privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைபெண்மார்ச் 8 அனைத்து மகளிர் தின அரங்குக் கூட்டம் - செய்தி!

மார்ச் 8 அனைத்து மகளிர் தின அரங்குக் கூட்டம் – செய்தி!

-

உழைக்கும் பெண்கள் தமது அடிப்படை உரிமைக்காக போராடி ரத்தம் சிந்திய நாளான மார்ச் 8 அன்று திருச்சியில் காலை பெண்ணுரிமைப் போராளி தந்தை பெரியாரின் உருவச் சிலைக்கும், அம்பேத்காரின் உருவசிலைக்கும் மாலை அணிவித்து கூடியிருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

அதன் தொடர் நிகழ்வாக மாலை உறையூர்  பகுதியில் அமைந்துள்ள “கைத்தறி நெசவாளர்  திருமண மண்டபத்தில்” அரங்குக் கூட்டம் நடைபெற்றது. முதல் நிகழ்ச்சியாக தியாகிகளுக்கு வீரவணக்கத்துடன் துவங்கியது.

தலைமையுரையாக பெண்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் தோழர் இந்துமதி பேசும் போது, “பெண்களுக்கு சமூக அக்கறை அதிகரித்து வருகிறது. ஆனால் ஆண்கள் அதை தடைசெய்வதும், வரம்புக்குட்பட்ட உரிமைகளை மட்டும் கொடுப்பதும் உள்ளது. பெண்களுடைய திறமைகள் போர்க்குணங்கள் அதிகரிக்கும் இச்சூழலில் பெண்கள் தம்முடைய குடும்பம் என்ற வட்டத்தை தாண்டி சமூகத்திற்காக உழைக்க முன் வரவேண்டியது அவசியம் இன்று பெண்களுக்கு ஆண்கள் எதிரியல்ல, மாறாக ஆண்-பெண் சேர்ந்து செய்யக் கூடிய ஒரு புரட்சியின் மூலமே பெண் விடுதலை சாத்தியம் மற்றும் மார்ச்-08 வெறும் கோரிக்கை நாளல்ல, அது போராட்ட நாள், சர்வதேச பெண்களின் முழுமையான விடுதலைக்கு போராட பெண்கள் அணி திரள வேண்டும்” என்றார்.

பெண்கள் சட்டத்தின் முன் சமமானவர்களா? என்ற தலைப்பில் வழக்கறிஞர் மீனாட்சி பேசும்போது, “பாமர பெண்களாக இருந்தாலும் படித்த பெண்களாக இருந்தாலும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் இருக்கின்றது. சமீபத்தில் பழங்குடி பெண்கள் மீது பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டது. அதேபோல் ராணுவ உயர் அதிகாரியாக பணிபுரிந்த “அஞ்சலி குப்தா” என்ற பெண்ணும் பாலியம் வன்முறையால் தற்கொலைக்கு தள்ளப்பட்டார். இதற்கு காரணமான குற்றவாளிகள் மீது எந்தவிதமான கடுமையான தண்டனையும் விதிக்கப்படவில்லை.அதேபோல சொத்துரிமையிலும், ஆண்களுக்கு சாதகமாகவே சட்டங்கள் உள்ளன. “குடும்ப வன்முறை தடுப்பு சட்டம்” என்பதும், பெண்களுக்கு எதிரானதாகவே உள்ளது. பெண்கள் அமைப்பாக சேர்ந்து போராடும் போதே பெண் விடுதலை சாத்தியமே தவிர சட்டத்தின் மூலம் தீர்வு கிடையாது என உரையாற்றினார்.

மறுகாலனியாக்கச் சூழலில் பெண்கள் மீதான அடக்குமுறையும் அவர்களது விடுதலையும் என்ற தலைப்பில் தோழர் துரை சண்முகம் பேசும்போது:

“மறுகாலனியம் இன்று ஒட்டு மொத்த மக்களையும் வேட்டையாடும் சூழலில் பெண்களின் நிலை என்பது மிக கொடுமையாக உள்ளது. உழைப்பு சுரண்டலின் உதாரணம் சென்னை நோக்கியா கம்பெனியில் வேலை செய்த அம்பிகா என்ற பெண் யந்திரத்தில் வேலை பார்க்கும் போது கழுத்து அறுபட்ட நிலையிலும் உற்பத்தியை நிறுத்தக் கூடாது என நோக்கியா நிர்வாகம் அராஜகம் செய்துள்ளது. இன்று பல நிறுவனங்கள் பெண்களை அழகுப் பதுமைகளாகவே பார்க்கிறது. முதலாளித்துவம் பெண்களின் உழைப்பை சுரண்டுவதாகவே உள்ளது. பெண்கள் அமைப்பாக சேரவேண்டிய அவசியம் குறித்தும் அந்த உணர்வை ஊட்டுவது பெண்கள் விடுதலை முன்னணியின் கடமையாகவும் உள்ளது” என பேசினார்.

பெண்கள் விடுதலை முன்னணியினரின் அறிமுக ஆட்டத்துடன், பெண் தோழரின் சிலம்பாட்டம் நடத்தப்பட்டது. பெ.வி.மு.வின் “நவீன அடிமைகள்” நாடகம் நடத்திக் காட்டப்பட்டது. ம.க.இ.க. மையக் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சியும் சிறுவர் கலைக்குழுவின் கழியல் ஆட்டம் பார்வையாளர்களை உற்சாகப்படுத்தியது. முல்லைப் பெரியாறு அணை, பற்றிய சிறு நாடகமும் நடத்தப்பட்டது.

இறுதியில் நன்றியுரை, சர்வதேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவுற்றது. நிகழ்ச்சியில் சுமார் 700பேர் கலந்து கொண்டனர்.

படங்களை பெரியதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்

______________________________________________________

செய்தி : பெண்கள் விடுதலை முன்னணி ,திருச்சி

_______________________________________________________

வினவுடன் இணையுங்கள்

தொடர்புடைய பதிவுகள்: