privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!

பீப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி!

-

பீஃப் பிரியாணிக்கு எதிராக பார்ப்பன இந்து முன்னணி, தினமலர், தினமணி! -சைக்கிள் கேப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதியினர் இறைச்சி உணவுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு தவறுவதில்லை.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நூறு கோடி முதலீட்டில் அரசு, தனியார் நிறுவனங்கள் இணைந்து எட்டு நவீன இறைச்சிக் கூடங்களை நிறுவ உள்ளதாம். இதில் ஒவ்வொரு கூடத்திலும் 15 ஆயிரம் கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுமாம். இதை பிராணிகள் வதை செய்யப்படும் என்பதாக வன்மத்துடன் தினமணி குறிப்பிட்டுள்ளது. சிக்கன், மீன், மட்டன், பீஃப் சாப்பிட்டால் அது பிராணி வதையா? இல்லை அசைவச் சாப்பாட்டை இழிவுபடுத்துவது மனித வதையா? அஜாத சத்ரு அம்பி வைத்தியநாதன் பொங்கல், நெய், வெண்ணெய், இறக்குமதி செய்யப்பட்ட பழங்கள் என்று நோகாமல் உள்ளே தள்ளும் போது வெஞ்சன சாமான்களுக்கே சிங்கி அடிக்கும் நமது மக்கள் மலிவான மாட்டுக்ககறி சாப்பிட்டால் அது பிராணிவதையா?

உத்தரப்பிரதேச இறைச்சிக்கூடங்களை எதிர்த்து ஜைன துறவி ப்ரபாசாகர்ஜி உண்ணாவிரதம் மேற்கொண்டாராம். அவரை கைது செய்த போலீசார் வண்டியில் கொண்டு சென்றார்களாம். ஜைன துறவிகள் எப்போதும் கால்நடையாக செல்வதால் இப்படி வண்டியில் கொண்டு சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை? மேலும் சட்டம் ஒழுங்கு சமூகப் பிரச்சினைகளில் போராட வருவோர் எவரும் தங்களுக்கென்று தனியாக சலுகைகள் கோருவது எப்படி சரியாக இருக்க முடியும்? உன் மத அனுஷ்டானங்களை எப்போதும் பின்பற்ற வேண்டுமென்று சொன்னால் அதற்குரிய கட்டுப்பாடுடன் சமூக விசயங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு அதையும் போராட்டமாக நடத்தும் உனக்கு எல்லோருக்கும் உள்ள உரிமைதானே கிடைக்கும்?

தற்போது உ.பி இறைச்சிக்கூடங்கள் மற்றும் ஜைன சாமியாரை ஜீப்பில் ஏற்றிச் சென்றது ஆகிய இரு காரணங்களை எதிர்த்தும் வேலை வெட்டி இல்லாத ஜைன, இந்துமதவெறி மற்றும் சைவ உணவு இயக்கங்கள் தில்லி,மும்பை, கொல்கத்தா என ஆங்காங்கே சவுண்டு விட்டு போராட்டம் நடத்துகிறார்களாம். இதன் தொடர்ச்சியாக சென்னை மெமோரியல் ஹால் முன் ஆர்ப்பாட்டம் நடந்ததாம். இதில் சென்னை புளியந்தோப்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன ஆட்டிறைச்சிக் கூடத்தை எதிர்க்கும் காரணத்தையும் சேர்த்திருக்கிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பார்ப்பன இந்து முன்னணியின் தலைவர் இராம கோபாலன் தலைமையேற்றாராம்.

இதில் பேசிய இராம கோபாலன் ” பிராணிகளின் இறைச்சிகளை ஏற்றுமதி செய்வதற்காகவே இது போன்ற இறைச்சிக் கூடங்கள் அமைக்கின்றனர். நம் நாட்டில் இறைச்சியை உண்பவர்கள் குறைவான அளவே உள்ளனர். எனவே பிராணிகள் இறைச்சி ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். புளியந்தோப்பில் 1000 மாடுகளும், 5000 ஆடுகளும் இறைச்சிக்காக வெட்டப்படும் என தகவல் கிடைத்துள்ளது. தமிழகத்தில் கால்நடைகள் இல்லாத நிலையில் இருக்கும் கால்நடைகளை பலியிடுவதை அரசு தடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு இலவசமாக கால்நடைகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படுமென அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை வரவேற்கிறோம்” என்று திமிராக கக்கியிருக்கிறார்.

இறைச்சியை எதிர்த்து நடந்த இந்த மாபெரும் போராட்டத்தை அவாள் பத்திரிகைகளான தினமணி, தினமலர் இரண்டும் முக்கியத்துவத்துடன் செய்தி போன்ற வன்மத்தை வெளியிட்டிருக்கின்றன.

முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன? யதார்த்தமாக ஒரு விசயத்தை பார்ப்போம். சாலையில் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு மனிதன் கைகால் முறிந்து ரத்தச் சிதறலோடு விழுந்து கிடக்கிறான். அப்போது அருகே கறிக்கடை பாய் அப்துல்லா, பார்த்தசாரதி கோவில் பூசாரி ராமானுஜ அய்யாங்காரும் வருகிறார்கள். விபத்து, இரத்தத்தை சகிக்காத அய்யங்கார்  ஐயோ பாவம் என வருத்தப்பட்டபடி நடையை கட்டுகிறார். பாய் அந்த மனிதனது இரத்தச் சிதறலான உடம்பை எடுத்து வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார். இங்கே யார் மனிதாபிமானி? யார் காட்டுமிராண்டி?

இந்தியாவில் இறைச்சி சாப்பிடுபவர்கள் குறைவு என்று ராம கோபாலன் கூறியிருக்கும் பச்சைப் பொய்யை பாருங்கள். தமிழகம் முழுக்க தினசரி பல்லாயிரம் டன் கணக்கில் கோழிகளும், ஆடுகளும், மாடுகளும், மீன்களும் நுகரப்படுகின்றன. இதில் காசுக்கேற்ற தோசை என்ற கணக்கில் ஏழைகள் மாடு, கருவாடு என்றும், பணக்காரர்கள் ஏற்றுமதி இறால், ஆடு, வான்கோழி என்றும் உண்கின்றனர். காய்கறிகளும், பருப்பு தானியங்களும் விண்ணைத் தொட்டுவிட்ட நிலையில் அதிகமும் உடலுழைப்பு வேலை செய்யும் ஏழைகளின் புரதத் தேவையை மலிவான மாட்டுக்கறியும், கோழிக்கறியும்தான் ஈடு செய்கின்றது.

மேலும் இந்தியாவில் உள்ள விவசாயிகள் எவரும் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவரல்ல என்பதற்கு காரணம் அவர்கள் கோமாதைவை குலதெய்வமாக போற்றுகிறார்கள் என்பதல்ல. விவசாயத்திற்கும், பாலுக்கும் பயன்படும் கால்நடைகளை அவர்கள் கொல்ல விரும்பவதில்லை. ஆனால் அவர்களுக்கு பயன்படாக காளைகள், மடி வற்றிய பசுக்களை விற்கின்றனர். பயன்படாத மாடுகளை வைத்து பராமரிப்பது என்பது அவர்களால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. அப்படி விற்கப்படும் மாடுகள் இறைச்சிக்குத்தான் போகின்றன என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தும் வேறு வழியில்லை. இப்படித்தான் நமது நாட்டில் மாட்டுக்கறி கிடைக்கிறது. மேலைநாடுகள் போல இறைச்சிக்காக மாடுகள் வளர்க்கப்படும் நிலை இங்கு இல்லை. இதன்றி கிராமங்களில் வளர்க்கப்படும் ஆடுகள் என்பது குடும்பத்தின் பெரிய செலவுகளை ஏற்கும் ஒரு மலிவான முதலீடாக இருக்கின்றது. அவைகள் இறைச்சிக்கென்றே வளர்க்கப்படுகின்றன.

மேலும் கூலி விவசாயிகள், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்ட சாதியினர், நகரத்து ஏழைகள் அனைவரும் இன்று மாட்டுக்கறியை விரும்பி உண்ணுகின்றனர். இத்தகை எளிய மக்களுக்கு இறைச்சியை அளிக்கக் கூடாது என்று சொல்வது பச்சையான பாசிசம் ஆகும். முன்பு போல கையேந்தி பவனில் மறைவாக இருந்து மாட்டுக்கறி உண்பது இப்போது மாறிவருகிறது. கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் மாட்டுக்கறி தேசிய உணவாகவே இருக்கிறது.

வேத காலத்தில் கூட பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவராகவே இருந்திருக்கின்றனர். மேலும் யாகங்களில் கால்நடைகளை  கொன்று அழிப்பது வகை தொகையில்லாமல் அதிகரித்தும் வந்தன. அக்காலத்தில் பார்ப்பனியத்திற்கு எதிராகத் தோன்றிய பௌத்த, ஜைன மதங்கள் விவசாயப் பொருளாதாரத்தை  காக்கும் வண்ணமும் கால்நடையை பாதுகாக்கும் பொருட்டும் சைவ உணவுப் பழக்கத்தை முன்வைத்து பிரச்சாரம் செய்தன. அதன் பின்னரே பார்ப்பனிய இந்து மதத்தில் சைவ உணவுப் பழக்கம் வந்ததோடு அசைவ உணவு உண்பவர்களை இழிவாக பார்க்கும் வழக்கத்தையும் ஏற்படுத்தினர்.

இன்றும் இந்தி பேசும் மாநிலங்களில் மாட்டுக்கறிக்கு போதிய அந்தஸ்து கிடைக்கவில்லை. அதற்கு இந்துமதவெறி அமைப்புக்கள் ஏற்படுத்தியிருக்கும் பார்ப்பனப் பண்பாட்டு பாசிசமே காரணமாகும். ஹரியாணாவில் செத்த மாட்டை உரித்தார்கள் என்று ஐந்து தலித்துகள் ஆதிக்க சாதி இந்துக்களால் கொல்லப்பட்டனர் என்பதிலிருந்தே இவர்களது காட்டுமிராண்டித்தனத்தை புரிந்து கொள்ளலாம்.

ஆகவே உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையான மாட்டுக்கறியை நாம் பிரபலமாக்குவதோடு, எல்லோரும் உண்ண வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும். அதுவும் கையேந்தி பவனில் தலைமறைவாக நின்று உண்ணுதல் கூடாது. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.

கோமாதா என்று பாசமாக உருகுபவர்கள் எல்லாம் அந்த கோமாதா தோலில் செய்த செருப்பு, ஷூ, பெல்ட், தொப்பி, உடைகளை அணியாமல் இருப்பார்களா? மாட்டு எலும்பில் செய்யும் கால்சிய மாத்திரைகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா? மாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன. மாடு நமது பொருளாதாரத்தை பெருக்கும் ஒரு கால்நடை மட்டுமே. அது நமது செல்வம். பார்ப்பனப் புனிதமல்ல.

மாட்டை வைத்து விவசாயமோ, பால் தொழிலோ, சாணி கூட அள்ளாத ‘மேல்’ சாதியினர் மட்டும்தான் அதை தாயென்று சும்மா காசு செலவு இல்லாமல் போற்றுகின்றார்கள். தனது விவசாயத்திற்கு பயன்படும் மாடுகளுக்காக மாட்டுப் பொங்கல் வைத்து மரியாதை செய்யும் விவசாயியின் உணர்வும், இவர்களது இந்துத்வ உணர்வும் வேறு வேறு என்பதை நண்பர்கள் கவனிக்க வேண்டும்.

இதற்கு மேல் அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்து முன்னணி அம்பிகள், விவசாயிகளிடமிருந்து அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்துப் பராமரிக்கலாமே? யார் தடுத்தார்கள்?

அப்படி பயன்படாத மாடுகளை இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள்தான் பராமரிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால் அப்போது இவர்களது கோமாதா பாசம் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடிவிடும்.

அது சாத்தியமில்லை என்பதால் இவர்களை ஓட வைப்பது நம் வேலையாக இருக்கிறது. இனி உங்கள் வீட்டு விசேசஷங்களில் மாட்டுக்கறி பிரியாணி, பீஃப் ரைஸ், சில்லி பீஃப், ஜிஞ்சர் பீஃப், பீஃப் மசாலா, பக்கோடா, பீஃப் 65 என்று ஜமாயுங்கள், பார்ப்பனியத்திற்கு எதிரான பண்பாட்டுப் போராட்டத்தில் அணி சேருங்கள்!

சென்னையில் எங்கு மாட்டுக்கறி கிடைக்கும், மாட்டுக்கறியை எப்படி சமைக்க வேண்டுமென்று அறிய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்!

________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்

  1. “மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?”
    என்ட்ர கட்டுரையில் MSM என்ர பெயரில் எனது ந்ண்பன் எழுதிய மறுமொழிகள் எங்கே…

    பதில் சொல்ல முடியாது என்பதால் கவனமாக அந்த மறுமொழிகள் செய்யப் பட்டுள்ளன..

    வினவிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை..

  2. //சைக்கிள் கேப்பு கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பன ஆதிக்க சாதியினர் இறைச்சி உணவுக்கு எதிரான காழ்ப்புணர்வைக் கொட்டுவதற்கு தவறுவதில்லை.//
    உண்மை தான் அவர்கள் அப்படிதான்…ஆனால்நீ கேப்பே இல்லாட்டி கூட ஒரு சர்ச்சையைக் கிளப்ப்றமாதிரி ஒரு கட்டுரை எழுதி சண்டையை ஆரம்பிச்சுவச்சுருவ..

    //முதலில் சைவ உணவு தின்பவர்களெல்லாம் மனிதாபிமானிகள் போலவும், இறைச்சி சாப்பிடுபவர்களெல்லாம் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரிக்கின்ற இந்தப் பார்வை பார்ப்பனத் திமிரன்றி வேறென்ன? யதார்த்தமாக ஒரு விசயத்தை பார்ப்போம்.//

    இது உண்மை தான், ஆனால் ஒரு சாதாரண இந்து ஆடோ கோழியா சாப்பிடும் போது மாடு சாப்பிடுவது ஒன்னும் பாவம் கிடையாது..உழைக்கும் வர்க்கதிற்க்கு அது தான் விலை மலிவான உணவு..அதுவும் கேரளாவில் பீப் தான் பிரதான உணவு(இந்துக்கள் உட்பட)

    //விவசாயிகளுக்கு இலவசமாக கால்நடைகள் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படுமென அறிவித்த முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை வரவேற்கிறோம்” என்று திமிராக கக்கியிருக்கிறார்.//இதில் என்ன திமிர் ஒவ்வொரு மதத்திற்க்கும் ஒருநம்பிக்கை..

    //கோமாதா என்று பாசமாக உருகுபவர்கள் எல்லாம் அந்த கோமாதா தோலில் செய்த செருப்பு, ஷூ, பெல்ட், தொப்பி, உடைகளை அணியாமல் இருப்பார்களா? மாட்டு எலும்பில் செய்யும் கால்சிய மாத்திரைகளை ஏற்கமாட்டோம் என்று அறிவிப்பார்களா? மாட்டில் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பொருட்கள் செய்யப்படுகின்றன. மாடு நமது பொருளாதாரத்தை பெருக்கும் ஒரு கால்நடை மட்டுமே. அது நமது செல்வம். பார்ப்பனப் புனிதமல்ல.//

    உண்மை.. அவ்வை சண்முகி பட வசனம்..வரி மாராமல்…

    • பார்ப்பன அம்பிகலால்தான் மாமிசம் விலை ஏறியது!
      தண்ணி அடிக்காத அம்பிகள் எத்தனை பேர்?
      கையை தூக்குங்கோ!

  3. பார்பனர்களுக்கு தங்களை உயர்த்தி கொள்ள என்ன கண்றாவியும் செய்வார்கள். ஒரு காலத்தில் மாட்டு கரியையும் குதிரையையும் சோம பானத்தோடு உண்டு கொழுத்தவர்கள், இன்று கோமாதா புராணம் பாடுகின்றனர்! கடல் தாண்டி செல்ல கூடாது என்று சொன்னவர்கள், இன்று அயல் நாட்டு டாலர் வருமானம் பெரும்பாலும் இவர்களுக்கு தான்!

    அவனுங்க எப்பவுமே இப்படிதான் பாஸ்!

    அதா விடுங்க, திருவல்லிக்கேணி, ராயபேட்டை பகுதிகளில் எங்கு நல்ல மாட்டு கரி கிடைக்கும் என்று சொல்லுங்கள்! 🙂

    • உட்லண்ட்ஸ் திரையரங்கு அருகே முன்பு மிகவும் சுவையான சில்லி பீப் கிடைக்கும், இப்போதும் கிடைக்குமேன நம்புகிறேன்

    • ஸ்டார் திரையரங்குக்கு எதிர்புறம் சற்றே வடக்கே தள்ளி..திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருக்கும் ஷாஹித் பிரியாணி சென்டரில் கிடைக்கும் மாட்டுக்கறி வருவல், தந்தூரி பாணி கறியும் சுவையானது..

  4. //போலீசு கைது செய்தால் ஜீப்பில்தான் ஏற்றுவார்கள், அவன் ஜைனனோ இல்லை பொறுக்கி சங்கராச்சாரியோ இல்லை பிட்டுப் பட பூசாரி தேவநாதனோ யாராக இருந்தாலும் இதுதானே நடைமுறை?//

    அப்படியே நம்ம அண்ணன் மதானி, தியாகி ஒசாமா மற்றும் பெண்களை பாலியல் துன்புறுத்தும் கிரித்துவ பாதிரியார்களையும் சேர்த்தால் அது மதச்சார்பின்மை, அது வரை இது ஒரு தலைப்பட்சமான விதன்டாவாதமே..

    // உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு அதையும் போராட்டமாக நடத்தும் உனக்கு எல்லோருக்கும் உள்ள உரிமைதானே கிடைக்கும்?//

    அய்யர்களின் பார்வை தவறுதான் அதை விடு…உன் பார்வை எப்படி, விதவிதமா கதை எழுதி(உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு) இந்து மதத்த விமர்சனம் செய்யாட்டி உணக்கு தூக்கம் உனக்கு தூக்கம் வருமா..

    • //அய்யர்களின் பார்வை தவறுதான் அதை விடு…உன் பார்வை எப்படி, விதவிதமா கதை எழுதி(உன் பார்வையை மற்றவர் மீது திணிப்பதற்கு) இந்து மதத்த விமர்சனம் செய்யாட்டி உணக்கு தூக்கம் உனக்கு தூக்கம் வருமா..//

      பீப் சாப்பிடுறது இந்து மதமில்லை என்று சொன்னதன் மூலம பார்ப்பஸும், மிச்ச சொச்ச ஆதிக்க சாதியினரும் மட்டும்தான் இந்து என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி

  5. மாட்டுக்கறி சமைப்பதற்கான இன்னும் சில சமையல் குறிப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்.

  6. சென்னையில் மிக சிறந்த பீஃப் சமாச்சாரங்கள் கிடைக்கும் இடங்கள்…

    சில்லி பீஃப்: பெசன்ட் ஃபாஸ்ட் ஃபுட்(பெசன்ட் நகர் பஸ் நிலயம் அருகில்)
    பீஃப் ரைஸ்:பெசன்ட் ஃபாஸ்ட் ஃபுட், பிஸ்மில்லா ஃபாஸ்ட் ஃபுட்(பெருங்காளத்தூர்)
    பீஃப் பிரியாணி: தாஜ் மொகல் பிரியாணி(அண்ணா நகர்)

    • //வேத காலத்தில் கூட பார்ப்பனர்கள் மாட்டுக்கறி உண்ணும் வழக்கம் உடையவராகவே இருந்திருக்கின்றனர். மேலும் யாகங்களில் கால்நடைகளை கொன்று அழிப்பது வகை தொகையில்லாமல் அதிகரித்தும் வந்தன. //

      ஏன் வேத காலம். சில வருடம் முன்பு காமக் கேடி பீடையாதிபதி சங்கரன் செய்த யாகத்தில் எருமைகள், பசுக்கள் பலி கொடுக்கப்பட்டன. இது குறித்து கல்கி கேள்வி பதிலில் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு கல்கி பின்வருமாறு நாசுக்காக பதில் சொல்லியிருந்தது – ‘அவர் அப்படி யாகம் செய்திருந்தால் அது தவறு’ என்று.

      பீப் வறுவல், பீப் 65, பீப் பிரியாணி, உலர்த்திய பீப் வறுவல் இவை சுவையுடன் கிடைக்குமிடம் குமரக்கம் எனப்படும் கேரள உணவகங்கள்.

      இது தவிர தரமான பீப் உணவு வகைகள் கொஞ்சம் சிரமமெடுத்து தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. பாஸ்ட் புட் வகை கடைகளில் பீப் உணவு வகைகள் (சிக்கனும் கூட) என்று போடப்படுபவை உடலுக்கு நல்லது அல்ல.

      • Dear Mr. Ahmed

        ok LET it Be a brahminical tradition. And let all of us eat Beef. What about eating Pork?. will revolutionary poet comrade Inquilab recomend his students in New college the merits of eating Pork. Or our Vinavu comrades will engage in educating the muslims in thousand lights or parrys corner that there is nothing wrong in eating pork. Pork is a food of working classes in India. We should be judicious

  7. //அடிமாட்டுக்கு போகும் மாடுகளை காப்பாற்ற வேண்டும் என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் இந்து முன்னணி அம்பிகள், விவசாயிகளிடமிருந்து அந்த மாடுகளை பணம் கொடுத்து வாங்கி வீட்டில் வைத்துப் பராமரிக்கலாமே? யார் தடுத்தார்கள்?//

    அவர்களுக்கு மாட்டை வணங்குவது மட்டும் தான் வேலை அதற்கு புல் அறுத்துப் போடுவது குளிப்பாட்டுவது எல்லாம் அவன் வீட்டில் வேலை பார்க்கும் மாட்டுக்கறி திங்கும் தாழ்த்தப்பட்டவன் வேலை.

    மாட்டுக்கறி எதிர்ப்பாளர்களே! உங்களோடு சேர்ந்து நானும் எதிர்க்க ரெடி ஆனால் ஒரு கண்டிஷன் கன்றை நக்க மட்டுமே விட்டு இழுத்து கட்டி கறந்து நீ குடிக்கும் பாலை முதலில் நிறுத்த வேண்டும். தயாரா???

    • நரேந்திர மோதியின் நரவேட்டை நாட்களில் கோத்ராவில் நான் வசித்திருந்தேன். ஒரு 12 நாள் அலுவலகமே செல்ல முடியாத ஊரடங்கு. அதற்கு முன் முஸ்லீம் தெருக்களின் சென்று மாட்டுக்கறி வாங்கி வந்து வீட்டில் சமைத்திருந்தேன். அந்த கொலை வெறி நாட்களில் அவர்கள் தெருப்பக்கம் போகக்கூட முடியாத நிலைமை. இருப்பினும் ஒரு சக ஊழியர் மூலம் பெற முடிந்தது. ஆனால் ஆர் எஸ் எஸ், சங் பரிவார் போன்ற அமைப்புகளிடமிருந்து கடும் மிரட்டல் இருந்தது. பணம் ஒரு மாட்டை வெட்டினால் இவ்வளவு என்று வசூல் வேறு செய்து கொள்வதாகவும் மாட்டுக்கறி வாங்கி வந்த நண்பர் குறிப்பிட்டார். அவன் பெயரைப்பாருங்கள் சுக்லா

        • ஊரையே தீ வச்சவனுங்க இந்துத்துவா வாதிகள்தானே நண்பா!. எனக்கு எப்படி மாட்டுக்கறி குலக்கறியோ அதேபோலத்தானே சாப்பிடாதே என்பவனுக்கும் குலக்கொள்கை. எது எப்படியாகினும் வாழ்வதற்கான போராட்டத்தில் யாரும் பின் தங்கி விட முடியாது.

          • //ஊரையே தீ வச்சவனுங்க இந்துத்துவா வாதிகள்தானே நண்பா!. எனக்கு எப்படி மாட்டுக்கறி குலக்கறியோ அதேபோலத்தானே சாப்பிடாதே என்பவனுக்கும் குலக்கொள்கை. எது எப்படியாகினும் வாழ்வதற்கான போராட்டத்தில் யாரும் பின் தங்கி விட முடியாது.//
            திலிப்நீசொல்வது மிகச்சரியே

  8. As usual some intelligent idiots (who else followers of Vinavu, blindly) took vommit on the net on supporting cow slaugters. Cruel people.. they can’t think beyond cruelty

  9. //ஆகவே உழைக்கும் மக்களின் அடிப்படைத் தேவையான மாட்டுக்கறியை நாம் பிரபலமாக்குவதோடு, எல்லோரும் உண்ண வேண்டும். பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும். அதுவும் கையேந்தி பவனில் தலைமறைவாக நின்று உண்ணுதல் கூடாது. கடையில் மாட்டுக்கறியை வாங்கி வீட்டில் சமைத்து உண்ண வேண்டும். அப்படி உண்பவர்கள்தான் பார்ப்பனியத்தை எதிர்க்கும் மனிதநேயர் என்று அழைக்கப்படுவார்கள்.//

    Every 3 I eat chilly beef and beef fried rice. I was so weak and lean before. Now, I feel healthy, more stronger and improved stamina. Thanks to beef. Now the beef-shop bai is my friend. So beef has other benefits too 🙂

  10. பார்ப்பனியத்தை எதிர்க்கிறேன் என்று சொல்லக்கூடிய அனைவரும் மாட்டுக்கறியை உண்ண வேண்டும் — சரியான காமெடி பீசு பாசு நீங்க

  11. மாட்டுக்கறி உண்பவரிடமிருந்து ரத்தமோ உறுப்போ தானம் வேண்டாம் என்பார்களா?.

    • It really happened to me. I was studying second year college. Before semester exam, I donated blood to a Hindu(they are not brahmins). After taking my blood they asked if I eat beef. I said yes. The lady said, I could have died than to live in a beef-eater’s blood. I really cried that day as people are like this.

      Myself eating beef is their problem than my blood saving their life 🙁

      • The lady said, I could have died than to live in a beef-eater’s blood. //

        அறியாமைதான்.. அப்படியே சின்ன வயதிலிருந்து வளர்க்கப்படுவது..

        இதைத்தான் நாம் போக்கிடணும் ..

        //I really cried that day as people are like this//

        நீங்க பெருமைப்படவேண்டிய விஷயமல்லவா?..

        மனநோயாளியை பார்த்து அய்யோ இவன் என்னை திட்டிவிட்டானே னு வருந்தலாமா?..

        கம்பீரமாக அல்லவா செல்லணும்.?

      • நல்ல வேளை நீங்க ரத்தம் கொடுக்கல…!!! இல்லைனா அது ஒரு ‘சாக்கடையோட’ கலந்திருக்கும்….!!! இதுக்கு பேரு தான் ‘தானம் கொடுத்த மாட்டை பல்லை பிடிச்சி பாக்குறது’ங்கிறது..!!!

  12. பிராமணன் உயர் நிலையில் இருக்கிறான்னு சொல்றியே நீயும் உயர் நிலைக்கு வா உன்னை யார் தடுத்த ? உண்மையான துரோகி எல்லா ஜாதியிலையும் இருக்கிற முதலாளிகள் தன் அவனை டச் பண்ணமாட்றையே அவன தொட்ட ராணுவத்தில அனுப்புற! பிராமணனுக்கு அது இல்லையில்ல அதான்.

    • //பிராமணன் உயர் நிலையில் இருக்கிறான்னு சொல்றியே நீயும் உயர் நிலைக்கு வா உன்னை யார் தடுத்த ? //

      அதுக்கு ட்ரை பன்னுற மாதிரி கருவறைக்குள்ள நுழையவும், சிதம்ப்ரம் கோயிலில் தமிழில் பாடவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் மனித உரிமை பாதுகாப்பு மையம் போராடி வருகிறது. இவர்களுக்கு எதிராக உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து போராடுபவர்கள் பார்ப்பன ……… இது கோயிலில் மட்டுமல்ல, கல்வி, அரசுப் பதவிகள் என பல இடங்களில். யார் தடுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டேன். அவர்களை நீங்கள் எதிர்ப்பீர்களா? இவர்களை எதிர்க்காமல் எப்படி ஐய்யா நாங்கள் உயர் நிலைக்கு வர முர்டியும்?

      • அக்கவுண்ட் அகமது: ஒரு தலித்தை, உங்களின் உலீமாவின் தலைவர் ஆக்க தயாரா? இந்துக்கள் இந்து மதத்தைப் பற்றிப் பேசும் இடத்தில் உங்களுக்கு என்ன வேலை?

        • //ஒரு தலித்தை, உங்களின் உலீமாவின் தலைவர் ஆக்க தயாரா? //
          தலித் என்பவன் இந்து மத்தில் உல்லவன் அஙகு அவனுக்கு உரிமை மருக்கபடுகிரது. ஆனால் முஸ்லீம் மததில் தலித் என்ர பாகுபாடு கிடையாது. அதனால் ஒரு தலித் முஸ்லீம் ஆக மாரினால் ஜமாத் தலைவராகவும் ஆகலாம். இன்சா அல்லா சிரிதர் முஸ்லீம் ஆக மாரினால் ஜமாத் தலைவராக துஆச் செய்கிரேன். ஆமின்.

    • //பிராமணன் உயர் நிலையில் இருக்கிறான்னு சொல்றியே//
      தோடா…. இது தான் சந்துல சிந்து பாடுரதுங்கிறது…!!! பிராமணன் உயர்ந்தவன்னு இங்க எந்த கேனையனும் சொல்லல…!!! ‘பிராமணன் வர்ணாசிரம அடிப்படையில் தன்னை தானே உயர்ந்தவன் என்று கூறி கொள்கிறான்’ என்று தான் சொல்லி வந்திருக்கிறார்கள்.

      • //தோடா…. இது தான் சந்துல சிந்து பாடுரதுங்கிறது…!!! பிராமணன் உயர்ந்தவன்னு இங்க எந்த கேனையனும் சொல்லல…!!! ‘பிராமணன் வர்ணாசிரம அடிப்படையில் தன்னை தானே உயர்ந்தவன் என்று கூறி கொள்கிறான்’ என்று தான் சொல்லி வந்திருக்கிறார்கள்.//

        +1

  13. மாட்டை இறைச்சிக்காக விற்பவர்கள் சில நேரங்களில் நோயுற்ற மாடுகளையும் விற்று விடுகிறார்கள். இது என் கண் முன்னே நடந்த ஒரு சம்பவம். இதை பார்த்த பின்பு நான் மாட்டு இறைச்சி சாப்பிட நினைக்கும் போதெல்லாம் அந்த மாட்டுக்கு இருந்த நோய் என் கண் முன்னே வருகிறது. நாம் சாப்பிடுவதும் அது போல் ஒரு மாடாக இருக்குமோ என்று ஒரு நினைவு வரும்போது நமக்கு அதை சாப்பிடவே அச்சமாக உள்ளது. நாம் என்றைக்கு இறைச்சிக்காக மாடுகளை வளர்த்து அதை மட்டுமே வேட்டுகிரோமா அன்றைக்கு எல்லோரும் ஆரோக்கியத்தை பற்றி கவலை இன்றி சாப்பிடலாம். மற்றபடி பசு வதை என்பதெல்லாம் டுபாகூர். இதுபோன்ற இறைச்சி கூடங்கள் கோவையில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    • நோய் இருந்தாலும் நல்லா வேகவைத்துத்தானே சாப்பிடுறோம்..எல்லாக் கிருமிகளும் அழிஞ்சிடும்…பயப்படத் தேவை இல்லை.. கோழிக்கு சீக்கு வந்து தலையைக் கவித்திடறப்போ கூடுத்ல் வேக்காட்டில் வேகவைத்து சாப்ப்பிடுவாங்க..அதுமாதிரிதான் செய்யணும்…கோமாதா கறியவும்

  14. Wonderful article…really appreciate for this article. Each and every Indian should read this. I have eaten beef so many time in my home. Even early morning my father has brought beef from the shop. Please Brahmanism arrogant keep away from our livelihood. let people enjoy with their own wish. If anybody tells about your origin will you leave them…please don’t open our mouth. we are people of pain. Dear friends please make so many comments about this beef article. I will catch you later…Thank you Vinavu….

  15. Give data; not judgement. If I say your only aim is to show that you are a Secularist by brahmin beating, it might be stupidity. So come clean; speak truth; don’t thrust yr pre-judged vales only on and against Hindus.

  16. கரி தின்னாதே என்ட்ரு கோரும் பாப்பாஙலுக்கு வக்காலத்து வாஙலை, அவனுஙக தான் அதிகமா மாட்டுக்கரி தின்பதாக செய்தி… புலால் உன்னக் கோடாதுன்னு சொன்ன திருவல்லுவருக்கு என்ன பதில் சொல்லப் பொரேஙக…

  17. i am not supporting any caste, according to me there is no caste only humans… the thing what are we going to answer to mr.tiruvalluvar who had also stated kattra pinn nirkka atharkku thaga…

  18. வேதத்தில் மாட்டுக்கறி சாப்பிடலாம் எனச் சொல்லி இருக்கின்றது … அதனால் மாட்டுக் கறி உண்பது என்பது ஒன்றும் இந்துக்களுக்கோ, பிராமணர்களுக்கோ தடை செய்யப்பட்டவை அல்ல … !!!

    வேண்டுமெனில் பிராமணர்களும், இந்துக்களும் – பௌத்தத்திலோ, சமணத்திலோ மதம் மாறிவிட்டு பின்னர் போராடினால் நியாயம் என்பேன் … வெறும் 1 சதவீதம் இருக்கும் இந்த சமூகத்தின் கொள்கைகளை 99 சதவீதம் இருக்கும் பிறரிடம் திணிப்பது சரியாகவும் படவில்லை ….

    • Mr, Ikbal,

      Can you kindly quote in which veda — which saga beef is approved? Pashu has many meanings in sanskrit. Pashupaasha vimochini — deliverer of ignorants, here pashu means ignorance. Likewise there are other meanings.

      Please quote the vedic text — next time I visit Veda prasaar samithi I will right away put this question and clarify you.

      Please dont do cow slaughter — I fall at your feet. Please dont even think of that greatest sin —

      • வேதங்களின் மாடுகளைப் படையலாக்கி உண்பதற்கு தடை இருந்திருக்கவில்லை என்பதே உண்மை. ரிக் வேதம் 10-ம் புத்தகத்தில் 149-ம் பாடலில் தெளிவாக மாடுகளை அக்னிக்குப் படையலாக்கி அவற்றை உண்ணலாம் எனக் கூறியுள்ளது.

        மஹாபாரத்தில் ( சாந்திபார்வை – அத்தியாயம் 29-யில் ) ரந்திதேவர் என்னும் மன்னன் செல்வம் செழிக்க ஒன்பது வகை தானியங்களையும், மாட்டிறைச்சியையும் பிரமாணர்களுக்கு பரிசில் வழங்கியதான குறிப்புகள் இடம்பெறுகின்றன.

        தைத்திரிய ப்ராமணத்தில் ( II.1.11.1 ) ” அதோ அன்னம் வியா கௌ ” எனக் கூறுகின்றது, அதாவது மாட்டின் மானிசமும் அன்னமாக உட்கொள்ளக் கூடியதே எனவும், யஜ்னவால்கியரும் சதாபாத ப்ராமணத்தில் ( III.1.2.21 ) மாட்டின் மாமிசத்தை உண்வது இயல்பே எனவும் கூறுகின்றார். இளம் கன்றின் மாமிசம் புசிப்பதற்கு உரியது என ( IV.5-2.1 ) கூறுகின்றார்.

        ப்ராமணர்களின் வாழ்வியலை சித்தரிக்கும் மனுஸ்மிரிதியில் மாட்டு இறைச்சி தடை செய்யப்பட்டதாக எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

        சாரக் சம்ஹிதா என்னும் பண்டைய மருத்துவ நூலில், மாட்டின் இறைச்சி பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தலாம் என கூறுகின்றது. யாகங்களில் காளை, கன்றுக் குட்டி, ஆடு ஆகியவைப் படையலாகப் பயன்படுத்திய செய்திகள் பழைய நூல்கள் பலவற்றிலும் இருக்கின்றன.

        ப்ரிஹாதாரண்யக உபநிடத்தில் ( VI.4.18 ) தம்பதியினருக்கு ஆண் குழந்தைப் பிறக்க வேண்டுமானில், அவர்கள் மாலை வேளையில் மாட்டிறைச்சியினை உண்டு, பசுவும் – காளையும் போல உறவுக் கொண்டால் ஆண் குழந்தைக் கிடைக்கும் எனக் கூறுகின்றது.

        ரிக் வேதம் விவாக சுக்த புத்தகம் 10 பிரிவு 85 பாடல் 13-யில் திருமணத்துக்கு வரும் விருந்தினருக்கு மாமிசம் வழங்குவதன் சிறப்புனைக் கூறுகின்றது.

        அதர்வ தேவம் புத்தகம் 9 பிரிவு 4 வரிகள் 37-38-39 யில் பசுவின் பாலும், பசுவின் மாமிசமே எந்த உணவை விடவும் ருசி மிகுந்த உணவு என கூறுகின்றது.

        மஹாபாரதம் அனுஷாசன் பார்வை அத்தியாயம் 88 யில் மாடு உட்பட அனைத்து விலங்குகளின் மாமிசத்தின் உன்னதத்தை விளக்குகின்றது, அத்ல் காளையின் மாமிசம் புசிப்பதற்கு உகந்தது எனவும் கூறுகின்றது.

        மனுஸ்மிருதி அத்தியாயம் 3 பாடல்வரிகள் 266 -272 யில் – இங்குள்ளப் பலருக்கும் முதலில் கூறிக் கொள்ள விரும்புவது – நான் ஒரு முஸ்லிமோ, கிறித்தவனோ அல்ல … நானும் ஒரு இந்து மதத்தவனே ஆவேன். இந்து மத வேதங்களும், புராணங்களும் மாமிசம் உண்பதையோ, மாட்டின் இறைச்சியினை உண்பதையோ தடுக்கவில்லை. சில இடங்களில் அவற்றை ஆதரித்துள்ளன என்பதே உண்மை.

        உதா.

        இறுதிச் சடங்கு செய்யும் ப்ராமணன் மாட்டின் இறைச்சியினை உண்ண வேண்டும் எனவும், மக்கள் பிராமணருக்கு அசைவ உணவையே படைக்க வேண்டும் எனவும் கூறுகின்றது.

        விஷ்னு தர்மோத்தார் புராணம் புத்தகம் 1 பகுதி 140 வரிகள் 49 & 50 -யில் இறுதிக் கிரியையின் போது மாமிசம் உண்ணாத ப்ராமணரும், மக்களும் நரகத்துக்குப் போவார்கள் எனவும்.

        மனுஸ்மிரிதி பகுதி 5 வரிகள் 35யில் – கிரியைகள் செய்யும் மனிதன் மாமிசம் புசிக்காமல் விட்டால் 21 பிறவிகளுக்கு பலிக் கொடுக்கப்படும் விலங்காக பிறப்பான் எனக் கண்டிக்கின்றது.

        இவைகள் போதுமா சகோ. இந்துக்களில் மாட்டி இறைச்சியினை உண்ணத் தடைப் போடுவதும், அல்லது புனிதம் என பிரச்சாரம் செய்வதும்.. வேதங்களையும், புராணங்களையும் படிக்காமல் இருக்கும் அரைக் குறை இந்துக்களே ஆவார்கள் என்பதே உண்மை.

        • Mr. Ikbal,

          You have quoted many scriptures — I made a quick call to my Guru and used few of your quotations. First he scolded me to have visited such evil promoting sites.

          Secondly he told this thing simply: “Not only the wise, learned, humble, merciful, equal minded people will quote vedas and quran. Even the saataan and the demonica will also try to quote, misinterpret the same scriptures to prove their point.”

          There was a great asura Bandaasuraa who is the illusion creative Asura –means he will change his forms, pretend to follow scriptures and later will cheat the Rishis, Devas and other gods. His kingdom is called sunya nagaram which is nothing but full of void. I think that Asura has started manifesting himself and his principles through various physical forms like you guies.

          Please dont fall prey under Maya. There was a magazine called Kalyana Kalpathaaru from Kerala — where all your misinterpretations were largely addressed.

          Bottom line is this as Jesus told — as thou thy sow shall they reap. If your motive is to enjoy killing cows it is very wrong.

          I cannot even dream of how you guies derive pleasure in killing an animal. Are you going to live for thousands of years — if end approaches you all will realize how too late you are and what you did to these innocent animals when they were young and healthy. But by that time it will really be too late.

          Dont incur more papas — stop this false propaganda. Instead do some meditatio and practice humility . Otherwise you will be finished as so happened to Hiranya Kasippu, Ravana, Kumbakarna, Hiranyaaksha and off late to the DMK empire.

          • @ கிருஷ்ணா – உங்களின் குரு உங்களிடம் பல உண்மைகளை மறைக்கின்றார்கள். ஒன்று தாங்கள் சம்ஸ்கிருதத்தை நன்கு படித்து – வேதங்களை உணர வேண்டும், அல்லது சம்ஸ்கிருதம் கற்று உண்மை பேசும் குருவிடம் பேச வேண்டும், அல்லது மொழிப் பெயர்ப்பில் படிக்க வேண்டும். எனது தாத்தனார் ஒரு வேத பண்டிதர் அவர் ஊடாகவே நான் இவற்றை அறிந்தேன் … இவற்றில் பொய்மை ஒன்றும் இல்லை என்பது உண்மை….

            18 புராணங்களை இந்து மதம் என தாங்கள் நம்பினால் நான் பொறுப்பல்ல .. புராணங்கள் வெகு காலம் பின்ன எழுந்தவை. வேதங்கள் பௌத்த மதங்களுக்கு முன்னர் எழுந்தவை … வேதங்களில் தான் இந்து மதம் பற்றியுள்ளது. வேதங்களில் மாமிசம் சாப்பிடுவதையோ, மாட்டிறைச்சி சாப்பிடுவதையோ தடுக்கவில்லை என்பதே உண்மை ..

            நீங்கள் சொன்ன அரக்கர்களின் கதை எல்லாம் வேதங்களில் கிடையாது – இவை எல்லாம் பிற்கால புருடாக்கள்.

        • selvan, in all your reference veda’s could have agreed to consume beef in either or other form. But its being mentioned for non-brahmins since they need physica fitness. Whoever is doing these religious activities(homam) should not consume non-veg. Can you show me from any of your reference that brahmins should eat non-veg.

          In General -> I read somewhere, all Govt. positions are occupied by brahmins and dalits are trying to reach. Padikumpode siripu varala? for past 15 years, after reservation, getting an govt. job for a brahmin is literally non-existant. Do you folks think that doing below is going to improve your status? or demolish the ‘so called’ non-existent parpanium – NNNEEEVER

          “கருவறைக்குள்ள நுழையவும், சிதம்ப்ரம் கோயிலில் தமிழில் பாடவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவும் “

          • @ ஸ்ரீநிவாஸ் – வேதங்களில் மாமிசம் சாப்பிட அனுமதி இருக்கா – ஆம் இருக்கு. வேதங்களில் மாட்டின் மாமிசம் சாப்பிட அனுமதி இருக்கா – ஆம் இருக்கு. வேதங்களில் வேள்வியில் விலங்குகளைப் போட சொல்லி இருக்கா – ஆம் இருக்கு. வேள்வியில் போட்ட படையலை எல்லாம் பிராமணர் உண்டு தான் ஆகவேண்டுமா – ஆம்.

            பிராமணர் மாட்டு மாமிசம் சாப்பிடத் தடை இருக்கா – இல்லவே இல்லை.

            இப்போது இந்தியாவில் நாம் கேட்பது பிராமணர்களை மாட்டு மாமிசம் சொல்லி அல்ல. பிராமணர்கள் மாட்டின் மாமிசத்தை ஒதுக்கிவிட்டார்கள். அதனால் சாப்பிடுபவர்களைத் தடுப்பது நியாயமா? பிராமணர்கள் சாப்பிடதாதால் யாருமே சாப்பிடக் கூடாது என சொல்வது நியாயமா?

            தாங்களே பதில் கூறுங்கள் சகோ. பிற பிரச்சனைகள் குறித்து பேசப் போவதில்லை. இந்த ஒரு விடயத்தில் ஏன் மாட்டு மாமிசம் சாப்பிட இந்து அமைப்புகள் தடையாக இருக்கின்றன.

            விரும்பினால் சாப்பிட்டுவிட்டுப் போகட்டுமே ! என்பது தான் உண்மையாக இருக்கக் கூடும் அல்லவா?

            • I never support this agitation by this group. when others prefer விரும்பினால் சாப்பிட்டுவிட்டுப் போகட்டுமே – i agree. My concern still is whether really its being given that brahmins has to EAT the MEAT mandatorily. can u give me exact sentence(slogam) where its given – if possible copy,paste that content. I know sanscrit.

              • Srinivas,

                Are you sure that you never came across anything about eating cow meat by brahmin in Vedhas as suggested by Iqpal? I thing you are an Iyengar or Iyer(?) who would have been taught Vedha and you also claim you knew Sanskri. I studied sanskrit only little. I checked Iqpal statement of Rig Vedha, Mandala -10, Sukta 149. It does not say anything about meat.

        • Iqpal,

          Can you give the weblink if any for the 149th Sukta of Rig vedha?

          I got this on the web as the 149 th of 10th Mandala of Rig Vedha.
          http://en.wikisource.org/wiki/The_Rig_Veda/Mandala_10/Hymn_149

          Mandala->book and Hymn->Sukta or song.

          The translation goes like this:
          The Rig Veda/Mandala 10/Hymn 149
          < The Rig Veda | Mandala 10
          The Rig Veda
          Mandala 10, Hymn 149
          Translated by Ralph T.H. Griffith
          1. SAVITAR fixed the earth with bands to bind it, and made heaven stedfast where no prop supported.
          Savitar milked, as 'twere a restless courser, air, sea bound fast to what no foot had trodden.
          2. Well knoweth Savitar, O Child of Waters, where ocean, firmly fixt, o'erflowed its limit.
          Thence sprang the world, from that uprose the region: thence heaven spread out and the wide earth expanded.
          3. Then, with a full crowd of Immortal Beings, this other realm came later, high and holy.
          First, verily, Savitar's strong-pinioned Eagle was born: and he obeys his law for ever.
          4. As warriors to their steeds, kine to their village, as fond milk giving cows approach their youngling,
          As man to wife, let Savitar come downward to us, heaven's bearer, Lord of every blessing.
          5. Like the Angirasa Hiranvastupa, I call thee, Savitar, to this achievement:
          So worshipping and lauding thee for favour I watch for thee as for the stalk of Soma.

          I don't pay a shit to Vedha as for me they are very old, iron age suktas passed on to many generations without anything being written down any time until Gupta period (4th to 6th century AD). It si vailable in two different style "Padapatha" & "Samhitapatha".

          But I don't see anything about eating cow meat. Am I missing the version you saw?
          Note: I don't pay a shit to this barbarian works of iron age. Any one reads this Sukta would understand there is nothing great said in this for use by human. I did not read anything beyond this though, as I have no time for this.

          • 2 Like-coloured, various-hued, or single-coloured, whose names through sacrifice are known to Agni,
            Whom the Aṅgirases produced by Fervour,—vouchsafe to these, Parjanya, great protection.
            3 Those who have offered to the Gods their bodies, whose varied forms are all well known to Soma,—
            Those grant us in our cattle-pen, O Indra, with their full streams of milk and plenteous offspring.

            மாடுகளை அக்னிக்கு இரையாக்குவது குறித்தும், இதற்கு அடுத்தடுத்து வரும் பாடல்கள் முழுதும் மாடுகளால் என்ன நன்மைகள் எனவும், அவற்றை உணவாகப் புசிக்கவும் பற்றி கூறுகின்றன..

            நேர்ந்துவிட்ட மாடு அல்லது புனிதப் பசுவைத் தான் கொல்ல வேதம் தடை சொல்கின்றது. இந்துத்வாவாதிகள் இப்படியான SACRED COW-களை அனைத்து மாட்டுக்கும் பொருத்தி பரப்புரை செய்வது உச்சக்கட்ட காமெடி சகோதரி.

      • தம்பி க்ரிஷ்னா, தத்தாட்சாரியாவோட ப்லாகை படிச்சுட்டு வந்து பேசு! உலராத ..

        • It is very unfortunate on the part of AgniHotram Thaathaachriyaar to go away from tracks not only in this issue (which I am hearing from you now) but also previously on the Rama Sethu protest where he took the other side.

          From the feedback I am hearing from multiple sources, Agnihothram Thaathaachaariyar only causes huge embarassment to we brahmins who want to promote only bhakthi and love.

          I am asking openly — why dont you chant rama nama? why dont you chant shiva shivaa? What fault you find in Thiruvasagam?

          Tired man literally, if you want to kill all brahmins go ahead, but dont neglect bhakthi and devotion.

          Be kindful to all living beings. That alone is the dharma of this Kali yuga.

  19. Vinavu,

    Cows are very holy. One should respect and love them. One should also not use leather and other articles also. I am in Bangalore and every fortnight will go to Arunachala hills.

    Near chengam road, I will hate myself to see the ghory sight of poor cows and sometimes even calves getting slaughtered. My taxi driver requested to refresh with a tea in that area. I told him no and also shared my grief with him.

    Arunahcala hills are very potent — this sin done near arunachala hills will destroy all your glories.

    Mahaa paavam — those who kill cows will be lepers in the future births.

    I humbly beg all of you to stop this cow slaughter in general and goat slaughter in particular.

    I have a thick friend here in office who was from scheduled caste. When I explained him and quoted scriptures, he totally abandoned eating beef. He told in his village near Thirunelveli there will be no mercy towards animals and goats will be killed cutting the throat half and taking the blood out.

    He showed some ghory videos of village deities sucking goat blood some madan samy etc. — I understood how bad and worse the situation is in villages of TN.

    I plan to visit his village and meet those butchers to understand their psychology and why they must be so cruel and enjoy killing animals.

    Everybody here — please dont mistake me, if you want to hurt brahmins please go ahead but please spare thsoe innocent cows and goats. Please, I beg all, no hard feelings please—

    be happy and let be others happy.

    • மாட்டுக்கறி சாப்பிட்டால் எச். ஐ.வி வியாதி மற்றும் புற்றுநோய் வருமா .

      • மனநலம் பாதிப்பு அடையவும் புற்று நோய், எயிட்ஸ் நிச்சயமாய் வரும் என்று ரிக் வேதத்தில் சொல்லியிருக்கிறது. அத்துடன் பிராமணர்களுக்கு ஆய் கழுவி விட்டால் அடுத்த பிறவியில் பிராமணர் வீட்டு பசுமாடாக மேன்மையான பிறப்பு அடைவார்கள் என்றும் கூறியிருக்கிறது. இதை நீ நம்பாவிட்டால் ரத்தம் கக்கி சாவாய் என்றும் அதர்வ வேதத்தில் சொல்லியிருக்கிறது.

      • பேப்பர் ரோஸ்ட் சாப்டா லிவருக்கு ரொம்ப நல்லதுப்பா !!!

    • Dear Mr.Krishna,
      Accidentally I came to read your comment . I appreciate your affection to the cows.
      Digging deep in to this subject one can find that there is huge differences of opinion among the readers. My father is a strict vegetarian and he even resisted doctors advice to drink mutton leg soup as medicine while his leg was fractured .
      My mother is a non veg and my father buys the mutton or fish or chicken whenever she asked for. (nowadays i help her by buying and washing it and giving her) we no need to force anybody to eat beef at the same time we should say in the tone of authority that one should not eat the beef. IT IS A MATTER OF CULTURE TRADITION AND MUCH MORE ! My father never compelled my mother to quit.my mother never compelled my father to eat! so this suits to the society also . generations and generations of narikuravars eat cat,crow,rabbit,jackal,beef etc. its there culture. there can always be a debate and the judge is the people .let them eat what they want. we can try to influence them but not force them. India is not a mono culture. you can’t say this to a person living deep inside the forest. he will not accept our views regarding eat or not to eat the beef. he is having bigger problems than this. my concern is how cruel for the money these creatures are being treated in the farms . this should improve. how cruel our car tyres run over the dead dogs skin in the highways. it is paining that these animals getting killed everyday like insects . in my understanding vinavu writes sometimes extremely because why this groups target only the beef eating people? is the issue. see , it is easy to find fault with not so popular habits and cultures . the same sound and fury cannot be put in to the area called mutton or chicken. because it has become popular. if somebody says eating mutton and chicken is a sin in public meeting then he may land in trouble. i accept and say loudly that yes it is cruel to kill an animal that too the huge cow ! it is horrible sight and soft people may cry to the last sound of that giant animals scream.it is not happened overnight . they are not slaughtering the cows and goats from 18th or 19th century. it has happening from a few thousand years a ago. every animal has its right to live until it wants . from caging them in zoos to hunting them in the forest all amounts to cruelty . The point is there should not be any hidden agendas in a slogan . If killing cow is cruel then killing sheep ,hen,all is cruel. So total vegetarianism proposal sounds good than saying only to avoid beef.
      I went to a working class neighborhood area were they are taking 2 cups rice and one big scoop of beef curry along with 3 or 4 beef pieces with a cost of Rs 25.0/plate. I asked them is this sufficient and they said it is giving them the energy to clean the glasses of 8th floor in the scorching sun and do the fabrication work and melt the steel at the temperature of 53 degrees Celsius near the foundry furnace. If there is an alternate of Soya and other protien rich foods we can try to educate them and it is not going to happen overnight. so let us be alert behind any slogans and counter slogans.

    • பசுக்கள் இந்துக்களின் கடவுளா? எப்போ இருந்து? நான் அடித்துச் சொல்வேன். ‘புத்தர்’ என்கிற ஒரு நபர் பிராமணர்களை ராடு ஏத்தா விட்டிருந்தால் அவர்கள் தான் இன்று மாட்டிறைச்சியை உண்பவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்திருப்பார்கள்.

  20. பாரத தேச பக்தி இயக்கத்தின் சார்பாக அனைத்து ரேஷன் கடைகளிலும் மாட்டிறைச்சியை மலிவு விலையில் தர அகில் பாரத் ஆவின் மாம்ஷம் சங்க் சார்பாக கோருகிறேன் .

  21. மிக சிறந்த ஒரு கட்டுரையை வெளியிட்ட அன்பான வினவு தளத்திற்கு மீண்டும் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வளவு இரக்க தன்மையை பற்றியும் ஜீவகாருண்யத்தை பற்றியும் பேசும் ஜைன துறவிகளுக்கு ஒன்று சொல்லி கொள்ள ஆசை படுகிறேன். இரக்கம், காருண்யம், நேர்மை ஆகியவற்றை போய் முதலில் உங்கள் மதத்தை பின்பற்றும் மார்வாடி பசங்களுக்கு போய் சொல்லுங்கள். அவர்கள் அசைவ உணவுகள் தான் சாப்பிடவில்லையே ஒழிய அவர்களிடம் தான் அன்பு, இரக்கம் கருணை ஆகிய அணைத்து குணங்களுக்கும் பஞ்சம். ஊரில் அநியாய வட்டிக்கு பணம் குடுப்பது. மக்கள் தங்கள் வறுமையின் காரணமாக அடகு வைத்த நகையை சுரண்டி சுரண்டி அதில் கொஞ்சம் தங்கத்தை திருடி எடுத்து கொள்வது. செய்யும் தொழிலில் நேர்மை இல்லாமல் மக்களை ஏமாற்றுவது. சீனாவில் இருந்து தரமற்ற சாக்லேட், பொம்மைகள் ( which has poisonous toxic agents) போலி மோட்டார் உதிரி பாகங்கள், மின்னணு உதிரி பாகங்கள், செல்போன்கள் ஆகியவற்றை சீனாவில் இருந்து மொத்த மொத்தமாக குறைந்த விலைக்கு இறக்குமதி செய்து அதிக விலைக்கு இங்கு இருக்கும் மக்களின் தலையில் கட்டி ஏமாற்றுவது போன்ற அநியாய அக்கிரம காரியங்களை செய்யும் உங்கள் ஜைன மதத்தை சேர்ந்த அய்யோகியர்களுக்கு முதலில் புத்தி புகட்டி விட்டு வாருங்கள் பிறகு இங்கு வந்து கொல்லாமை,புலால் உண்ணாமை போன்ற உபதேசங்களை பிறருக்கு அப்புறம் வந்து சொல்லலாம்.

    யாரையோ இங்க மறந்திட்டனே யாரு அது…. ஹா இப்ப ஞாபகம் வந்திருச்சு..

    திரு. டர்ர்… புர்ர்…. அவர்களே அதாங்க நம்ம ராமகோபாலன் ..ஐயா ராமகோபலரே.. மிருகங்களை வேட்டையாடி தின்ன கூடாது என்று உபதேசம் செய்யும் நீங்கள் முதலில் இந்த உபதேசத்தை சிறுபான்மையினரை நர வேட்டையாடி தின்ன நரேந்திர மோடியிடம் போய் இந்த அறிவுரையை சொல்லுங்கள். “உயிர்களை கொல்வது பாவம் அது தப்பு என்று.கேவலம் மதத்திற்காக மனித உயிர்களை வேட்டை ஆட கூடாது என்று”. மேலும், கந்தமாலில் பாவம் அப்பாவி கிருத்துவர்களை வேட்டையாடி தின்ன இந்துத்துவ வெறிநாய்கள் இருக்கும் இடத்திற்கு போய் இந்த ஜீவகாருண்ய கடையை முதலில் திறந்து வையுங்கள். மனிதனை வேட்டையாடி தின்பதை விட ஏழைகள் உழைக்கும் வர்கத்தினர் தங்கள் பொருளாதாரதிற்கு ஏற்ப அவர்களால் முடிந்த மாட்டு கறியை வாங்கி உண்பதில் எந்த ஒரு தவறோ பாவமோ வந்துவிடாது. பொத்தாம் பொதுவாக மாட்டு இறைச்சியை உண்ண கூடாது என்று சொல்லும் இந்து மத அமைப்புகள் திருத்த வேண்டிய ஒரு முக்கியமான நபர்கள் யாரு தெரியுமா. நேரா காசிக்கு போங்கள் அங்கு அகோரிகள் என்னும் முற்றும் துறந்த சாமியார்கள் இருகிறார்களாம். அவர்களின் முழுநேர உணவே எரியும் நெருப்பில் இருக்கும் பொணம் தானாம் . அதான் மனுஷன் கறியாம். ஒரு சாமியார் நல்ல ஆசையா ரசிச்சு ருசிச்சு ஒரு எரியிற பொனதுல இருந்து அழகா எடுத்து சாபிட்ராறு. அட நம்ம சன் t .v ல கூட போட்டு காமிசாங்கபா. t.v ல பார்பவர்கள் நம்ம இந்து மதத்த காரி துப்ப மாட்டாங்க. பொணம் தின்னி மதம்னு சொல்லமாட்டங்க . முதல ஒரு பெரிய ஆர்ப்பாட்டத போய் காசில நடத்துங்க மனுஷ கறியெல்லாம் சாப்பிட கூடாது அப்புறம் நமக்கும் அந்தமான் காடுகளில் வசிக்கும் மனித கறி தின்னும் பழங்குடி மக்களுக்கும் என்ன வித்யாசம் என்று கேளுங்கள். அப்புறம் இங்க வந்து மத்தத பேசிக்கலாம் என்ன சரியா.

    • போங்க பாஸு…காமெடி பண்ணிக்கிட்டு… ராமகோபாலன் மாட்டை வெட்டகூடாதுன்னு தானே சொன்னாரு… மனுஷனை வெட்டகூடாதுன்னு சொல்லலியே…?

  22. ஆடு, மாடு சாப்பிடுறது இருக்கட்டும் வினவு… வீட்டுல ஒருத்தர் செத்துட்டா ஏன் சாப்பிடாம பொதைக்கிறீங்க ???? அது இன்னும் நிறைய நல்லது

    • //ஆடு, மாடு சாப்பிடுறது இருக்கட்டும் வினவு… வீட்டுல ஒருத்தர் செத்துட்டா ஏன் சாப்பிடாம பொதைக்கிறீங்க ???? அது இன்னும் நிறைய நல்லது//

      இந்த நாடே விவசாயி பொணத்தை தின்னுதான் உயிர் வாழுது இதுல என்ன தன்னோட வீட்டுல செத்தவன் பொணத்த திங்கறது?

    • நடு ராத்திரியில் நல்லா குறட்டை விட்டு தூங்கும் போது, மூட்டை பூச்சியோ, கொசுவோ கடிச்சா நம்ம அன்பு அண்ணே அத்தனை தூக்கத்திலையும் அதை வலிக்காம பிடிச்சிட்டு போய் ஆள் அரவமே இல்லாத இடத்தில பத்திரமா விட்டுட்டு, அதோட வழிச்செலவுக்கு காசும் கொடுத்திட்டு வருவாரு போல…!!!!

    • அட அட அட…என்னா லாஜிக்ப்பா இது!! அம்பி..நீயும் கறி துண்ணாம காராம்பசுப் பால் குடிச்சிருப்பே இல்லே..அது தப்புல்லாம் இல்லன்னு சொல்ல வர்ரேன்னு வச்சுக்கோ..உன்னோட லாஜிக்படி…’பசுவின் பாலைக்கறக்கரதும் அதை விக்கிறதும் இருக்கட்டும் வினவு..வீட்டுல…” ” அது இன்னும் நிறைய நல்லது’ இல்லையா அம்பி…!!! லூசு மாதிரியே பேசுறதுன்னு முடிவு பண்ணினீங்களே..அது எப்போ இருந்துன்னு சொல்ல முடியுமா?

  23. பாப்பானுங்களுக்கு எடத்துக்கு ஒரு நியாயம்.
    கொல்காத்தால ஏன் மீன் சாப்பிடாருனுங்கன்னு கேளுங்க பாஸ்?

    • கொல்கத்தா மட்டுமில்ல கோவா, மங்களூர்ல இருக்கற பார்ப்பஸும் மீன வெளுத்துக் கட்டுவாங்க.

      • மீனை தின்றதை மட்டும் பார்த்தால் எப்படீன்னா? அதை தின்ன தோஷம் போக கையை கழுவும் போது தலையில் நாலு சொட்டு ஜாலம் விடுறோமே அதை பாக்கலியா?

  24. வினவுக்கு ஒரு வேண்டுகோள்.மாடுகள் குறித்து முன்னர் புதிய கலாசாரம் இதழில் வெளியான ”பார்ப்பன புனிதமா பயன்படும் செல்வமா”கட்டுரையை வலையேற்றம் செய்யலாம்.இன்னும் கூடுதலான தரவுகளுடன் மாட்டிறைச்சி உண்பதன் அவசியத்தையும் மாடுகளின் பொருளாதார பயன்பாடு குறித்தும் மிக விரிவாக எடுத்து சொல்லும் கட்டுரை அது. பசுவதை குறித்த விவாதங்களில் பார்ப்பனிய புரட்டலுக்கு எதிராக பயன்படக்கூடிய அருமையான ஆயுதம் அந்த கட்டுரை.வினவில் வெளிவரவேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

  25. வெஜிட்டேரியன் உணவை இன்னமும் சைவ உணவு என்று ஏன் அழைக்கப்படுகிறது என்று யாராவது தெரிந்தால் கூறுங்கலேன்.
    ராம்.

    • “சைவ” உணவுன்னு சொல்றதை வைணவனாகிய நான் கண்டிக்கிறேன்…நாங்க சாப்பிடுறது மட்டும் என்னவாம்? மரக்கறின்னு ஈழத்துல சொல்ற மாதிரி சொல்லிட்டுப் போகவேண்டியதுதானே!!

      எண்ணாயிரம் சமணர்களைக் குண்டிவழியாக் கம்பி சொருகிக் கொன்ற கூட்டத்தின் ‘சைவ’ அடையாளம் அப்பாவிக் கீரைக் குழம்புக்கெல்லாம் வைக்கிறது..ரொம்ப ஓவரா இல்ல!

      • சைவ உணவு என பரப்பட்ட சொல் தவறானது – ஆரம்பக் காலங்களில் – அதாவது வெள்ளையர் காலங்களில் சைவ பிள்ளைமார்கள், செட்டியார்களும் உணவகங்களை நடத்தினார்கள். அதே போல பிற சாதியரும் உணவகங்களை நடத்தினார்கள். பிற சாதிகளில் மாமிச உணவுப் பரிமாறப் பட்டது. சைவர்கள் மரக்கறி உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் என்பதை சொல்லாமல். இது ஒரு சைவக் கடை என எழுதி வைத்தார்கள். காலப் போக்கில் சைவம் என்றாலே வெஜிடேரியன் எனப் பொருள் பட்டது …. இதற்கு நேர்மாறான சொல்லாக அசைவம் என வந்தது.

        16 ம் நூற்றாண்டுக்கு முன் எழுந்த எந்த இலக்கியத்திலும் சைவ உணவு என்னும் சொல் காணப்பட்டதாக இல்லை.. இப்போது புரிந்தத்தா ????

        சைவர்கள் மட்டும் தான் மரக்கறி உண்கின்றார்களா? வைணவர், சமணர், பௌத்தர் ஏன் மேலைத் தேயங்களில் கிறித்தவப் பிரிவுகள் சிலக் கூட மாமிசம் உண்பதில்லை ….

  26. மாட்டுக் கறியை சாப்பிட வேண்டாம் என்று சொல்பவர்கள் வயதான மாடுகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை சரி கட்டத் தயாரா? பல குடும்பங்களிலும் பரவலாக வீட்டுக்கு ஒன்றிரண்டு மாடுகள் உள்ளது. இதனால் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அந்நியச் செலாவணியும் நமது நாட்டுக்கு கிடைக்கிறது. இந்திய அரிசியும், இந்திய ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியும் அரபு நாடுகளில் மிகப் பிரபல்யம். ஆட்டுக் கறியை விட மாட்டுக கறி விலை மலிவு. ஏழைகள் வாரம் ஒரு நாள் இரண்டு நாள் ருசியாக சாப்பிடுவதும் இவர்களுக்கு பொறுக்க வில்லையோ!

    நெய்யாகவும், பாலாகவும் சாப்பிடுவது அந்த கன்றுக்கு செய்யும் துரோகம் இல்லையா? அதை மட்டும் ஏன் அனுமதிக்க வேண்டும்?

    • ரெட்டா’ உள்ளே தள்ளுனா தான் பாவம்.
      ‘ஒயிட்டா’ உள்ள தள்ளுனா பாவம் இல்லை. புரிஞ்சதோல்லியோ?

    • இவனுக குடுக்கற நட்டம் என்னாத்துக்கு? கறவை இல்லாத மாடெல்லாம் தொழுவிலேயே கட்டிவச்சுக்கிறேன்..இல கணேசனோ, தமிழிசையோ தினமும் காலைல சாணியள்ளித் தொழுவ சுத்தம் பண்ண ரெடியா? ராமகோபால்ஜி கூளம் அள்ளிப்போட ரெடியா? அப்போ நானும் இனி ‘கோமாதா குலமாதாவா’ மாற ரெடி…எப்படி நம்ம டீலு!

  27. ஒரு முறை சுவாமி விவேகானந்தரிடம் இதே கேள்வி கேட்கப்பட்ட போது, “உன் மனைவி, மக்கள், மற்றும் சுற்றத்தார் ஆயிரம் ஆண்டுகள் அடிமையாக இருப்பதை விட, பத்து ஆடுகள் இறப்பது மேலானது”. என்று பதில் கூறினார். சைவ உணவு மட்டும் உண்டு வலிமை குன்றியிருக்காதே, உன் வீட்டையும், நாட்டையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற நீ பலம் பொருந்தியவனாக இருக்க, தேவைப்பட்டால் மாமிசம் கூட நீ சாப்பிடலாம். அதில் தவறேதும் இல்லை என்று தைரியமாக கூறியுள்ளார்.

    மாமிச உணவு உண்பதா இல்லையா என்பது அவரவர் தேவையை பொறுத்தது. சுமார் எட்டு மணி நேரம் a .c அறையில் உட்கார்ந்தபடியே வேலை செய்பவர்களுக்கு இது தேவையில்லாத உணவாக இருக்கலாம். ஏனெனில், பைல்ஸ் உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் இவர்களுக்கு அதிகம். அடிக்கடி மாமிச உணவு உண்பது இந்த நோய்க்கான சாத்தியக்கூறுகளை அதிகப்படுத்தும். அதே நேரம், சாலை வேலை செய்பவர்கள், கட்டிட தொழிலாளிகள் போன்ற கடும் உடலுழைப்பு செய்பவர்களின் சக்திக்கு இது மிகவும் தேவையான ஒன்று. அவர்களின் கடினமான் உழைப்பு கல்லையும் செரிக்கச் செய்து விடும்.
    ஓஷோ கூட, “பால், பழம்,காய் கறிகள், நெய் போன்ற சாத்தான் உணவு அனைவருக்கும் தேவையான அளவு கிடைக்கும் வரை மாமிசம் உண்ணும் பழக்கம் மக்களிடையே இருக்கும். அது வரை, இது ஒரு தவிர்க்கவியலாத தீமை” என்று கூறியுள்ளார். சைவ உணவுகள் எளிதில் செரிமானம் ஆவதும், மாமிச உணவுகள், உடலுழைப்பு இல்லாவிட்டால் மெதுவாக செரிமானம் ஆவதும் அனுபவ உண்மை. கடும் உடலுழைப்பு இல்லாதவர்கள் சத்தான சைவ உணவுகள் கிடைக்காததால், மாமிச உணவு உண்பதால், மெதுவான செரிமானம், அஜீரண கோளாறுகளை உண்டாக்கி, மலச்சிக்கலை உண்டாக்கும். மலச்சிக்கல்தான் பெரும்பாலான நோய்களுக்கு மூலகாரணம். இதை கருதியே அவர் அவ்வாறு சொல்லியிருக்க கூடும்.

    சென்னையின் புற நகர்ப் பகுதிகளில்( பல்லாவரம்), வீதிகளில் அவிழ்த்து விடப்படும் மாடுகளுக்கு எலி விஷம் வைத்து கொன்று விட்டு, பின்பு ஒன்றும் தெரியாததைப் போன்று, மாட்டின் சொந்தக்காரனிடமிருந்து இறந்த மாட்டை மலிவு விலைக்கு வாங்கி, பிரியாணி கடைக்காரர்களிடம் அதிக விலைக்கு விற்று பணம் பார்த்துக்கொண்டிருந்த கும்பல் ஒன்றை சில வருடங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர் என்று தினத் தந்தியில் செய்தி படித்தேன்.மாமிசம் உண்போர் கவனமுடன் இருங்கள்.

    தேவைக்காக விருப்பமுடன் உண்பவனை தடுப்பதும், உண்ண விருப்பமில்லாதவனை, இதை தின்றால்தான் நீ முற்போக்குவாதி என்று உசுப்பேத்துவதும்…என்ன சொல்ல?

    • சரிதான்! பார்ப்பனீயத்தை எதிர்த்து மனிதநேயர் ஆக விரும்புவோர் இதைக் கவனத்தில் கொண்டு சாப்பிட்டால் நல்லது. மாட்டிறைச்சி சாப்பிட்டால் முதற்கட்ட செரிமானம் ஆவதற்கு 4 மணிநேரம் வரை ஆகுமாம்! இரைப்பைக்கு அதிக வேலை! Obesity ஆகாமல் பார்த்துக்கொண்டால் உடம்புக்கு நல்லது!

    • விவேகாநந்தர் அதை ரொம்ப நக்கலாகவும் கேட்டாராம் “ஏன் பசுவின் கறியை சாப்பிடக் கூடாது?” என்று கேட்டார்..பசு நேசர்கள் “அது நம் தாய் இல்லையா?’ என்றார்கள்..
      “உங்கள் மேதைமையைப் பார்க்கும்போது பசுதான் உங்கள் தாயாக இருக்க முடியும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது’ ஏன்று சீரியசாக மூஞ்சியை வச்சிக்கிட்டு சொன்னார்

    • “உண்ண விருப்பமில்லாதவனை, இதை தின்றால்தான் நீ முற்போக்குவாதி என்று உசுப்பேத்துவதும்…என்ன சொல்ல?”

      மன்னிக்கவும். உண்ண விருப்பமிலாதவன் என்பது எப்படி தீர்மானமாகிறது. சரி எல்லோரும் சொல்லுராக நமக்கு ஏன் வம்பு என்றோ இல்லை எங்கே தின்றால் நம்மை இந்து மத விரோதி என்று சொல்லிவிடுவான் என்றோ, இல்லை என்னதான் முற்போக்கிசம் பேசினாலும் மனதின் உள்ளே சின்ன வயசிலிருந்து ஊட்டி வளர்த்த இந்துத்வ மாட்டுப் புனிதம் தானே உங்கள் உண்ண விருப்பமில்லாமையை தீர்மானிக்கிறது. ஆட்டுக்கறியும், கோழிக்கறியும் வயிறுமுட்ட திண்ணுவிட்டு மாட்டுக்கறி உண்ணவிருப்பமில்லை என்று சொல்லுவது போலியிலும் போலி. இவ்வாறு இருப்பவர்களின் மூட போலித்தண்மையை விட்டு வெளியே வரச்சொல்லுவதன் நோக்கமே இது தவிற உசுப்பேற்றுவதில்லை.

  28. //சென்னையில் எங்கு மாட்டுக்கறி கிடைக்கும், மாட்டுக்கறியை எப்படி சமைக்க வேண்டுமென்று அறிய விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்!//

    அண்ணா நகர் திருமங்கலம் தண்ணீர் தொட்டி அருகே மைக் டைசன் படம் போட்ட கடைகள் நிறைய இருக்கு.
    🙂

  29. adhu yenna yedharkku yeduthaalum indhu madhaveri indhu madhaveri yenru kooppaadu podureenga.yen muslim kalukku madhaveri illaya illai christainkalukku madha veri illaya avarkalai parri neengal onrum solavadhe illaye .naanum oru indhu dhaan adharkaaga marra madhathinarai ileevu padutha idhu varai yanniyadhillai aanal yen madhathai ialvu paduthuvadhai yenaal porukka mudiyaadhu .yedho silar neengal solvadhu pol irukalam aanaal annaivarum appadi irukka vendum yenpadhu illaye

  30. scientifically, human digestive system is designed to work on vegetarian food, so it is complex like any other vegetarian animal with twists in intestine and to make the digestion slow.

    Whereas, carnivores that feed on other animals have a simple digestive system that breaks flesh in a matter of minutes and excretes in the easiest possible way.

    having said that, research has concluded that red meat like beef,prok etc are not to be consumed often because they damage the system in the long run. protein like fish,anchovies,insects, eggs etc have the same kind of nutrients but they are not red meat. these could be eaten often and will not cause stress to our intestines.

    dont mislead people that beef can be consumed as a daily-food. protein is also present in veg food like grains and cereals. people those who consume ghee,nuts,butter,curd etc do not get protein but only fat.

    redmeat like beef pork are strictly not to be taken by children below 15years. this article is misinforming readers as far as the exaggeration is concerned.

    Talking about the holy aspect of preserving cows, it is a bullshit. early brahmins consumed beef,horse meat during occasions. just because present day brahmins do not do physical work, they cannot digest red meat thats why they oppose the slaughtering of cows. they hardly know that ice cream is made of animal protein, silver coating on ghee sweets is made using cow’s intestine.

    i welcome anyone who scientifically can disprove these facts, for an argument.

    • Sathish,

      I am writing this to scientifically support your writing. You are correct that human digestive system evolved to handle vegetarian food better than non vegetarian. If we have to eat non-veg, then evolutionarily farther they better. Avoiding mammals’ meat is important as we also belong to mammal and several proteins looks similar to ours. Hence getting autoimmune diseases is higher if we eat mammals. When it comes to mammals, monkey meat is the worst and among monkeys Cynomolgus (Crab eaters), Chimpanzee, Ape, Baboon are very close to us. Most of the viruses that infect these primates will also infect us. My daughter is doing research in developing vaccine for HIV and she works with Cynomolgus species as they are immunologically closest to humans. I also created a library of genes from Cynomolgus as we are going for some preclinical trial of some antibodies we developed for treating multiple myeloma, a deadly blood cancer.

      So avoid primate meats. Beef is better than primate meats. Not much difference between beef, sheep and goat meats. Once you decided to eat goat meat, you may eat beef as well. All mammal meats may give diseases like mad-cow disease which is caused by some proteins forms known as “prions” These prions were not detected from goat and sheep so far. But that does not mean we wont get mad-goat or mad-sheep diseases by eating goat and sheep meats. There is a huge difference between these animal meats and birds meats like chicken. Birds (non mammal) are farther away from us in evolution tree and hence we may be better of eating birds’ meat. Fish would be better and worms would be the best.

      Some wrote that if you like you eat whatever you like. That is not correct. The reason I am writing in “vinavu” from many thousands miles away and also among my heavy schedule of works to awaken the humans all over the world. Why do I care? Because we live in a closed system (physics-Thermodynamics). Earth does not allow anything (?) to escape from its gravitational influence. So any outbreak of an infection will spread to the rest of the world. One school of thought about HIV is that SIV virus or something similar from monkey infected African who ate/eat monkey brain raw. These viruses picked up other viral and non viral elements from human genome and evolved into HIV and subsequently spread to the entire world. So, always remember, “Your freedom ends where my nose begins” is only partly true. The real truth is nobody has any real freedom as we all live together on the earth. If I am infected with mycobacterium tuberculosis (MTB), and I cough, that releases tons of MTB into air. MTB lives on the air for more than 1 week. The air may carry these bacteria everywhere. Whoever breaths that bacteria will get infected. More than 90% (close to 100% may be) of Indians are infected with MTB I guess as there is not actual screening done by the country. I was told that every infant is getting infected by MTB within 3 months of their birth. In USA if any tests positive for TB diseases she/he will be strictly restricted from moving around and should always wear mouth protecting mask. Have you seen any of those in India? We still live like uncivilized people as for as science is concerned.

      One of the movements my husband is organizing is to educate our children about dangers of infections, modes of their spread and how to contain them within a family and within a school. Any one interested in joining such movements and participate in website development, pamphlet creation and distribution etc, please email me: priyax1990@yahoo.com

      • It is doomsayer’s forecast.

        We eat to live, not live to eat.

        Once I asked an old man, at what time do you have ur brakefast, lunch and dinner?

        And I gave my exact timings per dien on such gastronmical habits.

        His reply was:

        I am struggling to get food as I am too old to earn a living. How can I hve a fixed times like u? Whenever, wherever and whatever and whoever gives me food, there and then I have it.

        So, all talks about such niceities of this or that food taboo etc. can be listened to only by me as I can afford to choose my food and timings.

      • There is too much of alarming signs in the above comment which seems to be unreasonable I suppose. Though I am not a nutritionist I can tell one thing. Most of her assumptions here need to be verified. She has not taken into account of at least two basic facts about human beings. Firstly, we are omnivores. Anything we eat would be digested or excreted. Secondly, Most of such predictions of food eating keep changing from time to time and from person to person. It is The anxiety which she raised in the comment is the worst part that plays the role of various diseases in our system.

  31. உமது கட்டுரையை படித்தால் எனக்கும் ஜாதி வெறி மத வெறி தூண்டப்படுகிறது உமது எதிராக… என்னாலும் இது போல கட்டுரை எழுத முடியும் தோழரே!!! ( ஜாதி மத வெறியரே) !!! ஹிந்துக்களுக்குள் இருக்கும் ஒற்றுமை இன்மையை உம்மை போல் பத்திருக்கையாளர்கள் வேற்று மத ஆதரவுக்காக சரியாக பயன் படுத்தி கொள்கிறீர்கள் காங்கிரஸ் போல. நானும் பிற மதத்தினால் பாதிக்க பட்டவன். . பிற மதத்தின் ஓட்டைகளை உம்மால் தைரியமாக எழுத முடியுமா? நான் பிறந்த ஜாதி ஆள பிறந்தது. நான் பிறந்த மதம் வாழ பிறந்தது. உம்மை போல் யாரும் அளிக்க முடியாது..ஜெய் ஹிந்த்!!

    • உமது மேதைமையான சிந்தனை என்னைப் புல்லரிக்க வைக்கிறது..கடைசியா ‘ஜெய் ஜிந்த்’ன்னு ஒன்னு சொல்றீங்களே…அதுக்கு ‘இந்தியா வெல்லட்டும்’னுதான் அர்த்தம்..’இந்து மதம்’ சம்பந்தப்பட்டது இல்லன்னு தெரியுமா?

    • இந்த கட்டுரை ‘மாட்டுகறியின்’ அடிப்படியில் அமைந்த இந்து மத அயோக்கியத் தனத்தை பற்றியது. பிரதான விஷயம் ‘மாட்டு கறி’ தான். இது இப்படி இருக்க நீங்கள் //உமது கட்டுரையை படித்தால் எனக்கும் ஜாதி வெறி மத வெறி தூண்டப்படுகிறது // இப்படி எழுதியிருக்கிறீர்கள் சரவண முத்து. ‘மாட்டை’ பற்றி எழுதினால் உங்களுக்கு ஜாதி வெறி தூண்டப் படுகிறது என்கிறீர்கள். இதற்காக உங்கள் ஜாதி என்ன என்று கேட்டு உங்களை அசிங்கப் படுத்த மாட்டேன். எதுன்னாலும் புரிஞ்சிகிட்டு போராடுங்கப்பா….!!! (என்னோட பள்ளி சான்றிதழில் மதம் என்கிற இடத்தில் ‘இந்து’ என்று தான் எழுதியிருக்கு. அதற்காக இருக்குற அட்டூழியத்தை பார்த்துக்கிட்டு பொறுமையா இருக்கனுமா? இங்கயே ஆயிரம் அழுக்கு இருக்கிறப்போ, நான் ஏன் மற்ற மதத்தின் முதுகை பார்க்கணும்?)

  32. 40 வயசுக்கு மேலே வாயை பொத்திக்கிட்டு எந்த இறைச்சி உணவும் சாப்பிடாமல் இருந்தால் போதுமானது. போய்ச் சேரும் போது கொஞ்சம் நிம்மதியா உடல் உபாதையின்று போய்ச் சேரலாம். இப்டியிருக்க நீங்க என்னடான்னா மாட்டுக்கறி சாப்பிட வாங்கோ என்று கூவி கூவி அழைக்க என்ன அவஸ்யம்?

    • மாட்டுக்கறி சாப்பிடச் சொல்லி அழைப்பது ‘உழைக்கும்’ மக்களை மட்டும்தான்..கொலஸ்ட்ரால் பிரச்சினை இருக்கும் ‘மூளை’ உழைப்பாளர்களை அல்ல..

  33. இறைச்சி மாடுகளை வளர்க்கவும், விற்கவும் அனுமதி தருவதும் – கடைகளில் பரிமாறப்படும் மாடுகள் மட்டுமல்ல எந்த ஒரு விலங்குகளின் மாமிசத்தை அடிக்கடி பரிசோதனை செய்வதாலும் — சிலர் கூறும் நோய் வந்த மாட்டிறைச்சி. ஆட்டு இறைச்சி விற்கப்படுவதைத் தடுக்கலாம்.

    விரும்பியவர் மாமிசம் புசிக்கவும் … விரும்பாதவர் விடலாம் …

    பசு புனித விலங்கு அதனால் சாப்பிடக் கூடாது என இந்து மத வேதங்கள் தடுக்கவில்லை. புதிதாக கிள்ம்பிய இந்து மதவாதிகளின் பொய் பிரச்சாரம் என்பதும் உண்மை.

    புரிந்துக் கொண்டால் இங்கு பிரச்சனையே இல்லை .. புரியாமல் பேசுவோரே அதிகம்.

    by the by நான் மாட்டிறைச்சி உண்பதில்லை. ஆனால் உண்பவர்களை புனிதம் காட்டி தடுப்பதில்லை …. அவரவர் விருப்பம் .. இந்து மதம் மாட்டிறைச்சிக்கு விதிவிலக்கு தரவில்லை.. பண்டைய இந்துக்கள் இதனை உண்டார்கள் .. தற்சமயம் பிராமணர் உட்பட சில சாதிகள் மாமிசம் எதனையும் உண்பதை நிறுத்திவிட்டார்கள். ஒரு சிலர் வெளியில் உண்பவரும் உண்டு…

  34. பாவிகளை எதிர்க்ட்கு எழுதநினைக்கும் என்னை பரயன் பல்லனை எதிர்த்து எழுது அளவுக்கு தள்ளிவிடும்போலிருக்கிறது வினவின் தலைப்புகளின் மடத்தனம்.
    முதலில் அசைவம் – சைவத்தை அலசுவோம். இரண்டும் உயிர்வாழ்வன. உயிர்வாழ்வன உயிரற்றன எனப்பிரிப்பதே முடியாத செயல். இவற்றில் அசைவம் சைவம் வேறா? முதலில் சைவத்தைபோற்றி வள்ளுவன் பிதற்றியவைதாம் அவரை சைன மதம் என எண்ணவைத்தது. தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உன்பான் என புலால் மறுத்தல் என்ற அதிகாரத்தில் அவனின் மட்டுப்பட்ட அறிவு தெரியும். மனிதன் உண்ணும் உணவு பெரும்பாலும் உயிர்வாழ்வனவே. குடிக்கும்நீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் எண்ணற்ற உயிர்கள்நம் வயிர்நுரை ஈரல் உள்ளே போய் பெரும்பாலானவை மடிகின்றன. இப்படி பல உயிர்களைக் கொன்றுமட்டுமே மனிதனால் உயிர்வாழ முடியும். இது அவன் பரிமாண வளர்ச்சியின் தன்மை. யாராலும் மாற்ற முடியாது. குரங்கு, நாய், பூனைகளை மாடு தின்போர் பழிப்பதும், மாடு தின்போரை ஆடு தின்போர் பழிப்பதும், ஆடு தின்போரை அவரை-பருப்பு தின்போர் பழிப்பதும் அறியாமையின் பெருங்கொடுமை.

    சரி, இதில் பார்ப்பணியம் எங்கு வந்தது? அங்குதான் வினவின் அதிபுத்திசாலித்தனம் தெரிகிறது. வங்கத்து பாப்பான் மீன் தின்பான். தமிழகத்து சைவ பிள்ளைகள், வேளாளர்கள், முதலியார்கள் அசைவம் உண்ண மாட்டார்கள். சாதி அடிப்படை இன்றி தனி மனித முடிவுகளாய் அசைவம் உண்ணாதோர் உண்டு. (ஈழத்தமிழன் மரக்கறி என்று சைவத்தை சொல்கிறான்). சைனர்கள் பார்பணியர்கள் இல்லை. பின் இதில் பார்ப்பணியம் எங்கு வந்தது? வினவு மக்கள் கலை இலக்கியக் கழகமாகத் தெரியவில்லை. பரையன் பல்லன் பெருவாழ்வு கழகமாகவே தெரிகிறது. சாதி பேசத்தான் ஒவ்வொரு சாதிக்கும் பல கட்சிகள் தோன்றி இருக்கின்றனவே? இதில் மக இக வேறா? புமாஇமு தான் தளித்துகளின் மற்றொரு அங்கம் என்று கேள்விப்பட்டேன். வினவும் அதுதானா? பார்ப்பன-பரயனை ஒழித்து, விடுத்து, தவிர்த்து அரசியல் பொருளாதாரம் பேசி சமுதாய முன்னேற்றாம்நோக்கப் போகிறத வினவு? ஆமாம், பரயன் பல்லன் என்று சொன்னால் சட்டபடி குற்றம் என்றார்களே, பார்ப்பணர், முதலியார், செட்டியார் என்று சொன்னால் தண்டனை இல்லையோ? எனக்கு கடவுளும் இல்லை, இந்த கன்றாவிகளும் இல்லை. அதனால் இந்த கோணத்தில் அலசுவதும் இல்லை.

    போதும். இதற்குமேலும் இதில் எழுதிப் பயன் இல்லை.

    • Obscenly written.

      குரங்கு, நாய், பூனைகளை மாடு தின்போர் பழிப்பதும், மாடு தின்போரை ஆடு தின்போர் பழிப்பதும், ஆடு தின்போரை அவரை-பருப்பு தின்போர் பழிப்பதும் அறியாமையின் பெருங்கொடுமை.

      The dietary habits of an individual r not only decided by him/her but also by the religious community in which he/she was born. The individual cant dare to move away from the circle.

      So, a paarppnan by birth is supposed to have only vegan foods, no matter what he wills or ills. Therefore, we shdn’t mock at people who r concerned abt what they eat.

      In case someone prefers a mutton to beef, or poultry to pork, it is purely his/ her own inclination. Sometimes, due to family habits.

      The summum bonum of this Vinavu blogpost is that we ought not to interfere with the dietary habits of other people because our religion forbids the flesh they eat. We have no right to interfere.

      ஆமாம், பரயன் பல்லன் என்று சொன்னால் சட்டபடி குற்றம் என்றார்களே, பார்ப்பணர், முதலியார், செட்டியார் என்று சொன்னால் தண்டனை இல்லையோ? எனக்கு கடவுளும் இல்லை, இந்த கன்றாவிகளும் இல்லை. அதனால் இந்த கோணத்தில் அலசுவதும் இல்லை.

      We dont analyse things just because we dont have such belief. That is abdication of social responsibilty. We shd be socially concerned by active participation. We can see and analyse things, even from a perspective with which we have no connection personally.

      For e.g I may be a hindu. Still I can participate in an argument concerning Chritistian theology. I will even in Islamic theology but they dont like that.

      Now, to the qn: Why is it taboo to name the castes of dalits, and not so to name others. Thereby hangs a tragic tale of Hindu social philosophy, which is also aped by Christians, Tamil christians, in particular.

      The so-called dalits, who are scornfully named by you in your response, (Your complex astonished me as it does not go with your foreign background!) more than once in ur post, inherited or forced to inherit the stigma of being the outcast or social pariahs (used in English sense namely, they cant be socially acceptable to live among others). Even today, the clerk from the school office comes to a class at the beginnign of every academic year, and ask: Those who are dalits, stand up and be counted.

      Shame and humiliation – suffered. The kids stand speechlessly and the whole class take note of them henceforth. On the contrary, if the clerk makes the same call: Those who are brahmins, chettaiars and muthaliaars, stand up and get counted,
      No such shame and humiliation suffered.

      Dont argue with me that the shame and humiliation r not needed to be felt by dalits. They feel, because of the caste system and now, they get reservations which elicit jealousy and reprisals and physical attack.

      This topic is complex. Your writing shows you are impetuous.

      By moving away from the rigid stand of being an upper caste, u can understand others. Possible from away a 1000 miles hopefully !

    • நல்ல கைப்பக்குவம் இருந்தால் பன்றிக்கறி நல்லா டேஸ்டா இருக்கும். இருமுறை சாப்பிட்டிருக்கிறேன் 🙂 அது பற்றிய விழிப்புணர்வு கட்டுரைகள் வந்தால் நல்லது. ஏனெனில் அதுவும் விலைகுறைவுதான் :-))

  35. பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் மதிய உணவில் மாட்டுக்கறியைப் போட வேண்டும்.மாட்டுக் கறியை இந்தியாவின் தேசிய உணவாக அறிவிக்க தொடர் போராட்டங்கள நடத்த வேண்டும். சக மனிதர் மீது அக்கறையற்றவர்கள் மிருகஙக்ளின்மீது அக்கறை காட்டுகிறார்களாம்!

    • ஹி..ஹி… இது நல்லாருக்கே!!
      மூளை உழைப்பாளிகள் தவிர்த்த மற்றையோருக்குத்தான் மாட்டுக்கறி சரிப்பட்டு வரும் என்று kaana கூறியிருந்தாரே! பள்ளி மாணவர்களுக்குப் போட்டா என்ன ஆகும்!!!

  36. all i am telling here is. if you do a lot of physical work, then go for beef and pork. If not, shut – and have simple food like vegetables, lentils. At the end, ghee, curd, butter, nuts are not superior foods and pork,beef are not inferior foods. some are consumed by rich and not affordable by poor thats it.

  37. பள்ளி மாணவர்களுக்கு கட்டாயம் தரணும்..உழைப்பாளின்னு ஒரு சவுகரியத்துக்காக வச்சிக்கிட்டது 18 வயசுக்கு மேல..ஆனா பள்ளிக்கூட பய்யன்களுக்கு மூளை மட்டுமல்ல உடலும் வலுவாக வேண்டிய வயசு..அதுக்கு மாட்டுக்கறி அவசியம்..

    மாட்டுக்கறிக்கும் மூளை வளர்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கா இல்லியான்னு தெரியல…
    பருப்பும் நெய்யும் மட்டுமே தின்ன மூளை கண்டுபிடிச்ச சாதனங்களை விட மின்சாரம் முதல் செயற்கைக்கோள் வரை சாதனங்களாக உருவாக்கிய பல மேலை நாட்டாரும் மாட்டு மாமிசம் சாப்பிட்டு வளர்ந்தவர்கள்தான்..

    • You told you are a “vaishnavan”

      Seeing your language , style of writing and your support to cow slaughter you dot not seem to be.

      You guies are having great ahankara to support violence towards cows.

      By doing harm to other living beings you verily do harm only to yourselves.

      siva sivaa

      • வைஷ்ணவன் – னா புரட்டாசி மட்டும் கறி திங்காத வைஷ்ணவன்…ஆட்டுக்கறியை வெட்டாமல் எப்படி எடுக்கமுடியும்? வைஷ்ணவன் — னா வடகலை தென்கலையோட முடியுற சமாச்சாரம் இல்லையே..

        எனக்கு ஒரு சந்தேகம்.. தில்லியிலெ பல ஆண்டுகள் இருந்திருக்கேன்..அங்கே பசுக்கறிக்கு பதில் எருமைக்கறிதான் கிடைத்தது..

        பசுநேசர்கள் ஏன் அங்கெல்லாம் எருமையைக் காப்பாத்தப் போராடுவதில்லை?
        இன்னும் சொல்லப்போனா பசுவை விட எருமைதான் நிறையக் கறக்கிறது..
        வட இந்தியாவில் வண்டி இழுப்பதும் உழவு போடுவதும் எருமைகள்தான்..

      • Krishna

        Dont talk to that fellow. A person who supports cow slaughter cant be a Vaishnavan. He is a cheat here.

        The above s written w/o prejudice to my stand that we shd not interfere with the dietary habits of other people belonging to other religions, or those Hindus who dont want to follow their religion strictly.

  38. சரி பண்ணி கறிக்கு எதிரா முச்லீமுங்க எதுக்கு கொலைக்கிறாங்க சொல்லு?அதையும் சொல்லு

    • மாட்டுகரியினால் புவி வெப்பமயமாதல் ஏற்படுத்து.அமெரிக்காவின் வழியை ஆதரிக்கிறது வினவு இதுக்கு நீ என்ன சொல்ற?முஸ்லீமுக்கு சோம்பு தூகளைன்னா ஒங்களுக்கு தூக்கம் வராதே.சவுதியில் பெண்கள் சார் ஓட்டகூடாதுன்குறான் ஆனா அதை பத்தி வினவு பேசாது ஏன்னா நாத்திகம் கம்யூனிசம் எல்லாம் இந்தியாவை பொறுத்தவரை ஹிந்துக்களை எதிர்ப்பது.கட்டுரையில் நூத்துக்கு தொண்ணூறு தபா பார்ப்பனன் பார்பனீயம் ஹிந்டுத்துவான்னு எழுதணும்.நாசமா போச்சு போ

      • உலக வெப்பமயமாக்குதலுக்கு பெட்ரோல் எரிப்புதான்…அமெரிக்கக் காரனின் அகோர பெட்ரோல் பசி உலக எரிப்பில் 25 சதமானத்துக்கும் மேலே…அதுவும் ஏசி மெசின்கள் உமிழக்கூடிய ஹோலோஜன் சேர்மங்களும் முதலாளித்துவ அகோரப்பசியினால் தொழிற்சாலைகள் அராஜக உற்பத்தியின் காரணமாகத்தானே ஓய் வெம்பிக்கிட்டுருக்கு..

        உன் வாதப்படியே பாத்தாக் கூட உசிரோட வச்சிருக்கிற பயனற்ற மாடுகள் கழிஞ்சு தள்ற சாணியில் இருந்து வரும் மீத்தேன் + உழைக்காமல் உக்காந்துக்கிட்டு லோகத்தோட ஷேமத்துக்காக பருப்பும் நெய்யும் தின்னுட்டு வாய்வு பிரிச்சிக்கிட்டு இருக்கிற அவாளின் மீத்தேன்..எல்லாம் தானே வெப்பமயமாக்கலுக்கு காரணம்?

  39. நவீன இறைச்சி கூடங்கள் திறப்பை எதிர்த்த செய்தி பார்த்ததும்… பசுவை பாதுகாத்து, அதற்கு பின்னால், தங்கள் பார்ப்பனியத்தையும், தன் மூலம் தன் ஆதிக்கத்தைப் பாதுகாத்து கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இந்து முன்னணி மக்களின் அடிப்படை பிரச்சனை எவ்வளவோ இருக்க, கோவில்களில் பூஜை நடக்கவில்லை, கோவில் மணிக்கயிறு இத்துப்போய்விட்டது, அதை உடனடியாக மாற்ற வேண்டும் என்று தான் போராடுகிறார்கள்.

  40. பீப் பிரியாணிக்கு நீ ஆதரவளிப்பதன் மூலம் அமெரிக்காவின் பகாசுர உணவு முறையை நீ அதாரிக்கிறாய்.இந்த மாட்டுகரிக்காக பல இயற்கை வழங்கள அழிந்து உலக வெப்பமயமாதல் ஏற்படும்னு விஞான ரீதியா நிரூபிக்கப்பட்டுள்ளது.நீ என்னடானா மாட்டு கரி துன்ன சொல்றியா?அமெரிக்காவின் வழியா?சூப்பர்

    • அமெரிக்காவின் வழியா? அருந்ததியர் வழியா?
      பீப் தின்னாம இருக்கானே என் புள்ளை..அவன் நல்லா நள்ளி எலும்பை உறியணும்..அதுக்கு நீதான் ஏதாச்சும் செய்யணும் இந்திரா…அப்படின்னு ரிக்-ல வேதமாச் சொன்னது என்ன ஜார்ஜ் வாஷிங்டனா ஓய்?

  41. பாகிஸ்தானில் மத துவேச சட்டத்தை எதிர்த்த ஆளுனர் மத வெறியனுன்களால் கொல்லப்பட்டார் அதை பத்தி எழுதுவீங்களா?எப்போ பாத்தாலும் காவி ஆர் எஸ் எஸ் பார்ப்பனீயம் இத வுட்டா ஒன்னுமே தெரியாதா?anand

  42. ஆமா எந்த மருத்துவமனைல பாத்தாலும் முச்லீமுகதான் நோயாளிகளா அதிகம் இருக்காங்க.அதுக்கு காரணம் பீப் அது இதுன்னு துன்னுட்டு கொலஸ்ட்ரால் ப்ரெஷர் சுகர் என அவத்திப்படுவது அவர்களின் உணவு முறையால்தான்.உழைக்கும் மக்கள் துன்னலாம் என இங்கு ஒரு புத்திலாசி சொல்லியிருக்கார்.பேசாம அவுரும் வினவும் எல்லா உழைக்கும் மக்களுக்கும் மாட்டிறைச்சி வாங்கி குடுங்க.இங்க வந்து கூப்பாடு போட்டா பிரச்சனையை தீர்ந்துடுமா?

  43. சுவாரசியமான கட்டுரையும் அதன்மீதான விவாதங்களும் நன்றாகவே உள்ளன.

    காந்தி பசும்பால்கூட குடிக்கமாட்டார். ஒரு முறை கடின உடல் உபாதையால் அவதிப்பட்டபோது பசும்பால் குடித்தால்தான் பிழைக்க முடியும் என்று மருத்துவர் கூறிவிட்டார். உயிரே போனாலும் பால் அருந்த மறுக்கிறார் காந்தி. ஆட்டுப்பாலாவது குடிக்க வேண்டும் என மருத்துவர் கேட்டுக் கொள்ள அதற்கு ஒப்புக் கொண்டதால் காந்தி உயிர் பிழைக்கிறார்.

    ஆட்டுக் குட்டிக்கு மட்டும் துரோகம் செய்யலாமா எனக் கேள்வி கேட்டு காந்தியின் சமரசத்தைக் அவரது துணைவியாரே அம்பலப்படுத்தியுள்ளார். முரண்கள் நிறைந்த காந்தியின் சுயசரிதையை படிப்பதே ஒரு சுவாரசியமான அனுபவம்தான்.

    காந்தி ஏன் பசும்பால் குடிப்பதில்லை என்பது காந்தியம் பேசும் அபிமானிகள் தெரிந்து கொள்ளட்டும். ஒரு தாயிடம் சுரக்கும் பால் அத்தாயின் குழந்தைக்கு மட்டுமே. அது போல ஒரு பசுவிடம் சுரக்கும் பால் அத்தப் பசுவின் கன்றுக்கு மட்டும்தானே சொந்தம். எனவே பசுவின் பாலைக் குடிப்பது கன்றுக்கு செய்யும் துரோகமாகும். பால் குடிப்பதன் மூலம் கன்றுக்கு துரோகம் செய்து மிருவதைக்கு துணை போகக்கூடாது.

    இதுவே காந்தி போதித்த மிருக வதைக்கு எதிரான கோட்பாடு. எனவே பசு வதைக்கு எதிராகப் போராடுவோர் பால் கரப்பதை தடை செய்யக் கோரி முதலில் போராட்டம் நடத்தட்டும். அதற்கு முன்பு அவர்கள் பால் குடிப்பதை நிறுத்தட்டும்.

    பசுவுக்கு மட்டும் பாதுகாப்புக் கோருவோர் காளைகளை மட்டும் ஏன் விட்டுவிடுகிறார்கள். காளைகள் மட்டும் என்ன பாவம் செய்தன? அவைகள் மட்டும் ஏன் ஏர் உழ வேண்டும்? ஏன் வண்டி இழுக்க வேண்டும்?

    தர்க்கம் ஒன்றுதான். பால் போனால் பார்ப்பான் (பார்ப்பனியத்தின் பாதுகாவலர்கள்) போவான். பால் இன்றி பார்ப்பனர்களால் வாழ முடியுமா? பார்ப்பான் போனால் நால் வர்ண தர்மம் போகும். நால் வர்ண தர்மம் போனால் இந்து மதம் போகும். எனவே இந்து மதத்தைப் அதாவது பார்ப்பனியத்தைப் பாதுகாக்கவே பசு வதையை எதிர்க்கிறார்கள்.

    இதில் நாம் யாருக்காக வாதாடப் போகிறோம்? யாருக்காகப் போராடப் போகிறோம்?

  44. அசைவ உணவு 1சதவிகிதம் தான் இருக்கிறார்கள். அது சரி சில கோயில் விழாக்களில் சாமிகளுக்கு நேர்த்திக்கடனாக பூசாரி உயிருடன் ஒரு ஆட்டை கையில் பிடித்து தன் பல்லாலேயே அதன் கழுத்தை கடித்து இரத்தத்தை உரிஞ்சி குடிக்கிறானே . இது என்ன? இது தான் வதை .
    இராம கோபாலன் வகையராக்கள் இது போன்றவற்றை கண்டிக்கமாட்டார்களா.
    மாட்டையும் ஆட்டையும் கோயில்களில் நிறுத்தி வைத்து ஒரே வெட்டாக வெட்டி புதைக்கிறார்களே இது தான் வதை . .

  45. Ground Beef 15% fat, broiled

    Nutritional value per 100 g (3.5 oz)
    Energy 1,047 kJ (250 kcal)
    Carbohydrates 0 g
    – Starch 0 g
    – Dietary fiber 0 g
    Fat 15 g
    – saturated 5.887 g
    – monounsaturated 6.662 g
    – polyunsaturated 0.485 g
    Protein 26 g
    Water 58 g
    Thiamine (Vit. B1) 0.046 mg (4%)
    Riboflavin (Vit. B2) 0.176 mg (12%)
    Niacin (Vit. B3) 5.378 mg (36%)
    Vitamin B6 0.383 mg (29%)
    Folate (Vit. B9) 9 μg (2%)
    Vitamin B12 2.64 μg (110%)
    Vitamin C 0 mg (0%)
    Vitamin E 0.45 mg (3%)
    Vitamin K 1.2 μg (1%)
    Calcium 18 mg (2%)
    Iron 2.6 mg (21%)
    Magnesium 21 mg (6%)
    Manganese 0.012 mg (1%)
    Phosphorus 198 mg (28%)
    Potassium 318 mg (7%)
    Sodium 72 mg (3%)
    Zinc 6.31 mg (63%)
    Percentages are relative to US recommendations for adults.
    Source: USDA Nutrient database

    • US….USDA…மத வெறி அடுத்து ஏகாதிபத்தியம்…மேற்கோள் கட்ட நல்ல ரஷ்ய லேப்கள் இல்லையா?

  46. first please to understand wat do mean vegiterian?those who dont have sense(pain),is suitable for eat called vegiterian.those who have sence to feel ,if u kill it for food called as non veg.
    (as per BUDDHA)
    dont try to eat non veg volunterly.if u dont have any chance go head.thats it.dont compell.dont welcome through this artricle.

  47. வினா போனவ் வினவு! இது ஒரு சிந்தனை ! கட்டாயம் இல்லை. அதாவது தொபுகடீர்ன்னு ஒரு செயல் முடியாது ?நல்ல விஷயஙளை ஆதரிக்க முயர் ! இல்லன்னா மூடி…. போ !

  48. சூப்பர் சார் பாமரமக்கள் மாட்டை உறிப்பது பொல பிரமனியத்தை உறீத்திர்கள்

  49. மாட்டுக்கறி மட்டும் அல்ல எந்த இறைச்சியும் உடல் உழைப்பு இல்லாதவர்கள் உண்பது கேடுதான், தலித்கள் இஸ்லாம்மியர்கள் மட்டுமல்ல இன்று அனைவரும் விரும்பி உண்பது மாட்டிறைச்சிதான் கர்பிணிகள் மற்றும் குழந்தைகள் பெற்ற பெண்கள் மாட்டிறைச்சி உண்பதை மருத்துவம் சிபாரிசு செய்கின்றது ஏனென்றால் புரதம் அதிகம் உள்ளது அதை விடுங்கள் தவறாக நினைக்க வேண்டாம் உங்கள் மதத்தில் ஹரம் என்று சொல்லப்படுகின்ற பன்றிகறி கடை வீதிக்கு வீதி திறந்து வைத்துக்கொண்டு உள்ளார்களே அதை பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்? தலித்கள் மற்றும் அனைவரும் இந்துக்களில் பெருமான்மையினர் அதை உண்கின்றார்கள் அதை பற்றி உங்கள் கருத்து என்ன?

  50. உண்மையில் மாட்டிறைச்சியை விட வெண்பன்றி உடலுக்கு நல்லது.ஏனென்றால் அதில் கொழுப்பு குறைவாம் அதனால் தான் மேலை நாடுகளின் “Pork. The Other White Meat.” என்று விளம்பரப் படுத்தப படுகிறது. ஏனென்றால் White Meat என்றழைக்கப்படும் Chicken breast பன்றி இறைச்சியுடன் ஒப்பிடும் போது விலை கூடியது. தமிழ்நாட்டைப் போல் மலத்தையும் கழிவுகளையும் உண்ண விடாமல், மேலை நாடுகளைப் போல் அடைத்து வளர்க்கப்பட்டு, நோய்கள் எதுவும் தாக்காமல் பாதுகாக்கப்பட்டு, மாடுகள் உண்ணும் உணவுகளை கொடுத்து வளர்க்கப்படும் வகையில் தமிழ்நாட்டிலும் வளர்த்தால், வெண்பன்றி இறைச்சி, தமிழ்நாட்டில் இறைச்சித் தட்டுப்பாட்டைத் தீர்ப்பது மட்டுமல்ல, தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கும் வளரும் வயதில் மிகும் மலிவான புரத உணவை அதிகளவில் உண்ண வாய்ப்புக் கிடைப்பதால், அவர்கள் உயரமானவர்களாக, உறுதியான உடல் உள்ளவர்களாக வளர்வார்கள்.

    உதாரணமாக, மத அடிப்படையில் இலங்கையில் வாழும் போது மாடு, பன்றி இறைச்சிகளை உண்ணாத ஈழத்தமிழர்கள் பலரின் இரண்டாவது தலைமுறையினர், அவர்களது வெள்ளைக்கார நண்பர்களைப் போலவே, வெண்பன்றியிலிருந்து தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவு வகைகளை உட்கொள்கிறார்கள். அத்துடன் ஈழத்தமிழர்கள் தமது வீடுகளிலேயே, வெண்பன்றியை சமைக்கவும் தொடங்கி விட்டார்கள். அதனால், ஈழத்தமிழர்களின் இரண்டாவது, மூன்றாவது தலைமுறையினர் பலர் தமது பெற்றோரை விட, உயரமாக, உடலில் பெரியவர்களாக இருப்பதைக் காணலாம். அத்துடன் விளயாட்டிலும் வெள்ளையர்களுடன் போட்டி போடும் அளவுக்கு பலமுள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். மரபணுக்கள் மட்டுமல்ல, சூழலும் வளரும் வயதில் உண்ணும் உணவும் உடலின் உயரத்தையும், பலத்தையும் தீர்மானிக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க