privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விகோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!

கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்!

-

கோவையில் தனியார் பள்ளி ஒன்றின் அதிகமான கட்டணம்  வசூலிக்கும் கொள்ளையால்  சங்கீதா என்றொரு தாய் தற்கொலை செய்துகொண்டார். இந்த கொலைக்குத்  தனியார்மயக் கொள்கைதான்  முழுக்காரணம். இந்த தனியார்மய கொள்ளைக் கூட்டத்திற்க்கெதிராக பெற்றோர்கள் போராட வேண்டும் என்ற நோக்கோடு  மனித உரிமை பாதுகாப்பு மையம்  கோவையில் பெரும் பிரச்சாரம் செய்து வருகிறது.

அதன் அங்கமாக தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைக்   கண்டித்தும் வேடிக்கை  பார்க்கும் தமிழக அரசை கண்டித்தும்   சுவரொட்டி ஒட்டியும்,  துண்டு பிரசுரம் வினியோகித்தும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து கோவை செல்வபுரம் பகுதியில் ஸ்ருஷ்டி வித்யாலய என்ற தனியார்பள்ளி, கட்டணம் அதிகமாக வசூலிப்பதாக அந்தப்பகுதி பெற்றோர்கள் மனித உரிமை பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு பள்ளியின் அடாவடிபோக்ககை பற்றி கூறினர்.  உடனடியாக பள்ளிகெதிராக பெற்றோர்களை ஒருங்கிணைத்து  பள்ளி முன் 25 /5 /2011 அன்று  முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.

பெற்றோர்களை மிரட்டும் தொனியில் பேசி, அராஜகமாக நடந்து கொண்ட பள்ளி நிர்வாகம் HRPC போராட்டத்தின் இறுதியில் பெற்றோர்களிடம் தவறை ஒப்புக்கொண்டு  இனிமேல் இப்படி நடந்துகொள்ள மாட்டோம்,  அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டும் வசுலீப்போம்,  பணம் கட்டுவதற்கு ரசீது தருவோம், அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பிக் கொடுப்போம்,   கட்டணப் பட்டியலை போர்டில் எழுதி வைப்போம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்களின் பிள்ளைகள் மீது TC  கொடுப்பது, துன்புறுத்துவது போன்ற  எந்தவித நடவடிக்கையும்  எடுக்கமாட்டோம்    என்று கூறி பெற்றோர்களின் அனைத்து கோரிக்கைகளையும் பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது.

போராட்டத்தில் திரளான பெற்றோர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். தனியார் பள்ளிகள் என்பதால் மனம்போன போக்கில் இனியும் கொள்ளையடிக்க முடியாது என்பதை இந்த போர்க்குணமிக்க போராட்டம் எடுத்துக்காட்டுகிறது. கோவை மனித உரிமை பாதுகாப்பு மையமும் தொடர்ச்சியாக இந்தக் கல்விக் கொள்ளைக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருகிறது.

அந்த வகையில் சங்கீதாவின் மரணம் கோவையில் ஒரு விழிப்புணர்ச்சியை உண்டாக்குவதற்கு காரணாமாகியிருக்கிறது என்றால் அது மிகையல்ல.

படங்களை பெரியதாக பார்க்க படத்தின் மீது அழுத்தவும்

கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -கோவை தனியார் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக அதிரடி போராட்டம்! -

_____________________________________________________________________

– தகவல், படங்கள்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், கோவை
______________________________________________________________________

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்