privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மே தினம் 2011 : படங்கள்-வீடியோ!

மே தினம் 2011 : படங்கள்-வீடியோ!

-

மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் தோழமை அமைப்புகள் தமிழகம் முழுவதும் நடத்திய மே தினப் பேரணி சிறப்பாக நடந்தேறியது. சென்னை, கடலூர், திருச்சி, கோவை, உசிலம்பட்டி ஆகிய இடங்களில் அருகாமை மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். உசிலையில் மட்டும் போலீசு ஊர்வலத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை. தடையை மீறி ஊர்வலம் நடந்தது. பெண்கள், குழந்தைகள் உட்பட 400 பேர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். மே தினத்திற்கு கூட ஊர்வலம் அனுமதி இல்லை எனும் பாசிச நிலையை வந்தடைந்திருக்கிறோம். அதனால் போராட்டம் நின்றுவிடப் போவதில்லை. மே நாள் தரும் ஊக்கத்தில் அது தொடர்ந்து நடக்கும். இங்கே ஊர்வலக் காட்சிகளை ஊர் வாரியாக வெளியிடுகிறோம்.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

 

உசிலம்பட்டி

மே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டிமே நாள் 2011 - உசிலம்பட்டி

 

திருச்சி

மே நாள் 2011 - திருச்சி

ஓசூர்

ஓசூரில் கடந்த மே 1 அன்று நடந்த மேதின நிகழ்வில், விவசாயிகள் விடுதலை முன்னணி ஐ சார்ந்த தோழர் முனிராஜ் மே தினப் பேரணியைத் துவக்கி வைத்துப் பேசினார். பேரணியின் முடிவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் பரசுராமன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தருமபுரி மாவட்ட விவிமு  தோழர் முத்துக்குமார் சிறப்புரை ஆற்றினார்.

மே தினம் எனும் தொழிலாளர் தினம், 8 மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்ற தமது கோரிக்கைகளுக்காகப் பாட்டாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தைப் போராடி பணிய வைத்த தினம். இன்று தனியார்மயம் தாராளமயம் உலகமயக் கொள்கைகளால் நிரந்தர மற்றும் தற்காலிக ஊழியர்களும், தனியார் அல்லது அரசு நிறுவனம் என்ற வேறுபாடு இல்லாமல் தினசரி 16 மணி நேரம் வரை வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் ஒட்டச் சுரண்டப்படுகின்றனர்.

எனவே கேக் வெட்டிக் கொண்டாடவோ, கோவிலுக்குப் போய் கும்பிடுவதற்கோ இந்நாளைப் பயன்படுத்தக் கூடாது.  நமது உரிமையை நிலைநாட்ட, முதலாளித்துவத்தை ஒழித்துக்கட்டிட‌  வேண்டும்.  கார்ப்பரேட் பகற்கொள்ளைக்கு எதிராகப் போராடி நமது நாட்டைப் பாதுகாக்க‌ வேண்டும். அதற்காக தொழிலாளர்கள் அனைவரும் வர்க்கம் என்ற வகையில் ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். இதற்கான சூளூரையை இந்நாளில் ஏற்பதுதான் சரியானது என்று பேச்சாளர்கள் பேசினர்.

கமாஸ் வெக்ட்ரா ஆலையின் தொழிற்சங்கத் தலைவர் தோழர் முருகன் நன்றியுரை ஆற்றினார். ஆயிரக்கணக்கான மக்களும், செஞ்சட்டையணிந்த தோழர்களும், பெண்களும், குழந்தைகளும் முழக்கங்களை பாதகைகளுடன் முழங்கியது ஓசூரில் தொழிலாளர்களுக்கு மேதினத்தில் வர்க்க உணர்வைத் தட்டி எழுப்புவதாகவும், தாம் ஒன்றுபடுவதன் அவசியத்தை உணரவைப்பதாகவும் அமைந்திருந்தது.

மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே தினம் - ஓசூர்மே நாள் 2011 - ஓசூர்

கோவை

கோவையில் மே 1 பேரணி மாலை 4 மணிக்கு சிவானந்தா காலனியிலிருந்து புறப்பட்டு . சித்தாபுத்தூர் V  K மேனன் வீதியில் பொதுக்கூட்டத்துடன் முடிந்தது, பேரணியில் 950 க்கும் மேற்பட்ட தோழர்களும் அவர்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். பேரணியின் இடையில் பெரும் காற்றுடன் மழை வந்தும் பேரணி சற்றும் கலையாமல் நடந்தது.  பொதுமக்களின் பார்வையில் மே தினத்தை கொண்டாட முழு தகுதி உடையவர்கள் இவர்களே என்பதை உணர்த்தியது. இறுதியில் அடாத பெரும் மழையிலும் பொதுக்கூட்டத்தில் நிகழ்ச்சி முடியும் வரைதோழர்கள் கலையாமல் நின்றனர்  . இதே வேளையில் மழையின் காரணமாக சிபிஐ-சிபிஎம் கட்சியின் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது

மே நாள் 2011 - கோவைமே நாள் 2011 - கோவைமே நாள் 2011 - கோவை

சென்னை

மக்கள் கலை இலக்கிய கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் பூந்தமல்லியில் மே நாள் விழா  நிகழ்ச்சி நடந்தது.

பல தொழிலாளர்கள் தங்களின் இன்னுயிர் ஈந்து பெற்றுத்தந்த உரிமைகளை அடகு வைக்க முண்டியடிக்கும் போலிகளின் குத்தாட்டங்களுக்கும், சடங்குகளுக்கும் மத்தியில் போராட்டமே மகிழ்ச்சி என்ற  மார்க்சிய ஆசானின் கூற்றுக்கேற்ப புரட்சிகர அமைப்புக்களின் சார்பில் மே நாள் விழா போராட்டமாக, ஆர்ப்பாட்டமாக கொண்டாடப்பட்டது. வர்க்கப்போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு முறைப்படி வீரவணக்கம் செலுத்தி பேரணி  கல்லறை பேருந்து நிறுத்தத்தில் காலை 10 மணிக்கு பறை முழக்கத்தோடு புஜதொமு தலைவர் அ.முகுந்தன் தலைமையில் தொடங்கியது.”மண்ணைத்தோண்டி வெட்டியெடுக்கும் தங்கம் யாருக்கு ?” என்று  நாட்டின் இயற்கை வளத்தை கொள்¨ளயடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போராடக்கோரும்  பாடல் இசைக்கப்பட்டது.

ஆயிரத்திற்கு மேற்பட்ட தோழர்கள் செஞ்சட்டையுடன் செங்கொடியேந்தி  தொழிலாளி வர்க்கத்தின் உரிமைககளை ப¡துகாப்பதற்காக இழந்து போன உரிமைகளை மீட்டெடுப்பதற்காக, அந்த கம்யூனிச செஞ்சுடரை ஏந்தி  பேரணியாய் சென்றார்கள்.  இருங்காட்டுக்கோட்டை, திருப்பெரும்புதூர் பகுதியிலே பணிபுரிந்து சுரண்டப்படும் தொழிலாளிகள் பரவலாக வாழும்  பகுதிகளின் ஊடாக  பேரணி சென்றது. அமெரிக்க மேலாதிக்கத்தை முறியடிக்கக்கோரியும், தனியார் மயம் தாராளமயம் உலக மயத்தை முறியடிக்ககோரியும், கார்ப்பரேட் கொள்ளையர்களையும், ஊழல் அரசியல்வாதிகளை தண்டிக்க நக்சல் பாரிப் பாதையில் அணி திரளக்கோரியும் முழக்கங்கள் முழங்கப்பட்டன. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் ஸ்டாலின் மாவோவின் படங்களை ஏந்தி  அவர்களின் உண்மையான வாரிசுகளாக களத்திலே  தங்கள் குடும்பங்களோடு தோழர்கள் சென்றார்கள்.   தோழர்கள் மூன்று கிலோமீட்டர் பேரணியாய் சென்றார்கள் என்றால் மக்கள் பெருந்திரளாக ஆதரித்து தோழர்களுக்கு தண்ணீர் தேவையா என்று தோழமையோடு வினவினார்கள்.

பூந்தமல்லி  நீதி மன்றம் அருகே 11 மணிக்கு பேரணி முடிவுற்றது . அவ்விடத்திலே   ஆர்ப்பாட்டம் தொடங்கியது. புஜதொமு மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெற்றி வேல் செழியன்  சிறப்புரையாற்றினார்.  125 ஆண்டுகளுக்கு முன்பு சிகாகோவில் தொழிலாளார்களால் எட்டு மணி நேர வேலை என்ற  தொழிலாளிவர்க்கத்தின் கோரிக்கைக்காக தொடங்கப்பட்ட போராட்டம் உலகம் முழுக்க பற்றிப்படர்ந்து பல தொழிலாளர்கள் குருதி சிந்தி சாதித்தது. ஆனால் அப்படி போராடி வாங்கிய உரிமைகள் இன்றைய மறூகாலனியாக்கச் சூழலில் நசுக்கப்பட்டு,  வேலைகள் பறிக்கப்பட்டு, தொழிற்சங்கம் அமைப்பதற்கு உரிமையற்ற அடிமையாக தொழிலாளர்கள் மாற்றப்பட்டிருக்கிறார்கள்.  சிஐடியூ, ஏஐடியுசி போன்ற போலி கம்யூனிஸ்டுகளின் தொற்சங்கங்கள் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்றபடி தாளம் போடுபவையாக உள்ளன. தொழிலாளிகளிடம் வர்க்க உணர்வை வளர்ப்பதற்கு மாறாக அவர்களின் போர்க்குணத்தை சிதைக்கின்றன. தொழிலாளிகள் தம் உரிமையை மீட்டெடுக்க ஓட்டுக்கட்சிகளை நம்பிப்பலனில்லை. புரட்சிகர தொழிற்சங்கமான புஜதொமு தொழிலாளர்களின் போராடி வென்றதையும் , புஜதொமுவைப்பற்றி அரசு பரப்பும் பெ¡ய் செய்திகளையே போலி கம்யூனிஸ்டுகள் பரப்பிக்கொண்டு செல்லும் வேளையில் தொழிலாளி வர்க்கத்தின் இன்னல் தீர புதிய ஜனநாயகப் புரட்சியே தீர்வென்றும் அதற்கு நக்சல்பாரிப் பாதையில் அணிதிரள  வேண்டுமென்றும் அறைகூவியது சிறப்புறை . பாட்டளி வர்க்க சர்வதேசிய கீதத்துடன் ஆர்ப்பாட்டம் முடிவுற்றது

மே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னைமே நாள் 2011 - சென்னை

கடலூர்

மே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரிமே நாள் 2011 - புதுச்சேரி

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: