privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!

-

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!

13.11.2011 தினமலரில் அதன் சிறப்பு நிருபர் பெயரில் எழுதப்பட்ட “செந்தமிழர்கள் கொந்தளிக்காதது ஏன்?” என்றொரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறார்கள். அதை நீங்களே ஒரு முறை படித்துவிட்டு வாருங்கள், விரும்பாதவர்களுக்கு அதன் சுருக்கம் இங்கே:

அதில் 23 வயது சவுமியா எனும் அழகான கேரளப் பெண்ணை ஓடும் ரயிலில் வன்புணர்ச்சி செய்து கீழே தள்ளிக் கொன்ற கோவிந்தசாமி என்ற குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் மரண தண்டனை கொடுக்கப்பட்டிருக்கும் விவரத்தை தருகிறார்கள். பின்னர் அந்த கோவிந்தசாமி விருத்தாசலத்தைச் சேர்ந்த பச்சைத் தமிழன், மாற்றுத்திறனாளி, தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவர் மீதான மரண தண்டனையை எதிர்த்து நாம் குரல் கொடுக்க வேண்டுமல்லவா என்பதை போற்றுவது போல இழிவுபடுத்தும் வஞ்சப் புகழ்ச்சி பாணியில் எழுதியிருக்கிறார்கள்.

தினமலரின் நோக்கம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவர் மீதான தூக்கை எதிர்த்து தமிழகத்தில் எழுந்த எதிர்ப்பை இங்கே பொதுப்புத்தியில் ஒரு சென்டிமெண்டான விசயத்தை வைத்து இழிவுபடுத்துவதுதான். மரணதண்டனை வேண்டாமென்று கோருபவர்கள் இத்தகைய கொடூரமான காமப் பொறுக்கியை காப்பாற்ற குரல் கொடுப்பார்களா என்று கேட்பதன் மூலம் அந்த அழகான கேரளப் பெண்ணின் அனுதாபத்தை வைத்து ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டிருக்கும் மூவரை வில்லனாக்குவதுதான் தினமலரின் நோக்கம்.

அதே நேரம் கூடுதலாக தமிழன், மாற்றுத் திறனாளி, தலித் என்ற விவரங்களின் மூலம் தினமலரின் பார்ப்பன விழுமியங்களை நிலைநிறுத்துவது ஒரு போனஸ் நோக்கம். அதிலும் அந்த கோவிந்தசாமி தாழ்த்தப்பட்டவர் என்பதால் வயிற்றுப்பிழைப்புக்காக சிறு திருட்டுகள் செய்து இப்படி உணர்ச்சிவசப்பட்டு ஒரு தவறை செய்து விட்டார், அவரைக் காப்பாற்றுங்கள் என்று நயவஞ்சமாக எழுதுகிறார்கள். அதே போல இந்துத்வ இந்திய உணர்வுக்கு சேதாரம் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழுணவர்வை குறி வைத்து தாக்குகிறார்கள்.

என்ன எழுதி என்ன பயன்? தினமலர் உருவாக்கி வைத்திருக்கும் பிற்போக்கான வாசகர் வட்டம் இந்த வஞ்சப் புகழ்ச்சி இகழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தினமலர் இப்படி எழுதலாமா என்று கோபப்படுகிறது. அவர்களெல்லாம் கோவை என்கவுண்டர் மேனியாவில் மனதைப் பறி கொடுத்தவர்கள் அல்லவா, அதனால் இளம் பெண் கற்பழிப்பைத் தாண்டி மற்ற விவரங்களின் மறை பொருளை புரிந்து கொள்ள முடியாத துரதிர்ஷடசாலிகள். இருந்தாலும் ஆர்.எஸ்.எஸ் அம்பிகள் தினமலர் கட்டுரைக்கு அருஞ்சொற்பொருளை எழுதி வாசகர் கடிதத்தில் புலம்பும் அப்பாவித் தமிழர்களுக்கு தேறுதல் சொல்லி வருவதோடு தினமலருக்கு வாழ்த்தையும் தெரிவிக்கிறார்கள்.

மூவர் தூக்கை வெறும் மனிதாபிமான நோக்கில் பேசிய பலரும், அதன் அரசியல் முக்கியத்துவத்தை பேசினால் பிரச்சினை என்று வெறும் சென்டிமெண்டாக மட்டும் மக்களிடம் கொண்டு போனவர்களும், தினமலரின் இந்த சாணக்கிய நரித்தந்திரத்தை எதிர் கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். எனினும் அவர்களின் தவறு தினமலரின் வக்கிரத்தோடு ஒப்பிட முடியாத ஒன்று.

முதலில் ராஜிவ் கொலை என்பது ஆயிரக்கணக்கான ஈழத்தமிழரின் வாழ்வுரிமை போராட்டத்தோடு சம்பந்தப்பட்ட ஒன்று. அமைதிப்படையை அனுப்பி ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இந்திய அரசின் போர்க்குற்றத்தோடு தொடர்புடைய ஒன்று. ராஜிவ் கொலை வழக்கை வெறும் கிரிமினல் வழக்காக விசாரிக்காமல், அமைதிப்படை அனுப்பிய காலத்திலிருந்து தொடர்புடைய அரசியல் வழக்காக விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும். அதன்படி பார்த்தால் ராஜீவ் கொலை வழக்கில் குற்றமிழைக்காத மூவர் மட்டுமல்ல, அந்தக் கொலையை செய்தவர்களும் குற்றமற்றவர்கள் என்று ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியும். அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.

இதுவும் ஒரு பெட்டி கிரிமினலின் குற்றமும் ஒன்றா? ஆம் என்கிறது தினமலர். நாமும் அதை மறுக்காமல் தினமலர் பாணியில் வேறு சில குற்றங்களை ஆராய்ந்து பார்ப்போம்.

தினமலர் வாரமலரில் எழுதிப் புகழ்பெற்றவர் அந்துமணி எனும் இரமேஷ். இவர் தினமலர் சென்னை பதிப்பின் உரிமையாளரும் கூட. ராமசுப்பையரின் வழியில் வந்த பார்ப்பன உத்தமர். இவருக்கு இருக்கும் அதிகார செல்வாக்கை வைத்துப் பார்த்தால் இவர் நூற்றுக்கணக்கான பெண்களை சீரழித்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் உணர்ச்சி வசப்பட்டு சில பெண்களோடு மட்டும் கொஞ்சம் விளையாடி இருக்கிறார். அதில் ஒரு பெண், தினமலர் அலுவலகத்தில் வேலை செய்தவர் போலீசில் புகார் கொடுக்கிறார். இதை பாலியல் வக்கிரம் என்று மட்டும் புரிந்து கொள்ளாதீர்கள். அந்துமணிக்கு சினிமா, மேன்மக்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், முதலாளிகள் என்று பரந்துபட்ட தொடர்பு, வாய்ப்புகள் இருந்தும் அவர் எப்போதும் எல்லை மீறியவரில்லை.

ஏதோ போதாத காலம், கீழ் பணியாற்றும் பெண்ணிடம் கொஞ்சம் ‘லைட்டாக’ வரம்பு மீறிவிட்டார். பின்னர் புகார் கொடுத்த அந்தப் பெண்ணை மனநோயாளியாக ஆக்கி அலுவலகத்தை விட்டு துரத்தி, போலீசு உலகை கொஞ்சம் கவனித்து அந்த புகாரை குப்பைக் கூடைக்கு வீசி எறிந்து விட்டார். அவர் நினைத்திருந்தால் அந்தப் பெண்ணை கூலிக்கு ஆள் அமர்த்தி கொலையே செய்திருக்கலாம். அப்படி செய்யாதது ஏன் என்பதில்தான் அவரது ஜீனின் மாட்சிமை அடங்கியிருக்கிறது. பார்பனர்கள் எப்போதும் யாரையும் நேரடியாக கொலை செய்து பழக்கமில்லை. அதெல்லாம் மாட்டுக்கறி சாப்பிடும் காட்டு மிராண்டிகளான ‘கீழ்சாதி’ பயல்கள் செய்வது. அந்துமணி இரமேஷ் அய்யரை அப்படி எடை போட்டு விடாதீர்கள்.

இதற்கு மேல் அந்துமணியை கைது செய்து அந்த பாலியல் வன்புணர்ச்சிக்கான வழக்கில் விசாரித்து அவருக்கு தூக்குதண்டனை வாங்கித்தரவேண்டும் என்று யாராவது கிளம்பினால் அது தருமத்தின்படியும், மனு தர்மத்தின்படியும், பார்ப்பன நெறிப்படியும் அநீதியானதாகும். மேலும் உலகை ஆளும் ஒரு பார்ப்பனனை அப்படி தூக்கில் போட்டால் இந்தியாவே இயற்கை சீற்றத்தால் அழியுமென்பது உறுதி. ஆகவே யாரும் அந்த புண்ணியவானுக்கு தீங்கிழைக்காமல் இருங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை தூக்கில் போடுவது அநீதி!ஏற்கனவே காஞ்சி பெரியவாள் ஜெயேந்திர சரஸ்வதிக்கு அப்படி ஒரு அபகீர்த்தி நிகழ்ந்ததனால்தான் சுனாமி ஏற்பட்டு ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தார்கள். பெரியவாள் துறவறத்தோடு, பார்ப்பன தர்மத்தையும், இந்து மதத்தையும் அல்லும் பகலும் பாடுபட்டு காப்பாற்றும் திருப்பணியை செய்து வந்தவர். தொடர்ச்சியாக அந்த வேலைகளில் ஏற்பட்ட களைப்பு காரணமாக சில பல பார்ப்பன மாமிகளின் மேல் கை வைத்து விட்டார். அதுவும் கூட வன்புணர்ச்சி என்று முடிவு செய்துவிடக்கூடாது. அதெல்லாம் பெரியவாளுக்காக சில பக்தர்கள் ஒப்புதலுடன் மேற்கொண்ட பரிகாரங்கள்.

அனுராதா ரமணன் மட்டும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு பெரியவாளின் செய்கையில் குற்றம் கண்டுபிடித்து பொதுவெளியிலும் அம்பலப்படுத்தினார். அவர் புராணக்கதைகள் எதையும் படித்ததில்லை போலும். ஆனானப்பட்ட இந்திரனும், விசுவாமித்திரனும் கூட இப்படி சில தருணங்களில் சஞ்சலப்பட்டவர்கள்தான். அதையெல்லாம் பரப்பிரம்மத்தின் ஆகிருதி விளையாட்டு என்று கொள்வதை விடுத்து இகலோக மனிதப்பதர்களின் நோக்கில் ஆய்வு செய்வது தவறு.

இதையெல்லாம் புரிந்து கொள்ளாத குசும்புப் பார்ப்பான் சங்கரராமன் தொட்டதுக்கெல்லாம் மொட்டைக்கடிதாசி போட்டு பெரியாவளை இம்சித்து வந்தான். பெரியவாளும் எத்தனை நாள் இந்தக் கொசுக்கடியை சமாளிப்பது? அவாளுக்கும் சமயத்தில் கோபம் வருமோ இல்லியோ? பக்தரான அப்புவையும், ரவி சுப்ரமணியனையும் கூப்பிட்டு சங்கர ராமனை போட்டுத் தள்ளுமாறு உத்திரவிட்டார். அவர்களும் பெரியவாளின் கொசுக்கடியை கோவில் வளாக்கத்திலையே அரிவாளால் அழித்து விட்டார்கள். தெய்வம் நின்று கொல்லுமென்பது பெரியவாளின் விசயத்தில் உண்மையானது.

இது பொறுக்காத சில ஜென்மங்கள் பெரியவாளை கைது செய்து சிறையில் அடைத்து துன்புறுத்தியது அக்கிரமம். ஆனாலும் பெரியவாள் சஞ்சலப்படாமல் தொடர்ந்து போராடி எல்லா சாட்சிகளையும் விலைக்கு வாங்கி, பிறகு நீதிபதிக்கே ரேட் பேசி வழக்கை நீர்த்துப் போகச் செய்து விட்டார். இதெல்லாம் நீதிமன்றங்களில் சகஜம் என்பது ஒரு போண்டா வக்கீலுக்கு கூட தெரியும்.

தற்போது இந்த வழக்கை மறு விசராணை செய்து குற்றத்தை நீருபித்து பெரியவாளை தூக்கில் தொங்கவிட வேண்டும் என்று சிலர் பேசுவது சரியா? பூலோக இந்துக்களின் சர்வலோக குருவை இப்படி ஒரு கொசுக்கடி அழிப்பிற்காக தூக்கில் தொங்க விடுவது சரியா? நேர்மையுள்ள இந்துக்கள் சிந்திக்கட்டும். ஒரு வேளை சில தமிழ் – திராவிட – கம்யூனிஸ்ட் வெறியர்கள் அப்படி பெரியவாளை தூக்கில் போடுவதற்கு காரணமாக இருந்தால் இந்தியா அழிவது உறுதி.

விருத்தாசலம் கோவிந்தசாமி வயிற்றுப்பாட்டுக்காக திருடியதும், நம்மவா முதல்வர் புரட்சித் தலைவி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததும் ஒன்றா? சில அம்மாஞ்சிகள் அப்படிக் கேட்கிறார்கள். கோவிந்தசாமி திருடி, கற்பழித்ததற்கு தூக்கா, முழு தமிழகத்தையும் மொட்டையடித்த ஜெயாவுக்கு வாய்தாவா என்று கேட்பது மாபெரும் அநீதி.

புரட்சித் தலைவி தன்னை பாப்பாத்தி என்று சட்டசபையிலேயே துணிவாக அறிவித்த வீராங்கனை. இது வரை தமிழகம் கண்டமுதல்வர்களில் ஒரே ஒரு  இந்து முதல்வர் இவர்தான் என்று வீரத்துறவி இந்து முன்னணி இராம கோபாலனால் பாராட்டப்பட்ட தாய். அவருக்கென்று குடும்பமோ, குட்டியோ எதுவும் கிடையாது. அவர் சொத்து சேர்ப்பது யாருக்காக? தமிழகத்தில் உள்ள எல்லாக் கோவில்கள்களிலும் பூஜை, புனஸ்காரங்கள், யாகங்கள், குடமுழுக்கு செய்து இந்து தருமத்தை காப்பாற்றுவதற்காகவே அப்படி சொத்து சேர்க்கிறார். அதுவும் பெரிய பெரிய முதலாளிகள் தமிழகத்தில் தொழில் துவங்கி கைமாத்தாக வைக்கும் தட்சிணையைப் போய் அப்படி சொத்து சேர்ப்பு, திருட்டு, ஊழல் என்று சொல்வது யாருக்கு அடுக்கும்?

மல்லையாவின் மெக்டோவல் தமிழகத்தில் பெருக்கெடுத்து ஓடுவதனால்தானே சூத்திர, பஞ்சம, சண்டாளப் பயல்களுக்கு இலவச லாப்டாப்பெல்லாம் கொடுக்க முடிகிறது? அதற்கு காணிக்கையாக மல்லையா புண்ணியவான் சில போல கோடிகளை அம்மாவுக்கு கொடுத்தால் என்ன தப்பு?

பெங்களூரூ சொத்து குவிப்பு வழக்கிற்காக அம்மா எத்தனை நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருந்தது? இல்லையென்றால் அந்த கோவிந்தராசனை சட்டுப்புட்டென்று தூக்கில் போட தீர்ப்பளித்த மாதிரி ஓரிரு வருடங்களில் வழக்கை முடித்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

ஆக பார்ப்பன அறம் தழைத்தோங்க, பூலோகம் செழித்திருக்க அந்துமணி இரமேஷ், காஞ்சிப் பெரியவாள், புரட்சித் தலைவி போன்ற ஆன்றோரை காப்பாற்றுவது மானமுள்ள ஒவ்வொரு இந்துவின் கடமை என்பதை இங்கே வலியுறுத்துகிறோம்.

வந்தே மாதரம்!

பாரத் மாதாகி ஜெய்!!

இந்து தர்மம் ஓங்குக!!!

  1. //அதாவது அமைதிப்படை அட்டூழியத்தின் எதிர்விளைவுதான் ராஜவ் கொலை.//

    அப்படியே ? ராஜிவுடன் கொல்லப்பட்ட 15 இதர அப்பாவிகளின் கொலைகள் என்ன கணக்கில் சேர்த்தி ? collateral damage ?

    • 15 பேருக்கு வருத்தபடுகின்றீர்கள், பல நூறு ஈழதமிழர்கள் கற்பழிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொள்ளப்பட்டுல்லார்களே, அதுவும் இந்திய அமைதி(?) படையால். முதலில் அதற்க்கு பதில் சொல்லுங்கள்.

      • இந்திய அமைதிபடை செய்த கொடுமைகளுக்கு எதிர்வினை என்ற பெயரில் இங்கு 15 அப்பாவிகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முயலாதீர்கள். அதற்க்கு இது ‘எதிர்வினை’ அல்ல.

        • நிச்சயமாக நியாயபடுத்தவில்லை. 15 உயிர்களுக்கு இவ்வளவு மதிப்பு என்றால், அமைதி படை செய்த அநியாயங்களுக்கு, பல நூறு உயிர்களுக்கு உடமைகளுக்கு நீங்கள் பல மடங்கு கொதித்து இருக்க வேண்டும். அவர்களுக்கு முதலில் தண்டனை கொடுக்க வேண்டும்.

        • //இந்திய அமைதிபடை செய்த கொடுமைகளுக்கு எதிர்வினை என்ற பெயரில் இங்கு 15 அப்பாவிகள் கொல்லப்படுவதை நியாயப்படுத்த முயலாதீர்கள். அதற்க்கு இது ‘எதிர்வினை’ அல்ல.

          // இவர் எப்பயும் இப்படித்தாங்க. நாம ஒன்னு சொன்னா இவரு ஒன்னு சொல்லுவாரு. ஏன்ன்னா பேசிக்கலி அவரு கொஞ்சம் ‘தீவிர’மா சிந்திக்கிறவரு. அதான் பிரச்சினையே. ஆளுங்க செத்த கணக்கய இங்க பேசிக்கிட்டிருக்காங்க? அரசியல் நியாயத்தை தினமலம் சேறடித்துள்ளதே அந்த கொதிப்பிலிருந்தல்லவா நேர்மையானவன் எனில் பேச வேண்டும்? அப்படியில்லாமல் நானும் கணக்கு காட்டுவேன் என்றூ எழுதும் அதியமான் போன்றவர்களுக்கு கொஞ்சம் கம்மிதான்(என்னவென்று என்னிடம் கேட்காதீர்கள்)

      • கொய்யால பையா….. உன்னக்கு எல்லாம் கண்ணு தெரியுமா? காது கேட்குமா ? புத்தி வேலை செய்யுமா? எது சட்டம் ஒழுங்கு சம்மந்த பட்டது , எது அரசியல் சம்மந்தப்பட்ட கொலை என்று தெரியுமா..?
        ராஜீவ் உடன் செத்தவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஒரு அற்ப பதரை வெட்டும் போது, சில புற்களும் வெட்டு படும் என்பது உலக நீதி… கருட புராணத்தில் இல்லையா ?? நீங்கள் படிக்கவில்லையா ??? போய் படிங்கோ….

        • ராஜீவுடன் செத்தவர்கள் போகட்டும். கேடு கெட்ட புலி கூட்டத்தின் கையில் சிக்கி அழிந்து போன தமிழர்களின் ஆன்மா சாந்தி அடயுமா? அடையாதா? ஈழம் என்ற பெயரில் மக்களை வதைத்து குழந்தைகளை பெற்றோர் எதிரில் பிடித்து சென்ற அந்த அயோக்கியனின் செயலுக்கு என்ன தீர்ப்பு இந்த நாட்டமை சொம்பு மேடையில். அது தான் முள்ளி வாய்க்கால். கொத்து கொத்தாக ஜனங்கள் மடிந்திருக்கலாம். ஆனால் அந்த ஜனங்கள் அந்த அயோக்கியனுக்கு எதிராக ஒன்றுமே செய்யாமால் ஆட்டு மந்தைய்களாக நடந்ததற்கு இறைவன் எழுதிய தீர்ப்பு முள்ளி வாய்க்கால். மூன்று தசாப்தங்கள் ஒரு சமூகத்தை சீரழித்த கயவனின் தீர்ப்பு எழுதப்பட்ட நாள் மே ௧௯. அது பொது இறந்த அனைத்து மக்களும் ராஜீவுடன் செத்த அந்த 15 பேர் சாவின் நிழல்களே.

    • வாங்க அதியமான், நல்லா இருகீங்களா:) நல்ல கேள்வி. ஈழம் குறித்து கேள்வி கேட்டாக்கா அது அனுமார் வால் கணக்கா நீளும்.

      அப்போ சோனியாவுக்கு முள்ளிவாய்க்கால் முடிவும் *Collateral Damage*???? தெரிந்து கொள்ள ஆவல்!!

      • நண்பர் ரதி,

        நலமா ? கனாடாவின் பொருளாதார நிலை எப்படி இருக்கு ?

        Collateral damage பற்றி புலிகள் மற்றும் சிங்கள ராணுவம் : இரு தரப்பினரும் சிறிது கூட கவலை படவே இல்லை என்பது தான் உண்மை. மக்களை ஆட்டுமந்தை போல் தான் இருதரப்பினரும் நடத்தினர்.

        No fire Zone என்று ஒரு பகுதியை போரின் உச்ச காலங்களில், பன்னாட்டு அமைப்புகளின் உதவியோடு அமைக்கப்பட்டது. அதற்க்குள் மக்கள் மட்டும் சென்று பாதுகாப்பாக இருக்கவே இது. ஆனால் தொடர்ந்து பின் வாங்கிய புலிகளும் மக்களோடு மக்களாக அந்த பகுதிக்குள் (தர்ம விரோதமாக) சென்று, அங்கிருந்து தமது ஆர்டிலேரி எறிகுண்டு தாக்குதல்களை cynicalஆக் தொடர்ந்தனர். குண்டுகள் வரும் திசை / பகுதி மீது சிங்கள ராணுவனும் தொடர்ந்து பதில் தாக்குதல்கள். நடுவில் மாட்டிய அப்பாவி மக்கள் கொத்துகாக மடிந்தனர்.

        கடைசி கட்டத்தில் மக்கள் போர் பகுதியை விட்டு தப்பிக்க பல வழிகளில் (கடல் வழி மூலமும்) முயன்றனர். ஆனால் புலிகள் அவர்களை அனுமதிக்க மறுத்து, துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருந்தனர். நீஙக் இதை நம்ப மறுக்கலாம். ஆனால் இதுவும் உண்மைதான்.

        எனவே collateral damage பற்றி இரு தரப்பும் பதில் சொல்ல வேண்டியவர்கள் தான்.

        • அதியமான்,கனடா பொருளாதாரம் மற்றைய நாடுகளை விட பரவாயில்லை என்றுதான் சொல்கிறார்கள். இருந்தாலும் வேலையில்லாதோர் வீதமும் கூடித்தான் இருக்கு.

          ஈழத்தின் இறுதி முடிவில் வழக்கம் போல் எல்லோரும் புலிகளை மட்டும் குற்றவாளிகள் ஆக்கிப்பார்க்க நினைக்கிறார்கள். அது தானே வசதியும் கூட 🙂

          ஈழத்திற்காய் ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள் எல்லாம் புலிகள் பற்றி இன்னும் கூட பாய்ந்து, பாய்ந்து வித்தை காட்டிப் பேசுவது சிரிப்பைத்தான் வரவைக்கிறது. Have fun 🙂

          இப்போ நான் கேட்ட கேள்வி பாரத மாதாஜி சோனியாவுக்கு முள்ளிவாய்க்கால் முடிவு *Collateral Damage ஆ என்பது அதியமான். அதற்கு பதில் சொல்லுவீர்கள் என எதிர்பார்த்தேன்.

          • ரதி,

            வழக்கம் போல excessively emotional and least objective ஆன பதில் உங்களிடம் இருந்து. இதனால் தான் உங்களுடன் ‘உரையாட’ எப்போது தயக்கம். கவிஞர் தமிழ்நதியும் இப்படி தான் !!

            //ஈழத்திற்காய் ஒரு துரும்பையும் அசைக்காதவர்கள் எல்லாம் புலிகள் பற்றி இன்னும் கூட பாய்ந்து, பாய்ந்து வித்தை காட்டிப் பேசுவது சிரிப்பைத்தான் வரவைக்கிறது. Have fun // 80களில் நாங்கள் என்ன உதவி செய்தோம் என்று ஏதாவது தெரியுமா ? எம் குடும்பத்தினர் செய்த உதவிகளை இங்கு பட்டியலிட விருப்பமில்லை. மேட்டுர் அருகே புலிகளின் பெரிய பயிற்சி முகாம் இருந்தது. 1991க்கு பின்னர் அதற்க்கு உதவியவர்கள் பட்ட துன்பம் பற்றி ஏதாவது தெரியுமா ? சும்மா இஸ்டத்துக்கு பேசாதீங்க. you have your fun in Canada. ok.

            //ஈழத்தின் இறுதி முடிவில் வழக்கம் போல் எல்லோரும் புலிகளை மட்டும் குற்றவாளிகள் ஆக்கிப்பார்க்க நினைக்கிறார்கள்./// இதுதான் உங்க ’புரிதலா’ ? நான் புலிகளை ‘மட்டும்’ தான் குற்றவாளிகள் என்றா சொன்னேன் ?

            சரி, சோனியாவுக்கும் முள்ளிவாய்க்காலுக்கும் நேரடி சம்பந்தம் என்ன ? உங்க கேள்வியை ராஜபக்சேவுக்கும், புலி தலைமைக்கும் கேட்க வேண்டும். எத்தனை ஆயிரம் மக்கள் மாண்டாலும் பரவாயில்லை, எப்படியாவது புலிகளை அழிக்க வேண்டும் என்று சிங்கள ராணுவம் ஒர் பக்கம். அதே லாஜிக்கில், எத்தனை ஆயிரம் அப்பாவி மக்கள் மடிந்தாலும் பரவாயில்லை, புலிகளின் தலைமையை, இயக்கத்தை கடைசி வரை காப்பாத்த வேண்டும் என்று வைராக்கியத்துடன் புலிகள் ஒரு பக்கம். இவ்விரு தரப்பினரிடம் உங்க ‘கேள்வியை’ கேளுங்க. இந்தியா சிங்களவர்களுக்கு செய்த ஆயுத உதவிகளை விட சீனா அதிகம் செய்தது. இந்தியாவின் ‘உதவி’ இல்லாவிட்டாலும், இதே முடிவு தான் நடந்திருக்கும்…

            • அதியமான், நீங்கள் எங்களை முத்திரை குத்தாமலே பதில் சொல்லலாம் 🙂 எங்களின் முடிவு இப்படித்தான் முடிந்திருக்கும் என்பதில் சோனியாவுக்கு எந்த பங்குமே இல்லையென்று நீங்கள் சாதித்துக்கொண்டே இருங்கள். இந்தியாவின் போரை நடத்திக்கொடுத்தது இலங்கை. இது ஈழத்தின் சின்ன குழந்தைக்கும் தெரியும்.

              ஈழத்தைப் பொறுத்தவரை இந்தியாவின்/சோனியாவின் நோக்கம் வேறு. ராஜபக்சேக்களின் நோக்கம் வேறு. ஆனால், இரண்டும் சந்தித்த புள்ளி தான் தமிழனுக்கு சாதகமில்லாமல் போய்விட்டது. நாங்களும் கவனித்துக்கோடு தான் இருக்கிறோம் சீனா எப்படி இந்தியாவை சுற்றி தன்னை பலப்படுத்துகிறது என்பதை.

              //இந்தியாவின் ‘உதவி’ இல்லாவிட்டாலும், இதே முடிவு தான் நடந்திருக்கும்..//

              முடிவு இதேதான். ஆனால், புலிகள் இருந்ததால் 1980, 1990 களில் இந்திய அமைதிப்படையால் அழிந்திருக்க வேண்டிய தமிழன் தப்பி பிழைத்து விட்டான். அதே போல் புலிகள் இருந்ததால் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து இனவழிப்பிலிருந்து இவ்வளவு தூரம் காப்பாற்றி வைத்திருந்தார்கள். இல்லை என்றால் சத்தமே இல்லாமல் ஈழத்தமிழினம் என்றோ அழிக்கப்பட்டிருக்கும்.

              //you have your fun in Canada. ok// cool, cool, cool 🙂

              I am gettig tired your same old theories.Sorry!

              • //இந்தியாவின் ‘உதவி’ இல்லாவிட்டாலும், இதே முடிவு தான் நடந்திருக்கும்..

                1980 முதலே ரா முதலான அமைப்புகள் மற்றும் மலையாளிகள் ஈழ தமிழருக்கு எதிராக செயல்பட தொடங்கிவிட்டன. எனவே சீனா என்று சாக்கு போக்கு சொல்லாதீர்கள்.

              • //நீங்கள் எங்களை முத்திரை குத்தாமலே பதில் சொல்லலாம் ///

                but you were the one who started getting personal here. hence my rebuttal. ok. try to be objective and not subjective when arguing.

                //இந்தியாவின் போரை நடத்திக்கொடுத்தது இலங்கை. /// அது உங்கள் பார்வை. புலிகளின் முடிவுகள் மற்றும் செயல்பாடுகள் பற்றி கணக்கில் கொள்ளாமல் வைக்கப்படும் பொதுப்படுத்தப்பட்ட வாதம் இது.

                ///ஆனால், புலிகள் இருந்ததால் 1980, 1990 களில் இந்திய அமைதிப்படையால் அழிந்திருக்க வேண்டிய தமிழன் தப்பி பிழைத்து விட்டான்.///

                இந்திய அமைதி படை செய்த கொடுமைகளை நான் என்றும் நியாயப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முயன்றதில்லை. ஆனால் 1987இல் யாழ் முற்றுகையின் போது, இந்தியா ஈழத்தமிழர்களை காக்க ராணுவத்தை உடனே அனுப்ப வேண்டும் என்று பெரும் கோரிக்கை தமிழகத்தில் எழுந்தது. அப்போது நான் கல்லூரி மாணவன். பெரும் ஆவேசத்துடன் இதை முன்வைத்தோம். ஆனால் இந்திரா காந்தி அளவு ராஜிவ் காந்திக்கு புத்திசாலித்தனம் மற்றும் விவேகம் இந்த விசியத்தில் இல்லை. ஜெயவர்த்தேனே விரித்த வலையில் விழுந்தார். மேலும் தீக்ஸ்த் போன்ற ஆலோசகர்களின் தவறான வழிகாட்டுதலில் பெரும் தவறு செய்தார். புலேந்திரன், குமரப்பா முதலிய புலி தலைவர்களை சிங்களவர்களிடம் ஒப்படைத்ததில் இந்திய ராணுவம் பெரும் தவறு இழைத்தது.
                மேலும் பல மனித உரிமை மீறலகள்.

                ஆனால் புலிகள் செய்த பெரும் படுகொலைகள் மற்றும் மிக தவறான முடிவுகளை பற்றி கணக்கில் எடுக்காமலே உங்களை போன்றவர்கள் வெறும் உணர்ச்சிவசப்பட்டே தொடர்ந்து பேசுகிறீர்கள்.

                ///அதே போல் புலிகள் இருந்ததால் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து இனவழிப்பிலிருந்து இவ்வளவு தூரம் காப்பாற்றி வைத்திருந்தார்கள். இல்லை என்றால் சத்தமே இல்லாமல் ஈழத்தமிழினம் என்றோ அழிக்கப்பட்டிருக்கும்.///

                இல்லை. இன்றும் தென் இலங்கையில், கொழும்புவில், யாழ் குடாவில், கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் அமைதியாகவே வாழ்கிறார்கள். வன்னி பகுதியில் தான் அழிவு மற்றும் அவலம். போர் நடந்த காலங்களில் கூட மேற்சொன்ன பகுதி தமிழர்கள் சிங்களவர்கள் அருகே தான் அமைதியாக வாழ முடிந்தது. முக்கியமாக கொழும்பு பகுதியில். கடந்த 20 ஆண்டுகளில் ஒரு புதிய தலைமுறை சிங்களவர்கள் உருவாகிவிட்டனர். முன்பு போல் இனவெறி அந்த அளவு இல்லை என்பதேல்லாம் புரிந்து கொள்ள சற்று dispassionate analysis தேவை. மேலும் தமிழர்கள் போரில் பெரும் அளவு அழிந்தற்க்கு புலிகளும் பெரும் காரணம் தான். human shieldகளாக மக்களை உபயோகிப்பது, சிறார்களை கட்டாயமாக இழுத்து சென்று படையில் சேர்ப்பது போன்ற கொடுமைகளை பல ஆண்டுகளாகவே அவர்கள் கடை பிடித்தனர். மாற்று கருத்து வைத்த பல இதர தமிழர்களை ஈவிரக்கமில்லாமல் கொன்றழித்தன் பலன் இன்று நம்பத்தகுந்த நல்ல தலைவரே தமிழர்களுக்கு இல்லை..

                மேலும் சொல்ல முடியும். ஆனால் போதும். இத்துடன் நிறுத்தி கொள்வோம்.

                • //////அதே போல் புலிகள் இருந்ததால் சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து இனவழிப்பிலிருந்து இவ்வளவு தூரம் காப்பாற்றி வைத்திருந்தார்கள். இல்லை என்றால் சத்தமே இல்லாமல் ஈழத்தமிழினம் என்றோ அழிக்கப்பட்டிருக்கும்.///

                  இல்லை. இன்றும் தென் இலங்கையில், கொழும்புவில், யாழ் குடாவில், கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் அமைதியாகவே வாழ்கிறார்கள். வன்னி பகுதியில் தான் அழிவு மற்றும் அவலம். போர் நடந்த காலங்களில் கூட மேற்சொன்ன பகுதி தமிழர்கள் சிங்களவர்கள் அருகே தான் அமைதியாக வாழ முடிந்தது. முக்கியமாக கொழும்பு பகுதியில். கடந்த 20 ஆண்டுகளில் ஒரு புதிய தலைமுறை சிங்களவர்கள் உருவாகிவிட்டனர்.
                  ///

                  இலங்கையில் இது வரை ஈழத் தமிழர்களள ஒடுக்கியதும், இனி ஒடுக்க இருப்பதும் புலிகளோ? அல்லது இலங்கையில் சிறுபான்மையினருக்கெதிரான ஒடுக்குமுறை முடிவுக்கு வந்துவிட்டதோ? அப்படித்தான் அதியமான் சொல்வது இருக்கீறது

                • //dispassionate analysis /// Ridiculous

                  அதியமான், உங்க நடுநிலமையான பகுப்பாய்வு வடக்கு, கிழக்கு, கொழும்பிலே தமிழர்கள் அமைதியாகவே வாழ்கிறார்கள் என்பதிலேயே பல்லிளிக்கிறது.

                  அப்போ, தமிழர்களுக்கு அரசியல் யாப்பு முதற்கொண்டு, அவன் உயிர், வாழ்விடம், வாழ்வாதாரம், படிப்பு இன்னும் எல்லாமே பறிக்கப்படுவது உங்கள் Dispaasionate Analysis செய்பவர்களுக்கு தெரியாது தான். அதனால், நாங்களும் ஈழம் பற்றி அதன் அடிப்படை பிரச்சனை புரிந்தவர்களிடம் பேசிக்கொள்வது.

                  தமிழர்களின் உரிமை விடயத்தில் குறைந்த பட்சம் மனித உரிமைகள் அமைப்புகளின் அறிக்கைகளையாவது படித்து விட்டு வந்து தமிழர்கள் வடக்கு, கிழக்கு, கொழும்பில் உயிர்ப்பயமின்றி வாழமுடியும் என்று சொல்ல முடியுமா என்று யோசியுங்கள்.

                  ////try to be objective and not subjective when arguing.//
                  See again, you are talking about subjective arguments. Your arguments show your lack of knowledge about Tamils’rights in Eezham.

                  So, I say exactly what you said….//மேலும் சொல்ல முடியும். ஆனால் போதும். இத்துடன் நிறுத்தி கொள்வோம்//

                  • ///அப்போ, தமிழர்களுக்கு அரசியல் யாப்பு முதற்கொண்டு, அவன் உயிர், வாழ்விடம், வாழ்வாதாரம், படிப்பு இன்னும் எல்லாமே பறிக்கப்படுவது ///

                    கொழும்புவில், கண்டியில், மன்னாரில், மட்டகளப்பில், திரிகோணமலையில், இப்ப என்ன இன அழிப்பா நடக்கிறது ? அங்கும் ‘தமிழர்கள்’ தான் வாழ்கின்றனர். கண்டியில் எம் உறவினர்கள் (மலையக தமிழகள்) பலர் உள்ளனர். சும்மா வார்த்தைகளை விடாதீங்க.

                    சரி, அப்ப ஈழத்திற்க்கா மீண்டும் ஒரு ஆயுத போரை துவங்கி நடத்துங்க. all the best. Adios Amigos senorita !!

                    • அதியமான், வார்த்தைகளை நான் விடவில்லை. நீங்கள் உளறிக்கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள் 🙂 உங்களுக்கு ஈழம் Virtual Reality. You can say anything you want. We have been living that experience. உங்கள மாதிரி எங்களால் உளறமுடியாது. முழுப்பூசணிக்காயை ஒரு சோற்றுப்பருக்கைக்குள் மறைக்கும் தத்துவம் உங்களுக்கு கைவந்த கலை.

                      இலங்கை சுதந்திரம் பெற்ற நாள் முதல் நாங்கள் எங்கள் உரிமைகளுக்காக போராடிக்கொண்டு தான் இருக்கிறோம். நாங்கள் எப்படி போராடவேண்டும் என்று நீங்கள், அதியமான், எங்களுக்கு வகுப்பு எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையும் இல்லை. தேவையும் இல்லை 🙂

                      சீக்கியர்களுக்கு பொருந்துற ஆலமர தியரி தமிழர்களுக்கு பொருந்தினால் ஏன் குதிக்கிறீர்கள் 🙂

                      உங்க கூட பேசி என்னுடைய நேரத்தையும் விரயம் செய்ய முடியாது.

                      Gracias! Adiosssssssssss 🙂

            • // எத்தனை ஆயிரம் மக்கள் மாண்டாலும் பரவாயில்லை, எப்படியாவது புலிகளை அழிக்க வேண்டும் என்று சிங்கள ராணுவம் ஒர் பக்கம். அதே லாஜிக்கில், எத்தனை ஆயிரம் அப்பாவி மக்கள் மடிந்தாலும் பரவாயில்லை, புலிகளின் தலைமையை, இயக்கத்தை கடைசி வரை காப்பாத்த வேண்டும் என்று வைராக்கியத்துடன் புலிகள் ஒரு பக்கம். //

              புலிகளின் தலைமயையும் இயக்கத்தையும் காப்பாற்ற வேண்டுமெனில் அவர்களுக்கு மிகவும் கைவந்த கொரில்லா யுத்தத்தை வன்னிக் காடுகளில் தொடர்ந்திருக்கலாமே? மாவீரர் குடும்பங்களையும் வன்னிமக்களையும் சிங்களப் படையிடம் விட்டுவிட்டு காட்டுக்குள் தப்பி ஓடும் புத்தியை நம்ம தலைவர்களிடம்தான் காணமுடியும், பிரபாகரன் போன்ற தலைவனிடம் எதிர்பார்க்கமுடியாது.

              உலகம் அங்கீகரிக்காத ஆனால் தமிழீழ மக்கள் நம்பிய தமிழீழ அரசாகவே மக்களோடு பின்வாங்கியிருக்கிறார்கள்.

              • //புலிகளின் தலைமயையும் இயக்கத்தையும் காப்பாற்ற வேண்டுமெனில் அவர்களுக்கு மிகவும் கைவந்த கொரில்லா யுத்தத்தை வன்னிக் காடுகளில் தொடர்ந்திருக்கலாமே? ///

                இல்லை. அதற்க்கான சாத்தியங்கள் படிப்படியாக குறைந்தேவிட்டன. தப்ப எங்கும் வழியில்லாது அனைத்து பக்கங்களில் இருந்தும் சிங்கள படைகள் மற்றும் கப்பற்படை சுற்றுவலைத்து விட்டது. both sides were ruthless and utterly determined to fight to the bitter end, regardless of civilian deaths and destruction.

                • 4ம் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் தான் சாத்தியங்கள் படிப்படியாக குறைந்தது. மன்னாரிலிருந்தும், யாழ்பாணத்திலிருந்தும் இலங்கைப் படைகள் முன்னேறியபோதே சுற்றிவளைக்கும் நோக்கோடுதான் மெதுவாக முன்னேறுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிந்த ஒன்றுதான். புலிகளின் கடுமையான தாக்குதலை எதிர்பார்த்தே இலங்கை ராணுவம் மெதுவாக முன்னேறியது. வாய்ப்புகள் இருந்தபோதும் காட்டுக்குள் போகாத காரணத்தைத்தான் குறிப்பிட்டேன்.

        • pulikal makkalodu kalanthathinalthan rajapaksei makkalikollavendiyathai pochunu sollamal innum irukkirirey. athana normala satharana katturikku 5 peru pathil anuppuvarkal parpanani sonnal mattum kudumiyapudichikittu 100 paru pathilaliparkal ivarkal ethai ethirnokkukirarkal ariyarkal inthiya thiravidarkalodu kalandu endrum edukkamudiyatha intha jathi pothatha, ivar ardileri unmai endru andumanipol nammali puriya vikkirar.

    • ராஜிவுடன் கொல்லப்பட்ட 15 இதர அப்பாவிகளின்/////….அவர்கள் அப்பாவிகள் என்று நேரில் பாத்தீங்களா?செத்த 7000 தமிழர்கள் வன்புணர்ச்சிக்கு ஆளான பல ஆயிரம் தமிழச்சிங்க இது பற்றியெல்லாம் உனக்கு கவலை இல்லை!ராஜீவ் செய்த கொலைகள் எத்தனை?
      சீக்கிய படுகொலை-3000
      போபால் விஷ வாயு விபத்தின் காரணி ஆண்டேர்சன்னை தனி விமானம் மூலம் தப்பிக்க வைத்தது .அதன் பலனாக பலியான பல பத்தாயிரம் உயிர்கள்.இன்னும் ஊனமாக பிறக்கும் சந்ததி

  2. போலி மதச்சார்பின்மை. வலைக்குழுமங்களில் மதச்சண்டை நடப்பது சர்வ சாதாரணம். இதில் இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள், பகுத்தறிவு பேசுபவர்கள் என பல தரங்கள் உண்டு. இந்துக்கள் சார்பாக இந்துக்கள் மட்டுமே பேசுவார்கள் ஆனால் இந்துக்களையும் இந்து மதத்தையும் தாக்கி எழுத, கிறித்தவர்கள், முஸ்லீம்கள், பகுத்தறிவுவாதிகள், மேலும் பகுத்தறிவாளர் வேடமிடும் பிற மதத்தவர் என எல்லோரும் ஒன்று கூடி விடுவார்கள். முஸ்லீம்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்துக்கள் பெரும்பாலும் பகுத்தறிவு வாதம், நட்புக்கு உதவி என்ற ரீதியில் முஸ்லீம்களுக்கு ஆதரவளிப்பார்கள். உண்மையில், இந்த பகுத்தறிவாளர்களின் போர்வையில் இருப்பதெல்லாம் இந்து மதம் தவிர்தத பிற மத வெறியர்களின் கலவையே. இவர்களது வாதம் என்னவென்றால் இவர்கள் மதச்சார்பற்றவர்களாம், முற்போக்கு சிந்தனாவாதிகளாம். பகுத்தறிவுப்படி பேசுபவர்களாம். இவர்களின் பகுத்தறிவு இந்து மதத்துக்கு எதிராக மட்டுமே சிந்திக்கும், இந்து சம்பிரதாயங்களை மட்டுமே விமர்சிக்கும். இஸ்லாம், கிறித்துவ மதத்தைக் கேள்வி கேட்கும் விதத்தில் சிந்திக்கவே சிந்திக்காது. இவர்கள் மொழியில் இதற்குப் பெயர் பகுத்தறிவு மற்றும் மதச்சார்பின்மையாம்!!!!!

      • அது இந்தக்கட்டுரைக்கு சம்பந்தமோ இல்லையோ…உனக்கும் அதுக்கும் சம்பந்தம் இறுக்குப்பா?

        அட போப்பா..

        ஓக் கே யாப்பா..

    • பைய இப்பத்தான் நல்ல தெரிஞ்சிக்கிட்டார் இதையே
      அப்படியே பாலோ பன்னுங்க

    • paiya nee innum sinna paiyanaagaththaan irukkiraai. ingu enna padhivo adharkku karuththu sollu rss paaniyil matra madhangalai izhukkaadhe.paal kudikkira vayasula karuththu sonna appadiththaan

  3. டே முட்டாள், ஒரு பெண்ணை ரயிலில் இறுந்து தள்ளி வண்புனர்ச்சி செய்து கொன்றவனை வன் என் இனத்தான் என்பதற்க்காக காப்பாற்றநினைப்பது எந்த அளவு ஒரு மோசமான முட்டாள்தனமோ அதே போல் ராஜீவையும் அவருடன் கொல்லப்பட்ட அப்பாவித்தமிழனுக்கும் தண்டனையாகக் கிடைக்கும் தீர்ப்புக்குத் தலைவண்ங்கவேண்டும்..

    ஆமா இதுல என்ன சம்பந்தம் சம்பந்தம்ல்லாம சஙகராச்சாரியார இழுத்து விடுர…தம்பி நாஙக உன்னைப்போல அல்ல..இந்த மூணு பேரும் இந்துக்கள் தான் அதுக்காண்டி என்ன உன்ன மாதிரி மூக்கால் அழுகிறேனா???

    • ரயிலில் இறுந்து தள்ளி வண்புனர்ச்சி செய்து கொன்றவனை யாரும் காப்பாற்றவேண்டும் என்று சொல்லவில்லை. ராஜீவ் கொலையில் அனைத்து உண்மைகளும் மறைக்கப்பட்டுவிட்டன. விசாரணை முழுமையாக நடத்தப்படவேண்டும்.

      • ஆனந்த்…அனைத்து உண்மைகளும் மறைக்கப்பட்டன என்பது உஙகளின் ஊகமேயன்றி உண்மையல்ல..அது என்ன அனைத்து உண்மைகள்…ராஜீவ் கொல்லப்படவில்லையா? அல்லது விடுதலைப்புலிகளால் கொல்லப்படவிலலையா?

        விடுதலைப்புலிகளின் ஓவர் கான்பிடன்ஸும், ராஜீவ் காந்தியில் கொலையுமே ஈழத்தமிழர்களின் அழிவிற்க்குக் காரணம்…

        இவர்கள் மூவருமே தவறு செய்தவர்கள், தண்டிக்கப்படவேண்டியவர்கள்,

        //ரயிலில் இறுந்து தள்ளி வண்புனர்ச்சி செய்து கொன்றவனை யாரும் காப்பாற்றவேண்டும் என்று சொல்லவில்லை//

        இவன் ஒரு இருபது வருசம் உள்ள இருந்துட்டு, 21வது வருசம் சின்னப்புள்ள மாதிரி மூஞ்ச வ்ச்சுகினு,நான் எந்த தப்பும் செய்யலேன்னு சொன்னா? அவனுக்காக பரிந்து பேசுவீறா??

        • ராஜீவ் கொலை வழக்கை அமைதிப்படையின் அட்டூழியத்திலிருந்து தொடங்குன்னு எத்தனையாவது தடவையா உனக்கு சொல்றது. அப்பொழுதுதானே தெரியும் அதன் மீதான நியாயம்.

        • அடேய் சின்ன பையா! ராஜீவ் கொலைக்கு நியாயம் கேட்கும் நீ, பல்லாயிரக் கணக்கான ஈழத் தமிழர்களை கொன்ற ரஜீவுக்கு வக்காலத்து வாங்குவது எப்படி நியாயம். போ போ வீட்டுல யாராவது பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வா!

        • அப்படியா … அப்போ ஏன் சந்தர்ப்ப சாட்சியங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் சங்கராச்சாரியார் என்பவனை தூக்கில் போடவில்லை?

  4. 1. ‘நாங்க வெறும் நாலே பேருதான். தமிழ் நாட்டுல நீங்க எத்தனையோ கோடிப்பேர். இருந்தாலும் உங்களால் என்ன செய்ய முடியும் எங்களை,’ என்கிற பூணூல் இருமாப்பு.

    2. பத்திரிக்கை விளம்பர ட்ரிக்ஸ். ஃபேஸ்புக், மற்றும் வலைத்தளங்களில் மெத்தப் படித்த மதியூகிகளால் விவாதிக்கப்படும். பேருந்துகளிலும் அலுவலகங்களிலும், மூத்திரம் அடிக்கும்போதும் இடைவிடாது பேசப்படும் சப்ஜெக்ட். நூறு கோடி செலவு செய்தாலும் இம்மாம்பெரிய விளம்பரம் கிடைக்காது.

    2அ. ‘இன்றைக்கு வாய்க்கிழியப் பேசுவானுங்க. 24 மணி நேரத்துல ரோஷம் அடங்கிடும். ஆனா, மரமண்டையில் தினமலர் அப்படீங்கறது படிஞ்சுபோய்டும் இல்லையா…’ இப்படியும் கணிக்கப்பட்டிருக்கலாம்.

    3. மோடி ஆட்சி இங்கும் காப்பியடிக்கப்படும் என்கிற இருமாப்பு.

    4. வீக் எண்டில் அடித்த சரக்கின் மந்தம், ஹேங்-ஓவர்…

    மேற்கண்ட காரணங்களின் ஏதவதொன்றால் இந்த எகத்தாளக் கட்டுரை (அவர்கள் மொழிபெயர்ப்பில் வஞ்சப் புகழ்ச்சியாம்) வெளியிடப்பட்டிருக்கலாம்!!

  5. // ண்மைகளும் மறைக்கப்பட்டன என்பது உஙகளின் ஊகமேயன்றி

    அதைப்பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்பது விளங்குகிறது. மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற பெயரில் பல கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் வெளி வந்துள்ளன. முதலில் படியுங்கள். ஜெயின் கமிஷன் அறிக்கையே சுப்ரமணியம் சாமியை குறை சொல்லுகிறது.

    • ஏறிக் சொல்கைம் பேட்டி படிதீரோ நேற்று!!! பாலசிங்கம் அண்ணையை பிரபாகரனும் பொட்டு அம்மணமும் சேர்ந்து அண்ணையை ஏமாற்றியது விளங்கலியோ

  6. மிகக் கீழ்த்தரமான ஒரு கட்டுரையை தினமணி வெளியிட்டு தமிழர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் இழிவு படுத்தியுள்ளது. இப்படி இழிவு செய்து எழுதுவதுதான் பார்ப்பனியம். கொழுப்பெடுத்த ஒரு பார்ப்பனன் எழுதிவிட்டான் என்பதற்காக இதை பார்ப்பனியம் என்று கூறவில்லை. இப்படி சிந்திக்கிற போக்குதான் பார்ப்பனியம். இதைத்தான் இந்து மதம் என்ற போர்வையில் பரப்பி வருகிறார்கள். இத்தகைய நயவஞ்சகத்தை யார் ஆதரித்தாலும் அதுவும் பார்ப்பனியம்தான்.

    தினமலத்தின் இந்தக் கட்டுரைக்கு வினவு கொடுத்த பதிலடி போதாது என்றே கருதுகிறேன்.

    ”ஒரு போண்டா வக்கீலுக்கு கூட” என்பது அதிகப்படியானது என்றே கருதுகிறேன். இது போன்ற வாக்கிய அமைப்புகளைத் தவிர்ப்பது நல்லது.

  7. <>

    இந்த விதிமுறை பின்னூட்டங்கள் பகுதிக்கு மட்டும் போல.. கட்டுரைக்குக் கிடையாதா?

  8. அப்படியா… அப்போ ஏன் சந்தர்ப்ப சாட்சியங்கள் அனைத்தும் சரியாக இருந்தும் சங்கராச்சாரியார் என்பவனை தூக்கில் போடவில்லை?

  9. நேற்றைய தினமலத்தில் (நவ. 13) டவுட் தனபாலு பகுதியில் பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரும் ஆட்டோ சங்கர், வீரப்பன் போன்ற குற்றவாளிகள்… வைகோவும், ராம்ஜெத்மாலனியும் இவர்களுக்காக வாதாட முடியாமல் போய் விட்டது என கேலி கிண்டல் செய்து விட்டு… அதனை அச்சு பதிப்பில் வெளியிட்டு… இணைய பதிப்பில் போடாமல் விட்ட பேடி பொட்டை தினமலம்… இன்று அரசியலுக்காக கொலை செய்ய வேண்டும் என சொல்லபடும் முருகன், சாந்தன், பேரறிவாளனை… பாலியல் மற்றும் கொலை குற்றத்திற்கு தூக்கு தண்டனை பெற்ற கோவிந்தசாமியுடன் ஒப்பிட்டு இழிவு செய்திருப்பது… மரண தண்டனை ஒழிப்பு… என 45 நாட்கள் தொடர் பட்டினி போராட்டம் நடத்தியவர்களை செருப்பால் அடித்திருப்பதற்கு சமமே…

  10. தமிழ் பெண்களை அமைதிபடை போற்குற்றம் புரிந்ததாகவே எடுத்துகொண்டால்கூட அதற்கு தீர்ப்பும் எழுதி தண்டனையும் வழங்கும் அதிகாரத்தை பிரபாகரனுக்கு எந்த சர்வதேச அமைப்பு வழங்கியது? இப்போது ராஜபக்ஸேவை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பவர்கள் அப்போது ராஜீவை அதுபோல் விசாரிக்க ஏற்பாடு செய்திருக்கலாமே?

    • ஒரு நாட்டின் படையே கற்பழிப்புகள் மற்றும் கொலைகள் செய்தபோது, பாதிக்கக்கப்பட்டவர்கள் செய்தது மட்டும் உங்களுக்கு தவறாக தெரிகிறது.

  11. அந்த காலத்த்தில் அரசர்களுக்கு தங்களோட பொம்பளங்களை ச்ப்ளை,தாஜா பண்ணி வாழ்ந்த குருப்பு தாங்கள்தான் என இந்த காலத்திலையும் அந்துமணி குரூப்பு இங்கேயும் நிருபிக்குது டோய் பையா!!!!!!!!!!!

  12. பார்ப்பனீய எண்ணம கொண்டவர்கள் ஈன பிறவிகள் அதானால் தான் பார்ப்பான் பொங்கி எழுறான் நண்பர்களே.தினமலரே நீ போராடு …இது போன்ற அயோக்கியனுக்கு ஆதராவாக.கோயிலில் வைத்தே ஒரு பார்ப்பான கொன்ற பார்ப்பானை நீ ஆதரி.கோயிலின் கருவறையில் வச்சு கசமுசா செஞ்சானே ஒரு அரை மண்டையன் அவனுக்கு ஆதராவா போராடு….பார்ப்பானுக்கும் இது போன்ற கேடுகெட்ட ஈன பிறவிகளுக்கு ஆதராவா நீ பொங்கி எழு..ன் மனுதர்ம முகத்தை தமிழனுக்கு காட்டு….உண்மை தமிழர்கள் யாருக்கு ஆதரவா போராடா வேணும்ங்கிறத ஒரு பார்ப்பான் சொல்லி தமிழன் அறிந்து கொள்ள தேவையில்லை..உன் மணி அடிக்கிற வேலையை கருவறையோட நிறுதிக்கோ.உன் பூணூலை அறுத்தெறியும் நாளே தமிழர் வாழ்க்கையின் பொன்னான நாள்……

    இந்த கட்டுரை கொல்லப்பட்ட அந்த சகோதரிக்கு ஆதராவகவோ அல்லது எதிர்ப்பாகவோ எழுத பட்டது அல்ல.இது தமிழர்களுக்கு ஆதரவா போராடும் தமிழர்களை கொச்சை படுத்த சிறுமை படுத்த எழுத பட்ட கட்டுரை.இந்த கட்டுரையில் குறிப்பிட பட்ட அந்த குற்ற செயல் மேலோட்டமானது. இது முழுக்க முழுக்க தமிழனை உணர்வு ரீதியா காய படுத்த எழுத பட்ட கட்டுரை.

  13. சகோ.பூலித்தேவன் சொல்வது போல் இது தமிழர்களுக்கு ஆதரவா போராடும் தமிழர்களை கொச்சை படுத்த, சிறுமை படுத்த எழுத பட்ட கட்டுரை. இது முழுக்க முழுக்க தமிழனை உணர்வு ரீதியா காய படுத்த எழுத பட்ட கட்டுரை.
    இதை புரிந்துகொன்டு தமிழர்கள் தினமலரை புறக்கனிக்க வேன்டும்

  14. கருணானிதி தோல்விக்கு தஞ்சை கோவில் என்று எழுதிய பார்பனிய பத்திரிகை இன்னும் பலவும் சொல்லும் ,தமிழ் நாட்டில் மட்டும் தான் தமிழரை இகழ்ந்து செய்தி வெளியிடமுடியும்.

  15. தினமலரை மொத்த தமிழர்களும் சேர்ந்து புறக்கணிக்க வேண்டும். தினமலரை செருப்பால் அடித்தாலும் திருந்தாது.இந்த பார்ப்பன் ஹிந்துத்துவா வர்ணாசிரம் கூட்டங்களை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும்.

  16. தினமலம் சிறப்பு நிருபர் கூறுவதை கேளுங்கள்! உங்களுக்கே பத்திக்கிட்டு வரும்! இந்த வந்தேறி பார்பன தினமலர், தினமணி, சோ வகைராக்களை தமிழகத்தை விட்டே துரத்த வேண்டும் என்று. இந்த பரதேசிகள் ஆதரிக்கும் பார்பன ஹிந்துதுவாவையும் வேரோடும் வேரடி மண்ணோடும் தமிழர்கள் ஒழித்து கட்ட வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

    இனி ஒரு மானம் உள்ள தமிழன் கூட ஹிந்துத்துவாவை ஆதரிக்கவோ, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துமுன்னணி, சங்கபரிவார் கூடத்தின் வலையில் விழுந்து விடாமல் இருக்க இது உதவும் என்று நம்புகிறேன். தொடர்ந்து ஹிந்துத்துவா தினமலம் எப்படி தமிழர்களை, கேவலப் படுத்துகிறது என்று படியுங்கள். திடீர் என்று தலித் மக்கள் மீது பார்பன வந்தேறிகளுக்கு பாசம் வந்து விட்டமாதிரியும், அவர்களை கேவலப்படுத்தியும் இந்த செய்தி நீள்கிறது. please go to visit this link -http://www.sinthikkavum.net/2011/11/blog-post_14.html

  17. போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!
    தமிழர்களின் தேசபக்தி: “தமிழர்களை தேசபத்தியில் மிஞ்சுபவர்கள் யாரும் உலகில் இருக்க முடியாது” என்று நாம் பெருமையாக சொல்லிகொள்ளலாம். ஏன் என்றால்? தம் உறவுகள் ஈழத்திலே கொத்து கொத்தாக கொல்லப்படும் போது அதற்க்கு ஒரு பாரிய எதிர்ப்பை காட்டாமல் மவுனம் சாதித்த இனம்தானே நாம், வரலாறுகள் உங்களை அடிமைகளாக எழுதட்டும்.
    please go to visit: http://www.sinthikkavum.net/2011/11/2.html

  18. இந்தியா உடையும்! ஆனா உடையாது!

    இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.

    please go to visit this link: http://www.sinthikkavum.net/2011/11/blog-post.html

  19. //அப்படியே ? ராஜிவுடன் கொல்லப்பட்ட 15 இதர அப்பாவிகளின் கொலைகள் என்ன கணக்கில் சேர்த்தி ? collateral damage ?//

    பெரிய ஆலமரம் சாயரச்சே சுற்றிலும் அதிர்வு ஏற்படுத்துவது சகஜம் தானே, நான் சொல்லவிலை, திருவாளர் இராசீவ் காந்தியே, இந்திரா கொல்லப்பட்டதன் எதிரொலியாக சீக்கியர்களை வேட்டையாடிக் கொன்றதைக் குறிப்பிட்டார்

    • ராஜிவ் சொன்னால், அதை அப்படியே சரியென்ற ஏற்க நாம் இருவரும் மடையர்கள் அல்லவே கோவி. விதண்டாவாதம் என்பது இது. என்ன தான் சொல்ல வர்ரீங்க அப்ப ?

      இந்திய அமைதி படை செய்த கொடுமைகளை மறுக்கவோ, நியாயப்படுத்தவோ இல்லை. ஆனால் அதற்க்கான ‘எதிர்வினை’ தான் இது என்று நியாயப்படுத்த ஆரம்பித்தால், பிறகு எல்லா அரசியல் கொலைகளை அதே பாணியில் நியாயப்படுத்த முடியும்.

      மேலும் இரு அடிப்படை சந்தேகங்கள் பல வருடங்களாக :

      1. 1989 பொது தேர்தலில் ராஜிவ் வென்றுவிடுவார். அப்படி வென்றால் அவர் மீண்டும் இந்திய அமைதி படையை ஈழத்திற்க்கு அனுப்பி, புலிகளை முற்றாக அழிக்க முயல்வார் என்று (தப்பு) கணக்கு போட்டதால் தான் புலி தலைமை அவரை கொன்றது என்று ஒரு angle உண்டு. இந்திய அரசு இனி எக்காலத்திலும், ‘அமைதி படையை’ இலங்கைக்கு அனுப்பாது. கடுமையான பாடம் கற்றுக்கொண்டு, கெட்ட பெயரும் வாங்கி கொண்டது. அதனால் Indian establishment will never ever undertake such ‘adventure’ again என்பதை பொட்டு அம்மனும், பிரபாகரனும் புரிந்து கொள்ள தவறிவிட்டனர்.

      2. ராஜிவை கொன்றால், இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் தங்கள் ஆதரவு தளங்களை முற்றாக இழக்க நேரிடும். முக்கியமாக தங்கள் ஆதாரவாளர்கள் கைது செய்யப்படுவர். அவர்கள் மூலம் தொடர்ந்து பெற்று வந்த பல உதவிகள் நின்று போகும் ; இது தவிர வேறு பல riskகளும் உண்டு. இவை எல்லாம் தெரிந்தும், புலி தலைமை இச்செயலை செய்ய துணிந்தற்க்கு வேறு காரணிகள் உண்டு என்றும் ஒரு angle. முதலாம் ஈராக் போரின் போது (1990 இறுதியில்), அமெரிக்கா போர் விமானங்கள் இந்தியாவில் எரிபொருள் நிரப்புவதை ராஜிவ் (எதிர்கட்சி தலைவர் என்று முறையில்) கடுமையாக எதிர்தார். அவரை தீர்த்துக்கட்டுவது அமெரிக்காவின் strategic interest என்று சி.அய்.ஏ முடிவு செய்து, புலிகளுக்கு அதறாக பெரும் நிதி மற்றும் ஆய்த உதவி செய்தனர் என்றும் ஒரு கோணம். அன்று பனிப்போர் முடியாத காலங்கள். சோவியத் ரஸ்ஸிய இன்னும் அழியாத நேரம். எனவே பல சாத்தியங்கள். (இவை பற்றி ஒரு மூத்த, நன்கு அனுபவுள்ள பத்திரிக்கையாளர் விரிவாக என்னிடம் சொன்னார்). எனவே இக்கொலை வெறும் ‘எதிர்வினை’ அல்லது ‘பழிவாங்கல்’ என்று பார்க்க முடியாது…

      • 1991 ராஜிவ் கொலக்கு பின், புலிகள் புதிய பலம் மற்றும் ஆயுதங்கள் பெற்று, பெரும் சக்தியாக உருவாமாறினர். their strength, finances and weapons suddenly increased in an inexplicable and dramatic manner. this may be due to the ‘aid’ or ‘fees’ they had received for the assassination work ‘outsourced’ to them by the CIA or ? And they went on to build a successful world wide network of shady businesses and smuggling (of drugs and arms for anyone who can pay) ; and their power and growth were exponential after 1991 ; and their financial strength expanding in proportion.

        • அய்யா அதி …

          வணக்கம். உங்கள் மனிதாபிமானம் மிகவும் வியக்க வைக்கிறது. 15 பேர் இறந்ததற்கு ஒப்ப்பாரி வைக்கும் தாங்கள் தான் ஒரு இலட்சம் விவசாயிகள் இறந்ததற்கு முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கிய கதை மறந்து விட்டதோ .. மனித குல விரோத அயோக்கிய சிகாமணியே … விசயத்தை திசை திருப்ப இங்கு வந்த உமது வேலை முடிந்து விட்டதா ?..

          சரி .. இங்கே பதில் சொல் .. அந்துமணி ரமேஷ், சங்கராச்சாரி, ஜெயலலிதாவை என்ன செய்யலாம் ?..

          • //15 பேர் இறந்ததற்கு ஒப்ப்பாரி வைக்கும் தாங்கள் தான் ஒரு இலட்சம் விவசாயிகள் இறந்ததற்கு முதலாளிகளுக்கு வக்காலத்து வாங்கிய கதை மறந்து விட்டதோ ..///

            ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலைக்கு யார் காரணம் ? தாரளமயமாக்கல் தான் காராணம் என்றால், இந்தியா பூராவும் ஒரே அளவில் விவசாயிகள் தற்கொலை ஏன் நிகழவில்லை. நம் தமிழகத்தில் ஏன் அப்படி இல்லை ? மேலும் பருத்தி விவசாயிகள் மட்டும் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். அதுவும் மகாராஸ்ரட்ர மற்றும் அந்திர பகுதிகளில் மட்டும் தான். ஏன் ? இது பல இதர லோக்கல் காரணிகளால் என்பதை எத்தனை எடுத்து சொன்னாலும், சிறிதும் ‘புரிதல்’ இல்லாமல் கீரல் விழுந்த ரெக்கார்ட் போல் தொடர்ப்வர்களிடம் என்னத்தை பேசுவது ?

            விவசாயிகள் தற்கொலைக்கு, முதலாளிகள் தான் காரணம் என்பது அபத்தமான வாதம். பல கொள்கைகள் மற்றும் லோக்கல் பிரச்சனைகள் தான் காரணம்.

            • அங்கே மட்டும் தானே மான்சாண்டோ வின் பீ.டி. பருத்தி பயிரிடப்பட்டது. குறைந்த தண்ணீரில் விளையும் என்று பரப்புரை செய்யப்பட்டது … அதனை நம்பித் தானே அத்தனை விவசாயிகளும் தங்கள் பகுதியின் வரட்சியையும் கருத்தில் கொண்டு விலை அதிகமானாலும் பரவாயில்லை என்று வாங்கி பயிரிட்டனர் ..

              இந்த விசயங்களை இப்படி மறைத்தல் ……….. அதியமான்.

              • //அங்கே மட்டும் தானே மான்சாண்டோ வின் பீ.டி. பருத்தி பயிரிடப்பட்டது. ///

                இப்படி எல்லாம் உளருபவரிடம் பேசுவது வீண். நம்ம சேலம் மாவட்டத்திலும், உடுமலை பகுதிகளிலும் அதே மான்செட்டா சக்கை போடு போடுகிறது. யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை. குஜாரத்திலும் தான். மகாராஸ்ராட்ரா பகுதி தற்கொலைகளுக்கு மான்செட்டோ காரணமில்லை. அதிக வட்டிக்கு தனியார்களிடம் கடன் வாங்குதல், இதர செலவுகள், மிக அதிக செலவில் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டி தோற்பது மற்றும் பல காரணிகள். அருகில் உள்ள குஜராத் விவசாயி செய்யும் முறைகள், யுக்திகள் வேறு. எனவே சும்மா பொத்தாம் பொதுவாக உட வேண்டாம்.

            • ////சரி .. இங்கே பதில் சொல் .. அந்துமணி ரமேஷ், சங்கராச்சாரி, ஜெயலலிதாவை என்ன செய்யலாம் ?..////

              பதில் எங்கே ?..

              • நேரில் வா. ‘விலாவாரியா’ பதில் சொல்றேன். மொதல்ல மரியாதையா பேச கத்துக்க. Give respect and take respect, ok. உன்னை போன்ற கோழை பயலுக, பொய் பெயர்களில், இணையத்தில் ’மட்டும்’ தான் சவடால் பேசுவீக.
                என்னை இழிவாக பேச, உன் சொந்த பெயரில் கூட வர தைரியம் இல்லாத கோழை பயல் நீ ; உன்னை போன்ற ‘வீரர்களை’ வைத்து கொண்டு தான் வினவு எதிர்காலத்தில் செம்புரட்சி ஆரம்பிக்க போகுதா ? விளங்கின மாதிரி தான்…

      • ////இவை பற்றி ஒரு மூத்த, நன்கு அனுபவுள்ள பத்திரிக்கையாளர் விரிவாக என்னிடம் சொன்னார்)////

        யார் அந்த ஆளர் ?.. சோ ராமஸ்வாமியா ?.. ’சு’ னா சாமியா?..

      • //இவை பற்றி ஒரு மூத்த, நன்கு அனுபவுள்ள பத்திரிக்கையாளர் விரிவாக என்னிடம் சொன்னார்//

        யார் அந்த பத்திரிகையாளர். சோ ராமசாமி அய்யங்காரா, ஞாநி சங்கரன் அய்யரா. பார்ப்பனர்கள் ஓதுவது எல்லாமே உமக்கு வேதம்.

        • ஒரு கருத்தை, அதை சொன்னவரின் சாதியை வைத்து தான் மதிப்பிட முயல்வதும் பார்பனீயமே. அக்கருத்து சரியா, தர்க்க ரீதியாக, தகவல் ரீதியாக சரியா, என்று ஆய்ந்து பார்க்காமல் இப்படி பேசுவது கண்டிப்பாக பகுத்தறிவல்ல. மார்க்சிய விஞ்ஞான முறையும் அல்ல.

          சி.அய்.ஏ வின் சதியாக இருக்கலாம் என்று மிக முக்கியமான யூகத்தை வைத்திருக்கிறேன். 1991க்கு பின் திடீரென புலிகள் பெரும் பலம் பெற்றதையும் சொன்னேன். இந்த புதய பலம் பெற்றது சரியான தகவலா, ஆதாரம் உள்ளதா என்று ஆராயாமல், சும்மா ‘பார்பான், பார்பான்’ என்று தொடர்ந்து பேசுவது பேதமை மற்றும் கீழ்தரமான பார்வை.

          வள்ளுவர் உங்களை போன்றவர்களுக்காகவே எழுதிய குறள் :

          எப்பொருள் யார் வாய் கேட்பினும், அப்பொருள்
          மெய் பொருள் காண்பதறிவு.

  20. தூக்கு தண்டனை யாருக்கு கொடுக்கப்பட்டிருந்தாலும் அவர்களை தூக்கில் போட்டு விடலாம்.உச்சநீதிமன்றம் வரை மேல்முறையீடு அதற்கப்புறம் கருணை மனு என்று வழியிருக்கிறது.உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனை கொடுத்துவிட்டால் கொடுத்ததுதான், கருணை மனுவெல்லாம் கொடுத்து தப்ப முடியாது என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.
    அப்போதுதான் இந்த குழப்பமெல்லாம் வராது.
    நாளைக்கு சங்கராச்சாரியாருக்கு தூக்கு தண்டனை தரப்பட்டால் வினவு அவரை தூக்கில் போடக்கூடாது என்று எழுதுவாரா இல்லை தூக்கில் போடு என்று எழுதுவாரா.

    • சங்கராச்சாரியையும் இம்மூவரையும் எங்ஙனம் பொறுத்திப் பார்க்க முடிகிறது உங்களால் ?.. விளக்க முடியுமா?.

  21. தினமலர் கேட்கும் கேள்வி நியாயமானதே… தமிழர் பிரச்சனை என்ற கோணத்தில் ஈழப் பிரச்சனை மட்டுமே பார்க்கபடுகிறது ஏன்? இந்தியாவின் மும்பை உள்ளிட்ட பிற மாநிலங்களில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்காகவோ, மலேசிய தமிழர் பிரச்சனை, சிங்கை தமிழர் பிரச்சனை மற்றும் உலகின் பிற தமிழர் பிரச்சனைகளுக்கு இந்த ஓட்டு கட்சிகள் ஏன் குரல் கொடுப்பதில்லை?

    ஒரு தமிழன் டெல்லி நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும்போது குரல் கொடுக்கும் நீங்கள், அதே தமிழன் கேரள நீதிமன்றத்தில் தண்டிக்கப்படும்போது குரல் கொடுக்க முடிவதில்லை.. ஏனெனில் அது தவறு, ஒரு கொலை குற்றத்துக்கு வக்காலத்து வாங்க கூடாது என்று உங்களுக்கு நன்றாக தெரிகிறது… ஆனால் ஓட்டுக்களை அள்ளி தரக்கூடிய இம்மூவர் விடயத்தில் ஆலமரம் சாயும்போது அருகம்புல் சாயுவதற்கொப்ப என இக்கொலை குற்றம் கற்பிக்கப்படுகிறது.

    மேலும் ஈழத்து தமிழர்கள் நீங்கள் கூறும் தொப்புள் கோடி, லெமுரிய கண்ட தொடர்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை… அவர்களை பொறுத்தவரை தமிழக தமிழர்கள் கொச்சை தமிழ் பேசும் இந்தியர்களாகவே பார்க்கப்படுகிறார்கள்.. அவர்கள் நம் உதவியை கோருவதுமில்லை… நீங்கள் எங்களுக்காக போராடுகிறேன் என்று சொல்லி எங்கள் மேலும் துன்புறுத்தாமல் உங்கள் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்க்கும் வழியை பாருங்கள் என இலங்கை அகதிகளே கூறும் அளவுக்கு நமது போராட்டங்களின் உண்மை வடிவத்தை அவர்கள் உணர்ந்தவர்களாக இருக்கிறார்கள்…

    மேதகு புலி தலைவர் பிராபாகரனை வைத்து பிழைப்பு நடத்தும் சராசரி தமிழக அரசியலாலும் அதன் தலைவர்களாலும், தமிழ மக்களுக்கும், ஈழ மக்களுக்கும் எந்த நன்மையையும் இல்லை என்பதே இப்பத்திரிக்கைகள் சுட்டிக்காட்ட வரும் உண்மை உண்மை உண்மை…

  22. //தினமலர் கேட்கும் கேள்வி நியாயமானதே… தமிழர் பிரச்சனை என்ற கோணத்தில் ஈழப் பிரச்சனை மட்டுமே பார்க்கபடுகிறது ஏன்?//

    தினமலர் கேட்க்கும் கேள்வி எப்படி நியாம்? என்ன முட்டாள் தனமான கருத்து இது. தினமலர் எழுதி இருக்கும் வரிகளை பார்த்தால் புரியவில்லை என்னவோ தினமலதுக்கு தமிழர்கள் மேல் திடீர் என்று அக்கறை வந்தது போலும் தலித் மக்கள் மேல் திடீர் பாசமும் வேண்டும் என்றே கிண்டல் அடித்து தமிழர்கள் போராட்டத்தை கொச்சை படுத்த அந்துமணி என்கிற பார்பன ஹிந்து வெறியன் எழுதிய பதிவு அது மற்றபடி ஒன்றும் இல்லை.

    • தினமலர் கேட்ட கேள்வி சரிதான். ஆனால் கேட்ட விதம் மற்றும் தொனி தான் தவறு. வேறு சொல்லாடல்களை பயன்படுத்தி, இயல்பாக கேட்கலாம். மரண தண்டனையே கூடாது என்பவர்களுக்காக கேட்கப்பட்ட கேள்வி அது.

      • அதியமானின், அதிபுத்திசாலித்தனம் நன்றாக புலனாகிவிட்டது. அறிய கண்டு பிடிப்பு! தினமலமே கூட, அந்த கட்டுரை தமிழ் உணர்வாலர்களுக்கானது என்று கூறினாலும், இவர் போன்றவர்கள் சப்பை கட்டு கட்டி பார்ப்பனர்களுக்கு காவல் நிற்பார்கள். இது ஒன்றே போதும் நீர் ஒரு பார்ப்பன அடிவருடி என்பதை புரிந்துகொள்ள.

        • இவ்விசியம் பற்றி ஏற்கெனவே இட்ட மறுமொழி இங்கே : (அதை படிக்காமலே பேச வேண்டாமே) :

          ///

          கோவி,

          ஒரு விசியத்தை தெளிவுபடுத்த தவறிவிட்டேன். ராஜிவ் கொலையில், இன்று மரண தண்டனையை நோக்கியிருக்க்கும் மூவருக்கும் தூக்கு தண்டனை அளித்தே ஆகவேண்டும் என்றெல்லாம் கூறவில்லை. கருணை மனு அளித்து சுமார் பத்தாண்டுகள் அதை பற்றி முடிவெடுக்காமல், கால தாமம் செய்தது பெரும் கொடுமை. அதை விட பெரிய சித்தரவதை வேறு எதுவும் இருக்க முடியாது. மேலும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர். எனவே அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்து விடுவிக்க வேண்டும். முக்கியமாக பேரளிவாளனை.

          ஆனால் மரண தண்டனையே கூடாது என்று சொல்ல வில்லை. கேரளாவில் அளித்தது போல் rarest of rare caseக்கு மட்டும் அது தவர்க்க முடியாது. ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், மேல்முறையிடுகள், கருணை மனுக்களை சில மாதங்களில் விசாரித்து, இறுதி முடிவு எடுத்தலே சரி. பல ஆண்டுகள் ஸ்பென்ஸில் வைத்திருப்பது பெரும் கொடுமை. தூக்கு தண்டனையை விட கொடுமையானது இது.///

          • “மரண தண்டனையே கூடாது என்பவர்களுக்காக கேட்கப்பட்ட கேள்வி அது” – என்று எதை வைத்து சொன்னீர்கள் ? தினமலத்தின் தலைப்பே , “செந்தமிழர்கள் இன்னும் கொந்தளிக்காதது ஏன்?” என்று இருக்கும் போது, தொனி, இயல்பு பற்றி நீங்கள் தான் கவலை படுகிறீர்கள்.

    • \\ தினமலர் உருவாக்கி வைத்திருக்கும் பிற்போக்கான வாசகர் வட்டம் இந்த வஞ்சப் புகழ்ச்சி இகழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் தினமலர் இப்படி எழுதலாமா என்று கோபப்படுகிறது\\

      தினமலரின் இந்த கட்டுரை வடிவான செய்தியையும் அதன் வெளியிடல் பாங்கினையும் ஆராய்ந்தால் அது வாழைப்பழ ஊசி போல யாரை நோக்கி எழுத பட்டதோ அவர்களுக்கு மட்டும் புரியும்படியாகவும், சாதாரண வாசகர் வட்டத்திற்கு அதன் உட்பொருள் புரியாவண்ணம் திறம்பட எழுதப்பட்டுள்ளது… இக்கட்டுரையால் தமது வாசகர் வட்டத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பும் என நன்கு தெரிந்தும் இச்செய்தி வடிக்கப்பட்டுள்ளது..

      தினமலர் என்ற உடன் நமக்கு நினைவுக்கு வருவது அந்துமணி தான்… இந்த அந்துமணி ஒரு கற்பனை கதாபத்திரம்தான்.. இந்த அந்துமணி பாத்திரத்தையும் அதன் சொந்தக்காரர் என்று ரமேஷ் என்ற நபரையும் வெளி உலகுக்கு காட்டியது சன் குழுமம்தான்… சன் குழுமத்தின் விளம்பரத்தின் பயனாகத்தான் இன்றைக்கு தினமலர் என்றாலே அது அந்துமணி என்ற கற்பனை பாத்திரமாக அறியப்படுகிறது… அந்துமணியின் எழுத்தின் நடையை ஆராய்ந்தால் இது நிச்சயமாக அந்துமணி எழுதியதல்ல என சுலபமாக அறியலாம்…

      தினமலரின் நிருபர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்ற தவறான கருத்தும் உள்ளது… குறிப்பாக இந்த செய்தியை எழுதியவர் ஒரு பார்ப்பனரே என்று நாமாகவே எண்ணிக்கொள்ள உந்தப்பட்டு இருக்கிறோம்..

      மேலும் தினமலரின் இந்த செய்தியாகட்டும், அல்லது வேறு எந்த செய்தியாகட்டும் அது பத்திரிகை சுதந்திரத்தின் வரை முறைகளை மீறுவதில்லை.. கொச்சை வார்த்தைகளை இச்சைக்காக பயன்படுத்துவதில்லை…

      ஒரு செய்தி ரீதியான விமர்சனத்தை கண்டு ஏன் மனம் துடித்து, வீராவேசத்தோடு, அத்தனை கடும் சொல்களையும் தேடி கண்டுபிடித்து எழுதி நம் ஆத்திரத்தை கொட்டி தீர்க்க முனைகிறோம்… வினவின் வாசக வட்டத்திலே நிறைய பேர் எழுத்துலக, வலைப்பதிவுலக, தர்மத்தோடு தம் மறுமொழிகளை வெளியிடுவது கண்டு அவர்களிடமிருந்து நாமும் கற்போமாக…

      இனிய உளவாக இன்னது கூறல் கனியிருப்ப
      காய் கவர்ந் தற்று

      • அதி மற்றும் மனி ..

        உங்களிடம் வந்து தினமல ஆசிரியன் இந்த விளக்கத்தைக் கூறினானா ?..

        இதுவரை யாருடைய மரணதண்டனைக்கு எதிராக தமிழகம் போராடியுள்ளது?.

        விட்டால் ஊரை ஏமாளி ஆக்கிவிடுவாய் போலத் தெரிகிறது .. கோமாளியே ..

        தமிழகம் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகனை தூக்கிலேற்ற தடை கோரி மட்டுமே போராடியுள்ளது. அக்கட்டுரை ஏதோ மரண தண்டனைக்கு எதிராக உள்ளவர்களுக்கு எதிராக எழுதவில்லை என்பது சாதாரண நாளிதழ் படிக்கும் அனைவருக்கும் எளிதில் புரியும்.

        அந்துமணி என்னும் அயோக்கிய நாயிற்கு வக்காலத்து வேறு. வெக்கங்கெட்டவர்களே ..

        • கொதியமான் ரொம்ப கொதிக்கிறீங்க… இந்த அளவுக்கு ஒரு பத்திரிகை செய்தி படிப்பவர்களை பாதிக்கும் என்றால் அதுதான் எழுதுகோலின் சக்தி.. எழுதியவனை நிச்சயம் பாராட்ட வேண்டும்.. நவீன பத்திரிகை உலகில் இது போன்ற வஞ்சப் புகழ்ச்சிகளின் மூலம் தவறுகளை சுட்டிக்காட்டும் நிருபர்களும் இருக்கிறார்கள் என்பது நல்ல விடயம்…

          செஞ்சட்டை தமிழர்கள் தினமலரின் செய்தியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என தெரிகிறது… உங்களுடைய பலவீனத்தை கண்டுபிடிச்சிட்டான், இனிமே தினமலர் இதே பாணியில் எழுதி உங்களையெல்லாம் வெறுப்பேத்த போறான்… நாங்கல்லாம் அவன் எழுதற கருத்தை ரசிக்கிறோமோ இல்லையோ நீங்க கொதிக்கிறதை நல்லா ரசிப்போம்….

          சும்மா தினமலரை பாராட்டி ரெண்டு கமெண்ட் போட்டா வினவே அதிரும்ல…

          • ///செஞ்சட்டை தமிழர்கள் தினமலரின் செய்தியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என தெரிகிறது… உங்களுடைய பலவீனத்தை கண்டுபிடிச்சிட்டான், இனிமே தினமலர் இதே பாணியில் எழுதி உங்களையெல்லாம் வெறுப்பேத்த போறான்… நாங்கல்லாம் அவன் எழுதற கருத்தை ரசிக்கிறோமோ இல்லையோ நீங்க கொதிக்கிறதை நல்லா ரசிப்போம்….

            சும்மா தினமலரை பாராட்டி ரெண்டு கமெண்ட் போட்டா வினவே அதிரும்ல…

            //
            மனிதனோட சமூக அக்கறை இவ்வள்வு அல்பமானது. இதைத்தான் பெரிய சிந்தனாவாதி போல இதுவரை முன் வைந்து வந்துள்ளார்.

            • இங்கு என்ன சமூக அக்கறை வேண்டிகிடக்கு… இந்த செய்தியை ஒரு நகைச்சுவை துணுக்கு அளவில்தான் எதிர்ப்பாளர்கள் பார்க்கவேண்டும்… தூக்கி எறிந்துவிட்டு தங்கள் பணிகளை பார்க்க வேண்டுமே தவிர, கொதியமான் போல கொதித்து எழ வேண்டிய அவசியம் இல்லை … இந்த செய்தி மரண தண்டனை எதிர்ப்பு மற்றும் ஈழ ஆதரவு குழுக்களை கொதிப்படைய, வெறுப்படைய, கடுப்பேத்த எழுதப்பட்டது… இப்பிரச்சனைகளுக்கு இந்த செய்தி எந்த தீர்வும் தர முனையவில்லை… மாறாக மாற்று கருத்து உடையவர்களை சீண்டவே வடிக்கப்பட்டுள்ளது… எழுத்தாளரின் நடை எனக்கு பிடித்திருக்கிறது… இக்கருத்துக்கு உடன்படுபவர்கள் ரசிக்கலாம்… உடன்படாதவர்கள் விவாதிக்கலாம்.. அதை விடுத்து கொதிப்படையவோ, கடுப்படையவோ தேவையில்லை… அப்படி கொதிப்படைந்த்தால் பத்திரிக்கையின் நோக்கம் வெற்றிபெற்று விட்டது என கொள்ளலாம்.. அதற்காக தான் உங்கள் பலவீனம் வெளிப்படுகிறது என்று கூறியிருக்கிறேன்… நீங்கள் கோபத்தை காட்டினால், இது போன்ற கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதுவான்… அக்கௌன்ட் சார் சொன்னது போல என்னை போல சமூக அக்கறை இல்லாத வாசகர் வட்டம் பாராட்டும்.. நீங்கள் மீண்டும் கடுப்படைய வேண்டியிருக்கும்… தேவையா?

              • மனுஷன் அண்ணே, எதுக்கெல்லாம் சிரிப்பாரு? எதையெல்லாம் கமாடியா எடுத்துப்பாரு? கொஞ்சம் ரோசனை பண்ணி பாத்தா….

                3 வயது குயந்தையை மூணு கேப்மமாறிங்க ரேப் பண்ணா, அண்ணே அதை செக்ஸ் காமடின்னு எட்துப்பாரு,
                காதல் ஜோடிய ஆதிக்க சாதிக்காரனுங்க கட்டி வச்சு எரிச்சா, அதை லவ் ஜோக்னு எட்துப்பாரு,
                பத்தாம் கிளாஸ் பையன் சூசைடு பண்ணிக்கிட்டா, அடலசண்ட் ஜாலின்னு எடுத்துப்பாரு,

                அண்ணனைப் போய் யாரும் தப்பா புரிஞ்சுக்காதீங்கனா, அவரு இட்லர் கொலையையே வியுந்து வியுந்து சிரிக்கிறவரு,………………?

                • மேல இட்லர் செய்ஞ்ச கொலைங்களுக்கே வியுந்து வியுந்து சிரிப்பாருன்னு இருக்கணும், மனுச்ணண்ணே எத தப்பா புரிஞ்சிணாலும், இதை தப்பா புரிஞ்சுக்காதீங்கண்ணா…

            • மனிதன் – தினமலத்தில் வேலை பார்க்கும் ஊழியராய் இருக்கக் கூடும். அவர் பிழைப்பில் மண் அள்ளி போடாதீர்கள், பாவம்.!

              • \\மனிதன் – தினமலத்தில் வேலை பார்க்கும் ஊழியராய் இருக்கக் கூடும்\\
                எந்த மலத்திலும் வேலை பாக்கலை…
                \\மனுஷன் அண்ணே, எதுக்கெல்லாம் சிரிப்பாரு? எதையெல்லாம் கமாடியா எடுத்துப்பாரு? \\
                இந்த செய்தியை நான் சீரியசா எடுத்துக்கலை… நீங்கள் எடுதுக்கொண்டிருக்கிறீர்கள்… அவ்வுளவுதான்..

                \\இட்லர் செய்ஞ்ச கொலைங்களுக்கே வியுந்து வியுந்து சிரிப்பாரு\\
                நான் அவன் இல்லை… 🙂

  23. //என்ன தான் சொல்ல வர்ரீங்க அப்ப ?//

    இந்திராகாந்தியைக் கொன்னுப்புட்டாங்கன்னு 1000க் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட சீக்கியர்களைக் கொன்றவர்களில் எத்தனை பேரை தூக்கில் போட முழங்கி இருக்கிறீர்கள் என்று (அ)சொறிய ஆவல். அண்மையில் கூட ஒரு சிங்கிடம் நிஜமான செருப்படி வாங்கினார் பசி என்பது நினைவு கூறத்தக்கது 🙂

    • //இந்திராகாந்தியைக் கொன்னுப்புட்டாங்கன்னு 1000க் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட சீக்கியர்களைக் கொன்றவர்களில் எத்தனை பேரை தூக்கில் போட முழங்கி இருக்கிறீர்கள் என்று (அ)சொறிய ஆவல்//

      இதே கேள்வியை உங்களிடம் நான் திருப்பி கேட்டால் எப்படி ? சும்மா விதண்டாவாதம் பேசறீங்க. 15 பேர்கள் கொல்ல்பட்டத்தை பற்றி பேசினால், ஏன் 1984அய் பற்றி பேசல என்று மறுகேள்வி கேட்பது ‘புத்திசாலித்தனமாக’ தெரிகிறதா ? 2002 குஜாராத் படுகொலைகளை பற்றி கேட்டால், இந்துத்துவர்களும் இதே ’லாஜிக்’ தான் பேசுகின்றனர்.

      1984 படுகொலைகளை பற்றி பேசவே இல்லை, கவலைபடவே இல்லை என்று நீங்களா அனுமானித்துகிட்டா எப்படி ? இந்த விசியத்தை பற்றி மொதல்ல உங்க ‘கருத்த’ கூற முயலவும். பிற நிகழ்வுகளை பற்றி சம்பந்தபட்ட விவாதங்களில் தொடரலாம்.

      • எது எப்படியோ… மொழி உணர்வு விடுதலை என்றெல்லாம் சொல்லி ரத்தக் களறியாக்கி சமீபத்தியப் போரில் மட்டும் 1 லட்சம் மனிதர்களை கொன்று போட்டும் ( மொத்தம் எத்தனை பேரோ) அப்படியும் விடியவில்லை… தமிழீம் வேண்டும் என்றால் இன்னமும் 10 லட்சம் காவு கேட்பார்கள் போலிருக்கிறது… அத்தனை பேரையும் கொன்று தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் 1 கோடி கொன்று… அப்பாடி.. என்ன ரத்தப் பசி…. அதன் பிறகு ஈழம் சோசலிசம் ஆகிய வற்றை வைத்துக் கொண்டு கொண்டாடலாம்,… ஆனால் அதைக் கொண்டாட யார் இருப்பாரோ….?

      • //இதே கேள்வியை உங்களிடம் நான் திருப்பி கேட்டால் எப்படி ? சும்மா விதண்டாவாதம் பேசறீங்க. 15 பேர்கள் கொல்ல்பட்டத்தை பற்றி பேசினால், ஏன் 1984அய் பற்றி பேசல என்று மறுகேள்வி கேட்பது ‘புத்திசாலித்தனமாக’ தெரிகிறதா ? 2002 குஜாராத் படுகொலைகளை பற்றி கேட்டால், இந்துத்துவர்களும் இதே ’லாஜிக்’ தான் பேசுகின்றனர்.

        //

        தினமலம் கிடைச்சதுடா சான்ஸ் என்று மூவர் தூக்குக்கு எதிரான தமிழ்மக்கள் உணர்வை அதன் அரசியல் நியாயத்தை இழிவுபடுத்தி எழுதுகிறது அதை பற்றி பேசினால் 15 பேர் சாவு பற்றி பேசும் நேர்மையாளார் அதியமாந்தான் மேலே புத்திமதி சொல்லியுள்ளார்.

        மூவர் தூக்கு பற்றி உங்க கருத்து என்ன அதியமான் சார் அத சொல்லுங்க அதிலிருந்து ஆரம்பிப்போம்

      • //15 பேர்கள் கொல்ல்பட்டத்தை பற்றி பேசினால்,//

        அதியமான் சார், உங்களது பின்னூட்டங்களை படிக்கும்போது குழப்பமாக இருக்கிறது. ராஜீவ் கொல்லப்பட்டது சரி என்கிறீர்களா? த்வறு என்கிறீர்களா? அல்லது ராஜீவுடன் 15 பேர் கொல்லப்பட்டது மட்டும்தான் தவறு என்கிறீர்களா? விளக்கவும்

    • அந்த 15 பேரும், கொடுங்கோலன் ராஜீவை காணச் சென்றவர் தானே! அதனால் அவர்கள் புலிகளின் தண்டனைக்குரியர்கள் தானே! அன்று ராஜீவ் கூட்டத்தைக் காண சென்றவர்களையெல்லாம் தமிழின விரோதிகள் என்று பட்டத்தைச் சூட்டி அந்த கொலைகளை நியாய்ப்படுத்துவோம்!

    • //1000க் கணக்கில் கொன்று குவிக்கப்பட்ட சீக்கியர்களைக் கொன்றவர்களில் எத்தனை பேரை தூக்கில் போட முழங்கி இருக்கிறீர்கள் என்று ///

      கோவி,

      ஒரு விசியத்தை தெளிவுபடுத்த தவறிவிட்டேன். ராஜிவ் கொலையில், இன்று மரண தண்டனையை நோக்கியிருக்க்கும் மூவருக்கும் தூக்கு தண்டனை அளித்தே ஆகவேண்டும் என்றெல்லாம் கூறவில்லை. கருணை மனு அளித்து சுமார் பத்தாண்டுகள் அதை பற்றி முடிவெடுக்காமல், கால தாமம் செய்தது பெரும் கொடுமை. அதை விட பெரிய சித்தரவதை வேறு எதுவும் இருக்க முடியாது. மேலும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் அவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்கின்றனர். எனவே அவர்களின் மரண தண்டனையை ரத்து செய்து விடுவிக்க வேண்டும். முக்கியமாக பேரளிவாளனை.

      ஆனால் மரண தண்டனையே கூடாது என்று சொல்ல வில்லை. கேரளாவில் அளித்தது போல் rarest of rare caseக்கு மட்டும் அது தவர்க்க முடியாது. ஆனால் தீர்ப்பு வழங்கப்பட்டவுடன், மேல்முறையிடுகள், கருணை மனுக்களை சில மாதங்களில் விசாரித்து, இறுதி முடிவு எடுத்தலே சரி. பல ஆண்டுகள் ஸ்பென்ஸில் வைத்திருப்பது பெரும் கொடுமை. தூக்கு தண்டனையை விட கொடுமையானது இது.

  24. பூனூல் அறுத்தறியப்படும் நன்நாளே, தமிழர்கள் மற்றும் இந்தியாவில் வாழும் பல இனங்களின் பொன் நாள்.

  25. பார்ப்பன வெறியர் அதியமானோடு உரையாடுவதை காட்டிலும் தென்னை மட்டை உரிப்பது உயர்வான செயல்

    • :))). அது உங்கள் ‘இயலாமையை’ குறிக்கிறது. ஒரு கருத்தை சொன்னாலே, அவரை ஆதாரமில்லாமல் ‘பார்பன வெறியர்’ என்று தூற்றுவது தான் ஒரு வகை பார்பனியம். மொதல்ல விசியதை பற்றி விவாதிக்க முயல்க.

      • எவ்விதத்தில் நீர் பார்ப்பன வெறியர் இல்லை என்பதை தெளிவு படுத்தவும். இதுவரை இங்கே பதிவிடப்பட்டுள்ள பார்ப்பன எதிர்ப்புக் கட்டுரைகளில் எல்லாம் வந்து கட்டுக் கதைகளை அவிழ்த்துவிடும் உமது பதிவுகளில் வழிவது மதசார்பின்மையா?.. பார்ப்பனியமா?..

        உயர்சாதிப் பார்ப்பனர்களின் காலை நக்கத் தயங்காத உம்மைப் போன்றவர்களும் பார்ப்பனர்களே ..

        • வினவு குழு மற்றும் தொடர்ந்து எம்மை வாசிப்பவர்கள் எம்மை பற்றி அறிவார்கள். உன்னை போன்ற பண்பற்ற அனானிகளுக்கு எம்மை ‘நிருபிக்க’ வேண்டிய அவசியம் இல்லை.

          • நானும் இங்கே விவாதங்களைப் பார்த்து வருபவன் தான் அதியமான் …

            எமக்கும் பதிலளிக்கலாம் .. ஜனநாயகவாதியே …

      • தான் பேசுவது மட்டுமே வாதம். அதற்கு முரண்படும் அனைத்தும் விதண்டாவாதம் — இப்படி தூற்றுவது கூட ஒருவகை பார்ப்பனியம் தான் அதியமான் சார். துண்டு துண்டாக ஈழம் பற்றி கருத்துரைத்து நேரத்தை வீணடிக்காமல், ஈழ போராட்ட வரலாற்றை பற்றியும், அவற்றை பற்றி நீங்கள் தெரிந்துவைத்திருக்கும் விசயத்தை நாங்களும் தெரிந்துகொள்ள போதிய தரவுகளையும் இங்கு அன்பர்களுக்கு கொடுத்தால் அனைவரும் புரிந்துகொண்டு பேச எழுத வசதியாக இருக்கும். மற்றபடி தினமலர் — 3 பேர் தூக்கு — 15 பேர் இறந்த நியாயம் => இப்படி துண்டு துண்டாக விவாதிப்பது எல்லாம் நேரத்தை வீணடிக்கும் செயல்கள் என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.

        • அப்படியெல்லாம் அவருக்கு பேச தெரிந்தால் பேசிவிட்டு போயிருப்பார் அதியமானிடம் விஷயம் தெரிந்துகொள்ள விழையும் உங்கள் ஆர்வம் மெச்சத்தக்கது. ஆனால் இது விழலுக்கு இழைத்த நீர்.

        • //தான் பேசுவது மட்டுமே வாதம். அதற்கு முரண்படும் அனைத்தும் விதண்டாவாதம் — இப்படி தூற்றுவது கூட ஒருவகை பார்ப்பனியம் தான் அதியமான் சார்//

          இது அதியமானுக்கு மட்டும் தான் பொருந்துமா? ஏன்னா, பொதுவா இங்க பேசுறவங்க எல்லோருமே இதை விட மோசமாத்தான் பேசுறாங்க. அதியமான் எவ்வளவோ தேவலை. (இல்ல, ஒரு வேளை same side goal அடிக்கறீங்களோ?)

          • //தான் பேசுவது மட்டுமே வாதம். அதற்கு முரண்படும் அனைத்தும் விதண்டாவாதம் — இப்படி தூற்றுவது கூட ஒருவகை பார்ப்பனியம் தான் அதியமான் சார்//

            இது அதியமானுக்கு மட்டும் தான் பொருந்துமா? ஏன்னா, பொதுவா இங்க பேசுறவங்க எல்லோருமே இதை விட மோசமாத்தான் பேசுறாங்க. அதியமான் எவ்வளவோ தேவலை. (இல்ல, ஒரு வேளை same side goal அடிக்கறீங்களோ?)

            // அதியமானுக்கு சர்டிபிகேட்டு எங்கிருந்து வருகிறது என்பதே போதும், அவர் தாங்கி நிற்கும் கருத்தியலின் தராதரம் என்னவென்பதற்கு அத்தாட்சியாக. பெய்ர் சொன்னாலே போதும் தரம் எளிதில் விளங்கும்.

        • வினவின் இந்த பதிலடி பார்ப்பன தினமலத்திற்கும்(மலருக்கும்), பார்ப்பன சொம்பு நக்கிகளுக்கும் போதாது என்றே நினைக்கிறேன்.

          இது பெரியார் பிறந்த மண் தானா? என்று சந்தேகமாக இருக்கிறது.

          பெரியார் பெயரை வைத்துக்கொண்டு இயக்கம் நடத்துபவர்கள் தினமலத்தின் இந்த பார்ப்பன திமிர்த்தனத்துக்கு என்ன எதிர்வினையாற்றியிருக்கிறார்கள்? மலையாள நடிகர் ஜெயராமன் தன் வீட்டில் வேலை பார்க்கும் ஒரு தமிழ்ப்பெண்ணைத் ‘தடித்த தமிழச்சி’ என்று கூறிவிட்டார் என்பதற்காக செந்தமிழன் சீமானும் அவரது தம்பிகளும் ஜெயராமன் வீட்டில் கல்லெறிந்தார்கள், ஆர்ப்பாட்டம் செய்தார்கள். ஈழத்தின் அரசியல் நியாயத்தையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் தினமலத்தின் இந்த கட்டுரையைப் படித்துவிட்டு அவர்களெல்லாம் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை..

  26. I have a doubt why other people except parpans never entered media like newspaper.My opinion Nakeeran is the only magazine? support for tamil people.All other cheaters dinamalar,dinamani(bloodies) write news against tamil people like
    koodankulam,samaseer kalvi,anna library,three people hanging etc.how dare to write against tamil in tamilnadu.All tamil people should aware about these people.
    I am really worried about tamil people.

    • Thanjavur Tamilan நீங்களும் தினமலர் பாணியிலே வஞ்சப் புகழ்ச்சி அணியிலே இறங்கிட்டீர்களா… தமிழ் வேணும் தமிழ் வேணும் என்று தங்கலீஷில் (samseer kalvi etc) கதைக்கிறீர்களே..

  27. ஏன்யா இவ்வலவு பச்சையா .பார்பன திமிரோடு எழுதுரான்
    தினமலர் இதை எல்லாம் ஆதரிச்சி பேசிரியலே இது
    உங்களுக்கே நல்லா இருக்கா நல்லா யோசனை பன்னி
    பாருங்கையா …நீங்க குடியிருக்கிர தெருவில 10..20 பேரை
    அனுப்பி எல்லோரையும் அடிச்சி தொரத்துடா..அப்புடின்னு
    உங்க ஊர் சேர்மன் சொன்னா அந்த 10..20 பேர் தெருவில
    ந்து அடிச்சி. பென்களை கர்பளிச்சி .கொலைபன்னி. வீடு
    வாசலே உடைத்து வெரட்டினா. நீங்க அந்த 10..20 பேர
    தேடிகன்டுபிடித்து தாக்குவியலா ? இல்ல.. அடிக்கசொன்ன
    சேர்மன தாக்குவியலா?
    இதையே உங்க வீட்டில உல்ல பென்பிள்லைகலை ஒங்க
    தெருக்கார பய ஏதாவது செய்துட்டான .. அப்ப நீங்க
    சேர்மன தாக்குவிர்கலா ? இல்ல அந்த பயல தாக்குவியல
    இரண்டும் ஒன்னாயா.. யோசிங்கய்யா!!1!

  28. தினமலரை இன்னும் நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதைத்தான் அங்கு வந்த பல பின்னூட்டங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

    • அப்படியில்லை! அங்கு வந்த பின்னூட்டங்கள் வடிகட்டப்பட்டிருக்கலாம். எந்த ஒரு பின்னூட்டத்திலும் ‘தினமலம்’ எனும் வார்த்தை இல்லாதிருக்கும், கவனியுங்கள். அந்த வார்த்தை போட்டு யாரும் ஒருவராவது எழுதாமலா இருந்திருப்பார்கள்?!

      • அட, நானே அங்கு தினமலம் என்றே பின்னூட்டம் இட்டேன். அயோக்கியர்கள் அதையெல்லாம் வடிகட்டிவிட்டார்கள்.

        • ஆம்.நானும் பின்னூட்டம் இட்டேன் “தமிழகத்தில் பிறந்து தமிழில் எழுதி பிழைப்ப்பு நடத்தும் தினமலர் போன்ற பார்ப்பனர்களுக்கு, எப்பொழுதுமே தாம் தமிழர் என்ற நினைவு சிறிதும் இல்லை” என்று. ஆனால் வெளிவரவில்லை.

    • எந்த ஒரு விவாதம் வரும் நேரமும் அதில் பார்பனர்களை மட்டும் குறை கூறும் அயொக்கிய ஓநாய்கள் பதிவுலகத்தில் மலிந்து விட்டனர். தினமலர் பொறுக்கி அந்துமணி இரமேஷை குறை கூறுவதில் தவறு இல்லை… அதற்காக போகிற போக்கில் பார்பனர்கல் அனைவர் முகட்திலும் சேற்றை வாரி இறைப்பதுதான் சூத்திரத்தனமா???(பார்பனியம் இருக்கும் போது சூத்திரத்தனம் இருக்க கூடதா என்ன??) ஏன் அய்யா உங்க ஆளுங்க தப்பே பண்றது இல்லையா??
      றெfஎர் ட்கெ Pலொஇசெ ரெசொர்ட்ச்….மொச்ட் ஒf ட்கெ ச்ரிமினல் ச்கர்கெச் fஇலெட் இன் ட்கெ Pஒலிசெ ச்டடிஒன்ச் அரெ அகைன்ச்ட் ஸ்C பெஒப்லெ…

      • அவாள்களை மட்டும் விலக்கி சூத்திரனை மட்டுமே இழிவாக எழுதும் அவாள்களிடமும் கேட்கலாமே? அதெப்படி அவாள்கள் செய்யும் கோமாளித்தனமெல்லாம் அதிரடியாகவே தெரிகிறது!

        //பார்பனர்கல் அனைவர் முகட்திலும் சேற்றை வாரி இறைப்பதுதான் சூத்திரத்தனமா?//

        அந்த ஊத்த வாயனை பார்ப்பன்ர்களின் பிரதிநிதியாக நீர் வரித்துக்கொண்டால் உமக்கு அப்படித்தான் தெரியும்.

  29. ஆடு நனைவதற்காக இந்த ஓ(தினமலர்)நாய் அழுகிறது பார்பணர்களின் புத்தி நாங்ககேள்விபடாததா…?சுயநலம் உள்ள ஒரே ஜாதி அவாள் தான்

  30. நண்பர்களே..

    நேற்றைய(14-11-11) தினமலர் பத்திரிக்கை செய்தி நம்முடைய மன ஓட்டத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், நாம் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம், நம்முடைய உணர்வுகள் இன்னும் செத்து போகவில்லையென்று…
    தான் வியாபாரம் செய்யும் ஒரு இடத்தில், அந்த இடத்தில் வாழ்பவர்களையே கேலி செய்து, தன்னுடைய வியாபாரத்தை நடத்தும் ஒரே பத்திரிக்கை இதுவாகதான் இருக்கும். அதையும் பார்த்தும், பாரா முகமாக செல்லும் சமூகமும் இது ஒன்றாகத்தான் இருக்கும்..
    அந்த பெருமைக்குரியது நம் தமிழகம்தான்..
    சட்டரீதியாக, சரியான சாட்சியங்களோடு நிருபிக்கப்பட்ட ஒரு கொலை குற்றவாளியை, சரியாக விசாரணை நடத்தப்படாமல், தண்டனை அளிக்கப்பட நிரபராதிகளோடு ஒப்பிட்டு செய்தி வெளியிட்டது, சட்டத்தை மீறிய ஒரு செயல்..
    அடுத்தது, ஒரு காமுகனை, மனிதாபிமானம் இல்லாத ஒரு வன்புணர்ச்சி குற்றவாளியை, தமிழன் என்பதால் , தமிழ் இனத்தையே அவமானப்படுத்தும் நோக்கோடு செய்தி வெளியிட்டு, ஒரு இனத்தையே தவறாக சித்தரித்தது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது..

    இவ்வாறு, இந்திய அரசியலமைப்புக்கும் , இந்திய சட்டத்திற்கும்
    விரோதமாக செயல்படும் இந்த பத்திரிக்கையை தடை செய்ய வேண்டும்
    என இந்திய அரசை கேட்டு கொள்வோம்..
    http://thenpothigaithendral.blogspot.com/

  31. ஐயா அதியமான் அவர்களே! இந்திய சர்வதேச சட்டங்களை ஏற்றுக்கொண்ட ஒரு ஜனநாயக அரசு. விடுதலைப்புலிகள் தம்மின இனவழிப்பை தடுக்க உருவான ஒரு ஆயுத அமைப்பு. எனவே பொறுப்புக்கூறல் எனும் விடயத்தில் இரண்டையும் சம பங்கென எந்த அடிப்படையில் நோக்குகிறீர்கள்!
    ஈழத்தில் இந்தியப்படையால் நடத்தப்பட்ட தமிழினப்படுகொலை பாலியல் வல்லுறவு சித்திர வதைக்கெதிராக ஜனநாயக இந்தியாவால் எடுக்கப்பட்ட நீதி நடவடிக்கை என்ன!
    ஜனநாயக இந்தியாவின் பொறுப்புக்கூறும் பிரதமராக ராஜீவ் இருந்து சீக்கியப்படுகொலைக்கு என்ன சொன்னார்!” ஒரு பெருவிருட்சம் சரியும் போது அருகிலுள்ள சிறு செடிகள் அழிவது வழமைதானே” எனும் தொனிப்பில்தானே சொன்னார். அந்நேரம் ராஜீவின் காட்டுமிராண்டித்தனமான கூற்று தொடர்பான எடுக்கப்பட்ட நீதி நடவடிக்கை என்ன! அதே வரியை அவரின் விடயத்தில் ஒரு தனிமனிதன் கூறும் போது உங்களால் ஏன் சகிக்க முடியுதில்லை!
    ஜெயின் கமிசன் சொல்லியதே ராஜீவ் கொலை தொடர்பாக ஆழமான மேலதிக விசாரணை நடத்தப்பட வேண்டும் அதிலும் இரண்டு ஆசாமிகளையும் விசாரிக்க வேண்டுமென. ஏன் அதில் கவனம் செலுத்தாது அதற்கு வலுவான சாட்சியாக அமைய கூடிய மூவரையும் படுகொலை செய்ய ஜனநாயக இந்தியா அரச இயந்திரம் முயற்சிக்கிறது!
    இந்தியா ஒரு ஜனநாயக நாடல்ல அதுவும் ஒரு இராணுவ அமைப்புத்தான் என்றால்! அதை இந்தியா அதிகாரபூர்வமாகச் சொல்லட்டும் யாரும் அவர்களிடம் நியாயம் கேட்காது விடுகின்றோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடு(???) என பீத்திகொள்ளவும் வேணும் ஆனால் ஜனநாயகத்தனமாய் பொறுப்புக்கூறவும் முடியாது. இது விலாங்குத்தனமாக தெரியவில்லை!

    • இந்தியா ஒரு ஜனநாயக நாடல்ல அதுவும் ஒரு இராணுவ அமைப்புத்தான் என்றால்! அதை இந்தியா அதிகாரபூர்வமாகச் சொல்லட்டும் யாரும் அவர்களிடம் நியாயம் கேட்காது விடுகின்றோம். உலகின் மிகப்பெரிய ஜனநாயகநாடு(???) என பீத்திகொள்ளவும் வேணும் ஆனால் ஜனநாயகத்தனமாய் பொறுப்புக்கூறவும் முடியாது. இது விலாங்குத்தனமாக தெரியவில்லை!// well said.

      இதற்கு பதில் சொல்ல பார்ப்பனீயத்தை தூக்கி பிடிக்கும் முதுகெலும்பு உள்ள எவனாவது ஒருவன் இருக்கிறானா?

  32. செய்தி செய்தியாக தராமல் தன் கருத்தை புகுத்தி தருவது தான் “மலம்” பானி. சுருங்க சொன்னால் வாந்தி எடுத்தது……

  33. ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!-

    எவ்வளவு கேவலமா நக்கல் அடிச்சு இருக்கான்

    • //தான் பேசுவது மட்டுமே வாதம். அதற்கு முரண்படும் அனைத்தும் விதண்டாவாதம் — இப்படி தூற்றுவது கூட ஒருவகை பார்ப்பனியம் தான் அதியமான் சார்//

      இது அதியமானுக்கு மட்டும் தான் பொருந்துமா? ஏன்னா, பொதுவா இங்க பேசுறவங்க எல்லோருமே இதை விட மோசமாத்தான் பேசுறாங்க. அதியமான் எவ்வளவோ தேவலை. (இல்ல, ஒரு வேளை same side goal அடிக்கறீங்களோ?)

      // அதியமான் இதைத்தான் நியாயம் என்கீறார்.

    • //ஒருவேளை, முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையாளிகளுக்கு கொடுத்தது போல், இன்னும், 20 ஆண்டுகள் கழித்து குரல் கொடுப்பார்களோ என்னவோ!-

      எவ்வளவு கேவலமா நக்கல் அடிச்சு இருக்கான்

      // அதியமான் இதைத்தான் நியாயம் என்கிறார்

      • இல்லை. அதை நியாயம் என்றெல்லாம் சொல்லவில்லை. நான் இங்கு இட்ட பின்னூட்டத்தை சரியாக பார்க்கவும். கேள்வியின் அடிப்படை சரி, ஆனால் கேட்ட விதம் மற்றும் தொனி, சொல்லாடல்கள் தான் தவறு என்றேன். இதே கேள்வியை அல்லது ஒப்பீட்டை வேறு யாராவது, வேறு விதமாக கேட்டிருக்க முடியும். மரண தண்டனையே கூடாது என்பவர்களுக்கான கேள்வி என்றும் சொல்லியிருந்தேன்.

        தினமலரை பற்றி யாரும் சொல்லி தெரிய வேண்டிய நிலையில் நான் இல்லை. அது வேறி விசியம்.

  34. verum pechukkalaal mattum thinamalaththai ozhikka mudiyaadhu. dinamalaththai yaarum vaangaamal irundhaal avargalaagave odungipoividuvaargal.avargal enna ezhudhukiraargal ena ariya virumbinaal veettukkoru paper vaangaamal veedhikku ondru vaanginaal podhum.

  35. இந்த செய்தி இவ்வளவு பேரை கொந்தளிக்க செய்தது என்றால், தமிழ் உணர்வு செத்துவிடவில்லை என்பதே அர்த்தமாகும். என் மனதில் எழுந்துகொண்டிருந்த பல கேள்விகளை கேட்டு பலர் பின்னூட்டம் இட்டிருந்தார்கள். தினமலர், தினமணி, தினத்தந்தி எதைத்தான் வாசிப்பது என தெரியவில்லை, முதலில் உள்ளது தனது பார்ப்பனீய முகத்தை காட்டிவிட்டது, இரண்டாவது கேட்கவே வேண்டாம் மூன்றாவது‍‍‍‍ …. தெரியவில்லை, தினகரனை நினைத்தால் குறிப்பிடும்படியாக சொல்ல முடியவில்லை. எல்லாம் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வந்த நேரம்… வேறென்னத்தை சொல்ல.
    தமிழீழ எண்ணத்தை கொச்சைப்படுத்துவதையே தனது பாலிசியாக வைத்து தினமலர் தனது வாசக வட்டத்திலும் அதை பிரதிபலிக்க செய்துவிட்டது. என்னமோ தமிழ் நாட்டில் எல்லாருமே இந்த 3 பேரையும் தூக்கில் தொங்க விடும்படி கெஞ்சுவதாக ஒரு இமேஜை உருவாக்க நினைக்கிறது. எல்லா பத்திரிக்கைகளும் இதை பற்றி கண்டித்தோ அல்லது நடு நிலையுடனோ செய்தி வெளியிடும் போது தினமலர் மட்டும் தூக்கு மேடை எப்படி தயாராகிறது என்று எக்ஸ்குளூசிவ் செய்தி வெளியிட்டு தனது வர்க்க புத்தியை காண்பித்தது. தூக்கு மேடையை செப்பனிட எந்த ஆசாரியும் கொத்தனாரும் முன்வரவில்லை என்ற செய்தியும் அதே தினமலரில் தான் வந்தது. அப்போதாவது அவர்களுக்கு புரிந்திருக்கவேண்டும். அரிய குற்றங்களுக்கு மரண தண்டனை தான் வழி யென்றால் நாட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டியவர்கள் எவ்வளவோ பேர் இருக்கின்றனர்.

    • \\தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு வந்த நேரம்\\

      நீங்க சொல்லும் தமிழ் கூறும் நல்லுலகம் எல்லாம் சங்க காலத்தோட முடிந்து விட்டது… இப்ப வேண்டுமானால்
      தமிழை கூறு போடும் நஞ்சுலகம் என்று மாற்றி சொல்லலாம்…

      • ஆம். நீங்கள் சொல்வது சரிதான். எப்போது ஆரியர்கள் தமிழகத்திள் வந்தேறினார்களோ, அப்போதே அவர்கள் தமிழ் கூறும் நல்லுலகத்தை தமிழை கூறு போடும் நஞ்சுலகமாக மாற்றா துவங்கி விட்டனர்.

  36. ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு கருத்து,னம்பிக்கை உள்ளது.யாரும் யாரையும் திருத்த முடியாது.வீணாக எழுத வெண்டாம்.

Leave a Reply to சீனு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க