privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!

நரேந்திர மோடி ஒரு மத நல்லிணக்கவாதி: சொல்கிறது சிறப்புப் புலனாய்வுக் குழு!!

-

மோடியின் மதவெறிப் படுகொலைகள்: நரியைப் பரியாக்கியது சிறப்புப் புலனாய்வுக் குழு!

மோடி

குஜராத் மாநிலத்தில் முசுலீம்களுக்கு எதிராக நடந்த மதவெறிப் படுகொலை வழக்கில் அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசைச் சேர்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட 62 பேரைக் குற்றவாளிகளாகச் சேர்க்கக் கோரி ஜாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரித்து வந்த சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது விசாரணையை முடித்து, இறுதி அறிக்கையை இரண்டு மாதங்களுக்கு முன்பு அகமதாபாத் விசாரணை நீதிமன்றத்திடம் அளித்தது.  அந்நீதிமன்றம் இவ்வறிக்கையை உடனடியாக வெளியிடாமல் தன்வசமே வைத்திருந்தபோதும், “இப்படுகொலை தொடர்பாக மோடி மீது சுமத்தப்பட்ட 32 குற்றச்சாட்டுக்களுக்கும் போதிய ஆதாரமில்லாததால், அவர் மீது எந்தவொரு வழக்கும் பதிவு செய்ய முடியாது” எனச் சிறப்புப் புலனாய்வுக் குழு எடுத்த முடிவு, மோடி ஆதரவு கும்பலால், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் மறைமுகமான ஒத்துழைப்போடு வெளியே கசியவிடப்பட்டது.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் மோடிக்கு எதிராக வழக்குத் தொடுத்த ஜாகியா ஜாஃப்ரியிடமும், அமைதி மற்றும் நீதிக்கான குடிமக்கள் குழுவிடமும் நீதிமன்றம் தற்பொழுது அளித்துவிட்டது.  இதனையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை நடத்திய விதம், அதனின் முதல் மற்றும் இறுதி அறிக்கைகள்; உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிமன்ற நண்பன் ராஜூ ராமச்சந்திரனின் அறிக்கை, அதனைச் சிறப்புப் புலனாய்வுக் குழு ஏற்றுக் கொள்ள மறுத்திருப்பது ஆகியவை அனைத்தும் அதிகாரப்பூர்வமாக வெளிவந்துவிட்டன.

குஜராத்தில் இந்து மதவெறிக் கும்பல் நடத்திய மதவெறிப் படுகொலையை கோத்ரா சம்பவத்தின் எதிர்வினை என்றும், ஜாகியா ஜாஃப்ரியின் கணவர் இஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதையடுத்துதான் கொல்லப்பட்டார் என்றும் கூறி நியாயப்படுத்தினார், மோடி. அவரது கூற்றை அப்படியே தனது அறிக்கையில் வழிமொழிந்துள்ளது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  மோடிக்கு எதிரான சாட்சியங்களை நடுநிலையாக நின்று ஆராயாமல், ஏதாவதொரு நொண்டிச்சாக்கைச் சொல்லித் தட்டிக் கழித்து மோடியைக் காப்பாற்றியிருக்கிறது.  “இப்படுகொலைக்கும் மோடி அரசிற்கும் இடையே எவ்விதத்திலும் தொடர்பில்லை; கலவரத்தின்பொழுது மோடியின் அரசும் போலீசும் கடமை தவறாது நடந்துகொண்டனர்” என்று புளுகியிருக்கிறது.  சுருக்கமாகச் சொன்னால், போலீசின் அத்துமீறல்களை விசாரிக்க ஆளும் கும்பலால் அமைக்கப்படும் தலையாட்டி விசாரணை கமிசன்களைவிட மிகக் கேவலமான முறையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் அதன் முடிவுகளும் அமைந்துள்ளன.

‘‘இந்து மதவெறிக் கும்பல் குல்பர்க் சொசைட்டி காலனியில் வசித்து வந்த முசுலீம் குடும்பங்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தத் துணிந்த சமயத்தில், எனது கணவர் இஷான் ஜாஃப்ரி நரேந்திர மோடியைப் பலமுறை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உதவி கோரினார்.  ஆனால், போலீசு துறையைத் தன்னிடம் வைத்துள்ள மோடியோ இத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த எவ்வித முயற்சியும் செய்யவில்லை.  எனவே, இத்தாக்குதல் மோடிக்குத் தெரிந்து, அவரது மறைமுகமான ஒப்புதலோடுதான் நடந்தது” என மோடி மீது  ஜாகியா ஜாஃப்ரி  குற்றஞ்சுமத்தியிருந்தார்.

இக்குற்றச்சாட்டை ஒதுக்கித் தள்ளியுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, “மோடிக்கு இஷான் ஜாப்ரியிடமிருந்து எந்தவிதமான தொலைபேசி அழைப்பும் வரவில்லை; அவரிடமிருந்து மட்டுமல்ல, குல்பர்க் சொசைட்டியில் வசிக்கும் யாரிடமிருந்தும் தாக்குதல் நடந்த சமயத்தில் மோடிக்கோ, மற்ற உயர் அதிகாரிகளுக்கோ எந்தவிதமான தொலைபேசி அழைப்பும் வரவில்லை; குல்பர்க் சொசைட்டி மீது இந்து மதவெறிக் கும்பல் தாக்குதல் நடத்த முயலுவது பற்றி அகமதாபாத் போலீசு ஆணையருக்குத் தொலைவரிச் செய்தி அனுப்பியதாக, அப்பொழுது உளவுத்துறையில் துணை ஆணையராகப் பணியாற்றி வந்த சஞ்சீவ் பட் அளித்திருக்கும் சாட்சியமும் இட்டுக்கட்டிய பொய்; அத்தாக்குதலைத் தடுத்து நிறுத்த அகமதாபாத் போலீசு ஆணையர் தன்னால் எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளது தூரம் நடவடிக்கைகள் எடுத்திருக்கிறார்” எனக் குறிப்பிட்டு மோடியையும் போலீசு அதிகாரிகளையும் விடுவித்துவிட்டது.

மோடி

இதுவொருபுறமிருக்க, “ஒரு பெரும் கூட்டம் குல்பர்க் சொசைட்டியைச் சுற்றிவளைத்திருந்த சமயத்தில்,  இஷான் ஜாஃப்ரி தனது துப்பாக்கியால் அக்கூட்டத்தை நோக்கிப் பலமுறை சுட்டார்.  இத்தாக்குதலில் 15 பேர் காயமடைந்தனர்; ஒருவர் உயிரிழந்தார்.  இஷான் ஜாப்ரியின் இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைதான் குல்பர்க் சொசைட்டி மீது தாக்குதல் நடத்தக் காரணமாகிவிட்டது” எனக் குறிப்பிட்டு, இஷான் ஜாஃப்ரி நடத்திய துப்பாக்கிச் சூடுக்கு எதிர்வினையாகத்தான் இப்படுகொலை நடந்ததாகக் காரணத்தைக் கற்பித்திருக்கிறது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  கடந்த பத்தாண்டுகளில் இப்படிபட்ட கற்பிதத்தை மோடியையும், சிறப்புப் புலனாய்வுக் குழுவையும் தவிர வேறுயாரும் முன்வைக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மார்ச் 1, 2002 அன்று ஜீ  டி.வி. என்ற தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மோடி, “இஷான் ஜாஃப்ரி துப்பாக்கியால் சுட்டதை வினை என்றும், அவர் கொல்லப்பட்டதை எதிர்வினை என்றும் கூறியதோடு, கோத்ராவில் ரயில் பெட்டி எரிந்து போன சம்பவத்தை, அங்கு வாழும் முசுலீம்களின் கிரிமினல்தனத்தின் வெளிப்பாடு;  (இப்பொழுது) அவர்கள் புரிந்துள்ள கொடூரமான குற்றத்திற்கு எதிர்வினை நடந்து கொண்டிருக்கிறது” என்று வருணித்தார்.  மோடியின் இந்த இந்து மதவெறி பிடித்த பேச்சுகள் அனைத்தும் இந்து மதவெறிக் கும்பலின் கொலைவெறியைத் தூண்டிவிட்டன எனக் குற்றஞ்சுமத்தியிருந்தார், ஜாகியா ஜாஃப்ரி.

‘‘நரேந்திர மோடி ஜீடி.வி.க்கு அளித்த பேட்டியின் மூல சி.டி.யைக் கேட்டிருந்தோம்.  ஆனால், அதனை அந்நிறுவனம் எங்களுக்கு அளிக்கவில்லை” என்ற அற்பத்தனமான நொண்டிச்சாக்கைக் கூறி, மோடி மீது வழக்குத் தொடர முடியாது எனக் கூறிவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.  மேலும், இச்சம்பவங்களை வினையாகவும் எதிர்வினையாகவும் குறிப்பிட்டு மோடி கூறியதை, அதன் பின்னணியோடு வைத்துப் பார்க்கும்பொழுது அவர் மீது வழக்குத் தொடருவதற்கான முகாந்திரம் எதுவுமில்லை எனக் குறிப்பிட்டு, மோடியை மட்டுமல்ல, இஷான் ஜாஃப்ரி கொலையை எதிர்வினையாகச் சித்தரித்த தன்னையும் நியாயப்படுத்திக் கொண்டுவிட்டது, சிறப்புப் புலனாய்வுக் குழு.

‘‘கோத்ரா சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு, எதிர்காலத்தில் இப்படியொரு குற்றச்செயல் எந்தவொரு இடத்திலும் நடக்காதிருக்கும்படி, கடுமையான தண்டனை அளிப்போம்” என மோடி பிப்.27 மற்றும் பிப்.28, 2002 ஆகிய இரு தினங்களிலும் திரும்ப திரும்பக் கூறினார்.  பத்திரிக்கைகள் வாயிலாகவும், சட்டசபையிலும், பொதுமக்களைச் சந்தித்த இடங்களிலும் மோடி இதனைத் திரும்பதிரும்பக் கூறினார்.  இது, சட்டம்  ஒழுங்கை காக்க வேண்டும்; குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனை தர வேண்டும் என்ற அவரது உறுதியைக் காட்டுகிறது.  இப்படிபட்ட எண்ணங்கொண்ட மோடி மீது இரு மதத்தினர் இடையே பகைமையைத் தூண்டிவிட்டார் எனக் குற்றஞ்சுமத்துவதற்கு அடிப்படை இருக்க முடியாது.  அது மட்டுமல்ல, அவரது இந்த உரை, “இந்துக்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக்கூடாதென மோடி அதிகாரிகளிடம் கூறினார்” என அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டையும் மறுதலிக்கிறது.  அப்படியே மோடி கூறியிருந்தாலும்கூட, அது நான்கு சுவருக்குள் கூறிய தனிப்பட்ட கருத்தாகும்.  அதற்காக மோடி மீது வழக்குப் பதிய முடியாது” என மோடிக்கு சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அறிக்கை வக்காலத்து வாங்கியிருக்கிறது.

எல்லாச் சதிச் செயல்களுமே நான்கு சுவருக்குள்தான் பேசித் தீர்மானிக்கப்படுகின்றன.  சிறப்புப் புலனாய்வுக் குழுவின் வாதப்படி பார்த்தால், கலவரத்தில் நேரடியாக இறங்காமல் சதிச் செயலைத் தீட்டும் முக்கியப் புள்ளிகள் யாரையும் தண்டிக்கவே முடியாது.  மேலும், கோத்ரா சம்பவத்துக்குக் காரணமெனக் குற்றஞ்சுமத்தப்பட்ட முசுலீம்களைத் தண்டிப்பது பற்றித்தான் மோடி நீட்டி முழங்கி வந்தாரே தவிர, அவர் மதவெறிப் படுகொலைகளை நடத்திய இந்து மதவெறிக் கும்பலுக்கு எதிராகச் சுண்டுவிரலைக்கூட அசைக்கவில்லை.  மாறாக, அக்கொலைவெறி பிடித்த கும்பலைக் காப்பாற்ற அரசு அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தினார், மோடி.

“முசுலீம்கள் குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுவதற்காக நாம் அகதி முகாம்களை நடத்து முடியாது” என்றவாறெல்லாம் மேடைதோறும் பேசி, முசுலீம்களை அவமானப்படுத்தி வந்தார்.  ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, “மோடி அமைதியை விரும்பினார்; குற்றவாளிகளைத் தண்டிக்க முயன்றார்; அகமதாபாத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்தார்; கலவரத்தால் பாதிக்கப்பட்ட முசுலீம்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தார்” என இட்டுக்கட்டிய பொய்களை எடுத்துவைத்து, இந்து மதவெறி கொலைகாரன் மோடியை மத நல்லிணக்கவாதி போலத் தனது இறுதி அறிக்கையில் சித்தரித்துள்ளது.

கோத்ரா சம்பவம் நடந்த நாளன்று (பிப்.27, 2002) இரவில், மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் உயர் அதிகாரிகளின் கூட்டம் நடந்ததைச் சிறப்புப் புலனாய்வுக் குழு மறுக்கவில்லை.  ஆனால், அக்கூட்டத்தில் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட் கலந்து கொண்டதற்கோ, அக்கூட்டத்தில், “இந்துக்கள் தமது கோபத்தை வெளிப்படுத்துவதைத் தடுக்கக் கூடாது” என மோடி பேசியதாகக் குற்றஞ்சுமத்தப்படுவதை நிரூபிப்பதற்கோ போதிய ஆதாரமில்லை என்பதுதான் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவு.

அக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிற அதிகாரிகள் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் இம்முடிவுக்கு வந்ததாகத் தனது இறுதி அறிக்கையில் கூறும் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது முதல் அறிக்கையில் அந்த அதிகாரிகளின் சாட்சியங்களை நம்பமுடியாது என முரணாகக் குறிப்பிட்டுள்ளது.  அவர்களின் சாட்சியங்களை நம்ப முடியாது எனும்பொழுது, அக்கூட்டம் தொடர்பான கூட்டக் குறிப்புகளை வாங்கிப் பெற்று, அதன் அடிப்படையில் மோடி மீதான குற்றச்சாட்டு பற்றி சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவு செய்திருக்க வேண்டும்.  ஆனால், விசாரணைக் குழுவோ அக்கூட்டக் குறிப்புகளைக் கேட்டுப் பெற்று விசாரணை நடத்தாமல், நம்பத்தகாத சாட்சியங்களின் வாக்குமூலங்களை ஏற்று மோடியைக் காப்பாற்றியிருக்கிறது.

மோடி

பிப்.27, 2002 கூட்டம் மோடியும் அதில் கலந்துகொண்ட அதிகாரிகளும் ஒருவருக்கொருவர் குசலம் விசாரித்துக் கொள்ளுவதற்காக நடத்தப்பட்டிருக்க முடியாது.  குஜராத் மாநிலமெங்கும் முசுலீம்களுக்கு எதிரான கலவரம் எந்நேரமும் வெடிக்கலாம் என்ற நிலையில் நடந்துள்ள அந்த முக்கியமான கூட்டம் எந்தவிதமான எழுத்துபூர்வமான பதிவின்றி நடந்திருக்க முடியுமென்றால், அல்லது அந்தப் பதிவுகள் வேண்டுமென்றே அழிக்கப்பட்டிருக்கக்கூடும் என்றால், சிறப்புப் புலனாய்வுக் குழு மோடியின் கிரிமினல் உள்நோக்கத்தைச் சந்தேகித்திருக்க வேண்டும்.  ஆனால், சிறப்புப் புலனாய்வுக் குழுவோ, அக்கூட்டம் நடந்தது தொடர்பாக அரசிடம் ஆவணங்கள் இருக்கிறதா, இல்லையா என்பது பற்றி ஒரு கேள்வியைக்கூட எழுப்பவில்லை.  அதே சமயம், அச்சதிக்கூட்டம் பற்றி சாட்சியம் அளித்துள்ள சஞ்சீவ் பட்டை, மோடி அரசு பல முக்கியமான தடயங்களை ஒன்றன்பின் ஒன்றாக அழித்துவருவதை அம்பலப்படுத்தி வரும் சஞ்சீவ் பட்டை, கறைபடிந்தவராகக் குற்றம் சாட்டுகிறது.  அவரது கடந்தகால அதிகாரமுறைகேடுகளை இந்தச் சந்தர்ப்பத்தில் அம்பலப்படுத்தி, அவரை நேர்மையற்ற சாட்சியம் என முத்திரை குத்துகிறது.  மதவெறிப் படுகொலைக்கு ஆதரவாக எவ்வித எழுத்துபூர்வமான சாட்சியமின்றிப் பல வாய்மொழி உத்தரவுகளைப் போட்ட மோடி அரசை அம்பலப்படுத்திய முன்னாள் போலீசு அதிகாரி சிறீகுமாரின் சாட்சியத்தையும் உள்நோக்கம் கொண்டதென ஒதுக்கித் தள்ளுகிறது.

‘‘சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவரும் முன்னாள் சி.பி.ஐ. இயக்குநருமான ராகவன் சட்டப்படி நடக்கக்கூடிய நேர்மையான அதிகாரி, எவ்விதமான அரசியல் சார்பும் இல்லாதவர், மதச்சார்பின்மையைக் கடைப்பிடிக்கக்கூடியவர்.  எனவே, அப்படிப்பட்டவரின் தலைமையில் நடக்கும் விசாரணையில் நீதி நிலைநாட்டப்படும்” என ஒளிவட்டம் போட்டுக் காட்டப்பட்டது.  ஆனால், ராகவன் இந்த ஒளிவட்டத்தை மோடியைக் காப்பாற்றுவதற்குப் பயன்படுத்திக் கொண்டார் என்பதே உண்மை.  தனது கீழ் அதிகாரியான ஏ.கே.மல்ஹோத்ரா நடத்திய விசாரணை அறிக்கைகளில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்ததற்கு மேல், அவர் இந்த விசாரணையில் பாரதூரமான அக்கறை எதுவும் செலுத்தவில்லை.  சோ,  இந்து என்.ராம் ஆகியோரின் ஆலோசனையைப் பெற்றுத்தான் ராகவன் இறுதி அறிக்கையைத் தயாரித்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டையும் நிரூபிப்பதாகவே சிறப்புப் புலனாய்வுக் குழுவின் முடிவுகள் அமைந்துள்ளன.

இம்முடிவுகள் மோடியை பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து மட்டும் விடுவித்துவிடவில்லை; அவரின் பிரதமர் கனவுகளுக்கு உந்து பலகையாகவும் பயன்பட்டு வருகிறது.  மேலும், அரசு இயந்திரம் எந்தளவிற்கு இந்துமயமாகியிருக்கிறது என்பதையும்; இந்த அரசு இயந்திரத்தையும் இன்றுள்ள சட்டங்களையும் கொண்டு மோடி, அத்வானி, பால் தாக்கரே உள்ளிட்ட இந்து மதவெறிக் கும்பலின் தளகர்த்தர்களைத் தண்டித்துவிட முடியாது என்பதையும் மீண்டும் எடுத்துக்காட்டுவதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் விசாரணையும் அதன் முடிவுகளும் அமைந்துள்ளன.

_______________________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் – 2012

________________________________________________

    • ஹரிகுமார்,

      //what abt the 57 people who died in the train?//

      வழக்கு நடத்தப்பட்டு குற்றம் சாட்டப்பட்டவர்களில் 36 பேரை குற்றவாளிகள் என்றும் 63 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
      http://articles.timesofindia.indiatimes.com/2011-02-22/india/28624491_1_maulvi-umarji-godhra-train-maulana-umarji

      ஆனால், அதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்களின் கொலைக்கும் பயங்கரவாதத்துக்கும் சதி திட்டம் தீட்டிய மோடி கும்பலின் மீது வழக்கு தொடர்வது கூட நடக்கவில்லை. அதைத்தான் இந்த கட்டுரை சுட்டிக் காட்டுகிறது.

      • Where is the proof that Modi orchestrated the riots?

        Supreme court has appointed an SIT to do this,i dont know how many of you here seem to be so convinced that Modi did it.No evidence anywhere suggests that,media shouting doesn’t alone declare a case.

        • ஹரிகுமார்,

          ‘ஹிட்லர் யூதர்களை கொன்று குவித்ததற்கு ஆதாரம் என்ன?’ என்றுதான் ஹிட்லரும் அவரது நாஜி கட்சியும் ஜெர்மனியில் ஆட்சியில் இருந்தது வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள் ‘நடுநிலையாளர்கள்’.

          உச்ச நீதி மன்றம், எதிர்க்கட்சிகள், மத்திய அரசு இவர்கள் தலையிட விரும்பாத வரம்புக்கு வெளியே, குஜராத்தில் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருப்பது வரை, மோடியின் குற்றங்களுக்கான ஆதாரம் எந்த வடிவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

          ‘ஊடகங்கள் சொல்வது எல்லாம் பொய், தீஸ்தா சால்வத் பொய்யர், மோடி சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் ஒரு அகிம்சா வழி இயக்கம், இந்துத்துவா வாதிகள் அமைதி பிரியர்கள்’ – என்று நாம் நம்ப விரும்புவதை மட்டும் நம்பினால் மட்டுமே மோடி குற்றமற்றவர் என்று நினைக்க முடியும்.

          • All that is not important, Supreme court keeps a SIT to investigate things,even if there is an inch of incriminating evidence against Modi,he ll get prosecuted.So far there is none,Modi has enough enemies inside and outside the party.

            So,nobody is stupid is assume whatever they want.That way i can assume anybody is guilty. Kamaraj should be guilty for Muthuramalinga thevar’s death, why people like Late Pazhani Baba,Al Umma Madani etc were not punished even after brazenly talking about killing people and disrupting communal balance.

            Try to accept justice,world doesn’t move as u want.

            • //All that is not important, Supreme court keeps a SIT to investigate things,even if there is an inch of incriminating evidence against Modi,he ll get prosecuted.So far there is none,Modi has enough enemies inside and outside the party.//

              ஜாலியன் வாலாபாக் படுகொலையை நடத்திய ஜெனரல் டயர் இங்கிலாந்தில் அவரது ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்டனர். அதை விசாரித்த விசாரணை குழு அரசியல் காரணங்களால் அவர் மீது வழக்கு தொடர முடியாது என்று முடிவு செய்தது.

              http://en.wikipedia.org/wiki/Jallianwala_Bagh_massacre

              டயர் இறந்து, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சரிவுக்குப் பிறகு வரலாறு வேறு விபரங்களை சொல்கிறது. இந்திய மக்களுக்கு உண்மை தெரியும்.

              அதே போல இந்துத்துவா சக்திகள் வீழ்த்தப்பட்ட பிறகு உண்மை நிறுவப்பட்டு வரலாற்றில் மோடி ஒரு கொலைகாரர் என்பது பதிவாகும்.

              //So,nobody is stupid is assume whatever they want.That way i can assume anybody is guilty. Kamaraj should be guilty for Muthuramalinga thevar’s death, why people like Late Pazhani Baba,Al Umma Madani etc were not punished even after brazenly talking about killing people and disrupting communal balance.//

              மோடியை பற்றி பேசும் போது அதை மட்டும் பேசலாம். இல்லை என்றால் விவாதம் திசை மாறி எங்கெங்கோ போகும். காமராசர் மீதான குற்றச்சாட்டு, பழனி பாபா/மதானி விஷயங்களை தனியாக பேசலாம்.

              //Try to accept justice,world doesn’t move as u want.//

              உண்மை, ஆளும் சக்திகள் நீதி என்று ஒன்றை திணிக்க முயற்சித்தாலும் உண்மையை நீண்ட காலம் மூடி வைக்க முடியாது.

              • Modi is not guilty,you may think he could have done more.But thats all there is to it.

                General Dyer is irrelevant here,he is obviously guilty,he did it publically.There is nothing incriminating against Modi.

  1. உங்களைப் பொருத்தவரை முஸ்லீம் அடிப்படைவாதத்துக்கு இன்னொரு பெயர் தான் மத நல்லிணக்கம் என்றால் மோடி மத நல்லிணக்கவாதி அல்ல தான். அதற்காக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் ?

    எந்தக் கோர்ட்டில் கேஸ் போடுவீர்கள் ? போட்டுக்கொள்ளுங்கள்! உங்களால் என்ன #%ங்க முடியும் என்று பார்க்கிறேன்.

    உங்களுக்கெல்லாம் கோவையில் குண்டு போட்டு அப்பவிகளைப் படுகொலை செய்த மதானி தான் மத நல்லிணக்கவாதியாகத் தெரிவார்…உங்களைச் சொல்லிக் குற்றமில்லை

    டீஸ்டா செடல்வாத் அம்மணிக்கு கோர்டி வெச்ச ஆப்புகள் போதாது…இன்னும் வேண்டும் போல் உள்ளது. அம்மணி தான் ஒரு வெளிநாட்டுக் கைக்கூலி என்பதை கோர்டில் திட்டவட்டமாக நிரூபிக்காமல் விடமாட்டார் போலிருக்கிறது. எழவு டாட் காமின் தராதரம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்றால், அத்தகய கேவலமான ஜந்து டீஸ்டாவை சப்போர்டு செய்யும் லெவலில் தான், என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறீர்கள்.

    • ஆம் நீங்கள் சொல்வது சரி. இந்து என்று சொன்னாலே இந்துத்வா பாசிசம், பார்பனியம் என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் முஸ்லிம் , கிறிஸ்தவர் என்றால் மட்டும் மதசார்பின்மையாம். இது என்ன நியாயம்.

      • கரிகாலன்,
        மத அடிப்படைவாதம் என்பது மக்களுக்கு எதிரானது.அதனால் ஒரு நன்மையும் நடக்கப்போவதில்லை. எந்த மதத்தின் அடிப்படைவாதாமும் எதிர்க்கப்பட வேண்டியதே, அதை வினவு செய்துகொண்டு தான் இருக்கிறது.

        ஆனால் ஒவ்வொரு மதவெறியர்களும் இங்கு பின்னுட்டத்தில் ஒரே மாதிரியாக சொல்லி வைத்தார் போல் தான் விவாதிக்கிறார்கள். இந்து மத வெறியர்கள் இசுலாமிய அடிப்படை வாதத்தை கை காட்டி நழுவுவார்கள். இசுலாமியர்களோ இந்து மத வெறியர்களை கை காட்டி நழுவுவார்கள். கிறிஸ்துவர்களை பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை.

        பல ஆயிரம் பேரை கொல்ல தலைமை தாங்கிய மோடி மதநல்லிணக்கவாதியா? இதற்கு பதில் சொன்னால் தேவலை. பின்லேடன். ஜிகாத், என்று வடை சுற்ற வேண்டாம்.

        உழைக்கும் மக்களை திட்டமிட்டு பிரிக்கும் இன,மொழி, மத அரசியல்களை எதிர்க்கும் அதே வேளையில் தவறு செய்கிறவர்களை கண்டிப்பது தான் சரி. அவர் எந்த மதமாக இருந்தால் என்ன எந்த இனமாக இருந்தால் என்ன. வினவை தொடர்ந்து வாசிக்கவும்.

        • இரு தரப்பு மீதும் தவறு உள்ளது. ஒரு சாரார் கோத்ரா ரயிலை எரித்தது தவறு என்றால் அதன் எதிர் விளைவாக மறுசாரார் கலவரத்தை தூண்டியதும் தவறு அதே போல் அவசர கால நடவடிக்கை மூலம் தடுக்காததும் தவறுதான். எப்படி ஒரு சிறிய தீப்பொறி பெரிய காட்டுத்தீயாக மாறுகிறது அதோ போல்தான் இதுவும். இதில் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. ஒருவர் மீது மட்டும் குற்றம் சுமத்தினால் அது எப்படி நியாயமாகும்?

          /*மத அடிப்படைவாதம் என்பது மக்களுக்கு எதிரானது.அதனால் ஒரு நன்மையும் நடக்கப்போவதில்லை. எந்த மதத்தின் அடிப்படைவாதாமும் எதிர்க்கப்பட வேண்டியதே, அதை வினவு செய்துகொண்டு தான் இருக்கிறது.
          உழைக்கும் மக்களை திட்டமிட்டு பிரிக்கும் இன,மொழி, மத அரசியல்களை எதிர்க்கும் அதே வேளையில் தவறு செய்கிறவர்களை கண்டிப்பது தான் சரி. அவர் எந்த மதமாக இருந்தால் என்ன எந்த இனமாக இருந்தால் என்ன.*/

          அப்படி தெரியவில்லையே வினவு திட்டமிட்டு ஒரு சாராரை மட்டும் குற்றம் குறை சொல்வது போல் உள்ளது. என்ன மதமாக இருந்தாலும் என்ன இனமாக இருந்தாலும் தவறென்றால் கண்டிபீர்கள் என்றால் பாகிஸ்தானில் அப்பாவி இந்துக்களை கட்டாய மத மாற்றம் செய்து திருமணம் செய்து வைகிறார்கள், இந்து கோயில்கள் இடிக்கபடுகின்றன இந்து வர்த்தகர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யபடுகின்றனர். அசாமில் போடோ இன மக்கள் மீது வங்கதேச சட்டவிரோத ஊடுருவல் கும்பலின் இனவெறி தாக்குதல் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவற்றையெல்லாம் எதுவும் கேட்பதில்லையே ஏன்? காவி தீவிரவாதம் (அனைத்து இந்துக்களும் அல்ல) பற்றி பேசும் நீங்கள் முஸ்லிம் தீவிரவாதம்(அனைத்து முஸ்லிம்களும் அல்ல) பற்றி பேசாதது ஏன்?

          • Boss, Gujarat is a place of historic bad blood between Hindus & Muslims.Thats why the partition happened. This is why India should have been a Hindu Rashtra.Atleast the North should have been clean off muslims,otherwise centuries of anger will erupt.You think those policemen who are supposed to stop the riots dont have the same feeling? They have it as much as anyone else.Only thing i dont like is killing women and children.One should never do that.

            • ஹரிகுமார்,

              உங்களது கூற்றை நான் ஆமோதிக்கிறேன். ஆமாம். இவர்களை இந்தியாவிலிருந்து இல்லை இந்த உலகிலிருந்தே துடைத்தெறிய வேண்டும். அதற்கு மோடி வழியே உன்னதமான வழி என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்? மோடி வழி இயக்கம் தமிழ்நாட்டில் இருக்கிறதா?

              • எங்கே அம்பி,
                ஒரு பதிவு விடாமல் வந்து பார்ப்பனியத்துக்கு முட்டு கொடுக்கும் அம்பி அவர்களே, முன்பு திவா பார்ப்பனர்களை கொல்ல வேண்டும் என்று அல்ல தமிழகத்தை விட்டு விரட்டியடிக்கனும்னு எழுதுனதுக்கே பொங்கி எழுந்த நியாயஸ்தரே,

                இதோ இந்து மதவெறி ஓநாய்கள் கொலை வெறியோடு முஸ்லிம்களை உலகத்திலிருந்தே தொடச்சு எறியணும்,கொறஞ்சது வட இந்தியாவிளுருந்து தொரத்தி அடிக்கனும்னு ஊளையிடுவது குறித்து கள்ள மவுனம் சாதிக்கலாமா. இதுதான் உங்கள் நேர்மையா.

                • அன்பு,

                  அம்பி பாரத மாதாக்கு புடவை கட்டி பஜனை பாடிக்கிட்டு இருக்காரு. பஜனை முடிஞ்சதும் வந்துருவாரு.

                  இங்கு எத்தனை சாமிங்கதாய்யா இருக்கு. இதுவரைக்கும் இந்தியாவுல இருக்குற கல்லு, மண்ணு, மரம், பட்டை, கொட்டை, காத்து, கருப்பு, ஆகிய பண்டங்களைத்தான் சாமின்னு சொல்லிக்கிட்டு இருந்தாய்ங்க. இப்போ இந்தியாவையே சாமி லிஸ்டுல சேர்த்துட்டாய்ங்களா? வெளங்கிடும் நாடு.

                  • யப்பா ஹரிகுமாரா,

                    நீங்க யூ.எஸ்., யூ.கே.ன்னு போயிடுவீங்க, அயோத்தியா மண்டபத்துல பூணூல் விக்கற பஞ்சைப் பார்ப்பான் எங்கே போவான்..?! திராவிட வீர சூரர்களால் வெட்டிவீழ்த்தப்பட்ட பார்ப்பன பாசிசத் தீவிரவாதியாகச் செத்தாலும் சாவானே தவிர போவதற்கு வேற போக்கிடம் இல்லாத அவனைப் போன்ற பஞ்சைகள் தான் பார்ப்பனர்களில் பாதிக்கு மேல் இங்கே…

                    • I know that,but is there a choice?

                      I pity them,but earnestly i feel this is way out for their own good.
                      If the the whole public sentiment is grossly against your existence and nobody wants to even listen to you.

                      what can they do? If there be some kinda unity among people of their caste and they help each other,something might happen.

                    • \\ திராவிட வீர சூரர்களால் வெட்டிவீழ்த்தப்பட்ட பார்ப்பன பாசிசத் தீவிரவாதியாகச் செத்தாலும் சாவானே //

                      அம்பி, ரொம்பவே சீன் போட வேண்டாம்.இத்தனை ஆண்டுகால தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்பு போராட்டத்தில் ஒரு பார்ப்பனர் மீது கூட கொலைவெறி தாக்குதல் நடந்ததில்லை.இட்டுக்கட்டுதலின் மறுபெயர்தான் பார்ப்பனியமோ.

                      அப்புறம் போக்கிடம் இல்லாம இங்கயே சுத்தி சுத்தி வர்றீங்களோ.வரலாறு நெடுக நீங்கள் நாடோடி கூட்டம்தான். நிலப்பிரபுத்துவ காலத்துல பெரும்பாலான ஊர்கள்ல அக்கிரகாரம் கட்டிக்கிட்டு கிராமங்கள்ல குடி இருந்தீங்க.அப்புறம் பிரிட்டிஷ்காரனுக்கு தொண்டூழியம் பாக்குறதுக்கு ”கச்சேரி” இருக்கிற சின்ன நகரங்களுக்கு டேராவை மாத்தி போட்டீங்க.அவன் போன பிறகு IIT,IIM .BHEL ,IAS ,காலேஜ வாத்தியார் பேங்க வேலை, இப்படி பெரிய நகரங்களுக்கு ஓடி போனீங்க.இன்னைக்கு தேதில கிராமங்கள்ல கிட்டத்தட்ட அக்கிரகாரமே கிடையாதுன்னு சொல்லலாம்.சின்ன நகரங்கள்ளையும் அக்கிரகாரத்துல பார்ப்பனர்களை விட பிற சாதிக்காரர்கள்தான் குடி இருக்காங்க.ஏன்னா உங்க ஆளுகளுக்கு சொந்த ஊர் சொந்த மண் என்ற பாசமெல்லாம் கிடையாது.அடுத்து பெரிய நகரங்களை விட்டு மேல்நாடுகளுக்கு டேராவ மாத்திக்கிட்டு இருக்கீங்க.40 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சாவியின் ”வாஷிங்கடனில் திருமணம்” நடக்கும் அளவுக்கு உங்கள் ஓட்டம் இருந்து கொண்டிருக்கிறது.

                    • அன்பு,

                      சரித்திர ஆராய்சின்னா இப்படித்தான் இருக்கணும்… இதையும் சேர்த்துச் சொன்னா சீனு சூப்பராயிருக்கும்.. :

                      நிலப்பிரபுத்துவ காலத்தில் பார்ப்பானுங்க கோவணம் கட்டிகிட்டு இருந்தானுங்க.. பிரிட்டிஷ்காரன் காலத்தில பட்டாபட்டி டவுசர் போட ஆரம்பிச்சுட்டானுங்க.. இப்ப ஜட்டி போட்டுக்கிட்டு அலையுறானுங்க.. அசிங்கம் பிடிச்ச பச்சோந்திப் பயலுங்க..

                      அப்பறம், நீங்க எத்தனை தலைமுறையா அதே ஊரில் இருக்கீங்க, அன்பு…

                  • உங்கள் குடும்பத்துப் பெண் விதவையானால் பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணும் விதவையாக வேண்டும் என்று விரும்புவீர்கள் போலிருக்கிறதே?

                • அன்பு,

                  மோடி குஜராத்தில் தோல்வியடைந்திருந்தால் இத்தனை ஆதரவு இருக்குமா என்பது சந்தேகம்தான்..

                  எப்போதோ ’பரமேசு’ நம்ம ’மனிதனை’ கலாய்க்கச் சொன்னதுதான் நினைவுக்கு வந்து தொலைக்கிறது..

                  “மோடி நீ கேடியா என்னவோ தெரியாது ஆனா உன் தாடி எனக்குப் பிடிச்சிருக்கு” என்பது போல அவரைக் கொண்டாடுகிறார்கள் போல..

                  http://www.dinamalar.com/News_Detail.asp?Id=521073

                  மோடியிசம், இஸ்லாமிசம் இல்லாத இந்து-முஸ்லீம் சமுதாயம் காலத்தின் கட்டாயம்….

                  • He provides great governance, his state is performing extremely well in all indicators and the law is implemented very well,thats most important in India and thats why he wins again and again.

                    • What great performance in his state he has achieved.. Simply do not see the GDP and talk rubbish… GDP growth can never be compared with the development of the people directly… If High GDP = Better Living of people is correct… INDIA’s GDP is higher than AUSTRALIA’s GDP so u are saying INDIANS are leading a better life than australians ???

                      To measure the living status of people there is another method HDI – Human development Index. In this list INDIA is NOT even in the first 50… Also when HDI was calculated for INDIAN states GUJARAT came ven below TAMILNADU…

                      http://en.wikipedia.org/wiki/List_of_Indian_states_and_territories_by_Human_Development_Index

                  • நான் என்ன கேட்டிருக்கேன்.நீங்க என்ன சொல்லுறீங்க.மீண்டும் ஒரு முறை படிச்சு பாத்துட்டு சொல்லுங்க இது உளறலா,சாமர்த்தியமா.

                    • நான் சொல்றது என்னன்னு சுருக்கமாச் சொன்னா, இதான் :

                      மோடியிசம், இஸ்லாமிசம் இல்லாத இந்து-முஸ்லீம் சமுதாயம் காலத்தின் கட்டாயம்….

                      எத்தனை மார்க் போடமுடியுமோ அதைப் போட்டுக்கங்க, சார்..

                      சிலபஸில இல்லாத ஒண்ணையும் சொல்லட்டுமா..?!

                      இந்துமதம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கு கொம்பு சீவி விடும் வேலையை நிறுத்துங்கள்.. உங்களுக்கு வெறுப்பேத்த இந்த மாதிரி கமெண்ட்டுகளைப் போடறவங்களை கண்டிக்க என்னைக் கூப்பிடாதீங்க..

                    • நேர்மையற்ற முறையில் வாதம் பண்றீங்க அம்பி,

                      \\இந்துமதம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக, இந்துக்களுக்கு எதிராக முஸ்லீம்களுக்கு கொம்பு சீவி விடும் வேலையை நிறுத்துங்கள்.//

                      எங்கே அறிவு நாணயம் இருந்தால் இந்துக்களுக்கு எதிராக முஸ்லிம்களுக்கு வெறியூட்டும் வகையில் நான் எழுதியிருப்பதாக எடுத்தக் காட்டுங்கள் பார்க்கலாம்.

                      \\உங்களுக்கு வெறுப்பேத்த இந்த மாதிரி கமெண்ட்டுகளைப் போடறவங்களை கண்டிக்க என்னைக் கூப்பிடாதீங்க..//

                      இங்கதான் உங்க நேர்மை பல்லிளிக்குது.பார்ப்பனர்களை வெளியேற்றனும்னு கமெண்டு வந்தா பாஞ்சு வர்ற அம்பிக்கு முஸ்லிம்களை வெளியேற்றனும்,கொல்லணும்னு கமெண்டு வந்தா கண்டிக்கிறேன்னு ஒரு வார்த்தை சொல்ல மனசு வர மாட்டேங்குது. இதை சுட்டிக்காட்டினால் கோவம் வருதோ.உங்களை பொருத்தமட்டில் பார்ப்பனர் மட்டும்தான் மனுசங்களா.

                    • என்னோட நேர்மை ஒரு பக்கம் கிடக்கட்டும், அன்பு.. உங்க நேர்மை எப்படி..?! பார்ப்பானையும், இந்துக்களையும் விமர்சிக்கவும், முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும் பாய்ந்து வருவது போல், இஸ்லாத்தையும், முஸ்லீம்களையும் விமர்சிக்கும் வினவு கட்டுரைகளில் உங்களுடைய விமர்சனப் பின்னூட்டம் எதையும் பார்த்த நினவில்லையே.. திப்புவும், சுவனப்பிரியனும் செய்வது போல், வெளிப்படையாக இஸ்லாமியப் பெயருடன் வந்து இந்து மதத்தை விமரிசித்து, இஸ்லாத்துக்கு ஆதரவாகப் பின்னூட்டமிடுவதும் ஒரு வகையில் நேர்மைதான்.. அந்த நேர்மை இங்கே எத்தனை பேர்களுக்கு இருக்கிறது..?!

                      மேலே கொலவெறி பின்னூட்டம் இட்ட சுருளி போன்றவர்களைக் கண்டிக்க இஸ்லாமியப் போர்வாளான நீங்க இருக்கீக, திப்பு இருக்காக, ’அல்லாதான் கடவுள் நான் கடவுள் இல்லை’ இருக்காக, தமிழ் இருக்காக, பரமேசு இருக்காக, சந்தானம் இருக்காக, மற்றும் உள்ள உறவினர்களெல்லாம் இருக்காக.. வாப்பா அம்பி.. என்று என்னையும் ஏனய்யா கூப்பிடுகிறீர்கள்..?! இந்த சுருளி என்பவர் யாரோ, என்னமோ.. 150 கோடி முஸ்லீம்களை நாளைக்கு முடிக்கிறேன், இன்னைக்கு 3.5 கோடி பாப்பானுங்களை முடிக்கிறேன் என்று கொலவெறியை பார்ப்பனுங்க பக்கம் திருப்பிட்டார்னா என்ன பண்றது, அன்பு.. எதுக்கு வம்பு.. உங்களுக்கு ஏனிந்த குசும்பு..?!

                    • அம்பி,

                      ஏன் பயப்படுகிறீர்கள்? நமக்கு ஏன் பயம்? நட்நிலை என்பதெல்லாம் சும்மா உவ்வே. உங்களது பின்னூட்டங்களிலிருந்து நீங்கள் ஒரு சனநாயகவாதியன்று என்றுதான் புரிந்து கொள்ள முடிகிறது. அதை நான் பாராட்டுகிறேன். உங்களது பிராமண ஆதரவையும் மெச்சுகிறேன். ஆனால் ஏன் நீங்கள் அதனை பூசி மெழுகி சொல்கிறீர்கள் என்றுதான் புரியவில்லை? நான் நேரடியாகவே சொல்கிறேன். சரி என்கிறேன். தொழிலாளி தனது நலனுக்காக கொலை செய்யலாம் என்றால் ஒரு பிராமின் செய்யக்கூடாதா? ஹிட்லர் தனது இனத்திற்காக படுகொலை செய்தான். இதுவரையில் வந்த அத்துனை அமெரிக்க அதிபர்களும் தங்களது நலனுக்காக உலக மக்களில் பல லட்சம் மக்களை கொலை செய்தார்கள். செய்துகொண்டும் இருக்கிறார்கள். ஏன் மோடி மட்டும் செயக்கூடாதா? முஸ்லீம்களை தீர்த்துகட்டினால்தான் பிராமின் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்றால் ஏன் மோடி அவ்வாறு செய்யக்கூடாது.? இந்த சமூகத்தில் சனநாயகம் என்பதெல்லாம் ஆளுபவனின், ஆளும் இனத்தின் நலனோடு ஒத்துப்போனால்தான் அது சனநாயகம். உண்மையில் capitalism ஒரு பயங்கரவாதம்தான். பயங்கரவாதத்தினாலன்றி இங்கு ஆட்சியை பிடிக்க முடியாது

                    • ஐயா சுருளி,

                      நீங்க ஹரிகுமாருக்கு மேலே இருக்கீங்களே.. உங்க நாஜித்தனமான எண்ணங்கள் உங்களுக்கே குழியைப் பறிச்சுடும்.. தயவுசெய்து மதவெறியை விட்டொழிங்க..

                    • \\என்னோட நேர்மை ஒரு பக்கம் கிடக்கட்டும், அன்பு.. உங்க நேர்மை எப்படி..?! ……….. முஸ்லீம்களையும் விமர்சிக்கும் வினவு கட்டுரைகளில் உங்களுடைய விமர்சனப் பின்னூட்டம் எதையும் பார்த்த நினவில்லையே.//

                      நேர்மை இன்றி விவாதம் செய்கிறீர்கள் என்ற குற்றசாட்டை மறுக்க முடியவில்லை.வழக்கம் போல் சாமர்த்தியம் காட்டுறதா நெனைச்சுகிட்டு ஜெயலலிதா கருணாநிதி பாணியில் நீ மட்டும் யோக்கியமா என்ற லாவணி கச்சேரியில் இறங்குறீங்க.சரி சவாலை ஏத்துக்கிறேன்.என்னோட நேர்மையை பரிசீலிக்க முதலில் என்னோட விவாத முறையை பார்க்க வேண்டும்.நானாக முன்வந்து எந்த பதிவிலும் பார்ப்பனியத்தை விமரிசிப்பதில்லை. சாதி,மதவெறியோடு உங்க ஆளுக சூத்திர,பஞ்சம சாதியினர் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதும்போது அவற்றுக்கு பதில் அளிப்பது என்ற வகையில்தான் எனது பின்னூட்டங்கள் இருக்கும்.வினவின் விவாதங்களில் அப்படி இஸ்லாமியர்கள் மதவெறியோடு இந்துமத மக்களுக்கு எதிராக எழுதுவதில்லை.இதை உங்களுக்கு ஒரு சவாலாகவே சொல்கிறேன்.முடிந்தால் அப்படி ஒரு இஸ்லாமியரின் பின்னூட்டத்தை எடுத்துக்காட்டி ”இதை ஏன் நீ கண்டிக்கவில்லை” என கேளுங்கள் பார்க்கலாம்..அந்த வகையில் அவர்கள் மெச்சத்தகுந்த நாகரீகத்துடன் விவாதிக்கிறார்கள்.நீங்களே கவனித்து பார்க்கலாம்.இஸ்லாத்தின் மீதான விமரிசனங்களுக்கு பதிலளிப்பதோடு அவர்கள் நிறுத்திக் கொள்கிறார்கள்.பதில் சொல்றேன்ற பேர்ல தரம் தாழ்ந்து பிற மதங்களை விமர்சிப்பதில்லை.பிற மத மக்களுக்கு எதிராக வெறி கொண்டு பேசுவதில்லை.இந்த நிலமையில நான் அவர்களை கண்டித்து விவாதம் செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை.

                      \\ திப்புவும், சுவனப்பிரியனும் செய்வது போல், வெளிப்படையாக இஸ்லாமியப் பெயருடன் வந்து இந்து மதத்தை விமரிசித்து, இஸ்லாத்துக்கு ஆதரவாகப் பின்னூட்டமிடுவதும் ஒரு வகையில் நேர்மைதான்.. அந்த நேர்மை இங்கே எத்தனை பேர்களுக்கு இருக்கிறது..?!//

                      உங்க நரித்தந்திரத்த விடவே மாட்டீங்களா.அவர்கள் இந்து மதவெறி அமைப்புகளை விமர்சித்துதான் எழுதுகிறார்கள்.இந்து மதத்தை விமர்சிப்பதாக காட்டுங்கள் பார்க்கலாம்.அதே போல் இஸ்லாமிய மதத்தை ஆதரித்து நான் எதுவும் எழுதியதில்லை.அது என் வேலையுமல்ல.ஒரு மதத்தை ஆதரிப்பது எனபது வேறு.அந்த மதத்தை பின்பற்றும் மக்களுக்கு எதிரான அநீதிகளை கண்டிப்பது எனபது வேறு.இதை கூடவா உங்களுக்கு சொல்லித்தரவேண்டும்.

                      \\மேலே கொலவெறி பின்னூட்டம் இட்ட சுருளி போன்றவர்களைக் கண்டிக்க இஸ்லாமியப் போர்வாளான நீங்க …………என்னையும் ஏனய்யா கூப்பிடுகிறீர்கள்..?!//

                      புரியுது அம்பி,பார்ப்பனியம் இந்து மதவெறியாட்டத்தை முஸ்லிம் கிறித்துவ மக்கள் மீது ஏவி கொன்று ஒழிப்பதற்கு புரட்சிகர மற்றும் ஜனநாயக சக்திகள் கருத்து தளத்திலும் செயல் தளத்திலும் பெரும் தடையாக இருக்கிறார்கள் என்ற ஆத்திரமே இங்கு வெளிப்படுது.என்ன செய்வது அம்பி,நீங்க விரும்பிய திசையில் எல்லாம் வரலாற்றின் சக்கரத்தை சுழன்றோட செய்ய முடியாது.அதை தீர்மானிப்பவர்கள் உழைக்கும் மக்களே.

                    • அம்பி,

                      ராஜபக்சேவுக்காக இங்கு யாருமில்லை என்பதற்காக நீங்கள் ராஜபக்சேவை ஆதரிப்பீர்களோ!

                    • அன்பு,

                      சவாலெல்லாம் விடாதீங்க.. முக்காட்டை விலக்கிப் பார்த்தால்தானே அம்மாசியா, அப்துல் காதாரான்னு தெரியும்.. அம்மாசி கொண்டையும், அப்துல் காதர் தாடியும் கூட சில சமயம் காட்டிக் கொடுத்துடும்.. வெய்ட் பண்ணுங்க..

                      அதுவரை என்னை நேர்மையில்லாதவன் என்றே சும்மாக்காச்சி நெனச்சுக்குங்க.. ஓ.கே.?

                    • // ராஜபக்சேவுக்காக இங்கு யாருமில்லை என்பதற்காக நீங்கள் ராஜபக்சேவை ஆதரிப்பீர்களோ! //

                      ராஜபக்சே இங்கே ஆதரவற்ற அனாதையோ இல்லை அந்தக் கேடி திருப்பதி பக்தகோடிகளோட சேர்ந்து கொண்டு கும்மியடிச்சிக்கிட்டுருந்தாலோ எனக்கென்ன, சந்தானம்..! எதிர்க்க வேண்டியது எம் கடமை…

                    • \\சவாலெல்லாம் விடாதீங்க.. .. ……வெய்ட் பண்ணுங்க.//

                      உத்தரவு அரசே.அப்படியே ஆகட்டும்.தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம்.

              • பார்ப்பனிய இந்து மதவெறி ஓநாய்களே,

                முஸ்லிம் மக்கள் யார்.அவர்கள் என்ன அரபு நாட்டிலிருந்து பஞ்சம் பொழைக்க வந்தவர்களா.அவர்களில் ஆகப் பெரும்பான்மையானோர் இந்து மதத்திலிருந்து உங்கள் சனாதன தர்மத்தின் முடை நாற்றத்தையும் கொடுங்கோன்மையையும் சகிக்க முடியாமல் வெளியேறிய சூத்திர பஞ்சம சாதியினர்.இந்த நாட்டின் பூர்வ குடிகள்.இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள். எமது சகோதரர்கள்.அவர்களை வெளியே போக சொல்லவும் கொன்று ஒழிக்கவும் கைபர் போலன் கணவாய் வழியே ஆடு மாடு ஓட்டிக் கொண்டு பிழைக்க வந்த உனக்கு என்ன உரிமை இருக்கிறது.

                வந்தேறி கூட்டமே உனக்கு எவன் அந்த அதிகாரத்தை தந்தது.

                • There is no evidence for your aryan migration theory.People have long debunked that theory,you can do mass DNA testing of everyone in TN and see how close of far are people from central asia/eastern europe.

                  Infact that has already been done and the tests have shown that everyone is from here only and also your own Dravidar Kazhagam have started acknowledging it in their own speeches.

                  In fact, many muslims of keezhakarai/kerala/UP have afghan/arab blood and there are clear proofs for that.

                  • //There is no evidence for your aryan migration theory.People have long debunked that theory,you can do mass DNA testing of everyone in TN and see how close of far are people from central asia/eastern europe.//

                    please answer my only question,

                    1) If there is NO aryan invansion how did the iranian language “SANSKRIT” came inside TAMIL NADU ???
                    http://en.wikipedia.org/wiki/Sanskrit

                    • Persian is the Iranian language long before Sanskrit was supposed to have come here.. Moreover, your logic is weak as people spread ‘out of india’ theory also can answer your great question..

                    • Jenil,

                      I am not giving any indicators.You go and see Gujarat and see how it is.

                      In a state with little arable land and no resources,he has industrialized his state and it is still power surplus.

                      They have utilized their conditions very effectively and are doing great.They provide electricity to farmers and to all industrial units,they dont rape their rivers and they are still richer than us.

                      Moreover TN was a very advanced state even at independence,our people had great educational levels and good attitude to life and work.Despite all that today we are not at the top like Maharashtra and we are still no.2/no.3

                      Dont give indexes like HDI,I wont be surprised if most of the HDI is lowered by the muslims of Gujarat.They dont study,they dont work,they are still stuck with their age old stupidity and they lower the HDI of the state.

                    • //I am not giving any indicators.You go and see Gujarat and see how it is.In a state with little arable land and no resources,he has industrialized his state and it is still power surplus.//

                      There is no need to go and see the dat i gave itself speaks for itself… Ofcourxe i agree he have achived some good (like POWER self sufficiency)… But the overall rating given to MODI as CM is much extra hiked than what he deserves… My point is GROWTH of country or State is NOT measured by no of factories but its measured y the overall quality of life enjoyed by its people.. In that sense GUJARAT still lacks behind Tamilnadu even.. So the the hike given to MODI as CM is highly overrated.

                    • After the supposed Aryan invasion, there were number of other invasions viz., persians, scythians, kushans, huns, greeks, arabs, turkish, mangols, etc happened in north india.. North indians are a mix of central asian – european – persian races.. collectively they are called aryans, of aryavartha.. there is no seperate aryan invasion ever happened in India..

                      Latest one was english.. so please write your comments in Tamil..

                    • You go see the analysis of many castes of South India also and you ll see haplogroups which match with middle east and many ll also have R1A1 and many will also have eastern indian Mongol DNA.

                      Basically every country has mixed racial population,everywhere someone has come from somewhere else.

                      Most of the people who claim to be sons of the soil in TN also have mixed blood.

                      Indo aryan and dravidian are linguistic groups,thats all.

                      Not racial markers.

                      some maybe more recent than others,makes no difference.

                      what is next? people who migrated from one district to another after that year will also become migrants.

                      Coastal kerala and karnataka have people with foriegn blood,are they supposed to leave then?

                    • //After the supposed Aryan invasion, there were number of other invasions viz., persians, scythians, kushans, huns, greeks, arabs, turkish, mangols, etc happened in north india.. North indians are a mix of central asian – european – persian races.. collectively they are called aryans, of aryavartha.. there is no seperate aryan invasion ever happened in India.//

                      Iam also saying the same again and again… There arfe many invansions including SANSKRIT.. and they still exist in INDI.. Y u r worried only when it comes to ARABIC and MUSLIMS ??

                  • //In fact, many muslims of keezhakarai/kerala/UP have afghan/arab blood and there are clear proofs for that.//

                    Let it be … If Aryans who came with cattle here can live here means let them also live.What is ur problem ???

                    • Indo aryans mixed with the people here and contributed to the society and only culture differs and they are sons of the soil,as much as anyone else.

                      Muslims especially have different loyalties,they are here because of a religious invasion of native people and not tribal movement and natural mixing of populations.Until they accept that their forefathers were hindus,they should all go to pakistan.

                    • Jenil,

                      I am replying to the recent post here.

                      I suggest you go to Ahmedabad and see whether the quality is better than Chennai or not.

                      What quality of life do you see in Chennai,whatever w ehave,they also have.They also have no Tasmac,better traffic,better roads and less red tape when dealing with government.

                      Obviously TN is way more industrialized than Gujarat since a longtime but we are still only on par with the,they have all caught up with us.

                      regarding why arabic/muslim are different from the others.

                      The others were not religious invasions,they were a natural population movement.Today if you ask hindu he wont say my mother tongue is sanskrit,that ll only be a religious language with texts in them..
                      But muslims even in AP/Karnataka will clearly say they speak urdu and that is their language.

                      Hindus only have their own regional languages but muslims only have urud,even christians dont say english is our motehr tongue.

                      even parsis speak gujarati,then what is the problem of these guy?

                      If you are telling me that they dont have a fake pseudo-superiority complex about their own thing,then am very sorry.

                  • டி என் ஏ என்றெல்லாம் கூறி ஏன் திசை திருப்பப் பார்க்கிறீர்கள். வரலாறு தெளிவாகத் தான் இருக்கிறது. ஏன் அதையும் பொய்யாக்கித் திரிக்கப்பார்க்கிறீர்கள்? டி என் ஏ என்று போனால் உங்களுக்குத் தான் கேவலம். ஏனெனில் அதில் ஆங்கிலேயர் கலப்படம் எல்லாம் வரும்.

                    • யார் யாருக்கு அரபுக் கலப்படம் வருகிறது என்பது தெரிந்துவிடும்…

                    • You can go ahead and do DNA testing and you ll find out who has what?

                      nobody is scared of that.Btw, That was a reply to Jenil for hia question and DNA is obviously important here because you guys claim Aryan Migration theory for everything.

                      So,this is necessary to prove that everyone belongs here and nowhere else.

            • //Boss, Gujarat is a place of historic bad blood between Hindus & Muslims.Thats why the partition happened. This is why India should have been a Hindu Rashtra.Atleast the North should have been clean off muslims,otherwise centuries of anger will erupt.You think those policemen who are supposed to stop the riots dont have the same feeling? They have it as much as anyone else.Only thing i dont like is killing women and children.One should never do that.//

              ‘இந்தியா பார்ப்பனர்களுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் இடையேயான விரோத வரலாற்றைக் கொண்டது. அதனால் நாட்டிலிருந்து பார்ப்பனர்கள் விரட்டப்பட வேண்டும், இல்லை என்றால் ஆயிரம் ஆண்டு கோபம் பொங்கிக் கொண்டே இருக்கும்’

              என்று சொல்கிறீர்களா?

    • டீஸ்டா செடல்வாத் வெளிநாட்டுக் கைக்கூலி என்றால், அத்வானி, மோடி, சிதம்பரம், மன்மோகன் எல்லோரும் யார்? தேசப்பற்றாளர்களா?
      சாதாரண முஸ்லீம்களுக்கும் முஸ்லீம் அடிப்படைவாதத்துக்கும் என்ன சம்பந்தம்?

      • The connection is obvious,tell me any Muslim who openly comes and says that he ll accept the uniform civil code,tell me any muslim outfit which can criticize or debate their religion,as long they cant or dont want to do that,this ll continue.

        The radicals ll always hold power over the liberals.

        • ஒரே சிவில் சட்டம் வேண்டும் என்கிறீர்களே, முஸ்லீம்களின் சட்டத்தினால் உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டது? விளக்கமாகத்தான் சொல்லுங்களேன். நேரம், நாள், இடம் ஒதுக்குங்கள். நான் ஆளை அழைத்து வருகிறேன். இருவரும் தெளிவாக்கிக் கொள்வோம்.

          • we want to have the same policy for everyone.If you want the government to be impartial to you and treat you as the same and give you reservation,then you have to join the mainstream.

            One husband-one wife policy is the policy of the society of India,there ll be no tolerance for any kind of deviation from the rule.

            Will you be okay if i run a corporate company and i state it as my policy that i wont hire someone if he has more than one wife.

            Any policy regarding population or child control suffers due to such divisive things in the society.

            Tomorrow,if the govt enforces a two child norm per woman like in China,will you be okay with it? or will u again refer to AIMPLB.

            • அவர்களுக்கு 4 திருமணம் செய்ய அனுமதியிருந்தாலும் தற்காலத்தில் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது வேறு திருமணம் செய்வதாகத் தெரியவில்லை. ஆனால் நம் ஆட்கள் மனைவி என்று ஒருவரை வீட்டில் வைத்துக்கொண்டு எத்தனை வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். சாதாரண ஆளிலிருந்து பெரிய தலைவர்கள் வரை அதுவும் குறிப்பாக காவி அணிந்த பெரியவர்கள் வரை எத்தனை பெண்களை சைடில் வைத்திருக்கிறார்கள். உங்கள் பாலிசியும் சொசைட்டியும்….தூ

              • It doesn’t matter who uses or abuses the rights. Even today Karunanidhi’s other wives are not the legal ones,they are just like a keep.Thats the legal definition.

                Dont mention ‘we’ between you and me.So you accept now that being loyal to one woman at a time is the culture of the land and a rational choice,this is why Lord Ram is a hero of this society.

                Those people who dont respect this fact dont get any respect in society.Even today a disciplined man gets respect for making the right choice in life.

                the weak can get dissuaded by any observation,the strong willed make the right choice.

                • உங்கள் வாதப்படி லார்ட் ராமனை ஏற்றுக் கொண்டால், ஸ்திரீ லோலன் கிருஸ்ணனை என்ன செய்வது? பழனி முருகனின் கோவணத்தை அவிழ்த்து விட வேண்டியது தானா? இதையெல்லாம் விடுங்கள். பாண்டவர்களின் துர்நாற்றத்த்தை எதைக் கொண்டு மாற்றுவீர்கள்? உங்க டிசிப்பிளினும் நீங்களும்..

        • திருடனைக் கேட்டால் தான் திருடியது சரிதான் என்றும், விபச்சாரியைக் கேட்டால் தான் கட்டிலில் பல பேருடன் படுத்து எழுந்திருப்பது சரிதான் என்றும் சொல்வார்கள். அவர்களும் தங்களுக்கென்று பாலிசி வைத்திருக்கத்தான் செய்வார்கள். அவர்களால் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லையென்று சொல்லலாம் இல்லையா?

            • கொலை செய்த சங்கரன் பேரம் பேசியது யாருடன்? தெய்வத்திடம் அல்லவே. தெய்வத்தையே விலை பேசி விற்கும் இப்படிப்பட்ட கயவர்கள் கருப்புக் கோட்டு அணிந்த அவர்களையுமா விட்டுவைப்பார்கள். என்னமோ நீதி இந்தியாவில் நியாயமாக நேர்மையாக கிடைப்பது போல் சொல்கிறீர்களே.
              நீங்கள் சட்டத்தின் பெயரைச் சொல்லி தெய்வத்திற்கு பயப்படமாட்டீர்கள். தெய்வத்தின் பெயரைச் சொல்லி சட்டத்திற்கு பணியமாட்டீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.

              • Who do you refer by you guys? who are those you guys?

                If you are not convinced by the supreme court,go assassinate him or give up and make sure he doesn’t win future elections.

                These are the only choices, your baseless observations are of no help to anyone here.

                • உங்கள் இரண்டாவது வரியின்படி புரட்சிகரப் பாதையே சரியென்று ஒரு வழியாக நீங்களே ஒத்துக் கொள்கிறீர்கள்.

            • ஐயா கரிகுமார்,

              காக்கா மல்லாக்க பறப்பதற்கெல்லாம் பொறுப்பேற்று பிரதமர் பதவி விலக வேண்டும் என கேட்கிறார்கள் காவிப்புலிகள். ஆனால் ஒரு வாரம் குஜாரத்தையே கலவர பூமியாக்கி படுகொலைகள் நடந்தமைக்கு மோடி என்ற கேடி குற்றவாளியில்லையாம். நல்லா இருக்குதய்யா உங்கள் நியாயம். பிறகு படுகொலை செய்ததுதான் யார்? மெய்யாலுமே அந்த கேடிக்கும் படுகொலைக்கும் சம்பந்தம் இல்லையென்றால், நாணயம், நேர்மை அந்த கேடிக்கு இருந்திருக்குமேயானால் தனது மாநிலத்தில் படுகொலை புரிந்த அந்த பொறுக்கிகளை தண்டித்திருக்க வேண்டாமா? ஏன் அந்த கொலைகார லும்பன்களை பாதுகாக்க முயலவேண்டும்?

              • If the people of Gujarat have chosen him again and again with a great majority, that means they validate his actions and chief ministership.

                This includes the muslims also.

                And the number of fiascoes UPA govt has done so far and resultant loss of face/money to the country is much higher than anything that Narendra Modi is accused of.

                • ஹரி குமார் ////if the people of Gujarat have chosen him again and again with a great majority, that means they validate his actions and chief ministership.

                  This includes the muslims also.///

                  குஜராத் மக்கள் 2002 நடந்த உள்ளாட்சி தேர்தலில் பிஜேபி தோல்வி அடைந்தது .இதை கருத்தில் கொண்டே பொது தேர்தலன் வெற்றி கருதி ஏற்படுத்தப்பட்ட செட் அப்தான் கோத்ரா ரயில் எரிப்பு

                  முந்தைய தேர்தலில் குஜராத்தில் உள்ள சௌராஷ்டிரா பகுதிகளில் அதிக இடங்களில் பிஜேபி வெற்றி பெற்றது .குஜராத் கலவரத்திற்கு பின்னர் நடந்த தேர்தலில் அங்கு பிஜேபி குறைந்த இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது அதே சமயத்தில் கலவரம் நடந்த அகமதாபாத் வதோரா பகுதிகளில் முந்தைய தேர்தலில் குறைந்த இடங்களை பெற்ற பிஜேபி அனைத்து இடங்களையும் கைப்பற்றியது .

                  முஸ்லிம்கள் பெரும்பாலான இடங்களில் ஒட்டு அளிக்க அனுமதிக்கப்படவில்லை ,முஸ்லிம்களின் ஓட்டுக்களை பாசிச கும்பல்கள் தான் போட்டனர்

                  • Bohra muslim leader of Gujarat who is a shia has publicly acknowledged his favour for Modi.

                    It is only the confused sunnis who vote for appeasement politics.

                    There are people even amongst hindus who dont favour Modi for many reasons.

                    Ultimately what matters is the verdict, if it was so that there was bogus voting Congress would be fighting tooth and nail for that.

                    That way it is the secular lobby including the communists who go to any extent to win elections,that way most of the elections in India ll be invalid.

                • //If the people of Gujarat have chosen him again and again with a great majority, that means they validate his actions and chief ministership.//

                  ராஜபக்சே மாதிரி நெம்ப நல்லவரா இருப்பாரு போல. இல்லாட்டி திரும்ப திரும்ப ஆட்சிக்கு வர முடியுமா?

                  பின்ன, கருணா, டக்ளசு தேவானந்தா மாதிரி தமிழர்கள் ஆதரவு குடுக்குறதுனால ராஜபக்சேக்கு தமிழர் ஆதரவும் நெறைய இருக்கு. என்னா
                  ஒத்தும ரெண்டு பயலுவளுக்கும் நடுவுல…

                  • LTTE has also killed many many people to become the sole representative of Tamils.It is a long story and everyone has blood on their hands.

                    Same old vadivelu logic again and again here, enakku vandha ratham unakku vandha thakkalai chutney.

                    • ”தமிழனைத் தமிழன் கொல்லும் போது சிங்களன் கொன்றால் என்ன ? பிரபாகரனும் ராஜபக்சேயும் ஒண்ணு ஏன்னா 2 பேர் கையிலும் ரத்தம்” என்கிறீர்களா..?!

                      உங்கள் வீட்டில் அண்ணனும், தம்பியும் அடித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டுக்காரன் வந்து 2 பேர் மண்டையையும் உடைத்துவிட்டு ”நம் எல்லோர் கையிலும் ரத்தம், ஒரே ரத்தம்” என்று வசனம் பேசினால் கைதட்டுவீர்களா..?!

                  • // ராஜபக்சே மாதிரி நெம்ப நல்லவரா இருப்பாரு போல. இல்லாட்டி திரும்ப திரும்ப ஆட்சிக்கு வர முடியுமா? //

                    ரணிலுக்கு ஓட்டு போட்டுக் கொண்டிருந்த பல சிங்களர்களும் ராஜபக்சேவுக்கு ஆதரவாக மாறிவிட்டனர்…

                    காங்கிரசுக்கு ஓட்டு போட்டுக் கொண்டிருந்த பல குஜராத்திகளும் மோடிக்கு ஆதரவாக மாறிவிட்டனர்…

                    • Ambi

                      It is not so simple.Logically there is a big divide even amongst the tamils of SL.If they were united,they would have logically chosen the support of India to solve their problems.

                      There is a lot of politics behind it as Prabhakaran wanted their autonomy in SL,not even the participation of India.They only wanted the money and arms and training for their cause and no more interference.

                      Unfortunately,they dont have the strength to talk on equal terms with India or for that matter not even MGR.The only strength is Tamils are emotional and they ll say or do anything for the language cause,this aspect is perfectly manipulated by all the parties involved here.

                      The only morons here are people like DMK/DK who tried to make a living by instigating prabhakaran,if MGR was alive these guys ll be begging today in the streets of madras.

                • கொய்யால அதிமுக, திமுக, காங், இடது, வலது, பிஜேபி, ஆகிய கட்சிகள் கூடத்தான் தோக்குறாய்ங்க கெளிக்கிறாய்ங்க இதுக்கெல்லாம் அந்தந்த கட்சியின் மகாத்மியங்களும், கொள்கைகளும், மொகரையும்தான் காரணம்மா? மக்கள் வேறொரு மாற்றை நோக்கி நகரும் வரையில் இது போன்ற மொகரைகள் வருவது சகஜம்தான். மோடி என்ற கொலைகார கேடி முஸ்லீம்களை பயபீதியூட்டி முச்லீம் வாக்குகளையும், முஸ்லீம்களை எதிரியாக சித்தரித்து இந்து வாக்குகளை அள்ளியிருக்கிறான்.

                  பதில் சொல்லு கறிகுமார், ஒரு காவல்நிலையத்தில் காவலர்கள் இருக்க காவல்நிலைய எதிரில் உன் அப்பாவை பலர் கொலை செய்தால், அப்படி செய்வதை காவலர்கள் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தால் அந்த காவலர்களை கடமையைச் செய்த யோக்கியவான் என்றுதான் கூறுவாயா?

                  • I will get very angry and frustrated but if i go read up some history and do some research,i ll realize that my forefathers have been very cruel to many of the other own in the society.

                    I ll tell my community to become peaceful and not radicalize ourselves and give up a confrontational tone with the majority and try to form a compromise.

                    • ///but if i go read up some history and do some research,i ll realize that my forefathers have been very cruel to many of the other own in the society.//

                      சரி கறிகுமாரு, இப்போ சொல்லு குஜராத்துல முஸ்லீம் அப்பாவி மக்களை கொன்னது யாரு? உன்னுடைய வரலாற்று ஆராய்ச்சிய யூஸ் பண்ணி சொல்லு பார்ப்போம்.

                    • //Angry Hindus of Gujarat.//

                      கறிகுமாரு,

                      இந்துக்கள்தான் செய்தார்கள் என்ற அளவிற்கு ஒத்துக்கொண்டாயே. சரி அந்த கொலைகார இந்துக்களை என்ன செய்யலாம் சொல்லு பார்ப்போம்.

                    • கரி,

                      கொலை செய்த கொலைகார கேடிகளை என்ன செய்திருக்க வேண்டும்? சொல்லுப்பா

  2. குஜராத் கலவரம் ரொம்ப பழசு தற்பொழுது புதுசா அசாமில் இனக்கலவரம் நடக்கிறது. அங்கே போடோ இன மக்களை கொன்று குவிக்கும் வங்கதேச அயோக்கிய சட்டவிரோத ஊடுருவல் கும்பலை பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள். அங்கே ஆளும் காங்கிரஸ் பற்றியும் எழுதுங்கள்.

  3. தீஸ்தா செதல்வாட்?

    http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence#Riot_cases_controversy

    Riot cases controversy

    In April 2009, the Special Investigation Team (SIT) setup by the Supreme Court of India to investigate and expedite the Gujarat riot cases submitted before the Court that Teesta Setalvad had cooked up cases of violence to spice up the incidents. The SIT which is headed by former CBI director, R. K. Raghavan has said that false witnesses were tutored to give evidence about imaginary incidents by Setalvad and other NGOs.[148] The SIT charged her of “cooking up macabre tales of killings”.[149][150]

    The court was told that 22 witnesses, who had submitted identical affidavits before various courts relating to riot incidents, were questioned by SIT and it was found that the witnesses had not actually witnessed the incidents and they were tutored and the affidavits were handed over to them by Setalvad.[149]

    The report which was brought to the notice of the bench, consisting of Justices Arijit Pasayat, P Sathasivam and Aftab Alam, noted that the “much publicised case of a pregnant Muslim woman Kausar Banu being gangraped by a mob and foetus being removed from sharp weapons, was also cooked up and false.”[148][151]

    • Seenu, SIT is not a court. It is only an Investigation team. Its finding is not gospel truth. SIT can even say no one died in the riots or that all the 2000 women, children, and people committed suicide; burnt themselves alive etc. etc. Supreme Court will consider their report and also other inquiry reports, investigation, arguments of the counsels, then give the judgement. So let us wait. In 2004, the Hon’ble Supreme court openly blasted the Gujarat government saying – “When women and children were burnt alive, you were playing fiddle like Nero. We have no trust in you”.

  4. என்ன தான் இருந்தாலும் அப்பாவி மக்களை கொலை செய்ததது மிகப்பெரிய குற்றம்…அதற்கு இறைவன் கண்டிப்பாக தண்டனை தருவான்.உலகில் எல்லா அயோக்கியர்களுக்கும் கண்டிப்பாக தண்டனை கிடைத்துள்ளது…மோடிக்கும் அவர்களின் சகாக்களுக்கும் இன்றில்லா விடில் என்றாவது தண்டனை கிடைத்தே தீரும்.

    • நகைப்புதான் வருகிறது. உங்களில் யாரேனும் அப்பாவிகள் இருக்கிறார்களா? நீங்கள் அனைவருமே பயங்கரவாதிகள், தீவிரவாதிகள். முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும் என்பது போல பயங்கரவாதிகளை பயங்கரவாதத்தால்தான் ஒழிக்கமுடியும். தற்போதைய உலக நெறிப்படி மோடி பிரதமராவதற்கு அனைத்து தகுதிகளும் உடையவர்.

    • இறைவன் என்றுமே தண்டனை தரமுடியாது, உழைக்கும் மக்களின் போராட்டமும், விழிப்புணர்வும், அதனால் ஏற்படும் புரட்சியுமே சரியான தண்டனையைத் தரும், தோழரின் நடுநிலைமைக்கு நன்றி.

  5. எல்லாம் ஓகே.. ஆனா பத்து வருஷத்துக்கு முன்னாடி நடந்த கலவரத்த இம்புட்டு ஆராய்ச்சி பண்ற அதே வேளைல அஸ்ஸாம் கலவரத்த பத்தி மூச்சு காணமே ஏன்? அதுக்கும் RSS காரங்கதான் காரணம்னு எதாவது துப்பு கெட்ட பத்திரிகை துப்பு தரும்.. பொறவு அவிங்கள துப்பி தள்ளலாமுன்னா? ராஜதந்திரி ஐயா நீர்..

    • ஐயரே,

      ஆர்.எஸ்.எஸ் யோக்கியதையை தெரியாதா? அவனே பாகிஸ்தான் கொடியை ஏத்திட்டு முஸ்லீம் மேல பழிய போட்டவன்

      குல்லாவை போட்டுகுனு போயி குண்டு வச்சிட்டு முஸ்லீமு மேல பழியை போட்டவன்

      முஸ்லிம் பேர பச்சை குத்திகிட்டு காந்தியை சுட்டுக் கொன்னவன்

      இப்படி எத்தனையோ…..

      இந்த மானங்கெட்ட கோழைப்பயலுவளை நம்பி நீங்க சொம்ப தூக்கிகினு வந்துட்டீங்களே? இவனுங்கள காறித்துப்ப வாய் வரல மதத்தலுக்கு மட்டும் ”நூலு” நீளுது ;)))

      அசாம் மேட்டருக்கே வருவமே, ஒரே கேள்விதான், இது (இந்து?) போடோவுக்கும் – முஸ்லீமுமுக்குமான பிரச்சனையின்னா அப்புறம் ஏன் (இந்து) பழங்குடிகளை ஆதிவாசிகளை போடோக்கள் தாக்குறாங்க? இன்னிக்கு நேத்திக்கு இது நடக்கலேயே 10 வருசமா நிலத்துக்கு திரும்ப முடியாம போடோவுக்கு பயந்திட்டு அகதிமுகாம்ல ஆதிவாசி அடைஞ்சிருக்காங்களே? இதெல்லாத்துக்கும் என்ன காரணம்னு முதல்ல கண்டுபுடிக்க வேணாமா? அப்பத்தானே மொதல்ல அடிச்சது யாரு? திருப்பியடிச்சது யாருன்னு கண்டுபுடிக்க முடியும்???

      ஒரு கலவரம், குண்டு வெடிப்புன்னாலே ஒடனே பழி முஸ்லீம் மேல போடுறது ஆர்.எஸ்.எஸ் புத்தி, அப்புறம் அவங்காளு ஒருத்தர் மூலமாவே குட்டு வெளிய வரும், அம்மணக்கட்டையா நிப்பாங்க. அதுக்கு நீங்கெல்லாரும் வந்து கோவணம் கட்டுவீங்க… மேலே சொன்னதெல்லாம் அப்படி வெளிய வந்ததுதானே?

      இந்த அளவுக்குத்தான் நடப்பு அரசியல் பற்றிய உங்க அறிவுன்னா டயாப்பர் கட்டிகிட்டு அண்ணா கூட்டத்துக்கு போயீ பாரத் மாதாகி ஜெய்யீன், பேஸ்புக்லயும் டுவிட்டர்லயும் ஊழலை ஒழிச்சு புதிய இந்தியாவை படையுங்க, இந்துத்வ கூஜாக்களோட தந்திரமாவது தழைக்கும் ஐயரே.

      • உலகம் தட்டை.

        கடவுள் தான் மனிதனைப் படைத்தான். குரங்கிலிருந்து அவன் தோன்றவில்லை.

        இதை யெல்லாம் நம்பும் முட்டாள்கள் மேலே சொன்ன ஊசியின் ஊசிப்போன பொய்களையும் தாராளமாக நம்பலாம்.

        • போன் ஒயர் பிரிஞ்சி ஒரு வாரம் அச்சீ ;))) யோவ் இதெல்லாம் பேப்பர்ல டீவில வந்து ஊரை சிரிப்பா சிரிச்ச விசயம். பொத்திகிட்டு கிளம்புங்கண்ணா

      • Godse never ran away,he publicly surrendered and even mentioned his reasons for killing Gandhi,Right or wrong,but he was no coward.

        Most of the bomb blasts have been done by muslims and honestly in India,nobody else take such extreme steps for justice,it is natural that the suspicion falls on them and investigation proceed son those lines.

        They wont suspect pseudo communists or dravidian parties,because they know that these guys dont have the balls to do it.

        I have replied about the Bodo matter below,if at all anyone here is ignorant of most history/facts,it is you guys.

        • அப்புறம் ஏனுங்க வீராதி வீர கோட்சே முஸ்லிம் பெயரை பச்சை குத்திகினு போனாரு? இது தொடர்பா ஏற்கனவே வினவுல ஒரு விவாதம் நடந்திச்சு தேடிப்படிச்சுகங்க

          அப்புறம் ஏனுங்க ஆர்.எஸ்.எஸ் கோழைப்பயல்கள் உங்க வார்த்தையில சொல்லனும்னா காயடிக்கப்பட்டவர்கள் குல்லா மாட்டிகினு குண்டு வச்சிட்டு முஸ்லிம் மேல பழியை போட்டானுங்க
          https://www.vinavu.com/2011/02/03/on-saffron-terror/

          நான்கூடத்தான் போடோ பிரச்சனையை பத்தி ஒரு விசயம் எழுதியிருக்கேன், அதுவும் சுத்தபத்தமான உண்மைதான். நீங்களே நெட்டில் தேடிப்பாத்துக்கவும்.

            • இது ஊசியின் கேள்வி.

              \\அப்புறம் ஏனுங்க வீராதி வீர கோட்சே முஸ்லிம் பெயரை பச்சை குத்திகினு போனாரு? இது தொடர்பா ஏற்கனவே வினவுல ஒரு விவாதம் நடந்திச்சு தேடிப்படிச்சுகங்க
              அப்புறம் ஏனுங்க ஆர்.எஸ்.எஸ் கோழைப்பயல்கள் உங்க வார்த்தையில சொல்லனும்னா காயடிக்கப்பட்டவர்கள் குல்லா மாட்டிகினு குண்டு வச்சிட்டு முஸ்லிம் மேல பழியை போட்டானுங்க//
              இதுக்கு கரிகுமார் பதில்
              \\To spark off a riot.Thats the reason,what else is the reason.Nothing wrong with that.//
              இதை விட அயோக்கியத்தனம் வேறெதுவும் இருக்க முடியுமா.முஸ்லிம்கள் மீதுபழி போட்டு கலவரம் நடத்தி அவர்களை கொன்றொழிக்கவே ஆர்.எஸ்.எஸ்.காலிகள் அப்படி செய்கிறார்களாம்.அதுல தப்பு ஏதுமில்லையாம்.

              அப்படியா அரிக்கி, எத்தனை நாட்கள் இந்த கபட நாடகம் செல்லுபடியாகுதுன்னு பாக்கலாம்.காலம் இப்படியே போய் விடாது.

              பாவேந்தரின் வரிகள் நினைவிருக்கட்டும்.

              ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்
              உதையப்பர் ஆகி விட்டால் ஓர்நொடிக்குள்
              ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
              ஒப்பப்பர் ஆயிடுவார் உணரப்பா நீ

              அதேபோல புரட்சிகர பாடல் ஒன்றின் வரிகள்.

              வரலாறெங்கும் படிந்து கிடக்கும் எம் மூதாதையரின் ரத்தக்கறைகள் எதிரிகளின் ரத்தத்தாலேயே கழுவப்படும்.

              • Gandhi’s murder was a politically motivated one because of 2 reasons:

                1. Payment of money to Pakistan coming at a time when Nizam of Hyrderabad chooses to give the state money of Hyderabad of Pakistan when it should have remained with India like Hari Singh left the Kashmir money to the people of Kashmir.

                2. Gandhi urging Nehru to allow a road connecting Bangaldesh with West pakistan,which if allowed would have made our country right under the impact of pakistan.

                These are the reasons he did that and if you feel your forefathers were wronged by someone else,you are right to feel aggreived by that.

                But from what i know,you are shooting against the wrong tree and siding with the people who actually abuse you.

                You are free to implement what pavender bharatidasan said.we ll see what happens then.But if at all anything,there is no blood here as much as there was elsewhere.

                • அரிக்கி,
                  அரைகுறையா வரலாற தெரிஞ்சு வைச்சுகிட்டு அத்தோடு பொய்யையும் புரட்டையும் கலந்து கட்டி இப்படியா உளறுவது.

                  அது ஹைதராபாத் நிஜாம் பணம் இல்லை.பிரிவினையின்போது நிலப்பரப்பை பிரித்த மாதிரி இந்திய ரிசர்வ் வங்கியின் கையிருப்பான 400 கோடி ரூபாயையும் பிரித்தார்கள்.அதில் 75 கோடி பாகிஸ்தானுக்கு சொந்தம்.அதில் முதல் தவணையாக 20 கோடி இந்தியா பாகிஸ்தானுக்கு கொடுத்துவிட்டு மீதி 55 கோடியை தராமல் ஆட்டையை போட பாத்தது இந்திய ஆளும் கும்பல்.இதை மவுன்ட் பேட்டன் நேர்மையற்ற செயல் என விமர்சித்தார்.காந்தியாரும் அதை ஆமோதித்தார்.அவ்வளவுதான்.கடைசியாக காந்தியார் இந்திய அரசை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தபோது அவர் இந்த பணம் குறித்து எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.

                  ஆதாரம்.மகாத்மா காந்தி கொலை வழக்கு. ஆசிரியர்.என்.சொக்கன்.வெளியீடு.கிழக்கு பதிப்பகம்.பக்கம்.79.

                  அப்புறம்.கிழக்கு மேற்கு பாகிஸ்தான்களை இணைக்க இந்தியா வழியாக ரோடு போட பாகிஸ்தானுக்கு அனுமதி தர காந்தியார் சொன்னார்னு எந்த கிறுக்கன் உனக்கு சொன்னது.ஒரு நாடு 2000 கிலோ மீட்டருக்கு மேல இன்னொரு நாடு வழியா சாலை அமைக்க முடியுமா.என்ன ஒரு பைத்தியக்காரத்தனம்.

  6. இங்கு இருக்கும் பின்னூட்டங்களையெல்லாம் படிக்கும்போது……….ஆக பார்ப்பனர்களுக்கு எதிரி முஸ்லீம்கள் மட்டுமில்லை இந்துக்களிலேயே ஆகப் பெரும்பான்மையோர் இருக்கின்றனர் என்றுதான் தோன்றுகிறது. அம்பி உஷார்.

    • Most of the people who post here and their opinions are not not reflective of the public opinion.

      Most of them are christians and muslims taking hindu/linguistic names,remaining are lazy people who are upset that they were not good enough to be doing something better in life.

  7. BTAD is a place where Bodos have superior rights and they have autonomy over their land.

    The problem here is illegal bangaldeshi immigration,Bangladeshi Muslims ar still amongst the most illiterate and they multiply like crazy.They ll come here as a refugee,multiply like rabbits and suddenly they ll be 30% of the population and ll startw anting sharia law,this that and all bullshit.

    This is why partition of Bengal happened,once that has happened,there is no reason to invite bangaldeshi people into India.

    Congress did this as usual to get votes and as a result we had the Assam agitation and the subsequent Assam Accord in 1988.

    First of all, before advising other people,you go and read up some history and try to make an opinion.

    Not only the Bodos,the whole of Assam,North East & the Bodos do not want to take the Bangaldeshis inside.

    This is just the tip of the iceberg and you ll see what happens soon.

  8. புணே குண்டு வெடிப்பு: ஜோர்டானுக்கு தொடர்பு

    First Published : 03 Aug 2012 03:22:05 AM IST
    Last Updated : 03 Aug 2012 04:06:23 AM IST

    புணே, ஆக. 2: புணேயில் புதன்கிழமை இரவு நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகளுக்கும் இஸ்லாமிய வளைகுடா நாடான ஜோர்டானுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. குண்டு வெடிப்பில் காயமுற்று இப்போது போலீஸ் காவலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயானந்த் பாட்டீல், வளைகுடா நாடான ஜோர்டானில் 9 மாதங்கள் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    இதன் மூலம் புணே தொடர் குண்டுவெடிப்புக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான தொடர்பு குறித்து புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன.
    மேலும் குண்டுகளை வெடிக்கச் செய்யும் “டைமர்களாக’ கைக்கடிகாரமே பயன்படுத்தப்பட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. பொதுவாக, இந்திய முஜாகிதீன் போன்ற பயங்கரவாதக் குழுக்கள் இவ்விதமான உத்திகளைக் கையாளுவது வழக்கம்.
    இந்நிலையில், இந்தக் குண்டு வெடிப்புகள் தொடர்பாக ஒரு சைக்கிள் கடை உரிமையாளரும் பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    காயமுற்றவர் கைப்பையில் வெடிப்பொருள்: பாலகந்தர்வா திரையரங்கு அருகே காயமுற்றவரின் கைப்பையில் வெடிப்பொருள் இருந்தது தெரிய வந்துள்ளது. காயமுற்றவரின் பெயர் தயானந்த் பாட்டீல். அவர் ஒரு தையல்காரர். பாலகந்தர்வா திரையரங்குக்கு எதிரே நடந்துவந்த “ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பினரின் தர்ணாவை பார்ப்பதற்காக உருலி கஞ்சன் எனும் கிராமத்திலிருந்து வந்ததாகவும்; அப்போது தனது கைப்பையில் ஒரு பெட்டி இருந்ததாகவும், அதில் என்ன இருக்கிறது என்று பார்ப்பதற்காக திறந்தபோது வெடித்ததாகவும் கூறியுள்ளார். இவர் சமீபத்தில் 9 மாதங்கள் இஸ்லாமிய நாடான ஜோர்டானில் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    அவரது கைப்பையில் வெடிப்பொருள் இருந்ததால் அவரிடம் போலீஸôர் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். லேசாக காயமுற்றுள்ள அவர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வாக்குமூலம் போலீஸôரால் பதிவுசெய்யப்பட்டு வருகிறது. அவர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் 307 (கொலை செய்ய முயற்சி), 427 (சேதம் ஏற்படுத்துதல்), 120 பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    அவரது மனைவி சத்யகலாவிடமும் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிக்கிய சைக்கிள்கள்: குண்டு வெடிப்புக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 2 சைக்கிள்களை போலீஸôர் கைப்பற்றி புலனாய்வு செய்து வருகின்றனர். மாநில பயங்கரவாத தடுப்புப் படை, குற்றப்பிரிவு போலீஸôர், தேசிய புலனாய்வு ஏஜென்சியை சேர்ந்தோர் சைக்கிள்களை தீவிர ஆய்வுக்கு உள்படுத்தி பயனுள்ள தடயங்களைத் தேடி வருகின்றனர்.
    இந்த சைக்கிள்களில்தான் வெடிப்பொருள்கள் வாளிகளில் கட்டப்பட்டு கொண்டு வரப்பட்டன. மேலும் சைக்கிள்கள் அனைத்தும் புதிதாக வாங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    இதுதொடர்பாக, கஸ்பா பேட் பகுதியில் உள்ள சைக்கிள் கடை உரிமையாளரும் அந்தக் கடையில் வேலைபார்ப்பவரும் போலீஸôரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து திட்டவட்டமான தகவல்கள் கிடைக்கும் எனத் தாங்கள் நம்புவதாக பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கஸ்பா பேட் கடையிலிருந்து 2 அல்லது 3 சைக்கிள்கள் வாங்கப்பட்டதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன என்றார் அந்த அதிகாரி. ஆனால், 3வது சைக்கிள் குறித்து கூடுதல் தகவல் எதையும் தர அவர் மறுத்துவிட்டார்.
    இந்த குண்டு வெடிப்புக்குப் பின்னே இந்திய முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்போ அல்லது தீவிர ஹிந்து அமைப்புகளோ இருப்பதற்கான சாத்தியங்களை மறுப்பதற்கில்லை என மற்றொரு புலனாய்வு அதிகாரி குறிப்பிட்டார்.////

    குண்டுவைத்தவனை பிடித்து உண்மையை வெளிக் கொணர்வதை விட்டு அவன் ஜோர்தானில் 9 மாதங்கள் இருந்தால் ஜோர்தானுக்கு தொடர்பு என்று செய்தி வெளியிட்டுமுஸ்லிம்களை சம்பந்தப் படுத்தாவிட்டால் இந்த ஆதிக்க வெறி பிடித்த மீடியாக்களுக்கு தூக்கம் வராதா?

  9. Accoring to vinavu & co,

    1) Modi is anti muslim
    2) Modi is controlling state and centeral power, courts, media

    Then why he has not attempted to do similar massacare again and eliminate all muslims from their state ?? Just wondering -:)

    Also, do u have any statistics showing how many muslims vacacated Gurjar after this riot. Pl don’t give 1 or 2 cases. Can we say 50% of muslim population in Gurajar moved to other states? Any such stats.

    Guj is one of the best performing state in India (top 3) – pl don’t compare against US or Austraia..its highly impossible to achieve those level of lifestyle in <10 years of rule…

    • இலங்கையில் கூட இன்னும் தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  10. நரபலி மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே குஜராத் முன்னிலை மாநிலமாகவே உயள்ளது

  11. All that is congress propoganda.People of Gujarat time and again have repeated that his governance is better than everyone’s before and he is doing a great job.

    • ஹரி ,மோடி இப்போது உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததை அறியமாட்டீரோ
      அடுத்து பிரதமர் ஆக அத்வானி கதையை mமுடித்து விட்டு முஸ்லிம்கள் தலயில் போட்டு தேர்தலில் வெற்றி பெற திட்டமிட மாட்டார் என்று யாரால் உறுதி சொல்ல முடியும் . கர்கரே மனைவிக்கு சில உண்மைகள் அதாவது அவரது கணவரை கொன்றவர்கள் யார் என்பது

      • Sir,

        I know he lost local body elections.we will see how the future prospers.

        His wife has clearly said that Digvijay singh was no role in this.

        what are you suggesting?

        I can assure you, Hindutva people will never kill a great IPS officer like Karkare even if he puts them in jail.

        • @@@I can assure you, Hindutva people will never kill a great IPS officer like Karkare even if he puts them in jail.@@@

          ஆமா காந்தி மாதிரி டம்மீ பீசுகளைத்தான் இந்துத்வ தீவிரவாதிகள் கொல்லுவாங்க

          • You are a moron,you have no clue about Gandhi or godse or people like that.

            Kamaraj lost just for killing Thevar,you cant imagine how much was lost for killing Gandhi.But RSS took the risk and paid the price.

            Let us see if you have balls to kill even a councillor.

            Pussies.

            • ஏன் ஹரிகுமார் இப்படி ஆபாசமான வார்த்தைகளால் பேசுகிறீர். சபை நாகரிகம் என்று ஒன்று உண்டு. உங்களுக்கு சின்ன வயசில் யாரும் சொல்லித்தரவில்லையா. இதை தமிழ் படுத்தினால் எவ்வளவு அசிங்கமாக இருக்கும் என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்.

              moron, Let us see if you have balls, pussies,
              இவ்வாறு எதை குறிப்பிடுகிறீர்கள்? தரம் தாழ்வதிலும் ஒரு வரைமுறை உள்ளது. அதனிலும் அதிகமாக தாழ்ந்துவிட்டீர்கள்.

        • ஹரி ///I can assure you, Hindutva people will never kill a great IPS officer like Karkare even if he puts them in jail.///

          ஆம் ,உண்மைதான் இதுவரை குண்டு வெடிப்பு என்றாலே மறு ந்மிடமே இந்திய முஜாஹிதீன் ஆகிய நாங்கள் குண்டு வைத்தோம் என்று மெயில் அனுப்ப படுவதும் உடன் முஸ்லிம்களை கைது செய்து பயங்கரவாதிகளாக காட்டி வந்த வரை எந்த ஐபிஎஸ் அதிகாரிகளையும் கொள்ள மாட்டீர்கள் .ஆனால் கர்கரே intha சத்தியவான் அல்லவா .குண்டு வைத்த அசல் தீவிரவாதிகளை முதன் முதலாக பிடித்து இந்திய வரலாற்றில் திருப்பு முனை ஏற்படுத்தியர் அல்லவா?அவரை கொல்லாமல் சும்மா விட்டால் அடுத்து குண்டு வெடிப்புகள் பற்றி ஒவ்வொரு அதிகாரிகளும் உண்மையை வெளி கொண்டு வந்து விடுவார்களே,ஹிந்துத்துவாக்கள் என்ன கொக்கா ?அந்த நிகழ்ச்சிகளை அன்றைய தின செய்தி தாள்களில் தொடரந்து படித்தாலே பல உண்மைகள் புரியும் .

          உமது உறுதிமொழி யாருக்கு தேவை ?ஒன்று ஹிந்துத்துவாககளைப் பற்றிய முழு உண்மைகள் உங்களுக்கு தெரியவில்லை .வெறும் ரீடிங் நாவ்லேஜ் தான் உங்களிடம் உள்ளது .அல்லது வழக்கமான சோ பாணியில் பேசுகிறீர்கள்.
          திருமதி கவிதா அவர்கள் தனது கணவருக்கு ஹிந்துத்துவாக் களிடமிருந்து கொலை மிரட்டல் வந்ததாக முதல் நாள் பேட்டியில் கூறியிருந்தார்.

          கர்கறேயின் புள்ளட்புரூப் ஆய்வுக்கு வைக்கப் படாமல் குப்பைக்கு அனுப்பட்டதிலிருந்து பல சந்தேகங்களை அவர் எழுப்பியிருந்தார்.அவருடன் கொல்லப்பட்ட அசோக் என்ற அதிகாரியின் மனைவி தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பல உண்மைகளை வெளிக் கொண்டு வந்தார்.

          • Okay,my statement has no value.

            You tell me something,the congress is in power in the centre and the state. If Hindutva people are trying to eliminate karkare then why will the congress help them in anyway.

            I dont remember karkare’s wife saying anything like that.I remember BJP openly saying things about Karkare and the facts behind malegaon blast.

            Infact Kavita openly asked Digvijay Singh to shut up and not play votebank politics with her husband’s death.

            • காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தால் அது பிஜேபிக்கு ஆதரவாகிவிடும் என்பதாலே இத்தனை காலமும் முஸ்லிம்களை ஏமாற்றி வருகிறது.முஸ்லிம்களை ஏமாற்றவே திக்விஜய்சிங் அளிக்கும் பேட்டிகள்.
              திருமதி கவிதா அவர்கள் கோடியுடன் வந்த மோடியை ஓடோட விரட்டவில்லையா? அதைப் போலவே திக்விஜய் சிங்கின் பேட்டிகளையும் அவர் வெறுத்தார்.உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசியல் பேசிக் கொண்டு இருப்பதை அவர் விரும்பவில்லை.என்பதே உண்மை.
              தன்னுடைய சக அமைச்சரான பாண்ட்யாவை கொன்றுவிட்டு முஸ்லிம் தீவிரவாதிகள் கொன்றுவிட்டார்கள் என்று சிலரை கைது செய்தார் நரபலி மோடி . ஆனால் உண்மை அறிந்த பாண்ட்யாவின் தந்தை மோடியை பாண்ட்யாவின் உடலை காண வந்தபொழுது எதிர்த்தார்.மேலும் அடுத்து நடந்த பொது தேர்தலில் மணிநகரில் மோடியை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டார்.

              • That whole one crore story has been debunked long back.She said in Indian express that Modi visited them at the house,offered help and left.It was Digvijay singh who was saying things like Karkare called him and all that.

                Haren Pandya is the political rival of Modi and they had disagreements and until today we dont know who killed him.

                Regarding Congress no taking action,how will hindutva people doing malegaon blasts give votes to BJP.People who vote for BJP vote for it nonetheles regardless of anything and muslims vote for the congress regardless of any situation.

                why will middle people choose to vote for BJP/Shiv Sena just because they bombed a masjid.

                • ஹரிகுமார் ,திருமதி கவிதாவிடம் மோடி என்ன கூறியிருப்பார்? எத்தனை தடவை உனது கணவரை எச்சரித்தோம் கேட்டாரா? நீயும் எங்களை பற்றி ஏதாவது வாய் திறந்தால் என்ன ஆகும் ?என்று சொல்லி இருக்கக் கூடும் .அதனாலே அவர் பயந்து பேட்டி கொடுத்திருப்பார்.
                  ///Haren Pandya is the political rival of Modi and they had disagreements and until today we dont know who killed him.///
                  என்னையா இது ஒரு சக அமைச்சர் கொலை செய்யப்பட்டுள்ளார் .நேர்மையுடனும் திறமையுடனும் நடக்கும் மோடி ஆட்சி என்று நீங்களே புகழ்ந்து விட்டு இப்போது ஒரு அமைச்சர் கொலையாளியைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அதன் பொருள் என்னவோ?சாதாரண மக்களின் கதி என்ன ?முஸ்லிம்களின் கதி என்னா ஆகும் ? கொஞ்சம் கற்பனை பண்ணி பாருங்கள்
                  அதென்ன எங்காவது குண்டு வெடித்தால் மட்டும் அடுத்ர்த்த நிமிடமே இன்ன தீவிரவாதிகள் என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள் .ஒரு அமைச்சரை கொன்றவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை

                  • It is a political murder,just like Tha Kiruttinan.

                    You can assume anything you want but karkare was killed by kasab and congress wants to utilise the existing issue between karkare and modi to fault the hindutva forces.

                    • ஹரிகுமார் ,பாண்ட்யாவை கொன்றது மோடிதான் என்றாலும் அது தா.கிருட்டிணன் போன்ற அரசியல் கொலை என்கிறீர்கள்.பிறகு என் முதல் கட்ட விசாரணையில் முஸ்லிம் தீவிரவாதிகள் என்று சொன்னீர்கள்.இதை போலவே முன்னர் நடந்த உள்ளாட்சி தேர்தலில் படு தோல்வி அடைந்த நரபலி மோடி 2003 போது தேர்தலில் வெற்றி பெறவே திட்டமிட்டு ரயில் எரிப்பு நடத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்தார்.தனது அரசியல் ஆதாயத்திற்காக சக அமைச்சரைக் கொன்றவருக்கு 53 பயணிகளை கொல்வது சாத்தியக் கூறு இல்லையா?தெஹல்காவும் அதற்க்கான ஆதாரங்களை வைத்துள்ளதே .தெஹல்காவின் ஆதார அடிப்படையில் பிஜேபி தலைவர் கோர்ட் தண்டை பெற்றாரா இல்லையா?
                      அமேரீக்க மோடிக்கான விசாவை ரத்து செய்த பொழுது தனது செல்வாக்கு குறைந்து விடக் கூடாது என்று மோடியின் உயிருக்கு தீவிர வாதத்தால் ஆபத்து என்றும் அவரை கொல்ல வந்ததாக மகாராஷ்டிரா அப்பாவி மாணவி உட்பட நான்கு பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதும் கோர்ட் அதை கண்டித்ததும் தாங்கள் அறிய மாட்டீர்களா?
                      தா.கிருட்டிணன் அரசியல் கொலை போன்றே ஹிந்துத்துவாக்களும் அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம் தீவிரவாத கூச்சல் போட்டு வருகின்றனர்.

                    • ஹரிகுமார் //You can assume anything you want but karkare was killed by kasab ///
                      நீங்களும் இப்படியே அனுமானித்துக் கொள்ளுங்கள் .எனது அனுமானம் கர்கரேயை கொன்றது ஹிந்துத்துவா திட்டமிட்டபடி அதன் காக்கி போலீசாரே கொன்றார்கள் .இருவரின் அனுமானத்துக்கு இடையே ஒரு பொதுவான நியதியை பார்ப்போம்
                      கர்கரே ஒரு வரலாற்று சாதனை நிறுவியிருக்கிறார். இதுவரை எங்கு குண்டுவெடிப்பு என்றாலும் மற்றும் தீவிரவாத நடவடிக்கை என்றாலும் எவ்வித விசாரணையும் இல்லாமல் அப்பாவி முஸ்லிகளை கைது செய்து சாகடித்து வந்தார்கள் .ஆனால் அதற்கு திருப்பு முனையாக கர்கரே அவர்கள் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடித்து பெண் சாமியார் உட்பட முன்னால் ராணுவ அதிகாரி வரை காவி தீவிரவாதிகளை கண்டுபிடித்து பல ஆதாரங்களை முன்வைத்து நிருபணம் ஆகக் கூடிய வேளையில் அவரை கொல்லவேண்டிய நிர்பந்தம் முஸ்லிம் தீவிரவாதியான கசாப்புக்கு ஏன் வந்தது?சொல்வீரா?இந்நிலையில் அவரை கொல்லவேண்டிய கட்டாயம் யாருக்கு இருந்திருக்க வேண்டும்?
                      மிகப் பெரிய தாக்குதல் தாஜ் ஓட்டலில் நடைபெற்று வருகையில் அங்கு சட்டம் ஒழுங்கு கமிஷனரை அனுப்பிவிட்டு ரயில் நிலையத்திற்கு தீவிரவாததடுப்பு கமிசரான கர்கரேயை மும்பை போலிஸ் கமிசனர் வழக்கத்திற்கு மாற்றமாக கண்ட்ரோல் பொறுப்பை எடுத்துக் கொண்டு ரயில் நிலையத்திற்கு அனுப்பியது ஏன்?என்று கொல்லப்பட்ட போலிஸ் அதிகாரியான அசோக் என்பவரின் மனைவி கேட்டாரே ,இந்த கேள்வியில் நியாயம் வெளிப்படவில்லையா?

                • //why will middle people choose to vote for BJP/Shiv Sena just because they bombed a masjid.///
                  அவர்கள் குஜராத் காங்கிரசில் நல்ல தலைவர்கள் இல்லாத நிலையில் ஆதரிக்கலாம்.மேலும் நடுநிலை மக்கள் மீடியாக்களின் பொய் பிரச்சாரங்களை அதிகமாக நம்புகிறார்கள்.சமிபத்தில் புனே குண்டுவெடிப்பை பாருங்கள் அதில் சிக்கியவர்கள் ஹிந்துக்கள் என்றதும் ஹசாரே அமைப்பை சேர்ந்தவர்கள் என்று தகவல் இருந்தும் இந்தியாவுக்கு எந்த நிலையிலும் எதிர்நிலை இல்லாத ஜோர்டானை சம்பந்தப் படுத்துகிறார்கள் .ஒன்பது மாதங்கள் அங்கு வேலை செய்ததால் ஜோர்டான் இரண்டு குண்டுகளை கொடுத்து புனேயில் குண்டு வைக்க சொன்னதாக எக்ஸ்பிரஸ் க்ரூப் செய்தி வெளியிடுகிறது என்றால் சாதாரண ஹிந்து மக்கள் அதை நம்பவைக்க பிஜேபி சிவ சேனா க்களுக்கு மறைமுக பிரச்சாரம் நடக்கிறது

                  • ஒன்னு மட்டும் வெளங்குது பாய், கசாப்பு கடைக்காரனத்தான் ஆடு நம்புமாம். அத்த மாதிரி இருக்கு இந்தியாவில் இந்துக்களோட நெலமை. இங்க மட்டும் இல்லை பாய் எல்லா இடங்களிலும் மதவாதிகளுக்கு பின் செல்லும் மக்களின் நெலமையும் இதுதான்.

                    • This is because of the fear from other religions.Even otherwise Congress+Communist policies are stupid.

                    • //Even otherwise Congress+Communist policies are stupid.///

                      அதானே! நமக்கு முசல்மான கண்டதும் வெட்டனும் அந்த லாஜிக்தான் சரிப்பட்டு வரும் இல்லையா ஹரி,

                      ஹரி, இங்க திராவிட மொழி பேசற சனங்கள்ட்ட இங்கிளிபீஸ்ல எழுதுற ஒரே ஆளு நீர்தாய்யா.

                  • AM

                    Great logic,all loopholes seem to be filled but for one.You think Kasab needs a reason to kill anyone,he just came and shot whoever he saw,thats how Karkare & Vijay Salaskar died.

                    • ஹரிகுமார் ,நான் இங்கே வாதிப்பது கசாப்புக்காக அல்ல,கர்கரே போன்ற சத்திய சீலரை கொன்றுவிட்டார்கள் அந்த உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்ட வேண்டும் .அவந்தண்டிக்கப்பட வேண்டும் .கர்க்லரே மூலமாக வெளிவரவேண்டிய பல உண்மைகள் இப்போது மறைக்கப்பட்டு விட்டன..
                      ஒருவேளை கசாப் கர்கரேயை கொன்று இருந்தாலும் அவன் ஹிந்த்துதுவாகக்ளின் கூலிபடையாக இருந்திருக்க வேண்டும் .நீங்கள் சொல்லுவது போல அவன் இப்போது வெளி வந்தால் அவன் மற்றவர்களை சுடுவதற்கு முன்னர் காவி படையினரால் கசாப் சுட்டுக் கொல்லபடுவான்

                    • ஹரிகுமார் ///You can imagine anything you want and act like a saint,when u r not.///

                      நாங்கள் சொன்னால் இமேஜின் .தினமணி போன்ற ஆதிக்க சக்தி மீடியாக்கள் ஜோர்தானுக்கு தொடர்பு என்று எழுதினால் அவை செய்திகள்.

                      நாங்கள் தீவிரவாதத்தை எதிர்த்தால் அது நடிப்பு.நரபலி சாமியார் மோடி எதிர்ப்பதாக சொன்னால் அது தேச பக்தியா?

                      ஹரிகுமார் ,இது என்ன நீதி?

  12. Answer srinivas’ question vinavu.. If modi had been responsible for the Riots, why no other riots happened during all these years he had been in power?

    • அய்யிரே உம்ம காமெடிக்கு ஒரு அளவே இல்லாம போச்சு! ஒரு கொலை பண்ணாலும் கொலைகாரன்தான் ரெண்டு கொலை பண்ணாலும் கொலைகாரன்தான். ஒரு கொலை பண்ணவனுக்கு தண்டனையை குடுன்னா அவன் கொலைகாரன்னா ஏன் இன்னொரு கொலை பண்ணலைன்னு வெட்டி நாயம் பேசிட்டிருக்காங்க உங்களைப்போல படிச்ச தற்குறிகள்

    • திருடனுக்கு கூர்க்கா பதவி கொடுத்த மாதிரி தான் இதுவும்.

  13. கொலைகாரனுக்கு வக்காலத்து வாங்கும் இந்து வெறியர்கள்

  14. பார்ப்பனர்கள் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு மேய்ச்சல் நிலம் தேடி நாடோடிகளாக இந்த நாட்டுக்கு வந்தேறியவர்கள் எனபது மொழியியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் அடிப்படையிலான கூற்று.அதனை மறுக்க வரலாற்று ஆய்வுகள் எதனையும் முன்வைக்க முடியாத பார்ப்பனர்கள் மரபணு சோதனைகள் என்று சொத்தையான வாதங்களை வைக்கிறார்கள்.மனித இனமே ஆதியில் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி பின்னர் உலகெங்கும் பரவியது என்பதுதானே அறிவியல் ஆய்வாளர்களின் முடிவு.அப்படியிருக்க உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் கூட்டங்களுக்கு இடையில் மரபணு ரீதியிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் நிலவுவது ஒன்றும் பெரிய விசயமில்லை.அதனை ஒரு ஆதாரமாக வைத்து பூர்வகுடிகள் யார் என்பதை முடிவு செய்ய ஏலாது.

    பார்ப்பனர்கள் வந்தேறிகள் என்று சொல்றது அவர்களை இந்த நாட்டை விட்டு வெளிஏத்தணும் என்ற கெட்ட நோக்கத்தில் அல்ல.பிற பிரிவு மக்களை போல அவர்கள் இந்த நாட்டில் வாழ சகல உரிமைகளும் படைத்தவர்கள்.நானூறு ஆண்டுகளுக்கு முன் நாயக்கர்கள் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் வந்து குடியேறிய தெலுங்கு கன்னட மொழி பேசும் மக்களையே தமிழினம் என்று ஏற்றுக் கொண்டிருக்கும் நாம் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த பார்ப்பனர்கள் வெளியே போகட்டும் என சொல்வதில்லை. அவர்களை வந்தேறிகள் என ஏன் ”சொல்லிக்”காட்ட வேண்டியிருக்கிறது என்றால் பிற பிரிவு மக்களை கொல்லனும் தொரத்தனும் என்று வெறியாட்டம் போடும்போது ”நீயே வந்தேறி உனக்கு ஏது அந்த உரிமை” என கேட்க வேண்டியிருக்கிறது.

    • // பார்ப்பனர்கள் ஆடு மாடு மேய்த்துக் கொண்டு மேய்ச்சல் நிலம் தேடி நாடோடிகளாக இந்த நாட்டுக்கு வந்தேறியவர்கள் எனபது மொழியியல் மற்றும் வரலாற்று ஆய்வுகள் அடிப்படையிலான கூற்று.அதனை மறுக்க வரலாற்று ஆய்வுகள் எதனையும் முன்வைக்க முடியாத பார்ப்பனர்கள் மரபணு சோதனைகள் என்று சொத்தையான வாதங்களை வைக்கிறார்கள்.//

      ’ஆரியர்கள்’ என்றால் பார்ப்பனர்கள் மட்டுமில்லை.. ஆரியப் படையெடுப்பு என்ற ஒன்று அரசியல் கற்பிதம்.. ஒருவனை காலிலிருந்து தலைவரை தலைகீழாக வர்ணிப்பதாலேயே அவன் தலைகீழாக நிற்கிறான் என்று ஆகிவிடாது.. இந்தியாவிலிருந்து சுற்று முற்றும் சிதறிய புலம் பெயர்தலும் மொழியியல், வரலாற்று ஆய்வுகளை விளக்கமுடியும்..

      // மனித இனமே ஆதியில் ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி பின்னர் உலகெங்கும் பரவியது என்பதுதானே அறிவியல் ஆய்வாளர்களின் முடிவு.அப்படியிருக்க உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் கூட்டங்களுக்கு இடையில் மரபணு ரீதியிலான ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் நிலவுவது ஒன்றும் பெரிய விசயமில்லை.அதனை ஒரு ஆதாரமாக வைத்து பூர்வகுடிகள் யார் என்பதை முடிவு செய்ய ஏலாது. //

      அறிவியல் முறைகளால் ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கும் மரபணு ஆராய்ச்சியால் ஓரளவு துல்லியமாக ஒரு குறிப்பிட்ட இனக் குழுவின் ஆரம்பகால, சொந்த பிரதேசத்தை கணிக்கமுடியும் என்று அறிவியலாளர்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்று.. பார்ப்பனர்களின் R1a1* Y-haplotype ஆராய்சிகள் பார்ப்பனர்கள் இந்தியாவின் தொல்குடிகளிலிருந்து தோன்றியவர்கள் என்று நிறுவுகின்றன..

      • அம்பி,

        ஆரியன் இந்தியாவிற்கு வந்தேறி 5000 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும். அதனால் ஆரியன் இந்தியாவின் பழங்குடியாக இருக்கலாம். ஆனால் பூர்வகுடி கிடையாது. அவன் வந்தேறிதான். அதனால்தான் அவன் மற்ற் இந்திய இன மக்களுடன் ஒன்றிணைவது கிடையாது.

        • பாபு, உங்கள் வாதப்படிப் பார்த்தால் எல்லோரும் வந்தேறிகளே..!!!

          • ஆரியனுக்கு முன் இருந்த இந்த மண்ணின் மைந்தன் திராவிடன். எனவே இந்த மண்ணிற்குச் சொந்தம் கொண்டாட அனைத்து தகுதிகளும் உடையவன் திராவிடந்தான். அவன் எந்த மதத்தவனாக இருந்தாலும் சரியே!

              • ஹரிகுமார்,,ஆரியர்களைத் தவிர, மற்ற தென் இந்திய மக்கள்

                    • Is it so?

                      I am from thiruvananthapuram, i live in madras,speak malayalam & tamizh as my first languages.

                      i m aryan now is it?

                      looks like i have to ask you before filling up a form as to who i am.

                    • ஹரிகுமார்,

                      நீங்கள் ஆரியனோ அல்லது தீரவிடனோ அல்லது இரண்டும் சேர்ந்த அரிதிரவியமோ எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள், பிரச்சினை இல்லை. ஆனால் அது போலவே முஸ்லீம்களையும், கிறித்துவர்களையும் வாழவிடுங்கள். அவர்களும் இந்நாட்டினர்தான். நீங்கள் பிரச்சினை செய்வீர்களேயேனால் நாங்களும் செய்வோம்.

          • ஆம்,ஆப்ரிக்கா தவிர உலகின் அனைத்து பகுதிகளிலும் மனிதர்கள் வந்தேறிகளே.அதே சமயம் இந்தியாவை திராவிட இனம் சொந்தம் கொண்டாட முழு தகுதி படைத்தது.நினைவுக்கு எட்டாத காலத்திலேயே இந்த நாட்டில் குடியேறி காடாக கிடந்த நிலங்களை திருத்தி நாடு சமைத்து வேளாண்மை செய்து நாகரீகம் வளர்த்தவர்கள் அவர்கள்..பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்திருக்க கூடிய இந்த அரும்பணியில் காட்டு விலங்குகளிடமும் இயற்கை இடர்பாடுகளிலும் சிக்கி எத்தனை ஆயிரம் உயிரிழப்புகளை திராவிட இனம் சந்தித்தது எனபது யாருக்கும் தெரியாது.அவர்களோட உழைப்பிலும் தியாகத்திலும் விளைந்ததுதான் இந்த நாடு.கரையான் புற்றெடுக்க கருநாகம் குடியேறியது போல திராவிடர்கள் நாட்டை அபகரித்தவர்கள் ஆரியர்கள்.ஆகவேதான் சொல்கிறோம் திராவிடர்கள் இந்நாட்டின் பூர்வகுடிகள்.ஆரியர்கள் வந்தேறிகள்.

            • ஆரியத்துடன் இத்தனை நூற்றாண்டுகளாகக் கூடிக் குலவிக் கலந்த திராவிடர்கள் தங்கள் தமிழ் மூதாதையர்கள் வழி நில உரிமை கோரும் முன் ஆரியக் கலப்பை முற்றிலும் நிராகரித்துவிட்டு தமிழே தங்கள் மூல மொழி என்று வருவார்களா..? இதை மற்ற திராவிட மாநில மக்களிடையே போய் கூறியிருக்கிறார்களா தமிழகத்தில் திராவிடம் பேசுவோர்..? திராவிடனைத் தமிழனாக்காமல், தமிழனை திராவிடனாக்குவதா..?! ஆரியக் கருநாகத்துக்கு பதில் திராவிட ராஜநாகம்..?

        • There is nothing called,only aryan languages and dravidian languages.

          There is not even Aryan culture and other culture,people are all the same.

          Like Anbu said here, DNA testing does indeed give proof of someone’s lineage and is a very good marker to see who is related to whom,that disproves the nomadic tribes logic.

          And all the people of India are heavily intermixed and only language and culture is retained as caste/profession/temperment.

          Perhaps the only unmixed people are some tribal people in Andaman,thats all.

      • உங்க மரபணு பூச்சாண்டியும் கூட செல்லாது போல இருக்கே அம்பி.இதை படிச்சுட்டு வாங்க.

        http://s1.zetaboards.com/anthroscape/topic/4486895/1/

        உங்க R1a1 நீங்க மத்திய ஆசியாவிலிருந்து அல்லது இன்னும் தள்ளி ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வந்திருக்கணும்னு காட்டுது,

        • இந்த விவாத தளத்தில் ஸ்டெபானோவ் கூறுவது மோசடி (scandalous) என்று பதிலும் அதற்கு கீழே கொடுத்திருக்கிறார்களே, அதைப் படிக்கவில்லையா..?!

          தொடரும் ஆராய்சிகள், R1a1 இந்தியாவில்தான் தோன்றியது என்று உறுதி செய்து கொண்டுதான் இருக்கின்றன..

          http://www.genealogywise.com/group/geneticgenealogy/forum/topics/3463583:Topic:31080

  15. மோடி அன்னெ நீஙக எத்தனை முஷ்லிம் சகோத்ர சகோதரிகலை கொன்ரலும் உங்கலால் எந்த காலத்திலும் பிரத்மர் பதவிக்கு வர முடியாது இது இது சத்தியம் சத்தியம் யேன்னா நீஙகல் எல்லாம ஒரு பகடை காய்கல்

Leave a Reply to RAASU பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க