பிலும் பெரிய அளவில் சுங்க வரிச்சலுகை கொடுக்கப்பட்டுள்ளது.  இவை கண்டிப்பாக கார்ப்பரேட் பெருமுதலாளிகள் நடத்தும் தனியார் மருத்துவமனைகளுக்கு வாங்கப்படும் நவீன மருத்துவ சாதனங்கைள உள்ளடக்கியது என்பதுடன், அவற்றிற்கு ஏறக்குறைய வரியே விதிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். தங்கள் மருத்துவமனைப் படுக்கைகளில் 30 சதவீதம் ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவதாக இந்த வரிச்சலுகை பெறுவதற்கு காரணம் சொல்லப்பட்ட போதிலும், அவை எப்போதும் நிகழ்வ‌தில்லை.  மாறாக மற்றவர்களிடமிருந்து மாறுபடுவது போல காண்பித்து, பல கோடி ரூபாய் தொழிலுக்கு (மருத்துவமனைகளுக்கு) சலுகையை பெற சொல்லப்படும் ஒரு சமாதானம் மட்டுமே.  சுங்க வரியில் மொத்த வருவாய் விட்டுக் கொடுத்தல்தான். இந்த பட்ஜெட்டில் இந்த இனத்திற்கு 1,74,418 கோடி (இதில் ஏற்றுமதி சலுகைக்கான எண்கள் சேர்க்கப்படவில்லை).

இது போன்ற சுங்க வரியில் அரசிற்கு வரவேண்டிய வருவாயை விட்டுக் கொடுப்பதன் மூலம் மறுபுறம் நுகர்வோர்களுக்கு விலை குறைப்பு என்ற வகையில் அந்தத் தொகைகள் மாற்றப்பட்டு இறுதியாக நுகர்வோரைச் சென்றடைகிறது எனச் சொல்லப்படுகிறது.  ஆனால் அவ்வாறு நடைபெறுகிறதா என்பதற்கு எவ்வித ஆதாரமுமில்லை.  பட்ஜெட்டில் மட்டுமல்ல, வேறு எங்குமில்லை. (ஆனால் தற்போது சில தமிழக கிராமங்களில் 2ஜி என்ற வகையில் எந்தத் தொகையும் கொள்ளையடிக்கப்படவில்லை – மாறாக  மக்களிடம் மலிவுக் கட்டணத்தை வசூலிக்க வைத்ததன் மூலம் மீந்த பணம் மக்களைத்தான் சென்றடைந்துள்ளது என்ற வாதம்தான் ஓங்கி ஒலிக்கிறது).  ஆனால் வெளிப்படையாக தெரிவது யாதெனில் சுங்கவரி வராக்கடன் தள்ளுபடி என்பது தொழிற்சாலைக்கும், வியாபாரத்திற்கும் நேரடியாகக் கிடைக்கின்ற பயன் ஆகும்.  மக்களை / நுகர்வோரைச் சென்றடைகிறது என்பது ஏமாற்று வாதம்தான், உண்மையல்ல.   இந்த பட்ஜெட்டில் சுங்க வரி வராக்கடன் வருவாய் இழப்பு மட்டும் ரூ 1,98,291 கோடி என சொல்லப்பட்டுள்ளது.  தெளிவாக 2ஜி ஊழல் இழப்பை விட அதிகம் (கடந்த ஆண்டு வருவாய் இழப்பு ரூ 1,69,121 கோடி).

இதில் கவரக்கூடிய அம்சம் யாதெனில், ஒரே பிரிவினர் 3 விதமான வராத்தொகை தள்ளுபடி மூலம் பயனடைகின்றனர்.  ஆனால் தற்போது வரா இனம் என கார்ப்பரேட் பெருமுதலாளிகளிடமிருந்து வர வேண்டிய வருமான வரி, சுங்கவரி, ஆயத்தீர்வை ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளில் மொத்தமாக  எவ்வளவு தொகை என்று பார்க்கலாம்.  தற்போது கைவசமிருக்கிற 2005-06 முதலான 6 ஆண்டு விவரங்களில் 2005-06ல் மட்டும் ரூ. 2,29,108 கோடி.  நடப்பாண்டு பட்ஜெட்டில் இரட்டிப்பாகி அது ரூ. 4,60,972 கோடி.  கடந்த 6 ஆண்டுகளின் இழந்த இத்தொகையைக் கூட்டினால் ரூ 21,25,023 கோடிகள் அல்லது அரை டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு அருகில் உள்ள தொகை.  இது 2ஜி அலைக்கற்றை ஊழல் மதிப்பீட்டுத் தொகையைப்போல் 12 மடங்கு மட்டுமல்ல, உலக நிதி நாணய நிறுவனம் சமீபத்தில் கணக்கிட்டுள்ளபடி இந்த நாட்டைவிட்டு கள்ளத்தனமாக /சட்ட விரோதமாக 1948 லிருந்து வெளிநாட்டு வங்கிகளுக்கு முதலீடாகச் சென்றுள்ள ரூ 21 லட்சம் கோடி தொகைக்கு சமம் அல்லது கூடுதலாகும் (462 பில்லியன் டாலர்).  இந்தக் கொள்ளை என்பது 2005-06 தொடங்கி 6 ஆண்டுகளில் மட்டும் நடைபெற்றுள்ளது.  நடப்பு பட்ஜெட்டில் இந்த 3 தலைப்பிலான தொகை மட்டும் 2005-06 ஐ விட 101 சதவீதம் அதிகம் (பட்டியலைப் பார்வையிடவும்).

கள்ளத்தனமாக வெளிநாட்டு முதலீடு என்பது போலல்லாமல் – இந்தக் கொள்ளைக்கு சட்டப் பாதுகாப்பும் உள்ளது.  இது முந்தையது போல் பல தனி நபர் குற்றங்களின் கூட்டுத் தொகையல்ல.  மாறாக, அரசின் கொள்கை முடிவு.  இது மத்திய (இந்திய) அரசாங்கத்தின் பட்ஜெட்.  இத்தகைய பணபலம் பொருந்திய கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மேலும் சொத்து சேரும் வகையில் நடைபெறும் இந்தப் பரிமாற்றங்களை எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை.  சொல்லப் போனால் பட்ஜெட் கூட இது எந்த வகையிலான வருந்தத்தக்க போக்கு என்பதை உணர்வதில்லை.  கார்ப்பரேட் வருமானத்தைப் பொறுத்தவரை வராத வகை வருவாய் என்ற விட்டுக்கொடுத்தல் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.  ஒட்டுமொத்த வரி வசூல் என்பதை விட வராத வகையென்ற வரி விட்டுக்கொடுக்கும் தொகை என்பது 2008-09இல் அதிகமாகவே உள்ளது.  மறைமுக வரி வசூல் என்பதில் 2009-10இல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான சலுகை என்பது குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.  சுங்கவரி மற்றும் ஆயத்தீர்வையில் சலுகையளித்துள்ளதே இதற்கு காரணம். எனவே வரி வசூலைப் பொறுத்தவரை இது எதிர்மறையிலான விளைவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

ஒரு ஆண்டு முன்னால் சென்று பார்ப்போம்.  2009-10 பட்ஜெட்டில் இதே வார்த்தைகளுடன் சலுகை சொல்லப்பட்டிருந்தது.  கடைசி சொற்றொடரில் மட்டும் மாற்றம் இருந்தது.  ‘எனவே அதிக அளவில் வரி வசூலில் மிதப்புத் தன்மையிலிருந்து மீண்டு நிலைநிறுத்த இந்த போக்கு மாற்றப்பட வேண்டும்‘.  ஆனால் நடப்பு பட்ஜெட்டில் இந்த வார்த்தைகள் இல்லை.

அனைத்து மக்களுக்கான பொது விநியோகமுறைக்குப் பணம் எதுவும் இல்லை அல்லது அந்த முறை விரிவாக்கப்படாது என்கிறது இந்த அரசு.  பசி மிகுதியாக உள்ள மக்கள் தொகையினருக்கு வழங்கப்படும் உணவு மானியங்களில் சிறுக சிறுக வெட்டப்படுகிறது.  அதே சமயம் விலைவாசி உயர்வும், உணவுத் தட்டுப்பாடும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.  இந்த அரசினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார ஆய்வறிக்கையை பார்க்கிறபோது 2005-09 ஐந்தாண்டு காலத்தில் ஒவ்வொரு மனிதருக்குமான தினசரி தேவைக்கான உணவு தானிய இருப்பைப் பார்த்தால் அரை நூற்றாண்டுக்கு முந்தைய 1955-59இல் இருந்ததை விடக் குறைவுதான்.

___________________________________
நன்றி – தி இந்து 07/03/11)
– தமிழாக்கம் : சித்ரகுப்தன்
_____________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. ரூ 3,74,937 கோடி ஊழல் ! | வினவு!…

    கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து இந்திய அரசிற்கு வர வேண்டிய ரூ 3,74,937 கோடி வருமான வரி வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது ஸ்பெக்ட்ரம் ஊழலை விட 2 மடங்கு அதிகம்….

  2. சென்ற ஆண்டு பட்ஜெட்ட சமயத்தில், இதே போல் சாய்நாத் அவர்களின் கருத்துகளை பற்றி வேறு ஒரு தளத்தில் நடந்த விவாதத்தில் நான் எழுதிய நீண்ட பதிவு :

    திரு.சாய்நாத் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை உண்டு. பல வருடங்களாக அவரின் கட்டுரைகளை படித்து வருகிறேன். விவசாயிகளின் தற்கொலை, கிராம பொருளாதாரம் பற்றி அவர் பல ஆயிரம் மைல்கள் பயணித்து, அருந் தகவல்களை திரட்டி எழுதும் உழைப்பும், மனித நேயமும் பாரட்டுக்குரியன. தகவல்கள், data and information பற்றி சரி.
    ஆனால் அவற்றை கொண்டு அவர் சொல்லும் முடிவுகள் அல்லது கருத்துக்கள் மீது பல நேரங்களில் மாற்று கருத்து உண்டு. Interpretation of data and his sweeping comments and conlusions about the much maligned ‘neo liberal’ polices since 1991.

    கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு 5,00,000 கோடிகள், பட்ஜெட்டில் வரி தள்ளுபடி என்பது sweeping and inaccurate comment. பட்ஜெட்டில் அதற்கான சுட்டி இது :
    http://indiabudget.nic.in/ub2010-11/statrevfor/annex12.pdf

    மிகவும் பின் தங்கிய, வறண்ட பகுதிகளில் புதிய தொழில்கள் துவங்க நிறுவனங்களுக்கு ‘ஊக்கம்’ அளிக்க, வரி சலுகளை பல ஆண்டுகளாகவே உள்ளன. உதாரணமாக புதிய மாநிலமான உத்ராஞ்சலில், தொழில் துவங்கினால், பத்து ஆண்டுகளுக்கு உற்பத்தி மற்றும் இதர வரிகளில் கணிசமான அளவு சலுகை. இவை அந்த பின் தங்கிய பகுதிகளில் புதிய தொழில்களை துவங்க ஒரு ஊக்கி என்ற அளவில் தான் பார்க்க வேண்டும்.
    உண்மையாக சொன்னால், ‘தூய’ சந்தை பொருளாதார கொள்கைகள் படி, இது போன்ற ‘சலுகைகளை’ அரசு அளிக்க கூடாது. பாரபட்ச்சம் இல்லாமல் அனைத்து பகுதிகளுக்கும் ஒரே வரி விகுதங்கள் தான் இருக்க வேண்டும். மேலும் டீசல், சமையல் எண்ணைகள், உரம் மற்றும் இதர விவசாயம் சார்ந்த தொழில்களுக்கான வரி சலுகைகள், பெரும் அளவில் இதில் அடங்கும். மென்பொருள் ஏறுமதிகளை ஊக்குவிக்க STPIகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை தான் இதில் பெரிதாக சொல்லாம். அதுவும் கூடிய விரைவில் நீக்கப்படும். 1991இல் மிக அபாயகரமான அன்னிய செலவாணி பற்றாகுறை ஏற்பட்ட போது, ஏற்றுமதியாளர்களை அனைவருக்கும் 100 சதம் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. To encourage exports which earn foreign exchange for India. பிறகு படிப்படியாக அந்த சலுகை விலக்கப்பட்டது. அதே போல் தான் இந்த ‘சலுகைகளும்’. அவரின் லாஜிக் படி பார்த்தால், 1970களில் உச்சபட்ச வருமான வரி சுமார் 98%, சுங்க வரி சுமார் 200 சதம், உற்பத்தி வரி சுமார் 50 சதம் அளவில் இருந்தன. இன்று வருமான வரி 34 சதம் தான் உச்சபட்ச அளவு. சுங்க வரி 20 சதம் அளவுதான். உற்பத்தி வரி 15 சதம் தான் சராசரி. இந்த அளவிற்க்கு குறைக்காமல் இருந்திருந்தால், சாய்நாத் அவர்களின் லாஜிக் படி இன்று பல கோடி கோடிகள் நிகர வரி வசூல் குவிந்திருக்க வேண்டும். ஆனால் வரிகளை மிக குறைத்தால் தான், பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து, இன்று பல லச்சம் கோடிகள் வரி வசூல் உயர்ந்தது. அன்றைய விகிதங்கள் தொடர்ந்திருந்தால், அன்று கிடைத்த நிகர் அளவுதான் இன்றும் கிடைத்திருக்கும். Reduction and rationalization of tax rates encourage entrerprise, investment and kindle the intiative for expansion and growth. That is the lesson from history. அவருக்கு அடிப்படை பொருளாதரம் தெரியவில்லை என்றுதான் கருத வேண்டியிருக்கிறது.

    சுதந்திர இந்திய வரலாற்றில் என்றும் இல்லாத அளவு வரி வசூல் மழை. 25 வருடங்களுக்கு முன் இதை கனவு கூட கண்டிருக்க முடியாது. இந்த அபரிமிதமான வரி வசூலை, உருப்படியாக, நேர்மையாக செலவு செய்ய வேண்டியது அரசின் தார்மீக கடமை. அதை அப்படி செய்ய கூடாது என்று தாரளமயமாக்கலை முன்மொழிந்தவர்கள் சொல்லவில்லையே ! பெரும் அளவில் அரசின் செலவுகளில் ஊழல் மலிந்து, உரியவர்களுக்கு செல்லாமல், நடுவில் திருடப்படுவது அனைவரும் அறிந்த open secret.
    இதற்க்கு அம்பானிகளை, பெரும் தொழில் முனைவோரிகளை கோபிப்பது சரியல்ல.
    மேலும்… தான்ய உற்பத்தி கூடி உள்ளது உண்மைதான். ஆனால் அது அதிகரித்த வேகத்தை விட ஜனத்தொகை அதிகரித்து வருவதால் தான், இந்த குறைந்த விகிதம் per capita availability of grains and pulses. விவசாயத்தில் சென்ற 20 ஆண்டுகளில் புதிய முதலீடுகள் குறைவு என்பது உண்மைதான். அதற்கு முக்கிய காரணம், தாரளமயமாக்கல் கொள்கை விவசாயத்தில் இன்றும் அனுமதிக்கப்படவில்லை. நில உச்ச வரம்பு சட்டம் உள்ளது. 2000 ஏக்கர்கள் போன்ற பெரும் கார்பரேட் (அல்லது கம்யூனிச நாடுகளில் இருந்தது போன்ற கூட்டு பண்னைகள்) இன்றும் உருவாக வழியில்லை. அப்போதுதான் economies of scale and modern farming technology backed by huge private investments சாத்தியம். பார்க்கவும் :

    http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html
    விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

    பொது விநியோகத்தை பரவலாக்குவதை பற்றிதான் இந்த கட்டுரை. அதற்க்கு முழு ஆதரவு இல்லாதற்க்கு உண்மையான காரணம் ஊழல் மற்றும் cynical attitude of officials, politicians and PDS staff.

    http://www.rediff.com/money/2007/jun/12pds.htm Corruption rendering PDS ineffective

    வெட்டியாக ராணுவத்திற்க்கும், காமன்வெல்த் விளையாட்டுகளுக்கும், தேவையில்லாத பல அரசு அலுவலகங்களுக்கும் செலவிடப்படும் பல லச்சம் கோடிகளை இதற்கு செலவு செய்வது ஒன்றுதான் வழி.

  3. இந்து பத்திரிக்கை பற்றி வினவு தளத்தில் பல முறை ‘பார்பன, பிற்போக்கு, ஏதாதிபத்திய’ ஊடகஙள் என்று எழுதியது ஒரு நகை முரண். தேவை பட்டால் அதே இந்துவில் இருந்து எடுத்தியிம்புவீர்கள். :)))))

    சரி, இந்து வலைமனையில், இந்த கட்டுரைக்கு இடப்பட்ட ஆங்கில பின்னூட்டங்கள் சில (நானும் அதில் கடைசியாக இட்டிருக்கிறேன்) :

    http://www.thehindu.com/opinion/columns/sainath/article1514987.ece

    I am surprised that a journalist of eminence as P Sainath could indulge in such sensationalism and oversimplification.

    IMF Manual on Fiscal Transparency defines Tax expenditures as revenues forgone as a result of instance, a) industries in HP, Uttaranchal, North Eastern states, J&K, backward districts, etc. or industries in export promotion zones and software technology parks. Similarly, all customs duty and excise concessions are not something that directly benefit corporates or the rich.

    Secondly, as the FM’s statement states ‘cost of each tax concession is determined separately, assuming that all other tax provisions remain unchanged. Many of the tax concessions do, however, interact with each other. Therefore, the interactive impact of tax incentive could turn out to be different from the revenue foregone ….’
    If one were to just look back, we had a peak IT rates exceeding 90 percent and peak customs duty in the range of 300 percent. If the same logic of revenue foregone is applied, we would end up with a phenomenal amount, which would not take into account the beneficial impact their rationalization has had on the economy. For example, promotion of industries in backward states and districts increases the economic activity in these places resulting in higher collection of income tax, sales tax, etc.

    Srinivas Alamuru

    Cutting taxes to corporations is a legitimate and arguably the fastest way to promote the economy and up lift the poor. The proof is right in front of our eyes when we consider the grown of the economy in recent years – it is no longer what foreign critics used to mock as the “Hindu Rate” of 2%. Where has this Rs. 3.7 Crores (“taxes not collected”) gone?

    Nowhere. The money is very much in the country and is not sleeping in some Swiss bank vault. Who stole the money? No one! It is lawfully earned income by Indian companies. If so who has the money now? It is not in the pockets of some robber-politicians, but it has gone to pay of perhaps millions of law abiding people who work every day for a living – however, sadly it seems, in the private sector. What has happened to the money? Besides paying wages and salaries, it may have gone to invest in the growth of tens of thousands or private enterprises, perhaps including some private hospitals, schools, factories or whatever. There is general consensus that private sector provides goods and services at least as effectively as the public sector, and the beneficiaries are common people. Exactly this policy of reducing some part of corporate taxes has protected the Indian economy from the 2008 global tsunami that crushed even the mighty US economy, which is still reeling. This policy, while saving perhaps Crores of people from unemployment, also won for India the praise of international economists. Reduced tax burden on private sector has also resulted in the steady 7% (or better) growth in the Indian economy, benefiting everyone, literally Crores of people.

    Government has a vital role in the life of people. That does not mean we should go back to the days of high corporate tax rates and 2% economic growth. We have been there and the people did not like it.

    from: MUKUNDAGIRI SADAGOPAN

    • நீங்க கூடத்தான் முதலாளித்துவ, ஏகாதிபத்திய, முதலீட்டிய, ஜோசிய, பிற்போக்கு முகாமை சேர்ந்தவர், அதற்காக உங்க கருத்தை, பின்னூட்டத்தையெல்லாம் இங்க தடை செஞ்சிட்டாங்களா என்ன? நல்லா கேட்குறீங்க டீடெய்லு!

  4. நன்றி நண்பா.

    வராக்கடன் குறித்தோ, வசூலிக்க வேண்டிய கடன்கள் குறித்தோ இந்த அரசுக்கு அக்கறையிருந்தால் ?

    கடந்த ஆறு மாதத்தில் ஏற்றப்பட்ட பெட்ரோல் விலை உயர்வு. அதைவிட மிகக் கொடுமை இந்த ஆட்சியில் தான் எண்ணெய் நிறுவனங்களே தங்கள் விலையை தீர்மாணித்துக் கொள்ளலாம் என்ற புதிய தந்திரம்.

    அலைவரிசையில் ஊழல் என்கிற செய்தி. இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் கோவை பகுதியில் கூட இந்த பிஎஸ்என்எல் சேவை தள்ளாடி இன்னும் ஆறு மாதத்திற்குள் இழுத்து மூடிவிடும் சூழ்நிலையில் இருக்கிறது. அத்தனை தூரம் கேவலமாக கொண்டு போய்க் கொண்டு இருக்கிறார்கள். காரணம் விரைவில் தனியாருக்கு தாரை வார்க்க என்ற நோக்கத்தில் ஒவ்வொன்றையும் இருட்டுச் சந்திற்குள் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாக உள்நாட்டு உற்பத்திக்கு பத்து சதவிகிதம் வரி. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்………..

    அதி புத்திசாலியான நரசிம்மராவின் இறுதிக்காலம் போல இப்போதைய பிரதமர் வருந்தும் காலம் நிச்சயம் உண்டு. அவராவது தந்திரத்தில் ஐந்து வருடத்தில் சாணக்கியராய் வாழ்ந்தார். ஆனால் இவர் அமெரிக்காவுக்கு அடிவருடியாய் இருந்ததோடு
    உள்நாட்டு உற்பத்தியே இருக்கக்கூடாது என்பது போல் ஒவ்வொரு திட்டத்தையும் மூடி வைக்க திட்டம் திட்டும் இவர் தான் படித்த மேதையாம்.

    சோனியாவும் ஒரு காலத்தில் கடாபி போல ஓட்டம் பிடிக்க வாய்ப்புண்டு.

    • நண்பர் ஜோதி,

      நீங்க வரி ஏய்ப்பு செய்ததில்லையா ? கருப்பு பணத்தை கையாண்டதே இல்லையா ? பில் இல்லாமல், கருப்பில் வியாபரம், கொடுக்கல் வாங்கல் செய்ததில்லையா ? அளவுகள் வேண்டுமானால சிறியதாக இருக்கலாம். ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் பெரிய அமவுண்டில் என்ன செய்வீர் ? …

      சரி, எதிர்காலத்தில் நீங்களும் படிப்படியாக உங்கள் தொழிலில் முன்னேறி, அம்பானி ரேஞ்சுக்கு இல்லாவிட்டாலும், ஒரு 200 கோடி விற்றுமுதல் செய்யும் நிறுவன அதிபராக மாறினால், வரி ஏய்ப்பு எத்தனை கோடி செய்வீக ? :))))

      சும்மா தமாஸுக்குதான் கேட்டேன். சீரியசா இதற்க்கு பதில் சொல்ல வேண்டாம் தல.
      ஆனா நீங்க ’நல்ல’ நிலைக்கு உயர வேண்டும் என்றே விழைக்கிறேன். அட்வான்ஸ் வாழ்த்துக்கள். நம்ம் ஜோசியம் கண்டிப்பாக பலிக்கும். மற்றதை போனில் சொல்றேன் !!

      சரி, சீரியசான பதில் :

      இந்தியாவில் கடன் வசூலிக்கும் முறை சமீபத்தில் தான் ஓரளவு ஒழுங்குக்கு வந்திருக்கிறது. இந்த Debt recovery Tribunals 90களுக்கு பிறகு தான் உருவாக்கபட்டன. அதற்க்கு முன்பு நார்மல் கோர்டுகள் தான். பல பத்து வருடங்கள் ஆகும். திவாலான பெரு நிறுவனங்களை சரியாக liquidate செய்வது மிக மிக மிக சிக்கலான, பல பத்து வருடங்கள் பிடிக்கும் வேலை. இதெல்லாம் ‘சோசியலிச’ கால சட்டங்களின் எச்சங்கள். வளர்ந்த நாடுகளில் சில மாதங்களில் இது முடிந்து, கடன்களை முடிந்த வரை வசூலிக்க முடியும்.

      வங்கிகள் நாட்டுடைமையானது, அரசு துறை நிதி நிறுவனங்கள் : இவை முழுவதுமாக ஊழல் மலிந்ததால் அதிக சிக்கல். அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு லஞ்சம் அளித்து, கடன் வாங்கி, ஏமாற்றி, பிறகு வசூலை தாமதிக்க பல பல வழிகள். இவையும் அதே சோசியலிச யுகத்தில் எச்சங்கள். வளர்ந்த நாடுகளில் இப்படி இல்லை.

      • அதியமான் மீண்டும் சோசலிசத்தை கையிலெடுத்துள்ளதால், அவர் பயந்து ஓடிப் போன எனது கேள்விகளை மீண்டும் பதிகிறேன். அவரது போலித்தனம் இதோ:

        எனது பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் அவரது போலி நடுநிலைமை அம்பலப்பட்டவுடன், நான் அசுரனுக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன் என்று ஜெயமோகன் போல ஜகா வாங்குகிறார் அதியமான். சூப்பர்ண்ணே

        முதலாளிகளுக்கு ஒரு நியாயம், கம்யுனிஸ்டுகள் மீது அவதூறு செய்ய நேர்மையற்ற தந்திரம் என்று செயல்படும்
        அதியமான் அவர்கள் அம்பலமான பகுதிகள்:

        1)
        /என்ன கதை அசுரன் ? மக்கட் தொகை அடர்த்தி, இந்தியா முழுவதும் ஒரே அளவில் உள்ளதா என்ன ? அல்லது தாய்லாந் முழுவது ஒரெ அளவில் உள்ளதா? பாங்க்காகில் உள்ள நெருசலை, சென்னையுடன் ஒப்பிட பல parameters and issues கொண்டுதான் செய்ய வேண்டும்.

        போக்குவரத்து நெருசலை குறைக்க ‘உருப்படியாக’ ஏதாவது யோசனை சொல்ல உம்மால முடியாது. அதை பற்றி நான் தொடர்ந்து எழுதியவற்றை பற்றி விவாதிக்கவும் துப்பில்லை. அந்த மைய விசியத்தை விட்டுவிட்டு தொடர்ந்து, இப்படி உளருவதுதான் உமக்கு வாடிக்கையா போச்சு. ‘ஒரு தமிழ் வலதுசாரி’ உம்மை போன்றவர்களை சொன்னது சரிதான்..//

        இதே மாதிரி பல பேக்டர்கள் இருப்பது உங்களுக்கு சோசலிசம் என்ற ஒன்று கிடைக்காது போது மட்டுமே ஞாபகம் வருகிறதே ஏன்? இந்தியாவில் மட்டும் சோசலிச எச்சம் காரணம் என நீங்கள் சொல்ல முடியும் எனில் தாய்லாந்தில் உலகமயம் காரணம் என நான் சொல்வதில் என்ன தவறுள்ளது? மாத்தி மாத்தி பேசாமல் ஒரே அளவு கோல் உபயோகிக்கவும்.

        2)
        //சோசியலிசம், புரட்சி போன்ற சொற்களை பலரும் பல அர்த்ததில் உபயோகிப்பதை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டினால், அதை புரிந்து கொள்ளாமல், வெறும் உணார்சி வசப்பட்டு மட்டும் பேசுகிறீர்கள். கம்யூனிசத்தை ‘இழிவு’ செய்ய அது என்ன தனி மனிதனா ? ஒரு சித்தாந்தம் பற்றி, தியரி மற்றும் நடைமுறைகள் பற்றி விரிவாக பேசினால், கடந்த கால உண்மைகளை பேசினால், ’இழிவு’ படுத்துவதாக ‘கருதுவது’ மதவாதிகளின் பாணி. அப்ப நீரும் ஒரு ‘மதவாதிதான்’ !!!//

        சோசலிசம் புரட்சி பற்றி முதலாளித்துவத்தின் கேடுகளை மூடி மறைக்க மட்டுமே முன்னிறுத்தும் ஒருவரிடம் வேறு எதைப் பற்றி பேசுவதாம் ? சொல்லுங்க அதியமான்?

        40 வருடம் முன்பு தரம் இருந்தது இன்று இல்லையென்று சொன்ன போது மட்டும் அங்கு சோசலிசத்தை நீங்கள் குறிப்பிட மறந்த கயமைத்தனத்தை சுட்டிக் காட்டினேனே அதை வசதியாக கடந்து சென்றீர்களே ஏன்?

        //சரி அப்பனே, இதெல்லாம் இருக்கட்டும். போக்குவரத்து நெருசல்களும் மக்கட்தொகை பற்றியும் மேதாவித்தனமாக பேசிய உமக்கு, பிறகு அதை பற்றி சர்வ சாக்கிரதையாக தவிர்த்துவிட்டு, இந்த சொற்கள் பற்றி மட்டும் தேவையில்லாமல் பேசுவது ஏன் ?//

        இந்தக் கட்டுரையில் போக்குவரத்துப் பிரச்சினையா ஓடிக்கொண்டிருக்கிறது? தாய்லாந்து பெண்கள் பற்றிய கட்டுரையிலும் வந்து வலிய சோசலிசம் என்ற வார்த்தையை போலியாகப் பயன்படுத்தி இழிவு செய்வீர்கள் எனில் எனது வாதமும் அதனைச் சுற்றித்தான் இருக்கும். உங்க இஸ்டத்து வாதம் செய்ய என்னை ஆனையிட முடியாது முதலாளி அவர்களே…

        //40 வருடம் முன்பு தரம் இருந்தது இன்று இல்லையென்று சொன்ன போது மட்டும் அங்கு சோசலிசத்தை நீங்கள் குறிப்பிட மறந்த கயமைத்தனத்தை சுட்டிக் காட்டினேனே அதை வசதியாக கடந்து சென்றீர்களே ஏன்?//

        இந்தப் பகுதி பள்ளிக் கல்வி தனியார்மயம் பற்றிய கட்டுரையில் நடந்ததை குறிப்பிட்டுச் சொல்லியுள்ளேன். அங்கும் திருவாளர் அதியமான் தனது குழப்படி வித்தகைகளை செய்துள்ளார் என்பதை பதிவுலகிற்கு அறியத்தருகிறேன்.

        3)
        //அதியமான் தனக்குத் தேவையென்றால் முதலாளித்துவத்தின் லாப வெறி யுத்தங்களுக்குக் காரணம் சிவப்பு அபாயம் கண்டு பாவம் அமெரிக்க முதலாளிகள் பயந்து போய் பீதியில் தவறு செய்துவிட்டார்கள் என்பார். ஆனால் இதே லாஜிக்கை சோவியத்தின் அரசியல் தவறுகளை ஊதிப் பெருக்கி அவர் கதைவிடும் போது மட்டும் மறந்துவிடுவார். //

        பாருங்க மக்களே இந்தப் பார்ட்டுக்கு பதில் சொல்ல மறந்துட்டார் நம்ம அதியமான்…

        //சோசியலிசம், புரட்சி போன்ற சொற்களை பலரும் பல அர்த்ததில் உபயோகிப்பதை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டினால், அதை புரிந்து கொள்ளாமல், வெறும் உணார்சி வசப்பட்டு மட்டும் பேசுகிறீர்கள். //

        இதே போலத்தான் முதலாளித்துவத்திற்கு ஒரே அர்த்தம் முதலாளீயின் லாபம் அதற்கான சுரண்டலும் என்றுதான் பலரும் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று உங்களிடம் நாங்கள் சொல்லிய போதெல்லாம் செல்லாது செல்லாது உண்மை முதலாளித்துவம் வேறு அப்படின்னு பீலா விட்டீங்களே அப்போ மட்டும் இதே பப்புலிச பார்வை உங்களுக்கு வர மறுத்துவிட்டது? சோசலிசம், புரட்சிக்கு இப்படி வரையறையில்லாமல் செய்வதன் மூலம் முதலாளித்துவத்தின் அனைத்து தவறுகளுக்கு சோசலிசத்தை காரணமாகக் காட்டி தப்பிக்க வைக்கலாம் என்ற கேடான யுக்திதானே உங்களிடம் வெளிப்படுகிறது? இதற்கு ஏன் நடுநிலைமை, ஓபன் மைண்டு, இண்டெக்லுசுவல், அனுபவம் என்று வார்த்தை ஜாலம்

        • அசுரன்,

          யார் பயந்து ஓடுனர், யார் ஒழுங்க பதில் சொல்லாமல் டபாய்கிறார்கள் என்பதை வாசகர்கள் முடிவு செய்யட்டும். ’சோசியலிசம்’ என்ற சொல் பற்றி இனியும் உம் விதண்டாவாதத்திற்க்கு பதில் சொல்ல விரும்பவில்லை. இறுதியாக ஒன்று மட்டும் சொல்கிறேன் : ஜவகர்லால் நேரு, ஜே.பி, ராம் மனோகர் லோகிய போன்ற பெரும் தலைவர்கள் சோசியலிஸ்டுகள் தான். அதாவது ஜனனாயக சோசியலிஸ்டுகள். அவர்களின் கொள்கைகளுடன் நான் முரண்பட்டாலும், அவர்களின் அடிப்படை நேர்மை, தியாகம், அர்பணிப்புக்க்காக அவர்களை வணங்குகிறேன். அவர்களின் கால் தூசிக்கு கூட உம்மை போன்ற அனானி வெத்துவேட்டுகள், இணைய புடுங்கிகள் சமமாக முடியாது. ஒரு தூசியை கூட உம்மால் நகர்த்த முடியாத கோழைதான் நீர். வெறும் வெற்று கூச்சல்.

          (அய்ரோப்பாவில் அன்று democratic socialsim தான் trend ; ஜார்ஜ் பெர்னாட் ஷா முதல் பல பெரும் அறிஞர்களும், தலைவர்களும் அதையே முன்மொழிந்தனர்.)

        • ////சோசியலிசம், புரட்சி போன்ற சொற்களை பலரும் பல அர்த்ததில் உபயோகிப்பதை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டினால், அதை புரிந்து கொள்ளாமல், வெறும் உணார்சி வசப்பட்டு மட்டும் பேசுகிறீர்கள். //

          இதே போலத்தான் முதலாளித்துவத்திற்கு ஒரே அர்த்தம் முதலாளீயின் லாபம் அதற்கான சுரண்டலும் என்றுதான் பலரும் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று உங்களிடம் நாங்கள் சொல்லிய போதெல்லாம் செல்லாது செல்லாது உண்மை முதலாளித்துவம் வேறு அப்படின்னு பீலா விட்டீங்களே அப்போ மட்டும் இதே பப்புலிச பார்வை உங்களுக்கு வர மறுத்துவிட்டது? சோசலிசம், புரட்சிக்கு இப்படி வரையறையில்லாமல் செய்வதன் மூலம் முதலாளித்துவத்தின் அனைத்து தவறுகளுக்கு சோசலிசத்தை காரணமாகக் காட்டி தப்பிக்க வைக்கலாம் என்ற கேடான யுக்திதானே உங்களிடம் வெளிப்படுகிறது? இதற்கு ஏன் நடுநிலைமை, ஓபன் மைண்டு, இண்டெக்லுசுவல், அனுபவம் என்று வார்த்தை ஜாலம்//

          அப்போ முதலாளித்துவத்துக்கு மட்டும் நீங்க சொல்ற வியாக்கியானத்தை நாங்க ஏத்துக்கனுமா? கெட்டது செஞ்சா அது போலி முதலாளித்துவம் என்றோ சோசலிச எச்சம் என்றோ கொஞ்சம் கூட பொறுப்பின்றி (முதலாளி அல்லவா?) நழுவிக் கொள்வீர்கள். உலகில் உண்மை முதலாளித்துவம் உள்ள நாடுன்னு சில பட்டியலை கொடுப்பீங்க, அங்குள்ள முதலாளித்துவத்தின் லட்சனம் என்னவென்று அம்பலப்படுத்தினால் பதிலே சொல்லாமல் எஸ்கேப் ஆவீ ர்கள்.

          ஆனால் நீங்களே சொல்லும் ‘ஜனநாயக’ ‘சோசலிச’த்தில் நிகழ்ந்த நன்மைகளைப் பற்றிப் பேசும் போது சோசலிசம் என்ற வார்த்தையை வசதியாக மறந்து விடுவீர்கள். இது பேரு நடுநிலைமையா? செய்வது அப்பட்டமான முதலாளித்துவ அயோக்கியத்தனத்திற்கு புனித வட்டம் கட்டும் காவாளித்தனம், இதிலென்ன உங்களுக்கு கோவம் வேண்டிக்கிடக்கிறது?

          பார் யுவர் இன்பர்மேசன்.. உங்களை விடுவதாக இல்லை…

          அசுரன்

        • //அவர்களின் கால் தூசிக்கு கூட உம்மை போன்ற அனானி வெத்துவேட்டுகள், இணைய புடுங்கிகள் சமமாக முடியாது. ஒரு தூசியை கூட உம்மால் நகர்த்த முடியாத கோழைதான் நீர். வெறும் வெற்று கூச்சல்.//

          அய் ஜக்கா அய் ஜக்கா… இது பேருதான் எஸ்கேப்பு மிஸ்டர் அதியமான்.. சொன்னதை விட்டுவிட்டு சுரயப் பிடுங்குவது என்றும் சொல்வார்கள். உங்களுக்கு யாரப் பிடிக்கும், பிடிக்காதுன்னா கேட்டிருக்கேன்? உங்க நடுநிலமை யோக்கியதை எனன்வென்று அம்பலமாக்கியிருக்கிறேன். அதுக்கு பதில் சொல்ல வக்கில்லை. இதில் புனித ஆவேசம் வேறு… கொய்யாலா….

        • //: ஜவகர்லால் நேரு, ஜே.பி, ராம் மனோகர் லோகிய போன்ற பெரும் தலைவர்கள் சோசியலிஸ்டுகள் தான்//

          இதில் இன்னொரு முக்கியமானவரை மறந்துவிட்டீர்கள். அவர் கூட தனது சோசலிசத்திற்கு ஒரு பெயர் வைத்திருந்தார் எனக்கு மறந்துவிட்டது தோழர்கள் ஞாபகப்படுத்தினால் நன்றாயிருக்கும். அவர்தான் புரச்சித் தலீவர் எம் ஜி ஆர். சூப்பர் சோசலிசம்ல… அதியமானின் சோசலிச வியாக்கியான லட்சனம் இப்படிப் போகிறது…

        • //இதே மாதிரி பல பேக்டர்கள் இருப்பது உங்களுக்கு சோசலிசம் என்ற ஒன்று கிடைக்காது போது மட்டுமே ஞாபகம் வருகிறதே ஏன்? இந்தியாவில் மட்டும் சோசலிச எச்சம் காரணம் என நீங்கள் சொல்ல முடியும் எனில் தாய்லாந்தில் உலகமயம் காரணம் என நான் சொல்வதில் என்ன தவறுள்ளது? மாத்தி மாத்தி பேசாமல் ஒரே அளவு கோல் உபயோகிக்கவும்.///

          this is sheer nonsense. traffic volumes increase due because of lack of sufficient public transport, and as people opt for own vehicles. one of the reasons in India, is govt control and monopoly over this vital sector. i have written a million times about this reason, which is a factor of old socialistic policy which called for nationalisation of bus transport sector. even bike men now plying in bankok are not allowed in India, which would have made a huge difference. this regulation / control of free market forces is called ‘socialism’.

          and it is a waste of time to repeat my ‘explanations’ to nuts who assume that they know everything.

          and let the readers decide, who is dodging real issues and escaping. Only fools claim such nonsense for themselves.

          Krishna,

          Read the comment thread in the other post fully so that you can realise who is actually dogding the issues.

        • //traffic volumes increase due because of lack of sufficient public transport, and as people opt for own vehicles. one of the reasons in India, is govt control and monopoly over this vital sector. i have written a million times about this reason, which is a factor of old socialistic policy which called for nationalisation of bus transport sector. even bike men now plying in bankok are not allowed in India, which would have made a huge difference. this regulation / control of free market forces is called ‘socialism’.//

          அதியமான் பைக் பிரச்சினைக்கு மட்டும்தான் பதில் சொல்லியுள்ளார், அவர்து பிற போலித்தனங்களை வசதியாக மறந்துவிட்டார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தக் கேள்வியிலேயே பாருங்கள் அவரது சிந்தனை செயல்படும் விதத்தை,

          இந்தியாவில் பைக் விடுறவன் இல்லையாம் அதுக்குக் காரணம் பொதுப் போக்குவரத்தில் அரசு மோனோபாலியாம், அதுக்குக் காரணம் சோசலிசமாம்.

          கேள்வி: பைக் விடுறவன் இல்லாததுக்கு சோசலிசம் காரணம் எனில், இந்தியாவை விட மக்கள் தொகை கம்மியாக உள்ள தாய்லாந்து தலைநகரம் ஏன் உலகின் அதிக நெருக்கடி மிகுந்த நகரமாகிறது? அதற்குக் காரணம் என்னவென்று கேட்டால் உடனே டென்சிட்டி என்றீர்கள், ஆதாரம் கொடு என்று கேட்ட போது காணாமல் போனீர்கள். எனது கேள்வி ஒன்றுதான், இந்தியாவுக்கும் ஒன்று என்றால்எளிதாக இல்லாத சோசலித்தின் மீது பலி போடும் அறிவு நாணயமற்ற நீங்கள். தாய்லாந்துக்கு என்றால் பல பேக்டர் என்று ஜகா வாங்குவது ஏன்?

          கேள்வி : அரசு மோனோபாலிதான் சோசலிசமா அதியமான்? கொஞ்ச நேரத்துக்கு முன்ன சுதந்திர சந்தைக்கு விரோதம் எல்லாம் சோசலிசம்னு சொன்னீங்க?

          இது தவிர சோசலிசம் பற்றிய அவரது வரையறையின் அபத்தங்களை அம்பலப்படுத்தியதற்கு அவரால் வாய் திறந்து பதில் சொலல் இயலவில்லை என்பது பரிதாபமே…

        • //this is sheer nonsense. traffic volumes increase due because of lack of sufficient public transport, and as people opt for own vehicles. one of the reasons in India, is govt control and monopoly over this vital sector//

          ஏற்கனவே இவரது சோசலிச வரையறையை சுதந்திர சந்தை கொண்டு செய்த அபத்தத்தை பார்த்தோம், இப்போது அதில் ஒரு உட்பிரிவாக மோனோபாலி வரையறையைச் செய்துள்ளார்.

          முதல் வரையறையின் படி அவர் ஏற்கனவே ‘போன மாசம்’ போலி முதலாளித்துவத்தை வரையறுத்தார், ‘இந்த மாசம்’ சோசலிசத்தைச் சொல்லியுள்ளார்.

          இப்போ அவரது உட்பிரிவு வரையறையின் படி மோனோபாலி பட்டியலில் வேறு எந்த நாடுகள் வருகின்றன என்று பார்த்தால் அவரது அபத்தமான பொருளாதார புரிதல்கள் சிரிப்பாய் இருக்கும். ‘சோசலிச’ இந்திய மட்டுமல்ல அதியமானால் வெற்றிகரமான முதலாளித்துவ நாடு என்று முன்னிறுத்தப்பட்டு அப்படியல்ல என்று ஆதாரங்களுடன் முறியடிக்கப்பட்டு அதற்கு அவ்ர பதில் சொல்லாமல் எஸ்கேப் ஆனா ஸ்வீடனில் சமீபத்திய தனியார்மய கொள்கைகள அமல்படுத்துவதற்கு முன்பு வரை மோனோபாலியே நிலவியது. அப்படியென்றால் அதியமானால் வெற்றிகரமான முதலாளித்துவமாக நம்பப்படும் ஸ்வீடன் ஒரு சோசலிச நாடு அல்லது சோசலிச எச்சம். வாட் எ பிட்டி….

        • //traffic volumes increase due because of lack of sufficient public transport, and as people opt for own vehicles. //

          ஏங்க கேன்சர் திட்டு மாதிரி ஒரு இடத்துல மட்டும் டிராபிக் இன்கிரீஸ் ஆகுது? இதுக்கு காரணமான சோசலிச எச்சம் அகஅ அரசு மோனோபாலி என்னாங்க அதியமான்?

    • ஜோதி,

      இதையும் பாருங்கள் :

      http://www.clgindia.com/bankruptcy-liquidation.html
      Bankruptcy and Liquidation in India

      However, law in India encourages revival or reconstruction of sick companies. SICA is an Act which allows sick companies to approach the Board for Industrial and Financial Reconstruction (‘BIFR’) for declaring themselves sick and get ‘immunity’ from recovery proceedings during the pendency of revival or reconstruction proceedings before BIFR. This Act has been enacted to extend an opportunity of revival or reconstruction to sick companies; during such proceedings, recovery proceedings against the company concerned are automatically stayed and appropriate schemes including schemes for change of management, are formulated to revive or reconstruct the sick companies. However, the provisions of SICA are many times misused only for ‘sick’ company status and ‘immunity’ from legal proceedings.

      மேலும் :

      It is our experience that often corporate bodies declare themselves ‘sick’ or ‘bankrupt’ under SICA for automatic stay of all recovery proceedings to avoid ‘financial liability’, which ultimately has the undesirable effect of defrauding their creditors. It is in this context that Corporate Law Group usually advise its Clients to conduct thorough enquiry into financial dealings of their potential business partners, more particularly ‘Hidden Liability’ and ‘Financial Viability’ of such entities to enter into business transactions in question. For conducting such exercises, CLG has a highly trained in-house team of Chartered Accountants, Company Secretaries and lawyers and scope of our enquiry encompasses not only past and present financial transactions but also findings/records of statutory Tribunals, Commissions, Police Investigation Reports, Regulatory Body Reports etc. Such exercises become all the more important for financially sensitive sectors like Banking, Insurance and Non-Banking Financial Services.

      • அசுரன்,

        don’t waste your time and my time too. I now totally ignore all your rantings here.

        வினவு,

        இந்த சோசியலிசம் என்ற சொல் இந்தியாவில் அன்று எப்படி பயன்படுத்தப்பட்டது. அதன் விளைவுகள் என்ன என்று சொல்லுங்களேன். சோசியலிசம் என்ற சொல்லை நீங்க அர்த்தபடுத்திக்கொள்வது வேறு முறை. இந்தியாவில் இருந்தது வேறு வகையுல். இது மிக எளிய விசியம். மேலும் ஜனனாயக சோசியலிசம் என்று ஒன்று இருந்தது. அது தூய கம்யூனிச சோசியலிசத்தில் இருந்து மாறுப்பட்டது. ஆனால் ஒரு விசியத்தில் அவை எல்லாம் ஒன்றுதான் : பல விதத்தில், அளவுகளில், அவை சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு முரணானது. அவ்வளவு தான் விசியம்.

        வராக்கடன் வசூல், மற்றும் திவால் சட்டங்கள் மேலே நான் இட்ட சுட்டியில் உள்ள ‘சட்டங்கள்’ மூலம் எப்படி வசூலிக்க முடியாமல் சிக்காலனது என்று சொல்கிறது. இது போன்ற சட்டங்கள் தான் ‘சோசியலிச’ கோட்ப்படுகளின் பாணி. அதாவது ஜனனாயக பாணி சோசியலிசம். இவை சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான சட்டங்கள் தான். இது போன்ற சட்டங்கள் முன்னேறிய நாடுகள் இல்லை. அதனால் இங்கு போல் அங்கு சட்டத்தை பயன் படுத்தி கடனை ஏய்க்க முடியாது.

        • //அசுரன்,

          don’t waste your time and my time too. I now totally ignore all your rantings here.//

          அதை நான் சொல்லனும் அதியமான் அவர்களே..

        • மேலும், இப்படி உங்களது இரட்டை நாக்கு அம்பலமானவுடன் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று ஓடிப் போவதைத்தான் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தேன்

          அய் ஜக்கா அய் ஜக்கா… இது பேருதான் எஸ்கேப்பு மிஸ்டர் அதியமான்.

        • //பல விதத்தில், அளவுகளில், அவை சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளுக்கு முரணானது. //

          சோசலிசத்திற்கான இவரது இந்த வரையறை எவ்வளவு அபத்தமானது? உலகெங்கும் முதலாளித்துவம் நடத்தும் அட்டூழியங்கள் அம்பலமாகும் போதெல்லாம் அவர் இந்த அளவுகோல் கொண்டுதான் அளவிட்டு அவை போலி முதலாளித்துவம் என்பார். இன்று அதே அளவுகோலைக் கொண்டு அவைதான் சோசலிசம் என்கிறார். அதாவது இதன் பொருள் ஒன்றுதான், உலகில் நல்லது நடந்தால் அதை முதலாளித்துவம் என்பேன். கெட்டது நடந்தால் சோசலிசம் என்பேன் என்பதுதான். இதற்கு பெயர் அறிவுநாணயமாம்.

  5. இந்த கட்டுரையை தமிழ் படுத்தி நிறைய பேருக்கு சென்றடைய உதவியதற்கு நன்றி. நீரா ராடியா டேப்பிலேயே ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு பல்லாயிரம் கோடி லாபி செய்து வரி விலக்கு வாங்கியது பற்றி தெளிவாக பேச பட்டிருந்தது. மேலும் அது பற்றிய விவாதத்தில் பா.ஜ.க சார்பில் யார் பணம் வாங்கி கொண்டு கண்டு கொள்ளாமல் விட்டது பற்றியும் சொல்ல பட்டிருந்தது. தற்போது யாருமே அதை விவாதமாக வெளி கொணரவில்லை. சுவிஸ் வங்கிக்கு தினமும் தீபாவளி தான்

  6. ~~~~WANTED!!!!!!~~~~~

    Wanted Mr.Athiyaman for his intelectual answers. Mr.Athiyaman Please answer to asuran directly Please….

    I have been reading both of you but we are unable to conclude. I see more valid ponts with asuran than you. You please give direct answer to asuran.

    ASURAN please do not get excited… I value your points.. but do not use offensive words against opponent. Even when you are frustrated,.

      • அதியமான் கொடுத்துள்ள சுட்டியில் அவர பதிலளிக்காமல் எஸ்கேப் ஆகி இங்கு ஓடி வந்த கேள்விகளைத்தான் இங்கு மீண்டும் பதிந்துள்ளேன் என்பதை பதிவுலகின் கவனத்திற்கு அறியத் தருகிறேன்.

      • நண்பர் அதியமான்
        ஒரு வருடத்திற்கும் மேலாக நீங்கள் அசுரனிடம் செய்யும் வாதங்களை படித்து வருகிறேன். ஆரம்பத்தில் வினவின் அரசியலுக்கு நாணயத்தின் மறுமுகமாக உங்களின் வாதங்கள் இருக்கும். வினவின் அரசியலை உரசி பார்க்கும் உரைகல்லாக இருந்தன உங்களின் வாதங்கள், மாற்று கருத்தாளர்களின் கருத்துகளையும், அவற்றின் சரி தவறுகளை மறுத்து மக்கள் அரசியலை பேச ஒரு பயிற்சி களமாக இருந்தது.அதனாலேயே உங்களின் கருத்துகளை படிக்க தவறுவதில்லை. ஆனால் காலப்போக்கில் உங்களின் விவாதமுறை மாற ஆரம்பித்தது.சோவியத்தின் மனித உரிமை மீறல்களை முதலாளிதுவதிற்கு எதிராக நிறுத்தி முதலாளித்துவத்தை ஞாயபடுத்த ஆரம்பிதீர்கள், மேலும் மேலும் முதலாளித்துவம் அம்பலப்படும் போதெல்லாம் அதையே மீண்டும் மீண்டும் கூறினீர்கள். விவாதிப்பவர்களின் விவாதமுறை வெறும் வசவாக உள்ளது என கூறி அதில் உள்ள கருத்துகளை கடந்து சென்றீர்கள். வினவின் ஜனநாயகத்தை நோக்கி கேள்வி எழுப்பினீர்கள், தற்போது வெறும் வசவை மட்டுமே பதிலாக கூறி நிற்கிறீகள். எங்குமே முதலாளித்துவத்தின் தவறுகளையோ, வறுமை பற்றிய அளவீட்டின் போது உங்களின் தவறுகளை சுட்டி காட்டும்போதோ ஒப்புகொண்டதோ அதற்கான மாற்று பற்றியோ கூறியதில்லை. மறுபுறம் விவாதிப்பவர்கள் சோவியத்தின் அரசியல் தவறுகள் திருத்தப்பட வேண்டியவையே என்பதை ஒப்பு கொண்டிருக்கிறார்கள், உங்களின் ஜனநாயகம் தியகுவுடனான விவாதத்தின் போது கேள்விக்குள்ளான போது உங்கள் பக்கம் நின்றார்கள், செல்வநாயகி மற்றும் நந்தா போன்றோர் விவாதமுறை குறித்து விமர்சித்த பின் அவ்வாறான நடைமுறையை தவிர்த்து விட்டார்கள், வினவின் எழுத்துக்கள் வாசிப்பவர்களுக்கு புரியவில்லை என்ற கருத்து எழுந்தவுடன் எழுத்துமுறையை மாற்றி இருக்கிறார்கள் (புகார் தெரிவித்த என் நண்பர்கள் கூறியது ). மேலும் அவர்கள் விவாதிக்கும் போது முன்னிறுத்துவது மக்கள்நலம் என்ற ஒன்று மட்டுமே , ஆனால் உங்களின் விவாதம் முதலாளித்துவத்தை ஞாயபடுதுவதே குறிக்கோளாகவும், மக்கள் நலம் அதனை ஞாயபடுத்த ஊருகாயகவும், அது மக்களுக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டும் போது சோவியத்தின் மனித உரிமை மீறல்களை நிறுத்தி கம்முநிசதின் மீது செரடிப்பதாகவும் இருக்கிறது. இப்ப்போது கூட கிருஷ்ணாவிடம் தான் எச்சரிக்கையாக இருப்பதாக கூறி தனது ஜனநாயக பண்பை காட்டி இருக்கிறார், ஆனால் ஜனநாயகவாதி என்று கூறி கொண்டு எங்குமே உங்களையும் உங்களின் கருத்துகளையும் மறுபரிசீலனை என்ற ஒன்றை செய்ததே இல்லை. மாறாக ரொம்ப புத்திசாலிதனமாக பேசுவதாக நெனைப்பா என்றும், நீ சிறுவன், அறியாபிள்ளை,கத்துக்குட்டி என பெரியண்ணன் தனத்தைத்தான் காட்டினீர்கள்.அவர்கள் பொதுநலம் ஒன்றே குறிகோளாக அதற்கு தடையாய் உள்ள அனைத்தையும் தகர்தேரியவும் தன்னில் உள்ள பிழைகளை திருத்தவும் தயாராய் இருப்பதாய் உணர்த்தி நிற்கிறார்கள், பொதுஉடமை பேசும் பொதுநலவாதிகளை உள்ளார்கள், இருப்பதை இழக்கவும் தயாராக இல்லை எதிர்கால இழப்புகளை ஏற்கவும் மனமில்லை பிறகு மனிதநலனில் அக்கறை உள்ளவராக, மனித உரிமை பேசும் நல்லவராக அறிமுகம் செய்து கொள்ளும் தாங்கள் யாராக உள்ளீர்கள் ?

        • //எங்குமே முதலாளித்துவத்தின் தவறுகளையோ, வறுமை பற்றிய அளவீட்டின் போது உங்களின் தவறுகளை சுட்டி காட்டும்போதோ ஒப்புகொண்டதோ அதற்கான மாற்று பற்றியோ கூறியதில்லை.////

          no. wrong. first of all the argument about reduction in poverty : pls re-read them again. all surverys (using same parameters for all periods) point to reduction of poverty. esp the EPW link.

          I hold no brief for any ‘muthalaaliththuva thavaruhal’. try to be specific where i justify violations in the name of ‘capitalism’. My real objectives can be summed up at :

          http://athiyaman.blogspot.com/2008/10/holiest-of-all-holies.html

          /// மறுபுறம் விவாதிப்பவர்கள் சோவியத்தின் அரசியல் தவறுகள் திருத்தப்பட வேண்டியவையே என்பதை ஒப்பு கொண்டிருக்கிறார்கள்,//

          is it so ? tell this to Asuran and Co. I find them blindly refuting all violations as false and lies of western propoganda.

        • //மேலும் அவர்கள் விவாதிக்கும் போது முன்னிறுத்துவது மக்கள்நலம் என்ற ஒன்று மட்டுமே , ஆனால் உங்களின் விவாதம் முதலாளித்துவத்தை ஞாயபடுதுவதே குறிக்கோளாகவும், மக்கள் நலம் அதனை ஞாயபடுத்த ஊருகாயகவும், அது மக்களுக்கு எதிராக இருப்பதை சுட்டிக்காட்டும் //

          sorry my friend, these are wrong assumptions and generalisations. You assume that people like us are makkal ethiri, etc. very wrong. we have as much concern for people’s welfare, like you. pls see this post for accusations like the above :

          http://nellikkani.blogspot.com/2007/09/blog-post.html

    • நண்பர் கிருஷ்ணன்,

      அதியமான் அவர்களை தனிப்பட்ட முறையில் தரக் குறைவாக திட்டி எழுதியதில்லை. இங்கும் எழுதவில்லை. அவரது இரட்டை நாக்கு அனுகுமுறையைத்தான் கடுமையாக சுட்டிக் காட்டியுள்ளேன். ஆயினும் அவை அதியமானை தரக் குறைவாக திட்டுவது போல தோற்றம் தருகிறது எனில் சிறிது எச்சரிக்கையுடன் எனது வார்த்தைகளை இனி பயன்படுத்துவேன்.

  7. இதைப்பற்றி இந்த வாரத்திலிருந்து துக்ளக்கில் குருமூர்த்தி ஒரு தொடர் ஆரம்பித்திருக்கிறார் ….

    • மேற்படி குருமூர்த்திகள் ஊழல்களைப் பற்றி எழுதுவதிலும் கூட எப்படி அயோக்கியத்தனமாக உள்ளனர் என்று அம்பலப்படுத்தி அண்ணன் உண்மைத் தமிழன் அவர்கள் எழுதிய வழக்கம் போல அவரது நீண்ட பதிவு

      http://truetamilans.blogspot.com/2011/03/blog-post_05.html

      • //இதைப்பற்றி இந்த வாரத்திலிருந்து துக்ளக்கில் குருமூர்த்தி ஒரு தொடர் ஆரம்பித்திருக்கிறார் …//

        குருமூர்த்தி கட்டுரையை படிக்கும் போது அப்பன் எம்பெருமான் உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் பதிவை மனதில் வைத்துக் கொண்டு குருமூர்த்தி சொல்வதில் உள்ள உண்மைகளை மட்டும் மனதில் இறுத்திக் கொள்ள உதவும் என்று கருதியதால் உண்மைத் தமிழன் கட்டுரைக்கு லிங்க் கொடுத்தேன்.

    • குருமூர்த்தி அவர்களும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் இந்த அரசு சாதகமாக இருக்கிறது என்ற வகையில் கடந்த வாரம் தினமணியில் கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் இங்கு குருமூர்த்தி என்ற பெயரை குறிப்பிட்டால் அவர் கருத்தை பார்க்காமல் முதுகைத் தடவிப்பார்த்து பார்ப்பனர் என்பார் நண்பர் அசுரன்

      • //குருமூர்த்தி அவர்களும் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் இந்த அரசு சாதகமாக இருக்கிறது என்ற வகையில் கடந்த வாரம் தினமணியில் கட்டுரை எழுதியிருந்தார். ஆனால் இங்கு குருமூர்த்தி என்ற பெயரை குறிப்பிட்டால் அவர் கருத்தை பார்க்காமல் முதுகைத் தடவிப்பார்த்து பார்ப்பனர் என்பார் நண்பர் அசுரன்//

        அண்ணே, எனது பின்னூட்டத்தை எதற்கும் ஒரு முறை சரியாகப் படித்து விடுங்கள் அண்ணே. அவரது முதுகை தடவிர்ப் பார்க்காத போதும் எனக்காக நீங்கள் சிரமப்பட்டு ஏண்ணே தடவிப் பாத்தீங்க?

  8. this is most important one.
    when 15 years back Income-Tax highest rate is nearly 90%. we must see the Income – Tax followed slap system. Even at that time there is some variation for unmarried, married, married with children.only very higher income people are come under higher rate not all other persons. At that
    time Income – Tax has act as a level player among the citizen. it not allowed any person to accumulate huge money in his name. Income Tax is a personal direct tax, means the tax is paid by the Assesses from his own pocket. it is correct the Income -Tax collection is increasing Many
    fold but this not coming from the companies and firm.
    The rate for
    income for companies and firms are not drastically changed for last 15 years.
    the increase of Income Tax arise because of the increasing the number of Assesses only. It is total lie, because of decrease of highest
    level to 35% is the cause for the increase of collection.
    it only create thousands of Billoner in the county, when the government paid village worker only Rs100/ per day for 15 days per month. our present government systematically looted the poor people
    It introduce the service tax. Service tax is dangerous tax.in the face value it look like a simple one.but it really compel A BILLONER and a day labor to pay the same rate of service tax. even a labor forced to pay 12% service tax for a single phone call value Rs.1/-
    in this current budget government propose to 5% service tax on medical
    treatment. Even the MCI opposed and write to government to cancelled it, and also it said in their letter it is a tax , just like the salt tax imposed by the colonial British government . at that time we have one Gandhi to save us- but who save us .

  9. Mr.Libertarian can you give answer following … 1.why ecanomic problem arose in 2008 , the socalled developing country. 2.do you have any idea about Fiscal deficit of The US. 3. Why BIMARU states surpass poverty over subsaharan Afica (an UNDP report in 2010) 4. What is our percapita income ( excluding top 1000 billianare) in India.? 5.Can you give a single evidence for conviction of carporate corruption since indipendence.? 6.How Hasan Ali done 35000 crore tax evation in our political system?.

    • Good for you Nammy. these are real questions which need correct
      answers.

      To start with, India has / had crony capitalism instead of real capitalism.
      I have written enough about this in my blogs :

      http://athiyaman.blogspot.com/2006/02/why-indians-became-cynical_114041607453064093.html
      http://athiyaman.blogspot.com/2009/09/rajaji-on-sri-sri-prakasa-and-nehrus.html
      http://athiyaman.blogspot.com/2007/05/ethics-corruption-and-economic-freedom.html

      Causes for the 2008 global crisis :

      http://athiyaman.blogspot.com/2009/04/distortions-in-money-markets-due-to.html

      and yes, poverty is worse in BRMU states. while states like
      TN are much better. who is responsible ?

      and what solutions do you propose ? back to pre-1991
      license raaj, tight controls, a closed economy ,etc ?

      and US deficts and artifical propping of USD by Asian exporting
      nations are major reasons for the imbalances in the system :

      • //.

        To start with, India has / had crony capitalism instead of real capitalism.
        I have written enough about this in my blogs ://

        இதெல்லாம் செல்லாது. முதலாளித்துவம்னு சொல்லிட்டு போங்க. அதென்ன க்ரோனி முதலாளீத்துவம், உண்மை முதலாளித்துவம்னு பீலா? சோசலிசத்துக்கு மட்டும் இந்த பகுப்பு பொருந்தாதோ?

        • //சோசலிசத்துக்கு மட்டும் இந்த பகுப்பு பொருந்தாதோ?//

          sure, it can be applied. but you are too crazy to realise that the ‘socialism’ you are referring to is totally different from the ‘socialism’ of Nehruvian India, and socialists of Europe in those days. Inspite of repeated explanations of this difference in meaning of the word as used by Communists in USSR, etc and democratic socialists of then UK, India, etc,….

          and whatever can be termed as ‘anti free market principles’ is labelled as socialism, etc in the west : from ‘pure communism’ to communist form of ‘socialism’ to fabian socialism to state capitalism to state monopoly to any other brand of the same.

          what is there in a name ? what matters is what happens in practice.

          finally if MGR can be clubbed together along with Nehru and JP (as soclialists), then the ‘judgement’ and knowledge of the person who does this can be left to the readers here.

          Only the very arrogant and insensitive idiots will scoff at the efforts and life
          of great leaders like Nehru, JP and Lohai. sure they had their failings and mistakes (who doesn’t have). but they spent decades in the freedom struggle and many years in prison ; no sane person will dismiss them in one line. History will judge for itself. not some arrogant ke.koos

        • //finally if MGR can be clubbed together along with Nehru and JP (as soclialists), then the ‘judgement’ and knowledge of the person who does this can be left to the readers here. //

          அதியமான் அண்ணே, உலக வரலாறேல்லாம் படிச்சதா அடிக்கடி சொல்வீங்களே கொஞ்சம் இந்திய வரலாறையும் படிச்சிருந்தா நேருவுக்கும் எம் ஜி ஆருக்கு அரசியல் ரீதியா பெருசா வித்தியாசமில்லைனு த்ரிஞ்சிருக்கும். என்ன செய்ய நாங்க சிறுபிள்ளைகாளிவிட்டோம், நீங்க பெரிய அனுபவஸ்தர் ஆயிட்டீங்க்…. எதுக்கும் இந்திய வரலாற்றையும் மறுவாசிப்பு செஞ்சிருங்க (இதுல எதுவும் விவாதம் செய்ய மாட்டேன்னு கேரண்டி கொடுக்கிறேன்).

        • //ke.koos//

          சூப்பர்ணே.. உங்களால பதில் சொல்ல முடியாம அம்பலமாயிட்ட கடைசியா செட்டிலாகிற கெட்ட வார்த்தை டிரண்டுதான் அக்மார்க் அதியமான்….. இதுல அடுத்தவனுக்கு அட்வைஸு வேற… முதலாளின்னா சுத்தமான முதலாளியாள்ளண்ணே இருக்கீங்க….

        • //what is there in a name ? what matters is what happens in practice.//

          இதையேதாண்ணே நாங்க முதலாளித்துவத்துக்கு அப்ளை செய்யிறோம்.. சோசலிச எச்சம்னு நீங்க சொல்ற இடத்துல எல்லாம் அரசு மோனோபாலி இருந்ததை மட்டும் பேசும் நீங்க. அங்க முதலாளிங்க சுரண்டலும் இருந்ததை மறைப்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் நீங்களே மெச்சுகிற ‘உண்மை’ முதலாளித்துவம் இருந்த நாடுகளில் அரசு மோனோபாலி இருந்ததையும் மறைக்கிறீர்கள். மொத்தத்தில் சோசலிசம் என்ற வார்த்தை இடத்துக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப முதலாளித்துவத்தின் அயோக்கியத்தனங்களை காப்பதற்கு ஏற்ப நீஙக் மாத்தி மாத்தி வரையறை செய்வீங்களாம். அப்புறம் அதையெ பெரிய புத்திசாலித்தனம், ஓபன் மைண்டு அப்படின்னெல்லாம் பீலா விடுவீங்களாம். நாங்க அத அமைதியா பாத்துக்கிட்டு இருக்கனுமா? கேள்வி கேட்ட கே.கூவா?

          கொய்யால….(இது உங்களை இல்ல என்ன சொன்னேன்)

        • //இந்திய வரலாறையும் படிச்சிருந்தா நேருவுக்கும் எம் ஜி ஆருக்கு அரசியல் ரீதியா பெருசா வித்தியாசமில்லைனு த்ரிஞ்சிருக்கும்.//

          இப்படி சொல்பவர்களை தான் ke.koo என்று விளித்தேன். எம்.ஜி.ஆர் ஊழல் வாதி. பெரிய கொள்கை எதுவும் இல்லை. ஃபாசிஸ்ட். பலரையும் அடித்து மிரட்டியவர். அவருக்கு பாரத் ரத்தனா அளித்தது தான் பெரும் கொடுமை. எந்த விதத்திலும் மதிக்கப்பட அவரின் அரசியல் சாதனைகள் எதுவும் இல்லை. தனி நபர் துதி, ஊழல், போன்றவையே அவரின் சாதனைகள்.
          உமது வரலாற்று அறிவை நீர் தான் மெச்சிக்க வேண்டும்.

          ஜெயப்பிரக்காஷ் நாரணயன் பற்றி உமக்கு என்ன வெங்காயமா தெரியும். நேரில் உம்மிடம் சுடச்சுட பேச தோன்றுகிறது. மேலும் பல வகையாக உம்மிடம் பேச ஆசை….
          இருக்கட்டம். சந்தர்ப்ப்பம் கிடைக்கும்..

          ஏற்கெனவே சொன்னதுதான் : உம்மை போன்ற புடுங்கிகள் ஜெ.பி மற்றும் நேருவின் கால்தூசிக்கு கூட சமானமாக மாட்டீர்கள். மேலும் சொல்கிறேன் : ‘…….. ………’

        • //எம்.ஜி.ஆர் ஊழல் வாதி. பெரிய கொள்கை எதுவும் இல்லை. ஃபாசிஸ்ட். பலரையும் அடித்து மிரட்டியவர். //

          இதேயேதான் நேருவும் செஞ்சாரு. எம் ஜிஆருக்கு கொள்கையில்லை என்பதை சோசலிசம் குறித்த உங்களது உட்டாலக்கடி வரையறையின் அடிப்படையில் செய்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன். எனவே ரிஜெக்டட்.

        • //ஏற்கெனவே சொன்னதுதான் : உம்மை போன்ற புடுங்கிகள் ஜெ.பி மற்றும் நேருவின் கால்தூசிக்கு கூட சமானமாக மாட்டீர்கள். மேலும் சொல்கிறேன் : ‘…….. ………’//

          சமாளிக்க கஸ்டப் படுறீங்க.. ஏன் கஸ்டம்… வெக்கப்படாம போங்கண்ணே. உங்களப்பத்தி எல்லாருக்கும் தெரியும். நீங்க ஒரு நேர்மையில்லாதவர்னு. செஞ்ச தப்பக் கூட ஒத்துக்க வக்கில்ல இதுல ஊருக்கு அட்வைசு..

    • //Mr.Libertarian can you give answer following … 1.why ecanomic problem arose in 2008 , the socalled developing country. 2.do you have any idea about Fiscal deficit of The US. 3. Why BIMARU states surpass poverty over subsaharan Afica (an UNDP report in 2010) 4. What is our percapita income ( excluding top 1000 billianare) in India.? 5.Can you give a single evidence for conviction of carporate corruption since indipendence.? 6.How Hasan Ali done 35000 crore tax evation in our political system?.//

      இது எல்லாத்துக்கும் அதியமான் அண்ணாச்சியிடம் ஒரேயொரு பதில் இருக்கு. அதை உடனே சொல்லமாட்டார். சொன்னா நீங்க கண்டு பிடிச்சுருவீங்க. அந்தப் பதில், ‘சோசலிச எச்சம்’.

      • எச்சரிக்கை!
        இது கொட்டைப்பாக்குக்களுக்கெல்லாம் கொட்டைப்பாக்கான இடுகை.

        அசுரன்,
        பெரியவர்கள் சொன்னால் பேசாமல் கேட்டுக் கொண்டு போவது தான் மரியாதை. குறுக்கே பேசிக் கொடுமைப் படுத்தக் கூடாது.

        எல்லாத் தவறும் சோஷலிசத்தினுடையது தான்.
        ஹிட்லர் இருந்தானே! அவனுடைய கட்சியின் பேரென்ன? தேசிய சோஷலிஸ்ட் கட்சி.
        ஸ்டாலின் என்கிற முதலாளியவாதி அல்லவா தேசிய சோஷலிஸ ஜெர்மனியைத் தோற்கடித்து அழித்தான்.
        ஜயவர்தனே என்று ஒருத்தன் இலங்கைக்கு ஜனனாயக சோஷலிசக் குடியரசு என்று பேர் வைத்து, திறந்த பொருளாதாரத்தைப் புகுத்தினானே.
        இலங்கைப் பொருளாதாரம் அவனுடைய சோஷலிசத்தாலல்லவா சீரழிந்தது.

        இப்படி உலகைச் சிதைத்த சோஷலிசவாதிகளின் பட்டியல் வெகு நீளம்.
        .
        நமக்கெல்லாம் உற்பத்தி தேவை இல்லை.
        நாமெல்லாரும் தின்னவும் குடிக்கவும் உடுக்கவும் அமெரிக்கன் அல்லது சீனன் அல்லது வேறெவனுமாவது செவ்வாய்க் கிரகத்திலிருந்து கொண்டு வந்து கொட்டுவான்.

        முழு உலகும் சேவைப் பொருளாதார சுவர்க்கத்தில் மிதப்பதாக! ஆமென்!

      • ////what is there in a name ? what matters is what happens in practice.//

        இதையேதாண்ணே நாங்க முதலாளித்துவத்துக்கு அப்ளை செய்யிறோம்.. சோசலிச எச்சம்னு நீங்க சொல்ற இடத்துல எல்லாம் அரசு மோனோபாலி இருந்ததை மட்டும் பேசும் நீங்க. அங்க முதலாளிங்க சுரண்டலும் இருந்ததை மறைப்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் நீங்களே மெச்சுகிற ‘உண்மை’ முதலாளித்துவம் இருந்த நாடுகளில் அரசு மோனோபாலி இருந்ததையும் மறைக்கிறீர்கள். மொத்தத்தில் சோசலிசம் என்ற வார்த்தை இடத்துக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப முதலாளித்துவத்தின் அயோக்கியத்தனங்களை காப்பதற்கு ஏற்ப நீஙக் மாத்தி மாத்தி வரையறை செய்வீங்களாம். அப்புறம் அதையெ பெரிய புத்திசாலித்தனம், ஓபன் மைண்டு அப்படின்னெல்லாம் பீலா விடுவீங்களாம். நாங்க அத அமைதியா பாத்துக்கிட்டு இருக்கனுமா? கேள்வி கேட்ட கே.கூவா?

        கொய்யால….(இது உங்களை இல்ல என்ன சொன்னேன்)//
        ிதுக்கு பதில் இல்லையேண்ணே?

  10. அதியமான் உரையாடலுக்கு நன்றி. இப்போது தான் வாய்ப்பு கிடைத்தது. பழைய படங்களில் எம்ஜிஆரை சுற்றி பத்து கத்திச் சண்டை வீரர்கள் சண்டை போடுவது போல ஒவ்வொரு முறையும் இந்த உரையாடலில் பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கீங்க.

    நான் முதலாளி அல்லது பணியாளர் என்கிற நோக்கத்தில் பார்ப்பதை விட இந்த முதலாளிதுவத்தை பொதுப்படையாக பாருங்க. எல்லோருமே லாபத்திற்குத் தான் தொழில் செய்கிறார்கள். ஆனால் லாபத்துடன் எத்தனை முதலாளிகளுக்கு சேவை மனப்பான்மையும் இருக்கின்றது. ஊரை உதாரணம் காட்ட வேண்டாம்.

    இங்கு பொண்ணுக்கு அப்பன் ஏற்றுமதியாளர் சங்கத்தில் முக்கிய பதவி. பையனுக்கு அப்பன் நூற்பாலையில் முதன்மை பதவி. பங்காளி சாயப்பட்டறையில் தலைமை பதவி. சகலை மற்றொரு பதவி. இது போன்ற ஆட்களை நம்பி நம்பி ? இன்று திருப்பூர் எந்த சூழ்நிலையில் வந்து நிற்கிறது பார்த்தீர்களா?

    கடந்த 2006 முதல் ஒவ்வொருவரும் நகர்த்தி நகர்த்தி இன்று இது போன்ற சுயநல பேய்களின் ஆதிக்கத்தால் மூன்று லட்சம் மக்களின் வாழ்க்கை தெருவுக்கு வந்துள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் எல்லாருமே மூட்டையை கட்டிக் கொண்டு வெளியே கிளம்ப வேண்டியது தான்.

    நீங்கள் சொல்லும் இது போன்ற முதலாளி வர்க்கத்திற்கு என்ன ஆறுதல் வார்த்தையை வைத்து இருக்கீங்க?

    • //நீங்கள் சொல்லும் இது போன்ற முதலாளி வர்க்கத்திற்கு என்ன ஆறுதல் வார்த்தையை வைத்து இருக்கீங்க?//

      ஒரேயொரு வார்த்தைதான் அத அதியமான் சொல்லும் முன் நான் சொல்ல விரும்புறேன். அது என்னவென்றால், இன்றைய திருப்பூர் முதலாளியின் பிரச்சினைக்கும் காரணம் இந்தியாவில் நிலவும் சோசலிச எச்சம்தான்.

      இத்துடன் சேர்ந்து அதியமான் சொல்லு இருக்கும் விசயங்கள், திருப்பூர் அன்னியச் செலவானி, உலகளவில் சுத்தமான முறையில் செய்யப்படும் தொழில்துறைகள் என்பதாக சுட்டிகள், ஆங்கே ஐரோப்பாவைப் பார் என்று நிலாச் சோறு ஊட்டும் சில பல கருத்துத் தெளிப்பான்கள் இவையெல்லாம் இருக்கும். அவற்றை அவரே பிற்சேர்க்கையாக சொல்லும் படி விட்டு வைக்கிறேன்.

      நான் முற்சேர்க்கையாக சொல்ல விரும்புவது அவரது கருத்துக்களுக்கனா பொழிப்புரை அல்லது அவர் மறைமுகமாக சொல்ல விரும்பும் கருத்து,

      அதாவது, முதலாளிக்கு திருடவும், கொள்ளையடிக்கவும், நாட்டை நாசமாக்குவதும்தான் இயல்பு. அவன் அப்படித்தான்யா. அரசுதான் இதையெல்லாம் பாத்து சரி செய்யனும். இல்லைனா அது பேருதான் சோசலிச எச்சம்.

  11. இன்னமும் கூட காரியம் கெட்டுப் போகவில்லை. உங்க அப்பாவும் உருப்படியான திட்டத்தை இந்த சாயப்பட்டறைக்காக வைத்துள்ளார் தானே? எவராவது வந்து உதவுங்க என்று கேட்கிறார்களா? இல்லை அதற்கான முன்னேற்பாடுகளைத்தான் அரசாங்கம் உருவாக்குதா? காரணம் பணத்தை மட்டுமே பார்க்கும் முதலாளிகளுக்கு எந்த சமூகமும் அதன் முகமும் தெரியாது.

    நீங்க சொல்வது போல வலுவிழந்த கம்யூனிஸ்ட் கொள்கைகளை தேவையில்லை நாடு வளர்வதற்கு என்றால் நம் நாட்டில் வராக்கடன்களுக்கு உருவாக்கிய சட்டங்கள் பல்லைக் காட்டிக் கொண்டு ஒவ்வொரு பட்ஜெட் டிலும் சிரித்துக் கொண்டே தானே இருக்கிறது. ஏன் சிண்டை பிடித்து வசூலிக்க நம் அரசியல் வியாதிகளுக்குத் தெரியாதா?

    நான் திருடன். நீயும் திருடன். நீ என்னை கண்டு கொள்ளாதே? நான் உன்னை கண்டு கொள்ள மாட்டேன். முடிந்த வரைக்கும் திருடுவோம்.

    இது தானே இப்போதைய இந்திய ஜனநாயகத்தின் தாத்பர்யம்.

    • ஜோ,

      உங்க கேள்விகளுக்கு ஏற்கெனவே மேலே பதில் அளித்திருக்கிறேன். வராக்கடன் பற்றி ;

      திருப்பூர் சாயபட்ட்ரை அதிபர்களுகு அறிவு இல்லை. விவேகம் இல்லை. தொடர்ந்து நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம். இந்த தீர்வை அமலாக்கினால்தான் அவர்கள் எதிர்க்காலம். இல்லாவிட்டால் அழிவுதான். எப்படியும் மாசு இன்று நின்றுவிட்டது. இந்த ‘மாசு நிறுத்தல்’ தொடர வேண்டும். அவ்வளவுதான்.

      நண்பர் சித்திரகுப்பதன்,

      தொலைபேசியில் உங்களிடம் உரையாடியது மகிழ்ச்சி. பொது போக்குவரத்து பற்றி நான் அனுப்பியிருந்த சுட்டியிலேயே உங்க பதிலை பதியலாம். மேற்கொண்டு விவாதிப்போம்.

      • //திருப்பூர் சாயபட்ட்ரை அதிபர்களுகு அறிவு இல்லை. விவேகம் இல்லை. தொடர்ந்து நாங்கள் முயன்று கொண்டிருக்கிறோம். இந்த தீர்வை அமலாக்கினால்தான் அவர்கள் எதிர்க்காலம். இல்லாவிட்டால் அழிவுதான்.//

        கேள்வி கேட்டிருந்த ஜோதிஜி இதை நம்பி இங்கு வந்து வாழும் பல லட்சம் குடும்பங்கள், தொழிலாளர்களை முன்னிறுத்தி கேள்வி கேட்கிறார். நம்ம அதியமானோ முதாலாளிகள் அழிவை முன்னிறுத்தி பதில் சொல்கிறார்.

        • ///கேள்வி கேட்டிருந்த ஜோதிஜி இதை நம்பி இங்கு வந்து வாழும் பல லட்சம் குடும்பங்கள், தொழிலாளர்களை முன்னிறுத்தி கேள்வி கேட்கிறார். நம்ம அதியமானோ முதாலாளிகள் அழிவை முன்னிறுத்தி பதில் சொல்கிறார்.///

          முதலாளிகள் ’அழிந்தால்’ அங்கு வேலை வாய்ப்புகள் மிக மிக குறைந்து தொழிலாளிகளும் பெரும் துன்பத்திற்க்குள்ளாவர். இப்பவே சுமார் 2,00,000 பேர், தம் ரேசன் கார்டுகளை திருப்பூரில் இருந்து தம் சொந்த ஊர்களுக்கு மாற்ற விண்ணப்பித்துள்ளதாக தகவல். இன்னும் நிலைமை மோசமானால், தொழிலாளர்களில் பெரும் பகுதியினர் ஊரை விட்டே செல்ல வேண்டிய நிலை உருவாகும்.

          மாற்று வேலைகளை நீங்க உருவாக்குங்களேன்..

        • //முதலாளிகள் ’அழிந்தால்’ அங்கு வேலை வாய்ப்புகள் மிக மிக குறைந்து தொழிலாளிகளும் பெரும் துன்பத்திற்க்குள்ளாவர்//

          romba sari anney! ovvoruthanum maadu mathiri thinnu kozhutthu kidakkuranunga! thookki savakkuzhiyila podarathu kastama than irukkum.

  12. “Kettle calling the pot black” goes the saying.
    We have Mr ke.koos calling all and sundry “ke.koos”.
    He must be a ‘cultured’ ##.#### for sure.

    • கார்ப்போரல் சிரோ அவர்களே,

      //We have Mr ke.koos calling all and sundry “ke.koos”.//

      இதில் சில விசயங்கள் இருக்கின்றன. கேனை என்கிற சொல், தர்மபுரி/கிருஷ்ணகிரி மாவட்டப் பகுதிகளில் சாதிய மேலாதிக்க அர்த்தம் கொண்டதாக கருதப்படுகிறது. பொதுவில் அர்த்தமற்ற கெட்ட வார்த்தகைகளை பயன்படுத்தக் கூடாது என்பது அவரவர் விருப்பம்.. ஆனால் கே. கூ போன்ற வார்த்தைகளை பயன்படுத்தாதீர்கள். அல்லது பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து எபடிக்வாக பயன்படுத்துங்கள் ( என்ன திட்றோம்னு தெளிவா தெரியும்ல).

  13. நண்பர் அதியமானுக்கு:

    நீங்கள் நிறைய புள்ளியியல் தகவல்களுடன் விவாதம் செய்வதை மதிக்கிறேன், வினவு ஒரு ஆரோக்கியமான விவாத களம் என்பதை உணர்ந்திருக்கிறேன், உங்களின் பங்களிப்புகள் என்னை போன்ற வாசகருக்கு பயனளிக்கும் எனவே எழுதுகிறேன்.நீங்கள் தொடர்ந்து விவாதிக்க வரவேண்டும்.

    கீழ்கண்ட கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கும் என எதிர் பார்கிறேன், அவற்றை எங்களுக்கு பகிர வேண்டுகிறேன் தமிழில், இதே விவாத களத்தில். (உங்களுக்கு சிரமம் இல்லாத போது)

    கம்யூனிசம் தனிமனித அதிகார குவிப்பில் முடிந்ததை உங்கள் இணைப்புகளில் இருந்து உணர்கிறேன். அவை உண்மையாகவும் இருக்கலாம் அமெரிக்க ஊடகங்களால் திரிக்க பட்டும் இருக்கலாம். ஆனால் அதற்கு வாய்பிருப்பதை ஏற்கிறேன்.

    1.இந்திய சந்தை தாரளமாக்கபட்ட பிறகு வேலை வாய்ப்புகள் பெருகி உள்ளது இதனை கண் கூடாக அனைவரும்
    உணர்தே இருக்கிறோம். ஆனால், அவர்கள் அனைவரும் இந்தியாவை விரும்பி தேர்தெடுக்க என்ன காரணம்?

    2. அனைத்து உயிர்களின் வாழ்வாதரமகிய குடிநீரை காசுகொடுத்து வாங்கும் அவல நிலைக்கு யார் காரணம்?

    3. என் சிறு வயதுகளில் மக்கள் தான் கைராசியான மருத்துவர் என்று புகழ் பரப்பி மருத்துவமனைகள் கூட்டமாகும், ஆனால் இன்று மருத்துவ மனைகளுக்கும் விளம்பரம் செய்யவேண்டிய அவசியம் என்ன? இது எந்த மாதிரியான வியாபாரம்? இதற்கான பணம் யாரிடமிருந்து பெறப்படும்?

    4.பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தரமான உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் உள்ளவையா அல்லது நாட்டுக்கு நாடு வேறுபடுமா? ஆம் என்றால் ஏன் உயிரிழப்பு ஏற்படுகிறது? இல்லை என்றால் ஏன் வேறுபடுகின்றன?

    5.உங்களுக்கு பிடித்த உலக அரசியல் தலைவர்(கள்) யார்? இந்திய அரசியல் தலைவர்(கள்) யார்? ஏன்?

    6.சுதந்திரத்திற்கு பிறகு இந்திய அரசு எந்திரம் தனது பணியை திறம்பட செய்கிறதா? எப்போதாவது செய்ததா?

    7.மக்களாட்சி என்றால் என்ன? மக்களின் நன்மைக்காக மட்டுமே அனைத்து அரசுகளும் செயல்படுகின்றனவா?
    மக்களின் எதிபார்புகளை அரசு பூர்த்தி செய்கிறதா? யாருடைய கோரிக்கைகள் முதன்மை படுத்த படுகின்றன ஏன்?

    8.மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு என்ன முக்கியத்துவம் கொடுக்க படுகிறது?

    9.விவசாயம் நிருவனமயமாக்கபடுவதை விரும்புகிறீர்கள் என தெரிகிறது. அனைத்து குடிமகன்களின் தொழிலையும் நிறுவனங்கள் தான் முடிவு செய்யவேண்டுமா?

    10.இன்றைய அரசாங்கத்தை தேர்வு செய்யும் சக்தி எது? பணமா, நிறுவனங்களா கொள்கையா?

    11.தொழில் முறை அறம் என்பது அழிந்துபோனதற்கு யார் காரணம்?

    12.குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் ஏற்பட இன்றைய காரணிகள் யாவை?

    13.திரையரங்குகாளில் அரசின் கட்டண நிர்ணயம் தளர்த்தப்பட்டதால் யாருக்கு லாபம்? நடிகர்களின் சம்பளம் அதற்கு முன் எப்படி இருந்தது? தற்போதைய நிலை என்ன? ஏந்திரன் விற்பனை செய்யப்பட்டது எப்படி?
    இதனால் நுகர்வோருக்கு பாதிப்பில்லை என்றால் தனியார்மயம் மக்களுக்கானது என ஏற்கிறேன்.

    last question:
    14. அதியமான் நீங்கள் ஜான் பெர்கின்ஸ் இன் நூல்களையும் வாசித்திருக்கிறீர்களா? Confessions Of An Economic Hitman , The Secret History of the American Empire – Economic Hit Men, Jackals, and the Truth etc? அவற்றை பற்றி உங்கள் கருத்து என்ன?

    • நண்பர் அதியமானுக்கு வைத்துள்ள அற்புதமான கேள்விகளுக்கு அவர் அளிக்க இருக்கும் பதிலை நானும் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன். ஒரு நல்ல கட்டுரையை தமிழாக்கம் செய்ததன் விளைவு நல்ல அரசியல் விவாத மேடையாகியிருக்கிறது,,தொடருவோம் ஆரோக்கியமான விவாதங்களை. நான் தொழிற்சங்க பிரதிநிதியாக இருந்து தொழிலாளர்களுடன் இருக்கிறேன். ஆனால் நண்பர் ஜோதிஜி முதலாளியாகவும், பணிநேரத்தில் தொழிலாளியோடு தொழிலாளியாகவும் இருப்பதால் அவருக்கு முதலாளித்துவ எதார்த்தம், தாராளமய அபாயம் இரண்டும் நன்கு தெரிகிறது. ஜோதியும் நல்ல வாதத்தை முன்வைத்திருக்கிறார்.. தொடருவோம்

      • /// நான் தொழிற்சங்க பிரதிநிதியாக இருந்து தொழிலாளர்களுடன் இருக்கிறேன். ஆனால் நண்பர் ஜோதிஜி முதலாளியாகவும், பணிநேரத்தில் தொழிலாளியோடு தொழிலாளியாகவும் இருப்பதால்///

        சுதந்திர சந்தை பொருளாதார கொள்கைகளை நான் முன்மொழிவதாலேயே நான் தொழிலாளர்களின் நலன்களுக்கு விரோதி, ‘முதலாளிகளின்’ நலன்களை மட்டுமே ஆதரிப்பவன் என்று கருதுவது போல் உள்ளது.

        கம்யூனிச அமைப்பு, சோசியலிச அமைப்பு, முதலாளித்துவ அமைப்பு, நிலப்பிரவுத்தவ அமைப்பு என்று எல்லா அமைப்புகளிலும் தொழிலாளர்கள் தொழிலாளர்களாகவே தம் பணிகளை செய்து, சம்பளம் பெறுவார்கள். இவற்றில் அவர்களின் நலன் மற்றும் வாழ்க்கை தரம் மிக உயர சாத்தியமான அமைப்பு சுதந்திர சந்தை பொருளாதார அமைப்பு தான் என்பதே எம் வாதம். Proof of pudding is in eating என்ற முதுமொழிக்கேற்ப, தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் எந்த அமைப்பில் படிப்படியாக உயர்ந்துள்ளது என்பதை வரலாற்று ஆதாரங்களில் இருந்து பார்த்தாலே தெரியும்.

        இன்றைய வட கொரிய தொழிலாளர்களின் நிலையுடன் தென் கொரிய தொழிலாளர்களின் நிலையை ஒப்பிட்டாலே போதும்.

        ஸ்டாலினிய ரஸ்ஸியாவில், மாவோவின் சீனாவில் தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் ‘நன்றாக’ இருந்தது என்பவர்கள் முழு ஆதாரங்களையும் பார்ப்பதில்லை. மிக முக்கியமாக அடிமைகளாக, பயத்துடன் அன்று அங்கு வாழ்ந்தார்களா, அல்லது இன்றை மே.அய்ரோப்பா போல சுதந்திரத்துடன், அதே சமயம் நல்ல வாழ்க்கை தரத்துடன் வாழ்ந்தார்களா என்பதே முக்கிய விசியம்.

        விலைவாசி உயராமல் இருப்பது, மிகுதியான வேலை வாய்ப்பு : இவை இரண்டும் முதலில் கிடைத்தாலே இந்திய தொழிலாளர்களுக்கு போதுமானதாக இருந்த காலங்கள் இங்கு 80கள் வரை இருந்தது. (நண்பர் சித்திரகுப்தன், நீங்கள் 1961இல் பிறந்தவர். இதை பற்றி அனுபவரீதியாக எங்களை விட அதிகம் தெரிந்திருக்கிம். 1980இல் வெளி வந்த ’வறுமையின் நிறம் சிகப்பு’ படம் இன்று பொருந்துமா ?).

        ’உயர்ந்த கொள்கை லட்சியங்கள்’ மட்டும் தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது. முக்கியமாக இந்தியாவில் 1991க்கு முன்பு கடைபிடிக்கப்பட்ட கொள்கைகள், மற்றும் கோசங்களின் விளைவுகளையும், தென் கொரியா, ஜப்பான், தைவான் போன்ற நாடுகள் அந்த காலங்களில் கடைபிடித்த கொள்கைகளின் விளைவுகளையும் ஒப்பிட்டால் போதும்.

    • Q2A,

      உங்க கேள்விகளுக்கு நிதானமாக விடை அளிக்கிறேன்.

      ஜான் பெர்கின்ஸ் நூலை புரட்டியிருக்கிறேன். முழுசா இன்னும் படிக்கவில்லை. அதை பற்றி சுருக்கமாக சொன்னால் : அவை விதி விலக்குகள் தான். எல்லா நாடுகளிலும், எல்லா நிறுவனங்களும் அப்படி செய்வதில்லை. தேவையும் இல்லை. உதாரணமாக இந்த உரையாடலை சாத்தியாமாக்கியிருக்கும் கூகுள், மைக்ரோசாஃப்ட், இண்டெல், அய்.பி.எம், மொடொரோலா, சிஸ்கோ, ஹெச்.பி, போன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மேல் கொண்ட நூலில் உள்ள அக்கிரமங்களை செய்யது சாதிக்கவில்லை.

      எல்லா காலங்களிலும், எல்லா நாடுகளிலும் கிரிமினல்கள், அயோக்கியர்கள் ஒரு குறிப்பிட்ட சதம் இருப்பார்கள் தாம். அவர்களின் செயல்களை கொண்டு அந்த நாடே அப்படி தான் என்று சொல்வது பொதுப்படுத்துவது.

      எனக்கு மிகவும் பிடித்த இந்திய தலைவர் ராஜாஜி. (இத்தனைக்கும் நான் ஒரு தி.க குடும்ப பிண்ணியில் இருந்து வந்தவன் !). அவரை பற்றி எமது பிளாகுகளில் விரிவாக எழுதியுள்ளேன். பிடிக்காத தலைவர் : இந்திரா காந்தி.

      தண்ணீர் பற்றாகுறை : ஜனத்தொகை இன்று 110 கோடிகள். தொடர்ந்து ஏறுகிறது. அன்று 80 கோடி தான். எப்படியும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும். மேலும் மழை குறைந்து, குளங்கள், நிலத்தடி நீர் மிக கீழே சென்று கொண்டிருக்கிறது. கிராம குளங்கள், குட்டைகளை தூர் வாரி ஒழுங்கா பராமரிப்பது 50 ஆண்டுகளில் நின்று போய்விட்டது. மேலும்…

      • //தண்ணீர் பற்றாகுறை : ஜனத்தொகை இன்று 110 கோடிகள். தொடர்ந்து ஏறுகிறது. அன்று 80 கோடி தான். எப்படியும் தண்ணீர் பற்றாக்குறை இருக்கும். மேலும் மழை குறைந்து, குளங்கள், நிலத்தடி நீர் மிக கீழே சென்று கொண்டிருக்கிறது. கிராம குளங்கள், குட்டைகளை தூர் வாரி ஒழுங்கா பராமரிப்பது 50 ஆண்டுகளில் நின்று போய்விட்டது. மேலும்…//

        இதுக்கும் சோசலிச எச்சம் காரணமா அதியமான்

        • அதே தான், தண்ணீர் பற்றாளுரைக்கு காரணம் மக்கள் தொகை பெருக்கம் என்றால், அதன் பின்னணியில் அரசின் தொலை நோக்கு பார்வை ஏன் இல்லை? நீர் நிலைகளை ஆழ படுத்துவதும் , ஏரிகளை தக்க வைப்பதும் யாருடைய பொறுப்பு? அதை சோஷலிச எச்சஅரசு செய்யவில்லையா? குறைந்த பட்சம் இன்றைய அரசு செய்கிறதா? இன்றைய பன்னாட்டு நிறுவனங்கள் நீர் சேகரிப்பை ஊக்க படுத்துகின்றனவா இல்லை இருக்கும் நீராதாரத்தை வைத்து காசு பர்கின்றனவா?

    • ///11.தொழில் முறை அறம் என்பது அழிந்துபோனதற்கு யார் காரணம்?
      12.குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் எண்ணம் ஏற்பட இன்றைய காரணிகள் யாவை?///

      இதற்கு பதிலை இங்கு பார்க்கவும் :

      http://nellikkani.blogspot.com/2007/07/blog-post_2745.html
      நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது

      திரை அரங்கு கட்டணங்களை முற்றாக free செய்தால் தான் அந்த துறை உருப்படும். இல்லாவிட்டால் புதிய திரைஅரங்குகள் உருவாகாது. சிறு நகரங்கள் மற்றும் பல பகுதிகளில் திரை அரங்குகள் தொடர்ந்து மூடப்படுகிறது.

      முதல்ல திருட்டு விசிடி பார்ப்பதை நாம் நிறுத்திவிட்டு பிறகு பேசலாமே. நீங்க பார்ப்பதில்லையா ? அப்படி என்றால் பாராட்டுக்கள்.

      • நான் திரைப்படங்கள் அதிகம் பார்ப்பதில்லை, புத்தகங்கள் பிடிக்கும். கள்ள குறுந்தகடு பார்ப்பதில்லை நண்பர்கள் உறவினர்கள் பார்ப்பதுண்டு அவர்களை தடையும் செய்யவில்லை, தியேட்டர்களில் கட்டனக்கொல்லை அதிகமான பிறகு கள்ள குறுந்தகடு மேலும் பெருகி உள்ளது. நீங்கள் தியேட்டர்களின் தரத்தை குறை கூறுகிறீர்கள், நடிகர் நடிகை களின் சம்பளம் நியாயமா? அது இப்போது தானே அதிகம்? இன்றைய சூழலில் சினிமா லாபகரமான தொழிலாகவே உள்ளது பெருகும் தயாரிப்பு நிறுவனங்கள் சான்று. பணசெலவுக்கு தலை கீழாக படைப்புகளின் தரம் செல்வதன் காரணம் என்ன? அவற்றையும் ஊதி பெருக்கி வியாபாரம் செய்வதை அங்கீகரிக்கிறீர்கள?

    • Q2A,

      விவசாயம் உண்மையான முதலாளித்துவ முறைக்கு படிப்படியாக, பல பத்து வருடங்களில், வளர்ந்த நாடுகளில் நிகழ்ந்த முறையில், அரசின் தலையிடுகள், உச்ச வரம்பு சட்டங்கள் இல்லாத நிலையில் இருந்திருந்தால், இன்று இங்கு விவசாயத்தில் பிரச்சனைகள் இருந்திருக்காது :

      http://nellikkani.blogspot.com/2008/05/blog-post_21.html
      விவசாயகள் தற்கொலைக்கு பல காரணிகள்

      ///7.மக்களாட்சி என்றால் என்ன? மக்களின் நன்மைக்காக மட்டுமே அனைத்து அரசுகளும் செயல்படுகின்றனவா? மக்களின் எதிபார்புகளை அரசு பூர்த்தி செய்கிறதா? யாருடைய கோரிக்கைகள் முதன்மை படுத்த படுகின்றன ஏன்?///

      இந்திய நிலைய வைத்துகொண்டு இதை கேட்கிறீர்கள். உண்மையான மக்கள் ஆட்சி மே.அய்ரோப்பிய நாடுகள், ஸ்காண்டினேவிய நாடுகளில் ஏறக்குறைய முழு அளவில் உள்ளது. நெதர்லாந்த் மற்றும் ஃபின்லாந் நாடுகள் உலகின் மிக சிறந்த நாடுகள் என்று கருதப்படுகின்றன. அங்கு உள்ள ‘மக்களாட்சி முறையை’ தான் வழிமொழிகிறேன். அவை போல லிபரல் ஜனனாயகமும், பொருளாதார வளர்சியும் இந்தியாவில் உருவாக வேண்டும் என்பதே எம் இலட்சியம் / நோக்கம். சரி, நாம் என்ன செய்யலாம் என்று சொல்லுங்களேன். மக்கள் சக்தி கட்சி என்று ஒரு சிறு கட்சி இங்கு தேர்தலில் போட்டியிடுகிறது. பல தோழர்கள் அங்கு. அடிப்படை கொள்கை நேர்மை. ‘இந்திய நேர்மை கட்சி’ என்று பெயரிட சொல்லி கொண்டிருந்தேன். நேர்மை தான் நமக்கு மிக மிக மிக அடிப்படை தேவை. வலது / இடது கொள்கைகள் அப்பறம் தான். அடிப்படை நேர்மை, அறம் இல்லாமல் எந்த பயனும் இல்லை ; ஜனனாயகம் வெற்றி பெறாது.

      //.பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்தும் தரமான உற்பத்தி மற்றும் பாதுகாப்பு கொள்கைகள் உள்ளவையா அல்லது நாட்டுக்கு நாடு வேறுபடுமா? ஆம் என்றால் ஏன் உயிரிழப்பு ஏற்படுகிறது? இல்லை என்றால் ஏன் வேறுபடுகின்றன?///

      ஆம் / இல்லை என்று பதில் சொல்ல முடியாது. அது நிறுவனங்களை பொருத்து. எந்த நாட்டை சேர்ந்த ’பன்னாட்டு நிறுவனத்தை’ சொல்கிறீர்கள் ? சீனா பண்ணாட்டு நிறுவனங்கள் ஒரு வகை. அதிலிம் பல தரங்களில் உள்ளன. ஆனால் தொழிற்சாலைகள் அமைந்துள்ள host countries இன் சட்டங்கள், அவை எத்தனை நேர்மையாக, ஒழுங்காக அமலாக்கப்படுகின்றன என்பதை பொருத்தே விளைவுகள். உதாரணமாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய சட்டங்கள் இந்தியாவில் பல காலங்களாக ஏட்டளவில் தான் உள்ளன. சட்டம் நன்றாக, போதுமானதாக தான் இருக்கிறது. இங்கு உள்ள லஞ்ச / ஊழல் கான்ஸ்ர் நோயை போல் புரையோடி, நாட்டின் அனைத்து துறைகளையும் சீரழித்து விட்டதால், மாசுகட்டுப்பாட்டு வாரியமும் ஊழல் மிக மலிந்து, சட்டங்களை அமலாக்காமல், ஏய்ப்பவர்களுக்கு துணை போகிறது. இதற்க்குபன்னாட்டு நிறுவனங்கள் தான் காரணமா அல்லது நம் நேர்மைதான் காரணமா ? மேலும்..

      • அங்கு உள்ள ‘மக்களாட்சி முறையை’ தான் வழிமொழிகிறேன். அவை போல லிபரல் ஜனனாயகமும், பொருளாதார வளர்சியும் இந்தியாவில் உருவாக வேண்டும் என்பதே எம் இலட்சியம் / நோக்கம். சரி, நாம் என்ன செய்யலாம் என்று சொல்லுங்களேன்?

        முதலில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும், வினவு அதைசெய்வதாகவே பார்க்கிறேன். அயிந்து வருடங்களுக்கு முன் இதை பற்றிஎல்லாம் யோசிக்காதவனாக நானும் இருந்தேன். எமக்கு சர்வாதிகாரமும் வேண்டாம் முதலாளித்துவமும் வேண்டாம், கம்யூனிசத்தின் அடிப்படை கோட்பாடான மனித சமத்துவம் வேண்டும். இப்போதிருக்கும் அரசியல் அமைப்பு அதனை ஊக்குவிக்கிறதா? மக்களை மயக்க நிலையில் வைத்து சுரண்டவே அரசியல்வாதிகளும் முதலாளிகளும் இருக்கின்றனர். இவர்களை எவ்வாறு மாற்றுவது?
        இன்றைய அரசியலமைப்பு இந்த வழிமுறைகளை நெரித்து வைக்கிறது. சட்ட திருத்தங்கள், ஊடகம் எல்லாம் முதலாளிகளுக்கு சாதகமாக உள்ளது.

        முதலில் நமது எதிர்ப்பு பதிவு செய்யப்படவேண்டும், (நீங்கள் சுரண்டலை நியாயபடுத்துவது சோர்வளிக்கிறது)
        தொடர்ச்சியான போராட்டங்கள், எதிப்புகள், கடுமையான விமர்சனகள் தாக்கத்தை ஏற்படுத்தும், பரவும், மாற்றம் வரும்.
        நமது வேறுபாடுகளை களைவது முக்கியம், இவ்வளவு பேசும் நீங்கள், பெரியாரை விரும்பும் நீங்கள் “சோதிடத்தை” நம்புவது எந்த அடிப்படையில்? சோர்வளிக்கிறது.

        • Q2A,

          முதலில் ‘சுரண்டல்’ என்று ஒன்றும் இல்லை. அது ஒரு கற்பிதம். மகதான மாயை ;
          பார்க்கவும் :

          http://nellikkani.blogspot.com/2009/11/blog-post.html
          ‘உபரி மதிப்பு என்னும் மாயயை’

          எனவே நீங்க ‘சோர்வுர’ தேவையில்லை. பெரியாரின் அனைத்து கொள்கைகளையும் அப்படியே ஏற்க்க வில்லை. மேலும் இன்று பார்பானியத்தை / சாதியத்தை ஒழிக்க பயன்படும் மீக முக்கிய ஆயுதம் இட ஒதுக்கீடு. அது சமூக நீதிக்கு பதிலாக பெரும் சமூக அநீதியை உருவாக்கியுள்ளது. எம்மை போன்ற பிற்படுத்தப்பட்ட கீரிமி லேயர்களின் ஆக்கிரமப்பை பற்றி சென்னேன். சரி, இதே வேறு விசியம். சோதிடம் பற்றி ஆராய்ச்சி தான் செய்கிறேன். அதில் சில pattern recognisation தெரிகிறது. பெரியார் தாசன் இத்தனை வருடம் கழித்து மாறியது போல், பலரும் பல நேரங்களில் மாறுவது இயல்புதான். அதற்காக மூட நம்பிக்கைகளை, சாதி பேதங்களை ஏற்பதில்லை. there is very thin line between நம்பிக்கை and மூட நம்பிக்கை.

          //கம்யூனிசத்தின் அடிப்படை கோட்பாடான மனித சமத்துவம் வேண்டும்./// இப்போதிருக்கும் அரசியல் அமைப்பு அதனை ஊக்குவிக்கிறதா?///

          கம்யூனிச சமத்துவம் தியரிட்டிக்காலக அருமையாகத்தான் தெரியும். நடை முறையில் அதை போல சர்வாதிகாரத்திற்க்கும், கொடுமைகளுக்கும் இட்டுச்செல்லும் சித்தாந்தம் வேறு எதுவும் இல்லை. பார்க்கவும் :

          http://nellikkani.blogspot.com/2008/06/museum-of-communism.html
          கம்யூனிசமும், மனித உரிமை மீறல்களும் (Museum of Communism)

          http://nellikkani.blogspot.com/2010/02/blog-post.html
          கம்யூனிசம் ஏன் வெற்றி பெற முடியாது ?

          இந்திய அமைப்பை மட்டும் வைத்துகொண்டு பார்க்காமல், லிபரல் ஜனனாயகம் தழைத்தோங்கும் அய்ரோப்பிய நாடுகளை, கனடா போன்ற நாடுகளை பாருங்க. அங்கு நிலவும் தனி மனித சுதந்திரம், மற்றும் ‘சமத்துவம்’ எப்படி இருக்கிறது என்று பாருங்கள். 100 % perfect ஆக எங்கும் இருக்க முடியாது. ஆனால் முடிந்தவரை மிக அருமையான அமைப்பு எந்த நாடுகளில், எந்த சித்தாந்த அடிப்படைகளில் உருவாகிறது என்று பாருங்களேன்.

      • அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தம்மை தகவமைத்துக்கொண்டிருக்கின்றன. இதில் அமெரிக்கா சீனா ஐரோப்பா என வித்தியாசமில்லை. இவை பெரும் தரச்சான்றிதல்கள், பாதுகாப்பு சான்றிதழ்கள் அனைத்தும் 25% உண்மையுடனும் 75% பொய்களுடனும் உள்ளன. இதை கண்கூடாக கண்டேன். நிறுவனங்களின் ஒரே இலக்கு இலாபம். அவர்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை கூடிய விரைவில் லாபம் எடுத்துக்கொண்டு ஏதும் சிக்கல் என்றால் ஓடிவிடும் கொள்கையை கொண்டுள்ளதாக உள்ளன.
        என்னதான் இந்திய சூழ்நிலை ஊழல் நிறைந்ததாக இருந்தாலும் தன்னை தானே நிர்வகிக்கும் திறன் உள்ளதாக பெருமைப்படும் நிறுவனகள் அடிப்படை அறத்திலிருந்து விலகவேண்டிய அவசியம் என்ன? அவர்களுக்கு மட்டற்ற சுதந்திரம் வரிவிலக்கு இதர சலுகைகள் கொடுப்பது எவ்வகையில் ஞாயம்?

        • //இவை பெரும் தரச்சான்றிதல்கள், பாதுகாப்பு சான்றிதழ்கள் அனைத்தும் 25% உண்மையுடனும் 75% பொய்களுடனும் உள்ளன. இதை கண்கூடாக கண்டேன். நிறுவனங்களின் ஒரே இலக்கு இலாபம். அவர்களுக்கு தொலைநோக்கு///

          இந்த 25 % , 75 % புள்ளிவிபரம் எப்படி கிடைத்தது ? உலகில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் ஆய்வு செய்தா ? இருக்க முடியாது.

          சரி, இந்த கூகுள், மைக்ரோசாஃப்ட், இண்டெல், சிஸ்கோ, HCL, HP, Wipro, மற்றும் பல நூறு நிறுவனங்களில் தரம் மற்றும் மலிவான் பண்டங்கள் /சேவைகளினால் தான் இந்த இணைய உரையாடலே இங்கு சாத்தியாமாகி உள்ளது என்பதை ஒப்பிட்டு பாருங்கள். 25 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையை ஒப்பிட்டுபாருங்களேன்.

    • //5.உங்களுக்கு பிடித்த உலக அரசியல் தலைவர்(கள்) யார்? இந்திய அரசியல் தலைவர்(கள்) யார்? ஏன்?//

      உலக தலைவர்கள் :

      பிடித்தவர் :

      50 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மன் தலைவராக இருந்த லுட்விக் எர்ஹார்ட் :
      http://en.wikipedia.org/wiki/Ludwig_Erhard

      கமால் அடுட்டார்க், நெல்சன் மண்டேலா, ஜிம்மி கார்ட்டர்

      பிடிக்காத தலைவர்கள் :

      மாவோ சே துங், போல் போட், ஸ்டாலின், இடி அமீன், இட்லர், மற்றும் இன்றைய வட கொரிய அதிபர், மிலாசவிச், சதாம் ஹூசைன், ஜார்ஜ் புஸ், மற்றும் அனைத்து சர்வாதிகாரிகளும், கொடுங்கோலர்களும், மதவெறியர்களும்..

      இந்திய தலைவர்கள் :

      பிடித்தவர்கள் : ராஜாஜி, காந்தி, பெரியார், நேரு, கோவை அய்யாமுத்து (தலைவர் என்று இவரை சொல்ல முடியாது. ஆனால் இவர் எனது ஹீரோ)

      பிடிக்காதவர்கள் : இந்திரா காந்தி, கருணானிதி, விஜயகாந்த் மாயாவதி, அமர் சிங், அத்வானி, வாஜ்பாயி, மற்றும் அனைத்து ஊழல் தலைவர்களும், சர்வாதிகாரிகளும், மதவெறியர்களும்.

    • Q2A (மற்றும் நண்பர் சித்திர குப்தன்),

      எம்மிடம் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்களே, பதிலுக்கு உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். பதில் சொல்லுங்களேன். கீழே உள்ள எனது முக்கிய பதிவின் இறுதியில் அக்கேள்வி உள்ளது :

      http://nellikkani.blogspot.com/2008/05/1991.html
      1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

      • //1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?//

        ஒரேயொரு கேள்விதானே? அதுவே கடைசி திவாலாக இருந்திருக்கும். நாடு இப்போ நல்லா இருந்திருக்கும்.. பதில் ஓகேவா? ஒரு கேள்விக்கு பதில் சொல்லியாச்சு. அடுத்தக் கேள்வி கேக்கக் கூடாது.

        • //எம்மிடம் இத்தனை கேள்விகள் கேட்கிறீர்களே, பதிலுக்கு உங்களிடம் ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். பதில் சொல்லுங்களேன். //

          நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்ல மாட்டீங்கிறேங்களே அதியமான். ஏன் இப்படி பயந்து ஓடு கிறீர்கள்?

        • //ஏனெனில், பேசிக்கலி எம் ஜி ஆருக்கு கொள்கை கிடையாது, அதனால அவர் செஞ்ச அட்டுழியங்கள கணக்கிலெடுத்து நிராகரிக்கனும். நேரு, ராஜாஜிக்கு கொள்கைன்னு ஒன்னு உண்டாம் அதனால கிரேட் லீடர்னு ஒத்துக்கனும் அல்லது ஒத்துக்கிட்டு நெக்ஸ்டு மீட் பன்னனும். இல்லைனா நீங்க ஒரு……..///

          வினவு மற்றும் இதர நண்பர்களே,

          அசுரனுக்கு நான் தொடர்ந்து ‘பதில்’ சொல்லனுமா என்ன ? இப்படி உளருபவருடன் தொடர்ந்து ‘விவாதம்’ செய்ய வேண்டுமா அல்லது நான் ‘பதில் சொல்லாமல் ஓடுகிறேனா’ என்று நீங்களே சொல்லுங்களேன். anyway, i don’t want to waste my time for this kind of crazies.

      • //கம்யூனிச அமைப்பு, சோசியலிச அமைப்பு, முதலாளித்துவ அமைப்பு, நிலப்பிரவுத்தவ அமைப்பு என்று எல்லா அமைப்புகளிலும் தொழிலாளர்கள் தொழிலாளர்களாகவே தம் பணிகளை செய்து, சம்பளம் பெறுவார்கள். //

        ஓகோ நிலபிரபுத்துவ அமைப்பிலும் சம்பளம்தான்.. ரொம்பச் சரி… உங்க வரலாற்று ஆய்வு சூப்பர்ணே

      • அதியமான் உங்கள் தளத்திலேயே 1991 திவாலை பற்றி மாற்று கருத்துக்கள் உள்ளன அவர்கள் பார்வையில் நியாயம் இல்லாமல் இல்லை. நான் முதலிலேயே தாராளமயம் வேலை வாய்ப்பை பெருக்கி உள்ளதை ஏற்றுக்கொண்டேன். ஆனால் சமூக நலத்திற்கு உதவியதை விட மிக மிக அதிகமாக நிறுவனங்களின் கடைந்தெடுத்த சுயநலனை தூக்கி நிறுத்த பாடு படுகிறது என்பது எனது பார்வை,
        14. உலக வங்கி அனைத்து நாடுகளுக்கும் கடன் வழங்குகிறதா?
        15. தன் கட்டளையை நிறைவேற்றாத நாடுகளின் மீது பொருளாதார தடை விதிப்பதும் , போர்தொடுப்பதும் என்ன காரணத்தினால்?
        நீங்கள் எனது கேள்விகளுக்கு முழுமையான பதில் அளிக்கவில்லை, நேரமின்மை காரணமாக இருக்கலாம், விரிவாக ஒரு தனி பதிவே கூட எழுதுங்களேன்?
        முக்கியமாக தமிழில் வேண்டும். நான் பொருளாதாரம் படிக்கவில்லை, படித்தது பொறியியல் எனவே தமிழ் எளிதாக இருக்கும்.

        தொன்று தொட்டு வரும் ஊழலே 1991 பொருளாதார சரிவின் பின்னணி, நேரு காலத்து ஊழல்களும் இணையத்தில் அறிய முடிகிறதே.
        பன்னாட்டு சதிவலையில் திவால் நிலைக்கு தள்ளப்பட்டதாக கருத்துக்களை பார்க்கிறேன் அதற்கான சாத்தியமே இல்லையா? நீங்களே வியட்நாம் போர் அமெரிக்காவின் பயத்தால் வந்தது என ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். அது தொடர்பான அசுரனின் கேள்விக்கும் பதில் சொல்லவில்லை,
        நாம் இன்னும் சுதந்திரம் அடையவில்லை. உண்மையான மக்களாட்சி அமையவே இல்லை. அதற்கான விழிப்புணர்வும் ஏற்படவில்லை. 🙁

  14. In our country more than 70% are farmers. In developed countries this amount very megre in and around 5%. Capitalism or communalis alone not a solution for our country. In this liberelized world blending of both(capitalism+communalism) with our own way of solution is a best way like China, because our country have unique problem like fourth largest economy with human development index around 130 rank.

  15. We know , what happened Cuban communist economy in a liberelized world. And also we know Greece, US and many EU Countries of capital economy. Both didn’t have a best solution for all., but China effectively use its communism in a liberalized world.

  16. வளர்க உங்கள் பணி, மூன்று வருடங்களாக நீங்கள் எனக்கு அறிமுகம். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் உங்கள் பணி சிறக்கட்டும். குப்பி தண்ணீர் விற்பனை முறை வருவதற்கு முன்பிருந்தே நீங்கள் அதனை பற்றி பிரச்சாரம் செய்துவந்ததும் மக்கள் அப்போது அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளததும் அறிந்த போது , உங்களின் மீது மிகுந்த மரியாதையும் எம் மீது வெறுப்பும் வந்தது. என்னை முழு கடவுள் மறுப்பாளனாக மாற்றியதில் வினவுக்கும் முக்கிய பங்கு உண்டு. இன்னொருவர் ஞாநி, விழிப்புணர்வு மற்றும் சமூகம் தொடர்பான அனைத்து கட்டுரைகள் மற்றும் எழுத்தாளர்கள் எனது விருப்பம். களத்தில் இறங்கிபோராடும் உங்கள் பணி தொடரட்டும். எமது ஆதரவு எப்பொழுதும் உண்டு (களத்திலும்). “புரச்சி புரச்சி” என உங்களை ஏளனம் செய்தவர் ஏராளம்! ஆனால் எகிப்து அவர்களின் வாயை அடைத்திருக்கும். புரட்சி சாத்தியம் என்பதை புரிய வைத்திருக்கும்.
    (1960 களில் இருந்து ம.க.இ. க வில் இருக்கும் இருவரை திருச்சியில் சந்தித்தேன், வியப்பாக இருந்த்தது )

    உங்களுக்கு ஒரு கேள்வி :
    தனியார் மயமாக்களினால் வேலைவாய்ப்பு பெருகி உள்ளது, ஊழலும் பெருகி உள்ளது, தொழிலாலர்கள் சுரண்டபடுகிரார்கள் , கம்யூனிசம் இதற்கு தரும் மாற்று என்ன?
    கம்யூனிசம் எவ்வாறெல்லாம் திரிக்கப்பட்டாலும் அதன் அடிப்படை கோட்பாடான மனித சமத்துவம் எனக்கு பிடித்தது. அது முதலாளித்துவத்தால் கிடைக்காது என உணருகிறேன். இதற்கு மாற்று என்ன?

  17. ராஜாஜி முதல்வராக இருந்தபோது போதிய நிதி இல்லை என்று ஒன்பதாயிரம் கிராமப்புற பள்ளிகளை மூடினாராமே பிள்ளைகள் எல்லாம் அவங்க அப்பன் பண்ற தொழிலை கட்டாயமாக கத்துக்கனும்ம்னு சொன்னாராமே அதுக்கு பெரியார் எல்லா பாப்பானையும் கத்தியால் குத்த சொன்னாராமே அக்ரகாரத்தை எல்லாம் கொளுத்த சொன்னாராமே ஒடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு பதவியை விட்டு ராஜாஜி ஓடிட்டாராமே பிறகு காமராஜர் வந்து மூடிய பள்ளிகளை மட்டுமல்லாமல் மேலும் மூவாயிரம் பள்ளிகளை திறந்து மதிய உணவும் பள்ளிகளில் போட சொன்னாராமே………ராஜாஜி எனக்கு பிடித்த தலைவர் என்று இன்னும் ஒருவர் தமிழகத்தில் சொல்லிக்கொண்டு இருக்கிறாராமே.

    • //ராஜாஜி முதல்வராக இருந்தபோது போதிய நிதி இல்லை என்று ஒன்பதாயிரம் கிராமப்புற பள்ளிகளை மூடினாராமே பிள்ளைகள் எல்லாம் அவங்க அப்பன் பண்ற தொழிலை கட்டாயமாக கத்துக்கனும்ம்னு சொன்னாராமே அதுக்கு பெரியார் எல்லா பாப்பானையும் கத்தியால் குத்த சொன்னாராமே அக்ரகாரத்தை எல்லாம் கொளுத்த சொன்னாராமே ஒடம்பு சரியில்லை என்று சொல்லிவிட்டு பதவியை விட்டு ராஜாஜி ஓடிட்டாராமே பிறகு காமராஜர் வந்து மூடிய பள்ளிகளை மட்டுமல்லாமல் மேலும் மூவாயிரம் பள்ளிகளை திறந்து மதிய உணவும் பள்ளிகளில் போட சொன்னாராமே………ராஜாஜி எனக்கு பிடித்த தலைவர் என்று இன்னும் ஒருவர் தமிழகத்தில் சொல்லிக்கொண்டு இருக்கிறாராமே.//

      நீர் வரலாறு தெரியாத மூடர், அரகிரவுண்ட் ஸாரி.. அரகண்டான ஆளு…. இப்படில்லேம் ஒரு இர்ரெஸ்பான்ஸிபல் சிடோ இண்டெக்லெக்சுவல் கம் டிஸ்கானஸ்டு அதியமான் அவர்கள் உங்களை திட்டுவார்.

      ஏனெனில், பேசிக்கலி எம் ஜி ஆருக்கு கொள்கை கிடையாது, அதனால அவர் செஞ்ச அட்டுழியங்கள கணக்கிலெடுத்து நிராகரிக்கனும். நேரு, ராஜாஜிக்கு கொள்கைன்னு ஒன்னு உண்டாம் அதனால கிரேட் லீடர்னு ஒத்துக்கனும் அல்லது ஒத்துக்கிட்டு நெக்ஸ்டு மீட் பன்னனும். இல்லைனா நீங்க ஒரு……..

      • இப்படி நீர் சொன்னதுக்குதான் ஆதாரங்களுடன் ராஜாஜி மேல் வைக்கப்படும் இரு முக்கிய குற்றச்சாட்டுக்களுக்கு விரிவான பதில் சொல்லியிருந்தேன்.

    • ////ராஜாஜி முதல்வராக இருந்தபோது போதிய நிதி இல்லை என்று ஒன்பதாயிரம் கிராமப்புற பள்ளிகளை மூடினாராமே /////

      இல்லை. அது ஒரு மிக தவறான செய்தி. 9000 அல்லது 6000 பள்ளிகள் எவை என்று மாவட்ட வாரியாக பெயர்களை சொல்ல முடியுமா ? நானும் பல ஆண்டுகளாக தேடுகிறேன். விசாரிக்கிறேன். கிடைக்கவில்லை. மூட சதி என்று அண்ணா அல்லது பெரியார் பேசினார். உடனே மூடி விட்டதாகவே இன்று சொல்லப்படுகிறது.

      இந்த ‘குலக்கல்வி திட்டம்’ பற்றி முன்பு நான் குழுமத்தில் எழுதியது :

      56 வருடங்களுக்கு முன் கிராம சூழ்னிலைகள் மிக கொடுமையாக இருந்தன. கல்வி
      ஒரு ஆடம்பரமாக பரம ஏழைகள் மற்றும் வன்னார், குயவர், தச்சர்கள் போன்ற
      தொழில் செய்பவர்களால் கருதப்பட்டது. முக்கிய காரணம், பள்ளி கல்வி
      கற்றாலும், பிழைக்க தம் குலத்தொழிலையே மீண்டும் செய்ய வேண்டிய கொடுமையான
      காலச்சூழ் நிலை. வேலை வாய்ப்புகள் மிக மிக குறைவு. நகரங்களுக்கு புலம்
      பெயர வேண்டும். அன்று அது மிக மிக குறைவு.

      போக்குவரத்து, தகவல் தொடர்பு, நல்ல சாலைகள் மிக மிக குறைவு.
      பிறந்ததிலிருந்து, இறக்கும் வரை தம் கிராமத்திலேயே வாழ்ந்தவர்களே அதிகம்.
      இன்று போல் mobiltiy and oppurtunities for employment in new sectors
      அன்று அறவே இல்லை. போதக்குறைக்கு சோசியலிச பொருளாதார பாணி என்று தனியார் துறையே முடக்கப்பட்டதால், புதிய வேலை வாய்ப்புகள், ஆலைகள் மிக மிக மிக
      குறைவு.

      அதனால் தான் சில பழமொழிகள் உருவாயின : ஏட்டு சுரைகாய் கறிக்குதவாது ;
      படிச்சவன் பாட்டை கெடுத்தான். எழுதினவர் ஏட்டை கெடுத்தான்…
      அன்று கிராம பள்ளிகளில் பணக்கார விவசாய்களின் பிள்ளைகள், உயர் சாதிகளின்
      பிள்ளைகள் தாம் மிக அதிக அளவில் படித்தனர். தலித்துகள், கூலி வேலை
      செய்யும் ஏழைகள், சாணர்கள், குயவர்கள், வன்னார் மற்றும் நாவித தொழில்
      செய்வ்வோரின் பிள்ளைகள் மிக மிக குறைவு. அப்படியே படித்தாலும், ஆரம்ப
      பள்ளி கூட முடிக்க முடியாமல் drop out from school மிக மிக அதிகம்.
      படிப்பு பிரயோசனம் இல்லை. தேவை இல்லை. குலத்தொழில் தான் எப்படியும் என்ற
      சூழ்னிலையில்,

      8 மணி நேரம் பள்ளிக்கு அனுப்ப மறுத்தவர்களின் பிள்ளைகளை, 4 மணி நேரமாவது
      அனுப்ப வைக்க பள்ளி நேரம் பாதியாக குறைக்கப் பட்டு, இரண்டு shift
      முறைக்கு மாற்றம் செய்யப்பட்ட திட்டம் தாம் இது.

      எத்தனை புதிய, இலவச பள்ளிகளை திறந்திருந்தாலும், மேலே குறிப்பிட்ட பரம்
      ஏழைகள் மற்றும் தலித்துகள் தம் குழந்தைகளை முழு நேரம் பள்ளிக்கு அனுப்ப
      முடியாத காலம் அது.

      70கள் வரை இது பெரிய அளவில் இருந்தது. எனக்கு தெரிந்து என் தந்தை, 10வாது
      தேறியவுடன், படிப்பு போதும் கடைக்கு செல் என்று பணிக்கப்பட்டார். அழுது
      சண்டையிட்டு, கல்லூரியில் சேர்ந்தார். இது 1957இல்.

      உயர் சாதியினர் மற்றும் பெரும் விவசாயிகள் பிள்ளைகள் தாம் பொதுவாக
      முதுனிலை கல்வி வரை அன்று பயின்றனர்.

      சாதி அடிபடையில் கல்வி இல்லை. குலக்கல்வி என்ற பெயரை இத்திட்டத்திற்க்கு
      இட்டவர் பெரியார்.

      50களின் ஆரம்பத்தில், இலவச கல்வி, மதிய இலவச உணவு மற்றும் வேறு பல
      சலுகைகள் அளித்திருந்தாலும், வன்னார், குய்வர், தச்சர், நாவிதன் போன்ற
      சாதி பிள்ளைகள் கண்டிப்பாக முழுனேரம் (அதாவது 8 மணி நேரம், 16 வயது வரை)
      பள்ளிக்கு அவர்களின் ஏழை பெற்றோர் அனுப்பியிருக்க மாட்டார்கள். தங்கள்
      பிள்ளைகள், தம்மோடும் குலத்தொழிலை செய்ய சிறுவயதிலேயே கற்று, trainning
      and earing செய்யவே முனைந்தனர். அந்த கால சூழல் அப்படி.

      this main point is about the number of hours spent at school. that
      determined the enrollment and drop out ratio of various castes and
      classes. hence this scheme was tried for a change. Rajaji did not have
      any ulterior motive as alleged by all his ignorant critics. he was too
      great a man for all this.

      http://www.education.nic.in/cd50years/g/t/HJ/0THJ0509.htm

      COMMITTEE ON ELEMENTARY EDUCATION IN MADRAS, 1953

      [edit] Parulekar committee

      On 20 August 1953, the Government passed an order (Education G.O #
      1888) to constitute a committee of experts for reviewing the
      scheme.[13] The committee was composed of Prof. RV. Parulekar,
      Director of Indian Institute of Education Bombay, as the Chairman;
      Dr.B.B. Dey, Retired Director of Public Instruction, Madras; Prof.
      Mohammad Mujeeb, Vice-Chancellor of the Jamia Millia University as
      members and S. Govindarajulu Naidu, the former Director of Public
      Instruction, Madras, and the then Director of Public Instruction,
      Andhra Pradesh, as the Member Secretary.[3] The Parulekar committee
      submitted its report on 23 November 1953. It found the scheme to be
      sound and endorsed the Government’s position . It made additional
      recommendations including extending the scheme to rural areas, opening
      as many as 4000 new schools, revising the existing curriculum,
      providing training and remuneration to the craftsmen involved.[13]

    • அவரின் குலக்கல்வி திட்டம் பற்றி நான் முன்பு எழுதியது :

      மிக மிக தவறாக புரிந்து கொள்ளப்பட்ட திட்டம்.

      ஒரு முக்கிய சுட்டி :

      http://en.wikipedia.org/wiki/Kula_Kalvi_Thittam
      http://www.education.nic.in/cd50years/g/t/HJ/0THJ0509.htm

      COMMITTEE ON ELEMENTARY EDUCATION IN MADRAS, 1953

      [edit] Parulekar committee

      On 20 August 1953, the Government passed an order (Education G.O #
      1888) to constitute a committee of experts for reviewing the
      scheme.[13] The committee was composed of Prof. RV. Parulekar,
      Director of Indian Institute of Education Bombay, as the Chairman;
      Dr.B.B. Dey, Retired Director of Public Instruction, Madras; Prof.
      Mohammad Mujeeb, Vice-Chancellor of the Jamia Millia University as
      members and S. Govindarajulu Naidu, the former Director of Public
      Instruction, Madras, and the then Director of Public Instruction,
      Andhra Pradesh, as the Member Secretary.[3] The Parulekar committee
      submitted its report on 23 November 1953. It found the scheme to be
      sound and endorsed the Government’s position . It made additional
      recommendations including extending the scheme to rural areas, opening
      as many as 4000 new schools, revising the existing curriculum,
      providing training and remuneration to the craftsmen involved.[13]

      Reasons stated for the reform attempt

      The cost of educating all children in the 6-12 age group would be
      enormous. Besides enrollment, more than half of the elementary schools
      lacked proper infrastructure. The reform attempted to increase the
      number of school-going children within the financial limitations faced
      by the Government.[3]

      There was an acute shortage of teachers. The state had an average of
      less than three teachers for five standards per school. There were
      4,108 single-teacher schools and more than 60% of the schools with
      five standards had less than four teachers.[2][3]

      This poor student-teacher ratio was putting a strain on the teachers
      and led to students being made to stay in school for longer hours.
      This directly contributed to the high drop out ratio. This plural
      teaching had to stopped without hiring new teachers.[2]

      Rajaji favoured Gandhi’s Basic Eduction Scheme over the existing
      elementary education system. He stated that he wanted to reduce the
      unemployment amongst educated people.[4] The Basic education system
      called for learning through living and training in self reliance.[2]

      The retention rate of 37% (between 1947 and 1951) had to be improved
      by making schools attractive to students of poorer sections.[2][3]

      [edit] Proposals in the new scheme

      The Modified Scheme of Elementary education proposed the following
      changes in the school system:[2][3]

      Reduction of School hours from five hours per day to three.

      Introduction of shifts -the students were to be divided into two
      batches and the school would function in two sessions. Each session
      will be of three hours duration, consisting of four periods of 40
      minutes each, with not less than two intervals totaling 20 minutes.
      The sessions will be arranged to suit local conditions. One batch will
      attend only one session a day. There were to be six working days per
      week.

      No dilution of the previous syllabus and no reduction in duration for
      subjects like Language, Elementary Mathematics, Nature Study, Drawing,
      History

      பள்ளிகளில் முழு நேரம் படித்த மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி, அவர்களின்
      ‘குலத்தொழிலை’ கற்க இத்திட்டம் முனையவில்லை. மாறாக, பள்ளிக்கே அனுப்படாத
      ஏழை மாணவர்களை, ஒரு நாளைக்கு சில மணி நேரங்களாவது பள்ளிக்கு வர வழி செய்த
      திட்டம் இது.

      பெரியார் இதை மிக தவறாக புரிந்து கொண்டார். அவரின் சறுக்கல்களில் இதுவும்
      ஒன்று. அந்த இரு சுட்டிகளிலும் விரிவான தகவல்கள், வாதங்கள் உள்ளன.

      1925 முதல் சுமார் பத்தாண்டுகள், திருச்செங்கோடு அருகே காந்தி ஆசிரமத்தை
      நிறுவி, அங்கு சிறு குடிலில் வாழ்ந்து, தலித்தகளுக்கும், ஏழை
      நெசவாளர்களுக்கும்,நலிந்த பிரிவினருக்கும் அருந்தொண்டாறினார்.

      When he started his political career as Salem Muncipal Chariman, he
      had to fight hard against orthodox brahmin elite and caste hindus to
      implement his polices and service for daliths.

      and his selfless service during his ten years in Gandhi Ashram in
      thiruchengode.

      ’ராஜாஜி எனது தந்தை’ என்ற நூலை எழுதிய கோவை அய்யாமுத்து ஒரு பார்பனரல்லாத
      போராளி. பெரியாரின் நண்பர். குடியரசு பத்திரிக்கையை சில காலம்
      நடத்தியவர். காந்தியவாதி.

      அத்திட்டம் மிக அருமையான விளைவுகளை ஏற்படுத்தியதை பற்றிய
      சி.சுப்பிரமணியம் அறிக்கை உள்ளது. சில மாதங்களிலே total enrollment மிக
      அதிகமானது. drop out rate உம் குறைந்தது.

      அத்திட்டத்தை பற்றிய தர்க்க பூர்வமான விவாதம் செய்யப்படாமலேயே, வெறும்
      உணர்சி கொந்தளிப்பு உருவாக்கப்ட்டது.

      அன்று இருந்த வறுமை நிலையில், ஏழை தொழிலாளர்கள் மற்றும் artisians like
      கிராம தச்சர்கள், குயவர்கள், சலவை தொழிலாளர்கள், நாவிதர்கள் போன்றவர்கள்,
      தம் குழந்தைகளை பள்ளிக்கே அனுப்பாத சூழல். 100க்கு 80 விழுக்காடு
      கல்லாதவர்கள். பள்ளி படிப்பு பிரயோசனமில்லா ஆடம்பரம் என்ற எண்ணம்.
      மற்றும் கடும் வறுமை. ராஜாஜியின் திட்டத்தினால் இந்த ஏழை மக்களின்
      புதல்வர்கள், ஒரு நாளைக்கு சில மணி நேரங்களாவது பள்ளிக்கு செல்ல
      தொடங்கினர். Shift sytem உருவானது.

      இதை பற்றி அந்த கல்வி குழு அறிக்கை மிக விரிவாக, தெளிவாக பேசுகிறது.

      இங்கு அமைதியாக, வாசிப்பவர்களுக்கு முழு உண்மை புரியும்.

      ராஜாஜி கோயில்களுக்கோ, மடங்களுக்கோ செல்பவரில்லை. அவரின் ஆன்மீகம்,
      organised religious orderக்கு மாற்றானது. ஆர்.எஸ்.எஸ் வகை இந்துத்வத்தை
      கடுமையாக எதிர்த்தவர். காந்தியவாது. காந்தியின் மிக நெருங்கிய சகா.

      ராஜாஜி நாட்டின் விடுதலைக்காக போராடி சிறை சென்றவர். காந்தியவாதி.
      காந்தியின் conscience keeper என்று காந்தியாலே புகழப்பட்டவர். மிக மிக
      நேர்மையான, உயர்ந்த மனிதர்.

      அவரின் நிர்வாக முறை அல்லது style வேறு. காமாராஜரின் முறை வேறு.
      பொருளாதார மேதையான ராஜாஜி, சேலம் முன்சிபாலிட்டுயாகட்டும், தமிழக அரசு
      ஆகட்டும் அல்லது இந்திய அரசு : எங்கும் நிதி நிலைமையை மிக balanaced ஆக,
      பற்றாகுறை பட்ஜெட் அய் மிக மிக தவரிக்க முயன்றார்.

      அவரின் செயல்பாடுகளில் உள்னோக்கம், சாதி வெறி எதுவும் எப்போதும்
      இருந்ததில்லை. அப்படி ஒரு பிம்பம் இங்கு சித்தரிக்கப்படுகிறது. அப்படி
      பட்ட குறுகிய மனம் படைத்த, அயோக்கியனாக இருந்திருந்தால், பலரும் அவரை
      கேட்டதிர்க்கு இணங்க, 1954ஆன் கல்வி திட்டத்தை அவரே வாபஸ் வாங்கி கொண்டு,
      ஆட்சியில் தொடர்ந்திருக்கலாம். காமராஜ்ரை தலை எடுக்கவே விடாமல்
      தடுத்திருப்பது மிக எளிது. நேருவிற்க்கும், காங்கிரஸ் கமிட்டிக்கும்
      ராஜாஜி மேல் மிக மரியாதை.

      1942இல் காந்தியுடன் ஒரு கொள்கை முரண்பாடு கொண்டு, அவரையும்,
      காங்கிரஸையும் விட்டு பிரிந்தவட் ராஜாஜி. he was a man of rare moral
      courage.

      பூனா ஒப்பந்தம் நிறைவேற அவர் செய்த ஆக்கங்கள் பற்றி அம்பேத்கார் மிக
      நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருக்கிறார். இரு தரப்பினருக்கும் இடையே துது
      சென்று செயலாற்றினார். அதை பற்றி அம்பேத்கார் சொன்னதை பாருங்கள்.
      இணையத்தில் இல்லை அது. Rajmohan Gandhi எழுதிய வரலாற்றில் உள்ளது.

      கொள்கைகாரமாக அவர் நேருவையும், காங்கிரஸையும் 50களின் மத்தியில் இருந்து
      தொடர்ந்து எதிர்தார். மிக சுலபமாக compromise செய்து கொண்டு, மத்திய
      உள்துறை அமைச்சராக, நேருவிற்க்கு அடுத்தபடியாக powerful ஆன தலைவராக
      காங்கிரஸிலேயே அவர் தொடர்ந்திருக்கலாம். சாதிவெறியர் என்பது உண்மையானால்,
      அதிகரத்தில் இருந்து தன் agenda வை மிக சுலபமாக செயலாக்கியிருக்கலாம்.

      பள்ளிகளில் முழு நேரம் படித்த மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி, அவர்களின்
      ‘குலத்தொழிலை’ கற்க இத்திட்டம் முனையவில்லை. மாறாக, பள்ளிக்கே அனுப்படாத
      ஏழை மாணவர்களை, ஒரு நாளைக்கு சில மணி நேரங்களாவது பள்ளிக்கு வர வழி செய்த
      திட்டம் இது.

      பெரியார் இதை மிக தவறாக புரிந்து கொண்டார். அவரின் சறுக்கல்களில் இதுவும்
      ஒன்று. அந்த இரு சுட்டிகளிலும் விரிவான தகவல்கள், வாதங்கள் உள்ளன.

      1925 முதல் சுமார் பத்தாண்டுகள், திருச்செங்கோடு அருகே காந்தி ஆசிரமத்தை
      நிறுவி, அங்கு சிறு குடிலில் வாழ்ந்து, தலித்தகளுக்கும், ஏழை
      நெசவாளர்களுக்கும்,நலிந்த பிரிவினருக்கும் அருந்தொண்டாறினார்.
      —————

      • குலக் கல்வி பற்றியெல்லாம் அப்புறம் மெதுவா பேசிக்கோங்க அதியமான். முதல்ல உங்களது ஆதாரமற்ற, அவதூறு பொய்களை அம்பலப்படுத்தியுள்ளதற்கு அறிவு நாணயமுள்ளவர் எனில் பதில் சொல்லுங்கள். அதை விடுத்து எஸ்கேப் ஆகாதீர்கள் (கவலப் படாதீங்க அப்படில்லாம் லேசுல விட்டுறமாட்டேன்).

        கேள்விகளை மீண்டும் முன் வைக்கிறேன்.

        முதலாளிகளுக்கு ஒரு நியாயம், கம்யுனிஸ்டுகள் மீது அவதூறு செய்ய நேர்மையற்ற தந்திரம் என்று செயல்படும்
        அதியமான் அம்பலமான பகுதிகள்:

        1)
        //என்ன கதை அசுரன் ? மக்கட் தொகை அடர்த்தி, இந்தியா முழுவதும் ஒரே அளவில் உள்ளதா என்ன ? அல்லது தாய்லாந் முழுவது ஒரெ அளவில் உள்ளதா? பாங்க்காகில் உள்ள நெருசலை, சென்னையுடன் ஒப்பிட பல parameters and issues கொண்டுதான் செய்ய வேண்டும்.

        போக்குவரத்து நெருசலை குறைக்க ‘உருப்படியாக’ ஏதாவது யோசனை சொல்ல உம்மால முடியாது. அதை பற்றி நான் தொடர்ந்து எழுதியவற்றை பற்றி விவாதிக்கவும் துப்பில்லை. அந்த மைய விசியத்தை விட்டுவிட்டு தொடர்ந்து, இப்படி உளருவதுதான் உமக்கு வாடிக்கையா போச்சு. ‘ஒரு தமிழ் வலதுசாரி’ உம்மை போன்றவர்களை சொன்னது சரிதான்..//

        அதியமான் அவர்களே, இதே மாதிரி பல பேக்டர்கள் இருப்பது உங்களுக்கு சோசலிசம் என்ற ஒன்று கிடைக்காது போது மட்டுமே ஞாபகம் வருகிறதே ஏன்? இந்தியாவில் மட்டும் சோசலிச எச்சம் காரணம் என நீங்கள் சொல்ல முடியும் எனில் தாய்லாந்தில் உலகமயம் காரணம் என நான் சொல்வதில் என்ன தவறுள்ளது? மாத்தி மாத்தி பேசாமல் ஒரே அளவு கோல் உபயோகிக்கவும்.

        இந்தியாவில் பைக் விடுறவன் இல்லையாம் அதுக்குக் காரணம் பொதுப் போக்குவரத்தில் அரசு மோனோபாலியாம், அதுக்குக் காரணம் சோசலிசமாம். இந்தியாவில் பொதுப் போக்குவரத்துக்கு தாய்லாந்தைப் போல பைக் விடுறவன் இல்லாததுக்கு சோசலிசம் காரணம் எனில், இந்தியாவை விட மக்கள் தொகை கம்மியாக உள்ள தாய்லாந்து தலைநகரம் ஏன் உலகின் அதிக நெருக்கடி மிகுந்த நகரமாகிறது? அதற்குக் காரணம் என்னவென்று கேட்டால் உடனே டென்சிட்டி என்றீர்கள், ஆதாரம் கொடு என்று கேட்ட போது காணாமல் போனீர்கள். எனது கேள்வி ஒன்றுதான், இந்தியாவுக்கும் ஒன்று என்றால் எளிதாக இல்லாத சோசலித்தின் மீது பலி போடும் அறிவு நாணயமற்ற நீங்கள். தாய்லாந்துக்கு என்றால் பல பேக்டர் என்று ஜகா வாங்குவது ஏன்?

        2)
        //அசுரன், சோசியலிசம், புரட்சி போன்ற சொற்களை பலரும் பல அர்த்ததில் உபயோகிப்பதை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டினால், அதை புரிந்து கொள்ளாமல், வெறும் உணார்சி வசப்பட்டு மட்டும் பேசுகிறீர்கள்.//

        40 வருடம் முன்பு பள்ளிக் கல்வியில்(கல்வி தனியார்மயம் பற்றிய கட்டுரை ஒன்றில்) தரம் இருந்தது இன்று இல்லையென்று நீங்களே சொன்ன போது மட்டும் அங்கு சோசலிசத்தை நீங்கள் குறிப்பிட மறந்த கயமைத்தனத்தை சுட்டிக் காட்டினேனே அதை வசதியாக கடந்து சென்றீர்களே ஏன்?

        அதியமான் தனக்குத் தேவையென்றால் முதலாளித்துவத்தின் லாப வெறி யுத்தங்களுக்குக்(வியட்நாம் போன்றவை) காரணம் சிவப்பு அபாயம் கண்டு பாவம் அமெரிக்க முதலாளிகள் பயந்து போய் பீதியில் தவறு செய்துவிட்டார்கள் என்பார். ஆனால் இதே லாஜிக்கை சோவியத்தின் அரசியல் தவறுகளை ஊதிப் பெருக்கி அவர் கதைவிடும் போது மட்டும் மறந்துவிடுவார்.

        முதல் உலகப் போரின் போது எந்த கம்யூனிசம் இருந்தது என்று முதலாளிகள் பயந்து போய் யுத்தம் செய்தனர்? இதே பீதி லாஜிக்கின் படி சோசலிச அரசுகள் செய்த அரசியல் தவறுகளை ஏன் அதியமான் தள்ளுபடி செய்ய மறுக்கிறார்? இன்றுவரை அவரால் சோசலிச பொருளாதாரத்தின் தோல்வி என்று எதையும் முன்னிறுத்த இயலவில்லை. அரசியல் தவறுகளை வைத்தே பிழைப்பை ஓட்டுகிறார். ஆனால் முதலாளித்துவத்தின் அரசியல் பொருளாதார தோல்விகளையோ சோசலிசம், சோசலிச எச்சம் என்று கதை விட்டு காபந்து செய்கிறாரே ஏன்? இவர் நடுநிலைவாதியா? மனிதாபிமானியா?

        3) இவரது சோசலிச வரையறையை சுதந்திர சந்தை கொண்டு செய்த அபத்தத்தை கணக்கிலெடுப்போம், இந்த வரையறையின் படி அவர் ஏற்கனவே ‘போன மாசம்’ போலி முதலாளித்துவத்தை(க்ரோனி என்றும் சொல்வார்) வரையறுத்தார், ‘இந்த மாசம்’ சோசலிசத்தைச் சொல்லியுள்ளார். இப்படி மாற்றி மாற்றி பேசுபவர் யோக்கியவான் அதைக் கேள்வி கேட்டு அம்பலமாக்குபவன் @#@$ இதற்கு அதியமானின் பதில் என்ன?

        4)
        //சோசியலிசம், புரட்சி போன்ற சொற்களை பலரும் பல அர்த்ததில் உபயோகிப்பதை மீண்டும் மீண்டும் சுட்டி காட்டினால், அதை புரிந்து கொள்ளாமல், வெறும் உணார்சி வசப்பட்டு மட்டும் பேசுகிறீர்கள். //

        இதே போலத்தான் முதலாளித்துவத்திற்கு ஒரே அர்த்தம் முதலாளீயின் லாபம் அதற்கான சுரண்டலும் என்றுதான் பலரும் புரிந்து கொண்டுள்ளார்கள் என்று உங்களிடம் நாங்கள் சொல்லிய போதெல்லாம் செல்லாது செல்லாது உண்மை முதலாளித்துவம் வேறு அப்படின்னு பீலா விட்டீங்களே அப்போ மட்டும் இதே பப்புலிச பார்வை உங்களுக்குஏன் வர மறுத்துவிட்டது? சோசலிசம், புரட்சிக்கு இப்படி வரையறையில்லாமல் செய்வதன் மூலம் முதலாளித்துவத்தின் அனைத்து தவறுகளுக்கு சோசலிசத்தை காரணமாகக் காட்டி தப்பிக்க வைக்கலாம் என்ற கேடான யுக்திதானே உங்களிடம் வெளிப்படுகிறது? இதற்கு ஏன் நடுநிலைமை, ஓபன் மைண்டு, இண்டெக்லுசுவல், அனுபவம் என்று வார்த்தை ஜாலம்

        சோசலிசம் பற்றிய அவரது வரையறையின் அபத்தங்களை அம்பலப்படுத்தியதற்கு அவரால் வாய் திறந்து பதில் சொலல் இயலவில்லை என்பது பரிதாபமே…

        5)அரசு மோனோபாலி இருந்தால் அது சோசலிசம் என்றுள்ளார் இந்த வரையறை மன்னன். சரி, சோசலிச எச்சம்னு நீங்க சொல்ற இடத்துல எல்லாம் அரசு மோனோபாலி இருந்ததை மட்டும் பேசும் நீங்க. அங்க முதலாளிங்க சுரண்டலும் இருந்ததை மறைப்பது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் நீங்களே மெச்சுகிற ‘உண்மை’ முதலாளித்துவம் இருந்த நாடுகளில் அரசு மோனோபாலி இருந்ததையும் மறைக்கிறீர்கள். அப்போ முதலாளித்துவம் வெற்றியடைந்ததாக நீங்கள் முன்னிறுத்தும் நாடுகளும் சோசலிச நாடுகளா அல்லது சோசலிச எச்ச நாடுகளா? மொத்தத்தில் சோசலிசம் என்ற வார்த்தை இடத்துக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப முதலாளித்துவத்தின் அயோக்கியத்தனங்களை காப்பதற்கு ஏற்ப நீஙக் மாத்தி மாத்தி வரையறை செய்வீங்களாம். அப்புறம் அதையெ பெரிய புத்திசாலித்தனம், ஓபன் மைண்டு அப்படின்னெல்லாம் பீலா விடுவீங்களாம். நாங்க அத அமைதியா பாத்துக்கிட்டு இருக்கனுமா? கேள்வி கேட்ட கே.கூவா?

        • //வினவு மற்றும் இதர நண்பர்களே,

          அசுரனுக்கு நான் தொடர்ந்து ‘பதில்’ சொல்லனுமா என்ன ? இப்படி உளருபவருடன் தொடர்ந்து ‘விவாதம்’ செய்ய வேண்டுமா அல்லது நான் ‘பதில் சொல்லாமல் ஓடுகிறேனா’ என்று நீங்களே சொல்லுங்களேன். anyway, i don’t want to waste my time for this kind of crazies.//

          அதியமான் அளவுக்கு எனக்கு ‘அனுபவமோ’, ‘வரலாற்று/தத்துவ அறிவோ’ கிடையாது. எனவே அண்ணார் தயை கூர்ந்து நான் மீண்டும் பட்டியலிட்டுள்ள கேள்விகளுக்கு அவ்ர ஏற்கனவே பதில் சொல்லியுள்ளதாக கருதும் பதில்களை காப்பி பேஸ்டு செய்தாவது கொடுக்கட்டும். அப்புறமாக அவர் பதிவுலகிற்கு வேண்டுகோள் விடட்டும்.

        • //அதியமான் அளவுக்கு எனக்கு ‘அனுபவமோ’, ‘வரலாற்று/தத்துவ அறிவோ’ கிடையாது.//

          ஆம். உண்மைதான். இல்லாவிட்டால் நேருவையும், எம்.ஜி.ஆரையும் ஒரே தட்டில் வைத்து, ஒரே வகை என்று சொல்ல மாட்டீர்கள். யாரை, யாரோடு ஒப்பிட்டுவது, அல்லது சமப்படுத்தி, அவர்களின் ‘அரசியல்’ ஒரே வகை என்று விவஸ்த்தை அல்லது ‘அறிவு’ இல்லாமல் பேசுபவரின் ‘கேள்விகளுக்கு’ நான் பதில் சொல்வது வீண் வேலை. முதலில் 1991 இந்திய திவால் நிலை பற்றிய எமது முக்கிய பதிவின் இறுதியில் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க.

        • //முதல் உலகப் போரின் போது எந்த கம்யூனிசம் இருந்தது என்று முதலாளிகள் பயந்து போய் யுத்தம் செய்தனர்?///

          காலனி பிடிப்பதில் லேட்டாக வந்து, இடம் கிடைக்காமல் தவித்த ஜெர்மனியின் ஃபாசிச பாணி முதலாளித்துவத்தால் உருவானதுதான் முதல் உலகப்போர். முதலாளித்துவம் இரு வகை படுத்தலாம். ஃபாசிச, ஏகாதிபத்திய பாணி முதலாளித்துவம் (அன்று அது பல நாடுகளில் இருந்தது), லிபரல் ஜனனாயக பாணி முதலாளித்துவம்.

          இரண்டாம் உலக்போர், முதல் உலக்போரின் தொடர்சி என்றும் ஒரு கருத்து உள்ளது. போரில் தோற்று அழிந்த ஜெர்மனி மீண்டும் அதை துவங்கியது.

          சரி, நான் பனி போர் பற்றி மட்டும்தான் எழுதினேன். அதற்க்கான காரணங்களை பற்றி, வியட்நாம் பற்றி. அனைத்து போர்களையும் பற்றி அல்ல. ராஜேந்திர சோழன் கூட கொடூரமாக போர் புரிந்தான். அதற்க்கும் முதலாளித்வம் அல்லது கம்யூனிசம் காரணம் என்று சொல்ல முடியாதல்லவா..

      • //’ராஜாஜி எனது தந்தை’ என்ற நூலை எழுதிய கோவை அய்யாமுத்து ஒரு பார்பனரல்லாத
        போராளி. பெரியாரின் நண்பர். குடியரசு பத்திரிக்கையை சில காலம்
        நடத்தியவர். காந்தியவாதி.//

        எவ்வளவு கம்ப்யூசன்ஸ்… பொருத்தமான ஆளைத்தான் உங்களது ஆத்மார்த்த தலைவ்ராக தேர்ந்தெடுத்துள்ளீர்கள் அதியமான்…

  18. லிபெர்டரியன் மற்றும் அவருடன் விவாதிக்கும் நண்பர்களின் கவனத்திற்கு,

    இடுகையின் மையப் பொருள் குறித்து விவாதம் நடைபெற்றால் இடுகையின் நோக்கம் நிறைவேற உதவுவதாக இருக்கும்.இது போன்று பல லட்சம் கோடி மக்கள் வரிப்பணத்தை ஆட்சியாளர்கள் தள்ளுபடி செய்து பெருமுதலாளிகளின் கொள்ளைக்கு வழி வகுப்பதற்கு எதிராக மக்களிடையே பொதுகருத்தை உருவாக்குவதே கட்டுரையாளரின் நோக்கமாக இருக்க முடியும்.

    ஆகவே நண்பர் அதியமானுக்கு ஒரு எளிய கேள்வி.
    மக்களுக்கு சேரவேண்டிய வரிப்பணம் 21 ,25 ,023 கோடியை தள்ளுபடி செய்வதை வரவேற்கிறீர்களா,அப்படியானால் ஏன்.தவறு என்கிறீர்களா.தவறு என்று சொன்னால் அதற்கு விளக்கம் ஏதும் கொடுக்க வேண்டியதில்லை. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு.

    • உடன்படுகிறேன், அதியமானின் கருத்துக்களுக்கு எதிரான கேள்விகளை தொகுத்து அவருக்கென தனிப்பதிவிட்டு அவரைக்கொண்டு பதிலளிக்க வேண்டும். வினவு அதற்கு ஆவன செய்யவேண்டும். அசுரன் அதற்கு துணைபுரிய வேண்டும்.

      • //உடன்படுகிறேன், அதியமானின் கருத்துக்களுக்கு எதிரான கேள்விகளை தொகுத்து அவருக்கென தனிப்பதிவிட்டு அவரைக்கொண்டு பதிலளிக்க வேண்டும். வினவு அதற்கு ஆவன செய்யவேண்டும். அசுரன் அதற்கு துணைபுரிய வேண்டும்.//

        தோழர்களே,

        ஒரு சில விசயங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்வது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன். அதியமானுடைய நோக்கம் விவாதிப்பது அல்ல. பாருங்களேன் அவர் எந்த காலத்திலும் ஒரு பொருளில் ஊன்றி நின்று விவாதிப்பதில்லை என்பதை நீங்கள் யாவரும் கவனிக்கலாம். எங்கோ ஆரம்பித்த விவாதத்தில் ஒரு கட்டத்தில் அவரால் பதில் சொல்ல இயலாத அம்பலமான சில கேள்விகளில் வந்த நின்றவுடன் வேறு இடத்திற்கு விவாதத்தை கொண்டு சென்று கடைசியில் ராஜாஜியின் பள்ளிக் கல்வியில் இப்போழுது சென்று கொண்டிருக்கிறார். இவரது தாவிய மான் விவாத முறை பற்றி வேறு யாரையும் விட எனக்கு 4 வருட அனுபவம் உண்டு என்பதை தோழர்களுக்கு அறியத் தருகிறேன்.

        அவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டால் அவருக்கு மிகச் சந்தோசமே. சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டிக் கொண்டு அவருக்கு பிடித்தமான, சாதகமான கருத்தை மட்டும் எடுத்து அதில் விளாவாரியாக கட் பேஸ்ட் செய்து போய்க் கொண்டே இருப்பார்.

        இதைச் சொல்லியப் பிற்பாடு நான் அவரிடம் இங்கு செய்து கொண்டிருப்பது என்னவென்பதை தெளிவுபடுத்திவிடுவது இந்த பின்னுட்டத்தின் நோக்கத்தை நிறைவடையச் செய்யும்.

        மனித உரிமைப் போராளி பினாயக் சென் கட்டுரையில் ரொம்ப நல்லவன் போல மனிதாபிமான வேசம் போட்டு ஆடினார் திருவாளர் அதியமான் அவர்கள். அப்பொழுதே அவரது டவுசர் கழட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து சில விசயங்களில் அவரது போலித் தனங்களை தொடர்ந்து அம்பலப்படுத்துவதே அவ்ரது பித்தலாட்ட நடைமுறைகளை எதிர்காலங்களில் மட்டுப்படுத்த உதவும் என்ற முடிவுக்கு வந்தேன்.

        இதனடிப்படையில், எந்த இடுகையாயிருந்தாலும் குறிப்பாக முதலாளித்துவ பயங்கரவாதம் அம்பலமான இடுகையாரயிருந்தால் சம்பந்தமேயில்லாமல் சோசலிசத்தையே அதற்கும் காரணமாக்கும்/பலியாக்கும் நேர்மையற்றவர் இவர். எனவேதான் அவ்ரது சொந்த வாக்குமூலங்களிலிருந்தே சோசலிசம், போலி முதலாளித்துவம், முதலாளித்துவம், மனிதாபிமானம், மக்கள் நலன் இவற்றையெல்லாம் முதலாளித்துவ நலன் காக்க அவர் எப்படியெல்லாம் திரிக்கிறார், மாற்றி மாற்றி பேசுகிறார் என்பதை அம்பலமாக்குவதை இலக்காகக் கொண்டு அவரிடம் கொக்கிகள் போட்டு இழுத்து வந்தேன்.

        இதோ அவர் இங்கு மையமான அவ்ரது குழப்பவாத, முதலாளித்துவ நலன் காக்கும் போலி மனிதாபிமான/நடுநிலை வேசம் அம்பலபட்டு நிற்கிறது. ஐந்து கேள்விகளுக்கு அவ்ரால் இப்போது வரை பதில் சொல்ல இயலவில்லை.

        இதில் சில தோழர்கள் அவரிடம் விவாதிக்கலாம் என்று கேள்வி கேட்டு அவருக்கு குஷி ஏற்படுத்தினீர்கள். அது தோழர்களுக்கு எந்த பயனும் தராது என்பதை எனது சொந்த அனுபவத்திலிருந்து தெரியப்படுத்திக் கொளள் விரும்புகிறேன்.

        புதிதாக கற்றுக் கொள்வதற்கு ஒரு குழந்தையைப் போல தமது பலஹீனங்கள்/தவறான புரிதல் குறித்து நேர்மையாக ஏற்றுக் கொள்ளும் பண்பும், ஒரு குழந்தையப் போல கற்றுக் கொள்ளும் பணிவும் அவசியம். நேர்மை, பணிவு இரண்டுமே தன்னை அதிபுத்திசாலியாக கற்பனை செய்து கொள்ளும் இர்ரெஸ்பான்சிபில் சிடோ இண்டெலெக்சுவலான அதியமான் அவர்களுக்கு கிடையாது. அவருக்கு தனியாக இடுகை ஒதுக்குவது வினவின் தகுதிக்கு மீறிய வேலை. அவரை பின்னூட்டங்களில் இந்த எளியோனே கையாண்டு கொள்ள விட்டு வைக்குமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.

        ஏனேனில், எப்படி பார்த்தாலும் செய்ய வேண்டிய் நல்ல காரியங்கள் நிறையக் கிடக்கின்றன….. இந்த அக்கப்போர் லாவணிக்கு அதி முக்கியத்துவம் வேண்டாமே….

        • //அவருக்கு தனியாக இடுகை ஒதுக்குவது வினவின் தகுதிக்கு மீறிய வேலை//

          இந்த வரிகளை இப்படிப் படிக்கவும்:

          அவருக்கு தனியாக இடுகை ஒதுக்குவது வினவின் “தகுதிக்கு” மீறிய வேலை

          அல்லது

          அவருக்கு தனியாக இடுகை ஒதுக்குவது வினவின் தகுதிக்கு தேவையில்லாத வேலை

        • //ஏனேனில், எப்படி பார்த்தாலும் செய்ய வேண்டிய் நல்ல காரியங்கள் நிறையக் கிடக்கின்றன….. இந்த அக்கப்போர் லாவணிக்கு அதி முக்கியத்துவம் வேண்டாமே….//

          இந்த இடத்தில் விக்கிலீக்ஸ் இண்டியா கேட்டை ஞாபகப்படுத்திக் கொள்ளவும்

        • ///புதிதாக கற்றுக் கொள்வதற்கு ஒரு குழந்தையைப் போல தமது பலஹீனங்கள்/தவறான புரிதல் குறித்து நேர்மையாக ஏற்றுக் கொள்ளும் பண்பும், ஒரு குழந்தையப் போல கற்றுக் கொள்ளும் பணிவும் அவசியம். நேர்மை, பணிவு இரண்டுமே தன்னை அதிபுத்திசாலியாக கற்பனை செய்து கொள்ளும் இர்ரெஸ்பான்சிபில் சிடோ இண்டெலெக்சுவலான அதியமான் அவர்களுக்கு கிடையாது////

          இல்லை அசுரன். லிபேர்ட்டேரியன் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு. நேற்று வரை நான் சரி என்று நம்பிய கருத்துக்கள், விசியங்கள் தவறு என்று நிருபிக்கப்படுமானால், உடனே அதை தவறு என்று ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து ’விடுதலை’ அடைவதும் Liberation from the past தான். இன்று புதிதாய் பிறந்தோம் என்பதே லிபரேசன் from the past mistakes.

          மற்றபடி மேலே சொன்ன கருத்து உமக்குத்தான் மிக கச்சிதமாக பொருந்துகிறது. வாசகர்கள் மற்றும் நண்பர்களுக்கும் அது தெரியும். மேலும் யார் irresponsible intellectual என்றும் அவர்களே முடிவு செய்து கொள்ளட்டும். நண்பர் சித்திர குப்தன், ஜோதிஜி, மருத்துவர் ருத்திரன் : நீங்க ’தீர்ப்பு’ சொல்லுங்களேன்…

      • //உடன்படுகிறேன், அதியமானின் கருத்துக்களுக்கு எதிரான கேள்விகளை தொகுத்து அவருக்கென தனிப்பதிவிட்டு அவரைக்கொண்டு பதிலளிக்க வேண்டும். வினவு அதற்கு ஆவன செய்யவேண்டும். அசுரன் அதற்கு துணைபுரிய வேண்டும்.//

        அதற்கு துணை புரிய இயலாது என்பதையும் தெரியப் படுத்தி விடுகிறேன். அதியமானின் பித்தலாட்டம் எங்கெல்லாம் தொடர்கிறதோ அங்கெல்லாம் நான் தொடர்ந்து அமபலப்படுத்துவேன் அவ்வளவுதான்….

        • ///அவருக்கு தனியாக இடுகை ஒதுக்குவது வினவின் “தகுதிக்கு” மீறிய வேலை
          அல்லது
          அவருக்கு தனியாக இடுகை ஒதுக்குவது வினவின் தகுதிக்கு தேவையில்லாத வேலை//

          //அதற்கு துணை புரிய இயலாது என்பதையும் தெரியப் படுத்தி விடுகிறேன். அதியமானின் பித்தலாட்டம் எங்கெல்லாம் தொடர்கிறதோ அங்கெல்லாம் நான் தொடர்ந்து அமபலப்படுத்துவேன் அவ்வளவுதான்….//

          தோழரின் கருத்து சரியானது.

    • மிகச்சரியான கருத்தைப் பதிந்த திப்புவிற்கு நன்றி. அதியமானின் 1991ல் இந்தியா திவாலாகியிருந்தால்,,? மற்றும் அவர் கொண்டிருக்கிற தனியார் மய மோக கருத்துக்களுக்கும் அவரின் தளத்தில் சென்று நான் விளக்கம் கொடுத்துக் கொள்கிறேன். மற்றபடி இந்த கட்டுரையின் மையக்கருத்தின் மீது விவாதம் இருந்தால் சரியாக இருக்கும்

    • தோழர் திப்பு,

      கண்ணாடி தேவையில்லாத கைப்புண் கேள்விக்கு அவர் சுற்றி வளைத்து இந்தியாவில் முன்பு நிலவிய சோசலிசத்தை காரணம் என்பார். அது கடைசியில் எங்கு போய் நிற்கும் என்பதை இதே பதிவில் உள்ள பின்னூட்டங்கள் மூலமே கணித்துக் கொள்ளுங்கள்.

    • நண்பர் திப்பு,

      இந்த பதிவின் முதல் இரண்டு பின்னூடங்களில் உங்க கேள்விக்கு பதில் சொல்லியிருக்கிறேன். வரி சலுகைகள் பல வகை உண்டு. பின் தங்கிய மாவட்டங்களின் துவங்கப்படும் புதிய நிறுவனங்களுக்கு பெரும் அளவில் சலுகை உண்டு. அதை நீக்க வேண்டுமா என்று சொல்லுங்களேன். உண்மைய சொன்னா, இந்த சலுகையினால் பாதிப்படைந்த தொழிலில் இருந்தவன் நான். அதாவது நாங்கள் சப்பளை செய்த நிறுவனம், சென்னையை விட்டு, வரி சலுகைக்காக உத்திராஞ்லுக்கு இடம் பெயர்ந்துவிட்டது. We lost a very important and major customer !!

  19. திப்பு
    உடன்படுகிறேன். எனினும் விஷயப் பொருத்தமில்லாத இடுகைகளைப் புறக்கணிப்பது தகும்.
    அபத்தங்களைச் சுருக்கமாக ஒருமுறை சுட்டிக்காட்டலாம். அதற்கு மேல் உரையாடலை நீட்டுவது பயனற்றது.

    சம்பந்தா சம்பந்தமில்லாத திசைகளில் உரையாடல் நகர உதவுமாறு “துட்டுக்கு இரண்டு கொட்டைப் பாக்கு” என்ற விதமாக வருகிற பின்னுட்டங்களுடன் மினக்கெடுவது, அவற்றை இடுவோரின் நோக்கத்துக்கு உதவுவது தான்.
    .
    அரையும் குறையுமாகச் சீரணிக்கப் பட்டவையும் நுனிப்புல் மேய்ச்சல்களும் ஏன் இங்கு இடப்படுகின்றன?
    (ஜெயமோகன் பாணியில்) தங்களை அதி மேதாவிகளாகக் காட்டுவதற்காகச் சில அரைவேக்காடுகள் செய்கிற காரியங்களே அவை.

    Q2Aயின் விருப்பத்தை நிறைவு செய்ய ஒரு எளிய வழி. அவர் இடம் ஒதுக்கக் கோருகிற நபர் (நபர்கள்) தானே (தாமே) “ப்ளாக் சைட்” வைத்துக் கொண்டால் மினக்கெட விரும்புவோர் அதில் தங்கள் பொழுதைப் ‘பயனுறக்’ கழித்துக் கொள்ளலாம்.

    வினவுக்கு ஏன் வீண் வம்பு?

  20. அசுரன்
    நீங்க ஒண்ணு!

    ஒரு நக்கலுக்கு “அதியமான் அளவுக்கு எனக்கு ‘அனுபவமோ’, ‘வரலாற்று/தத்துவ அறிவோ’ கிடையாது” ன்னு சொன்னாலும் சொன்னீங்க.
    ஆளு அதையே நம்பிக்கிட்டு மேலேயும் உளரராரு.

    இப்போ பாருங்க, இனி அமெரிக்கா எப்புடி லிபியாவுலே குண்டு போட்டு அங்கே ஜனநாயகத்தேக் காப்பாதுத்துதுன்னு ஒங்களுக்குக் கத்துக் குடுப்பாரு.
    யாரச்சியும் எதையவது உருப்படியாத் தகவல் சொன்னா அதே வேறெங்கேயாவது திருப்பற மாதிரிய கொட்டப் பக்கு இடுகை போடுறதிலே கெட்டிக்காரரு தான். (அதெயும் சீரியசா எடுத்துக் காட்டிப் போதும்).

    அய்யோ
    ரோதனை மேல் ரோதனை போதுமடா சாமி.

    • கார்பரல் ஜீரோ,

      நக்கலை புரிந்துகொள்ள முடியாத அளவு உம்மை போல் நான் ஜீரோ அல்ல. தெளிவாகத்தான் சொன்னேன். அது உம்மை போன்ற வெத்துவேட்டுகளுக்கு பொருந்தும். சும்மா இங்கு கேனத்தனமாக, கொட்டை பாக்கு என்று உளரத்தான் உம்மை போன்ற அனானிகளுக்கு தெரியும். உருப்படியாக இதுவரை எமக்கு ஏதாவது மறுப்பு எழுத துப்பில்லை.

      லிபியாவில் கடாஃபியை எதிர்த்து கிளர்சி செய்யும் மக்களின் அழைப்பை ஏற்றும், அய்.நா சபை தீர்மானம் மூலம் தான் அந்நாடுகள் தாக்குதலை தொடங்கியுள்ளனர். இதை செய்யாமல் விட்டால், அந்த கொடுங்கோலன் கடாஃபி தம் மக்களையே கொன்று அடக்கியிருப்பான். உம்மை போன்ற இணைய ‘புலிகள்’ அமெரிக்கா ஏகாதிபத்தியம் என்று தொடர்ந்து பேசிக்கொண்டு இருப்பீர்கள். அமெரிகாவில் எல்லா தாக்குதலகளும் தவறு அல்ல. இது மிக தேவை தான்.

      1999இல் அன்று போசனிய முஸ்லீம்களை செர்பிய கிருஸ்துவ வெறியர்கள், மிலாசாவிக் என்ற கொடுங்கோலன் தலைமையில் கொன்று அழித்ததை தடுக்க அமெரிகா / நேடோ கடைகள் நிகழ்த்திய தாக்குதல் மிக அருமையாக வேலை செய்து, அம்மக்களை காத்தது.
      அன்றும் பலரும் அதை ‘எதிர்த்தார்கள்’ ; ஆனால் அமெரிகா அன்று அதை செய்யாவிட்டால், இன்று கோசோவா இருந்திருக்காது. மிலாசாவிக் இன்றும் தொடர்ந்திருப்பான்…

      • காஷ்மீரிகள் அழைத்தால் கூட அமெரிக்கா வருமா!. ஈழத்தமிழர்கள் மன்றாடியும் கூட ஐ.நா அசைந்து கொடுக்கவில்லையே!

        • கலை,
          கவலைப்படாதீர்கள்.
          எப்போதாவது இந்தியாவில் ஒரு உருப்படியான ஆட்சி மாற்றம் நடந்தால், காஷ்மீர் என்ன, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மட்டுமல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட அவர்கள் குறுக்கிடுவார்கள்.
          அப்போதும் அமெரிக்காவின் ஏவல் நாய்களின் வால்கள் அமெரிக்காவிற்காகவே ஆடும்.

        • //எப்போதாவது இந்தியாவில் ஒரு உருப்படியான ஆட்சி மாற்றம் நடந்தால், காஷ்மீர் என்ன, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மட்டுமல்ல ஒவ்வொரு மாவட்டத்திலும் கூட அவர்கள் குறுக்கிடுவார்கள். அப்போதும் அமெரிக்காவின் ஏவல் நாய்களின் வால்கள் அமெரிக்காவிற்காகவே ஆடும்.//

          ஆட்சி மாற்றமா ? செம்புரட்சி மூலமா ? இந்த அமெரிக்க ’ஏவல் நாய்கள்’ மற்றும் அமெரிக்க குறுக்கீடு கிடக்கட்டும். அண்ணன் ஸ்டாலின் அன்று ஆசிய குடியரசுகளை ’அன்போடு’ ‘ஒருங்கினைத்த’ விதம் போல் தான் உங்க ‘உருப்படியான ஆட்சி மாற்றம்’ செய்யும் ’கருணாமூர்த்திகளும்’ iஇந்தியாவில் நடந்து கொள்வார்கள் தானே ?

          http://en.wikipedia.org/wiki/Russification#Under_the_Soviet_Union

    • அண்ணே அசுரன்
      சொன்னேனே, சொன்ன மாதிரியே நடந்துடுச்சு இல்லியா!
      கொட்டப்பாக்குக்கு ரொம்பத் தான் சுட்டுட்டுது.
      பாவம், துள்ளுது.
      அதெ நானும் கண்டுக்கப் போறதில்லே, நீங்களும் கண்டுக்காதீங்க.
      அந்த மாதிரி வியாதிக்கு வேறே வைத்தியமில்லே.

    • Q2A,

      Sure, there are frauds among MNCs and other companies. but what percentage ? they are manned by people. and there are cheats and frauds among humans everywhere. but can we conclude 75 % of humans are frauds from our limited ‘exposures’ ?

      You haven’t answered my question about this statistic. and what about these type of frauds in engg cos within developed nations like say, Sweden ? how come frauds by MNCs there are almost nil ?

      And does this google, MS, Intel, Cisco, HP, Sony which makes this argument possible on net here cheating in their manufacturing qlty standards as you accuse in your sweeping statements ? so what solution do you offer ?

  21. ராஜீவ் காந்தி தனது அரசியல் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு தன்னை ஒரு நேர்மையாளராகக் காட்டிக்கொள்ள முற்பட்டதுதான். அவரது அரசியல் பிரவேசத்தின்போது அட்டையில் அவரது படத்தைப்போட்டு மிஸ்டர். க்ளீன் (திருவாளர் பரிசுத்தம்) என்று வர்ணிக்காத பத்திரிகைகளே இந்தியாவில் இல்லை எனலாம்.

    அரசியலில் அவர் தோற்றுப் போனதற்கும் இதுதான் காரணம். ராஜீவ் காந்தியால் தான் ஏற்படுத்திக்கொண்ட அந்த மக்கள் மத்தியிலான நன்மதிப்பை, இமேஜைக் காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனதுதான் அவரது தோல்விக்கு முக்கியக் காரணம். ஆனால், இந்திரா காந்தி ராஜீவைப் போன்றவரல்லர். உங்கள் அரசில் ஊழல் தலைவிரித்தாடுகிறதே என்று கேட்டபோது, “உலகமெல்லாம் நடப்பதுதான்’ என்று அலட்டிக் கொள்ளாமல் பதில் அளித்தவர் அவர்.

    இது நடந்தது 1983-ம் ஆண்டில். இந்திரா காந்தி இப்படிப் பேசியது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. நாட்டின் பெரிய பொறுப்பில் உள்ள ஒருவர், ஊழல் சகஜமான ஒன்றுதான் என்று கூறினால், ஊழலை எப்படி ஒழிப்பது என்று தில்லி உயர் நீதிமன்றத்தின் நேர்மையான நீதிபதி ஒருவர் வேதனைப்பட்டார்.

    ஆனால், இந்திராவின் இந்தப் பேச்சு அவருக்குச் சாதகமாகவே அமைந்தது. ஆம். தம்மைப் பரிசுத்தமானவர் என்று கூறிக்கொள்ளாத ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறி என்ன ஆகிவிடப்போகிறது என்கிற மனநிலை எதிர்க்கட்சிகளுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு இந்திரா மீது எப்போதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழவேயில்லை. இப்படி அரசியலில் எதார்த்தமாக இருந்த இந்திராவுக்கு நேர் எதிரானவராக ராஜீவ் நடந்து கொண்டார். தம்மை திருவாளர் பரிசுத்தம் என்று கூறிக்கொள்வதில் அவர் பெருமையடைந்தார்.

    அதனால் ஏற்படப்போகும் அபாயங்கள் பற்றி அவர் அறிந்திருக்கவில்லை. விளைவு, போபர்ஸ் பீரங்கி பேரத்தில் நடந்த முறைகேடுகள் அம்பலமாகி, 1989-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. ஆட்சி பறிபோயிற்று. உண்மையிலே நேர்மையானவராக இல்லாதபோது, திருவாளர் பரிசுத்தமாகக் காட்டிக் கொள்வது கூடாது என்பதுதான் இதனால் அறியப்பட்ட அரசியல் பாடம்.

    இந்தப் பாடத்தை சோனியா காந்தி தெரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால், ஊழலைப் பற்றிப் பேசும்போது இந்திராவின் பாதுகாப்பான வழியைத் தேர்ந்தெடுக்காமல், ராஜீவின் அபாயகரமான வழியை சோனியா தேர்ந்தெடுப்பாரா? அலாகாபாத் கட்சிக் கூட்டத்தில் பேசிய அவர், “ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன்’ என்று ஆவேசமடைந்தார். அத்துடன் விடவில்லை. ஒருவாரம் கழித்து தில்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் தன்னைப் பரிசுத்தமானவராகவும், எந்தவித ஊழல் கறையும் படியாதவராகவும் காட்டிக்கொள்ள அவர் முற்பட்டார்.

    “ஊழலை வேரறுக்க வேண்டும்” என்று கட்சித் தொண்டர்களுக்கு அறிவுரை கூறியதுடன், தேசத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் ஊழலுக்கு எதிராக உடனுக்குடன் கட்சி நடவடிக்கை எடுக்கும் என்றும் முழங்கினார். இந்த முழக்கம் 25 ஆண்டுகளுக்கு முன்பு மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ராஜீவ் காந்தி பேசியதைத்தான் நினைவுப்படுத்துகிறது. இருப்பினும், ராஜீவுக்கும் சோனியாவுக்கும் இடையே இரு முக்கிய வேறுபாடுகளைக் குறிப்பிட முடியும். தம்மை “திருவாளர் பரிசுத்தம்’ என்று ராஜீவ் கூறிக் கொண்டபோது, அவருக்கு எதிராக எந்த ஊழல் புகாரும் இருக்கவில்லை. அதனால், ஊழல் புகாரிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அவர் இப்படிப் பேசினார் என்று கூற முடியாது.

    ஆனால், இப்போது காமன்வெல்த் விளையாட்டு, ஆதர்ஷ் குடியிருப்பு முறைகேடுகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் என ஒன்றன்பின் ஒன்றாகக் காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் பட்டியல் வளர்ந்துகொண்டே போகிறது. இந்த நிலையில், ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா கூறிவருவது முரண்சுவையாக அல்லவா இருக்கிறது.

    இரண்டாவது வேறுபாடு, எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் அரசியல் வாழ்வைத் தொடங்கிய ராஜீவ், போபர்ஸ் ஊழல் வெளியாகும்வரை எந்தக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் இருந்தார். இதற்கு நேர் எதிராக சோனியா மீது ரகசியமான ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், போபர்ஸ் கமிஷன் என நம்பத் தகுந்த ஊழல் புகார்களும், அவருக்கு எதிரான அதிர்ச்சியளிக்கும் ஆவணங்களும் வெளியாகியிருக்கின்றன.

    சோனியாவின் குடும்பம் லஞ்சம் பெற்றதாக பிரபல சுவிஸ் பத்திரிகையில் ரஷியப் புலனாய்வுச் செய்தியாளர் ஆதாரத்துடன் எழுதிய கட்டுரைக்கு சோனியாவோ, அவரது குடும்பத்தினரோ எந்த மறுப்பும் இதுவரை தெரிவிக்கவில்லை. செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது வழக்குத் தொடுக்கவும் இல்லை. பின்னணி இப்படி இருக்கையில், “திருடன், திருடன்’ என்று திருடனே கத்திக் கொண்டு தப்பி ஓடுவதுபோல, ஊழலைப் பொறுக்க மாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார் சோனியா என்பதுதான் வேடிக்கை.

    2.2 பில்லியன் டாலர் கதை1991-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சுவிட்சர்லாந்தின் “ஸ்வீசர் இல்லஸ்ட்ரேட்’ இதழ் சோனியாவைப் பற்றி அதிர்ச்சிகரமான கட்டுரை ஒன்றை வெளியிட்டது. ராஜீவ் காந்தி உள்ளிட்ட 12-க்கும் அதிகமான அரசியல்வாதிகளின் ரகசியங்கள் அதில் அம்பலமாகின. போபர்ஸ் பேரத்தில் கிடைத்த லஞ்சப் பணத்தை ஸ்விஸ் வங்கியில் ராஜீவ் பதுக்கி வைத்திருக்கிறார் என்று அந்தக் கட்டுரையில் பகிரங்கமாகக் கூறப்பட்டது.

    இந்தக் குற்றச்சாட்டு ஏதோ போகிறபோக்கில் கூறப்பட்டதல்ல. குற்றச்சாட்டைக் கூறிய ஸ்வீசர் பத்திரிகையும் சாதாரணமானதல்ல. 2.15 லட்சம் பிரதிகள் விற்கும், 9.17 லட்சம் வாசகர்களைக் கொண்ட பிரபலமான பத்திரிகை. சுவிட்சர்லாந்தில் ஆறில் ஒருபங்கினர் இதை வாசிப்பதாகப் புள்ளிவிவரம் இருக்கிறது. இப்படித் தரமான ஒரு பத்திரிகைதான் ராஜீவ் மீதும் சோனியா மீதும் ஆதாரத்துடன் குற்றம்சாட்டியது.

    ரஷியாவின் உளவு அமைப்பான கேஜிபியின் ஆவணங்களை மேற்கோள்காட்டி, “இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா ரகசிய வங்கிக் கணக்கில் 2.5 பில்லியன் சுவிஸ் ஃபிராங்க் (2.2 பில்லியன் அமெரிக்க டாலர்) பணத்தை மைனரான தனது மகனின் பெயரில் வைத்திருக்கிறார்’ என்று ஸ்வீசர் கூறியது.

    அந்தவகையில் பார்த்தால், ராகுலுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே, அதாவது 1988-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கு முன்பே, இந்த 2.2 பில்லியன் டாலர் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருக்க வேண்டும். இந்தப் பணம் இந்திய மதிப்பில் ரூ.10 ஆயிரம் கோடிக்குச் சமம். வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை ஸ்விஸ் வங்கிகள் அப்படியே முடக்கி வைப்பதில்லை. வாடிக்கையாளர்களின் சார்பில் பல்வேறு வகைகளில் அந்தப் பணம் வங்கியால் முதலீடு செய்யப்படுவது வழக்கம். நீண்டகாலப் பங்குப் பத்திரங்களில் அந்த லஞ்சப் பணம் முதலீடு செய்யப்பட்டிருந்தால், 2009-ம் ஆண்டில் அந்தப் பணம் ரூ. 42,345 கோடியாகப் பெருகியிருக்கும்.

    அமெரிக்கப் பங்குகளில் முதலீடு செய்திருந்தால் ரூ. 58,365 கோடியாக வளர்ந்திருக்கும். இரண்டிலும் சரிபாதி என்ற வகையில் முதலீடு செய்திருந்தால் ரூ. 50,355 கோடியாகியிருக்கும். இந்தப் பணத்தை 2008-ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தத்துக்கு முன்பு எடுத்திருந்தால் ரூ. 83,900 கோடி கிடைத்திருக்கும். இதில் எந்த வகையில் கணக்கிட்டாலும் சோனியாவின் குடும்பத்துக்கு ரூ. 43,000 கோடியிலிருந்து ரூ. 84,000 கோடிக்குள் ஏதோ ஒரு அளவில் பெரும் பணம் இருக்கிறது என்பது மட்டும் தெளிவு.

    கேஜிபி ஆவணங்கள் சோனியா மீதான இரண்டாவது ஆதாரப்பூர்வமான குற்றச்சாட்டு இன்னும் கடுமையானது. யெவ்ஜீனியா அல்பேட்ஸ் என்கிற ரஷியப் புலனாய்வு எழுத்தாளர் எழுதிய “தி ஸ்டேட் வித்இன் ஏ ஸ்டேட்: தி கேஜிபி அண்ட் இட்ஸ் ஹோல்ட் ஆன் ரஷியா – பாஸ்ட், பிரசன்ட், ப்யூச்சர்’ என்ற புத்தகத்தில் இந்தக் கடுமையான குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன.

    “அரசியல் காரணங்களுக்காக கேஜிபியிடம் இருந்து நேரு குடும்பம், அதாவது ராஜீவ் காந்தியின் குடும்பம் லஞ்சம் பெற்றது’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் கூறியிருக்கிறார். கேஜிபி ஆவணங்களை மேற்கோள்காட்டி அந்தப் புத்தகத்தில் வரும் ஒரு செய்தி: 1982-ம் ஆண்டில் கேஜிபி தலைவராகப் பொறுப்பேற்ற விக்டர் செப்ரிகோவ் கையெழுத்திட்டிருக்கும் கடிதமொன்றில், “இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் மகனுடன் சோவியத் யூனியனின் கேஜிபி, நெருக்கமான தொடர்பைக் கொண்டிருக்கிறது. சோவியத் யூனியனின் வர்த்தக அமைப்புகள், பிரதமர் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வணிக நிறுவனங்களுக்கு அளித்த வாய்ப்புகள் மூலம் கிடைத்த நன்மைகள் குறித்து ஆர்.காந்தி மகிழ்ச்சி தெரிவித்தார்.

    இந்தவகையில் கிடைத்த பணத்தை ஆர்.காந்தியின் கட்சிக்காகப் பயன்படுத்துவதாக அவர் ரகசியமாகத் தெரிவித்திருக்கிறார்’ (பக்.223) இன்னொன்றையும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறார். “ராஜீவ் காந்தியின் குடும்ப உறுப்பினர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, சோனியாவின் தாயார் பவுலா மைனோ ஆகியோருக்கு அமெரிக்க டாலர்களில் பணம் அளிப்பதற்கு சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிடம் அனுமதி கோரி செப்ரிகோவ் கடிதம் எழுதியிருக்கிறார்’ என்று அந்தப் புத்தகத்தில் அல்பேட்ஸ் தெரிவித்திருந்தார்.

    இந்தப் புத்தகம் வெளியாவதற்கு முன்பே ரஷியாவின் பல ஊடகங்கள் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தியிருந்தன. இவற்றைக் கொண்டு 1992-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி தி ஹிந்து நாளிதழ், “ராஜீவ் காந்தி குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கு லாபகரமான வர்த்தக ஒப்பந்தங்களை வழங்கும் ஏற்பாடுகளைச் செய்வதில் கேஜிபி ஈடுபட்டிருப்பதை ரஷியாவின் உளவுத்துறை ஒப்புக்கொண்டிருக்கிறது’ என்று செய்தி வெளியிட்டது.

    இந்திய ஊடகங்கள்ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால், சுவிஸ் மற்றும் ரஷியாவில் அம்பலமான சோனியாவின் ஊழல்கள் தொடர்பாக இந்திய ஊடகங்கள் ஆர்வம் காட்டவில்லை. மாறாக, காங்கிரஸின் தலைவர் பதவியை சோனியா ஏற்பாரா, மாட்டாரா என்ற கேள்விக்குள்ளேயே இந்திய ஊடகங்கள் முடங்கியிருந்தன.ராஜீவின் மரணத்துக்கு முன்பாக, 1988 டிசம்பர் 31-ம் தேதி ஸ்டேட்ஸ்மேன் இதழில் பிரபல கட்டுரையாளர் நூரானி எழுதிய கட்டுரையில் ஸ்வீசர் மற்றும் அல்பேட்ஸ் அம்பலப்படுத்திய மோசடிகளைக் குறிப்பிட்டிருந்தார்.

    2002-ம் ஆண்டு பிப்ரவரி 23-ம் தேதி அன்று ஸ்வீசர் இதழ் மற்றும் அல்பேட்ஸின் புத்தகங்களின் முக்கியப் பக்கங்களைத் தனது இணையதளத்தில் சுப்பிரமணியன்சுவாமி வெளியிட்டிருந்தார். ராஜீவுக்கு 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் வங்கிக் கணக்கு இருப்பதை உறுதி செய்யும் ஸ்வீசர் இதழ் அனுப்பிய மின்னஞ்சலும் அதனுடன் இணைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதியின் அசல் படியையும் சுப்பிரமணியன் சுவாமிக்கு ஸ்வீசர் இதழ் அனுப்பியிருந்தது.”ஸ்விஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க காங்கிரஸ் உரிய நடவடிக்கை எடுக்கும்’ என்று 27.04.2009 அன்று மங்களூரில் சோனியா பேசியதற்கு பதிலளிக்கும் வகையில், 29.04.2009 அன்று “தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் நான் எழுதிய கட்டுரையிலும் இதுதொடர்பான அனைத்து விவரங்களையும் தெளிவுபடுத்தியிருந்தேன்.

    ஸ்விஸ் வங்கியில் முறைகேடாகப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவரே, அதை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்போகிறேன் என்று பேசுவது எப்படி என அந்தக் கட்டுரையில் கேள்வி எழுப்பியிருந்தேன். இதற்கு முன்பாக 15.06.2006 அன்று பிரபல பத்திரிகையாளர் ரஜீந்தர் பூரி இதுபற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதேபோல், 27.12.2010 அன்று இந்தியா டுடே இதழில் சுவிஸ் வங்கியில் பதுக்கப்பட்ட பணம் எங்கே என்று ராம்ஜேட்மலானி கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆக, இந்திய ஊடகங்கள் சோனியாவின் ஊழல்கள் பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் அமல் தத்தா இதுபற்றி 7.12.1991-ம் ஆண்டில் கேள்வி எழுப்பினார். ஆனால், அப்போதைய மக்களவைத் தலைவர் சிவராஜ் பாட்டீல் இதற்கு அனுமதிக்கவில்லை.

    மெளனமே குற்றச்சாட்டுக்கு ஆதாரம்1991-ம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து, ரஷிய, இந்திய ஊடகங்கள் திரும்பத் திரும்பக் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு சோனியாவும் ராகுலும் எந்தவகையிலும் பதிலளிக்கவில்லை. அவர்களது பதில் வெறும் மெளனமாகத்தான் இத்தனை ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறது. எதிலும் சிக்கிக் கொள்ளக்கூடாது என்கிற முன்னெச்சரிக்கையுடன் இப்படி மெளனமாக இருப்பது அவர்கள் மீதான சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது.

    ராஜீவ் காந்திக்கு வந்த ஊழல் பணத்தை ராகுல் பெயரில் சோனியா ஸ்விஸ் வங்கியில் ரகசியமாகப் பதுக்கி வைத்திருக்கிறார் என்று ஸ்வீசர் இதழ் கூறியபோது, அந்தக் குற்றச்சாட்டை எந்த வகையிலும் இருவரும் மறுக்கவில்லை. ஸ்டேட்ஸ்மேன் இதழில் நூரானியின் கட்டுரை வெளியானபோது, அந்த இதழ் மீதோ நூரானி மீதோ, தாயும் மகனும் வழக்குத் தொடுக்கத் தயாராக இல்லை. எல்லா ஆவணங்களையும் சுப்பிரமணியன் சுவாமி தனது இணையதளத்தில் வெளியிட்டபோது அதையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

    எனது கட்டுரை எக்ஸ்பிரஸ் இதழில் வந்தபோது என் மீது வழக்குத் தொடுக்கத் துணியவில்லை. தி ஹிந்துவும், டைம்ஸ் ஆப் இந்தியாவும் கேஜிபி பணப்பட்டுவாடா குறித்து செய்தி வெளியிட்டபோது ரஷியாவே அதிர்ந்தது. அப்போதும் சோனியாவும் ராகுலும் எதுவும் நடக்காததுபோல்தான் இருந்தார்கள். இப்படி எப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மோசடிகள் அம்பலப்படுத்தப்பட்டாலும் சோனியாவும் ராகுலும் மெளனம் சாதிப்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், சோனியாவின் விசுவாசிகள் அப்படி இருக்கவில்லை. 2007-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் இதழில் அல்பேட்ஸின் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த சோனியாவின் ஊழல் குறித்த முழுப் பக்க விளம்பரம் ஒன்று வந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சோனியா ஆதரவாளர் ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், சோனியாவுக்கே வழக்குத் தொடரத் துணிவில்லாதபோது, இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிமன்றம் மனுவைத் தள்ளுபடி செய்தது. அந்த வழக்குக்கூட அவதூறு வழக்காகத்தான் இருந்ததே தவிர, 2.2 பில்லியன் குற்றச்சாட்டை எதிர்க்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    சோனியா நேர்மையானவர்; ஸ்வீசர் இதழும் அல்பேட்ஸின் புத்தகமும் கூறுவதுபோல அவர் கேஜிபியிடம் பணம் பெறவும் இல்லை, ஸ்விஸ் வங்கிக் கணக்கும் இல்லை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொள்வோம். குற்றச்சாட்டுகள் எழும்போது அதற்கு மறுப்புத் தெரிவித்திருக்க வேண்டாமா? நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்க வேண்டாமா? ஒரு நேர்மையானவர், பழிச் சொல்லுக்கு அஞ்சுபவர் இப்படி மெளனமாகவா இருப்பார்? மொரார்ஜி தேசாய் ஒரு சிஐஏ ஏஜென்ட் என்று புலிட்சர் பரிசுபெற்ற சேமெளர் ஹெர்ஷ் எழுதியபோது, 87 வயதான மொரார்ஜி கொதித்து எழுந்தார். அவதூறு வழக்குத் தொடர்ந்தார். அந்த வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது 93 வயதாகியிருந்த மொரார்ஜிக்கு பதிலாக முன்னாள் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் ஆஜராகி, அவருக்கும் சிஐஏவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தெளிவுபடுத்தினார்.

    தம்மீது இல்லாத பழியைச் சொன்னால் தள்ளாத வயதிலும்கூட இப்படித்தான் கடுஞ்சினம் கொள்வார்கள். அதுதான் நேர்மையாளர்களின் குணம். ஆனால், சோனியாவிடமும் ராகுலிடமும் இருந்து இதுபோன்ற பதிலடி வரவில்லை. இத்தனைக்கும் இவர்கள் இன்னமும் அரசியலில் இருந்து ஓய்வுபெற்றுவிடவில்லை. மொரார்ஜிபோல தள்ளாத முதியோரும் இல்லை. அப்படியிருந்தும் ஏன் இந்த மெளனம்? இதுவே ராகுலும் சோனியாவும் இல்லாமல் அத்வானியும் மோடியுமாக இருந்தால் நமது ஊடகங்கள் பேசாமல் இருந்திருக்குமா? இதைத் தலைப்புச் செய்தியாக்கி விவாதப் பொருளாக்கி இருக்காதா? இல்லை, சோனியாவின் கைப்பாவையாக இயங்கும் இந்த அரசு அவர்கள் இருவரையும் சும்மா விட்டிருக்குமா?

    ரூ. 20.80 லட்சம் கோடி கொள்ளை

    சோனியாவின் குடும்பத்துடன் விவகாரம் முடிந்துவிடவில்லை. இவர்களுடைய பணமும் அதில் அடக்கம் என்பதால் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் இந்தியர்களின் பணத்தை மீட்க அரசு முயற்சி எடுக்கத் தயங்குகிறது. அதனால், நாட்டுக்கு அவர்களால் ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவைத் தவிர, மற்ற எல்லா நாடுகளும் விழித்துக்கொண்டு, தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஸ்விஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்கும் முயற்சியில் இறங்கிவிட்டன.

    ஆனால், இந்தியா மட்டும் இந்தக் கள்ளப் பணத்தை மீட்பதில் ஆர்வம் காட்டாமல் சுணங்கியிருக்கிறது. 2009-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது, தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் 500 பில்லியன் முதல் ரூ. 1.4 டிரில்லியன் வரையிலான கறுப்புப் பணத்தை மீட்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எல்.கே. அத்வானி உறுதியளித்தார்.

    முதலில் அவ்வளவு பணம் இருக்காது என காங்கிரஸ் மறுத்தது. நாடு முழுவதும் கறுப்புப் பண விவகாரம் பரபரப்பான பிறகுதான் மன்மோகனும் சோனியாவும் சுதாரித்தார்கள். தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தததும், வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் பணத்தை மீட்போம் என்று மிகத் தாமதமாக உறுதியளித்தார்கள். ஜிஎப்ஐ என்கிற கறுப்புப் பணத்தை மீட்கும் பணியில் ஈடுபடும் ஒரு சர்வதேசத் தன்னார்வ அமைப்பின் புள்ளிவிவரங்களின்படி 462 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 20.8 லட்சம் கோடி) கறுப்புப் பணம் இந்தியர்களால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியவந்திருக்கிறது.

    “1948 முதல் 2008 வரை வரி ஏய்ப்பு, ஊழல், லஞ்சம், குற்றச்செயல்கள் மூலமாக 213 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பணத்தை இந்தியா இழந்திருக்கிறது’ என்று ஜிஎப்ஐ குறிப்பிட்டுள்ளது. இதில் எந்தக் கணக்கின்கீழ் சோனியா குடும்பத்தில் 2.2 பில்லியன் டாலர் கணக்கு வரும் என்பதை நாமே ஊகித்துக் கொள்ள வேண்டியதுதான். இதுபோக, 2ஜி, காமன்வெல்த் என இப்போதைய ஊழல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் இவர்களது பதுக்கல் தொகை இன்னும் பல மடங்காக இருக்கக்கூடும். இப்படி சோனியாவின் குடும்பமே வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும்போது, அவர்கள் எப்படி மற்றவர்களின் பணத்தை மீட்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். அப்படியானால், இந்தக் குடும்பத்தால், இந்தியாவுக்கு ரூ. 20.80 லட்சம் கோடி நஷ்டம்தானே!

    கொள்ளையர்களுக்குப் பாதுகாப்பு

    வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் அரசுக்கு அக்கறையில்லை என்பதற்குப் பல ஆதாரங்கள் இருக்கின்றன. லிக்டென்ஸ்டைன் வங்கியில் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் பட்டியலை ஜெர்மன் நாட்டு அதிகாரிகள் 2008 பிப்ரவரியில் சேகரித்தார்கள்.

    அரசுகள் விரும்பினால் அந்தந்த நாட்டைச் சேர்ந்த கள்ளக்கணக்கு வைத்திருப்போரின் பட்டியலை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஜெர்மன் அதிகாரிகளுக்குக் கிடைத்த பட்டியலில் சுமார் 250 இந்தியர்களின் பெயர்கள் இருந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

    இந்தப் பட்டியலைத் தருகிறோம் என்று ஜெர்மன் அதிகாரிகள் வெளிப்படையாகச் சொன்ன பிறகும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அதைப் பெறுவதில் ஆர்வம் காட்டவேயில்லை. லிக்டென்ஸ்டைன் வங்கியில் லாக்கர் வசதி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரங்களைப் பெறுவதற்கு இந்திய நிதியமைச்சகமும் பிரதமர் அலுவலகமும் நடவடிக்கை எடுக்கவில்லை என “டைம்ஸ் ஆப் இந்தியா’ இதழ் ஆதாரப்பூர்வமாகச் செய்தி வெளியிட்டது.

    விவகாரம் பூதாகரமாவதைப் புரிந்துகொண்ட அரசு, கள்ளக்கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலைப் பெற முன்வந்தது. ஆனால், வெளிப்படையாக அல்ல. ஜெர்மனியுடன் செய்து கொண்ட வரி ஒப்பந்தத்தின் வழியாக வெளிப்படையாகப் பெற்றால், அந்த விவரங்கள் ஊடகங்களில் வெளியிட வேண்டிவரும். அப்படியில்லாமல், ஒப்பந்தத்தின் வழியாக விவரங்களைப் பெற்றால், அவை ரகசியமானவையாக வைக்கப்படும். ஊடகங்களுக்குத் தரவேண்டியது இல்லை.

    வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை நாட்டு மக்கள் அறிந்துகொள்ளக் கூடாது என்பதில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறையைப் புரிந்துகொள்வதற்கு இதைவிட வேறு ஆதாரம் வேண்டுமா, என்ன? மத்திய அரசின் மெத்தனத்தால் கறுப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதற்கு இன்னொரு ஆதாரமும் இருக்கிறது.

    ஹசன் அலி என்ற குதிரை வியாபாரி ஸ்விஸ் வங்கியில் ரூ. 1.5 லட்சம் கோடி வைத்திருப்பதை வருமான வரித்துறை கண்டுபிடித்தது. இதையடுத்து அவருக்கு ரூ. 71,848 கோடி வரி விதிக்கப்பட்டது. என்ன நடந்ததோ, இந்த வழக்கு இப்போது குழிதோண்டிப் புதைக்கப்பட்டுவிட்டது. விவரங்களைக் கேட்டு சுவிஸ் அரசுக்கு எழுதப்பட்ட கோரிக்கை வேண்டுமென்றே தவறாக எழுதப்பட்டது. அதனால், தேவையான விவரங்கள் கிடைக்கவில்லை.

    உண்மையில் ஆளும் கட்சியைச் சேர்ந்த பலர் ஹசன் அலிக்கு நெருக்கமானவர்களாக இருப்பதே இந்த வழக்கு மூடப்பட்டதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஹசன் அலியை விசாரித்தால் இன்னும் எத்தனையோ பேரை விசாரிக்க வேண்டுமே!ஒரு குடும்பமும், அவர்கள் சுருட்டிக் கொண்டுபோய் வெளிநாட்டு வங்கியில் வைத்திருக்கும் பணமும்தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வருவதைத் தடுக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

    இப்படிப் பல ஆயிரம் கோடி பணத்துக்குச் சொந்தக்காரர்கள், வெறும் ரூ. 3.63 கோடி வைத்திருப்பதாகவும், கார்கூட இல்லை எனவும் தேர்தல் உறுதிமொழிப் பத்திரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். ஒருவேளை இத்தாலியர்கள் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வித்தையைக் கற்றுத் தேர்ந்தவர்களோ என்னவோ? இந்தியாவில் ஊழல் அதிகரித்து வருவதாகச் சோனியா வருத்தப்படுகிறார்; ஊழல்வாதிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ராகுல் கோபப்படுகிறார். ஆமென்!

    – நன்றி: தினமணி

  22. கலை
    வரமுதலே ஒரு வால் வலுவாகஆடுகிறதே!
    வந்தபின்னால்?

Leave a Reply to Libertarian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க