privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

-

யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது  தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”

இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின் உதவியால் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்  சத்ய சாயிபாபாதான்.

வானத்தை பூமியாகவும் பூமியை வானமாகவும் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், செயலிழந்து விட்ட அவரது சிறுநீரகங்களையும் நுரையீரலையும் பழைய நிலைமைக்கு மந்திரத்தின் மூலமாவது கொண்டு வர வேண்டிய அவசியம் அவருக்கிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்  ஆஸ்த்துமாவையும், கான்சர் கட்டிகளையும் முதுகுதண்டு வடங்களையும் நொடிப்பொழுதில் ‘குணப்படுத்திய’ சாயிபாபா, உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருகில் சென்று அரவணைத்தும் தடவிக்கொடுத்தும் ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னுடம்பை தானே குணப்படுத்திக்கொள்ளும் அற்புதத்தைக் காண அவரது  பக்தர்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ மருத்துவத்தின்  அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

சாயிபாபாவை  பற்றி பெரிதாக  அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில்  செயினை வரவழைப்பார். மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக் கொடுப்பார். இவை எல்லாரும் ஒரு சில  பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு  அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை பூசணிக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…

ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளிலும் பக்தர்கள்  உண்டு.  பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு.

1926ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் பிறந்த இவர் தனது 13ஆம் வயதில்  மந்திர தந்திர சக்திகளை காட்டத் துவங்கினார். பூக்களை வரவழைப்பது,  இனிப்புகளை வரவழைப்பது என்பது வித்தைகளை காட்டினாராம். தன்னை சீரடி சாயிபாபாவின் மறு உருவம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தானே இறைவன் என்றும் சொல்லிக்கொண்டார்,அதனை நிரூபிப்பதற்காக பூக்களை தரையில் வீசினாராம்.,  வீசிய பூக்கள்  தெலுங்கு எழுத்துகளாக மாறி, அவற்றை படித்தபோது சாயிபாபா என்று இருந்ததாம்.. இதனை அவரது பேராசியர் கஸ்தூரி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரி அவர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை போலும். இல்லையேல் பூக்களை வானத்தில் வீசி அவைகள் நட்சத்திரமாக மாறி பின்னர் தெலுங்கு முதல் உலக மொழிகள் அனைத்திலும் சாயிபாபா என்று தென்பட்டதாக அடித்து விட்டிருக்கலாம்.

1950ய-இல் சிறு ஆசிரமமாக தொடங்கப்பட்ட பிரசாந்தி நிலையம்  இன்று ஒரு சிறு நகரமாக  வளர்ந்து நிற்கிறது. பல நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்குமிடங்களோடு, ஆரம்பப்பள்ளி,பல்கலைகழகங்கள், மருத்துவமனைகள் எல்லாம் சாயிபாபாவின் பெயரில் பிரம்மாண்டமான நிறுவனங்களாக  வளர்ந்திருக்கிறது.

அவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர். வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று  பலதரப்பினர் அடங்குவர். சாயிபாபா வெளிநாடுகளுக்குச் செல்வதில்லையே தவிர அங்கும் அவருக்கு செல்வாக்குண்டு.

சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.

”நான் 1976-ஆம் ஆண்டிலிருந்து  சாயிபாபாவுடனிருந்தேன். அதற்கு முன்பு டிரான்சிடெண்டல் மெடிட்டிடேஷனில் ஆசிரியராக இருந்தேன். அங்குதான் பாபாவை  பற்றிய அறிமுகம் கிடைத்தது. எந்த விளம்பரங்களும் தேவையில்லை, பணம் எதும் கொடுக்கத் தேவையில்லை, வந்து அமர்ந்து கடவுளின் அருளைப் பெற்றுச் சென்றாலே போதுமானது என்று  மிகவும் எளிமையாக இருந்தது. புட்டபர்த்திக்கு வந்து சாயிபாபாவின் காலடியில் விழுந்தேன். அவர் காலடியிலேயே 21 ஆண்டுகள் கிடந்தேன். நான் அவருடைய  பிரியத்துக்கும் நெருக்கத்துக்குமுரியவனானேன்.  நான்கு  வருட  காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது. ஒருமுறை நான் ஒரு பெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன். சாயிபாபா, அந்தப்  பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும் தொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம் புரிந்திருக்கிறேன்”என்றும் கூறினார். நான் அவரது காலடியில் விழுந்ததோடு பிரியத்துக்குரிய எனது காதலியையும் பிரிந்தேன். ஏனெனில், அவரே கடவுளென்றும் கடவுளுக்காக எதையும் செய்யும் மனநிலையிலும் இருந்தேன்.”

1993-ஆம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தின் ஆறு  உட்குடியிருப்பாளர்கள் சாயிபாபாவின் படுக்கையறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். தாக்குதலில்  இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் நான்கு பேர் கைகளில் கத்தி வைத்திருந்ததால் போலிசால் தற்காத்துக்கொள்ள சுட்டபோது  இறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அனைவரது எதிர்காலத்தையும் அறியும் தெய்வீகச் சக்தி படைத்த சாயிபாபா  அப்போது உயிருக்கு பயந்து ஓடிவிட்டார்.  கொல்லப்பட்ட அனைவரும் சாயிபாபாவுக்கு நெருக்கமானவர்கள்தான்.

அந்த நிறுவனம் ஒரு கொலைகார நிறுவனம். அது  பணத்தை வெளுக்கும் ஒரு நிறுவனம். ஆசிரமத்துக்கு ஒருநாளைக்கு குறைந்தது பத்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர்  வரைக்கும் வருவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும். பல அரசியல்வாதிகளிடமிருந்தும் பணம் டிரஸ்டுக்கு வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல், பல மந்திரிகள்,அதிகாரிகள், கோர்ட்டு நீதிபதிகள்,சிபிஐ  அதிகாரிகள் என்று பலருக்கும் பணம் பட்டுவாடா  நடக்கும்.

அங்கிருக்கும் சூப்பர் ஸ்பெசல்  மருத்துவமனையைக் கட்ட  108 மில்லியன் டாலர்கள் நிதிஉதவி செய்தது, ஹார்ட் ராக் கஃபே.

அந்த மருத்துவமனை பார்க்க ஒரு அரண்மனைபோலவே இருக்கும். அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக  வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது. பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டு http://exbaba.com/shortnews/unesco.html விலகிக்கொண்டது.

“Behind the Mask of the Clown” என்று நான் எழுதிய புத்தகத்தின் மூலம் குறி வைத்து விரட்டப்படுகிறேன். ஆபத்துகள் என்னை சூழ்ந்திருப்பதால்  எனது நாட்டை விட்டு வெளியேறி சைப்ரஸில் வசிக்கிறேன். ஆனால், எது வந்தாலும் நான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏனெனில் சொல்லப்பட வேண்டியது ஏராளம் இருக்கிறது.”

இதுவே போதும். இதற்கு மேலும் நாம் எதுவும் சொல்லத்தேவையில்லாமல் விளங்கும். சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன.  இவை  எல்லாம் சாயிபாபாவுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. இந்தியாவை மையமாக வைத்து உலகெங்கும் எழுப்பப்படும் ஆன்மீகக் கிளைகளில்  இதுதான் நடக்கிறது.

ரவிசங்கரின் வாழும் கலை, அமிர்ந்தானந்தமாயியின் கட்டிபுடி வைத்தியம், கல்கி பகவானின் ஒன்னெஸ் கூட்டங்கள், பால் தினகரனின் ஜெபாலயம் என்று பக்தி இன்று ஒரு முக்கிய வியாபாரப்பொருள்.  ஆன்மீகமும் பக்தியும் ஒருகாலத்தில் ரிடையர்டான பெருசுகளின்  கூடாரமாக இருந்தது போய் இன்று அந்த வியாபாரக் கூடங்களின்  வாடிக்கையாளர்கள் இளைஞர்கள்தான். பெரும்பான்மையினர் படித்த நடுத்தர வர்க்கத்தினர்தான்.

பரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மை, வேலை நிச்சயமற்ற சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்சினைகள், பயமுறுத்தும்    எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு,போட்டி நிறைந்த உலகில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஏற்படும் போராட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் முன்னெப்போதும் இல்லாமல் இளைஞர்களை பாதிக்கின்றன.

வீட்டுக்கடனிலிருந்து, உயரும் விலைவாசியிலிருந்து,கிரெடிட் கார்டு…இதுபோக உறவுசார் பிரச்சினைகள்..முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தான் இப்படி சுரண்டப்படுவதை உணராத இந்த இளைய சமுதாயம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல உடனடித் தீர்வுகளை நோக்கி விரைகின்றனர்.

பெரும்பாலான நிறுவனங்களில் இன்று எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போயவிட்டது, எட்டு மணிநேரம் உழைப்பைத் தாண்டி எத்தனை மணிநேரங்கள் உழைத்திருக்கிறோம் என்பதும் இருநாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கவேண்டுமென்கிற முதலாளித்துவ நிர்பந்தமும் மக்களை யோசிக்கவே விடாமல் செய்கின்றன. ஏதோ தனக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதுபோல எண்ணி குமைகிறார்கள்.

ஒருநாளின் குறைந்தபட்ச ஓய்வு என்பது கூட தற்போது சுருங்கிவிட்டது. ஓடிக்கொண்டேயிருப்பதுதான் நகர வாழ்வு என்பதாக மாறியிருக்கிறது. தனது நிலைக்கான காரணத்தை  உணர மறுக்கிறார்கள். கரும்பைப் பிழிவது போல சக்கையாக பிழிந்து நடமாடும் பிணங்களாக வாழ்பவர்கள் ஒன்று இயலாமையாலும் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலையை நோக்கி ஓடுகிறார்கள்  அல்லது இந்த சாமியார்களின்  மடத்துக்கு வருகிறார்கள்.

இந்த இன்ஸ்டண்ட் குருமார்களும், சகல பிரச்சினைகளுக்கும்  தங்களிடம் தீர்வு இருப்பதாகக் கூறி இவர்களை காந்தமாக ஈர்த்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்தால் போதும், பிரச்சினைகள் தீர்ந்து போய்விடுமென்று கூறி மயக்குகின்றனர். ஒரு வாரம் தியான வகுப்புக்கு நித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக கூறுகிறார், அந்த  வகுப்புக்குச் சென்று  வந்தவரொருவர்.  ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப  வகுப்புக்கு ஐந்தாயிரம் வரை  வாங்குகிறார்.

தொலைப்பேசியில் பிரச்சினைக்காக ஜெபிக்க பணத்தை அனுப்பினால் போதுமென்கிறது பிரேயர் டவர்ஸ். அடித்தட்டு மக்களாக இருந்தாலும் 100 ரூபாயாவது கொடுத்தால்தான் உறுப்பினராக முடியுமென்கிறார் மேல்மருவத்தூர் அம்மா.  நமது தெருமுனையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும் ஈஷா யோகா வகுப்பில் வந்து முடிகிறது,இந்த நீண்ட பட்டியல்.

இவர்கள் அனைவரும் சொல்வது, நல்லதையே பார்த்துப் பழகுங்கள், கெட்டவற்றை நினைக்காதீர்கள், எந்த செய்தியிலும் நல்ல பக்கத்தையே பாருங்கள், பொறுமையோடிருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியைத் தேடிக் கண்டடையுங்கள்,  ” என்று நீளும் இந்த தத்துவம் கடைசியில் உண்டியலில் வந்து முடியும்.

முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். ஆளும்  வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை. சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு தேவை. அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி  வாழையாக தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப்  பாருங்கள், நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும் படிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம் பதிலாகுமா? பிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும். கொலைப்பழி இருந்தபோதும் அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா என்ன? ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு குறையாமல்தானே இருக்கிறது!

அதனால்தான் சாயிபாபாவின் ஆசிரமத்தில் நிகழும் கொலைகளையும், குழந்தைகள் மீதான கொடுமைகளையும் மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கிறது ஆளும் வர்க்கம். சாயிபாபாவின் ஆசிரமத்தில் மன்மோகன் சிங்க்குக்கு  என்ன வேலை? இவரது தெய்வீக சக்தி இருக்கும் போது  மருத்துவ பல்கலைகழகங்களும் பொறியியலும் எதற்கு? தெய்வீக சக்தியையே பயன்படுத்திக்கொள்ள முடியாதா?பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடியவருக்கு, முக்காலமும் அறிந்தவருக்கு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியை தடுத்து நிறுத்தியிருக்கலாமே!

இதோ, இப்போது உலகெங்கும் அவரது பக்தர்கள்  அவருக்காக வேண்டியபடி இருக்கிறார்கள். இன்னும் சில பக்தர்கள், இது சாயிபாபாவின் லீலைதானென்றும் அவர் விரைவில் குணமாகி வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ, அவர் கடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை சந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று  முடிவு செய்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.

பார்க்கப்  பரிதாபமாக இருந்தாலும், ஆன்மீகம் செய்து வைத்திருக்கும் கோளாறு புரிகிறதா?

மக்களின் போராட்டங்களை அடக்க  ராணுவத்தை குவிக்கும் அரசு இந்த சாமியார்களின் ப்ராடுத்தனத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதா என்ன?

முடியும். ஆனால் செய்யாது. பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம்  பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தின்பாற்பட்டதல்ல. தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.

சாயிபாபாவின் மீதான  கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்

ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள்  உணரும்போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை நிறுத்துவார்கள். மாறாக அப்போது சாமியார்கள் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள். போக வைப்போம்.

_________________________________________________

– சந்தனமுல்லை

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

 


 

  1. யார் கடவுள் ? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா ? – சந்தனமுல்லை…

    பக்தர்களை அரவணைத்து ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்வதைக் காண அவரது பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரோ மருத்துவத்தின் அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்….

  2. வினவு !
    ஒரு காலத்தில் வினையறுத்தவர்கள் இன்று தினையறுக்கிறார்கள் ஏன்?
    மீண்டும் வினையறுக்க !!!

    ”சாயிபாபாவை பற்றி பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை வரவழைப்பார். மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக் கொடுப்பார். இவை எல்லாரும் ஒரு சில பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை பூசணைக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…”

    இந்த வசனம் ஓகே………..

    சாயி யிடம் ஒரவன் போய் சமுத்திரத்தை பெற்றோலாக மாற்றும் படி கேட்டான்.
    அதுக்கு சாயி முட்டாள்!!
    சமுத்திரத்தை பெற்றோலாக மாற்றியபின் நீ சிகரெட் துண்டை எறிந்தால் என்னவாகும்? என்றார்….

    இப்படி யான முட்டாள்(வினவு) ளும் இருக்கிறார்கள்………………..

    [obcured]

    ”வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே” இவ் வசனத்தை மாற்றவும்!!!

    • தெருநாய் இந்த போஸ்ட் மரத்தில் காலைத் தூக்கி என்ன சொல்ல வருகிறது என்பதை தெளிவாக கூறினால் சிறப்பாக இருக்கும்.

    • தெரு நாய் ஏதோ கொலைசிட்டு போகுதுன்னு விட்டுடலாம். ஆனா தெளிவாய் கொலைசிட்டு போனால் நல்ல இருக்கும். 5 அல்லது 6 வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன் அவர்கள் (அவாள்) பத்திரிக்கையான இந்தியா டுடே யிலேயே சாய்பாபா வை ‘ பற்றி புட்டு புட்டு வைத்து விட்டார்கள் .தெரு நாய் அலைஞ்சி திரிஞ்சி படிச்சா நல்ல இருக்கும் .லிங்க் கிடைச்சால் நானே நானே கொடுக்குறேன் . விரைவில் .

    • டேய் தெருநாய், ஊருல இருக்குற எல்லா சாமியாற்பயல்களும் திருட்டு மொள்ளமாரி பயலோதான்,

      சாய்பாபா சமுத்திரத்தை பெற்றோலாக மாற்ற வேண்டாம், சிகரட் பிடிக்கிரவனையும், அத தயார் பண்றவனையும் மாத்தினால் போதும்,

      “நான்கு வருட காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது.

      என்று சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.” ரெண்டு பேருமே ஆம்பளைங்க அப்பறம் எப்படி?………….

      அப்பா உணக்கு எத்தனை வருஷம், அப்பறம் சாய் பாபா நாயை சொன்னா இந்த தெருநாய்- க்கு கோவம் பொத்துகிட்டு வருது, பாத்து நாயே உனக்கும் ஏதாவது மர்ம நோய் வந்துட போது.

    • enda kadalla viluntha sethu povannu therinchuthane antha naayi kappalla irukku,adukku petrol kadalla cigrarette potta thee pidikkum nu theriyatha,unakku vaayila virala vacha kooda kadikka theriyathu pola,ippidiye saamiyar ellam virala vachiruvainga pathukka

  3. அட போங்கங்க, எனக்கு எரிச்சலா இருக்கு, பணக்காரர்கள் எப்படி ஏழைகளுடன் பழகுவதில்லையோ, அது போல்தான் எனக்கு ஆத்திக மடயர்களிடமும் ., பணக்காரர்களின் காரணங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் , எனக்கு இந்த மாதிரியான விளக்கங்கள் கூட எரிச்சலாக இருக்கிறது.,

    பாபா வை நம்புபவர்கள் நம்பி தொலையட்டும், இவர் டிக்கெட்ட் வாங்கியப்பின் இன்னொரு பாபா வரத்தான் செய்வார்கள், நீங்களும் இதே போன்ற ஒன்றை எழுதுவீர்கள்.,

    அப்புறம் வினவு தோழர்களுக்கு ஒன்று, – எனக்கு கடவுள் மறுப்பு பற்றி எழுதுவதே திராபையாகதான் தோன்றுகிறது., கடவுளை நம்புவதாக சொல்ல்விட்டு , இந்த அற்ப புழுக்களை நம்பி தொலையட்டும் , நாசமாக போகட்டும்

    • I completely right. In the name of religious, there are millions of people in this world works against the humanity in the name of jihadi / terrorisum. I still remember the ‘yervadi darga’ accident. There are 1000 of darga sells fake black majic items. In the name of religious (Islam and christianity), western countries are fighting with each other. it kills millions people.

      It is very difficult to control the fake mullas. What to do.. crap people are every where….

  4. ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள் உணரும்போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை நிறுத்துவார்கள். //

    சரியா சொன்னீர்கள்… சிறப்பா , தெளிவா எழுதியுள்ளீர்கள்.,.

    • இல்லை. போலிகளை, அசல்களில் இருந்து பிரித்து, தவறிக்க ‘பகுத்தறிவை’ சரியாக பயன்படுத்த வேண்டும். ஆன்மீகம் என்பது பெரிய subject. deep and profound concepts exist.
      ஆன்மீகவாதிகள் அத்தனை பேரும் போலிகள் அல்ல.

      the best need not be famous while the famous need not be the best. இது ஆன்மீகம், மருத்துவம், ஜோதிடம் போன்ற பல துறையை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

      சாய் பாபா மனிதற் தாம். ஆனால் சில ‘தெய்வாம்சங்கள்’ உள்ளவர் என்றே தோன்றுகிறது.
      சில நிகழ்வுகளை காணும் போது. he is normal human being with some ‘powers’ and extraordinary charisma. ஓரினசேர்க்கை பற்றிய அவரின் செயல்களை பற்றி படித்திருக்கிறேன். மேலும் அந்த கொலைகளுக்கான காரணங்கள் அமுக்கப்பட்டுவிட்டன.

      ஆனால் இவரை போன்றவர்கள் எல்லாம் தர்ம காரியங்கள் பெரிய அளவில் நிகழ ஒரு focal point போல் செயல்படுகின்றனர். they channelize the money from the donors to the needy. கடவுள் பேரை சொல்லி கேட்டால் தான் தர்மம் செய்கிறார்கள்.

      //அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.///

      இதெல்லாம் ஆதரமில்லாத atrocious allegations. அங்கு மிக அருமையான தொண்டாற்றுகிறார்கள். பல லச்சம் ஏழைகள் மிக பயன் அடைந்திருக்கிறார்கள்.

      மற்ற குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை. ஆனால் கிட்னி திருடுகிறார்கள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

  5. “முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். ஆளும் வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை. சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு தேவை. அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி வாழையாக தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.”

    சாமியார்களின் இலக்கு நடுத்தர மற்றும் மேட்டுக்குடியினர்தான். இவர்களுக்கு கார்பரேட் சாமியார்கள் என்று பெயர். இவர்களின் பம்மாத்துகள் ஏழைகளிடம் எடுபடுவதில்லை.

    ஆன்மீக போதை என்பது உழைப்பின் களைப்பைப் போக்க உழைப்பாளி அடிக்கும் சரக்குக்கு ஒப்பானது நடுத்தர வர்க்கத்தின் ஆன்மீக போதை. உழைப்பாளியின் போதை காலையில் தெளிந்து விடும். ஆனால் நடுத்தர வர்க்கத்தின் ஆன்மீக போதை ஆயுள் வரை தெளிவதில்லை.

    இவர்களின் போதை தெளிய ‘சூடு போடும்’ சாமியாராய் நாம் அவதாரம் எடுக்க வேண்டும். வேறு வழியில்லை.

    சிறந்த படைப்பு. படைப்பில் முதிர்ச்சி தெரிகிறது. சந்தனமுல்லை அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  6. பாபாவை நம்புவதும் நம்பாததும் உங்கள் தெரிவு.அதே போல்தான் கம்யுனிஸ்ட்களையும் நம்புவதும் நம்பாததும்.மாவோவின் காமக் களியாட்டங்கள் என்று கூகுளில் தேடினால் என்ன்வெல்லாம் கிடைக்கிறது.ஸ்டாலின் செய்ய்ச் சொல்லாத கொலைகளா இல்லை ரஷ்யாவில் உயர் மட்டத்தில் நடக்காத கொலைகளா பழி வாங்கல்களா இல்லை போலி விசாரணை மூலம் கொல்லப்படாதவர்களா. டிராட்ஸ்கியை கொன்றது யார், எங்கே எப்படி?.சந்தனமுல்லை மேடம் இதையெல்லாம் பொய் என்று சொல்கிறாரா இல்லை கம்யுனிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்கிறாரா.ரஷ்ய கம்யுனிஸ்ட் கட்சியின் உயர் மட்டத்தலைவர்கள் வாழ்க்கயை சுகமாக அனுபவிக்காமல் மக்கள் போல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார்களா.

    நீதி என்னவென்றால் சாமியார்களிடமிருந்தும்,கம்யுனிஸ்ட்களிடமிருந்து விலகி நிற்கவும்.
    அதுவே புத்திசாலித்தனமான செயல்

    “மாறாக அப்போது சாமியார்கள் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள். போக வைப்போம்”

    அப்படியானால் இப்போது அவர்கள் யாருக்கு ஆலோசகர்களாக
    இருக்கிறார்கள்- வினவிற்கா?

    • ஆமா, இப்போ காந்தியின் காமக் களியாட்டங்கள் பற்றியும் புத்தகம் வந்திருக்கிறதே!
      கூகிளில் தேடினால் என்னென்ன குப்பை எல்லாம் அகப்படும்.
      சொல்லப்படுகிறவற்றை நம்ப விரும்புகிற ஒவ்வொருவனும் நம்புகிறான்.

      சாய் பாபா ஒரு பிராடு என்பதற்கு அவரை எதிர்க்காத செய்தி நிறுவனங்களின் செய்திகளே போதுமானவை.
      அந்தக் குறளி வித்தைக்காரன் வெறுங் கையில் தங்கச் செயின் வரவழைத்த ‘அற்புதத்தின்’ வீடியோ படம் உண்டு. பார்த்ததுண்டா?

    • உண்மை. சாமியார்களை விட கம்யுனிஸ்டுகள் ஆபத்தானவர்கள். கொலைகாரப் பாவிகள்.

    • சரியாக சொன்னீர்கள் .. சாமியார்களை விட கம்யூனிஸ்டுகள் ஆபத்தானவர்களே …

      ஜாக்கிரதையாக இருங்கள் ..

      காவிப் பன்றிகளையும் , முதலாளித்துவப் பன்றிகளையும் அறுத்து உப்புக் கண்டம் போடவே கம்யூனிஸ்டுகள் துடிக்கிறார்கள் ,,

      காவிப் பன்றிகளே , முதலாளித்துவ பன்றிகளே ..

      லாலா சார் .. கொடுக்கும் எச்சரிக்கையை … ஏற்றுக் கொள்ளுங்கள் …

      உசாராக இருங்கள் …

  7. சாமியார்கள், அரசியல்வாதிகள், போராளிகள்- ஒரே ஜாதி!

    கவர்ச்சி + பேச்சு = மூளைச் சலவை!

    பின் தொடர்போர்! – விட்டில் பூச்சிகள்!

    • (கற்பனை எனினும், இது இங்கே நிஜமாக வாய்ப்புகள் உண்டு!)
      எதிர் பாருங்கள்! விரைவில் வினவில்!

      தலைப்புகள்:
      “அன்னா ஹசாரே, ஒரு போலிப் போராளி!”
      “காந்தியாகும் ஆசையில், அன்னா?”
      “அடிச்சானையா ஸ்டண்ட்! அன்னா கசாரே!”
      “படுத்துக் கொண்டே போராட்டமாம்! துப்பில்லையா பார்ப்பனவாதிகளே?”

      வரவிருக்கும் கருத்து முத்துக்கள்:

      1.ஹசாரேவை, நகர்ப்புற மக்கள் மட்டுமே ஆதரிக்கின்றனர்!எனவே இது ஒரு ஆதிக்க வர்க்கத்தின், சூழ்ச்சியே!
      2.அருந்ததி ராய், இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை!
      3. 42 வருடங்களாக, வோட்டுப் பொறுக்கி கட்சிகளுக்கு பயந்து, யாரும் வாயைத் திறக்கவில்லை! மேல்தட்டு மக்களின் திடீர் ஞானோதயம்!
      4. போராட்டத்தை தூண்டியது அமெரிக்கா!
      5. இந்த உண்ணாவிரதமெல்லாம், வெற்றி பெறாது! புரட்சி ஒன்றே தீர்வு!

  8. >>>>>>முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். <<<<<<<

    மிக அருமையான வார்த்தைகள்!

    நன்றி!

    சினிமா விரும்பி

  9. //பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம் பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தின்பாற்பட்டதல்ல. தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.

    சாயிபாபாவின் மீதான கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்//

    ஆஹா அற்புதம் – மிகத்துல்லியமான கணிப்பு

  10. //சாயிபாபாவின் மீதான கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்///

    இல்லை. நான் மாறுபடுகிறேன். கருணாதிக்கு இந்த வயதில் அத்தனை cynisim இல்லை. உண்மையான அக்கறை என்று தான் நினைக்கிறேன். தெலுங்கு கங்கை திட்டத்திற்க்கு முன்பு சாய்பாபா செய்த பெரும் உதவியை அவர் மறக்கவில்லை.

    தங்கள் பிரச்சனைக்கு ’காரணமான’ சமூக அமைப்பின் மீது ‘கோபம்’ வந்து, அந்த கோபத்தை குவித்து, வழி நடத்தி செம்புரட்சி செய்து, தீர்வு காணலாம் என்பது மார்க்சியர்களின் கனவு. இந்த கோபம் உருவாகவில்லை என்ற வருத்தத்தில், நிலைமையை சரியாக பல நேரங்களில் எடை போட தவறுகிறார்கள். எல்லோரின் ‘நோக்கத்தையும்’ எப்போதும் சந்தேகப்படும் paronia. தங்களுடைய வர்க ’எதிரிகளுக்கும்’ மனிதனேயம் இருக்கும் என்பதை எண்ணி பார்க்க தவறுகிறார்கள். that such humanitarian motives could exist among various shades of people ; marxists over simplify and assign wrong motives to all gestures like this. hence their paroniod and pathological hatred towards NGOs, World Bank, and anyone they deem agent of capitalism, etc. totally wrong perception and judgments which lead to extremely wrong conclusions and actions.

    • தெலுங்கு கங்கைக்கு காசு கொடுத்ததற்கு நன்றியாம்? சூப்பர் நகைச்சுவை போங்க, கடந்த வருடம் பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியாரின் உண்மைத் தம்பி (அய்யா) கருணாநிதி தனது மனைவி (அவரது மகள் கனிமொழியின் தாயார் இல்லை) சாய்பாபா காலில் விழுந்து ஆசிபெறுபதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்து அதற்கு நம்ம தோழர் துரை சண்முகம் அற்புதமாய் பாராட்டு கவிதை படைத்திருந்தார். தயாளு அம்மாளின் மன சந்தோஷ‌த்திற்காகவும், சில பல ஓட்டுக்களுக்காகவும்தான் இந்த ஸ்டேட்மென்டு

      • அப்படி என்றால், சாய்பாபாவை ஏற்றுகொள்ளமல், அவரை ‘எதிர்பவர்களின்’ ஒட்டுகளை இழக்க வேண்டியிருக்குமே. உங்க அனுமானம் சரியல்ல என்பது எம் கோணம். இந்த ‘நோக்கங்களை சந்தேகப்படல்’ என்பது ஆளாளுக்கு இஸ்டத்துக்கு செய்றாக. ஜோசியகாரங்க தோத்தாங்க. இதை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும். wrong interpretation of motives and ascribing motives to innocent gestures..

        • sai baba va eatthkkathavanga ellam karunanithiya mattum eatthukkuvangala? onnu karuppu naai,innonnu kaavi naai, ethu kadichalum rattham varathu ennamo kadi vangaravanukku than.

  11. It is obvious that SCIENCE and MEDICAL development only SAVING THE LIFE this “GOD” today!

    ///”The 85-year-old Baba remained on ventilator to help his respiratory functions while kidney function is continued to be supported by renal replacement therapy (CRRT.)”///

    His heart condition and kidney condition and lung condition are all behaving like ANY NORMAL HUMAN being’s heart, lung and kidney.

    Since he is in a critical condition, I do not want to get into this. This is not the right time to criticize him or his well wisher M Karunanidhi because of his conditions!

    Let us wish him to fully recover well soon as good human beings do!

    p.s: I dont want to give my e-mail id. So it is not a real one. Sorry!

    -varun

  12. சாமிக்கும், சாய்பாபா சாமியார்களுக்கும் ஜால்ரா போடும் அப்பாவிகளே….

    நீ அறிவியலை நம்பறயா? இல்ல ஆன்மீகத்தை நம்பறயா?…

    அறிவியலை நம்புனா… கன்னி முன்னாடி உக்காரு…

    ஆன்மீகத்தை நம்புனா… சாய்பாபா குடுமிய புடிச்சு அதுல வினவுக்கு பின்னூட்டம் எழுது.

    ஏம்பா தம்பிகளா… நீங்கல்லாம் ஊருக்குப் புதுசா…

    புதுசா இருந்தா…யூ டியுப்ல அந்த சாய்பாபாவோட பிராடுத்தனத்தையெல்லாம் அம்பலப்படுத்தின காட்சியெல்லாம் இருக்கு… மொதல்ல அதப்பார்த்துட்டு வந்து இங்க பேசுங்க தம்பி.

    ஏண்டா, நாலு வித்தை காட்டுற நீ(சாய்பாபா) பெரிய ஆளா…

    நாலாயிரம் வித்தை தெரிஞ்ச பி சி சர்க்கார் பெரிய ஆளாடா…

    உன் வித்தைய வச்சு உன்னயே காப்பத்திக்க தெரியல…

    இழுத்துக்கிட்டுருக்கற மூச்சு இப்பவா பிறவான்னு உனக்கு தெரியாது…

    இப்ப,

    எனக்கு தெரியும்டா……

    மூக்குல இருக்கற குழாய புடுங்குனா நீ முடிஞ்சு போவேன்னு.

    • //எனக்கு தெரியும்டா……

      மூக்குல இருக்கற குழாய புடுங்குனா நீ முடிஞ்சு போவேன்னு.//

      ரிப்பீட்டே…

      பதிவை விட இந்த கமென்ட் எனக்கு ரொம்பவும் பிடிச்சுது..

      இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..

      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்..

      சமயம் பார்த்துப் பல வகையினில் கொள்ளை அடிக்கிறார்..

      “பக்தரைப் போலவே பலவேஷம் போட்டு பாமர மக்களை வலையினில் மாட்டினார்..”

      பட்டுக்கோட்டை அன்னைக்கே எழுதி வெச்சது…

      புரிந்து கொள்ளாத மக்களை விட்டு விடுவோம்.. பகுத்தறிவு வளர்கிறது.. இனி வருங்காலத்திலாவது மக்கள் இது போன்ற பூச்சாண்டி வேலைக்காரர்களைப் பார்த்து நம்பாமல் நடந்து கொண்டால் சரி…!!

  13. கருணாநிதி ஒரு வகையான பச்சை அயோக்கியன்.
    சாய்பாபா இன்னொரு வகையான பச்சை அயோக்கியன்.
    பாசம் இயல்பானது தானே!

    இந்தக் குப்பைகளுக்கு வக்காலத்து வாங்குகிற குப்பைகளை என்ன சொல்லுவது!

    • கூட்டி தள்ளிவிடுக !! :)))

      லே, வேணாம்லே, இப்படி எல்லாம் தெய்வ நிந்தனை செய்தால், பொறவு சாமி கண்ன குத்திடும்.

    • ஒங்க பாடு பரவால்லே.
      உருப்படியான பார்வை இருந்த்தாத்தானே கவலை.

  14. ஆன்மீகத்திற்கு ஒரு சாமியார் அல்லது மதகுரு அவசியமா?
    இந்த சாய்பாபா மருத்துவமனிக்கு சென்றபின்னும் மர்மம் தொடர்கிரறது.சாய்பாபாவிற்கு பிறகு அந்த 40,000 கோடி சொத்துக்ளை யார் உடமையாக்கி கொள்வது என்று நடக்கும் கூத்துக்ள்.புட்டபர்த்தியில் ஊரடங்கு உத்தரவு.மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
    ஆன்மீகம் என்றாலே மர்மக்கதை போல் தெரிகிறது.

  15. I am not a devotee of any Guru and I have no hatred against any religion. Sandana Mullai should visit the Sai Baba Mission Hospital in Whitefield to know how poor patients are treated there and how a hospital is run by a private trust without any profit motive. The institutions run by his trust are run with money from devotees unlike church sponsored institutions which rely on foreign funds.He recognises all religions as equals and never says that christians should become Hindus as Hinduism is superior. He is not like Father Staines or others who do service as an inducement to convert to christianity. In that sense he is far better than Zakir Naiks and Staineses. He is not a brahmin by birth and there are many brahmins who worship as their guru and rever him as the avatar. He bears no ill will against other Gurus. In fact to be his devotee one need not be even a Hindu. In a world where there is so much hatred for persons of other religions spiritual gurus like him are like beacons of hope. He mobilized money and resources to execute a major water project in anatapur district and did the same for Telugu Ganga.
    So please be fair in your assessments.
    தொடர்புடைய பதிவுகளில் கிறித்துவ மதம் உட்பட பிற மதங்கள் இடம் பெறவில்லையே.ஏன் கிறித்துவ பாதிரிகளை குறித்து எழுதினாலும் அதை அடிக்கடி தொடர்புடைய பதிவு என்று ஆன்மிக வியாபாரிகள் என்று தலைப்பிடும் போது குறிப்பிடக்கூடாது என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதா.

    • Mr.Nam… thani patti itchaikalai maraipatharkaka samuthayathai yematrah pottu kollum porvai intha uthavikal.. I know persons who doesnt want to give extra 10rs for his labour but write his entire wealth to these samiyars.. hope u guys remember story of so many ppl who got psychofancy by this guy and commited family sucide.. eg: one big jewellery in trichy.. neenkal 10000crs uthavi purinthathar samiyarin seyal yogiyam akki vida mudiyathu.. I believe in god but hates these crude sami brokers..

  16. இந்த சாய்பாபா,தினகரன் கோஷ்டிக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளை அடிக்கும் கும்பல். இந்த ஆட்களால் என்ன முடியும் என்று மக்கள் இவர்க்ளிடம் செல்கிறார்கள் என்பது தெரியவில்லை,அதனை பற்றி யாராவது எழுதினால் ,அவனைப் பற்றி எழுது முதலில் என்று கூறுபவர்களை என்ன சொல்வது?.
    சாய்பாபா கடவுளா? செய்யும் மந்திர தந்திர வேலைகள் உண்மையா? ஏமாற்று வேலையா? என்பதை யோசிக்க வேண்டும்.

    எப்படி இவரிடம் 40,000 கோடி சொத்து சேர்ந்தது?.

    ஆன்மீக வியாபாரிகளுக்கு மத வித்தியாசம் இல்லை.எல்லாரும் திருடர்களே.

  17. //அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.///

    இதெல்லாம் ஆதரமில்லாத atrocious allegations. அங்கு மிக அருமையான தொண்டாற்றுகிறார்கள். பல லச்சம் ஏழைகள் மிக பயன் அடைந்திருக்கிறார்கள்.

    மற்ற குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை. ஆனால் கிட்னி திருடுகிறார்கள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்

  18. சித்தர குப்தன் சார்,

    நீங்க ‘எமதர்மராஜாவிடம்’ தானே வேலை பாக்குறீக. இப்பெல்லாம் எப்படி, கம்யூட்டர் கொண்டு வந்துட்டாங்களா, records maintain பன்ன ? என்ன s/w package உபயோகப்படுத்துறீங்க : SQL ஆ, அல்லது Oracle ஆ ?

    சரி, ஒரு query எழுதி தமிழகத்தின் முது பெரும் தலைவர் ஒருவரின் ஆயுசு எவ்வாளோன்னும் சொல்ல முடியுமா ? எம்ம குருவும், நானும் பல வருசமா கணக்கு போடரோம். ஆனா கண்டு பிடிக்க முடியல. மனுசன் செஞ்சுரி அடிப்பாரு போல. ஆனா எம்ம குரு அடிக்கடி ஒரு பழமொழி சொல்வார் : பாவிகளுக்கு தான் நீண்ட ஆயுசுன்னு. இருந்த எல்லாத்தையும் அனுபவிக்கனுமாம். நல்லவக சீக்கரமே போய்டுவாகளாம் !

    • “தமிழகத்தின் முது பெரும் தலைவர்” is living with Medica technology advancment. It is Periyaar the true “தமிழகத்தின் முது பெரும் தலைவர்” who lived long beging atheist and with less medical technolgies. We Love Him for hist courage.

      • ராஜாஜியும் தான். பெரியார் கூட பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் ராஜாஜி கடைசி வரை உடல் நலத்தோடு இருந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ராஜாஜி இறந்த போது, சக்கிர நாற்காலியில் சுடுக்காட்டுக்கு சென்று, கதறி அழுதார் பெரியார். (1972 டிசம்பர்). அவர் தாம் பெரியார். அவரின் பண்புகளை முதலில் தோழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சிறுவர்களை கூட வாங்க என்று மரியாதையோடு, அன்போடு தான் விளிப்பார். தனி மனித தாக்குதல்கள் செய்ய மாட்டார்.

      • //”பெரியார் கூட பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் ராஜாஜி கடைசி வரை உடல் நலத்தோடு இருந்தார்”//

        துன்பங்களை அனுபவித்தார் Still he did not pray god, but Opposed praying. that makes the difference!!!! thats the courage.

        All the creature of the nature, having a common life irrespective of you pray for GOD or NOT. Life span of a creature is based on the immunity, Environment and lifestyle it chooses to. Not based on the whether it believes in GOD, ASTROLOGY, praises GOD, or NOT. The only rule of the nature is “survival of the fittest”, NO “Eman & chitagupthan” counting on the sin, virtue and punishing during /after life. Nothing more, that’s my point.

        //அவரின் பண்புகளை முதலில் தோழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சிறுவர்களை கூட வாங்க என்று மரியாதையோடு, அன்போடு தான் விளிப்பார். தனி மனித தாக்குதல்கள் செய்ய மாட்டார்//

        This one is applicable to all of us, I witness this from you as well. When we cant control our emotion, what is the need of Doing YOGA etc? 🙁

    • //சரி, ஒரு query எழுதி தமிழகத்தின் முது பெரும் தலைவர் ஒருவரின் ஆயுசு எவ்வாளோன்னும் சொல்ல முடியுமா ? எம்ம குருவும், நானும் பல வருசமா கணக்கு போடரோம். ஆனா கண்டு பிடிக்க முடியல.//

      பரவாயில்லை வேறு ஒரு இடுகையில் ஜோசியத்தைப்பற்றி நம்பிக்கையோடு எழுதிவிட்டு, தற்போது அதாலும் முடியாத சில உண்டு என ஒப்புதல் வாக்குமூலம்

      • எல்லாத்தை சொல்லிட்டா அவன் கடவுளாகிவிடுவான். மரணம், திருமணம் போன்ற சில முக்கிய விசியங்களில் ஜோசியக்காரன் தோத்துவிடுவான். ல்ச்சத்தில் ஒரு ஜோதிடர் சரியாக சொல்ல முடியும். நான் பார்த்திருக்கிறேன். இயற்க்கை மரணத்தை முன்கூட்டியே சொல்லி, சொன்ன படி மரணம் அடைந்த ஜோதிடர்களை சந்தித்திருக்கிறேன்.

        • //ல்ச்சத்தில் ஒரு ஜோதிடர் சரியாக சொல்ல முடியும். நான் பார்த்திருக்கிறேன். இயற்க்கை மரணத்தை முன்கூட்டியே சொல்லி, சொன்ன படி மரணம் அடைந்த ஜோதிடர்களை சந்தித்திருக்கிறேன்.//

          No Way, I need proof. Even if that could have happened, it should be a mere coincident or a planned Murder / sucide.

        • mani,

          proof தானே வேணும். அதுக்கு நேரில வாங்க பிரதர், நிறையா காட்டறேன். அதுமட்டுமா, பீதாம்பர வித்தை, கூடு விட்டு கூடு பாய்தல், மலையாள மாந்தரீகம், இட்சினி வசியம், பிரசன்ன மார்கம், இன்ன பிற இருக்கு. மேலும் பல விசியங்கள் இருக்கு. இங்கு அதையெல்லாம் எடுத்து வுட முடியாது. சரி, தட்சணையா எவ்வளவு தருவீக ?

  19. Selection of “samiyar” is similar to selection of shirts. For Below middle class people -suruttu samiyar , saraya samiyar etc. For Middle class – golden temple Narayani, Nithyanandha etc. For upper class – Baba, Sandrasami etc. So this society need this type of relief and the Samiyar’s also exploit this situation.

  20. //முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள்.//
    Ada! :)))
    Very well written Mullai! Shared.

    • இதென்ன பெரிய விசியம். காம்ரேடுகள் செம்புரட்சி செய்து, முதலாளிமார்கள ஒழித்து கட்டிவிட்டு, ஆட்சியை பிடித்து, ‘நல்லாட்சி’ செய்தால், இதை விட அதிகமான ‘இயந்திரங்கள்’ பழுதாகி, தேயும் வாய்ப்பு அதிகமாகும். சாமியார்களுக்கும், மன நல மருத்துவர்களுக்கும் நல்ல சான்ஸ் கிடைக்கும், தம் ‘தொழிலை’ விரிவுபடுத்த. என்ன, அவர்களையும் ஒழித்து கட்டுவிடுவார்கள் காம்ரேடுகள்.

      பழைய வரலாற்றை கொஞ்சம் படித்து பார்க்கவும் தோழர்.

        • அப்படீன்னு நீங்களா அனுமாச்சிக்கிட்டு தொடர்ந்து எல்லத்தையும் ஒத்தை வரியில் மறுக்கும் ’விஞ்ஞான ரீதியான மார்க்சிய’ முறையில் பேசறீக !! இதுவரை ஒரு வரியையாவது ஆதாரத்துடன் மறுத்ததுண்டா ? விக்கிபீடியா வை வினவு மேற்கோள் காட்டியுள்ளதே ? மேலும் எதையும் ஆரய்ந்து பார்க்காமல் மறுப்பது பகுத்தறிவல்லவே.

          பல நூல்கள், ஆய்வுகள் உள்ளன. அறிவுலகம் எதை இன்று சரியென்ற ஏற்கிறது என்று தெரியுமா காம்ரேட் ? நீங்க பொய் என்று கருதுவதெல்லாம் பொய்கள் அல்ல.

          • அதியமான்,

            தினசரி நான்கைந்து பெயரில் வந்து பின்னூட்டமிடுகிறீர்கள்….இது பின்னூட்டங்களை வாசிக்கும் வாசகர்களுக்கு இடையூறு செய்வதாகும். மேலும் அவர்களை இழிவு படுத்துவதும் ஆகும். இதுவரை உங்கள் பின்னூட்டங்களை நாங்கள் என்றுமே மட்டறுத்தது கிடையாது. இனியும் அப்படி செய்யமாட்டோம். இது உங்களுக்காக மட்டும் செய்யப்படும் சலுகை அல்ல. பொதுவாக அனைத்து பின்னூட்டங்களையும் வெளியிடவேண்டும் என்ற எங்களது கொள்கையின்பாற்பட்டது.

            எனவே வாசகர்களை மதித்து இனி நீங்கள் அதியமான் என்ற பெயரிலேயே பின்னூட்டமிடுமாறு கோருகிறோம். இல்லையென்றால் உங்களது பினாமி பேர்கள் அத்தனையும் அதியமான் என்றே பெயரை மாற்றி வெளியிடவேண்டியிருக்கும். இருக்கும் பணிச்சுமையில் இது கூடுதல் சுமை என்பதை புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டுகிறோம். ஆதினம் ஜெயமோகன் தளத்தில் நீங்கள் எப்படி ஒரு பணிவான பக்தராக பேசுவீர்கள் என்பதையெல்லாம் வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஆனால் உங்களது கருத்தை ஒரு பத்துபேர் படிப்பதற்கு உதவி செய்யும் வினவு வாசகர்களையும் கொஞ்சம் மதித்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    • இதென்ன பிரமாதம். காம்ரேடுகள் செம்புரட்சி செய்து ஆட்சியை பிடித்தால், இதை விட அதிக ’இயந்திரங்கள்’ தேயும் தான். வரலாறு அதை தான் சொல்கிறது.

  21. உங்களது பெரும்பாலான கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன். என்றாலும் ஒருசில விஷயங்களை மறுக்கமுடியவில்லை. எனது மாமாவுக்கு இவரது பெங்களூரு மருத்துவமனையில்தான் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் எத்தனையோ பேர் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள் குறிப்பாக இதயநோய் சிகிச்சை. அதாவது இதை எப்படி ச்மாதானம் கொள்ளலாம் எனில் நித்தியானந்தா மாதிரி வெறும் காலைக் கழுவி ஐம்பதாயிரம் மட்டும் வாங்குவதோடு இல்லாமல் அந்த ஐம்பதாயிரத்தில் ஐந்தாயிரம் ஏதாவது ஒரு வழியில் மக்களுக்குச் செல்கிறதே என்பதுதான். மற்றபடி சாய்பாபா என்ற மனிதர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த அக்கறையுமில்லை.

    அதேசமயம் யோகா மையங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்.. நான் ஒரேஒருமுறை வாழ்க வளமுடன் யோகா மையத்திற்குச் சென்றேன்.. அப்போது கட்டணம் 200 க்கும் குறைவு என்று நினைக்கிறேன். ஆனால் அந்த இருநூறுக்கு 15 நாட்கள் நல்ல யோகா முறைமையும், காயகல்பம் எனும் யோகமுறையையும் அது சொல்லித்தரப்படும் நாட்களில் சிற்றுண்டியும் வழங்கினார்கள். மற்றபடி ஈஷா போன்றவற்றை நாடியது கிடையாது!!

    ஒருசில எக்ஸப்ஷன்கள் இருக்கின்றன என்பதால் அவற்றிற்காகவே இவர்களைத் தொங்கவேண்டியுமிருக்கிறது.

  22. சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.

    <>.

    ஒருமுறை நான் ஒரு பெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன். சாயிபாபா, அந்தப் பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும் தொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம் புரிந்திருக்கிறேன்”என்றும் கூறினார்.

    இதிலிருந்து சாயி ஒரு ஓரின புனர்ச்சியாளன் என்பது அப்பட்டமாக புரிந்துகொள்ள முடியுது. அந்த பெண்ணை பார்த்துதும் காவி வேசக்காரனுக்கு பொறாமையில அவள அறைஞ்சிட்டான். காந்திகூட இதே ரகமாமே! கேள்விபட்டீங்களா? அனைத்து மதம் கடவுள் போன்ற போலிகளை நம்ப வைத்து சமுதாயத்த ஏமாற்றி சுரண்டிவரும் எல்லா கம்மனாட்டிகளும் இப்படித்தான் இருப்பானுங்க.

    யப்பா, எல்லோரும் அவங்கவங்க கோமனத்த இறுக்கி கட்டிக்கீங்கப்ப. இனிமேலாவது நம்ம பொம்பளைங்க அனைவரும் அவங்வங்க ஆமபளைங்களா இவ்னுங்க மாதியான ரவுடீங்க வெறிக்கு இரையாகாம பத்திரமா பாதுகாப்பாங்கன்னு நம்புவோம்.

    [obscured] செத்து தொலையட்டும். இவன மாதிரி கேப்மாரிங்க ஒழிஞ்சாதான் சமுதாயத்துக்கு விடிவு வரும்.

    [கெட்ட வார்த்தயில எழுதினதுக்கு என் கருத்த வெளியிட மறுக்காதீங்க. நெறைய பேரு இங்கிலிபீசுன்னு தமிழல்லாத மக்களுக்கு புரியாதத எழுதுதுங்க. நான் எழுதினது சுத்தமான (சேரித்)தமிழ்.]

  23. Saibaba is in no way inferior than you people writing comments by hinding your own name. Is he ever compelled any one to join in his organizations or social service setup. To get relieve from their problems, the human flock need an extra-ordinary comfort from nature. Whether he believe it GOD or any other hell. It is not others business to critize Saibaba who has acieved some thing, a common man cannot achieve in his life. These days, humanity is totally missing from the society, due to such nasty arguments.

  24. இன்று (8th April) டாக்டர் கோவூர் பிறந்தநாள்…..சாயிக்கு சவால் விட்டவர்.. பூசணிக்காய் வரவழைக்க பாபாவிடம் கோரிக்கை வைத்தவர். இவரது சவாலை எதிர்கொள்ள மாணவர்களுக்காக தானம் அளித்துள்ளார்.) இந்த பாபாவை கடுமையாக விமர்சித்து வந்தார்….முடியாமல், பாபா white field ஐ விட்டு ஓடிய நிகழ்வுகள் எல்லாம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. மேலும் கோவை பிரேமானந்தா ( சாமியார் அல்ல, பகுத்தறிவாளர், SCPTIC என்ற அமைப்பின் தலைவர், பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர். மேலும் கோவை, போத்தனூரில் ஒரு விஞ்ஞான மையத்தை நிறுவி நடத்தி வந்தார். ஜி டி நாயுடு மருத்துவமனையின் தலைவர். சென்ற ஆண்டு காலமானார். தன் உடலை மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்காக கோவை மருத்துவ கல்லூரிக்கு தானம் அளித்துள்ளார்……

    • இன்று (8th April) டாக்டர் கோவூர் பிறந்தநாள்…..சாயிக்கு சவால் விட்டவர்.. பூசணிக்காய் வரவழைக்க பாபாவிடம் கோரிக்கை வைத்தவர். இவரது சவாலை எதிர்கொள்ள முடியாமல், பாபா white field ஐ விட்டு ஓடிய நிகழ்வுகள் எல்லாம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. மேலும் கோவை பிரேமானந்தா ( சாமியார் அல்ல, பகுத்தறிவாளர், SCPTIC என்ற அமைப்பின் தலைவர், பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர். மேலும் கோவை, போத்தனூரில் ஒரு விஞ்ஞான மையத்தை நிறுவி நடத்தி வந்தார். ஜி டி நாயுடு மருத்துவமனையின் தலைவர். சென்ற ஆண்டு காலமானார். தன் உடலை மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்காக கோவை மருத்துவ கல்லூரிக்கு தானம் அளித்துள்ளார்) இந்த பாபாவை கடுமையாக விமர்சித்து வந்தார்….……

  25. \\இது சாயிபாபாவின் லீலைதானென்றும் அவர் விரைவில் குணமாகி வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ, அவர் கடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை சந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று முடிவு செய்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.\\ இதைச் சொல்லித்தான் முட்டாள் பக்தர்களை மேலும் முட்டாளாக்குகிறார்கள். அந்தாள் சாதாரண மனிதன், ஆனால் மஜிக் வித்தை தெரிந்தவன் அதை நன்றாக மார்கெட்டிங் பண்ணும் சாமர்த்தியத்தைக் கொண்டு வெற்றியும் கண்டவன், மற்றபடி ஒரு சாதாரண மனிதனுக்குரிய வியாதி, மூப்பு இவற்றால் மரணத்தை எதிர் நோக்கி இருப்பவன். இதை லீலை என்றும், கடவுளே ஆனாலும் மனிதன் மாதிரியே சாவார் என்றும் கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்டு பூம் பூம் மாடு பக்தர்களை எமாற்றுகிறனர். மனிதனைக் கடவுள் என்று நம்பியவர்களுக்கு இதை நம்புவதில் சிரமம் ஏதுமில்லை. சாமியார் பெண்ணுடன் “பலான” விடயங்கள் செய்வதை படமாகக் காண்பித்தும் அதை நம்ப மறுத்த அறிவு ஜீவிகள் நாம் மக்கள், இந்த போலிக் கடவுளை நம்புவதில் வியப்பில்லை. உங்கள் கட்டுரை இறுதியில் \\ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல \\ என்று போட்டுள்ளீர்கள், ஒரு சிறிய திருத்தம், போலி ஆன்மிகம் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல ஆனால், உண்மையான ஆன்மிகம் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து, போலிகள் நிறைய இருக்கிறார்கள், அதற்காக உண்மை இல்லவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது, உண்மையான ஆன்மீக வாதிகள் இருக்கிறார்கள், தேடினால் கிடைப்பார்கள்.

  26. //உண்மையான ஆன்மீகவாதிகள் இருக்கிறார்கள்//

    ஆனால் உண்மையான கடவுளைத்தான் காணவில்லை…!

    தோழர் வினவு

    எங்கே தோழர் செங்கொடியின் தளத்தை துபாயில் காணமுடிவதில்லை? தடை செய்யப்பட்டுவிட்டதா?

    • உண்மையான கடவுள் இருக்காருங்க, அவரு வேறு யாருமில்லை அர்ஜுனனுக்கு கேதையை அருளிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தானுங்க. அவரை மட்டும் வணங்குங்க, வேறு யாரையும் கடவுள்னு ஒப்புக்காதீங்க. வரட்டுமுங்களா!!

  27. அதியமான் வேறு வேறு பெயர்களில் பின்னூட்டமிடுவதை கண்டிக்கிறேன். இது தனது முதலாளித்துவ ஆதரவு கருத்துக்களுக்கு கோஷ்டி சேர்க்கும் கேவலமான வழிமுறையாகும்.

    அதியமான் ஏன் இவ்வாறு செய்கிறார் ? பின்னூட்டங்களை வாசிப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதும், பதிவுக்கு நிறைய எதிர்ப்பு வருகிறது என்கிற கருத்தையும் வாசிப்பவர்களிடம் ஏற்படுத்துவதே அவரின் நோக்கம்.

    எனவே வினவு தோழர்கள் இனிமேலும் இதை அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

  28. ulagirke valum neriyai kuriya butharum,mahaveerarum thanai ourubothum kadavul endru solikolavillai………enaku therinthavarai annai therasavum kadavul than

    நமது திருக்குறளும் நாலடியாரும் மற்ற நீதி நூல்களும் உலக மக்களுக்கே போதும்

  29. அது எமது உரிமை. எந்த பெயரில் வந்தால் என்னப்பா, கருத்துகளுக்கு பதில் சொல்ல முடிந்தால், முயல்க. ஒரே பேர்ல வந்தா போர் அடிக்குது. ஒரு சேஞ்சுக்கு தான்.

    இதை வினவு தடை எல்லாம் செய்ய மாட்டாக. இத கூட புரிஞ்சுக்க முடியாத கம்யூனிஸ்ட் நீர் !!!

    • பல பெயர்களில் வருவதற்கு இவர் கூறும் காரணமே நேர்மையற்றதாக இருக்கிறது.
      முதலில், தனிநபர் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று கூறியவர் பிறகு ஒரே பெயரில் வருவது போரடிக்குது என்கிறார்.

      பொய்யை பார்த்துக்கொளுங்கள்.

      எனவே இவருடைய நோக்கம் பல பெயர்களில் வந்து படிப்பவர்களை குழப்புவதே எனவே வினவு இதை அனுமதிக்கக்கூடாது.

  30. வினவு,

    உமது அல்லக்கைகள் பல பெயரிகளில் வந்த இஸ்டத்துக்கு தாக்குவதெல்லாம் பெரிச படல. நான் பல பெயர்களில் வருவேன். தடை செய்தால் செய்துக்கங்க. I don’t care.

    கருத்துகளை யார் சொல்கிறார்கள் என்று ‘பார்த்து’ பதில் சொல்வது ஒரு வகை பார்பனீயம். மேலும் எமது சொந்த பெயரை பார்த்தால், பல பேர்களுக்கு வெறி வந்த தனி மனித தாக்குதல் மட்டும் தொடுப்பதை அறிவீர்.

    any way you are free to moderate all my comments here after. and இவை எப்படி
    ///இது பின்னூட்டங்களை வாசிக்கும் வாசகர்களுக்கு இடையூறு செய்வதாகும். மேலும் அவர்களை இழிவு படுத்துவதும் ஆகும். ////

    இது எப்படி ஒரு வாசகரை ‘இழிவு’ படுத்துகிறதாம் ? எதாவது தனி மனித தாக்குதல் செய்தால் அப்படி சொல்லாம். கருத்துகளை மட்டும் பார்க்கும் பக்குவம் இருப்பவன் இப்படி எல்லாம் பேச மாட்டான்.

    • ##எமது சொந்த பெயரை பார்த்தால், பல பேர்களுக்கு வெறி வந்த தனி மனித தாக்குதல் மட்டும் தொடுப்பதை அறிவீர்.##

      பச்சையான பொய் அதியமான்,
      கேன, பேமானி, புடுங்கி என நீங்கள் இங்கு நடத்தியுள்ள தாக்குதல்களை எல்லோரும் அறிவார்

      போலி பெயருடன் உங்களைத் தரக்குறைவாக திட்டி வந்த செம்மலர் தியாகுவை அம்பலப்படுத்தி அவரை கண்டித்து விரட்டிவிட்டது வினவு என்பதையும் யாரும் அறிவர்.

      மேலும் உங்களைப்போலவே கலீஜான மொழியில் மறுமொழி அளித்து அது தடைசெய்யப்பட்டதையும் ஒரு தோழர் பதிந்துள்ளார்..

      எனவே ரீல் சுற்றாமல், அதியமான் என்ற பெயரிலேயே வரவும்.

  31. //ஆதினம் ஜெயமோகன் தளத்தில் நீங்கள் எப்படி ஒரு பணிவான பக்தராக பேசுவீர்கள் என்பதையெல்லாம் வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஆனால் உங்களது கருத்தை ஒரு பத்துபேர் படிப்பதற்கு உதவி செய்யும் வினவு வாசகர்களையும் கொஞ்சம் மதித்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.///

    என்ன பெரிய பக்தன். போடாங்க என்று உம்மை சொல்ல தோன்றுகிறது. தனி மனித தாக்குதல் மட்டும் தான் தவறு, தடுக்கப்பட வேண்டியதுதான். மற்றது எல்லாம் உரிமைகளை நசுக்குதல். ஜெ தளத்தில் சொந்த பெயரில் பேசினால், இங்கு போல் தனி மனித தாக்குதல் யாரும் செய்வதில்லை. அவ்வளவுதான். மேலும் பணிவான பக்தர் என்பதெல்லம் உமது வக்கிர பார்வை. நன்றா படித்திருந்தால், தெரிந்திருக்கும், ஜெ விடுன் பல நேரங்களில், அவரின் கருத்துகளை மறுத்து விவாதம் தான் செய்திருக்கிறேன். அவர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்பதில்லை.

    உமது ‘பக்தர்களை’ போல நானும் சொந்த புத்தி இல்லாமல் இங்கு உமக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்ன ? மடமை.

  32. ப(க்)தர்களுக்கெல்லாம் கடவுள் பாபா.
    பாபாவுக்குக் கடவுள் பேஸ்மேக்கர்.

    போதுமா?

  33. பொய் பொய் பொய் இவர் பல பெயர்களில் வந்து பின்னூட்டமிட காரணம் நான் மேலே கூறியது தான் எனவே வினவு இதை அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தால் நானும் அந்த உரிமையை கோருவேன் நானும் அவ்வாறே பல பெயர்களில் பின்னூட்டமிடுவேன்.

  34. //உண்மையான கடவுள் கிருஷ்ணர் அவரை மட்டும் வணங்குங்க,வேறு யாரையும் கடவுள்னு ஒப்புக்காதீங்க வரட்டுமுங்களா//

    யாருங்க இந்த பொம்பளைங்க குளத்துல குளிக்கிறப்போ ஜாக்கெட்,தாவனி,பாவாடை,பிராவெல்லாம் தூக்கிகிட்டு துணி வேணுமுன்னா கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி கரைக்கு யார் வராங்களோ அவங்களுக்குத்தான் தருவேன்னு சொல்லி வரவழைச்சு பார்த்துபுட்டு உடைகளை கொடுத்தானே அந்த கிருஷ்ணனா? ஜகநாதபுரத்தில் சகோதரி என்றாலும் பேதமின்றி சுகம் அனுபவிக்கலாம் வா என்றதும்,அப்படியா போகலாம்வா என்று அங்கும்போய் கூடி குலாவி குடும்பத்தோடு கும்மியடித்தானே அந்த கிருஷ்ணனா?மொத்தத்தில் அந்தக்கால ‘பிட்டு’ப்பட கதாநாயகன்னு சொல்லுங்க நண்பரே. அதுக்கு நம்ம ஊரு நித்தியானந்தாவை வணங்கினால் போதுமே! எதுக்கு செத்தவனை எல்லாம் வணங்க வேண்டும்! நல்ல வேலை அந்தக்காலத்தில் தொலைக்காட்சி கேமிரா மீடியாக்கல் எல்லாம் இல்லாமல் போனது கிருஷ்ணனுக்கு வசதியாப் போச்சு.

    • @iniyavan
      \\யாருங்க இந்த பொம்பளைங்க குளத்துல குளிக்கிறப்போ ஜாக்கெட்,தாவனி,பாவாடை,பிராவெல்லாம் தூக்கிகிட்டு துணி வேணுமுன்னா கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி கரைக்கு யார் வராங்களோ அவங்களுக்குத்தான் தருவேன்னு சொல்லி வரவழைச்சு பார்த்துபுட்டு உடைகளை கொடுத்தானே அந்த கிருஷ்ணனா? \\ ஆஹா, பரந்தாமனின் லீலைகளை இவ்வளவு தெரிந்து வைத்துள்ளீரே, நீர் இன்றில்லைஎன்றாலும் என்றாவது நிச்சயம் மாதவனின் பக்தானாவதர்க்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது!! தொடர்ந்து படித்து வாரும். ஆனாலும், கோவர்த்தன மலையை இடது கை சுண்டு விரலால் தூக்கி ஏழு நாட்கள் குடையாய் பிடித்தது, எண்ணற்ற அரக்கர்களை கொன்றது என எவ்வளவோ இருக்கும் போது இதை மட்டும் படிக்கிரீரே!! அப்படியே அவர் பெண்களை நீர் சொன்ன மாதிரி செய்திருந்தாலும், அவர் இருந்து பூமியில் அவதரிக்கும் போது தனது இருப்பிடத்தில் இருந்து தன்னுடன் அவதரிக்கச் செய்த கோபியர்களிடம் தானே பழகினார்!! ஏதோ உன் பெண்டாட்டியுடன் பழகியது போல பொருமுகிறீரே??!! அப்படியே இருந்தாலும், அவர் அருளிய கீதை மாதிரி ஒரு புத்தகத்தை உன்னைப் போல அதே அத்தனை லீலைகளையும் செய்பவர்களால் கொடுக்க முடியுமா? அது ஐயாயிரம் வருடம் கடந்தும் நிலைத்து நின்று இன்னமும் வியக்க வைக்குமா? பிறவியிலேயே பக்க பிரம்மச்சாரியத்தைக் கடை பிடித்த பீஷ்மரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல இந்திரியங்களைக் கட்டுப் படுத்த என்னாலும் முடியாது என்று சொல்லக் காரணம் என்ன? திருமணமே செய்யாமல் எல்லாம் துறந்த சுக முனி பகவானின் லீலைகளை பாகவதமாக சொன்ன காரணம் என்ன?

      \\ஜகநாதபுரத்தில் சகோதரி என்றாலும் பேதமின்றி சுகம் அனுபவிக்கலாம் வா என்றதும்,அப்படியா போகலாம்வா என்று அங்கும்போய் கூடி குலாவி குடும்பத்தோடு கும்மியடித்தானே அந்த கிருஷ்ணனா?\\ இது உமது கற்ப்பனை. ஆதராமற்றது.

      \\மொத்தத்தில் அந்தக்கால ‘பிட்டு’ப்பட கதாநாயகன்னு சொல்லுங்க நண்பரே. அதுக்கு நம்ம ஊரு நித்தியானந்தாவை வணங்கினால் போதுமே! எதுக்கு செத்தவனை எல்லாம் வணங்க வேண்டும்! நல்ல வேலை அந்தக்காலத்தில் தொலைக்காட்சி கேமிரா மீடியாக்கல் எல்லாம் இல்லாமல் போனது கிருஷ்ணனுக்கு வசதியாப் போச்சு.\\ அப்புறம் எப்படி உமக்கு இது தெரிய வந்தது திருவாளர் கசப்பானவன் அவர்களே!!

  35. நண்பர் அதியமான்,

    நீங்கள் அதியமான் என்ற பெயரிலிருந்து லிபரடேரியன் என்ற பெயருக்கு மாறியபோது பெரிய அளவில் குழப்பம் ஏதுமில்லை.அப்போது யாரும் உங்கள் பெயரிலேயே எழுதுங்கள் என கோரவில்லை.ஆனால் அண்மைகாலமாக நீங்கள் பெயரை மாற்றும் வேகம் தலை சுற்ற வைக்கிறது.நம்முடன் விவாதிப்பவர்களையும் மதித்து நடக்க வேண்டியது நம் கடமையல்லவா.நாம் யாருடன் விவாதித்தோம்,இப்போது நமக்கு பதில் சொல்வது யார் என குழம்பும் நிலையில் அவர்களை வைப்பது அவர்களை அவமதிப்பது ஆகாதா.

    மேலும் நீங்கள் உங்களுக்கு சூட்டிக்கொள்ளும் பெயர்கள் ரசனைக்குறைவாகவும் உங்களையே இழிவு படுத்திக் கொள்வதாகவும் உள்ளன.கைக்கூலி,சவப்பெட்டி செய்பவன்,என்றெல்லாம் உங்களை நீங்கள் அழைத்துக் கொள்வது படிக்கும்போது வருத்தமளிப்பதாக உள்ளது.

    எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் பெற்றோர் உங்களுக்கு இட்ட அற்புதமான அதியமான் என்ற பெயரை படிக்கும்போதெல்லாம் தான் நீண்ட நாள் வாழ்வதை விட தமிழ் செழிக்க அற்புத நெல்லிக்கனியை [அது கற்பனை கனி என்றாலும் கூட]ஒவ்வைப் பாட்டிக்கு கொடுத்த அந்த தகடூரான் நினைவுக்கு வருகிறான்.

    ஆகவே நீங்கள் அதியமான் என்ற பெயரிலேயே எழுத வேண்டும் என்பதே எனது அவா.

    ”இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக்
    காய் கவர்ந் தற்று” அல்லவா

    • நண்பர் திப்பு,

      உங்க அன்புக்கு மிக்க நன்றி.

      ஆனா பாருங்க, இன்னும் நீங்களும், வினவு குழுவில் பலரும், பல நூற்றாண்டுகளாக நம் மனதில் பதிந்த நிலப்பிரபுத்தவ, பார்பனீய மதிபீடுகளில் இருந்து முற்றாக விடுபடவில்லை என்பதை, சவப் பெட்டி செய்யும் தொழில், ‘இழிவானது’ என்று கருதும் மனோபாவம் சொல்கிறது. ‘சூத்திர்கள்’ செய்யும் தொழில் இழிவானது என்று கருதுவது பார்பானிய மதிப்பீடு தான். மேலும் நான் சூடிக் கொள்ளும் புனைபெயர்கள் தங்களை ‘இழிவு’ செய்கிறது என்று வினவு கருதுவதும் நிலப்பிரபுத்தவ மதிப்பீடுகளின் எச்சங்கள் தான்.

      எம்மை நானே ‘இழிவு’ செய்துகொள்கிறேன் என்று ஏன் கருதுகிறீர்கள் ? எனக்கு சுய கிண்டல் / சுய எள்ளல் உண்டு. ஈகோ அதிகம் இல்லாதவர்களால் தான் இப்படி ஜாலிய இருக்க முடியும். நகைச்சுவை உணர்வும் அதிகம். sort of black humour. ஜாலியா தான் பெயர்களில் விளையாடுகிறேன். அதை ரசிக்க முடியாத வினவு மற்றும் குழுவினார் ‘இழிவு’ செய்வதாக கற்பனை செய்து கொள்கிறார்கள். சரி, இந்த பெயர் ஓகேயா ? ஆனாலும் நான் இனி என் சொந்த பெயரில் இங்கு எழுதுவதாக இல்லை. பலரும் அப்படி செய்வதில்லை தான். நீங்களும் உங்க முழு பெயரோடு எழுதுவதில்லை தானே. அது அவரவர் உரிமை. யார், எந்த பெயரில் எழுதினால் என்ன. அவர் கூறும் கருத்து தான் முக்கியம். விவாதிக்கப்பட வேண்டியது.

      • நேர்மையான,பிறருக்கு தீங்கிழைக்காத,உழைத்து பிழைக்கும்,எந்த தொழிலையும் நான் இழிவாக கருதுவதில்லை.

        கைக்கூலி எனபது இழிவு தருவதாகவும் சவப்பெட்டி செய்வது ரசனைக்குறைவாகவும் உள்ளதென தெளிவாக பிரித்து எழுத தவறியதால் நீங்கள் சுட்டிக்காட்டியது போல் கருத இடம் அளித்து விட்டேன். வருந்துகிறேன்.

    • நண்பர் திப்பு,

      வினவு எம்மை ஜெயமோகனின் ‘பக்தர்’ என்று ‘இழிவு’ செய்கிறதே ? பக்தர் என்பவர் எந்த ‘வினவு’ ம் செய்யாமல், கடவுள் சொல்வதை அப்படியே வேதவாக்காக எடுத்து கொள்வார். விவாதிக்க மாட்டார். ஆனால் நான் ஜெவுடன் பல நேரம் முரண்பட்டு விவாதம் தான் செய்திருக்கிறேன். அவரின் சில கருத்துகளை பலமாக மறுத்திருக்கிறேன். இதை செய்ப்வரை ‘பக்தன்’ என்பது என்ன நியாயம். முன்கோபம் அதிகம் உள்ளதால், கடுமையான வார்த்தைகள் திடிரேன எம்மிடம் இருந்து வெடிக்கும். சிம்ம லக்னம் பாருங்க !!!

      ஆனால் உண்மையில் வினவுவிற்க்கு தான் இங்கு ‘பக்தர்கள்’ அதிகம் என்கிறேன். எதையும் அப்படியே ஏற்று கொள்ளும் கூட்டம் இங்கு இருக்கிறது.

      • சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமானுடன் வாதிட்டவர் தானே!
        அதெல்லாம் ஒரு ‘ஊடல்’ பாருங்கோ.

  36. வினவு,

    நீங்க யோக்கியன் என்றால் எல்லாரையும் சொந்த பெயரில் எழுத சொல்லவும். இல்லை என்றால் go to hell. எமது பெயர்கள் ஒரு கொள்கை விளக்கமாக வைக்கிறேன். vrinternationalists என்பதை போல்.

    இன்னொரு தடவை எடிட் செய்தால், பிறகு good bye to you. எமது ‘சுதந்திரத்தை’ பறிக்கும் ஃபாசிஸ்ட் நீர் என்ற கருதோடு விடை பெறலாம்.

    • இது சொந்தப் பேர் பிரச்சனையல்ல.
      புனை பேர்களை வசதிக்கேற்ப மாற்றுவது பற்றிய பிரச்சனை. ஒரு வாசகர் தான் யாருடன் விவாதிக்கிறார் என்று விளங்காமற் குழப்புவது பற்றிய பிரச்சனை.

      உங்கள் கொட்டைப்பாக்கு இடுகைகள் இல்லாமல் ஒன்றும் குடிமுழுகிப் போய் விடாது.

    • உங்களை சொந்த பெயரில் தான் எழுத வேண்டும் என்று யார் சொன்னது ?

      நல்ல முதலாளி என்றோ கெட்ட முதலாளி என்றோ கூட வைத்துக்கொளுங்கள் அல்லது கம்யூனிச விரோதி என்று கூட பெயர் வைத்துக்கொள்ளுங்கள் ஆனால் அந்த பெயரில் மட்டும் எழுதுங்கள் மாறாக டஜன் கணக்கான பெயரை மாற்றுவது படிப்பவரை குழப்புவதற்கு தான் என்பதை நான் அறிவேன், அதை ஒரு நோக்கத்துடன் தான் செய்கிறீர்கள் எனவே அதையெல்லாம் அனுமதிக்க முடியாது மிஸ்டர் தரகு முதலாளி.

      • ரொம்ப புத்திசாலித்தனமாக பேசறதா நினைப்பா ? உங்க ஆளுங்க மட்டும் புது புது பெயர்களில் (உண்மை, மன்னார்சாமி, etc) பின்னூட்டம் இடுவது பற்றி இப்படி குதர்க்கம் பேச மாடேங்கறீங்க. இந்த கார்பரல் ஸீரோ என்ற பெயரில் ஒரு கோஸ்டியே மாறி மாறி எழுதுவது தொனியை வச்சே சொல்ல முடிகிறது. இந்த மன்னார்சாமி, உண்மை என்ற பெயர்களில் இப்ப முழங்கும் ‘தோழர்கள்’ இதற்க்கு முன்பு வேறு பெயர்களில் பல காலமாக இங்கு இயங்குவதை தெரிந்து கொள்ள Ph.d எதுவும் தேவையில்லை. உங்க ஆளுங்களுக்கு ஒரு நியாயம் எமக்கு ஒரு நியாயம். அப்படி தானே.

        இணைய உலகம் பரந்து விரிந்து கிடக்கிறது. அதில் வினவு தளம் ஒரு சிறு குட்டை தான். நீங்க எல்லாம் கிணத்து தவளைக தான். வேறு தளங்கள், குழுமங்கள், முகப்புத்தகம், எமது பிளாக்குகள் என்று நான் இயங்க நிறைய இடங்கள் உள்ளன. அங்கு எமது ‘மந்திர உச்சாடனங்களை’ தொடர முடியும். ஓகே.

        போதாம்கின்,

        எல்லா பெயர்களும் அப்படி ‘கொள்கை விளக்க’ பெயர்கள் அல்லவே. கிண்டலாக வைப்பதும் நிறைய. ஜாலிய இருக்க கூடாதா என்ன ?

        நண்பர் திப்பு,

        ரொம்ப சீரியசா எடுத்துகாதீங்க. கொஞ்சம் நகைச்சுவை உணர்ச்சியை, சுய கிண்டலை வளர்த்துக்கங்க. it will be a very healthy attitude and will help de stress and give one a refreshing perspective. anyway, உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. பிறகு என்றாவது சந்திக்கலாம். அதுவரை adieos amigos !

        • மீண்டும் மீண்டும் ஈகோவுக்கா பேசுகிறீர்கள் அதியமான்,
          சும்மா குற்றச்சாட்டுகளை அடுக்கிக்கொண்டு போவதில் என்ன பயன்?
          நான் முன்பே சுட்டிக்காட்டியிருப்பதைப் போல உங்களை போலி பெயரில் கேவலமாக பேசிய தியாகுவை அம்பலப்படுத்தி விரட்டி விட்டதே வினவுதான். அப்போது நீங்கள் இந்த உரிமைகளைப் பற்றியெல்லாம் பேசவில்லை என்பதை நினைவு கொள்ளுங்கள்

        • அதியமான்,

          மன்னார்சாமி என்ற பெயரில் பின்னூட்டமிடும் நான் வேறு பெயர்களில் பின்னூட்டமிடுவதில்லை. தேவையற்ற அபாண்டங்களைப் பேச வேண்டாமே?

        • என்னைக் குறித்து அதியமான் சொல்வது பொய் !
          நான் பல பெயர்களில் எல்லாம் எழுதுவதில்லை அதற்கு தேவையும் இல்லை. இதற்கு முன்பு ’எட்டப்பன் மன்மோகன்’ என்கிற பெயரில் ஒன்றிரண்டு பின்னூட்டங்களை மட்டுமே எழுதியுள்ளேன் அதன் பிறகு உண்மை என்கிற பெயரில் மட்டும் தான் பின்னூட்டமிடுகிறேன்.

          தனக்கு அப்படி ஒரு பிரச்சினை இருப்பதால் அனைவருக்கும் அவ்வாறே இருக்கும் என்று நினைப்பது சிலருக்கு இயல்பு தான்.

        • //ரொம்ப சீரியசா எடுத்துகாதீங்க. கொஞ்சம் நகைச்சுவை உணர்ச்சியை, சுய கிண்டலை வளர்த்துக்கங்க. it will be a very healthy attitude and will help de stress and give one a refreshing perspective.//

          உங்கள் தாத்தாவை எந்த விதத்திலும் தரக்குறைவாக பேசாது அவரது கொள்கை மீது கேள்வி மட்டுமே எழுப்பிய ஒரு தோழரை ‘புடுங்கி’ என்றும் மேலும் பலவாறும் ஏசும் போது, அங்கே நகைச்சுவை தேவையில்லை, அட்லீஸ்டு அடிப்படை நாகரீகமாவது கடைபிடித்திருக்க வேண்டும் அல்லவா?

          மேலும்… ‘கே. கூ’ என்ற வார்த்தையை நான் வலைப்பதிவுகளில் படித்தது உங்கள் பின்னூட்டத்தில் மட்டும் தான் (கிணற்றுத் தவளையோ??). இப்படியெல்லாம் சொல்லிவிட்டு எதோ கருத்துரிமை மறுக்கப்பட்ட அப்பாவி போல நீங்கள் பேசுவது நியாமே இல்லை.

    • good bye யார் சொல்றது நீங்களா ?
      உங்களுக்கு வேணும்னா நான் ஒரு பந்தயம் வைக்கிறேன் நீங்க ஒரே ஒரு மாதம் மட்டும் வினவில் விவாதிக்காம இருந்துருங்க பார்க்கலாம். முடியாது, செம்புரட்சி, ரசியா, ஸ்டாலின், மாவோ அப்புறம் உலகமயமாக்கல்,லிபரல் ஜனநாயகம், டென்மார்க் போன்ற வார்த்தைகளை உச்சரிக்காமல் உங்களால் ஒரு நாளைக்கூட கடத்த முடியாது. இவற்றை வினவில் பின்னூட்டமிடவில்லை என்றால் மேற்கண்ட வார்த்தைகளை தனக்குத்தானே மந்திரம் போல உச்சாடனம் செய்யும் நிலைக்குப் போய்விடுவீர்கள் எனவே எதற்கு இந்த ரிஸ்க்கெல்லாம் ? பேசாமல் மறுபடியும் சொந்த பேரிலேயே எழுதுங்க அதியமான்.

    • ennanga pandrathu, thannoda karutthukku sappa kattu katta aal kidaikkatha virakthi la ippadi aagittaru. thala! pesaama kmc ku ponga company kudukka neraiya per kidaippanga.

    • //எமது பெயர்கள் ஒரு கொள்கை விளக்கமாக வைக்கிறேன். vrinternationalists என்பதை போல். //

      ‘Male chauvenist pig’ , அதாவது ‘ஆணாதிக்க பன்றி’ என்ற பெயரிலும் வந்தீர்களே? அதுவும் உங்க கொள்கைப் பெயரா? உங்கள் கொள்கைப் பெயரைச் சுருக்கி ‘பன்றி’ என்று உங்களை அழைத்தால் கோபிப்பீர்களா? 🙂

    • அதியமான்,
      நீங்க அதியமான் என்கிற பெயரிலிருந்து லிபர்டேரியனாக மாறிய போது யாரும் அதை தவறு சொல்லவில்லை, ஆனால் ஒரே நாளில் நான்கைந்து பெயரில் வந்து விவாதிப்பது என்ன வகை நியாயம். இது நீங்கள் நம்பும் ஜனநாயகத்தை மீறும் செயலாகாதா? அல்லது எந்த குழுமத்திலாவது அல்லது கருத்துக்களத்திலாவது இது போல செய்ய அனுமதி உண்டா? எதாவது ஒரு புனைப்பெயரில் மட்டும் எழுதுங்கள் என்று கேட்பது தவறா? ஆத்திரத்தில் பதிலளிக்காகமல் நிதானமாக சிந்தித்து பார்த்து செயல்படவும்.

  37. Madam

    Saibaba never asked money from you or any poor person. He did not send people with Undiyal to collect money. He never asked any one to follow him. All he did was good to poor people. No money is collected from poor students studying in the Sai institutions or the poor patients in Saibaba hospital

    What you have done is a slander on a person whom you do not know. Can you touch your heart and say that Sai Baba hurt you or your relatives or friends or any closely known person? Can you quote a single incident of Sai baba collecting donations from you or your friends or known people.

    In the name of cheap publicity you are writing some rubbish hurting a man who has channelised wealth from rich people and shared with the poor and downtrodden.. He is the real Communist,

    Anbu

  38. ஜெயதேவதாசு
    //கோவர்த்தன மலையை இடது கை சுண்டுவிரலால் தூக்கி ஏழு நாட்கள் குடையாய் பிடித்து//
    சுருக்கமா அம்புலிமாமா கதைன்னு சொல்லுங்க அப்பு,இப்பெல்லாம் இந்தக் கதைகளெல்லாம் டிவி சீரியலில் கிராபிக்ஸில் படமா எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க,புத்தகத்தில் படிப்பதைவிட பார்ப்பதற்கு சூப்பரா இருக்கும்.
    //தனது இருப்பிடத்தில் இருந்து தன்னுடன் அவதரிக்கச் செய்த கோபியர்களிடம் தானே பழகினார்.//
    “பரஸ்திரீகளான(பிறர் மனைவியர்)கோபிகைகளோடு கிருஷ்ணர் ‘ஜலக்கிரீடை’ செய்ததையும்,’வனக்கிரீடை’செய்ததையும்,’ஸ்தலக்கிரீடை’செய்ததையும் மிகமிக அருவருப்பான மொழியில் சொல்லப்பட்டுள்ளது. [பார்க்க வைஷ்ணவதர்மம்,மகாபாரதம்,ஆஸ்வமேதிகபர்வம்.அத்தியாயம்‍ 29,30,31.]
    மாற்றான் மனைவியர்களுடன் தான் லீலைகள் நடந்துள்ளது.இதுதான் உண்மையான கடவுளின் யோக்கியதையா?

  39. ஜெயதேவதாசு
    //ஏதோ உன் பொண்டாட்டியுடன் பழகியதுபோல பொருமுகிறீரே//
    உம் தோட்டத்து மல்லிகையை மனம்வீச பகவானுக்கு அனுப்பிவைப்பது உமக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம்,ஆனால் பெண்களை கேவலப்படுத்தும் கேடுகெட்ட கடவுளை வணங்கலாமா? கடவுள் செய்கிற வேலையா இது?
    //இது உமது கற்பனை ஆதாரமற்றது//
    பார்க்க வைஷ்ணவதர்மம் மகாபாரதம் ஆஸ்வமேதிகபர்வம் அத்தியாயம் 96,பக்கம் 267 பகவான் கோபாலனுடைய லீலைகளை விரிவாக உபதேசிக்க்கும் பகுதி பாகவதத்தில் பத்தாவது “கந்தம்”.
    //அவர் அருளிய கீதை மாதிரி….அத்தனை லீலைகளையும் செய்பவர்களால் கொடுக்க முடியுமா?//
    இப்படிப்பட்ட மஞ்சள் புத்தகத்தை கொடுக்க எங்களால் முடியாதுதான்.
    //அப்புறம் எப்படி உமக்கு இது தெரிய வந்தது?//
    எல்லாம் கீதையின் கைவண்ணம் மூலமாகத்தான் தெரியவந்தது. நண்பர்கள் சிந்திக்க வேண்டும் இப்படிப்பட்ட ஆபாசம் நிறைந்த புத்தகத்தை புனிதமாகக் கருத முடியுமா? காமலீலைகளை கற்பித்தவனை கடவுளாக வணங்க முடியுமா?

    • \\ சுருக்கமா அம்புலிமாமா கதைன்னு சொல்லுங்க அப்பு,இப்பெல்லாம் இந்தக் கதைகளெல்லாம் டிவி சீரியலில் கிராபிக்ஸில் படமா எடுக்க ஆரம்பிச்சிட்டாங்க,புத்தகத்தில் படிப்பதைவிட பார்ப்பதற்கு சூப்பரா இருக்கும்.\\ கசந்தவனே, நாங்களும் அம்புலிமாமா கதையெல்லாம் படிச்சிருக்கோம் அப்பு, ஆனா பாகவதம், கீதை படிக்கும் போது மனதில் ஏற்படும் உணர்வு, மாற்றம், தெளிவு அம்புலிமாமா கதையை படிக்கும் போது ஒரு போதும் ஏற்ப்பட்டதில்லையே, எட்டி காயனே!! அதாவது மருத்துவம் படிக்க வேண்டினால் தகுந்த மருத்துவக் கல்லூரியில் முறைப்படி தகுதியான ஆசிரியர்களின் வழிகாட்டுதலில் படித்தால் நல்லது, விளங்கும். நீர் தான்தோன்றித் தனமாக புத்தகங்களை படித்துள்ளீர். அதனால் இப்போது மருத்துவராவதர்க்குப் பதில் கசாப்பு வேலை செய்து கொண்டுள்ளீர்!! தகுதியான குருவின் வழி காட்டலின்றி ஆன்மீகத்தில் எதையும் புரிந்துகொள்ள முடியாது. உண்மையான பொருள் விளங்காது, எல்லாம் உமது கண்ணில் போட்டுள்ள வண்ணக் கண்ணாடியின் கலரிலேயே தெரியும். ஆன்மீக குரு வந்து குருடனாகிய சீடனின் கண்களைத் திறந்து அறிவு புகட்டுகிறார். அவ்வாறு ஒரு உண்மையான ஆன்மீக குருவை ஏற்காதவன் தென் பாட்டிலில் உள்ள தேனைச் சுவைக்க மூடியைத் திறக்காமல் பாட்டிலின் மேல்பகுதியை நக்குவதர்க்குச் சமம், அவன் ஒரு போதும் தேனின் சுவையை அறிய மாட்டான். உமக்கும் அதே கதிதான் கசந்தவனே!!

    • \\உம் தோட்டத்து மல்லிகையை மனம்வீச பகவானுக்கு அனுப்பிவைப்பது உமக்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம்,ஆனால் பெண்களை கேவலப்படுத்தும் கேடுகெட்ட கடவுளை வணங்கலாமா? கடவுள் செய்கிற வேலையா இது?\\ கசந்தவனே, கிருஷ்ணருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது பிரம்மா கன்றுக்குட்டிகளையும், ஆயர்குலச் சிறுவர்களையும் கொன்டு சென்று ஒழித்து வைத்து விடுகிறார், அதையுணர்ந்த பகவான் அத்தனை சிறுவர்கள், மற்றும் கன்றுக்குட்டிகளாக விரிவாக்கம் செய்து வேறுபாடே தெரியாமல் ஒரு வருட காலம் இருக்கிறார். அப்போது குழந்தைகளுக்கு செல்லக் கல்யாணம் செய்வது வழக்கம், அதாவது அந்த சிறுவர்கள் வளர்ந்தால் யாரை மனப்பார்களோ அவர்களுக்கே மனம் புரிவது. அந்த வகையில் எல்லா சிறுவர்களுமாக இருந்த கிருஷ்ணர் கோபிகைகள் எல்லோரையும் மணந்து கொள்கிறார். ஆகையால் பிற்ப்பாடு திருமணம் செய்த கோபர்களின் மனைவிகள் உண்மையில் கிருஷ்ணரின் மனைவிகள். அந்த வகையில் ஸ்ரீ கிருஷ்ணரின் தோட்டத்து மல்லிகையே அடுத்தவர்கள் முகர்ந்து பார்த்தார்கள் கசந்தவரே. [வைஷ்ணவதர்மம் மகாபாரதம் ஆஸ்வமேதிகபர்வம் அத்தியாயம் 96,பக்கம் 267 ….இந்தக் கொடுமையெல்லாம் துருவித் துருவி படிச்ச மகாராசா, பாகவதத்தில் வரும் இந்த எளிய பாயின்டை விட்டுவிட்டாயே, எட்டிகாயனே!! இதுக்குத்தான் சொல்வது தகுதியான குருவின் கீழ் சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்ளவேண்டுமென்று. அல்லாவிடில் உம்மைப்போல அரைவேக்காடுகள் பூமிக்குப் பாரமாய், சமூக அவலமாய் திரிந்து தமக்கும், மற்றவர்களுக்கும் கேடு விளைவிக்கும், புரிகிறதா கசந்தவனே!!

    • {{//அவர் அருளிய கீதை மாதிரி….அத்தனை லீலைகளையும் செய்பவர்களால் கொடுக்க முடியுமா?//
      இப்படிப்பட்ட மஞ்சள் புத்தகத்தை கொடுக்க எங்களால் முடியாதுதான்.}}
      கழுதைக்கு கற்பூர வாசனை எங்கே தெரியப் போகிறது? பன்றிக்கு அல்வாவை விட வேறொன்றுதான் மிக ருசியாக இருக்குமாம். அறிவியல் மேதை ஐன்ஸ்டீன் வியந்த கீதை இந்த காமாலைக் கண்ணனுக்கு மஞ்சளாகத் தெரிவதில் விந்தை இல்லையே! இன்னொரு விஞ்ஞானி ஒப்பன்ஹைமர் வியந்த கீதை, உலகில் எல்லா நாடுகளிலும் இன்று படிக்கப் படும் கீதையின் அருமை இந்தக் குருடனுக்கு புலப்படவில்லையே? தவளை வாழ்நாள் முழுவதும் தண்ணீரில் இருந்தாலும் அதிலுள்ள தாமரையின் தேனை சுவைக்காது, எங்கிருதோ பறந்து வரும் வந்துதான் சுவைக்கும். இந்தியாவில் பிறந்த கசந்தவன் இப்படி தனது கலாச்சாரத்தை தெரியாமலிருக்க, உலகில் என்கிரோந்தோ ஆயிரமாயிரம் பேர் இந்த புண்ணிய பூமிக்கு வந்து இங்குள்ள வேதங்கள், இதிகாசங்களைக் கற்று பயன் பெறுகிறார்களே! இது விந்தைதான்.

      • கீதை பிறந்த குருஷேத்ர மண்ணில்தான் அதாவது ஹரியாணாவில்தான் செத்த மாட்டை உரித்தார்கள் என்று ஐந்து தலித் மக்கள் கொடுரமாக கொலை செய்யப்பட்டார்கள். கொன்றவர்கள் அனைவரும் கீதையை பக்திப் பரவசத்துடன் பின்பற்றுபவர்கள். இதுதான் நீங்கள் போற்றும் பாரதக் கலாச்சரமா?

        • எங்கோ ஒரு பதிவர் ஒரு பெண்ணைக் கற்பழித்துவிட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதற்காக உங்களிடம் வந்து, ஐயா வினவு அவர்களே, பதிவு போடுபவன் ஒருத்தன் அயோக்கியத் தனம் பண்ணிவிட்டான், இதற்க்கு விளக்கம் தாரும் என்றால் அது முறையாகுமா? அவ்வளவு வேண்டாம், உலகில் தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களில் பலர் முலீம்கள், குரான் படிப்பவர்கள், அதனால் குரான் தான் தீவிரவாதத்தை தூடுகிறது என்று சொல்லி பதிவு போடுவீர்களா? ஹா.ஹா..ஹா.. மற்றவர்களுக்கு ஒரு நியாயம், கீதையைப் படிப்பவனுக்கு ஒரு நியாயமா? கடவுளே இல்லை என்று சொல்லிவிட்டு, மசூதிக்குப் போய் நோன்பு கஞ்சி குடுத்தானம் எவனோ ஒரு ஓட்டுப் பொருக்கி, அது போல அல்லவா இருக்கிறது உமது வாதம்!! நடுநிலையாக எந்த விஷயத்தையும் சீர்தூக்கிப் பார்த்து பேச வேண்டும், நியாயத்தை ஆளுக்குத் தகுதார்போல மாற்றக் கூடாது.

    • \\எல்லாம் கீதையின் கைவண்ணம் மூலமாகத்தான் தெரியவந்தது. நண்பர்கள் சிந்திக்க வேண்டும் இப்படிப்பட்ட ஆபாசம் நிறைந்த புத்தகத்தை புனிதமாகக் கருத முடியுமா? காமலீலைகளை கற்பித்தவனை கடவுளாக வணங்க முடியுமா?\\ அன்பில்லாத கசந்தவனே, இன்று திருமனமாகதவனை பிரம்மச்சாரி என்கிறார்கள், ஆனால் உண்மையான பிரமச்சாரி யார் தெரியுமா? பிறந்ததில் இருந்து ஒரு சொட்டு விந்து கூட சிந்தாதவன் தான். அப்படிப்பட்ட பிரமச்சாரி பீஷ்மர், அவர் ஒரு பெண் பித்தரைப் புகழ்வாரா? முள் படுக்கையில் இருந்த வண்ணம் அவர் ஸ்ரீ கிருஷ்ணருக்கு செய்யும் பிரார்த்தனைகளைப் படித்ததுண்டா? அதை ஏன் படிக்கப் போகிறீர், நீர் எதிர்பார்ப்பது எல்லாம் மஞ்சள் வண்ணம், எச்சல் இலையைப் பொறுக்கும் நாய்க்கு நல்ல இலையைப் பார்த்தாலும் அதுவும் எச்சல் இலையகத்தான் தெரியுமாம். இங்கே பொறுக்கிகள் செய்யும் வேலையைப் போன்றதல்ல பகவானின் லீலைகள், அது திவ்யமானது, உம்மால் புரிந்து கொள்ள இயலாது, அதற்க்கு தகுதியான ஆன்மீக குரு மூலம் அரியப் பட வேண்டும், இல்லாவிட்டால் தேன் பாட்டிலை நக்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான், தேனின் சுவையை அறிய முடியாது.

      • //பகவானின் லீலைகள், அது திவ்யமானது, உம்மால் புரிந்து கொள்ள இயலாது,/

        எனக்கும் புரிந்து விட்டது!!!!!!!!!!!!!!!!!!!!!

        //அதற்க்கு தகுதியான ஆன்மீக குரு மூலம் அரியப் பட வேண்டும்//
        அதாவது அறியப்பட வேண்டும்.

        சரி

        அவருதான் சாயிபாபாவா????????????????.
        அவருக்கு அப்புறம்?????????

        //தேனின் சுவையை அறிய முடியாது./

        கல்ப்பட்மில்லாத சுத்த தேன்.அள்ளிப் பருகுவீர்.அனைவரும் வாரீர். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து அருந்தவும்.இல்லையென்றால் வயிற்றுக்கு ஒத்துக் கொள்ளாது.அருமையான சுவை.

  40. //தகுதியான குருவின் வழிகாட்டலின்றி ஆன்மீகத்தில் எதையும் புரிந்து கொள்ள முடியாது//
    சாய்பாபா,நித்தியானந்தா,கல்கிசாமி,ஜெயேந்திரசாமி,கருவறை காமலீலை புகழ் தேவானந்தன் போன்றோர்களுக்கு இன்னுமா தகுதியான குரு கிடைக்கவில்லை?அவர்களை முதலில் புரிந்து கொண்டு வரச்சொல்லு ஜெயதேவ அடியானே.
    //பகவானின் காமலீலைகள் திவ்யமானது//
    பகவானுக்கு எதுக்கு காமலீலை? அதைப் பார்த்து பக்தர்கள் கடைபிடிக்கவா?அதனால்தான் நித்யானந்தாக்கள் அவதரித்துக் கொண்டிருக்கின்றார்களோ!
    //இந்தக் கொடுமைகளெல்லாம் துருவித் துருவி படிச்ச மகராசா எளிய பாயிண்டை ஏன் விட்டு விட்டாய்//
    இந்தக் கொடுமையான கன்ராவியான சமாச்சாரம் கீதையில் இருப்பதையும் ஏற்றுக் கொள்கிறீரே.இத முதல்ல சென்ஸார் செய்து கீதையை வெளியிடச் சொல்லு பிறகு நல்ல சமாச்சாரத்தில் ஈடுபடலாம்.ஆபாசக் குளியலால் மக்களுக்கு என்ன படிப்பினையைத் தருகிறது கீதை? ஒரு தகுதியான குரு ஆபாசக் குளியல் கீதையில் நடைபெறவில்லை எனக் கூற முடியுமா?

    • \\சாய்பாபா,நித்தியானந்தா,கல்கிசாமி,ஜெயேந்திரசாமி,கருவறை காமலீலை புகழ் தேவானந்தன் போன்றோர்களுக்கு இன்னுமா தகுதியான குரு கிடைக்கவில்லை?அவர்களை முதலில் புரிந்து கொண்டு வரச்சொல்லு.\\ இவர்கள் எல்லாம் உங்களைப் போலவே குணம் படைத்த ஆசாமிகள், அவர்களை நம்பி அவர்களிடம் போனது, போனவர்களின் முட்டாள்த்தனம், மேலும் திருந்து என்று உம்மிடம் சொன்னால் நீர் திருந்துவீரா? அவர்கள் மட்டும் எப்படி நான் சொல்லித் திருந்துவார்கள் என எதிர்பார்க்கிறீர் கசந்தவனே?

      \\இத முதல்ல சென்ஸார் செய்து கீதையை வெளியிடச் சொல்லு பிறகு நல்ல சமாச்சாரத்தில் ஈடுபடலாம்.\\ எந்தெந்த பதங்களை நீக்க வேண்டும், அதில் தவறு என்ன என்று சொல்லவும். முதலில் பாகவதத்திர்க்கும், கீதைக்குமே வித்தியாசம் தெரியாத நீர், \\வைஷ்ணவதர்மம் மகாபாரதம் ஆஸ்வமேதிகபர்வம் அத்தியாயம் 96,பக்கம் 267 \\ எல்லாம் படித்து தெரிந்து கொண்டேன் என்று அடித்து விடுகிறீரே இந்தக் கொடுமையை எங்கே சொல்வது?? கீதையில் எங்கே குளியல் காட்சி வருகிறது கசந்தவனே? பகலில் பசுமாடு வருவது தெரியாத உமக்கு இரவில் எருமை மாடு வருவது எப்படித் தெரிந்தது எட்டிக்காயனே??

      கசந்தவனே, நான் போட்டது: “பகவானின் லீலைகள் திவ்யமானது” அதை நீங்கள் கோடிட்டு காட்டியிருப்பது
      //பகவானின் காமலீலைகள் திவ்யமானது//. உங்களிடத்தில் நேர்மை இல்லை கசந்தவனே. உங்களை நீங்களே ஏமாற்றிக் கொண்டு அதில் மகிழ்ச்சியும் காண நினைக்கிறீர். சொல்ல ஒன்றுமில்லை, பாகற்காயனே!!

  41. //கழுதைக்கு கற்பூர வாசனை எங்கே தெரியப்போகிறது//
    ஓ..அதனாலதான் கிருஷ்ணனுக்கு துணிச்சலா கற்பூர ஆராதனை தினம் தினம் காட்டி வணங்குகிறீரோ.மேலும் குரங்கு,பன்றி பொம்மைகளுக்கெல்லாம் கற்பூர ஆராதனை செய்யும் மூடனே அவைகளுக்கு அதை உணரும் அருகதை உண்டா?

    • \\மேலும் குரங்கு,பன்றி பொம்மைகளுக்கெல்லாம் கற்பூர ஆராதனை செய்யும் மூடனே மேலும் குரங்கு,பன்றி பொம்மைகளுக்கெல்லாம் கற்பூர ஆராதனை செய்யும் மூடனே .\\ என்னப்பா கசந்தவனே, என்னை மூடன் என்று திட்டி விட்டால் நீ உயர்ந்தவன் என்று பொருளாகி விடுமா? நான் சொல்லாத வார்த்தையை நான் சொன்னதாக மேற்கோள் காட்டியிருக்கிறாய். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நீ, நான் எழுதியதன் நடுவே ஒரு கெட்ட வார்த்தையைச் சொருகி மேற்க்கோளாகப் போட்ட உன் சிறு புத்தியை என்னவென்று சொல்வது? முதலில் மனிதனுக்குத் தேவை அடிப்படை நல்ல குணங்கள், அதில் ஒன்று நேர்மை. அது உம்மிடம் இல்லை, இந்த லட்சணத்தில் அதெப்படி..இதெப்படி… என்ற கேள்விகள் உனக்கு எதற்கு? நீயே ஒரு முடிச்சவிக்கி உன்னிடம் நான் எதற்காக உட்கார்ந்து கொண்டு விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டும்? முதலில் நேர்மையாக இரு, அதுக்கப்புறம் கடவுளைப் பற்றி பேசு.

    • கோயிலில் கற்பூரம் காட்டுவது, இறைவனுக்காக மட்டும் இன்றி, அதில் ஒரு அறிவியலும் உண்டு. சுத்தமான கற்பூரத்தின் அறிவியல் பெயர் என்ன தெர்யுமா? சரி பகுத்தறிவு வாதிகளுக்கு அறிவியல் தெரிய வைப்பு குறைவு என்று எனக்கு நன்றாக தெரியும். சரி, கற்பூரத்தின் அறிவியல் பெயர். சம்போர் (C10H16O.)

      wikipedia source: http://en.wikipedia.org/wiki/Camphor

      Medicinal
      Camphor is readily absorbed through the skin and produces a feeling of cooling similar to that of menthol, and acts as slight local anesthetic and antimicrobial substance. There are anti-itch gels and cooling gels with camphor as the active ingredient. Camphor is an active ingredient (along with menthol) in vapor-steam products, such as Vicks VapoRub. Although touted as a cough suppressant, it has no effects on respiratory tract function. A recent publication in Pediatrics suggests the topical application of VapoRub may improve symptoms of colds and sleep quality when compared to a control.[12]

      Camphor may also be administered orally in small quantities (50 mg) for minor heart symptoms and fatigue.[13]

      In the 18th century, camphor was used by Auenbrugger in the treatment of mania.[14]

      Hindu religious ceremonies
      Camphor is widely used in Hindu religious ceremonies. Hindus worship a holy flame by burning camphor, which forms an important part of many religious ceremonies. Camphor is used in the Mahashivratri celebrations of Shiva, the Hindu god of destruction and (re)creation. As a natural pitch substance, it burns cool without leaving an ash residue, which symbolizes consciousness. Of late[when?], most temples in southern India have stopped lighting camphor in the main Sanctum Sanctorium because of the heavy carbon deposits it produces; however, open areas still burn it.

  42. முதல்ல இதற்கு பதிலச்சொல்லு பகவான் கிருஷ்ணன் லீலகள் இருக்கட்டும் காமலீலைகள் புரியவில்லையா?
    குளத்தில் குளிக்கும் பெண்களை நிர்வாண கோலத்திலேயே எதையும் மறைக்காமல் கைகளை மேலே தூக்கிய நிலையிலேயே கரைக்கு வந்து உடைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என கட்டளையிட்டது கிருஷ்ண பகவானா இல்லையா?
    நிர்வாண பெண்கள் அனைவரும் அவனது மனைவிமார்களா அல்லது அடுத்தவன் மனைவிமார்களா?
    இந்த ஆபாசகாட்சி கிருஷ்ணலீலை(முதலில் கீதையில் என தவறாக குறிப்பிட்டமைக்கு மன்னிக்கவும்)யில் இடம் பெற வேண்டிய அவசியம் என்ன?
    இந்த ஆபாசக் காட்சியால் கிருஷ்ணன் சொல்ல வந்த படிப்பினை என்ன?

    • \\அட கருமாந்திரம் புடிச்சவனே அத தடுத்து நிறுத்திவச்சா சந்ததி பெருகாதுடா படிச்ச முட்டாளே!\\உன்னைய மாதிரி ஒருத்தனை பிள்ளையாகப் பெறுவதற்குப் பதில் உங்கம்மா மலடியாவே இருந்திருக்கலாம், அல்லது பக்கத்துல ஏதாவது மருத்துவமனைக்குப் போய் அபார்ஷனாவது பண்ணியிருக்கலாம். இப்ப பாரு எவ்வளவு பெரிய வியாதியா உருவாகி நீயும் கெட்டு மற்றவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறாய்!!

      • இனியவன்,

        கடுங்கோட்பாட்டு பக்தர்களை கொஞ்சம் யதார்த்தமாக வாழ்விலிருந்து அணுகுவதே பொருத்தமாக இருக்கும். நீங்கள் சீண்டிவிடுவதால் அவர்கள் தங்கள் நிலையை ஒருபோதும் யோசிப்பார்களா தெரியவில்லை.

        ஜெயதேவ தாஸ்,

        இந்த விவாதம் தற்போது நாகரீகமற்ற முறையில் அதிகம் வசைச்சொற்களால் சென்று கொண்டிருக்கிறது. இதனால் யாதொரு பயனுமில்லை.

        எனவே இனியவன், தாஸ் இருவரும் அருள் கூர்ந்து இந்த விவாதத்தை நிறுத்தினால் நல்லது. நன்றி

        • \\ கடுங்கோட்பாட்டு பக்தர்களை கொஞ்சம் யதார்த்தமாக வாழ்விலிருந்து அணுகுவதே பொருத்தமாக இருக்கும். நீங்கள் சீண்டிவிடுவதால் அவர்கள் தங்கள் நிலையை ஒருபோதும் யோசிப்பார்களா தெரியவில்லை \\

          சைக்கில் கேப்பில் இப்படி சொல்வது நாங்கள் என்னவோ போதை மருந்துக்கு அடிமை ஆனவர்கள் போல உள்ளது. நதியில் ஓடுவதும் தண்ணி, TASMAC விற்பதுவும் தண்ணி. ஆனா ரெண்டுக்கும் பெரிய வித்தியாசம் இருக்கு. இன்னும் தெளிவா சொல்லனும்னா, சில போலி மத தலைவர்கள் பூசணி காயை தான் சோற்றில் மறைப்பார்கள். ஆனால் உங்களை போன்ற போலி செகுலர் வாதிகள் பூசணி காய் தோட்டத்தையே சோற்றில் மறைப்பார்கள்.

          you are just a superficial intelligance… தமிழில் சொல்ல வேண்டும் என்றால் நுனி போல் மேய்தல்

    • இனியவன் அவர்களே,
      இந்த விஷயம் நான் எழுதும் பொழுது எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் ஒரு முறை புனேவுக்கு எனது அலுவலக பணியாளருடன் (பகுத்தறிவு வாதி 🙂 ) விமானத்தில் செல்லும் பொழுது, அவர் என்னை ஒரு கேள்வி கேட்டார். இதை கேட்ட உடன் எனக்கு சிரிப்பதா அல்லது அழுவாத என்று தெரியவில்லை. வானத்தில் தேவர்கள் இருப்பதாக தானே சொல்கிறார்கள், இப்பொழுது நாம் வானத்தில் தானே பறந்து கொண்டு இருக்கிறோம். நமக்கு எந்த கடவுளும் தெரியவில்லையே என்று கேட்டார். அப்பரம் தான் எனக்குது தெரிந்து தமிழ் சினிமாவை பார்த்து கேட்ட கூட்டத்தில் அவரும் ஒருவர் என்று.

      நீங்கள் எதை அடிபடையாக கொண்டு கிருஷ்ண லீலை பற்றி பேசுகிறீர்கள். மகாபாரத கதை அடிப்படைய கொண்டு தானே. சரி, அந்த கதை படி, யாதவ குல மன்னனான கிருஷ்ணன்,

      அதாவது உங்கள் மொழியில், மிகவும் பிற்படுத்தப்பட்ட MBC இனத்தை சேர்ந்த திராவிட இனத்தை சேர்ந்த (கருப்பு நிறம்) கிருஷ்ணன்,

      நடத்தியதாக சொல்லப்படும் லீலைகள் நடக்கும் பொழுது அவர் வயது ஆறு.

      ஆறு வயது குழந்தைக்கு காம இச்சை இருக்காது என்று உங்களை போன்ற பகுத்தறிவு வாதிகளுக்கு நான் சொல்ல வேண்டியது இல்லை.

      உங்கள் கேள்விக்கான பதில்.

      \\
      இந்த ஆபாசக் காட்சியால் கிருஷ்ணன் சொல்ல வந்த படிப்பினை என்ன?\\

      பாரத கலாச்சாரத்தின் / ஹிந்து மத்த கோட்பாட்டின் படி / சனாதன தர்மத்தின் படி, நதி மிகவும் புனிதமானது. அது இறைவனுக்கு நிகராகவும், தாயாகவும் வருணிக்க படுகிறது. ஆதலால் நதியில் குளிக்கும் பொழுது மட்டும் ஆடை இல்லாமல் குளிக்க கூடாது.

      அந்த தவறை செய்த பெண்களுக்கு பாடம் புகட்டவே இந்த செயல்.

      சினிமாவில் தான் கமெர்சியல் காரணத்திற்காக ஒரு பருவம் அடைந்த இளைஞன் இந்த செயல் செய்வதாக காட்டுகிறார்கள். என்ன செய்வது, இதை தட்டி கேட்டல், கருத்து சுதந்திரத்தில் தலை இடுகிறேன் என்று கூறுகிறார்கள். கிறித்துவ மதத்தை பற்றிய ‘Da vin ci code’ படத்திற்கு தடை விதித்த இத்தாலிய மாபியா தலைவியும் கார்பெரடே கயவர்கலின் தலைவியும் இலங்கை தமிழனின் உயிரை கூடித்த அரக்கி சோனியா,

      சிக்கிம், மணிப்பால் என்று லாட்டரி விட்டரு ஏழை மக்களை கொள்ளை அடித்தவனும், கிறித்துவ மத terrorist , Santiago Martin’s production company அண்ணமார் கதையை தவறான முறையில் திரித்து எடுக்க பட்ட பொன்னர் ஷங்கர் படத்திற்கு தடை விதிக்கவில்லை. இதற்க்கு பெயர் தான் securalisama?

      http://www.indianexpress.com/news/In-South–films-about-politics–by-politicians/768058/

      Christians have been doing such misinterpretation for the past 400 years. I no need to say much about the political business tactics.

      Controversial lottery businessman Santiago Martin’s production company had taken up the film for a brief while; now it is being released as a home production of its hero, Prasanth. (It clearly exposes the missinary work behind this film).

      The misnterrupted Tamilian philosophy (fake dravidian story) helped the missinories to do the religious conversion. Even though the aryan dravidian thoery got failed in both historical & genetical analysis, majority of tamilans believed this fake story.. because of text book and media. The fake story still helps the missinories.

      In 1997, the well known power hungery person called karunanithi renamed the parangi malai ( Named in the name of Brigu rishi) as St thomas mountain for the christians supports in 1996 tamilnadu assembly election. This is called win-win situation. Karunanithi won in the elction. The missinory spread thier fake story in chennai region. I fear the poonar shankar could be one of such attempt intended for coming Tamilnadu election. As we all know karunanithi will go to any extend for the election victory. None of the media is going to supprt us. We must fight in a legal manner.

        • ரொம்பே நல்ல இருக்கே செய்தி. இதை தான் மாமியார் உடைத்தல் மண்குடம் மருமகள் உடைத்தல் பொன் குடம் என்று சொல்வார்கள்.

          I am not deviating from the chapter. I assume that the objective of this article is to expose the fake spritual leader.

          I request the author to read the below link.

          http://www.srisathyasai.org.in/

          கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்ததை போலே… இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட நிலம், பணம், இலவசங்களை மட்டும் இல்லாமல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் இருந்தும் வரும் மில்லியன் கணக்கான பணத்தை வைத்து தொண்டு செய்கிறேன் என்று கூறினால் இதில் என்ன பெரிய விஷயம். அப்பறம் அந்த மாதிரி கிடைக்கிற பணத்துலே அவனுக ஆட்டையே போடுறது வேற விஷயம்.

          எத்தனையோ ஹிந்து அமைப்புகள் ஹிந்து சன்யாசிகள் கூட நிறைய நன்மைகள் செய்கின்றன. ஏன் சாய்பாபா மூலம் அந்த மாவட்டமே தண்ணீர் வசதி பெறுகிறது. எத்தனையோ மருத்துவ மனைகள் இலவசமாக மருத்துவம் செய்கிறார்கள். இதெல்லாம் உங்கள் கண்களுக்கு தெரியாதா என்ன?

          Hindu org doesn’t get any support from the goervnement. In fact they even dont get the fund collected by the temples. In the name of secularisum, the government is looting the Hindu temples. Again, few idiot people argue about bramanisum in temple. They speak as if temple job (bhramin) is high paid white collar job.

          Do you have any idea about the relationship between CIA and Evangalist group?

          Before going to indepth, you must know the history of SUDAN.

          Sudan (10th largest country in the world, oil rich country) got separated into two peaces called north sudan (muslim) and oil rich south sudan (Christian). With reference to the information from wiki, the population of Christians in south Sudan were less than 10% in 1990. The missionary people was able to convert the 90% of them to Christianity in 20 years. Now, they have the full access to south sudan petrol.

          wikipedia:

          Southern Sudanese practice Animism and Christianity with less people who practice Islam. Most Christians are Catholic or Anglican, though other denominations also are active. In recent years, Christian churches have grown despite persecution from the Muslim north and indigenous religions. The Church’s growth is almost always at the expense of traditional beliefs, which has been decreasing at approximately the same rate as Christianity has grown.
          Historically,According to the Federal Research Division of the US Library of Congress: “in the early 1990s possibly no more than 10 percent of southern Sudan’s population was Christian”.[19]

          Source: http://www.businessweek.com/news/2011-01-21/southern-sudan-voted-98-for-independence-latest-results-show.html

          The commission said 83.4 percent the votes in Southern Sudan have been counted. The first official preliminary results are scheduled to be announced on Jan. 30, with a final count to be released by Feb. 14.

          A vote for independence will give the south control of almost 80 percent of Sudan’s current oil production of 490,000 barrels a day, pumped mainly by China National Petroleum Corp., Malaysia’s Petroliam Nasional Bhd. and India’s Oil & Natural Gas Corp. Sudan’s output is the third-biggest in sub-Saharan Africa.

  43. கிருஷ்ணன் பெண்பித்தனாக இருந்தால் “விந்து வெளியேறாத”பீஸ்மர் சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கமாட்டாராம்ல. அரசாங்க அதிகாரியெல்லாம் அடக்கிட்டு சர்ட்டிபிகேட் கொடுங்கப்பா. அவனை யார் அடக்கச் சொன்னது? கின்னஸ்ல இடம்புடிக்கவா? அறிவியலின்படி அதையெல்லாம் அடக்க முடியாது எப்படியாவது வெளியேறிவிடும். அவன் அடக்கிவச்சத நீ என்ன ஸ்கேன் பன்னியா பார்த்தாய்? அவனுக்கு விந்து வருவது நின்னுபோயிருக்கும் இல்ல ஏதாவது குறைபாடாக இருக்கும்,அதுவும் இல்லேன்னா அலியாக இருந்திருப்பான். அட அதுக்குத்தான் அம்புலிமாமா கதை படின்னு சொல்லிகிட்டு இருக்கேன்,ரெண்டுமே ஒன்னுதான்டா.வேண்டாம் இப்ப புதுசா ஸ்பைடர் மேன்,சூப்பர் மேன் புத்தகம் வாங்கிபடி கலர் கலரா படமெல்லாம் போட்டு வந்திருக்கு.கிருஷ்ணன் கதையெல்லாம் பழசு மாமு. அது சரி ஒரு சொட்டு சிந்தாம அடக்கி வச்சதால என்ன பயன்?சுனாமி,பூகம்பம் வருவதை தடுத்து நிறுத்த பயன்படுமா? அட கருமாந்திரம் புடிச்சவனே அத தடுத்து நிறுத்திவச்சா சந்ததி பெருகாதுடா படிச்ச முட்டாளே!

    • \\அவன் அடக்கிவச்சத நீ என்ன ஸ்கேன் பன்னியா பார்த்தாய்?\\உன் அப்பனின் விந்துதான் உன் தாய் வயிற்றில் நுழைந்து நீ உருவானாய் என்பதை ஸ்கேன் செய்து பார்த்தல் தான் ஒப்புக் கொள்வாயா கசந்தவனே?

      • ஸ்கேன் தேவையில்லை. DNA Test போதும். கிருஷ்ணர் கொடுப்பாரா Virginity Certificate?

    • \\ கிருஷ்ணன் பெண்பித்தனாக இருந்தால் “விந்து வெளியேறாத”பீஸ்மர் சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கமாட்டாராம்ல. \\

      உங்களுக்கு யாரு சொன்னது கிருஷ்ணர் பெண் பித்தர்னு, நம்ப அஜீத், விஜய்க்கு கூட தான் ஆயிர கணக்கான பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவர்கள் வெளியே போனால் இளம் பெண்கள் அவர்களை சுற்றி அளப்பறை செய்கிறார்கள். அதனாலே அஜீத் மற்றும் விஜய் போன்ற நடிகர்களை பெண் பித்தர்கள் என்று சொல்வீர்களா? அவ்வளவு ஏன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு கூட ஒரு பெண்கள் கூட்டம் உண்டு.

      அப்படி இருக்கும் பொழுது ஒரு அழகான மன்னனின் மகன் மீது பெண்களுக்கு ஆசை இருப்பது சகஜம் தானே?

      அது என்ன உங்களுக்கு எல்லாம் செக்ஸ் என்றால் அது ஒரு தவறான விசயமாக நினைகிறேர்கள். சாமியார்கள் செக்ஸ் வைத்து கொள்ள கூடாது என்று எந்த சட்ட திட்டத்தில் உள்ளது. வன்புணர்வு தான் தவறே அன்றி, இருவர் தங்கள் இசைக்க புணர்தலில் எந்த ஒரு தவறும் இல்லை. நமது கலாச்சாரத்தில் (ஹிந்து மத்த கோட்பாட்டில்) தான் காமசூத்ரா என்ற பாலியல் சார்ந்த புத்தகம் எழுதப்பட்டது. அவ்வளவு ஏன் அரவாணி மக்களையே புனிதமானவர்களாக போற்றும் ஒரே மத்த கோட்பாடு ஹிந்து தர்மத்தில் தானே?

      \\ விந்து வெளியேறாத”பீஸ்மர் சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கமாட்டாராம்ல. அரசாங்க அதிகாரியெல்லாம் அடக்கிட்டு சர்ட்டிபிகேட் கொடுங்கப்பா. அவனை யார் அடக்கச் சொன்னது? கின்னஸ்ல இடம்புடிக்கவா? அறிவியலின்படி அதையெல்லாம் அடக்க முடியாது எப்படியாவது வெளியேறிவிடும்\\

      \\அது சரி ஒரு சொட்டு சிந்தாம அடக்கி வச்சதால என்ன பயன்?சுனாமி,பூகம்பம் வருவதை தடுத்து நிறுத்த பயன்படுமா? அட கருமாந்திரம் புடிச்சவனே அத தடுத்து நிறுத்திவச்சா சந்ததி பெருகாதுடா படிச்ச முட்டாளே!\\

      உங்க அளவுக்கு கேவலமா யாராலும் இந்த அளவுக்கு எழுத முடியாது. காமராஜர், வாஜ்பாய் மற்றும் அப்துல் கலாம், தலாய் லாமா, எண்ணற்ற கம்யூனிஸ்ட் தொண்டர்கள் கூட தான் வாழ்கை முழுவதும் திருமண பந்தம் இன்றி சமுதாயத்திற்காக வாழ்ந்தார்கள். பீஷ்மர் பற்றிய உங்கள் விமர்சனம் அவர்களுக்கும் பொருந்துமா? இப்பொழுது நீங்கள் படித்த முட்டாளா அல்லது நாங்களா? காலம் முழுவதும் தான் கொண்ட சத்தியத்திற்காக தனக்கு சொந்தமான அரச பதிவியை துறந்து, காலம் முழுவதும் ஒரு சேவகனாக வாழ்ந்து தனது நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தவர் பீஷ்மர். சத்தியத்திற்கு கட்டு பட்டு தான் செய்த தவறிற்காக தானே தண்டனையும் ஏற்றவர். பீஷ்மர் வாழ்கை ஒவ்வொரு அரசு ஊழியர்களுக்கும் ஒரு சிறந்த பாடம்.

      இனியவன் என்று பெயரில் மட்டும் இருந்தால் போதாது. சொல்லிலும் செயலிலும் இருக்க வேண்டும்.

  44. Saibaba sangathi,krishnan sangathiyellam vatchup parkumpothu, krishnan kama leelaigal seithavar, aravani avatharam eduthavar enbathaal krishnarin avatharamthano .. Srisathya sai homosex baba enru nambathan thonrukirathu. By jayamothan.

  45. \\ஸ்கேன் தேவையில்லை. DNA Test போதும்.\\ உங்கப்பன் யாருன்னு DNA Test-தான் பண்ணுவியா? உங்கம்மாவை நம்ப மாட்டியா? போங்கடா.. நீங்களும் உங்க கொள்கையும்…

  46. சாய்பாபாவுக்கும் கருணாநீதிக்கும் பெரிய வித்யாசமில்லை, சாய்பாபா தேடிவரும் பக்தர்களை ஏமாற்றுவதில் வல்லவர், கருணாநீதி ஓட்டுப்போட்ட மக்களை ஏமாற்றுவதில் வல்லவர், இந்த திருடர்ளுக்கு அரசியல் இல்லாத ஆன்மீகம் இல்லை ஆன்மீகம் இல்லாத அரசியலும் இல்லை. இவர்களை ஒழிக்க படிப்பறிவும் பகுத்தறிவும் மட்டும் போதாது கம்யூனிச உணர்வும் களத்தில் இறங்கி போராடும் உணர்வும் நம்மிடையே உருவானால் இவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.

  47. நண்பர் சோழன்
    //கிருஷ்ணன் அதாவது உங்கள் கொழியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த (கருப்பு நிறம்) கிருஷ்ணன்,நடத்தியதாக சொல்லப்படும் லீலைகள் நடக்கும் பொழுது அவர் வயது ஆறு, ஆறு வயது குழந்தைக்கு காம இச்சை இருக்காது//
    மகாபாரதம் ஓர் கதை என்று சொல்லிவிட்டீர்கள். அதன்படி கிருஷ்ணன் பிறப்பிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவனா?அல்லது அந்த வேடத்தில் தோற்றமளித்தானா? விளக்கம்.
    தங்களின் மனம் புண்படும்படி எழுதியமைக்கு வருந்துகிறேன்.

  48. சொல்ல வந்த விஷத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் இப்படி கதை என்ற வார்த்தைக்கு விளக்கம் எழுதியதை பார்க்கும் பொழுது எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. மஹா பாரதம் என்பது நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட ஒரு காவியம். நமது பாரத கலாச்சாரத்தில் உரைநடை வழக்கில் எந்த கதையும் எழுதுவது கிடையாது. மஹா பாரத சம்பவங்கள் 5000 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவங்கள். இதற்கு ஆதாரம் என்ன என்று கேட்டால் இந்திரா பிரஸ்தம் தொடங்கி பாண்டிய நாடு வரை உள்ள கோயில்கள் மற்றும் அந்த பகுதிகளில் எழுதப்பட்ட காவியங்களை தான் காட்ட முடியும். இதற்காக நான் என்ன கண்ணனின் பிறப்பு சான்றிதழைய காட்ட முடியும்.

    சரி உங்களுக்கு அது கதை என்றால்லும், நான் இங்கு சொல்ல விரும்புவது, ஹிந்து மதம் என்று அழைக்க படும் பாரத பண்பாட்டில், சாதியை வைத்து யாரும் உயர்வு தாழ்வு கண்டது இல்லை.

    கிருஷ்ணனே மிகவும் பிற்படுத்த பட்ட குலத்தில் (கிறித்துவ அங்கிலேயர்களால் உருவக்கபட்ட சாதிய அட்டவணை படி MBC) தான் பிறந்து உள்ளார். ராமனும் இச்வாகு வம்சம் அதாவது பிற்படுத்த பட்ட குலத்தில் (கிறித்துவ அங்கிலேயர்களால் உருவக்கபட்ட சாதிய அட்டவணை படி OBC) தான் பிறந்து உள்ளார். வேதத்தை எழுதிய வியாசரே ஒரு மீனவ பெண்ணுக்கும் ஒரு ரிஷிக்கும் பிறந்தவர் தான். இங்கு ரிஷி என்று சொல்லப்படுவது அந்தணர்களை குறிக்காது. ஒவ்வொரு அந்தணனும் தங்கள் காலை பொழுதை இந்த மீனவ அதாவது உங்கள் மொழியில் தலித் சாதியில் (கிறித்துவ அங்கிலேயர்களால் உருவக்கபட்ட சாதிய அட்டவணை படி SC) உள்ளவருக்கு நன்றி தெரிவித்து தான் தன் பொழுதை தொடங்குவர்.

    சரி இந்த விசயங்கள் எல்லாம் ரொம்ப பழசு, ஒரு சில நுற்றாண்டுகள் முன்பு வாழ்ந்த நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களை எடுத்து கொள்வோம். இந்த நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களில் அனைத்து சாதியினரும் (OC, OBC, MBC, SC ,ST) இருந்தனர். உங்களுக்கு சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள பெருமாள் அல்லது சிவன் கோயில்களுக்கு சென்று பாருங்கள்.

    சாதியின் பால் உருவான ஏற்ற தாழ்வுகள் இடை காலத்தில் மிலேச்சர்களின் படை எடுப்பாலும், ஒரு சில முட்டாள் மனிதர்களாலும் உருவானது. நான் தர்மத்தை அடிப்படைய கொண்டு தான் பேச முடியுமே தவிர மனிதர்கள் தவறுக்கு பொறுப்பு ஏற்க முடியாது.

    • அய்யா,
      தங்களது ஹிந்து தர்மத்தில் சாதியே இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். அம்பிகள் அடித்துவிடும் கதையையே அதுவும் ‘5000’ வருடத்திற்கு முந்தைய கதையிலிருந்து சொல்கிறீர்கள். நீங்கள் மெச்சும் ஒரிஜினல் இராமயணம் மாகபாரதித்திலேயே சாதிகத் கொடுமைகள் குறித்த கதைகள் இருக்கின்றன. எ.கா. சம்பூகன்.போகட்டும். ஏன் உங்கள் சாதி சமத்துவத்திற்கு நிகழ்கால எடுத்துக்காட்டுகள் ஏதும் இல்லையா?

      1. சங்கர மடங்களில் பார்ப்பனர்களும், சைவ ஆதீனங்களில் சைவ வேளாளரும்தான் மடாதிபதி ஆக முடியும் என்று வைத்திருக்கிறார்கள். கிந்து தர்மத்தில் சாதி இல்லை என்றால் காஞ்சி சங்கரமடத்தில் இருக்கும் சாதி வெறியைக் கருத்தில் கொண்டு அவர்களை தூக்கில் போடலாமா?

      2.நகர சுத்தி வேலையை அருந்ததி மக்கள் மட்டும் செய்வதற்கு எந்த மிலேச்சன் காரணம்? தற்போது இந்து தர்மத்தின் சாதி சமத்துவம் பேசும் ஆன்றோர்கள் இனியாவது அந்த வேலையை எடுத்துக் கொண்டு அருந்ததி மக்களை விடுவிக்கலாமே?

      3. தேவராத்திலும் கூட மாடு தின்னும் புலையா என்ற துவேசத்தை பார்க்க முடியும். இந்து தர்மம் என்பதே சாதி ஆதிக்கம்தான். அந்த தர்மத்தை நிலைநாட்டவே இத்தனை கதைகள், புராணங்கள், ஸ்மிருதிகள். சாதி ஆதிக்கத்தை புடுங்கிவிட்டால் அப்புறம் இந்து மதம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது.

      2.

      • \\நீங்கள் மெச்சும் ஒரிஜினல் இராமயணம் மாகபாரதித்திலேயே சாதிகத் கொடுமைகள் குறித்த கதைகள் இருக்கின்றன. \\ இதெல்லாம் சிலர் நாத்தீகர்கள் செய்யும் பொய்ப் பிரச்சாரம். வேத காலங்களில் வர்ணம் என்பது பிறப்பால் நிர்ணயிக்கப் பட்டதல்ல, அந்த தனிப்பட்டவரின் தகுதிளாலும் செயல் பாடுகளாலுமே நிர்ணயிக்கப் பட்டது. உதாரணத்திற்கு, ஒரு டாக்டரின் மகன் என்பதாலேயே ஒருத்தன் டாக்டராகிவிட முடியாது, அவனும் படித்து பயிற்சி செய்து பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப் பட்டால் மட்டுமே டாக்டர் ஆக முடியும். ஆனால், அப்ப மருத்துவர் எனும் போது மகனும் மருத்துவராவதற்க்கான வாய்ப்புகள் அதிகம். கீதையில் இதைத்தான் கீழ்க் கண்டவாறு பகவான் கூறுகிறார்.

        catur-varnyam maya srstam
        guna-karma-vibhagasah
        tasya kartaram api mam
        viddhy akartaram avyayam

        According to the three modes of material nature and the work ascribed to them, the four divisions of human society were created by Me. And, although I am the creator of this system, you should know that I am yet the non-doer, being unchangeable. [B.G 4.13]

        இங்கே பகவான் நான்கு வர்ணங்கள் guna-karma பொறுத்து உருவாகிறது என்று சொல்கிறார். அதாவது, தகுதி, செயல்பாடு என்று பொருள். பிறப்பால் மட்டுமே என்றால் janma-karma என்று சொல்லியிருப்பார். சரி, இந்த தகுதி எங்கிருந்து வருகிறது? அது இறைவனின் படிப்பிலேயே இருக்கிறது. சிலர் நன்றாக படிப்பார்கள், போய் சொல்லவே வராது, எளிமையாக இருப்பார்கள், எந்த சண்டை சச்சரவுக்கும் போக தயங்குவார்கள். அடுத்து சிலர், தலைமை தாங்கும் திறனோடு இருப்பார்கள், மற்றவர்களை கையாள்வதில் தேர்ந்தவர்களாக இருப்பார்கள், ஏதாவது கைகலப்பு என்றால் துணிந்து இறங்குவார்கள். அடுத்து, சிலர், வியாபாரம் செய்யும் திறமையோடு இருப்பார்கள், விவாசாயம் செய்வதற்கு விரும்புபவர்களாக இருப்பார்கள். இன்னும் சிலர் எந்தத் திறமையுமே இருக்காது, எங்காவது ஏதாவது வேலை கிடைத்தால் செய்து விட்டு, ரொட்டி-கப்டா -மக்கான் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்த வகையறாக்களை எந்த ஜாதியிலும், மொழியிலும், நாட்டிலும் நீங்கள் பார்க்க முடியும். இது இயற்க்கை. அப்படி இல்லா விட்டால் சமுதாயம் இயங்கவே முடியாது. ஒரு வங்கியில் என்ல்லோரும் மேனஜராக இருக்க முடியாது, பியூன்களும் வேண்டும். ஏற்றத் தாழ்வுகள் வேண்டாமென்று சொல்பவர்கள், மேனேஜர், பியூன் இருவருக்கும் ஒரே சம்பளம், சலுகைகள் தாருங்கள் என்று சொல்லி வாங்கித் தந்து விடுவார்களா? மேனஜர் பியூன் என்று இருப்பதால் அவர் உயர்ந்த ஜாதி, இவர் தாழ்ந்தவர் என்ற பேதத்தை நிறுவனமே உருவாக்குகிறது என்று குற்றம் சாட்டுவீர்களா? மேனஜருக்குண்டான தகுதியுடைவரும் வேண்டும் பியூனுக்குண்டானவரின் தகுதியுடைவரும் வேண்டும், அப்படியில்லாவிட்டால் வங்கி வேலை நடக்கவே நடக்காது. அதே போலத்தான், ஒரு சமுதாயத்தில் பொறுமையாக சிந்திப்பவர், காக்கும் வீரர், வேளாண்மை, பால் உற்பத்தி, விவாசாயம் செய்வோர், இவர்களுக்கு உதவுவோர் இவை வேண்டும். இல்லாவிட்டால் சமுதாயம் இயங்காது.

      • வர்ணங்கள் என்பது பிறப்பால் அல்ல. உதாரணத்திற்கு விஸ்வாமித்திரர் முதலில் ஷத்த்ரியராக இருந்தார், அவர் மன்னனாக நாட்டை ஆண்டு வந்தார். ஆனால் பின்னர் வேதங்கள் கற்று பிராமணராக மாறியது எப்படி? அதே போல ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரே தாய் தந்தையருக்குப் பிறந்த மகன்களில் சிலர் பிராமணராகவும், சிலர் ஷத்ரியராகவும் சிலர் வைஷ்யராகவும் சிலர் சூத்திரராகவும் ஆனாதாக குறிப்புகள் உள்ளனவே! எனவே பிறப்பாலேயே வர்ணம் முடிவாகிறது என்பது இன்றைய ஜாதிப் பிராமணர்களின் துர்போதனை, வேதங்களில் சொல்லப் படவில்லை. [முடிந்தால் சோ ராமசாமி எழுதிய எங்கே பிராமணம் என்ற புத்தகத்தை வாங்கிப் படிக்கவும்]. வேத காலத்தில் நான்கு வர்ணங்கள் இருந்தாலும், யாரும் தாழ்ந்தவர் கிடையாது அவரவர் தங்களது கடமைகளைச் செய்து வந்தனர். நமது உடலில் தலைதான் பிரதானம் என்றாலும், காலுக்கு ஏதாவது ஒன்று என்றால், உடனே வெட்டி எறிந்து விடுங்கள் என்று சொல்ல மாட்டோம், அதற்கும் என்ன செலவு ஆனாலும் செய்வோம், அதைப் போலத்தான். இந்த ஆரோக்கியமான வர்ணம் என்ற பிரிவுகள் பின்னர் உருக்குலைந்து ஜாதிகளாகி விட்டன. இன்றைய தீண்டாமை, ஜாதி வெறி போன்றவற்றை வைத்து, இதே போலத்தான் எப்போதும் இருந்தார்கள் என்று சொல்வது சரியாகாது. இன்றைக்கு திருமணத்திற்கு முன்பே பெண்களும், பசங்களும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள் சில சமயம் வரம்பும் மீறுகிறார்கள் என்பதை சகஜமாகப் பார்க்க முடிகிறது, ஆனால், கட்டிய மனைவியிடம் பேசவே மாதக் கணக்கில் காத்திருந்தார்கள் என்ற காலமும் இருந்தது என்பதை மறந்துவிடக் கூடாது. இன்றைக்கு கருணாநிதியின் ஆட்சியைப் பார்த்து விட்டு காமராஜர் மாதிரி ஒருத்தர் வாழ்ந்திர்க்க வாய்ப்பே இல்லை என்று சொல்லிவிட முடியாது. மக்களுக்கு உழைத்த தன்னலமற்ற நேர்மையான தலைவர்களும் இருந்தார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

      • காமாராஜருக்கு பின்னால் ஐம்பது ஆண்டு காலம் மாற்றி மாற்றி “கலகங்களின்” ஆட்சி தானே நடந்தது? இவர்கள் எல்லோரும் பெரியாரின் வழித் தோன்றல்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தானே? ஜாதி, தீண்டாமையை எதிர்ப்பவர்கள் தானே? ஐம்பது வருட ஆட்சி, அதிகாரம் இவர்கள் கையில் தானே இருந்தது? ஐம்பது ஆண்டு கால ஆட்சியில் நகர சுத்தி தொழிலாளர் முறையை ஒழித்திருக்கலாம் அல்லவா? ஏன் செய்ய வில்லை? இங்கே கேள்வி கேட்கும் வினவு, இவர்களைக் கேள்வி கேட்டதுண்டா? இந்த தொழிலாளர்களை மீட்டு ஒரு கவுரவமான வாழ்வாதாரத்தைக் கொடுக்க வீரமணி என்ன செய்தார், ஜெயலலிதா, கருணாநிதி, ஆட்சியில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு மாறி மாறி சொம்புத் தூக்குவதர்க்கே நேரம் போதவில்லையா? ஜெயலலிதா, கருணாநிதி இவங்களுக்கு கொள்ளையடிக்கவே நேரம் பத்தவில்லை, வீரமணிக்கு தனக்குப் பின் தி.க. வசம் இருக்கும் சொத்துகள் தன் மகன் கட்டுப் பாட்டுக்குள் போனால் போதும், வினாவுக்கு உண்ட உணவு செரிமானமாக வில்லை என்றால் பதிவு போடுவார், இளிச்ச வாயனிடம் கேள்வி கேட்பார். நகர சுத்தி தொழிலாளி சுத்தி சுத்தி அதே வேலையைத் தான் செய்து கொண்டிருப்பார். எல்லாம் காகிதப் புலிகள், ஏட்டுச் சுரைக்காய்கள், இளிச்சவாயன் கடவுள் நம்பிக்கையுள்ளவன் மட்டும் தான்.

  49. \\1. சங்கர மடங்களில் பார்ப்பனர்களும், சைவ ஆதீனங்களில் சைவ வேளாளரும்தான் மடாதிபதி ஆக முடியும் என்று வைத்திருக்கிறார்கள். கிந்து தர்மத்தில் சாதி இல்லை என்றால் காஞ்சி சங்கரமடத்தில் இருக்கும் சாதி வெறியைக் கருத்தில் கொண்டு அவர்களை தூக்கில் போடலாமா?\\ காலம் மிகப் பெரிய ஷக்தி. அதி எல்லாத்தையுமே அழிக்கும். புதுசா கட்டும் வீடு அப்படியேவா இருக்குது? காலப் போக்கில் பழையதாகிறது, அல்லது குட்டிச் சுவராகக் கூட ஆகிறது. வேத கால ஒழுக்கமும் அப்படியே தான். காலப் போக்கில் ஒழுக்கம் குறைகிறது. சங்கரர் மடத்தில் இன்றைக்கு இருப்பவர்கள் ஆளுக்கு ஒரு நடிகையுடன் இணைக்கப் பட்டு பேசப் படுகிறார்கள், இன்னொருத்தன் அடையாரில் ஒரு குழந்தைக்கு தகப்பனாம் [பார்க்க சாயலில் இவனை உரித்து வச்சா மாதிரியே இருக்கு, கொலை கேசு போடப்பட்ட அக்கியூசுடு? இத்தனை வகையில் தவறிப் போனவர்களைப் பற்றி பற்றி சொல்ல என்ன இருக்கு? ஒன்று மட்டும் நிச்சயமாகச் சொல்ல முடியும், வர்ணம் என்பது தகுதியை வைத்து மட்டுமே, பிறப்பால் அல்ல.

  50. \\2.நகர சுத்தி வேலையை அருந்ததி மக்கள் மட்டும் செய்வதற்கு எந்த மிலேச்சன் காரணம்? தற்போது இந்து தர்மத்தின் சாதி சமத்துவம் பேசும் ஆன்றோர்கள் இனியாவது அந்த வேலையை எடுத்துக் கொண்டு அருந்ததி மக்களை விடுவிக்கலாமே?\\ அந்தக் காலாத்தில் எவனும் கக்கூசு கட்டிக் கொண்டு கக்கா போகவில்லை. வயல் வெளிகளில் போவார்கள், அதை பன்றிகள் வந்து சாப்பிட்டு சுத்தம் செய்துவிடும், இல்லாவிட்டால் வெயிலிலேயே காய்ந்து மண்ணோடு மண்ணாகி விடும். சென்னையில் உள்ள கூவம் ஆறு கூட 1960-களில் படகு சவ்வாரி போக ஏற்றதாகவும், குடிக்க குளிக்க பயன்படும் வகையில் நீர் இருந்ததாகவும் தெரிகிறது. இந்த பம்பாய் கக்கூஸ், சாக்கடை எல்லாம் இப்போது வந்ததுதானே? அதற்க்கு முன் ஏது? அது சரி, ஒரு கடவுள் நம்பிக்கை உள்ளவனிடம் ஏதோ வக்கீல் மாதிரி குறுக்குக் கேள்விகள் கேட்கும் நீங்கள், இன்றைய முதல்வர், கருணாநிதி, ஐவரும் வர்ணாசிரமத்தை எதிர்ப்பவர்தானே, அவரிடமே சொல்லி நகர சுத்தி தொழிலார் முறையை ஒழியுங்கள் என்று அறிவுத்தலாமே. இதுவரை அது தெரியவில்லை? எழுபது ஆண்டு கால அரசியல் அனுபம் ஐம்பது முறை எம்.எல்.ஏ. ஆறு முறை முதலமைச்சர் என்றெல்லாம் பீற்றிக் கொள்பவருக்கு நகர சுத்தி தொழிலார் படும் அவஸ்த்தை தெரியாதா? ஜாதி ஒழிய வேண்டுமென்றவர், இதை ஒழிக்க என்ன பண்ணினார்? அங்கே விட்டு விட்டு இங்கே ஏதோ கோவிலுக்கு போறவன்கிட்ட வந்து லந்து பண்ணிக்கிட்டு இருக்கீங்களே? எவனாவது இளிச்சவாயன் கிடைப்பான் என்று அலைவீர்களோ?

  51. \\இன்றைய முதல்வர், கருணாநிதி, ஐவரும் வர்ணாசிரமத்தை எதிர்ப்பவர்தானே,\\ இதில் ஐவரும் என்பதை இவரும் எனப் படிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும்.

  52. அனைவருக்கும் வணக்கம்

    ஜெயதேவ தாஸ் எனது அரை மணி நேரத்தை மிச்ச படுத்தி உள்ளார். எனக்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடை அளித்த அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்

    வினவு அவர்களே,

    எனது கருத்தை முழுமையாக படித்து பார்த்திர்களா? தயவு செய்து சொல்லப்பட்ட விஷயத்தை முழுமையாக படிங்கள். படித்து அதன் பின்பு பதில் எழுதுங்கள் என்று நான் எத்தனை முறை சொல்வது. இதோடு இது மூன்றாம் முறையாக நான் சொல்கிறேன்.

    சரி விசயத்திற்கு வருவோம்.

    \\தங்களது ஹிந்து தர்மத்தில் சாதியே இல்லை என்று ஆர்.எஸ்.எஸ். அம்பிகள் அடித்துவிடும் கதையையே அதுவும் ’5000′ வருடத்திற்கு முந்தைய கதையிலிருந்து சொல்கிறீர்கள்.\\

    நான் எங்கு சொன்னேன் சாதி இல்லை என்று. நான் எனது பதிவில் சாதி இல்லை என்று சொல்லவே இல்லையே? ஏன் இப்படி பொய் சொல்கிறீர்கள்.

    எனது பதிவில் நாயன்மார்களையும், ஆழ்வார்களையும் பற்றி எழுதிய குறிப்பை படிக்க வில்லையா? அவர்கள் ஐந்து நூற்றாண்டுகள் முன்பு வாழ்ந்தவர்கள். நான் சொல்லவந்தது குலத்தில் வேறுபாடு இல்லை என்று தான்.

    ஹ்ம்ம்…RSS அமைப்பை பற்றி இங்கு ஏன் இழுக்கிறேர்கள். RSS அமைப்புக்கு நான் ஒன்றும் வக்கீல் அல்ல. உண்மையில் RSS அமைப்பு ஒரு ஆன்மிக அமைப்பு அல்ல. அது ஒரு ஹிந்து சமுதாய அமைப்பு. அவ்வளவே? எங்கள் மத்தம் ஒன்றும் அப்ரகமிய மதம் போன்று நிறுவனப்பட்ட மதம் கிடையாது. அங்கு தான் வாடிகன் என்ற அமைப்போ அல்லது பாத்வா சொல்லும் இஸ்லாமிய அமைப்போ சொன்னால் அது அந்த மதத்தில் உள்ள அனைவர்க்கும் பொருந்துவதற்கு.RSS ஒன்றும் ஒட்டு மொத்த பாரத சமுதாயத்தின் குரல் கிடையாது. ஆனால் அவர்கள் குரலும் இந்த பண்பாட்டின் ஒரு குரலே….

    1. சங்கர மடங்களில் பார்ப்பனர்களும், சைவ ஆதீனங்களில் சைவ வேளாளரும்தான் மடாதிபதி ஆக முடியும் என்று வைத்திருக்கிறார்கள். கிந்து தர்மத்தில் சாதி இல்லை என்றால் காஞ்சி சங்கரமடத்தில் இருக்கும் சாதி வெறியைக் கருத்தில் கொண்டு அவர்களை தூக்கில் போடலாமா?

    🙂 என்ன சார் இது, தயவு செய்து உங்கள் கேள்வியை மற்றும் ஒரு முறை நீங்களே படித்து பாருங்கள். எனக்கு படித்த பின்பு சிரிப்பு தான் வருகிறது. BJP கட்சி கோட்பாட்டில் இருக்கும் ஒருவனை உங்கள் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தலைவர் ஆகா முடியுமா? முடியாது என்று கம்யூனிஸ்ட் காரர்கள் சொன்னால், அவர்களை அரசியல் வெறி பிடித்தவர் என்று கருத்தில்கொண்டு தூக்கில் போடலாமா? மறுபடியும் சொல்கிறேன். நான் பாரத பண்பாட்டில் அல்லது ஹிந்து மத்ததில் குலம் சார்ந்த கோட்பாடு இல்லை என்று நான் எந்த இடத்திலும் சொல்லவே இல்லை.

    //2.நகர சுத்தி வேலையை அருந்ததி மக்கள் மட்டும் செய்வதற்கு எந்த மிலேச்சன் காரணம்? தற்போது இந்து தர்மத்தின் சாதி சமத்துவம் பேசும் ஆன்றோர்கள் இனியாவது அந்த வேலையை எடுத்துக் கொண்டு அருந்ததி மக்களை விடுவிக்கலாமே? //

    ஜெயதேவ் தாஸ் அவர்கள் சிறப்பான பதிலை சொல்லிவிட்டதால் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. வறண்ட அரேபியாவில் (இஸ்லாம்) இருந்து வந்த மிலேச்சன் மற்றும் கடும் குளிர் பகுதியான ஐரோப்பாவை (கிறித்துவ) வந்த மிலேச்சன் தான் காரணம். இந்த இரண்டு பகுதிகளில் தான் கக்கா போவதற்கு தனி இடமும் இருக்கும். ஏன் எனில் ஒரு இடத்தில் தண்ணிர் பிரச்சனை. இன்னொரு இடத்தில கையை வெளியே நீடினாலே உறைந்து விடும். அப்படி இருக்கையில் வேற எதாவது நீட்டினால் 🙂

    அந்த பிரச்சனை இல்லை எமக்கு இல்லை. ஹாயாக நதி ஓரம் கக்கா போய் நதியிலே நல்லா குளிச்சிட்டு வருவோம். இதை பற்றி தெரிந்து கொள்ள ஒரு கிராமத்தை அணுகவும். கக்குஸ் உள்ள 1000 ஆண்டு பழங்கால கோயில் ஒன்றை காட்டுங்கள் பார்க்கலாம்.

    \\3. தேவராத்திலும் கூட மாடு தின்னும் புலையா என்ற துவேசத்தை பார்க்க முடியும். \\

    பசுவை தின்பவன் புலையன் தான் (புலையன் என்பது குலத்தை குறிக்காது.)
    அதில் எனக்கு எந்த ஒரு மாற்று கருதும் இல்லை. பசு பாரத கலாச்சாரத்தின் படி ஒப்பற்ற சாத்விக அதிர்வலைகளை வெளியிடும் ஒரு ஜீவன் . எங்கள் வணக்கத்திற்கு உரிய ஒரு ஜீவனை கொன்று உண்பவன் எங்களுக்கு விரோதி. அதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது.

    \\இந்து தர்மம் என்பதே சாதி ஆதிக்கம்தான். அந்த தர்மத்தை நிலைநாட்டவே இத்தனை கதைகள், புராணங்கள், ஸ்மிருதிகள். சாதி ஆதிக்கத்தை புடுங்கிவிட்டால் அப்புறம் இந்து மதம் என்ற ஒன்று இருக்கவே இருக்காது\\

    இந்த கருத்திற்கு நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.உங்கள் கருத்தின் படி இடத்திற்கு இடம் சாதிக்கு சாதி மாற்றி பேசுபவர்கள் நாங்கள்.

    உங்களுக்கும் எனக்கும் ஒரு போட்டி. ஒரு ஹிந்து சமுதாய மக்கள் வாழும் பகுதியில் ஒரு கூட்டம் போட்டு ஹிந்து சமுதாய அவலங்களை பற்றி பேசுங்கள். கிருஷ்ணன் இல்லை, ராமன் இல்லை என்று உரக்க சொல்லுங்கள். என்ன நடந்தது என்று பதிவில் போடுங்கள்.

    அதே போல் இஸ்லாம் மற்றும் கிறித்துவ சமுதாய மக்கள் வாழும் பகுதியில் சென்று அவர்கள் மத அவலங்களை பற்றியும் அல்லா அல்லது ஏசு இல்லை என்றும் சொல்லி பாருங்கள். நடந்தது என்ன என்று நீங்கள் உயிரோடு இருந்தால் அதையும் பதிவில் போடுங்கள்.

    எனக்கு ஒரு கேள்வி. ஏன் ஒரு இஸ்லாமிய நாட்டில் கூட ஒரு கம்யூனிஸ்ட் கட்சி இல்லை. ஒரு வேலை அங்கு எல்லாம் மோனோபோலி இல்லையா என்ன?

  53. புலையன் குலத்தை குறிக்காது என்றால் வேறு எதைக்குறிக்கும்.மாட்டுக்கறி உண்பவர்கள் உங்களுக்கு விரோதியென்றால். இந்து தலைவர்கள் பல வருடங்களுக்கு முன்னால் ”அரியின்
    புதல்வர்களே! அயோத்திக்கு வாருங்கள்” என்று எதுக்கு கூப்பாடு போட்டு கூப்பிட்டார்கள். அடுத்ததுமகா(கஞ்சா)கவி புலையர்க்கும் பறையர்க்கும் விடுதலைன்னு எதுக்கு பாடினார். ஒருவேள போதையில் உளறியிருப்பாரோ?.உங்கள் பெயருள்ள அரசர் ஒருவர்தான் “அவாளை” வெத்தல பாக்கு வச்சு அழைச்சுட்டு வந்தது. பழசெல்லாம் வசதியா மறச்சுபுட்டேங்களே, சோழா….

  54. பாரதி ஒரு போதைக்கு அடிமை ஆனவர் என்று இவ்வளவு நாள் தெரியாமல் போச்சே? அதனால் தான் பூணுலை அறுத்து கொண்டு லூசு தனமாக பாடி திரிந்தறா? நல்ல வேலை தக்க சமயத்தில் வந்து எனக்கு இருந்த நீண்ட நாள் ஐயத்தை போக்கியதற்கு நன்றி.

    நீங்களே சொல்லி விட்டீர்கள். பாரதி ஒரு (கஞ்சா)கவி. போதை மருந்துக்கு அடிமை ஆனவன் பாடிய பாடலுக்கு என்னை பதில் சொல்ல சொன்னால் நான் என்ன செய்வது.

  55. Why should saibaba like people render various type of essential services to the people (poor)since the people elected govt. is there? Who and why they serve people with a huge setup? Why Millioners, multi national companies trusts and foundations donate them most liberally ? The govt. and the govt. machinery adore them irrespectively? Why should not the Govt.do the service for the welfare of the people? people are taught to beg before these cheats by the rulers for the safety of their exploitation.Those who are advocating for these scoundrels are dead against the welfare of the majority people (poor)

Leave a Reply to rammy பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க