privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!

கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!

-

கிரிக்கெட்: பாக்கிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!

தேர்தல் காலத்தில் கிரிக்கெட்டையும் கொஞ்சம் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் இந்து மதத்தை விட பெரிய மதம் கிரிக்கெட். ஆனாலும் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த கிரிக்கெட் பரபரப்பு இப்போது குறைந்திருக்கிறது. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை போட்டி, கோப்பை என்று மக்களுக்கு சலித்துப் போகுமளவு ஏராளமான ஆட்டங்கள். 20 ட்வெண்டி வந்ததும் அதன் பரிமாணம் நிறையவே மாறியிருக்கிறது. இரசிகனை பொறுத்த வரை முன்னர் போல நுணுக்கங்களை அணுஅணுவாய் இரசிக்கும் தேவை இப்போது இருப்பதில்லை. ஆறு, நாலு என பரபரவென்று அவன் கூச்சலிடுகிறான்.

சரி, ஒழிந்து போகட்டும் என்றால் கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகள் அந்த விளையாட்டை ஏதோ மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை இருக்கிறதே அதைத்தான் தாங்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியுடனான கால் இறுதி ஆட்டத்தில் இந்திய தேசிய கீதம் ஒலித்த போது பலர் அலுவலகங்கள், வீட்டில் எழுந்து நின்றார்களாம். ஒரு அலுவலகத்தில் ஒரு தோழர் எழுந்து நிற்கவில்லை என்று அவரை குமுறி எடுத்துவிட்டார்களாம். கிரிக்கெட் எப்படி தேசபக்தியின் அடையாளமாக மாற முடியும்?

உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்காக பாக், இந்தியா இரண்டிலும் விளம்பரங்கள் மூலம் தேசபக்தியை உலுப்பிவிடும் பெப்சி தேச எல்லையைத் தாண்டி கல்லாக் கட்டுகிறது. இரசிகன் மட்டும் வாயில் பெப்சியை உறிஞ்சிக் கொண்டு பாரத் மாதாகி – பாக் மாதாகி ஜெய் என்று அலறுகிறான். அதிலும் இந்தியா –  பாக் போட்டி என்றால் ஊடகங்களெல்லாம் சிலிர்த்துக் கொண்டு தேசபக்தியை கிளறி விடுகின்றன.

இப்போது கொஞ்சம் பரவாயில்லை.முன்பெல்லாம் பாக் கிரிக்கெட் அணியை  வெறி பிடித்தவர்கள் போல சித்தரித்து எழுதுவார்கள். நிறைய போட்டிகளில் பாக் அணியே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 33 ஆண்டுகளாக இந்திய பாக் அணிகள் 119 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. இதில் முடிவில்லாத 4 போட்டிகளைத் தவிர பாக் அணி 69-லும்,இந்திய அணி 46-லும் வென்றுள்ளன. விளையாட்டு என்றால் வெற்றி தோல்வி சகஜம் என்று போனால் பிரச்சினை அல்ல. அதை ஒரு மானப்பிரச்சினை போல இவர்கள் சித்தரிக்கிறார்கள்.

1986-ஆம் ஆண்டு ஷெர்ஜாவில் நடந்த போட்டியில் கடைசி பந்தில் 4 ரன் அடித்தால் வெற்றி என்ற நிர்ப்பந்தத்தில் பாக் அணி இருக்கிறது. சேதன் சர்மா போட்ட புல்டாசை ஜாவித் மியான்தத் சிக்சருக்கு அனுப்ப இந்திய ரசிகர்கள் அதை எண்ணி எண்ணி பல மாதங்கள் தூங்கவே இல்லை. இப்படி நிறைய முறை பாக் அணி இந்திய ரசிகர்களை தூங்க விடாமல் செய்திருக்கிறது.

காஷ்மீர் பிரச்சினையை வைத்து இருநாட்டு ஆளும் வர்க்கங்களும் உள்நாட்டு மக்கள் பிரச்சினைகளை திசை திருப்பும் வண்ணம் இந்த தேசபக்தி வெறியை அவ்வப்போது கிளப்பி விடும். இன்னொரு புறம் ஆயுதங்களை போட்டி போட்டு வாங்கும். இந்தியா அணுகுண்டு வெடித்தால் பாக்கும் வெடிக்கும். இப்படி இந்த போலி தேசபக்தியால் இருநாட்டு மக்களும் இழந்த செல்வத்தின் மதிப்பு எத்தனை இருக்கும்? ஆயுதங்களுக்கும், இராணுவத்திற்கும் ஒதுக்கும் தொகையை மக்கள் நலனுக்கு ஒதுக்கியிருந்தால் இரண்டு நாட்டு ஏழைகளுக்கும் ஓரளவாவது கதிமோட்சம் கிடைத்திருக்குமே?

எனினும் இந்த தேசபக்தி வியாபரத்தில் முதன்மைக் குற்றவாளி இந்தியாதான். காஷ்மீர் மக்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொன்று குவிப்பதும், அது இயல்பாகவே பாக்கிஸ்தானில் ஒரு இந்திய வெறுப்பை தோற்றுவிக்கவும் காரணமாக இருக்கிறது. பாக் ஆளும் வர்க்கம் இதை வைத்து அரசியல் ஆதாயம் அடைகிறது. இரண்டையும் முற்ற வைத்து ஆயுதங்களை விற்பனை செய்து கல்லா கட்டும் அமெரிக்கா எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறது. அமெரிக்க நலனுக்காக பாக்கில் உருவாக்கப்பட்ட தீவிரவாதிகள் பின்பு பல காரணங்களால் முரண்பட்டு இன்று சுயேச்சையாக செயல்படுகிறார்கள். இந்தியாவில் இவர்கள் நடத்திய குண்டுவெடிப்பை விட பாக்கில் நடத்திய வெடிப்புகளும், கொலைகளும் அதிகம். அன்றாடம் ஏதாவது ஒரு பாக் நகரில், மசூதியில் குண்டு வெடிப்பது தொடர்கதையாகி வருகிறது.

காஷ்மீரில் தேச விடுதலை இயக்கங்களை மதவெறி மூலம் மாற்றியமைத்த பெருமை இந்தியா, பாக் இரண்டு நாடுகளுக்கும் சேரும். அதன் விளைவை இப்போது இருவரும் அனுபவிக்கிறார்கள்.

இந்த பின்னணியில்தான் கிரிக்கெட் போட்டிகளையும் கார்கில் போர் போல மாற்றுகிறார்கள். கிரிக்கெட் போட்டியில் பாக் வெற்றி பெற்றால் இந்திய முசுலீம்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள் என்ற அவதூறை இன்றும் இந்து முன்னணி செய்து வருகிறது. முசுலீம் மக்கள் அனைவரும் பாக்கிஸ்தானின் நலனுக்காக வாழ்பவர்கள் போன்ற சித்திரத்தை உருவாக்கி அவர்களை இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதுதான் இந்துமதவெறியர்களின் நோக்கம்.

இந்தியாவில் இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட் இசுலாம் மக்கள் எத்தனை ஆயிரம் பேர்? இதில் எந்த வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கபடவில்லை எனும்போது ஒரு அப்பாவி முசுலீம் இளைஞன் இயல்பாகவே பாக் கிரிக்கெட் வெற்றியை ஆதரிப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி நடப்பதில்லை. ஏதோ விதியை நொந்து கொண்டு இந்தியாவில் கிட்டத்தட்ட அகதிகளாகத்தான் வாழ்கிறார்கள்.

அகமதாபாத்தில் நடந்த கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதும் பரிசுகளை வழங்கியவர் மோடி. முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் சூத்திரதாரி இந்திய அணிக்கு பரிசளிக்கிறான் என்றால் அதை பார்ப்பதற்கு விகாரமாக இல்லையா? அந்த மைதானத்தில் இந்திய வெற்றிக்காக கூச்சல் போட்ட நடுத்தர வர்க்கம்தான் பங்குச் சந்தையில் அதிக அளவு பங்குகளை வாங்குவதோடு குஜராத் கலவரம் நடந்த போது அதை வேடிக்கை பார்த்தும் ஆதரித்தது. மோடிக்கு இணையாக முகேஷ் அம்பானியும் போட்டியை குடும்பத்துடன் கண்டு களித்தார். ஆக எல்லாரும் ஒன்றாகத்தான் இணைந்திருக்கிறார்கள்.

கிரிக்கெட் - பாகிஸ்தான் வெற்றிபெற வாழ்த்துவோம்

கிரிக்கெட்டிற்கும் தேசபக்திக்கும் என்ன சம்பந்தம்? இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடைகளை பன்னாட்டு நிறுவனங்களின் முத்திரைதானே அலங்கரிக்கின்றது? போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்யும் பெப்சி, சோனி, ஹோண்டா போன்ற நிறுவனங்களெல்லாம் உலகமெங்கும் தொழில் செய்கின்றன. இவர்களின் தயவில் இந்தியாவின் தேசபக்தி எப்படி? இந்தியா ஒரு போட்டியில் வென்றதும் மகிழ்ச்சியில் கூட இரண்டு புரோட்டாவையும், பீயரையும் முழுங்குவதுதான் தேசபக்தியின் விளைவுகள். தேசபக்தி இவ்வளவு சுலபமானது என்றால் டாஸமாக்தான் இந்தியாவின் மிகப்பெரிய தேசபக்தி நிறுவனமாக இருக்கும்.

ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் வீட்டில் பாரதமாதா படத்திற்கு பூஜை செய்வதை தேசபக்தி என்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் “கமான் இந்தியா” என்று கூவுவதை தேசபக்தி என்கிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட்டை இளைஞர்களின் மதமாக மாற்றி நுகர்வு கலாச்சார சந்தையில் சக்கை போடு போடும் நிறுவனங்களை அம்பலப்படுத்த, தேசபக்தி போதையில் மூழ்கியிருக்கும் தருணம் பார்த்து இவர்கள் உங்களது சட்டைப்பையிலிருக்கும் பணத்தை திருடும் வழிப்பறிக்கொள்ளயை தடுத்து நிறுத்த வேண்டுமென்றால் நாம் பாக் அணியை ஆதரித்தே ஆக வேண்டும்.

தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குஜராத்தில் முசுலீம் மக்கள் வேட்டையாடப்பட்டது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இதற்கெல்லாம் ஏதாவது சிறு துரும்பையாவது செய்தீர்களென்றால் அது தேசபக்தி எனலாம். அப்படி எதுவும் செய்யாமல் டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இதுதான் தேசத்துரோகம்.

பாக்கிஸ்தான் நமது அண்டை நாடு மட்டுமல்ல நமது ரத்தமும் கூட. பாக்கிஸ்தான் மக்கள் நமது சகோதரர்கள். நம்மிடமிருந்து அந்தநாடு பிரிந்ததற்கு ஆங்கிலேயர்கள், காங்கிரசு மற்றும் இந்துமதவெறி கும்பல்தான் முதன்மையான காரணம். இன்று இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏழை நாடாக வாழ வேண்டிய அவல நிலையில் இருப்பவர்கள். அமெரிக்காவுடன் கூடிக் குலவும் பாக் ஆளும் வர்க்கத்தால் சொந்தநாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளோடு செத்துப் பிழைக்கும் துர்பாக்கியவாதிகள்.

பாக் கிரிக்கெட் அணியையே எடுத்துக் கொள்ளுங்கள். இலங்கை அணியோடு நடந்த டெஸ்ட் போட்டியில் தீவிரவாதிகள் தாக்கிய பிறகு எந்த அணியும் அங்கே செல்வதில்லை. இந்த உலகப் போட்டியும் கூட அங்கு நடக்க வேண்டியது, ரத்து செய்யப்பட்டது. பாக் கிரிக்கெட் வாரியத்திற்கு கூட ஏதோ கொஞ்சம் நட்ட ஈடு கொடுத்து வாயை அடைத்தார்கள். மற்ற அணி வீரர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும்போது அவர்களுக்கு அந்த வாய்ப்புகள் இல்லை. எளிதாக மேட்ச் பிக்சிங் புரோக்கர்கள் கைகளில் விழுகின்றனர்.  மேட்ச் பிக்சிங் விவகாரத்தில் இந்தியா உட்பட மற்ற நாட்டு அணிகளது யோக்கியர்களும் அடக்கம் என்றாலும் பாக் அணிதான் இதில் மிகவும் கெட்ட பெயரை சம்பாதித்திருக்கிறது. தற்போது கூட பாக் உள்துறை அமைச்சர் பாக் அணி வீரர்களை நேரடியாகவே மேட்ச் பிக்சிங் குறித்து மிரட்டியிருக்கிறார். அவர்களது ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது என்று எச்சரித்திருக்கிறார். இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு அடிமைகளைப் போல ஆடவேண்டிய நிலைமையில் அந்த அணி இருக்கிறது.

இந்தியா பாக் இரண்டு நாடுகளின் மேட்டுக்குடி சூதாடிகள் மொகலியில் நடைபெற இருக்கும் ஆட்டத்தை வைத்து பத்தாயிரம் கோடிக்கு சூதாடப் போவதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அப்பாவி இரசிகர்களோ தமது நாடு வெல்லப் போவதை எண்ணி காத்திருக்கிறார்கள். விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இப்படி ஒரு போலி தேசபக்தி சண்டைக்கு என்ன அவசியம் இருக்கிறது?

தற்போது மவுனமோகன்சிங் அழைப்பின் பேரில் பாக் பிரதமர் கிலானி வர இருக்கிறார். இதை கண்டித்து எழுதும் பால்தாக்கரே அப்படியே “கசாப், அப்சல் குருவுக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அழையுங்கள்” என்று கேலி செய்கிறார். முன்னர் போல ஆடுகளத்தை சேதம் செய்யும் பலம் இன்று சிவசேனாவிற்கு இல்லை என்றாலும் இந்துமதவெறியரின் மனப்போக்கிற்கு இதுதான் எடுத்துக்காட்டு. பாக்குடன் எந்த உடன்பாடும் காணாதபடி இருப்பதையே இவர்கள் விரும்புவார்கள். இவர்களது திமிருக்காக இருநாட்டின் ஏழை குடும்பங்களிலிருந்தும் இராணுவத்திற்கு சென்று வாழும் சிப்பாய்கள் மட்டும் சுட்டுக் கொண்டு சாகவேண்டும். ஆர்.எஸ்.எஸ் அம்பிகளோ பூட்டிய அறைக்குள் பாதுகாப்பாக நின்று பாரத்மாதாகி ஜெய் என்று முழங்குவார்கள்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடந்த கால்பந்து போட்டியில் ஈரான் வென்றதை அந்நாட்டு மக்கள் அரசியல் வெற்றி போல கொண்டாடியதை கூட ஆதரிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும். ஆனால் இரண்டு பரதேசி நாடுகள், ஏழைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் இப்படி மோதிக் கொள்வதையும், விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் எப்படி ஆதரிக்க முடியும்?

எனவே இந்த போலி தேசவெறியை தோலுரிக்கும் வண்ணம் நாம் பாக் அணியை ஆதரிக்க வேண்டும். இந்திய-பாக் மக்களின் ஒற்றுமை மூலமே இந்தியா பாக் ஆயுத போட்டியை நாம் தட்டிக்கேட்க முடியும். உடனே சில தேசபக்த குஞ்சுகள் கசாபை அனுப்பிய நாட்டிற்கா நமது ஆதரவு என்று வெடிப்பார்கள். சரி சம்ஜூத்தா எக்ஸ்பிரசுக்கு சங்க பரிவாரங்களை அனுப்பியது மட்டும் என்னவாம்? அதில் கொல்லப்பட்ட பாக்கின் அப்பாவி மக்களது உயிர் மட்டும் மலிவானதா?

பொதுவில் கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு. மனித உடலின் அதீத சாத்தியங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் அங்கே இடமில்லை. கால்பந்து, ஹாக்கி போல மனதுக்கும், உடலுக்கும் வேலை கொடுத்து ஆற்றுப்படுத்தும் சக்தி அதற்கில்லை. வீரர்கள் பெரும்பான்மை நேரங்களில் அசையாமல் இருப்பதுதான் கிரிக்கெட்டின் பண்பு. அதனால்தான் அதுஆங்கிலேய ‘துரை’களின் மத்தியில் பிரபலமாக இருந்தது. இந்தியாவில்கூட பெரும்பான்மை ஆதிக்க சாதிகளை சார்ந்தோரே  கிரிக்கெட்டில் நுழைந்து பெரிய ஆளாகும் வாய்ப்பை இன்றும் பெறுகிறார்கள்.  இந்திய அணியின் பலவீனமாகக் கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவுக்கும் இது முக்கிய காரணம். மற்ற அணிகள் மூன்று வருடத்துக்கு ஒரு அதிவேக பந்து வீச்சாளர்களை தயார் செய்துவிடும் போது இங்கே முப்பது வருடத்துக்கு ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் வருவது பெரிய பாடாக இருக்கிறது. மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். பார்ப்பனிய ‘மேல்’சாதியினர் பிடியில் இந்திய கிரிக்கெட் இருக்கும் போது இது இப்போதைக்கு சாத்தியமில்லை.  அந்த வகையில் ‘மேல்’சாதி இந்திய அணிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் பாக் அணியைத்தான் ஆதரிக்க வேண்டும். வட இந்தியாவில் இருப்பது போன்ற இந்து தேசிய வெறி தமிழகத்தில் இல்லை. இதன் பாதிப்பில்தான் சென்னையில் இந்திய அணிதோற்றாலும் வெற்றிபெற்ற அணியை இரசிகர்கள் எழுந்து நின்றுபாராட்டுவார்கள் என்பது உலகறிந்த செய்தி. என்ன இருந்தாலும் பெரியார் பிறந்த மண் அல்லவா?

வெல்லட்டும் பாக் கிரிக்கெட் அணி ! ஒழியட்டும் போலி இந்திய தேசபக்தி !!

_________________________________________
– இரவிசங்கர்
_________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

  1. கிரிக்கெட் : பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம் ! | வினவு!…

    இந்தியா – பாக் போட்டி என்றால் ஊடகங்களெல்லாம் சிலிர்த்துக் கொண்டு தேசபக்தியை கிளறி விடுகின்றன. கிரிக்கெட்டை வைத்து கல்லா கட்டும் முதலாளிகளும் அதை மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை தாங்க முடியவில்லை….

  2. Mikavum muttalthanamana katturai. Pakistan’s punjabi jats are controlling every aspect of life. There is a big class struggle even in Pakistan. Most of the bombings are due to Sunni-Shia rivalry. You have no clue about the reality there. Chennai crowd is appreciative of good cricket but they are very patriotic as well. E V R has no connection to cricket. Things have changed in the last 10 years. If a pakistani scores well in Chennai today, they won’t get the kind of support they got before.

    • ஆதித்யன்,

      பாக்கில் வர்க்கப்போராட்டம் நடப்பதை ஒத்துக் கொள்ளும் நீங்கள் இந்தியாவில் நடக்கும் வர்க்கப் போராட்டம் பற்றி என்ன கருதுகிறீர்கள்? இருநாட்டிலும் இருக்கும் மக்கள் இந்த போலி தேசவெறியிலிருந்து வருவதுதானே நல்லது. இதில் பாக்கை மட்டும் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? சென்னையிலும் வட இந்திய இந்து தேசபக்தி உருவாகி வருகிறது என்றால் அது போற்றுதலுக்குரியது அல்லவே?

  3. வந்துட்டாரய்யா புது பெரியாரு! அன்று பழைய பெரியார், ராவணன் படம் ஒட்டினார்! மாடர்ன் பெரியார், பாகிஸ்தான் படத்தை சூப்பரா ஓட்டுகிறார்!

    என்னே ஒரு உயர்ந்த எண்ணம்! இந்த தேசத்தவன் நாசமா போக வேண்டுமென்று!

    தமிழக கிரிக்கெட் ரசிகர்களையே, மாற்றத் துணிந்த பெரியாரின் தாக்கம், தமிழக அரசியல்வாதிகளிடம், செல்லாக்காசாகிப் போனதேனோ?

    தமிழக மக்கள், கிரிக்கெட் மட்டுமல்லாது, இலங்கை தமிழகர்களைக் குறித்தும்,அதே பாவனையில் தான் உள்ளனர்! யார் ஜெயித்தால் என்ன, என்று!

    • ராமி
      கட்டுரையை படித்துவிட்டு பின்னூட்டம் போடலாமே? இந்த தேசம் அதாவது மக்கள் முன்னேற வேண்டும் என்பதைத்தான் கட்டுரை சொல்கிறது. நீங்கள் கிரிக்கெட்டை வைத்து அதை மதிப்பீடு செய்கீறீர்கள் என்றால் அதுதான் பிரச்சினைக்குரியது, கண்டனத்திற்குரியது.

  4. தேசப் பத்தை, ரொம்ப கலாய்க்கிறீங்கண்ணா! நம்மளோடது என்ன பத்துங்கண்ணோவ்! தெளிவா சொல்லிப் போடுங்கோ!

    • ராமி, உங்கள் கேள்விக்கு பதில் கட்டுரையிலேயே இருக்கிறது.

      //தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. காஷ்மீரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது, குஜராத்தில் முசுலீம் மக்கள் வேட்டையாடப்பட்டது, தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவது, விவசாயிகள் தற்கொலை இதற்கெல்லாம் ஏதாவது சிறு துரும்பையாவது செய்தீர்களென்றால் அது தேசபக்தி எனலாம். அப்படி எதுவும் செய்யாமல் டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா?//

      • பல்வேறு சந்தர்ப்பங்களில், உமது தளத்தில்.இந்திய தேச நாட்டுப் பற்று என்பதை, கேவலமான ஒன்று என்பதாகவும், கடைபிடிக்க கூடாதது என்பதாகவும் சித்தரித்து வருகின்றீர்! உமக்கு வேண்டுமெனில், இந்த தேசத்தில், யாராலேயோ நடைபெறும், சில நிகழ்வுகளின் காரணமாக, வெறுப்பு இருக்கலாம்! அது உன்னுடைய உரிமை! ஆனால், அவற்றை சுட்டிக் காட்டி, அனைவரையும், வெறியூட்டி, வெறுப்பேற்றும் உமது செயல் கண்டிக்கத் தக்கதே!

      • உம்முடைய என்று திருத்தி வாசிக்கவும்! தட்டும் போது ஏற்பட்ட பிழை! வருந்துகிறேன்!

        • ஒரு விசயம் தப்புன்னா அதற்கெதிராக எல்லோரையும் ஒன்று திரட்டுறது தானே ரம்மி சரி ?

      • ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி
        I do not understand. can VINAVU explain this please.

  5. These fellows will celebrate even india is captured by pak.. and the people of india is been slaved by them… this is the training and mental moulding done in the name of religion. I personnally know the people in tamilnadu celebrate pakistan victory against india. Moreover somebody attacked the boys who celebrated the victory of india against pakistan…

    What ever VINAVU says as a social wellwisher, His color may be shown in the theme.

    • ஜான் ஜோசப்

      இந்திய மக்களை பாக் பிடித்துத்தான் அடிமையாக்க வேண்டும் என்று புல்லரிப்பதற்கு முன் யதார்த்தத்தை பார்க்கலாமே? தமிழக மீனவர்கள், மரத்வாடா விவசாயிகள், தண்டகாரன்யா பழங்குடியினர், வடகிழக்கு மக்கள், காஷ்மீர் மக்கள் எல்லாரும் உங்க இந்திய அரசினாலே அகதியாக அடிமைகளாக ஆக்கப்பட்டவர்கள். இதெல்லாம் அடிமைத்தனமில்லை, கிரிக்கெட்டில் பாக் வெற்றி பெறுவதுதான் நமக்கு அடிமைத்தனம் என்றால் இதுதான் ஆண்டைகளின் பார்வை.

  6. In india Modi offers the momentom… if the match played in pak some musharaf… gilaani…. sardhaari will do the same… what is the difference between those alll activities.. We can make awareness to the people who don understand really… but we cant those who act like not understand.

    • எனில் மோடி தலைமையில் ஆர்.எஸ்.எஸ் செய்த கொலைக்கு தண்டனை இல்லை. இதுதான் இந்தியாவின் ஜனநாயகமா?

      • புரட்சி,ஒழுக்கம்,வர்க்கவாதம் பற்றி பேசும், நியாயவான்கள், பீஹாரில் மாவோக்கள், பள்ளிக்கு வெடி வைத்ததை, எப்படி நியாயப்படுத்தப் போகிறீர்கள் என்பதை அறிய, ஆவலுடன் இருக்கிறேன்!

        • மாவோயிஸ்டுகள் வைத்தால் அதை அவர்களிடம் போய் கேளுங்கள் மா.க.இ.க விடம் ஏன் கேட்கிறீர்கள் ? அவர்கள் செய்யும் அனைத்திற்கும் இவர்களைப் பொறுப்பாக்குவது எப்படி சரி ?

          மேலும் குண்டு வைத்தவன் மாவோயிஸ்டா இல்லை ப.சிதம்பரமா ?

        • பீஹார், ஒரிஸ்ஸா போன்ற மாநிலங்களில் கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன. ஆனால் நம்ம ஊர் போல பள்ளிக்கூடங்களாக மட்டும் இவை இருப்பதில்லை. கம்பிக் கிரில் போட்ட ஜன்னல்கள், தாக்குதலை தாக்குப்பிடிக்க வசதியான மறைப்புகள் போன்றவை இருக்கும். ஏன்?
          இந்திய அரசின் எல்லையோரக் காவல் படை தங்களது ரோந்துப் பணிகளிலும், காவல் பணிகளிலும் ஈடுபட நேரும் போது கிராமங்களில் கூடாரமடித்து தங்க வேண்டியதில்லை. நேராக பள்ளிக்கூடங்களில் போய் தங்கி்க் கொள்வார்கள். அப்போதெல்லாம் பசங்களுக்கு லீவ் விட்ருவாங்க.
          இவர்கள் போய் கிராமத்தின் மையத்திலிருக்கும் ஸ்கூலில் தங்கினால் பிரச்சனை ஏற்படுவது மாவோயிஸ்ட்டுகளுக்கு அல்ல. கிராம மக்களுக்கு.
          கிராம மக்களின் உணவுப் பொருட்கள், கால்நடைகள் ராணுவத்தினருக்கு விருந்தாகும். பல சமயங்களில் கிராமப் பெண்கள் விருந்தாவார்கள்.
          மாவோயிஸ்ட்டுகள் எங்கே என்று கேட்டு சித்ரவைத மற்றும் கொலைகளையும் செய்வார்கள் ராணுவத்தினர்; அப்படிச் செய்கிறார்கள் ராணுவத்தினர். ஏனென்றால் ராணுவத்தினர் யாரை வேண்டுமானாலும் சந்தேகப்படலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

          இந்த ராணுவத்தினரை தாக்கவேண்டும் என்றால் பள்ளிக் கூடங்கள் மேல் தான் தாக்குதல் தொடுக்கப்பட வேண்டும். பள்ளிகள் தாக்கப்படும். குண்டு வெடித்துச் சேதமாகும். ஆனால் பத்திரிக்கையில் இந்தக் கடைசி வரியை மட்டுமே நீங்கள் படித்து ரத்தம் கொதித்து மாவோயிஸ்ட்டுகள்=கொலைகாரமிருகங்கள் என்று கற்பனை செய்துகொள்வீர்கள். அவ்வளவுதான்.

        • அம்பேத்தன்,

          தண்டகாரன்யாவில், இதுவரை மாவோயிஸ்டுகள் என்ன சாதித்துள்ளனர் என்று அலசும் கட்டுரை இது : (EPW என்னும் மிக மதிக்கப்ப்டும் இடதுசாரி இதழில் வந்த ஆய்வு) :

          Arms Over the People: What Have the Maoists Achieved in Dandakaranya?

          https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B-zhDOdupGDUODlhMzZlMWItMDgzYS00MzJhLWFkOTItOTk2M2RhMDU3YjE2&hl=en

          முழுசா படித்துவிட்டு பிறகு மாவோயிஸ்டுகளின் அறம் பற்றி முழங்குக.

        • அம்பேத்தன்,

          ////ஆனால் நம்ம ஊர் போல பள்ளிக்கூடங்களாக மட்டும் இவை இருப்பதில்லை. கம்பிக் கிரில் போட்ட ஜன்னல்கள், தாக்குதலை தாக்குப்பிடிக்க வசதியான மறைப்புகள் போன்றவை இருக்கும். ஏன்?
          இந்திய அரசின் எல்லையோரக் காவல் படை தங்களது ரோந்துப் பணிகளிலும், காவல் பணிகளிலும் ஈடுபட நேரும் போது கிராமங்களில் கூடாரமடித்து தங்க வேண்டியதில்லை. நேராக பள்ளிக்கூடங்களில் போய் தங்கி்க் கொள்வார்கள். அப்போதெல்லாம் பசங்களுக்கு லீவ் விட்ருவாங்க.
          இவர்கள் போய் கிராமத்தின் மையத்திலிருக்கும் ஸ்கூலில் தங்கினால் பிரச்சனை ஏற்படுவது மாவோயிஸ்ட்டுகளுக்கு அல்ல. கிராம மக்களுக்கு.////

          அதுக்காக அந்த பள்ளி கட்டிடங்களை குண்டு வைத்து தகர்ப்பதை நியாயப்படுத்த முடியுமா ? நீங்கள் நியாயப்படுத்துகிறீர்கள். ரயில் பாதைகள். மின் கம்பங்கள், செல் போன் டவர்களையும் இதே பொல் ஒரு ‘காரணம்’ காட்டி அழிப்பது மடைமை மற்றும் மக்கள் விரோத செயல். மாவோயிஸ்டுகள் பள்ளிகளை அழிப்பதை பழங்குடி மக்கள் ஆதரிக்கிறார்களலா அல்லது எதிர்க்கிறார்களா என்று விசாரித்து பார்க்கவும். இங்கு உக்காந்து கொண்டு எப்படி வேண்டுமானாலும் கதை பேசலாம். விடுதலை புலிகளின் ஃபாசித்திற்க்கி நிகரான ஃபாசிம் தான் மாவோயிஸ்டுகளின் ‘போர் முறைகள்’ ; ஒப்பிட்டு பார்க்கவும். எதிரியை அழிக்க அதே பாணி ஃபாசி அணுகுமுறை. அதனால் தான் வெற்றி பெற முடியாமல், மானிட அழிவிற்க்கு வகை செய்கிறார்கள்.

  7. “ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் வீட்டில் பாரதமாதா படத்திற்கு பூஜை செய்வதை தேசபக்தி என்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் மைதானத்தில் “கமான் இந்தியா” என்று கூவுவதை தேசபக்தி என்கிறார்கள்”.

    “தேசம் என்பது அங்கு வாழும் மக்களை குறிக்கும். அந்த மக்களது வாழ்க்கை நலனுக்காக செய்யும் நடவடிக்கைகளே தேசபக்தியோடு தொடர்புடையவை. …….. டி.வியை பார்த்து ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி, பின்னர் உருளை சிப்சை விழுங்கி, பெப்சியை அருந்திக் கொண்டு டெண்டுல்கர் பாடில் ஸ்வீப் அடிப்பதை சிலாகித்தால் அது தேசபக்தியா? இல்லை இதுதான் தேசத்துரோகம்.”

    வெற்றுச் சவடால் அடிக்கும் நடுத்தர மேட்டுக்குடி தேசபக்த அம்பிகளுக்கு இது ஒரு சவுக்கடி.

    “பொதுவில் கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு. மனித உடலின் அதீத சாத்தியங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் அங்கே இடமில்லை. கால்பந்து, ஹாக்கி போல மனதுக்கும், உடலுக்கும் வேலை கொடுத்து ஆற்றுப்படுத்தும் சக்தி அதற்கில்லை”.

    விளையாட்டை இரசனைக்கானதாக மாற்றிவிட்டார்கள். கிரிக்கெட்தான் அதற்கு வழிவகுத்தது. அதனால்தான் உடல் நலத்தைப் பேணுவதில் மற்ற விளையாட்டுகளைவிட மிகவும் கீழ் நிலையில் உள்ள கிரிக்கெட் இன்று இரசனையில் முன்னிலை வகிக்கிறது. இந்த இரசனைப்போக்கு மிகவும் ஆபத்தானது.

    ”விளையாட்டு இரசனைக்கானதா?” http://hooraan.blogspot.com/2010/10/blog-post.html என்ற தலைப்பில் எனது வலைப்பூவில் நான் எழுதிய முதல் கட்டுரையை இந்கே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
    நன்றி!

  8. Well analized… , but myopic article. Do you have any example for a minority persion become PM,CM,President or minister in developing countries..?. Basically a hindu become a secularist , because of that a muslim able to get President,minister and chief justice status. Do you have any idea about, Recently a Pakistani muslim MLA seek asylum status to India?.

    • இந்தியாவில் இருக்கும் முசுலீம் மக்களின் பிரதிநிதித்தவத்திற்கும் அரச பதவிகளில் அவர்கள் இருப்பதற்கும் பாரிய ஏற்றத்தாழ்வு உண்டு. பிரதமர், இராணுவம், புலனாய்வுத் துறை போன்ற அதிகாரம் உள்ள துறைகளில் முசுலீம்கள் இதுவரை வந்தது கிடையாது. மற்றபடி அப்துல்கலாமையெல்லாம் ஒரு காமடி ஷோவுக்காக கொண்டு வந்தார்கள்.

      • In this modern era, there are ‘n’ number of ways to gain knowledge, to gather news… But VINAVU could not get anything and even it does not try to find a way to increase their knowledge. That is why still VINAVU gives news like this…

      • இந்திய முசுலிம் பாதி பெர் நாட்டுக்கு எதிரா தான் இருக்கான் அதெல்லாம் உலகத்துக்கெ தெரியும் — உனக்கு என்னடா தெரியும்,இன்டியநாடுக்கு எதிரா எவன் துரொகம் செய்தாலும் அவன் தலய எடுத்துருவொம்

  9. இந்த லட்சணத்தில் இந்த போட்டிக்கு தீவிரவாத பீதி வேறு ஊட்டுகின்றன ஆளும் வர்க்கங்கள். போட்டி நடக்கும் மைதானத்தை சுற்றி ஆளில்லா கண்காணிப்பு ஹெலிகாப்ட்டர் பறக்குமாம். அவ்வளவு பயம் உள்ளவன் எதுக்கு போட்டி நடத்தனும்? மக்கள் அனைவரையும் இளிச்ச வாயன் ஆக்கி கல்லா கட்டுகிறார்கள். எனக்கு தெரிந்து உலகில் மிக நூதன திருட்டு இது தான்.

    • //போட்டி நடக்கும் மைதானத்தை சுற்றி ஆளில்லா கண்காணிப்பு ஹெலிகாப்ட்டர் பறக்குமாம். அவ்வளவு பயம் உள்ளவன் எதுக்கு போட்டி நடத்தனும்?//

      முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பையு பலப்படுத்துவது பயமில்ல… அப்பாவி ரசிகர்களை பாதுகாக்க. ஏதாவது அசம்பாவும் நடந்தால் பின்பு பாதுகாப்பையும், அதிகாரிகளையும் கூறை கூறுவீர்கள்.

  10. ஊடகங்கள் மாமா ன்னு சொன்ன வினவும் மாமாவாக ஆனதில் ஆச்சர்யமில்லை.

    • இனி கொஞ்ச நாள் கழிச்சு அத தான் செய்யப்போறோம். அதுக்கும் ஒரு அழகான காரணம் வைப்போம்.

  11. பொதுவில் கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு. மனித உடலின் அதீத சாத்தியங்களுக்கும், கொண்டாட்டத்திற்கும் அங்கே இடமில்லை. கால்பந்து, ஹாக்கி போல மனதுக்கும், உடலுக்கும் வேலை கொடுத்து ஆற்றுப்படுத்தும் சக்தி அதற்கில்லை. வீரர்கள் பெரும்பான்மை நேரங்களில் அசையாமல் இருப்பதுதான் கிரிக்கெட்டின் பண்பு.//

    அதே..

    இதை ஏன் இத்தனை பிரபலப்படுத்தணும்.?

    அதுக்குள்ளதான் எத்தனை அரசியல் , மேட்ச் பிக்சிங், விளம்பரம்.?

    கிராமப்புறந்திலிருந்து கஞ்சிக்கே வழியில்லாமல் விளையாட்டில் தங்கம் பெறும் எத்தனையோ பெண்ணும் , ஆணும் ஊக்கமில்லாமல் , சில பெண்கள் பாலியல் மிரட்டலோடு பயந்து வெளியேறுவதையும் காண்கையில் கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எரிச்சலூட்டத்தான் செய்கிறது..

    🙁

    • மாட்டுக்கறி தின்பவர்கள் உடல்ரீதியான வேலைகளை மட்டுமே நன்றாக செய்யமுடியும் என்று சொல்லும் அம்பி இரவிசங்கரை வினவு காய்ச்சி எடுக்கவேண்டும் என்பது எனது அவா. எவ்வளவு ஒரு மேலாதிக்க சிந்தனை பாருங்க. வினவு போன்ற ஒரு போராளி குழுவில் இப்படிப்பட்ட ஒரு நபர் இருப்பது பிரச்சனை இல்லை. அவரை மாற்றாமல் இருக்கும் போராளிகளின் மீது தான் வருத்தம் மேலிடுகிறது.

      • //மட்டுமே நன்றாக செய்யமுடியும்//

        உங்க மூளைக்கு அப்புடியா புரியுது!

      • மணிகண்டன் உங்களுக்கு தேசபக்தி இருக்கு போலிருக்கே ?
        அதை என்னென்ன முறையில் எல்லாம் வெளிக்காட்டுவீர்கள்
        என்று கொஞ்சம் சொல்ல முடியுமா ? நான் எப்படின்னு
        உங்களை வைச்சி கொஞ்சம் உரசிப்பார்த்துக்கலாம்னு தான்..

      • வாங்க மணிகண்டன், பாத்து ரொம்ப நாளாச்சு,

        இந்த கட்டுரை உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நேரடியாகவே கூறலாமே? உடலுழைப்புக்கு மாட்டுக்கறி அவசியம் என்பதையே கட்டுரை கூறுகிறது. மாட்டுக்கறி தின்பவர்களை இழிந்த சாதியாக பார்ப்பது பார்ப்பனியத்தின் மரபு. ஹரியாணாவில் செத்த மாட்டின் தோலை உரித்தார்கள் என்று ஐந்து தலித்துகளை ‘மேல்’ சாதி இந்துக்களால் கொடூரமாக கொல்லப்பட்டார்கள். இந்த சேதியாவது தெரியுமா? மற்றபடி மாட்டுக்கறி என்பது அடிப்படையாக மனிதனின் வளர்ச்சிக்கும், செயல்பாட்டிற்கும் தேவையான ஒன்று. இதில் மூளை உழைப்புக்கு மாட்டுக்கறி தேவையில்லை என்று கட்டுரை சொல்லாத ஒன்றை நீங்கள் கஷ்டப்பட்டு கண்டுபிடித்திருப்பது, எதன் பொருட்டோ தெரியவில்லை. எனினும் புதிய கலாச்சாரம் மாடு குறித்து சிறப்பிதழ் ஒன்றை சில வருடங்கள் முன்பு வெளியிட்டிருந்தது. உங்களுக்காகவே அதனை வினவில் விரைவில் வெளியிடுகிறோம்.

        • வினவு, நான் இதை எழுதாமல் போயிருந்தால் அந்த சிறப்பதழை வெளியிடாமல் இருந்திருப்பீர்கள் 🙂 சோ, நல்லது தானே !

        • பாத்தீங்களா மக்களே… மணிகண்டனார் 2011ல் கேட்ட கேள்விக்கு பயந்துட்டு ம.க.இ.க 2005லேயே சிறப்பிதழ் கொண்டாந்துருக்காங்க.

          ஏன்னா… மணிகண்டனார் அப்பேர்பட்ட டெரர்ர்ர்ர்ரு

      • நீ யாருப்பா அத சொல்றதுக்கு? உங்க அப்பன் வீட்டு சொத்தா? ரொம்ப உணர்ச்சி வசப்படுற!

        • ஆமாங்க சார் இந்திய எங்கப்பா வீட்டு சொத்து தான் … வேனும்ம்னா நீயும் ஓடிரு பாகிஸ்தானுக்கே

        • ஜால்ரா சார்! நான் சொல்றேன், இந்திய எங்க அப்பன் வீடு சொத்து. நீ வேணும்னா நேபாளத்துக்கு போயிடேன்.

        • ஜால்ரா! நானும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியா ஜெயிக்குறது சந்தோசம் தான். ஆனா அதுக்கு பேரு தேசபக்தி இல்லன்னு சொல்றேன்.

        • கிரிக்கெட் பக்தர்களே, தேசபக்தியென்பது கிரிக்கெட்டில் இல்லை – அது மக்கள் நலத்தை நாடுவதிலும் அதற்காக உழைப்பதிலும் இருக்கிறது.
          நன்றி நண்பர் மன்னாரு!

        • RAJA:ஜால்ரா! நானும் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இந்தியா ஜெயிக்குறது சந்தோசம் தான். ஆனா அதுக்கு பேரு தேசபக்தி இல்லன்னு சொல்றேன்.

          INDIA JEYCHADHUKKU APRAM VERA ENNA SOLLA MUDIYUM??????????????????????

  12. 500 ரூ டிக்கெட் இப்போ 8000க்கு கிடைக்குது. ஊரே ஜன்னி வந்தமாதிரி பிதற்றல்:(

    மொஹாலிப்பக்கம் போலீஸைக் குவிச்சாச்சு. எல்லா வேடிக்கையையும் நேரில் பார்த்துக்கிட்டு இருக்கேன்.

  13. கிரிக்கெட் மக்களை சுரண்டுது என்பதி உண்மை,
    மொத்த கிரிக்கடே ஒழிக்க பட வேண்டியது…
    இதில் இந்தியா பாக்கிஸ்தான் பேதம் எல்லாம் இல்லை.

  14. நீங்கள் சொல்வது அத்தனையும் சரியே. கிரிக்கெட் என்னும் மயக்கம் ஒழிக்க படவேண்டியது தான். பிற விளையாட்டுக்கள் இந்தியாவில் சவக்குழியில் கிடக்க இதுவே காரணம். கிரிகெட்டின் வருமானம் ஒரு போதும் ஏழைக்கு ஒரு வேளை சோறு போட்டதில்லை. இதில் இந்தியா பாக் பேதமே இல்லை. இளையசமுதாயத்தின் சக்தியை கிரிகெட்டின் பெயரில் திசை திருப்பபடுகிறது.

    ஆனால் ஒட்டு மொத்த கிரிக்கெட் அரசியலும் ஒழிக்கபடவேண்டியது என்று சொல்லி “கிரிகெட்டை புறக்கணியுங்கள்” என்று சொல்லி இருந்தால் இன்னும் சந்தோசபட்டுருப்பேன்.

    அதை விடுத்து பாக் அணி வெல்ல வேண்டும் என்ற வாதத்தில் எனக்கு உடன்பாடில்லை. எதிர்ப்பது எந்த அணியாக இருந்தாலும் , எந்த விளையாட்டு என்றாலும், இந்திய அணியில் ஆயிரத்தெட்டு அரசியல் இருந்தாலும் அது வெல்ல வேண்டும் என்பதே ஒரு இந்தியனாக எனது ஆசை.

    • மீனாட்சி நாச்சியார்,

      விளையாட்டில் யார் வென்றாலும் அதை ஆதரிப்பதுதானே முறை? ஏனெனில் விளையாட்டு என்பது விளையாடித்தானே வெல்லப்படவேண்டும். நீங்கள் இந்தியா வெல்ல வேண்டும் என்று ஆசைப்படலாம். ஆனால் உங்கள் ஆசை களத்தில் நிறைவேறவில்லை என்றால் என்ன செய்வீர்கள்? பலர் அதை வைத்து பாக்கின் மீது கோபம் கொள்கிறார்கள். கால் இறுதியில் ரிக்கிபாண்டிங் சதமடித்த பிறகு குஜராத் ரசிகர்கள் அதை கைதட்டி வரவேற்கவில்லை என்போடு ஊளையிட்டு கேலி செய்தார்கள். இதை நேற்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஒருவர் கூறினார். இது என்ன மனநிலை?

      டெண்டுல்கர் சதமடிக்க வேண்டும் என்று விரும்பலாம். ஆனால் அது நடக்காமல் அப்ரிடி சதமடித்தால் அதை பாராட்டுவதுதானே நாகரீகம்?

      • இதே மொஹாலில நடக்காம பெஷாவர்ல நடந்திருந்தா உன் பதிவு “இந்தியா வெற்றி பெற வாழ்த்துவோம்”ன்னு இருக்கவா போவுது ?

  15. +1
    கிரிக்கெட் மோகத்தை ஒழிக்க இந்தியா கிரிக்கெட்டில் தோற்பது தான் நாட்டுக்கு நல்லது. பள்ளிக் கூட பொதுத் தேர்வுகளையும் பொருட்படுத்தாது பன்னாட்டு கம்பெனிகளின் விற்பனை வளர்ச்சிகாக இந்தியா மைதானமாக்கப்பட்டுள்ளது

    உங்கள் பெரும்பாலன கருத்துகளுடன் உடன்படுகிறேன்

    • ஒரு தருதலைக்கு இன்னொரு தருதலை உடன்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

      • /*ஒரு தருதலைக்கு இன்னொரு தருதலை உடன்படுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.*/

        இந்த வரி உங்களுக்கும் பொருந்தும் திரு மொக்கச்சாமி!!!!!!!!!!!!!!

  16. […] வினவு சொல்வது அத்தனையும் சரியே. கிரிக்கெட் என்னும் மயக்கம் ஒழிக்க படவேண்டியது தான். பிற விளையாட்டுக்கள் இந்தியாவில் சவக்குழியில் கிடக்க இதுவே காரணம். கிரிகெட்டின் வருமானம் ஒரு போதும் ஏழைக்கு ஒரு வேளை சோறு போட்டதில்லை. இதில் இந்தியா பாக் பேதமே இல்லை. இளையசமுதாயத்தின் சக்தி கிரிகெட்டின் பெயரில் திசை திருப்பபடுகிறது. […]

  17. […] வினவு சொல்வது 95% சரியே. கிரிக்கெட் என்னும் மயக்கம் ஒழிக்க பட வேண்டும். பிற விளையாட்டுக்கள் இந்தியாவில் சவக்குழியில் கிடக்க இதுவே காரணம். கிரிகெட்டின் வருமானம் ஒரு போதும் ஏழைக்கு ஒரு வேளை சோறு போட்டதில்லை. இதில் இந்தியா பாக் பேதமே இல்லை. இளையசமுதாயத்தின் சக்தி கிரிகெட்டின் பெயரில் திசை திருப்பபடுகிறது. […]

  18. மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். பார்ப்பனிய ‘மேல்’சாதியினர் பிடியில் இந்திய கிரிக்கெட் இருக்கும் போது இது இப்போதைக்கு சாத்தியமில்லை- Comedy pannatheengana……

  19. It is the fundamental right of individual fans to watch cricket at whatever cost they deem fit.
    Anyone is free to watch cricket, spend money on it or in any other way like watching Endhiran, etc. The corporates utilise this passion for cricket by sponsoring and marketing. Perfectly legal and right thing to do, as long as there is nothing in black like match fixing or sleeze and corruption like in IPL or CW games contracts. Baseball and football matches and teams have long been ‘commercialisied’ in the west and no big deal about it.

    No one can or should order the people what to do or what not to do. that is dictatorship. you cannot force people into reading vinavu and its publications only. ok.

    Personally, i don’t care for cricket. but that is my personal choice, but i respect the choice of my fellow citizens. our motto : “Give me liberty or death” : and a famous book which is my bible : ‘Free to Choose’ http://en.wikipedia.org/wiki/Free_to_Choose

  20. கிரி அது காமெடி அல்ல. இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் உருவாகாமல் இருப்பதற்கு இதுவே முக்கியமான காரணம். அப்படியே வந்தாலும் அவர்களுக்கு நாளடைவில் தோள்பட்டை தேய்ந்து ஓய்வு பெறுவர்.

  21. rammy அவர்களுக்கு கிரிக்கெட்டில் இந்திய தோற்கும் என்றால் இந்தியா நாசமா போகுமாம். ஆனால் தமிழக மக்களின் இலங்கை தமிழர்கள் குறித்த நிலை மட்டும் வேதனை தரவில்லையாம்?

    • சகா சர்வன்,

      பெரியார் காரணமல்ல! தமிழர்கள் கிரிக்கெடையும், இலங்கைப் பிரச்சனையையும் ஒன்று போலவே, உணர்ச்சியற்று பாவிக்கிறார்கள், என்பதே எனது கருத்து!

  22. //மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். பார்ப்பனிய ‘மேல்’சாதியினர் பிடியில் இந்திய கிரிக்கெட் இருக்கும் போது இது இப்போதைக்கு சாத்தியமில்லை.//

    இதெல்லாம் ஓவருங்கண்னா. பார்பனர் மாமிசம் சாப்பிடமாட்டார்கள் என்று யார் சொன்னது. வாஜ்பாய் கூட அசைவம் சாப்பிடுபவர் தான்

    • வாஜ்பாய் பார்ப்பானரா “பாய்” இல்லையா ? என்ன கொடுமை…வாஜ்பாய்ன்னு பெயரில் பாய் வைத்து ஏமாத்துறான் பாருங்க…பார்ப்பானச் சதிகாரங்க.

  23. எது எப்படியோ வெள்ளைக்காரன் கண்டு பிடித்த கிரிக்கெட் இன்று ஆசிய நாடுகளில் தான் போதை பொருள் போல மாறியிருக்கிறது. உண்மையில் இதில் விளயடுபவரகளும் அதை நடதுவரகளும் இலச்சக்கனக்கில் சம்பாதிப்பார்கள் பாவம் அதை பல மணி நேரம் உண்ணாமல் உறங்காமல் பார்பவரக்க்கு என்னதான் கிடைக்க போகுது இதில வேற நாட்டு பற்று ம்ம்ம்ம்ம்ம்ம்

  24. இந்த உலக கோப்பையுடன் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விடலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.மேட்டுக்குடியினர் விரித்த வலையில் சிக்கிய மீனாக இதுவரை இருந்தது போதும். இதனால் கிடைக்கப் பெற்றது சில மகிழ்ச்சி யாக இருந்தாலும்
    இழந்தது நிறைய.இந்த உலக கோப்பையால் நான் பெற்ற படிப்பினை இதுவே…

  25. /வெல்லட்டும் பாக் கிரிக்கெட் அணி ! ஒழியட்டும் போலி இந்திய தேசபக்தி !! //

    பதிவில் உள்ள கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியது என்றாலும் சில வரிகளை சிலர் ஏற்கும் நிலையில் இல்லை. அந்த சிலருக்காக இதுப்போன்ற பதிவுகளை தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கலாம் அவர்கள் பாசிட்டிவ் ஓட்டு போடும்வரை.

    நண்பர் ஒருவர் மேலே குறிப்பிட்டதுப்போல் இந்தபதிவை யாரேனும் ஆங்கிலம் அல்லது இந்தியில் மொழிப்பெயர்த்து வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

  26. இதே பதிவு இந்தியிலோ ஆங்கிலத்திலோ வெளியாகி வட இந்திய பதிவர்கள் படித்திருந்தால் ஏற்பட்டிருக்கும் ‘விளைவை’ விட தமிழ் வாசகர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் விளைவு கொஞ்சம் பரவாயில்லை தான். இங்கே கிரிக்கெட் பக்தியை இந்திய தேசபக்தி போல ஏற்றிப் பேசும் நண்பர்கள் காமெடி பீசுகளைப் போல் காட்சியளிப்பதே அதற்கான உதாரணம். பாரத மாதா தமிழ்நாட்டில் சரியாக செல்ப் எடுக்காமல் திணறுவது கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது. 😉

    கிரிக்கெட் பக்தர்களே, தேசபக்தியென்பது கிரிக்கெட்டில் இல்லை – அது மக்கள் நலத்தை நாடுவதிலும் அதற்காக உழைப்பதிலும் இருக்கிறது.

    • . தமிழனுக்கு சுயமரியாதையே செல்ப் எடுக்காம பிச்சைக்காரனா எலவசம்ன்னு அலையிரான்…இதுல பாரத மாதா தமிழ்நாட்டில் எங்க போய் செல்ப் எடுக்குறது?

  27. இது இந்திய அணி இல்லை. BCCIயின் அணி.

    Asian Gamesக்கு கிரிக்கெட் அணியை அனுப்ப முடியாது என்று நாட்டுப்பற்றை பறை சாற்றிய குழுதான் BCCI.

  28. இந்தபதிவை யாரேனும் ஆங்கிலம் அல்லது இந்தியில் மொழிப்பெயர்த்து வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    • இந்த பதிவு மட்டுமில்லை. வினவில் வரும் பல பதிவுகளும் வெறும் தமிழ்நாட்டுடன் நின்று விடுகிறதே என்று மிகவும் வருத்தம் அடைபவன் நான். ஆனாலும் எனக்கு மொழிபெயர்க்கும் அளவுக்கு திறமை இல்லாதது கடுப்பாக இருக்கிறது.

      • வயிறு எரியும் போது காற்று பிரியும் என்று மட்டும் தான் நினைத்திருந்தேன்.. மணிக்கு என்னென்னவோ ஆவுது.

        • முன்முடிவுகளோடு யாரையும் எதிர்க்க வேண்டாம். கருத்தில்லாத வெறும் வசையில் ஒரு நன்மையும் இல்லை.

  29. இதிலே கூட பார்பனர்களை நுழைக்கனுமா? சைக்கிள் கேப் கிடைத்தால் கூட விட மாட்டீர்களே?

  30. 1992இல் ஆஸ்தரேலியாவில் நடந்த உலக கோப்பை கிரிகெட்டில் வெற்றி பெற்ற போது… அந்த அணி தலைவர் இம்ரான்கான்… அந்த கோப்பை பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் அடங்கிய துணை கண்டதிற்கு சொந்தம் என பெரும்தன்மையோடு சொன்னதை நினைவு கூர்வோம்…

    ஹிந்திய கிரிகெட் அணி என்பது பார்ப்பன அணியாகவே இருக்கும்… பார்ப்பன பொறுக்கிகளிடம் எந்த நாகரீகமான பெருந்தன்மையையும் எதிர்பார்க்க முடியாது… பார்ப்பனர் அல்லாத கபில்தேவ் தலைமையிலான அணிதான் 1983இல் சையத் கிர்மானி, ரோஜர் பின்னி போன்றவர்களின் துணையோடு கோப்பையை வென்றது…

    பாசிச வெறி பிடித்த இந்திய அணி தோல்வி அடைய வேண்டும் என்பதும்… நம் சகோதரர்களான பாகிஸ்தான் வெற்றி பெறவும் வாழ்த்துவோம்…

    • பார்ப்பனர், அமர்நாத், ஸ்ரீகாந்தெல்லாம் வெஸ்ட் இண்டீசுக்கா விளையாண்டாங்க.

    • ஏன்டா பேரிக்கா மண்டையா , ஸ்ரீகாந்த் ஐயர்று தாண்டா…எதெதுக்கு பார்பனன இழுக்கறதுன்னு வெவஸ்தையே இல்லாம போச்சு

    • looseஆ பா நீ?
      ஒனக்கு ரெண்டு வரலைனா கூட பார்பனர் தான் காரணம்னு சொல்லுவ போல?
      மருந்து அதிகமானால் விஷம்.
      வேறு detailed statisticsகுள் போக விரும்பவில்லை.

  31. உங்கள் சில கருத்துகளுடன் உடன்பட முடியவில்லை … இந்திய அணியை ஆதரிப்பது போலி தேசவெறி இல்லை .

    கிரிக்கெட் போட்டி இந்தளவுக்கு இந்திய மக்களால் விரும்பட காரணம் ஊடங்கள் மற்றும் அரசியல்வாதிகள் தான் காரணம் . கிரிக்கெட் போட்டி இந்திய மக்களின் மன உழைச்சாலுக்கு சிறிது ஆறுதலாக இருப்பது உண்மை வீணாப்போன குதிரைரேஸ்,சீட்டாட்டம், சீரியல்களை விட இது பரவாயில்லை.

    எல்லாவற்றிலும் பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் அரசியல்வியாதிகள், கிரிக்கெட் போட்டியில் மட்டும் இந்திய மக்களின் ஒற்றுமையை கண்டு பயப்படுகிறார்கள்.(அதனால் தான் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை உருவாக்கினார்கள் ).

    //இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் உடைகளை பன்னாட்டு நிறுவனங்களின் முத்திரைதானே அலங்கரிக்கின்றது?//

    போட்டிகளுக்கு இந்திய நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்ய வேண்டாம் என்ற எந்த கட்டுப்படும் இல்லை. பன்னாட்டு நிறுவனங்கள் போல் கொள்ளையடித்த பணம் இருந்தால் விரும்பினால் வினவும் ஸ்பான்சர் செய்யலாம்.

    //விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் இப்படி ஒரு போலி தேசபக்தி சண்டைக்கு என்ன அவசியம் இருக்கிறது?//

    உண்மைதான். விளையாட்டை யுத்தமாக பார்க்ககூடாது . யார் போராடி வெற்றி பெற்றாலும் நல்ல பொழுதுபோக்காக நினைத்து அனுபவிக்க வேண்டும்.

    //தற்போது மவுனமோகன்சிங் அழைப்பின் பேரில் பாக் பிரதமர் கிலானி வர இருக்கிறார். இதை கண்டித்து எழுதும் பால்தாக்கரே அப்படியே “கசாப், அப்சல் குருவுக்கும் டிக்கெட் எடுத்துக் கொடுத்து அழையுங்கள்” என்று கேலி செய்கிறார். //

    கடந்த காலங்களில் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விசா வழங்கிய போது அவர்களுடன் சில தீவிரவாதிகளும் கலந்து வந்து திரும்ப போகவில்லை என்பது வரலாற்று உண்மை.

    //கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு//
    மற்ற விளையாட்டுகளை விட இது சோம்பேறித்தனமான தான்.

    //இந்திய அணியின் பலவீனமாகக் கருதப்படும் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவுக்கும் இது முக்கிய காரணம். மற்ற அணிகள் மூன்று வருடத்துக்கு ஒரு அதிவேக பந்து வீச்சாளர்களை தயார் செய்துவிடும் போது இங்கே முப்பது வருடத்துக்கு ஒரு நட்சத்திர ஆட்டக்காரர் வருவது பெரிய பாடாக இருக்கிறது.//
    இதற்கு இந்திய தேர்வு குழுவினர்ரின் ஊழல்கள் தான் காரணம்.

    //மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். //

    செம காமடி!!!! ஹா…ஹா…..ஹா…..

    • விளையாட்டு ரசிகன்,

      நேற்று என்.டி.டி.வியில் நடைபெற்ற விவாதத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளை ஒரு தோழர் தெரிவித்தார்.

      2004இல் பாக்கில் நடந்த போட்டிக்கு இந்தியாவிலிருந்து 20,000 ரசிகர்கள் சென்றிருந்தார்கள். இங்கு வரும் பாக் ரசிகர்களை மைதானத்தில் தனியாக அமரவைக்கிறார்கள். காரணம் கேட்டால் பாதுகாப்பு என்கிறார்கள். அதாவது இந்திய ரசிகர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு. பாக்கில் அப்படி ஒரு பிரிவினை இல்லையாம். இந்திய ரசிகர்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். பாக்கிஸ்தான் மக்கள் பலர் இந்திய ரசிகர்களிடனே ஆர்வத்துடன் ஆட்டோகிராப் வாங்கினார்களாம். அந்த போட்டியில் இந்தியாதான் வென்றது. எனினும் முழு மைதானமும் பாக் ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்களாம். இதைக்கண்ட வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன் அங்கு சென்ற 20,000 ரசிகர்களும் பாக்கின் நல்லெண்ண தூதர்களாக இந்தியா திரும்புவார்கள் என்றாராம்.

      இதெல்லாம் வட இந்தியாவில் சாத்தியமா? ஏன்?

      • மற்ற நாடுகள் பாகிஸ்தானில் போய் ஆடவே மாட்டோம் என்று கூறி அங்கு நடக்க இருந்த உலகக் கோப்பை போட்டிகளையெல்லாம் ரத்து செய்த பிறகும் தன்மானத்தை விட்டு, பாகிஸ்தான் அணியினர் இந்தியாவுக்கு வந்து ஆடுகிறார்கள் என்றால், அவர்களது நிலைமை எவ்வளவு கேவலமானது .
        இந்த லட்சணத்தில் பாகிஸ்தான் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்காணித்து வருவதாகக் கூறி பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் அவர்களை அவமானப்படுத்தியிருக்கிறார். அவர்களுக்கே அவர்கள் பற்றி நன்கு தெரியும். பாகிஸ்தான் isi விளையாட்டிலும் கூட என்னென்ன அரசியல், பொருளாதார ஆதாயம் தேடும் சதி செய்யலாம் என்றுதான் நினைக்கும்.

  32. கிராமத்திற்குச் சென்றிருந்தபோது சிறிது நேரம் கிரிக்கெட்டை பார்க்க நேர்ந்தது. அவர்கள் பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் ஃபீல்டிங்கிலும் காட்டிய வேகத்தைப் பார்த்தால் பிரமிப்பூட்டுவதாயிருந்தது. அவர்களுக்கு மட்டும் ஓரளவு பயிற்ச்சி கொடுத்துவிட்டால், நமது ஆஸ்தான இந்திய டீம் ஒருமுறை கூட அவர்களை ஜெயித்துவிட வாய்ப்பேயில்லை. இவர்கள் ஆடுவது தனது நாட்டுக்காவவோ, தனது கிராமத்துக்காகவோ அல்ல. அந்த விளையாட்டில் அவர்கள் லயிக்கிறார்கள். அவ்வளவுதான்.

    இரவெல்லம் போதையில் பெண்களுடன் கூடி கும்மளமிட்டுவிட்டு, பகலில் நாட்டுக்காக ஆடுகிறேன் என்று முட்டி செத்த முடங்களெல்லாம் நம் இந்திய டீமில் இருக்கின்றன. அல்லது கை நீட்டி காசு வாங்கிவிட்டு சும்மணாங்காட்டியும் ஆடுகிற கில்லாடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். யாரும் உண்மையில் நாட்டுப்பற்றுடன் ஆடுவதில்லை. அரசியல்வாதிகளின் அல்லது ராஜபரம்பரை வாரிசுகளின் நிழல்கள்தாம் இன்றைய கிரிக்கெட் டீமில் இருக்கிறார்கள். யாரும் குக்கிரமங்களிலிருந்தோ, படிக்காத, உண்மையிலேயே கிரிக்கெட் விளையாடத் தெரிந்த இளைஞர்கள் இங்கு தேர்ந்தெடுக்கப்படுவதேயில்லை. எந்தத் தகுதியில் வீரர்களை கிரிக்கெட் வாரியம் தேர்ந்தெடுக்கிறது என்பது புரியாத புதிர்.

    இரண்டாவர்தாக பெப்சி – கோக்கு விளம்பரப் படங்களுக்கு தேவையான கவர்ச்சிகரமான முகவெட்டு இருக்கவேண்டும். நுனி நாக்கு ஆங்கிலம் வேண்டும். இவை யாவும் கிராமத்தானுக்கு பொருந்துவதில்லை.

    மிக முக்கியமான தகுதி : ‘தேவடியாப்பையா’, ‘சொறி நாய்’ போன்ற அறுவருக்கத்தக்க காது கூசும் வார்த்தைகளை வெள்ளைக்காரன் நம் இந்தியாவிலிருந்து கொண்டே திட்டினாலும் அதை இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விடவேண்டும். சுரணையென்பதே கூடாது. ஒரு உதாரணத்துக்கு ஒரு தமிழகத்து கிராமத்து விளையாட்டு வீரர் இந்திய டீமில் இருந்து, இந்த வசவுகளைக் கேட்க நேர்ந்தால், வெள்ளைக்காரனின் தவடை கோணிக்கொண்டு போக நேரிடும்.

    மொத்தத்தில் சூடு சுரணையற்ற விளையாட்டு. மற்ற விளையாட்டுக்களை குழிதோண்டிப் புதைக்கின்ற விளையாட்டு. தேசிய விளையாட்டாகிய ஹாக்கி வீரர்கள் தங்களது சம்பளத்தைக்கூட போராடி வாங்கவேண்டிய சூழ்னிலையில் தள்ளப்பட்டு விட்டார்கள். காரணம் கிரிக்கெட்டு.

    உடனடியாக இந்தியாவில் தடை செய்ய்யப்படவேண்டிய விளையாட்டு இது…!

    • //உடனடியாக இந்தியாவில் தடை செய்ய்யப்படவேண்டிய விளையாட்டு இது…!///

      this is called fascism. then why not ban Vinavu and Ma.Ka.i.Ka too ? as many consider these
      as ‘evil’ !!! each one is entitled to his / her opinion and interests. ‘banning’ or controlling is the
      road to fasicism.

      • //each one is entitled to his / her opinion and interests. ‘banning’ or controlling is the
        road to fasicism.//
        Mr…, ‘Banning’ is my opinion and my interest. If it leads to the road to fascism, I would like to say you are the real facist, because you ‘re dumping your ideas to accept others…

        • தயவு செஞ்சு தமிழ் ல கம்மென்ட் எழுது…உனக்கு தான் இங்கிலீஷ் வரலல…..

        • புதிய பாமரன்,

          இப்பவே ஃபாசிஸ்ட் மாதிரி தான் பேசறீக. உம்ம கைல அதிகாரம் கிடைச்சா என்ன செய்வீக ? கிரக்ட்டை தடை செய்ய வேண்டும் என்பது உம் கருத்து. கோடிக்கணக்கான மக்கள் இதை மறுக்கிறார்கள். அவர்களிடன் கேட்டால், உம்மையும், கம்யூனிஸ்டுகளையும் ‘தடை’ செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். அப்ப எது சரி ? இரண்டும் தவறு. மனித உரிமைகளை மீறுவது என்பதே எம் கோணம். யாரையும். எதையும் ‘தடை’ செய்வது தான் ஃபாசிசம். புரிந்து கொள்ள முயல்க. நீர் இன்னும் இன்னாட்டின் சர்வாதிகாரி ஆகவில்லை என்பதையும் புரிந்து கொள்க.

  33. //அகமதாபாத்தில் நடந்த கால் இறுதிப் போட்டியில் இந்திய அணி வென்றதும் பரிசுகளை வழங்கியவர் மோடி. முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையின் சூத்திரதாரி இந்திய அணிக்கு பரிசளிக்கிறான் என்றால் அதை பார்ப்பதற்கு விகாரமாக இல்லையா? அந்த மைதானத்தில் இந்திய வெற்றிக்காக கூச்சல் போட்ட நடுத்தர வர்க்கம்தான் பங்குச் சந்தையில் அதிக அளவு பங்குகளை வாங்குவதோடு குஜராத் கலவரம் நடந்த போது அதை வேடிக்கை பார்த்தும் ஆதரித்தது. மோடிக்கு இணையாக முகேஷ் அம்பானியும் போட்டியை குடும்பத்துடன் கண்டு களித்தார். ஆக எல்லாரும் ஒன்றாகத்தான் இணைந்திருக்கிறார்கள்.//

    உண்மை! உண்மை!!

    நியாயமான அலசல். உள்ளத்தின் குமுறல். அதை உணர்த்து கொள்ள உங்களைப்போன்றவர்கள் இருப்பது ஆறுதல்.

    நான் வெளி உலகத்திற்கு வரும்வரை இந்திய அணியின் தோல்வியை எனது தோல்வியாய் நினைத்து வருந்தி இருக்கிறேன். வெளி உலகம் தெரிந்த போது இரண்டாம் தர குடிமகனாய் உணர்ந்தேன். இத்தனைக்கும் என் முன்னோர்கள் சுதந்திரப் போராட்ட தியாகிகள். இப்போது அதை நான் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை.

  34. விளையாட்டு என்பதை விளையாட்டாக பார்க்க ரசிகர்களும் முன் வருவதில்லை ஊடகங்களும் விடுவதில்லை .ஒரு தொலைக்காட்சி செய்தியில் கூறுகிறார் நமது பரம எதிரியான பாகிஸ்தானுடன் வெற்றி பெறுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள் இறுதி போட்டியில் தோற்றலும் கவலை இல்லை என்று. இது போல் பரபரப்புக்கு மக்களை உசுப்பி விடும் கீழ் தரமான ஊடகங்கள் இருக்கும் வரை ஒரு சாதாரண விளையாட்டு போட்டி கூட பெரும் போர் ஆகத்தான் காண்பிக்கப்படும்.

  35. வினவு,

    உங்களது எழுத்து நடை அனைவரும் நம்பும் வண்ணம் உறுத்தும் வண்ணம் உள்ளது. வாழ்த்துக்கள்!!

    //வெல்லட்டும் பாக் கிரிக்கெட் அணி ! ஒழியட்டும் போலி இந்திய தேசபக்தி !!//

    இந்த வரி மூலம் இறுதியில் நீங்களும் கூட அந்த கூட்டத்தில் ஒருவர் என்று தான் உறுதி படுத்துள்ளீர்..

    இதற்கு நீங்கள் முழுதாக படித்தீர உமக்கு என்ன புரிந்தது என்ற வடிவான பதில் அளிக்க மாட்டீர் என்று நம்புகிறேன்..

  36. /2004இல் பாக்கில் நடந்த போட்டிக்கு இந்தியாவிலிருந்து 20,000 ரசிகர்கள் சென்றிருந்தார்கள். இங்கு வரும் பாக் ரசிகர்களை மைதானத்தில் தனியாக அமரவைக்கிறார்கள். காரணம் கேட்டால் பாதுகாப்பு என்கிறார்கள். அதாவது இந்திய ரசிகர்களிடமிருந்து காப்பாற்றுவதற்கு. பாக்கில் அப்படி ஒரு பிரிவினை இல்லையாம். இந்திய ரசிகர்கள் எங்கு வேண்டுமானாலும் அமரலாம். பாக்கிஸ்தான் மக்கள் பலர் இந்திய ரசிகர்களிடனே ஆர்வத்துடன் ஆட்டோகிராப் வாங்கினார்களாம். அந்த போட்டியில் இந்தியாதான் வென்றது. எனினும் முழு மைதானமும் பாக் ரசிகர்களும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்களாம். இதைக்கண்ட வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கர் மேனன் அங்கு சென்ற 20,000 ரசிகர்களும் பாக்கின் நல்லெண்ண தூதர்களாக இந்தியா திரும்புவார்கள் என்றாராம். //

    அங்கு சென்ற 20,000 ரசிகர்களுக்கும் ராயல் சல்யூட்.

    இந்திய ரசிகர்கள் ஏற்படுத்திய நம்பிக்கை. பாகிஸ்த்தான் ரசிகர்களும் அதேப்போல் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
    இந்திய ரசிகர்கள் அங்கு சிறிய தவறு செய்தாலும் உயிரோடு வரமுடியாது ஆனால் இங்கு வெற்றிலை பாக்குடன் வழி அனுப்பி வைப்பார்கள் என்பது மறுக்கமுடியாத உண்மை .

    இங்கும் (சென்னையில்) இந்திய அணிதோற்றாலும் வெற்றிபெற்ற அணியை இரசிகர்கள் எழுந்து நின்று பாராட்டினார்கள் என்பது உலகறிந்த வரலாறு .

  37. பதிவு போடுறதே அதுக்கு தானே. இல்லேன்னா எங்க மண்டை வெடிச்சிடும்ல.

  38. மிக நல்ல கட்டுரை. இது இந்தியாவைப் பழிக்க வில்லை. போலித்தனமான தேசிய வெறியை கண்டிக்கிறது. பெரும் வர்த்தக நலன்களும், சூதாட்டமும் கலந்து மேல் மத்திய தரவர்க்கத்தின் வருமானமான தொழிலாக இந்த விளையாட்டு மாற்றப்பட்டு விட்டது. 20 -20 விளையாட்டு அறிமுகமான பின்னர் கிரிக்கெட்டின் மவுசு குறைந்து வந்த நிலையில். நாளை நடைபெறும் இந்திய பாகிச்தான் மொகாலி போட்டியை சந்தைப்படுத்த மத்திய தர வர்க்க மன நிலையில் கிளர்ச்சியை உண்டாக்கி வெறியைக் கிளப்புகிறார்காள். யாகம் செய்கிறார்கள். என்னக் கேவலம். இது நில ஆக்ரமிப்புக்கு எதிராக போராடும் ஏழைகள் மீது குண்டாந்தடிகளைக் கொண்டு தாக்கும் அரசு. உள்ளூர் குடிகளைக் கொன்று விட்டு கிரிக்கெட் விளையாட்டுக்கு பால் ஊற்றுகிறது. நிச்சயம் இதே வெறி பாகிஸ்தானில் கிடையாது.

  39. In 29.Sep 2004 the senior advocate K.K.Venugopal appeared for BCCI before supreme court… He said for BCCI following golden lines….!… ”1.Sachin Tendulkar, Ganguly and Dravid play for BCCI not official team of India.”… 2.We do not even fly the national flag nor do we use any national emblem in the activity of the board…”. 3.India as a country was not represented at the ICC and that the BCCI uses its own flg… But the Govt. Of India recognise BCCI as the apex body in the field of cricket… So….. ,now ”thesapaktha kunjugale” answer on that….

  40. மேதாவி ரவிசங்கர் அவர்களே.!!!!!!
    கருத்துக்களை பதிவு செய்யுங்கள். அதோடு விடுங்கள்.
    அவர்களுக்கு கழுவும் வேலையை விட்டு விட்டு போய் பிள்ளை குட்டிகளை படிக்க வையுங்கள்.
    ஒட்டுமொத்த இந்தியாவையும்,இந்தியர்களையும் முட்டாள் என சொல்லும் ஒரு முட்டாளின் கட்டுரையை படிக்கும் அனைவரும் முட்டாள்கள் இல்லை.
    இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்கும் கூட்டத்தில் நீயும் ஒருவன் என்பது சொல்லி தெரிய வேண்டியது இல்லை.
    இது போன்ற விஷமதனமான கட்டுரைகள் எழுதி பிழைக்கும் உன்னை விட தன் உடலை விற்று பிழைப்பு நடத்தும் வேசி மேலானவள்.
    எரியும் வீட்டில் கொள்ளியை பிடுங்கும் கூட்டதிற்கு பின் நக்கித்திரியாதீர்கள். விளையாட்டு வணிகமாகிவிட்டது உண்மைதான்.அதற்காக தேச பக்தி மரத்து போகுமா என்ன.
    [obscured]

    • உன் பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் ஏழைக்கு ஒரு நாள் உணவு அளித்திருப்பாயா? இல்லை ஏழை மீனவன் சாவுக்கு குறைந்த பட்சம் வருத்தமாவது பட்டாயா? நீயெல்லாம் தேச பக்தி பேச வந்துட்ட!

    • ஒருத்தனுக்காவது சூடு சொரனை இருந்ததே. மிக்க மகிழ்ச்சி.

  41. வெல்லட்டும் பாக் கிரிக்கெட் அணி ! ஒழியட்டும் போலி இந்திய தேசபக்தி !!

  42. செழிப்பாக திகழ்ந்த இந்திய தாய் திரு நாட்டை, நிலத்தடி நீரை விஷமாக்கி, அம்மணமாக்கிய பெப்சி க்காக இந்த சூதாடி தேச துரோகிகள் அம்மணமாய் நிற்கிறார்கள்.

  43. பாக்கிஸ்தான் நமது அண்டை நாடு மட்டுமல்ல நமது ரத்தமும் கூட. பாக்கிஸ்தான் மக்கள் நமது சகோதரர்கள். நம்மிடமிருந்து அந்தநாடு பிரிந்ததற்கு ஆங்கிலேயர்கள், காங்கிரசு மற்றும் இந்துமதவெறி கும்பல்தான் முதன்மையான காரணம். இன்று இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏழை நாடாக வாழ வேண்டிய அவல நிலையில் இருப்பவர்கள் //

    இந்தியா பாகிஸ்தான் எல்லாமே வெள்ளைகாரனால் உருவாக்கப் பட்ட செயற்கையான நாடு தானே.
    இந்தியா என்ற நாடு முன்பே இருந்தது போல சொல்கிறார். தேசிய இனங்கள் பற்றி எந்த அறிவும் இல்லாமல் எழுதப்பட்டிருக்கிறதே? எப்படி இப்படி அரைகுறை கட்டுரைகளை பதிவேற்றுகிறீர்கள்?
    அரேபியனின் குருதியும் தமிழனின் குருதியும் எப்படி ஒன்றாகும்? அவர்கள் வறுமையில் வாடுவதற்கு இந்திய ஆளும் வர்க்கம் எப்படி காரணம் ஆவார்கள்? முழுக்க அறிவியலற்ற மத வழிப் பட்ட சிந்தனை. மற்ற மதத்தினர் அனைவரும் காபிர் என்ற “உயர்ந்த” எண்ணம் கொண்டு அவர்கள் மீது “புனிதப்” போர் புரிவது போன்றவை தானே காரணம்? இப்படி “புனிதப்” போருக்கு மட்டுமே நேரத்தை செலவழிக்கும் நாடு எப்படி முன்னேறும்? அதை விடுத்து முட்டாள் தனமாக எழுதாதீர்கள்.
    எனக்கும் போலி நாட்டுப் பற்றில் உடன்பாடு இல்லை

  44. புரட்சி – ம க இக வெற்றி பெற வாழ்த்துவோம் (நண்பர் திரு வினவின் தாமாஷு கட்டுரைக்கு வரிக்கு வரி உல்டா…)
    ——————————————————————————————————————————-

    தேர்தல் காலத்தில் புரட்சியையும் கவனிக்க வேண்டியிருக்கிறது. இந்தியாவில் சுண்டைக்கய்யவிட சின்ன காய் இந்த புரட்சிக்காய்!

    ஆனாலும் ஐந்து, பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த புரட்சி பரபரப்பு இப்போது குறைந்திருக்கிறது. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை புரட்சி, உண்மை ஜனநாயகம் என்று மக்களுக்கு சலித்துப் போகுமளவு ஏராளமான புரட்சிகள் . நேப்பாளில் இவங்க ஆளுங்க வந்ததும் அதன் பரிமாணம் நிறையவே மாறியிருக்கிறது. இந்தியர்களை பொறுத்த வரை முன்னர் போல இந்த வெற்று உளறல்களை அணுஅணுவாய் இரசிக்கும் தேவை இப்போது இருப்பதில்லை. வினவு கட்டுரை படிச்சாச்சு அதுவே போதும் இன்னைக்கு என பரபரவென்று அவன் கூச்சலிடுகிறான், சிரிப்புடன், சலிப்பில்லாமல்!!

    சரி, ஒழிந்து போகட்டும் என்றால் புரட்சியை வைத்து கல்லா கட்டும் முதலாளிகள் அந்த விளையாட்டை ஏதோ மாபெரும் தேசபக்த போர் போல சித்தரிக்கும் கொடுமை இருக்கிறதே அதைத்தான் தாங்க முடியவில்லை. தெருவோர ஆளில்லா கூட்டத்தில் இந்திய தேசியம் பற்றி திட் ஒலித்த போது பலர் அலுவலகங்கள், வீட்டில் இருந்தாலும் யாரும் கண்டு கொள்ளவில்லையாம் !!. ஒரு தோழர் எழுந்து அதைப்பற்றி சொன்னவுடன் அவரை குமுறி எடுத்துவிட்டார்களாம், எண்டா இந்திய மக்கள் பற்றி நல்லா பேசுறே என்று! புரட்சி எப்படி நல்லவர்களின் அடையாளமாக மாற முடியும்?

    உலகக் புரட்சி வரும் நாள் வெகுதூரத்தில் இல்லை, இந்தியா சீனாவிற்கு அடிமையாகும் என்று விளம்பரங்கள் மூலம் தேசபக்தியை மறக்கவைக்கும் உங்கள் கூட்டம், தேச எல்லையைத் தாண்டி வரும் பணத்தில் கல்லாக் கட்டுகிறது. இந்தியன் என்று சொல்ல கூசும் இந்தியர்களான நீங்கள் எல்லாம் மட்டும் வாயில் புரட்சியை உறிஞ்சிக் கொண்டு சீனா மாதாகி – மாவோ மாமா கி ஜெய் என்று அலறுகிறீர்கள். அதிலும் ஸ்டாலின் – மாவோ என்றால் உடலெல்லாம் சிலிர்த்துக் கொண்டு உங்களின் சீன மற்றும் ரஷ்ய தேசபக்தியை கிளறிவிட்டு கொள்ளுகின்றீர்கள்!!

    இப்போது கொஞ்சம் பரவாயில்லை.முன்பெல்லாம் கம்யூனிஸ்ட்டாக இல்லாத எல்லோரையும் வெறி பிடித்தவர்கள் போல சித்தரித்து எழுதுவீர்கள். அனால் கடந்த பல வருடங்களாக நிறைய மக்கள் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்டாக இல்லாதவர்களே வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 22 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் நாடுகள் என்னதான் தன மக்களை மோதினாலும் கடைசியில் கீழேதான் போனது!!. இதில் முடிவில்லாத 4 நாடுகளை தவிர, அதாவது, கியூபா, வாடா கொரியா, சீனா மற்றும் வியட்நாம். ஆனானப்பட்ட சோவியத் கும்பலை சாதாரண மக்களே வென்றுள்ளன. சரித்திரம் இப்படி இருக்க ஏதோ நாங்களும் காலத்த ஓட்டுறோம் என்று போனால் பிரச்சினை அல்ல. அதை ஒரு மானப்பிரச்சினை போல இவர்கள் எடுத்துக்கொண்டு புரட்சி நாளைக்கு வரும் புரட்சி அடுத்த வாரம் வரும் சித்தரிக்கிறார்கள்.

    1989-ஆம் ஆண்டு ருமானியா நாட்டில் நடந்த உண்மையான மக்கள் புரட்சியில் கடைசி தினங்களில் ஹெலிகாப்டரை பிடித்தால் எஸ்கேப்பு என்று நிக்கொலெய் சௌசெஸ்கூவின் நிலை இருந்தது! சோவியத்து ரஷ்யா காப்பாற்றும் என்று அவர் நம்பினார்! ஆனால் அவர்களோ சேதன் சர்மா போட்ட புல்டாசை ஜாவித் மியான்தத் சிக்சருக்கு அடித்ததுபோல, யாருங்க அவரு சௌசெஸ்கூ என்று ஒரே போடாய் போட்டதை சோவியத் வன்முறை ரசிகர்கள் எண்ணி எண்ணி பல மாதங்கள் தூங்கவே இல்லை. இப்படி நிறைய முறை புரட்சி கும்பல்கள் சிவப்பு ரசிகர்களை தூங்க விடாமல் செய்திருக்கிறது.

    யாரோ ஒரு மாவோவாம், அவரின் பிரச்சினையை வைத்து இருநாட்டு மக்களின் பிரச்சினைகளை திசை திருப்பும் வண்ணம் இந்த மாவோ வெறியை அவ்வப்போது கிளப்பி விடும். இன்னொரு புறம் ஆயுதங்களை போட்டி போட்டு வாங்கும். மாவோவிற்கு தலைவலி என்றால் இவர்களுக்கு தலை வெடிக்கும். இப்படி இந்த தேச திரோக செயல்களால் இந்நாட்டு மக்களுக்கு இவர்களின் மேல் எத்தனை கடுப்பு இருக்கும்? மாவோவிற்கும் ஸ்டாலின்நிற்கும் செலுத்தும் அன்பை நம் இந்திய மக்கள் மேல் செலுத்தியிருந்தால் உங்களுக்கு கொஞ்சமாவது நல்ல பெயர் கிடைத்திருக்குமே?

    பொதுவில் புரட்சி என்பதே மக்களை ஏமாற்றும் ஒரு விளையாட்டு. மனித அறிவின் அதீத சாத்தியங்களுக்கும், அன்பிற்கும் மனிதத்தன்மைக்கும் அங்கே இடமில்லை. நேர்மை, அஹிம்சை போல மனதுக்கும் மக்களுக்கும் உரம் கொடுத்து ஆற்றுப்படுத்தும் சக்தி அதற்கில்லை. புரட்சியாளர்கள் பெரும்பான்மை நேரங்களில் சும்மா அசையாமல் கூப்பாடுபோடுவதுதான் புரட்சியின் பண்பு. அதனால்தான் அது வேலை வெட்டி இல்லாதவர்கள், வேலை செய்யத்தெரியாதவர்கள் போன்றவர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது. இந்தியாவில்கூட பெரும்பான்மை உருப்படாமல் போனவர்களே நுழைந்து பெரிய ஆளாகும் வாய்ப்பை இந்த புரட்சி கூட்டங்களில் பெறுகிறார்கள். புரட்சி அணியின் பலவீனமாகக் கருதப்படும் நேர்மையான நல்லவர்கள் குறைவுக்கும் இது முக்கிய காரணம். மற்ற நாட்டு கும்பல்கள் மூன்று வருடத்துக்கு ஒரு தமாஷு புரட்சியாளர்களை தயார் செய்துவிடும் போது இங்கே முப்பது வருடத்துக்கு ஒரு சீனா அடிமைகூட தலைவராக வருவது பெரிய பாடாக இருக்கிறது. சீனாவை துதித்தால்தான் வேகமாக புரட்சி செய்யமுடியும். வெட்டி கும்பல் பிடியில் இந்திய புரட்சி இருக்கும் போது இது இப்போதைக்கு சாத்தியமில்லை. அந்த வகையில் புரட்சி கனவு காண்பவர் அனைவரும் சீனாவைதான் ஆதரிக்க வேண்டும். வட இந்தியாவில் இருப்பது போன்ற நான்கு மடங்கு சினிமா வெறி தமிழகத்தில் இருக்கு. இதன் பாதிப்பில்தான் சென்னையில் இவர்கள் எவ்வளவு சத்தம் போட்டாலும், டான்சு ஆடினாலும், ஷோக்கு காட்டினாலும், புரட்சி பீலா விட்டாலும் யாரும் எழுந்து நின்று பார்ப்பது கூட இல்லை என்பது உலகறிந்த செய்தி. என்ன இருந்தாலும் வினவு பிறந்த மண் அல்லவா?

    வெல்லட்டும் மகஇகாவின் புரட்சி! ஒழியட்டும் இந்தியா! !!

    • ஐயைய்யோ.. அது வருகிறது.. நம்மை நோக்கித் தான் ஓடி வருகிறது… ஒடுங்க ஓடுங்க… நோ கொலைவெறியோட துரத்தி வந்திட்டு இருக்காரு…

      யப்பா…. சாமீ தாங்கலடா மொக்கை. இந்த நோ அண்ணாச்சியோட பிரன்டுங்க ரொம்பப் பாவம். அதுல எத்தினி பேருக்கு காது கிழிஞ்சி போயிருக்கும்னு தெரியல. போடற மொக்கைய கொஞ்ச இன்ட்ரஸ்ட்டிங்காவாவது போடுங்கய்யா

      • டேய் வினவு போடற மொக்கைய விட இது நல்லா தான் இருக்கு … எபோவாவது நீ வினவு கட்டுரைய முழுசா படிசிருக்கயா..வந்துட்டாரு ஏறிகிட்டு

  45. /கிரிக்கெட்: பாகிஸ்தான் வெற்றி பெற வாழ்த்துவோம்!/

    அப்படியே போலி விசா மூலம் வரும் ஐ.எஸ்.ஐ உளவாளிகளின் சதி செயல்கள் வெற்றி பெற வாழ்த்துவோம்.

  46. oruthanai oruthan azhuchi vaazhara
    neenga yengada uruppada poreenga.
    ottu moththamaa neengalee ongaLukku kolli vachchikka poreeenga.
    ongaloda yokkiyatha ulagukku theriyum
    onga mattamaan aputhiya tha padam pottu kaattirikkeenga.
    pongada mahamoodanungkalaa.(MAHAMUDIAN)

  47. I agree that cricket has been more commercialised. But i cannot stop laughing on some of the wordings. Keep it up vinavu.
    I expect more posts like this for good comedy.
    //இன்று இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏழை நாடாக வாழ வேண்டிய அவல நிலையில் இருப்பவர்கள். //
    Good comedy
    //மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். பார்ப்பனிய ‘மேல்
    சாதியினர் பிடியில் இந்திய கிரிக்கெட் இருக்கும் போது இது இப்போதைக்கு சாத்தியமில்லை. //

    highest wiket taker is not fast bowler. It is முத்தையா முரளிதரன் ஸ்பின் bowler
    உங்களுக்கு இந்தியாவையும் பார்பானையும் திட்டனும்னா , 10 பக்கத்துக்கு
    “இந்திய ஒழிக!! பார்ப்பான் ஒழிக ந்னு ” பதிவு போடலாமே. அதுக்கு ஏன் சுத்தி வளைச்சு
    சம்பந்தம் இல்லாம எழுதறீங்க ?

  48. கிரிக்கெட் பக்தர்களே, தேசபக்தியென்பது கிரிக்கெட்டில் இல்லை – அது மக்கள் நலத்தை நாடுவதிலும் அதற்காக உழைப்பதிலும் இருக்கிறது.

  49. தேசபக்தின்னா சும்மாவா?

    ஆகா ஆகா… அம்பிகள் அவாளோட தயிர்சாத தத்துவங்கள வெச்சு வினவை பிச்சுட்டா பிச்சு.

  50. நாளைக்கு அதானே நடக்கப் போகிறது./வெல்லட்டும் பாக் கிரிக்கெட் அணி ! ஒழியட்டும் போலி இந்திய தேசபக்தி !!/

  51. இந்தியா பாகிஸ்தான் எதை ஆதரிச்சாலும் பரவாயில்லை! எப்படியும் மேட்சு பாருங்க… எங்களுக்கு வருமானம் வந்திரும்…விளம்பரத்துக்கு நன்றி வினவு!

  52. ஹிந்து பத்திரிகையில் இன்று வெளியாகியுள்ள விக்கிலீக்ஸ் கேபிள்.

    “ஸிமி மற்றும் சில இஸ்லாமிய தீவிரவாதிகள், அதிருப்தியுற்றிருக்கும் இஸ்லாமிய இளைஞர்களை, உடற்பயிற்சி, குரான் படிப்பு,வேலைவாய்ப்பு, பணம் ஆகியவற்றை காட்டி ஆட்சேர்ப்பு செய்கிறார்கள்.”

    http://www.thehindu.com/news/the-india-cables/the-cables/article1579767.ece

    Our Muslim contacts have reported over the past six months that SIMI and other Islamic extremists, (including mysterious ihdividuals they claim are “”members of al Qaeda.””) have been active in the Muslim community, recruiting disaffected young men with offers of physical training, study of the Qu’ran, job opportunities and easy money. They are worried that these are nascent terrorist cells that could be activated to carry out attacks at the behest of foreign-based organizations.

    • ஆர்.எஸ்.எஸ் வெறி நாய் கூட அதை தான் செய்கிறது ! அதைவிட அதிகமாகவே செய்கிறது அதை பத்தியும் லிங்க் குடுங்களேன்.

  53. /*பாக்கிஸ்தான் நமது அண்டை நாடு மட்டுமல்ல நமது ரத்தமும் கூட. பாக்கிஸ்தான் மக்கள் நமது சகோதரர்கள். நம்மிடமிருந்து அந்தநாடு பிரிந்ததற்கு ஆங்கிலேயர்கள், காங்கிரசு மற்றும் இந்துமதவெறி கும்பல்தான் முதன்மையான காரணம். */

    பாகிஸ்தான் பிரிந்ததர்க்கு முக்கியமான காரணமாய் இருந்த “முஸ்லிம் லீக்-யும்” “ஜின்னா-வயும்” மிகத் தந்திரமாக விட்டு விட்டீர்கள். எதிலுமே நேர்மை வேண்டும் சார். உங்களிடம் அது இல்லை.

    பி.கு. – உங்கள் கருத்தை நான் மறுக்கவில்லை.

  54. excellent bold article author !
    The below points are really distrubing me ..

    y too much focus on pakistan in india media like times now ,ndtv, etc etc ?
    y the news papers all over the world are writing Libya opposition gangsters as REBELS?
    y no mainstream media is having guts to call a cricket a cricket like a spade is a spade?
    y lot of forwarded mails are showing the courage of japanese engineers who have build the roads within 6 days are ignoring the great mighty sacrifices and super fast construction made in the then ussr of roads and dams within few weeks ?
    y so much sound when some body say let pakistan win?
    y the world is keeping quiet when libya is being hit ? before iraq,af-pak and now libya 2 mrw ? who? lot of un answered questions hitting my head before i sleep….
    bye
    regards
    RV

    • RV,
      When you are asking now as ‘y the world is keeping quiet when libya is being hit ?’
      Did you ask ‘ y innocent Ealam Tamils are killed with the India guided under Malayalees Narayanan and S.S.Menon supervision” at that time

    • RV சார்,

      உங்கள் கேள்விகள் நியாயமானதே! பெரும்பாலான கேள்விகளுக்கு ஒரே பதில் தான். அது இஸ்லாமிய எதிர்ப்பு. எத்தனை இந்தியர்கள் குறிப்பாக இந்துகள் அரபு நாடுகளில் நல்ல பதவியிலும் கௌரவமுமாக வாழ்கிறார்கள் என்று அறிவீர்கள். இருப்பினும் அங்கு அப்பாவி மக்கள் கொல்லப்படும்போது உள்ளூர மகிழ்ச்சி அடைகிறார்கள். அதற்கு காரணம் இஸ்லாமிய எதிர்ப்பு தான். ஆனால் அவர்கள் அதை தேச பக்தி என்று கூறிக்கொள்வார்கள்.

  55. ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி
    I do not understand can anyone please explain this how

    • Hi Veera,

      ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி

      Dont trust what they are telling in this articale, its rubbish…

      • ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ஜணகணமன பாடலில் வரும் வாழ்த்துக்கள் அன்றைய பிரித்தானியா மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் இந்தியாவிற்கு வரவிருந்ததையொட்டி அவரை வரவேற்க எழுதப்பட்ட வரிகள். 1911களில் இந்திய தேசிய காங்கிரஸ் அப்படி ஒன்றும் ஆங்கிலேயர்களுக்கு எதிரியான கட்சியல்ல(1885ல் காங்கிரஸை ஆரம்பித்தவரே ஒரு வெள்ளைக்காரர் தான். ஆரம்பத்தில் வெள்ளையரிடம் இந்தியர்களுக்கு சலுகைகளை வேண்டிப் பெற்றுக் கொள்ளும் சங்கம் போலத்தான் காங்கிரஸ் செயல்பட்டது.)
        1911ல் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் இந்தியாவிற்கு வரும் மன்னரை வரவேற்க இப்பாடலைப் பாடினார். இதற்கு ஆதாரமாக அடுத்த நாள் வந்த பத்திரிக்கைச் செய்திகள் உள்ளன.
        http://en.wikipedia.org/wiki/Jana_Gana_Mana_(the_complete_song) – விக்கிப்பீடியாவில் இக்கட்டுரையைப் பாருங்கள்.

        • Read the full article. one can understand clearly that the song was not written to praise king george. moreover, You can not take everything said in wikipedia as true and certainly they are not objective.

  56. We cannot deny that cricket is given unwanted and unwarranted importance over other games in India.Thousands of crores of rupees are made by BCCI, corporate sector, media,by betting and players every year.To whom those money goes to.All those involved in promoting cricket are least bothered about the poor and the downtrodden.They all are good at luring the gullible to part with their money. It is inculcated at an early age that knowing cricket talking cricket seeing cricket is the in thing and if you are ignorant of cricket you are a barbarian.Even children from primary and high school level are carried by the media blitzkrieg. They skip classes and play street cricket during cricket festivals. Ultimately only the poor kids lose not the rich.They have more avenues and means to succeed in life.They have plenty of opportunities post- liberalization.You can be a ” libertarian” only if your food and shelter are assured. You are rich because you are well educated and clever and there is always a god-father to promote you. You were clever enough to fool the masses for thousands of years. So when persons like Periyar tried to rouse the downtrodden you make a hue and cry. Even today you invent methods to fool the ignorant.After all you are the self appointed agents of God.Anything is prone to change but not your “agency”.Your Gods will not tolerate others touching them.At least persons like Vinavu constantly preach about the well being and development of the poor.What use liberty is when you have nothing to eat.May be our high thinking cricket promoting affluent intelligentsia may say “the poor are poor because they are fools”.

  57. —-ஆஸ்திரேலிய அணியுடனான கால் இறுதி ஆட்டத்தில் இந்திய தேசிய கீதம் ஒலித்த போது பலர் அலுவலகங்கள், வீட்டில் எழுந்து நின்றார்களாம். ஒரு அலுவலகத்தில் ஒரு தோழர் எழுந்து நிற்கவில்லை என்று அவரை குமுறி எடுத்துவிட்டார்களாம்

    If you think this is wrong..you need lot of introspection…

  58. அடிமைத்தனத்தை நேசிப்பதே மட்டைப்பந்து [cricket]விளையாடுவது.
    இங்கிலாந்தில் தோன்றிய மட்டைபந்து விளையாட்டை பிரித்தானிய ”துரைமார்கள்” குடியேற்ற நாடுகளிலும் விளையாடி பிரபலப்படுத்தினர். வெள்ளை நாய்களுக்கு நாட்டை காட்டி கொடுத்த இந்திய மன்னர்கள் என்ற பெயரில் வாழ்ந்த இழிபிறவிகள் அவர்களோடு சேர்ந்து இந்த மட்டைப்பந்தை விளையாடி வந்தனர்.பகல் பொழுதில் வெள்ளையனின் ஊரை அடித்து உலையில் போடும் திட்டங்களுக்கு ஒத்தூதி விட்டு மாலை நேரத்தில் அவர்களுடன் சேர்ந்து விளையாடியும் குடித்து கும்மாளமிட்டும் பொழுதை கழித்த இந்த இழிபிறவிகள் தூக்கி பிடித்த விளையாட்டுதான் இந்த மட்டைப்பந்து விளையாட்டு. இவர்களோடு சேர்ந்து அன்றைய ஆட்சி இயந்திரத்தில் பங்கு வகித்த பார்ப்பன மேல்சாதியினரும் இந்த விளையாட்டை தூக்கி பிடித்து வந்தனர்.
    ஆகவேதான் மட்டைப்பந்து விளையாட்டு இன்றளவும் இங்கிலாந்துக்கு அடிமையாக இருந்த நாடுகளில் மட்டுமே விளையாடப்படுகிறது.

    மட்டைப்பந்து குறித்த எமது பதிவு.

    http://thippuindia.blogspot.com/2011/03/cricket.html

    நாட்டுப்பற்றும மட்டைப்பந்தும் செம்புல பெயல் நீராய் ஒன்று கலக்கும் இந்த தருணத்தில் நாட்டுப்பற்று குறித்த எமது பதிவு.

    http://thippuindia.blogspot.com/2010/11/blog-post_27.html

    • உமக்கு க்ரிக்கெட் பிடிக்கவில்லை! ஊரில் அனைவருக்கும் பிடிக்கிறதே? என்ன செய்ய?
      இதை பாமரனும் விளையாடுகிறான்! பணக்காரனும் விளையடுகிறான்! கிரிக்கெட் ஆசையை, அவரவர் அளவுக்கு, நிறைவேற்றிக் கொள்கின்றனர்!
      கிரிக்கெட் ஆடுவது, ஆங்கிலேயரைப் பின்பற்றுவது, அடிமைத்தனம் எனில், பல்வேறு விஷயங்களில், ஆங்கிலேயரின் பழக்க வழக்கங்களையும் கண்டுபிடிப்புகளையும், பின்பற்றுகிறோமே! அது பரவாயில்லையா?

      ஏன்ன், செம்படையினரே, வெளிநாட்டவரின், கருத்துக்களைத்தானே, பின் பற்றுகிறீர்! அதை கருத்து அடிமைத் தனம் என்று ஏன் கூறக் கூடாது?

      • \\உமக்கு க்ரிக்கெட் பிடிக்கவில்லை! ஊரில் அனைவருக்கும் பிடிக்கிறதே? என்ன செய்ய?//

        ஊரில் நிறைய பேருக்கு பிடித்த இடம் சாராயக்கடையாக இருக்கிறது.அதற்காக போதைப்பழக்கம் நல்லது என சொல்லமுடியுமா.

        எனக்கு கிரிக்கெட் பிடிக்காமல் போனது இருக்கட்டும்.உலகில் இங்கிலாந்துக்கு அடிமையாக இருந்த நாடுகள் தவிர்த்து பிற நாட்டு மக்களுக்கு இந்த விளையாட்டு பிடிக்கவில்லையே.என்ன செய்ய?

        \\இதை பாமரனும் விளையாடுகிறான்! பணக்காரனும் விளையடுகிறான்! //

        அதைதானே நாங்களும் சொல்கிறோம்.நாட்டுக்கு துரோகம் செய்து வெள்ளையனுடன் கூடி குலாவி காட்டி கொடுத்த மன்னர் பரம்பரை மற்றும் மேட்டுக்குடியினரின் விளையாட்டை தொலைகாட்சி வாயிலாக உழைக்கும் மக்கள் மீதும் திணித்து போலியான நாட்டுப்பற்று போதையில் ஆழ்த்துவதைதானே நாங்களும் கண்டிக்கிறோம்.

        \\கிரிக்கெட் ஆடுவது, ஆங்கிலேயரைப் பின்பற்றுவது, அடிமைத்தனம் எனில், பல்வேறு விஷயங்களில், ஆங்கிலேயரின் பழக்க வழக்கங்களையும் கண்டுபிடிப்புகளையும், பின்பற்றுகிறோமே! அது பரவாயில்லையா?
        ஏன்ன், செம்படையினரே, வெளிநாட்டவரின், கருத்துக்களைத்தானே, பின் பற்றுகிறீர்! அதை கருத்து அடிமைத் தனம் என்று ஏன் கூறக் கூடாது?//

        ஆங்கிலேயரின் விளையாட்டு என்பதற்காக அல்ல,மக்களின் மூளையை மழுங்கடிக்கும் ஆதிக்கவாதிகளின் ஆயுதம் என்பதாலேயே கிரிக்கெட் மக்கள் நலனுக்கு எதிரானது என்கிறோம். இந்தியாவில் உழைக்கும் மக்கள் விரும்பி விளையாடும் கால்பந்து கூட வெளிநாட்டில் தோன்றியதுதானே.வெளிநாட்டவரின் கண்டுபிடிப்பு என்பதற்காக உலகில் யாரும் எதையும் வெறுப்பதில்லை.

  59. கட்டுரையின் மைய நோக்கம் தெரியாமல் திட்டுகிறார்கள் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டை தேசபக்தியோடு முடிச்சுப்போடுவதன் முட்டாள்தனத்தை வலுவாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். தீவிரமான கிரிக்கெட் மற்றும் சச்சின் விசிறியாக இருந்தபோதும் கட்டுரையுடன் உடன்படுகிறேன் :))

  60. நான் கிரிகெட் பார்ப்பதில்லை, பல வருடங்களாக.

    இந்தியாவின் இதர விளையாட்டுகளின் மேல் கிரிகேட்டின் ஆதிக்கத்தையும் வெறுக்கிறேன்.

    பாகிஸ்தான் மக்கள் நிலை துயரமானது என்பதையும் ஏற்கிறேன்.

    ஆனால், அவர்களது நலனுடன் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத பாகிஸ்தான் கிரிகெட் அணி வெல்ல வேண்டும் என்று சொல்லும் இந்தக் கட்டுரை மொன்னைத்தனமானது. உமக்கு இந்திய தேசத்தை எதிர்க்க வேண்டும், அதற்கு கிரிகெட் தான் கிடைத்தது போலும்.

    //இதன் பாதிப்பில்தான் சென்னையில் இந்திய அணிதோற்றாலும் வெற்றிபெற்ற அணியை இரசிகர்கள் எழுந்து நின்றுபாராட்டுவார்கள் என்பது உலகறிந்த செய்தி. என்ன இருந்தாலும் பெரியார் பிறந்த மண் அல்லவா?//

    இதைப் படித்ததும் புல்லரித்துப் போய்விட்டது போங்க!!

  61. //கிரிக்கெட் என்பதே சோம்பேறித்தனமான விளையாட்டு//
    ஒரு விளையாட்டை இன்னொரு விளையாட்டுடன் compare செய்யவே முடியாது. கூடாது. ஒவொன்றுக்கும் ஒரு தன்மை. chessஇல் physical action இல்லை. அதற்காக அது மட்டமான விளையாட்டு என்று ஒதுக்க முடியுமா? football லும் எல்லாரும் physical actionஇல் இருக்க மாட்டார்கள். Defence செய்பவர்கள் எதிரணி வருவதற்கு காத்திருப்பார்கள். வந்தவுடன் பந்தை பறித்து தங்கள் forward க்கு pass செய்து விடுவார்கள். ஆட்டம் 2 மணி நேரத்தில் முடிந்து விடும். cricket நாள் முழுவதும் ஆடபடுவது. அதற்கும் energy தேவை. இது சோம்பேறித்தனமான விளையாட்டு என்பதை ஒப்புகொள்ள முடியாது.

    //மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். /

    இது ஒரு முட்டாள் தனமான வாதம். நமது srinath ஒரு vegetarian. பல வருடங்கள் அவர் இந்திய அணியின் star bowler. பாகிஸ்தான் அணியை தவிர பிற நாடு ஆட்டகாரர்கள் மாட்டு கறி உண்பதில்லை. Chicken பெரும்பாலும் உன்ன படுகிறது. Fastest bowler Bret Lee ஒரு vegetarian (west) படி. அதாவது மீன் மற்றும் வேக வைத்த chickenம் தான்.

  62. What is the central objective of this article, what do u want to say?

    U want me to support PAKISTHAN? Who r u telling that Mr.VINAVU…

    I am a fan of these kind of useless essays from VINAVU, I wonder how badly you r thinking!!!!

    What do u want to convey to the readers, In between u r scolding hindus unnecessarily (for adding more spicy)

    You do one thing go and settle in PAKISTAN and do social work for them and support Pakistan CRICKET TEAM.

    Or else throw ur mask and come on street and PUBLISH what you have written here…

    If people are celebrating something, you don’t like that….right

    You are scolding INDIA then why are u staying here, please get away from INDIA…

    OK. U ask.. Who am I to say u get out? Oh good question…

    I am also having some questions?

    Who are u to scold/tease HINDUS unnecessarily?

    Who are you to ask me to support PAKISTAN?

  63. இந்த கிரிக்கெட் தேசபக்தி இந்தியர்களின் நாட்டுப்பற்று என்ன லட்சணத்தில் உள்ளது என்பதை பிரிச்சி மேய்ந்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  64. வினவு நீர் சொல்லுறது எல்லாம் சரியாக இருக்கலாம் அதற்காக சச்சின் டெண்டுல்கரின் படத்தை இதற்குள் இழுத்து போடுவதை வன்மையாக கண்டிக்கிறேற் அந்தமனுசன் நேர்மையா அரசாங்கத்துக்கு வரிகட்டித்தான் உழைக்குது எப்பயாவது உந்த தேசபகதி அது இது எண்டு விசர்க்கதை ஏதும் கதைச்சிருக்கோ மரியாதயா படத்தை தூக்கவும் அந்த மனுசன் ஏதோ டெயிலர் கடையில குடுத்து தைச்சமாதிரியெல்லா அந்த படத்த போட்டிருகிறீர் நீர் வேணுமெண்டால் ஸபொன்சர் எடுத்த பிசிசிஐ கிழியும் நீர் எழுதினது சரி அதை பிரபல படுத்துவதறகு அதற்கு ஒரு பவரை கொடுக்க ஒரு நல்ல மனிதனை கேவலப்படுத்துவது நியாயமில்லை நீரும் அவரை உமது கட்டுரைக்கு ஒரு விளம்பர ஊடகமாக பயன்படுதி இருக்கும் போது பன்னாட்டு நிறுவனங்கள் பாத்து கொண்டு இருக்குமோ …..
    முதல்ல அந்த படத்த தூக்கவம் எனக்கு எந்த தேசபக்தியும் இல்லை கடுமையான உழைபுக்கு தன்னம்பிக்கைக்கு நேர்மைக்கு முன்னோடியாக இருக்கும் ஒருவரை தயவு செய்து கேவலப்படுத்த வேண்டாம் !

  65. i realy apreciated ur job u r clearly mention the situvation of kashmier and modi real face , also we should thing this is cricket only nothing else , but now situvation of india is very bad this is the war they are thinking now becouse of the media

  66. Libertarian,

    நான் வேண்டாமென்கிறேன். உங்களைப் பொருத்தவரை நான் ஒரு பாசிஸ்ட்.
    நீங்கள் வேண்டுமென்கிறீர்கள். என்னைப் பொருத்தவரை நீங்கள் ஒரு ஆழ்ந்த கருத்தின் விவாத்திலிருக்கிறீர்கள்.
    ஆனால் இருவர் மட்டுமே முடிவு செய்யப்போவதில்லை. பலவாறு, பற்பல கோணங்களில் விவாதிப்பார்கள்.
    ஆயினும் உங்கள் கருத்துக்கு எதிரானவர்கள் யாவரும், உங்களைப் பொருத்தவரை பாசிஸ்டுகள். ஆனால் என்னைப் பொருத்தவரை எனது கருத்துத்தான் முடிவானது என்ற முடிவுக்கு நான் வந்ததேயில்லை. மற்ற பதிவர்களை வார்த்தைகளால் சாடியதுமில்லை.

    சரி… இப்படி வைத்துக் கொள்ளலாம். என்னை பொருத்தவரை கோடிக்கணக்கான மக்கள் இந்திய கிரிக்கெட்டை தடை செய்ய கோருகிறார்கள் என்கிறேன். சிறுபான்மையில் நீங்கள் மறுக்கிறீர்கள் என்கிறேன். அப்போது உம்மையும், உம் லிபர்ட்டேரியன் வாதத்தையும், உமது தளங்களையும் ‘தடை’ செய்ய வேண்டும் என்று மக்கள் சொல்வார்களே? எது சரி?

    இரண்டுமே சரியில்லை. இரண்டும் ஆய்வில், விவாதத்திலிருக்கின்றன. ஆனால் உண்மையும், அறிவியலும், இயற்கை விதிகளும்தானே ஜெயிக்கும்?

    “e=Mc2” எனும் அறிவியல் பூர்வ உண்மை ஒரு அழகான மாலை நேர உலாவின்போது வந்துவிடவில்லை. பற்பல விவாதங்கள், ஆய்வுகள், சிந்தனைகள், கட்டுரைகள்; காலதாமதங்கள், தவறுகள்: இவைகளுக்குப் பின்னே சர்வ சாதாரணமாய் ஒளிந்திருந்த உண்மை இன்று வெளிவந்துவிட்டது.

    ***
    //இது DIPLOMACY யின் ஒரு பகுதியாக உலக நாடுகள் அனைத்தாலும் செய்யப்படும் ஒரு மிக சாதாரண சம்ப்ரதாய நடவடிக்கையே. ஆயுதங்களின் பயன்பாட்டைக் கண்காணிக்கும் உரிமை நாம் ஆயுதம் விற்றாலும் வேண்டாம் என்று சொல்வீர்களா?இது போன்ற சாதாரண விஷயங்களை பெரிதுப்படுத்தி அமெரிக்காவை நமது நாட்டிற்க்கே எதிரியாக்க முயலாமல் எனது பழைய பதிவுகளை படித்து கொஞ்சமாவது திருந்துங்கள். //

    உமது பின்னூட்டம்தான். (கிரிக்கெட் தேச பக்தர்களே, இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா).

    “வாங்க சார், வாங்க சார், வந்து நான் எழுதியதை கட்டாயாமாப் படித்து பாருங்க சார், நல்லாயிருக்கும் சார்” என்று பிராண்டி உங்கள் தளத்துக்கு இழுத்துச் செல்வதுபோலிருக்கிறது, உங்கள் பின்னூட்டங்களின் நடை.

    “எனது பழைய பதிவுகளைப் படித்து கொஞ்சமாவது திருந்துங்கள்” என்று எகத்தாளம் வேறு. தெனாவட்டு. இது கடைந்தெடுக்கப்பட்ட பாசிசம் இல்லையா? உம்மில் நாகரிகம் இல்லையே? ஒரு உண்மையான பாசிஸ்ட் விரலை நீட்டி மற்றவர்களை பாசிஸ்ட் என்பதா?

    நீர் என்ன இவ்வுலகைக் காக்க வந்த இரட்சகரா? நீர் சொல்வதனைத்தையும் நாங்கள் வேதவாக்க எடுத்துக் கொள்ளவேண்டுமா என்ன? உமதுஅனைத்து பின்னூட்டங்களிலும் உங்களைப்பற்றி நீங்களே விளித்துக்கொள்ளும் மேதாவித்தனம் நிறைந்த அப்பாவித்தனம் காணப்படுகின்றன. இவ்வுலகில் தான் ஒருவனே மிகச்சிறந்த அறிவாளி என்று கூறிக்கொள்பவந்தான் மிகச் சிறந்த முட்டாளாயிருப்பான்.

    டாஸ்மேனியாவிலிருந்து ஒரு ‘லிங்க்’, ஐஸ்லாந்திலிருந்து ஒரு ‘லிங்க்’, அவன் அல்லது இவன் சொன்னன் என்று ஒரு லிங்க். ‘லிங்குகள்’ ஒன்றும் தேவ தூதர்களால் எழுதப்படவில்லையே. அவைகளும் மனிதர்கள் வெளிப்படுத்திய கருத்துக்கள் தாமே? லிங்குகளால் நிறைந்த உமது பின்னூட்டமும், பதிவுகளும். நான் உதாரணங்களை மக்களிடமிருந்து எடுக்க முயல்கிறேன்.

    2 + 2 = 4 என்று தலைப்பிட்டு, ஒரு தலை சிறந்த கணித வாத்தியாரை அமர்த்தி ஒரு பக்க அளவில் வினவு ஒரு கட்டுரை பதிவிட்டாலுங்கூட, அதற்கு ஒரு மறுப்பு உம்மிடமிருந்து கண்டிப்பாயுண்டு. ஆதலால் உம்மைப்போன்றோரை நான் இதுனாள் வரை ஒரு பொருட்டாய் மதித்ததேயில்லை.

    நான் பாமர மக்களோடு சேர்ந்து சிந்திக்கவும் வாதிடவும் விரும்புகிறேன். உங்களைப் போன்று லிபர்ட்டேரியன் என்று கூறிக் கொள்பவர்களிடம் அல்ல. ஏனெனில் உம்முடைய லிபர்ட்டேரியன் வாதம் ஒரு முடிவற்ற விதண்டாவாதமாகவே முடிவடையும்.

    எனினும், உமது கருத்துக்களுக்கு மிக்க நன்றி.

  67. இரண்டு பரதேசி நாடுகள், ஏழைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் இப்படி மோதிக் கொள்வதையும், விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் எப்படி ஆதரிக்க முடியும்?
    விளையாடும் சோம்பபேறிகளும. பார்க்கும் முட்டாள்களும் இவர்களை
    வைத்து கல்லா கட்டும் முதல்லாளிகளும் வாழ்க.இரண்டு பரதேசி ஏழைமக்களும் ஒழிக.மாவீரன் பெயரை வைத்தருப்பவர்களும் .துரோகி
    யின்பெயரை தாங்கியிருப்பவர்களும் தங்கள் சேவை தொடர நீடுடிவாழ்க?

  68. “பாக்கிஸ்தான் நமது அண்டை நாடு மட்டுமல்ல நமது ரத்தமும் கூட. பாக்கிஸ்தான் மக்கள் நமது சகோதரர்கள். நம்மிடமிருந்து அந்தநாடு பிரிந்ததற்கு ஆங்கிலேயர்கள், காங்கிரசு மற்றும் இந்துமதவெறி கும்பல்தான் முதன்மையான காரணம். இன்று இந்திய ஆளும் வர்க்கங்களால் ஏழை நாடாக வாழ வேண்டிய அவல நிலையில் இருப்பவர்கள். அமெரிக்காவுடன் கூடிக் குலவும் பாக் ஆளும் வர்க்கத்தால் சொந்தநாட்டில் பயங்கரவாத நிகழ்வுகளோடு செத்துப் பிழைக்கும் துர்பாக்கியவாதிகள்.

    ஆனால் இரண்டு பரதேசி நாடுகள், ஏழைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் இப்படி மோதிக் கொள்வதையும், விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் எப்படி ஆதரிக்க முடியும்?”
    வாழ்த்துக்கள் வினவு.

  69. போகும் வழியெங்கும் பாதை.
    பாதையெங்கும் வெறிச்சோடி.
    போதையேற்று; முழுதாய்.
    போர்க்களம் காணுவோ மின்று.

    அவனா, நாமா;
    ஆகட்டும் பார்க்கலாம்.
    ங்…கோ… வேண்டாம்; அடக்கு.
    ஸ்போர்ட்ஸ்; ஸ்போர்டிவாயிரு.

    சிக்ஸ்? அல்லது ஃபோர்;
    சிம்ப்ள்; நீ நிதானமாயிரு.
    மானப் பிரச்சினையடா என்
    மன்னாரு, மௌனமாய்ப் பார்.

    ஜெயம் என்பதே நம்
    ஜனகண மண.
    சிறுவயதில் படித்ததை
    சற்றேனும் சிந்தி.

    நாட்டுப்பற்று யாருக்கில்லை?
    நாலு சிஃஸ்செர்; நாலு ஃபோர்.
    ஜெயிச்சிடும் என் நண்பா…
    ஜெய் ஹோ.. ஜெய் ஹோ…

    ஒவ்வொரு அடியும்
    ஓராயிரம் அடிகள்.
    நம்பு; தோற்தோடும்
    நம் எதிரிப் படை.

    சொரி…. படை அரிப்பெடுத்தால்
    சொரிந்துகொள். ஆனால்,
    பார்வை மட்டும் நகர்த்தாதே…
    பார்த்துக்கொண்டேயிரு.

    வெங்காயமே; எதிலும்
    வீரம் வேணுமடா…
    வினவு எழுதியிருக்கான் பாரு;
    வாடா என் மயிரு.

    போடாங்… சாரி சாரி,
    போடா போக்கத்தவனே
    நாட்டுப் பற்றில்லா
    நாதாரி மவனே…

    எனக்கு என் நாடு,
    எனக்கே என் மக்கள்;
    என் சமுதாயம்
    என் அரசியல்.

    நீ யார் நாயே
    நடுவில் இதைச் சொல்ல?
    தைரியமிருந்தால் இதில்
    தலையிடாதே…

    இது எம் கவுரவம்.
    யாம் தோற்றால்
    இன் நாடு தோற்றது.
    எம்முயிர் பிரிந்ததெனக் கொள்.

    விளையாட்டா இது;
    விளையாடாதே வினவே.
    விதி; எம் தலை விதி.
    வெந்ததே சோறு எனும் விதி.

    நாங்களிருந்தால் நாடு.
    நாடிருந்தால் நாங்கள்.
    வார்த்தை தடுமாறினாலும்
    வருங்கால மன்னர் நாங்கள்!

  70. கிரிக்கெட் : ஸ்ரீ லங்கா வெற்றி பெற வாழ்த்துவோம் ! | வினவு!…

    மச்சி இதுக்கு பேர் தான் ஆப்பூ ஊஊஊஊஊஊஊஊஊஊ

  71. what is wrong in a cricket lover cheering india if he belongs to it?
    in fact every where , in every country this happens ?
    so wht is the problem?
    if ur int is to expose advertise ments /sponsors and thier links to sports ok but then the caption need not be to greet pak fthe best of luck!!!
    why cant u saty best of luck for india?but can say the same to pak?
    s seshan

  72. இந்தியாவில் புரட்சிக்கு பிறகு வெள்ளைக் காலனியாதிக்கத்தின் எச்சத்தை, இந்த அடிமைகள் கட்டிக்கொண்டு அழும் கிரிக்கெட்டை முற்றாக ஒழித்துக்கட்டிவிட்டு கால்பந்து போன்ற விளையாட்டுக்களை ஊக்குவிக்க வேண்டும்.

    • கால்பந்து போன்ற விளையாட்டுக்களை ஜெயிச்சு மட்டும் என்னப்பன்னப் போறீங்க ?

  73. அடுத்து என்ன இலங்கை வெல்லட்டும்னு சொல்லப்போறியா

    • சரி, இப்ப பாகிஸ்தானோட ஜெயிச்சி நீங்க என்ன பன்னீங்க ? அடுத்து இலைங்கையோட ஜெயிச்சு என்னப்பன்னப் போறீங்க ?

      • pakistan jeikatum yenru ayyeram karanam koori ellorukum therintha kathaiyai koori nerathai veenadithu vittarkal.. karai padiyatha matra vilyatu patri kattorai yeluthinal ubayokamaka irukum.. eg: adukuli attam,. enkal kulasami kovil thinnaila mattrum than athai parkaren.. yarai kettalum eppadi veliyadarathunu theriyalanu sollarankha.. anal sariyana moolaiku velai vilayatunu sollarankha… nasama pora veliyata thitturatha vittu sava kedakara velaiyatai pathi araichi katturai yeluthalam…

      • நீங்க பாகிஸ்தான் ஜெயிச்சிருந்தா என்னே பண்ணுவீங்களோ அதே தான் சார் நாங்களும் பண்ணுறோம்

        • இந்தியா தோத்திருந்தா அது உங்களுடைய இந்து தேசிய வெறிக்கான தோல்வியாக அமிந்திருக்கும். கெட்ட வேளையாக பாகிஸ்தான் தோற்றதால் உங்கள் முகத்தில் கரியை பூச முடியவில்லையே என்று வருத்தம் மற்றபடி வேறு ஒன்றுமில்லை.

          நீங்க தேசபக்தரா ? கிரிக்கெட் தேசபக்தரா ?

          கீழ் உள்ள லிங்கில் போய் படிங்க உங்களைப்போன்ற தேசபக்தி பேர்வழிகளுக்காக எழுதப்பட்டது.

          கிரிக்கெட் குறித்த தேசப்பக்தி பதிவுகள் !
          http://supperlinks.blogspot.com/2011/03/blog-post_29.html

        • யோவ் அதையெல்லாம் படிக்க முடியாது… வினவு கட்டுரையே பாதிக்கு மேல நாக்கு தள்ளுது

  74. //வெல்லட்டும் பாக் கிரிக்கெட் அணி ! ஒழியட்டும் போலி இந்திய தேசபக்தி !! //

    இந்திய கிரிக்கெட் அணி வென்றது! ஒழிந்தது போலி பாகிஸ்தானிய தேசபக்தி!!

  75. //இந்தியாவில் இந்து மதவெறியர்களால் கொல்லப்பட்ட் இசுலாம் மக்கள் எத்தனை ஆயிரம் பேர்?//

    எனக்கு தெரிந்து தமிழகத்தில் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.
    எப்படி ஒரு முஸ்லிம் தீவிரவாதி குண்டுவைப்பது எல்லா முஸ்லிம் மக்களையும் சாராதோ அது போல ஒரு ஹிந்து மதவெறியர் செயல் மற்ற இதுக்களை சாராது…. சரிதானே?

    // இதில் எந்த வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கபடவில்லை எனும்போது ஒரு அப்பாவி முசுலீம் இளைஞன் இயல்பாகவே பாக் கிரிக்கெட் வெற்றியை ஆதரிப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
    ஆனால் அவர்கள் அப்படி நடப்பதில்லை. *ஏதோ விதியை நொந்து கொண்டு இந்தியாவில் கிட்டத்தட்ட அகதிகளாகத்தான் வாழ்கிறார்கள்* //

    தமிழகத்தில் இப்போதும் நீங்கள் பார்க்கலாம். பள்ளிவாசல்களில் குழந்தைகளுக்கு பாடம் போடுவார்கள். அங்கு செண்டு பாருங்கள் நிற்கும் வரிசையில் எந்தனை மக்கள் இந்துக்கள் எண்டு (பத்துக்கு எட்டு பேர் இந்துக்கள்) எங்களது சகிப்பு தன்மை அப்படி, சரி ஒரு முசிலீம் நண்பருக்கு கருப்பசாமிக் கோவிலில் வெட்டிய கிடா கறியை தந்து பாருங்கள்…. அவர் சாப்பிட மாட்டார்…. அவர்களது சகிப்பு தன்மை அப்படி.

    • உங்களுக்கு அதில் நம்பிக்கை இருப்பதால் நீங்கள் போகிறீர்கள். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர்கள் வருவதில்லை. இதில் சகிப்புத்தன்மை எங்கிருந்து வந்தது?
      நீங்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் மதமாக இருந்தாலும் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்கப்படுவீர்கள். தாழ்த்தப்பட்ட ஜாதியினரை நீங்கள் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. இதில் அல்லவா உங்கள் சகிப்புத்தன்மையைக் காட்ட வேண்டும்.

      • மதச்சார்பின்மை என்ற பெயரில் இசுலாமியம்..பேசும் நண்பரே.. அதிகபட்ச விமர்சங்கங்களுக்காக விற்கப்படுகிற பதிவு இது..

        //அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் நடந்த கால்பந்து போட்டியில் ஈரான் வென்றதை அந்நாட்டு மக்கள் அரசியல் வெற்றி போல கொண்டாடியதை கூட ஆதரிக்க முடியும், புரிந்து கொள்ள முடியும். ஆனால் இரண்டு பரதேசி நாடுகள், ஏழைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடுகள் இப்படி மோதிக் கொள்வதையும், விளையாட்டு வெற்றியை போர் வெற்றி போல சிலாகிப்பதையும் எப்படி ஆதரிக்க முடியும்?///

        இந்த ஒரு வரி போதுமே உங்கள் நிலைப்பாட்டுக்கு.. பச்சை இசுலாமியம் பேசுகிறீர்கள்.

        போலி தேசவெறியை தோலுரிக்க நீங்கள் அவர்களை ஆதரிக்கிறீர்களா? இந்த நாட்டில் சொன்னதால் பரவாயில்லை.அங்கு பாகிஸ்தானிலிருந்து இப்படி சொல்லியிருந்தால் என்னவாகும்?

        /// மாட்டுக்கறி சாப்பிட்டு வளர்ந்தால்தான் நூறு மைல் வேகத்தில் பந்து போட முடியும். பார்ப்பனிய ‘மேல்’சாதியினர் பிடியில் இந்திய கிரிக்கெட் இருக்கும் போது இது இப்போதைக்கு சாத்தியமில்லை. அந்த வகையில் ‘மேல்’சாதி இந்திய அணிக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் பாக் அணியைத்தான் ஆதரிக்க வேண்டும். //

        என்ன கொடும சார். உங்க எழுத்து சரக்க இப்படிலாம் உருவாக்கி வித்து தான் . கமென்ட்’ ங்கற விலை வாங்கனுமா?’

        இந்துக்களால் பாதிக்கப்பட்ட முசுலிம்களின் கதை பேசும் நண்பரே..இதையே திருப்பி சொல்லவும் நிறைய நடந்திருக்கிறது.
        பிரச்சினை தீர்க்க சமாதானம் பேச வேண்டும்..

        கண்ணுக்கு கண் ,பல்லுக்கு பல் என்று காட்டுமிராண்டித்தனம் ஏன் பேசுகிறீர்கள்?

        //
        ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வாழ்த்தி எழுதப்பட்ட ஜனகனமனவை எழுந்து நின்று பாடி,//

        ஜனகன மன பாடலுக்கு அர்த்தம் தெரியுமா?

        ————-
        பார்ப்பனிய ஆதிக்கத்திற்காக அவர்களை எதிர்க்கும் நீங்கள் .. உங்கள் உரிமையை நிலை நாட்டுவது நியாயம். ஆவர்களை அடக்கி ஆழ நினைப்பது, அழிக்க நினைப்பது எப்படி நியாயமாகும்.மிருகம் தான் அப்படி செய்ய நினைக்கும்.திராவிட பாரம்பரியத்தில் வந்த எவனும் அப்படி அல்ல.இரக்கமுள்ளவன்.

        இப்படி தானடா , இந்த தமிழ் நாட்டில் இந்தியை ஒழித்து கட்டி விட்டு எந்த தமிழனும் வடக்கில் சென்று பிழைக்க வழியில்லாமல் செய்து விட்டீர்கள். திராவிடம் பேசி, பிரிவினை பேசியே உங்கள் தொந்தி வளர்க்கிறீர்கள்.அந்த பாப்பானுக்கும் உணகளுக்கும் என்ன புண்ணாக்கு வித்தியாசம் இருக்கிறது.

        வடக்கில் உள்ள ஆர்.எஸ்.எஸ். குடும்பங்களுக்கும். இங்கு உள்ள திராவிட, தமிழ்பற்று மிக்க அரசியல் பிச்சைக்கார்களுக்கும் என்ன வித்தியாசம்?

        மற்றபடி கிரிக்கெட் வியாபாரம், தேசபக்தி என்ற பெயரில் அதை விற்கிறாகள் என்பதெல்லாம்,..நானும் ஒப்புக்கொள்கிறேன்.இந்த சோம்பேறி விளையாட்டை தவிர எந்த விளையாட்டையும் முன்னிலைப்படுத்தாத இந்த ஊடகங்களையும்,இந்த அரசையும் மன்னிக்க முடியாது..!

        எப்படியோ தாறுமாறா எழுதி நெறைய கமென்ட் வாங்கிட்டீங்க.. உங்க முயற்சிக்கு பாராட்டுக்கள்..!

  76. ni edho onu eludhiko ,,adha unoda adimai naigal padikaum ,paratatum ,,,,indha mathri sachina kevalapaduthi than ni paratu vaganum na,,,,,un wife ,,,,,,,,sensor cut,,,olunga eludhu ,,,,sachina pathi pesa unaku thaguhiye ila,,,

    • என்னங்கண்ணா சுபாஷ் ரொம்ப சவுண்டுட் விடுரிங்கோ.பயமாக இருக்குதுன்னா. ஆங்கிலேயன் இந்தியாவை ஆளும்போது என்ன செய்து இந்தியாவை அடக்கிவைத்தானோ,அதை தான் இன்றும் இந்த கிரிக்கெட்டை சாராயத்தை வைத்து அடிமைப்படுத்தி வைத்தி இருக்கிறார்கள். மேலே சச்சினின் உடலில் இருக்கும் எந்த நிறுவனம் இந்தியாவில் மட்டும் தொழில் செய்யும் நிறுவனம்.எல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள்.இதை தாண்டா அன்றைக்கு வெள்ளைக்காரன் செய்தான். அன்றைக்கு வெள்ளைக்காரன் கசக்குது,இன்றைக்கு வியாபார லாப விளப்பரத்துக்காக கிரிக்கெட் விளையாட்டு இனிக்குதுள்ளா. எட்டப்பன்,பார்ப்பனர்களின் கூட்டம் தானே நீ உனக்கு எப்படி தெரியும் தேசியம் என்றால் என்னவென்று.

  77. இந்திய தேசியத்தில் முரண்பாடு இல்லாத மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ஆதரவு இணையதளம், இந்தியாவுக்கு எதிராக இப்படி ஒரு நிலை எடுத்தது ஆச்சரியத்தை அளித்தாலும், அப்பாடா… இப்பவாவது உணர்ந்தார்களே..! என்ற ஆறுதலும் ஏற்படுகிறது எமக்கு! நன்றியும், வாழ்த்துகளும், வினவு தோழர்களுக்கு! இந்திய கூட்டமைப்பே தமிழனின் முதல் தரமான பகையாளி. தமிழனின் எதிரி என்ற வகையில் இந்தியாவைத்தான் முதல் விரோதியாகத் தமிழன் பார்க்க வேண்டும். கட்டுரையில், பாகிஸ்தான் மட்டைப்பந்து அணிக்கு வாழ்த்து சொல்வது, அந்த நாட்டுக் கிரிக்கெட் கிறுக்கர்களை ஊக்குவிப்பது போலல்லவா உள்ளது? அந்த மக்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள், கிரிக்கெட் தறுதலைகளைத் தொடர்ந்து கட்டியழுவதற்கு? திருட்டும் சூதும் கொலையும் நடத்தும் இந்த டுபாக்கூர்
    விளையாட்டிலிருந்து மக்களைத் தப்புவிக்க விரும்பும் நாம், பிறரும் இந்த விளையாட்டை புறக்கணிக்கும் விதமாக நமது கருத்துக்களை அமைக்க வேண்டும்!
    அடுத்ததாக.. இந்தியாவின் வஞ்சம் தீர்க்கும் பட்டியலில் முதலிடத்திருப்பது தமிழர்களே! அது ஈழத் தமிழராகட்டும், தமிழ் நாட்டுத் தமிழராகட்டும்… தமிழனைத் தீர்த்துக் கட்ட வெளியில் பகையாளியாகக் காட்டிக் கொள்ளும் பாகிஸ்தான், சீனாவுடன் சேர்ந்து மூன்று பேரும் ஒரே அரங்கில்தானே தமிழனைக் கொல்ல ஆலோசனை செய்து, சேர்ந்தே கொன்று தீர்த்தார்கள் தமிழீழத்தில்! மட்டுமா.. இந்தியா என்ற, ஊழலில் நான்காவது இடம் வாங்கிய கேவலமானவர்கள், கொடுத்த போர் கருவிகளாலும், பயிற்சிகளாலும் இராமேசுபுரத்தில் கூலிக்கு மீன்பிடிக்கும் ஏழை மீனவத் தொழிலாளர்கள் அய்ந்நூற்று நாற்பது பேர்களை துப்பாக்கியால் சுட்டும், கழுத்தில் கயிற்றைக் கட்டியிழுத்தும் கொன்று தீர்த்த கொடுங்கோலனின் கூட்டாளியான அண்டியாவா நம் நாடு…? மானங்கெட்டவர்களே! தமிழர்களுக்கு சிங்களன் இரண்டாவது எதிரிதான், இந்தியாவே தீர்த்துக் கட்டப் பட வேண்டிய முதல் எதிரி! காசிமேடு மன்னாரு.

    • ////கட்டுரையில், பாகிஸ்தான் மட்டைப்பந்து அணிக்கு வாழ்த்து சொல்வது, அந்த நாட்டுக் கிரிக்கெட் கிறுக்கர்களை ஊக்குவிப்பது போலல்லவா உள்ளது? அந்த மக்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள், கிரிக்கெட் தறுதலைகளைத் தொடர்ந்து கட்டியழுவதற்கு? ///

      அதனால் தான் இது போல பின்னூட்டமிட்டேன்..!

      இந்திய கிரிக்கெட் அணி வென்றது! ஒழிந்தது போலி பாகிஸ்தானிய தேசபக்தி!!

    • காசிமேடு மன்னாரு கட்டுரையை சரியாக படிக்கலேயே?

      பாக்கிஸ்தான் நமது ரத்தம், பாக் மக்கள் நமது சகோதரர்கள் என்று கூறியிருப்பது கண்ணுக்குபடவில்லையா? உங்க மனக்கோட்டை கற்பனைப்படி அதுவும் தவறாயிற்றே? இந்தியா, பாக்கிஸ்தான், இலங்கை என்ற நாடுகள் ஆளும் வர்க்கங்களுக்கு சொந்தமானது போலவே உழைக்கும் மக்களுக்கும் சொந்தமானது, நாங்கள் உழைக்கும் மக்கள் இந்தியாவை ஆதரிப்போம், பார்ப்பனியத்தின் இந்தியாவை எதிர்ப்போம், பார்ப்பனியத்தின் தமிழ தேசியத்தையும் எதிர்ப்போம். சரி, தமிழ் தேசியவாதிகளுக்கு சரியா ஒரு கச்சேரி வைச்சுட்டாபோச்சு, உங்களையும் கற்பனைக்கோட்டையிலிருந்து வெளியேற்றி மீட்டெடுக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறதே!

  78. “ GUJARAT ” Government is 2nd best in the world …. Announced by international council.

    Before 10 years they had 50,000 crores loan in World Bank.

    BUT

    To-day they have deposited 1 Lakh crore in World Bank.

    In Gujarat,

    “NO TASMAC”

    “No free colour TV”

    “No rice for Rs. 1”

    “NO POWER CUT”

    “100% LADIES STUDYING”

    “WHOLE INDIA EXPORT 15% FROM GUJARAT ”

    “30% OF INDIAN SHARE MARKET INVESTS BY GUJARAT ”

  79. இப்போதைய சூழலில் இந்து தீவிரவாதம் கோட்சேயின் வழியை பின்பற்றவில்லை. இவர்களின் அம்பு எய்தவனை விட்டுவிட்டு அப்பாவி முஸ்லீம்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. முஸ்லீம் ஓட்டு வங்கிக்காக இந்துக்களை இரண்டாதர மக்கள்போல் நடத்துவதும், இன்னொருபுற இந்து ஓட்டு வங்கிக்காக பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு மறைமுக ஒத்துழைப்பு கொடுத்துவிட்டு ஒன்றும் தெரியாத மாதிரி இந்த பக்கம் முஸ்லீம்களை தாஜா செய்வதற்கு லிபரான் கமிஷன் ஒன்று ஏற்படுத்தி முஸ்லீம் ஆதரவாளர்கள்போல் காண்பிக்கும் கபட நாடகசூத்திரதாரிகளை அழிப்பதாக அதன் நோக்கம் இருந்தால் உங்களைப்போல் இந்த இந்து தீவிரவாதத்தை விதண்டாவாதமாக நியாயப்படுத்தலாம்.

  80. தேச வெறியை துண்டி விட்டு இந்தியாவில் இருக்கும் பெரிய சந்தையை குறிவைக்கின்றன இந்திய முதலாத்துவ நிறுவனங்கள்.வரவிருக்கும் ஐ.பி.எல்.தான் அவர்களின் பிராதான இலக்கு விளம்பரம் மூலம் பல கொடிகளை அல்ல துடிக்கின்றன இந்த நிறுவனங்கள். இந்திய ஏகாதிபத்தியம் தனது வலிமையை தெற்காசிய நாடுகளிடம் பறை சாற்ற நினைக்கிறது.

  81. I am continue reader of vinavu.com. but now a days i feel that, this website is not supporting the fact and truth. This website is trying to support only to one community. It is very painful that, it becamee one in the another 1000 websites. now i am lost interest to read vinavu…

Leave a Reply to சிந்தியுங்கள் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க