முகப்புபார்ப்பனிய பாசிசம்பார்ப்பன இந்து மதம்யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

-

யார் கடவுள்? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா?

”என்னை ஒரு மந்திரவாதியுடன் ஒப்பிடாதீர்கள். என்னிடமிருப்பது  தெய்வீக சக்தி,அதற்கு எல்லை என்பதே கிடையாது. பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடிய சக்தி என்னிடமிருந்தாலும் நான் அப்படி செய்யவில்லை. ஏனெனில் அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை”

இதைச் சொன்னவர் வேறு யாருமில்லை…. மருத்துவ சாதனங்களின் உதவியால் மூச்சு விட சிரமப்பட்டுக்கொண்டிருக்கும்  சத்ய சாயிபாபாதான்.

வானத்தை பூமியாகவும் பூமியை வானமாகவும் மாற்ற வேண்டிய அவசியமில்லாமல் இருக்கலாம். ஆனால், செயலிழந்து விட்ட அவரது சிறுநீரகங்களையும் நுரையீரலையும் பழைய நிலைமைக்கு மந்திரத்தின் மூலமாவது கொண்டு வர வேண்டிய அவசியம் அவருக்கிருக்கிறது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின்  ஆஸ்த்துமாவையும், கான்சர் கட்டிகளையும் முதுகுதண்டு வடங்களையும் நொடிப்பொழுதில் ‘குணப்படுத்திய’ சாயிபாபா, உலகின் எந்த மூலையிலிருந்தாலும் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருகில் சென்று அரவணைத்தும் தடவிக்கொடுத்தும் ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னுடம்பை தானே குணப்படுத்திக்கொள்ளும் அற்புதத்தைக் காண அவரது  பக்தர்கள்  காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ மருத்துவத்தின்  அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்.

சாயிபாபாவை  பற்றி பெரிதாக  அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில்  செயினை வரவழைப்பார். மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக் கொடுப்பார். இவை எல்லாரும் ஒரு சில  பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு  அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை பூசணிக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…

ஆந்திரத்தைச் சேர்ந்த புட்டபர்த்தியின் சாயிபாபாதான் அவர். இவருக்கு 165 நாடுகளிலும் பக்தர்கள்  உண்டு.  பல பல்கலைகழகங்களும் மருத்துவமனைகளும் உண்டு. கோடிக்கணக்கில் சொத்துகளும் உண்டு.

1926ஆம் ஆண்டு புட்டபர்த்தியில் பிறந்த இவர் தனது 13ஆம் வயதில்  மந்திர தந்திர சக்திகளை காட்டத் துவங்கினார். பூக்களை வரவழைப்பது,  இனிப்புகளை வரவழைப்பது என்பது வித்தைகளை காட்டினாராம். தன்னை சீரடி சாயிபாபாவின் மறு உருவம் என்று பிரகடனப்படுத்திக் கொண்டு தானே இறைவன் என்றும் சொல்லிக்கொண்டார்,அதனை நிரூபிப்பதற்காக பூக்களை தரையில் வீசினாராம்.,  வீசிய பூக்கள்  தெலுங்கு எழுத்துகளாக மாறி, அவற்றை படித்தபோது சாயிபாபா என்று இருந்ததாம்.. இதனை அவரது பேராசியர் கஸ்தூரி சாயிபாபாவின் வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டிருக்கிறார். கஸ்தூரி அவர்கள் ஹாலிவுட் படங்கள் பார்ப்பதில்லை போலும். இல்லையேல் பூக்களை வானத்தில் வீசி அவைகள் நட்சத்திரமாக மாறி பின்னர் தெலுங்கு முதல் உலக மொழிகள் அனைத்திலும் சாயிபாபா என்று தென்பட்டதாக அடித்து விட்டிருக்கலாம்.

1950ய-இல் சிறு ஆசிரமமாக தொடங்கப்பட்ட பிரசாந்தி நிலையம்  இன்று ஒரு சிறு நகரமாக  வளர்ந்து நிற்கிறது. பல நூற்றுக்கணக்கான ஓட்டல்கள், தங்குமிடங்களோடு, ஆரம்பப்பள்ளி,பல்கலைகழகங்கள், மருத்துவமனைகள் எல்லாம் சாயிபாபாவின் பெயரில் பிரம்மாண்டமான நிறுவனங்களாக  வளர்ந்திருக்கிறது.

அவரது பக்தர்கள் பட்டியலில் பல அரசியல் பிரபலங்கள் அடங்குவர். வாஜ்பேயியிலிருந்து முரளி மனோகர் ஜோஷி,பல உயர் பதவியிலிருக்கும் அதிகாரிகள், விஞ்ஞானிகள் என்று  பலதரப்பினர் அடங்குவர். சாயிபாபா வெளிநாடுகளுக்குச் செல்வதில்லையே தவிர அங்கும் அவருக்கு செல்வாக்குண்டு.

சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.

”நான் 1976-ஆம் ஆண்டிலிருந்து  சாயிபாபாவுடனிருந்தேன். அதற்கு முன்பு டிரான்சிடெண்டல் மெடிட்டிடேஷனில் ஆசிரியராக இருந்தேன். அங்குதான் பாபாவை  பற்றிய அறிமுகம் கிடைத்தது. எந்த விளம்பரங்களும் தேவையில்லை, பணம் எதும் கொடுக்கத் தேவையில்லை, வந்து அமர்ந்து கடவுளின் அருளைப் பெற்றுச் சென்றாலே போதுமானது என்று  மிகவும் எளிமையாக இருந்தது. புட்டபர்த்திக்கு வந்து சாயிபாபாவின் காலடியில் விழுந்தேன். அவர் காலடியிலேயே 21 ஆண்டுகள் கிடந்தேன். நான் அவருடைய  பிரியத்துக்கும் நெருக்கத்துக்குமுரியவனானேன்.  நான்கு  வருட  காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது. ஒருமுறை நான் ஒரு பெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன். சாயிபாபா, அந்தப்  பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும் தொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம் புரிந்திருக்கிறேன்”என்றும் கூறினார். நான் அவரது காலடியில் விழுந்ததோடு பிரியத்துக்குரிய எனது காதலியையும் பிரிந்தேன். ஏனெனில், அவரே கடவுளென்றும் கடவுளுக்காக எதையும் செய்யும் மனநிலையிலும் இருந்தேன்.”

1993-ஆம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தின் ஆறு  உட்குடியிருப்பாளர்கள் சாயிபாபாவின் படுக்கையறையில் மர்மமான முறையில் கொல்லப்பட்டனர். தாக்குதலில்  இரண்டு பேர் இறந்துவிட்டதாகவும் நான்கு பேர் கைகளில் கத்தி வைத்திருந்ததால் போலிசால் தற்காத்துக்கொள்ள சுட்டபோது  இறந்துவிட்டதாகவும் சொன்னார்கள். அனைவரது எதிர்காலத்தையும் அறியும் தெய்வீகச் சக்தி படைத்த சாயிபாபா  அப்போது உயிருக்கு பயந்து ஓடிவிட்டார்.  கொல்லப்பட்ட அனைவரும் சாயிபாபாவுக்கு நெருக்கமானவர்கள்தான்.

அந்த நிறுவனம் ஒரு கொலைகார நிறுவனம். அது  பணத்தை வெளுக்கும் ஒரு நிறுவனம். ஆசிரமத்துக்கு ஒருநாளைக்கு குறைந்தது பத்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் பேர்  வரைக்கும் வருவார்கள். ஒவ்வொரு வருடமும் குறைந்தது 55 மில்லியன் டாலர்கள் பக்தர்களிடமிருந்து மட்டும் சாயிபாபாவின் டிரஸ்டுக்குக் வரும். பல அரசியல்வாதிகளிடமிருந்தும் பணம் டிரஸ்டுக்கு வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல், பல மந்திரிகள்,அதிகாரிகள், கோர்ட்டு நீதிபதிகள்,சிபிஐ  அதிகாரிகள் என்று பலருக்கும் பணம் பட்டுவாடா  நடக்கும்.

அங்கிருக்கும் சூப்பர் ஸ்பெசல்  மருத்துவமனையைக் கட்ட  108 மில்லியன் டாலர்கள் நிதிஉதவி செய்தது, ஹார்ட் ராக் கஃபே.

அந்த மருத்துவமனை பார்க்க ஒரு அரண்மனைபோலவே இருக்கும். அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக  வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

2000ஆம் ஆண்டு யுனெஸ்கோவும் ஆஸ்திரேலியாவின் பல்கலைகழகமும் இணைந்து சத்ய சாயி டிரஸ்டின் குழந்தைகளுக்காக ஒரு செயல் திட்டத்தை வகுத்திருந்தது. பின்னர் குழந்தைகளை பாலியல் வக்கிரத்தோடு தவறாக பயன்படுத்தும் நோக்கமிருப்பதாகவும் சத்யசாயி டிரஸ்டுக்கான உதவியை பின்வாங்குவதாகவும் யுனெஸ்கோ அறிவித்துவிட்டு http://exbaba.com/shortnews/unesco.html விலகிக்கொண்டது.

“Behind the Mask of the Clown” என்று நான் எழுதிய புத்தகத்தின் மூலம் குறி வைத்து விரட்டப்படுகிறேன். ஆபத்துகள் என்னை சூழ்ந்திருப்பதால்  எனது நாட்டை விட்டு வெளியேறி சைப்ரஸில் வசிக்கிறேன். ஆனால், எது வந்தாலும் நான் அமைதியாக இருக்க மாட்டேன், ஏனெனில் சொல்லப்பட வேண்டியது ஏராளம் இருக்கிறது.”

இதுவே போதும். இதற்கு மேலும் நாம் எதுவும் சொல்லத்தேவையில்லாமல் விளங்கும். சாயிபாபா மற்றும் ஹோமோசெக்சுவாலிட்டி என்று தேடினால் பலரது கதைகள் வந்து விழுகின்றன.  இவை  எல்லாம் சாயிபாபாவுக்கு மட்டுமே சொந்தம் என்று நினைத்துவிடக்கூடாது. இந்தியாவை மையமாக வைத்து உலகெங்கும் எழுப்பப்படும் ஆன்மீகக் கிளைகளில்  இதுதான் நடக்கிறது.

ரவிசங்கரின் வாழும் கலை, அமிர்ந்தானந்தமாயியின் கட்டிபுடி வைத்தியம், கல்கி பகவானின் ஒன்னெஸ் கூட்டங்கள், பால் தினகரனின் ஜெபாலயம் என்று பக்தி இன்று ஒரு முக்கிய வியாபாரப்பொருள்.  ஆன்மீகமும் பக்தியும் ஒருகாலத்தில் ரிடையர்டான பெருசுகளின்  கூடாரமாக இருந்தது போய் இன்று அந்த வியாபாரக் கூடங்களின்  வாடிக்கையாளர்கள் இளைஞர்கள்தான். பெரும்பான்மையினர் படித்த நடுத்தர வர்க்கத்தினர்தான்.

பரபரப்பு மிகுந்த அன்றாட வாழ்க்கையின் இரக்கமற்ற தன்மை, வேலை நிச்சயமற்ற சூழல், பணிச்சுமை, குடும்பப் பிரச்சினைகள், பயமுறுத்தும்    எதிர்காலம், குழந்தைகளின் படிப்பு,போட்டி நிறைந்த உலகில் நிலைநிறுத்திக்கொள்வதற்கு ஏற்படும் போராட்டங்கள் மற்றும் மன அழுத்தங்கள் முன்னெப்போதும் இல்லாமல் இளைஞர்களை பாதிக்கின்றன.

வீட்டுக்கடனிலிருந்து, உயரும் விலைவாசியிலிருந்து,கிரெடிட் கார்டு…இதுபோக உறவுசார் பிரச்சினைகள்..முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு குடும்பப் பிரச்சினைகள் அதிகரித்திருப்பதாகக் கூறுகிறார்கள். தான் இப்படி சுரண்டப்படுவதை உணராத இந்த இளைய சமுதாயம் எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல உடனடித் தீர்வுகளை நோக்கி விரைகின்றனர்.

பெரும்பாலான நிறுவனங்களில் இன்று எட்டு மணிநேர வேலை என்பதே இல்லாமல் போயவிட்டது, எட்டு மணிநேரம் உழைப்பைத் தாண்டி எத்தனை மணிநேரங்கள் உழைத்திருக்கிறோம் என்பதும் இருநாளில் செய்துமுடிக்க வேண்டிய வேலையை ஒரே நாளில் செய்து முடிக்கவேண்டுமென்கிற முதலாளித்துவ நிர்பந்தமும் மக்களை யோசிக்கவே விடாமல் செய்கின்றன. ஏதோ தனக்கு மட்டும்தான் இந்த நிலை என்பதுபோல எண்ணி குமைகிறார்கள்.

ஒருநாளின் குறைந்தபட்ச ஓய்வு என்பது கூட தற்போது சுருங்கிவிட்டது. ஓடிக்கொண்டேயிருப்பதுதான் நகர வாழ்வு என்பதாக மாறியிருக்கிறது. தனது நிலைக்கான காரணத்தை  உணர மறுக்கிறார்கள். கரும்பைப் பிழிவது போல சக்கையாக பிழிந்து நடமாடும் பிணங்களாக வாழ்பவர்கள் ஒன்று இயலாமையாலும் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலையை நோக்கி ஓடுகிறார்கள்  அல்லது இந்த சாமியார்களின்  மடத்துக்கு வருகிறார்கள்.

இந்த இன்ஸ்டண்ட் குருமார்களும், சகல பிரச்சினைகளுக்கும்  தங்களிடம் தீர்வு இருப்பதாகக் கூறி இவர்களை காந்தமாக ஈர்த்துக் கொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் ரிலாக்ஸ் செய்தால் போதும், பிரச்சினைகள் தீர்ந்து போய்விடுமென்று கூறி மயக்குகின்றனர். ஒரு வாரம் தியான வகுப்புக்கு நித்தியானந்தா ஐம்பதாயிரம் வரை வாங்கியதாக கூறுகிறார், அந்த  வகுப்புக்குச் சென்று  வந்தவரொருவர்.  ரவிசங்கரோ வாழும் கலையின் ஆரம்ப  வகுப்புக்கு ஐந்தாயிரம் வரை  வாங்குகிறார்.

தொலைப்பேசியில் பிரச்சினைக்காக ஜெபிக்க பணத்தை அனுப்பினால் போதுமென்கிறது பிரேயர் டவர்ஸ். அடித்தட்டு மக்களாக இருந்தாலும் 100 ரூபாயாவது கொடுத்தால்தான் உறுப்பினராக முடியுமென்கிறார் மேல்மருவத்தூர் அம்மா.  நமது தெருமுனையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் நடத்தப்படும் ஈஷா யோகா வகுப்பில் வந்து முடிகிறது,இந்த நீண்ட பட்டியல்.

இவர்கள் அனைவரும் சொல்வது, நல்லதையே பார்த்துப் பழகுங்கள், கெட்டவற்றை நினைக்காதீர்கள், எந்த செய்தியிலும் நல்ல பக்கத்தையே பாருங்கள், பொறுமையோடிருங்கள், உங்களுக்குள் இருக்கும் அமைதியைத் தேடிக் கண்டடையுங்கள்,  ” என்று நீளும் இந்த தத்துவம் கடைசியில் உண்டியலில் வந்து முடியும்.

முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். ஆளும்  வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை. சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு தேவை. அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி  வாழையாக தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.

கொஞ்சம் யோசித்துப்  பாருங்கள், நாம் அருந்தும் தண்ணீர் உட்பட படிக்கும் படிப்பு வரை இருக்கும் அரசியல் பிரச்சினைகளுக்கு ஆன்மீகம் பதிலாகுமா? பிரச்சினைகளை மழுங்கங்கடிப்பதற்கு வேண்டுமானால் ஆன்மீகம் உதவும். கொலைப்பழி இருந்தபோதும் அவாள்கள் சங்கர மடத்துக்கு போகாமல் இருந்தார்களா என்ன? ஜெயேந்திரன் அம்பலமான பிறகும் சங்கர மடத்துக்கு மவுசு குறையாமல்தானே இருக்கிறது!

அதனால்தான் சாயிபாபாவின் ஆசிரமத்தில் நிகழும் கொலைகளையும், குழந்தைகள் மீதான கொடுமைகளையும் மூடிமறைத்து பாதுகாப்பு கொடுக்கிறது ஆளும் வர்க்கம். சாயிபாபாவின் ஆசிரமத்தில் மன்மோகன் சிங்க்குக்கு  என்ன வேலை? இவரது தெய்வீக சக்தி இருக்கும் போது  மருத்துவ பல்கலைகழகங்களும் பொறியியலும் எதற்கு? தெய்வீக சக்தியையே பயன்படுத்திக்கொள்ள முடியாதா?பூமியை வானமாகவும் வானத்தை பூமியாகவும் மாற்றக்கூடியவருக்கு, முக்காலமும் அறிந்தவருக்கு ஜப்பானில் நிகழ்ந்த சுனாமியை தடுத்து நிறுத்தியிருக்கலாமே!

இதோ, இப்போது உலகெங்கும் அவரது பக்தர்கள்  அவருக்காக வேண்டியபடி இருக்கிறார்கள். இன்னும் சில பக்தர்கள், இது சாயிபாபாவின் லீலைதானென்றும் அவர் விரைவில் குணமாகி வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ, அவர் கடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை சந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று  முடிவு செய்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.

பார்க்கப்  பரிதாபமாக இருந்தாலும், ஆன்மீகம் செய்து வைத்திருக்கும் கோளாறு புரிகிறதா?

மக்களின் போராட்டங்களை அடக்க  ராணுவத்தை குவிக்கும் அரசு இந்த சாமியார்களின் ப்ராடுத்தனத்தால் மக்கள் ஏமாற்றப்படுவதை தடுத்து நிறுத்த முடியாதா என்ன?

முடியும். ஆனால் செய்யாது. பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம்  பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தின்பாற்பட்டதல்ல. தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.

சாயிபாபாவின் மீதான  கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்

ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள்  உணரும்போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை நிறுத்துவார்கள். மாறாக அப்போது சாமியார்கள் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள். போக வைப்போம்.

_________________________________________________

– சந்தனமுல்லை

____________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்:

 

 

 

 


 

  1. யார் கடவுள் ? சாயிபாபாவா, பேஸ்மேக்கரா ? – சந்தனமுல்லை…

    பக்தர்களை அரவணைத்து ‘குணப்படுத்திய’ சாயிபாபா தன்னைத் தானே குணப்படுத்திக்கொள்வதைக் காண அவரது பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவரோ மருத்துவத்தின் அற்புதத்துக்காக படுக்கையில் காத்துக் கொண்டிருக்கிறார்….

  2. வினவு !
    ஒரு காலத்தில் வினையறுத்தவர்கள் இன்று தினையறுக்கிறார்கள் ஏன்?
    மீண்டும் வினையறுக்க !!!

    ”சாயிபாபாவை பற்றி பெரிதாக அறிமுகம் எதுவும் தேவையில்லை. வாயிலிருந்து லிங்கத்தை எடுப்பார். கண்ணிமைக்கும் நேரத்தில் செயினை வரவழைப்பார். மோதிரத்தை கொடுப்பார், விரலுக்கு பொருந்தாவிட்டால் வாயில் ஊதிக் கொடுப்பார். இவை எல்லாரும் ஒரு சில பெரிய மனிதர்களுக்கும் வெளிநாட்டு பக்தர்களுக்கும்தான். மற்ற சாதாரண பக்தர்களுக்கு அல்வா…மன்னிக்கவும் விபூதியை விரல்களிலிருந்து கொட்டுவார். ஆனால் அவர் யாருக்கும் இதுவரை பூசணைக்காயை மட்டும் வாயிலிருந்து எடுத்துக் கொடுத்ததில்லை. இப்போது புரிந்திருக்குமே…”

    இந்த வசனம் ஓகே………..

    சாயி யிடம் ஒரவன் போய் சமுத்திரத்தை பெற்றோலாக மாற்றும் படி கேட்டான்.
    அதுக்கு சாயி முட்டாள்!!
    சமுத்திரத்தை பெற்றோலாக மாற்றியபின் நீ சிகரெட் துண்டை எறிந்தால் என்னவாகும்? என்றார்….

    இப்படி யான முட்டாள்(வினவு) ளும் இருக்கிறார்கள்………………..

    [obcured]

    ”வினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே” இவ் வசனத்தை மாற்றவும்!!!

    • தெருநாய் இந்த போஸ்ட் மரத்தில் காலைத் தூக்கி என்ன சொல்ல வருகிறது என்பதை தெளிவாக கூறினால் சிறப்பாக இருக்கும்.

    • தெரு நாய் ஏதோ கொலைசிட்டு போகுதுன்னு விட்டுடலாம். ஆனா தெளிவாய் கொலைசிட்டு போனால் நல்ல இருக்கும். 5 அல்லது 6 வருடம் இருக்கும் என்று நினைக்கிறேன் அவர்கள் (அவாள்) பத்திரிக்கையான இந்தியா டுடே யிலேயே சாய்பாபா வை ‘ பற்றி புட்டு புட்டு வைத்து விட்டார்கள் .தெரு நாய் அலைஞ்சி திரிஞ்சி படிச்சா நல்ல இருக்கும் .லிங்க் கிடைச்சால் நானே நானே கொடுக்குறேன் . விரைவில் .

    • டேய் தெருநாய், ஊருல இருக்குற எல்லா சாமியாற்பயல்களும் திருட்டு மொள்ளமாரி பயலோதான்,

      சாய்பாபா சமுத்திரத்தை பெற்றோலாக மாற்ற வேண்டாம், சிகரட் பிடிக்கிரவனையும், அத தயார் பண்றவனையும் மாத்தினால் போதும்,

      “நான்கு வருட காலம் எங்களுக்கு அந்தரங்க உறவிருந்தது.

      என்று சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.” ரெண்டு பேருமே ஆம்பளைங்க அப்பறம் எப்படி?………….

      அப்பா உணக்கு எத்தனை வருஷம், அப்பறம் சாய் பாபா நாயை சொன்னா இந்த தெருநாய்- க்கு கோவம் பொத்துகிட்டு வருது, பாத்து நாயே உனக்கும் ஏதாவது மர்ம நோய் வந்துட போது.

    • enda kadalla viluntha sethu povannu therinchuthane antha naayi kappalla irukku,adukku petrol kadalla cigrarette potta thee pidikkum nu theriyatha,unakku vaayila virala vacha kooda kadikka theriyathu pola,ippidiye saamiyar ellam virala vachiruvainga pathukka

  3. அட போங்கங்க, எனக்கு எரிச்சலா இருக்கு, பணக்காரர்கள் எப்படி ஏழைகளுடன் பழகுவதில்லையோ, அது போல்தான் எனக்கு ஆத்திக மடயர்களிடமும் ., பணக்காரர்களின் காரணங்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும் , எனக்கு இந்த மாதிரியான விளக்கங்கள் கூட எரிச்சலாக இருக்கிறது.,

    பாபா வை நம்புபவர்கள் நம்பி தொலையட்டும், இவர் டிக்கெட்ட் வாங்கியப்பின் இன்னொரு பாபா வரத்தான் செய்வார்கள், நீங்களும் இதே போன்ற ஒன்றை எழுதுவீர்கள்.,

    அப்புறம் வினவு தோழர்களுக்கு ஒன்று, – எனக்கு கடவுள் மறுப்பு பற்றி எழுதுவதே திராபையாகதான் தோன்றுகிறது., கடவுளை நம்புவதாக சொல்ல்விட்டு , இந்த அற்ப புழுக்களை நம்பி தொலையட்டும் , நாசமாக போகட்டும்

    • I completely right. In the name of religious, there are millions of people in this world works against the humanity in the name of jihadi / terrorisum. I still remember the ‘yervadi darga’ accident. There are 1000 of darga sells fake black majic items. In the name of religious (Islam and christianity), western countries are fighting with each other. it kills millions people.

      It is very difficult to control the fake mullas. What to do.. crap people are every where….

  4. ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல என்று மக்கள் உணரும்போதுதான் சாயிபாபாக்கள் மந்திரவித்தை மோசடிகளை நிறுத்துவார்கள். //

    சரியா சொன்னீர்கள்… சிறப்பா , தெளிவா எழுதியுள்ளீர்கள்.,.

    • இல்லை. போலிகளை, அசல்களில் இருந்து பிரித்து, தவறிக்க ‘பகுத்தறிவை’ சரியாக பயன்படுத்த வேண்டும். ஆன்மீகம் என்பது பெரிய subject. deep and profound concepts exist.
      ஆன்மீகவாதிகள் அத்தனை பேரும் போலிகள் அல்ல.

      the best need not be famous while the famous need not be the best. இது ஆன்மீகம், மருத்துவம், ஜோதிடம் போன்ற பல துறையை சார்ந்தவர்களுக்கும் பொருந்தும்.

      சாய் பாபா மனிதற் தாம். ஆனால் சில ‘தெய்வாம்சங்கள்’ உள்ளவர் என்றே தோன்றுகிறது.
      சில நிகழ்வுகளை காணும் போது. he is normal human being with some ‘powers’ and extraordinary charisma. ஓரினசேர்க்கை பற்றிய அவரின் செயல்களை பற்றி படித்திருக்கிறேன். மேலும் அந்த கொலைகளுக்கான காரணங்கள் அமுக்கப்பட்டுவிட்டன.

      ஆனால் இவரை போன்றவர்கள் எல்லாம் தர்ம காரியங்கள் பெரிய அளவில் நிகழ ஒரு focal point போல் செயல்படுகின்றனர். they channelize the money from the donors to the needy. கடவுள் பேரை சொல்லி கேட்டால் தான் தர்மம் செய்கிறார்கள்.

      //அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.///

      இதெல்லாம் ஆதரமில்லாத atrocious allegations. அங்கு மிக அருமையான தொண்டாற்றுகிறார்கள். பல லச்சம் ஏழைகள் மிக பயன் அடைந்திருக்கிறார்கள்.

      மற்ற குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை. ஆனால் கிட்னி திருடுகிறார்கள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்.

  5. “முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். ஆளும் வர்க்கத்துக்கு சாமியார்களின் தயவு தேவை. சாமியார்களுக்கு தங்கள் சாம்ராஜ்யத்தை விரிவு படுத்த அரசு தேவை. அதனால்தான், ஆனந்தாக்களும் பாபாக்களும் வாழையடி வாழையாக தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள்.”

    சாமியார்களின் இலக்கு நடுத்தர மற்றும் மேட்டுக்குடியினர்தான். இவர்களுக்கு கார்பரேட் சாமியார்கள் என்று பெயர். இவர்களின் பம்மாத்துகள் ஏழைகளிடம் எடுபடுவதில்லை.

    ஆன்மீக போதை என்பது உழைப்பின் களைப்பைப் போக்க உழைப்பாளி அடிக்கும் சரக்குக்கு ஒப்பானது நடுத்தர வர்க்கத்தின் ஆன்மீக போதை. உழைப்பாளியின் போதை காலையில் தெளிந்து விடும். ஆனால் நடுத்தர வர்க்கத்தின் ஆன்மீக போதை ஆயுள் வரை தெளிவதில்லை.

    இவர்களின் போதை தெளிய ‘சூடு போடும்’ சாமியாராய் நாம் அவதாரம் எடுக்க வேண்டும். வேறு வழியில்லை.

    சிறந்த படைப்பு. படைப்பில் முதிர்ச்சி தெரிகிறது. சந்தனமுல்லை அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  6. பாபாவை நம்புவதும் நம்பாததும் உங்கள் தெரிவு.அதே போல்தான் கம்யுனிஸ்ட்களையும் நம்புவதும் நம்பாததும்.மாவோவின் காமக் களியாட்டங்கள் என்று கூகுளில் தேடினால் என்ன்வெல்லாம் கிடைக்கிறது.ஸ்டாலின் செய்ய்ச் சொல்லாத கொலைகளா இல்லை ரஷ்யாவில் உயர் மட்டத்தில் நடக்காத கொலைகளா பழி வாங்கல்களா இல்லை போலி விசாரணை மூலம் கொல்லப்படாதவர்களா. டிராட்ஸ்கியை கொன்றது யார், எங்கே எப்படி?.சந்தனமுல்லை மேடம் இதையெல்லாம் பொய் என்று சொல்கிறாரா இல்லை கம்யுனிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்று சொல்கிறாரா.ரஷ்ய கம்யுனிஸ்ட் கட்சியின் உயர் மட்டத்தலைவர்கள் வாழ்க்கயை சுகமாக அனுபவிக்காமல் மக்கள் போல் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார்களா.

    நீதி என்னவென்றால் சாமியார்களிடமிருந்தும்,கம்யுனிஸ்ட்களிடமிருந்து விலகி நிற்கவும்.
    அதுவே புத்திசாலித்தனமான செயல்

    “மாறாக அப்போது சாமியார்கள் மக்களை ஒடுக்கும் ஆளும் வர்க்கத்தின் சர்வாதிகாரத்திற்கு சாணக்கிய ஆலோசனை செய்யும் வேலைக்கு போய்விடுவார்கள். போக வைப்போம்”

    அப்படியானால் இப்போது அவர்கள் யாருக்கு ஆலோசகர்களாக
    இருக்கிறார்கள்- வினவிற்கா?

    • ஆமா, இப்போ காந்தியின் காமக் களியாட்டங்கள் பற்றியும் புத்தகம் வந்திருக்கிறதே!
      கூகிளில் தேடினால் என்னென்ன குப்பை எல்லாம் அகப்படும்.
      சொல்லப்படுகிறவற்றை நம்ப விரும்புகிற ஒவ்வொருவனும் நம்புகிறான்.

      சாய் பாபா ஒரு பிராடு என்பதற்கு அவரை எதிர்க்காத செய்தி நிறுவனங்களின் செய்திகளே போதுமானவை.
      அந்தக் குறளி வித்தைக்காரன் வெறுங் கையில் தங்கச் செயின் வரவழைத்த ‘அற்புதத்தின்’ வீடியோ படம் உண்டு. பார்த்ததுண்டா?

    • உண்மை. சாமியார்களை விட கம்யுனிஸ்டுகள் ஆபத்தானவர்கள். கொலைகாரப் பாவிகள்.

    • சரியாக சொன்னீர்கள் .. சாமியார்களை விட கம்யூனிஸ்டுகள் ஆபத்தானவர்களே …

      ஜாக்கிரதையாக இருங்கள் ..

      காவிப் பன்றிகளையும் , முதலாளித்துவப் பன்றிகளையும் அறுத்து உப்புக் கண்டம் போடவே கம்யூனிஸ்டுகள் துடிக்கிறார்கள் ,,

      காவிப் பன்றிகளே , முதலாளித்துவ பன்றிகளே ..

      லாலா சார் .. கொடுக்கும் எச்சரிக்கையை … ஏற்றுக் கொள்ளுங்கள் …

      உசாராக இருங்கள் …

  7. சாமியார்கள், அரசியல்வாதிகள், போராளிகள்- ஒரே ஜாதி!

    கவர்ச்சி + பேச்சு = மூளைச் சலவை!

    பின் தொடர்போர்! – விட்டில் பூச்சிகள்!

    • (கற்பனை எனினும், இது இங்கே நிஜமாக வாய்ப்புகள் உண்டு!)
      எதிர் பாருங்கள்! விரைவில் வினவில்!

      தலைப்புகள்:
      “அன்னா ஹசாரே, ஒரு போலிப் போராளி!”
      “காந்தியாகும் ஆசையில், அன்னா?”
      “அடிச்சானையா ஸ்டண்ட்! அன்னா கசாரே!”
      “படுத்துக் கொண்டே போராட்டமாம்! துப்பில்லையா பார்ப்பனவாதிகளே?”

      வரவிருக்கும் கருத்து முத்துக்கள்:

      1.ஹசாரேவை, நகர்ப்புற மக்கள் மட்டுமே ஆதரிக்கின்றனர்!எனவே இது ஒரு ஆதிக்க வர்க்கத்தின், சூழ்ச்சியே!
      2.அருந்ததி ராய், இன்னும் ஆதரவு தெரிவிக்கவில்லை!
      3. 42 வருடங்களாக, வோட்டுப் பொறுக்கி கட்சிகளுக்கு பயந்து, யாரும் வாயைத் திறக்கவில்லை! மேல்தட்டு மக்களின் திடீர் ஞானோதயம்!
      4. போராட்டத்தை தூண்டியது அமெரிக்கா!
      5. இந்த உண்ணாவிரதமெல்லாம், வெற்றி பெறாது! புரட்சி ஒன்றே தீர்வு!

  8. >>>>>>முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள். <<<<<<<

    மிக அருமையான வார்த்தைகள்!

    நன்றி!

    சினிமா விரும்பி

  9. //பகுத்தறிவு பேசிய கருணாநிதி சாயிபாபா நலம் பெற்று எழ வேண்டுமென்று செய்தி அனுப்புகிறார். இது ஏதோ மனிதாபிமானத்தின்பாற்பட்டதல்ல. தேர்தல் காலத்தில் தமிழகத்தில் இருக்கும் சாயிபாபா வாக்குகளை கவர் செய்த மாதிரியும் ஆகும். கூடவே கருணாநிதி குடும்பத்தில் இருக்கும் பாப பக்தர்களை திருப்திப்படுத்தியது போலவும் இருக்கும்.

    சாயிபாபாவின் மீதான கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்//

    ஆஹா அற்புதம் – மிகத்துல்லியமான கணிப்பு

  10. //சாயிபாபாவின் மீதான கருணாநிதியின் அக்கறைக்கு பொருளென்ன? அடிப்படையில் இருவரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களே! மக்களுக்கு தங்களது பிரச்சினைகளுக்குக் காரணமான சமூக அமைப்பின் மீது கோபம் வராமல் பார்த்துக்கொள்வதில் இருவரும் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள்///

    இல்லை. நான் மாறுபடுகிறேன். கருணாதிக்கு இந்த வயதில் அத்தனை cynisim இல்லை. உண்மையான அக்கறை என்று தான் நினைக்கிறேன். தெலுங்கு கங்கை திட்டத்திற்க்கு முன்பு சாய்பாபா செய்த பெரும் உதவியை அவர் மறக்கவில்லை.

    தங்கள் பிரச்சனைக்கு ’காரணமான’ சமூக அமைப்பின் மீது ‘கோபம்’ வந்து, அந்த கோபத்தை குவித்து, வழி நடத்தி செம்புரட்சி செய்து, தீர்வு காணலாம் என்பது மார்க்சியர்களின் கனவு. இந்த கோபம் உருவாகவில்லை என்ற வருத்தத்தில், நிலைமையை சரியாக பல நேரங்களில் எடை போட தவறுகிறார்கள். எல்லோரின் ‘நோக்கத்தையும்’ எப்போதும் சந்தேகப்படும் paronia. தங்களுடைய வர்க ’எதிரிகளுக்கும்’ மனிதனேயம் இருக்கும் என்பதை எண்ணி பார்க்க தவறுகிறார்கள். that such humanitarian motives could exist among various shades of people ; marxists over simplify and assign wrong motives to all gestures like this. hence their paroniod and pathological hatred towards NGOs, World Bank, and anyone they deem agent of capitalism, etc. totally wrong perception and judgments which lead to extremely wrong conclusions and actions.

    • தெலுங்கு கங்கைக்கு காசு கொடுத்ததற்கு நன்றியாம்? சூப்பர் நகைச்சுவை போங்க, கடந்த வருடம் பகுத்தறிவு பகலவன், தந்தை பெரியாரின் உண்மைத் தம்பி (அய்யா) கருணாநிதி தனது மனைவி (அவரது மகள் கனிமொழியின் தாயார் இல்லை) சாய்பாபா காலில் விழுந்து ஆசிபெறுபதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்து அதற்கு நம்ம தோழர் துரை சண்முகம் அற்புதமாய் பாராட்டு கவிதை படைத்திருந்தார். தயாளு அம்மாளின் மன சந்தோஷ‌த்திற்காகவும், சில பல ஓட்டுக்களுக்காகவும்தான் இந்த ஸ்டேட்மென்டு

      • அப்படி என்றால், சாய்பாபாவை ஏற்றுகொள்ளமல், அவரை ‘எதிர்பவர்களின்’ ஒட்டுகளை இழக்க வேண்டியிருக்குமே. உங்க அனுமானம் சரியல்ல என்பது எம் கோணம். இந்த ‘நோக்கங்களை சந்தேகப்படல்’ என்பது ஆளாளுக்கு இஸ்டத்துக்கு செய்றாக. ஜோசியகாரங்க தோத்தாங்க. இதை பற்றி ஒரு பதிவு எழுத வேண்டும். wrong interpretation of motives and ascribing motives to innocent gestures..

        • sai baba va eatthkkathavanga ellam karunanithiya mattum eatthukkuvangala? onnu karuppu naai,innonnu kaavi naai, ethu kadichalum rattham varathu ennamo kadi vangaravanukku than.

  11. It is obvious that SCIENCE and MEDICAL development only SAVING THE LIFE this “GOD” today!

    ///”The 85-year-old Baba remained on ventilator to help his respiratory functions while kidney function is continued to be supported by renal replacement therapy (CRRT.)”///

    His heart condition and kidney condition and lung condition are all behaving like ANY NORMAL HUMAN being’s heart, lung and kidney.

    Since he is in a critical condition, I do not want to get into this. This is not the right time to criticize him or his well wisher M Karunanidhi because of his conditions!

    Let us wish him to fully recover well soon as good human beings do!

    p.s: I dont want to give my e-mail id. So it is not a real one. Sorry!

    -varun

  12. சாமிக்கும், சாய்பாபா சாமியார்களுக்கும் ஜால்ரா போடும் அப்பாவிகளே….

    நீ அறிவியலை நம்பறயா? இல்ல ஆன்மீகத்தை நம்பறயா?…

    அறிவியலை நம்புனா… கன்னி முன்னாடி உக்காரு…

    ஆன்மீகத்தை நம்புனா… சாய்பாபா குடுமிய புடிச்சு அதுல வினவுக்கு பின்னூட்டம் எழுது.

    ஏம்பா தம்பிகளா… நீங்கல்லாம் ஊருக்குப் புதுசா…

    புதுசா இருந்தா…யூ டியுப்ல அந்த சாய்பாபாவோட பிராடுத்தனத்தையெல்லாம் அம்பலப்படுத்தின காட்சியெல்லாம் இருக்கு… மொதல்ல அதப்பார்த்துட்டு வந்து இங்க பேசுங்க தம்பி.

    ஏண்டா, நாலு வித்தை காட்டுற நீ(சாய்பாபா) பெரிய ஆளா…

    நாலாயிரம் வித்தை தெரிஞ்ச பி சி சர்க்கார் பெரிய ஆளாடா…

    உன் வித்தைய வச்சு உன்னயே காப்பத்திக்க தெரியல…

    இழுத்துக்கிட்டுருக்கற மூச்சு இப்பவா பிறவான்னு உனக்கு தெரியாது…

    இப்ப,

    எனக்கு தெரியும்டா……

    மூக்குல இருக்கற குழாய புடுங்குனா நீ முடிஞ்சு போவேன்னு.

    • //எனக்கு தெரியும்டா……

      மூக்குல இருக்கற குழாய புடுங்குனா நீ முடிஞ்சு போவேன்னு.//

      ரிப்பீட்டே…

      பதிவை விட இந்த கமென்ட் எனக்கு ரொம்பவும் பிடிச்சுது..

      இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..

      சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்..

      சமயம் பார்த்துப் பல வகையினில் கொள்ளை அடிக்கிறார்..

      “பக்தரைப் போலவே பலவேஷம் போட்டு பாமர மக்களை வலையினில் மாட்டினார்..”

      பட்டுக்கோட்டை அன்னைக்கே எழுதி வெச்சது…

      புரிந்து கொள்ளாத மக்களை விட்டு விடுவோம்.. பகுத்தறிவு வளர்கிறது.. இனி வருங்காலத்திலாவது மக்கள் இது போன்ற பூச்சாண்டி வேலைக்காரர்களைப் பார்த்து நம்பாமல் நடந்து கொண்டால் சரி…!!

  13. கருணாநிதி ஒரு வகையான பச்சை அயோக்கியன்.
    சாய்பாபா இன்னொரு வகையான பச்சை அயோக்கியன்.
    பாசம் இயல்பானது தானே!

    இந்தக் குப்பைகளுக்கு வக்காலத்து வாங்குகிற குப்பைகளை என்ன சொல்லுவது!

    • கூட்டி தள்ளிவிடுக !! :)))

      லே, வேணாம்லே, இப்படி எல்லாம் தெய்வ நிந்தனை செய்தால், பொறவு சாமி கண்ன குத்திடும்.

    • ஒங்க பாடு பரவால்லே.
      உருப்படியான பார்வை இருந்த்தாத்தானே கவலை.

  14. ஆன்மீகத்திற்கு ஒரு சாமியார் அல்லது மதகுரு அவசியமா?
    இந்த சாய்பாபா மருத்துவமனிக்கு சென்றபின்னும் மர்மம் தொடர்கிரறது.சாய்பாபாவிற்கு பிறகு அந்த 40,000 கோடி சொத்துக்ளை யார் உடமையாக்கி கொள்வது என்று நடக்கும் கூத்துக்ள்.புட்டபர்த்தியில் ஊரடங்கு உத்தரவு.மருத்துவமனையில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.
    ஆன்மீகம் என்றாலே மர்மக்கதை போல் தெரிகிறது.

  15. I am not a devotee of any Guru and I have no hatred against any religion. Sandana Mullai should visit the Sai Baba Mission Hospital in Whitefield to know how poor patients are treated there and how a hospital is run by a private trust without any profit motive. The institutions run by his trust are run with money from devotees unlike church sponsored institutions which rely on foreign funds.He recognises all religions as equals and never says that christians should become Hindus as Hinduism is superior. He is not like Father Staines or others who do service as an inducement to convert to christianity. In that sense he is far better than Zakir Naiks and Staineses. He is not a brahmin by birth and there are many brahmins who worship as their guru and rever him as the avatar. He bears no ill will against other Gurus. In fact to be his devotee one need not be even a Hindu. In a world where there is so much hatred for persons of other religions spiritual gurus like him are like beacons of hope. He mobilized money and resources to execute a major water project in anatapur district and did the same for Telugu Ganga.
    So please be fair in your assessments.
    தொடர்புடைய பதிவுகளில் கிறித்துவ மதம் உட்பட பிற மதங்கள் இடம் பெறவில்லையே.ஏன் கிறித்துவ பாதிரிகளை குறித்து எழுதினாலும் அதை அடிக்கடி தொடர்புடைய பதிவு என்று ஆன்மிக வியாபாரிகள் என்று தலைப்பிடும் போது குறிப்பிடக்கூடாது என்று மேலிடத்திலிருந்து உத்தரவு வந்துள்ளதா.

    • Mr.Nam… thani patti itchaikalai maraipatharkaka samuthayathai yematrah pottu kollum porvai intha uthavikal.. I know persons who doesnt want to give extra 10rs for his labour but write his entire wealth to these samiyars.. hope u guys remember story of so many ppl who got psychofancy by this guy and commited family sucide.. eg: one big jewellery in trichy.. neenkal 10000crs uthavi purinthathar samiyarin seyal yogiyam akki vida mudiyathu.. I believe in god but hates these crude sami brokers..

  16. இந்த சாய்பாபா,தினகரன் கோஷ்டிக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை.மக்களின் அறியாமையை பயன்படுத்தி கொள்ளை அடிக்கும் கும்பல். இந்த ஆட்களால் என்ன முடியும் என்று மக்கள் இவர்க்ளிடம் செல்கிறார்கள் என்பது தெரியவில்லை,அதனை பற்றி யாராவது எழுதினால் ,அவனைப் பற்றி எழுது முதலில் என்று கூறுபவர்களை என்ன சொல்வது?.
    சாய்பாபா கடவுளா? செய்யும் மந்திர தந்திர வேலைகள் உண்மையா? ஏமாற்று வேலையா? என்பதை யோசிக்க வேண்டும்.

    எப்படி இவரிடம் 40,000 கோடி சொத்து சேர்ந்தது?.

    ஆன்மீக வியாபாரிகளுக்கு மத வித்தியாசம் இல்லை.எல்லாரும் திருடர்களே.

  17. //அந்த மருத்துவமனையில் ஏழை இந்தியர்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்கப்படும் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் வெளியே வரும்போது எத்தனை சிறுநீரகங்களுடன் முழுமையாக வருகிறார்களா என்பது கேள்விக்குறிதான்.///

    இதெல்லாம் ஆதரமில்லாத atrocious allegations. அங்கு மிக அருமையான தொண்டாற்றுகிறார்கள். பல லச்சம் ஏழைகள் மிக பயன் அடைந்திருக்கிறார்கள்.

    மற்ற குற்றச்சாட்டுகளை மறுக்கவில்லை. ஆனால் கிட்னி திருடுகிறார்கள் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்

  18. சித்தர குப்தன் சார்,

    நீங்க ‘எமதர்மராஜாவிடம்’ தானே வேலை பாக்குறீக. இப்பெல்லாம் எப்படி, கம்யூட்டர் கொண்டு வந்துட்டாங்களா, records maintain பன்ன ? என்ன s/w package உபயோகப்படுத்துறீங்க : SQL ஆ, அல்லது Oracle ஆ ?

    சரி, ஒரு query எழுதி தமிழகத்தின் முது பெரும் தலைவர் ஒருவரின் ஆயுசு எவ்வாளோன்னும் சொல்ல முடியுமா ? எம்ம குருவும், நானும் பல வருசமா கணக்கு போடரோம். ஆனா கண்டு பிடிக்க முடியல. மனுசன் செஞ்சுரி அடிப்பாரு போல. ஆனா எம்ம குரு அடிக்கடி ஒரு பழமொழி சொல்வார் : பாவிகளுக்கு தான் நீண்ட ஆயுசுன்னு. இருந்த எல்லாத்தையும் அனுபவிக்கனுமாம். நல்லவக சீக்கரமே போய்டுவாகளாம் !

    • “தமிழகத்தின் முது பெரும் தலைவர்” is living with Medica technology advancment. It is Periyaar the true “தமிழகத்தின் முது பெரும் தலைவர்” who lived long beging atheist and with less medical technolgies. We Love Him for hist courage.

      • ராஜாஜியும் தான். பெரியார் கூட பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் ராஜாஜி கடைசி வரை உடல் நலத்தோடு இருந்தார். இருவரும் நெருங்கிய நண்பர்கள். ராஜாஜி இறந்த போது, சக்கிர நாற்காலியில் சுடுக்காட்டுக்கு சென்று, கதறி அழுதார் பெரியார். (1972 டிசம்பர்). அவர் தாம் பெரியார். அவரின் பண்புகளை முதலில் தோழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சிறுவர்களை கூட வாங்க என்று மரியாதையோடு, அன்போடு தான் விளிப்பார். தனி மனித தாக்குதல்கள் செய்ய மாட்டார்.

      • //”பெரியார் கூட பல துன்பங்களை அனுபவித்தார். ஆனால் ராஜாஜி கடைசி வரை உடல் நலத்தோடு இருந்தார்”//

        துன்பங்களை அனுபவித்தார் Still he did not pray god, but Opposed praying. that makes the difference!!!! thats the courage.

        All the creature of the nature, having a common life irrespective of you pray for GOD or NOT. Life span of a creature is based on the immunity, Environment and lifestyle it chooses to. Not based on the whether it believes in GOD, ASTROLOGY, praises GOD, or NOT. The only rule of the nature is “survival of the fittest”, NO “Eman & chitagupthan” counting on the sin, virtue and punishing during /after life. Nothing more, that’s my point.

        //அவரின் பண்புகளை முதலில் தோழர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். சிறுவர்களை கூட வாங்க என்று மரியாதையோடு, அன்போடு தான் விளிப்பார். தனி மனித தாக்குதல்கள் செய்ய மாட்டார்//

        This one is applicable to all of us, I witness this from you as well. When we cant control our emotion, what is the need of Doing YOGA etc? 🙁

    • //சரி, ஒரு query எழுதி தமிழகத்தின் முது பெரும் தலைவர் ஒருவரின் ஆயுசு எவ்வாளோன்னும் சொல்ல முடியுமா ? எம்ம குருவும், நானும் பல வருசமா கணக்கு போடரோம். ஆனா கண்டு பிடிக்க முடியல.//

      பரவாயில்லை வேறு ஒரு இடுகையில் ஜோசியத்தைப்பற்றி நம்பிக்கையோடு எழுதிவிட்டு, தற்போது அதாலும் முடியாத சில உண்டு என ஒப்புதல் வாக்குமூலம்

      • எல்லாத்தை சொல்லிட்டா அவன் கடவுளாகிவிடுவான். மரணம், திருமணம் போன்ற சில முக்கிய விசியங்களில் ஜோசியக்காரன் தோத்துவிடுவான். ல்ச்சத்தில் ஒரு ஜோதிடர் சரியாக சொல்ல முடியும். நான் பார்த்திருக்கிறேன். இயற்க்கை மரணத்தை முன்கூட்டியே சொல்லி, சொன்ன படி மரணம் அடைந்த ஜோதிடர்களை சந்தித்திருக்கிறேன்.

        • //ல்ச்சத்தில் ஒரு ஜோதிடர் சரியாக சொல்ல முடியும். நான் பார்த்திருக்கிறேன். இயற்க்கை மரணத்தை முன்கூட்டியே சொல்லி, சொன்ன படி மரணம் அடைந்த ஜோதிடர்களை சந்தித்திருக்கிறேன்.//

          No Way, I need proof. Even if that could have happened, it should be a mere coincident or a planned Murder / sucide.

        • mani,

          proof தானே வேணும். அதுக்கு நேரில வாங்க பிரதர், நிறையா காட்டறேன். அதுமட்டுமா, பீதாம்பர வித்தை, கூடு விட்டு கூடு பாய்தல், மலையாள மாந்தரீகம், இட்சினி வசியம், பிரசன்ன மார்கம், இன்ன பிற இருக்கு. மேலும் பல விசியங்கள் இருக்கு. இங்கு அதையெல்லாம் எடுத்து வுட முடியாது. சரி, தட்சணையா எவ்வளவு தருவீக ?

  19. Selection of “samiyar” is similar to selection of shirts. For Below middle class people -suruttu samiyar , saraya samiyar etc. For Middle class – golden temple Narayani, Nithyanandha etc. For upper class – Baba, Sandrasami etc. So this society need this type of relief and the Samiyar’s also exploit this situation.

  20. //முதலாளிகள் தேய்த்து அனுப்பும் பழுதான இயந்திரங்களுக்கு மசகு எண்ணெயை வார்த்து திருப்பி அனுப்புவதற்குத்தான் இந்த ஆன்மீக சாமியார்கள் பயன்படுகிறார்கள்.//
    Ada! :)))
    Very well written Mullai! Shared.

    • இதென்ன பெரிய விசியம். காம்ரேடுகள் செம்புரட்சி செய்து, முதலாளிமார்கள ஒழித்து கட்டிவிட்டு, ஆட்சியை பிடித்து, ‘நல்லாட்சி’ செய்தால், இதை விட அதிகமான ‘இயந்திரங்கள்’ பழுதாகி, தேயும் வாய்ப்பு அதிகமாகும். சாமியார்களுக்கும், மன நல மருத்துவர்களுக்கும் நல்ல சான்ஸ் கிடைக்கும், தம் ‘தொழிலை’ விரிவுபடுத்த. என்ன, அவர்களையும் ஒழித்து கட்டுவிடுவார்கள் காம்ரேடுகள்.

      பழைய வரலாற்றை கொஞ்சம் படித்து பார்க்கவும் தோழர்.

        • அப்படீன்னு நீங்களா அனுமாச்சிக்கிட்டு தொடர்ந்து எல்லத்தையும் ஒத்தை வரியில் மறுக்கும் ’விஞ்ஞான ரீதியான மார்க்சிய’ முறையில் பேசறீக !! இதுவரை ஒரு வரியையாவது ஆதாரத்துடன் மறுத்ததுண்டா ? விக்கிபீடியா வை வினவு மேற்கோள் காட்டியுள்ளதே ? மேலும் எதையும் ஆரய்ந்து பார்க்காமல் மறுப்பது பகுத்தறிவல்லவே.

          பல நூல்கள், ஆய்வுகள் உள்ளன. அறிவுலகம் எதை இன்று சரியென்ற ஏற்கிறது என்று தெரியுமா காம்ரேட் ? நீங்க பொய் என்று கருதுவதெல்லாம் பொய்கள் அல்ல.

          • அதியமான்,

            தினசரி நான்கைந்து பெயரில் வந்து பின்னூட்டமிடுகிறீர்கள்….இது பின்னூட்டங்களை வாசிக்கும் வாசகர்களுக்கு இடையூறு செய்வதாகும். மேலும் அவர்களை இழிவு படுத்துவதும் ஆகும். இதுவரை உங்கள் பின்னூட்டங்களை நாங்கள் என்றுமே மட்டறுத்தது கிடையாது. இனியும் அப்படி செய்யமாட்டோம். இது உங்களுக்காக மட்டும் செய்யப்படும் சலுகை அல்ல. பொதுவாக அனைத்து பின்னூட்டங்களையும் வெளியிடவேண்டும் என்ற எங்களது கொள்கையின்பாற்பட்டது.

            எனவே வாசகர்களை மதித்து இனி நீங்கள் அதியமான் என்ற பெயரிலேயே பின்னூட்டமிடுமாறு கோருகிறோம். இல்லையென்றால் உங்களது பினாமி பேர்கள் அத்தனையும் அதியமான் என்றே பெயரை மாற்றி வெளியிடவேண்டியிருக்கும். இருக்கும் பணிச்சுமையில் இது கூடுதல் சுமை என்பதை புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டுகிறோம். ஆதினம் ஜெயமோகன் தளத்தில் நீங்கள் எப்படி ஒரு பணிவான பக்தராக பேசுவீர்கள் என்பதையெல்லாம் வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஆனால் உங்களது கருத்தை ஒரு பத்துபேர் படிப்பதற்கு உதவி செய்யும் வினவு வாசகர்களையும் கொஞ்சம் மதித்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

    • இதென்ன பிரமாதம். காம்ரேடுகள் செம்புரட்சி செய்து ஆட்சியை பிடித்தால், இதை விட அதிக ’இயந்திரங்கள்’ தேயும் தான். வரலாறு அதை தான் சொல்கிறது.

  21. உங்களது பெரும்பாலான கருத்துக்களோடு ஒத்துப்போகிறேன். என்றாலும் ஒருசில விஷயங்களை மறுக்கமுடியவில்லை. எனது மாமாவுக்கு இவரது பெங்களூரு மருத்துவமனையில்தான் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்னும் எத்தனையோ பேர் இலவசமாக சிகிச்சை பெறுகிறார்கள் குறிப்பாக இதயநோய் சிகிச்சை. அதாவது இதை எப்படி ச்மாதானம் கொள்ளலாம் எனில் நித்தியானந்தா மாதிரி வெறும் காலைக் கழுவி ஐம்பதாயிரம் மட்டும் வாங்குவதோடு இல்லாமல் அந்த ஐம்பதாயிரத்தில் ஐந்தாயிரம் ஏதாவது ஒரு வழியில் மக்களுக்குச் செல்கிறதே என்பதுதான். மற்றபடி சாய்பாபா என்ற மனிதர் மீது தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த அக்கறையுமில்லை.

    அதேசமயம் யோகா மையங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்.. நான் ஒரேஒருமுறை வாழ்க வளமுடன் யோகா மையத்திற்குச் சென்றேன்.. அப்போது கட்டணம் 200 க்கும் குறைவு என்று நினைக்கிறேன். ஆனால் அந்த இருநூறுக்கு 15 நாட்கள் நல்ல யோகா முறைமையும், காயகல்பம் எனும் யோகமுறையையும் அது சொல்லித்தரப்படும் நாட்களில் சிற்றுண்டியும் வழங்கினார்கள். மற்றபடி ஈஷா போன்றவற்றை நாடியது கிடையாது!!

    ஒருசில எக்ஸப்ஷன்கள் இருக்கின்றன என்பதால் அவற்றிற்காகவே இவர்களைத் தொங்கவேண்டியுமிருக்கிறது.

  22. சாயிபாபாவுக்கு முன்பு மிகவும் நெருக்கமாக இருந்து தற்போது பிரிந்துவிட்ட ஸ்வீடனைச் சேர்ந்த கானி லார்சன் கூறுகிறார்.

    <>.

    ஒருமுறை நான் ஒரு பெண்ணை மணந்துக்கொள்ள விரும்பி அவரையும் சாயிபாபாவிடம் அழைத்து வந்தேன். சாயிபாபா, அந்தப் பெண்ணின் முகத்தில் அறைந்ததோடு “அவனை ஒருபோதும் தொடாதே,அவன் என்னுடையன், அவனை நான் மணம் புரிந்திருக்கிறேன்”என்றும் கூறினார்.

    இதிலிருந்து சாயி ஒரு ஓரின புனர்ச்சியாளன் என்பது அப்பட்டமாக புரிந்துகொள்ள முடியுது. அந்த பெண்ணை பார்த்துதும் காவி வேசக்காரனுக்கு பொறாமையில அவள அறைஞ்சிட்டான். காந்திகூட இதே ரகமாமே! கேள்விபட்டீங்களா? அனைத்து மதம் கடவுள் போன்ற போலிகளை நம்ப வைத்து சமுதாயத்த ஏமாற்றி சுரண்டிவரும் எல்லா கம்மனாட்டிகளும் இப்படித்தான் இருப்பானுங்க.

    யப்பா, எல்லோரும் அவங்கவங்க கோமனத்த இறுக்கி கட்டிக்கீங்கப்ப. இனிமேலாவது நம்ம பொம்பளைங்க அனைவரும் அவங்வங்க ஆமபளைங்களா இவ்னுங்க மாதியான ரவுடீங்க வெறிக்கு இரையாகாம பத்திரமா பாதுகாப்பாங்கன்னு நம்புவோம்.

    [obscured] செத்து தொலையட்டும். இவன மாதிரி கேப்மாரிங்க ஒழிஞ்சாதான் சமுதாயத்துக்கு விடிவு வரும்.

    [கெட்ட வார்த்தயில எழுதினதுக்கு என் கருத்த வெளியிட மறுக்காதீங்க. நெறைய பேரு இங்கிலிபீசுன்னு தமிழல்லாத மக்களுக்கு புரியாதத எழுதுதுங்க. நான் எழுதினது சுத்தமான (சேரித்)தமிழ்.]

  23. Saibaba is in no way inferior than you people writing comments by hinding your own name. Is he ever compelled any one to join in his organizations or social service setup. To get relieve from their problems, the human flock need an extra-ordinary comfort from nature. Whether he believe it GOD or any other hell. It is not others business to critize Saibaba who has acieved some thing, a common man cannot achieve in his life. These days, humanity is totally missing from the society, due to such nasty arguments.

  24. இன்று (8th April) டாக்டர் கோவூர் பிறந்தநாள்…..சாயிக்கு சவால் விட்டவர்.. பூசணிக்காய் வரவழைக்க பாபாவிடம் கோரிக்கை வைத்தவர். இவரது சவாலை எதிர்கொள்ள மாணவர்களுக்காக தானம் அளித்துள்ளார்.) இந்த பாபாவை கடுமையாக விமர்சித்து வந்தார்….முடியாமல், பாபா white field ஐ விட்டு ஓடிய நிகழ்வுகள் எல்லாம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. மேலும் கோவை பிரேமானந்தா ( சாமியார் அல்ல, பகுத்தறிவாளர், SCPTIC என்ற அமைப்பின் தலைவர், பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர். மேலும் கோவை, போத்தனூரில் ஒரு விஞ்ஞான மையத்தை நிறுவி நடத்தி வந்தார். ஜி டி நாயுடு மருத்துவமனையின் தலைவர். சென்ற ஆண்டு காலமானார். தன் உடலை மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்காக கோவை மருத்துவ கல்லூரிக்கு தானம் அளித்துள்ளார்……

    • இன்று (8th April) டாக்டர் கோவூர் பிறந்தநாள்…..சாயிக்கு சவால் விட்டவர்.. பூசணிக்காய் வரவழைக்க பாபாவிடம் கோரிக்கை வைத்தவர். இவரது சவாலை எதிர்கொள்ள முடியாமல், பாபா white field ஐ விட்டு ஓடிய நிகழ்வுகள் எல்லாம் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. மேலும் கோவை பிரேமானந்தா ( சாமியார் அல்ல, பகுத்தறிவாளர், SCPTIC என்ற அமைப்பின் தலைவர், பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவர். மேலும் கோவை, போத்தனூரில் ஒரு விஞ்ஞான மையத்தை நிறுவி நடத்தி வந்தார். ஜி டி நாயுடு மருத்துவமனையின் தலைவர். சென்ற ஆண்டு காலமானார். தன் உடலை மருத்துவ ஆராய்ச்சி மாணவர்களுக்காக கோவை மருத்துவ கல்லூரிக்கு தானம் அளித்துள்ளார்) இந்த பாபாவை கடுமையாக விமர்சித்து வந்தார்….……

  25. \\இது சாயிபாபாவின் லீலைதானென்றும் அவர் விரைவில் குணமாகி வருவாரென்றும் நம்புகிறார்கள். வேறு சிலரோ, அவர் கடவுள்தான் என்றாலும் சாதாரண மனிதனுக்கு நேரும் முடிவை சந்திப்பதற்காகத்தான் அவரை அவரே காப்பாற்றிகொள்ள வேண்டாமென்று முடிவு செய்திருப்பதாகவும் தங்களைத் தாங்களே தேற்றிக்கொள்கிறார்கள்.\\ இதைச் சொல்லித்தான் முட்டாள் பக்தர்களை மேலும் முட்டாளாக்குகிறார்கள். அந்தாள் சாதாரண மனிதன், ஆனால் மஜிக் வித்தை தெரிந்தவன் அதை நன்றாக மார்கெட்டிங் பண்ணும் சாமர்த்தியத்தைக் கொண்டு வெற்றியும் கண்டவன், மற்றபடி ஒரு சாதாரண மனிதனுக்குரிய வியாதி, மூப்பு இவற்றால் மரணத்தை எதிர் நோக்கி இருப்பவன். இதை லீலை என்றும், கடவுளே ஆனாலும் மனிதன் மாதிரியே சாவார் என்றும் கட்டுக் கதைகளை அவிழ்த்துவிட்டு பூம் பூம் மாடு பக்தர்களை எமாற்றுகிறனர். மனிதனைக் கடவுள் என்று நம்பியவர்களுக்கு இதை நம்புவதில் சிரமம் ஏதுமில்லை. சாமியார் பெண்ணுடன் “பலான” விடயங்கள் செய்வதை படமாகக் காண்பித்தும் அதை நம்ப மறுத்த அறிவு ஜீவிகள் நாம் மக்கள், இந்த போலிக் கடவுளை நம்புவதில் வியப்பில்லை. உங்கள் கட்டுரை இறுதியில் \\ஆன்மீகம் தனது பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல \\ என்று போட்டுள்ளீர்கள், ஒரு சிறிய திருத்தம், போலி ஆன்மிகம் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் மருந்தல்ல ஆனால், உண்மையான ஆன்மிகம் எல்லா பிரச்சினைகளுக்கும் மருந்து, போலிகள் நிறைய இருக்கிறார்கள், அதற்காக உண்மை இல்லவே இல்லை என்று சொல்லிவிடமுடியாது, உண்மையான ஆன்மீக வாதிகள் இருக்கிறார்கள், தேடினால் கிடைப்பார்கள்.

  26. //உண்மையான ஆன்மீகவாதிகள் இருக்கிறார்கள்//

    ஆனால் உண்மையான கடவுளைத்தான் காணவில்லை…!

    தோழர் வினவு

    எங்கே தோழர் செங்கொடியின் தளத்தை துபாயில் காணமுடிவதில்லை? தடை செய்யப்பட்டுவிட்டதா?

    • உண்மையான கடவுள் இருக்காருங்க, அவரு வேறு யாருமில்லை அர்ஜுனனுக்கு கேதையை அருளிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தானுங்க. அவரை மட்டும் வணங்குங்க, வேறு யாரையும் கடவுள்னு ஒப்புக்காதீங்க. வரட்டுமுங்களா!!

  27. அதியமான் வேறு வேறு பெயர்களில் பின்னூட்டமிடுவதை கண்டிக்கிறேன். இது தனது முதலாளித்துவ ஆதரவு கருத்துக்களுக்கு கோஷ்டி சேர்க்கும் கேவலமான வழிமுறையாகும்.

    அதியமான் ஏன் இவ்வாறு செய்கிறார் ? பின்னூட்டங்களை வாசிப்பவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துவதும், பதிவுக்கு நிறைய எதிர்ப்பு வருகிறது என்கிற கருத்தையும் வாசிப்பவர்களிடம் ஏற்படுத்துவதே அவரின் நோக்கம்.

    எனவே வினவு தோழர்கள் இனிமேலும் இதை அனுமதிக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

  28. ulagirke valum neriyai kuriya butharum,mahaveerarum thanai ourubothum kadavul endru solikolavillai………enaku therinthavarai annai therasavum kadavul than

    நமது திருக்குறளும் நாலடியாரும் மற்ற நீதி நூல்களும் உலக மக்களுக்கே போதும்

  29. அது எமது உரிமை. எந்த பெயரில் வந்தால் என்னப்பா, கருத்துகளுக்கு பதில் சொல்ல முடிந்தால், முயல்க. ஒரே பேர்ல வந்தா போர் அடிக்குது. ஒரு சேஞ்சுக்கு தான்.

    இதை வினவு தடை எல்லாம் செய்ய மாட்டாக. இத கூட புரிஞ்சுக்க முடியாத கம்யூனிஸ்ட் நீர் !!!

    • பல பெயர்களில் வருவதற்கு இவர் கூறும் காரணமே நேர்மையற்றதாக இருக்கிறது.
      முதலில், தனிநபர் தாக்குதல் நடத்துகிறார்கள் என்று கூறியவர் பிறகு ஒரே பெயரில் வருவது போரடிக்குது என்கிறார்.

      பொய்யை பார்த்துக்கொளுங்கள்.

      எனவே இவருடைய நோக்கம் பல பெயர்களில் வந்து படிப்பவர்களை குழப்புவதே எனவே வினவு இதை அனுமதிக்கக்கூடாது.

  30. வினவு,

    உமது அல்லக்கைகள் பல பெயரிகளில் வந்த இஸ்டத்துக்கு தாக்குவதெல்லாம் பெரிச படல. நான் பல பெயர்களில் வருவேன். தடை செய்தால் செய்துக்கங்க. I don’t care.

    கருத்துகளை யார் சொல்கிறார்கள் என்று ‘பார்த்து’ பதில் சொல்வது ஒரு வகை பார்பனீயம். மேலும் எமது சொந்த பெயரை பார்த்தால், பல பேர்களுக்கு வெறி வந்த தனி மனித தாக்குதல் மட்டும் தொடுப்பதை அறிவீர்.

    any way you are free to moderate all my comments here after. and இவை எப்படி
    ///இது பின்னூட்டங்களை வாசிக்கும் வாசகர்களுக்கு இடையூறு செய்வதாகும். மேலும் அவர்களை இழிவு படுத்துவதும் ஆகும். ////

    இது எப்படி ஒரு வாசகரை ‘இழிவு’ படுத்துகிறதாம் ? எதாவது தனி மனித தாக்குதல் செய்தால் அப்படி சொல்லாம். கருத்துகளை மட்டும் பார்க்கும் பக்குவம் இருப்பவன் இப்படி எல்லாம் பேச மாட்டான்.

    • ##எமது சொந்த பெயரை பார்த்தால், பல பேர்களுக்கு வெறி வந்த தனி மனித தாக்குதல் மட்டும் தொடுப்பதை அறிவீர்.##

      பச்சையான பொய் அதியமான்,
      கேன, பேமானி, புடுங்கி என நீங்கள் இங்கு நடத்தியுள்ள தாக்குதல்களை எல்லோரும் அறிவார்

      போலி பெயருடன் உங்களைத் தரக்குறைவாக திட்டி வந்த செம்மலர் தியாகுவை அம்பலப்படுத்தி அவரை கண்டித்து விரட்டிவிட்டது வினவு என்பதையும் யாரும் அறிவர்.

      மேலும் உங்களைப்போலவே கலீஜான மொழியில் மறுமொழி அளித்து அது தடைசெய்யப்பட்டதையும் ஒரு தோழர் பதிந்துள்ளார்..

      எனவே ரீல் சுற்றாமல், அதியமான் என்ற பெயரிலேயே வரவும்.

  31. //ஆதினம் ஜெயமோகன் தளத்தில் நீங்கள் எப்படி ஒரு பணிவான பக்தராக பேசுவீர்கள் என்பதையெல்லாம் வரலாறு பதிவு செய்திருக்கிறது. ஆனால் உங்களது கருத்தை ஒரு பத்துபேர் படிப்பதற்கு உதவி செய்யும் வினவு வாசகர்களையும் கொஞ்சம் மதித்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.///

    என்ன பெரிய பக்தன். போடாங்க என்று உம்மை சொல்ல தோன்றுகிறது. தனி மனித தாக்குதல் மட்டும் தான் தவறு, தடுக்கப்பட வேண்டியதுதான். மற்றது எல்லாம் உரிமைகளை நசுக்குதல். ஜெ தளத்தில் சொந்த பெயரில் பேசினால், இங்கு போல் தனி மனித தாக்குதல் யாரும் செய்வதில்லை. அவ்வளவுதான். மேலும் பணிவான பக்தர் என்பதெல்லம் உமது வக்கிர பார்வை. நன்றா படித்திருந்தால், தெரிந்திருக்கும், ஜெ விடுன் பல நேரங்களில், அவரின் கருத்துகளை மறுத்து விவாதம் தான் செய்திருக்கிறேன். அவர் சொல்வதை எல்லாம் அப்படியே ஏற்பதில்லை.

    உமது ‘பக்தர்களை’ போல நானும் சொந்த புத்தி இல்லாமல் இங்கு உமக்கு ஜால்ரா அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்ன ? மடமை.

  32. ப(க்)தர்களுக்கெல்லாம் கடவுள் பாபா.
    பாபாவுக்குக் கடவுள் பேஸ்மேக்கர்.

    போதுமா?

  33. பொய் பொய் பொய் இவர் பல பெயர்களில் வந்து பின்னூட்டமிட காரணம் நான் மேலே கூறியது தான் எனவே வினவு இதை அனுமதிக்கக்கூடாது. அவ்வாறு அனுமதித்தால் நானும் அந்த உரிமையை கோருவேன் நானும் அவ்வாறே பல பெயர்களில் பின்னூட்டமிடுவேன்.

  34. //உண்மையான கடவுள் கிருஷ்ணர் அவரை மட்டும் வணங்குங்க,வேறு யாரையும் கடவுள்னு ஒப்புக்காதீங்க வரட்டுமுங்களா//

    யாருங்க இந்த பொம்பளைங்க குளத்துல குளிக்கிறப்போ ஜாக்கெட்,தாவனி,பாவாடை,பிராவெல்லாம் தூக்கிகிட்டு துணி வேணுமுன்னா கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி கரைக்கு யார் வராங்களோ அவங்களுக்குத்தான் தருவேன்னு சொல்லி வரவழைச்சு பார்த்துபுட்டு உடைகளை கொடுத்தானே அந்த கிருஷ்ணனா? ஜகநாதபுரத்தில் சகோதரி என்றாலும் பேதமின்றி சுகம் அனுபவிக்கலாம் வா என்றதும்,அப்படியா போகலாம்வா என்று அங்கும்போய் கூடி குலாவி குடும்பத்தோடு கும்மியடித்தானே அந்த கிருஷ்ணனா?மொத்தத்தில் அந்தக்கால ‘பிட்டு’ப்பட கதாநாயகன்னு சொல்லுங்க நண்பரே. அதுக்கு நம்ம ஊரு நித்தியானந்தாவை வணங்கினால் போதுமே! எதுக்கு செத்தவனை எல்லாம் வணங்க வேண்டும்! நல்ல வேலை அந்தக்காலத்தில் தொலைக்காட்சி கேமிரா மீடியாக்கல் எல்லாம் இல்லாமல் போனது கிருஷ்ணனுக்கு வசதியாப் போச்சு.

    • @iniyavan
      \\யாருங்க இந்த பொம்பளைங்க குளத்துல குளிக்கிறப்போ ஜாக்கெட்,தாவனி,பாவாடை,பிராவெல்லாம் தூக்கிகிட்டு துணி வேணுமுன்னா கைகள் இரண்டையும் மேலே தூக்கியபடி கரைக்கு யார் வராங்களோ அவங்களுக்குத்தான் தருவேன்னு சொல்லி வரவழைச்சு பார்த்துபுட்டு உடைகளை கொடுத்தானே அந்த கிருஷ்ணனா? \\ ஆஹா, பரந்தாமனின் லீலைகளை இவ்வளவு தெரிந்து வைத்துள்ளீரே, நீர் இன்றில்லைஎன்றாலும் என்றாவது நிச்சயம் மாதவனின் பக்தானாவதர்க்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது!! தொடர்ந்து படித்து வாரும். ஆனாலும், கோவர்த்தன மலையை இடது கை சுண்டு விரலால் தூக்கி ஏழு நாட்கள் குடையாய் பிடித்தது, எண்ணற்ற அரக்கர்களை கொன்றது என எவ்வளவோ இருக்கும் போது இதை மட்டும் படிக்கிரீரே!! அப்படியே அவர் பெண்களை நீர் சொன்ன மாதிரி செய்திருந்தாலும், அவர் இருந்து பூமியில் அவதரிக்கும் போது தனது இருப்பிடத்தில் இருந்து தன்னுடன் அவதரிக்கச் செய்த கோபியர்களிடம் தானே பழகினார்!! ஏதோ உன் பெண்டாட்டியுடன் பழகியது போல பொருமுகிறீரே??!! அப்படியே இருந்தாலும், அவர் அருளிய கீதை மாதிரி ஒரு புத்தகத்தை உன்னைப் போல அதே அத்தனை லீலைகளையும் செய்பவர்களால் கொடுக்க முடியுமா? அது ஐயாயிரம் வருடம் கடந்தும் நிலைத்து நின்று இன்னமும் வியக்க வைக்குமா? பிறவியிலேயே பக்க பிரம்மச்சாரியத்தைக் கடை பிடித்த பீஷ்மரும் ஸ்ரீ கிருஷ்ணரைப் போல இந்திரியங்களைக் கட்டுப் படுத்த என்னாலும் முடியாது என்று சொல்லக் காரணம் என்ன? திருமணமே செய்யாமல் எல்லாம் துறந்த சுக முனி பகவானின் லீலைகளை பாகவதமாக சொன்ன காரணம் என்ன?

      \\ஜகநாதபுரத்தில் சகோதரி என்றாலும் பேதமின்றி சுகம் அனுபவிக்கலாம் வா என்றதும்,அப்படியா போகலாம்வா என்று அங்கும்போய் கூடி குலாவி குடும்பத்தோடு கும்மியடித்தானே அந்த கிருஷ்ணனா?\\ இது உமது கற்ப்பனை. ஆதராமற்றது.

      \\மொத்தத்தில் அந்தக்கால ‘பிட்டு’ப்பட கதாநாயகன்னு சொல்லுங்க நண்