privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைகேள்வி-பதில்பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

பசும்பொன் தேவரைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

-

கேள்வி :

பசும்பொன் தேவர் அய்யாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? அவர் சொந்த சாதி மக்களுக்கு விட அரிஜன மக்களுக்குத்தான் அதிகம் நன்மைகள் செய்திருக்கிறார். அவரைப் பற்றி வசந்தன் என்பவர் தேவையில்லாத விசயங்களை எழுதியிருக்கிறார்.

ஆர்.கே தாஸ்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
பசும்பொன் முத்துராமலிங்கம்

அன்புள்ள தாஸ்,

நீண்ட முடியும், விபூதிப் பட்டையும், குங்குமப் பொட்டும் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரது படத்தை அநேக தேவர் சமுதாய மக்கள் வீட்டிலோ, கடைகளிலோ வைத்து வணங்குகிறார்கள். தினசரி, மாதாந்திர சிவகாசி காலெண்டர்கள் மூலம் இந்தப் படம் பிரபலமாயிருக்கிறது. மேலும் பிழைப்பு தேடி நகரங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் செல்லும் தேவர் சாதி மக்கள் தமது அடையாளங்களை மீட்டெடுக்கும் வழியாகவும் தேவர் படத்தை வைத்து வணங்குகிறார்கள். 90களில் தென்மாவட்ட கலவரங்கள் துவங்கிய பிறகு தேவர் குருபூஜை என்பது ஒரு வெட்டியான கௌரவப் பிரச்சினையாகவும் மாற்றப்பட்டு விட்டது. இதே காலத்தில் வந்த தேவர் மகன் திரைப்படத்தின் “போற்றிப் பாடடி பெண்ணே, தேவர் காலடி மண்ணே” பாட்டு அச்சாதி மக்களின் தேசிய கீதமாகவும் மாறியது.

சரி, விசயத்துக்கு வருவோம். தேவர் சாதி மக்கள் பசும்பொன் தேவரை வணங்குவதற்கு சுயசாதி பற்று அன்றி வேறு எந்தக் காரணமுமில்லை. 47க்குப் பிறகு சீர்திருத்த முறையில் முன்னேறி வரும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதிகள் வளர்ந்திருக்கின்றன. அரசு பதவிகள், வணிகம், ஓரளவு நிலவுடைமை என்று வளர்ந்த நிலையில் சுயசாதி அடையாளத்தின் வீச்சு முன்னெப்போதைக் காட்டிலும் வளர்ந்து விட்டது.

நவீன தொழில் நுட்ப வசதிகள் வளர்ந்த அளவுக்கு சாதி அபிமானம் குறைந்து விடவில்லை. மணமக்கள் விளம்பரங்களில் கூட சுய சாதி, உட்பிரிவு விதிகளுக்குட்பட்டே மணமக்கள் தேவை விளம்பரங்கள் வருகின்றன. சிதறிக்கிடந்த சாதி மக்களை ஊடகங்களும், திருமண நிலையங்களும், சாதி சங்கங்களும் ஒன்று சேர்த்திருக்கின்றன. இன்னொரு புறம் அரசியலில் அனைத்து சாதிகளும் தத்தமது செல்வாக்கை நிரூபித்து அதிகாரத்தின் பங்கை கேட்பதும் இக்காலத்தில்தான் துவங்கியது.

ஆனால் இத்தகைய முன்னேற்றங்களோடு தாழ்த்தப்பட்ட மக்கள் கொஞ்சம் தலைநிமிரத் துவங்கியதை மட்டும் ஆதிக்க சாதியினர் விரும்பவில்லை. தீண்டாமைக்கு எதிர்ப்பு தெரிவித்த இடங்களிலெல்லாம் ‘கலவரங்கள்’ எழுந்தன. கொடியங்குளம் கலவரம் தொடர்ந்து அதிக பரப்பளவில் நீடித்ததற்கு இதுவே காரணம்.

முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் சாதி கலவரங்கள் நடந்ததில்லை, அமைதியாக இருந்த தமிழகம் என்றெல்லாம் பலர் அபத்தமாக ‘ஆய்வு’ செய்து அப்போது கண்டுபிடித்தனர். அந்த அமைதிக்கு காரணம் என்ன? அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் எல்லா வகைக் கொடுமைகளையும் எதிர்க்க இயலாமல் ஏற்றுக் கொண்டு வாழ்ந்தனர். ஆயிரமாண்டுத் தீண்டாமைக் கொடுமை, காலம் காலமாக இருக்கும் ஒரு நியமம் என்ற அளவில் அவை சமூகத்தால் கேள்விக்கிடமின்றி பின்பற்றப்பட்டு வந்தன. தனித்து விடப்பட்ட சேரிகள் ஊரை எதிர்ப்பதற்கு அன்று வழியே இல்லை. இதுதான் அந்த அமைதியின் காரணம். பின்னர் பொருளாதார சுயபலம் வந்த பிறகு அவர்கள் அந்த கொடுமைகளை எதிர்த்துக் கேட்கின்றனர். அமைதி குலைந்து கலவரம் வருகிறது.

இந்த வரலாற்றுப் பின்புலத்தில்தான் பசும்பொன் தேவரது வாழ்க்கையை நாம் மதிப்பீடு செய்ய வேண்டியிருக்கிறது. அமைதிக் காலத்தில் ஆதிக்க சாதிகளது ஆட்சியில் அடங்கிக்கிடந்த காலத்தில் தாழ்த்தப்பட்டமக்களுக்காக தேவர் என்ன செய்திருக்க முடியும்? அவர் கஞ்சி ஊற்றினார், பால்கனியில் இருந்து பொற்காசுகளை அள்ளி வீசினார், தான தருமம் செய்தார் என்றுதானே அதிகபட்சம் இருந்திருக்க முடியும்? எங்கேயாவது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தீண்டாமைகளை தேவர் எதிர்த்திருக்கிறார் என்று பேச்சளவில் கூட எதுவும் வந்ததில்லையே?

தேவர் செய்த பண்ணையார் தரும சிந்தனைகள் கூட புதுச்சரக்கு அல்ல. காந்தி முதல் பல காங்கிரசு தலைவர்கள் அதைத்தான் செய்தனர். அந்த வகையில்தான் தாழ்த்தப்பட்ட மக்களை அரிஜனங்கள் என்று காந்தி அழைத்தார். “ஆயிரங்காலம் அடிமை என்றாயே அரிசனன்னு பேரு வைக்க யாரடா நாயே” என்ற ம.க.இ.க பாடல் வரி அந்த தரும சிந்தனையின் மீதான வரலாற்றுக் கோபத்தை வெளிப்படுத்துகிறது. இன்றளவும் தமிழக தலித் மக்களின் தேசிய கீதமாக அந்தப்பாடல் பாடப்பட்டு வருகிறது.

இமானுவேல் சேகரன் ஒரு தலைவராக சரிக்கு சமமாக தன் முன் பேசுவதை தேவரால் கிஞ்சித்தும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதன் தொடர்ச்சியாகத்தான் அவர் தேவரது அடியாட்களால் கொல்லப்படுகிறார். இதற்கு மேல் தேவரது வாழ்வில் நடந்த சம்பவங்களை கீழே தருகிறோம்.

தேவரது சாதிவெறியை தனியாக தொகுத்தே தர முடியும். 1937 இல் காங்கிரசு வேட்பாளராக இருந்த தேவர் அன்றைய நீதிக்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட சேதுபதிக்கு ஓட்டுப்போட்ட குற்றத்துக்காக தலித் மக்களிடம் உடனடியாக கடனை வசூலிக்குமாறு தமது சாதியினருக்கு கட்டளையிட்டார். ஒரு சப் மாஜிஸ்டிரேட் கொல்லப்பட்டதும், டிஎஸ்பி ஒருவருக்கு காலில் வெட்டு விழுந்த்தும் இந்த கலவரத்தில் நடந்தது.

1957 தேர்தலில் கூட இப்படி ஆன பிறகும் கலவரம் நடத்தினார் தேவர். காமராசர் தமிழக முதல்வராக வந்ததை இழிவாக பார்க்கும் வகையில் அவருக்கு ஓட்டுரிமை பெறுவதற்காக சொத்து வாங்கிக் கொடுத்ததே தன்னால்தான் என்பதை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். காமராசர் ஆட்சியில் விருதுநகர் நாடார்கள் கள்ள நோட்டு அடித்து தமிழகமெங்கும் புழக்கத்தில் விடுவதாக அவதூறு செய்தார். “சாணாப்பய எல்லாம் பிரதமராகி விடுவதும், கைநாட்டுப் பய எல்லாம் மானத்தை வாங்குகிறார்கள்” என்றும் காமராசரைப் பற்றி சாதிவெறி வன்மத்துடன் கூறியிருக்கிறார்.

காமராசர்
குமாரசாமி காமராஜ்

ஒரே நாளில் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமித்து ஆரம்ப கல்விக்கு உதவிய காமராசரது திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தங்களது பகுதிக்கு பள்ளிகள் வருவதை தடுக்கவும் பேசியிருக்கிறார். இங்கிலீசு படிப்பு சொல்லிக் கொடுத்தால் மதம் அரசிலிருந்து பிரிந்துவிடும் என்று அந்த முருக பக்தர் கூறவும் தவறவில்லை. காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை விமர்சிக்கும் எவரும் கூட அவரது கொலையை கொண்டாட முடியாது. ஆனால் அதற்காக மறைமுகமான நோக்கத்துடன் கோல்வால்கருக்கு  மதுரையில் பணமுடிப்பு வழங்கி விழா நடத்திவர் தேவர். இந்துமத துரோகி என்று காந்திக்கும் பெயர் சூட்டினார்.

தங்களது உழைப்பு, சுய சாதி சமூக உதவி, சீர்திருத்தம் காரணமாக நாடார் சாதியினர் இன்றும் முன்னேறுவதை நாடே அறியும். 19 ஆம் நூற்றாண்டில் முன்னேற்றம் காணத் துவங்கிய அச்சாதியினருக்கு சமூக அந்தஸ்து ஒன்றும் ஆரம்பத்தில் எளிதாக கிடைத்து விடவில்லை. விவசாயம்,வணிகம் மூலம் முன்னேறிய நாடார் மற்றும் நாயக்கர் சாதியினர்களில் வர்ணாசிரம வரிசையில் கீழ்நிலையில் இருந்த நாடார்கள் மீது முத்துராமலிங்கத் தேவருக்கு ஆண்ட பரம்பரையின் இழந்துபோன வெறுப்பு மேலோங்கி இருந்த்து.

அவரது தேவர் சாதியினரோ நாயக்கர் கால ஆட்சியில் ஊர்க்காவல் வேலையைப் பார்த்து வந்தனர். வெள்ளையரின் முதலாளித்துவ பாணி காவல்துறை எல்லாம் வந்தபிறகு அவர்களுக்கு வேலை இல்லாமல் போகவே அவர்களில் சிலர் திருடுவதை கையிலெடுக்க வேண்டிய அவசியம் வந்தது. எனினும் தேவர் சாதிப் பெண்கள் காடுகளில் பாடுபட்டு உழைத்துக் கொண்டுதான் இருந்தனர். நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சிவகாசி கலவரம் என்பதே இதுபோல ஆடு திருடும் கள்ளர்களுக்கும், ஆடுகளைப் பறிகொடுத்த நாடார்களுக்குமிடையில்தான் நடந்தது. திருடப் போகும்போதும், கன்னம் வைக்க முதலில் போகும் நபருக்கும் சிறப்பு பூஜைகளையெல்லாம் செய்யுமளவுக்கு திருட்டை சமூகமயமாக்கினர்.

அப்போது சில சாதியினர் குற்றப் பரம்பரையினர் என்று கூறி அரசு கொண்டுவந்த கட்டுப்பாட்டு சட்டத்தினால் அச்சாதி ஆண்கள் எல்லாம் காவல் நிலையங்களில் இராத் தங்க நேரிட்டது. இச்சாதிகளில் முக்குலத்தோரும் இருந்த காரணத்தால் அன்றைய கம்யூனிஸ்டு கட்சியினருடன் சேர்ந்து அச்சட்டத்திற்கு எதிராகப் போராடினார் பசும்போன் தேவர்.

காங்கிரசில் திறமை இல்லாமல் முன்னுக்கு வந்தவர் காமராசர் என்ற கணிப்பு தேவருக்கு நிரம்பவே இருந்தது. குலக்கல்வி திட்டம் கொண்டு வந்த காரணத்தால் பதவி விலக நேரிட்ட ராஜாஜி தனிமைப்பட்டிருந்த வேலையிலும், ஆசி வாங்க வந்த காமராசரிடம் “நீ முதலமைச்சர் ஆகாமல் கட்சித் தலைவனாகவே இருக்கலாமே” என்று கூறினாராம் தேவர்.

சாலைகளை குக்கிராமங்களுக்கும் விஸ்தரிக்க முனைந்தபோது, அது தங்களது நாட்டு அரசுகள் என்ற கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரானது என்பதால் “நாங்க எல்லாம் இன்றைக்கு அடித்துக் கொள்வோம் நாளை பேசி தீர்த்துக்கொள்வோம். சாலை எல்லாம் போட்டால் போலீசு எல்லாம் ஊருக்குள் வந்து விடும்” என்று கூறி மறவர் நாடுகளில் சாலை போடுவதையே தடை செய்தவர் தேவர். நம்ம வீட்டு கருமறத்திகள் வெயிலிலும் மழையிலும் பாடுபட்டு எடுக்கும் பருத்தியால விருதுநகர், கமுதி சாணாத்திகள் (நாடார் சாதிப் பெண்கள்) காது மூக்கு எல்லாம் தங்கமாக தொங்குகிறது என பொதுக்கூட்டத்திலே பேசி சாதி துவேசத்தை வளர்த்துவிட்டவர்தான் தேவர்.

ஆனால் இதனால் எல்லாம் தேவர்சாதி மக்கள் அனைவரும் நாடார் இனத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளவில்லை. அவரது கைத்தடிகள்தான் இதுபோன்ற கலவரங்களில் ஈடுபட்டனர். இந்து முன்னணி ராமகோபாலன் இன்று ”முசுலீம் கடையில் வாங்காதே” என முழங்குவதைப் போலவே அன்றும் “சாணார் கடையில் சாமான் வாங்காதே” என முழங்கினார் தேவர். இந்தியா – பாக் பிரிவினையின்போது பாதிக்கப்படும் இந்துக்களுக்கு ஆதரவாக இங்குள்ள முசுலீம்களை விரட்டிவிடவும் வேண்டும் என்றும் பேசியிருக்கிறார் தேவர்.

இமானுவேல் சேகரன்
இமானுவேல் சேகரன்

1957- இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை தனக்கு சமமாக நாற்காலியில் அமர வைத்து பேச வைத்த காரணத்தாலும், அந்த முதுகுளத்தூர் கலவரத்துக்கு பின்னான சமாதானக் கூட்டத்தில் இமானுவேல் சேகரனது வாத திறமையாலும் வெறியூட்டப்பட்ட முத்துராமலிங்கத் தேவர் வெளியே வந்து ஒரு பள்ளப்பய கூட உட்கார்ந்து பேச வச்சுட்டீங்களே என தனது அல்லக்கைகளிடம் சொல்லவே மூன்று நாள் கழித்து பரமக்குடியில் வைத்து இமானுவேல் சேகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து வந்த கீழத்தூவல் துப்பாக்கிச் சூடும் அதில் அரசு கடைபிடித்த பிரித்தாளும் சூழ்ச்சியும் தனிக்கதை.

தனது தந்தையிடம் வேலை பார்த்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சோலைக் குடும்பன் என்பவரையே அடியாளாக பயன்படுத்தி வந்த தேவர் அதை வைத்து தான்தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் தலைவன் என்றும், இமானுவேல் சேகரன் இல்லை என்றும் பேசினார். அண்ணாத்துரை உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களை வேசி மகன் என்றும் குறிப்பிட்ட்டிருக்கிறார். பொதுவில் அவர் திராவிட இயக்கத்தை பார்ப்பனிய வருணாசிரம கண்ணோட்டத்துடனே கீழானவர்கள் என்பதாக வசைபாடியிருக்கிறார்.

சில தொழிற்சங்க போராட்டங்களை இவர் ஆதரித்தபடியால் ஈர்க்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இவரை ஆதரிக்கவும் செய்தனர். அரசியலற்ற பொருளாதாரவாதமும், காங்கிரசுக்கு வால்பிடிப்பதும் அன்று அவர்களிடம் மேலோங்கிய காரணத்தால் தேவரை ஒரு இடதுசாரியாக தவறாக பார்க்க வைத்தது. முதுகுளத்தூர் கலவரத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அவரை கேடிகே தங்கமணி போன்றவர்கள் ஆதரித்தும் பேசி உள்ளனர்.

மற்றபடி தேவரின் காமடிகளுக்கு அளவே இல்லை.

நேதாஜி இதோ அங்கே வருகிறார். இங்கே பார்த்தேன். என்றெல்லாம் அடித்து விட்டதும், மடியில்தான் அணுகுண்டு இருப்பதாகவும், நேதாஜி யிடமிருந்து டிரங்கால் வந்தவுடன் முதுகுளத்தூரில் இருந்து மூன்றாம் உலகப்போரை தான் ஆரம்பிக்கப் போவதாகவும், தான் வைத்திருக்கும் மேக்கனடிக் எந்திரத்தால் உலகத்தில் உள்ள தண்ணீரை எல்லாம் பனிக்கட்டி ஆக்க முடியும் என்றும், அதனைக் கொண்டு அமெரிக்க சீன கப்பல்களை எல்லாம் ஆங்காங்கே அப்படியே நிற்குமாறு செய்து அமெரிக்காவை பிடிக்க ஐடியா தன்னிடம் இருப்பதாக சொன்னதும் இருபதாம் நூற்றாண்டு கண்ட தேவரின் காமடிகளில் சில.

தனது சொந்த சாதியினரின் கல்வியையும், நகருக்கு போய்வருவதற்கான வாய்ப்பையும் நாடாரான காமராசரை எதிர்க்க வேண்டும் என்ற தனது ஈகோவிற்காக பலிகொடுத்த தேவரை உழைக்கும் தேவர் சாதியினரோ அல்லது முன்னேற நினைக்கும் அச்சாதி அபிமானிகளோ கூட போற்ற முடியாது. இன்றும் மற்ற சாதியினர் படித்து பல்வேறு வேலைகளுக்கு போக முடிந்த வேளையில் கூட ரவுடிகளாவும், கொஞ்சம் முயற்சி செய்தால் போலீசாகவும் மட்டுமே போக முடிந்த அளவுக்குத்தான் மதுரையை சுற்றிலும் அச்சாதியின மக்களில் கணிசமானர் இருக்கின்றனர். இதற்கு ஒருவகையில் காரணமான தேவரை அம்மக்கள் குருபூசை நடத்தி கவரவிப்பது வியப்பாகவே உள்ளது.

நோயை சரிசெய்ய வேலூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேவருக்கு அறுவைச் சிகிச்சை செய்ய முடிவு செய்த போது, இறைவன் கொடுத்த உடம்பில் இறைவனே அளித்த நோயை மனிதர் சரிசெய்வதா என்று கூறி அதற்காக ஆபரேஷனே செய்துகொள்ளாமல் செத்தவர்தான் தேவர் திருமகன்.

90களில் ஜெயா சசி கும்பல் ஆட்டம் போட்ட காலம் முதல் தேவர் சாதி வெறி அதிகார அமைப்புகளிலும், அரசியலிலும் வெகுவாக செல்வாக்கு செலுத்துகிறது. ஆனால் இந்த தேவர் சாதி வெறியின் மூலம் சாதாரண உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த தேவர்களுக்கு என்ன பயன் கிடைத்திருக்கிறது?

தேவர் சாதியினர் நடத்தும் சுயநிதிக் கல்லூரிகளில் தேவர் சாதி மக்களுக்கு இலவச கல்வி வழங்ப்படுகிறதா? ஆம்னி பேருந்துகளில் ஐம்பது சதம் தள்ளுபடி தரப்படுகிறதா? தேவர் சாதியினர் கந்து வட்டித் தேவர்களிடம் கடன் வாங்கினால் வட்டியில்லாமல் அனுமதிக்கப்படுகிறதா? இல்லை சேதுராமலிங்கத்தின் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தேவர் சாதி மக்களுக்கு மலிவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? எதுவுமில்லையே?

இப்படி இருக்கையில் இந்த சாதி உணர்வால் என்ன பயன்? தேவர் சாதி நண்பர்கள் பரிசீலிக்க வேண்டும். வாழ்க்கைப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் காலத்தில் சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் நாம் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் இந்த சாதிப் பிரிவினைகளும், ஆதிக்க சாதி மனப்பான்மைகளும் நம்மை பிரித்து முடக்குகிறது. சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலத்து மாற்றிக் கொள்ளட்டும்.

நன்றி.

ஆதாரம்:

1) தேர்தல் மேடைகளில் பசும்பொன் தேவர் – தொகுப்பு கே.ஜீவபாரதி
2)
பசும்பொன் தேவரும் கம்யூனிஸ்ட்களும் – தொகுப்பு கே.ஜீவபாரதி
3)
பசும்பொன் தேவரின் கட்டுரைகள் – தொகுப்பு கே.ஜீவபாரதி
4)
சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் – தொகுப்பு கே.ஜீவபாரதி
5)
பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்- தொகுப்பு கே.ஜீவபாரதி
6)
சட்டப் பேரவையில் தேவர் பற்றிய சதி வழக்கு – தொகுப்பு கே.ஜீவபாரதி

_____________

இந்த கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

    • அண்ணாத்துரை உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களை வேசி மகன் என்றும் குறிப்பிட்ட்டிருக்கிறார். பொதுவில் அவர் திராவிட இயக்கத்தை பார்ப்பனிய வருணாசிரம கண்ணோட்டத்துடனே கீழானவர்கள் என்பதாக வசைபாடியிருக்கிறார்.////

      இப்படி தேவரின் வரலாறு தெரியாமல் முட்டாள் தனமாய் பொய்யுரை எழுதி பிழைக்கும் நீங்கள் ஆதாரமாய் குறிப்பிட்ட ஜீவபாரதி எழுதிய எந்த புத்தகத்தில் எத்தனாம் பக்கத்தில் உள்ளது என குறிப்பிடுங்களேன் ?

    • நாங்கள் ஆடு திருடுவதாக எழுதி இருக்கிறாயே நீ உன் வீடு பெண்களை வெள்ளை காரர்களுக்கு கூட்டி கொடுத்தத்தால் தன இன்று பாதி நாடார்கள் கிறிஸ்டினாக இருக்கிறார்கள். பெற்ற தாயையும் கூட்டி கொடுக்கும் குலத்தில் பிறந்த நீ முத்துராமலிங்க தேவரை பற்றி பேச அருகதை அற்றவன்

  1. //அண்ணாத்துரை உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களை வேசி மகன் என்றும் குறிப்பிட்ட்டிருக்கிறார். //

    இதே கருத்தைத்தான் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தை சேரந்தவர்களும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், இது முத்துராமலிங்கத்திடமிருந்து எடுக்கப்பட்டது என்பது இப்போதுதான் தெரிகிறது

    • அண்ணாத்துரை உள்ளிட்ட திராவிட இயக்கத் தலைவர்களை வேசி மகன் என்று முத்துராமலிங்கத்திடமிருந்த கருத்தைத்தான் சீமானின் நாம் தமிழர் இயக்கத்தை சேரந்தவர்களும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

  2. இந்த வெறியனுக்கு சீமான் மாலை அணிவிப்பதில் என்ன தவறு என்று கேட்கும் செந்தமிழர்களை என்ன சொல்வது.

    வாழ்த்துகள் வினவு……பதில் நேர்மையாகவும் அருமையாகும் இருந்தது.

    • //இந்த வெறியனுக்கு சீமான் மாலை அணிவிப்பதில் என்ன தவறு என்று கேட்கும் செந்தமிழர்களை என்ன சொல்வது//

      எவனெவனுக்கோ உயிரோடயிருக்கும் போதும் உயிர்போய் செத்தவனுக்கும் உருவச்சிலைக்கெல்லாம் “மாலை” போடும்போது இதல்லாம் போய்..,

      தமிழர்களின் தாழ்வுமனப்பான்மை பளிச்சிடுகிறது.

      • //எவனெவனுக்கோ உயிரோடயிருக்கும் போதும் உயிர்போய் செத்தவனுக்கும் உருவச்சிலைக்கெல்லாம் “மாலை” போடும்போது இதல்லாம் போய்..,//

        எவனெவனோ யாரு? முத்துராமலிங்கம் அந்த லிஸ்டில் இல்லை என்றால் அவரையும் அதில் சேர்த்து கொள்வோம்.

        //தமிழர்களின் தாழ்வுமனப்பான்மை பளிச்சிடுகிறது.//

        பல காலமாய் தாழ்த்தப்பட்ட மனப்பான்மை இது.

        ஆயிரம் காலம் அடிமை என்றாயே!! நாங்கள் தீடீர் தமிழர்கள் ஆவதற்கு காரணம் என்னடா நாயே!!

        • //ஆயிரம் காலம் அடிமை என்ற நாயே//

          தமிழா உனக்குத்தான் சொரனை இல்லயே பிறகு ஏன் குறைக்கிற !

          உன்னை ஆள்பவர்களை வைத்து உன் யோக்கியதை தெரிகிறதா ?

          எம் ஜி ஆர் கருணானிதி ஜெயலலிதா அடுத்து ரஜினியா ?

          டுபாக்குர் தமிழா இப்படியே தேசமில்லாம தெருநாயா திரிய போற பார்த்துக்க.

          • எதுக்கு தேவன் சிலைக்கு மாலை போட்டாரு செந்தமிழன் சீமான் என்று கேட்டா தாழ்வுமனபான்மை, தமிழன், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெ என்று தெளிவா கொழப்பி பிரச்சனையை திசை திருப்புரீங்க. தமிழனை பிரித்தது ஜாதி. அந்த ஜாதியை நிலைநிறுத்த வாழ்ந்த முத்துராமலிங்கம் தமிழன் அல்ல. ஜாதியை ஒழிக்க வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட அம்பேத்கர் எனக்கு தமிழன். இவ்வுலகில் உழைக்கும் மக்களுக்காய் போராடும் அனைவரும் எனக்கு தமிழரே. பிறப்பினால் மட்டுமே ஒருவன் தமிழன் என்றால் அத்தமிழர் கூட்டம் மாக்களுக்கு சமானம்.

            பி.கு: தயவு செய்து மறுமொழியை ஒரு முறையாவது முழுமையாக படித்து விட்டு பதில் எழுதவும்.

            • Mr Ben June 4, 2011 at 7:12 pm said:

              //இவ்வுலகில் உழைக்கும் மக்களுக்காய் போராடும் அனைவரும் எனக்கு தமிழரே//

              மத்தவங்களெல்லாம் மிருகமா?

            • //தமிழனை பிரித்தது ஜாதி//

              சாதி இரண்டொழிய வேறில்லை என்ற குத்துப்பாட்டை இயற்றி சாதியை தூக்கிப்பிடித்தவனே டுபாக்கூர் தமிழனே !!!

              • ‘ஈனப் பறையர்களேனும் அவர்
                எம்முடன் வாழ்ந்திருப்பவர் அன்றோ?”

                என்ற மெலடி பாட்டை இயற்றி ஜாதியை ஒழித்தவன் உண்மை தமிழனே!!

                • ஜாதியை ஒழி !!!

                  மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது

                  இன,சாதி,மதங்களை குறிப்பிடாமல்

                  “மனிதன்” என்று குறிப்பிடச்சொல்லு!!!

                  • கோப்புகளில் இருந்து ஜாதி மதங்களை ஒழிப்பது சுலபம் ஆனால் ‘மனித’ மனங்களில் இருந்து ஒழிப்பது எப்போது. இதற்கு முன்னரே 1971 தமிழ் நாட்டு அரசு கோப்புகளில் இருந்து ஜாதி பெயர்களை நீக்கியது . அதனால் எதுவும் மாறவில்லை. இதை தான் ‘living in denial’ என்று சொல்வார்கள். வெளிப்படையான ஜாதி வெறியர்களோடு உங்களை போன்ற திரைமறைவு ஜாதி வெறி (closet casteist/racist) மிகவும் அபாயகரமானது.

                    • //கோப்புகளில் இருந்து ஜாதி மதங்களை ஒழிப்பது சுலபம் ஆனால் ‘மனித’ மனங்களில் இருந்து ஒழிப்பது எப்போது//

                      சுய மனமாற்றம் செய்வது மூலம் சாதியமும் புரோகித மதமும் சமூகநீக்கம் பெறும்.

                      வர்ண,வர்க்க,இன,சாதி,மத,மொழி,தொழில்,பூகோள அடிப்படையில் பக்தி,
                      புரட்சி,போராட்டம்,மக்கள் தொண்டு,விடுதலை,சமூக
                      நீதி,கொள்கை,கோட்பாடு,கதிமோட்சம்,மெய்ஞானம்,விஞ்ஞானம்,பொருதாரம்
                      என்ற அடிப்படையில் மக்களை பிரித்து பிளவுபடுத்தும் அசுர அரசியலை சமூகநீக்கம் பெறச்செய்வதன் மூலம்…

                    • பென், சென்னைல எனக்கு உதவி செய்த நண்பர்கள் யாரும் என் ஜாதியை கேடதில்லை. ஒன்றாக உண்டு, ஊறங்கி, பழகிவந்தோம் (அலுவல் காரணமாக பிரிந்திருக்கிறோம்).

                      முன்பு Resume-ல் cast என நிரப்பியவர்கள் இன்று Religion என்று போடுவதையே குறைத்து விட்டனர். அசுத்தம் காரணமாக ஜாதி பேதம் பார்த்தவர்கள் சகோதரனாக பழக ஆரம்பித்துவிட்டனர். ஆனால் அசுத்தமான தனது ஜாதி காரணுடன் பழகுவதில்லை.

                      உங்கள் பார்வைக்கு புது கண்ணாடி மாற்றுங்கள் பென்.

                    • //சென்னைல எனக்கு உதவி செய்த நண்பர்கள் யாரும் என் ஜாதியை கேடதில்லை. ஒன்றாக உண்டு, ஊறங்கி, பழகிவந்தோம் (அலுவல் காரணமாக பிரிந்திருக்கிறோம்).//

                      சூத்திரன் அது பாராட்டிற்குரியது தான். ஜாதி என்ற ஒரு வர்க்க நிலையாவது ஓடையும் பொழுது அது மகிழ்ச்சி தான் ஆனால் தனக்கு நடக்கவில்லை என்றால் அது எவருக்கும் நடக்கவில்லை என்ற மனோபாவத்தை நீங்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் ஆவணங்களின் படியே ஜாதி வன்முறை ஒரு தினசரி நிகழ்வு. இது பதிவானவை. பதிவாகாத வன்முறைகள் எத்தனை? நகரங்களில் பணி இடங்களில் நிகழும் subtle racism எத்தனை என்பது எண்ணி பார்க்கவேண்டும். பிரச்சனை இல்லை என்றால் தீர்வு காண முடியாது இருக்கு என்றால் தான் தீர்வை நோக்கி நகர முடியும். ஒரு திருடன் எப்படி திருட்டை ஒப்புகொள்ளமாட்டனோ அது போல ஜாதி பார்ப்பவன் ஜாதி பற்றை ஒப்புகொள்ளமாட்டான் என்பது கீழ் உள்ள சில மறுமொழிகளில் தெள்ள தெளிவாகிறது.

                      உங்கள் பார்வைக்கு:
                      https://www.vinavu.com/2011/05/05/villur/

            • சரியான புரிதல் நண்பா. அம்பேத்கரை மராட்டியன் என்று சொல்லி ஒதுக்க நினைத்தால், நான் தமிழனே இல்லை, நானும் ஒரு மராட்டியன் என்று தான் சொல்வேன்.

              இவர்களெல்லாம் தேவரைத் தேசியத் தலைவராகவும், அம்பேத்கரைத் தாழ்த்தப்பட்டவர்களின் தலைவராகவும் தான் கருத்துருவாக்கம் செய்து வைத்துள்ளனர். அது உடைபடும் போது ஏற்படுகிற மலச்சிக்கலால் தான், “தேவர் சொந்த ஜாதி மக்களை விட தலித் மக்களுக்குத்தான் அதிகம் நன்மை செய்தார் தெரியுமா” என்பன போன்ற கழிசடைகளை வாய் வழியாகப் பேண்டு வைப்பார்கள்.

      • Avarudaya valkai varalarai padiyungal enaku munpu ella makkalum samam endru sonnavar thaltha patta vargaludan unavu unpathai valakama kondirunthavar..neengal solllum ambethkar ellam avar jaathi yana sc ku matum anaithu sattangalaium erpaduthiyavar..thevar ayya avargal oru mahaan neengal jaathi vitu velivanthu paarungal avarai patri purium

  3. உங்கள் எழுத்துகளில்தான் அதிக சாதி வெறி தெரிகிறது. நீங்கள் மற்ற பதிவுகளை படித்த பின்பு நீங்கள் ஒரு சாதி வெறியர் என்று கண்டு கொண்டேன். கலவரம் நடத்தியாக வேண்டும் என்ற முனைப்போடு எழுதி வருகிறீர்கள். எழுதுடவதை நிறுஜத்திவிடுங்கள்.

    • பாண்டி,
      சாதிவெறியை கண்டிப்பதும், எதிர்ப்பதும், சாதி இல்லாத சமத்துவ சமுதாயம் உருவாக வேண்டும் என்று நினைப்பதை எப்படி சாதிவெறி என்கிறீர்கள்?

      • பாண்டி,

        சாதி மதங்களை கண்டிப்பதும், எதிர்ப்பதுமாக பம்மாத்து செய்வது மற்றும் ஆண்டான் அடிமை என்ற கோசமெல்லாம் கம்யூனிஸ வர்க்கவெறியாட்டத்திற்கான கால்கோல் விழா..,

    • வினவு சாதிமத வெறியர் அல்ல! வர்க்கவெறியர் மட்டுமே !! ருஷ்ய ஆதரவு அமெரிக்க எதிராளி !!!

  4. இக்கருத்துகள் மற்ற மக்களிடம் போய்ச் சேர்ந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்றுமில்லை. ஆனால் இக்கால தேவரின இளைய தலைமுறைக்குக் கண்டிப்பாகப் போய்ச்சேர வேண்டும். தலவைன் வேண்டுமென்றால், இக்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பொறுத்தமானவான இருப்பவனே தலைவன் என அவர்கள் உணரவேண்டும்.

    • We know who we are i don’t know why all the ppls are saying about thevar always… He never did anything for mukkulthore ppls. He is common leader all the information here are false…. So ppls are trying to create some unwanted news about thevar….
      There is no comparison with thevar in tamil poltician without knowing anything dont comment on them…

  5. //தலவைன் வேண்டுமென்றால், இக்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் பொறுத்தமானவான இருப்பவனே தலைவன் என அவர்கள் உணரவேண்டும்//

    தோழர் Joseph Stalin போல..,

  6. vinavu u r just want to create enimity between other castes with devars .it shows u want to get support from nadar caste and turn towards thevars .and to get money as donation for ur work . it is your intention . please provide appropriate reference when u say about not only devar but any one . please specify when & where he said ? where u took the reference . simply giving some book name and saying something it wont have credibility . and if devar said something did u check if it true are not. simply one sided journalism wont stand for long time

      • kaliraj

        please provide credible evidence against devar ?You ppl(Vinavu) lost credibility long back . So we cant take it is reference . kali do you the meaning of reference ?if not plz check google. ” When someone saying about past . it shows u guys are jealous about the present

    • Yes guys.. dont simply tell something about a great person.. he is not a small guy like you Vinavu.. How dare you to like this,,, stupid guy who giving such information to you and what basis you writing this.. see we all are silent now dont allow us to take our original character… fcuk vina vu.

      • நல்ல காமெடி சின்னா. வேற ஏதாவது இருந்தா எடுத்து விடுங்க…!!!

  7. This is a approach only not proven in future it may proven or not. Till the time you can think about this whether it is true or not. In tamilnadu history we have lots of wrongly fabricated materials. Vinavu raises so many questions on it. Dear friends please try to understand our society’s reality. Thanks vinavu…do well…people are awakening…

  8. வினவு “ஏழரைக்கேடி” தமிழர்களுக்குமிடையே “ஏழரை” மூட்டிவிடுது !

    வாழ்க கம்யூனிசம் ! ஒழிக தமிழ் தேசியம் !

  9. வினவு,

    வினவை தலித் அல்லாதோரும் படிக்கலாம், நம்பலாம், இயங்கலாம் என்று எண்ணுபவர்களின் நம்பிக்கை பொய்க்க ஆரம்பித்துள்ளது போல் உள்ளது தங்களின் கடந்த சில பதிவுகளின் சாராம்சம்.

    குறிப்பிட்ட இனத்தின் மீதும் , குறிப்பிட்ட மதத்தின் மீதும் தொடர்ந்து தவறான செய்திகள் வெளிவருவதை பார்க்கும்போது , வினவின் உண்மையான நோக்கம் சாதி சமயமற்ற சமுதாயத்தை வென்றெடுக்க வேண்டும் என்பது அல்ல, மாறாக அந்த இனமே, பிரிவே இருக்ககூடாது என்பது போல் உள்ளது.

    நான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவன் அல்ல. வினவில் பணிபுரிவோரும் , கட்டுரை இடுவோரும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த நண்பர்கள் தான் என்று முற்றாக தெரிந்திருந்தும் வினவை தொடர்ந்து படித்து வருபவன்.

    வினவு முன்பு ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தது , ஆனந்த விகடன் ஆசிரியர் குழு ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கையின் பிடியில் உள்ளது என்று .ஆனால் இன்று வினவின் பதிவுகள் வாசிக்கும் போது வினவும் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட சமுதாயதிற்கானது தான் என்று புரிகிறது.

    சாதி மறுப்பு என்ற போர்வையில் இங்கு சாதி உணர்வு முன்னிலை படுத்தபடுகிறது. முன்னர் நடந்த சம்பவங்களின் சுவடுகள் மறைந்திருந்தாலும் அதை மீண்டும் தூசு தட்டி எடுத்து இளைய சமுதாயத்தினரிடம் பார் நாம் இவ்வளவு இழந்திருக்கிறோம், அவர்களுக்கு நமது பதில் என்ன என்பது போல் உள்ளது தங்களின் பதிவுகள்.

    இப்படி செய்யும் உங்களுக்கும் , தாழ்த்த பட்டோரின் பிரதிநிதிகளாய் தங்களை காட்டிக்கொண்டு வன்முறையை தூண்டும் ஓட்டுபொறுக்கி அரசியல் வியாதிகளுக்கும் வித்தியாசம் என்ன?

    வினவு தன் போக்கை மாற்றி கொள்ள வேண்டும்.
    சமதர்ம , சாதி பேதமற்ற சமுதாயம் காண தாழ்த்தப்பட்டோர் மட்டும் விழிப்படைந்தால் போதாது. இதர சாதியினரும் மதத்தினரும் மாற வேண்டும். ஒரு கை ஓசை பலன் தராது.

    தொடர்ந்து இவ்வாறாக குறிப்பிட்ட சாரார் பற்றி மட்டுமே பேசி வந்தால் , மீதமுள்ள மக்களின் ஆதரவை இழக்க கூடும். பிறகு அந்த நோக்கம் கானல் நீராகத்தான் அமையும்.

    எது எவ்வாறாக இருந்தாலும் அனைவரும் இங்குதான் பிறந்தோம், இங்குதான் வாழ வேண்டும் அனைவரையும் சமமாக பாவித்துதான் செல்ல வேண்டும் என்று வினவு உணர வேண்டும்.

    வினவில் சாதி வெறி பற்றி வந்த கட்டுரைகள் தான் அதிகம். மாறாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ன?, எந்தெந்த முறைகளில் போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்வது?, அலுவலக பொது இடங்களில் எவ்வாறு பிறரிடம் பழகுவது?, ஆங்கில மற்றும் இன்னபிற மொழிகளை எவ்வாறு கற்று தேர்வது? விருப்பபடின் எவ்வாறு அயல்நாடு பணிகளுக்கு செல்வது? என்பது பற்றியெல்லாம் மருந்தளவுக்கு கூட பதிவுகள் வந்ததாக தெரிய வில்லை.
    வினவின் சார்பு இதழ்களில் அவை வெளி வருகின்றன என்று மழுப்பகூடாது. உண்மை இதுதான்.

    வினவின் பணி இந்த சமுதாயத்திற்குதான் பயன்படவேண்டுமே அன்றி குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமே அல்ல.

    நன்றி.
    கா. ராஜேந்திரன்

    • //மாறாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ன?, எந்தெந்த முறைகளில் போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்வது?, அலுவலக பொது இடங்களில் எவ்வாறு பிறரிடம் பழகுவது?, ஆங்கில மற்றும் இன்னபிற மொழிகளை எவ்வாறு கற்று தேர்வது? விருப்பபடின் எவ்வாறு அயல்நாடு பணிகளுக்கு செல்வது? என்பது பற்றியெல்லாம் மருந்தளவுக்கு கூட பதிவுகள் வந்ததாக தெரிய வில்லை//– அதுக்குத்தான் அந்துமணி ரமேஸிலிருந்து அரசவைக்கோமாளி அப்துல் கலாம் வரை அத்தனை ஊடகங்களும் அதைத்தானய்யா செய்றாங்கே. அவங்க தான் காயடிச்சூட்டுற்றாங்கனு இங்க வந்தா, முடியலடா சாமி.

      ”ஆனால் இன்று வினவின் பதிவுகள் வாசிக்கும் போது வினவும் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட சமுதாயதிற்கானது தான் என்று புரிகிறது” – கண்டு புடிச்சிட்டாருய்யா செர்லக் ஹோம்ஸ்! ஒவ்வொரு கட்டுரையிலுமே நேரடியாக பாட்டாளி வர்க்கத்திற்காக களம் காண வருமாறு தானே அதன் வாசகர்களை வினவு அழைத்துக்கொண்டிருக்கிறது. அது இப்பத்தான் ராசா, உங்களுக்குப்புரியுதா?

    • //வினவில் சாதி வெறி பற்றி வந்த கட்டுரைகள் தான் அதிகம். மாறாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ன?, எந்தெந்த முறைகளில் போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்வது?, அலுவலக பொது இடங்களில் எவ்வாறு பிறரிடம் பழகுவது?, ஆங்கில மற்றும் இன்னபிற மொழிகளை எவ்வாறு கற்று தேர்வது? விருப்பபடின் எவ்வாறு அயல்நாடு பணிகளுக்கு செல்வது? என்பது பற்றியெல்லாம் மருந்தளவுக்கு கூட பதிவுகள் வந்ததாக தெரிய வில்லை.//

      என்னக் கொடுமைடா இது. இப்படியெல்லாம் எப்படிங்க உங்களால யோசிக்க முடியுது? ஒரு சாதி வெறியனை அம்பலப்படுத்தும்போது உங்களுக்கு ஏன் எரியுது? சாதி வெறியை இப்படி ரீசெண்டா பேசுவதன் மூலம் மறைத்துக்கொள்ள முடியும்னு உங்களுக்கு யாரோ தப்பா சொல்லிக் கொடுத்திருக்காங்க. அடுத்த முறை நல்லா பிராக்டீஸ் பண்ணிட்டு வாங்க..

      இன்னும் சாதி மேலாதிக்கமும், இரட்டைக் குவளையும் நீடித்திருக்கிற ஒரு சமுதாயத்தில் அதை விமர்சிக்கிற கட்டுரையைக் கூட உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் காறித் துப்ப வேண்டும் போல இருக்கிறது. நாகரிகக் கனவானாக காட்சித் தர முயல்கிற சாதி வெறியர் நீங்கள்.

    • ராஜேந்திரன்//

      என்ன நீங்கள் காமெடி பண்றீங்க! தாழ்த்தப்பட்ட மக்களை ஆதரித்தால் வினவு மக்களால் புறக்கணிக்கப்படும் என்று சொல்வது சாதிவெறி தானே.ஓ இது தான் நேர்மையான பார்வையா? காலங்காலமாய் அடிமைகளாய்,தீண்டபடாத மக்களாய் ஒதுக்கிவைத்து,மிருகங்களை விட கீழ்நிலையில் வைத்து பழக்கப்பட்ட உங்களைப்போல உள்ள சுயசாதி வெறியர்களும்,பார்ப்பன அடிமைகளுக்கும் தாழ்த்தப்பட்டவனின் உணர்வுகள் புரியாதுதான். வினவு குருப்பு ஒன்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்தவர்கள் கிடையாது. உனக்கு உண்மை தெரியவேண்டும் என்றால் போய் காவல்துரையிடமே விசாரிக்கலாம். அவர்களுக்கு தான் இவர்களைப்பற்றி நல்லா தெரியும்.உங்கள் சாதியை சார்ந்தவர்கள் தானே போலிஸ் துறையில் நிறையபேர் இருக்கிறார்களே கேட்டுபாருங்கள்.

      • Rajendran, No point in arguing with these folks. Look at the replies of Ulagamppan, meera, and others. They are not trying to give constructive answers to your questions, rather simply YELL at You. Its their usual style -:)

        If they show similar ‘constructive’ articles that can help ‘thalthapattavan’ in any of their blog, we can appreciate them. But simply they will do nakkal of others like Abdul kalama, etc.

        Vinavu : i read all your articles, particularly with ‘data points’ – very interesting, informative. But when you have beenn cornered and you don’t have answers these similar folks pitch in and reply these non-sense. Pl try to stop it.

        • ஸ்ரீநிவாஸ்,

          இந்த கட்டுரை முத்துராமலிங்கத் தேவரின் சாதி வெறியைப் பற்றியது. ஒரு சாதி வெறியனை அங்கீகரித்து சாமியாக்கி வரும் சூழலில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அரசியலும் சாதிமயமாகி இருக்கிறது. கிராமத்துக் காற்றே படாத நடுத்தர வர்க்க நாகரிகக் கோமான்களுக்கு களத்தில் உள்ள நிலைமைகள் குறித்து என்ன தெரியும். தாழ்த்தப்பட்டவர்களை ஊர் பஞ்சாயத்து தலைவராகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத சமூகம் இது. அதனால் இது போன்ற பிரச்சாரங்கள் தேவைப் படுகின்றன.

          கட்டுரையில் தரப்பட்ட எந்த ஒரு கருத்தையும் எதிர்க்கத்திராணி இல்லாமல் தனது சாதிப் பற்றை தீர்த்துக்கொள்ள செய்யப்பட்ட சப்பில்லாத விமர்சனம் தான் மேலே உள்ளது. உங்கள் கருத்துப்படி நரேந்திர மோடியைக் கண்டிக்கக் கூடாது, முஸ்லிம்களுக்கு எப்படி ஆபிசில் போய் சாம்பிராணி போடுவது என்று பாடம் எடுக்க வேண்டும், அப்படித்தானே?

    • கா. ராஜேந்திரன் உஙகள் கருத்துக்கு என்னுடைய ஆதரவு நானும் படித்து கொண்டு தான் இருக்ககிறேன் எந்த முன்னெற்றம் இல்லை என்பத உண்மை

  10. //இப்படி இருக்கையில் இந்த சாதி உணர்வால் என்ன பயன்? தேவர் சாதி நண்பர்கள் பரிசீலிக்க வேண்டும். வாழ்க்கைப் பிரச்சினைகள் அதிகரித்து வரும் காலத்தில் சாதி கடந்து உழைக்கும் வர்க்கமாய் நாம் ஒன்றிணைய வேண்டிய தருணத்தில் இந்த சாதிப் பிரிவினைகளும், ஆதிக்க சாதி மனப்பான்மைகளும் நம்மை பிரித்து முடக்குகிறது. சம்பந்தப்பட்டவர்கள் பரிசீலத்து மாற்றிக் கொள்ளட்டும்.//

    இந்த வரிகள், சாதி நோயில் வீழ்ந்து கிடக்கும், அனைத்துவித சாதி நோயாளிகளுக்கான மருந்துச் சீட்டு. மருந்தைத் தேடி வெளியில் அலையத் தேவையில்லை. அவரவர் சிந்தனையுள் சாதி வலியை நிவர்த்தி செய்யும் மருந்து இருக்கிறது!

    • மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இன,சாதி,மதங்களை குறிப்பிடாமல் “மனிதன்” என்று குறிப்பிடச்சொல்லுங்கண்னே!!!

      • நீங்களே சொல்லுகிறீர்கள் “மக்கள்” தொகை கணக்கெடுப்பென்று… பிறகு “மனிதன்” என்று போடு என்று சொன்னால் என்ன அர்த்தம்? இருப்பினும்,

        மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மக்களிடம் மட்டுமே நடத்தப்படும். இதில் எந்த விலங்குகளையும் சேர்க்கப்பட மாட்டாது. ஆகவே “மனிதன்” என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லாமல் போகிறது!!!

        ஹிந்தியாவில் மனிதர்கள், பல சாதிய படிநிலையின் படி வாழ தள்ளப்பட்டுள்ளதால் அந்த சாதிய படிநிலைப் படியே கணக்கெடுத்து அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய அதாவது 2 ரூ தேவையான மனிதனுக்கு 2 ரூபாயும், 1 ரூ தேவையான மனிதனுக்கு 1 ரூபாயும், தேவையே இல்லாதவனுக்கு நிறுத்தி வைக்கவுமான வசதியை ஏற்படுத்தவே சாதிய அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுக்க கோரப்படுகிறதே ஒழிய அதை நிலைநாட்ட அல்ல என்பதை புரிந்துக்கொள்க.

        • //கணக்கெடுத்து அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய அதாவது 2 ரூ தேவையான மனிதனுக்கு 2 ரூபாயும், 1 ரூ தேவையான மனிதனுக்கு 1 ரூபாயும், தேவையே இல்லாதவனுக்கு நிறுத்தி வைக்கவுமான வசதியை ஏற்படுத்தவே சாதிய//

          அத்வானி அம்பானி வகையறாக்களின் தேவையையும் சேர்த்து பூர்த்தி செய்யவும்.

        • //மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மக்களிடம் மட்டுமே நடத்தப்படும். இதில் எந்த விலங்குகளையும் சேர்க்கப்பட மாட்டாது. ஆகவே “மனிதன்” என்று அடையாளப்படுத்த வேண்டிய தேவை இல்லாமல் போகிறது//

          மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது சமூக விலங்கான மனிதனுக்கு மட்டுமே. மனித விலங்குகளுக்கு அல்ல.

          • Census of animals – both domestic and wild – are periodically taken by the Central Government. Please go to the website of Department of Animal Husbandry of Central Govt

  11. வினவில் சாதி மத இன வர்ண வர்க்க மொழி ருஷ்யவெறி பற்றி வந்த கட்டுரைகள் தான் அதிகம்.
    சீக்கிரம் ஊத்தி மூடலாம் நாட்டாமை கா.ராசு சொல்லிவிட்டார்

  12. வினவின் பணி இந்த சமுதாயத்திற்குதான் பயன்படுகிறது.அதில் அனைத்து பிற்போக்கு தனங்களையும் முற்போக்கு முகமுடிகளையும் சாதிமதங்களை சாடாமல் சந்திக்கு இழுக்காமல் சமுதாயபணி ஆற்றமுடியாது.தமிழ்நாட்டில் வினவுவைத்தவிர வேறு நாதியில்லை.தமிழ இணையத்திலும் சரி, தமிழ் நாட்டிலும்சரி வினவுவைத்தவிர வேறு யார்
    இருக்கா?.இருப்பதாக சொல்பவர்கள் நேர்மையாக சொல்லட்டும்.வினவுவைப்பற்றி சொல்லியது புகழ்ச்சிக்காகவோ,தற்பெருமைக்காகவோ அல்ல.

      • வீரமணி அய்யாவின் பணி அற்புதமானது..1995இல் கொடியங்குளத்தில் தாழ்த்தப்பட்டோர் தாக்கப்பட்டனர். அதன் பின்னர் அதற்கு பதிலடி பல இடங்களில் கொடுக்கப்பட்டதும் ஓடோடி வந்து அறிக்கை விட்டார்.. தாழ்த்தப்பட்டோரை நோக்கி “இத்தனை காலமும் அண்ணன் தம்பிகளாகப் பழகி வந்ததை மறந்து போனது ஏன்?”..

        இதுவரை அன்னார் ஒரு கடையிலும் ரெட்டைக் குவளை முறைக்கு எதிராகப் போராடியது இல்லை..

        அன்னாரின் அடிப்பொடிகளான ஒரத்தநாட்டுக் கள்ளர்கள் குலம் பார்த்துத்தான் திருமணமே செய்கின்றனர். அன்னாரின் கல்வி வியாபாரக்கடையான பெரியார் மணியம்மையில் கோலோச்சுவது கள்ளர் ஆதிக்க சாதிதான்..அவர்களுக்கே பெரும்பாலும் வேலை கிடைக்கிறது..
        வீரமணியே எண்ணிக்கொள்ளலாம் “இன்னமுமா இவிய்ங்க நம்மளய் நம்புறாய்ங்க?’

  13. தன் சொந்த அறிவைப் பயன்படுத்தாத எவனும் முன்னேறப் போவதில்லை. சாதியை வைத்துக் கொண்டு ஒரு மண்ணும் பண்ண முடியாது, அது எந்த சாதியாக இருந்தாலும். சாதியின் பிம்பத்தில் வாழ்ந்தால் உண்மைப் பண்பு மறைந்து விடும். ஒருவன் தன் சாதி என்பதற்காக யாரையும் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது.

    • //தன் சொந்த அறிவைப் பயன்படுத்தாத எவனும் முன்னேறப் போவதில்லை//

      ஏற்கனவே நொந்துபோன கருணானிதியை மேலும் அறிவில்லாத முட்டாள் என்று வெந்த புண்ல் வேலா?

  14. //வினவில் பணிபுரிவோரும் , கட்டுரை இடுவோரும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த நண்பர்கள் தான் என்று முற்றாக *தெரிந்திருந்தும்* வினவை தொடர்ந்து படித்து வருபவன்.//

    இங்க தெரியுதுய்யா கொண்டை! :)))

  15. //வினவில் சாதி வெறி பற்றி வந்த கட்டுரைகள் தான் அதிகம். மாறாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வேலை வாய்ப்புகள் என்ன?, எந்தெந்த முறைகளில் போட்டி தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்வது?, அலுவலக பொது இடங்களில் எவ்வாறு பிறரிடம் பழகுவது?, ஆங்கில மற்றும் இன்னபிற மொழிகளை எவ்வாறு கற்று தேர்வது? விருப்பபடின் எவ்வாறு அயல்நாடு பணிகளுக்கு செல்வது? என்பது பற்றியெல்லாம் மருந்தளவுக்கு கூட பதிவுகள் வந்ததாக தெரிய வில்லை.
    வினவின் சார்பு இதழ்களில் அவை வெளி வருகின்றன என்று மழுப்பகூடாது. உண்மை இதுதான்.//

    யப்பா சாமீ… ,முடியலப்பாஆஆஆஆ…

    //வினவின் பணி இந்த சமுதாயத்திற்குதான் பயன்படவேண்டுமே அன்றி குறிப்பிட்ட இனத்திற்கு மட்டுமே அல்ல.//

    ஆமா..ஆமா.. வினவு இனிமே ‘தேசிய’த்தையும், ‘தெய்வீக’த்தையும் இரு கண்களாகக் க்ண்டு ‘தேசப்பணி’ ஆத்துமாறு நானும் கேட்டுக் ‘கொல்’கிறேன்!

  16. எல்லா விசயங்களிலும் துணிவோடும் நேர்மையோடும் கருத்து தெரிவிக்கும் வினவின் கொள்கைகளை ஆயிரம் முறைகள் பாராட்டினாலும் தகும்

    • ஆமா..ஆமா.. வினவு இனிமே ‘தேசிய’த்தையும், ‘தெய்வீக’த்தையும் இரு கண்களாகக் க்ண்டு ‘தேசப்பணி’ ஆத்துமாறு நானும் கேட்டுக் ‘கொல்’கிறேன்!

      ஆமாம் அண்ணே கம்யூனிச தேசியத்தையும் மார்க்ஸிய தெய்வீகத்தையும் இரு கண்களாக கொண்ட “ருஷ்யதேசபக்திப்பணி” ஆத்துமாறு நானும் கேட்டுக் ‘கொல்’கிறேன்!

      மேலும் வினவு தன் கட்டுரைத்தலில் முதலாளித்துவம் தனியார்மயம் தாராளமயம் பாட்டாளிவர்க்க மயம் என்ற “மாய” வார்தைப்பிரயோகங்களை தாராளமயமாக்கி மேலும் இல்லாத சாதிகளைக் கொண்டு அரசியலில் காலடிபதிக்கிறது.

  17. a book written by the then editor of Dinamani Mr Chokkalingam gives the complete facts about Mudukulathur and Devar. it is good non partisan report. It counters the myth created about the Devar by the so called intelligentia in tamil nadu particularly shanmugasundaram of Kavya.

  18. அலுவலக பொது இடங்களில் எவ்வாறு பிறரிடம் பழகுவது?…… யார்ரா அது —- உங்கள் ஊரில் அல்லது வேலை எதுவும் செய்தால் அலுவலகத்தில் அல்லது ஒரு பொது இடத்தில இப்படி சொல்லிப்பாரேன் ——- அடிப்பான் எந்த உலகத்தில் இருக்கிறாய்? தயவு செய்து நாங்கள் சும்மா தெரிந்து கொள்ள உன் ஊர் பெயரை சொல்லேன்.இன்னுமா இப்படி எல்லாம் இருக்கீங்க?

  19. சிறந்ததொரு பதில். இந்துத்துவாவாதிகளின் தமிழக முன்னோடி முத்துராமலிங்கத் தேவர்தானோ!

    நாயக்கர்களால் வீழ்தப்பட்டு பின் ஆங்கிலேயர்களால் குற்றப் பரம்பரயைாக்கப்பட்ட முக்குலத்தோரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப் போராடியவர் முத்துராமலிங்கத் தேவர் என்று பெருமை பேசுகிறார்கள். இது உண்மை என்றால், ஒரு அடிமை மற்றொரு பிரிவினரை (தாழ்த்தப்பட்டவர்களை) அடிமைகளாக நடத்தினால் முத்துராமலிங்கத் தேவர் மீது மரியாதை எப்படி வரும்?

  20. மிக அருமையான கட்டுரை. நான் வினவில் வெகு நாட்களாக எதிர்பார்த்த கட்டுரை.

    • தேவரின் முகம் இவ்வளவு கோரமானதா?

      அத்வானியின் ஆன்மீக குரு !

      பால்தாக்கரேயின் பழைய பங்காளி !!

      மோடியின் மூத்த குடி ஓய் !!!

  21. முத்துராமலிங்கத் தேவரின் சாதிவெறி குறித்த மேலும் அதிகம் தகவல்களுக்கு:

    அசுரன் தளத்தில் (பின்னூட்டங்களையும் படியுங்கள்)
    http://poar-parai.blogspot.com/2006/07/blog-post_31.html

    அந்த பதிவு கீற்றிலும் வெளிவந்தது.
    http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=1331&Itemid=139

    இதைத் தொடர்புடைய பதிவுகள் பட்டியலில் சேர்க்கலாம்.

  22. Office Management and Communication Skills ஆகியவற்றை குறிப்பிட வேண்டி “அலுவலக பொது இடங்களில் எவ்வாறு பிறரிடம் பழகுவது?” என்று எழுதி இருக்கிறேன். இது யாருடைய மனதையேனும் புண்படுத்தும் பட்சத்தில் அதற்காக வருந்துகிறேன்.

    “இன்னும் சாதி மேலாதிக்கமும், இரட்டைக் குவளையும் நீடித்திருக்கிற ஒரு சமுதாயத்தில் அதை விமர்சிக்கிற கட்டுரையைக் கூட உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றால் காறித் துப்ப வேண்டும் போல இருக்கிறது. நாகரிகக் கனவானாக காட்சித் தர முயல்கிற சாதி வெறியர் நீங்கள்.”

    நான் சாதி வெறியனாகவே இருந்து விட்டு போகிறேன். இவ்வளவு அநாகரிக வார்த்தைகளை உங்களிடம் இருந்து வரவழைத்தது எது? அதன் பெயர் சாதிவெறி அன்றி வேறென்ன?

    ” //வினவில் பணிபுரிவோரும் , கட்டுரை இடுவோரும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த நண்பர்கள் தான் என்று முற்றாக *தெரிந்திருந்தும்* வினவை தொடர்ந்து படித்து வருபவன்.//

    இங்க தெரியுதுய்யா கொண்டை! ))

    ஆமாம். இங்குள்ள எல்லோருமே முதலில் ஒருவனை பார்க்கும்போதும் பேசும் போதும் அவன் என்ன சாதி என்று தெரிந்துகொண்டு தானே பழகு கிறீர்கள்? நீங்கள் எப்படி ? நான் உண்மையை சொன்னதும் கோபம் உடனே வருகிறது .

    ” அலுவலக பொது இடங்களில் எவ்வாறு பிறரிடம் பழகுவது?…… யார்ரா அது —- உங்கள் ஊரில் அல்லது வேலை எதுவும் செய்தால் அலுவலகத்தில் அல்லது ஒரு பொது இடத்தில இப்படி சொல்லிப்பாரேன் ——- அடிப்பான் எந்த உலகத்தில் இருக்கிறாய்? தயவு செய்து நாங்கள் சும்மா தெரிந்து கொள்ள உன் ஊர் பெயரை சொல்லேன்.இன்னுமா இப்படி எல்லாம் இருக்கீங்க?”

    தோழர், நான் நாகை மாவட்டம் மயிலாடுதுறையை சார்ந்தவன். போதுமா?

    ” ஆமா..ஆமா.. வினவு இனிமே ‘தேசிய’த்தையும், ‘தெய்வீக’த்தையும் இரு கண்களாகக் கொண்டு ‘தேசப்பணி’ ஆத்துமாறு நானும் கேட்டுக் ‘கொல்’கிறேன்!”

    யாரும் தேசியத்தையும் ‘தெய்வீக’த்தையும் இரு கண்களாகக் கொண்டு ‘தேசப்பணி’ ஆற்ற வேண்டாம். அவனவன் அவன் அவன் வேலையை பார்த்தாலே போதும்.

    “”ஆனால் இன்று வினவின் பதிவுகள் வாசிக்கும் போது வினவும் நிச்சயமாக ஒரு குறிப்பிட்ட சமுதாயதிற்கானது தான் என்று புரிகிறது” – கண்டு புடிச்சிட்டாருய்யா செர்லக் ஹோம்ஸ்! ஒவ்வொரு கட்டுரையிலுமே நேரடியாக பாட்டாளி வர்க்கத்திற்காக களம் காண வருமாறு தானே அதன் வாசகர்களை வினவு அழைத்துக்கொண்டிருக்கிறது. அது இப்பத்தான் ராசா, உங்களுக்குப்புரியுதா?”

    நீங்கள் குறிப்பிடும் அந்த பாட்டாளி வர்க்கம் எது என்று புரிகிறது. பேசாமல் வினவு for that particular paataali vargam” என்று caption போட்டு விடலாமே?

    இதே முறையில் ஒவ்வொரு குறிப்பிட்ட சாதியையும் மதத்தையும் கடுமையாக தாக்கினால் அவர்கள் தத்தமது சமுதாய சூழலில் இருந்து விடுபட்டு தாங்கள் குறிப்பிடும் பாட்டாளி வர்கத்திற்க்காக களம் காண வருவார்கள் என்று வினவும் அதன் வாசகர்களும் நம்புகிறார்களா?

    நிச்சயமாக இல்லை. மாறாக அது துவேசத்தையும் வன்முறையும் தான் வளர்க்கும், ஊக்குவிக்கும்.

    சாதி என்கிற கண்ணாடியை அணிந்துகொண்டு பார்த்தால்,பிறர் செய்யும் சாதரணமான தவறு கூட சாதியின் காரணமாக நடைபெற்றதாக தான் தெரியும். (எடுத்துகாட்டு: எனது அலுவலக பொது இட கருத்து).

    நன்றி:
    கா. ராஜேந்திரன்

    • கா ராஜேந்திரன் என்ன சொல்ல வருகிறீர்கள்.. உங்களுக்காவது புரிந்தால் சரி. பட்டாளி வர்க ஒற்றுமைக்கு முதல் எதிரியே இந்த சாதியமைப்பு தான். பாட்டாளிகள் ஒன்று சேர முதலில் அவர்களுக்குள் இருக்கும் இந்த சாதியையும், தங்கள் சாதி பாசத்தையும் ஒழித்தே தீர வேண்டும்.. இத்தனை ஆண்டுகாலம் ஆண்டைகளாக இருந்தவர்கள் கருத்தில் “ஒரு காலத்தில் நாங்கெயெல்லாம் ஆண்டைகள்” என்பது அப்படியே புதைந்திருக்கும் அந்த எண்ணத்தை ஒழித்து எநத சாதிகாரனும் சிறப்பல்ல என்று நிருபிக்க வேண்டிர்யுள்ளது.

      குறிப்பாக தேவர் சாதி காரார்கள் காலம் காலமாக தேவர் பற்றி சொல்லும் ஒருவிடயம் “தேவர் ஒடுக்கபட்ட மக்களுக்கு நிறைய நிலம் கொடுத்தார் என்பது” , அதை சொல்லிகொண்டே த்ங்கள் சுயஜாதி பாசத்தையும் வெறியையும் காட்டி வருகிறார்கள் அதனால் அதை பற்றி தெளிவான ஒரு பார்வையை கட்டுரை கொடுக்கிறது.

      இந்த எளிய கேள்வியையும் அதற்கான பதிலையும் புரிந்துகொள்ளாமால், ஏதோ பாட்டாளி , சமத்துவம் என்று ஜல்லியடிகாதீர்க்ள்.. சமத்துவத்தை விரும்புவன் இந்த கட்டுரையின் தேவை தெளிவாக தெரியும்.. உங்களுக்கு தெரியவில்லை என்றால் உங்கள் சம்த்தும் என்ற வார்த்தை வெறும் வாய் வார்த்தை தான் போலும்..

      மேலும் புரியாதவர்களுக்கு நீங்களே ஒரு நல்ல வழியை உங்கள் பின்னூட்டதில் சொல்லியிருக்கிறீகள். “அவனவன் அவன் அவன் வேலையை பார்த்தாலே போதும்.” ஆம் சாதியை ஒழிக்க ஒன்று சேர்…. இல்லையென்றால்…..

      • //பட்டாளி வர்க ஒற்றுமைக்கு முதல் எதிரியே இந்த சாதியமைப்பு தான். பாட்டாளிகள் ஒன்று சேர முதலில் அவர்களுக்குள் இருக்கும் இந்த சாதியையும், தங்கள் சாதி பாசத்தையும் ஒழித்தே தீர வேண்டும்//

        ஆமாம் சாமி,

        எல்லா சாதியையும் ஒழிச்சிட்டு

        பாட்டாளி சாதி பணக்கார சாதி என்று

        மறுபடியும் குத்துப்பாட்டுப்போட்டு வர்க்கவெறியாட..,

        வர்க்கவெறியர்களின் தேசிய கீதம் சங்கீதம்…..

        “சாதி இரண்டொழிய வேறில்லை”

        ஆள்பவன் சாதி ஆளப்படுபவன் சாதி

        ஆண்டான் சாதி அடிமை சாதி

        அமெரிக்க சாதி ருஷ்ய சாதி

        முதலாளி சாதி வேலைக்கார சாதி

        ஆதிக்க சாதி அதுகிட்ட மோதிக்கிற சாதி

        சாதிப்பட்டியலில் உடனடியாக சேர்க்கப்படவேண்டிய சாதிகள்

        1.பாட்டாளி சாதி

        2.நோட்டாளி சாதி.

    • //வினவில் பணிபுரிவோரும் , கட்டுரை இடுவோரும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த நண்பர்கள் தான் என்று முற்றாக *தெரிந்திருந்தும்* வினவை தொடர்ந்து படித்து வருபவன்.//

      இராசேந்திரன்!

      வினவு ஒரு தாழ்த்தப்பட்ட ஜாதிக்கூட்டம் என்பதற்கு என்ன ஆதாரம்?

  23. இந்த ஜாதியை ஒழி என்று முழக்கம் போடறவங்க எல்லாம் கொஞ்சம் காலேஜ் சீட்டுக்கும் கவர்மென்ட் வேலைக்கும் உங்கா ஜாதி செர்டிபிகேட்ட காட்டமா இருங்க பார்போம் ? , மத்தவன்னுக்குத்தான் ரூல்ஸ் எல்லாம் போடுரீங்க வினவு உங்களுக்குநு வரும் வேளையில் ஜாதிய நல்லா தான் சுயலாபத்திற்காக உபயோக படுதுறீங்க. தேவர் ஜாதிய திட்டி நாடார் ஜாதிய உயர்த்தி எழுதி இருக்கீங்க அப்போ அரசியல் தானே செய்யறீங்க ? முதல நீங்க உங்க ஜாதி செர்டிபிகேட் எரிப்பூ போராட்டத்த நடத்தீ ஒரு வீடியோ போடுங்கா பார்போம் ?

    • வாய் கிழிய பேசுவார்கள் ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. பிழைப்புக்காக எழுதுகிறார்கள். விட்டு விடுங்கள்.. ஐயோ பாவம்..

      • நாட்டில் வறுமை ஒழிய ஒரு அருமையான யோசனை சொன்ன முத்துராமலிங்க போஸ் அண்ணனுக்கு எல்லாரும் ஒரு ‘ஓ’ போடுங்க…!!! ஆமாம்… முத்துராமலிங்க தேவரைப் பற்றி யார் எழுதினாலும் அவர்கள் வீட்டுக்கு பொட்டி வருதாம்… வினவும் வாங்கிட்டாராம்… !!! கேக்கவே கேனத்தனமா இல்ல?

    • ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுக்க காரணமே கல்வி உட்பட அனைத்து துறைகளிலும், அனைவரும் சமம் ஆக வேண்டித் தான். வினவு உட்பட அனைவரும் அவர்களது சாதி சான்றிதளை எரிக்கவோ, அல்லது அதை பயன்படுத்தி எந்த சலுகைகளோ பெறமாட்டார்கள். எப்போது? மேற்சொன்ன சமத்துவம் வந்த பிறகு. வந்துர்ச்சான்னு நீங்க தான் சொல்லணும் ‘ஜாதியார்’ அவர்களே..!!! ஒன்னும் வேண்டாம் ஒரு போன் கால் பண்ணினா கூட போதும்..!!! இன்னும் ஏன் சாதி அமைப்புகள் எல்லாம் ஒழியலை.. எப்போ தான் இதுக்கு ஒரு விடிவு வரும்னு கேக்குறீங்களா? இப்போ கட்டுரையை திரும்ப படிங்க….

      • பொன்ராஜ் ஐயா, ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுகற்துனால ஜாதி ஒழியாது மாற்றாக வளரும் வளர்ந்துகிட்டு தான் இருக்கு, அதற்க்கு சான்று அம்பேத்கார் சட்ட கல்லூரியில நடந்த கோர சம்பவம் இன்னும் ஏராளம் சொல்லலாம். எத்தனை IAS,IPS ஆபீசர்கள் ஜாதியினால் பதவியை அடைந்து பின்னர் சமத்துவாம் அடைய துணை நிக்கறாங்க? , IAS, IPS, Doctor, Engineer ஆனாலும் தங்கள் பிள்ளைகளுக்கு (பட்டணத்தில் கான்வென்ட்ல் படிக்கின்ற பொருளாதாரத்தில் பலமடங்கு உயர்ந்து இருந்தாலும்) SC/ST செர்டிபிகேட் வச்சு தான் சீட்,வேலை வாங்கறாங்க இது அயோகிய தனம் இல்லையா ? பல அரசு அலுவலகங்கள்ளயே ஜாதி சார்ந்த பணியாளர்கள் சங்கங்கள் இருக்கு. IAS,IPS ஆபீசர்கள பிரெச்சனை வந்தா நான் தலித், நான் நாடார் என்று ஒரு ௬ட்டத்த சேதுகறாங்க. இப்படி எல்லாம் இருந்தா ஜாதி ஏற்ற தாழ்வுகள் சமன் படுமா?.

        ஜாதி அடிப்படையில் இல்லாம பொருளாதார அடிபடையில் இட ஒதுக்கீடு கொடுத்தா வாழ்வாதாரம் இல்லாததுனால வருகின்ற ஒரு தாழ்வு மனப்பான்மை மறையும், ஜாதிசமுதாயங்களுக்கு இடையே வர்த்தகம் பெருகும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் மனப்பாங்கு பெருகும். வருமையினால் தாழ்த்தப்பட்டு உழைப்பினால் வளர்ந்து இருக்கிரோம் என்ற மன தைரியம் உண்டாகும், மொத்தத்தில் ஏற்ற தாழ்வுகள் பற்றி கவலை படாமல் முன்னேற்ற பாதையில் சென்று யாருக்கும் அஞ்சிவாழாமல் இருக்க வழி பிறக்கும். இதபத்தி இன்னும் பேசலாம் ஆனா இத எல்லாம் கேக்கவா போரீங்க ? இலவசங்களுக்கு பாழகி போயாச்சு என்றால் எப்படி உழைக்க தொனும் ?

        தேவர திட்டுங்க போர் அடிச்சா பாப்பான திட்டுங்க போர் அடிச்சா கவுண்டன திட்டுங்க அப்படியும் போர் அடிச்சா முதலாளிங்க மேல வெறிய காட்டுங்க..

        • //பொன்ராஜ் ஐயா, ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு கொடுகற்துனால ஜாதி ஒழியாது மாற்றாக வளரும் வளர்ந்துகிட்டு தான் இருக்கு,//
          இட ஒதுக்கீடு கொடுத்தா ஜாதி வளருமா? ரொம்ப புதுசா இருக்குங்க உங்க சிந்தனை…!!! முதலில் நீங்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இங்கு மொத்தமே OC ,BC ,SC/ST என்ற பெரும்பிரிவுகள் மட்டுமே உள்ளன. இதன் அடிப்படியில் மட்டுமே இட ஒதுக்கீடு கொடுக்கப் படுகிறது. நீங்கள் சொல்வது போல ‘ஜாதி’ அடிப்படையில் அல்ல. அப்புறம் எப்படி ஜாதி வளரும் என்று சொல்கிறீர்கள்? ஜாதி வளரும் என்பதன் பொருள் தான் என்ன? அந்த ஜாதியில் உள்ள நபர்கள் வளர்வார்கள் என்பதா? அது நல்லது தானே. அதில் என்ன சிக்கல்? அல்லது, அந்த ஜாதியில் உள்ள நபர்களுக்கும் மற்ற ஜாதி நபர்களுக்கும் (உ.ம்: வன்னியனுக்கும், பறையனுக்கும்) இடையே காழ்ப்புணர்ச்சி அதிகமாகும் என்கிறீர்களா? இவனது இடத்தை அவனோ, அவனது இடத்தை இவனோ பிடிக்கவில்லையே? மேலும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது புழுத்து போன ஒரு யோசனை.
          இதை படித்து பாருங்கள் தெரியும்.

          dharumi.blogspot.com/2010/05/blog-post.html

          • ஓசியில் சோறு தின்று பழகியவனுக்கு உழைத்து சாப்பிடும் எண்ணம் வரவே வராது என்பதற்க்கு ஒரு எடுத்துகாட்டு தான் தருமியின் பதிவு, மேலும் தாங்கள் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க பார்கிறீர்கள் OC ,BC ,SC/ST என்ற பெரும்பிரிவுகள் மட்டுமா உள்ளது ? OC ,BC ,OBC, MBC, SC and ST இதை தவிர Minority Institutions மற்றும் Religious Institutions (for Muslims and Christians), Military Quota, தமிழ் புலவர் Quota என்று பல இருக்கிறது . இந்த OC – Open Category பிரிவில் (BC ,OBC, MBC, SC and ST) அனைவரும் அடக்கம் அதாவது Uppercaste/Forward caste இல் உள்ளவர்கள் — இடங்களில் – அல்லது 4 இடங்கள் தான் கிடைக்க வாய்ப்பு. தருமியின் பதிவுக்கு இதுதான் பதில்
            http://churumuri.wordpress.com/2007/05/01/meet-the-brahmins-indias-newest-toilet-cleaners/

            • தருமி அவர் பதிவில் கூறுவது போல பெருக்குபவர்கள், காலனி தைபவர்கள் IIT/AIIMS/IIM வர கூடாது என்று ஒன்றும் இல்லை. அந்த போராடும் மாணவர்கள் Reservation and Quota System வந்தால் Merit அதாவது தகுதி அடிப்படை முறையில் வழங்கப்படும் இடங்கள் சாதி அடிப்படையில் வழங்கப்படும் இதனால் தகுதிவாயிந்த மாணவர்கள் எந்த பிரிவாக இருந்தாலும் சரி இப்படி பெருக்குவதும் காலனி தைப்பதும் போன்ற வேலைகள் தான் செய்ய நேரிடும் என்று விளக்குவதற்காகவே அவ்வாறு புகைப்படம் எடுத்து பரிசுரைதனர். தங்கள் சுயலாபத்திற்காக ஒரு விஷயத்தை தங்கலுக்கு சாதகமான முறைக்கு மாற்றியமைத்து அர்த்தம் வேறுபடுத்தி விளக்கி எழுதுபவர்கள் எப்படி பட்டவர்கள் கபட நாடகம் போடும் வகை தானே.
              இருந்து விட்டு போகட்டும்! இதையும் எங்களால் தாக்கு பிடித்து முன்னேற முடியும்!
              வாழ்க சமுதாயத்தை சுரண்டும் தலித் போராட்டம், வளர்க தலித் போராளி என்ற மாயை காட்டி சுயலாபம் ஈட்டும் பிதற்றல் போராளிகள்!

    • புலவரே கொஞ்சம் நேரா பாருங்க !

      கழுத்து சுளுக்கா ?

      ஒவரா பேசியதால திருப்பிட்டாங்களோ ?

  24. வினவு!! அருமையான கட்டுரை..உங்கள் வினவில் முக்குலத்தோரை மட்டும் எதிர்ப்பது தான் உங்கள் கனவு என்று வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

    ஐயா..நீங்கள் யாரென்று எவனுக்கும் தெரியாது. உங்கள் இனத்தோர் செய்யும் அட்டூழியங்களை அருகில் இருந்து பார்த்தவன் நான். உங்கள் இனத்தோர் ஒன்றும் யோக்கியர்கள் இல்லை. திருநெல்வேலி பக்கம் வந்து பாருங்கள்.. அந்த மூன்று தலைவர்கள் உங்கள் சமுதாய மக்களை எப்படி பயன் படுத்துகிறார்கள்..ஏன் அவர்களை பற்றி உங்களால் எழுத முடியவில்லை? வடக்கில் இருவர் இருந்து கொண்டு உங்கள் சமுதாய மக்களை எப்படி பயன் படுத்துகிறார்கள். எல்லாம் உமக்கு தெரிந்ததே. ஆனால் அவர்களை புரட்சி வாதிகள் என்று தான் தாங்கள் கூறுவீர்கள். இதை விட கொடுமை என்ன வேண்டும்.

    தேவர் என்பவர் மறைந்து எத்தனையோ வருடம் ஆகி விட்டது. இன்னும் உங்கள் ஜாதி வெறி அடங்கலையா? உங்கள் சமுதாய மக்களுக்கு நல் வழியை போதியுங்கள். இன்னும் பழமையை வைத்துக்கொண்டு பண உதவிக்காக இது போன்ற கட்டுரையை எழுத வேண்டாம்.

    உங்கள் சமுதாய நண்பர்கள் எழுதுவதை பார்த்து உங்களுக்கு உற்சாகமாக இருக்கலாம். அதை போல் அவர்களுக்குள் உங்கள் ஜாதி வெறியை மறைமுகமாக திணிப்பது சரியானதா?

    இப்பொழுது உங்கள் இனத்து மாணவர்கள் செய்யும் அட்டூழியம் தெரியுமா? தென் மாவட்ட கல்லூரிகளை ஆய்வு செய்யவும்.

    நல்ல பயனுள்ள கட்டுரை இளைய சமுதாய மாணவர்களுக்கு நல்லது போதிக்கட்டும்.

    நெல்லை அம்ஸ் பாண்டியன்

    • அவர்கள் அடங்கி கிடந்தவரை உங்களுக்கு பிரச்சனையில்லை இப்போது அடங்க மறுக்கிறார்கள் அந்த மாணவர்கள் உங்க உயர் சாதியினருக்கு அடங்க மறுப்பதால் இளைய சமுதாய மாணவர்களுக்கு நல்லது போதிக்கட்டும் என்று நெல்லை அம்ஸ் பாண்டியன் பிதற்றுகிறார்
      சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரியின் பெயரை போடாமல் அரசு சட்ட கல்லூரி என்று பிரசுரித்தனர் தேவரின மாணவர்கள் அதனால் எத்தனை பிரச்சனைகள் நடந்தது என்று நாம் எல்லோரும் அறிவோம் ஜாதி வெறியை ஆரம்பித்து வைப்பவர்கள் அவர்கள் அவற்றை எதிர்த்து போராடும் எங்களை பார்த்தா ஜாதி வெறியர்கள் என்கிறீர்கள் பாண்டியன் அவர்களே

      முத்துராலிங்க தேவர் மறைந்து எத்தனையோ வருடம் ஆகிவிட்டது. இன்னும் உங்கள் ஜாதி வெறி அடங்கலையா என்று கேட்கும் பாண்டியன் அவர்களே

      மதுரையில் 13 கிராமங்கள் திண்டுகல்லில் 24 கிராமங்கள் சிவகங்கயையில் 15 கிராமங்கள் என 213 கிராமங்கலில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளை எவிடன்ஸ் அமைப்பு ஆய்வு செய்ததுஇதில் 104 கிராமங்களில் இரட்டை குவளை இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டது.சில கிராமங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு கண்ணாடி குவளையும் தாழ்தப்பட்ட மக்களுக்குசில்வர் குவளையும், பிளாஸ்டிக் கப்பும் கொடுக்கபடுகிறது தென்தமிழகத்தில் 97 கிராமங்களில் பொது பாதையில் ஆதிதிராவிடர் சடலத்தை எடுத்து செல்ல முடியாது 153 கிராமங்களில் மாற்று சாதியினர் குடியிருப்பு வழியாக எடுத்து செல்ல முடியாதுஆதி திராவிடர் சுடுகாட்டில் தண்ணீர, மின்சாரம், கொட்டகை என எந்த அடிப்படை வசதியும் கிடையாது சலூன் கடைகளில் கூட பாகுபாடு பார்க்கபடுகிறது 142 கிராமங்களில் ஆதிதிராவிடர்களுக்குமுடி வெட்ட கூடாது என்று தடை உள்ளது சில கிராமங்களில் முடிவெட்டும் கருவி இரண்டு செட் வைத்துகொண்டு அதில் ஒன்றை ஆதிதிராவிடர்களுக்கு பயன்படுத்துகின்றனர்இது போல ரோசன் கடை மருத்துவமனை சாவடிகள் என அனைத்து இடங்களிலும் பாகுபாடு தொடர்கிறது 45 ஆதி திராவிட ஊராட்சி தலைவர்கள் வன்கொடுமைக்கும், சித்ரவதைக்கும் ஆளாகி உள்ளனர் இவையெல்லாம் எவிடன்ஸ் அமைப்பின் நேரடி கள ஆய்வில் வெளிவந்த உண்மைகள்

      இவையெல்லம் அருகில் இருந்து பார்க்கும் நெல்லை அம்ஸ் பாண்டியனுக்கு தெரியாதா
      நாங்களும் திருநெல்வேலி பக்கம் வந்து பார்த்தவர்கள் தான்
      2001 வருடம் மேலூர் அருகில் உள்ள கிராமத்திற்கு என் தாத்தா என்னை அழைத்து சென்றார் ஒரு டீ கடைக்கு சென்றபோது அந்த டீ கடையில் உள்ள ஒரு பெண்மணி
      நீங்க என்ன வர்ணம் என்று கேட்டார் என் வர்ணத்தை சொன்ன பிறகே அந்த டீ கடையில் எங்களுக்கு கண்ணாடி கிளாஸ்சில் டீ கிடைத்தது வெளியில் அமர்ந்திருந்த எங்களை உள்ளே வந்து அமர சொன்னார் அந்த பெண்மனி

      தேவர் இறந்து எத்தனையோ வருடம் ஆனாலும் அவர் ஏற்றி வைத்துவிட்டு போன ஜாதி தீ எரியும் வரை தாழ்தப்பட்டவர்கள் அடங்கமாட்டர்கள்

      • அப்படியா அண்ணே!! புள்ளி விபரம் நல்ல தான் இருக்கு..
        எங்களுக்கு இருப்பது ஜாதி வெறி என்றால் உமக்கு இருப்பது? ரொம்ப தெளிவா பேசுகிறோம் என்று கதை விட கூடாது.
        அடங்க மறுத்தவர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா அண்ணே. கஞ்சிக்கு வழி இல்லாமல் கொலை, கொள்ளை, வழிப்பறி என்று தமிழ் நாட்டை கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
        நாங்களும் இந்த வேற்றுமையை விரும்பாதவர்கள் தான். ஆனால் எதிர்க்கிறோம் என்று தங்கள் தலையில் மண்ணை வெறி போட்டு கொண்டவர்கள் ஏராளமானோர்.
        தாங்கள் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம், அதுதான் உங்களுக்கு நியாயம்? கேட்டால் எதிர்த்து போராடுகிறோம் என்பீர்கள். இப்படி பேசி பேசியே உங்களை நீங்கள் தரம் தாழ்த்தி கொள்ள வேண்டாம் “கொரில்லா”.

        தாங்கள் பெயரை கேட்டாலே ரொம்ப பயமா இருக்கு..ஹி..ஹி. உங்கள் பெயர் மட்டும் தான் கொரில்லா வா அல்லது செயலும் அப்படித்தானா?

        • எங்களுக்கு இருப்பது ஜாதி வெறி அல்ல ஜாதி வெறியர்களை எதிர்கும் வெறி எவிடன்ஸ் அமைப்பின் நேரடி கள ஆய்வில் வெளி வந்த உண்மைகள் இவை கைபுன்னுக்கு கண்ணாடி எதற்கு கண்டதேவி கோவில் தேரை தலித்துகள் இழுக்க முடியாது உண்மையா இல்லை பதில் சொல்லூங்கள்

          //அடங்க மறுத்தவர்கள் இப்போது என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் தெரியுமா அண்ணே. கஞ்சிக்கு வழி இல்லாமல் கொலை, கொள்ளை, வழிப்பறி என்று தமிழ் நாட்டை கெடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.\\

          உங்களுக்கு அடங்கி போய் இருந்தால் அவர்கள் கஞ்சிக்கு வழி செய்திருப்பீர்கள் அப்படிதானே நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய் அவர்கள் எல்லா வழிகளிலும் முன்னேறி கொண்டுதான் இருக்கிறார்கள் கொலை, கொள்ளை செய்கிறார்கள் என்று
          பொய் சொல்லவேண்டாம்

          //இப்படி பேசி பேசியே உங்களை நீங்கள் தரம் தாழ்த்தி கொள்ள வேண்டாம் “கொரில்லா”.\\

          சாதி இந்துகளிடம் நாங்கள் எந்த தரத்தையும் எதிர்பார்க்கவில்லை எங்க தரம் எங்களுக்கு தெரியும்

        • முத்துராமலிங்க போஷ்,
          கொலை, கொள்ளை, வழிப்பறி யாருடைய குலத் தொழில் என்று வரலாற்றைப் பாருங்கள்.திருடுவதால் கள்ளர் என்று பெயர் கொண்ட நீங்கள், பிறருடைய பட்டமான தேவர் என்பதை சாதிப் பெயராகக் கொண்டுள்ளது ஏன்? தஞ்சை கள்ளர்கள் தங்களை தேவர் என்று அழைப்பது கிடையாதே. மேலும் அகமுடையார் வடக்கில் முத்தலிப் பட்டம் அல்லவா சூட்டிக்கொள்கிறார்கள்.அரசியலுக்காய் சாதிப் பெயரையே மறைத்து வாழும் நீங்கள் சபையில் நாயம் பேசுவது நகைப்புக்குரியது,.அதுவும் திருடும் குலத் தொழிலை அடுத்தவர் மேல் சுமத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.

          மேலும் தலித் என்பது சாதி அல்ல. அது ஒரு பிரிவு. அதில் 78 சாதிகள் உள்ளது.

          • Do u know we took the thevar pattam ???? Who said kallar are thief… Pattam is means family name we can’t change that… Thevar pattam is belongs to mukkulathore ppl… We are using this from raja raja cholan thevar as i aware ok… who got thevar pattam …. entha polapuku poi engai vathu we never hidden our community name we are saying my community as it is ok not like other who are trying to change the their community name…

            We are the descent of moovendra ok

        • முத்துராமலிங்க போஸ்…
          உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட மானம் ரோசம் கிடையாதா? . திருட்டு, கொலை ,கொள்ளை, வழிப்பறி கள்ளர்களின் குலத்தொழில் என்பது சங்க காலத்தில் இருந்து இன்று வரை தொடரும் வரலாறு. அன்று ஊர்ப்புரத்திற்கு வெளியில் இருந்து திருடினீர்கள். இன்று அரசியலில் இருந்து கொண்டு அதே தொழிலைத் தான் செய்கிறீர்கள். இதை உலகே அறியும். நீங்கள் அடுத்தவனைப் பார்த்து பொய்யான பழியை சுமத்த முயற்ச்சிப்பது வேடிக்கையானது.

    • இந்த கட்டுரை முத்துராமலிங்கத் தேவரின் சாதி வெறியைப் பற்றியது. ஒரு சாதி வெறியனை அங்கீகரித்து சாமியாக்கி வரும் சூழலில் இது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. அரசியலும் சாதிமயமாகி இருக்கிறது. கிராமத்துக் காற்றே படாத நடுத்தர வர்க்க நாகரிகக் கோமான்களுக்கு களத்தில் உள்ள நிலைமைகள் குறித்து என்ன தெரியும். தாழ்த்தப்பட்டவர்களை ஊர் பஞ்சாயத்து தலைவராகக் கூட ஏற்றுக்கொள்ள முடியாத சமூகம் இது. அதனால் இது போன்ற பிரச்சாரங்கள் தேவைப் படுகின்றன.

      கட்டுரையில் தரப்பட்ட எந்த ஒரு கருத்தையும் எதிர்க்கத்திராணி இல்லாமல் தனது சாதிப் பற்றை தீர்த்துக்கொள்ள செய்யப்பட்ட சப்பில்லாத விமர்சனம் தான் மேலே உள்ளது. உங்கள் கருத்துப்படி நரேந்திர மோடியைக் கண்டிக்கக் கூடாது, முஸ்லிம்களுக்கு எப்படி ஆபிசில் போய் சாம்பிராணி போடுவது என்று பாடம் எடுக்க வேண்டும், அப்படித்தானே?

  25. முத்துராமலிஙம் எதுக்கு ‘தேவர்’னு ஜாதி பேர போட்டுருக்கார்? எதுக்கு அந்த ஆலுக்கு பூசை பன்ரானுஙக? அவர் என்ன கடவுலா? தேவன், பல்லன், கவுன்டன், அய்யர்,தலித் போன்ர எல்லா சாதிகலிலும் மிருகங்கல் உல்லன.

    மனிதன் மட்டுமே மனிதன்!!!

    வினவு, எதுக்கு நாடாருக்கு ஓவரா சொம்பு தூக்குர?

    • ஒரு திருத்தம். வினவு முட்ட/மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கவில்லை.
      முட்ட/மூட்டி விட்டு வேடிக்கை பார்த்தவரை பார்க்க வைத்திருக்கிறது.

  26. விபூதிப் பட்டையும், குங்குமப் பொட்டும் கொண்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர். This is sufficient for Vinavu to oppose anybody.

    • விபூதி பட்டையோடிருந்த சிவனடியார் ஆறுமுகசாமியை தோளில் தூக்கிக்கொண்டு அடி உதை வாங்கி சிதம்பரம் கோயிலுக்குள் தமிழைக் கொண்டு சென்றது யார்? இதே ம. க. இ. க தோழர்கள் தானே?

      • அடி உதை வாங்கினார்களா ம க இ க தோழர்கள் என்ன சொல்கீறீர்கள் போதெம்கின் சூழ்நிலை கருதி ஆறுமுகசாமியை தோளில் தூக்கி செல்லும்போது அமைதியுடன் இருந்தார்கள் பதில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகஇக தோழர்கள் நினைத்திருந்தால் அங்கு இருந்த அத்தனை பூனூலும் அறுந்து போயிருக்கும்

        • போலீசு தடியடி நடத்தி தோழர்களைக் கைது செய்ததைத் தான் குறிப்பிட்டேன். குடுமிகள் தோழர்களை அடிக்கத் துணியவில்லை. அவர்கள் போலீஸ்காரர்களைத் தான் கடித்து வைத்தார்கள். 🙂 🙂

    • கிருபானந்த வாரியார் கூடத்தான் விபூதி பட்டையையும், பொட்டும் வைத்திருந்து முருகனை வழிபட்டார். ஆனால் அவரைப் பற்றி வினவு இது போல கட்டுரை எழுதியுள்ளதா என்ன? “முத்துராமலிங்க தேவர் என்ற சாதி வெறியர் அணிந்த விபூதி பட்டையை பற்றி” இந்த கட்டுரை குறிப்பிடவில்லை. “விபூதி பட்டை அணிந்த முத்துராமலிங்க தேவர் என்ற சாதி வெறியரை” பற்றி தான் கட்டுரை பேசுகிறது. பூவை பூவுன்னும் சொல்லலாம்…. புஷ்பம்னும் சொல்லலாம்…’சர்வ்’ சொன்ன மாதிரியும் சொல்லலாம்…!!! 🙂

  27. Section 295A of the Indian Penal Code punishes as hate speech insults or attempts to insult the religion or the religious beliefs of any citizen with deliberate and malicious intention to outrage their religious feelings.

    295A. 5[ Deliberate and malicious acts intended to outrage religious feelings of any class by insulting its religion or religious beliefs.– Whoever, with deliberate and malicious intention of outraging the religious feelings of any class of 6[ citizens of India], 7[ by words, either spoken or written, or by signs or by visible representations or otherwise] insults or attempts to insult the religion or the religious beliefs of that class, shall be punished with imprisonment of either description for a term which may extend to 8[ three years], or with fine, or with both.]

    ஜெய் Hஇந்த் !!!

    • வக்கீல் அய்யா இவங்களை உள்ள புடிச்சி போடுங்க..

    • கனம் கோர்ட்டார் அவர்களே…. சாதி வெறிப் பேச்சுக்கு முத்துராமலிங்கத்த மொதல்ல கோர்ட்டுக்கு இழுத்துட்டு வரணும். வாரீங்களா போயி தோண்டுவோம்?

      • போவோமா பசும்பொன்னுக்கு??நாங்க ரெடி நீங்க ரெடி யா????????

        • நாங்க ரவுடி. நீங்க ரௌடியா -ன்னு கேட்டா பொருத்தமா இருக்கும். 🙂

        • நாய் கூட தன்னோட தெருவுல கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் குறைக்கும். பின்ன உங்கள பத்தி சொல்லவா வேணும் 🙂 🙂

          ஒரு ——– கும்புட்டுட்டு திரியிரவனுங்கள திருத்தனும்னா இந்த மாதிரி நூறு பதிவு வரணும்.

        • பசும்பொன்னு வீரக்கதை எல்லாம் கிடக்கட்டும்..பங்காளி..
          நம்மாளு ஒருத்தர் பாப்பாத்தியோட காலடி மண்ணை நக்கிக்கிட்டு அமைச்சரா ‘வீரமா’ இருக்காரே.அதாங்க ஓ.பி..அந்த வீரக்கதையைப் பத்தி என்னா நினைக்கிறீங்க? எப்படி நம்மாளு பாப்பாத்திக்கு செம்பு தூக்குறமோ அதே மாதிரி நம்மளுக்கும் கீழே நாலு பேரு சொம்பு தூக்கணும்..அப்படிங்கற சமூக நீதியா?

          • நண்பா. உனக்கு புரியலையா???
            இது தான் சமத்துவம்..எல்லாம் உங்களிடம் இருந்து வந்தது தான். .
            இப்போது புரிகிறதா??

  28. காலங்காலமாக தேவர் மீது பெருமை ஏற்றுவதற்காக சொல்லப்படுவது என்னவென்றால், மீனாட்சியம்மன் கோவிலுக்குள் தாழ்த்தப்பட்டோர் நுழைவுக்கு இவர் துணையாக நின்றார் என்பதுதான்.

    முதலில், தாழ்த்தப்பட்டோர் மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்த வரலாறையும் அதில் தேவர் ஆற்றிய பங்கையும் பார்ப்போம்.

    காங்கிரசுக் கட்சியின் ராஜாஜி ஆதரவு கோஷ்டியைச் சேர்ந்த மதுரை வைத்தியநாதய்யர், 1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் நாள், தும்பைப்பட்டி கக்கன் (பின்னாளில் காமராஜின் அரசில் உள்துறை அமைச்சராக இருந்தவர்) உள்ளிட்ட தாழ்த்தப்பட்டோர்கள் 5 பேரையும், விருதுநகர் சண்முக நாடாரையும் அழைத்துக்கொண்டு, அதுவரை தாழ்த்தப்பட்டோர்களுக்கும், நாடார் உள்ளிட்ட சாதியினருக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்த மதுரை மீனாட்சி கோவிலுக்குள் நுழைந்தார். இக்கோவில் நுழைவுக்கு அன்றைய கோவில் அறங்காவல் அதிகாரியான ஆர்.எஸ்.நாயுடு உறுதுணையாக இருந்தார்.

    1939இலோ, அதற்கு முன்னரோ மீனாட்சி கோவிலுக்குள் நுழையும் உரிமை கோரி தாழ்த்தப்பட்ட மக்களிடையே ஏதேனும் போராட்டம் நடத்தப்பட்டதா, அக்கோவில் நுழைவில் பெருந்திரளாக தாழ்த்தப்பட்ட மக்கள் பங்கெடுத்தனரா என்றால் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும், 1920களிலும் கோவில் நுழைவு உரிமை கோரி நாடார்களாலும், சுயமரியாதை இயக்கத்தாலும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டாலும், அந்தக் கோரிக்கையை முன்வைத்து தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பாகத் திரண்டு அப்போது போராடியதில்லை.

    1932ஆம் ஆண்டில் சென்னையில் ஜெ.சிவசண்முகம் (பிள்ளை) தலைமையில் கூடிய தாழ்த்தப்பட்டோர் மாநாடு கூட “”கோவில் நுழைவு அவ்வளவு அவசியம் இல்லை என்று கருதி” தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. (“”பண்பாட்டு அசைவுகள்”, தொ.பரமசிவன், காலச்சுவடு பதிப்பகம், பக்.188).

    1934ஆம் ஆண்டில் டாக்டர் சுப்பராயனின் தலைமையிலான சென்னை மாகாண அரசு கொண்டுவர இருந்த கோவில்நுழைவு மசோதாவை ஆதரிக்கச் சொல்லி காந்தி கேட்டுக்கொண்டபோது , டாக்டர் அம்பேத்கர் அதனை ஆதரிக்க மறுத்துள்ளார். “”கல்வி, பொருளாதாரம், அரசியல் ஆகிய துறைகளில் தாழ்த்தப்பட்டோர் முன்னேறும்போது ஆலய நுழைவு தானாகவே நிகழும்” என்று காந்திக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பட்டிருந்தார். (“”சமூக உரிமைப் போராளி இம்மானுவேல் தேவேந்திரர்”, தமிழவேள், பண்பாட்டு ஆய்வகம், பக். 89)

    ஆக, தாழ்த்தப்பட்ட மக்களே இக்கோரிக்கையை முன்வைத்துப் போராடாத நிலையில், இதற்காகப் பேரளவில் திரளாத நிலையில், மதுரை மீனாட்சி கோவில் நுழைவை காங்கிரசு கட்சியினர் நடத்த வேண்டிய அவசியம் என்ன?

    அன்றைக்கு காங்கிரசுக்குள் இருந்த சத்தியமூர்த்திராஜாஜி கோஷ்டிப்பூசலில், சத்தியமூர்த்தி கோஷ்டிக்கு இணையாகத் தமக்கு ஆதரவாளர்களை திரட்டவும், கட்டாய இந்தியைத் திணித்து பொதுமக்களிடம் சம்பாதித்திருந்த வெறுப்பைத் தணிக்கவும் ராஜாஜி கோஷ்டி கண்டுபிடித்த தந்திரமே கோவில் நுழைவு.

    கோவில் நுழைவில் முத்துராமலிங்கத் தேவரின் பங்கு என்ன?

    ராஜாஜி கோஷ்டியால் கோவில் நுழைவு நடக்க இருப்பதை அறிந்திருந்த மீனாட்சி கோவில் பட்டர்கள், ராஜாஜியின் எதிரணியைச் சேர்ந்த முத்துராமலிங்கத் தேவரை அணுகி, கோவில் நுழைவை அடியாட்கள் வைத்து அடித்து, தடுத்து நிறுத்த வேண்டினார்கள். தேவரால் அதற்கு உதவ முடியவில்லை. காரணம், கோவில் நுழைவு நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், அவரின் தூண்டுதலால் மதுரை பின்னலாடைத் தொழிற்சாலை, சிந்தாமணி திரையரங்கம் ஆகியவற்றில் சாதி ரீதியான வன்முறை நடைபெற்றிருந்ததால், அவர் எந்நேரமும் கைதாகக் கூடிய சூழ்நிலையில் இருந்தார். எனவே, தேவரால் பட்டர்கள் வேண்டுகோளின்படி அடியாட்களை அனுப்பி வைக்க முடியவில்லை. (மேற்கூறிய நூல், பக். 4748 மற்றும் “”முதுகுளத்தூர் கலவரம்”, தினகரன், யாழ்மை வெளியீடு, பக். 106).

    தேவரின் எதிர்ப்பில்லாமல் கோவில் நுழைவு நடந்தது. இதுதான் முத்துராமலிங்கத் தேவரின் கோவில் நுழைவு பங்களிப்பு!

    நன்றி: புதிய ஜனநாயகம்
    http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1119:2008-05-01-17-30-20&catid=36:2007&Itemid=27

  29. “”முதுகுளத்தூர் கலவரம்”, எனும் நூலின் மூலம் தேவரின் சாதிவெறியை அம்பலப்படுத்தியவர் தினகரன். இவரும் இதே சாதியைச் சேர்ந்தவர்தான் எனினும் சாதிவெறியை ஒழிக்கப் போராடியவர். இந்நூல் மூலம் சாதிவெறியைக் கண்டித்தபடியால் தினகரனை தேவரின் அடிப்பொடிகள் தினகரனைக் கடத்திச் சென்று பனைமரத்தின் கருக்குமட்டையால் கொஞ்சம் கொஞ்சமாக தினகரனின் கழுத்தை அறுத்துக் கொன்றனர். அறிவாளாக் வெட்டுப்பட்டிருந்தால் கூட சில நிமிட வலியோடு உயிர் போய் இருக்கும். சாதி வெறியைக் கண்டித்த சொந்த சாதிக்காரனையே துடிதுடிக்கக் கொன்று ரசித்ததுதான் சாதிவெறி..

    • சுனாபானா உங்கள் பின்னூட்டத்தை படித்த பிறகாவது இந்த முத்துராமலிங்கபோஸ் போன்றவர்கள் திருந்தட்டும்

  30. கண்டதையும் வாந்தி எடுத்துட்டு கடைசியில் ஆதாரம் னு ஜீவபாரதியின் புத்தகத்தை எல்லாம் போட்ருகீங்க. இதே ஜீவபாரதி பத்தி உங்களோட இன்னொரு பதிவுல தேவர் பெருமை பேசுபவர் னு சொல்லி இருக்கீங்க .

    “தேவர் சாதிவெறித் தலைவர்களான முத்துராமலிங்கத் தேவர், மூக்கையாத் தேவர் போன்றோருக்கு அவ்வப்போது சிறப்புக் கட்டுரைகளை வெளியிடும் ஜனசக்தியில் பணிபுரியும் ஜீவபாரதியோ, டஜன் கணக்கில் தேவர் பெருமை பேசும் நூல்களையும் வெளியிடுபவர். ”

    https://www.vinavu.com/2009/12/16/pseudo-secular-casteist-seeman/

    ஏன் நிலையாவே இருக்க மாட்டீங்களா? வேணும் னா ஒன்னு வேணாம்னா ஒன்னு னு அதானே உங்க கொள்கை.

    தம்பி சூனா பானா,
    நிறைய கணக்கு, புள்ளி வெவரம் லாம் சொல்ற, அப்டியே நீ தமிழ் நாட்டுல உள்ள ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன் ளையும் உள்ள ரவுடி, பொறுக்கி , மொள்ளமாறி, முடிச்சவுக்கி , சாரயம் விக்கிறவன், தாலிய அறுக்குறவன், பிக் பாக்கெட், ஜேப்படி ஆளுங்க லிஸ்டையும் போட்டு இருந்தீனா நல்லா இருந்துருக்கும் , போய் பாரு எல்லாத்துலயும் உன் ஆளு தான் முன்னாடி நிக்குறான்.

    கொஞ்சம் அதிகாரமும் பணமும் வந்துட்டா, நீங்க ஆடுற ஆட்டம் என்ன? அப்பப்பா , தாங்க முடியலைடா சாமி,

    சிங்கள் டீ க்கு லாட்டரி அடிச்சிட்டு இருந்தவனெல்லாம் , டாட்டா சுமொவாம், ரவுடி யாம்,கட்ட பஞ்சாயதாம், எவனுக்கு எவண்டா பஞ்சயத்து பண்றது? கால கொடுமைடா சாமி,

    உடனே அவனை பார்த்துட்டு இந்த சில்லு வண்டு பசங்களெல்லாம், அவர் எங்க மாமா, மச்சான், னு திமுரெடுத்து பஸ் ஸ்டான்டுலேந்து , பள்ளி கூடம் வரைக்கும் பண்ற அநியாயம் இருக்கே அதை பத்தியெல்லாம் ஒருத்தன் கூட எளுதறதில்ல.

    ஒரு இத்துப்போன ஜீன்சு, கேவலமா அரை ஜாக்கெட் மாதிரி ஒரு சட்டை, எண்ணையே காணாத தலை, ஆட்டுதாடி, இதுதான் பொதுவான அடையாளம்,

    பஸ்டாண்டு, காலேஜ் ஸ்கூல் வாசல், பேருந்து, சினிமா தியட்டர், இன்னும் மக்கள் கூடுற இடம், இங்கேயல்லாம் கூட்டம் சேர்த்துகிட்டு , போற வர பொன்னுகளேர்ந்து, கிழவியை கூட விடாம நக்கல், கிண்டல் கேலி, வீனா போற வர மத்த பசங்களை வம்பிழுத்து தகராறு, இதை எவனாவது தட்டி கேட்டனா , உடனே இருக்கவே இருக்கு, சாதி பேரை சொல்லி திட்டிடானு , பொய் கேஸ், அங்கே இருக்கற அள்ளக்கைங்க மறைமுக சப்போர்ட். சாதி பாசமாம்.

    எழுபது மார்க் எடுத்து பார்டர் ல பாஸ் பண்ற முட்ட காலம் புடுங்கிக்கு கோட்டாவுல மெடிக்கல் சீட்டு, எஞ்சினீரிங் சீட்டு. ஏன்னா அவன் தலித்தான், அவனை ரொம்ப தாழ்த்திட்டான்கலாம்.

    அதே பரீட்சைல எழுபது சதவீதத்துக்கும் அதிகமா எடுத்த பையனுக்கு சீட்டு கிடையாதாம், அவன் மேல் சாதியம். என்ன அநியாயம்டா இது.?

    அவன் படிச்சு முடிக்கிற வரைக்கும் காலேஜ் பீஸ் லேர்ந்து கக்கூஸ் போற வரைக்கும் எல்லாத்துக்கும் ஸ்காலர்ஷிப். ஐயோ ஐயோ.

    படிச்சு முடிச்சு வெளிய வந்தா அதே கோட்டா, அரசங்க உத்தியோகம். அங்கே போயும் சும்மா இருப்பானா? கிடையாது,

    மறைமுகமா இயக்கம், கூட்டம் னு சாதி வெறியை வளர்குறது.

    உங்களை இந்த அளவுக்கு தேத்தி உட்டுதே இந்த நாடு, குறைஞ்சது அதுக்க்காகவாவது விசுவாசமா இருங்களேன்..

    நீங்க நொடிக்கு நூறுதடவ சொல்ற ரஷ்ய , சீனா வுளலாம் எங்கடா இருக்கு இந்த கோட்டா? யாராவது பதில் சொல்லுங்க …

    உங்களை சொல்லி குத்தம் இல்ல, ஓட்டுக்காக மலம் கூட திங்க துணியும் இந்த அரசியலை சொல்லணும் .

    இப்படியே போய்கிட்டு இருந்தா , இந்த மாதிரி கேவலைதை நிறுதுரதுக்காக வாவது மத்த எல்லா சாதிக்காரனும் சீக்கிரமே ஒன்னு சேருவான்.

    அப்புறம் திரும்பவும் பழைய கதைதான் ஆக போகுது.

    —–

    இப்போ நான் சொன்னதை படிச்சவுடனே எத்தனை பேருக்கு கோபமும் ஆத்திரமும் வருது. என்னா எல்லாரும் நான் சொன்னா மாதிரி கிடையாது, இதே மாதிரிதான் நீங்க இங்க தேவரை பத்தி எழுதின கட்டுரையும்.

    எங்கயோ ஒரு மூலை ல இந்த சாதி வெறியும், அதோட கோரமும் இருந்துகிட்டு தான் இருக்கும். அதுக்காக முத்துராமலிங்க தேவர் சாதி வெறியர், தேவன் லாம் சாதி வெறி புடிச்சவன், அப்படின்னு எவனையோ சந்தோஷ படுதுரதுக்க்காகவோ , இல்ல நீங்களே சந்தோஷ படுரதுக்க்காகவோ எழுதாதீங்க.

    சரியா?

    —-
    மாக்ஸ்சிமம்

    • CUT -OFF MARK FOR MBBS/BDS COURSE IN GOVE. /Self Finance Medical and dental colleges 2008-2009 session as on 30.9.08
      (NOTE:-AS PER THE MCI SEHDULE ADMISIONS ARE CLOSED ON 30-09-2008)
      CATEGORY MBBS in Government MBBS in Self Financing BDS in Government BDS in Self Financing
      OC 197.00 193.75 192.00 –
      BC 194.50 191.75 189.50 –
      BCC 193.75 192.50 190.50 –
      BCM 193.00 191.75 191.75 –
      MBC 191.50 188.00 184.25 –
      SC 186.00 180.25 176.75 –
      ST 171.25 156.75 161.00 –

      http://www.targetpg.in/2008/11/29/trivia/others/uncategorized/cut-off-mark-for-mbbsbds-course-in-gove-self-finance-medical-and-dental-colleges-2008-2009-session-as-on-30908/322

      • 200க்கு 171 எடுத்தாதான்..எம் பி பி எஸ்..தலித் மாணவனுக்கு… 70 மார்க்குல பாஸ் பண்ணினா எம்.பி.பி.எஸ்.சீட் கிடைக்குதுங்கிறிய…எந்த காலேஜ்ன்னு சொல்லுப்பா? டாக்டர் சேதுராமன் கண்டா கட்டி இருக்காரா? முதல்ல புளுகறதுக்காவது ஒழுங்கா கத்துக்கிட்டு வா..

        • suunapanna
          Mr. Ambedkar himself expressed that these type of quota system should be for 20-30 years to improve 1 or 2 generation of SC/ST people and then we need to remove this system. already more than 20 yrs is over after Mandal commission ….still how many more years you want this quota system to continue in both education and Govt. work? Other 50 years poduma?

          • Srinivas!

            When Ambedkar expressed the view you mentioned, he couldn’t foresee the condition of dalits in India after decades. The view was based on his hope only. He wasn’t God to know what would happen to dalits in future. Had he been alive for many decades, he wouldn’t dare to say the quota system be done with. If at all, he would go for a more efficacious system to bring social justice.

        • [[[[200க்கு 171 எடுத்தாதான்..எம் பி பி எஸ்..தலித் மாணவனுக்கு… ]]]]

          171 அதாவது 86 சதவிதம் ST – பழங்குடியினர்

          தலித் என்றால் தேவைப்படும் மதிப்பெண்கள் 186.00/200.00 அதாவது 93 சதவித மதிப்பெண்கள்

    • ஆதார நூல்கள் எல்லாம் போட்டிருக்கு..ஒன்னு அதைப் படிக்கணும்..படிக்காமலே வந்து உளறுவதுன்னு முடிவு பண்ணிட்டா நாம் என்ன செய்யமுடியும்? ஜீவபாரதி நூல்களில் தேவரைப் புகழுவதாக நினைத்துக் கொண்டு அவர் (தேவர்) உளறியதை எல்லாம் ஏடுத்துப் போட்டிருக்கார்..அதைப் படிக்கிற சாமானியனுக்கே ‘மேக்னட் நோஸ்’ வச்சி அமெரிக்காவைப் பிடிக்கப்போற தேவரைப் பார்த்தால் சிரிப்புவராம போகாது..
      பாஸ்…அவரு (ஜீவபாரதி) எழுதுன எல்லா புஸ்தகமும் வாங்கிப் பாருங்க…வெஸ்டர்ன் டைப் டாய்லட்ல அதப் படிச்சிக்கிட்டு சிரிச்சீங்கன்னா எல்லா சிக்கல்களும் போயிடும் பாருங்க..அட அட அட

    • உங்களோடிய வயிற்றெரிச்சல் புரியுது மாக்ஸ்சிமம். ஆனா குற்ற பரம்பரை மறந்திடுச்சா. உங்களுக்கு இட ஓதிக்கிடு இனிக்குது மற்றவர்க்கு என்றால் கசக்குதா.

      கொஞ்சமாவது நியா தர்மம் வேண்டாமா.. சண்டியர் சாரி மிஸ்டர் மாக்ஸ்சிமம்

      • Kutra paramparai 79 caste poda pattathu anna athil pathigapatathu nanga than da en endra nanga anda paraparami da athu nalathan evanukum adakama sandai podom unga la mathiri ella da…. This act had been implemented all over the world whereever english ppl ruled… Just try to know history then tell…..

    • கொலை, கொள்ளை, வழிப்பறி யாருடைய குலத் தொழில் என்று வரலாற்றைப் பாருங்கள்.திருடுவதால் கள்ளர் என்று பெயர் கொண்ட நீங்கள், பிறருடைய பட்டமான தேவர் என்பதை சாதிப் பெயராகக் கொண்டுள்ளது ஏன்? தஞ்சை கள்ளர்கள் தங்களை தேவர் என்று அழைப்பது கிடையாதே. மேலும் அகமுடையார் வடக்கில் முத்தலிப் பட்டம் அல்லவா சூட்டிக்கொள்கிறார்கள்.அரசியலுக்காய் சாதிப் பெயரையே மறைத்து வாழும் நீங்கள் சபையில் நாயம் பேசுவது நகைப்புக்குரியது,.அதுவும் திருடும் குலத் தொழிலை அடுத்தவர் மேல் சுமத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.

      மேலும் தலித் என்பது சாதி அல்ல. அது ஒரு பிரிவு. அதில் 78 சாதிகள் உள்ளது.

  31. //கொஞ்சம் அதிகாரமும் பணமும் வந்துட்டா, நீங்க ஆடுற ஆட்டம் என்ன? அப்பப்பா , தாங்க முடியலைடா சாமி,

    சிங்கள் டீ க்கு லாட்டரி அடிச்சிட்டு இருந்தவனெல்லாம் , டாட்டா சுமொவாம், ரவுடி யாம்,கட்ட பஞ்சாயதாம், எவனுக்கு எவண்டா பஞ்சயத்து பண்றது? கால கொடுமைடா சாமி,\\

    இதையெல்லாம் நீங்க செய்தால் சரி அதையே தாழ்தப்பட்ட சகோதரன் செய்தால் தவறு அப்படிதானே மாக்ஸ்சிமம்

    எவனுக்கு எவண்டா பஞ்சாயத்து பண்றது? அமைதி கூட்டத்தில் சமமாக அமர்ந்ததர்க்காக தானே முத்துராமலிங்க தேவர் இம்மானுவேல் சேகரனை கொலை செய்தார்
    அந்த வெறி இன்னும் அடங்காமல் தான் எவனுக்கு எவண்டா பஞ்சாயத்து என்கிறீர்கள்

    தலித்துகள் முன்னேற்றத்தை தாங்க முடியாமல் அவர்கள் பொருளாதாரரீதியில் முன்னேறுவதை பொருக்கமுடியாமல் இப்படி எல்லாம் எழுதுகீறீர்கள் நிறைய மாவட்டங்களில் என் தாழ்தப்பட்ட சாகோதரர்களின் முதல் தலைமுறையே இப்போது தான் கல்லூரி வாசலையே மிதிக்கிறார்கள் தலித்துகளில் நிறைய பேர் இன்றும் தினகூலிகள்தான் அவர்களுக்கு ஸ்காலர்சிப் கொடுப்பது என்ன தவறு உள்ளது என்று எனக்கு தெரியவில்லை

    பள்ளி கல்லூரிகளில் ஸ்காலர்சிப் லிஸ்ட் வரும்போது மற்ற இனத்தை சேர்ந்த மாணவர்கள் அவர்களை பார்க்கும் பார்வை இருக்கிறதே எப்போது தான் இவர்கள் திருந்த
    போகிறார்களோ ஆயிரம் ஆண்டுகள் அடங்கி கிடந்தவர்கள் இப்போது அடங்க மறுக்கிறார்கள் அதுதான் உங்கள் பிரச்சனையா மாக்ஸ்சிமம்

    குற்றவாளிகலில் தலித்துகள் தான் அதிகம் என்கிறீர்கள் அப்போ மற்ற இனத்தார்கள் எல்லாம் உத்தம சீலர்களா மாக்ஸ்சிமம் கல்வி அறிவு ஒன்றுதான் அறியாமையில் கிடக்கும் சமுதாயத்தை முன்னேற்றும் அதற்காதான் அரசாங்கம் இடஒதுக்கீடு அளிக்கிறது
    பணம் இருக்கும் நீங்கள் இஞ்சினியரிங் கல்லூரிகளை நிரப்பி விடுகிறீர்கள் கோட்டா பாடாவதி அரசாங்க கல்லூரிகளில் தான் கிடைக்கிறது அரசாங்கம் நடத்தும் எத்தனை கல்லூரிகள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மாட்டு தொழுவம் போன்ற ஹாஸ்டல்களில் தங்கி கொண்டும் அந்த சகோதரர்கள் படிக்கிறார்கள் தெரியுமா

    நீங்கள் நினைப்பது போல் தலித்துகளுக்கு எதிராக எந்த சாதி காரனும் ஒன்றுசேர மாட்டான்
    தமிழ்நாட்டை வட இந்தியா என்று நினைத்தீர்களா?

    சாதி மத சகதியில் இருந்து பிடுங்கி எங்களை மனிதனாக நட்டு விட்டு போன பெரியார் வாழ்ந்த பூமி இது இங்கே தலித்துகளுக்கு எதிராக மானமுள்ள மனிதன் எவனும் பேச மாட்டன்

  32. @கொரில்லா . உயர்வடைந்த தாழ்த்தப்பட்டவர்கல் எத்தனை சதவிகிதம் பேர் தன் இனத்தை சார்ந்தவர்கலுக்கு பாடுபடுகிரார்கல் என கூர முடியுமா?

  33. தென்மாவட்டல் இருக்கும் அபரிமிதமான சாதி வெரி நமது மானிலத்தை படுகுழியில் இட்டுச் செல்லும் என்பது மிகவும் சோகமான உன்மை! பகைமையை விடாவிடில் இந்த பிரச்சனை தீராது .

    • oru pirivinarai adimai paduthumattum adimaipaduthivittu, indri pagaimai koodathu endraal epadi? Comedy pannathey thambi… poyee athikka saathikarana nippata sollu. high caste -> action. Dalit -> reaction. Ethu mothalla niruthanum?

  34. இவர்கள் அத்தனை பேரும் உயர்வடைந்த தாழ்தப்பட்டவர்களே தலித்துகளை கொஞ்சமாவது மதிக்கிறார்கள் என்றால் அதற்க்கு இவர்கள் தான் காரணம்

    அய்யன்காளி (1863 – 1941) தலித் மக்களின் தலைவர்களில் ஒருவராவார்.தலித் மக்களின் நல்வாழ்வுக்காக,தீண்டாமைக்கு எதிராக பல போராட்டங்களை கேரளாவில் முன்னின்று நடத்தியவர் ஆவார்.

    இரட்டைமலை சீனிவாசன் (ஜூலை 7, 1859 – செப்டம்பர் 18, 1945) தாழ்த்தப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பறையர் மகாசன சபையைத் தோற்றுவித்து பறையன் என்ற திங்கள் இதழை நடத்தியவர். சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராக 1923 முதல் 1939 வரை இருந்தவர். வழக்கறிஞர்.

    கிருஷ்ணசாமி (K._Krishnasamy) ஒரு தமிழக அரசியல்வாதி, தலித் உரிமைப் போராளி. இவர் புதிய தமிழகம் கட்சியின் தலைவரும் ஆவார். இவர் 1996ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். தலித்மக்களின், குறிப்பாக தென்மாவட்ட தலித்துக்களின் பிரச்சனைகளை முன்வைத்து இவரும் இவரது கட்சியும் செயலாற்றி வருகின்றன. இவர் கல்விப்பயிற்சியால் மருத்துவரும் ஆவார்.

    சத்தியவாணி முத்து (பி.: பெப்ரவரி 15, 1923 – இ. நவம்பர் 11, 1999)[1] ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் செல்வாக்கான தலித் தலைவர். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் ராஜ்ய சபை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற சொந்தக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அக்கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து விட்டது.

    கக்கன் (Kakkan, ஜூன் 18, 1908 – டிசம்பர் 23, 1981), தலித் இனத் தலைவர், விடுதலை போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார்.

    பா. பரமேசுவரன் (பி. பரமேஸ்வரன், B. Parameswaran; பி. ஜனவரி 20, 1913, -இ.?) ஒரு தமிழக அரசியவாதி. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்தவர். மூன்று முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும், இரு முறை மாநில அமைச்சராகவும், ஒரு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியவர்.

    ராவ் பகதூர் மயிலை சின்னத்தம்பிப்பிள்ளை ராஜா எனப்படும் எம். சி. ராஜா (பி. ஜூன் 17, 1883 – இ. ஆகஸ்ட் 20, 1943) தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தலித் அரசியல்வாதி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர். பி. ஆர். அம்பேத்கருக்கு இணையாக இவரும் தலித்துகளின் நலனுக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்.

    தொல். திருமாவளவன் (பிறப்பு ஆகஸ்ட் 17, 1962), தமிழ்நாட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். தலித்துக்கள் முன்னேற்றத்துக்காக சட்டம், சமூகம், அரசியல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ்நாடு தலித்துக்களின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகின்றார். இவரின் ஈழத்தமிழர்களுக்கான ஆதரவும் குறிப்பிடத்தக்கது. இவரின் அரசியல், சமூக நடவடிக்கைகள் வன்முறைசார்ந்து வெளிப்படுவதாக விமரிசனங்கள் உண்டு.

    • சரி முன்பு இருந்தவர்களை விடுங்கள். திருமாவளவன், கிருஷ்ணசாமி யை எதற்கு இவர்கள் லிஸ்டில் சேர்த்தீர்கள்.
      அட பாவமே..என்ன கொடுமை..அவர்களால் எத்தனை பேர் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியுமா? அவர்கள் கலவரத்துக்கு பெயர் பெற்றவர்கள்.அவர்கள் போரளிகளா?
      நீங்களும் அவரை பின்பற்றுபவர் என்று நினைக்கிறேன்.
      அப்படி என்றால் உங்கள் சிந்தனை எப்படி இருக்கும் என்று எல்லோரும் அறிவார்.

      கொடுமை!! கொடுமை!!

      • திருவாவளவன், கிருஷ்ணசாமி போன்றவர்கள் இருக்கும் போதே தலித்துகளை இந்த பாடுபடுத்துகீறீர்கள் அவர்களும் இல்லாவிட்டால் அவ்வளவுதான்

        நெஞ்சில் கை வைத்து சொல்லூங்கள் முத்துராமலிங்கபோஸ் தென் மாவட்டங்களில் இரட்டை தம்ளர் இல்லவே இல்லை என்று

        தாழ்தப்பட்டவர்களுக்காக ஒடுக்கபட்டவர்களுக்காக எங்கள் சிந்தனை துடித்து கொண்டேயிருக்கும் அது உங்களுக்கு கொடுமையாக படுகிறதா இதுதான் சாதி இந்துகளின் புத்தி

  35. //காந்தியின் சுதந்திரப் போராட்டத்தை விமர்சிக்கும் எவரும் கூட அவரது கொலையை கொண்டாட முடியாது. ஆனால் அதற்காக மறைமுகமான நோக்கத்துடன் கோல்வால்கருக்கு மதுரையில் பணமுடிப்பு வழங்கி விழா நடத்திவர் தேவர். இந்துமத துரோகி என்று காந்திக்கும் பெயர் சூட்டினார்.//

    தோழரே….
    மேற்குறிப்பிட்ட செய்தியில், முத்துராமலிங்கதேவர் பணமுடிப்பு வழங்கி பாராட்டியது கோல்வால்கருக்கு அல்ல. அது சவர்க்காருக்கு 1954ம் ஆண்டு மதுரை திலகர் திடலில் வைத்து வழங்கப்பட்டது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

  36. ஹலோ மாக்சிமம் தவறான தகவல் ரௌடிசம் கள்ளச்சாராயம்(விற்றவன் அல்ல காய்ச்சியவன்) கட்டை பஞ்சாயத்து கள்ளநோட்டு கற்பழிப்பு ஆள்கடத்தல் ஆக்கிரமிப்பு கொள்ளை வழிப்பறி விபச்சாரம் நடத்துதல் இவை எல்லாம் தலித் செய்வதாய் நிரூபிக்க முடியுமா? இங்கு அவ்வளவு விஷயம் தெரியாதவர் யாரும் இல்லை. உன் ஜாதிக்கார போலீஸ்காரர் யாராவது இருந்தால் கேட்டு குற்றப்பரம்பரை எது என தெரிந்துக்கொள். சிறு குற்றங்கள் அடிதடி வழக்குகள் மற்றும் பழிவாங்கும் கொலை வழக்குகள் தான் அதிக அளவில் தலித்கள் மீது உள்ளது.

  37. @மாக்சிமம்
    //கண்டதையும் வாந்தி எடுத்துட்டு கடைசியில் ஆதாரம் னு ஜீவபாரதியின் புத்தகத்தை எல்லாம் போட்ருகீங்க. இதே ஜீவபாரதி பத்தி உங்களோட இன்னொரு பதிவுல தேவர் பெருமை பேசுபவர் னு சொல்லி இருக்கீங்க.//

    இதுல மட்டும் என்ன ஜீவபாரதி தேவரை சிறுமை பேசுபவர்னா போட்டுருக்கு. தேவருடைய பெருமையா நெனைச்சு அவர் தொகுத்து எழுதிய செய்திகள் தான் இன்னைக்கு அந்தாளோட உண்மை முகத்தை நமக்கு புரிய வைக்குது. ஜீவபாரதி தேவரோட பரம பக்தர். அதனால் அவரோட ‘வாக்குமூலத்துக்கு’ நம்பகத்தன்மை இன்னும் அதிகம். டென்சனாகி பிரயோசனம் இல்ல பாஸ்.

  38. This is not something you create social awareness and creating such debate to pin point some one is worst and others are best. How many of them who really aware of that all because of congress and the stupid Kamarajar we lost our territory in and around Periyar dam in Kerala?. We are not able to store the water….. Still people are living in Munnar BearMedu, Devikulam and the Tamil schools are not having very basic facilities. All because of to save NADAR community people who was doing their business in Nagercoil areas. I got this information from a INA soldier who lived during construction of Periyar Dam by Benny.

    So don’t through the stone to the same community people and the people who is writing comments should have basic social responsibilities. They should not through their words like this people are roaming around Madurai and they were not developed. At least you are accepting Thever did something to the other society just the sake of getting the name. What do you did so far? Whom you can show who has given everything to either the same society (or) to other society?

    Be respect and responsible before writing anything.

    • I suggest you read the post again. //Kamaraj is the best, people of thevar community are uncivilized, thevar did something for the dalits//all these are your assumptions based on some baseless prejudice towards vinavu or unsensible worship of the THUG.

      As for us what vinavu or ma. ka.i. ka is doing for the society, there are a lot of posts in this blog. pls search for it.

      Pls try to comment on the casteic charges against thevar, if you think he is worth being defended.

  39. //தேவர் சாதி நண்பர்கள் பரிசீலிக்க வேண்டும்.//

    ‘தேவர் சாதி’ எனத் தம்மைக் கருதிக் கொள்ளும் நண்பர்கள் அல்லது ‘தேவர் சாதி’யில் பிறந்த நண்பர்கள் என எழுதுவது தான் சரி எனக் கருதுகிறேன் தோழர். மற்றபடி, தங்களது ஆழமானதும், விரிவானதுமான பதில் சிறப்பாக உள்ளது. தோழர் அசுரன் பல முறை தேவரின் சாதி வெறி குறித்து எழுதிய பதிவுகள் நினைவில் எழும்புகின்றன.

  40. தேவர் இனத்தை தாக்கியும், தலித் & நாடார் இனத்தையும் தூக்கி எழுதுவதும் இவனுங்களுக்கு பொழப்பா போய்டுச்சி

  41. இங்கே சாமியையே எதிர்க்க துணிந்தவனும் சாதியை எதிர்க்க துணிந்ததில்லை. பாப்பானை திட்டுவதையே சாதியை திட்டுவதாக நாம் நினைத்துகொள்ள வேண்டுமாம்.பாப்பான் எந்த ஊரிலே தலித் மீது வன்கொடுமை செய்கிறான்?போலி கம்யூனிஸ்டுகள் போலிஸ்காரன் கற்பழித்தால் கூட்டம் போடுவான் ஆனால் சாதி வெறியன் கற்பழித்தால் சுபத்தை மூடிகொள்வான்.வினவின் நேர்மையை துணிவை பாராட்டுவோம்…..ஆமாம் ஒரு லூஸை, சாதி வெறியனை அம்பலப்படுத்தினால் ஏன் சிலர் கோபப்படுகிறார்கள்.சாதி ஒழிய ஒரே வழி சாதியம் பேசுவோரை இலவசமாய் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணங்கள் மேற்கொள்ள எற்பாடு செய்வதே.

  42. தொடர்ந்து இப்படி எழுதி ஜாதி வெறுப்பை வளர்த்துக் கொண்டே இருக்கவேண்டும் என்ற உங்களின் எண்ணம் அனைவருக்கும் புரியாமல் இல்லை.

    ///ஒரே நாளில் நாடுமுழுக்க ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை நியமித்து ஆரம்ப கல்விக்கு உதவிய காமராசரது திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தங்களது பகுதிக்கு பள்ளிகள் வருவதை தடுக்கவும் பேசியிருக்கிறார்.

    நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சிவகாசி கலவரம் என்பதே இதுபோல ஆடு திருடும் கள்ளர்களுக்கும், ஆடுகளைப் பறிகொடுத்த நாடார்களுக்குமிடையில்தான் நடந்தது. திருடப் போகும்போதும், கன்னம் வைக்க முதலில் போகும் நபருக்கும் சிறப்பு பூஜைகளையெல்லாம் செய்யுமளவுக்கு திருட்டை சமூகமயமாக்கினர்.

    சாலைகளை குக்கிராமங்களுக்கும் விஸ்தரிக்க முனைந்தபோது, அது தங்களது நாட்டு அரசுகள் என்ற கட்டப்பஞ்சாயத்துக்கு எதிரானது என்பதால் “நாங்க எல்லாம் இன்றைக்கு அடித்துக் கொள்வோம் நாளை பேசி தீர்த்துக்கொள்வோம். சாலை எல்லாம் போட்டால் போலீசு எல்லாம் ஊருக்குள் வந்து விடும்” என்று கூறி மறவர் நாடுகளில் சாலை போடுவதையே தடை செய்தவர் தேவர்.

    1957- இல் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் தலைவரான இமானுவேல் சேகரனை

    தனது சொந்த சாதியினரின் கல்வியையும், நகருக்கு போய்வருவதற்கான வாய்ப்பையும் நாடாரான காமராசரை எதிர்க்க வேண்டும் என்ற தனது ஈகோவிற்காக பலிகொடுத்த தேவரை உழைக்கும் தேவர் ///

    மேற்கண்ட புடலங்காய் தகவல்களை எல்லாம் எங்கே பிடித்தீர்கள் என்று தெரியவில்லை. ஆனால் மக்களுக்காக உழைத்த தலைவர்களை ஆதாரம் இல்லாம் பிதற்றுவது மட்டும் புரிகிறது. நாடார் தலித்துக்களை இணைக்கிறேன் பேர்வழி என்றும், கூட்டம் கூட்டத்தோடு தான் சேரும் என்றும், தேவர்களை எதிர்கொள்கிறேன் என்றும் பசும்பொன் ஐயாவை பற்றி புலம்புவதும் புரிகிறது. காமராஜர் பற்றி பலருக்கு தெரியாத பல செய்திகள் எமக்கும் தெரியும். தேவை இல்லாமல் ஒரு மக்கள் தலைவர் பற்றி எழுதி உங்களைப் போன்று துவேசம் வளர்க்க வேண்டாம் என்ற நல்லெண்ணத்தில் பலரும் அமைதியாக இருக்கிறோம். அல்லக்கை, அடாவடிகள் எல்லா சமூகத்திலும் தான் இருக்கிறார்கள். நல்லவைகள் பேசவும். இல்லையெனில் அழிவது உறுதி.

  43. உண்மைகளை திரிப்பதை மறைப்பதை கள்ளர்கள் விடும்போது இது போன்ற கட்டுரைகள் தேவை இல்லை. ஆனால் தற்க்கால்த்திர்க்கு உண்மைகளை மக்களுக்கு தெரியப் படுத்த வேண்டியது ஒவ்வொரு எழுத்தாளனின் கடமையாகும்.

  44. உண்மை!!!!!!!!!!! அடேயப்பா என்ன ஒரு சிந்தனை ஊற்று!!!!

    அரைகுறை அறிவு கொண்ட ஜாதிவெறி பிடித்த முட்டாள்களுக்காக இப்பதிவு.

    முதுகுளத்தூர் – 2 (தேவர் மீதான குற்றச்சாட்டுகள்)

    சி.எம்.பணிக்கர், அடிசனல் ஜில்லா மாஜிஸ்திரேட், இராமநாதபுரம் ஜில்லா; தேவர் மீது சர்க்கார் சாட்டிய மேற்படி குற்றச்சாட்டுகளுக்கு தேவர், சென்னை சர்க்கார் நியமித்த அட்வைசரி போர்டு முன் அளித்த பதிலைப் பின்வரும் பக்கங்களில் விரிவாகக் காண்போம்.

    நான் எனது பகிரங்க சொற்பொழிவுகளாலும், என்னைப் பின்பற்றுவோர் மூலம் இரகசிய ஏற்பாடுகளாலும் வகுப்புணர்ச்சியைத் தூண்டி விட்டு, பலாத்காரச் செயல்களுக்கு வழி செய்ததாக அரசாங்கம் குற்றம் சாட்டி இருக்கிறது. துரதிருஷ்டவசமாக முதுகுளத்தூர் பிராந்தியத்தில் ஏற்பட்ட சம்பவங்களுக்கும், அதன் அடிப்படையில் எனது சொற்பொழிவுகளையும், நடவடிக்கைகளையும் இணைத்துக் கொண்டதற்கும் உள்ள பின்னணியை விளக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பின்னணியை விளக்குமுன், என் மீது சாட்டியுள்ள குற்றங்களுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. அவைகளைப் பற்றிய வரையில் என் சம்பந்தம் எதுவுமே இல்லை என்பதையும் போர்டுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வருடம் மார்ச் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கும் நான் போட்டியிட்டேன். அவ்விரு ஸ்தானங்களுக்கும் மக்கள் பெருவாரியான ஓட்டுக்களால் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். பார்லிமெண்ட் ஸ்தானத்திற்கு 39 ஆயிரமும் வாக்குகளும், சட்டசபை ஸ்தானத்திற்கு 23 ஆயிரம் வாக்குகளும் அதிகமாகப் பெற்று நான் ஜெயித்தேன். இந்த இரட்டை வெற்றியின் காரணமாக, ஸ்ரீவில்லிபுத்தூர் பார்லிமெண்ட் ஸ்தானத்தை நான் வைத்துக்கொண்டு, முதுகுளத்தூர் சட்டமன்ற ஸ்தானத்தை நான் ராஜினாமா செய்தேன். நான் காங்கிரஸ் கட்சிக்கு உறுதிமிக்கதொரு எதிர்ப்பாளன். அதிகாரம் வகிக்கின்ற காங்கிரஸ் கட்சியிலிருந்து நான் 1946ல் விலகினேன். சமுதாய விடுதலைக்காகவும் சுதந்திர லட்சியத்திற்காகவும் போரிட்டு, பல துன்பங்களுக்கு ஆட்பட்டு தவித்த பலநூறாயிரம் மக்களின் உயிர்க் கொள்கையை, அதிகாரம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி கையாளவில்லை. காட்டிக் கொடுக்கவே துணிந்து விட்டது என்பதை உணர்ந்தேன். அதனால், அக்கட்சியிலிருந்து விலகினேன்.

    அதன் பிறகு நடந்த தேர்தலில்களில் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியும் எனக்கு மாபெரும் வெற்றியும் கண்டு வருகிறது. எவ்வித ஆதரவையும் பெற முடியாத காங்கிரஸ்காரர்கள் தலைமையில் உள்ளவர்கள் உட்பட, சமீபத்தில் இடைத்தேர்தலில் என் ஆதரவு பெற்ற சசிவர்ணத்தேவரை முறியடிக்க சகல முயற்சிகளையும் செய்து பார்த்தார்கள். இம்மாதிரி, நான் நிறுத்திய அபேட்சகரைத தோற்கடிக்க காங்கிரஸ்காரர்கள் தீவிர ஏற்பாடுகள் செய்வதையோ, தமக்குச் சாதகமாகப் பேசுவதையோ எவரும் மறுக்க முடியாது; மறுக்கக் கூடாது. அது அவரவர் உரிமை, ஜனநாயகத் தேர்தலில் போட்டியிடுபவர்கள் தத்தம் கட்சி ஜெயிக்கப் பாடுபடத்தான் செய்வார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இகாங்கிரஸின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களும், அரசாங்கத் தரப்பினரும் வாக்காளர்கள பயமுறுத்திப் பேசுவதிலும், மறவர்களுக்கு எதிராக அரிஜனங்களைத் துhண்டி விட்டு, வகுப்பு உணர்ச்சியை வளர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு விட்டார்கள். சசிவர்ணத்தேவர் வெற்றி பெற்றால், பெரும் துன்பத்துக்கு ஆளாக நேரும்”. என்று எனது ஆதரவாளர்களிடம் பயமுறுத்தி பேசி வந்திருக்கிறார்கள். அந்த பயமுறத்தலில் உள்நாட்டு மந்திரி பக்தவச்சலத்தின் பேச்சின் மூலம் உச்சிக்கே போய்விட்டது.

    முதுகுளத்தூர் தொகுதியில் பல இடங்களில் ஜூன் 25-ஆம் தேதி பக்தவச்சலம் பொதுக் கூட்டங்களில் வாக்காளர்கள் பயந்து, குலை நடுங்கும்படியான முறையில் பேசியுள்ளார். மறவர் அல்லாத மைனாரிட்டி மக்கள் பெரும் துன்பப்படுவதாகவும், இதை எல்லாம் அடக்கி ஒடுக்கும் காலம் நெருங்கி விட்டதென்றும் பேசிய திரு. பக்தவச்சலம், சர்க்காரை கிருஷ்ண பரமாத்வாகவும், என்னைச் சிசுபாலனாகவும் வர்ணித்து காலத்துக்காக அமைதியாக இருந்த கிருஷ்ண பரமாத்மா, காலம் வந்தவுடன், தனது சக்ராயுதத்தால் சிசுபாலனை வதைத்தது மாதிரி, சர்க்காரும் என்னை வதைக்கும் என்று பேசியிருக்கிறார். அவர் பேசிய விபரம் பத்திரிக்கைகளிலும் வெளியாகி இருக்கிறது. இதனைப் பலரும் நன்கு தெரிந்து இருப்பார்கள். மேலும் அவர் என்னைத் தோற்கடித்து, எனது செல்வாக்கைக் குறைத்துவிடக் காலம் வந்து விட்டதென்றும், என்னைத் தோற்கடிப்பதற்காகப் பெரிய போலீஸ் படையை முழு அளவுக்கும் உபயோகிக்க முடிவு செய்து விட்டதாகவும் சவால் விடுத்துப் பேசியிருக்கிறார். அவரது பேச்சிலிருந்து அவர் தரப்பினால் விளைந்த நிகழ்ச்சிகளுக்கு என்னைப் பொறுப்பாக்கி இருக்கிறார்கள். மந்திரி பக்தவத்சலம் பேசிய பேச்சுக்களைப் பற்றி நான் கேள்விப்பட்டு, அவர் பேசியது உண்மைதானா? என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ‘இந்து’ பத்திரிகை நிருபரிடம் மந்திரியின் பேச்சுக்குறிப்பு ஒன்று கேட்டேன். ‘இந்து’ நிருபரின் செய்தி இந்து பத்திரிகையில் வெளியாகி இருக்கிறது. அதன் நகல் ஒன்றை இத்துடன் போர்டின் பார்வைக்காக இணைத்து இருக்கிறேன்.

    மந்திரியின் பேச்சிலிருந்து என் மீதும், நான் பிறந்த ஜாதியின் மீதும் வேண்டுமென்றே எவ்வளவு மோசமான முறையில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பதையும் ஜாதிவெறி எவ்வளவு பயங்கரமாகத் தூண்டிவிடப் பட்டிருக்கிறது? என்பதையும் குறிப்பாக, போலீஸ் பொறுப்பில் உள்ள உள்நாட்டு மந்திரியிடமிருந்த அந்த ஜாதித்துவேஷம் எவ்வளவு பக்குவமாய் அனல்கட்டி இருக்கிறது? என்பதையும் யூகித்துக் கொள்ளலாம்.மந்திரியின் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை எனக்கு வந்திருப்பதாய் உணர்ந்து, ஜுன் 27ல் திருச்சுழியில் நடந்த கூட்டத்தில் அதற்கு நான் பதிலளித்தேன். எனது திருச்சுழிப் பேச்சின் சுருக்கம் ஜுன் 28ம் தேதி தினமணி பேப்பரில் வெளியாகி இருக்கிறது. அந்த நகலையும் இணைத்திருக்கிறேன். “எதிர்தரப்பினரின் கோபமூட்டும் பேச்சுக்களில் ஆத்திரப்பட்டு, எவரும் எந்தச் செயல்களிலும், இறங்கிவிடவேண்டாம்” எவர் எதை எந்த முறையில் எந்த அளவுக்குப் பேசினாலும், மக்கள் அனைவரும் அமைதியாகவும், ஐக்கியமாகவும் இருக்க வேண்டுகிறேன். ஆத்திரம் வேண்டாம்” என்று எல்லா மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துத் திருச்சுழியில் பேசினேன். ஜுலை 1ல் வாக்கெடுப்பு நடந்தது. மக்கள் மறுபடியும் வாக்களிக்க வந்தனர். முந்திய மாதிரியே எனது அரசியல் கட்சிக்கு அமோகமான ஆதரவைத் தந்தார்கள். 24 ஆயிரம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் சசிவர்ணத் தேவருக்கு வெற்றியைக் கொடுத்தார்கள். முந்திய பொதுத் தேர்தலில் நான் பெற்ற வாக்குகளைவிட, இந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் அதிகம், மூன்று தேர்தலிலும் கிடைத்த ஓட்டு விபரப் பட்டியலையும் இதோடு இணைத்துள்ளேன். தேர்தல் முடிந்து வெற்றி தோல்வி வெளிவந்தது. இதன்பிறகு, தேர்தலுக்கு முன் திரு.பக்தவத்சலம் விதைத்த பயமுறுத்தல்கள் தளிர்த்து காய்த்துப் பழமாக ஆரம்பித்து விட்டது. அதன் மூலம் உருவாகிக் கொண்டிருந்த பயங்கரத்தை உணர்ந்தார்.

    12-7-1957ல் கமுதியில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் மீண்டுமொரு முறை அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு, “எந்த வகையிலும் அமைதி இழந்து விடாதீர்கள், அமைதியோடு இருங்கள். வகுப்பு நெறி எந்த ரூபத்தில் வந்து மோதினாலும், அதில் சிக்கி விடாதீர்கள். எது வந்தாலும் அமைதியை இழந்து விடக்கூடாது” என்று கரங்குவித்து வேண்டிக்கொண்டேன். ஜூலை மாதத்தில் வெளிப்பகுதியினரின் தூண்டுதல் மீதும், போலிஸ் பாதுகாப்போடும் அரிஜனங்களால் முதுகுளத்தூர் தொகுதியில் பல சம்பவங்கள் நடந்துள்ளன. அச்சம்பவகள் அத்தனையும் எனது ஆதராவாளர்களை அலைகழித்து, தொல்லை கொடுத்தவைகள் ஆகும். அந்த நிலைமை முற்றிக் கொண்டு போவதைக் கண்ட எனது சகா சகிவர்ணத்தேவர், இராமநாதபுரம் ரெவின்யூ டிவிஷனல் ஆபிசரைச் சந்தித்து, அப்பகுதியில் உள்ள எல்லாக் கட்சி தலைவர்களையும் கூட்டி நிலைமை மேலும் மோசமாவதைத் தடுத்து, சாதி பிளவு உணர்ச்சிளை அகற்றி, ஐக்கியப்படுத்தி, சமாதானத்தை நிலை நாட்டுவதற்கான வகையில் ஒரு திட்டம் தயாரிக்கும்படி கோரி இருந்தார். நிலைமை கட்டுங்ககடங்காமல் வளருவதை அதிகாரிகளிடம் அறிவித்த பிறகும், நெருக்கடி நிலைமை கொஞ்சமும் தளராமல், அதன் போக்கில் ஓங்கி, மோசமான முடிவை எட்டிக் கொண்டிருந்திருக்கிறது, நிலைமையின் மோசத்தை விவரித்து எனது ஆதரவாளர்கள் அனுப்பிய மனுக்கள் ஏராளம். அமைதிக்கு, அதிகாரத் தலைப்பில் இருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. எனது ஆதரவாளர்கள் தம்மை நோக்கிச் சூழ்ந்து வரும் நெருக்கடிகள், நிலைமைகளை விவரித்து, அதிகாரிகளுக்கு அவ்வப்போது அனுப்பிய மனுக்கள் தேதி வாரியாக இதோடு சேர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது.

    செப்டம்பர் 2-ல் சசிவர்ணத் தேவரும் மேலும் எனது தரப்பைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர்கள் ஐவரும், ஜில்லா கலெக்டரைச் சந்தித்து “நெருக்கடி நிலைமை முற்றுகிறது. நாடார் வகுப்பைச் சேர்ந்த வியாபாரிகள், போலிஸ் அதிகாரிகள் சிலரின் ஜாடையான ஆதரவோடு, ஏழை அரிஜனங்களுக்குப் பணம் கொடுத்து, எனது ஆதரவாளர்களைத் தாக்கும்படி துhண்டிவிட்டு வருகிறார்கள்” என்று அறிவித்திருக்கிறார்கள்.

    அதோடு அந்த ஆறு எம்.ஏ. க்களும் கமுதி இன்ஸ்பெக்டர், முதுளத்தூர், கடலாடி, நரிக்குடி, கமுதி இன்ஸ்பெக்டர் குறிப்பிட்டு குற்றம் சாட்டி, அவர்களை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு விரைவில் மாற்றும்படி கலெக்டரை வேண்டியிருக்கிறnர்கள். இதே விவரங்கள் டி.எஸ்.பி. முன்னிலையிலும் வைக்கப்பட்டுள்ளன. தூண்டி விட்டுக் கலகத்தை மூட்டும் நிலைமை நிமிடத்துக்கு நிமிடம் வளருகிறது என்று, இவ்வளவு தூரம் எடுத்து விளக்கியும் கூட, செப்டம்பர் 10-ஆம் தேதி வரை அதிகாரிகள் தரப்பிலிருந்து எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நேரடியாக, முறையிடப்படும் அதிகாரிகள் எதுவும் செய்யவில்லை. ஆனால், கலெக்டர் எல்லாத் தரப்புத் பிரதிநிதிகள் அடங்கிய சமாதான மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஆனாலும் நிலைமையை மேலும் வளர விடாமல் தடுப்பதற்கான அருமையான காலமெல்லாம் வீணாக்கப்பட்டு விட்டது. இதனால் நெருக்கடி நிலைமை நாளுக்கு நாள் முதிர்ந்து கொண்டே போய் விட்டது.

    செப்டம்பர் 9 ல் நான் டெல்லியில் இருந்து புறப்பட்டு, அடுத்த நாளில் நடைபெற்ற சமாதான மாநாட்டில் கலந்து கொண்டேன். சமாதானமாகவும் அமைதியாகவும் எல்லா இன மக்களும் இருக்கும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோளில் கையொப்பமிட்டேன். சமாதான மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான திரு இமானுவேல் என்பவர் 11 ம் தேதி தாக்கப்பட்டுக் கொலையுண்டிருக்கிறார்.

    இந்தச் சம்பவத்திற்கு என்னைப் பொறுப்பாளி ஆக்கியிருக்கிறார்கள். முதுகுளத்தூர் தொகுதிக்கு 15 மைல் அப்பாலும், என் சொந்த கிராமமான பசும்பொன்னுக்கு 30 மைல் தள்ளியும் உள்ள பரமக்குடியில் அன்று நடந்த சம்பத்திற்கு நான் பொறுப்பாளியாக்கப் பட்டிருக்கிறேன், என்பதைக் குறிப்பாக போர்டின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அன்றைய தினத்தில் நான் அங்கு போனதுமில்லை. 13 ம் தேதி எனது முதுகுளத்தூர் தொகுதிக்கு அப்பால், உள்ள பரமக்குடி தொகுதியைச் சேர்ந்த, அருங்குளத்தில் மறவர்களுக்கும் அரிஜனங்களுக்குமிடையே கடுமையான கலகம் நடந்திருக்கிறது. 14ம் தேதி கீழத்தூவல் கிராமத்தில் மிருகத்தனமான ரீதியில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்து, ஐந்து மறவர்கள் துடிககத் துடிக்கக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். பிறகு செப்டம்பர் 16ஆம் தேதி தான் முதன்முதலாய் முதுகுளத்தூர் பகுதிக்கு கலவரம் வருகிறது. நாடார்கள் தூண்டுதலாலும், போலிசாரின் உதவியாலும் அரிஜனங்கள் அணிவகுத்துப் போய் நான்கு மறவர்களைக் கொன்றிருக்கிறார்கள். மறவர்கள் திருப்பித் தாக்கி, இரண்டு அரிஜனங்களைக் கொன்று, அந்த தாக்குதலை விரட்டி அடித்திருக்கிறார்கள். 17 ம் தேதி போலிசாரின் கொலைப்படலம் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த கீரந்தைக்கு இரண்டாவது தடவையாக வந்து, எனது ஆதரவாளர்களான ஒரு அரிஜன் உட்பட ஏழு பேர்களை கொன்று விட்டனர். பகிரங்கமான இவ்வளவு குரூரமான முறையில் தூண்டிவிடப்பட்ட சம்பவங்கள், பல இடங்களிலும் நடந்து கொண்டு வருகையில், ஒரு தரப்பில் மட்டும் அடக்க நிலை சாத்தியமா? காங்கிரஸ் சர்க்காரும் நாடார் வியாபாரிகளும் சேர்ந்து மறவர்களுக்கு விரோதமான உணர்ச்சிளைக் கிளறி விடும் தங்கள் வேலையைச் சரிவரச் செய்து, அச்செயல் குரூரம் அடைந்து, தமது உயிரையே பறிக்க வந்த நிலையில், சில பகுதி மறவர்கள் தங்கள் பதட்டத்தை அடக்க முடியாமல், திருப்பி தாக்கியது தவிர்க்கக் கூடியதல்ல.

    இந்தக் குழப்ப நிலையில் சமாதானக்குழு ஒன்று உதயமாயிற்று. காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியைச் சேர்ந்த திரு. சா. கணேசன், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. ராமமூர்த்தி இராமநாதபுரம் சேதுபதி, தமிழரசுக் கழகத்தை சேர்ந்த ம.பொ. சிவஞானம் ஆகியோர். இக்குழுவினர் செப்டம்பர் 21ம் தேதி மதுரைக்கு வந்து, அன்று பிற்பகல் என்னைச் சந்தித்தனர்.சமாதானக் குழுவிற்கு எனது முழு ஒத்துழைப்பைத் தருவதாகவும், சமாதானத்தை நிலைக்கப் பண்ணுவதில் நான் எல்லோரையும் விட அதிக அக்கறையாக இயங்குகிறேன் என்றும் அக்குழுவினரிடம் வாக்களித்தேன். ஆரம்பத்தில் சமாதானத்திற்கு வாக்களித்து, ஒத்துழைப்பதாய் வாக்களித்த காங்கிரஸ் தலைவர்கள், பிறகு அவ்வக்குறுதியை நழுவ விட்டார்கள்.

    திரு. ம.பொ. சிவஞானம் கிராமணியார் எனது சமாதான ஆர்வத்தையும், அதற்காக நான் ஒத்துழைக்க உடன்பட்ட உண்மை பூர்வமான என் மனப்பாங்கையும் விவரித்து விடுத்த அறிக்கையின் பிரதியை இத்துடன் இணைத்திருகிறன். அது செப்டம்பர் 25 ம் தேதி இந்து பத்திரிக்கையிலும் வெளியாகி இருக்கிறது. செப்டம்பர் 19 ம் தேதி முதுல் 25 ம்தேதி வரை கீழத்தூவல் துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தின் மீது ஸ்ரீவெங்கடஸ்வரன் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை, அரசாங்கம் தன்னை அச்சம்பவங்களில் சம்பந்தப்படாத மாதிரி காட்டி, தன்னை மறைத்துக் கொள்வதந்காகச் செய்து கொண்ட ஏற்பாடேயன்றி, உண்மை நிலையை விளங்கிக் கொண்டு
    , நியாயம் வழங்குவதற்காக அல்ல என்று கண்டதும் அவ்விசாரணையை அன்று மட்டும் மறுக்கவில்லை. இன்றும் கூடத்தான் மறுக்கிறேன். எவ்வித மேலாதிக்கம் இல்லாத, சுதந்திரமான நீதி விசாரணை ஹைகோர்ட் அல்லது சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஒருவர் மூலம் நடத்தப்பட்ட வேண்டும் என்பதிலும், அதைத் தவிர வேறு வகையான அரசாங்க விசாரணை எதுவும் பயன் தராது என்பதிலும் எனது உறுதி அன்று மட்டுமல்ல, இன்றும் அதே தான்.

    அதிகாரத்தில் இருக்கிற சர்க்கார், குறிப்பாக, முதல் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும் இந்தச் சவாலில் உட்பட்டிருப்பதால், அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் மேலாதிக்கத்திற்கு அடங்கிய எந்த விசாரணையும் நீதியைப் பிரதிபலிக்காது என்பதே எனது நோக்கம் அன்றும் இன்றும் இத்தகைய அவசர விசாரணை கூட உண்மையை விளங்கிக் கொள்ள ஒரு வாய்ப்பளித்து விசாரணை விபரம் பத்திரிக்கையில் வெளிவந்தது. அதன் மூலம், போலிசாரின் கொடுமைகள் எவ்வளவு தூரம் மேலோங்கி இருக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சாட்சி சொல்ல வந்தவர்கள் போலிசாரின் பயங்கரத்திற்கு எவ்வளவு தூரம் ஆட்பட்டு இருக்கிறார்கள்? என்பதையும் விசாரணை மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்தச் சமயத்திலெல்லாம் மேலும் கலகநிலை வளராமல் தடுத்து, சமாதானத்தை நிலை நாட்டுவதில், அதர கட்சிப் பிரதிநிதிகளோடு, நான் முழு முயற்சியில் ஈடுபட்டு இருந்தேன். எங்களது இடைவிடாத முயற்சியின் பயனாகத்தான் அமைதி சாத்தியம் ஆயிற்று.

    கலெக்டரும் மதுரை டி.எஸ்.பி.யும் இந்த அமைதி நிலையைப் பற்றி (செப்-28 வரை) பத்திரிக்கைகளுக்குச் செய்தி கொடுத்துள்ளனர்.அதே நாள் மாலை, அதாவது செப்டம்பர் 28-ம் தேதி காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் தொடக்க விழாக் கூட்டம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் தொடக்க விழாவில் நான் கிட்ட தட்ட இரண்டரை மணி நேரம் பேசினேன். எனது அந்தச் சொற்பொழிவில், இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் படிப்படியான முன்னேற்றத்தை விபரமாக எடுத்துக் கூறினேன். பழைய காங்கிரஸ்காரர்கள் அதை விட்டு விலகியதற்கான காரணத்தையும், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டி உதயமான விபரத்தையும் ஒரு புதுக் கட்சி தோன்றித் தீரவேண்டிய அவசியத்தையும் விளக்கினேன்.

    என்னுடைய நீண்ட நேரப் பேச்சில் முதுகுளத்தூர் பிராந்தியத்தில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குவதற்காக அரைமணி நேரப் பேச்சில் சமாதானத்தையும் சகல இன மக்களின் அமைதியையும் தான் அழுத்தமாக நான் வலியுறுத்தினேன். அதோடு, சர்க்காரின் ஜாதி துவேஷ வளர்ப்புக் கொள்கையையும் எல்லா இன மக்களிடமும் நான் பெற்றுள்ள மரியாதையையும், ஆதரவையும் ஜாதி துவேஷத்தின் மூலம் அழித்துவிடக் கையாண்டு வரும் வழிமுறைகளையும் பச்சை பச்சையாக ஒன்று விடாமல், ஆதாரத்தோடு விளக்கினேன். ஆனால் நான் சச்சரவை விரும்பவில்லை. சமாதானத்தையும் அமைதியையுமே விரும்புகிறேன். அதற்காகவே இரவு பகல் ஓயாமல் பாடுபடுகிறேன். துன்புறுத்தப்பப்பட்ட மக்கள், தங்கள் இன்னல்களைக் களைந்து கொள்ளச் சட்டத்தில் வசதி இருக்கிறது. எவ்விதத் துன்பம், எவரால் கொடுக்கப்பட்டாலும், அதற்கு மாற்று வழி சட்டப் பாதையேயன்றி சண்டை அல்ல என்பதே எனது குறி. பலாத்கார செயல்களே கூடாது என்பதில் எனக்குள்ள அழுத்தமான அக்கறையை பலதடவை நான் மெய்ப்படுத்தி இருக்கிறேன். அன்றைய கூட்டத்திலும் வற்புறுத்திப் பேசினேன். அப்பேச்சின் சுருக்கம் செய்திப் பத்திரிகைகளில் வெளி வந்திருக்கிறது. அந்த நகல் பிரதிகளும் இத்தோடு இணைத்திருக்கிறேன். பல ஆயிரம் மக்களுக்கு முன், காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டைத் திறந்து வைத்து, நீண்ட பெரும் பிரசங்கத்தைச் செய்து முடித்த அரை மணி நேரத்தில், என்னிடம் தடுப்புக் காவல் சட்டப்படி சிறைப்படுத்தும் உத்தரவு கொடுக்கப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டேன். சென்னைக்குக் கூட்டி வந்தார்கள். மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ளேன்.

    நடப்புகளின் பின்னணி இதுவாக இருக்கையில், என்னைச் சிறைப்படுத்த ஏதேனும் நியாய சம்மதம் இருக்க முடியுமா?சமாதான சாத்தியத்திலும், எல்லா இன மக்களின் ஐக்கியத்திலும் எனக்கு இதரரை விட அதிக கவனம் உண்டு. சாதி வெறியைக் கிளறிவிட்டோ, கலவரத்தைத் தூண்டிவிட்டோ நாட்டின் பாதுகாப்புக்குக் கேடு விளைவிக்க வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. அதிலும் முதுகுளுத்தூர் பிராந்திய ஜன ஒற்றுமையில் எனக்கு அக்கறை அதிகம். ஏனெனில், கடந்த இரண்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்குப் படுதோல்வியைக் கொடுத்த தொகுதி அது.

    மேலும், இந்த இடத்தில் மற்றொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். நான் தேவர் மரபைச் சேர்ந்தவன். எனது சகாவன சசிவர்ணத் தேவரும் ஒரு தேவர். நானும் அமோக வாக்குகளால் ஜெயித்தேன். சசிவர்ணத் தேவரும் அதே மாதிரி ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தார். ஆனால், நாங்கள் வெற்றி பெற்றது எங்கள் தேவர் மரபினரின் ஓட்டுக்களால் மட்டுமல்ல; இதர மக்களின் வாக்குகளாலும் தான். முதுகுளத்தூர் தொகுதி வாக்காளர்களில் தேவர் ஓட்டுக்கள் 35 ஆயிரம் தான். அரிஜன வாக்குகள் 45 ஆயிரம். இதர இனத்தாரின் வாக்குகள் 90 ஆயிரத்துக்குமேல். மார்ச் மாதம் நடந்த தேர்தலில் நான் பெற்ற ஓட்டுக்கள் 55,333. எனக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற ஓட்டு 32,767. ஜுலையில் நடந்த இடைத்தேர்தலில் சசிவர்ணத்தேவர் பெற்ற வாக்குகள் 56,657. காங்கிரஸ் அபேட்சகர் பெற்ற வாக்குகள் 32,875. இவ்வளவு ஏற்ற தாழ்வான வாக்கு வித்தியாசம் இருக்கையில், சகல இன மக்களும், என்னையும், எனது சகாக்களையும் அபிமானத்தோடு ஆதரித்துத் தமது வாக்குகளைப் போடும் நிலையில், நான் வகுப்புக் கலவரத்தைத் தூண்டி விட்டுத் திட்டமிடுவதிலும், சட்ட விரோதச் செயல்களுக்குத் தூபமிடுவதிலும் நாட்டங்காட்டினால், அது அரசியல் தற்கொலைக்கு ஒப்பாகும் என்பதை சாதாரண பொது அறிவுள்ளவன் கூடப் புரிந்து கொண்டு விடுவது எளிது.

    ஸ்ரீபக்தவச்சலம் அவ்வளவு பயங்கரமாகப் பேசியும், காங்கிரஸ் தலைவர்கள் இழிவான பிரச்சாரத்தைச் செய்தும், சர்க்காரின் மூலம் பல சகிக்கவியலாத தொல்லைகள் கொடுத்தும், என் தொகுதி மக்களை ஜனநாயக வழியிலிருந்து பிரிக்கவோ, என்னிடமும், நான் சார்ந்துள்ள அரசியல் கட்சியிடமிருந்து அவர்களின் அபிமானத்தையும், ஆதரவையும் உதற வைக்கவோ முடியவில்லை என்பது வெளிப்படை. ஆகவே தான் ஆகஸ்ட் மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும் நெருக்கடி நிலை என் தொகுதியில் உருவானதை அறிந்து சசிவர்ணத் தேவரும் பிறரும் அடுத்தடுத்து அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால், அம்முறையீடு அத்தனையும் அதிகாரிகளால் அலட்சியப்படுத்தப்பட்டு விட்டன. எனக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களை எவ்வளவு குரூரமாகக் கொடுமைப்படுத்தியும் கூட, அவர்களின் அபிமானத்தையும் உறுதியையும் கலைக்க முடியவில்லை. முடியாது எனக் கண்ட அரசாங்கம், என்னைப் பிடித்தாலாவது அம்மக்களின் மனதைத் திகில்படுத்தி நடுநடுங்க வைக்கலாம் என்று திட்டமிட்டு, அந்தத் திட்டத்தின்படி, என்னைச் சிறைப்படுத்தியிருக்கிறதே தவிர, என்னைச் சிறைப்படுத்துவதற்கான உண்மைக் காரணங்களோ, நியாயமோ கொஞ்சமும் இல்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மேலும் என்னைத் தடுப்புக்காவல் சட்டத்தில் சிக்க வைத்திருப்பதற்குக் காரணம், எனக்குள்ள அரசியல் செல்வாக்கை ஒழிக்க, அதிகாரத்தில் இருக்கிற கட்சி, செய்த சதித்திட்டத்தின் ஒரு பகுதிதான். அதே சதியின் விளைவுதான் முதுகுளத்தூரில் நடைபெற்ற வேதனைமிக்க சம்பவங்கள். இதைத் தவிர நாட்டின் பாதுகாப்புக்கும், சட்டம் ஒழுங்கு பரிபாலிப்பிற்கும் என்னைச் சிறைப்படுத்தி இருப்பதற்கும் சம்பந்தமே இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    முதலாவது பாராவுக்கு எனது விளக்கம் அகில இந்திய ரீதியில் பலாத்காரப் போராட்டம் நடத்தப் போவதாக நான் பயமுறுத்திப் பேசினேன் என்று கூறப்பட்டிருப்பதில் உண்மை இல்லை. ஆனால், நம்முடைய சர்க்காரின் காமன் வெல்த் உறவு தொடர்பு குறித்த வெளிநாட்டுக் கொள்கையைக் காரசாரமாக விமர்சித்திருக்கிறேன். காமன்வெல்த் உறவை விட்டு ஆறு மாதங்களுக்குள் விலகாவிடில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக நான் மதுரைப் பொதுக்கூட்டத்தில் பிரகடனித்தேன் என்று சர்க்கார் குற்றஞ்சாட்டுகிறது.

    அதாவது நான் மதுரையில் அவ்வாறு பேசியதாக அரசாங்கம் குறிப்பிடுகிற தேதி 1956 மே மாதம் 12ம் தேதி. முதுகுளத்தூர் சம்பவம் நடந்தது 1957 செப்டம்பரில். இதற்கிடையில் உள்ள இடைவெளி 16 மாதங்கள்.16 மாதங்களுக்க முன் நான் பேசியதாகச் சொல்லப்படும் ஒரு விஷயத்தை, 16 மாதங்கள் சென்றபின் நடந்த மற்றொரு சம்பவத்தோடு பிணைத்து, அதுதான் கைதாவதற்குக் காரணம் ஆனது எப்படி சாத்தியமாயிற்று? என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. நடவடிக்கையில் இருக்கும் ஒரு அரசியல் ஊழியன் நான். இந்த முறையில் சாதாரணமாக நான் மாதம் சுமார் 10 கூட்டங்கள் வரை சொற்பொழிவாற்றி வருகின்றேன். தேர்தல் காலத்தில் நாள் ஒன்றுக்குப் பத்துக்கூட்டம் வரை பேசி இருக்கிறேன்.இந்தப் பதினாறு மாத கால அவகாசத்தில், நான் பேசிய கூட்டங்கள் ஏராளமாக இருக்கும். ஆனால், நான் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் சொல்வது ஐந்து கூட்டங்களைத்தான். இதிலிருந்தே சர்க்காரின் குற்றச்சாட்டுக்களில் உள்ள பலவீனம் தெரிகிறது.

    மேலும், நான் மதுரையில் பயமுறுத்திப் பேசியதாக சர்க்கார் கூறுகிற 1956 மே 12க்கும், முதுகுளத்தூர் சம்பவம் நடந்த 1957 செப்டம்பருக்கும் இடையில் எவ்விதச் சம்பவங்களும் நடைபெறவில்லை என்பது இந்த இடத்துக்கு அதிக முக்கியம். 2வது பாராவுக்கு விளக்கம்இது முழுக்க முழுக்கப் பொய். பணக்கார நாடார் வியாபாரிகளின் முறைக்கொவ்வாத வியாபாரப் போக்கையும், சாதாரண இன மக்களையும் விட்டுத் தனித்தியங்கும் பழக்கத்தையும் மட்டும்தான் கண்டித்துப் பேசினேன். அதோடு நாடார்களில் அத்தகைய செயல்களை மாற்ற, மற்ற பொதுமக்கள் முனைய வேண்டும் என்றும் பேசினேன். அரிஜனங்கள் வகுப்புணர்ச்சித் தூண்டுதலுக்கு ஆட்பட்டு, பொறாமைப்பட்டோரின் கருவியாகி விட வேண்டாம் என்று, அரிஜனங்களையும், சர்க்காரின் தயவையும், உதவியையும் பெற்று வகுப்புக் கலவரத்துக்கு அடியிடும் பணக்கார நாடார்களையும் எச்சரித்தேன். என்னுடைய இந்தப் பேச்சு, மறவர்களால் தாக்கப்படுவதற்கு அரிஜனங்களை இலக்காகிற்று என்று சொல்வது அறிவீனமாகும்.

    1957 மே, ஜுன் மாதங்களில் வகுப்புக் கலவரம் நடந்ததாக எவரும் புகார் பண்ணவில்லை. வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை. ஆகவே, 1957 ஏப்ரல் 17ல் நான் பேசியதன் மூலம் அரிஜனங்கள், மறவர்களின் தாக்குதலுக்கு இலக்கானார்கள் என்று கூறுவதில் பொருளே இல்லை. எனது கைதுக்கு அந்தப் பேச்சையும் ஒரு காரணமாகக் காட்டப்படும் அறிக்கை சுத்தச் சூன்யமாகவே காண்கிறது. குறிப்பாக இக்குற்றச்சாட்டு, வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட பொய்மை நிறைந்ததாகும்.

    3வது பாராவுக்கு விளக்கம் 1957ல் ஜுன் 14ல் அபிராமத்தில், கலவரத்திற்குத் தூண்டப்படும் நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்டு விடாமல், அமைதியாக இருக்கும்படி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்தேன். போலீசைப் பயமுறுத்தி பேசியதாகக் கூறுவது சிறிதும் உண்மைக்கு ஒட்டாது.

    4வது பாராவுக்கு விளக்கம் 1957 ஜுலை 10ல் திருப்புவனம் புதூரில் பேசினேன். ஜுன் 27ல் திருச்சுழியில் பேசிய மாதிரிதான் திருப்புவனம் புதூரில் பேசினேன். திரு பக்தவத்சலம் பேசியது போன்று காங்கிரஸ்காரர்கள் கலவரத்தை உண்டாக்கும் தோரணையில் பேசிவரும் பேச்சுக்களை வெளிப்படுத்தி விமர்சனமும் செய்தேன். முதுகுளத்தூரில் மூன்றாவது உலகப் போரை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னேன் என்று கூறப்பட்டிருப்பது பெருத்த அபத்தமாகும்; அதிவேகமானதும்கூட. சமாதான மாநாட்டில் அரிஜனங்களின் பிரதிநிதியாகப் பேச வந்திருப்பவர் திரு. இமானுவேல். ஆனால், முதுகுளத்தூர் தொகுதிக்குச் சட்டபூர்வமான மக்களின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. வேறொருவர் இருக்கிறார். அதனால், இத்தொகுதியின் அரிஜனங்களுக்காக பிரதிநிதித்துவம் வகித்துப் பேசுவதற்கு, இத்தொகுதி எம்.எல்.ஏ. தான் அதிகாரபூர்வமானவர் என்று தான் நான் சொன்னேன். இதைத் தவிர ஒரு அரிஜன் எனக்கு முன் சமமாகப் பேசுவதால், என் கௌரவம் குறைந்து விட்டதென்று நான் கூறவேயில்லை. எனது தொகுதியில் திரு. பெருமாள் என்ற அரிஜன் ஒருவரை என்னோடு சமமாக ரிசர்வ் ஸ்தானத்திற்கு நிறுத்தி ஜெயிக்க வைத்த நான், சமாதான மாநாட்டில் ஒரு அரிஜன் எனக்கு முன் பேசியதைக் கேவலமாகக் கருதி, என்னவோ சொன்னேன் என்று குறிப்பிடுவது குழந்தைத்தனமும் மதியீனமுமாகும்.

    அதோடு, மற்றொன்றையும் இந்த இடத்தில் குறிப்பிட விரும்புகிறேன். அதாவது, ஜாதி அமைதியையும், சமாதானத்தையும் வேண்டி, நானும் எனது சகாவான முதுகுளத்தூர் தொகுதி சட்டசபை உறுப்பினரும் கையெழுத்திட்ட அறிக்கை வெளியிடப்படவேயில்லை. திரு இமானுவேல் தாக்கப்பட்டதற்கு என் மீது பொறுப்பைச் சுமத்தும் நோக்கத்தோடு அறிக்கை பகிரங்கப்படுத்தப்படாமலேயே மறைக்கப்பட்டிருக்கிறது.

    ஸ்ரீவெங்கடேஸ்வரன் விசாரணையின் போதும், நான் இனத் துவேஷத்தைத் தூண்டி விட்டேன் என்றோ, திரு இமானுவேல் மீது பகையுணர்ச்சிப் பட்டிருந்ததாகவோ, எந்தச் சாட்சியும் கூறவில்லை. இந்த நிலைமையில் அருவருக்கத்தக்கத் தக்க பல குற்றச்சாட்டுகள் என் மீது தவறாகச் சாட்டியிருக்கிறார்கள். இதெல்லாம், போர்டாரின் கருத்து என்மீது தவறாகப் படரட்டும் என்பதற்காகவே. துரதிருஷ்டவசமாக அச்சம்பவம் குறித்துக்காட்டப்பட்டுள்ள எல்லாமுமே உண்மைக்குப் புறம்பானவை. குற்றச்சாட்டு அறிக்கையில் கூறப்பட்டிருப்பது மாதிரி, சமாதான மாநாடு முடிந்ததும் இமானுவேல் பற்றி நான் கூறவே இல்லை; அப்படிக் கூறவும் மாட்டேன். அம்மாதிரி நினைப்பதற்கே இழிவான அச்செயலை நான் புரியத் திட்டமிட்டிருந்தால், அதைப் பலபேர் முன்னிலையில் பறையடிப்பதற்கு நான் முட்டாள் அல்ல. இமானுவேல் மரணத்திற்கும், இக்கலவரங்களுக்கும் சம்பந்தமேயில்லை. இக்கலவரச் சம்பவங்களோடு சேராத வேறு பல காரணங்கள் அதைச் சுற்றி நிற்கின்றன. அந்த வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதால், அதைப்பற்றி இதற்குமேல் அதிகம் விவரிக்காமல் விடுகிறேன்.

    செப்டம்பர் 16ல் வடக்கம்பட்டி கூட்டத்தில் நான் பேசியதாகக் குறிப்பிடப்பதும் மோசமான பொய். காங்கிரஸ் தலைவர்களின் தவறான போக்காலும், போலீசாரைத் தங்கள் கெட்ட எண்ணத்திற்குப் பயன்படுத்துவதாலும், அவர்களது நோக்கம் ஈடேறாது என்று எச்சரித்தேனே தவிர, நிலைமையை அடக்க சர்க்கார் பலாத்கார நடவடிக்கையில் இறங்கினால், அதே செயல் மூலம் பதிலளிக்கப்படும் என்று நான் குறிப்பிடவேயில்லை. மேலும் இந்த நாட்டில் தருமத்தை நிலைநாட்டுவதற்காக மக்கள் ஆயுதம் ஏந்தும்படியோ, உள்நாட்டுப் போராட்டத்தை ஆரம்பிக்கும்படியோ நான் பேசவேயில்லை. அதற்கு மாறாக, வகுப்பு ஐக்கியத்தையும் சமாதான வாழ்வையும் வற்புறுத்தினேன். அதோடு கடுமையான அடக்கு முறையை நடத்தியும் கூட, பிரிட்டிஷ் சர்க்கார் இப்பகுதி மக்களைப் பயமுறுத்தி தமது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள இயலவில்லை என்பதை, காங்கிரஸ் சர்க்காருக்கு நினைவுறுத்தி, அத்தகைய மக்களை அனாவசியமான அடக்குமுறையின் மூலம் அதிரச் செய்துவிட காங்கிரஸ் முயன்றால், பலன், பிரிட்டிஷ் சர்க்கார் பெற்றதாகத் தான் இருக்கமுடியும் என்று எச்சரிக்கவும் செய்தேன். இந்த அளவுக்கு கூட அரசியல் ரீதியில் பேசுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை கிடையாதா?

    வடக்கம்பட்டியில் செப்டம்பர் 16ல் நான் பேசிய பிறகு, கொலை, கொள்ளை, தீ வைப்புகள் நடந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அந்தச் சம்பவங்களுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால், அச்சம்பவங்களை முன்னர் நா

  45. ன் குறிப்பிட்ட பகுதியில், இருக்கும் போலீஸ் அதிகாரிகளின் செயலால் விளைந்தவை என்று தான் கூறுவேன். அந்த அதிகாரிகளை அந்த இடத்தில் இருந்த மாற்ற வேண்டுமென்று ஆரம்பத்திலேயே எனது தரப்பிலே மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தும் எதுவும் செய்யாமல் விட்டு விட்டதால், அந்தச் சம்பவங்களுக்கு அந்த போலீஸ் அதிகாரியைத் தவிர வேறு எவரும் காரணமாயிருக்க முடியாது. பொதுவாக, இச்சம்பவங்களின் ஆரம்பமும் முடிவும் ஏழு நாட்கள் தான் செப்டம்பர் 14லிருந்து 20க்குள் நிலைமை ஓய்ந்து விட்டது. இதை கலெக்டரும் டி.எஸ்.பியுமே ஒப்புக்கொண்டு அறிக்கை விடுத்திருக்கிறார்கள். இந்நிலையில் நான் செப்டம்பர் 28ம் தேதி, அதாவது நிலைமை ஓய்ந்து சமாதானம் சாத்தியமான எட்டு நாட்கள் கழித்து, சிறைப்படுத்தப்படுகின்றேன். 20ம் தேதி நடந்த சம்பவங்களுக்காக 28ம் தேதி நான் சிறைப்பட எப்படி நியாய சம்மதம்? கிடைத்ததோ தெரியவில்லை. “கலவரம் ஓய்ந்து எட்டு நாட்களான பிறகு, சமாதானம் வந்து விட்டது” என்று அதிகாரிகளே அறிக்கை வெளியிட்டபிறகு, என்னிடம் தடுப்புக் காவல் சட்டத்தை நீட்டினால், அதில் நியாயச் சார்பு ஒரு ஓரத்திலாவது ஒட்டியிருக்கமுடியுமா? ஒரு போதும் முடியாது.

    தமிழ்நாடு பத்திரிகையின் பிரதிநிதியோடு நான் பேசுகையில், சர்க்காரோடு சண்டையிடுவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று கூறியதாகக் குறிப்பிட்டு இருப்பதற்கு அடிப்படையே இல்லை. நான் சொல்லியதே வேறு. அந்தச் செய்தியில் தேதி குறிக்கப்படாது போயினும் 24ம் தேதி நான் அந்தப் பத்திரிகைப் பிரதிநிதியுடன் பேசும்போது குறிப்பிட்ட விபரம் மேற்படி பத்திரிகையில் 25ம் தேதி வெளிவந்திருக்கிறது. அதன் நகலை இத்தோடு இணைத்துள்ளேன். அதுவே, அந்தக் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லும்.எவ்விதத் தொடர்புமற்ற முறையில் எங்கோ இருக்கிற எனது சொந்தக் குராமத்தில் உள்ள எனது வீட்டிற்குச் சென்று, எனது வீட்டுப் பணியாளர்களைக் கைது செய்து இருப்பதன் மூலம், அரசாங்கம் என்னைக் கோபப்படுத்த முனைகிறது என்ற விபரத்தை அந்தப் பத்திரிக்கை நறுக்கின் மூலம் எவரும் புரிந்து கொள்ளலாம்.

    ஸ்ரீவெங்கடேஸ்வரனின் விசாரணை நடந்து கொண்டிருந்த பொழுது, அரிஜனங்களை அச்சுறுத்துவதற்காக நான் கட்டிட வாயிலில் காத்திருக்கவில்லை. அவ்விசாரணையில் கலந்துகொள்ள நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆயினும் சசிவர்ணத் தேவர் உட்பட என் நண்பர்கள், அதில் கலந்து கொள்ள விரும்பினார்கள். 19ம் தேதி நான் அவர்களுடன் மோட்டார் காரில் பரமக்குடிக்குப் போனேன். விசாரணை நடந்த இடத்திற்கு என் நண்பர்கள் சென்றார்கள். நான் அரை மணி நேரம் மற்றொரு நண்பரின் வருகைக்காக அங்கு காரில் காத்திருந்தேன். 21ம் தேதி ஐந்தே நிமிடம் அங்கு காரில் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தேன். 22,23,24 தேதிகளில் நான் அந்த இடத்திற்கே போகவில்லை. 23ம் தேதி நான் பரமக்குடியில் இருக்கவில்லை. மகாளய அமாவாசைக்காக ராமேஸ்வரம் கோவிலில் சொற்பொழிவும் ஆற்றினேன்.கடைசியாகச் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்துமே, பொய்யானவை என்பது, அடிஷனல் ஜில்லா மாஜிஸ்திரேட்டுக்கும் சர்க்காருக்குமே நன்கு தெரியுமென்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    என்னைப் பொறுத்தவரை நான் சமாதானத்திற்காக ஒவ்வொரு மூச்சையும் செலவிட்டு இருக்கிறேன் என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறேன். செப்டம்பர் 10ல் கலெக்டர் கூட்டிய சமாதான மாநாட்டில் தயாரிக்கப்பட்ட சமாதான வேண்டுகோளில் நான் கையெழுத்துப் போட்டு இருக்கிறேன். டில்லிக்குச் செல்லும் முன், வகுப்புணர்ச்சிக்கு இடம் கொடுத்து சமாதானத்தைக் குலைத்து விட வேண்டாமென்று வேண்டியிருக்கிறேன். டில்லியில் இருந்து திரும்பி வந்த பின்னரும், தொடர்ந்து சமாதானத்துக்காக வேண்டுகோள் விடுத்து, அதற்காகப் பாடுபட்டும் வந்திருக்கிறேன். செப்டம்பர் 21ல் மதுரை வந்த சமாதானக் குழுவினர்க்கு பூரண ஒத்துழைப்பையும் தர சம்மதம் தெரிவித்திருக்கிறேன். ஆனால், காங்கிரஸ்காரர்கள் முதலில் உடன்பட்டு, பிறகு உதறி விட்டனர்.

    நான் கைதாவதற்கு சற்று முன்பு மதுரையில் நடந்த மாபெரும் பொதுக் கூட்டத்தில் பேசிய நான், “பலாத்காரத்தில் யார் ஈடுபட்டாலும் எனது இதயத்தைப் பிளந்து அதிலிருந்து சொட்டும் உதிரத்தைக் குடித்த பாவியாவார்கள்” என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டேன். நான் விரும்புவது சமாதானமே என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் காட்ட முடியுமா? சமாதானத்தை விரும்பும் ஒருவன் இதைவிட மேலான உண்மையான வேண்டுகோளை விடுக்க முடியுமா? ஒரு சமாதான வேண்டுகோளை இதைவிட உறுதியான வார்த்தைகளால் கோர்த்து விடுக்கத்தான் முடியுமா? சமாதானத்திற்காக முன்நிற்கும் ஒருவன் தனது எண்ணத்தை இதைவிட வேறு முறையில் எப்படித்தான் வெளிப்படுத்துவது? காங்கிரஸ் சீர்திருத்தக் கமிட்டியின் பூர்வாங்க மாநாட்டை மதுரையில் செப்டம்பர் 28ல் தொடங்கி வைத்து நான் பேசிய பேச்சு முழுவதும் டேப்-ரிக்கார்டு செய்யப்பட்டு இருக்கிறது. அதில் முதுகுளத்தூர் சம்பவம் பற்றி நான் பேசிய பகுதியை மட்டும் திரும்ப வைத்துக்கேட்டால், சமாதானத்தில் எனக்குள்ள உறுதி திட்டவட்டமாகப் புலப்படும். அந்த டேப்-ரிக்கார்டைத் திரும்ப வைத்துக் கேட்கும்படி போர்டரைக் கேட்டுக்கொள்கிறேன்.

    என்னைச் சிறைப்படுத்தியது சரிதான் என்று போர்டார் நம்புவதற்காக, கௌரவமற்ற முறையிலும், நியாயமற்ற முறையிலும் வேண்டுமென்றே தயாரிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தான் அத்தனையும். என் மீது பல குற்றங்கள் சாட்டப்பட்டுள்ளன. குற்றம் சாட்டியவர்களைக் குறுக்கு விசாரணை செய்து, எனது நிலைமைகளைத் தெளிவுபடுத்தும் வாய்ப்பும் எனக்குத் தரவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் வாய்ப்புக் கிடைத்தால், என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அந்தரங்கத்தை வெளிப்படுத்துவேன். அத்தகைய வாய்ப்பு இல்லாத சிரமத்தில் நான் இருப்பதைப் போர்டார் புரிந்துகொள்ளலாம்.

    சமாதானமாக இருக்கும்படி நான் வேண்டுகோளே விடுக்கவில்லை என்பது என் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களில் ஒன்று. இது எவ்வளவு மோசமான, உண்மையை மூடி முத்திரை வைத்த பொய்யான குற்றச்சாட்டு என்பதை நான் விளக்கத் தேவை இல்லை. ஆனால், இது ஒன்றை வைத்தே என்மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் ஒருதலைத் தன்மையை அளவிட்டு விடலாம். மற்றும் எனது பேச்சுக்களைக் காரணம் காட்டி சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குச் சரியான ஆதாரத்தைச் சர்க்காரும் கொடுக்கவில்லை. குறுக்கு விசாரணை செய்யும் சந்தர்ப்பமும் எனக்குத் தரப்படவில்லை. எனவே, நான் சமாதானத்திற்காக உண்மையான வேண்டுகோள் விடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் பொய் பொய் பொய் பொய் என்ற ஒரு தரம் அல்ல; நூறு தரம் சொல்கிறேன். சொல்லுவதற்கான ஆதாரங்களை மேலே நான் தெளிவாக விளக்கியிருக்கிறேன். நான் விவரித்துள்ள அவ்வளவும் ஆதாரபூர்வமானவை. அவைகளுக்குரிய முக்கியத்துவம் அளிக்கும்படி போர்டாரை வேண்டுகிறேன்.

    நான் பின்னாலிருந்து கொண்டு தேவர்களைப் பலவந்த நடவடிக்கைகளுக்குத் தூண்டி விட்டேன் என்று குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இவ்வாறு குற்றம் சாட்டப்படுவது எளிது. ஆனால் அதை நிருபிப்பது கடினம். காட்டுத்தனமான இக்குற்றச்சாட்டில், ஒரு பகுதியாவது உண்மையென்று நிரூபிக்க, மிகச்சிறயதொரு ஆதாரத்தையாவது எடுத்துக்காட்டும்படி அரசாங்கத்தை அறைகூவுகின்றேன். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நான் விடுத்துள்ள சமாதானக் கோரிக்கைகளும், எடுத்துள்ள சமாதான நடவடிக்கைகளும் அரசாங்கத்தின் குற்றச்சாட்டுக்களை நியாயத்தின் முன்னே நெருங்க விடா. எனவே, என்னைச் சிறைப்படுத்தியிருப்பதற்குச் சரியான காரணம் கொஞ்சமும் இல்லை. நான் எனது சுதந்திரத்தை, மேலும் வகுப்புக் கலவரத்தை வளர்ப்பதற்கும், நாட்டின் பாதுகாப்புக்குப் பாதகம் விளைவிப்பதற்கும் பயன்படுத்துவேன் என்று கூறப்படுவதில் பொருள் இல்லை; அதற்கான ஆதாரங்களும் காட்டப்படவில்லை. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் சர்க்கார் செய்துவரும் அட்டூழியங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவைகளை மூடி மறைத்துக் கொள்ளவும், சர்க்கார் புரியும் மோசமான அரசியலை எதிர்ப்பவர்களில் நான் முக்கியமானவனாக இயங்கி வருவதால் என்னை அலைக்கழிக்கவும் தான் சர்க்கார் என்னை இந்தச் சட்டத்தால் வளைத்திருக்கிறது. முதுகுளத்தூர் பிராந்தியத்தில் கலக்கத்தைத் தூண்டிவிட்டது; அதன் மூலம் வேதனை மிக்க விளைவுகள் ஏற்பட்டது ஆகிய குற்றங்களுக்கு சர்க்காரும் குறிப்பாக முதன் மந்திரியும், உள்நாட்டு மந்திரியும்தான் பொறுப்பு என்று நிச்சயமாக உறுதியாகக் குற்றம் சாட்டுகிறேன். சர்க்காரும் குறிப்பாக முதல் மந்திரியும் உள் நாட்டு மந்திரியும் இந்தக் குரூரமான சம்பவங்களை உண்டாக்கியது எனது அரசியல் செல்வாக்கை அழிக்கவே என்பதையும் அறுதியிட்டுக் கூறிக்கொள்கிறேன். எனது குற்றச்சாட்டுக்கள் அத்தனைக்கும் போலீஸ் புரிந்த அக்கிரமச் செயல்களுக்கும் நீதிபதி விசாரணை நடத்தும்படி வலியுறுத்தி இருக்கிறேன்.

    பொது மக்களும், பிரபலம் வாய்ந்த ஆங்கிலம் தமிழ் தினசரி, வாரப் பத்திரிகைகளும் குறிப்பாக இந்து இந்தியன் எக்ஸ்பிரஸ், மெயில் போன்ற பத்திரிகைகள் அரசாங்கக் கொள்கையை வன்மையாகக் கண்டித்து எழுதி இருக்கின்றன. இவ்வகையில் அரசாங்கம் புரியும் செயல்களையும் கொள்கைகளையும் பலமாகக் கண்டிப்பதில் நான் மிக முக்கியமாக இருப்பதால்தான், அரசாங்கம் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறதேயன்றி, ஒழுங்கை நிலைநாட்டவோ, நாட்டுப் பாதுகாப்பிற்கோ அல்ல. தமது நோக்கம் போல் எதையும் முரட்டுத்தனமாகச் செய்வதற்கு இடைஞ்சல் படுத்தும் வகையில், நாடெங்கும் எதிரொலி செய்யும் எனது கண்டனக் குரலைக் கேட்காமல் செய்ய சர்க்கார் கொண்ட ஏற்பாடுதான் எனது சிறைவாசம். இதோடு, சர்க்கார், முதுகுளத்தூர் தொகுதி மக்களுக்குச் செய்த அக்கிரமங்களையும், ஒழுங்கீனங்களையும் வெளியாருக்கும், நியாயத்திற்கும் இலேசாகக் காட்டித் தன்னைத் தப்புவித்துக் கொள்ளத்தான், நிலைமை கட்டுக்கடங்கி அமைதி நிலவுகையில் அரசாங்கம் என் மீது சிறைவாச உத்திரவைச் செலுத்தியதற்கு மற்றொரு காரணம். முதுகுளத்தூர் சம்பவங்களுக்கு என்னையே பொறுப்பாக்கிக் காட்டிவிடலாம் என்ற கெட்ட நோக்கில், சர்க்கார் என்னைச் சிறைப்பிடித்து இருக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை. எனவே, என்மீது சாட்டியுள்ளவை அத்தனையும் நியாயத்திற்கு விரோதமானவை என்று போர்டாருக்கு அறிவித்துக்கொள்கிறேன்.

    என்னை நேரடியாக விசாரிக்கும்படியும், 28.9.1957ல் நான் மதுரையில் பேசிய பேச்சின் டேப்-ரிக்கார்டைத் திரும்ப போர்டுக்கு முன் வைத்துக்காட்ட வாய்ப்பளிக்கும்படியும் கேட்டுக் கொள்கிறேன். என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அத்தனையும் என்னைச் சாராதவை. நான் குற்றம் புரிந்தவனுமல்ல; புரிபவனும் அல்ல. ஆகவே, என்னைச் சிறைப்படுத்தி வைப்பதற்குரிய ஆதாரங்கள் போதவில்லை என்று அறிக்கை விடும்படி அட்வைசரி போர்டாரைக் கேட்டுக்கொள்கிறேன்”. என்று தேவர் தனது பதிலை முடித்தார். தேவர் கொடுத்த பதிலுக்கு எந்தவிதப் பதிலையும் அரசாங்கம் கொடுக்கவில்லை.

  46. பின்னர் இமானுவேல் கொலை வழக்கில் முதல் எதிரியாகத் தேவரைச் சேர்த்து, சென்னைச் சிறையிலிருந்து புதுக்கோட்டை சிறைக்கு மாற்றிக் காவலில் வைத்தனர். இமானுவேல் கொலை வழக்கு விசாரணைக்கு கீழ்க்கோட்டும் மேல் கோர்ட்டும் விசேஷக் கோர்ட்டுகளாக அமைக்கப்பட்டு புதுக்கோட்டையிலேயே விசாரணை நடைபெற்று வந்தது. தமிழ்நாடெங்கும், தேவரை விடுதலை செய்யக்கோரி ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள் நடந்தன. மக்களிடையே வெகுஜன எழுச்சி ஏற்பட்டது. அதே சமயம் தேவரை விடுவிக்கக் கோரி ஆலயங்களில் வழிபாடுகள், பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

    தேவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நேரத்தில் எந்த மந்திரியும், முதலமைச்சர் உட்பட தென்பாண்டி மண்டலத்திற்குள் நுழைய முடியாத அளவுக்கு, தேவருக்கு ஆதரவான எழுச்சி மக்களிடையே வலுப்பெற்று நின்றது.

    தேவர் மீதான கொலை வழக்கு விசாரணை புதுக்கோட்டையில் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்றது. தேவரை விசாரிக்க, முழு நேர நீதி மன்றம் பனிரெண்டு நாட்கள் தனியாகச் செயல்பட்டது. முப்பத்தேழு சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணை முடிந்து தீர்ப்புக் கூறும் நாள் அறிவிக்கப்பட்டிருந்தது.

    1959 ஆண்டு ஜனவரி மாதம் 6 ம் தேதி இரவு. தங்களது தங்கத் தலைவன் எப்போது விடுதலை ஆவார்? என்று மிகுந்த பேராவலுடன் இரண்டு ஆண்டுகள் காத்துக் கொண்டிருந்த மக்கள் புதுக்கோட்டையில் குவியத் தொடங்கி விட்டனர். சென்னை, சேலம், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து கார்களிலும், பஸ்களிலும், ரயில்களிலும் புதக்கோட்டைக்கு மக்கள் வெள்ளம் பெருக்கெடுத்துச் சென்று கொண்டிருந்தது. புதுக் கோட்டை நகரமே மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. எங்கும் தேவர் விடுதலை பற்றியப் பேச்சு. தேவரைக் காண அனைவரும் ஏக்கப் பெரு மூச்சு. மாசற்ற தங்கத்தை, பசும்பொன் சிங்கத்தை, மூதறிவு மிகுந்த முத்துராமலிங்கத்தை, தன்னகத்தே தெய்வமாகப் போற்றிடும் தென்னகத்து நேதாஜியைப் பார்க்க வேண்டும் என்ற இதயத்துடிப்பு அனைவரிடமும் இருந்தது. அதே சமயம், ஏதாவது விபரீதத் தீர்ப்பு வந்து விட்டால், என்ன ஆவது? என்ற திகில் கூடி இருந்த அனைவரிடத்திலும் குடி கொண்டிருந்தது. வைகறைப் பொழுது எப்பொழுது விடியும்? என இரவெல்லாம் ஆயிரக்கணக்கான தாய்மார்களும் உறங்காமலே கண் விழித்திருந்தனர். பொழுது புலர்ந்தது கடலென திரண்டிருந்த மக்கள் மனதில் மகிழ்ச்சி ஒரு பக்கம் அதிர்ச்சி ஒரு பக்கம் குடி கொண்டிருந்தது. தீர்ப்புச் சொல்லும் நாள் 1959 ஜனவரி 7 ம் தேதி வந்து விட்டது. இனித் தீர்ப்புச் சொல்லும் நேரத்தை அலைகடலெனத் திரண்டிருந்த மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். சரியாக காலை 11 மணி. நீதிபதி அனந்த நாராயணன் வந்து தன் இருக்கையில் அமர்ந்தார். என்ன சொல்லப் போகிறாரோ? என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் நீதிபதியின் அறிவிப்பு அவர்களை ஏமாற்றம் அடையச் செய்து விட்டது. ஏன் அப்படிபட்ட நிலைமை ஏற்பட்டது?

    சரியாகப் பதினோரு மணிக்கு வந்து தன்னுடைய இருக்கையில் அமர்ந்த நீதிபதி, சில நிமிட நேரம் கழிந்தவுடன், பிற்பகல் 2 மணிக்குத் தீர்ப்பு என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். பெருத்த ஆர்வத்திலும் எதிர்பார்ப்பிலும் இருந்த அந்த மக்களை நீதிபதியின் அறிவிப்பு ஏமாற்றத்துக்கு உள்ளாக்கத்தானே செய்யும்? மீண்டும் நீதிபதி சரியாக 2 மணிக்கு நீதிமன்றத்திற்க வந்து அமர்ந்தார். 50 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பைப் படித்தார்.

    “தேவர் மீதுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இமானுவேல் கொலைக்கும் தேவருக்கும் தொடர்பு இருக்கிறது என்று யூகிப்பதற்குக் கூட சாட்சியம் இல்லை. எனவே தேவரை விடுதலை செய்து தீர்ப்பு அளிக்கிறேன்” என்று நீதிபதி தனது தீர்ப்பை வாசித்தார்.

    குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களான குருசாமித் தேவர், காட்டுச்சாமித் தேவர், முனியசாமித் தேவர், சடையாண்டித் தேவர், பெரியசாமித் தேவர் ஆகியோரை சந்தேகத்தின் பலனை அளித்து விடுதலை செய்தார் நீதிபதி. இதர மூன்று பேர்களான அங்குசாமித் தேவர், பேயன் முனியாண்டித் தேவர், தவசித் தேவர் ஆகியோர் கொலைக் குற்றவாளிகளே என்று தீர்மானித்து, ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார் நீதிபதி.

    ‘தேவர் விடுதலை’ என்ற சொல்லைக் கேட்டதும் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தினர். ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.தேவர் விடுதலை அடைந்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்து, மக்களுக்குக் காட்சி தந்ததும், மக்கள் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு, ஆரவாரம் செய்து, கோஷங்கள் எழுப்பிக் கரவொலி செய்தனர். தேவருக்கு பலர் பெரும்பெரும் மாலைகளை அணிவிக்க வந்தனர். ஆனால், தேவரோ, “முழு வெற்றிக்குப் பிறகே மகிழ்ச்சி கொள்ள வேண்டும். மாலைகள் எதுவும் அணிவிக்க வேண்டாம். எல்லாம் இறைவன் திருவருள்படி நடக்கும். எனவே மாலைகளை ஆண்டவனுக்கு அணியுங்கள். என் பொருட்டு இத்தனை ஆர்வத்தோடு கூடிய அனைவருக்கும் நன்றி. அமைதியாகக் கலைந்து செல்க” என்று கேட்டுக்கொண்டார்.

    விடுதலை ஆனதும் தேவர் முக்கிய தலைவர்களுடன் புதுக்கோட்டை சாந்தாரம்மன் கோவில், பிரஹதாம்பாள் கோயில், ஐயனார் கோவில் முதலிய ஆலயங்களில் வழிபட்ட பிறகு, இரவு 8 மணிக்கு ஆடுதுறைக்குப் புறப்பட்டார். அங்கு தேவரின் குடும்ப குருநாதரான ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செலுத்தி வணங்கினார். ஸ்ரீலஸ்ரீ சைதன்ய சுவாமிகள், தேவர் விடுதலை ஆவதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, புதுக்கோட்டை சிறைக்கு வந்து தேவரைப் பார்த்தார். அப்போது தேவர் சுவாமிகளைப் பார்த்து, “சுவாமி உங்களைப் போன்ற மகான்களின் பாதம் சிறையிலே படலாமா?” என்று கேட்டார்.அதற்கு சுவாமிகள், “உங்களைப் பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். நீங்கள் விடுதலை ஆவிர்கள். ஆனால், அப்போது நான் இருக்க மாட்டேன். அதனால் தான் இப்போது வந்தேன்” என்று கூறினார். அதுபோலவே தேவர் விடுதலை ஆனபோது சுவாமிகள் சமாதியாகி விட்டார். அதனால்தான் விடுதலை ஆனதும் ஆடுதுறைக்குப் போய் சுவாமிகளின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார் தேவர். ஆடுதுறையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட தேவருக்குப் பிரம்மாண்டமான வரவேற்புக் கொடுக்கப்பட்டது.

    பிறகு, ஜனவரி 23ம் நாள் நேதாஜி பிறந்த தினத்தன்று, சென்னையில் இருந்து மதுரைக்குப் புறப்பட்டார் தேவர். அன்று மதுரையில் பார்வர்ட் பிளாக் கட்சியினரும், ஜனநாயகக் காங்கிரஸ் கட்சியினரும் ஏற்பாடு செய்திருந்த நேதாஜி பிறந்த நாள் கூட்டத்தில் தேவர் கலந்து கொண்டு பேசினார். அரசியல் விரோதத்திற்காகத் தன்மீது போடப்பட்ட கொலை வழக்கு பற்றியும், தனது செல்வாக்கை அழிக்க, தன்னைப் பின்பற்றும் மக்கள் மீது ஏவி விடப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், கீழத்தூவல் துப்பாக்கிச் சூட்டிற்க நீதி விசாரணை வேண்டுமென்றும் வலியுறுத்திப் பேசினார். எல்லா இடங்களிலும் எழுச்சி மிக்க வரவேற்பைப் பெற்ற வண்ணம் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல லட்சம் மக்களைச் சந்தித்தார் தேவர். 8.2.1959 ஆம் நாள் சென்னையில் ஜனநாயக காங்கிரஸ் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேவர், காங்கிரஸ் கட்சியின் அலங்கோல ஆட்சியைப் பற்றியும், அதனால் மக்கள் படும் கஷ்டங்களைப் பற்றியும் விரிவாக எடுத்துப் பேசினார். சென்னைப் பொதுக்கூட்டத்தில் பேசி முடித்ததும், சென்னையில் சில தினங்கள் தங்கி விட்டு பாராளுமன்றத்தில் பேசவதற்காகத் தேவர் டில்லி சென்றார். 1957ல் பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேவர், முதுகுளத்தூர் கலவரம், பின்னர் கைது என்று சிறையில் அடைக்கப்பட்டார். அதனால் பாராளுமன்றத்தில் பேச வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. 1959 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ராஷ்டிரபதி உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு தேவர் 17.2.1959ல் பேசினார். ஆளும் அரசின் போக்கு பற்றியும், வெளிநாட்டுப் பிரச்சினைகள் குறித்தும், மக்கள் வாழ்நிலை குறித்தும் தேவர் விரிவாகப் பேசினார்.இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் 18.2.59ம் தேதி டெல்லி பதிப்பு தேவரின் உரை பற்றி எழுதியதாவது. “பாராளுமன்றத்தில் அன்று கடைசிப் பேச்சாளரான தேவர், தமது தீவிர மிக்க பேச்சின் மூலம் சபையின் முழுக்கவனத்தையும் தம்பால் குவிய வைத்து விட்டார் தேவரின் வெண்கலக்குரல் பாராளுமன்றத்தை ஈர்த்தது”

    அறிவுசார் தமிழர்கள், தேவர் சொன்ன மேற்கூறியவற்றை புரிந்து கொள்வர் என்பது எம் எண்ணம்.
    அதை தவிர்த்து வேறு ஜாதி காழ்ப்புணர்வோடு சில புண்ணாக்குகள் சமூக தேவசத்தை எழுப்பினால், அது அவர்களின் முட்டாள்தனத்தை, தான்தோன்றித் தனத்தை, ஜாதி துவேசத்தை முன்னிறுத்த மட்டுமே என்பதையும் நம்மவர்கள் புரிந்து கொள்ளவேண்டோம்.

    தமிழனாக உலகின் மிகப் பெரிய காரியங்களை, அறிவு சார் ஊற்றுக்களை, இலக்கியங்களை, சமூக ஒழுங்கை, வளமையான தேசத்தை, உலகம் கொள்ளையடிக்க ஆசைப்பட்ட பெற்றிருந்த நாம் இப்படி ஜாதி அடிப்படையில் பிரிந்து சண்டை இட அந்த ஆங்கிலேயனும், பிற்கால காங்கிரஸ்காரனும், பகுத்தறிவு போர்வையில் இருந்த குள்ளநரி கோட்டங்களும் தான். எல்லோரும் இம்மண்ணின் மைந்தர் என்ற முறையில் கிடைக்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் நம் முன்னேற்றத்திற்கு பயன்படுத்துவோம், துவேசத்திற்கும் கனவாய்ப்போன கடந்த காலத்திற்காகவும் அல்ல. வாழ்க வளமுடன்!!!

  47. ஆஹா. அருமை..இது தான் அய்யாவின் உண்மை முகம்..
    இதற்கும் இவங்க புது பதில்கள் தயார் பண்ணுவார்கள். பொருத்திருந்து பாருங்கள்.
    எல்லாம் காலக் கொடுமை..

  48. உங்கள் கட்டுரையில் சொல்ல வந்திருக்கும் கருத்துக்கு நான் எதிரியில்லை.ஆனால் சொன்ன விதம் சற்று சரியாக இல்லையோ?என்று தோன்றுகிறது.”நாடார் சமுகத்தினர் தங்கள் சுய சாதிசமுக உதவி “முலம் முன்னேறி இருப்பதாகக் கூறியுள்ளீர்கள்.நாடார் கடையில் விற்கப்படும் பொருட்களையும்,நாடார்களால் தயாரிக்கப்படும் பொருட்களையும் அனைத்து சாதியினரும் வாங்குகிறார்கள்.அந்த வருவாயின் முலம்தான் அவர்கள் தங்கள் சாதிசமுகத்திற்கு உதவுகிறார்கள்.ஆகவே,அவர்களின் முன்னேற்றில் அனைத்து சாதியினரது பங்கும் உள்ளது.
    மேலும் நாடார் சமுகத்தினர் தாங்கள் நடத்தும் தொழிற்சாலையில் தங்கள்ச சாதியினருக்கே முன்னுரிமை தருகின்றனர்.இதனால் திறமையுள்ள பல மாணவர்கள் துரத்தி அடிக்கப்பட்டுள்ளுனர்.இதனால் அந்த மாணவர்களுக்கு தங்கள்சாதியிலும் இது போன்றவர்கள் இருந்தால் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளதே என்ற எண்ணம் தோன்றும்.இதனால் சாதி வேரூன்றி வளருமே தவிர அழியாது.சுய சாதிஉதவியின் மூலம் முன்னேறி உள்ளார்கள் என்று வினவு கூறுவது வருத்தமாக உள்ளது.அவர்களின் முன்னேற்றதில் பலரின் அழிவு உள்ளது.நாம் கூறும் விமர்சனம் நாய் தன் குட்டியை கவ்வுவது போல் இருக்க வேண்டும்.கடிப்பது போல் இருக்கக்கூடாது.மருதுபாண்டி சகோதரர்கள் போன்ற வீரமிகு நபர்கள் பிறந்த இதேசமுகத்தில் தான் முத்துராமலிங்கம் போன்ற தூரோகிகளும் உள்ளன்ர்.என்றுக் கூறியிருக்கலாம்.அதைவிட்டுவிட்டு அந்த சாதிப்பிரிவினரிடையே எந்த சிறந்த தியாகிகளும் இல்லை என்பதுபோல் கூறுவது[உங்கள் கட்டுரை அந்தக்கருத்தை பிரதிப்படுத்துவது போல் உள்ளது.]அவர்களிடையே கோபத்தைதான் உருவாக்கும்.காமராசரையும்.தேவரையும்,சாதியில் இருந்து பிரித்துப் பார்க்க வேண்டும்.காமராசர் அந்த காலக்கட்டத்தின் ஒரு சிறந்த தலைவர்.முத்துராமலிங்கம் அந்த காலக்கட்டத்தின் பிற்போக்குத்தன்மை கொண்ட, ஒரு நபர் எனற மட்டத்தில் பார்க்கவேண்டும்.

    • சாதி அடிப்படையில் அடிமைத்தனம் மிகுந்த அந்த நாட்களில் ஒடுக்கப்பட்ட ஒரு சாதிக்காரன் தன்னுடைய சாதிக்காரனை உயர்த்திவிட நினைப்பது இயல்பான ஒன்றே. சாத்தூர், சிவகாசி போன்ற ஊர்களில் SHN என்று ஆரம்பிக்கும் பள்ளிகள் உண்டு (SHN Edward Higher Secondary School, SHN Ethel Harvey Higher Secondary School etc…). SHN means Sattur Hindu Nadar/Sivakasi Hindu Nadar. அந்த பள்ளிகளில் நாடார்கள் மட்டும்தான் படித்தார்களா? படிக்கிறார்களா? மேலும் பத்திரகாளி அம்மன் கோவில்கள் நாடார்களால் கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அங்கு நாடார்கள் மட்டும் தான் அனுமதிக்கப் படுகிறார்களா?

  49. hello thevai illamal ipdi vathandhi parapuvathai niruthunga…..vinavu websiteku oru katalai unmai theriyamal ethaium publish panathinga….ungaluku ena therium thevar pathi……………inga ivlo kevalama solirukenga le apdina nenga kandipa oru jathya servandhavarathan irukanum….unmai theriyamal ….theraa arayamal publish panuvathu periya kutrathirku alaka neridum enbathai ividathil kooorikolla virumbiren………..thevar avargalin valkai varalarai nanraga padithu vitu then publish panunga……..ivlo thapa eluthirukenga……ithelam thapu…….kamarasar yar..immanuvel sekaran ….pasumpon u muthramalinga thevar yar endru varalaru therriyamal etheium thavaraga eluthatheergal….

  50. Neenga unga caste ah menmai paduthi pesurathukaka matha caste ah ilivu paduthathenga. konjam yosichu parunga thevar peoples sanda poduvanga aana oruthar kita inoruthara thoondi vitu pirika matanga neenga entha velai seirenga nu ungaluku puriyum. eluthanum nu perla ethavathu eluthi ungalala ippa oru jathi veri kelambetu iruku

  51. neenga pesura pechula jathi veri maranthu ellarum ore people nra thoughts varanum apdi elutha mudinja eluthunga illa ungala ilivu paduthi eluthunga padichutu comment tharom

  52. மக்கு பயபுள்ளைக… 1952-ல் சட்டமன்றத்தில் தேவர் “அரிசன முன்னேற்றத்தை பற்றி என்ன பேசினார் என்று படி..!!!

    கம்யூட்டர் உள்ளவன் எல்லாம் கட்டுரை எழுத வந்தாரன்..!!!

    போயி வரலாற நல்லா படி..! மக்கு பயபுள்ளைக…

    Note :சட்டப்பேரவையில் பசும்பொன் தேவர் – தொகுப்பு கே.ஜீவபாரதி

  53. The stupid fellows who lost themselves in caste-ism,may nit know the value of self respect.I also see the situation like this.Barbarians only enjoy barbarianism.Slaves only enjoy slavery.Still this time they maintained their region as a sensational region.People thought that they are foxes and stray dogs.But they taught they are lions, not as a human being.Lack of literacy and awareness made them as barbarians.There is no change in their attitude,still they are barbarians.Living with weapons is not a bravery,making scary is not a intelligence,living like a lion is not a right thing.Be live with the human being,living as a human being,living for a human being.Try to give peaceful life to next generation, not violence.Make our children as a rationalist, not as a barbarian.Make our children as a human being, not as a weapon of some selfish.
    Very good article vinavu.

  54. please delete it.. you are hurting our sentiments.. delete this page now.. i can understand that you are some sort of different caste who wants to create fight between devar and other castes..

  55. Yes, of-coarse,I belong to Vannar community lives in Viruthunagar district.I have relatives in Madurai Dt and Nellai Dt.I see the negative pages of castism. I have many friends in thevar and other community.The friends who belong to thevar community,never ready to give up castism. I visited Thalaivan Kottai Village in Nellai Dt for relative’s wedding function,I chatted with some fellows who were belonging to different community,the result is obvious.I face Two dumbler system,somebody compelled me call a child as Pandian, he did not respect me .The school, College which I studied,belonging to different community ( Not thevar community).Still they raise sensational problem using caste.The situation is still worse in my college and school.Some of students belonging to thevar community and other community(Pillai) were fought each other,initiated by thevar community.Some of my friends directly affected by Idiankulam revolt.Myself faced some inconvinience dueto this caste passion.My father did not allow me to attend interview i the past year on 28.10.11,reason was obvious. I could not get the permission to study In M.K.U, even I cleared exams and got the seat.All of them above,recently I was investicated by the police for coming late around 9.30.p.m on 29.10.12.The message is written based on my personal experiance.I had achat on this to my friends who belongs to your community,very few accepted this. Most of them are scolding like anything.They cut the relationships with me.Some of the students belongto this community behaves like a barbarian,themselves they delivered the reason as this caste.Most of the college students belonging this community like thier caste aragantly.That made senational issue in my college.Students belong to this community trying to spoil thier deucation and the institute.Why the fellows like you guide them properly? to avoid this criticism.

  56. தேவர் ஒரு தெய்வம் இது தெரியாத நீஙகல் ஒரு முட்டால்,அவரது வரலாரை முலுமையாக படிக்கவும்

  57. சொந்த சாதி மக்களை விட அரிஜன மக்களுக்குத்தான் அதிகம் நன்மைகள் செய்திருக்கிறார் — ரெம்ப நாளாக தேவர் ஜாதியினர் சொல்லிக்கொண்டிருக்கும் கதை இது. மனிதன் என்ற அடிப்படை உரிமையை கூட கொடுக்காமல் விலங்குகளை விட கேவலமாக ஒரு சமுகத்தை நடத்திவிட்டு இதில் விளக்கம் வேறு. முத்துராமலிங்க தேவர் அன்றைய கால கட்டத்தில் அரிஜன மக்களுக்கு கொடுத்த சில சில உரிமைகள் எல்லாம் தன்னை வள்ளாகவும்,பெருந்தன்மையானவராகவும் காட்டிக் கொள்வதற்காக செய்தவை என்பது கூடவா மற்றவர்களுக்கு புரியாமல் இருக்கிறது . ஏதோ ஒரு இடத்தில் ஒரு சில அரிஜன மக்களை ஆலயத்திற்குள் இவர் அழைத்து சென்றவுடன் ஆக இவரல்லவா மனிதர் என்று மற்றவர்கள் மெய் சிலிர்த்துவிடுவார்கள் என்று நினைத்து விட்டார்களா? அரிஜன மக்கள் எல்லோரும் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும் என்று உண்மையிலேயே இவர் நினைத்திருந்தால் அன்றும், இன்றும் இவரை தெய்வமாக வணக்கும் இவர் இன மக்களிடம் ஒரு வார்த்தை சொல்லியிருந்தாலே போதுமே?. இன்று வரை பல இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் ஆலய நுழைவிற்கு எதிர்ப்பு மற்றும் சாதி கொடுமையை மற்ற இனத்தவர்களை விட தேவர் இனத்தவரே அதிகம் செய்கின்றனர். அப்போ உண்மை நிலை என்ன? நான் ஒரு பத்து அரிஜன ஜாதி மக்களை கோவிலுக்குள் கூட்டிக்கொண்டு செல்வேன் எல்லாம் சும்மா சீன் நீங்க அவனுகளை உள்ளே விடாதீர்கள் என்று முத்துராமலிங்க தேவர் சொன்னாரா இல்லை முத்துராமலிங்க தேவர் தெய்வம் அப்படி என்பெதெல்லாம் சும்மா சீன், அவர் சொன்னா நாங்கள் கோவிலுக்குள் விட்டுவிடுவோமா, எங்களுக்கு கட்டளை போடுவதற்கு அவர் யார் என்று தேவர் மக்கள் சொல்கிறார்களா? எது உண்மை? ஏனென்றால் முத்துராமலிங்க தேவர் அரிஜன மக்களை உண்மையிலேயே மதித்திருந்தால் அவரை தெய்வமாக வணங்கும் அவரது மக்கள் அவரை வார்த்தையையும், செயலையும் பின்பற்றியிருப்பார்கள் அல்லவா?. முருக கடவுள் இவருக்கு தரிசனம் கொடுத்ததாக ஒரு கதையை முத்துராமலிங்க தேவர் ஏற்கனவே அள்ளி விட்டிருந்தார். முருக கடவுள் இவருக்கு தரிசனம் தரும் அளவிற்கு இவர் தூய்மையானவரா?. அப்படியே இருந்தாலும் முருக கடவுள் இவரிடம் ஒன்றும் சொல்ல வில்லையா? ஜாதிகள் இல்லை , மனிதனை யாரும் விலங்குகளாக நடத்தக் கூடாது மனிதரில் சமத்துவம் வேண்டும் உன் இன மக்களிடம் ஜாதியை மறந்து கலப்பு திருமணம் செய்யுங்கள் என்று சொல் என்று முருகன் இவரிடம் ஒன்றுமே சொல்லவில்லையா? அரிஜன மக்கள் பெருமளவு தங்களது வாக்குகளை இவருக்குத்தான் செலுத்தீனார்கள் என்றும் அந்த அளவிற்கு முத்துராமலிங்கத்தேவர் மீது அரிஜன மக்கள் அன்பு வைத்திருந்தார்கள் என்று யோசிக்கமுடியாத ஒரு கதையை சொல்வார்கள். நவீன காலத்திலேயே அராஜாகமாக எத்தனையோ தேர்தல் நடக்கிறது, கள்ள ஒட்டு போடுகிறார்கள், ஓட்டு போடாதவர்களை தேடி சென்று தாக்குகிறார்கள், அந்த காலத்தில் இது அவ்வளவு பெரிய விஷயமா. பயத்தில் இருந்த மக்கள் இவருக்கு ஓட்டு போட்டது ஆச்சரியமானது அல்ல. இதை இவர் மீது வைத்த அன்பினால் என்று யோசிக்காமல் தேவர் மக்கள் சொல்வது இன்னும் நவீன காலத்திற்கு அவர்கள் வரவில்லை என்றுதான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது. ஈராக் நாட்டில் சதாம் ஹுசைன் சிலைகள்தான் தெருவுக்கு, தெரு இருந்ததாக செய்தி தாள்களில் வந்து கொண்டிருந்தது. அந்த அளவிற்கு அந்த நாட்டு மக்கள் சதாம் ஹுசைன் மீது அன்பு கொண்டிருந்தார்களாம். இன்னும் சொல்லப் போனால் அமெரிக்க படை ஈராக் எல்லையை தொடும்வரை அந்த நாட்டு மக்களின் மனதில் சதாம் மீது இப்படி ஒரு கோபம் ஒளிந்து கொண்டிருக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. அமெரிக்க படை ஈராக் நாட்டினுள் நுழைந்தபிறக்கும் அவர்கள் அமைதியாகவே இருந்தார்கள். முழுக்க முழுக்க சதாம் தோற்று விட்டார் என்று அந்த மக்கள் உறுதி செய்த பின்னரே அவரது சிலைகளை அடித்து, நொறுக்கினார்கள்.இன்னும் சொல்லப் போனால் வார்த்தைகளால் சொல்லமுடியாத செயல்களையெல்லாம் அவர் சிலை மீது அந்த மக்கள் காட்டினார்கள். பயத்திற்கும், அன்பிற்கும் உள்ள வித்தியாசத்தை எப்போதுதான் தேவர் இன மக்கள் உணர போகிறார்களோ.

  58. தேவரினம் கடவுளாக நினைக்கும் தேவரை அசிங்கமாக எழுத நினைத்து அதில் காமராஜரை தூக்கி பேசி …நாடாரை கூட்டாக்கும் உன் முயற்சி ஜெயிக்காது..

    தேவரை குரை சொன்னா எப்படிடா …அவங்க நீ சொல்ரத கேப்பாங்க…

    நீ மாற்ற நினைக்கவில்லை …

  59. வினவு நாடார் சாதிவெறி பற்றி கட்டுரை எழுதி இருக்கிறதா?

    • நாடார் சாதிவெறி அவர்களின் முன்னேற்றத்தில் மட்டுமே காட்டுகிறார்கள் .மற்ற சாதியினரை ஒடுக்குவதிலோ மற்ற சாதியினருக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ நாடார் சாதி வெறி இருந்ததில்லை

  60. Oru sila idangalil naadar saathi veri irukalam but ottumothamaka solla mudiyathu. mikuvum odukkapatta avarkal inru unamaiyana inthukakal enru kooruvathuthan iyarkaiyin vinatham

  61. if Caste system is removed then no one will ask for Quota system right? no BC,MBC SC/ST?
    if every one is allowed in temple garbhagrham like in church and in Mosque, i think no conversion will happen and again Christians and Muslims will be come minority…… how many issues….

  62. உனக்கு என்னடா தெரியும் எங்க தேவர் ஐயா பத்தி .இப்ப வாழ்ற generation மட்டுமல்ல என் பேரன் generation யும் .எங்க ஐயா தான் குலசாமி.எவனாவது வதந்தி பரப்புனிங்க குடல சரிச்சு விட்டுருவோம்.

  63. உனக்கு சோத்துக்கு வழி இல்லையென்றால் போய் பிச்சை எடு,இப்படி ஒரு தலைவரை இழிவுபடுத்தி மற்ற ஒரு சாதியை தூக்கிப்பிடித்து எழுதினால் மற்ற சாதியினரிடம் வாங்கி குடித்து பிழைத்து கொள்ளலாம் என்ற எண்ணமோ.. இதுதான் வேசித்தனம்… விருதுநகர் மாவட்டத்தில் இன்றளவும் யாரும் நாடார் தேவர் நாயக்கர் என்று பேதம் பார்ப்பதில்லை .உன்னைப்போன்ற காசுக்கு கூட்டி கொடுக்கும் ஒரு சிலரால் இன்று சாதியம் பேசப்படுகிறது

  64. 47க்குப் பிறகு சீர்திருத்த முறையில் முன்னேறி வரும் பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல்வேறு பிற்படுத்தப்பட்ட சாதிகள் வளர்ந்திருக்கின்றன. அரசு பதவிகள், வணிகம், ஓரளவு நிலவுடைமை என்று வளர்ந்த நிலையில்// என்ன தலைவரே ..உங்களால் செல்லமா சாதி இந்து , உயர் சாதியினர் என்று அழைக்கப்படும் சூத்திரர்கள் எப்புடி , எந்த விதத்தில் , எந்த அரசியல் , எந்த அரசு ஆட்சியில் இந்த அசுர வளர்ச்சி அடைந்தார்கள் … சீர்திருத்த முறையில் இவர்கள் வளர்த்திருந்தால் , உங்கள் பார்வையில் தாழ்த்தப்பட்டவர்களாக இருப்பவர்களும் முன்னேறியிருக்கணுமே ..என் இல்லை

    அதே மாதிரி கொடியன்குளம் கலவரம் நல்ல கப்ஸா விடுகிறீர்கள் .. நீண்ட நாள் நடந்த கலவரமே என்றால் தீண்டாமை அனுபவித்து கொண்டிட்ருக்கும் பிரிவினர் எப்புடி எவ்வளவு நாள் போராட்டம் நடத்த முடியும் , அதும் உள்ளூர் திருடர்கள் , தமிழக அரசு , மாவட்ட ஆட்சியர் , காவல் துறை ஆகிய கூட்டணிகளை எதிர்த்து ..
    தியாகி இம்மானுவேல் சேகரன் பற்றி அவர் அந்த சமாதான கூட்டத்தில் முத்துராமலிங்கத்தை எதிர்த்து பேசியதால் கொலை செய்ய பட்டார் எனவும் ஆணித்தரமாக கூறும் உங்களிடம் ஒரு கேள்வி என் தியாகி இம்மானுவேல் சேகரனார் அவர்களை அதற்கு முன் பல தடவை கொலை செய்ய முயற்சி நடந்ததே அது ஏன் ..?

    என்னக்கு இது எல்லாம் தேவை இல்லை .நீங்கள் என்ன எழவு வேண்டுமானாலும் புரட்சி என்ற பெயரில் எழுதி கொள்ளுங்கள் …ஆனால் இங்கு தேவர் சமூகத்தை தேவர் என்றும் , நாடார் சமூகத்தை நாடார் என்றும் பதிவு செய்யும் நீங்கள் ,தேவேந்த்திர குலா வேளாளர் சமூகத்தை மட்டும் ஏன் தாழ்த்தப்படடவர்கள் என்று பொதுவான பெயரில் அழைக்கிறீர்களே …அது ஏன் .. அதில் ஏதேனும் உள்நோக்கம் உண்டா ….

  65. It was thevar who took harijans to temple

    It was Immanuel who created politics and try to become leader for SCs and tried fighting, purely cinematic villain

    Whatever he has done is nothing because he is not SC, even if he had sacrificed his life for them, the SCs will only support villain SC candidate

  66. ஒரு அண்மைய காலங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை தொகுத்து பதிவு செய்துள்ளீர்கள்.இதை படித்து உணர வேண்டிய தோழர்கள் மனதில் மாற்றங்கள் ஏற்படுமா?

  67. சாதிய வெரியர்களை பட்றி இவ்வளவு நீண்ட கட்டுரை தேவை இல்லை.. டார்வினின் கோட்பாட்டை ஆராயும் பொழுது, தேவன், பள்ளன், பரையன், அய்யன் என்று எவனும் இல்லை. இதுவெல்லாம் சமூக வர்க்க பிரிவின் விளைவுகளே….( குறிப்பு: இயற்கையை ஆராய்ந்தது டார்வின் மட்டும் அல்ல ஏன் எதற்கு என்று சிந்திக்கும் மக்கள் அனைவருமே.)

  68. முத்துராமலிங்கத்தேவர் அவர்களை பற்றி எவ்வளவு இழிவாக தரம்தாழ்த்த முடியுமோ அந்த அளவிற்க்கு அவரின் பெருமைகளை தாழ்த்திவிட்டீர்கள் இப்பதிவின் மூலம். அவர் தன் பெயருக்குப்பின்னே ‘தேவர்’ என்னும் வார்த்தையினை சேர்ப்பது ஒன்றே உங்களைப்போன்றவர்களுக்கு வயிரு எரிகிறது அல்லவா.. அதற்க்குக் காரணம்.. முக்குலத்தில் பிறந்தவர்கள் போர்தொழில் செய்த தமிழ் மூத்தகுடி இனத்தவர்கள் இனத்தவர்கள் நாடாண்ட மன்னர் வம்சாவளிகள் ஆவர். அவர்கள் காலம் கரையக்கரைய மக்களிடையே ஏற்ப்பட்டுவரும் மாற்றத்திற்க்கேற்ப்ப தேவரினத்தவருக்கென இருக்கும் பழக்கவழக்கம் நாகரீகமும் படிப்படியாய் குறைந்து கடைசியில் மிஞ்சியதே இந்த பெயருக்குப்பின் தன் அடையாளங்கள் (பட்டம்) போட்டுக்கொள்வதும், நீங்கள் காட்டுமிராண்டித்தனமென கருதும் அளவற்ற வீரமும் மட்டுமே. எஞ்சிய இந்த இரண்டையும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்கப்போவதில்லை. இமானுவேல் கொலைவழக்கில் தேவர் நிரபராதி என தீர்ப்பளித்த நீதிபதிக்கு தேவர் பணம்வழங்கிவிட்டார்னு சொல்லுறீங்களா…? தேவரை எதிர்த்து ஒரு பதிவு போடவேண்டும்னு முடிவு பன்னிட்டீங்க அததனால அதாரம் இல்லாம மனசுல வந்தத வாந்திஎடுத்து வச்சிருக்கீங்க.
    இமானுவேல் சேகரன் கொலைவழக்கிற்க்கும் தேவருக்கும் எந்த சம்மந்தமும் கிடையாதுன்னு வீடுவீடா துண்டுபிரசுரம் பன்னதே பள்ளர் சமுதாயத்தினர்தான். இன்னும் பசும்பொன்னில் அந்த சமுதாயத்திற்க்குதான் முன்னுரிமை வழங்கப்படுவது உங்களுக்கு தெரியுமா..? காமராசர் முதல்வரானதுக்கு காரணம் தேவர்தான்னு சொன்னதுல என்ன தப்பு அதான் உண்மை. தேசியத்துக்காக நேதாஜிகூட இணைந்து பாடுபட்டது பொறுக்காம கிண்டலா பதிவு பன்னிருக்கீங்க.. இவை அனைத்தும் வன்மையாய் கண்டிக்கத்தக்கது…!

    முதல்ல நாட்டுக்கு நாம என்ன பன்னபோறோம்னு பாருங்க.. நாட்டிற்க்காக வாழ்ந்து மறைந்து இன்று எல்லா சமுதாயத்தாராலும் அனைத்து கட்சி இயக்கங்களாலும் தெய்வீகதிருமகனாய் போற்றப்படும் தேவரை அசிங்கப்படுத்தி வன்முறையை தூண்டநினைக்காதிங்க..!!

  69. உங்களுக்கு அறிவே இல்லையா?? இணைய தளத்தில் எதாவது தேவர் பற்றி தவறான கருத்துக்களை பதிவிடுவதே உன்னை போன்ற ஆட்கள் ஈன தனமான வேளை செய்கிறீர்கள்.

  70. தங்களின் தனிப்பட்ட சாதி வெறியையே உங்கள் பதிவுகள்…

    கே.ஜீவபாரதியின் புத்தகங்களை படித்தவன் நான் அவர் பெயரை வைத்து பொய்யான தகவல்களை பரப்புகின்றீர்…

    ஆலயநுலைவுப் போராட்டம் பற்றி அறிவீரோ தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவர் நடத்தியது…

    சாதி பார்ப்பவனை சண்டாளன் என்றவர்…

    உங்களின் தனிப்பட்ட வண்மமே இந்த கட்டுரை நீக்குதல் நன்மை பயக்கும் ஆதாரமற்ற பதிவுகள்…

  71. அது ஏன் கே.ஜீவபாரதி என்கிர ஒருத்தரது புத்தகத்தை வைத்துதான் உங்கள் ஆய்வுகள் இருக்குமா? ஆய்வு என்பது பல செய்திகளை தொகுத்து. அதில் உன்மைகளை ஆய்ந்து எழுதவேண்டும். இந்த அடிப்படை ஆய்வில்லாத இந்த கட்டுரையை நீங்களும் எழுதுகிரீர்கள். சரி அதை விடுங்கள். உபதேசம் என்பது ஊருக்குமட்டும் தானா? ஜாதிகளை கடந்து நாம் இயங்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்த ஜாதி வன்மம் இன்று தேவர் சமூக மக்களிடம் மட்டும்தான் இருக்கிரதா? படிக்கும் இடங்களில் யார் ஜாதி அரசியல் செய்கின்றார்கள்? வந்து பாருங்கள் சென்னைப் பல்களைக்கழகம் போன்ற இடங்களில். இதற்க்கும் சப்பைக்கட்டு கட்டிக்கொண்டு வருவீர்கள். சாட்சிக்கு நானே இருக்கிரேன். இன்று பல இடங்களில் நீங்கள் ஆதிக்க சாதியினர். என்று சொல்லும் , சமுகத்தைச் சார்ந்தவர்கள் தற்போது. அந்த மணநிலையை விட்டு வெலியே வந்தாலும். நீங்கள் சொல்லும் பாதிக்கப்பட்ட மக்களின் புதல்வர்கள். அவர்களை பிரித்தாளுவதும். எப்போதும் அவர்களது சாதியை குரைச் சொல்லி வம்பிழுப்பதுமாகவே இருக்கிரார்கள். தங்களிடம் இருக்கும் தீண்டாமை சட்டத்தை எப்படி தவராக பயன்படுத்துகின்றார்கள் என்று உங்களுக்கு தெரியுமா? எப்படி இதுப் போன்ற உன்மைகளை நீங்கள் எழுதுவிர்கள் நீங்களும் அந்த கூட்டம் தானே.

Leave a Reply to ben பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க