privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைகுடியரசு ரெடி!

குடியரசு ரெடி!

-

கூட்டத்தைக் கூட்டி வித்தையைக்காட்ட
தேசிய கீதம் தயார்…
மேளத்தை கொட்டினால் மேலே பார்ப்பவர்களுக்கு
தேசியக் கொடி தயார்…

அமெரிக்க சிங்கத்தின் வாயில் தலையை விட்டு
வீரத்தைக் காட்டிட பிரதமர் தயார்…

அன்னியக் கம்பெனிகளிடம் ஒப்பந்தம் போட்டு
இந்தியக் ’குடியரசை’ தெருவில் நிறுத்த கலைஞர் தயார்…

இந்திய இறையாண்மையின் வசூலை மறந்து
இலவசமாக நடித்துக் காட்ட ஜெயலலிதா தயார்…
குணச்சித்திர வேடத்தில் ’குடியரசை’ காப்பாற்ற
சோனியா தயார்…

அறிமுக வில்லன் ராகுல்காந்தி
அடவு கட்டி இந்திய தேசியம் ஆடத்தயார்…
பங்குச் சந்தையின் சண்டைக்காட்சியில்
ப.சிதம்பரம் கலக்கத் தயார்…

ஆடையைக் குறைத்துக்காட்ட திரைப்படம் தயார்…
ஆயுதக் கவர்ச்சிகாட்ட முப்படை தயார்…

கழனிகள் இழந்தவர் கண்டுகளிக்க
அலங்கார வண்டியில் பச்சைவயல்கள் பார்வைக்குத் தயார்…

கால்நடை இழந்தவர் மனதைத்தேற்ற
குதிரைப்படையின் அணிவகுப்பு தயார்…

எல்லை தாண்டும் ஏவுகணைகள்
எதிரியைப் பொடியாக்கும் வெடிகுண்டுகள்
பிரமிப்பூட்டும் பீரங்கிகள், துப்பாக்கிகள்
காலாட்படைகள்… கையாள்படைகள்
கண்ணாரப் பாருங்கள்.. எல்லாமே உங்களுக்காகத் தயார்..
உண்மையிலேயே உங்களுக்காகத்தான்.

நெல்லுக்கு விலை கேட்டு நீங்கள் போராடினாலோ,
நிலத்திற்கு உரிமை கேட்டு நீங்கள் நிமிர்ந்தெழுந்தாலோ
வளம் கொழிக்கும் காடுகள் மலைகளை
வளைக்கும் முதலாளிகளை நீங்கள் எதிர்த்தாலோ
தொழிலாளர் உரிமையென்று துடித்தெழுந்தாலோ

நிச்சயம் முப்படையுடன்
உங்களுக்காகவே ’குடியரசு’ தயார்!

(மீள் பதிவு )

 – துரை.சண்முகம்

    • இந்தக் குடியரசு தெருக்கூத்துக்கு
      கோமாளி வேஷம் கட்டி
      குட்டிக்கரணம்போட,
      சுரத்து குறையாமல் பேச,
      துரியோதனனுக்கும் துச்சாதனனுக்கும்
      சகுனிக்கும் கூனிக்கும்
      தூபம் போட, துள்ளியாட,
      உண்மையைப் பொய்யாக்க,
      பொய்யை உண்மையாக்க,
      கட்டியக்காரன் கலாம்
      வந்தாரே…

    • நானும் ஒரு மீள்பதிவு போட்டிருக்கேன் (மறுமொழி இலக்கம் நான்கு) … அதிலேயும் இதே கமெண்டை போட்ராதீங்க, எழுதினவர் செத்துப்பூட்டாரு.. உங்கள் வாழ்த்தை சொல்ல முடியாது… 🙂

  1. […] https://www.vinavu.com/2012/01/26/indian-republic-ready/ Advertisement GA_googleAddAttr("AdOpt", "1"); GA_googleAddAttr("Origin", "other"); GA_googleAddAttr("theme_bg", "ffffff"); GA_googleAddAttr("theme_border", "dddddd"); GA_googleAddAttr("theme_text", "666666"); GA_googleAddAttr("theme_link", "026acb"); GA_googleAddAttr("theme_url", "026acb"); GA_googleAddAttr("LangId", "1"); GA_googleAddAttr("Tag", "%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d"); GA_googleFillSlot("wpcom_sharethrough"); Share this:TwitterFacebookLike this:LikeBe the first to like this post. By தமிழக மீனவர்கள் • Posted in தமிழக மீனவர் 0 […]

  2. இந்திய படைகள் நடத்தும் பாலியல் வன்முறையின் போது துடைக்கபட்ட செமன் கறை மற்றும் இந்திய படைகளால் கொல்லபட்டவர்கள் ரத்த கறைகளால்… ஆனாதே இந்த கொடி… கொடியேற்றும் போது தலைகளில் விழ போவது பூக்கள் அல்ல… இந்திய படைகளின் செமனும்… இந்தியாவால் கொல்லபட்டவர்களின் ரத்தமும்தான்…

  3. தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
    தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

    ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்
    உச்சியின் மேல்‘வந்தே மாதரம்’என்றே
    பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
    பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

    பட்டுத் துகிலென லாமோ?-அதில்
    பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
    மட்டு மிகந்தடித் தாலும்-அதை
    மதியாதவ் வுறுதிகொள் மாணிக்கப் படலம்

    இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில்
    எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்,-(தாய்)
    மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்
    மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

    கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்
    காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
    நம்பற் குரியர்அவ் வீரர்;-தங்கள்
    நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்

    அணியணி யாயவர் நிற்கும்-இந்த
    ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
    பணிகள் பொருந்திய மார்பும்-விறல்
    பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்!

    செந்தமிழ் நாட்டுப் பொருநர்,-கொடுந்
    தீக்கண் மறவர்கள், சேரன்தன் வீரர்,
    சிந்தை துணிந்த தெலுங்கர்,-தாயின்
    சேவடிக் கேபணி செய்திடு துளுவர்.

    கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்
    காலனும் அஞ்சக் கலக்கு மராட்டர்,
    பொன்னகர்த் தேவர்க ளொப்ப-நிற்கும்
    பொற்புடை யார்இந்துஸ் தானத்து மல்லர்.

    பூதலம் முற்றிடும் வரையும்-அறப்
    போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
    மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
    மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்

    பஞ்ச நதத்துப் பிறந்தோர்-முன்னைப்
    பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
    துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்
    தொண்டு நினைத்திடும் வங்கத்தி னோரும்.

    சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்
    சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
    தேர்ந்தவர் போற்றும் பரத-நிலத்
    தேவி துவஜம் சிறப்புற வாழ்க!

    (மீள் பதிவு- )
    -மகாகவி சுப்ரமணிய பாரதியார்

    • 1. பல ஆயிரம் பேர் முன் குடியரசு தின சாகசம் செய்த போலீஸ்காரர் பரிதாப சாவு: பலரும் அதிர்ச்சி

      2. குடியரசு தின சாகசம் : மாணவர் கை முறிவு.

      3. குடியரசு தினத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை.

      4. குடியரசு தின விழா :குதிரைபடை சூழ ஜனாதிபதி- அமர்ஜவான் ஜோ‌தியில் பிரதமர் மரியாதை.

      எல்லாம் குடியரசுக் கொண்டாட்ட நியூஸ். உயிரின் மதிப்பீட்டை உணர்ந்துகொள்ளுங்கள்!

      • நீங்க எதிர்பார்த்த அளவுக்கு அசம்பாவிதம் நடக்கவில்லையே என்ற வருத்தம் தெரிகிறது பட்டியலில்…

      • இந்தியாவில் பல்வேரு இடங்களில் அரசின் அடாவடி தனத்தால் மக்கள் தற்கொலைக்கு தல்லப்படுகின்ரனர்.அதும் உயிர் தான்.

    • யார் பிரிடிஸ்காரன் கைது வாரண்ட் கொடுத்தவுடனே புதுச்சேரிக்குள் ஒழிந்த சுப்ரமணிய பாரதி எழுதிய தேச பக்தி பாட்டா?

      //கம்பத்தின் கீழ்நிற் றல்காணீர்-எங்கும்
      காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
      நம்பற் குரியரவ் வீரர்;-தங்கள்
      நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்//

      அடுத்தவன் ஊயிரை கொடுப்பானாம் இவரு நாட்டுக்காக சிறைக்கு கூட போக பயந்து பிரன்ச்சுகாரன் ஆட்ச்சி செய்த புதுச்சேரியில போய் ஒழிந்து கொண்டு வீரம் தீரம் என்று பாட்டு எழுதுவாராம்.

      அவரோட போலி தேச பக்தி போலதான் இந்த பாட்டும் ஆகையால் மகாகவி எழுதிய பாட்டு மாங்க மடையன் எழுதிய பாட்டு எல்லாம் தேச பக்தி பாடலா எழுதாதீங்க மனிதன். முதல்ல உண்மையான விடுதலை வீர்ர் யார் என்று தெரிந்த பிறகு பாட்ட போடுங்க.

      • u want him to die.why should he die?

        whats the big glory in getting arrested and dying?doesn’t it make more sense to escape and keep writing stuff.

        it is a pity that the great man has to listen to bullshit from people like you.

      • இதே சுப்ரமணியும் மனிதனும்தான் வெள்ளைக்காரன் அவனாகவே இந்தியாவை விட்டு வெளியேறினான் என்று விடுதலை போராட்டத்தை நக்கீரன் குறித்த பதிவில் கொச்சைப் படுத்திவிட்டு இங்கு வந்து ”தேசபக்த” வேடம் போடுகிறார்கள்.

        • i say even now that brits left because of their own problems.But then it was also because of the struggle of the people,they never left South Africa/Zimbabwe for example.

          The business in India involved exploiting labour and capital and it was not easy anymore whereas in Zimbabwe/SA,people were not struggling correctly and hence was easy for the brits to dominate and stay.

          u are the most mal-literate(wrongly educated) person i have ever seen,i hope there are not many worse than you.

          • ஏங்க முதல்ல வெள்ளக்காரன் வியாபாரத்தின் காரணமாக ஒடிபோயிட்டானு சொன்னீங்க அப்புரம் வந்து மக்களின் போராட்டத்தாலும் என்று சொல்றீங்க அது எப்படி பதிப்புக்கு பதிப்பு பதில் மாற்றம் பெற்று கொண்டே இருக்குமா? இதுல நீங்க திப்பு அவர்களை தப்பாக கற்றுக் கொண்டவர் என்று வசபாடிறீங்க. முதல்ல கருத்தோட்டத்துள்ள ஒரு தெளிவு வைத்து கொள்ளுங்கள்.

        • வேடமெல்லாம் நான் எதற்கு போட வேண்டும்… வெள்ளைக்காரன் independence declare பண்ணும்போதே யானையை கட்டி தீனி போட முடியாமல் பயந்து ஓடுகிறீர்களா என அவனை நோக்கி கேட்கப்பட்ட கேள்வி தானே இது… இது குறித்து பற்பல விமர்சங்களும் கருத்துக்களும் இருக்கின்றன…

          மக்களின் நோக்கமெல்லாம் அவன் வெளியேற வேண்டும் என்பதாகவேதான் இருந்ததே தவிர, அவன் தானாக போனானா இல்லை துரத்தப்பட்டானா என்பதெல்லாம் இரண்டாம் பட்சம் தான்… அவனாகவே முடிவெடுத்திருந்தாலும் அவனை அந்த முடிவு நோக்கி தள்ளியது நமது தலைவர்கள், போராளிகள் என்பதை மறுக்க முடியுமா என்ன?

          தேச பக்தர்களை குறைவாக மதிப்பிடும் வண்ணம் கூறப்பட்ட கருத்து அமைந்திருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்…

          The British left India in 1947 due to many problems such as economic ,revolts and international situations. The economic situation was Britain was in debt to India at roughly £3 billion with a rise of £70 million daily. They were at this point no longer profiting from their association with India and much of the money they needed to maintain India was being spent on improving Britain at home with the NHS ,welfare states and its industry. By offering India independence as a way to write off much of their debt while securing funds for the Labour party plans. Along with this Britain had suffered greatly from the Second World War and required a lot of funds to rebuild much of its mainland cities and towns.

          As well as the staggering economic situation in India during this time there was also a major problem with revolting due to the current political situation, this is because the two major political factions, Indian National Congress (INC) and the Muslim League, were fighting with Mountbatten for what would happen to India. After the decision for partition was initiated there was major rioting along the borders of the Punjab and Bengal territories, the reasons for this is they were partitioned to increase the size of the territories which would be known as Pakistan and India.

          The main reason why British left India was because of the changing international situation. In 1941 Franklin D Roosevelt did not agree with the idea of countries could not govern themselves and thought this was a communist regime. Winston Churchill Prime Minister at this present moment in time thought that India was the jewel in the British crown and still wanted India to be part of the British Empire. The British feared that communism could spread across the whole of Europe and if they were not focused on the situation then they could lose what is left of their entire Empire.

      • புதுச்சேரில போய் என்ன புல்லாங்குழலா வாசித்தார்… அங்கிருந்தும் தேச பக்தி கவிதைகளை எழுதி கொண்டுதானே இருந்தார்… முட்டாள் தனமாக கைது ஆகி இறந்திருந்தால் பல நல்ல கவிதைகள் கிடைக்காமல் போயிருக்கும்… தற்காப்பு தான் போராட்டக்காரர்களின் முதல் ஆயுதம்… இயல், இசை, நாடக கலைகள் மூலம் தேசபக்தி பரப்பும் கலைஞ்சர்கள் பலர் தங்களை காத்துக்கொள்ள முடியாமல் இறந்ததால் பல நல்ல படைப்புகளை நாம் இழந்திருக்கிறோம்…

        \\இவரு நாட்டுக்காக சிறைக்கு கூட போக பயந்து பிரன்ச்சுகாரன் ஆட்ச்சி செய்த புதுச்சேரியில போய் ஒழிந்து கொண்டு வீரம் தீரம் என்று பாட்டு எழுதுவாராம்.\\
        சிறைக்கு போவதுதான் வீரமா? வெள்ளைக்காரனின் சூழ்ச்சிக்கு தப்பி ஒளிந்து போராடியோரெல்லாம் கோழையா? விட்ட சுபாஷையே கோழை என்பீர்கள் போலிருக்கே…

        நேருக்கு நேர் மோதுவதுதான் உண்மையான வீரம் என்று நீங்கள் கருதினால் அது உங்கள் அறியாமை… உயிராயுதம், உடலாயுதத்தை விட உளயாயுதம் உருவில் சிறிதெனினும் ஊக்கத்திலும் ஆக்கத்திலும் பெரியது…

        • //புதுச்சேரில போய் என்ன புல்லாங்குழலா வாசித்தார்… அங்கிருந்தும் தேச பக்தி கவிதைகளை எழுதி கொண்டுதானே இருந்தார்… முட்டாள் தனமாக கைது ஆகி இறந்திருந்தால் பல நல்ல கவிதைகள் கிடைக்காமல் போயிருக்கும்… … …//

          அப்ப சிறையில் இருந்து மகளுக்கு ஒரு கடிதம் எழுதிய (லெட்டர் டு த டாட்டர்)நேரு முட்டாளா?. வெள்ளக்காரன் உள்ள தள்ளி முட்டிய பேத்துருவான்னு ஒடி புதுச்சேரியில் ஒழிந்து கொண்ட பாரதிக்கு வக்காளத்து வாங்காதீங்க.

          பாரதிக்கு கொடி பிடிக்கும் உங்களை போன்ற மக்களுக்கு ஒரு உண்மை விளங்கட்டும்.

          1910 யில் பிரிடீஸ் கைது நடவடிக்கையை தவிற்க புதுச்சேரியில் அப்பொழுதிய பிரான்ஸ் மாகாநத்தில் தஞ்சம் புகுந்த பாரதி முதலாம் உலக போர் முடியும் வரை அதாவது 1918 வரை புதுச்சேரியில் காலம் கடத்தினான். பிறகு 1918 யில் புதுச்சேரியில் இருந்து கடலூர் வரும் பொழுது வெள்ளையர்கள் கைது செய்து சிறைக்கு அனுப்பியது. உங்கள் வீர புலவர் ஒரு வாரம் கூட வெள்ளையனின் உபசரிப்பை ஏற்க முடியாமல் லார்ட் பென்ட்லாந்த்கு எழுதிய வீர மடல் இங்கே இனைத்துள்ளேன் அதை படியுங்கள்.

          OM SAKTHI

          District Jail, Cuddalore
          28 November 1918.

          To His Excellency Lord Pentland Governor, Fort St. George

          The Humble petition of C. Subramania Bharathi.

          May it please your excellency.

          It has been more than a week now since I was arrested at Cuddalore on my way from Pondicheery to Tinnevelly which is my native district. After many loyal assurances on my part as your Execellency may well remember the Dy. I. G. (CID) was sent by your Excellency’s Government a few months back to interview me at Pondicherry. The Dy. I G after being thoroughly satisfied with my attitude towards the Government asked me if I would be willing to be kept interned purely as a war measure in any two districts of the Madras Presidency during the war.. I could not consent to that proposal, because having absolutley renounced politics I see no reason why any restraint should be placed on my movement even while the war lasted.

          Now that the war is over and with such signal success to the Allies, I ventured to leave Pondicherry, honestly believing that there would be absolutely no difficulty whatsoever in the way of my settling in British India as a peaceful citizen.. Contrary to my expectations however I have been detained and placed in Cuddalore District Jail under conditions which I will not weary your Excellency by describing here at any length BUT which are altogether diasgreeable to a man of my birth and status and full of dangerous possibilities to my health.

          I once again assure your Execellency that I have renounced every form of politics, I shall ever be loyal to british Government and law abiding.

          I therefore beg of your Excellency to order my immediate release. May God grant your Excellency a long and happy life.

          I beg to remain
          Your Excellency’s most obedient servant.

          C. Subramania Bharathi

          இப்படிபட்ட தொடை நடுங்கி எழுதுவது மட்டும் அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே என்று.

          //தற்காப்பு தான் போராட்டக்காரர்களின் முதல் ஆயுதம்//

          தற்காப்பு தான் போராட்டகாரர்களின் முதல் ஆயுதமா? நல்ல வேலை மாவோவும், சே வும் இதை கேக்க உயிரோடு இல்லை.

          போராளியின் முதல் ஆயுதமே விளிப்புணர்வு (அலர்ட்னஸ்)அது தெரியாம போராட்டத்தையும் போராளிகளையும் பற்றி எழுதாதீங்க. இதுக்கு முதல் காரணம் இந்த சுப்பிரமணி பரதி எல்லாம் பெரிய ஆல பாக்குறது தான்.

          //இயல், இசை, நாடக கலைகள் மூலம் தேசபக்தி பரப்பும் கலைஞ்சர்கள் பலர் தங்களை காத்துக்கொள்ள முடியாமல் இறந்ததால் பல நல்ல படைப்புகளை நாம் இழந்திருக்கிறோம்//

          அப்படி எத்தன பெரு போய்ட்டாங்க சொல்லுங்க பார்ப்போம்.
          பாரதி இயல், இசை, நாடக கலைகளில் எதனில் அவனை இனைத்து கொண்டான்.

          • சட்டம் படித்து கரைத்து குடித்து துப்பி துவைத்த ஒரு சட்ட வல்லுநர் தயார் செய்த கடிதத்தை வைச்சிக்கிட்டு எத்தனை தடவைதான் தேசிய கவிஞ்சனை அவமானப்படுத்துவீர்களோ…

            • வாதத்திற்காக அந்த மனுவை ஒரு வக்கீல் எழுதி தந்தார் என்று வைத்துக் கொண்டாலும் அதில் கையெழுத்து போட்டது ”ஓயுதல் செய்யோம் தலை சாயுதல் செய்யோம்”என வீராவேச வேடம் கட்டி ஆடிய பாரதிதானே.

              அந்த மனுவை கொண்டு பாரதியை எத்தனை முறை அவமானப்படுத்துவது என கோபித்து கொள்வதன் மூலம் உங்களை அறியாமல் பாரதி அவமானகரமான வெட்கி தலை குனிய வேண்டிய செயலை செய்துள்ளதாக ஒப்புக் கொள்கிறீர்கள்.

            • போலி தேசிய வா(விய)தியை தேசிய கவி என்று நீங்கள் வேண்டுமாயின் மகுடம் சூட்டி கொண்டாடுங்கள். உண்மை சொன்னால் அவமானம்மா? அப்படியே அவமானபட்டாலும் ஒன்றும் தப்பில்லை போலி தேசிய காவிக்கு முன்டாசு கவி, வீர புலவன் என்றேல்லாம் பட்ட பெயர்கள் வேறு.

              • விடுதலை போராட்டத்தில் பாரதி என்ற விடயத்தில் உங்களுக்கு பாரதியின் புதுச்சேரி பதுங்கல் மற்றும் கருணை மனு மீது வெறுப்பு இருக்கிறது…… அவனுடைய கவிதைகளுக்கு மட்டுமே இரசிகனான எனக்கு அவனுடைய தனி மனித வாழ்வில்/அந்தரங்கத்தில் அக்கறை இல்லை…
                மாகாகவி பாரதியின் கவிதைகளை பொறுத்த வரை எனக்கு மிகவும் பிடிக்கும்… ஒரு படைப்பாளியாக, கவிஞனாக பாரதியை நான் போற்றுவதில் உங்களுக்கு மறுப்பு இருக்காது என்று நினைக்கிறேன்…
                வெள்ளைக்காரனை வெறுத்தாலும் மேட்டூர் அணையையும், தண்டவாளங்களையும் வெறுப்பதில்லை என்பது போல..

                • மனிதன் நாங்களும் பாரதியின் தனி மனித வாழ்வை பற்றி பேசவில்லை அது தேவையும் இல்லை. பாரதியை படைப்பாளியாக, கவிஞனாக பார்ப்பது தவறே கிடையாது ஆனால் தேச கவி, சமுக நலம் பாடும் கவியாக உச்சத்தில் வைத்து பார்ப்பதை தான் தவறு என்று சொல்கிறேன்.

          • வாழ்த்துக்கள் செந்தமிழன்.முயற்சியுடன் உழைத்து தேடி பாரதியின் சரணாகதி மனுவை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

            மனுவை படிக்கும்போதே இப்படிப்பட்ட கோழையா பாரதி என அருவருப்பு மேலிடுகிறது.அதிலும் சிறையின் நிலைமைகளை சொல்லி அந்த பரங்கிப்பயலை களைப்புற செய்ய மாட்டாராம்.என்ன ஒரு அடிமைத்தனம். தனது ”பிறப்புக்கு” அந்த சிறை நிலைமைகள் உகந்ததாக இல்லையாம்.இங்கேயும் சாதிய பெருமை. இவர்தான் சாதி ஒழிப்பு வீரராம்.

            பாரதி வாய்க்கு வாய் ”your Execellency” என்று அந்த பரங்கிப்பயலை அழைக்கும்போது பழைய நிகழ்வொன்று நினைவுக்கு வருகிறது.1985 திம்பு அமைதிப்பேச்சு நடந்தபோது அமிர்தலிங்கம் தலைமையிலான துரோக கும்பல் இந்திய தூதர் பண்டாரியை ”your Execellency” என்று அழைத்தார்கள்.மான உணர்வு கொண்ட போராளி தமிழர்கள் அவரை Mr.Bhandari என்றுதான் அழைத்தனர்.

            மதி கெட்ட மானம் இழந்தோர் ஒரு உண்மையை புரிந்து கொள்வதில்லை.எத்தகைய சொற்களால் துதி பாடினாலும் தனி நபர்கள் ஒரு நாட்டின் அரசியல் போக்கை தீர்மானித்து விட முடியாது.ஆளும் வர்க்க நலன்கள்,அவற்றுக்குள் ஏற்படும் முரண்கள்,ஆள்வோரை எதிர்த்து மக்கள் நடத்தும் போராட்டங்கள் என பல்வேறு காரணங்களால் வழி நடத்தப்படும் அரசியல் போக்கை கூழை கும்பிடு போட்டு மாற்றி விடலாம் எனபது மடமை என்பதுதான் அது.

          • i see nothing wrong with what bharathiyar wrote,if i have to save my life to carry on with the people,i ll do exactly the same.generally moolai illadha mokkaichaamynga thaan i am brave,i am courageousnnu avunga maramandaikku excuse kuduppanga,moolai irukkiravunga poazhaichukuvaanga.

            you cant beat the englishman without cunningness,if we tried a charge of the light brigade we ll all get mass slaughtered like in jalianwalabagh and end up like zimbabwe,although the current situation is not too different.Mu kaa almost managed to do a Mugabe in TN.

            • அப்ப விடுதலை போராட்டத்துக்காக இன்னுயிர் துரந்த மக்கள் எல்லாரும் மூலையில்லாத மொக்கசாமிங்களா? தன் உயிர் போகினும் தன் உரிமைகளுக்காக போராடிய மக்கள் முட்டாள்களா? விடுதலை போராளிகளுக்கு இதை காட்டிலும் பெரிய அவமானம் எதுவும் இருக்க முடியாது.

              மனிதன் அவர்களே இது தான் மிக பெரிய அவமானம். இதற்கு உங்கள் பதில் என்ன?

              சுப்பிரமணி வெள்ளைக்காரன் எதிர் கொள்வதற்கு நயவஞ்சகம் ஒரு ஆயுதமா? ஒட்டு மொத்த விடுதலை போராட்டத்தை கொச்சபடுத்திட்டீங்க.

              சரி அப்படி வெளிய வந்த பாரதி பிறகு நாட்டின் விடுதலைக்காக என்ன கிழிச்சாரு என்று சொல்ல முடியுமா?

              பாரதி என்னும் தனி மனிதனுக்கு கொடி பிடிப்பதற்காக விடுதலை போராட்டத்தில் உயிர் விட்ட அனைத்து நல்ல உள்ளங்களையும் செருப்பாள அடிச்ச மாதிரி சொல்லிடீங்க.

              மு.க விற்கு இங்கு என்ன வேலை விவாதத்தை நான் திசைமாத்துரேனா, இல்லை நீங்களா?

              • boss,vanchinathan on maniyachi is my grandfather’s cousin and hence my own family.i am not talking about one better than the other.

                You are trying to say there is only one way to fight and thats the only way,i am saying i respect people’s emotion for independence and their own ways to fight that.We have also gained a lot from the Englishman and those guys who went and learnt from them are amongst the reason we are not like zimbabwe or vietnam today.

                • வாஞ்சிநாதன் உங்கள் உறவு என்று சொல்வதால் வாஞ்சிநாதனின் உயிர் தியாகத்தின் உண்மைகளை திறந்த மனதுடன் விவாதிக்க நீங்கள் தயாரா? அப்படி தயார் என்றால் விவாதிப்போம்.

                    • வாஞ்சிநாதன் ஆஸ் துரையை எதற்காக கொன்றார் என்பதின் உண்மை இந்திய தேசத்தின் விடுதலை போராட்டத்தில் இல்லை அது இந்து மத பார்ப்பனியத்தின் மீது உள்ளது.

                      நெல்லை மாவட்ட கலக்டர் ஆக இருந்த ஆஸ் இட்ட ஒரு மாபெரும் வரலாற்று சிரப்பு மிக்க உத்தரவை பொருக்காமல் நீலகண்ட பிரம்மச்சாரியின் பார்ப்பனிய வெறியுட்டத்தால் வாஞ்சிநாதன் ஆஸ்சை கொலை செய்தான்.

                      பார்ப்பனிய அக்ரகாரத்தில் தாள்தபட்ட மக்கள் நடமாடுவதை தடைவிதித்து இருந்த சூழ் நிலையில் அந்த தடையை அகற்றிய காரணத்தால் ஆஸ் துரையை வாஞ்சிநாதன் கொலை செய்தான். அதற்கு ஆதாரம் வாஞ்சிநாதனின் மரண வாக்குமுலம் (அவன் ஆடையில் இருந்து எடுக்க பட்ட மடல்). அதில் வாஞ்சிநாதன் குறிப்பிட்ட வாக்கியங்களை கூர்மையாக கவனிக்கவும்.

                      “வெள்ளையன் நாட்டை அடிமை படுத்தியது மட்டும் இல்லாமல் இந்து மததின் சானதான தர்மத்தையும் ஆழிக்க முற்படுகிறான். ஆகையால் ஒவ்வொரு இந்தியனும் வெள்ளையனை வெளியேற்றி விடுதலை அடைந்து சானதான தர்மத்தை நிலநாட்ட வேண்டும். ராமன், சிவாஜி, கிருட்டினன், குரு கோவிந்தன், அர்சுனன் போன்றோர் வாழ்ந்தும் ஆட்ச்சி செய்து இந்து தர்மத்தை நிலைநாட்டிய இந்த பூமியில் பசு மாமிசத்தை உண்னும் ஜார்ஜ் V மகுடம் சூடலாமா? கூடாது. ஜார்ஜ் V இந்தியாவில் காலடி எடுத்து வைக்கும் பொழுதே அவனை கொல்வதற்காக 3000 மதராசிகள் உறுதி எடுத்துள்ள இந்த நேரத்தில் எங்களது நோக்கத்தை தெளிவு படுத்தும் விதமாக இந்த கடையோன் இக்காரியத்தை செய்கிறேன்” என்று அவன் கைபட எழுதிய மடல் சாச்சி.

                      1. இந்து சானதான தர்மம் என்றால் என்ன?
                      2. பசு மாமிசம் உண்னும் ஜார்ஜ் V வாக்கியத்தின் அற்த்தம் என்ன
                      3. ராமன், சிவாஜி, கிருட்டினன், குரு கோவிந்தன், அர்சுனன் போன்றோர் வாழ்ந்தும் ஆட்ச்சி செய்து இந்து தர்மத்தை நிலைநாட்டிய இந்த பூமியில் என்ற வாக்கியத்தின் அற்த்தம் என்ன?

                      ஆஸ் துரை ஒரு தாள்தப்பட்ட பெண்னை தனது வாகனத்தில் அக்ரகாரம் வழியாக சென்றதால் அவனை கொலை செய்த வாஞ்சிநாதன் விடுதலை போராட்ட தியாகியா? இல்லை இந்து மத வெறியாட்ட தியாகியா?. ஆஸ்சை கொலை செய்த பின் தன்னை எதற்காக மாயித்துக் கொண்டான்.

                      இந்து மத உந்துதளுக்காக செய்ட்க ஒரு வெறி செயலை நாட்டின் விடுதலை போரட்டத்தின் தியகமாக எழுதி வீர வாஞ்சிநாதன் என்று பொய் பட்டம் இட்டு அவனுக்கு மரியாதை செய்வது தான் இந்திய தேசத்தின் விடுதலை போராட்டத்தின் இலட்சனமா?

                    • // ஆஸ் துரை ஒரு தாள்தப்பட்ட பெண்னை தனது வாகனத்தில் அக்ரகாரம் வழியாக சென்றதால் அவனை கொலை செய்த வாஞ்சிநாதன் விடுதலை போராட்ட தியாகியா? இல்லை இந்து மத வெறியாட்ட தியாகியா?. ஆஸ்சை கொலை செய்த பின் தன்னை எதற்காக மாயித்துக் கொண்டான். //

                      ” ஆஷைக் கொல்லச் சூழ்ச்சி செய்ததாகப் பதிநான்கு பேர் கைதுசெய்யப்பட்டனர். போலீசுக்கு அஞ்சி தர்மராஜ அய்யர் நஞ்சுண்டும் வெங்கடேசுர அய்யர் கழுத்தை வெட்டிக்கொண்டும் தற்கொலை செய்துகொண்டனர். வ.உ.சி.யின் உற்ற துணைவரும் கொலை நிகழ்ந்த நாளில் வாஞ்சியுடன் இருந்தவர் என நம்பப்பட்டவருமான மாடசாமி பிள்ளை கடைசிவரை சிக்கவில்லை. அவரைப் பற்றி உலவிவரும் கதைகளுக்கு இன்றுவரை குறைவில்லை.

                      காலனியாதிக்க காலத்துச் சதி வழக்குகள் அப்ரூவரின் சான்றை அடிப்படையாகக் கொண்டிருப்பது வழமை. வ.உ.சி.யின் சொந்த ஊரான ஓட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் பிள்ளை ஆஷ் கொலைச் சதி வழக்குக்கு அப்ரூவரானார். இந்தியாவை நாசப்படுத்தும் வெள்ளையராட்சியை ஒழிக்க வேண்டுமானால் எல்லா வெள்ளையரையும் கொல்ல வேண்டுமென்றும், 1908இல் நிகழ்ந்த நிகழ்ச்சிகளுக்கும் சுதேசிக் கப்பல் கம்பெனியை நசுக்குவதில் தலைமையேற்ற ஆஷைக் கொல்ல வேண்டுமென்றும் வாஞ்சி கூறியதாக சோமசுந்தரம் பிள்ளை வாக்குமூலம் அளித்தார்.

                      வழக்கு விசாரணையின்பொழுது சென்னை நீதிமன்றத் தலைமை நீதிபதி சார்ல்ஸ் ஆர்னால்டு ஒயிட், நீதிபதி எயிலிங்கு ஆகியோர் அப்ரூவரின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொண்டனர். மூன்றாம் நீதிபதி செட்டூர் சங்கரன் நாயர் சுதேசி இயக்கத்துக்கும் ஆஷ் கொலைக்கும் நேர்க் காரண காரியத் தொடர்பைக் கண்டார். நெல்லை மாவட்டத்தில் நிகழ்ந்த சுதேசி இயக்க எழுச்சியையும், அதையொட்டி வ.உ.சி. தொடங்கிய சுதேசிக் கப்பல் கம்பெனி முயற்சியையும், கோரல் ஆலையில் வ.உ.சி. முன்னின்று நடத்திய வேலைநிறுத்தத்தையும், திருநெல் வேலிக் கலகத்தையும் தொடர்ச்சியாக விவரித்த சங்கரன் நாயர், பாரதி எழுதிய ‘கலெக்டர் வின்ச் சிதம்பரம் பிள்ளைக்குச் சொல்லுதல்’, ‘கலெக்டர் வின்ச்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி’ என்ற பாடலை மேற்கோள் காட்டி, ‘இந்தக் கசப்பான பகையின் நேரடியான விளைவே திரு. ஆஷ் கொலையாகும் . . . வ. உ. சி., சுப்பிரமணிய சிவா ஆகியோரின் கைது மற்றும் சுதேசிக் கப்பல் கம்பெனி விவகாரம் ஆகியவையே இக்கொலைக்கு முக்கியக் காரணமாகும்’ என்று அறுதியிட்டுக் கூறினார்.”

                      http://www.kalachuvadu.com/issue-118/page12.asp

                      ஆஷ் துரையை, தியாகத்தால் உயர்ந்த ஆங்கிலேயர் கர்னல் பென்னிகுக் அவர்களின் ரேஞ்சுக்குப் புகழுவதற்கு முன் இதையும் படிக்கவும் :

                      ”கோரல் ஆலைத் தொழிலாளர் மட்டுமல்லாமல், பெஸ்ட் அன் கோ பணியாளர், நகர்மன்றத் துப்புரவு ஊழியர், கசாப்புக் கடைக்காரர், ஜட்கா ஓட்டுநர், சவரத் தொழிலாளர் என அனைவரும் வேலைநிறுத்தம் செய்தனர். 144 செயலில் இருந்த பொழுதும் அன்று பிற்பகல் வண்டிப்பேட்டையில் ஒரு மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நிகழ்ந்தது. ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்தில் ஆஷாக நடித்த வில்லன் நடிகர் எஸ்.ஏ. அசோகன், போலீஸ் சுடு முன்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்பதாக ஒரு காட்சி வரும். கூட்டம் கலைய மறுத்தபொழுது கூட்டத்தைத் தாக்குமாறு குதிரைப் படையினருக்கு ஆணையிட்டார் ஆஷ்.

                      ஆசு படையுடன் அணுகி அவரை
                      மோசம் செய்திட மூட்டிக் கலகம்
                      தடியால் அடிப்பித்தான் சார்ந்தநம் மவரை;
                      வெடியால் சுட்டான் வெளிவர விடாது.
                      ஆசுவின் குதிரையை அடித்தவர் தள்ளினார்.
                      நாசமென் னுயிர்க்கென நவின்றவன் ஓடினான்!

                      என்கிறது வ.உ.சி. சுயசரிதை. ஆஷைக் கூட்டம் தாக்கியபோது, சுடும் ஆணை வழங்கியதால் சிலர் குண்டடிபட்டனர் என்கிறது திருநெல்வேலி கெசட்டியர்.”

                      ”சுதேசி இயக்கத்தின் தலைமையகமாக விளங்கிய தூத்துக்குடியில் அதிகாரியாகப் பணியாற்றியதாலும், கப்பல் கம்பெனியை அடித்து நொறுக்கியதில் நேரிடையாகத் தொடர்புகொண்டவராகக் கருதப்பட்டதாலுமே ஆஷ் வெறுக்கப்பட்டார் எனலாம். ஊழ்வலிமீது ஆழ்ந்த நம்பிக்கையும், பொறுத்தருளும் பெருங்குணமும் ஒருங்கே பெற்ற சான்றோரான வ.உ.சி.கூடப் பின் வருமாறு எழுதும் நிலை இதனால் ஏற்பட்டது.

                      ஓரிர வினிலே ஆறிரு மணிக்கென்
                      அரங்குள் யான்நன் குறங்குங் காலவண்
                      செறிந்து மிஸ்டர் சிதம்பரம் பிள்ளையென்
                      றறைந்த சத்தமொன் றனேக தடவை
                      கேட்டு விழித்துப் பார்த்தேன். அரங்குமுன்
                      சிறையின் ஜூனியர் சப்அஸிஸ் டெண்டு
                      சர்ஜன் நின்று சௌக்கியம் உசாவி
                      ‘கலெக்டர் ஆஷுவைத் தெரியுமா?’ என்றான்.
                      ‘நன்றாகத் தெரியும்’ என்றேன். ‘எப்படி?’
                      என்றான். ‘யான் இவண் ஏகியதற்கும்
                      தூத்துக் குடியில் தோன்றிய ‘சுதேசிக்
                      கப்பல் கம்பெனி’ செத்தொழிந் ததற்கும்
                      அவன்கா ரண’மென் றறைந்தேன். ‘ஒருவன்
                      அவனை நேற்று மணியாச்சி ஜங்ஷனில்
                      சுட்டுக் கொன்று தன்னையும் சுட்டுச்
                      செத்தான்’ என்றான். ‘நல்லதோர் செய்தி
                      நவின்றாய் நீ நலம் பெறுவாய்’ என்றேன்.
                      உனக்கிவ் வருஷக் கரோஒ நேஷனில்
                      விடுதலை இலையெனப் பகர்ந்தான். ‘விடுதலை
                      என்றுமில் லெனினும் நன்றே’ என்றேன்.”

                      ————-

                      தூத்துக்குடியிலேயே 1908-ம் ஆண்டிலேயே ஆஷை போட்டுத்தள்ளுவது என்று சுதேசி இயக்கத்தினர் முடிவெடுத்து சமயம் பார்த்து காத்திருந்திருக்கூடும். 1911-ல் சமயம் வாய்த்தது. யார் சுடுவது என்ற போட்டியால் சீட்டுக் குலுக்கிப் போட்டு வாஞ்சி நாதனுக்கு வாய்ப்பு கிடைத்தது. மாடசாமிக்கு கிடைத்திருந்தால் அவர் எதற்காக ஆஷைக் கொன்றார் என்று களங்கம் கூற வேறு ஒரு கதை புனையப் பட்டிருக்கும், மாடசாமியின் கடிதம் வாஞ்சியின் கடிதம் போல் ’பார்ப்பனிய’ வார்த்தைகள் இல்லாமல் இருந்தாலும்கூட!!

                    • ”The result of the Tinnevelly conspiracy trial was that nine accused persons belonging to different castes and grades of society were found guilty of conspiracy against the State, but were not found to be guilty of abetment of the murder of Mr. Ashe. It was pointed out by the Court how the binding nature of the oath taken by the conspirators had overcome the caste prejudices which are often a bar to intimate association in Southern India. ”

                      http://www.ashefamily.info/ashefamily/1528.htm

                      ”திருநெல்வேலி சதிவழக்கின் முடிவில் வெவ்வேறு சாதியையும், அந்தஸ்த்தையும் சார்ந்த 9 பேர்களின் ‘ராசதுரோக’ குற்றச்சாட்டு நிறுவப்பட்டாலும் ஆஷ் கொலையில் தொடர்பில்லை என தீர்ப்பாகியது.

                      சதிவழக்கில் தொடர்புள்ள அனைவரையும், அன்று தென்னிந்தியாவில் மக்கள் கூட்டிணையத் தடையாயிருக்கும் சாதிய உணர்வுகளையும் தாண்டி, ஒன்றாகப் பிணைத்தது அவர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.”

                      சாதியால் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு பலியாகவில்லை இந்த ”ராசத்துரோகிகள்” என்பதே வெள்ளை நீதிமன்றத்தின் எச்சரிக்கை!

                    • மனிதன்,

                      நீங்கள் குறிப்பிட்டவை உங்கள் கருத்துக்கள் மீதான கடும் விமர்சனமே அன்றி தனிநபர் வசவு அல்ல.தனிநபர் வசவு என்றால் எப்படி இருக்கும் என்பதற்கு சுப்ரமணியின் பின்னூட்டங்களை பார்க்கவும்.அவர்தான் அவருக்கு பிடிக்காத கருத்துக்களை சொல்பவர்களை முட்டாள்கள்,வேலை இல்லாதவர்கள், மூளையற்ற மொக்கச்சாமிகள்,என்றெல்லாம் வசை பாடுகிறார்.அதை கண்டிக்க உங்களுக்கு துப்பில்லை.மாறாக அவரது பின்னூட்டம் போடும் வேகம் பிடித்திருப்பதாக திரைப்பட நடிகர்களின் ரசிகனை போல பேசுகிறீர்கள்.எம் மீது வசவு குறை காணுகிறீர்கள்.

                      விடுதலை போர் வீரனாக ஒரு தமிழனை சொல்ல முடியவில்லை என்று நீங்கள் அவதூறு சொல்லும்போது இயல்பாக ஏற்படும் சினம் எங்கள் சொற்களிலும் வெளிப்படுகிறது.ஆனாலும் வசவாக அல்ல.

                      அப்படி போராடிய தமிழின வீரர்களை சுட்டிக்காட்டினால் அதிலும் சாதியை வலிந்து கொண்டு வந்து மேல்சாதியினரின் இட்டுக்கட்டல் என அவதூறு சொல்கிறீர்கள்.இதற்கு எமது எதிர்வினை கடுமையாகத்தான் இருக்கும்.

                      அப்படி போராடிய வீரர்களில் மேல்சாதியினர் மட்டுமல்ல அனைத்து சாதியினரும் இருந்தனர் என சுட்டிக்காட்டினால் நாங்கள் சாதி பார்த்து பேசுவதாக இப்போது பழி சுமத்துகிறீர்கள்.இதற்கு சரியான மறுமொழி என்னவாக இருக்கமுடியும் ”குள்ளநரித்தனம்”என்பதை தவிர. இப்படி சொல்ல வைத்து விட்டு அதை வசவு என்றால் அதை என்னவென்று சொல்வது என நீங்களே முடிவு செய்து கொள்க.

                      இறுதியாக ஒன்று.ஏற்கனவே சொன்னதுதான்.
                      https://www.vinavu.com/2011/09/12/dalits-killed/#comment-49753

                      தர்க்கம் பண்ண முடியாவிட்டாலும் குதர்க்கம் பேசியாவது கடைசி சிரிப்பு நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும் என்ற வெறி உங்களுக்கு இன்னும் அடங்கவில்லை.ஆகவே உங்கள் ”வெற்றிக்கு” வழி விட்டு ஒதுங்கி கொள்கிறேன்.

                  • விடுதலை போராட்ட வரலாற்றை வெறும் புத்தகங்களிலும், பேட்டிகளிலும், படித்துவிட்டு நாம் படித்ததும், கேட்டதும், கற்பிக்கப்பட்டதும் தான் சரி மற்றது தவறு என்று எண்ணுகிறீர்கள்… வடவனோ, பார்ப்பானோ, பிற மேனிலை சாதியனோ விடுதலை போராட்டத்தில் தேச பக்தியோடு போராடியிருக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணுகிறீர்கள்..
                    காந்தியையோ, நேருவையோ, திலகரையோ மறுக்கும் வேளையில், தமிழனின் விடுதலை போராட்ட பங்கினை வியந்து வெகுமதிக்கின்ற நீங்களே, தமிழனின் பங்கினை பேசும்போது அதில் சாதீயம் பார்த்து அதையும் சிறுமைப்படுத்தி பாரதி,வாஞ்சி, சு.சிவா, சத்தியமூர்த்தி, இந்து சுப்பிரமணி போன்றோரை ஒதுக்குகிறீர்கள்.

                    இவர்களை மறுப்பதற்காக நீங்கள் முன்னிறுத்தும் விடுதலை வீரர்கள் தெலுங்கராகவோ, அல்லது குறிப்பிட்ட சில மேல் சாதி இனத்தவராக இருக்கின்றனர்.. இந்த வீரர்களின் வரலாறு அவரவர் சார்ந்த இனத்தவரால் மிகுக்கப்பட்டது என்பதை மறந்து அவர்கள் தான் உண்மையான வீரர்கள் என்று மறைமுகமாக சாதீயம் வளர்த்த வரலாற்றுக்கு சான்றாகிறீர்கள்…

                    உலகப்போருக்கு முன்னால் உருவாகியிருந்த இப்படியான பல வீரர்களின் வரலாறு உணமைகளுக்கு புறம்பாக தொகுக்கப்பட்டது, அதை தான் நாம் படிக்கின்றோம் இன்று..
                    கொங்கு நாட்டில் கட்டபொம்மன் ஒரு கள்வன் என்றுதான் அவர்கள் வரலாறு கூறுகிறது… உங்கள் புத்தகங்கள் என்ன கூறுகிறது…

                    விடுதலைக்காக போராடிய வீரர்கள் மட்டுமல்ல அடிமை இந்தியாவில் வாழ்ந்த அனைத்து இந்திய குடிமக்களும் பல அடிப்படை உரிமைகளை இழந்து ஏதேனும் ஒரு வகையில் வெள்ளையனால் பாதிக்கப்பட்டே இருந்தனர்… ஒட்டு மொத்த குடிமக்களின் மனத்திலும் பாக் முதல் கன்னியாகுமரி வரை விடுதலை அடைய வேண்டும் என்ற ஒரு வேட்கை இல்லாதிருக்க வாய்ப்பே இருந்திருக்க முடியாது… அப்படி இருக்கையில் அவர்கள் போலியாக போராட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது… போராட வேண்டும் என்று நினைத்தவன் முழு மனத்தோடு தான் வெளி வந்திருப்பான்… இதில் எப்படி போலி தேசியவாதியாக போலி போராளிகளை உங்கள் சல்லடை மனது சலித்தேடுக்கிறது என்று சலிப்பு மேலிடுகிறது…

                    • //விடுதலை போராட்ட வரலாற்றை வெறும் புத்தகங்களிலும், பேட்டிகளிலும், படித்துவிட்டு நாம் படித்ததும், கேட்டதும், கற்பிக்கப்பட்டதும் தான் சரி மற்றது தவறு என்று எண்ணுகிறீர்கள்//

                      இந்திய விடுதலை போராட்டத்தை நீங்கள் சொல்லுவது போல் புத்தகத்திலும், பேட்டிகளிலும் மட்டும் படித்து கேட்டு இருந்தால் உங்களை போல் “வந்தே மாத்தரம்” என்று சொல்லி கொண்டுயிருந்து இருப்பேன் ஆனால் இந்திய விடுதலையின் சில போராட்டங்கள் என்னும் போலிதனத்தையும் விடுதலை போராட்ட வீரர்கள் என்னும் போலியையும் ஆராய்ந்ததால் தான் வராதோ மாற்றம் என்றேன்.

                      //வடவனோ, பார்ப்பானோ, பிற மேனிலை சாதியனோ விடுதலை போராட்டத்தில் தேச பக்தியோடு போராடியிருக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணுகிறீர்கள்..//

                      அது போல் நான் எங்கு குறிப்பிட்டுள்ளேன். பகத் சிங்கின் பங்கையும், நேதாஜியின் பங்கையும், சிப்பாய் கழகத்தில் சிப்பாய்களின் பங்கையும், திப்பு சுல்தான் பங்கையும் நான் மறுக்கவில்லையே. நீங்கள் என் மீது உள்ள என்னத்தை என் என்னமாக சொல்லாதீர்கள்.

                      //காந்தியையோ, நேருவையோ, திலகரையோ மறுக்கும் வேளையில், தமிழனின் விடுதலை போராட்ட பங்கினை வியந்து வெகுமதிக்கின்ற நீங்களே, தமிழனின் பங்கினை பேசும்போது அதில் சாதீயம் பார்த்து அதையும் சிறுமைப்படுத்தி பாரதி,வாஞ்சி, சு.சிவா, சத்தியமூர்த்தி, இந்து சுப்பிரமணி போன்றோரை ஒதுக்குகிறீர்கள்.//

                      வாழ்கையில் சாதி பார்க்காதவன் எதற்கு விடுதலை போராட்டத்தில் சாதி பார்க்க வேண்டும் தோழர்? போராட்டத்திலும் போற்றுதலிலும் உண்மை இருக்க வேண்டும் நான் சுட்டி காட்டியது போலியை மட்டும் தான். என்னால் பார்ப்பனியர்களை ஒரு பொழுதும் தமிழனாக பார்க்க முடியது ஏன் என்றால் அது ஒரு போலி அடையாலம். பார்ப்பனியத்தை தூக்கி ஏறிந்துவிட்டு பார்ரின் பணிக்காக வாருங்கள் தோழ் கொடுப்போம். திரு.ந்ஜ்ஜ்

                    • \\விடுதலை போராட்ட வரலாற்றை வெறும் புத்தகங்களிலும், பேட்டிகளிலும், படித்துவிட்டு நாம் படித்ததும், கேட்டதும், கற்பிக்கப்பட்டதும் தான் சரி மற்றது தவறு என்று எண்ணுகிறீர்கள்//

                      நீங்கள் என்ன கால இயந்திரம் செய்து நேரடியாக போய் பார்த்தீர்களா.

                      \\வடவனோ, பார்ப்பானோ, பிற மேனிலை சாதியனோ விடுதலை போராட்டத்தில் தேச பக்தியோடு போராடியிருக்க வாய்ப்பே இல்லை என்று எண்ணுகிறீர்கள்.//

                      எந்த இடத்தில் இவர்கள் போராடவில்லை என சொன்னோம்.வாய்க்கு வந்ததை உளற வேண்டாம். நீங்கள்தான் தமிழின வெறுப்பை கக்கும் வகையில் தமிழன் யாரையும் சொல்ல முடியவில்லையா என அவதூறு சொன்னீர்கள்.

                      \\காந்தியையோ, நேருவையோ, திலகரையோ மறுக்கும் வேளையில், தமிழனின் விடுதலை போராட்ட பங்கினை வியந்து வெகுமதிக்கின்ற நீங்களே, தமிழனின் பங்கினை பேசும்போது அதில் சாதீயம் பார்த்து அதையும் சிறுமைப்படுத்தி பாரதி,வாஞ்சி, சு.சிவா, சத்தியமூர்த்தி, இந்து சுப்பிரமணி போன்றோரை ஒதுக்குகிறீர்கள்.//

                      காந்தி,நேரு கும்பலின் துரோகத்தை ஆதாரங்களுடன் விளக்கும் கட்டுரைக்கான சுட்டியை முந்தைய விவாதத்தில் கொடுத்திருக்கிறேன்.அது குறித்து கள்ள மவுனம் சாதித்து விட்டு இங்கு வந்து மீண்டும் இப்படி கதைப்பதை என்னவென்பது.நாங்கள் யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை.அவரவர் யோக்கியதையை உள்ளபடி எடுத்து சொல்கிறோம்.அது உங்களுக்கு வலிக்கிறது என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும்.

                      வாஞ்சி நாதனையே எடுத்துக் கொள்வோம்.தீண்டாமையை தன அலுவலகத்தில் இல்லாதொழித்தான் , குற்றால அருவியில் குளிப்பதற்கு பார்ப்பனர்களுக்கு இருந்த தனி உரிமையை ரத்து செய்து அனைத்து சாதியினரும் குளிக்க அனுமதித்தான் ஆசு என்பதால் வருணாசிரம வெறியில் அவனை கொன்றவனை விடுதலை போர் வீரனாக நீங்கள்தான் மிகைப்படுத்துகிறீர்கள்.

                      வாஞ்சிநாத புராணம் குறித்த முழு விவரங்களுக்கு பார்க்க.
                      http://viduthalai.in/new/e-paper/11892-2011-06-17-09-32-09.html

                      சு.சிவா ,கும்பலின் யோக்கியதையை பார்ப்போமா.பொட்டு கட்டும் வழக்கத்தை ஒழிக்க வெள்ளைக்காரன் தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டுவந்தபோது அதை கடுமையாக எதிர்த்தவர்கள் இவர்கள்.இந்து மத ஆச்சாரப்படி பொட்டு கட்டுவது புண்ணியம்,இந்து கலாசாரத்தை காப்பாற்றுவது என வாதாடினார்கள் வர்ணாசிரம வெறியர்கள்.. ராமாமிர்த அம்மையார் பெரியாரின் ஆலோசனைப்படி அவர்களுக்கு இப்படி எதிர் வினையாற்றினார். இவ்வளவு காலம் இந்து கலாசாரத்தை எங்கள் சமூக பெண்கள் காத்து வந்தனர்.நாங்கள் விலகி கொள்கிறோம்.உங்கள் குடும்ப பெண்களுக்கு பொட்டு கட்டி கலாசாரத்தை காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்று பேசினார்.அதன்பிறகே சப்தநாடியும் ஒடுங்கி சட்டம் கொண்டுவர ஒப்புக் கொண்டனர்.

                      \\இவர்களை மறுப்பதற்காக நீங்கள் முன்னிறுத்தும் விடுதலை வீரர்கள் தெலுங்கராகவோ, அல்லது குறிப்பிட்ட சில மேல் சாதி இனத்தவராக இருக்கின்றனர்.. இந்த வீரர்களின் வரலாறு அவரவர் சார்ந்த இனத்தவரால் மிகுக்கப்பட்டது என்பதை மறந்து அவர்கள் தான் உண்மையான வீரர்கள் என்று மறைமுகமாக சாதீயம் வளர்த்த வரலாற்றுக்கு சான்றாகிறீர்கள்//

                      முந்தைய விவாதத்தில் கோபால் நாயக்கரை நான் குறிப்பிட்டதை வைத்து இந்த உளறலை மீண்டும் மீண்டும் பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.அய்யா அறிவாளியே தமிழகத்தில் வாழும் பிற மொழியை தாய்மொழியாக கொண்டவர்களும் தமிழர்கள்தான் அய்யா.அவ்வளவு ஏன்,தமிழ் சமூகம் அறிவுத்தந்தையாக ஏற்றிப் போற்றும் பெரியாரே கன்னடத்தை தாய் மொழியாக கொண்டவர்தானே.அவரை விட தமிழர்களுக்காக உழைத்த ஒருவர் இருக்க முடியுமா.

                      சரி இவ்வளவு பேசுகிறீர்களே,கோபால் நாயக்கர் எந்த ஊரை சேர்ந்தவர் அவரது வரலாறு என்ன என ஒரு நான்கு வரி எழுதுங்கள் பார்க்கலாம்.

                      விடுதலை வீரர்களாக நாங்கள் கொண்டாடுவோர் மேல்சாதியினர் என்று எப்படி கண்டு பிடித்தீர்கள்.ஒரு விவாதத்தில் நண்பர் ஒருவர் உங்களை துப்பறியும் சாம்பு என சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது.துப்பறியும் சிங்கமே,ஒண்டி வீரன் பகடை என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.தளபதி சுந்தரலிங்கம் பள்ளர் வகுப்பை சேர்ந்தவர்.வாதம் பண்ணுவதற்கு முன் சற்று விவரங்களை தெரிந்து கொண்டு வாருங்கள்.

                      மற்றபடி அவர்களது வீரமும் தியாகமும் ஆதாரங்களுடன் மெய்ப்பிக்க கூடியவை.யாரும் இட்டுக்கட்டியவை அல்ல.

                      \\கொங்கு நாட்டில் கட்டபொம்மன் ஒரு கள்வன் என்றுதான் அவர்கள் வரலாறு கூறுகிறது… உங்கள் புத்தகங்கள் என்ன கூறுகிறது…//

                      பொய்யுரைப்பது என முடிவு செய்தபின் அடித்து விட என்ன தடை.சரி கட்டபொம்மன் குறித்து உங்கள் கருத்து என்ன.கோவை மக்களை முன்னிறுத்தி அவர்கள் பின்னால் ஒளியாமல் நேரடியாக வாருங்கள்.

                      \\விடுதலைக்காக போராடிய வீரர்கள் மட்டுமல்ல அடிமை இந்தியாவில் வாழ்ந்த அனைத்து இந்திய குடிமக்களும் பல………. விடுதலை அடைய வேண்டும் என்ற ஒரு வேட்கை இல்லாதிருக்க வாய்ப்பே இருந்திருக்க முடியாது… அப்படி இருக்கையில் அவர்கள் போலியாக போராட வேண்டிய அவசியமும் இருந்திருக்காது… போராட வேண்டும் என்று நினைத்தவன் முழு மனத்தோடு தான் வெளி வந்திருப்பான்//

                      பிறகு என்ன எழவுக்கய்யா சுப்பிரமணி வெள்ளைக்காரன் தானாகவே வெளியேறினான் என்று அடித்து விட்டபோது அதற்கும் ஆமாம் சாமி போட்டீர்கள்.

                      மீண்டும் நினைவு படுத்துகிறேன்..காந்தியின் நாடகங்களை தோலுரிக்கும் கட்டுரைக்கான சுட்டியை தந்திருக்கிறேன்.

                    • \\போலிதனத்தையும் விடுதலை போராட்ட வீரர்கள் என்னும் போலியையும் ஆராய்ந்ததால் தான் வராதோ மாற்றம் என்றேன்\\ – செந்தமிழர்
                      \\நீங்கள் என்ன கால இயந்திரம் செய்து நேரடியாக போய் பார்த்தீர்களா.\\ – திப்பு
                      பாயிண்ட். கால எந்திரம் செய்து போய் சோதித்து பார்க்க இயலாத தகவல்களை நீங்கள் எதன் அடிப்படியில் ஆராய்ந்து பார்க்கிறீர்கள்… காந்தி என்ற பொது நபரை பற்றி எடுத்துக்கொண்டாலே அவரை பற்றிய ஆதரவு கருத்துக்கள் உலக நாடுகளின் அனைத்து நூலகங்கள் முதல், இணையம், பத்திரிகைகள், பேச்சு, பேட்டி, அறிக்கைகள் என பலவாறு இருக்கின்றன… அவருக்கு எதிரான கருத்துக்கள் மிக குறைவு… நீங்கள் எதை வைத்து ஒப்புமை செய்து எதிரான கருத்துக்கள் தான் உண்மை என்று முடிவெடுக்கிறீர்கள்… மைனோரிட்டி இஸ் ஆல்வேஸ் கரெக்ட் என்பதாலா ?
                      (காந்திக்கு ஆதரவு தருகிறேன் என்று எண்ணி..காந்தி பற்றி சுட்டிகளை பட்டியலிட்டு குழப்ப வேண்டாம். காந்தி விவாதப்பொருள் அல்ல, உதாரணமே…)

                      \\வாழ்கையில் சாதி பார்க்காதவன் எதற்கு விடுதலை போராட்டத்தில் சாதி பார்க்க வேண்டும் தோழர்\\ – செந்தமிழன்
                      \\ஒண்டி வீரன் பகடை என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.தளபதி சுந்தரலிங்கம் பள்ளர் வகுப்பை சேர்ந்தவர்\\ – திப்பு
                      -நோ கமெண்ட்ஸ்.

                      \\துப்பறியும் சாம்பு, துப்பறியும் சிங்கமே,என்ன எழவுக்கய்யா,உளற வேண்டாம்\\
                      இது போன்ற தனி நபர் வசையை நேரடி பதத்தில் எழுத்தில் ஏற்றுவதை நாம் குறைத்து கொண்டால் நமது வாதங்கள் மற்றவர்கள் பார்வையின் பரிகாசத்தினின்று தப்பும்…

                      \\கட்டபொம்மன் குறித்து உங்கள் கருத்து என்ன\\
                      கட்டபொம்மன் மட்டும் அல்ல, எந்த சுதந்திர போராட்ட தியாகி, வீரர் பற்றியும் எனக்கு குறைவான மதிப்பீடு கிடையாது…

                      உங்களின் கோணத்தில் நீங்கள் தமிழகத்தில் யாரை உண்மையான விடுதலை போராளிகள் என்று நினைக்கிறீர்கள், அதை முதலில் தெளிவு படுத்துங்கள்..
                      நீங்கள் வெறுக்கும் பார்ப்பன மேல் சாதி இல்லாத, தொகுக்கப்படாத வரலாற்றை உடைய வீரர்கள் யார் என்று பட்டியல் தாருங்கள்… அவர்களின் எழுச்சி எப்படி விடுதலையை நோக்கி நம்மை நகர்த்தியது என்ற புள்ளி விவரத்தோடு சுட்டிகள் இல்லாமல்…

                      பின்னர் தானே உங்கள் கோணம் எங்களுக்கு புலப்படும்…

                    • // சு.சிவா ,கும்பலின் யோக்கியதையை பார்ப்போமா.பொட்டு கட்டும் வழக்கத்தை ஒழிக்க வெள்ளைக்காரன் தேவதாசி ஒழிப்பு சட்டம் கொண்டுவந்தபோது அதை கடுமையாக எதிர்த்தவர்கள் இவர்கள். //

                      தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்தபோது சுப்பிரமணிய சிவா உயிருடன் இல்லை. தேவையில்லாமல் அந்த தியாகியை ஏன் இங்கு கோர்த்துவிடுகிறீர்கள்?!

                    • கவனக்குறைவால் நேர்ந்த தகவல் பிழை.சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.சு.சிவா இடத்தில் சத்திய மூர்த்தி அய்யர் என்றும் ராமாமிர்தம் அம்மையார் என்ற இடத்தில் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி என்றும் திருத்தி படிக்க வேண்டுகிறேன்.

  4. தமிழனோட குடியை கேடுத்துட்டு இவனுங்க குடியரசு தினத்த கொண்டாடுறாங்க என்ன கொடும சார் இது?

      • அப்படியா? முல்லை பெரியார் அனை போராட்டம், கூடங்குளம் அணு உலை போராட்டம், தமிழக மீனவர்கள் தாக்கும் சீங்கள அரசு ஆகியவற்றில் தமிழர்களின் வாழ்வாதாரத்தை ஒடுக்கும் இந்திய அரசை என்ன சொல்வீங்க? ஒ தமிழர்களின் பாது காவலர்கள் என்று ஊர் அறிந்த பொய்ய சொல்லுவீங்க. வடிவேல் சொல்லுவதை போல காமடி கீமடி பன்னாதீங்க.

        • chumma argumenta thisai thiruppaadheenga,TNla congress rule or any national rule irunthiruntha inneram mullai periyar prachanai mudinju irukkum.Anyway it is almost over already.

          Koodankulam thittam oru prachanaye illa,chumma catholic church kitta dhuttu vaangikittu NGO ellam kadhai allakaaranga,dhuddu kedaicha ellarum pothikittu poiruvaanga,thamizhaga meenavargal ellai thaandi meen pidikkiradha pathi modhalla pesunga,appuram eppadi bullet varudhunnu paarpom.

          i cant keep repeating points everytime,u r such a moron.

  5. இன்னும் தயார்…

    ராவணன் கைது என்ற நாடகம் தயார்.
    பரம குடியில் கொன்று குவித்த
    போலிஸுக்குக் குத்த பதக்கம் தயார்.
    108ல் போகவேண்டிய செவிலியர்களுக்கு
    100 வண்டி தயார்
    திருட்டு வழக்கில் தப்பிக்க
    மேல்முறையீட்டு மனு தயார்
    போனமாதம் வரை கொதித்த பாலுக்கு பதிலாக
    கொதிக்கும் வென்னீர் தயார்..
    உணவு பாதுகாப்பு மசோதாஎன்ற
    மக்களை பட்டினிபோட மன்மோகன்சிங் தயார்…
    பணவீக்கமென்ற பெயரில்விலைவாசியை ஏற்றி
    சாதாரண மனிதனுக்கு சாவு மணியுடன் பிரனாப் தயார்…
    உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில் துப்பாக்கியுடன்
    மக்களுக்கெதிராக ப.சி. தயார்…
    இந்த கருமத்தையெல்லாம் மறைக்க
    குடியரசு என்ற பெயரில் ஒரு
    கொடியும் தயார்..

  6. தயார் தயார் தயார் !!!!!
    செஞ்சட்டை தயார்
    போராளி தயார்
    அலறல் தயார்
    ஆதங்கம் தயார்
    வேதனை தயார்
    சுவரொட்டி தயார்
    சுடுசொல் தயார்
    அட்டைப்பலகை தயார்
    வினவு தயார்
    வியாக்கியானம் தயார்
    விதண்டாவாதம் தயார்
    கரடு முரடாய் கவிதை தயார்
    வெறி வெறியாய் வாசகன் தயார்
    வரி வரியாய் மறுமொழி தயார்
    கொடியை திட்ட கோஷங்கள் தயார்
    கோஷத்தை திட்ட கோடிமக்கள் தயார்
    தமக்கு தாமே வாழ்த்துக்கள் தயார்
    சுதேச விட்டிலுக்கு தமிழக ஈசல்கள் தயார்
    ஆட்சி கட்டிலுக்கு கம்யுனிஸ்ட் தயார்
    தொட்டிலுக்கு குழந்தையாய் தோழர்கள் தயார்
    கிள்ளி விடுவதற்கு கிளர்ச்சிகள் தயார்
    ஆட்டி விடுவதற்கு அறிக்கைகள் தயார்
    பேட்டி கொடுப்பதற்கு பேச்சாளர் தயார்
    வாட்டி வதைப்பதற்கு வக்கீலும் போலிசும் தயார்
    ஏட்டிக்கு போட்டியை எகத்தாளமும் தயார்..
    தயார் தயார் தயார்!!!!!!!

    • முல்லை பெரியார் அனையில் தமிழனுக்கு கல்லறை தயார்
      கூடங்குளத்தில் தமிழனுக்கு பாடை தயார்
      தமிழக மீனவர்களுக்கு கடலில் சிங்களவர் குண்டு தயார்
      அதற்கு ஒத்து ஊத இந்திய கடலோர படை தயார்
      வினாபோன பார்ப்பனியம் தயார்
      அதற்கு கொடிபிடிக்க சுவயம் சேவக் தயார்
      போலி தேசிய வாதிகள் தயார்
      பகட்டான வரலாறு தயார்
      தமிழயையும், தமிழனையும், தமிழ் தேசத்தையும் ஒழிக்க கூட்டம் தயார்
      அந்த கூட்டத்துக்கு தமிழில் இட்டுகட்ட ஒநாய்கள் தயார்
      போலி ஜனநாயகத்துக்கு தேர்தல் தயார்
      மக்களை ஏமாற்ற அரசியல்வாதிகள் தயார்
      படுத்து தூங்க பாராளுமன்றம் தயார்
      புரட்சியை ஒடுக்க தேசிய பாதுகாப்பு சட்டம் தயார்
      இது அனைத்தையும் செய்ய இந்தியன் என்ற அடையாலம் தயார்
      அதை கொண்டாட குடியரசு தினம் தயார் தயார் தயார்…

  7. @Senthamizhan

    I dont see anything wrong in what shankar thatha wrote in that letter.I also dont see any connection between what Ashe did and the apparent hidden intentions of shankar thatha that u seem to have invented from your idle mind.why didn’t u say that collector ashe raised a buffalo and he let it graze in shankar thatha’s garden and thats why he killed him,i mean truth is only one and lies can be any number.there is no end to conspiracy theories,there is nothing wrong in being a proud religious hindu which shankar thatha was,and he ll always be a hero and vethuvettu vaaichavadal like you ll always be a zero.

    stop inventing random theories and breathe easy for a minute,nobody gives two shits about you.

    • சுப்பிரமணி உண்மையை சொன்ன ஏன் ஐய்யா கோபம் வருகிறது? வாஞ்சிநாதனின் போலி தியாகத்தின் வரலாறை பேசினால் அது திரிக்க பெற்ற கூற்றா? வரலாற்றை நீங்கள் திரித்து முறுக்கி கயிராக்கி அதில் போலி தேசியவாதியை உண்டாக்கி அவனுக்கு வீரன் என்று சொல்லி மக்களை முட்டாலாக்கும் நீங்கள் எங்களை பூஜ்யம் என்று சொல்லாதீர்கள். வரலாற்றை உண்மையாக எழுதுங்கள் வாஞ்சிநாதன் இந்திய தேசத்துக்காக ஆஸ்சை கொலை செய்யவில்லை பார்ப்பனிய தர்மத்தை தூக்கி நிறுத்துவதற்கு தான் கொலை செய்தான் என்று சொல்ல தயிரியம் இல்லை உங்க வாய்சவடால் எல்லாம் வரலாறு தெரியாத முட்டால்களிடம் சொல்லி பேரானந்தம் அடயுங்கள் எங்களிடம் சொன்னால் இப்படி தான் முகதிரையை கிழிப்போம். போலிகளுக்கு கொடிபிடித்து போலி தேசியம் பேச மட்டும் தான் உங்களுக்கு தெரியும். நான் சொன்ன ஆதாரங்களுக்கு அதாரத்துடன் மறுத்து கூர துப்பில்லை வசபாட மட்டும் தான் உங்களுக்கு தெரியும். கருத்துக்கு கருத்து பேச தெரியுமா?

      • until now,u have not proven why shankar thatha shot ashe.what proof do u have that shankar thatha killed ashe because of him taking a lower caste woman…blah blah blah….whats ur proof man?

        I ask again and again,is it wrong if shankar thatha hates beef eaters,i hate beed eaters myself.whats wrong with that?

        i am not giving any statements,ur the one who makes statements w/o proof.u have ur agenda based on ur imaginations and i have to accept it as proof.i see no evidence for ur conclusion.

        and ur group should be the last guys to talk about patriostism,aren’t u the group taking money from englishman to destabilize the independence movement.

  8. சுப்பிரமணி,நீர் என்ன பெரிய நாட்டாமையா எதுக்கெடுத்தாலும் எனக்கு தோனல நா அப்புடி பாக்கல ன்னே லாடு லபக் தாஸ் மாதிரி தீர்ப்பு சொல்றீரு.தோழர்கள் செந்தமிழன் திப்பு எப்புடி ஆதாரத்தோட வாதம் பண்றாங்க.அத ஒரே வரில அப்படிலாம் கிடையாதுன்னு ஒரே போடா போடுறதுக்கு உமக்கு என்ன அதிகாரம் கொடி கட்டி பறக்குதா.. உம்மோட shit உம்மகிட்டாயே இருக்கட்டும்.அத யார் கேட்டான்னு அதெல்லாம் தரமுடியாதுன்ரீறு. சங்கராச்சாரிதா அத வாழ எலைல போடுராராம்.உமக்கு வேணும்னா போய் கேட்டு வாங்கிக்கோ.

    • \\நீர் என்ன பெரிய நாட்டாமையா\\
      நீங்க தான் நாட்டாமை போல செந்தமிழன், திப்பு சொல்லுவதை ஒத்துக்கோ என்று அவருக்கு ஆர்டர் போடுரீங்கோ…

      \\தோழர்கள் செந்தமிழன் திப்பு எப்புடி ஆதாரத்தோட வாதம் பண்றாங்க\\
      தனிப்பட்ட முறையிலான கருத்துக்களுக்கு தான் பதில் கூற முடியும், கூட்டணி வாதங்களும், அதற்கு செர்டிபிகேட்களும் நீங்களே வச்சிக்கோங்க…

      அப்படியே கொஞ்சம் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கிட்டு என்ன சொல்ல வராங்கன்னு கேட்க முயற்சி பண்ணுங்க… கண்ணா பின்னான்னு கத்தி திட்டி துரத்தி அடிக்கிரதேலேயே குறியா இருக்காம…

    • then u r the nattamaya?if none of us are a sarpanch,then why r we sitting and debating?if u r so sure of the facts and the world,past,present and future,then why are u wasting tim here dude?

      • சுப்பிரமணி, நான் சொன்னது என்ன,நீர் பதில்னு பினாத்றது என்ன. மத்தவுங்க சொல்ற கருத்துக்கு மறுத்து கருத்து சொல்லாம அது அப்டி இல்ல இது இப்டி இல்லேன்னு நாட்டாம மாரி தீர்ப்பு சொல்றியேன்னு கேட்டேன். இந்த மேட்ருக்கு பதில் சொல்லாம நாட்டாமன்கிற வார்த்தைய புடிச்சிகிட்டு தொங்குரீர். ஆமா, ரெண்டு மாசம் லீவுல இங்க வந்து பொழுது போக்க வினவுதா உனக்கு கேட்சுதா.இரும்படிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேல.இருடி உங்களுக்குலாம் இருக்குடி ஆப்பு.

        இதுல உம்மோட ஜால்ரா கூஜா தூக்கி மனிதன் நா என்னவோ உன்ன தொரத்த பாக்குறேன்னு பொலம்புது.நீயே நாட்ட விட்டு காசு பாக்க ஓடிப்போன இன்னும் ரெண்டு மாசத்துல யாரும் தொரத்தாமையே ஓடப்போற இதுல நா என்ன தொரத்துறது.

        சரி ஒ கூஜா உட்பட பலர் சொல்லியும் தமிழ்ல எழுத மாட்டேங்கிறியே சுப்புணி.என்னா மேட்டரு.சரி ஒனக்கு மட்டுமதா இங்கிலிபிசு தெரியுமா.நாங்களும் எழுதுவோம்ல.

        you are the most arrogant and insensitive guy I have ever seen.your attitudes and approach towards other persons are highly condemnable .your arguments are idiotic but you believe them as the most intelligent ones.what a pity.o.k.dude however you carry on your mudslinging ”arguments”

        • i know u all know english.i have mentioned why i cant write in tamizh,it is too much effort.I have a two year old son to take care and my wife is busy taking care of her mom.it is not such a problem,i write enough in tamizh anyway,stop all this elite projections upon me,u knw i am a regular guy from madras.

          and why all this internet bravado?basically u guys make hidden and veiled insults like anything but if i abuse directly,u start playing the decency card.in madras i have played football with slum friends and the abuse one gets there physical and verbal would be like torture compared what ur complaining about.

          anyway,dont respond to me and dont make this a huge issue.we are anonymous to each other and it wouldn’t matter anyway.

          • இப்ப கொஞ்சம் பரவாயில்ல.கெட்ட வார்த்த எதுவும் சொல்லாம கொஞ்சம் மரியாதைய பேசுறீங்க.அதுனால நானும் உங்கள மரியாதயாவே பேசுறேன்.

            நீங்க பதில் சொல்ல வேண்டாம்னு சொன்னாலும் நீங்க சொல்லியிருக்கிற நச்சுக் கருத்துக்களுக்கு பதில் சொல்லிட்டு இத்தோட நானும் முடிச்சுக்கிறேன்.வார்த்தைகளில் காட்டும் மரியாதை உங்கள் கருத்துக்களில் இல்லை.சேரி பசங்கன்னா கெட்ட வார்த்த சொல்லி முரட்டுத்தனமா நடந்துக்குவாங்கனு உங்க மேல்சாதி கண்ணோட்டத்தோட சொல்லிட்டு நாங்களும் அப்படி நடந்து கொள்வதாக சொல்றீங்க.எங்கள சேரி ஆட்கள்னு சொன்னாலும் அதுல அவமானப்படுறதுக்கு ஒண்ணுமில்ல. ஏன்னா சேரி மக்கள் கோவத்தில் கெட்ட வார்த்தை பேசினாலும் அடிப்படையில் நல்லவர்கள்.அவர்கள் யார் பிழைப்பிலும் மண்ணள்ளி போடுவதில்லை.உழைத்து வாழும் உன்னதமான பண்பு கொண்டவர்கள்.அடுத்தவர் உழைப்பில் வாழும் ஒட்டுண்ணிகள் அல்ல அவர்கள்.மக்கள் வரிப் பணத்தில் படித்து விட்டு துட்டுக்கு ஆசைப்பட்டு வெளிநாட்டுக்கு ஓடும் ஓடுகாலிகள் அல்ல அவர்கள்.கண்ணெதிரே அநியாயம் நடந்தால்,விபத்து நடந்தால்,பிறர் துன்பப்பட்டால் வேடிக்கை பார்க்காமல் தட்டிக் கேட்கும் துணிவும் உதவும் நல்ல மனசும் கொண்டவர்கள் அவர்கள்.அந்த சூழ்நிலைகளில் உங்கள மாறி மேட்டுக் குடி ஆட்கள் எப்படி நடந்துக்குவாங்கன்னு நெனச்சு பாத்தா வெட்கப்பட வேண்டிய இடத்துல நீங்கதா இருப்பங்க.

            உங்க மேல்சாதி திமிரோடு இன்னொன்னும் முன்பு சொல்லியிருக்கீங்க. shit பத்தி பரம்பரையா எங்களுக்கு நல்லா தெரியும்னு.இருக்கட்டுமே. எங்கள் முன்னோர்கள் அப்புடி குப்பை மலம் வாரி கொட்டும் வேலையை செய்திருந்தால் அதுக்காக நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.இந்த மக்கள் சமூகத்தை நோய் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் வேலைய தங்கள் உடல்நலத்தை பணயம் வைத்து செய்யும் துப்புரவு பணியாளர்கள் போற்றப்பட வேண்டியவர்கள்.ஆனால் நன்றி கெட்ட உங்களோட சாதி அமைப்பு அவர்களை தோட்டி என இழிவு படுத்துகிறது.இதுல உங்க பரம்பரைய நினச்சு பாருங்க.பூஜைக்கு மணியாடரத தவிர எந்த உடல் உழைப்பும் இல்லாம,ராஜாக்களுக்கு கூஜா தூக்கி அவ தயவுல நிலங்கள ஆட்டைய போட்டு அதுலயும் உழைக்காம மேல்வாரம் குடிவாரம்னு குத்தகைக்கு உட்டு அடுத்தவர் உழைப்பில் உண்டு கொழுத்து அப்பவும் தீண்டாமை பாராட்டி வந்த உங்க பாரம்பரியத்துக்காக நீங்க மனசாட்சின்னு ஒன்னு இருந்தா வெட்கப்படனும்.

            • again u didn’t understand what i said,i never said they r bad or anything,just that they r rough and tough,they play hard,talk hard and dont idealise them as some poor saints,dont give parthiban padam screenplay and all here,i dont know about,i know many people from a slum and it is not even a proper slum but lower middle class people who have lost some prosperity and they are all normal people,there are good,bad,jealous,wicked,cunning,pervert,religious all kinds of people in shapes and sizes.Just their economic poverty doesn’t make them any innocent,anyone living in a city,rich or poor,educated or uneducated,sophisticated or not,they all have enough street smartness to survive and those skills are the same regardless of your or their political leaning.

              what u r descrbing is what S.A.Chandrashekar,Satyaraj,Radha Ravi and all fake leftists used to show in their movies to cheat the innocent and the poor rather than showing them ways to survive in this world glorifying their innocence instead to treating it like a normal human trait.
              I spoke about shit purposefully because i was tired of getting abused here,most of ur abuses are equally wicked and veiled,mine are open,what difference does it make?one guy tells me were you born out of shit,aniother guy talks about my grandfather?these things happened 2 months ago when i was talking nicely,now i talk straight ahead and u r hurt now.

              I dont want to discus the same old caste hierarchy blah blah blah,again.i am not stuck up in that and u r free to be stuck up in the same,i have zero interest in the past.i know the past well and i also know how anyone politically leaning twists the same reality to his favour as he wants.

              i know the world well enough and i know it is not so simplistic and idealistic as it exists in ur head.I also you know you ll manage to find one part of this huge post and find a way to fix it into your stereotype of me being a lazy,fat,land owning patronizing brahmin who has deep hatred for everyone else.

              • \\ ll manage to find one part of this huge post and find a way to fix it //

                சுப்ரமணியே ஆசப்படுரதுனால இதுக்கும் மறுப்பு எழுதிரலாம்.

                \\I spoke about shit purposefully because i was tired of getting abused here,most of ur abuses are equally wicked and veiled,mine are open,what difference does it make?one guy tells me were you born out of shit,aniother guy talks about my grandfather?these things happened 2 months ago when i was talking nicely,now i talk straight ahead and u r hurt now.//

                இந்த ரெண்டு நாளா போடுற கமெண்ட்ட தவிர நீங்க ”நைசா” பேசுனமாதிரி தெரியல.சரி உங்களோ யாரோ திட்னாங்கன்னா அதுக்கு ரிப்ளை போட்டு திட்டவேண்டியதுதான.மதுரையில அடி வாங்குனதுக்கு மானாமதுரைல வந்து மீசை துடிச்ச கதையா எல்லார் மேலயும் பாய்வது சரியா.

                பாருங்க \\,vinavu,nee enna thaan mokkai pottalum unna nambura maakana thavira mathavunga ellam vizhippoda thaan irukkanga.//

                இப்படி சகட்டுமேனிக்கு வினாவை பாலோ பண்றவுங்க எல்லாரும் மாக்கான்னு திட்றது என்ன நாகரீகம்.

                \\ I dont want to discus the same old caste hierarchy blah blah blah,again.i am not stuck up in that and u r free to be stuck up in the same,i have zero interest in the past.i know the past well and i also know how anyone politically leaning twists the same reality to his favour as he wants.//

                இதுக்கு பதில் சொல்றப்ப பார்ப்பனியம், அதன் கொடுங்கோன்மை,ஆதிக்கம் பற்றி சொல்ல வேண்டி வரும்.இத தனிநபர் தாக்குதலா எடுத்துக்கிட்டு veiled attack boiled attack ன்னு சொல்றது சரியில்ல.
                உங்களுக்கு கடந்த காலம் தேவையில்லாமல் இருக்கலாம்.உஞ்ச விருத்தி எடுத்தும், மன்னர்களை அண்டிப் பிழைத்தும் தோஷம் கழிக்கிறேன்னு தானம் வாங்கியும் இரந்து பெற்ற வாழ்க்கையை நினைத்துப் பார்க்க நீங்கள் விரும்பாமல் இருக்கலாம்.ஆனால் சூத்திரன் என்றும் பஞ்சமன் என்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவிளுருந்து வரும் எங்களுக்கு கடந்த காலம் தேவை.எங்கிருந்து வந்தோம் என்பதை அறியாத ஒரு சமூகம் எங்கு போவது என தீர்மானித்து முன்னேற முடியாது.லச்சார் படுகொலைகளை மறந்தால் நாங்கள் பசுவதை சட்டத்தை எதிர்க்க முடியாது.கீழவெண்மணி படுகொலைகளை மறந்தால் நாங்கள் உரிமைக்காக போராட முடியாது.பம்பாய்,குஜராத்,ஒடிசாவின் கந்தமால் இனப்படுகொலைகளை,அத்வானி ரத யாத்திரையை பாபர் மசூதி இடிப்பை,மறந்தால் தலித்களையும் முசுலிம்களையும் கிறிஸ்டின் களையும் கொன்று குவிக்கும் பார்ப்பன பனியா இந்து மத வெறியர்களை எதிர்க்க முடியாது.

                \\ into your stereotype of me being a lazy,fat,land owning patronizing brahmin who has deep hatred for everyone else.//

                உங்களுடைய தனிப்பட்ட கல்யாண குணங்களை பத்தி எங்களக்கு கவலை இல்லை.அப்படி ஒரு பிம்பத்தை சுப்பிரமணி என்ற மனிதன் மீது பொருத்துவதில் அக்கறையும் இல்லை.முதலில் இந்த நான்,நான் என்று பேசும் மேட்டிமை குணத்தை விட்டு ஒழித்தாலே இப்படி மற்றவர்களை மட்டமாக பேசும் எண்ணம் வராது.

        • \\ உம்மோட ஜால்ரா கூஜா தூக்கி மனிதன் நா என்னவோ உன்ன தொரத்த பாக்குறேன்னு பொலம்புது\\
          \\ஒ கூஜா உட்பட பலர் சொல்லியும் தமிழ்ல எழுத மாட்டேங்கிறியே\\

          இது தேவை இல்லாத கமேண்டுதானே.. அதுவும் எனக்கு ரிப்ளை பண்ணி போட்டா கூட நான் மறுக்க வாய்ப்புண்டு, வேறு நபரோட ரிப்ளை-ல போட்டு, நான் ரொம்ப லேட்டாத்தான் இதை பார்க்க நேர்ந்தது….

          எந்த வலைப்பதிவில் கமெண்டு எழுதவராயினும் ரெண்டு வகைதான் உண்டு.. ஒன்று பாராட்டி எழுதுவது, இன்னொன்று மறுப்பது, மறுத்து எழுதுவர்களுக்கு எதிர்ப்பும் அதிகம், அதனால் தான் உங்கள் எதிர்ப்பால் அவரு ஓடிரப் போறாருன்னு குறிப்பிட்டேன்…

          மற்றபடி யாருடைய கருத்துக்களுக்கும் நான் கூஜா தூக்குவதில்லை… ஜால்ரா, கூஜா போன்ற அடைமொழிகளை வைத்து எம்மை அலங்கரிப்பது வருத்தமளிக்க கூடியதாக உள்ளது…

          • வேணும்னு நீங்க படிக்க வாய்ப்பில்லைன்னு அந்த கமண்ட வேறு ரிப்ளைல போடல.நீங்க ”இப்போது விவாதத்தில்” தாவலை பயன்படுத்தி எல்லா மறுமொழிகளையும் படிப்பவர் என்று முன்னமேயே ஒரு தடவை சொல்லி இருக்கீங்க.

            \\எந்த வலைப்பதிவில் கமெண்டு எழுதவராயினும் ரெண்டு வகைதான் உண்டு.. ஒன்று பாராட்டி எழுதுவது, இன்னொன்று மறுப்பது, மறுத்து எழுதுவர்களுக்கு எதிர்ப்பும் அதிகம், அதனால் தான் உங்கள் எதிர்ப்பால் அவரு ஓடிரப் போறாருன்னு குறிப்பிட்டேன்…//

            ஓடிப் போயிருவாங்கன்னு யாரும் எதிர் கருத்து சொல்ல கூடாதுன்னு எதிர்பாக்குறீங்களா.

            உங்கள புண்படுத்தனும்னு அந்த அடைமொழிகள சொல்லல. சுப்பிரமணி நாகரீக வரம்புகளை தாண்டி ”moron” ”shit” moolaiyatra mokkachchaami, இன்னும் பலவாறு திட்டுகிறார்.அவரோடு பல இடங்களில் கருத்து ரீதியாக ஒத்துப் போகும் நீங்கள் அத கண்டிக்காமா அவரோட வேகம் புடிச்சுருக்கு,ஒத்த ஆளா எல்லாரையும் சமாளிக்கிறார் என்று அவருக்கு புகழ் மாலை சூட்டியதால் உங்களையும் சேர்த்து கடுமையாக சொல்ல வேண்டி வந்து விட்டது.

            இந்த விளக்கத்திற்கு பிறகும் உங்கள் வருத்தம் நீங்கவில்லை என்றால் உங்களை வருத்தமுற செய்ததற்காக வருந்துகிறேன்.

  9. @ மனிதன்:

    //கால எந்திரம் செய்து போய் சோதித்து பார்க்க இயலாத தகவல்களை நீங்கள் எதன் அடிப்படியில் ஆராய்ந்து பார்க்கிறீர்கள்… //

    கண்னால் காண்பது பொய் காதால் கேட்பது பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற பழந்தமிழ் கற்று கொடுத்த பாடத்தின் அடிப்படையில் தான்.

    //காந்தி என்ற பொது நபரை பற்றி எடுத்துக்கொண்டாலே அவரை பற்றிய ஆதரவு கருத்துக்கள் உலக நாடுகளின் அனைத்து நூலகங்கள் முதல், இணையம், பத்திரிகைகள், பேச்சு, பேட்டி, அறிக்கைகள் என பலவாறு இருக்கின்றன… அவருக்கு எதிரான கருத்துக்கள் மிக குறைவு நீங்கள் எதை வைத்து ஒப்புமை செய்து எதிரான கருத்துக்கள் தான் உண்மை என்று முடிவெடுக்கிறீர்கள்… மைனோரிட்டி இஸ் ஆல்வேஸ் கரெக்ட் என்பதாலா ?//

    உங்கள் அறியாமையை கண்டு சிரிப்பு தான் வருகிறது மனிதன். 100 பெரு ஒருவன நல்லவன் சொன்னா அதை அப்படியே நம்பும் அப்பிரானியாக இருக்கீங்களே! உண்மையிலே அவன் நல்லவனா என்று ஆராய்யும் அறிவு கண்யில்லையே உங்களிடத்தில். ஏன் என்று கேள்வி கேட்பதற்கு கற்று கொள்ளுங்கள்.

    தெர் இஸ்ய டிஃப்பரன்ஸ் பிட்வின் பிலிஃப் அண்டு ஃப்பேய்த் என்றார் ஓசோ. பிலிஃப் என்பது மாற்றார் சொல்வதை அப்படியே ஏற்பது ஃப்பேய்த் என்பது அவர் சொல்வது உண்மையா என்பதை ஆராய்ந்து தெளிவு பெறுவதே. உங்களுக்கு இருப்பது ஃபிலிப் எங்களுக்கு இருப்பது ஃப்பேய்த்.

    உண்மை உறங்கும் பொழுது அது மைனாரிட்டி அது விளித்து கொண்டால் மேஜாரிட்டி. வாய்மையே வெல்லும் என்று சொல்வது சிலம்பு.

    //(காந்திக்கு ஆதரவு தருகிறேன் என்று எண்ணி..காந்தி பற்றி சுட்டிகளை பட்டியலிட்டு குழப்ப வேண்டாம். காந்தி விவாதப்பொருள் அல்ல, உதாரணமே…)//

    உங்களுக்கு வேண்டுமாயின் காந்தி ஒரு உதாரணமாக இருக்கலாம். அதற்காக எங்களை ஆதாரத்துடன் சுட்டி காட்டி விவாதிக்க வேண்டாம் என்று சொல்லாதீர்கள் மனிதன்.

    //\\வாழ்கையில் சாதி பார்க்காதவன் எதற்கு விடுதலை போராட்டத்தில் சாதி பார்க்க வேண்டும் தோழர்\\ – செந்தமிழன்
    \\ஒண்டி வீரன் பகடை என்ற தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்.தளபதி சுந்தரலிங்கம் பள்ளர் வகுப்பை சேர்ந்தவர்\\ – திப்பு
    -நோ கமெண்ட்ஸ்.//

    இருவேறு பின்னூட்டத்தின் பதில்களை ஒன்று சேர்காதீர்கள். நீங்கள் கெட்ட இருவேறு கேள்விகளுக்கு நாங்கள் இட்ட மறுமொழியை ஒன்று திரித்து காட்டுவ்தற்கு பெயர் போலிதனம்.

    //கட்டபொம்மன் மட்டும் அல்ல, எந்த சுதந்திர போராட்ட தியாகி, வீரர் பற்றியும் எனக்கு குறைவான மதிப்பீடு கிடையாது…//

    அபப்டி என்றால் எதற்கு கட்டபொம்மனை கொங்கு மக்கள் கள்வன் என்று அவர்கள் வரலாறு சொல்வதாக ஒரு வாதம். இதற்கு தான் அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று கூறாமல் உண்மையை ஆராய்ய முற்படுங்கள்.

    //உங்களின் கோணத்தில் நீங்கள் தமிழகத்தில் யாரை உண்மையான விடுதலை போராளிகள் என்று நினைக்கிறீர்கள், அதை முதலில் தெளிவு படுத்துங்கள்..//

    இந்திய தேசத்தின் விடுதலை போரட்டத்திற்காக கொடிபிடித்த எந்த தமிழனையும் நாங்கள் விடுதலை போராளியாக நினைப்பது இல்லை.

    //பின்னர் தானே உங்கள் கோணம் எங்களுக்கு புலப்படும்…//

    இப்பொழுது எங்கள் கோணம் புலப்பட்டதா?

    • \\100 பெரு ஒருவன நல்லவன் சொன்னா அதை அப்படியே நம்பும் அப்பிரானியாக இருக்கீங்களே!\\
      உங்களிடம் நான் நம்பியதாக சொல்லவே இல்லையே, நீங்கள் எந்த அடிப்படையில் ஆராய்கிறீர்கள் என்று விளக்கமறிய தான் கேட்டேன்..

      \\ தீர விசாரிப்பதே மெய் என்ற பழந்தமிழ் கற்று கொடுத்த பாடத்தின் அடிப்படையில் தான்.\\
      இந்த வரலாற்று உண்மைகளை யாரிடம் விசாரிக்கிறீர்கள், நான்கு சுவற்றுக்குள் இரகசிய கூட்டங்களும், துண்டு பிரசுரங்களும், சுவரொட்டிகளும், தூரத்தில் பேசும் தலைவனின் உரையும், இறந்தபின் எழுதிய இரங்கலும், உங்கள் விசாரிப்பின் ஊடகங்களாக இருக்கின்றன…

      \\கட்டபொம்மனை கொங்கு மக்கள் கள்வன் என்று அவர்கள் வரலாறு சொல்வதாக ஒரு வாதம்\\
      வரலாற்று திரிபுக்கு உதாரணம் அது…

      \\இருவேறு பின்னூட்டத்தின் பதில்களை ஒன்று சேர்காதீர்கள். நீங்கள் கெட்ட இருவேறு கேள்விகளுக்கு நாங்கள் இட்ட மறுமொழி\\
      ஒரே கருப்பொருளை பற்றிய கேள்விகளுக்கு வெவ்வேறு பின்னூட்டத்தில் வெவ்வேறு பதில்கள் சொல்வீர்களா? கேள்விகள் உருவாக்கப்படலாம், விடைகளுமா?

      \\இந்திய தேசத்தின் விடுதலை போரட்டத்திற்காக கொடிபிடித்த எந்த தமிழனையும் நாங்கள் விடுதலை போராளியாக நினைப்பது இல்லை.\\
      நல்ல வேலை இப்பயாவது சொன்னீங்களே… ரொம்ப நேரம் உங்களிடம் விடுதலை வீரர்களை பற்றி பேசியது வீண். எந்த தமிழனும் விடுதலை போராளியாக நினைப்பது இல்லை என்று சொல்லி விட்ட பிறகு அது பாரதியாக இருந்தால் என்ன, கட்டபொம்மனாக இருந்தால் என்ன, அதை பற்றி உங்களோடு விவாதிப்பதில் அர்த்தம் இல்லை…

      • //இந்த வரலாற்று உண்மைகளை யாரிடம் விசாரிக்கிறீர்கள், நான்கு சுவற்றுக்குள் இரகசிய கூட்டங்களும், துண்டு பிரசுரங்களும், சுவரொட்டிகளும், தூரத்தில் பேசும் தலைவனின் உரையும், இறந்தபின் எழுதிய இரங்கலும், உங்கள் விசாரிப்பின் ஊடகங்களாக இருக்கின்றன…//

        உங்களுக்கு தெரிந்த ஆராய்வு எல்லாம் இப்படி தான் போல் இருக்கிறதே அதனால் தான் என்னமோ நான்கு சுவற்றுக்குள் இரகசிய கூட்டங்களும், துண்டு பிரசுரங்களும், சுவரொட்டிகளும், தூரத்தில் பேசும் தலைவனின் உரையும், இறந்தபின் எழுதிய இரங்கலும் உங்களுக்கு ஆராய்ச்சியாக தெரிகிறது. பொய் வரலாற்றில் உண்மை மறைந்து கிடக்கும் அதை தேட வேண்டும். பாரதியின் பொய் வரலாற்றில் மறைந்து கிடந்த மெய்யை நாங்கள் தேடினோம் கிடைத்தது பாரதியின் முகத்திரையும் கிழிந்தது.

        உங்கள் புரிதலில் இருக்கும் தவறுக்கு எங்களை பொறுப்பாக்காதீர்கள். ஆராய்ச்சியில் விசரிப்பது என்றால் பிறரிடம் கேட்பது என்று பொருள் இல்லை தேடல் என்பது பொருள்.

        //வரலாற்று திரிபுக்கு உதாரணம் அது…//

        வரலாற்றை திரித்து திரித்து தான் உங்கள் போலி இந்திய தேச பக்திய வளர்க்கும் நிலை உலகில் எந்த நாட்டிற்கும் இல்லாத ஒரு தனி தன்மை.

        // எந்த தமிழனும் விடுதலை போராளியாக நினைப்பது இல்லை என்று சொல்லி விட்ட பிறகு அது பாரதியாக இருந்தால் என்ன, கட்டபொம்மனாக இருந்தால் என்ன, அதை பற்றி உங்களோடு விவாதிப்பதில் அர்த்தம் இல்லை…//

        கட்டபொம்மன் இந்திய விடுதலைக்காக போராடினானா? கட்டபொம்மன் அவனுடைய நந்ட்டுக்காக போரிட்டான். கட்டபொம்மன் காலத்தில் இந்தியாவா? எத்தனை முறை சொன்னாலும் புரியவில்லை என்றால் என்ன செய்வது? கட்டபொம்மன் போராட்டத்தை இந்திய விடுதலை போராட்டத்துடன் இனைத்து கொண்டீர்கள். நீங்கள் கட்டபொம்மன்னை இந்திய விடுதலைக்காக இனைத்தால் அவன் இந்திய விடுதலை போராட்ட வீரனாக ஆகிவிடுவாரா? அவர் ஒரு தமிழ் தேச போராளிதான்.

Leave a Reply to செந்தமிழன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க