privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்!

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பனக் குருக்கள்!

-

5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற பார்ப்பன குருக்கள் !வேலூர் குடியாத்தம் பகுதியில் உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த சிறுமி ராஜேஸ்வரி, வயது ஐந்து. இவளது தந்தை ராஜா. இந்தச் சிறுமி சாலையம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தாள்.

செப்டம்பர் 19-ஆம் தேதி பள்ளிக்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை என்று தந்தை குடியாத்தம் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். இடையில் கடந்த புதன்கிழமை இந்த பகுதியில் உள்ள கிணற்றில் ஒரு சிறுமியின் பிணம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் அந்தச் சிறுமி ராஜேஸ்வரி என்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் போலீசார் அந்தச்சிறுமியின் குடியிருப்புப் பகுதியருகே விசாரணை செய்திருக்கின்றனர். மேலும் பள்ளி அருகேயும் விசாரணை செய்திருக்கின்றனர். பள்ளி அருகே மூன்று கட்டிடங்கள் தாண்டி குமார குருக்கள் எனும் 46 வயது ஆஞ்நேயர் கோயிலின் பார்ப்பனப் புரோகிதர் குடியிருக்கிறான். இவன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரேயே இது போன்ற புகாரில் சிக்கி கைதாயிருக்கிறான். வீட்டு முகப்பில் அப்பாவி போன்று அமைதியாக இருந்த இந்த குருக்களை பிடித்து விசாரித்த போது உண்மை வெளியே வந்திருக்கிறது.

பள்ளி வாசலில் நின்றிருந்த சிறுமியை சாக்லெட் கொடுத்து கடத்தி சென்ற கடவுளுக்கு பூசை செய்யும் இந்த குருக்கள் அவளை பலமுறை வன்புணர்ச்சி செய்து அதன் போக்கிலேயே அந்த சிறுமி மூச்சுத் திணறி செத்துப் போயிருக்கிறாள். பிறகு எதுவும் நடக்காதது போன்று அந்தச் சிறுமியின் பிணத்தை கிணற்றில் வீசியிருக்கிறான்.

இப்போது இந்தத் தலைப்பில் ஏன் பார்ப்பனப் குருக்கள் என்று போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் கொதிக்கலாம். இதே வேலையை ஒரு ஆட்டோ டிரைவர் செய்தால் அவரது தொழிலைக் குறிப்பிட்டு போடுவதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நீதிப்படி இங்கே அந்த கயவனது தொழிலைக் குறிப்பிட்டு போட்டிருக்கிறோம்.

அடுத்து இத்தகைய கொடிய பாதகங்களை சமூகத்தில் பலரும், பல தொழில் செய்பவர்களும் செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் இங்கே தனது சாதி மற்றும் தொழிலின் அடிப்படையில் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் சார்பாக கடவுளுக்கு பய பக்தியோடு பூஜை செய்யும் ஒருவன் செய்திருக்கிறான், எனவே மற்ற குற்றவாளிகளைப் போல இவனையும் ஒரு குற்றவாளி என்று ஒதுக்கிவிட முடியாது.

ஐந்துவயது சிறுமியை பல முறை வன்புணர்ச்சி செய்து மூச்சுத்திணற வைத்து கொல்லுமளவுக்கு வெறி கொண்ட இந்த கயவன் எத்தகைய கொடிய பண்புடன் வாழ்ந்திருக்கிறான்? கோவையில் சேட்டு வீட்டு குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா? கோரமாட்டார்கள்.

ஜெயேந்திரன், தேவநாதன், தீட்சிதன் பொறுக்கிகள் வரிசையில் குமார குருக்களும் சேர்ந்திருக்கிறான். இனி கடவுளுக்கு பூசை செய்யும் குருக்கள் அத்தனை பேரையும் போலீஸ், உளவுத்துறையைப் போட்டு கண்காணிக்க வேண்டும். அவர்களை தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுமாறு பணிக்க வேண்டும். பொது சந்திப்பில் எல்லா குருக்களது போட்டோவை போட்டு இவர்கள் பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் வன்முறை செய்தால் உடன் புகார் அளிக்கும் வண்ணம் தொலைபேசி எண், தனி ஹாட் லைன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

இல்லையேல் நாம் இன்னும் பல சிறுமிகளை இழக்க வேண்டியிருக்கும்.

_________________________________________________

வினவுடன் இணையுங்கள்

வினவுக்கு நன்கொடை தாருங்கள்
[paypal-donation purpose=”Donation for Vinavu.com”]

தொடர்புடைய பதிவுகள்:

  1. வெடித்து அழுவதைத் தவிர வேறு ஏதேனும் செய்யலாம். இதற்காக வினவு எங்கே என்ன போராட்டம் நடத்தினாலும் வருகிறேன்.

  2. வேதியர் தீயவர்.
    தூயவர் ஆகிலர்.
    வடவழிச் சந்திலே
    வந்தவர் ஆரியர்.
    தீயவர் தீண்டினர்
    திராவிடம் கருகவே.

    வாதிடச் சோதிடம்
    சாதகம் பெருகிட
    சாதிமை தோன்றிட
    பேதமை மலிந்தன.
    ஆதலின் ஆதலின்
    வேதியர் தீயவர்.
    தூயவர் ஆகிலர்.

    தீயினால் வேள்விகள்
    தெய்வங்கள் நீண்டன.
    வேதமும் வருணமும்
    புணர்தலில் பிறந்தன
    சாதியும் பேதமும்.
    தீண்டத் தகாரென
    திராவிடர் ஆகினர்.
    திரிந்தனர் பிரிந்தனர்.
    ஆதலால் தீயவர்
    ஆரிய வேதியர்.
    தூயவர் ஆகிலர்.

    தீண்டவும் தகாதவர்
    ஆரியர் எனக்குறி.
    பார்ப்பனம் பழிக்கவும்
    ஆரியம் அழியவும்
    திராவிடம் தழைக்கவும்
    தினவுசேர் தோள்கொடு.
    சிந்தைசேர் அறிவொடு
    பெரியார் பேணுவம்!

  3. கோவையில் சேட்டு வீட்டு குழந்தையை கொன்றவர்களை விசாரணை எதுவுமின்றி என்கவுண்டர் செய்த போலீஸ் இங்கேயும் செய்ய வேண்டும் என்று தினமலரோ, இந்து முன்னணியோ கோருமா? அதெப்படி கொன்றது எங்க ஆளாச்சே,அதுவும் நடப்பது எங்க
    ஆட்சியாச்சே! சுட்டுருவோம்மா,அட சுடத்தான் விட்ருவோம்மா! பரமக்குடி மாதிரி கேடக
    ஆளில்லாத நபர்களைத்தான் சுடுவோம். சுடவைப்போம்.பரர்ப்பான் குருக்களை சுட்டால் அப்புறம் மனித உரிமை,ஜனநாயகம் என்னாவது.இதெல்லாம் தெரியலைன்னா திணமனி வாத்தியாரு வைத்தி கிட்ட கத்துகிறனும்.என்னங்கோ நான் சொல்லுறதில் தப்பில்லையேல்

  4. //சிறுமிகள் மீது பாலியல் வன்முறை செய்தால் உடன் புகார் அளிக்கும் வண்ணம் தொலைபேசி எண், தனி ஹாட் லைன் ஏற்பாடு செய்ய வேண்டும்//
    its there already

  5. இந்த கொடும்பாதக செயலை செய்த அந்த கொடூரனுக்கு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். இந்த செய்தியை ஒட்டி உங்கள் பதிவை முடிக்கும்போது ஏனோ திடீரென்று பிராமண துவேஷத்தை நோக்கி போனதோ.

    “அவர்களை தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுமாறு பணிக்க வேண்டும். பொது சந்திப்பில் எல்லா குருக்களது போட்டோவை போட்டு இவர்கள் பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் வன்முறை செய்தால் உடன் புகார் அளிக்கும் வண்ணம் தொலைபேசி எண், தனி ஹாட் லைன் ஏற்பாடு செய்ய வேண்டும்”

    மேலே சுட்டப்பட்டிருக்கும் பத்தி வேண்டும் என்றே புரோகித தொழில் செய்வோரை இழிவுபடுத்த பதியப்பட்டுள்ளது. இதை பற்றி விளக்கி கூற ஏதுமில்லை. ஏன் குருக்கள் போட்டோ மட்டும் போட்டு புகார் எண் தர வேண்டும்? பாலியல் வன்முறையில் யார் ஈடுப்பட்டாலும் புகார் தர ஒரு நம்பர் தரலாமே. அல்லது எந்த ஒரு குற்றத்திற்கும் 100 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாமே. ஆக, உங்கள் எண்ணம் வன்கொடுகைக்கு எதிரானதல்ல. கொடுமையை எதிர்க்கிறோம் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு ஒரு பிரிவினர் மேல் மண் வாரி தூற்றுவது.

    சிறுமியை வண்புணர்ந்த அந்த குருக்களுடையது ஒரு வகையில் குரூர புத்தி என்றால், ஒரு பிரிவினரை அசிங்கப்படுத்த வேண்டும் என்றே எழுதும் உங்களுக்கு வேறு வகையில் குரூர புத்தி. இதை எழுத்து தீவிரவாதம் என்று கூறினாலும் மிகையல்ல.

    எப்படியும் இன்னும் சிறிது நேரத்தில் வினவு ஆதரவாளர்கள் பிராமணர்களையும், இந்து மதத்தையும் கேவலப்படுத்துவார்கள், அவர்களுக்கு பதிலடி தருவதாக நினைத்துக்கொண்டு சில பிராமணர், இந்துக்கள் பிற மதத்தினரைக் கேவலப்படுதுவார்கள்.உதாரணத்திற்கு பாதிரியாரோ, இமாமோ பாலியல் வண்கொடுமை செய்ததை சுட்டிக்காட்டுவர். இப்படி மாற்றி மாற்றி திட்டி தீர்த்துக்கொள்வர். ஆகவே இந்த படிவிற்கு இதுவே எனது முதல் மற்றும் கடைசி பின்னூட்டம்.

    • விஜய்,

      இந்த கொடுமையை மற்றுமொரு குற்றச் செயல் என்று மட்டும் பார்க்கிறீர்கள். இல்லை இது சமூகத்தில் நடக்கும், தினசரியில் வந்து போகும் ஒரு செய்தி மட்டுமல்ல. இங்கே ஒரு குருக்கள் கடவுளுக்கு பூசை செய்பவன், கடவுளுக்கும் பக்தர்களுக்கும் தரகனாக செயல்படுபவன், பக்தர்கள், பார்ப்பனரல்லாதோரைக் காட்டிலும் ஒழுக்கமுடையவனாக இருப்பதால் மட்டும் பூசிக்கும் தகுதி கொண்டவனாக கருதிக் கொள்பவன் 5 வயது சிறுமியை கொன்றிருக்கிறான். எனவே இது மற்றுமொரு குற்றச் செயல் அல்ல.

      இத்தகைய கொடூரச் செயல் செய்தவன் ஒரு குருக்களாக இருந்திருக்கிறான் என்ற செய்தி உங்களுக்கு கவலையை அளிக்க வில்லை. மாறாக இதனால் இந்து மதமும், பார்ப்பனர்களும் தூற்றப்படுவார்கள் என்று மட்டும் பார்க்கிறீர்கள். இங்கே பார்ப்பனர்கள் என்று எல்லோரையும் நாங்கள் எங்கே தூற்றியிருக்கிறோம்? மாறாக பார்ப்பனியத்தை பின்பற்றும் பார்ப்பனர்களும், மடங்களும், ஆர்.எஸ்.எஸ்ம்தான் இந்த நாட்டு உழைக்கும் மக்களை சூத்திரன் -வேசி மகன் என்று தூற்றுகிறார்கள்.

      ஆகவே உங்கள் கவலை கொடுமையைக் கண்டிப்பதோ அதை நிறுத்துவது குறித்தோ அல்ல. அந்தக் கொடுமையை செய்யும் மத அதிகாரம் படைத்த பிரிவினரைக் காப்பாற்றுவதே. பரிசீலியுங்கள் உங்கள் கருத்து சரியா என்று!

      • மறுபரிசீலனை செய்கிறேன் – ‘கடைசி பின்னூட்டம்’ என கூறியதை.

        ” மாறாக இதனால் இந்து மதமும், பார்ப்பனர்களும் தூற்றப்படுவார்கள் என்று மட்டும் பார்க்கிறீர்கள்”

        அனைத்து மதத்தினரும் தூற்றப்படுவார்கள் என்றே பார்த்தேன்; பார்க்கிறேன். கருத்துகணிப்பு நடத்தும்போது செலக்டிவ் பயஸ் என்று சொல்லுவார்கள். தமக்கு சாதகமான பதிலை மட்டும் எடுத்துக்கொள்ளுதல். தாங்களும் என் பின்னூட்டத்தில் அதை தான் செய்திருக்கிறீர்கள். நான் அடுத்த வரியில் மற்ற மதத்தினர், குறிப்பாக பாதிரியார்களும், இமாம்களும் தூற்றப்படுவார்கள் என கூறியிருந்தேன். அதை தங்கள் வசதிக்கு கவனிக்க மறந்தது ஏனோ?

        “ஆகவே உங்கள் கவலை கொடுமையைக் கண்டிப்பதோ அதை நிறுத்துவது குறித்தோ அல்ல. அந்தக் கொடுமையை செய்யும் மத அதிகாரம் படைத்த பிரிவினரைக் காப்பாற்றுவதே”

        என் கவலை கொடுமையை கண்டிப்பதும் ஒழிப்பதும் தான். எம்.ஜி.ஆர் ஸ்டைலில் சொன்னால் – “ஒரு தவறு செய்தால், அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் (ஜாதி அல்ல) என்றாலும் விடமாட்டேன். ” என்றே அனைவரும் இருக்கவேண்டும் என்பது என் எண்ணம். ஆனால் அந்த கொடுமையை செய்தவர் எந்த மதம், ஜாதி என பார்த்து, அவர் சார்ந்த மதம், சாதியைத் தூற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

        “இந்த நாட்டு உழைக்கும் மக்களை சூத்திரன் -வேசி மகன் என்று தூற்றுகிறார்கள்”

        அப்படி சொன்னவர் யார்? அப்படி தூற்றுபவரைச் சட்டை காலரைப் பிடித்து கேளுங்கள். நான் அதை குறை கூறவில்லை. இந்த குருக்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அவனைப் பற்றி எழுதிய எதையும் நான் மறுக்கவோ, மாற்றவோ கூறவில்லை. ஆனால் இதை காரணம் காட்டி அனைத்து குருக்களின் புகைப்படத்தையும் ஏதோ குற்றவாளி போல் போட வேண்டும் என் கூறுவதயே தவறு என்று கூறுகிறேன்.

      • “இந்த கொடுமையை மற்றுமொரு குற்றச் செயல் என்று மட்டும் பார்க்கிறீர்கள். இல்லை இது சமூகத்தில் நடக்கும், தினசரியில் வந்து போகும் ஒரு செய்தி மட்டுமல்ல. இங்கே ஒரு குருக்கள் கடவுளுக்கு பூசை செய்பவன், கடவுளுக்கும் பக்தர்களுக்கும் தரகனாக செயல்படுபவன், பக்தர்கள், பார்ப்பனரல்லாதோரைக் காட்டிலும் ஒழுக்கமுடையவனாக இருப்பதால் மட்டும் பூசிக்கும் தகுதி கொண்டவனாக கருதிக் கொள்பவன் 5 வயது சிறுமியை கொன்றிருக்கிறான். எனவே இது மற்றுமொரு குற்றச் செயல் அல்ல.”

        மிக சரி. ஆகையால் இவனுக்குக் கடுமையான தண்டனை தரவேண்டும். இதில் எள்ளளவும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை..

    • விஜய் , இப்போ ஒரு இஸ்லாமியக் குழு தீவிரவாதச் செயலில் சம்பந்தப்பட்டிருப்பதாக காவல்துறை நம்பினால் , உடனே “ எல்லா மதரஸாக்களையும் , இமாம்களையும் கண்காணிக்க வேண்டும் அல்லது மதரஸாக்கள் அனைத்தையும் இழுத்து மூட வேண்டும் “ என சு.சாமி, சோ, இந்து முன்னனித் தீவிரவாதி ராமகோபாலன் அய்யர் , உள்ளிட்ட இந்துத்வ கும்பல்கள் சொல்லும் போது ஏன் அதே உத்தியை பார்ப்பன கயவர்கள் பாலியல் வன்புணர்ச்சி செய்யும் போது கையாளக்கூடாது ?

      எல்லா புரோகிதர்களையும் , குருக்களையும் , கற்பக்கிரகதுக்குள் வீடியோ வைத்து ஏன் கண்கானிக்கக் கூடாது?

      ஏன் எல்லா மடங்களையும் , மடாதிபதிகளையும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தக்கூடாது ?

      இது ஒன்றும் முதல் முறை அல்லவே !!!

      ஜெயேந்திரன் , நித்தியானந்தன் , தேவனாதன் , செத்துப் போன சாயிபாபா உள்ளிட்ட பல பேர் இன்னமும் கற்பழிப்பு , தகாத உறவு , கொலை , சட்டத்திற்க்குப் புறம்பான இன்ன பிற மாஃபியா வேலைகளைச் செய்தவர்கள் தானே நண்பரே!

    • மனிதப் பிறவியிலேயே ஸ்பெசல் டைப் என்று தன்னை தனிமைப்படுத்திக் காட்டிக் கொண்டு மானங்கெட்ட பூணூல் போட்டுக் கொண்டு தமிழை கொலை செய்து பேசிக் கொண்டு அதனை நீச பாசை என்றும் கூறிக் கொண்டு கடவுளுடன் நேரடியாக பேசத் தகுதி வாய்ந்த ஒரே இனமாக தன்னை பீற்றிக் கொண்டு திரியும் பார்ப்பனக் கழிவுகளின் உள் வக்கிரத்தை உரித்துக்காட்டினால்

      உனக்கு ஏன் நோவுதப்பா ?.?.

  6. கூலிக்கு மாரடிக்கும் நாலு கயவன்களில் எவனாவது முஸ்லிம் ஒருவன் ஏதாவது ஒரு கொடுஞ்செயலில் ஈடுபட்டால், உடனே “இஸ்லாமியப் பயங்கரவாதிகள்” என்று தேசபக்தர்கள் கூட்டம் ஓலிமிட தொடங்கி விடும்.

    தனி நபரான அந்த கொடியவனை கண்டிக்கிறேன் என்கிற பெயரில், இஸ்லாத்தை வம்புக்கு இழுத்து அதனை அசிங்கப் படுத்த வேண்டியதன் அவசியம் என்ன??

    நடந்த இந்த படுபாதக செயலைப் பற்றி எந்த ஒரு பத்திரிக்கையிலும் எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. இதுதான் நமது பத்திரிக்கை தர்மத்தின் (அவ)லட்சணம்!!!

    இதே சம்பவத்தை “ஹிந்து பயங்கரவாதியின் கொடும் செயல்” என்று செய்தி வெளியிட்டால், இவனது தனிப்பட்ட பாவ செயலுக்கும் – ஹிந்து மதத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று ஹிந்து மத நண்பர்களுக்கு எந்த அளவிற்கு மனம் வேதனைப் படுமோ, அதே அளவில்தானே, இஸ்லாத்தைப் பற்றி அவதூறாக எழுதும்போது, முஸ்லிம்களுக்கும் இருக்கும்!!

  7. துபாஇ ல இரன்டு வருடஙலுக்கு முன் இது போன்ட்ரு ஒரு சம்பவம்நடந்தது .5 வயது பாக் குலந்தய ஒரு கப்பல் மாலுமி வன் புனர்ந்து கொன்ரான் .அவனை அவனது குடும்பதினரெ அவனுக்கு எதிரக சாட்ஷி அலிதனர்.அதன் அடிப்படையில் அவன் கடந்த வருடம் அந்த சிருவனின் பெட்ரோர் முன்பு துப்பாகியால் சுட்டு கொல்லபட்டான் . அது போல இவனையும் சுட்டு கொல்ல வேன்டும்.

    • இது இந்தியா.. சனநாயக நாடு…சும்மா எவனையும் சுட்டுக்கொல்ல முடியாது.ஓரு வேளை அவர் நிரபராதியாக இருந்தால்? (கவனிக்கவும்)…

      இது ஓன்னும் கம்யனிச நாடோ.. அல்லது இஸ்லாமிய நாடோ அல்ல… உங்கள் தலித் (கடவுளின் குழந்தைகள் என காந்தியால் அழைக்கப்பட்ட) செய்து இருந்தால் என்ன செய்வீர்கள்…. பொய் வழக்கு ஜோடித்தனர் என போலீசார் மீது வழக்குத்தொடர்வீர்கள்..
      அவ்வளவுதானே..

  8. வன்புணர்ச்சி செய்தவன் யாராக இருந்தாலும் அவனை ஊரறிய தண்டிக்கப்பட வேண்டும். பிறகு,
    5 வயது சிறுமியை வன்புணர்ச்சி செய்து கொன்ற தலித்! என்று போடு பார்ப்போம்…உன் ஜட்டி கிழிய அடித்தே கொல்வார்கள்.

  9. குழந்தையை வன்புணர்வு செய்து கொன்றவன் மனிதனேயல்ல..

    //இனி கடவுளுக்கு பூசை செய்யும் குருக்கள் அத்தனை பேரையும் போலீஸ், உளவுத்துறையைப் போட்டு கண்காணிக்க வேண்டும். அவர்களை தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுமாறு பணிக்க வேண்டும். பொது சந்திப்பில் எல்லா குருக்களது போட்டோவை போட்டு இவர்கள் பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் வன்முறை செய்தால் உடன் புகார் அளிக்கும் வண்ணம் தொலைபேசி எண், தனி ஹாட் லைன் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இல்லையேல் நாம் இன்னும் பல சிறுமிகளை இழக்க வேண்டியிருக்கும்.//

    எல்லா குருக்களையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து தடுப்புக் காவலில் உள்ளெ வைத்து, பூசைகளை வினவு தோழர்களே மேற்கொள்ள வேண்டும்.

  10. சென்னையில் ‘ரிச்சி ஸ்ட்ரீட்’ மென் மற்றும் மின் சாதனங்களுக்குப் பேர் போனது. அங்கு செல்கின்ற எல்லோரும் திருடர்கள் அல்ல. இருந்தாலும் கண்காணிப்புக் கேமராக்கள் வைக்க ஏற்பாடாகி வருகிறது. இதன்மூலம் குற்றங்களை முழுமையாக ஒழிக்க முடியாது என்றாலும் ஒரு 50% அளவுக்குக் குறையும் என நம்பித்தான் இதைச் செய்கிறார்கள்.

    கோவில்களுக்கும் அன்றாடம் பலர் செல்கின்றர். பெரிய கோவில்களில் சில நேரங்களில் தனியாகக்கூட சில பெண்கள் செல்ல வாய்ப்புண்டு. அப்போது கோவிலில் இருக்கும் பார்ப்பன புரோகிர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இவற்றைத் தடுக்க என்ன வழி? கண்காணிப்புக் கேமராக்கள் கண்டிப்பாக உதவும். நல்ல ஆலோசனை.

  11. 5 வயது சிறுமியை வண்புணர்ச்சி செய்து கொள்ள முடிகிறது என்றால் அவன் மனித பிறவியாகவே இருக்க முடியாது. அவன் ஒரு சைக்கோவாக இருக்கலாம் . அல்லது மனித உருவில் நடமாடும் ஒரு மிருகமாகதான் இருக்க முடியும்.
    குருக்கள் என்ற போர்வையில் திரியும் இவனைபோன்றோரை மக்கள் என்ன செய்தாலும் தகும்.

  12. //இப்போது இந்தத் தலைப்பில் ஏன் பார்ப்பனப் குருக்கள் என்று போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் கொதிக்கலாம். இதே வேலையை ஒரு ஆட்டோ டிரைவர் செய்தால் அவரது தொழிலைக் குறிப்பிட்டு போடுவதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நீதிப்படி இங்கே அந்த கயவனது தொழிலைக் குறிப்பிட்டு போட்டிருக்கிறோம்.// Excellent point, it very well serves the purpose.

    //அடுத்து இத்தகைய கொடிய பாதகங்களை சமூகத்தில் பலரும், பல தொழில் செய்பவர்களும் செய்யக்கூடிய ஒன்றுதான். ஆனால் இங்கே தனது சாதி மற்றும் தொழிலின் அடிப்படையில் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று அவர்களின் சார்பாக கடவுளுக்கு பய பக்தியோடு பூஜை செய்யும் ஒருவன் செய்திருக்கிறான், எனவே மற்ற குற்றவாளிகளைப் போல இவனையும் ஒரு குற்றவாளி என்று ஒதுக்கிவிட முடியாது.// of course but these people are called Paedophiles, they are not normal. they are more dangerous than other psychos. being a priest/saint/ or any other religious positions provide them a shield to cover themselves. paedophiles are hard to identify only because they do not express their instincts and the victims hardly know that they are being used in a wrong way (being children). Why didnt vinavu appreciate the police/public who nabbed the killer?

  13. ஒருவேளை இந்த செய்தியை தினமலம் பிரசுரித்தால் ‘குருக்கள்’ என்று குறிப்பிடாமல் ‘பூசாரி’ என்றே குறிப்பிடும். இது பொய் அல்ல. தேவநாதனை அந்த தினமலம் அப்படியே குறிப்பிட்டது.

    • கொடியவனை நடு ரோட்டில் நிக்க வைத்து ஜெயா போலிசை விட்டு சுட்டு தள்ள சொல்லணும்….
      பொன்ராசு சார் சொன்னது கரெக்டு… பெரும்பாலான இந்துத்வா பத்திரிகைகள் அவனை பூசாரி என்றுதான் கூறுகின்றன…

  14. பல மாதங்களுக்குப் பிறகு – நண்பர் ஒருவர் பேட்டில்ஷிப் போடம்கின் பற்றி எழுதி இருப்பதாகச் சொன்னதால் – இந்தப் பக்கம் வந்தேன். பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்களை இழித்துப் பேசுவதையும், அப்படி இழித்துப் பேசுவதற்கு சப்பைக்கட்டு கட்டுவதையும் இன்னுமா மாற்றிக் கொள்ளவில்லை?

    // இனி கடவுளுக்கு பூசை செய்யும் குருக்கள் அத்தனை பேரையும் போலீஸ், உளவுத்துறையைப் போட்டு கண்காணிக்க வேண்டும். அவர்களை தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்து போடுமாறு பணிக்க வேண்டும். பொது சந்திப்பில் எல்லா குருக்களது போட்டோவை போட்டு இவர்கள் பெண்கள், சிறுமிகள் மீது பாலியல் வன்முறை செய்தால் உடன் புகார் அளிக்கும் வண்ணம் தொலைபேசி எண், தனி ஹாட் லைன் ஏற்பாடு செய்ய வேண்டும். // இது அடக்குமுறை, யூதர்களை நாஜிகள் உலகப் போர் தொடங்கும் முன் நடத்திய விதத்தை நினைவுபடுத்துகிறது என்பதெல்லாம் என் பார்ப்பன சுய ஜாதி அபிமானமாகவே இருந்துவிட்டுப் போகட்டும். உங்கள் அணுகுமுறை நியாயமானதே என்றே வைத்துக் கொள்வோம். பாலியல் வன்முறையில் ஈடுபடும் அனைவருக்குமே இது பொருந்தும், ஆனால் கடவுளுக்கு பூசை செய்பவர்கள் இப்படி ஒழுக்ககேடான செயல்களில் ஈடுபடுவது சாதாரணன் செய்வதை விட கொடுமையானதாயிர்றே என்ற பதைபதைப்பைத்தான் இப்படி வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அது என்ன குருக்கள் – இன்னும் precise ஆகச் சொன்னால் பூசாரித் தொழில் செய்யும் பார்ப்பனர்கள் – மீது மட்டும் இப்படி கடுமையான கண்காணிப்பு? கடவுளுக்கு பூசை செய்யும், பூசாரித் தொழில் செய்யும் பார்ப்பனர் அல்லாத ஹிந்துக்கள், முல்லாக்கள், பாதிரிகள் ஆகியோர் மீது இத்தகைய கண்காணிப்பு ஏன் தேவை இல்லை? அட தொடர்புள்ள சுட்டி என்று கொடுத்திருபதில் காம வெறி பிடித்த பாதிரி ராஜரத்தினம், திருச்சபை வக்கிரங்களை அம்பலப்படுத்தும் ஜெஸ்மி என்றெல்லாம் பதிவு போட்டிருக்கிறீர்களே, அந்த narrow context -இல் கூட பாதிரிகளுக்கு இதெல்லாம் தேவை இல்லையா?

    ஒரு பின் லேடனை வைத்து எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று சொல்லிவிடக் கூடாது என்று நியாயம் பேசுபவர்களுக்கு ஒரு குருக்களை வைத்து எல்லா குருக்களையும் இழிவிபடுத்தக் கூடாது என்ற சிம்பிள் விஷயம் புரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பார்ப்பன ஜாதியில் பிறந்தவர்கள் மீது உள்ள வெறுப்பே, உங்கள் அடிமனதில் ஆழமாக ஊறிக் கிடக்கும் ஜாதி வெறியே இதற்கெல்லாம் மூல காரணமாக இருக்க வேண்டும்.

    // இப்போது இந்தத் தலைப்பில் ஏன் பார்ப்பனப் குருக்கள் என்று போட்டிருக்கிறீர்கள் என்று சிலர் கொதிக்கலாம். இதே வேலையை ஒரு ஆட்டோ டிரைவர் செய்தால் அவரது தொழிலைக் குறிப்பிட்டு போடுவதை யாரும் மறுக்க மாட்டார்கள். அந்த நீதிப்படி இங்கே அந்த கயவனது தொழிலைக் குறிப்பிட்டு போட்டிருக்கிறோம். // ஆட்டோ ஓட்டுவது தொழில். நாடார் ஆட்டோ டிரைவர், கவுண்டர் ஆட்டோ டிரைவர், செட்டியார் ஆட்டோ டிரைவர் என்று எழுதமாட்டீர்கள். வெறும் ஆட்டோ டிரைவர் என்றுதானே எழுதுவீர்கள்? இங்கே தொழில் பூசாரித் தொழில். பூசாரி என்றா எழுதி இருக்கிறீர்கள்? குருக்கள் என்று எழுதி இருந்தால் கூட தொழிலைத்தான் குறிப்பிட முயற்சிக்கிறீர்கள் என்று benefit of doubt கொடுக்கலாம். பார்ப்பன குருக்கள் என்று எழுதுவதற்கும், அதற்கு லாஜிக்கே இல்லாமல் சப்பைக்கட்டு என்று நினைத்துக் கொண்டு பிதர்றுவதற்கும் என்ன காரணம் என்று உங்களை நீங்களே கேட்டுக் கொண்டால் நல்லது.

    • டிரைவர்களில் பல வண்டிகளை இயக்கும் டிரைவர்கள் இருப்பதினால், டிரைவர் என கூறும்போது அவர் ஆட்டோ டிரைவர் என அடையாளம் காட்டப்பட வேண்டியுள்ளது. அதுபோல கோயில்களில் அர்ச்சக வேலை செய்வதற்கு கோயில்களின் கிரேடுக்கு ஏற்ப சாதி அடிப்படையில் பூசாரிகள் இருப்பதினால் இன்ன சாதி பூசாரி/குருக்கள் என அடையாளமிடப்படுவதில் என்ன தவறு உள்ளது?

      பிறகு பேட்டில்ஷிப் போதம்கினைப் பார்க்க வந்து விட்டு அதைப் பற்றி ஒரு வார்த்தையும் கூறவில்லையே!

      • //டிரைவர்களில் பல வண்டிகளை இயக்கும் டிரைவர்கள் இருப்பதினால், டிரைவர் என கூறும்போது அவர் ஆட்டோ டிரைவர் என அடையாளம் காட்டப்பட வேண்டியுள்ளது. அதுபோல கோயில்களில் அர்ச்சக வேலை செய்வதற்கு கோயில்களின் கிரேடுக்கு ஏற்ப சாதி அடிப்படையில் பூசாரிகள் இருப்பதினால் இன்ன சாதி பூசாரி/குருக்கள் என அடையாளமிடப்படுவதில் என்ன தவறு உள்ளது?//

        கரெக்டு. ‘இமாம்’, ‘இஸ்லாமிய’ தீவிரவாதிகள் மாதிரி… 😉

    • பார்ப்பன வெறுப்பு மாறவில்லை என்று நினைத்தேன், எதுவுமே மாறவில்லை போலிருக்கிறதே! முன்பு போலவே சங்கடமான கேள்விகளை கண்டுகொள்ளாமல் விடுகிறீர்கள். இன்னும் ஒன்றே ஒன்றுதான் பாக்கி, கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் சொன்னதையே திருப்பிச் சொல்வது.

      இந்தப் பக்கம் வருவது நேர விரயம் என்ற என் முடிவை உறுதிப்படுத்துகிறீர்கள்…

      • பதிவுலக பார்ப்பன பாசிஸ்டான டோண்டு இராகவனின் ஆசி பெற்றி ஆர்.வி அவர்களே…, ஜெயமோகன் தளம் போல பின்னூட்டங்களையும் மாற்றுக்கருத்துக்களையும் வெளியிட வாய்ப்பு கூட தறாமல் தடைசெய்து வைத்திருக்கும் கருத்து கொலைகாரனாகாதவரை நல்லதுதானே?

  15. ரொம்ப அன்பா இருக்கிற மாதிரி ஆட்களிடமும், பக்தியா இருப்பவர்களிடம் எப்போதுமே கவனமா இருக்கணும்.. அவன்களுக்கு இது ஒரு முக்கிய வேஷம்.. குழந்தைகளை கூட சொந்தங்களிடமே தொட்டு பழக அதிகமாய் அனுமதிக்க கூடாது..

    ஏன் இன்னும் இவனை என்கவுண்டர் செய்யல?..:((. குழந்தை எப்படி துடிச்சிருப்பா?:((

  16. //ஆட்டோ ஓட்டுவது தொழில். நாடார் ஆட்டோ டிரைவர், கவுண்டர் ஆட்டோ டிரைவர், செட்டியார் ஆட்டோ டிரைவர் என்று எழுதமாட்டீர்கள். வெறும் ஆட்டோ டிரைவர் என்றுதானே எழுதுவீர்கள்? இங்கே தொழில் பூசாரித் தொழில். பூசாரி என்றா எழுதி இருக்கிறீர்கள்? குருக்கள் என்று எழுதி இருந்தால் கூட தொழிலைத்தான் குறிப்பிட முயற்சிக்கிறீர்கள்//

    உங்கள் மறுமொழி அருமை.ந்யாயமான கேள்விகள்.

    பெரும்பாலான பத்திரிக்கைகள் தேவனாதனை அர்ச்சகர் என்று தான் குறிப்பிட்டன. பூசாரி/குருக்கள் என்றோ இல்லை.

    காம வெறியர்களுக்கு தேவைப்படும் கவசம்/டிஸ்கைஸ் தான் பூசாரி/குருக்கள், பாதிரியார், இமாம் போன்ற பதவிகள்.நடுனிலையான பார்வையில் பார்த்தால் இது புரிந்து கொள்ள முடியும்.

  17. i like R.V s comment but i am not in that community…
    please talk about the person or issues not by their community or caste,,
    when we start revolution agaist all caste and region…
    first stop asking caste or religion in schools from now///
    atleast next generation will stop this non sense….

    • //i like R.V s comment but i am not in that community…//

      “i am not in that community…’-னு உங்களை சொல்ல வெச்சது எது? ‘i like R.V s comment’-னு சொன்னா உங்களை சாதி பேரு சொல்லி திட்டுவாங்கன்னுதானே? இந்த நிலைமையில தான் தமிழ் வலையுலகம் இயங்குது. 😛

      (எனக்கும் பூனூல் மாட்டிடாதீங்கோவ். ஐ அம் முதலியார் 😉 )

      • Dear சீனு,
        I am expecting your answers in the other two old posts. If you are responsible person and so called genuine person then first answer those questions.

  18. உங்க மாதிரியான ஆள்களின் ஜாதி வெறினால தான் இந்தியா இன்னமும் இப்படியே இருக்கு. feel sorry about u VINAVU

  19. ‘பார்ப்பன’ வார்த்தை தவிர குருக்கள் வன்புனர்ச்சி செய்தான் என்று குறுப்பிடலாம் , ஆனால் வினவு அப்படி பதியாது .நன்றாக தெரியும்.

    மற்ற படி, “பாவம் பண்ணுரவனெல்லாம் எதுக்கு தம்பி பூமிக்கு பாரமா போட்டு தள்ளு, போட்டு தள்ளு…”

  20. கொல்லப்பட வேண்டும் என்ற முடிவில் மாற்றுக்கருத்து உள்ளது. மாறாக அந்த குருக்களை புட்டபர்த்தி ஆசிரமத்தில் காலியாக உள்ள சாய்பாபா பதவிக்கு நியமித்து விடலாம். நம்ம குஞ்சானி கலாம், கருணா பொஞ்சாதி, அட நம்ம மரமண்டு சிங், இன்னும் எத்தனையோ பேர் பாபா இல்லாமல் பைத்தியம் பிடித்துபோய் உள்ளார்கள். அடுத்த பாபாவை அடையாளம் காட்டிய அந்த[ பாப்பா]பிஞ்சுள்ளதிற்கு இந்த பக்தகோடிகள் நெஞ்சுள்ள அளவும் நேர்த்திக்கடன் செய்ய தயாராய் இருக்கிறார்கள்.

    • விடயத்தின் தீவிரத்தை மட்டுப்படுத்தவுதனை போல உள்ளது உங்கள் நகைப்புக்குரிய இந்த மறுமொழி…

      • இளம் சிறார்களை சீரழித்து கொள்வதில் பாபாவின் புகழே தனி. குருக்களின் உருவமும் செயலும் ஒரே மாதிரியாக இருப்பதால் அப்படியே புட்டபர்த்தியில் உட்கார வைத்து விட்டால் நம் கருப்பு பண முதலைகளுக்கு மோட்சம் காட்டுவார்.

  21. தலைவா இது ஒரு மனநோய். இவனுக்கு இவிங்க எழுதுன மனுதர்மபடியே ஒரு [சிகிச்சை] தீர்ப்பு தயாரா இருக்கு….ஆனால் மன்னித்துவிடுங்கள் தோழர்களே அதனை அச்சேற்றும் அளவு எனக்கு மனோதிடம் இல்லை, அவ்வளவு பெருமை வாய்ந்தது நம் மனு தர்மம்.

  22. (வினவு தோழர்கள் கவனத்திற்கு :- இது சம்மந்தம் இல்லாத பதிவு என்றாலும் இதனை முடிந்தால் தனியாக ஒரு பதிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன் – நன்றி )
    தோழர்களே , பதிவர்களே, பார்வையாளர்களே ,,

    ஒரு அவசியமான மற்றும் அவசரமான செய்தி. இன்று காலையில் பாரத் இஞ்சினியரிங் கல்லுரியில் (சேலையூர் – சென்னை) கடைசி ஆண்டு மாணவர்கள் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித்தருவதாக கூறி ஏமாற்றிய நிர்வாகத்தை எதிர்த்து ஆர்ப்பட்டம் மற்றும் வகுப்பு பிறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் பெரும்பாலான வெளிமாநில மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுடன் உணர்வுள்ள சில தமிழக மாணவர்களும் பங்கேற்றனர். குறைந்த பட்சம் 500 மாணவர்கள் பங்கேற்றனர். முதலில் ஆசிரியர்கள் மூலம் சமரசம் பேசிய நிர்வாகம், மாணவர்கள் அதற்கும் மட்டுப்படாததால், ஒரு சில புல்லுருவிகளை மாணவர்கள் மத்தியில் ஊடுறுவ விட்டு மாணவர்களில் முன்நின்றவர்களை வீடியோ படம் எடுத்தது. பின்னர் அதில் சில புல்லுறுவி மாணவர்களை விட்டு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்ற மாணவர்களை மிரட்டும் பணியில் ஈடுபட்டது நிர்வாகம். போராட்ட மாணவர்கள் உடனடியாக கோபம் கொண்டு அந்த புல்லுறுவிகளை விரட்டியடித்தனர்.

    நிர்வாகம் எந்த ஊடகத்தையும் உள்ளே அனுமதிக்கவில்லை. சமீபத்தில் கிடைத்த செய்தி. ஆத்திரத்தின் உச்சத்தில் போராடிய மாணவர்களில் முன்நின்ற மாணவர்களை தனியாக அழைத்துப் போய் இரும்புக்குழாயால் அடித்து தாக்கியிருக்கிறது நிர்வாகம். இது குறித்து வெளியே செய்திகள் வராதவாறு அமுக்க முயற்சிக்கிறது.

    இவ்விசயத்தை பரவலாக்குமாறு தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். மாணவர்களின் நியாயமான போராட்டத்தை ஆதரிப்போம்..

  23. சமீபத்திய செய்தி:

    தற்போது 150 மாணவர்களை சிறைபிடித்து கல்லூரி வளாகத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள.

    வெளியே போலீஸ் கூட்டம் நிற்கிறது. உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை.

      • வழக்கு யாரு போட்டாங்கன்னு இல்ல. இதை பத்தி அந்த ‘பெண் டீச்சர்கள்’னு பதிவு போட்டு கண்டிப்பீங்கன்னு எதிர்பார்த்தேன். 😛

  24. யு.கே.ஜி., மாணவிக்கு பாலியல் துன்பம்: 24 மணி நேரத்தில் கைது செய்ய உத்தரவு

    சென்னை : “யு.கே.ஜி., மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் புகாரில், சம்பந்தப்பட்டவர்களை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய வேண்டும்’ என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் யு.கே.ஜி., படிக்கும் நான்கு வயது சிறுமியை, அப்பள்ளியின் ஆசிரியைகள் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, சிறுமியின் தாயார் போலீசில் புகார் செய்தார். கடந்த மாதம் இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தைக் கண்டித்தும், சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு, போலீசிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு, போலீசார் அனுமதி மறுத்தனர்.

    இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில், ராமலிங்கம் என்பவர் ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தார். சிறுமிக்கு நடந்த கொடுமையைக் கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்த, பொது மக்களுக்கு அனுமதியளிக்கக் கோரி, அம்மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய “முதல் பெஞ்ச்’ பிறப்பித்த இடைக்கால உத்தரவு: ஒரு பள்ளியின் ஆசிரியை மற்றும் முதல்வரும், இத்தகைய கடுமையான, கொடுமையான குற்றம் புரிந்ததாக, எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளியில் யு.கே.ஜி., படிக்கும் சிறுமியை, வகுப்பு ஆசிரியை போஷியா, பள்ளி முதல்வர் லசி போஸ்கோ ஆகியோர், பாலியல் துன்புறுத்தியதாக சிறுமியின் தாயார், இந்தப் புகாரில் கூறியுள்ளார். புகாரை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் தாக்கல் செய்த பதில் மனுவில், “புகார் வந்த உடன் அதுகுறித்து புலன் விசாரணை செய்யப்பட்டது. ஆறு சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பின் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் இன்னும் கைது செய்யப்பட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது. இது, ஒரு கவலையளிக்கும் விஷயம். நான்கு வயது சிறுமியிடம், கொடூரமான குற்றம் புரிந்த, பெயர் குறிப்பிடப்பட்ட நபரை, போலீசாரால் கைது செய்ய இயலாத நிலை என்பது வியப்பாக உள்ளது. விசாரணைக்குப் பின், கைது செய்யப்பட்ட நபரின் பெயரைக் கூட இன்ஸ்பெக்டர் தெரிவிக்கவில்லை. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயலில் ஈடுபட்டவர்களை, 24 மணி நேரத்துக்குள் கைது செய்து, கோர்ட்டுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். டி.ஜி.பி., உள்ளிட்ட போலீசாருக்குத் தான், இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இப்பிரச்னையை கோர்ட் கவனத்துக்கு எடுத்திருப்பதால், ஆர்ப்பாட்டம் நடத்த மனுதாரருக்கு அனுமதியளிக்க விரும்பவில்லை. விசாரணை 27 ம் தேதிக்கு (இன்று) தள்ளிவைக்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர், விழுப்புரம் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், அன்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, “முதல் பெஞ்ச்’ இடைக்கால உத்-தரவிட்டுள்ளது.

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க