privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ !

ரிசானா நபீக் : கொலைகார சவுதி மன்னனின் அடியாள் பி.ஜெ !

-

லங்கலாகத் தெரிகிறது அந்தக் காணொளி. வெண்ணிற பர்தா அணிந்த அந்தப் பெண் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறாள். அருகே  சவுதி ஷேக் உடையணிந்த இரண்டு பேர் நிற்கிறார்கள். அவர்களைச் சுற்றி சீருடை அணிந்த, காவலர்கள் போல தோற்றமளிக்கும் சிலர் நிற்கின்றனர். அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொள்கிறார்கள். அருகாமையில் சில வாகனங்கள் மற்றும் பல மனிதர்கள் கூட்டமாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஷேக் உடையணிந்த மனிதர்களில் ஒருவர் இடையிடையே மண்டியிட்டு அமர்ந்திருக்கும் பெண்ணின் காதில் எதையோ சொல்லியவாறே இருக்கிறார். மெல்லக் காட்சிகள் நகர்கின்றன. என்ன நடந்தது என்பதை நாம் ஏற்கனவே அறிந்திருந்ததால் உள்ளத்தின் ஆழத்தில் இயலாமையும், ஆத்திரமும் பிசைய, பின்னணியில் வழிந்த இசை இன்னதென்று தெரியாத ஒரு அதீத பயத்தைக் கிளப்புகிறது.

சற்று நேரத்தில் அந்த இருவரில் ஒருவர் மட்டும், மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணின் கழுத்தைத் தொட்டு குனிய வைக்கிறார்,  பின் அப்பெண்ணின் தோளில் தட்டி விட்டு நகர்கிறார். வேளை நெருங்கி விட்டது என்பதை அப்பெண் உணர்ந்திருப்பாளோ? அந்த நேரம் அவளது மனதில் என்ன நினைத்திருப்பாள் என்று நமது மனம் பரிதவிக்கிறது.

அந்தப் பெண்ணிடமிருந்து நகர்பவர் தனது இடையிலிருந்து நீண்ட வாள் ஒன்றை உருவியெடுக்கிறார். அப்போது மட்டுமல்ல ஆரம்பம் முதலே அந்தப் பெண் அமைதியாய், எந்தச் சலனமும் இன்றி, எந்த எதிர்ப்பும் இன்றித் தலை கவிழ்ந்தபடியேதான் இருக்கிறாள். வெயிலில் பளபளக்கும் அந்த வாள் நிதானமாய் மேலெழுந்து அந்தப் பெண்ணின் பின்னங்கழுத்தைக் குறிவைத்து சட்டெனக் கீழ் இறங்குகிறது. ஒரே வெட்டில் அவள் தலை துண்டிக்கப்படுகிறது….

காணொளியின் காட்சிகள் முடிந்தது. ஆனால், அது உண்டாக்கிய உள்ளக் கொதிப்பும் ஆற்றாமையும் ஆத்திரமும் அவ்வளவு சீக்கிரம் முடிந்து போகாது. போகக் கூடாது.

அவள் பெயர், ரிசானா நஃபீக்

ரிசானா-நபீக்
ரிசானா நபீக்

அவள் இலங்கையைச் சேர்ந்தவள். இசுலாமியத் தமிழ்ப் பெண். கிழக்கு இலங்கையில் இருக்கும் மூதூர் கிராமத்தில் ஒரு ஏழை முசுலீம் குடும்பத்தில் பிறந்தவள். 2004-ம் ஆண்டு நிகழ்ந்த சுனாமி தாக்குதலைத் தொடர்ந்து அவள் தந்தையின் வருமானம் நின்று போகிறது;  குடும்பம் வறுமையின் பிடியில் சிக்குகிறது. பள்ளியில் நன்றாகப் படிக்கும் சிறுமி எனப் பெயர் வாங்கியிருந்த ரிசானா, குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைப் போக்க வெளிநாட்டுக்கு வேலை செய்யத் தயாராக இருப்பதாக வீட்டாரிடம் தெரிவிக்கிறாள். அது 2005-ம் ஆண்டு.

1988 பிப்ரவரி  மாதம் பிறந்தவளான ரிசானாவுக்கு அப்போது 17 வயது தான் ஆகியிருந்தது. பிழைக்க வேறு வாய்ப்புகள் இல்லாத அக்குடும்பத்தை அணுகும் இடைத்தரகன் ஒருவன், ரிசானாவின் பிறந்த தேதியை 02-02-1982 என்பதாக போலிச் சான்றிதழ் தயாரித்து அதனடிப்படையில் கடவுச் சீட்டும், சவுதியில் வேலை செய்வதற்கான பணி அனுமதியும் வாங்கித் தருகிறான். 2005 மே 4-ம் தேதி ரிசானா சவுதி செல்கிறாள். சவுதியின் தலைநகர் ரியாத்தில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தவாதமீசா  எனும் பகுதியைச் சேர்ந்த பணக்கார சவுதி ஷேக் ஒருவரின் வீட்டில் வேலைக்குச் சேர்கிறாள்.

வீட்டைப் பராமரிப்பது, சமைப்பது உள்ளிட்ட வேலைகளோடு மூன்று மாதங்களே நிரம்பியிருந்த ஷேக்கின் குழந்தையைப் பராமரிக்கும் வேலையையும் கவனித்து வருகிறாள். அதே மாதம் 22-ம் தேதி 17 வயதே நிரம்பியிருந்த ரிசானாவின் பொறுப்பில் தனது  மூன்று மாதக் குழந்தையை ஒப்படைத்து விட்டு வெளியே செல்கிறாள் அந்த வீட்டின் எஜமானி. முன்பின் அனுபவமில்லாத ரிசானா, குழந்தைக்கு புட்டிப் பால் புகட்டுகிறாள். சற்று நேரத்தில் அக்குழந்தைக்குப் புரையேறி மூக்கிலிருந்து பால் வடிகிறது. என்ன நேர்ந்தது என்பதை உணராத ரிசானா, குழந்தைக்கு நீவி விடுகிறாள். குழந்தை தூங்கி விட்டதாகக் கருதிக் கொண்டு வேறு வேலைகளில் மூழ்குகிறாள்.

சற்று நேரத்தில் வீட்டுக்கு வரும் எஜமானி, குழந்தை இறந்து போயிருப்பதை காண்கிறாள் – ரிசானாவை அடித்துத் துன்புறுத்துகிறாள். தொடர்ந்து காவல் துறையிடம் கையளிக்கப்படும் பதினேழு வயதே நிரம்பிய சிறுமி ரிசானா மொழி தெரியாத நாட்டில், நண்பர்களோ உறவினர்களோ இல்லாத சூழலில் ஒரு கொலைப்பழியை எதிர் கொண்டு நிற்கிறாள். போலீசாரும் கண்மண் தெரியாமல் அடித்து வாக்குமூலம் கேட்கிறார்கள் – தமிழ் மட்டுமே அறிந்திருந்த ரிசானாவுக்கு மொழிபெயர்ப்பாளராக கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்கிறார்கள். அடி பொறுக்க முடியாமலும், கர்நாடகத்தைச் சேர்ந்தவர் (சிலர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள்) மொழிபெயர்த்துச் சொன்னதை விளங்கிக் கொள்ள முடியாமலும், அரபி மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலப் பத்திரத்தில் எழுதப்பட்டது என்னவென்று அறியாமலும் அதில் கையொப்பமிடுகிறாள் ரிசானா.

வழக்கு விசாரணைக்கு வருகிறது. இரண்டாவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்படுகிறார். ரிசானா தன்மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றத்தை மறுக்கிறாள். அரபு தேசத்தில் நடந்த அந்த விசாரணையில், அரபிக் குடும்பம் தொடுத்த வழக்கில், தனது தரப்பில் வாதாட யாருமே இல்லாமல் ரிசானா நிர்கதியாக நின்ற நிலையில், நீதிமன்றத்தில் பேசப்படுவது என்னவென்பதையே புரிந்து கொள்ள முடியாமல் ரிசானா தவித்துக் கொண்டிருந்த நிலையில், அரபு போலீசார் முன்வைத்த ‘ஆதாரங்கள்’ மற்றும் குழந்தையின் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடந்த அந்த ஒரு தலைப்பட்சமான விசாரணைகளின் முடிவில் அவளுக்கு ஷரியத் சட்டங்களின் அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம். அது 2007-ம் ஆண்டு ஜூன்மாதம்.

2005-ம் ஆண்டு மே மாதத்திலிருந்தே சிறையிலடைக்கப்பட்ட ரிசானாவின் நிலை சுமார் ஓராண்டு காலம் வெளியுலகுக்கே தெரியவில்லை. அவளது வீட்டாருக்கும் எந்தத் தகவலும் அளிக்கப்படவில்லை. ஹாங்காங்கைத் தலைமையகமாய்க் கொண்டு செயல்படும் ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தான் முதலில் இதை வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளது. அதைத் தொடர்ந்து ரிசானாவுக்கு அளிக்கப்பட்ட ஒரு தலைபட்சமான தீர்ப்பு உலகெங்கும் இருக்கும் மனித உரிமை ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

சர்வதேச மனித உரிமை அமைப்புகளின் ஒத்துழைப்போடு ரிசானாவுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யப்படுகிறது. மேல் முறையீட்டில் கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பே உறுதி செய்யப்படுகிறது. உலகளவில் இது சர்ச்சைக்குள்ளாகி விட்டிருந்த நிலையில், இலங்கையிலும் மக்கள் போராட்டம் வலுத்த நிலையில், இலங்கை அரசு இதில் தலையிட்டு மனிதாபிமான அடிப்படையில் ரிசானாவை விடுதலை செய்யக் கோருகிறது. தமிழ் மக்களைக் கொன்று குவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே கூட மக்கள் போராட்டங்களுக்காக கொஞ்சம் ‘மனமிறங்கி’ சவுதி அரசுக்குக் கடிதங்கள் அனுப்புகிறார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளோடு மேற்குலகின் பிரபலங்களும் ரிசானாவை விடுவிக்க வேண்டுமென்று கோருகிறார்கள்.

குழந்தையின் பெற்றோர் இறந்த தமது குழந்தைக்கு பதிலாக ரிசானாவிடமிருந்து ‘குருதிப் பணம்’ பெற்றுக் கொண்டு மன்னிக்கத் தயாராக இருந்தால், ஷரியா (ஷரியத்) சட்டப்படி அவள் சிரச்சேதத்திலிருந்து தப்ப முடியும் என்று ஷரியா சட்டம் கூறுகிறதாம். உடனே, சவுதி இளவரசர் குழந்தையின் பெற்றோர்களிடம் நேரடியாக பேசிப் பார்த்தாராம். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டார்களாம். இதெல்லாம் மரண தண்டனையை தவிர்ப்பதற்கு தான் மேற்கொண்ட முயற்சிகள் என்று சவுதி அரசு கூறுபவை.

ரிசானாவின் உறவினர்களும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளும் அந்தப் பெற்றோருக்கு அனுப்பிய மன்னிப்புக் கடிதங்களும் மன்றாடல்களும், அல்லாவிடம் செய்யப்பட்ட துஆக்களும் ரிசானா மீண்டும் ஊர் திரும்புவாள் என்று வைத்த நம்பிக்கைகளும் பயனற்றுப் போயின. கடந்த ஜனவரி 9-ம் தேதி சவுதி உள்ளூர் நேரப்படி முற்பகல் 11:40க்கு ரிசானாவின் தலை வெட்டி வீழ்த்தப்பட்டது. காண்போர் பதைபதைக்க அல்லா அருளிய ஷரியத் சட்டப்படி பச்சையாய்ப் படுகொலை செய்யப்பட்டாள்.

ஷரியத் சட்டத்தை முன்வைத்து நடக்கும் வெட்டி விவாதங்கள்!

ரிசானாவின் படுகொலை உலகெங்கும் கடும் விவாதங்களைத் தூண்டியுள்ளது. இசுலாமிய ஷரியத் சட்டங்கள் சரியா தவறா என்பதைச் சுற்றி இவ்விவாதங்கள் நடந்து வருகின்றன. முசுலீம்களில் கடுங்கோட்பாட்டுவாதிகளான வகாபிகள் தவிர மற்றவர்களால் ரிசானாவின் கொலையை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இவர்களில் ஜனநாயக பூர்வமாகச் சிந்திக்க கூடிய மிகச் சிலர் மட்டும் இந்த தண்டனையை மாத்திரமின்றி, இதற்கு அடிப்படையாய் இருக்கும் ஷரியத் சட்டங்களையே கூட கேள்விக்குட்படுத்தி விமர்சிக்கிறார்கள்.

வகாபிகள் அளவுக்கு கடுங்கோட்பாட்டுவாதிகளாக இல்லாவிட்டாலும், இசுலாமிய சட்டங்களின் மேல் விசுவாசம் கொண்ட பலரும் இந்தக் கொலைக்குப் பல்வேறு வகையான வியாக்கியானங்களைத் தருகிறார்கள். அவற்றைப் பின்வருமாறு தொகுக்கலாம் –

  1. குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிசானா காரணமாக இருந்திருந்தால் இந்தத் தண்டனை மூலம் அவர் இவ்வுலகிலேயே தூய்மைப்படுததப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்து விடுவார். அவருக்கு நல்ல எண்ணங்கள் இருந்திருந்தால் அதனடிப்படையில் அவர் உயர்ந்த சொர்க்கத்தை அடைவார்.
  2. அவள் எந்தக் குற்றமும் செய்யாமல் அநியாயமாகத் தண்டிக்கப்பட்டிருந்தால் அதுவும் அவருக்கு நன்மையே, அல்லாவிடத்தில் அதற்கான சிறந்த கூலியைப் பெற்றுக்கொள்வாள்.
  3. அறிந்து கொண்டே அவளுக்கு யாரும் அநீதி இழைத்திருந்தால் நிச்சயம் அவர்கள் அநியாயக்காரர்கள். அல்லாவின் கடுமையான தண்டனையிலிருந்து அவர்கள் ஒருபோதும் தப்ப முடியாது.
  4. மேலும் மன்னிப்பு என்பது பாதிக்கப்பட்டவருக்கு இஸ்லாம் வழங்கிய உரிமையாகும், அவர் விரும்பினால் மன்னிக்கலாம், மன்னிக்காமலும் விடலாம். அவர் மன்னிக்கவில்லை என்பதற்காக குற்றவாளியோ, பாவியோ கிடையாது. அல்லா வழங்கிய உரிமையில் தலையிடவும், அவரை வஞ்சிக்கவும் நாம் யார் ?

அதாவது அனைவரின் கண் முன்பாகவே இகலோகத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு யாருமே காணாத பரலோகத்தில் தண்டனை வழங்கப்படும் என்று நம்ப வேண்டுமாம். ரிசானாவைப் போன்ற ஏழைகள் – மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் –  ஷேக் குடும்பங்களைச் சாராதவர்கள் அநியாயமான முறையில் கொடூரமாகக் கொல்லப்பட்டால் ‘சொர்க்கம்’ கிடைக்குமாம்; யாருக்குத் தேவை அந்தச் சொர்க்கம்? ‘உளச் சுத்தியோடும் அர்ப்பணிப்போடும் வாழ்நாள் முழுக்க, மேல் வருணத்தாருக்கு நீ பீ அள்ளிக் கொண்டேயிருந்தால், உனக்கு அடுத்த பிறவியில் வருண புரமோசன் கிடைக்க கூடும்’ என்று கூறும் மனுநீதியின் அரபு மொழியாக்கம் தான் இந்த வாதங்கள்.

சுலாமிய மதவாதிகளின் தரப்பிலிருந்து இப்படுகொலையை ஆதரித்து வைக்கப்படும் அயோக்கியத்தனமான வாதங்களை உலகெங்குமுள்ள பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் கண்டித்து வருகிறார்கள். அந்த வகையில், சமீபத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், நக்கீரன் இதழில் எழுதி வரும் ‘எதிர்குரல்’ எனும் தொடரில் கண்டித்திருந்தார். வழக்கின் விவரங்களை நேர்மையாக அலசும் மனுஷ்யபுத்திரன், மனிதாபிமானமற்ற விதத்தில் ரிசானா கொல்லப்பட்டது எவ்வகையிலும் நியாயமில்லை என்கிறார். ‘கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல்’ என்கிற பழங்காலத்திய இனக்குழு சமூகங்களின் தண்டனை முறைகளை அப்படியே இன்றும் பின்பற்றுவது என்ன நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்.

மனுஷ்யபுத்திரனின் கட்டுரை வெளியானதும் அதை எதிர்த்து காட்டு மிராண்டித்தனமான எதிர்வினை தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த வகாபியர்களிடமிருந்து எழுகிறது. தவ்ஹீத் ஜமாத்தின் பி.ஜெயினுலாபிதீன், தனது தளத்தில் கிட்டத்தட்ட  மனுஷ்யபுத்திரனை கொன்று போட வேண்டும் என்ற தோரணையில் இரத்தவெறி பிடித்து எழுதியிருந்தார்.  மேற்கோள் காட்டுவதற்கோ விவாதிப்பதற்கோ எந்த வகையிலும் தகுதியோ தராதரமோ இல்லாத நாலாந்தர பொறுக்கியின் மொழியில் ஏகவசனத்தில் எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையின் சுருக்கமான சாரம் இது தான் – “டேய் இடுப்புக்கு கீழே கால் இல்லாத மிருகபுத்திரா உன் குழந்தையை இப்படி கொன்றால் மன்னிப்பாயா?”

மனுஷ்யபுத்திரனை ரத்த வெறியுடன் கண்டிக்கும் ஜெயினுலாபிதீனின் கட்டுரை
மனுஷ்யபுத்திரனை ரத்த வெறியுடன் கண்டிக்கும் ஜெயினுலாபிதீனின் கட்டுரை

 

இத்துப்போன மதச் சட்டத்துக்கு விளக்கம் எதற்கு?

ஷரியத் சட்டங்கள் சரியானது தான் என்று நிறுவும் நோக்கம் கொண்ட மேற்படி வாதங்களில் இருக்கும் அபத்தங்களை ஆராய்ச்சி செய்வதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். எனினும் ஜெய்னுல்லாபிதின் உள்ளிட்ட வகாபியரின் இரத்தவெறி பிடித்த காட்டுக்கூச்சல்களின் முன் சில எளிய கேள்விகளை முன்வைக்கிறோம்.

ஈராக்கில் போர் துவங்குவதற்கு முன்பதாகவே பொருளாதாரத் தடை விதித்து மருந்துப் பொருட்களைத் தடுத்து ஐந்து இலட்சம் இராக்கிய குழந்தைகளை சாகடித்தது அமெரிக்கா. இதையெல்லாம் சவுதி அரசின் இடம், பணம், பொருள், ஆள்பல உதவியுடன்தான் அமெரிக்கா செய்தது.

ஷேக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தை ஒன்றின் இறப்புக்காக இந்த அளவுக்குத் துள்ளிக்குதிக்கும் பீ.ஜே, அமெரிக்காவின் அடியாளாக செயல்பட்டு உலகெங்கும் இசுலாமிய மக்களை கொன்று குவிப்பதற்கு துணை நின்ற சவுதி அரசை தண்டிக்க, இசுலாமிய சட்டத்தில் என்ன ஷரத்துகள் இருக்கின்றன என்று இவர்கள் இதுவரை ஆராய்ச்சி செய்யாத காரணம் என்ன?  ‘காஃபீர்களோடு’ கைகோர்த்து நிற்கும் சவுதி ஷேக்குகளின் பணத்தில் மஸ்ஜித் கட்டி தொழுகை நடத்துவதைக் காட்டிலும், மானங்கெட்ட வேலை எதுவுமில்லை என்றும், அப்படி காசு வாங்குபவன் இசுலாமியனே இல்லை என்றும் இவர்கள் ஏன் கூறுவதில்லை.

ஷரியத்தின் படி அந்தக்காசையெல்லாம், இராக் மக்களின் சார்பில், குருதிப் பணமாக வரவு வைத்துக் கொண்டு, சவூதி ஷேக்குகளின் குற்றத்தை மன்னித்துவிட்டார்களா பி.ஜே க்கள்?

ஜெயினுலாபிதீன்
பி.ஜெயினுலாபிதீன்

மிகவும் விரிவான வாழ்வியல் வழிகாட்டுதல்களைக் கொண்டதாகச் சொல்லப்படும் ஷரியத் சட்டங்களின் படி, மூன்றாம் உலக நாடுகளில் இருந்து அதிலும் குறிப்பாக இசுலாமிய மதத்தைச் சேர்ந்த பெண்கள் அரபு தேசங்களுக்குச் சென்று வீட்டு வேலைகளில் ஈடுபடும் போது சந்திக்கும் பாலியல் கொடூரங்களுக்காக சவூதி ஷேக்குகள் எத்தனை பேரின் தலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன?

ஆப்கானிய தாலிபான்கள் ஷரியா சட்டப்படி பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்கிறார்கள், ஆண் துணையின்றி வெளியிடங்களுக்குச் சென்றாலே பெண்களைக் கொன்று போடுகிறார்கள் – ஆனால், அரபு தேசங்களோ மூன்றாம் உலக ஏழை நாடுகளில் இருந்து இசுலாமிய சிறுமிகளை வேலைக்கு தருவித்துக் கொள்கிறார்கள். அவர்களைச் சுரண்டுகிறார்கள்: பாலியல் வக்கிரங்களுக்கு கிடைத்த இலவசமான அடிமைகளாக கருதி அந்த பிஞ்சுகளைக் குதறுகிறார்கள்.

வெளி வேலைக்கு ஒரு பெண் விமானமேறுவதை ஷரியா அனுமதிக்கவில்லையென்றால், வளைகுடா ஷேக்குகள், இசுலாமிய ஏழைச் சிறுமிகளை எப்படி இறக்குமதி செய்கிறார்கள்? ஆண்கள் கூப்பிடுவது குற்றமில்லை, பெண்கள் போவதுதான் குற்றம் என்கிறதா இவர்களது சட்டம்? பரவாயில்லையே, நம்மூர் விபச்சார தடை சட்டம் மாதிரியே “நடுநிலையாக” இருக்கிறதே!

“இந்த விசயத்தில்” அல்லாவுக்கு பயந்து, நடந்து கொள்ள விரும்பும், 60, 70 வயதுக்கு மேற்பட்ட உண்மையான முஸ்லிம்கள், (ஷேக்குகள்,) 15 வயது சிறுமியாக இருந்தாலும் நிக்கா செய்து ஐதராபாத்திலிருந்து அழைத்துக் கொண்டு போய்விடுகிறார்கள். நிக்கா செய்து அழைத்துப் போவதால், இகலோகத்தில் பாஸ்போர்ட் விசா பிரச்சினையும் இல்லை. ஷரியா படி நடந்து கொள்வதால் சுவனத்தில் போதுமான பெண்களும் கிடைப்பதற்கும் உத்திரவாதம் உண்டு. இதெல்லாம் பி.ஜே போன்ற ஷரியா கன்சல்டன்சி சர்வீசஸ் நடத்துவோர் கொடுக்கும் ஐடியாவா, அல்லது டிராவல் ஏஜென்சி நடத்தும் முஸ்லிம்கள் கொடுத்த ஐடியாவா தெரியவில்லை.

குரானோ, ஷரியத்தோ சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு எந்தத் தகுதியும் கொண்டவையும் அல்ல. நம்மைப் பொருத்தளவில் பார்ப்பன மனுநீதியை எந்த அளவுக்கு ம(மி)திக்கிறோமோ அதே தகுதியைத்தான் ஷரியத்திற்கும் ஒதுக்கியிருக்கிறோம்.

“இந்து சட்டம் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்ட அனுமதித்த்து. எங்கள் சட்டம் நான்கோடு உச்ச வரம்பு விதித்து விட்டது. அப்படிப் பார்த்தால் நாங்கள் தானே முற்போக்கு” என்று இசுலாமிய நண்பர்கள் தயவு செய்து கேட்காதீர்கள். அப்புறம் எங்கள் மதச்சட்டப்படி உச்ச வரம்பு 3 என்று யாராவது வருவார்கள். இன்னொருவன் எங்கள் மதத்தில் எல்லோரும் பாச்செலர்தான் என்பான். இந்த லூசுத்தனங்களின் பின்னால் மூச்சுக் கொடுத்துக் கொண்டிருப்பதல்ல நமது வேலை.

மதங்கள் உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்கள் எனப்படுபவை அவை தோன்றிய காலத்துக்கு மட்டுமே உரியவை. 7ம் நூற்றாண்டில் நாகரீகமற்று இனக்குழுக்களாய் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த ஃபதூயின் இன அரபிக்களை முகம்மது நபி அவருக்கு அந்தக்காலம் வழங்கியிருந்த வாய்ப்புகளுக்குட்பட்டு நெறிப்படுத்தினார். அந்தக் காலத்துக்கு மட்டும் பொருந்தக் கூடிய வாழ்வியல் நடைமுறைகளை வகுத்துக் கொடுத்தார். அதன் கதை அன்றோடு முடிந்தது. இது 21ம் நூற்றாண்டு. பங்குச் சந்தை சூதாட்டங்கள் பற்றியோ, இணைய வக்கிரங்கள் பற்றியோ, பாலியல் திரைக்காட்சிகள் பற்றியோ அல்லது விலையேற்றம், மின்சாரத் தடை, கேஸ் சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சமகால வாழ்க்கைச் சிக்கல்களுக்கு குரானிலோ பைபிளிலோ என்ன சொல்லப்பட்டுள்ளது என்று தேடிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்.

ஆனால் ஜெய்னுல்லாபிதின் முதலான வகாபியர்கள் அந்த ஏழாம் நூற்றாண்டு விதிப்படிதான் இன்றும் வாழ வேண்டும் என்று பரிதாபத்திற்குரிய இசுலாமிய மக்களுக்கு கட்டளை போடுகிறார்கள். இல்லையென்றால் பத்வா விதித்து கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறார்கள். மனுஷ்யபுத்திரனுக்கு அவர் எழுதியுள்ள காட்டுமிராண்டித்தனமான மிரட்டலை பார்த்தால் போதும். இவர்கள் கையில் ஆட்சி அதிகாரம் மாட்டிக் கொண்டால் தமிழ்நாட்டில் ஏழை முஸ்லிம்கள், தலையில்லாமல் வாழும் கலையைக் கற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பணக்கார முஸ்லீம்கள், பி.ஜே யிடம் பணம் கட்டி, சொர்க்கத்துக்கு நுழைவுச்சீட்டு வாங்கிவிடுவார்கள்.

ஜெய்னுல்லாபிதின் உள்ளிட்ட வகாபியர்கள் இப்படியெல்லாம் இரத்த வேட்கையுடன் ஊளையிடுவதற்கு காரணம் இல்லாமலில்லை.

பி ஜெயினுலாதீன் பிளாக்
பி ஜெயினுலாபிதீன் இணைய தளம் ஆன்லைன் பிஜெ

 

யார் இந்த வகாபியர்கள் ?

வகாபிசம் அல்லது சலாஃபியிசம் என்று அழைக்கப்படும் சுன்னி இசுலாமியக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் பிறப்பிடம் அரேபியத் தீபகற்பம். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த முகம்மது இப்னு அல்-வஹாப் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டதுதான் வகாபிசம் எனும் இந்த மதப்பிரிவு. மிகக் குறைந்த மக்கள் தொகையும் மிகப் பரந்த பாலைவனமும் கஞ்சிக்கே வழியில்லாத பொருளாதாரமும் கொண்டிருந்த அரபு தீபகற்பத்தில் நம்மூர் பாளையக்காரர்கள் போல கும்பல் கும்பலாய்ப் பிரிந்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். இதில் திரிய்யா எமிரேட் எனப்படும் பகுதியின் இளவரசரான முக்கம்மது இப்னு சவூத்தோடு கைகோர்க்கும் வஹ்ஹாப், மதக் கடுங்கோட்பாட்டுவாதத்தை  அடிப்படையாக வைத்து இசுலாமிய நாடு ஒன்றை உருவாக்க முனைகிறார்.

1744ல் திரிய்யா எமிரேட் சவுதி அரசானதைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி பல்வேறு விரிவாக்கச் சண்டைகளில் இறங்குகிறது. ஏற்கனவே அந்தப் பகுதியில் நிலவிய தர்ஹா வழிபாடு உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற இசுலாமிய நம்பிக்கைகளை வாள் முனையில் ஒழித்துக் கட்டுகிறார்கள். சவுத்தின் அதிகாரம் 19 நூற்றாண்டின் துவக்கத்தில் ஒட்டோமன் சாம்ராச்சியத்தின் எகிப்திய தளபதியினால் ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்படுகிறது. அதைத் தொடர்ந்து 20-ம் நூற்றாண்டின் துவக்க காலம் வரைக்கும் ஒரு நிலையான அரசாட்சியின்றி சவுத் வம்ச வாரிசுகள் அலைந்து கொண்டிருக்கிறார்கள். சில காலத்திற்கு ரியாத்தைச் சுற்றியுள்ள மிகச் சிறிய பகுதியைக் கட்டுப்படுத்தவும் செய்கிறார்கள்.

முதலாம் உலகப் போரின் சமயத்தில் நேசநாடுகளுக்கு (இங்கிலாந்து பிரான்ஸ், ரஷ்யா) எதிரணியான அச்சுநாடுகளோடு (ஜெர்மன், ஆஸ்த்ரியா, இத்தாலி) இருக்கிறது துருக்கியை மையமாகக் கொண்ட ஒட்டோமன் பேரரசு. இந்நிலையில் ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்துக்கு உட்பட்ட அரேபிய பகுதியைச் சேர்ந்த குட்டிக் குட்டி பாளையக்காரர்களில் சிலர் ஒட்டோமன் சாம்ராஜ்ஜியத்திலிருந்து விடுபடுவதற்காக இங்கிலாந்தை ஆதரிக்கின்றனர். அதில் முதன்மையாக இருக்கிறார் சவுத் வம்சாவளியைச் சேர்ந்த இப்னு சவுத். அவருக்கு துணையாக நின்றது வகாபிய அடிப்படைவாதத்திற்கு ஆட்பட்டிருந்த பழங்குடியினர்.

வஹாப் மற்றும் சவூத் குடும்பங்கள் அன்றிலிருந்து இன்று வரை பரஸ்பர திருமண பந்தங்களின் மூலம் இணைந்துள்ளன – இவர்கள் தாம் சவுதி அரசின் பல்வேறு அடுக்குகளில் அமர்ந்து அதிகாரம் செலுத்துகிறார்கள்.

மேலும் விரிவான வாசிப்புக்கு

அமெரிக்க - சவுதி காதல் கதை
அமெரிக்க – சவுதி காதல் : முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் சவுதி மன்னருடன்

20ம் நூற்றாண்டில் மத்திய கிழக்கில் எண்ணை வளம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு ஏகாதிபத்திய நாடுகளிடயே அதைக் கைப்பற்றும் நாய்ச்சண்டை மூள்கிறது. இதில் சவுதி அரச குடும்பம் நேரடியாக அமெரிக்காவின் காலில் சரணாகதியடைகிறது. எண்பதுகளில் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளை விரட்டியடிக்க நேரடியாக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட முஜாஹித்தீன் குழுக்களுக்கு அமெரிக்க உத்தரவின் படி, ஆள் பலம் முதல் மத அடிப்படையிலான தத்துவ அடிப்படை வரை வழங்கியதும் இசுலாமிய மதவெறியையும் ஊட்டியதும் சவுதியைச் சேர்ந்த வகாபிகளே.

மட்டுமின்றி, அமெரிக்காவின் ஏகாதிபத்திய நலன்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் நடத்திய ஈராக் போர் உள்ளிட்ட பல்வேறு போர்களிலும் அமெரிக்காவின் மத்திய கிழக்குப் பிராந்திய செல்ல ரவுடியாக செயல்பட்ட இசுரேலுக்கும் சவுதி நேரடியான நட்பு நாடாகவும் அடியாளாகவும் விளங்கி வருகிறது. ஈரான், சிரியா, லெபனான் என்று எங்கெல்லாம் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு அடியாட்களும் கூலிப்படையும் தேவையோ அங்கெல்லாம் முன்னின்று உதவிக்கு வருவது சவுதி அரசும் அதன் வகாபிய தத்துவமும் தான்.

உலகெங்கும் இசுலாம் அல்லாத மக்களிடையே எழும் ஏகாதிபத்திய எதிர்ப்பியக்கங்களை நிறுவனமயமாக்கி நீர்த்துப் போகச் செய்ய என்.ஜி.ஓக்களை அமெரிக்கா நம்பியிருக்கிறதென்றால், இசுலாமியர்களை அரசியல் ரீதியில் காயடிக்க சவுதி வகாபியம் உதவி செய்கிறது. சவுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளில் நேரடியாக அமெரிக்கா முதலீடு செய்துள்ளது என்றால், அவற்றில் பங்குகளைக் கொண்டிருக்கும் ஷேக்குகள் தங்கள் வருமானத்தை முதலீடு செய்வதும் அமெரிக்காவில் தான். அமெரிக்கப் பங்குச சந்தையில் மட்டுமின்றி, வால்வீதியின் முக்கியமான நிதிமூலதன வங்கிகள் உள்ளிட்ட முக்கியமான தேசங்கடந்த பன்னாட்டுத் தொழிற் கழகங்களின் பங்குகளிலும் ஷேக்குகள் தங்கள் பணத்தைக் கொட்டியிருக்கிறார்கள். ஒருவேளை இராணுவ ரீதியிலோ பொருளாதார ரீதியிலோ அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ச்சியடையுமானால் அது அரபி ஷேக்குகளையும் தன்னோடே பாதாளத்திற்குள் இழுத்துச் சென்று விடும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், இவர்கள் இருவரின் நலனும் பிரிக்கவொண்ணாதபடிக்கு பரஸ்பரம் பிண்ணிப் பிணைந்து கிடக்கிறது.

ரூபர்ட் முர்டோச்சின் ஸ்டார் குழுமத்தைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உலகெங்கும் அமெரிக்கா நடத்தும் இசுலாமிய நாடுகளுக்கு எதிரான ஆக்கிரமிப்புப் போர்களுக்கு சாதகமாக கருத்துப் பிரச்சாரம் செய்து போருக்கு ஆதரவான பொதுக்கருத்தைக் கட்டமைப்பது இந்த ஸ்டார் குழுமம் தான். இதில் பிரதான பங்குதாரர், சவுதி இளவரசர். அந்த வகையில் இசுலாத்தையும் இசுலாமியர்களையும் கேவலமாக சித்தரிப்பதற்குத் துணை போகும் சவுதி ஷேக்குகள், மறுபுறம் தூய இசுலாம்  எனும் பெயரில் வகாபியிசத்திற்கு ஸ்பான்சர் செய்கிறார்கள்.

உலகின் எந்த மூலையிலும் அமெரிக்கா வீசும் குண்டுகளுக்குச் சிதறி விழும் இசுலாமியச் சடலங்களிலிருந்து வழிந்தோடும் குருதியில் சவுதி அரசுக்கும் பங்கு கிடைக்கிறது. அந்தப் பங்கிலிருந்து கிள்ளிக் கொடுக்கப்படும் கோடிக்கணக்கான டாலர்களில் தான் வகாபிய மதரஸாக்களும் பள்ளி வாசல்களும் கொழிக்கின்றன. ஜெய்னுல்லாபிதின்கள் மஞ்சக்குளிக்கிறார்கள்.

எண்பதுகளில் பாகிஸ்தானில் முஜாஹித்தீன்களை அறுவடை செய்ய அமெரிக்கா உருவாக்கிய மதரஸாக்கள் இன்று அதற்கு தலைவலியாக உருவெடுத்திருப்பதாக சிலர் கணிக்கிறார்கள். ஆனால், தன்னால் உருவாக்கப்பட்ட இந்தக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் நடவடிக்கைகளையே நாகரீக உலகத்திற்கான அச்சுறுத்தலாக பிரச்சாரம் செய்து அதையே தனது ஏகாதிபத்திய இராணுவ நடவடிக்கைகளுக்கான நியாயமாகவும் அமெரிக்கா முன்னிருத்துகிறது. இந்த மேட்ரிக்ஸ் உலகில்  அமெரிக்க ஹீரோ தான் இசுலாமிய பூச்சாண்டியின் கர்த்தா. அந்தப் பூச்சாண்டியின் சின்னச் சின்ன சீண்டல்கள் தான் தனது போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்த அமெரிக்கா வைத்திருக்கும் முக்கியமான துருப்புச் சீட்டு.

இந்தப் பின்னணியில் வைத்துத் தான் உலகெங்கும் விஷம் போல பரவிவரும் வஹாப்பியத்தை நாம் ஆராய வேண்டும். இந்தியாவைப் பொருத்தமட்டில் தவ்ஹீத் ஜமாத் உள்ளிட்ட வஹாபிய அடிப்படைவாதிகள் இசுலாமியர்களின் சமூகப் பொருளாதார பிரச்சினைகளுக்குப் போராடுவதில்லை. கோகோ கோலா, டிஷ் ஆன்டனா, உலகமயமாக்கம் ஆகியவை குறித்து இசுலாம் என்ன சொல்கிறது என்று கூறுவதில்லை. தூய இசுலாமியர்கள் இப்படி சைத்தான் தனமான கேள்விகளைக் கேட்பதும் இல்லை.

கடுங்கோட்பாட்டுவாத நம்பிக்கைகளை காத்துக் கொள்ளும் நோக்கில் மட்டுமே குறியீட்டு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்துவது தஸ்லீமா நஸ்றீன், சல்மான் ருஷ்டி போன்றவர்களை எதிர்த்துப் போராடுவது, உழைக்கும் மக்களின் தர்ஹா வழிபாடு எதிர்ப்பு போன்றவற்றில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஒருபக்கம் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பயங்கரவாத அமைப்புகள் இசுலாமியர்களைத் தனிமைப்படுத்தும் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விட்டிருக்கும் நிலையில், ஜெய்னுல்லாபிதின் போன்றவர்கள் முன்னின்று அதைத் துரிதப்படுத்துகிறார்கள். இந்தக் கடுங்கோட்பாட்டுவாத வெறித்தனங்கள் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நச்சுப்பிரச்சாரங்களுக்கு ஒரு அரசியல் அடிப்படையை தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்குகிறது.

மனுஷ்ய புத்திரன்
மனுஷ்ய புத்திரன்

பீ.ஜே தளத்தில் வெளியாகியிருக்கும் மனுஷ்யபுத்திரனுக்கான எதிர்வினையில் தொனிக்கும் காட்டுமிராண்டித்தனத்தை அவதானித்திருப்பீர்கள். இது போன்ற காட்டுமிராண்டித்தனமான அடிப்படைவாத நடவடிக்கைகள் தான் சும்மா இருக்கும் இந்துக்களுக்கும் கூட காக்கி டவுசர் மாட்டி ஆர்.எஸ்.எஸ் ஷாக்காவுக்கு தெளிவாக மேப் போட்டு அனுப்பி வைக்கின்றது. இதன் விளைவுகளை பீ.ஜே எதிர்கொள்ளப் போவதில்லை – சாதாரண உழைக்கும் வர்க்கத்து இசுலாமியர்கள் தான் எதிர்கொள்ளப் போகிறார்கள்.  இந்தியாவில் இந்து பயங்கரவாதம் தன்னளவிலேயே ஒரு பாசிச அரசியல் அடிப்படையைக் கொண்டிருந்தாலும், மேலதிகமாக சாதாரண உழைக்கும் மக்களிடம் அதற்கு ஒரு அங்கீகாரம் வாங்கித் தரும் வேலையை பீ.ஜே போன்றவர்கள் செய்கிறார்கள்.

ஆதிக்க சாதியில் பிறந்த ஜனநாயகவாதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக சாதிய வன்கொடுமை நிகழும் போது அதை முன்னின்று எதிர்க்க வேண்டும். ஒரு ஜனநாயகவாதி என்கிற வகையில் அது தான் அவர்களின் முதன்மையான கடமை. அதே போல் இசுலாமியர்களில் கொஞ்சமேனும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் முன்னின்று பீ.ஜே உள்ளிட்ட கடுங்கோட்பாட்டுவாதிகளையும், ஷரியத் சட்டத்தையும் எதிர்க்க வேண்டும். இசுலாமிய மத அடிப்படைவாதத்தால் வெட்டி வீழ்த்தப்பட்ட ரிசானாக்களின் தலைகளுக்கு அது தான் நாம் கொடுக்கக் கூடிய நேர்மையான பதிலாக இருக்க முடியும்.

ஆனால் ஜைனாலுபிதீன் போன் மதவெறியர்களுக்கு அஞ்சாமல் இசுலாமியராக பிறந்து ஷரியத்தையும், கடுங்கோட்பாட்டு வாதத்தையும் எதிர்க்கும் இசுலாமியர்கள் மிகக் குறைவு. இதுதான் தவஹீத் ஜமாஅத்துக்களின் பலம். இந்நிலையில் பிறப்பால் இசுலாமியராக இருந்தாலும் மனுஷ்ய புத்திரன் வெளிப்படையாக இவர்களை மட்டுமல்ல இவர்கள் புனித ஜல்லி அடிக்கும் இசுலாமிய மத பிற்போக்குத்தனங்களையும் கண்டிக்கிறார். அதுதான் அவர் மீது இவர்கள் கொள்ளும் கொலைவெறிக்கு அடிப்படை.

நாம் மனுஷ்யபுத்திரனை ஆதரிப்பதோடு குறிப்பாக இசுலாமிய நண்பர்கள் வெளிப்படையாக தவஹீத்தையும், பிஜேவையும், ஷரியத்தையும் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இல்லையெனில் இசுலாமிய மக்களை ஒரு இருண்ட காலத்தில் மூழ்க வைத்து ஷரியத்தின் பெயரில் அவர்களை ஆயுள் கைதிகளாக்கி தொடர் விளைவாக இந்து மதவெறியர்களை மனங்குளிர வைக்கும் ஆபத்திற்கு நீங்கள் துணை போனதாக வரலாறு உங்களை கேள்வி கேட்கும்.

இசுலாமிய நண்பர்கள் வெளிப்படையாக பேச வேண்டும், ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நட்புடன் முன்வைக்கிறோம்.

பின்குறிப்பு:

1. இந்தப் பதிவு ஆர்.எஸ்.எஸ் டவுசர்களுக்கு மகிழ்ச்சியளித்திருப்பின், அவர்கள் நன்றி தெரிவிக்க வேண்டியது ஜெய்னுலாபிதினுக்கே! எல்லாப் புகழும் இறைவனுக்கே!

2. ‘விஸ்வரூபம் திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள்’ என்று பி.ஜே உள்ளிட்ட இஸ்லாமிய தலைவர்களும் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால், ரிசானா விவகாரத்தில் ‘நாங்கள் பயங்கரவாதிகள்தான்’ என்று பி.ஜெயினுலாபிதீன் உள்ளிட்ட இஸ்லாமிய மதவாதிகள் வெளிப்படையாகக் கூவுகின்றனர். இவர்களைக் கண்டிக்காமல் விஸ்வரூபத்தை மட்டும் எதிர்க்க முடியுமா?

    • சார் , சவூதிக்கு வக்காலத்து வாங்கும் உங்களிடம் கேள்விகள்…….பதில் தருவீர்களா……./
      ரிசான ஒரு இலங்கை தமிழ் தாய் மொழியுடைய பெண்..இப்போது கொலைக்குற்றம் சாட்டப்பட்டால்…
      கொலையை யார் கண்டது ??
      அப்படி ஒரு 04 மாத குழந்தையை கொலை செய்ய காரணம் என்ன ?
      விசாரனயில் மொழி பெயர்ப்புக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை ஏன் குறைந்தது ஒரு இலங்கை தமிழ் பேசும் முஸ்லிம் நபராவது இலங்கை , மற்றும் சவுதி யினால் நியமிக்கப்படவில்லை ?

      றிசான , கடைசியாக தன தாயாரை சந்தித்தபோது , ஏன் உம்மா நான் செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் ‘ என கூறி கதறியது இலங்கை நாடே அறியும்……. ஆனால் , POSTMORTEM படி கொலை என்றார்களா…..அப்படி எனில்,

      POSTMORTEM , நடக்கும்போது , சவுதி அரசாங்கம் சவுதி வைத்தியர்களுடன் சேர்ந்து ஏன் இலங்கை வைத்திய நிபுணர்கள் ஒருவராவது வைத்து POSTMORTEM செய்யவில்லை ?
      இவற்றுக்கு பதில் தந்தாள் தொடர்ந்து கேள்விக்கணை தொடரும்……… முடியுமா /?

  1. Mr vinavu
    I read your article and went to the link of PJ letter .But i dont find any words as you highlighted.
    Then the letter written by PJ seems to be very logic. The postmortem report mentioned that the child was killed which all of you including manushyaputiran in his article in nakkheeran did not highlight.

    As PJ demanded you can go for public deabte and then truth will come out
    even those who read PJ letter will understand the truth

      • mr sundar

        “Did you see and read the post-mortem report? Don’t tell lies. Saudi Arabian court did not concede the post mortem report”.

        hhaa how do you knwo saudi arabian court did not conced the post mortem report?

        • ஈராக்கிய இசுலாம் மக்களைக் கொல்வதற்கு சவுதி அரேபியா அமெரிக்காவுடன் போட்ட டீல் தெரியுமா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

          • //ஈராக்கிய இசுலாம் மக்களைக் கொல்வதற்கு சவுதி அரேபியா அமெரிக்காவுடன் போட்ட டீல் தெரியுமா? கேள்விப்பட்டிருக்கிறீர்களா?\\

            இல்லை நான் கேள்விபட்டதில்லை.ஆனால் ஆறு லட்சத்திற்கும் மேற்பட்ட இராக்கிய மக்களின் மரணத்திற்கு சவுதி முன்நின்று உழைத்தது தெரியும்.

        • Dear Mr Niaz

          //haa how do you knwo saudi arabian court did not conced the post mortem report?\\

          இல்லை நான் பார்க்க வில்லை. இத் தகவலை எந்நேரமும் அவர்பால் அக்கறை செலுத்தி,அல் தவாத்மி சிறைக்குச் சென்று அவரைப் பார்த்து வந்த பல் வைத்தியரான கிபாயா இப்திகார் ஊடகங்களுக்கு கூறியது.

        • Mr Niaaz,

          How can you laugh men on this Article. This is not to laugh. This itself tells how you rate human lives.

          மனிதர்களை கொள்பவர்கள் அல்லது மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்பவர்கள் என அனைத்தும் மிருகத்திற்கு இணையான செயல். அவர்கள் மனித உருவில் மிருகம். ரிசானா தான் அந்த குழந்தையை கொலை செய்தார் என்றால் அதற்கான நோக்கம் என்ன என்று தெளிவு படுத்த வில்லை. அப்படி கொலை தான் செய்தார் என்றாலும் ஆயுள் தண்டனை போதும்.

    • //The postmortem report mentioned that the child was killed which all of you including manushyaputiran in his article in nakkheeran did not highlight. //

      போஸ்ட்மார்ட் ரிப்போர்ட்டை சவூதி நீதிமன்றம் வெளியிட்டதா? இது கொலையென்றால் கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்ததா அல்லது அவ்வாறெல்லாம் விசாரிக்க ஷரியத் சட்டத்திற்கு தேவையில்லையா?

      முன்பின் தெரியாத நாட்டிற்கு முதன்முறையாகச் சென்று, சென்ற பதினெட்டே நாட்களில் ஒரு பெண்ணால் ஒரு குழந்தையை கொலை செய்ய இயலுமா? அதுவும் மிகப்பெரும் பணக்கார அரபு ஷேக்கின் வீட்டில்?!!!

      இதுபோக, பிறந்து மூன்றே மாதங்கள் ஆன பச்சிளங்குழந்தையை வீட்டில் விட்டுப்போகுமளவிற்கு அந்தத் தாய்க்கு அப்படி என்ன வேலை?? இதற்கெல்லாம் இஸ்லாத்தின் ஷரியத் சட்டத்தில் பதில் இல்லையா?

      • “போஸ்ட்மார்ட் ரிப்போர்ட்டை சவூதி நீதிமன்றம் வெளியிட்டதா? இது கொலையென்றால் கொலைக்கான காரணம் என்னவென்று விசாரித்ததா அல்லது அவ்வாறெல்லாம் விசாரிக்க ஷரியத் சட்டத்திற்கு தேவையில்லையா?”

        Read the PJ article properly.the letter written by a srilankan moulavi -which was edited by muausputran to suit his aritcle and clearly says the postmortem report confirm the killing of child

        read the artcle clearly http://onlinepj.com/unarvuweekly/manusyapuththirana_miruka_puththurana/

        and then respond

        • நியாஸ் முதலில் இந்தக் கட்டுரையை படித்தீர்களா? ஈராக்கிலும், ஆப்கானிலும் முசுலீம் மக்களைக் கொல்லும் அமெரிக்காவின் உற்ற துணைவனே சவுதிதான். அந்த கொலைகார நாட்டுக்கு வெட்கம் கெட்டு வக்காலத்து வாங்குபவர்கள், அண்டிப் பிழைப்பவர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? இராக்கிய குழந்தைகளின் கொலைக்காகவே இதுவரை சவுதி மன்னன், இளவரசன் முதலான கயவர்களை ஆயிரம் முறை சிரச்சேதம் செய்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை? இதற்கு பதிலளிக்க துப்பில்லாதவர்கள் ரிசானா போன்ற அப்பாவி சிறுமிகளை கொல்வதை ஆதரிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

          • Mr vinavu

            first of all what is your answer to the killing of child ?

            “ஈராக்கிலும், ஆப்கானிலும் முசுலீம் மக்களைக் கொல்லும் அமெரிக்காவின் உற்ற துணைவனே சவுதிதான். அந்த கொலைகார நாட்டுக்கு வெட்கம் கெட்டு வக்காலத்து வாங்குபவர்கள், அண்டிப் பிழைப்பவர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? இராக்கிய குழந்தைகளின் கொலைக்காகவே இதுவரை சவுதி மன்னன், இளவரசன் முதலான கயவர்களை ஆயிரம் முறை சிரச்சேதம் செய்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை? இதற்கு பதிலளிக்க துப்பில்லாதவர்கள் ரிசானா போன்ற அப்பாவி சிறுமிகளை கொல்வதை ஆதரிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?”

            Even the heads of indian and other countries also supporing america for its crime
            so you also demand beheadind of all nations heads/presidents/prime ministers who are supporting america,if you you do so i will also support.

            but here you are linking entirley two differnt thing which is not fair

            • நியாஸ் கேட்ட கேள்விக்கு விடையளிப்பது நேர்மை. அமெரிக்க வீரர்கள் சவுதியில் தங்கி, சவுதி பிரியாணி சாப்பிட்டு, சவுதி மன்னர் அளித்த பேட்டா பணத்தை வாங்கிக் கொண்டு ஈராக்கில் குண்டு போட்டு முசுலீம் மக்களைக் கொன்றனர். இதை ஷரியத் சட்டம் கண்டு கொள்ளாத மர்மம் என்ன? ஷரியத் சட்டப்படி சவுதி அரச குடும்பத்தை பாலைவனத்தில் வைத்து வாளால் சிரச்சேதம் செய்ய வேண்டும் என்று ஏன் நீங்கள் கோரவில்லை? ரிசானாவுக்கு மட்டும் ஷரியத், சவுதி கொலைகார மன்ன்னுக்கு ஷரியத்திலிருந்து விதிவிலக்கா? இப்படியெல்லாம் நியாயப்படுத்த உங்களுக்கு வெட்கமாக இல்லை?

              • mr vinavu

                you must feel ashamed for your response

                you are linking war conspired by USA on Iraq

                and sahriat law administered in saudi

                i am responding to your article on PG articel which talk about unfairness of maunsputran articel in nakkheeran

                “and you didnot answer my question
                Even the heads of indian and other countries also supporing america for its crime
                so you also demand beheadind of all nations heads/presidents/prime ministers who are supporting america,if you you do so i will also support”.

                but you are not answering that and diverting to differnet subject

              • நீங்க சொல்லுறது எப்படி இருக்குண 200 பேரை கொண்ன ஆஜ்மால் காசப் துக்குல போட துப்பு இருந்த இந்திய விற்கு ஆயிர கணக்கில் கொண்ன சிவசென தலைவர் பால் த்காரேயை துக்குல போட துப்பு எல்லை அதனால் இந்திய அரசியல் சாசானத்தை கொளுத்தி விடலாம் என்று சொல்வது போல் இருக்கு.

                சவுதி கரனுக்கு துப்பு இல்லைனா அதுக்கு என் இஸ்லாமிய சட்டத்தை குறை சொல்லுறீங்க அதன் PJ அவர்களின் கேள்வி. எதற்கு பதில் சொல்லவும்.

              • நியாஸ் எதற்கு வெட்கப்படப்போறார். அடுத்த பதில் அவர் மூளையில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது சௌதி ஒரு இசுலாமியநாடுமல்ல. அவர்கள் இசுலாத்திற்கு அதாரிட்டியமல்ல என்ற பதில்தான் அது

          • நல்ல கேள்வி………சவுதி மன்னனை ஆதரிப்பது ஒரு வகையில் இல்லவிட்டலும் பல வகையில் தவறுதான். நிச்சியமாக சவுதி மன்னனை எந்த முஸ்லிமும் ஆதரிக்க மாட்டன். அவன் ஒன்றும் பெரிய மகானோ அல்ல தீர்கதரிசியோ அல்ல. ஒருவன் கொலை செய்துவிட்டால் அதற்கு பழிவாங்குவது சரியே. ஒரு கொலையை இவ்வளவு தூரம் வெறுக்கும் நீங்கள் நிச்சியமாக எனது மனதை கவர்ந்து விட்டீர்கள். ஒரு கொலை இஸ்லாத்தின் இரண்டாவது மாபெரும் குற்றமாகும். ரிசானாவுக்கு இழைக்கப்பட்டது அநீதியாயின் நிச்சியம் அநீதி இழைத்தவன் தண்டனைகுரியவன் ஆவான், இப்படியோசிக்கும் போது ஹிட்லர், புஷ், ஒபாமா போன்ற அயோக்கியர்களை கூட என்னதான் செய்யமுடியும் ???…….

        • கொலைக்கான காரணம் என்னவென்று கேட்டேன். காது காதுன்னு சொன்னா உங்களுக்கு லேது லேதுன்னுதான் கேட்குமா? மௌல்வி சொன்னதை மனுஷ் எடிட் பண்ணினாராங்கறத நான் கேட்கலை. கழுத்து நெரிச்சு கொல்லப்பட்டதாவே வச்சுக்குவோம். பொங்குபொங்குன்னு பொங்கின ப்பீய்ஜே கொலைக்கான காரணம் என்னன்னு ஒரு வரிகூட எழுதலியே! அதுதான் ஏன்னு கேட்டேன்?

        • இதுக்கு பதில் சொல்லுயா ..உங்க லாஜிக்க இங்க சொல்லுங்க

          “முன்பின் தெரியாத நாட்டிற்கு முதன்முறையாகச் சென்று, சென்ற பதினெட்டே நாட்களில் ஒரு பெண்ணால் ஒரு குழந்தையை கொலை செய்ய இயலுமா? அதுவும் மிகப்பெரும் பணக்கார அரபு ஷேக்கின் வீட்டில்?!!! “

          • பதில் இருந்தாதானே சொல்லுவாங்க…
            இவங்க நோக்கமெல்லாம்..சவ்தியின் செயலை நியாப்படுத்துவதில்தான்
            இருக்கிறது…உண்மையை மறைக்கிறார்கள்..மறக்கிறார்கள்…

    • dear niaz,
      if u read an article first try to clear it with other references too. first of all, there was no postmartum done in that child. and there is high chance for chocking if the feeding method is not proper. for example, it has happened in tamilnadu when a child was fed by her mom in sleep. PJ is not the sole authority of islam. even i can give a article that it is preplanned murder. can you accept it. come out religion. think as a human.

      • please refer the moulavi letter manusyaputran referred
        “http://khaibarthalam.blogspot.fr/2013/01/blog-post_15.html”

        அவர்கள் இக்குழந்தையை எவ்வளவு சிரமத்துடம் பெற்றெடுத்திருப்பார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். மேலும் அவர்கள் உங்கள் மகள் தான் இக்கொலையை செய்திருப்பாள் என்று உறுதியாகவே நம்பாமல் இப்படியான ஒரு நடவடிக்கைக்கு முன் வந்திருக்க முடியாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் உங்கள் மகள் அந்த நேரம் சண்டைப் பிடித்துக் கொண்டு கோவத்துடன் இருந்தார் என்பதே. எது எப்படியோ மருத்துவ அறிக்கையும் அதனை உறுதி செய்து விட்டதாக கூறுகிறார்கள்.

      • “dear niaz,
        if u read an article first try to clear it with other references too. first of all, there was no postmartum done in that child.”
        How do u know that no postmartum done?

  2. ரிசானா கொல்லப்பட்டதைக் கண்டிக்கிறேன். கவிஞர் மனுஷ்யபுத்திரனைக் கீழ்த்தரமாக, அடிப்படை நாகரீகமற்று விமர்சித்த பி.ஜெவும் அவரது சீடர்களும் கண்டனத்திற்குரியவர்கள். ஒருவரது உருவத்தை எள்ளல் செய்வதை தனது மார்க்கம் அனுமதிக்கிறாதா, மனிதத்தன்மைதானா என்பதை பி.ஜெவும், அவரது அடிப்பொடிகளும் சிந்திக்க வேண்டும்.

    • வினவு சொன்ன வார்தைகல் எதுவும் அங்கு இல்லை. மருபடியும் அதனை சரி பார்கவும். “http://www.onlinepj.com/unarvuweekly/manusyapuththirana_miruka_puththurana/”

      • வினவு கட்டம் கட்டி போட்டிருக்கும் படம் ஃபேஸ்புக்கில் இருந்து ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். மேலும் கட்டுரை போட்டபின் அவர்கள் தளத்தில் எடிட் செய்திருக்கலாம். இதெல்லாம் ஒரு பிரச்சினையா??!

      • Hi Jamaal,

        Do no go to the site but within the article in the below mentioned line click the link available in the bracketed part:

        தளத்தில் கிட்டத்தட்ட (மனுஷ்யபுத்திரனை கொன்று போட வேண்டும்) என்ற தோரணையில் இரத்தவெறி

        Regarding the issue: I do not understand why the motivation for the killing is not discussed by the supporters of this execution. As the motivation if one is available may open another debate how the servants are treated in these places!

        Next I’m informed by one of my friends (unreliable source) that in Saudi Arabia postmortem is not the norm in even murder/accident cases.

      • ஜமீல் பாய் வினவு போட்டு இருக்குறது முதல் பதிவு…அண்ணன் பி.ஜெ முதலில் அப்படி தான் பதிவு செய்து இருந்தார் …இஸ்சுலாமியர்கள் மத்தியிலே அந்த வரிகளுக்கு எதிர்ப்பு கிளம்பியவுடனே அதை எடிட் செய்துவிட்டார் இதுலாம் பி.ஜெக்கு புதுசு இல்லை சரிங்கலா…

  3. நல்ல பதிவு,
    பி.ஜே ஒரு __________ என்பது பெரும்பானமை முஸ்லிமக்ளுக்கு தெரிந்து இருந்தாலும் ,தவுகீத குண்டர் படை கொடு சமூக விலக்கம் ஆகும் சூழல் உள்ளதால் அஞ்சியே வாழ்கின்ற்னர்.கட்டைப் பஞ்சாயத்தும் அதிகம்!!

    மதவாதிகளுக்கு சிந்திக்கும் சொந்த மதத்தினரே முதல் எதிரி என்பது பி.ஜே யின் பொறுக்கித் தனமான கருத்தில் தெரிகிறது. இந்த் ஆள் சொல்லும் குரான்,ஹதிது கேட்ட பின்னால் நாலு பேரு.

    சவுதியில் இருந்து நிறைய கிடைக்கும் போல் இல்லவிட்டால் குறைந்த காலத்தில் அரசியல்வாதியை விட அதிக வளர்ச்சி.

    அடாவடிபேச்சில் ஒரு ஊனமுற்ற சொந்த மத சகோத்ரனை மதிக்க தெரியாத்வனுக்கு ஆன்மீகம் ஒரு கேடா!!
    //I read your article and went to the link of PJ letter .But i dont find any words as you highlighted.//
    திருடன் மாத்தி இருப்பான்!!

    //Then the letter written by PJ seems to be very logic. The postmortem report mentioned that the child was killed which all of you including manushyaputiran in his article in nakkheeran did not highlight.//
    நீங்கதான் தவுகீது ஆளு. போஸ்ட்மார்டம் குறித்து இன்னும் கொஞ்சம் த்கவல் சுட்டி கொடுங்க வஹாபி அண்ணே!

    //As PJ demanded you can go for public deabte and then truth will come out
    even those who read PJ letter will understand the truth//

    பி.ஜே வின் குப்ரா மேட்டருக்கு முதலில் நேருக்கு நேர் விவாதம் செய்யுங்கள் அய்யா!!

    • உமது கருது உன்னை நன்ராக காடி கொடு கின்ரது.
      //கட்டைப் பஞ்சாயத்தும் அதிகம்
      //சவுதியில் இருந்து நிறைய கிடைக்கும் போல் இல்லவிட்டால் குறைந்த காலத்தில் அரசியல்வாதியை விட அதிக வளர்ச்சி.

      எதை நீருபிக உன்னிடம் ஆதரம் உன்ட?

      //நீங்கதான் தவுகீது ஆளு. போஸ்ட்மார்டம் குறித்து இன்னும் கொஞ்சம் த்கவல் சுட்டி கொடுங்க வஹாபி அண்ணே!

      முதல அவர் எலுதியதை படிப்ப!!!

    • ssamuraiகுப்ரா மேட்டர் எப்போதே பொய் என்று படுத்துவிட்டதே ,குற்றசாட்டியவர் விவாதத்துக்கு வராமல் ஓடிய கதை அறியமாட்டீரோ

      • அட உங்களதான் தேடிட்டு இருக்கென் இப்புராகிம் பாய்..நல்லா இருகிங்களா?

  4. அநாகரீகமாக PJ பேசியது தவறு!!மன்னிப்பே சிறந்தது என இறைவனும் கூறியுள்ளான் ஏன் அது புறகனொக்கப் படுகிறது!சவுடி ஓஜரிலும் அராம் கோ விலும் பனிபுரியும் அமெரிகர்களுக்கு எல்லா! வசதிகளும் செய்துக் கொடுத்துள்ள அவூதி ராஜ்யம் ஏன் எளியவர்களுக்கு மட்டும் ஓர வஞ்சனை செய்கிறது..இது கடைந்தெடுத்த சுய நலம்!மேலும் தர்ஹா வழிப்பாடு எனும் சொல்லே தவறானது.எந்த முஸ்லீமும் தர்காவை வழிப்படுவதில்லை..இந்த சொல்லும் PJ க்களால் காயின் செய்யப்பட்டதே!

    • HI
      May i know which aramco site u r working for???
      Because i worked for aramco n they provided me a good accomodation with good facilities!!!
      Aramco providing gud accomodation for all employees working in aramco site
      I worked for uthmaniya project!!!!
      Can u tell me r u a employee of aramco….???

      etho ularnumnu ularaatheenga

  5. When Israel was attacking Palestine and killed the Innocent peoples without any reasons that time where these fellows are gone and why they are not make their comments and ralleys against them????????

    • actually we planned a protest on saturday(so every person will come on weekends) but before itself(friday) isreal agreed for ceasefire. so we didn’t protest for that.

      • நல்ல இருக்குப்பா உங்க நியாயம்..அங்க செத்தவனுக்காக ஒரு போராட்டம் நடத்த வேண்டியதுதானே..அவங்க போர் நிறுத்தம் பண்ணிட்டாங்களாம்.இவங்க ஆர்ப்பாட்டம் நிருதிட்டன்கலாம்..போயா போய் ஒழுங்கா புள்ள குட்டிகளை படிக்க வைங்கப்பா

        • அட ஜமீல் சொன்னத நல்லா கவனியுங்க நெல்லை பாலாஜி…விடுமுறை நாள்களில் மட்டும் தான் நாங்கள் போராடுவோம்..அப்ப தான் நிறைய பேர் வருவாஙக…அப்படியில்லனா போராடவே மாட்டோம்…இது தான் தவ்ஜீத் மாடல் போராட்டம்…தாக்குதல் நடத்துபவன் இவங்க கிட்ட சொல்லி தான் தாகுதல் நடதுவான் பாருங்க….

          கோவம் வரமாதிரி காமடி பன்னாதிங்க ஜமீல் பாய்…

  6. கட்டுரை பற்றி நீண்ட விவாதத்திற்கு பிறகு வருகிறேன் முதலில் இந்த வினவிற்கு நேர்மை என்பது துளியாளவது இருக்கா??

    முஸ்லிம் பெரும்பான்மையாக வாழும் நாடான பங்கதேஷில் உள்ள ஆண்கள் பெண்கள் மீது ஆசிட் வீசிய போது ”இஸ்லாமியப் பெண்களைச் சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்!” என்று தலைப்பு வைத்த வினவு இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்திய நாட்டில் நடந்த ஆசிட் வீச்சை இந்து பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம் என்று தான் வைத்திருக்க வேண்டும் ஆனால் தலைப்பை பாருங்கள் “விநோதினியை சிதைத்த ஆணாதிக்க அமிலம்!”

    தினமலத்தின் அதே ஸ்டைல் இசுலாமிய தீவிரவாதம் என சொருகும் அதே சிந்தனை

  7. அதே கடடுறையில் பார்க்க…

    கொலை செய்யப்பட பெண் குற்றச்சாட்டை ஒப்புகொண்டுள்ளதாக உள்ளது..

    கொல்லப்பட்ட குழந்தை கழுத்துநெரிக்கபட்டுள்ளதாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் உள்ளது.

    போபால் சம்பவத்தை சுட்டிக்கட்டி அமரிக்கவை அயோக்கிய அமரிக்கா என்று சொல்கிறார்..

    இவற்றறை எல்லாம் நீங்கள் கண்டுகொள்ளவில்லயே…
    http://www.onlinepj.com/unarvuweekly/manusyapuththirana_miruka_puththurana/

    • அயோக்கிய அமெரிக்க என்றுதானே உள்ளது. அயோக்கிய சவூதி என்று இல்லையே பாஸ்.

    • முதலில் இந்தக் கட்டுரையை படித்தீர்களா? ஈராக்கிலும், ஆப்கானிலும் முசுலீம் மக்களைக் கொல்லும் அமெரிக்காவின் உற்ற துணைவனே சவுதிதான். அந்த கொலைகார நாட்டுக்கு வெட்கம் கெட்டு வக்காலத்து வாங்குபவர்கள், அண்டிப் பிழைப்பவர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? இராக்கிய குழந்தைகளின் கொலைக்காகவே இதுவரை சவுதி மன்னன், இளவரசன் முதலான கயவர்களை ஆயிரம் முறை சிரச்சேதம் செய்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை? இதற்கு பதிலளிக்க துப்பில்லாதவர்கள் ரிசானா போன்ற அப்பாவி சிறுமிகளை கொல்வதை ஆதரிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

    • 1.The confession was extorted through torture(rizana did make a complaint on this). No investigation was carried through on this complaint.

      2.I strongly refute the story about strangulation. To kill someone through strangulation it requires heinous courage or it should be crime of passion or vendetta.17 year old teen strangulating a baby is comical. Actually many dispute whether post mortem was carried out at all.

      3. She was not even provided an opportunity to defend herself(denied access to a lawyer till sentencing).

      4. He is accusing America allright; it is very much similar to america accusing israel of HR violations. The world knows Saudi is the henchman of US and PJ saudi’s accomplice……

      5. Any murder(unless an accident/self defense) requires a motive. Nowhere in the case proceedings was a motive stated.

      This puts the credibility of the entire proceedings into jeopardy.

  8. குரானோ, ஷரியத்தோ சரியா, தவறா என்று ஆராய்ந்து பார்ப்பதற்கு எந்தத் தகுதியும் கொண்டவையும் அல்ல. நம்மைப் பொருத்தளவில் பார்ப்பன மனுநீதியை எந்த அளவுக்கு ம(மி)திக்கிறோமோ அதே தகுதியைத்தான் ஷரியத்திற்கும் ஒதுக்கியிருக்கிறோம்.
    மதங்கள் உருவாக்கி வைத்திருக்கும் சட்டங்கள் எனப்படுபவை அவை தோன்றிய காலத்துக்கு மட்டுமே உரியவை. 7ம் நூற்றாண்டில் நாகரீகமற்று இனக்குழுக்களாய் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த ஃபதூயின் இன அரபிக்களை முகம்மது நபி அவருக்கு அந்தக்காலம் வழங்கியிருந்த வாய்ப்புகளுக்குட்பட்டு நெறிப்படுத்தினார். அந்தக் காலத்துக்கு மட்டும் பொருந்தக் கூடிய வாழ்வியல் நடைமுறைகளை வகுத்துக் கொடுத்தார். அதன் கதை அன்றோடு முடிந்தது. இது 21ம் நூற்றாண்டு.

    Excellent and everthing truth and everybody should read this article with open mind.

  9. Yesterday I was angry on Vinavu..Now I am fine with them for pointing out.

    இது போன்ற காட்டுமிராண்டித்தனமான அடிப்படைவாத நடவடிக்கைகள் தான் சும்மா இருக்கும் இந்துக்களுக்கும் கூட காக்கி டவுசர் மாட்டி ஆர்.எஸ்.எஸ் ஷாக்காவுக்கு தெளிவாக மேப் போட்டு அனுப்பி வைக்கின்றது//This is so true..I was earlier interested in joining RSS….Now I am against religions

  10. வேறொரு கட்டுரைக்கான பின்னூட்டத்தில்
    // ரிசானாவின் படுகொலையை நியாயப்படுத்திய இசுலாமிய மதவாதிகள் …. //
    என்ற கட்டுரை வரியை மேற்கோள் காட்டி
    // பரவாயில்லையே. இதெல்லாம் கூட உங்க கண்ணுல படுதே //
    என்று கமன்ட் அடித்திருந்தேன். அதற்காக வருத்தப்படுகிறேன்.

    • நீ்ங்கள் வினவின் அரசியலை இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள வில்லை. அதனால் தான்
      // பரவாயில்லையே. இதெல்லாம் கூட உங்க கண்ணுல படுதே // என்பது போன்ற பின்னுட்டங்களை எல்லாம் போடுகிறீர்கள். வினவின் மதம் குறித்த பழைய கட்டுரைகளையெல்லாம் படியுங்கள்.

  11. தேவையில்லாத பேச்சு எதற்கு ….அவர்கள்தான் விவாதத்திற்கு கூப்பிடுகிறார்களே ஆண்மைஇல்லாத் யாரும் விவாதத்திற்கு அழைக்க மாட்டார்கள்.. வீண் வீச்சு தேவை இல்லாதது..! விவாதத்தில் போய் எல்லாத்தையும் பேசுங்கள்..நடந்ததை பதிவாய் போடுங்கள்.

    • /அவர்கள்தான் விவாதத்திற்கு கூப்பிடுகிறார்களே ஆண்மைஇல்லாத் யாரும் விவாதத்திற்கு அழைக்க மாட்டார்கள்/

      இதனால் தாங்கள் சொல்ல வருவது…

      அது என்ன ஆண்மையுள்ளவர்???

      இப்படி பேசுவது கேவலமாக இல்லை.

      மதங்கள் அனைத்தையும் அதன் ஆணிவேரோடு அழித்தெரிய வேண்டியவை, அதில் பேசு தீர்க்க ஒரு வெங்காயமும் இல்லை.

      இந்த காலத்திலும் மதம்/இறைவன் என்று சொல்பவன், ஒன்று அடி முட்டாளக இருப்பான், இல்லை மக்களை ஏய்த்துப் பிழைக்கும் பொறம்போக்காக இருப்பான்.

      இல்லை, இல்லை எனக்கு மதம் தான் முக்கியம் என்று சொன்னால், மதத்தை வீட்டு கழிவறையிலேயே பூட்டி வைத்துக் கொள்ளுங்கள், பொது இடத்தில் மதத்திற்கு வேலையே இல்லை.

      இந்த மனித சமூகம் இன்று இவ்வளவு வளர்ந்து இருப்பதற்கு காரணம் மனத உழைப்பும், அதனால் வளர்ந்த அறிவு மட்டுமே தவிர அணு அளவுக்குக் கூட இறைவன் / மதம் காரணமல்ல.

      அதற்கு மாறாக இந்த மதங்களால் மனித சமுதாயம் பெற்ற அழிவுகள் தான் அதிகம்.

      • ada adapavi,

        god gave 5 brain for animals, but for human being god gave 6 brain to think, so use your 6th brain and think, how without power universe were formed, earth formed, all living things were created, think about our birth how we save in our moms stomach, some persons with big deficiency, someone good health conditions, someone very rich and someone very poor, some places were destroyed with natural disasters but we r 60% safe. JUST JUST think, How it was happened but dont tell stupid it was nature, who created nature…………..???????????

  12. எப்பவோ அழிந்து போன “காரிஜியா” என்ற இசுலாமிய அடிப்படைவாதிகளின் புதிய வாரிசுகள்தான் வகாபிகள். இவர்களின் அழிவும் சீக்கிரம் வரும்.

  13. //7ம் நூற்றாண்டில் நாகரீகமற்று இனக்குழுக்களாய் பிரிந்து சண்டை போட்டுக் கொண்டிருந்த ஃபதூயின் இன அரபிக்களை முகம்மது நபி ‘அவரு’க்கு அந்தக்காலம் வழங்கியிருந்த வாய்ப்புகளுக்குட்பட்டு நெறிப்படுத்தினா’ர்’. அந்தக் காலத்துக்கு மட்டும் பொருந்தக் கூடிய வாழ்வியல் நடைமுறைகளை வகுத்துக் கொடுத்தா’ர்’.//

    இது ஒன்றே போதுமே, உங்களுக்கு எங்கே ‘ர்’ போடவேண்டியிருக்கிறது, எங்கே ‘ன்’ போடவேண்டியிருக்கிறது என்று தெரிந்திருக்கிறதே.

    பிழைத்துக் கொள்வீர்கள் 😀

    • நசுங்கிய சொம்பும் கிழிஞ்ச ஜமுக்காளமும் நைந்த காவி கோமணம் சகிதமாக நாட்டாமை சீனு வயிர் எரிஞ்சே சாக வந்தாச்சு. இப்பத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கு

  14. ஹல்லோ ! வினவு ..பிஜேயின் கட்டுரையில் அவர் வைக்கும் வாதங்கள் அனைத்தையும் முழுங்கி ஏப்பம் விட்டு ஏக வசனத்தில் பேசியதை கொண்டு ஒரு பதிவை நிரப்பி விட்டீரே..! மரியாதை இல்லாமல் பேசியதை கண்டிக்கத்தான் வேண்டும்..அதற்காக எதற்கான கட்டுரை அது..அதில் மனுஷ்யபுத்திரன் செய்த அநியாயங்கள் என்ன என்பதை காட்டப்பட்டுள்ளதே ! அதற்கு உங்களின் பதில் என்ன..?

    மறுப்பதற்கு மேட்டர் இல்லை என்று பிஜே கொடுத்த மரியாதையை கொண்டு மனுஷ்ய புத்திரனுக்கு ஆதரவாக கருத்து கூறுகிறீரே..! காரணம் மனுஷ்யபுத்திரன் இஸ்லாமை விமர்சிப்பவர் …அதுதான் உங்களின் பரிதாபத்திற்கு காரணம்…இதுக்கெல்லாம் அரை டவுசர்கள் வேண்டுமானால் கொண்டாடலாம் …முஸ்லிம் மக்கள் வருத்தப்படமாட்டார்கள்..காரணம் இஸ்லாமியர்களின் உயிரின் மீதே விமர்சனம் வைப்பவர்களை ஒருமையில் பேசியது பெரிய விசயமா..?

    (எனக்கு தெரிந்து பிஜெவுடைய எந்த பதிவும் இவ்வளாவு காட்டமாக இருந்தது இல்லை..இதுக்கு முழு கிரெடிட்டும் மனுச்யபுதிரனையே சாரும் …எல்லா புகழும் இறைவனுக்கே.!)

    • ரிசானா கொலை செய்ததாகக் கூறும் பிஜே எதற்காக கொலை செய்தார் என குறிப்பிடவில்லையே? அதில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா? தெரியப்படுத்துங்கள்.

    • நாகூர் மீரான்,
      அரை டவுசர் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உங்களுக்கும் வேற்பாடு? அப்பாவிகளின் உயிரை குடிப்பதில் உங்களுக்குள் என்ன வித்தியாசம்? இசுலாமியர்கள், தம் உயிராக இசுலாமை கருத அதில் என்ன இருக்கிறது? சம காலத்தின் எந்த பிரச்சினைக்கு குரான் தீர்வு வைத்துள்ளது? பி. ஜெ போன்ற காட்டுமிராண்டிகளை தயாரிப்பது தானா அதன் பணி? குஜராத்தில் கொல்லப்பட்ட இசுலாமியக் குடும்பங்களுக்கு நீதி பெற துணை நிற்பவர்கள் யார்? தீஸ்தா சேதல்வாத், முகுல் சின்ஹா போன்ற மனித உரிமை போராளிகளின் கால் தூசுக்கு மதிப்பு பெறுவார்களா, உங்கள் பி.ஜெவும், ஜவாஹிருல்லாவும்?

      எந்த ஜனநாயகக் கடமையிலிருந்து இந்து மதவெறியை வினவும், அதன் வாசகர்களும் எதிர்க்கிறார்களோ, அதே ஜனநாயகக் கடமையுடன் தான் இசுலாமிய மதவெறியையும் எதிர்க்கிறோம் . பி.ஜெ வுடன் விவாதிக்க தயாரா என்று கேட்கிறீரே? ஏன் உமக்கு மூளை இல்லையா? நபிகள் தனக்கு பிறகு தனது மூளையை பி.ஜெ க்கு தான் அளித்துள்ளாரா? இதில் என்ன விவாதக் கிளுகிளுப்பு வேண்டிக் கிடக்கிறது. ஒரு வாதத்திற்கு ரிசானா கொலை செய்தார் என்றே வைத்துக் கொண்டால் கூட, அதற்காக, அப்பெண்ணின் கழுத்தை அறுப்பது என்ன மனிதப் பண்பாடு? மனிதப் பண்பாடே இல்லாத அந்த இசுலாத்தில் உமது உயிர் இருக்கிறது என்றால், அதை விட, ரஜினி காந்தின் மீது உயிர் வைத்திருக்கும் ஒரு ரஜினி ரசிகன் உயர்வானவன் என்று சொல்வேன்.

  15. பணக்காரர்களுக்கு வந்தால் தான் இரத்தம், அதுவே ஏழைகளுக்கு வந்தால்…?

    ஒருவேளை… “குழந்தை மரணிப்பதற்கு உண்மையில் ரிசானா காரணமாக இருந்திருந்தால் இதன் மூலம் அந்தக் குழந்தை இவ்வுலகிலேயே தூய்மைப்படுத்தப்பட்டு இறை சந்நிதானத்தை அடைந்து இருக்கும். அந்தக் குழந்தை அதனடிப்படையில் உயர்ந்த சொர்க்கத்தை அடைந்திருக்கும்.

    அறிந்து கொண்டே, ரிசானா, அந்தக் குழந்தையைக் கொலை செய்திருந்தால் நிச்சயம் ரிசானா ஓர் அநியாயக்காரி. அல்லாஹ்வின் கடுமையான தண்டனையிலிருந்து ரிசானா ஒருபோதும் தப்ப முடியாது.”

    இவற்றை எல்லாம் அந்தக் குழந்தையின் பெற்றோரிடம் கூறி ரிசானாவைக் காப்பாற்றி இருக்கலாமே…அல்லது குறைந்தபட்சத் தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கலாமே… இன்று இஸ்லாத்தின் பெயரால் ரிசானாவின் கொலைக்கு வக்காலத்து வாங்குபவர்கள்.

    பாவம், அவள் சவூதி எசமானர்களுக்கு அடிமையாக அனுப்பப்பட்ட வேலைக்காரி தானே.

    இஸ்லாமிய சரியத் சட்டம் மன்னராட்சியைத்தான் போதிக்கிறதா என்பதை இஸ்லாமியச் சட்டம் பேசுபவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.

    கொலைக்குக் கொலை தான் பகரம் என்றால் இதைக் கொலை என்று தான் கூற வேண்டும்.

    தண்டனை என்று கூறினால்…இது இஸ்லாத்தின் பெயரால் அளிக்கப்பட்ட தண்டனை அல்ல, சவூதி அரசினால் அளிக்கப்பட்ட தண்டனையே, ஏனெனில் சவூதியில் நடப்பது “இஸ்லாமிய ஆட்சி” அல்ல…

    ( “ஏனெனில், சிறிதும் ஜனநாயகமற்ற கடும் ஒழுக்க தேசியவாதப் போக்கைக் கொண்ட சவுதி, அரபுத் தேசியத்தின் அடையாளமாக தன்னை நிறுத்திக் கொள்கிறது.

    ஆனால் இதே சவூதி அமெரிக்க , ஐய்ரோப்பிய தேசியத்திடம் மண்டியிட்டுக் கிடக்கிறது. ஐய்ரோப்பாவைச் சார்ந்த எவர் ஒருவரும் இப்படியான தண்டனைகளுக்கு சவுதியில் உள்ளாக முடியாது என்பதெல்லாம் தனிக்கதை.

    எண்ணெய் வளம் கண்டறியப்பட்டதையொட்டி சவுதி மன்னராட்சி மேற்குலகோடு செய்து கொண்ட தொழிலாளர், மற்றும் வணிக ஒப்பந்தங்கள் சவுதி அரேபியச் சட்டங்களின் படி ஐய்ரோப்பியர்களை தலை வெட்டித் தண்டிக்க முடியாத விலக்கை அளிக்கிறது.

    ரிஸானா வெள்ளை தேசத்தவராக இருந்தால் நிச்சயம் இந்த தண்டனை அவருக்குக் கிடைத்திருக்காது.”
    நன்றி:http://arulezhilan.com/?p=303 )

    “அல்லாஹ் மீது ஆணையாகச் சொல்கிறேன் நான் அக்குழந்தையின் கழுத்தை நெறிக்கவில்லை” என்று ரிசானா கூறிய பிறகும்…

    மன்னிக்கும் தேவையிருந்தும் கூட அந்த வாய்ப்பில்லாமல் வாளால் வீழ்த்தப்பட்டிருக்கிறார் இந்த சிறுமி.

    இஸ்லாம் தேசியவாதத்தையோ, மன்னராட்சியையோ ஒருபோதும் போதிக்கவில்லை.

    எனவே சவுதி மன்னராட்சி அரசின் சட்ட இறைமை தான் ரிசானாவுக்கு நேர்ந்த இந்தக் கொடூரத்திற்குக் காரணம்.

    மாறாக, இஸ்லாமிய சரியத் சட்ட இறைமை அல்ல என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.

    என்றுமே…பணக்காரர்களுக்கு வந்தால் தான் இரத்தம், அதுவே ஏழைகளுக்கு வந்தால்…?

    • இது சவ்தி சட்டமல்ல முழுமையானஷரீயத் அடிப்படையிலேயெதண்டனை கொடுக்கப்பட்டுள்ளது ஜின்னா அவர்களே மதசட்டங்கள் மண்மூடி போனால் மனிதநேயம் கண் திறக்கும்

    • தன்னைப்பபோலவே மற்றவர்களும் அரைலூசுகளோட விவாதம் நடத்துவார்கள்னு நினைச்சிட்டாங்க போல.

  16. மனிதன் சந்தர்ப்பவாதியே :

    மரணதண்டனை காட்டுமிராண்டித்தனமானது என்றார்கள் ராஜீவ் படுகொலை குற்றவாளிகளுக்கு …பின்பு அனக்கம் இல்லாமல் கசாப் தூக்கிலிடப்பட்டான் ..அதற்க்கு அதே அளவு எதிர்ப்பு இல்லை..ஆனால் கொண்டாட்டம் இருந்தது ..இரண்டு கேசுமே கொலை குற்றம்தான். பின்பு மீண்டும் டெல்லி கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வேண்டும் என்கிறார்கள்..ஏன் இந்த பாரபட்சம் .ஏனெனில் இவன்தான் நடுநிலை(!) மனிதன்..தனது கண்ணோட்டத்தில் மட்டுமே காணக்கூடியவன் இதையே மேற்காணும் மூன்று சம்பவங்களும் நமக்கு காட்டுகிறது..இவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி கொண்டு இருக்க முடியாது..என்ன சரிதானே. ?

    போஸ்ட்மார்டம் ரிபோர்டே சொல்லுது ..குழந்தையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது என்று .குற்றவாளி எப்போதும் தான் குற்றம் செய்யவில்லை என்றுதான் சொல்லுவார்..சவுதிக்கு சென்றால் அங்குள்ள சட்டங்களுக்கு கட்டுப்பட்டுதான் வாழ முடியும்..! இங்கு வரும் பின்னூட்டங்கள் எல்லாம் சந்தர்ப்பவாதமே ! காரணம் இஸ்லாமை பழிக்க ஒரு வாய்ப்பு ..!

    இங்கு பேசுவோர் எத்தனை பேரு சவுதியில் பிழைப்புக்காக சென்றிருக்கிறார்களோ ? ஆண்டவா..!!!

    • நாகூர் மீரான் முதலில் இந்தக் கட்டுரையை படித்தீர்களா? ஈராக்கிலும், ஆப்கானிலும் முசுலீம் மக்களைக் கொல்லும் அமெரிக்காவின் உற்ற துணைவனே சவுதிதான். அந்த கொலைகார நாட்டுக்கு வெட்கம் கெட்டு வக்காலத்து வாங்குபவர்கள், அண்டிப் பிழைப்பவர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன? இராக்கிய குழந்தைகளின் கொலைக்காகவே இதுவரை சவுதி மன்னன், இளவரசன் முதலான கயவர்களை ஆயிரம் முறை சிரச்சேதம் செய்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை? இதற்கு பதிலளிக்க துப்பில்லாதவர்கள் ரிசானா போன்ற அப்பாவி சிறுமிகளை கொல்வதை ஆதரிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?

      • வினவு ///ஈராக்கிலும், ஆப்கானிலும் முசுலீம் மக்களைக் கொல்லும் அமெரிக்காவின் உற்ற துணைவனே சவுதிதான். அந்த கொலைகார நாட்டுக்கு வெட்கம் கெட்டு வக்காலத்து வாங்குபவர்கள், அண்டிப் பிழைப்பவர்கள் குறித்து உங்கள் கருத்து என்ன?////

        வினவு ,நீங்கள் சூனது போலவே நானும் எண்ணிபார்த்து கனவொன்று கண்டேன் .தீடிரென விளித்து எழுதுகிறேன்
        இந்தியாவின் அணுமின் நிலையத்தை அமெரிக்காவின் விமானம் வேவுபார்த்தது .இந்தியாவல் அதன் தூதரை அழைத்து ஒரு கண்டனம் கூட தெரிவிக்க இயலவில்லை .
        ஆனால் வடகொரியாவை வேவு பார்க்க சென்ற அமேரிக்கா விமானம் சுட்டுதள்ளபப்ட்டது .ஏனெனில் சீனாவின் தயவு இருக்கிறது .
        இஸ்ரேல் அணுகுண்டு வைத்திருக்கிறது கேட்பாரில்லை .வடகொரியா அணுகுண்டு தயாரிக்கிறது .அனால் இரான் தயாரிக்கிறது என்றால் பொருளாதார தடை .
        இராக் ,தனது நாணயமாற்று விகிதத்தை டாலரிலிருந்து யுரோவுக்கு மாற்றுகிறது .அமேரிக்கா வங்கியில் உள்ள இராக் பணம் முடக்கப்பட்டதால் அங்கு முதலீடு செய்வதை நிறுத்திவிட்டது .அப்புறம் என்ன? பேரழிவு ஆயுதம் என்று உலக மெகா பொய்.கோயபல்சை இனி சொல்லாதீர்கள் .அப்படி ஒரு பொய் .இப்போது இராக்கில் அமெரிக்காவின் பொம்மைகளின் அரசு .
        ஆப்கானிஸ்தானில் ரசியாவை விட்ட கொடுத்த ஆயுதமும் பணமும் ,ரசியா சென்ற பின்னர் அமெரிக்காவை நோக்கி திரும்பியதும் 9/11 நிகழ்வு .இப்போது அங்கேயும் அமெரிக்காவின் பொம்மை அரசு .கனிமங்களை சுரண்ட அடுத்த திட்டம் .
        இதை போல சவூதி அரசும் அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இராக் குழந்தைகளுக்கு நஷ்டஈடு கேட்க வேண்டாம் .அமெரிக்க கம்பெனிகளுக்கு ஆர்டர் கொடுப்பதை மறுத்தாலே போதும் அப்புறம் என்ன சவுதியில் தீவிரவாதிகள் பதுங்கல் .அமெரிக்காவில் அலல்து பிரிட்டனில் ஏதாவது குண்டு வெடிப்புகள் .அப்புறம் சவூதி மீது குண்டுமழை .சவூதி அமெரிக்கா வசம் .அந்த ஒருநாடுதான் உலக முஸ்லிம்களுக்கு வேலை கொடுத்து கொண்டு இருக்கிறது .அதுவும் ஒழிந்தால் இஸ்லாம் ஒழிந்துவிடும் என்ற கம்யினிச பார்வையா?

    • அட! இசுலாத்தை எதிர்பவர்கள் எவரும் இசுலாமிய நாடுகள் என்று சொல்லிக்கொல்லும் எந்த நாட்டிலும் பிழைப்புக்காகக்கூட போகக்கூடாது என்றால் இந்து தெய்வங்களை ஸைத்தான்கள் என்றுச் சொல்லும் இசுலாமியர்களையும் குர்ஆனையும் வெளியேறு என்று ஆர்.எஸ்.ஆஸ் கூறுவதும் சரிதானோ.

  17. ரிஸானாவின் படுகொலைக்கு முஹம்மது என்ற _____________போதனைகள் மட்டுமே மூலகாரணம்.

    • நீங்கள் சொல்வதுதான் உண்மை. இதை மறைக்கத்தான் பி.ஜெ கும்பல் வெறியாட்டம் போடுகிறது.

  18. வினவு …ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்..நீங்கள் ,இஸ்லாமியர்கள் தவறு செய்தால் இஸ்லாமியர்களை விமர்சியுங்கள் ..நான் தவறிழைத்தால் என்னை விமர்சியுங்கள்..சவூதி தவறிழைத்தால் சவுதியை தாராளமாய் விமர்சனம் செய்யலாம்..நாம் நிச்சயம் அவர்களின் பாவத்தில் பங்கு கொள்ள மாட்டோம்..ஆனால் இஸ்லாமிய சட்டங்களை விமர்சனம் செய்தால் அதை நிச்சயம் நாம் எதிர்ப்போம்…சட்டத்தில் குறைகள், பாரபட்சம் இல்லை ..அதை அமல் படுதுவோரிடம் தான் குறைகள் பாரபட்சம் உள்ளது…! சவுதியை உங்களுடன் சேர்ந்து நாமும் வெறுக்கிறோம்…பிஜே விமர்சிப்பது சவுதிக்காகவோ இஸ்லாமியர்களுக்காகவோ அல்ல ! இஸ்லாமிய சட்டங்களை விமர்சிப்பவர்களையே ! மனுஷ்ய புத்திரன் விமர்சிப்பது இஸ்லாமிய சட்டத்தை !வேறுபாடை புரிந்து கொள்ளுங்கள்..சகோ.

    எனது மகள் பாத்திமா களவெடுத்தாலும் கையை வெட்டுவேன். என்று கூறி அல்லாஹ்வின் சட்டத்திற்கு முன்னால் எந்த இரக்கமோ,பாசமோ அந்தஸ்தோ,பணமோ,பட்டமோ ,பதவியோ, எதுவுமே செல்லுபடியாகாது என்பதை தெளிவுபடுத்தியதன் மூலம் நீதியை நிலைநாட்டினார்கள் எமது தலைவர் முஹம்மத்(ஸல்) அவர்கள்.

    இதுதான் இஸ்லாம் ………

    • நாகூர் மீரான் கேட்ட கேள்விக்கு விடையளிப்பது நேர்மை. அமெரிக்க வீரர்கள் சவுதியில் தங்கி, சவுதி பிரியாணி சாப்பிட்டு, சவுதி மன்னர் அளித்த பேட்டா பணத்தை வாங்கிக் கொண்டு ஈராக்கில் குண்டு போட்டு முசுலீம் மக்களைக் கொன்றனர். இதை ஷரியத் சட்டம் கண்டு கொள்ளாத மர்மம் என்ன? ஷரியத் சட்டப்படி சவுதி அரச குடும்பத்தை பாலைவனத்தில் வைத்து வாளால் சிரச்சேதம் செய்ய வேண்டும் என்று ஏன் நீங்கள் கோரவில்லை? ரிசானாவுக்கு மட்டும் ஷரியத், சவுதி கொலைகார மன்ன்னுக்கு ஷரியத்திலிருந்து விதிவிலக்கா? இப்படியெல்லாம் நியாயப்படுத்த உங்களுக்கு வெட்கமாக இல்லை? உங்கள் ஷரியத்தே எங்களைப் போன்ற ஏழை நாட்டு முசுலீம் மக்களை கொல்வதற்காக மட்டும் பயன்படும் மர்மம் என்ன? பணக்கார சவுதி ஷேக்குகளுக்கு மட்டும் இதே ஷரியத் கண்ணை மூடிக் கொள்ளும் ரகசியம் என்ன? எனில் உங்கள் ஷரியத் யாருக்கானது? அதில் என்ன புனித வெங்காயம் இருக்கிறது?

      • வினவு…உங்கள் கேள்வி நியாயமானதே..! நீங்கள் சொல்வது உண்மை எனும் பட்சத்தில் இதற்க்கு இஸ்லாமிய சட்டம் காரணம் ஆகாது..அதை அமல்படுதுவோரே காரணம்..நிச்சயம் பாரபட்சம் இஸ்லாத்தில் இல்லை..மனிதர்களிடத்திலே தான் ! இதை பற்றி நாங்கள் விவாதிக்க வேண்டி உள்ளது…நீதிக்காக அனைவரும் ஒன்றிணைவோம்..! இன்ஷா அல்லாஹ் !

        நன்றி !!!!

        • என்னது உண்மை எனும் பட்சமா??? பாஸ்..நீங்க இந்த உலகத்தில் தான் இருக்கீங்களா???? இதுக்குதான் கொஞ்சம் வெளியே பாருங்க என்று சொல்கிறோம்.சும்மா ஷர்யத் ன்னு இருக்காதிங்க

        • இஸ்லாமிய சட்டப்படி கற்பழிக்கப்பட்ட பெண் 4 சாட்சிகளைக் கொண்டுவரவில்லை என்றால் கசையடி வாங்க வேண்டுமாமே, உண்மையா?

      • அடடா இப்ப தான் மீரான் பாய் ஃபாமுக்கு வந்து இருக்கின்ரார்…

    • மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் சுயமாக சிந்திக்கவேண்டாமா? செயல்படவேண்டாமா?
      கட்டுரையை மறுபடியும் படியுங்கள். ஆதி காலத்து சட்டங்கள் இக்காலத்திற்கும் எக்காலத்திற்கும் பொருந்தும் என்று வாதிடக்கேட்பது அலுப்பைத்தருகிறது.

    • //இஸ்லாமிய சட்டங்களை விமர்சனம் செய்தால் அதை நிச்சயம் நாம் எதிர்ப்போம்…சட்டத்தில் குறைகள், பாரபட்சம் இல்லை ..அதை அமல் படுதுவோரிடம் தான் குறைகள் பாரபட்சம் உள்ளது…! சவுதியை உங்களுடன் சேர்ந்து நாமும் வெறுக்கிறோம்…பிஜே விமர்சிப்பது சவுதிக்காகவோ இஸ்லாமியர்களுக்காகவோ அல்ல !//

      ஒரு எழவும் புரியல! ப்பீய்ஜே தளத்துல சவுதிக்கு வக்காலத்துதானே வாங்கியிருக்காங்க. இஸ்லாமிய சட்டங்கள்படி இந்த தண்டனை கொடுக்கப்பட்டிருக்குன்னுதான் எழுதிருக்காங்க. சவுதியை நீங்க வெறுக்கறதா சொல்றீங்க.. அப்புறம் இஸ்லாமிய சட்டத்துக்கு ஆதரவுன்னு சொல்றீங்க!!! என்ன கொடுமை அய்யா!!

      http://onlinepj.com/unarvuweekly/risana_nilai_nattapatta_neethi/

    • என்னது இஸ்லாம மதச் சட்டங்களை விமர்சனம் செய்யக்கூடாதா?

      ஒருத்தர் ஊரை ஏமாற்ற கடவுள் வந்துச்சு, என்னை தூதராக நியமிச்சுசு, அதுனால நான் சொல்லுவதெல்லாம் நம்புங்கனு சொல்லுவதை, இன்னமும் நம்புவது எவ்வளவு முட்டாள்தனம்?

      இறைவன் எவ்வளவு அறிவாளினு கொஞ்சம் எல்லாம் பாருங்க….

      //51:49 . நீங்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறுவதற்காக ஒவ்வொரு பொருளையும் ஜோடி ஜோடியாக நாம் படைத்தோம்.//

      //36:36 . பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.//

      இப்படி நபிகள் ஒரு பிட்டை போட காரணம் , நூண் உயிர்களைப் (Micro organisms, Hermaphrodites ) பற்றி Avaruku தெரியாது, நமது Antonie van Leeuwenhoek தான் Microorganisms என்ற கண்ணுக்கு தெரியாத பாக்டீரிய, Virus, etc., போன்ற உயிரினங்கள் வாழ்கின்றன என்பதை கண்டரிந்தார்.

      ஆகவே ஜோடி ஜோடியாக உயிர்களைப் படைத்தான் என்ற கதையை கட்டிவுட்டார்.
      இறைவனே பொய், இதுல இறைதூதர், இறை சட்டம் வேறையா?

      http://en.m.wikipedia.org/wiki/Hermaphrodite_(disambiguation)

    • ஆமா முகமூடியில் கை வெச்சா அவ்வள்வுதான் சொல்லிப்புட்டேன்???

  19. எப்பவுமே எல்லாம் முடிஞ்ச பின்னாடி பேசித்தீர்ப்பதுதான் இங்கே இருக்கு. இன்னும் 121 பேர் தலை வெட்டப்படக்காத்திருக்கிறார்கள். அதற்கு ஏதேனும் உருப்படியாய் செய்யலாம்.

  20. ரிசானா நபீக்கு கொலை குறித்து பீ.ஜே . போன்றவர்கள் வக்காலத்து வாங்குவது இஸ்லாத்திற்கு புறம்பானது . இஸ்லாத்தின் ஷரியத் சட்டமானது முழுக்க முழுக்க மனிதாபிமான
    அடிப்படையுளும் மனித குல விடுதளைக்கும்மானது இஸ்லாத்தின் சரியத் சட்டமானது எல்லோரையும் போல் வினவும் சரியான புரிதல் அற்றே இருக்கிறது பீ.ஜே. மற்றும் இன்னப்பிற கார்போரைட் பிரசங்கிகள் தேவையற்ற , மனிதாபீமானற்ற செயல்பாடுகளை இஸ்லாத்தின் அடிப்படையான கருதுகல்போல் பிரசங்கம் பண்ணுவதால் தங்களை முன்னிருதலாமே
    ஒழிய இஸ்லாத்தை இவர்கள் பின்னுக்குத்தான் தள்ளுகிறார்கள் . சவூதி முஸ்லிம்கள் ஒருபோதும் மற்றவர்களை முஸ்லிம் சகோதரர்களாக கருதுவதே இல்லை இங்கிருத்து சென்றவர்களை அடிமைகளை போல்தான் நடத்துவார்கள் என்பதற்கு பல்வேறு நடைமுறை உதாரணங்கள் உண்டு . குற்றம் என்று வருகிறபோது அங்கு சரிஅத் பின்பற்றுவது கிடையாது . குற்றவாளி சவுதியா அல்லது வெளினட்டவரா என்று பார்ப்பது தான் வழமை . இஸ்லாமிய சட்டப்படி குழந்தையை 2 ஆண்டுகள்
    தாய் பராமரிக்கும் வழமை சவூதி தாய்மார்களிடம் குறைவு மேற்கிதிய பழக்கவழக்கங்களில் மூழ்கி விட்டனர் . அதனாலேயே மூலை வளர்ச்சி குறைந்து மேற்கிதிய சிந்தனை வளர்த்து விட்டது . சக மனிதர்களை மனிதனாக பார்க்கும் பழக்கம் குறைந்து அடிமைகளாக பார்க்கும் பழக்கம் மூலை முழுதும் நிறைந்து இருக்கிறது . அதனால் தான் அசாதாரண சிறு குற்றங்கள் கூட மன்னிக்கமுடியதவையாக பார்க்கும் போக்கு அதிகரித்து விட்டது . இதற்கும் இஸ்லாமிய சரியதுக்கும் தொடர்புஇல்லை . சவூதி இல் முஸ்லிம்கல் இருக்கிரார்கல் ஆனால்
    அது இஸ்லாமிய சரியதிற்க்கு முரணான மன்னர் ஆட்சி நடைபெறுகிறது . இதற்கும் இஸ்லாமிய சரியதுக்கும் தொடர்புஇல் ஆதலால் பங்காளி பீ.ஜே. தனது பேச்சாற்றல் , எழுத்தாற்றல் போன்றவற்றை கடைவிரிப்பதோடு நின்றால் சரி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் சரியத்தையும் தேவையற்ற விவததிர்குள் தள்ள வேண்டாம் .
    பீ.ஜே.தனது தொழிலுக்கான பிதற்றல் எல்லாம் வினவு போன்றவர்கள் இஸ்லாத்தின் கருத்தாக எண்ணி விமர்சிக்கவேண்டாம் . நீங்கள் இஸ்லாத்தின் மனிதாபிமான முகத்தை முழுவதுமாக ஒரு போதும் அறிந்து கொள்ள முயற்சிப்பதே இல்லை . குற்றங்களோடு இஸ்லாத்தை தொடர்பு படுத்துவதை விட்டு விட்டு அதன் வழிகாட்டுதலை , மேன்மைகளை அறிந்து கொள்ள எத்தனையோ வாய்புகள்வுள்ளது அவற்றிற்கும் சற்று முகம் கொடுங்களேன் .

  21. பொய்யனுக்கு அடையாளம் அவன் பேசுவதிலயே அவன் முரன் படுவான்.நீங்கள் உங்கள் கருத்தில் உறுதியாக இருந்தால் அறிவு பூர்வமான விவாதத்தில் கலந்து pj உடன் விவாதித்து உங்கள் கருத்தை நிலைநாட்டலாமே . அவருடைய கருத்து தவறு என்று மக்கள் மத்தியில் நிரூபிப்பதன் மூலம் ஒட்டு மொத்த இஸ்லாமிய சரியத் சட்டங்கள் இந்த காலத்திற்கு உதவாத குப்பை என்று நிரூபிக்க ஒரு அருமையான வாய்ப்பு .இதை ஏன் தவற விடுகின்றீர்கள். இஸ்லாத்தை பற்றி ஒரு விசயத்தை பற்றி வினவு எழுதும் போது நுனி புள் மேயும் என்பது மீண்டும் நிருபமாகின்றது.சிங்கத்தை கண்ட கழுதைகள் விரண்டோடுவை போல ஓடாமல் விவாதத்தை சந்தித்தது உங்கள் வீரத்தை நிருபியின்கள்.நேருக்கு நேர் என்பது இரட்டை வேடம் போட கூடியவனை அம்பலபடுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். வினவு இருக்கின்றதா?

    • /////அறிவு பூர்வமான விவாதத்தில் கலந்து pj உடன் விவாதித்து உங்கள் கருத்தை நிலைநாட்டலாமே////

      எச்சுகுச்சு மீ … அறிவுக்கும் இஸ்லாமுக்கும் குறிப்பா பீஜேவுக்கும் என்ன சம்மந்தம் ?..

      ////இஸ்லாமிய சரியத் சட்டங்கள் இந்த காலத்திற்கு உதவாத குப்பை என்று நிரூபிக்க ஒரு அருமையான வாய்ப்பு ////

      கழுதைக்கு காது நீளம்னு நிரூபிக்க வேற செய்யனுமா ?.. தக்காலி அத பாத்தாலே தெரியாதா ?..

      ////.சிங்கத்தை கண்ட கழுதைகள் விரண்டோடுவை போல ஓடாமல் விவாதத்தை சந்தித்தது உங்கள் வீரத்தை நிருபியின்கள்.நேருக்கு நேர் என்பது இரட்டை வேடம் போட கூடியவனை அம்பலபடுத்தும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்////

      அப்போ இங்கேயே விவாதிக்காமல் அங்கே கூப்பிடும் உங்கள … ஏதோ ஒரு படத்துல சுந்தர்.சி ய பாத்து எங்க ஏரியாவுக்கு வாடா , எங்க தெருவுக்கு வாடா , எங்க வீட்டுக்கு வாடா நு உதார் விடும்
      வடிவேலுவாக கருதலாமா ?… (அது என்ன படம்னு மறந்து போச்சுங்க .. யாராவது தெரிஞ்சா சொல்லுங்களேன்)

  22. பாராட்டுக்கள் வினவு.மறுபடி மறுபடி மறுபடி மறுபடி படித்த பதிவு இது

    “கடுங்கோட்பாட்டுவாத நம்பிக்கைகளை காத்துக் கொள்ளும் நோக்கில் மட்டுமே குறியீட்டு எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்துவது தஸ்லீமா நஸ்றீன், சல்மான் ருஷ்டி போன்றவர்களை எதிர்த்துப் போராடுவது, உழைக்கும் மக்களின் தர்ஹா வழிபாடு எதிர்ப்பு போன்றவற்றில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்”

    “இந்தக் கடுங்கோட்பாட்டுவாத வெறித்தனங்கள் ஆர்.எஸ்.எஸ் நடத்தும் நச்சுப்பிரச்சாரங்களுக்கு ஒரு அரசியல் அடிப்படையை தங்கத் தாம்பாளத்தில் வைத்து வழங்குகிறது.”

    “இது 21ம் நூற்றாண்டு. பங்குச் சந்தை சூதாட்டங்கள் பற்றியோ, இணைய வக்கிரங்கள் பற்றியோ, பாலியல் திரைக்காட்சிகள் பற்றியோ அல்லது விலையேற்றம், மின்சாரத் தடை, கேஸ் சிலிண்டர்களுக்குக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு சமகால வாழ்க்கைச் சிக்கல்களுக்கு குரானிலோ பைபிளிலோ என்ன சொல்லப்பட்டுள்ளது என்று தேடிக் கொண்டிருப்பது முட்டாள்தனம்”

    ஹைதராபாத்தில் முஸ்லிம் சிறுமிகளிடம் பத்துநாள் கல்யாணம் நடத்தும் ஷேக்குகளைப் பற்றி இந்த கூட்டம் பேசவே மறுக்கிறது.அதுக்கு பொங்கி எழுந்து போராட்டம் நடத்தியிருக்கவேண்டாமா…?

    • இப்படி கல்யாணம் செய்து ஷேக் ஏமாற்றிவிட்டார் என்று கேஸ் பதிவாகியிருக்கிறதா ? ஆரிய ஏடுகள் எழுதுவதை கிளிப்பிள்ளை போல் நீங்களும் சொல்கிறீர்களே

  23. இஸ்லாமிய சட்டமே தீர்வு ! மாபெரும் பொதுக்கூட்டம் – நேரடி ஒளிபரப்பு (onlinepj .com)

    ரிசானா விவகாரத்தில் கருத்து சொன்ன கலைஞர்,நக்கீரன்,ஆனந்த விகடன்,மனுஷ்யபுத்திரன் ஆகியோரின் வரட்டு வாதங்களுக்கு பதிலடி கொடுக்கும் மற்றும் விஸ்வரூபம் திரைப்படம் அடுத்த கட்டம் என்ன என்பதை விளக்கும் மாபெரும் பொதுக்கூட்டம் .

    உரை : பி .ஜெயினுல் ஆபிதீன் , கோவை ரஹ்மத்துல்லாஹ்

    இன்ஷா அல்லாஹ் ! நேரம் : இரவு 7 மணி , 27.01.2013

    இடம் : மண்ணடி ,தம்புசெட்டி தெரு ,சென்னை .

    ***

    இன்ஷா அல்லாஹ் ..இங்குள்ள அனைவரும் பாருங்கள்…!

    • இன்ஷா அல்லா, இனிமேல் இந்த _________ தமிழ்னாட்டிலும் தலை வெட்ட ஆரம்பிச்சிருவானுங்க போலயே.

  24. எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.மறுபிறவி நம்பிக்கையும் இல்லை.இதெல்லாம் டவுட்டின் அடிப்படையில் சாய்ஸில் விட்டுவிட்டேன் எப்போதோ.ஆனாலும் தோணுது…கடவுளே மறுபிறவி என்று ஒன்று இருந்தால் எந்த நாட்டிலேயும் தெருநாயாவாவது என்னை பிறக்க வை.ஆனால் அரபு நாட்டில் ஏழையாக்கிவிடாதே…அங்கே நாத்திகனாக கூட வாழமுடியாது.

    • இதே அரபு நாடுகளில் கோடான கோடி மக்கள் வேலை செய்து கண்ணியமாக சம்பாரித்து சந்தோசமாக வாழவில்லையா ? சில அயோக்கியர்களிடம் மாட்டிக்கொண்டு சீரழிந்தவர்களை மட்டும் தூக்கிப்பிடிக்க கூடாது. எல்லா நாடுகளிலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள். அங்கு மிக மிக குறைவாக இருக்கிறார்கள் நம் போன்ற நாடுகளை கம்பேர் பண்ணும்போது . அதுவும் ஷரியத் சட்டத்திற்கு பயந்து தான்

  25. முகம்மது ஜமீல், சௌதிலிருந்து பணம் வந்ததற்க்கு ஆதாரம் தந்தால் என்ன செய்வீர்கள் என்று சொல்லுங்களேன். ஆதாரம் தருகிறேன்.

  26. பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். பாதிக்கப்படாதவர்கள் வெளியில் நின்றுக்கொண்டு வளைச்சி வளைச்சி கருணையோடு நியாயம் பேசலாம். மனித நேயம் பேசலாம். இவர்கள் பேச்சு கொலையாளிக்கும் மற்ற பாதிக்கப்படாதவர்களிடத்திலும் பரரிதாபத்தை ஏற்படுத்தலாம். ஆனால் பாதிக்கப்பட்டவனுக்கு நிவாரணம் கொடுக்குமா ? திருப்தி கொடுக்குமா ? பாதிக்கப்பட்டவன் நிலையிலிருந்து நாம் பார்க்க வேண்டும்.என் மகனை ஒருவன் கொலை செய்துவிடுகிறான்.குற்றவாளிக்கு மரணதண்டனை கொடுத்தாலும் என் மகனுடைய இழப்புக்கு ஈடாகுமா என்றால் ஈடாகாது. ஓரளவு திருப்திக்கிடைக்கும் அவ்வளவுதான். என் மகன் என்னுடன் இருந்த சந்தோஷம் எனக்கு கிடைக்கவே கிடைக்காது. உன் மகனை கொன்னுட்டான் இவனையும் கொலை பண்ணியாச்சி சந்தோசமா வாழ்க்கைய கொண்டாடுன்னு சொல்ல முடியுமா ? காலத்திற்கும் இந்த வலியை நானும் என் குடும்பமும் அனுபவித்துக்கொண்டே இருக்கணும்.எந்த காரணத்திற்காக என் குடும்பம் வாழ்நாள் முழுவதும் இந்த தண்டனை அனுபவிக்கனும் ? இன்றைக்கு நாட்டில் கொலைக்கு கொலை எவ்வளவு நடக்குது? ஏன் நடக்குது ? பாதிக்கப்பட்டவனுக்கு தீர்ப்பில், நியாயத்தில் திருப்திக்கிடைக்கவில்லை என்பதற்காகத்தான். ஒரு கொலை குற்றவாளிக்கு அரசாங்கமே மரண தண்டனை கொடுத்திருந்தால் நியாயமாக அவன் செய்த குற்றத்திற்க்கு அத்தண்டனை அவனோடு முடிந்திருக்கும். அதை தொடர்ந்து பத்து கொலைகள் பலிக்கு பலியாக நடந்திருக்காது.பாதிக்கப்பட்டவர்களுக்குத்தான் அதன் வலி தெரியும். வேதனை புரியும். பாதிக்கப்பட்டோர் நிலையில் இருந்துத்தான் இஸ்லாம் பார்கிறது. மற்றப்படி அறிவு ஜீவிகள் வக்கனையா பேசிக்கொண்டே இருப்பார்கள் தான் பாதிக்கப்படாதவரை. சுவாரசியமாக பொழுது போகணும்ல…

      • கண்டிப்பாக தீர விசாரிக்கப்பட்டுத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். ஏனென்றால் மன்னருடைய நெருங்கிய உறவு பெண் விபச்சாரம் செய்ததற்காக அந்த பெண்ணிற்கு மரண தண்டனை நிறைவேற்றிய நீதியை கொண்ட நாடு அது. அதற்காக அரேபியர்கள் அனைவரும் யோக்கியமானவர்கள் என்று சொல்ல வரவில்லை. அங்கேயும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள். மிக குறைவாக. சரியத் சட்டத்திற்கு பயந்துதான். கொலை போன்ற குற்றங்களுக்கு கண்டிப்பாக ஷரியத் வளைந்து கொடுக்காது. நம் நாட்டில் பல கொலைகள் செய்துவிட்டு லட்சக்கணக்கான பேர் தண்டனையே அனுபவிக்காமல் சொகுசாக வாழ்கிறார்கள். அந்த கொலைகளால் பாதிக்கப்பட்டவன் குடும்பம் நீதிக்கிடைக்காமல் குமுரிக்கொண்டு வாழ்கின்றனர். அதை பற்றி எல்லாம் நம்ம அறிவு ஜீவிகளுக்கு கவலையே கிடையாது. குற்றம் செய்த 30 வயது பெண்ணை கூச்சமே இல்லாமல் சிறுமி என்கிறார்கள். வினவு கூட அந்த பென்னுக்கு தண்டனை நிறைவேற்றுவதை உருக்கத்தோடு எழுதுகிறது. அங்கு வெட்டப்படும் எல்லா குற்றவாளிக்கும் சுய நினைவை இழக்கும் மருந்து செலுத்தப்பட்டுத்தான் தண்டனை நிறைவேற்றப்படும்.

        • Dear brother I agree with you that affected person only know the pain of loss and others may talk anything and your explanations are logical and meaningful .As for as i know laws and punishments which are adapted in Saudi Arabia in the name Islam are not fair .One of the example, Muslim law accept slavery. It is completely against humanity. I still accept vinvu’s point that all religion laws are made based on the time when those religions are started. and Laws which are created 7 BC are not meaningful in today’s modern world. common man including me appropriate you If you accept that Muslim laws have dark side also. I am Hindu by birth but I am and completely against Hindu religion as it supports caste system and most of the Hindu laws are biased.

          • Another example to my point , People are treated very badly and which is accptepted

            புகாரி 2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
            நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்

        • yousuf,

          the girl is born in 1988 and she was sentenced to death in 2006.she is just 18.

          Only thing i want to say about this issue is that,an illiterate religious tamil muslims girl working as a maid in a powerful country like saudi arabia will never have the courage to strangle a baby.

          I dont see any reason for the girl to do it unless she was mentally ill which has not been proved.

          All these local guys are trying desperately to save Saudi Arabia’s image because if that falls,then everything falls.Sharia falls,Hadith falls,everything falls.

          people come here and try to divert the discussion,whats the point?

          we r sick and tired of appeasing these kullahs,most of them a brain dead weasels.

    • “மற்றப்படி அறிவு ஜீவிகள் வக்கனையா பேசிக்கொண்டே இருப்பார்கள் தான் பாதிக்கப்படாதவரை. சுவாரசியமாக பொழுது போகணும்ல…” அருமையான வரிகள் அதான் இங்கே நடந்துக்கிட்டு இருக்கு

      • ^^^^^^^^^^ இங்கு தான் பார்ப்பனியமும் இஸ்லாமிய அடிப்படைவாதமும் கை கோர்க்கிறது …

  27. பிரேதப் பரிசோதனை செய்யப்படவில்லை என்பதே உண்மை. அப்படி இருந்தால் அதன் நகலை இங்கே பதிவிடுங்கள் அயோக்கியர்களே.

  28. இங்கு பேசுவோர் எத்தனை பேரு சவுதியில் பிழைப்புக்காக சென்றிருக்கிறார்களோ ? ஆண்டவா..!!!
    நாகூர் மீரானே!
    அட! இசுலாத்தை எதிர்பவர்கள் எவரும் இசுலாமிய நாடுகள் என்று சொல்லிக்கொல்லும் எந்த நாட்டிலும் பிழைப்புக்காகக்கூட போகக்கூடாது என்றால் இந்து தெய்வங்களை ஸைத்தான்கள் என்றுச் சொல்லும் இசுலாமியர்களையும் குர்ஆனையும் வெளியேறு என்று ஆர்.எஸ்.ஆஸ் கூறுவதும் சரிதானோ.

    • நண்பரே இது தான் விஷமத்தனமான கருத்து. யாரு இந்துக்கடவுள்களை சைத்தான்கள் என்று கூறியது ? அவரவர் மார்க்கம் அவரவர்களுக்கு. அவர்களின் தெய்வங்களை திட்டாதீர்கள் என்றுத்தான் இஸ்லாம் சொல்லுகிறது நண்பரே. நீங்கள் ஆர் எஸ் எஸ் நபரா ?? அவர்களை போலவே கருத்து சொல்கிறீர்களே..

      • யூசுப், விக்ரகங்கள் ஷைத்தானகள் இல்லையா? அதற்கான குர்ஆன் வசனம் வேணுமா?

        • “இந்து தெய்வங்களை ஸைத்தான்கள் என்றுச் சொல்லும் இசுலாமியர்களையும் குர்ஆனையும்” என்று சொல்லிவிட்டு இப்போ “விக்ரகங்களை” என்று வார்த்தையை ஏன் மாற்றி போடுகிறீர்கள்? ஏன் இந்த நரித்தனம் ? மனிதனால் படைக்கப்பட்ட விக்ரகங்களை படைத்த கடவுளுக்கு இணை வைக்காதீர்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

  29. ##அடிப்படையுளும் மனித குல விடுதளைக்கும்மானது இஸ்லாத்தின் சரியத் சட்டமானது எல்லோரையும் போல் வினவும் சரியான புரிதல் அற்றே இருக்கிறது ##

    எல்லாம் அறிந்த ஞானி கான் அவர்களே, உலகை உய்யவிக்க வந்த இசுலாம் கீழுள்ள ஹதீது மூலம் என்ன சொல்கிறது என்றுச் சொல்லுங்களேன்? ஓடிவிடாமல் பதில் கூறவும்.

    புகாரி 2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
    நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.

    • ஒரு நாலுவரியை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவர்களை போல் தான் நீங்களும் கேட்குரீர்கள். அது எதற்காக கூறப்பட்டது, அந்த சூழ்நிலை என்ன என்பதை எல்லாம் தெரிந்துக்கொள்ளுங்கள். கண்டிப்பாக இதற்கு விளக்கம் இருக்கிறது. இந்த தளத்தில் இதை விளக்க இயலாது. onlinepj.com செல்லுங்கள் வீடியோ பதிவாகவே இருக்கிறது.

      • ஏம்பா , இந்த நாலு வரிய உன்னால விளக்க முடியாதா.? இதுக்கு அண்ணன் பீஜே கிட்ட போகனுமா.? முஸ்லிம்களுக்கு சொந்த சரக்கே கிடையாதா.?

  30. ##இப்படி கல்யாணம் செய்து ஷேக் ஏமாற்றிவிட்டார் என்று கேஸ் பதிவாகியிருக்கிறதா ? ஆரிய ஏடுகள் எழுதுவதை கிளிப்பிள்ளை போல் நீங்களும் சொல்கிறீர்களே##

    யூசுப்,
    அதுவும் சரியத்தின் முத்ஆ சட்டப்படி திருமணம் செய்துகொண்டு போவதைகூட மறுக்கும் அளவுக்கு மதவெறி தலைக்குள் புகுந்துள்ளை கழற்றி வையுங்கள்.

    • அப்படி பாதிப்புக்குள்ளானவர்கள் புகார் கொடுத்திருக்கிறார்களா என்று தான் கேட்கிறேன். மொட்டையாக சொன்னால் அது காழ்புனற்சியான தகவல்.

    • முத்ஆ இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டது என்பதற்கு பலமுறை சொல்லியாயிற்று .இருந்தாலும் இவர்கள் வழக்கம் போல பல்லவி .
      அலி[ரலி] அவர்கள் கூறியதாவது ,கைபர் போர் நடந்த ஆண்டில் ,அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்கள் இனி முத்ஆ செய்யக் கூடாது என்றும் நாட்டு கழுதை இறைச்சியை சாப்பிட்டாக கூடாது என்றும் தடை விதித்தார்கள்
      புகாரி 5523

      • Yes Ibrahim, if that is banned, then if some people trying to use it and telling the muslim name, you have to started a riot against them. Not to the people who is pointing that. Dont tell only hindu media is publish such bull shit. Are you 100% sure no such things are happening by the name of your Lawa?? Criminals will be there in every place. So one amoung the criminal might have done it. But what was the action from your side for that.Showing anger towards the people who are pointing the mistake, accept it and try to correct it.

        -one small question: What is the reason behind not to eat country donkey meet?

        • பாலாஜி ,முத்ஆ திருமணம் இப்போது யார் பண்ணுகிறார்கள்?

          நமது சட்டத்தின்படி வரதட்சணை வாங்க கூடாது .ஆனால் நீங்கள் ஏன் அவர்களை எதிர்த்து போராடாமல் அந்த மாதிரியான திருமணங்கள் செய்கிறீர்கள் ?அலல்து அந்த நிகழ்வில் கலந்து கொள்கிறீர்கள் ?
          பாலாஜி ///one small question: What is the reason behind not to eat country donkey meet?///

          முகமமது நபி[ஸல்] அவர்கள் சொன்னதிலிருந்து அதற்கு கழுதை கரி சாப்பிட்டு வந்த உலகம் இன்று யாருமே அதை சாப்பிடுவதில்லை ஏன்?

          • Sorry Ibrahim, for typing in English. I am finding it difficult to type in Tamil.

            See you are questioning me again with who is doing that marriage. If you are not aware of that means no such things are happening.

            Yes dowary is worst system. And yes we have to be accused for being part of such instances. (but one thing i can strongly tell, it was not happened with/to me). But since we are not doing anything against dowary that doesnt mean dowary system is correct. (it is happening in all caste and all religion (including muslim)). But people are still fighting against it. There is no god thats why we are not able to correct wrong things with in a day or a minute or sec or even less than that.

            Many people are asking, for 1400 years with this much cruel punishment system for the people who make crime or mistake but still not able to control the crime. Then what is use of such super power? was or is it real? did this question araise in your mind anytime. All these right or wrong things are happening due to us only. it should be corrected by us only. People from every religion are not ready to accept this.

            Nabi said dont eat donkey. Ofcourse that meat is not available anywhere publically (not sure in entire world). I agree with you for that.
            But my question was what is the reason behind it? why we should not eat that meat? Since you mentioned that Nabi said this. I am asking for the reason.

  31. சவுதி நாட்டில் அளிக்கின்ற தீர்ப்புகள் எல்லாம் பாரபட்சமானது என்று வினவு கூறுகிறதா? நம்ம ஊர்ல கசாப்பை தூக்குல போட்டது தவறு, ஆட்டோ சங்கரை தூக்கில் போட்டது தவறு என்று அரபு நாட்டின் அறிவு ஜீவிகள் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்வோமா ? அவன் ஊரு சட்டத்தின் படி கொடுக்குற தீர்ப்பில் நீங்கள் எதற்கு மூக்கை நுழைக்கிறீர்கள்? சிங்கபூர்ல எத்தனையோ மரணதண்டனை நம்ம ஊரு நபர்களுக்கோ மற்ற வெளிநாட்டினருக்கோ கொடுக்கப்பட்டிருக்கிறதே.. அதை யாரும் இந்த அளவு கண்டிக்கவில்லையே. ஏனென்றால் அது சவுதி இல்லை அதற்காகவா?

    • கசாப்பும் அந்த ஏழைப் பெண்ணும் ஒன்றா? உங்களுக்கெல்லாம் மனிதத்தன்மையே கிடையாதா?

      • When these guys want to defend an barbaric act they go down any deeper. Even PJ has made a similar analogue comparing the delhi rape incident with Rizana case. The death of the child is though tragic is an accident. When you are awarding a death sentence it should be driven by facts not by emotion/passion? After two days of serious discussions no one have clarified the doubt on post mortem(Guess PJ would receive a prepared copy of PM report from the saudi government for his session tomo).
        ///கண்டிப்பாக தீர விசாரிக்கப்பட்டுத்தான் கொடுக்கப்பட்டிருக்கும். ஏனென்றால் மன்னருடைய நெருங்கிய உறவு பெண் விபச்சாரம் செய்ததற்காக அந்த பெண்ணிற்கு மரண தண்டனை நிறைவேற்றிய நீதியை கொண்ட நாடு அது.////
        Apppapppa…. ammmmammmma…. Rizana was not even given access to a lawyer till she was sentenced bro….

  32. Muslim brothers, I love you people, I love your culture, I love your music, I know you are being suffered in this world at every corners. We as the freedom lovers supported you in Godra Incident. We know its cliché to show Muslims as terrorist-that is happening even in third-rated Masala movies.

    But please understand, this kind of intolerance shown in Viswaroopam matter or inhumanity shown in Rizana incident(En vaysu avalukku 🙁 ) will not help you, It helps you the society to turn against you. It makes the society polarized. Then one day you will be all alone- even Allah wont be with you 🙁

  33. வினவு,

    இந்த மாதிரி ஷரியாகளுடன் விவாதமே செய்யகூடாது. முடிவுக்கு வர விவாதிகலாம். ஆனால் இதுகள் முடிவு பண்ணிவிட்டுதான் விவாதத்திற்கே வரும். மதம் ஒரு போதை என்றால் இஸ்லாம் ஒரு ஓபியம். ஓபியம் அடிமைகளுடன் விவாதிக்கப் போகிரீர்களா!? இந்த மாதிரி நான் ஒரு பதிவு போட்டதுக்கே என்னை முஸ்லீம் பெயரில் இருக்கும் RSS காரன் என்பார்கள். இவங்களின் மிரட்டலுக்கு பயந்துதான் பல முஸ்லிம்கள் அமைதியாய் இருக்கிறார்கள்.

  34. நந்தன்
    இப்போது தமிழகத்தில் ரத்ததானம் வழங்குவதில் முதலிடத்தில் இருப்பது தவ்ஹித் ஜமாஅத் என்பது ,உங்களுக்கு தெரியாது பெரும்பாலான காவல்துறைக்கு தெரியும் .
    கல்வி உதவி ,மருத்துவ உதவி முதியோர இல்லம் ,அநாதை சிறுவர் இல்லம் சிறுமியர் இல்லம் என்று தமிழக இஸ்லாமிய உலகில் அற்புதமாக சேவைகள் செய்துவரும் பீஜே பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
    உங்கள் கண்ணீர் கீ போரடைத்தான் ஈரப்டுத்தும் .அவர் அப்படியல்ல மக்களோடு இணைந்து களத்தில் பணியாற்றக் கூடியவர் .
    மனுஷ்ய புத்திரன் போல் பாவல காட்டுபவர் அல்ல .
    உங்களுக்கு தவ்ஹித் ஜமாஅத் பற்றியும் தெரியவில்லை .வஹ்ஹாபி பற்றியும் தெரியவில்லை .சவுதிக்கு பீஜே யை போகவிடாமல் தடுத்துக் கொண்டிருப்பவர்கள் நீங்கள் சொல்லும் வஹ்ஹாபிகள் .
    ஒவ்வொரு ஊரிலும் தவ்ஹித் ஜமாஅத் அடி உதை வாங்கி வளருகிறது .பீஜே பல அடிகளும் உதை களும் வெட்டு குத்துகளும் தனது கொள்கைகளை சொன்னதற்காக வாங்கியுள்ளார் நாத்திகர்களுக்கு ஆரம்ப காலத்தில் கிடைத்ததை விட பலமடங்கு சோதனைகளை தாங்கிக் கொண்டு வளரும் இயக்கம் தவ்ஹித் ஜமாஅத் என்பதை உளவுத்துறை மூலம் தெரிந்து கொள்ளுங்கள் .உளறாதீர்கள் .சவூதி அரேபியா மட்டுமலல் வேறு எந்த வெளிநாட்டிலிருந்தும் பீஜெவுக்கோ தவ்ஹித் ஜமாத்துக்கோ பணம் வருகிறது என்று நிருபித்தால் அந்த பணம் முழுவதும் உங்களுக்கே

    • //இப்போது தமிழகத்தில் ரத்ததானம் வழங்குவதில் முதலிடத்தில் இருப்பது தவ்ஹித் ஜமாஅத் என்பது ,உங்களுக்கு தெரியாது பெரும்பாலான காவல்துறைக்கு தெரியும் //

      அட என்னங்க நீங்க தான் முதல்னு சொல்லுரிங்க த.மூ.மூ.க அவங்க தான் முதல் சொல்லுராங்க..அப்பறம் வேர அமைப்புக்ள் அவங்க தான் முதல்னு சொல்லுராங்க..யாருதான் முதல் …

      • சி.கு தமுமுக சொன்னதை காட்டுங்கள்வேறு எந்த அமைப்பு சொன்னதையும் சொல்லுங்கள்

        • வாங்க இப்பு பாய் எப்படி இருகிங்க நல்ல இருகிங்களா..உங்க கிட்ட பேசி ரொம்ப நாள் ஆகுதுல..அப்பறம் என்ன கேட்டிங்க …

          //சி.கு தமுமுக சொன்னதை காட்டுங்கள்வேறு எந்த அமைப்பு சொன்னதையும் சொல்லுங்கள்//

          எல்லாம் அமைப்பும் அப்படி தான் சொல்லிக்குறாங்க அவங்க அவங்க செய்ட்ல…வேனும்னா அந்த செய்ட்லாம் போய் விசிட் பன்னிட்டு வாங்க பாய்..அப்படியே தவ்கீத் ஜமாத் சொன்னதையும் காட்டுனிங்கனா நல்லா இருக்கும் ….

  35. வினவின் குடும்பத்தில் உள்ள யாரையாவது கொலை செய்தால் தான் இவனுக்கு புரியும்….

    • இஸ்லாமியர் என்றால் தீவிரவாதியா ? நீர் உண்மையான செய்தியை தான் சொன்னீர் என்றால் யார் தீவிரவாதிகள் என்று விவாதிக்க தயாரா ? உன்னையும் உன்னை போன்றோர்களின் முகத்திரையும்
      கிழித்தெறியப்படும், ராணுவத்துறையில் எங்களுக்கு கிடைக்கவேண்டிய (இடஒதுகீட்டின் அடிப்படையில் கூட) வேலை கிடைக்காமல் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் எங்கள் சமுதாயத்தை இந்த அளவுக்கு புறம் தள்ள யாரிடம் பாடம் கற்றாய்?

      யார் தீவிரவாதி? பொதுமக்கள் மற்றும் மீடியா முன்னிலையில் விவாதிக்க தயாரா?

      தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?
      சம்ஜ்யோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
      சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?
      மக்க மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?
      அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?
      கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

  36. ஏதோ ஒரு மதநூல் சொல்லுவதுதான் தர்மம் என்ற தோரணையை விட்டுவிட்டு வெறும் மனசாட்சியின் அடிப்படையில் விவாதம் செய்ய இந்த ________ PJ தயாரா…? கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் புனித குரானைச் சாராது மனசாட்சியை வைத்து விவாதம் செய்தால் எந்த கேள்விக்கும் இந்த பெரிய மனிதரால் பதில் சொல்ல முடியாது. மற்றபடி நான் எந்த மதக் கொள்கைக்கும் எதிரானவன் இல்லை.

  37. இப்பதிவில் விவாதிக்கும் பி.ஜேவின் அல்லக்கைகளே

    இறந்த குழந்தையின் போஸ்ட் மார்ட்டம் உங்களிடம் இருக்கிறதா ஆமாம் /இல்லை என சொல்ல வேண்டும்.

    போஸ்மார்டம் அறிக்கை இருந்தால் அல்லக்கைக்கள் பதிவிடுங்கள் இல்லையேல் ___ மூடுங்கள்!!! இதில் என்னத்தை விவாதிப்பது ?
    போஸ்ட் மார்ட்ம் இல்லாம்லே தீர்ப்புக் கொடுத்ஹான் சவுதி இதை படிங்க முட்டாள்களே!!
    http://www.asiantribune.com/news/2011/06/16/rizana-nafeek-sentence-death-without-postmortem-report

    **
    பி.ஜே ஏமாற்றுக் காரான் ஆனால் சவுதி உண்மையான ஷரியா பின்பற்றுகிறது ஏனும் அடிப்படைவாதிகளே

    சவுதிக்காரன் இபின் சவுத் அமெரிக்கவின் பிரதிநிதி என்பதை ஏற்கிறீர்களா இல்லையா? ஆம்/இல்லை

    ***

    இந்த இரண்டிலும் இல்லாத சுன்னத் ஜமாத், இதர பிற முஸ்லிம் ஆட்களே
    ஷரியாவில் உள்ள பலவகைகளில் எது சரி?

    இப்போது ஷரியா உலகில் எந்த நாட்டில் மிக சரியாக அமல் படுத்தப்படுகிறது?

    எல்லாரும் சேர்ந்து கூச்சல் போட்டல் சவுதி அடிமை பீ.சே தப்பிச்சுடுவான்! ஆகவே பொறுமை!

  38. அட அரிவு கெட்ட வினவு,,,நி என்ன்மொ நெரில் இருந்து அந்த குலந்தை இரப்பதை பார்த்ததுபொல் கூருகிராயே? அதர்கு என்ன ஆதாரம் உல்லது உன்னிட்ம்? து!!!!!!!!!

    • அட வினவு பாதிங்களா எங்க சுல்தான் பாய் சொன்னத…எவ்வளவு சரியா பேசுராரு பாருங்க…உங்க கிட்ட ஆதாரத்தை கேட்பாரு ஆனா அந்த குழந்தை கலுத்த நெருச்சிதான் சாகடிக்கப்பட்டதுனு பி.ஜெ சொல்லுராரே அதுக்கு ஆதாரத்தை கேட்க மாட்டாரு ..இதுக்கு பேரும் பி.ஜெவின் ஏகத்துவம்…

  39. ப்ப்பீஈஈயா என்னும் ஆர்.எஸ்.எஸ். டவுசர் இதற்கு முந்தைய பதிவில் வினவை பி.ஜே. வகையாறாக்களின் கொ.ப.செ. போல் சித்தரித்து “சவுதி பற்றி பதிவு போடு” என்று திமிராக பின்னூட்டமிட்டிருந்தனர்…..அந்த ஜந்துவுக்கு யாராவது கோவணம் (ஊத்தவாய் சங்கரன் ஸ்பான்சர் ) வாங்கி தரவும்…பாவம் அம்மணா இருக்கு சகிக்கல……

  40. மனிதவுரிமை,தண்டனை,சட்டம் என்பதெல்லாமே இப்போது கசாப்புக் கடைக்கு நிகராச்சு.நிலவும் உடமைகளைக் காப்பதிலும்,உலகிலுள்ள அனைத்து வளங்களையும் தமதாக்க முனைந்த கடந்த கால ஆதிக்கமுடையவர்கள் தமக்கேற்ப அமைத்துக்கொண்ட கொடிய சட்டங்களை இறைவன் பெயரால் எழுதியபோது அது நீதியாகவும்-நேர்மையானதாகவும் புரிந்துகொள்கிறோம்-புரிந்துகொள்ள வைக்கப்பட்டோம்.

    இயற்கையில் ஜடப்பொருள்கள்மீதும்,உயிர்களது உடல் வரை நிகழ்த்தப்படும் அரசியலானது பௌதிகவிருத்தலைத் தமது அதிகாரத்துக்குட்படுத்தும் முயற்சியில் இத்தகைய கொடிய”திறந்த சமுதாயத்துக்கு எதிரான”அன்றைய காட்டுமிராண்டிகளது உணர்வுக்கும்,அகவொழுங்குக்கும் அமைய அதிகார மனிதர்கள்அமைத்துக்கொண்டனர்.

    எனவேதாம்,கி.மு. 1770 களில் பாபிலோனியச் சமுதாயத்துள் கமுராபியின் [Hammurabi]ஆளுமைகளை நிலை நாட்டும் தந்திரத்துள்:
    “இறைவன்அரசனின் நிழல் அதுபோல் அரசனது நிழல் மனிதர்கள்”என விளக்கப்பட்டது.[ Zu den ersten Gesetzessammlungen gehörte die des König Ur-Nammu aus der Ur-III-Zeit. Die ersten babylonischen Gesetze stammten aus der Zeit des Herrschers Lipit-Ischtar (1934-1924 v. Chr.) ]

    இத்தகைய ஒழுங்கை கி.மு. 6 ஆம்நூற்றாண்டில் கிரேக்க சட்டவாதி டிராக்கோன் [ Drakon der Athener‘ um 650 v. Chr. ]மிக நுணுக்கமாகப் பாவித்து, இன்றை அரேபியக் காண்டுமிராண்டித்தனத்தின் அன்றைய முளையை ஊன்றினான்.பின் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு இஸ்லாமோ அதைத் தகவமைத்துக் கொண்டு இன்றுவரை அதை மனிதர்களது உடலில் எழுதிவரும் குறியீடுகளைக் கழுத்து-கை-கால்,மூக்கிழந்த மனிதர்களில் வாசிக்க முடியும்.இதைத்தாம் காட்டுமிராண்டிகளென்றும்,நாய்கள்,என்றும்,கபோதிகளென்றும் திட்டித் தீர்த்து இந்த குறியீட்டைக் காவும் ஒவ்வொரு மனிதர்மீதும் இரங்கிக்கொள்கிறேன்.அவர்களைத் தகவமைத்த “குற்றம்”இந்தச் சமுதாயத்தினது.மனிதர்களது வாழ்நிலைதாம் சமூகவுணர்வைத் தீர்மானப்பதில் பெரும் ஆதிகாரஞ் செலுத்துகிறது.எனவே,குற்றமென்பது நிகழக் காரணமானது இந்த அமைப்பு முறையே.ஆதலால் குற்றமென்பது வெறும் தனிநபர் நடாத்தையல்ல.

    இத்தகைய கொடிய தண்டனைகள் யாவும் அதிகாரத்தை நம்ப வைப்பதற்கும் அதை நிலைப்படுத்தவும் ஏற்படுத்தப்பட்டவை.களவு,கொலை,சச்சரவுகள் அனைத்தும் இந்தத் தோற்று வாயிலிருந்து ஆரம்பமாவது.மனிதர்களது உடல்மீதானவுரிமையானது அடிமைகளையுருவாக்கிய அன்றைய சமுதாயத்தின் நேரடியான அராஜகம் இத்தகைய வடிவில் உருவாகியது.இதே கொடிய உடலாதிக்க-உலகாதிக்க அரசியல்,அதிகாரம்,சட்டமாகவும்,கருத்தியலாகவும்,குறியீடுகள் ரீதியாகவும் இப்போதும் கொடிய அடக்குமுறையாகக் கண்ணுக்தெரியாத நவீனவொழுங்காச்சு.

    நான்,இங்கு உரையாடுவது மனித நடாத்தை குறித்து.உணர்வு வழிப்பட்ட அநுதாபத்தின் அடிப்படையை தள்ளிவைத்துவிட்டும்,பொதுப் புரிதலை அழித்துவிட்டும் “குற்றமும்,தண்டனையும்”குறித்த வரலாற்றுப் புரிதலிலிருந்து இதை அணுகவும்.

    குழந்தையின் மரணத்தைக் கொலையா,விபத்தாவென அறியும் அடிப்படைப் புரிதலற்றவொரு தீர்புக்கும் நாகரீகமேயற்ற கழுத்தறுப்புக்கும் அல்லாவையும்,மதத்தையும் சார்ந்து மனிதத்தைத் தொலைப்பதே இன்றைய இத்தகைய அரேபியப் பயங்கரவாதிகளைக் காக்கிறதில் முடிகிறது. காட்டுமிராண்டிகளாகச் சிந்திக்கும் காலம் கடந்துவிட்டது.

    இங்கே,சட்டம்-தண்டனைகள் குறித்துப் புதிய புரிதல்களைப் பாமரத்தனமாக மதவாதியாவிருந்து புரியமுடியாது .
    மதம் கொண்டு மனிதத்தை அளவிடாது,நிகழ்த்தப்படும் அராஜகத்தைப் புரிய முனையுங்கள்-மனிதனாக!

    ஒரு மதவாதியாக மனிதத்தைத் தொடமுனைந்தால் இறுதியில் நமது தேசங்களிலெல்லாம் ஒரு அரேபியக் காட்டுமிராண்டிகளது கழுமரம் முற்றத்துக்கு வந்துவிடும்.

    இதை, ஏலவே நாம்கண்ட வரலாறு நமக்குப் போதும்.

    முதலில் மனிதனாக வாழ்வதற்கு வரலாற்றையும்,மதங்கள்-சட்டங்கள்,அரசு,அமைப்பு,பொருளாதார முறைமைகள் குறித்து ஓரளவாவது விஞ்ஞான பூர்வமாக அறிய முனையுங்கள்.இதற்கும்,மதத்துக்கும் என்ன சம்பந்தமென்ற கேள்வியோடு.மற்றும்படி,கழுத்தறுத்துப் போட்டுக் காசப்புக் கடை நடாத்தும் ஷரியாவைக் கொண்டாடும் வக்கிரம் !

    அனைத்துமே இன்றைய 21 ஆம் நூற்றாண்டில் காலப் பொருத்தமற்ற கபட விஷக்கருத்தியல் கட்டுமானங்கள்.அதிகார வர்க்கத்துக்கு பாதுகாப்பளிக்கும் பெரும் நிறுவனங்கள் இவை.இத்தகைய மேற்கட்டுமானமின்றி இந்த அரேபிய-உலக பெரும் பணக்காரரின் பொருள் வாழ்வு நிலைக்காது.

    மனிதர்களை முதலில் மொழியிலிருந்தும்,மதத்திலுpருந்தும் விடுவிக்கும்போது அதன் வழியிலான குறியீட்டுவினை அகச் சிந்தனை-நினைவுகளிலிருந்தும்,வாழ்நிலையில் உணர்வுபெறும் ஊக்கத்தோடு இவை இரட்டிப்பாகிப் ஏதோவொன்றின்மீது பைத்தியமாகித் தனது சுய இலபத்துக்கு-பாதுகாப்புக்கு”ஒரு இறைவன்”தேவையெனப் பிரதியெடுக்கும் மனிதர்களது நினைவிலி மனதுக்கும் இந்த விடுதலை சாத்தியமாகும்.

    தறித்தெறியும் தலைகளைக் கண்டும்”குற்றம்-தண்டனை”எனவும்,முஸ்லீம் எனவும் உரையாட நெஞ்சு வலிக்கா உங்கள் குணம்தாம் அல்லாவினதும்-ஆண்டவனதும்,இறைவனதும்,கர்த்தரினதும் மகிமை!

    ஷரியாவைக் காப்போம்!?

    >>Prof.Dr. Tariq Ramadan presents itself as cosmopolitan liked, educated and smart. Young Muslims in Europe suburbs, he is an idol for many intellectuals, it is the flagship Muslim. But in fact, he preaches a regressive Islam.<> Shariah <<

    ஷரியாவின்-அல்லாவின் பெயரால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட பெண்ணினது இருப்பை அழிக்கும் சாத்தான்களுக்கு அல்லா ஒரு கேடா?அநியாய வாதிகள்.இருபத்தியோராம் நூற்றாண்டில் வாழ்வதற்கு இலாயக்கற்ற அரேபியக் கபோதிகள்-இஸ்லாமியப் பயங்கரவாதிகள்- சல்மான் ருஷ்ட்டியின் மொழியில் சாத்தானின் தூதுவர்கள் இந்த வகை முஸ்லீம்கள்!

    ரிசானவென்ற பெண்ணை வைத்துப் புரட்சி-அரசியல் செய்யும் பலருக்குள் நான் இதை எனது அறிதலுக்கும் மானுடப் பெரு நோக்கிலும் வைத்துரைப்பதில் இன்னுஞ் சிலவற்றைச் சொல்வேன்.

    இந்தவுலகத்தில் தினமும் ஆயிரக் கணக்கான மனிதர்கள் கொல்லப்படுகின்றனர்.அரசியலின் பெயராலும்,மதத்தின் பெயராலும்-சமூக விரோதத்தின் பெயராலும் பலர் கொல்லப்படுகின்றனர். இதையெழுதும்போது கூட இவ்வுலகத்தின் ஒரு மூலையில் அநியாயமாகவொரு மனிதர் எதன் பெயராலோ கொல்லப்பட்டிருப்பார்.

    யுத்தம்-தூக்கு-மருந்தூசியடித்துக் கொலையெனப் பலரூபத்தில் இந்தச்சாவு மனிதருக்கு நேரிடுகிறது.எனவே,மதங்கள்,அரசியல் அதன் ஓழுங்குவெனும் அனைத்து மனிதவிரோத முறைமைகளது பெயராலும் மனிதர்கள் தண்டிக்கப்படுகின்றனர்-கொலை செய்யப்படுகின்றனர். அஃது, எந்தவொரு அரசுக்கும் விதிவிலக்கல்ல!ஆனால், இஸ்லாத்தின்-ஷரியாச் சட்டத்தின் பெயரால் நடாத்தப்படும் அட்டூழியம் மிகப்பெரும் அவஸ்த்தை இவ்வுலகுக்கு-திறந்த சமுதாயத்துக்கு-வரலாற்றுக்கு!

    கொடூவாள்-கழுத்தறுப்பு!

    வாழும் மனிதவிருப்பைச் சில கபோதிகள் ஆட்டை வெட்டுவதுபோல் மனிதரை வெட்டும் அரேபிய முஸ்லீம் நாய்களை அணுக்குண்டடித்துக் கொல்வதில் முனைப்புறும் இஸ்ரேலுக்குச் சமமாகவே பார்க்கவேண்டும்!

    இஸ்லாத்தின் ஷரியா!

    இது,மனிதவுரிமையையே மறுத்தவொரு மிகக் கெடுதியானவொரு சட்டமாகும். 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தபடி, கற்கால நினைவுகளோடும்,அநுபவத்தோடும் இந்த மோசமான அரபு நாடுகள் செய்யும் மனிதவிரோதத் தன்மையிலான கொலைகள்-தண்டனைகள் இந்தவுலகத்துக்கு அச்சத்தைத் தருகிறது.

    கடந்த 09.01.2013 அன்று, படுகொலை செய்யப்பட்ட என் தேச மகளது சின்னஞ்சிறு கனவை அரேபிய நாய்களும் அந்த நாய்களது இஸ்லாமிய மத எருமைகளும்,அவர்களது மனித விரோதச் சட்டமான ஷரியாவுஞ் சேர்ந்து, கொடூவாளால் வெட்டிச் சரித்திருக்கிறார்கள்.

    இது திறந்த சமுதாயத்துக்கு எதிரானது.

    மக்களது இருப்புக்கு அச்சமான ஆளும் வர்க்கத்தின் அதிகாரப் பணத் திமிர் பிடித்த காட்டுமிராண்டிகளது மதமான இஸ்லாத்தின் அராஜகம் இது.இஸ்லாத்தின் பெயரால் நடாத்தப்படும் மனிதவிரோதமான கொடுமை இதுவென்பதில் எவருமே முரண்பட முடியாது.

    நான்,அரேபியத் தேசத்துள் மேற்குலகஞ் செய்யும் அநியாயத்தை,படுகொலைகளை,ஆளில்லா விமானத்தின் மூலம் அவ்கானிஸ்தான்,பாகிஸ்த்தான்,ஜேமேன் குழந்தைகள் படுகொலை செய்யப்படுவதை,பாலஸ்த்தீனக் குழந்தைகளது மரணத்தையெல்லாம் தாங்க முடியாத வேதனையோடு அது சார்ந்த மாற்றுக் கருத்துக் கட்டுரைகளை முக நூலில் லிங் பண்ணுவது உண்டு.

    ஆனால்,எனது தேசத்தின் மகளை வேட்டையாடிய அரேபிய இனவாதச் சகதி முஸ்லீம்களை எப்படிப் புரிவது?

    தமிழ்த் "தேசியத்துக்காக" ப் போராடியதெனப் புரியப்பட்ட புலிகளையே பாசிஸ்ட்டுகளெனச் சொல்லி அவர்களது மனித விரோத்துக்கெதிராகக் குரல் கொடுத்து வருபவன் நான்.

    யாழ் மாவட்டத்திலிருந்து முஸ்லீம்களை வேட்டையாடிய புலிகளை என்றுமே மன்னிக்காதவன் நான்.

    அது, போலவேதாம் இந்த ரிசானவின் படுகொலையிலும் நான் இந்த அரேபியர்களை,அவர்களது காட்டுமிராண்டி மதமான இஸ்லாத்தையும் ஒருபோதும் மன்னிக்கமாட்டேன்.உலகத்தில் அனைத்து மதங்களும் வரலாற்றில் மனிதவழிப்பைச் செய்திருக்கிறது.ஆனால், இந்தக் காட்டுமிராண்டி இஸ்லாமானது இந்த நூற்றாண்டிலும் இப்படிக் கொடூவாள் மூலம் ஒரு மனிதரின் கழுத்தை வெட்டிப்போடுமென்றால்- இது,ஏன்-எதற்காக?

    இந்தப் படுகொலைக்குப் பின்,நான் அரபுலகத்துள் நடக்கும் கொலைகளையோ அல்லது, அரேபியக் குழந்தைகளது மரணத்தையோ ஒரு பொழுதேனும் மதிக்கப்போவதில்லை!

    அரபுத் தேசத்துள் ஐரோப்பியர்கள்,அமெரிக்கர்கள் செய்யும் மனிதவிரோதத்தையும் கண்டுகொள்ளப் போவதுமில்லை.இந்த அரபியவுலகத்து இஸ்லாமியர்கள் வாழ இலாயக்கற்ற மனிதவிரோதிகள்.காட்டமிராண்டிகள்.மனித பெறுமானந்தெரியாத பயங்கரவாதிகள்-மனிதப் புணந் தின்னும் காமகர்கள்.இழி குலத்தோர்-இடிகுலத்தோர்!,மனிதப் பிணந் தின்னிகள்-குருதியருந்தும் தீய குணத்தோர்!!

    மனித மகத்துவத்துக்கான திறந்த சமுதாயத்தின் எதிரிகள் இவர்கள்!

    கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளனும்,பௌதிகவாதியுமான கார்ல் போப்பரது [Sir Karl Raimund Popper ]"திறந்த சமூதாயமும் அதன் எதிரிகளும்" The Open Society and Its Enemies எனும் தலை சிறந்த நூலானது இந்த நூற்றாண்டில் இஸ்லாமியப் பயங்கரவாதிகளது காட்டுமிராண்டித்தனத்தை உங்வாங்கத் தக்க நூலாகும்.இந்தக் கார்ல் போப்பரே 1935 ஆம் ஆண்டில் மிகப்பெரும் இளஞ் சோசலிஸ்ட்டாகவிருந்து அதைவிட்டே ஓடியவன்.வீன் மாநகரில் கம்யூனிஸ்டுக்களுக்கும்,பொலிசுக்கும் ஏற்பட்ட கலகமானது 1935 ஆம் ஆண்டில் எட்டுப் பொலிசுக்காரர்களைக் கொல்லும் நிலைக்கெட்டியபோது போப்பர் அந்தச் சோசலிச அமைப்பையே விட்டொழித்து விலகியவர்.அவ்வளவு பெரிய மானுட நேசிப்பில் ஒரு பெரும் மக்கள் புரட்சிகரப் போராட்டத்தையே[wie bei einer gewaltsamen Auseinandersetzung zwischen Kommunisten und der Wiener Polizei acht Menschen ums Leben kamen, wandte er sich schockiert vom Marxismus ab und wurde zu einem seiner konsequentesten Kritiker. In der damals einzigartigen Wiener Atmosphäre begegnete er Menschen wie Ruth Fischer, Hanns Eisler, Paul Lazarsfeld, Oskar Kokoschka, Adolf Loos, Arnold Schönberg und Rudolf Serkin.] நிராகரித்தவர்.மனிதாபிமானம் வர்க்கஞ்சார்ந்ததென வகுப்பெடுப்பதும் அதன்வழி அனைத்து வர்க்கமும் கொலை செய்வதும் எனக்கு உடன்பாடற்றது.இந்தவுலகத்தில் முதலாளிய-ஏகாதிபத்தியங்கள் மட்டும் மக்கள் விரோதிகளல்ல.அனைத்து மதவாதிகளும்தாம் இந்த விரோதக் கூட்டத்துள் இருக்கிறார்கள். உலகுக்கு இதுவொரு புதிய நடவடிக்கை அன்று!

    போப்பர் கொலையைக் கண்டித்து அதைவிட்டு வெளியேறிச் சாகும்வரை மார்க்சிய விரோதியாகவே தனது ஆய்வுகளைச் செய்தவர்.இறுதிவரை அவர் மார்க்சியத்தின்மீது வைத்த விவாதத்துக்கு எந்தக்கொம்பனும் பதில் வைத்தே இருக்கவில்லை!

    கார்ல் போப்பரைப்போல் ,ரிசானாவின் படுகொலையைப் பார்க்கும் ஒவ்வொரு இந்திய-இலங்கை "முஸ்லீமும்" அந்த மதத்தை விட்டு மனிதராக வெளியேற வேண்டும்.இப்படியொரு மனித விரோதச் சட்டத்தையும்,மக்கள் விரோதப் பக்கத்தையும் நியாயப்படுத்தும் எந்த மதமும் மக்களுக்குத் தேவையில்லை.இதுவொரு கொடிய மதம்.இஸ்லாம் என்பது மிகப் பெரும் விலங்கு.மனித வளர்ச்சிக்கும்,மனிதப் பெறுமானத்துக்கும் எதிரான இந்த மதம் அரேபிய அணுக்குண்டாகும்.

    இதுவரை, அரேபியவுலகத்து மனிதர்களது அழிவுக்காக மனம் வெடித்து வெதும்பிய நான் அது குறித்து இனிக் கவலையுறேன்.மேற்குலகக் கொடியவர்களது குண்டுகளுக்கும்,ஆளில்லா விமானத்துக்கும் பலியாகும் முஸ்லீம் சிறார்களுக்காகக் கண்ணீரே விடேன்.இது,உங்களது ஊழ் வினை.இஸ்லாத்தினதும்,உங்கள் ஷரியாவின் வன் கொடும்மைச் சட்டத்தினதும் அறுவடை.எண்ணை வளத்தைக் கொள்ளையடிக்கும் மேற்குலகத்தவர்கள் உங்களைத் துவசம் செய்வதும்,பூண்டோடழிப்பதும் பொருளாதாரக் காரணம் மட்டுமல்ல!

    கவுண்டு போங்கோ-காணமற் துடைக்கப்பட்டு,இவ்வுலகத்தில் இஸ்லாமியச் ஷரிய வன்கொடுமை இல்லாது போகட்டும்.

    அதுபோல், அனைத்து மதங்களினதும் கொடுமைகளையும், அவைகளும் அழிந்தே போகட்டும்.

    இந்தப் படுகொலைக்குப் பின்னும் எவனொருவன் தன்னை முஸ்லீம் என்கிறானோ(ளோ) அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.

    உண்மையான மனிதர்கள் கார்ல் போப்பராக இந்த அடிமைத்தனமான இஸ்லாத்தின் பயங்கரவாதத்திலிருந்து வெளியேறியாகவே வேண்டும்.அதைச் செய்யதோர் மனித விரோதிகளே!

    இந்துப் பாசிஸ்டுக்களைப்போல்-வற்றிக்கான் மாபியாக்கள் போல் இந்த மெக்கா-மெதினாச் சாபக்கேடுகளும் மனித விரோதிகளே!

    கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணினது குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

  41. ஷரியாவைக் காப்போம்!?

    >>Prof.Dr. Tariq Ramadan presents itself as cosmopolitan liked, educated and smart. Young Muslims in Europe suburbs, he is an idol for many intellectuals, it is the flagship Muslim. But in fact, he preaches a regressive Islam.<<

    இந்தவுலகம் ரொம்பக் கொடுமையானது.இஃது, பெரும்பாலும் மெலிந்தவர்களை அனைத்து வடிவிலுஞ் சுரண்டியே கொழுத்துப் போயிருக்கிறது.இந்த மெலிந்தவர்கள் உலகில் பெரும்பகுதியாவிருந்தும் இந்த அதிகார மனிதக் குழுவைச் சிதைத்து தமக்கானவொரு அமைப்பை நிறுவமுடியவில்லை.

    "இது,ஏன்? "என்று, யாரும் புரிய முற்பட்டால்-அஃது, " இந்த வகையில் ஒன்றுக்கொன்று முரணாகவுரைத்தும்-விளக்கியும்,உண்மையானவொரு கொலையை,கொலையெனச் சொல்லாது கருத்தாடும் இத்திரியாசினது கட்டுரையை வாசிக்கும்போது,அந்த அதிகாரக் குழுவினது ஆதிக்கத்தைத் தொடர்ந்து, மெலினப்பட்டவர்களுள் "இறையச்சம்" செய்து அஃது, கடவுளால் அருளப்பட்ட "மேன்மை-நியாயம்" என்றெல்லாஞ் சொல்லித் தப்பிக்க வைக்கப்படும் டிராக்கோனியின்[draconian] சட்டவரைவின் கொப்பியான ஷரீயாவுக்கு இப்படியெத்தனை பேர்கள் ஒத்தூதுவர்?" என்று நம்மை, நாம் கேட்டுக்கொள்ளலாம்!

    எனக்கு இத்திரியாசைவிட பெரும் புலிகளான பாஷான் ரைபியையும்[Dr.Bassam Tibi- Die islamische Herausforderung. Religion und Politik im Europa des 21. Jahrhunderts. Darmstadt: Primus. 3. Auflage, ISBN 3-534-22034-X Literatur/ Im Schatten Allahs. Der Islam und die Menschenrechte. München: Piper. ISBN 3492222854 ],ராறிக் ராமடானையும்[Prof.Dr. Tariq Ramadan- Radikale Reform: Die Botschaft des Islam für die moderne Welt, Diederichs, ISBN 978-3-424-35000-5 ],நன்றாகவே புரியும்.எனவே,இத்திரியாஸ் கூறும் [ரிசானா மீதான மரணதண்டனை: எதிர்வினைகளும் பதில்களும் ]கருத்துக் கலவை வடித்தெடுத்த கயமையானது!ஒரு கொலையை நியாயப்படுத்துவதென்ற புள்ளியில் நேரடியான கருத்தைக் கூறுவதிலிருந்து தப்பிக்கும்பொருட்டு, படுகொலை செய்யப்பட்ட ரிஷானாவின்பக்கம் நியாயத்தைச் சொல்லிச் ஷரியாவின் பெயரால் நடாத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனத்தைக் கருத்துக்களால் நீத்துப்போக வைக்கும் இவர்களை யாரால் மன்னிக்க முடியும்?

    யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை வெளியேற்றிய புலிகளைப் பாசிசப் புலிகளென்று சொல்லி அதை எதிர்த்து வந்த தமிழ்த் தேசியவினத்துக்குள்ளிருந்த பெரும் பகுதிச் சிந்தனையாளர்களை இந்தத் தருணத்தில் நினைத்துப் பார்க்கிறேன்.

    நாம்,உண்மைகளைப் பாதிக்கப்படும் பெரும்பகுதி மக்களது பக்கம் நின்றும்,அவர்களது நலனுக்காவும் கருத்தாடுகிறோம்.இத்தகைய இத்திரியாஸ்போன்று நிலவும் அதிகார வர்க்கத்தின் நிறுவனங்களை இறைவனதோ அன்றி எதன் பேராலும் நாம் தக்கவைக்க-நியாயப்படுத்த முனையவில்லை!ஆனால்,முற்போக்கு முஸ்லீம் அறிஞர்கள்-சிந்தனையாளர்கள் இந்த அப்பாவி பெண்ணைப் படுகொலை செய்த "சட்ட" அறத்தைக் காப்பதிலேயேதாம் குறியாகக் கருத்தாடுகிறார்கள்.

    கழுத்தறுத்துக் கொல்லப்பட்ட உடலைப் பார்த்தும் இப்படியாகவா கருத்து வைத்துச் ஷரியாவைக் காப்போம்?

    2:

    திரு.மார்ஸ் அவர்களே,நீங்கள் எனது கருத்துக்களை அழித்துவிடுவதிலுள்ள சூழலைச் [dar asch-schahada ] சொல்வதில் நான் மறுப்பதற்கில்லை.மோடியையும்,குஜராத்தையும் நாம் மறப்பதற்கில்லை-மறுப்பதற்கும் இல்லை.என்றபோதும் ,புரிதலின் அவசியமும்,அதையொட்டிய ஆபத்துக்களைக் குறித்தும் பேசித்தாம் ஆகவேண்டும்.குறிப்பாக, ஏபிஎம் இத்ரீஸ் சின் கட்டுரையையொட்டி. அவரது கருத்துக்களை ஆழ்ந்த புரிதலற்ற வாசகர்கள் " சிறப்பானது-நேர்மையானதென்பது" இந்தப் போக்கின் ஆபத்தின் தொடர்ச்சியை இன்னொரு தளத்துக்கு[ dar al-islam ]நகர்த்துவதாகும்.

    உலகம் இறை மூலத்தைக் குறித்து Higgs-Boson ஆய்வுக்குள் நிறுவப்பட்டவுண்மைக்குள்[ Higgs particle ] வந்துவிட்ட 21 ஆம் நூற்றாண்டின் நாம் வாழ்கிறோம்.இதுள் மதங்கள் தம்மைப் புதிப்பித்தபடி நிறுவனப்பட்ட அத்திவாரத்தைக் காக்க முனையும் போது பற்பல கருத்துக்களை முன் வைக்கின்றனர்.இலங்கைப் பெண் ரிஷான சவுதியரசாலும்,அதன் இஸ்லாமியச் சட்டச் ஷரியாவின் மனிதத்தன்மையற்ற கொடிய வரையறுப்புக்கமைய அவள் படுகொலை செய்யப் பட்டதை இலங்கை முஸ்லீம்கள் பலர் குறிப்பாக,ஏ பி எம் இத்ரீஸ் புதிய விளக்கத்துக்கமைய[ dar asch-schahada ] விமர்சிப்பதும், நிலவும் ஷரியச் சட்டத்தை நிலைப்படுத்துவதும் புதியதில்லை!இங்கே, ஐரோ இஸ்லாமென [ Euro-Islam ]விரித்துக் கருத்தாடுபவர்களையொட்டியவுரையாடலே [Dr.Bassam Tibi ,Prof.Dr. Tariq Ramadan ]இது.

    1992 இல் பாசான் ரைபியால் [Bassam Tibi ] உருவாக்கப்பட்ட நவ இஸ்லாம் எனும் கருத்துக்கொட்ப [ Liberal movements within Islam involve Muslims who have produced a considerable body of liberal thought on the re-interpretation and reform of Islamic understanding and practice. Their work is sometimes characterised as "progressive Islam". 😉 ]இவர் [ஏபிஎம் இத்ரீஸ் எழுதியுள்ள ‘ரிசானா மீதான மரணதண்டனை-எதிர்வினைகளும் பதில்களும் ]உரையாடுகிறார்.இது நிலவுகின்ற அதிகாரத்தைத் தொடர்ந்திருத்தும் புதியவகையான மொழியாடல்கள்[Dar asch-Schahada ].இதற்குள் மறைந்திருப்பது ஷரியாவைக் காத்து நிலைப்படுத்தும் தந்திரம்.ராறிக் ராமாடான் [Tariq Ramadan ] போன்றவர்கள் ஐரோப்பாவுக்குள் வாழும் இஸ்லாமியர்களுக்கானவொன நவ லிபரல் மட்டத்திலான இஸ்லாம் பேசுவதும்,அவ்வண்ணம் ஷரியாவைத் தமக்குள் இணைப்பதென்பதில் நிலவும் ஐரோப்பிய ஜனநாயகப் பண்புகளோடு அண்மித்த புதிய போக்குகளைப் புதிதாகவிணைப்பதும், பெருப்பிப்பதும்,மனிதவிரோதத் தன்மையுள் இணைவு மறுவாக்கஞ் செய்ய முனையும் ஷரியாவின் நுட்பத்துள் அவரும்மேற்கூறிய இத்திரீயாஸ்கூட அமைப்பாண்மை-நிறுவனப்பட்ட அதிகாரத்துக்கிசைந்த ஷரியாவை மறுவிளக்கமளித்துக்காக் முனைவதைச் சுட்டிக் காட்டுவது என் தலை முறைக்கு அவசியம்.எனவே,இந்த ஆபத்தைப் புரிவதற்கு நான் மேலே சொன்ன ஐரோ-இஸ்லாம் குறித்த புரிதலை நிலவும் அதிகாரத்தோடான புரிதலிருந்து புரியும்போது இத்திரியாஸ் கூறுவதும் முற்றிலும் மனிதவிரோதத் தன்மையிலான புதிய அடிமைப்படுத்தும் அதிகாரத்துக்கமைவான எண்ணங்களென்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    கீழ்வரும் இணைப்பில் ஷரியாவால் எழுத்தப்பட்ட சட்டத்தின் அகோரத்தை இந்த இணைப்பிலுள்ள முகங்களில், அங்கங்களில் வாசித்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே!
    http://michael-mannheimer.info/category/scharia/

    • அய்யோ! இதனை படிக்க முற்படுவதே கொடுங்கனவாக இருக்கிறது. என்ன கொடுமை சார் இது!

  42. புகாரி 2229. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார்.
    நான் நபி(ஸல்) அவர்களுடன் அமர்ந்திருக்கும்போது, ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கு (பெண்) போர்க் கைதிகள் கிடைக்கின்றனர். அவர்களை நல்ல விலைக்கு விற்க நாங்கள் விரும்புவதால் (அவர்களுடன் உடலுறவு கொள்ளும் போது) நாங்கள் அஸ்ல் (உடலுறவின் போது) பெண்குறிக்குள் விந்தைச் செலுத்தாமல் வெளியேவிட்டுவிடும் செயலைச்) செய்யலாமா?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியா நீங்கள் செய்கிறீர்கள்? இதைச் செய்யாமலிருப்பது உங்களின் மீது கடமையல்ல! (அதாவது, நீங்கள் இப்படிச் செய்வதற்குத் தடை ஏதுமில்லை; ஆயினும், அஸ்ல் செய்யாமலிருப்பதே மேலானதாகும்!) ஏனெனில், உருவாக வேண்டுமென்று அல்லாஹ் விதித்துள்ள எந்த உயிரும் உருவாகாமல் இருப்பதில்லை!” என்று கூறினார்கள்.

  43. நந்தன் ,
    கீழ் சுட்டி மேல் சுட்டி என்று ஏவனோ எடுத்த வாந்தியை பார்க்க சொல்லும் அறிவாலியே?நேருக்கு நேர் ஊருக்கு ஊர் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நடத்தி இஸ்லாமிய மார்க்கம் எவ்வளவு பகுத்தரிவுபூர்வமானது என்பதை நாளும் நாங்கள் நிருபித்து வருகின்றோம். மொத்த அறிவை குத்தகைக்கு எடுத்து நடமாடும் என்சைக்லோபீடியாவே உன்னை போன்ற அறைவேக்காடுகளும் வினவு போன்ற நுனிப்புல் மேயும் ஆடுகளும் நேருக்கு நேர் ஆண்மையுடன் விவாதம் நடத்த முன்வரவேண்டும். தின்றுவிட்டு வாந்தி எடுக்கும்________வேலை உனக்கு எதற்கு?

  44. 17 வயது பெண்ணை 23 வயது பெண்ணாக காட்டி பாஸ்போர்ட் வழங்கிய தவறை இங்கு யாரும் கண்டுக்கவில்லை .நான்கு மாத குழந்தையை கவனித்துக்கொள்ள 23 வயது பெண்ணை அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள் .ரிசானாவுக்கு 17 வயது என்று தெரிந்து இருந்தால் அவளை வேலைக்கு சேர்த்திருக்க மாட்டார்கள் .எப்படி ரிசானாவின் உயிர் முக்கியமோ அதைப்போல அந்த நாலுமாத குழந்தையுன் உயிரும் அதன் பெற்றோருக்கு முக்கியம் .23 வயது பெண்ணை நம்பி குழந்தையை ஒப்படைத்து செல்பவர்கள் அவளது உண்மையான வயது தெரிந்து இருந்தால் அவளது பொறுப்பில் குழந்தையை கொடுத்து சென்று இருக்க மாட்டார்கள் .17வயது பெண்ணுக்கு 4 மாத குழந்தை யை எப்படி பராமரிக்க வேண்டும் என்பது தெரியாது .பால் ஊட்டும்போது குழந்தையை தகுந்தவாறு வைக்கவில்லை என்றால் எளிதில் “தசை பிடிப்பு “சுளுக்கு போன்றவை ஏற்படும் .இதனால் பால் வெளியாகிறதே என்று கழுத்தில் அதிகமாக தடவி கொடுத்திருக்க வேண்டும் .பிஞ்சு கழுத்தும் நெறிபட்டிருக்கும் .அதனாலே போஸ்ர்மார்த்டம் ரிபோர்ட் கழுத்துநெறி பட்டதாக கூறுகிறது .

    ரிசானாவின் மரணத்திற்காக தொடரும் அழுகையாளர்களுக்கு நான் கேட்பது .சென்னையில் மஞ்சா நூல் கழுத்தில் சுத்தி நூற்றுக்கணக்கானோர் மரணித்துள்ளார்கள் .ரிசானாவின் விசயத்தில் 17 வயதை 23 வயதாக காட்டிய தவறு இருக்கிறது ..ஆனால் இந்த மன்ஜாநூளால் கொலப்பட்டவர்கள் என்ன தவறு செய்தார்கள்?இவர்கள் அநியாமாக கொல்லப்படுவதை அரசும் சட்டமும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறதா?இல்லையா? ஒருவனின் பொழுது போக்கால் எத்தனை உயிர்கள் இழப்பு? ஒரு மத சட்டத்தால் அப்பெண்ணின் தவறான் தகவல்களால் ஒரு உயிர் இழப்புக்கு கண்ணீரை கடலாக சொரியும் காருண்யா சகோதரர்களே ,இந்த மஞ்சா நூலில் உயிர் இழந்ததற்கு நீங்கள் கண்நீர்வடித்தது உண்டா? கண்டனங்கள் எழுப்பியது உண்டா?
    கடந்து தீபாவளியில் கூட ஒருவர் தனது மனைவி குழந்தையுடன் தீபாவளி கொண்டாடிவிட்டு உறவினரை பார்க்க டூவீலரில் சென்ற சமயத்தில் மன்ஜாகயிர்ல் சிக்கி இறந்தார் .அவரது மனைவி நாடு ரோட்டில் இருந்து அழுத படங்கள் எல்ல்லாம் பத்திரிக்கையில் வந்து நெஞ்சை பிழிவதாக இருந்ததே .
    ஆம் மஞ்சா கயிறால் முதன் முதலாக உயிர் பலியான் பொழுது அந்த பட்டம் விட்டவனுக்கு மரண தண்டனை கொடுத்து இருந்தால் அடுத்து எவனாவது மன்ஜாகயிற்றை தொட்டிருப்பானா?
    எத்தனை உயிர்கள் காபற்றபப்ட்டிருக்கும் .தீபாவளியன்று நடு ரோட்டில் மனைவி குழந்தை முன்னாள் இபப்டி ஒரு உயிர்பலி நடந்திருக்காதே .

    • //23 வயது பெண்ணை நம்பி குழந்தையை ஒப்படைத்து செல்பவர்கள் அவளது உண்மையான வயது தெரிந்து இருந்தால் அவளது பொறுப்பில் குழந்தையை கொடுத்து சென்று இருக்க மாட்டார்கள்//

      ப்பா…சான்ஸெ இல்ல பாய் பி.ஜெ,அல்தாபிகு அப்பறாம் நீங்க தான் சரியா பேசுரிங்க..அப்படியே போய் சவுதிய பாதுட்டு வாங்க சேக் மனைவிமாருங்களாம் எவ்வளவு நாள் குழந்தைய பாதுகுராங்கனு அதிகபட்சம் 20 நாள்தான் அவங்க கவனிப்புல வளருவாங்க அதுக்கு அப்பறம் அந்த குழந்தை நடக்குரவரைக்கும் பணிபெண்கிட்ட தான் வளரும்….

      //ஆம் மஞ்சா கயிறால் முதன் முதலாக உயிர் பலியான் பொழுது அந்த பட்டம் விட்டவனுக்கு மரண தண்டனை கொடுத்து இருந்தால் அடுத்து எவனாவது மன்ஜாகயிற்றை தொட்டிருப்பானா?//

      இப்பு பாய் இது அதவிட சூப்பரா இருக்கு ..ஆனா ஏன் 1400 வருசமா மரண தண்டன கொடுதுட்டு இருக்குர சவுதில மட்டும் குற்றம் குறையாம இன்னும் மரண் தண்டன கொடுத்துட்டு இருக்காங்க…..

      சீக்கிரம் உங்க பி.ஜெ மூளைய பயண்படுத்தி பதில் சொல்லுங்க…

  45. புத்தர் சிலையை உடைத்துவிட்டார்கள் என்று உலகம் முழுவது உள்ள மீடியாக்கள் இரவும் பகலுமாக விடிய விடிய அழுதார்களே ,அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு கட்டுப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு அனுப்ப வேண்டிய குழந்தைகள் உயிர்காக்கும் மருந்தை கூட ஒப்பந்தத்துக்கு மாற்றமாக நிறுத்திவிட்டார்களே ,அங்கு ஆயிரமாஇய்ரம் குழந்தைகள் இறந்த்துகளே அதை எந்த மீதியாவது காட்டியதா? உலகுக்கு அறிவித்ததா? அந்த ஆப்கானிஸ்தான் குழந்தைகளை விட புத்தர் சிலையை மேலாக்கியவர்கள் இன்று ஒரு பெண்ணுக்காக மத சட்டத்தை கண்டிக்கும் விதம் உண்மையை உலகுக்கு சொல்லுகிறது /அப்பொழுது அந்த புத்தர் சிலை மதமாக தெரியவில்லையா? ஆப்கான் குழந்தைகள் உயிர் என்ன மயிரா?

    • அந்த ஆப்கான் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, ஈராக்கிய குழந்தைகளையும் கொன்ற அமெரிக்காவுக்கு துணை நின்ற சவுதி மன்னனை ஷரியத் ஏன் தண்டிக்கவில்லை? அப்பாவி ரிசானாவை கொல்வதில் காட்டும் உங்கள் ரத்த வெறி சவுதி மன்னன் என்ற உடன் அடக்க ஒடுக்கமாக ஒளிந்து கொள்ளும் மர்மம் என்ன?

      • இப்படி குழந்தைதனமான , அரைவேக்காட்டுத்தனமான, ஆர் எஸ் எஸ் தனமான கேள்வியை வினவிடமிருந்து எதிர்பார்கவில்லை. ஷரியத் சட்டம் அவர்களுடைய நாட்டு மக்களுக்கானது. தனி நபர்களுக்கானது. அவன் நாட்டில் நடக்கும் குற்றங்களுக்கு அந்த சட்டத்திட்டத்தின்படி நடப்பது. ராஜிய ரீதியாக நடக்கும் செயல்களை இதோடு இணைப்பதிளிருந்தே உங்களின் மூளை வறட்சி நன்றாக தெரிகிறது. சதாம் உசேன் வளர்ந்தால் குவைத்தை பிடித்ததுபோல் சவுதி போன்ற நாடுகளை அச்சுறுத்தலாம் என்ற நிலையில் அமெரிக்கனுக்கு ஆதரவு வழங்கப்பட்டது. இது அந்த நாட்டு மன்னரின் நிலை. இதில் எங்கேயா ஷரியத் வந்தது. அமெரிக்கன் கூட அங்கு தண்ணி அடிக்க முடியாது. விபச்சாரம் செய்ய முடியாது.இதை எல்லாம் செய்தால் நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது இதை எல்லாம் அவன் கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் தான் செய்ய முடியும். சீனாகாரன் நமக்கு எதிரிதான் அவன் நம்ம ஊரில் தொழில் செய்ய வில்லையா ? ஏன் நம்ம முதல் எதிரி பாகிஸ்தான்காரனே நம்ம ஊரில் தொழில் செய்யவில்லையா ? அவனுங்க எல்லாம் நம்ம ஊர்ல தோசை தின்ன வில்லையா ? இட்லி தின்ன வில்லையா ? அமெரிக்கனாவது (ஈராக்கிற்கு)எதிரிக்கு எதிரி. இவனுங்க நமக்கு நேர் எதிரி.உங்க டார்கெட் இஸ்லாம் இப்படி எதையாவது உளறியாவது கேவலப்படுத்த வேண்டும். நடத்துங்க.

        • யூசுப்,
          நாம் வாழும் சமகாலம், 1400 வருடங்களுக்கு முற்பட்ட நபிகள் காலம் அல்ல; தேச எல்லைகளின் முக்கியத்துவம் குறைந்து, மனித உரிமைகள் முக்கியத்துவம் பெறும் நவீன காலத்தில் வாழ்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள். ஈழத்தில் கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காக தமிழகம் கொதித்ததை பார்த்திருப்பீர்கள் தானே! இருந்துமா, இந்த கேள்வி. குஜராத்தில் கொல்லப்பட்ட இசுலாமியர்களின் துயரில் பங்கு பெற மாட்டீர்களா? அது மோடியின் பிரதேசம் என்று கண்டுகொள்ளாமல் விடுவீர்களா?

          தனி மனிதன் என்பவன் சிந்தனையிலும், வாழ்நிலைமையிலும் இன்று தனி மனிதன் அல்ல. எகிப்து, துனிசியா எழுச்சிகளை உலக மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்தார்கள். அது போலவே காலப் பெருவெள்ளத்தில் நிற்காத ஷரியத் விதிமுறைகளை வைத்து அப்பாவி பெண்மணியின் கழுத்தை அறுத்த செயல் அனைவரையும் கொந்தளிக்க வைத்துள்ளது.

          பி.ஜெ ஒரு காடுவெட்டி குரு என்பதாலேயே உரையாட தனிநபர்கள் பயப்படுகிறார்கள். புரட்சிகர அமைப்புகளுக்கு வேறு முக்கிய பணிகள் இருக்கும். கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டிருப்பதை தவிர்த்து பி.ஜெ க்கு வேறு என்ன உருப்படியான வேலை உள்ளது. ஏதோ சாப்பிட்டுக் கொண்டே உங்கள் பின்னூட்டத்தை போட்டுள்ளீர்கள் என்று தெரிகிறது. தோசை, இட்லி என்று நீங்கள் சொல்லும் இடங்கள் புரியவில்லை. ஒரு முறை கூட கட்டுரையை நிதானித்து படியுங்கள். பிறகு சிந்தித்து பதிவிடுங்கள்.

          • “” ஈழத்தில் கொன்றொழிக்கப்பட்ட மக்களுக்காக தமிழகம் கொதித்ததை பார்த்திருப்பீர்கள் தானே! இருந்துமா, இந்த கேள்வி. குஜராத்தில் கொல்லப்பட்ட இசுலாமியர்களின் துயரில் பங்கு பெற மாட்டீர்களா?””” கொதித்து எழுந்தோம், பங்குகொண்டோம். ஆனால் அவர்களை தூக்கில் ஏற்ற முடிந்ததா ? நம்ம நாட்டு குற்றவாளிக்கே (மோடிக்கு) தண்டனை வாங்கித்தர முடியவில்லை. பதவி பவிசு என்று சொகுசாக வாழ்கிறார். ராஜிய ரீதியாக நடக்கும் செயல்களை ஷரியத்தோடி இணைத்து திசை திருப்பாதீர்கள் என்று சொல்லியாச்சி.
            மற்றப்படி தோசை இட்லி எல்லாம் வினவு மேலிட்ட பின்னூட்டத்தில் பிரியாணியை பற்றி பேசியதால் தான் எழுதப்பட்டது.

        • //அமெரிக்கன் கூட அங்கு தண்ணி அடிக்க முடியாது. விபச்சாரம் செய்ய முடியாது.இதை எல்லாம் செய்தால் நீங்கள் சொல்வதில் நியாயம் இருக்கிறது இதை எல்லாம் அவன் கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் கப்பலில் தான் செய்ய முடியும்.//

          நீங்கள் கூருவது தவரு சவுதியில் பணிபுரியும் அமெரிக்கர் இங்கிலந்துகாரர்கலுக்கு சரியத் சட்டம் பொருந்தாது சவுதியில் அவர்கள் வசிப்பதற்கு தனியாக இடம் ஒதுக்கபட்டுல்லது அங்கு அவர்கள் ஷரியத் சட்டதுக்கு புறம்பான எது செய்தாலும் அவர்களை தண்டிக்க முடியாது அவர்கள் வசிக்கும் இடத்துக்கு காவலர்கள் செல்லவும் அனுமதி இல்லை.
          (ஷரியத் சட்டம் அங்கு பணிபுரியும் அமெரிக்க இன்லாந்துகாரர்களுக்கு பொருந்தாது என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது)

          • அந்த கழிசடைகளை தனியாக ஒதுக்கி வச்சி தானே இருக்கானுங்க. ஊருக்குள்ளே பொதுவில் இந்த தவறுகளை செய்ய முடியாது

            • யூசுப் பாய் நீங்க இப்பு பாய்ய விட சூப்பரா கலக்குரிங்க…

              அல்லாவின் வீடு இருக்குர புனித நாட்ல இப்படி ஊருக்கு வெளியுல விபச்சாரம் மது அருந்துவது அலால் ஆகுமா? என்னடா கொடுமை இது…

              அமெக்கர்களை மது விபச்சாரம் போன்றவற்றை சரியத் சட்டத்தால் பனியவைக்க முடியாது என்று தெரிந்து தான் அவர்களுக்கு தனி இடம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது என்பது தான் உண்மை..ரியாத் போன்ற முக்கிய சவுதி நகரங்களில் அமெரிக்கர்கள் மட்டும் வசிக்குர பல ஓட்டல்கள் உள்ளது அதில் பூர்வகுடி சவுதிகாரர்கள் கூட செல்ல ஆனுமதியில்லை… இதுக்கு ஆதரம் கேட்பவர்கள் கூகுலில் தேடிப்பார்த்துக் கொள்ளலாம்….

      • வினவு ,சவூதி அப்படி கண்டிக்குமானால் ,அமெரிக்காவின் அடுத்த தாக்குதல் சவுதியாகத்தான் இருக்கும் .அப்புறம் சவூதி குழந்தைகள் கதியும் ஆப்கான் ,இராக் குழந்தைகள் கதைதான் .வடகொரியாவுக்கு ஆதரவாக சீனா இருக்கிறது .அமேரிக்கா தாதா சவுதியில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டால் எல்லோரும் ஆமாம் ஆமாமா ஆமாம் என்று சிங்கு சக்கா பாடுவீர்கள் .அடுத்தாற்போல அரைகுறை ஆடை மகள் வயிற்றில் கட்டிபிடித்து மவுத் கிஸ் அடிக்கும் கலாச்சார புரட்சிவாதி கமல் சவூதி அரபியா தீவிரவாதிகள் பற்றி சினமா எடுக்க வேண்டும் .நாங்கள் அதை தடை செய் என்று போராடவேண்டும் .எங்களை நிம்மதியாக இருக்க விடமாட்டீகளா?

        • அட நீங்க தான் இந்த இம்மைய காபாதுனும் இப்பு பாய்..நீங்க சுவனத்துல 72 கன்னி பெண்கலோடு இருக்கும் போது நிம்மதியா இருங்க இப்ப வேணாம்..

          அதுவரைக்கும் வாங்க,வயசுக்கு வந்த வராத சின்ன பொண்ணுங்களை கல்யாணம் பண்ணா என்ன என்ன நன்மை இருக்குதுனூ நம்ம முகமதுநபி சொல்லிக்கொடுத்த கலாச்சார புரட்சியை தாவா மூலம் செய்வோம்…

          • சி.கு ,எங்களது வேலைகளை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் .முதலில் உங்கள் வீட்டில் ஒளிரும் உள்ள சிவப்பு விளக்கை அனைத்து விட்டு வாருங்கள்

            • அட ஏங்க நீங்க வேர இப்பு பாய் …தமிழ்நாட்டுல கரன்டே இல்லாம விளக்கு எரியமாட்டுது.இதுல நீங்க வேர விளக்கை அனைக்க சொல்லுரிங்க…உங்களுக்குலாம் விளக்கு எரிரது பிடிக்கவே பிடிக்காத…..என்னேரமும் இருட்டுல என்ன தான் செய்விங்க….

    • //ஆம் மஞ்சா கயிறால் முதன் முதலாக உயிர் பலியான் பொழுது அந்த பட்டம் விட்டவனுக்கு மரண தண்டனை கொடுத்து இருந்தால் அடுத்து எவனாவது மன்ஜாகயிற்றை தொட்டிருப்பானா//

      மரண தண்டனைகள் மூலம் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது என்பதற்கு எதாவது ஆதாரம் இருந்தால் வினவில் பகரலாமே?
      As for as i know there’s no substantial evidence to support that capital punishment has rooted out any type of crime. In fact addressing the socio – economic conditions in the society would be a more constructive way i guess. correct me if am wrong!!!

        • மரண தண்டனைகள் மூலம் கொலை குற்றங்கள் குறைந்துள்ளது என்பதற்கு எதாவது ஆதாரம் இருந்தால் வினவில் பகரலாமே? it’s a generalized question not meant for saudi alone. US and china executed more people from 2007 – 12 but still tops in crime rate. Scientific evidence (research done by bailey and peterson) proves capital punishment have no effect on the felons.

          • கார்த்திக் ////Scientific evidence (research done by bailey and peterson) proves capital punishment have no effect on the felons.///
            உங்கள் வாதப்படியே பார்த்தாலும் குற்றங்கள் குறையவில்லை என்றே வைத்துக் கொண்டாலும் ,மரண தண்டனை இல்லை என்றால் குற்றங்கள் இன்னும் அதிகரிக்கும்

    • சரிப்பா இபுறாகிம், 5 லட்சம் ஈராக்கிய குழந்தைகள் மற்றும் எண்ணற்ற பொதுமக்கள் கொல்லப்பட்டதற்காக ஈராக்கில் உள்ள மசூதிகளையெல்லாம் இடித்துவிடலாமா

  46. இஸ்லாம் தோழர்களே… மும்பையில் தாக்குதல் நடத்தி இறந்த தீவிரவாதிகள் சொர்ககபுரிக்கு செல்வார்களா அல்லது நரகத்திற்கு செல்வார்களா.. நீங்கள் நம்பும் இறைவன் மீது ஆணையாக கூற முடியுமா?

    பின்குறிப்பு..இக்கருத்துக்கு [ஆம்] சொர்ககம் செல்வார் அல்லது [இல்லை] நரகத்திற்கு போவர் என்று மட்டும் கூறவும்… வழக்கம் போல essay மாதிரி பதில் அளித்து வெறுப்போத்த வேண்டாம். ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் அளிக்கவும்.

    • கல்நெஞ்சம் ,இந்த கூலிப்படை எங்கு போகுமோ எனக்கு தெரியாது .ஆனால் ஹெட்லே யார்?அமெரிக்காவில் வாழ்ந்த இவரை இந்தியாவிடம் விசாரணைக்கு ஒப்டைக்கஅமெரிக்க மறுப்பது ஏன்? அவர்களது முன்னிலையில் அமெரிக்காவில் தான் விசாரிக்க வேண்டும் என்று அமெரிக்கா பிடிவாதம் காட்டுவது ஏன்? ஹெட்லேயிடம் குற்றத்தை ஒப்புக் கொள்ள செய்து 35 ஆண்டுகள் தண்டனை கொடுத்து தனது பொறுப்பிலே வைத்திருக்கும் ரகசியம் என்ன? அபுல் கலாம் சாருக்கான் பொற்றோரை எல்லாம் நிர்வான சோதனை செய்து அனுமதிக்கும் அமெரிக்காவில் இவர் எப்படி பிரஜை ஆனார்? தாக்குதல் நடந்த அன்று மும்பை தாஜ் ஓட்டலில் சி.ஐ.யே தங்கியிருந்தது எதனால்?

      கூலிப்படையை விட அதை ஏவிய இந்தியா முஜாஹிதீன் [சங்பரிவார் முஸ்லிம் பிரிவு] ,மற்றும் பாக்கிஸ்தான் அமைப்புகளுக்கு நரகம் உண்டு

      • மாண்புமிகு S.Ibrahim அவர்களே நான் கேட்ட கேள்விக்கு ஆம் அல்லது இல்லை பதில் அளியுங்கள் என்றுதானே சொன்னேன்.. வழக்கம்போல essay எழுத ஆரம்பித்துவிட்டிரகள்..

        ontroller: Where are you hit?

        Gunman: One in my arm and one in my leg.

        Controller: God protect you. Did you manage to hit any of their guys?

        Gunman: We got one commando. Pray that God will accept my martyrdom.

        Controller: Praise God. Praise God. God keep you.

        One handler is talking to terrorists at the Oberoi Hotel.

        Controller: How’s it going brother Fahadullah?

        Gunman: Brother Abdul Rehman has just died, praise God.

        Controller: Oh really? Is he nearby?

        Gunman: Yes, he’s next to me.

        Controller: (Praying) May Allah accept his martyrdom.

        Gunman: The room is on fire.

        Gunman: I’ve run out of grenades.

        Controller: Be brave, brother.

        Don’t panic. For your mission to end successfully, you must be killed. God is waiting for you in heaven.

        Gunman: Inshallah.

        Controller: May God help you.

        Fight bravely, and put your phone in your pocket but leave it on.

        இது மும்பைத் தாக்குதலில் தீவிரவாதிகளின் உரையாடல்.. அல்லாவை வைத்துதான் அந்த தீவிரவாதிகளுக்கு சொர்ககம் கிடைக்கும் என குரானை வைத்துதான் பேசுகிறார். அதைத்தான் சவுதி செய்கிறது.. உண்மையை படமாக எடுத்தால் தடை செய்ய முயலுகிறது….

          • பாலாஜி ,ஹிந்துத்துவா தீவிரவாதிகளும் பாரதா மாதா பெயரிலே தங்களது தீவிரவாத செயல்களை செய்கின்றனர் .அதற்காக சங்க பரிவார்கள் சிவசேனாக்கள் செய்யும் தவறுகளுக்கு பாரதாமாதாவை யாரும் பொறுப்பாகக மாட்டார்கள்

            • For this, many so called Hindus are opposing it strongly placing that condemn statements and they are placing cases against them (i agree we are not able give any punishment for them becuase of corrupted people every where). Even vinavu opposing it strongly. for those article you could have find many hindu supporters come argue. How did you feel that time? You might have felt their stupidity. Same applies here as well.

              We should have open mind, then only we can accept the mistakes and correct it. Even it is in Quran or Bible or Gita or what ever. Because in this dynamic world nothing is perfect and nothing can be complete. Everything change when time goes. May be marraying 6 yrs old was not an offense those days. But now you yourself cannot able to accept it. Same applies to eevrything. (dont ask me what are those everything, like you asked in other comment, which law needs to be changed)

              • பாலாஜி ,இஸ்லாம் ஆரம்பகால நிலையிலிருந்து படிப்படியாக முஹம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்திலே மாற்றம் காணப்பட்டது .முகமமது நபி [ஸல்] அவர்களின் கடைசி காலத்தில் பெண்ணின் சம்மதம் இன்றி திருமணம் இல்லை என்று சட்டம் கொண்டுவரப்பட்டது.. ஒரு பெண் தனது சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ததை முஹம்மது நபி[ஸல்] அவர்களிடம் முறையிடுகிறார். அது உண்மை என்று அறிந்த முஹம்மது நபி[ஸல்] அவர்கள் அந்த திருமணத்தை உடன் ரத்து செய்கிறாகள் மேலும் திருமணம் என்பது ஒரு கடுமையான உடன்படிக்கை என்பதையும் இஸ்லாம் அறிவுருத்து கிறது .ஆதலின் ,பெண்களின் சம்மதம் ,மற்றும் கடுமையான உடன்படிக்கை என்றால் தெரிவிப்பதாக இருந்தால் குறைந்த பட்சம் 15 வயதுக்கு மேல் என்பதுதான் சரியாக இருக்கும். 6 வயது திருமணம் முகம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்திலே தடையாகிவிட்டது .மேலும் சமகாலத்திலும் அதற்கு முன்பும் பால்யவிவாகம் இருந்தது .உலகிலே முதலாக அதை மாற்றியது இஸ்லாமே

        • அந்த கண்ட்ரோலர் சொர்க்கம் கிடைக்கும் என்று சொன்னால் சொர்க்கம் கிடைக்கும் என்று இறைவனோ அவனது தூதர் முகம்மது நபி[ஸல்] அவர்களோ கூறியது போல கல்நெஞ்சம் வாதம் வைத்துள்ளார் .அப்பாவி மக்களை கொன்றால் சொர்க்கம் கிடைக்கும் என்று சொல்லவில்லை .நீதியை நிலைநாட்டத் போரிடுவதே ஜிகாத் .மும்பை தாக்குதல் எந்த நீதிக்காகவும் போரிட்டதாக தெரிவதில்லை .ஆதலால் இஸ்லாத்தையும் பாக்கிஸ்தான் தீவிரவாத குழுக்களையும் இணைத்து பேசவேண்டாம்

          • For the above statements, did you people fought against it (for using your god in that attack and falsely promissing as if he is god or prophet)?? did you gave any open condem statement for such incident? (here you means some representative from your side).

            if you feel they are wrong, you should have made strong opposing statement against your so called pakistan terrorist group. Because they are the one who creates a bad illusion to the people about your religion. they are from your religion and doing this. You should have asked them to stop doing in on your GOD’s name. you are not doing that. But you are doing it towards the people who from other religion and pointing that issue. Now tell me which is the right way to handle this. If you opposed it then you have a rights to oppose these people criticism as well. Now just for the sake of telling you are telling that is incorrect since you dont see any justice on that attack. From my point of view even if there is some justice how they can attack on common people who dont even know anything about it ???

            • பாலாஜி,பாக்கிஸ்தானிகளை நான் ஒருபோதும் முஸ்லிம்களாக பொருட்படுத்தியது இல்லை .அவர்களிடம் மத கொள்கைகள் இல்லை இனவெறி மட்டுமே மிகத்திருக்கிறது.மேலும் அவர்கள இந்திய முஸ்லிம்களுக்கு முற்றிலும் கேடு விளைவிப்பவர்களே .அவர்கள் பாகிஸ்த்தானிலிருந்து வங்கள் தேசத்தை பிரித்த தைப்போல இந்தியாவிலிருந்து காஷ்மீரை பிரித்து காட்டவேண்டும் என்ற வெறியுணர்வே விஞ்சி நிற்கிறது.ஏன் வங்காளதேசம் பிரிந்தது என்பதை அவர்கள் சிந்திக்கவில்லை .தேர்தலில் வெற்றி பெற்ற முஜிபுர் ரஹ்மான் பாக்கிஸ்தான் பிரதமர் ஆவதை அவர்களது மொழிவெறி ஏற்றுக் கொள்ளாததால் அவசர சட்டம் கொணர்ந்து அதைதடுத்தனர் .அதுவே பிரிவினைக்கு காரணமாக் இருந்தது .இதை உணராமல் இந்தியா அதில் தலையிட்டதை மனதில் கொண்டு இன்னும் விரோத மனப்பான்மையில் இருக்கிறது .ஷிண்டே ஹிந்துத்துவா தீவிரவாதத்தை பற்றியும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதையும் பேசினார் .செத்துக்கிடக்க வேண்டிய பாக்கிஸ்தான் உள்துறை அமைச்சர் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அதுவெளிவராமல் முஸ்லிம்களுக்கு கேடு செய்துவிட்டார்.
              ஹிந்த்துத்துவா தீவிரவாதிகளை கண்டுபிடித்து மக்கள்மத்தியில் கொண்டுவந்தவர் சத்திய வீரன் ஹேமந்த் கர்கரே ,ஆனால் மோடியின் கூலிப்படையாக செயல்பட்டு அவரை திட்டமிட்டு கொன்றுவிட்டனர்.
              இந்த உரையாடல்கள் பற்றி முஸ்லிம்கள் பொருட்படுத்தவில்லை .இறைவன் பெயரை அவர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டனம் தெரிவித்துள்ளார்கள் .எங்கள் நலனைவிட பாக்கிஸ்தான் என்ற நாட்டுக்காக நாங்கள் ஏன் சிரத்தையோ ,அவர்கள் மீது அபிமானமோ காட்டவேண்டும்?

    • //பின்குறிப்பு..இக்கருத்துக்கு [ஆம்] சொர்ககம் செல்வார் அல்லது [இல்லை] நரகத்திற்கு போவர் என்று மட்டும் கூறவும்… வழக்கம் போல எச்சய் மாதிரி பதில் அளித்து வெறுப்போத்த வேண்டாம். ஆம் அல்லது இல்லை என்று மட்டும் பதில் அளிக்கவும்.//

      இதுல இருந்து தெரியுது நீங்க இசுலாமியர்களிடம் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிங்கனு…பட் பயப்புடாதிங்க எங்க இப்பு பாய் சாட்டா சொல்லி முடிசுடுவாரு .

      பாதிங்கள எப்படி சொன்னாருனு எங்க இப்பு பாய் ,,இந்தியா முஜாஹிதீனாக இருந்தலும் அல் கொய்தாவாகா இருந்தாலும் சரி அவங்கலுக்கு சொர்கம் கிடையாது நரகம் மட்டும் தான்…கன்னி பொன்னுங்களாம் பி.ஜெ குரூப்க்கு மட்டும் தான்ட……….

  47. மதங்கள் மனிதனுக்கு போதையை ஏற்றும் என தெரியும், ஆனால் வெறிபிடித்த மிருகம் ஆக்கும் என்பது BJ விடயத்தில் தெரிகிறது.ஒரு உயிரின் மரணத்தில் இனபமுறும் இவர்களா மதத்தின் பாதுகாவலர்கள்? இவர்கள் போன்றோரிடம்தான் எல்லா மதங்களும் சிக்கி சீரழிகிறது. மிக சிறந்த முறையில் ஆராச்சி செய்கிறார் மனுஷ்யபுத்திரனுக்கு எய்ட்ஸ் உளளதா? அல்லது அவரின் அம்மாக்கு உளளதா என்று,நாலாந்தர பொறுக்கி தான் முதல்தர ‘போதகர்’எனற வினவின் கூற்று மிக சரி.
    வினவின் பதிவு உள்ளதை உள்ளபடி சொல்கிறது.இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்தை உண்மையில் அழிக்க வேண்டும் என்றால் முதலில் சவுதிமீதும், தன்மீதுமே அமெரிக்கா நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  48. I strongly doubt the so called propounded equality do exist for all in the saudi government. Many saudi princes run sex rings in USA and they are protected by diplomatic immunity(with CIA’s special interference). If you want proof you can check the wiretapes released by Wikileaks and if that doesn’t satisfy i would suggest you to visit the casino’s in Las Vegas, LA (especially beverly hills).
    Still most of Saudi is poverty stricken and many international agencies have proved Saudi arabia leads in the world sex trade. These princes loathe themselves in luxury with the money provided by the working poor in the country. Many houses in Jeddah and Riyadh have basement bars and disco clubs. None of these princes were punished under shariat law i presume…….

    • அட என்ன பாவம் சென்ஜுட்டிங்க கார்த்திக் இப்படி பட்டு பட்டுனு உண்மையலாம் சொல்லக்கூடது முஸ்லீமாகள் மனம் வருத்தப்படும்ல…

      இப்ப பாருங்க எங்க மூஃமின்கள் எப்படி உங்களை கிராஸ் ? பன்னுராங்கனு…மூஃமின் கார்திக் அண்ண கிட்ட ஆதாரம் இருக்கானு கேளுங்க கோரஸ்சா….

  49. உலகத்துல முக்காவாசி அக்ரமங்களுக்கு காரணம் பணம் தான். மதம் என்பது எளிதில் போர்த்திக்கொள்ளக்கூடிய ஒரு போர்வை இது புரியாம எல்லாரும் அடிச்சிக்கிறாங்க. சௌதி காட்டு மிராண்டி தேசம் தான். ஆனா அங்க பிழைக்கிற இந்தியர்கள் (hindus தான்) இதை பத்தி பேசமாட்டாங்க (exchange rate ஜாஸ்தி). இங்க நடக்கற அநியாங்கள பத்தி மூச்சு கூட விட மாட்டோம், விஸ்வரூபம் ஓடுமா அல்லது முஸ்லீம்ஸ் சமாதானமாகி (இந்தியாவில் அதற்க்கு பேர் காசு வாங்கறது – எல்லோரும்) ரிலீஸ் பண்ண விடுவாங்களா, அதான் பரபரப்பு. அதை விட்டுவிட்டு மற்ற விஷயத்த பத்தி நாம asusual கவலை படாம வேலைய பாப்போம்!

  50. வினவின் மொள்ளமாரித்தனம் இந்த கட்டுரையில் தெரிகிறது. வஹபிகள் என்று பிரிதுவிடுவதன் மூலம் மற்ற இஸ்லாமியர்கள் இந்த கட்டுரைக்கு சப்போர்ட் பண்ணுவார்கள் என மனப்பால் குடிக்கவேண்டாம் .

    இந்த விஷயம் பற்றி பகிரங்க விவாதத்திற்கு அழைப்பு விடுதுகொண்டிருகிறார் உங்களிடம் விசயமும் உண்மையும் இருந்தால் நீங்கள் சொல்வதை அந்த விவாதத்தில் மக்கள் மத்தியில் நிருபித்து காட்டுங்கள் . அதை விட்டு விட்டு. கோழைகள் போல ஓடி ஒழிவது பிறகு உங்கள் இணையத்தளத்தில் எதையாவது உளறுவது. வெட்கமாக இல்லையா ?
    சம்பந்தப்பட்டவர் விவாதத்திற்கு அழைக்கும் போது எதற்கு புறமுதுகிட்டு ஓடுகிறீர்கள் மிருக புத்திர கூடங்களே.

    • நண்பர் சீனி,
      வினவு போன்று நீங்களும் ஒரு தளம் அமைத்து பின்னூட்ட வசதியுடன் வாருங்கள். அங்கு விவாதிக்கலாம். அனைத்து வேலைகளையும் ஒத்தி வைத்துவிட்டு விவாத விளையாட்டிற்கு வருவதற்கு இங்கு யாரும் சும்மா இல்லை என்பதை புரிந்து கொள்க. எழுத்தில் விவாதித்தால் தானே சிந்திக்க அவகாசம் கிடைக்கும். முகநூலில் நான் உரையாடிய ஒரு முஸ்லிம் நண்பர் முதலில் ப்ரதர் போட்டு அழைத்து கொண்டிருந்தார். கொஞ்ச நேரத்திலே என்னை ஸ்கூல் பையன் என்றும் கண்ட மேனிக்கு பேச ஆரம்பித்தார். காடுவெட்டி குரு ஸ்டைலை கொஞ்சம் மாற்றி கொண்டு வாருங்கள்.

        • அப்படியே இப்பு பாய் இறையில்லா இஸ்சுலாம் , பகடு பக்கம்லாம் வந்து உங்க தாவாவ செய்யுங்களேன் …நீங்க இல்லாம நம்ம வாசகர்களாம் ரொம்ப கவளையோட இருக்காங்க

  51. உன்னை போல் ஒருவன் படத்தின் முடிவு இசுலாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள் ,அவர்களை எந்த விசரனையும் இன்றி கொன்றுவிடவேண்டும் என்று சொல்கிறது. ஆனால் மோடி போன்ற தீவிரவாதிகள் மீது வழக்கு காற்று வீசுவதே இல்லை.இந்துநாடு என்பதனாலயோ?.சரி,இசுலாமுல பார்த்தா தான் சொந்த இனத்திலேயே கட்டுபாடு,கோட்பாடு என்று கொலைசெய்கிறார்கள்.மதவாதிகளால் மனிதகுலம் அழிக்கப்படுவதும் , ஒழிக்கப்படுவதும் தொடருமானால் மனிதனேயம் எங்கு இருக்கிறது? கண்ணூக்கு தெரியத ஒருவன் இறைவன் ,அவன் நம்மை காப்பது ஒருபக்கம் கிடக்கட்டும்.நம்முன் உள்ள இந்த மதவாதிகளிடம் இருந்துநம்மை எப்படி காப்பது?
    மதக்கோட்பாடு,கொள்கை,வெங்காயம் போன்றவற்றில் இருந்து மனிதனேயம் உள்ள ,காக்க,நினைக்கும் அனைவரும்,வெள்ளையர்களுக்கு எதிராக,இந்திய சிப்பாய்களே எழுந்ததை போல எழுவதை தவிர வேறு வழியில்லை.

  52. வினவு தளத்தின் இந்தக் கட்டுரை குறித்தும்,மனுஷ்ய புத்திரன் மீதான அவதூறுகள் குறுத்தும் நண்பர்கள் வட்டத்தில் உரையாடிக்கொண்டிருக்கிறோம்.

  53. சகோதரர் சீனி
    // கோழைகள் போல ஓடி ஒளிவது பிறகு உங்கள் இணையத்தளத்தில் எதையாவது உளறுவது. வெட்கமாக இல்லையா ?//
    அருமையான கேள்வி!உங்களுடைய ஆதங்கத்திற்கு அனுதாபங்கள்!
    நீங்கள் இஸ்லாமியர்தானே? உங்களுடைய வாதங்களை,கொள்கைகளை எழுது வடிவில் புரிய வைக்க இயலாதா?
    ஏன் எதற்கு எடுத்தாலும் விவாதம்,விவாதம் என்றே புலம்புகிறீர்கள்?
    இக்கால விவாதம் தற்போதய நடைமுறையில் கருத்து பரிமாற்றமோ,அல்லது தெளிவோ ஏற்படுத்தப்போவதில்லை என்பதையும் மேலும், அது மனகசப்புகளையும்,மரியாதைகுறைவான வார்த்தைகளையும்தான் பதிவு செய்யுமே தவிர வேறில்லை என்பதையும் கிருத்துவர்கள் உடனான Tண்TJ தரப்பினருடைய பதில் விவாதத்திலிருந்தே என்னை போன்றோர் உணர்ததால்தான் உங்களுடன் மட்டுமல்ல ஒரு இயக்கம் சார்ந்த நபர்களுடன்,தாம் சொல்வதுதான் சரிஎன்று சொல்பவர்களுடன் விவாதம் செய்வது சரியான தீர்வாகாது என்ற நிலைப்பாட்டில் அவர்கள் இருக்கிறார்கள்!
    அப்படி உங்களால் எழுத்து விவாதம் அல்லது உங்களுடைய கருத்துக்களை அழகிய முறையில் பதிவு செய்யவும்,இஸ்லாத்தின் தவறாக விளங்கிக்கொண்டவர்களுக்கு நல்வழி போதிப்பதை பதிவு செய்ய “இறையில்ல இஸ்லாம்” என்ற தளத்தில் பங்கு பெறலாமே!

    • சீனி விவாதத்திற்கு முகவரியாளர்களை மட்டுமே அழைத்தார் .அநாமதேயங்களை அழைக்கவில்லை .

  54. சே…சவுதி ஷேக் மாமாக்கள் இந்திய முஸ்லிம் சிறுமிகளை கட்டாய கல்யாணம் செய்கிறார்கள் அதுவும் பத்து நாட்களுக்கு மட்டும் என்று செய்திகளில் வந்ததை நம்பாமல் அதை ஆரிய ஏடுகள் எழுதினது என்று நழுவிக்கொண்டு விடுமுறைநாளில் மட்டும் சினிமாவுக்காக போராடுவார்களாம்…பாகிஸ்தான் இணையதளங்கள் போலி போட்டோவை போட்டு பர்மாவில் முஸ்லிம்களை கூட்டாக கொலை செய்கிறார்கள் என்றதும் உடனே அதை நம்பி மும்பையில் ஊர்வலம்,கலவரம்,துப்பாக்கிசூடு என்று நடத்த விட்டார்கள்…அப்போ அறிவில்லையா அது உண்மையா இல்லையா என்று பார்க்க…

    முஸ்லிம் சிறுமிகளை சிதைக்கிறார்களே என்று உனக்கு சொரணை வந்திருக்கணும் முதல்ல…விஸ்வரூபம் படம் ரிலீசுதான் பெரிய விசயம்.அப்பதான் டிவில வரலாம்…

  55. இந்த கூட்டம் முஸ்லிம்கள் விசயத்தில் பேசின ஒரே விசயம் தர்காவில் தொழுகை கூடாது என்பதைத்தான்.அதைத் தவிர மத்த பாவச் செயல்கள் எல்லாத்தையும் மவுனமாக வேடிக்கைதான் பார்க்கிறது.அடுத்தவன் அதை தட்டி கேட்டால் நீ ஆர்.எஸ்.எஸ் என்று தப்பிக்கும். முஸ்லிமே கேட்டால் மிரட்டி விரட்டும். போய் ஹைதராபாத் ஏர்போர்ட்டல வர்ற ஷேக்கு கிழ போல்ட்டுகளை செருப்பால அடிச்சு விரட்டு.அதை செய்யாம அவங்களுக்கு வக்காலத்து வாங்கறே…

  56. தொழிலைவிட்ட நாவிதரை மருமகனாக தேடிக்கொண்டிருப்பதாக கூறிய இபுராகிம், அது என்ன தொழிலைவிட்ட நாவிதர் புதிய மனுநீதியா என்ற கேள்வியை கேட்டதும் காணாமல் போன இபுராகிம்,
    முத்ஆ திருமணம் உமர்காலத்திலும் செய்த தாக முஸ்லீம் கூறுகிறாரே.

    அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
    ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் உம்ராவிற்காக வந்தபோது, அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு நாங்கள் சென்றோம். அவர்களிடம் மக்கள் பல விஷயங்களைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். பிறகு அவர் களிடம் “அல்முத்ஆ’ (தவணை முறைத் திருமணம்) பற்றியும் பேசினர். அப்போது ஜாபிர் (ரலி) அவர்கள், “ஆம்; நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகி யோரது காலத்திலும் “அல்முத்ஆ’ (தவணை முறைத் திருமணம்) செய்துள்ளோம்” என்றார்கள்.
    முஸ்லீம் 2724
    முழுபூசனிக்காயையும் சோற்றுக்குள் அமுக்கவேண்டாம். முகம்மது முத்ஆவை தடைசெய்யவில்லை என்பதே சரியானது.
    சௌதியிலிருந்து பணம் வந்ததாக நிருபித்தால் அவ்வளவும் எனக்கா? அப்படியானால் குறைந்தது மூன்று இலட்சத்தை தயாராக வைத்துக் கொள்ளுங்கள. வீடியோ ஆதாரமே தருகிறேன். நான் வெளியூரில் இருப்பதால் மூன்று நாட்கள் பொருத்துக்கொள்ளுங்கள்.

    பட்டம் விட்டுவதால் ஏற்படும் விபத்துகளுக்கு மூன்கூட்டிய கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டதொன்று என்ற அடிப்படைக்காரம் உண்டு. இதுவும் ரிஸ்வானாவின் தண்டனையும் ஒன்றா?

    • நந்தன் ,முகமமது நபி[ஸல் ]அவர்கள் முத் ஆவை தடை செய்த நபி வலி செய்தி தெளிவாக இருக்கையில் நபித்தோழர்கள் அறிவிப்புக்சல் பின்பற்றப்படாது.இருப்பினும் சிலஹதிகள் வாசகங்கள் சிலர் விட்டிருக்கலாம் .அதே அறிவிப்பாளர் அறிவிக்கும் 2726 வது ஹதீதை பாருங்கள்
      நான் ஜாபிர் இப்னு அப்தில்லா [ரலி] அவர்களிடத்தில் வந்தேன் .அப்போது அவர்களிடத்தில் ஒருவர் வந்து ,இப்னு அப்பாஸ்[ரலி] அவர்கள் ,இப்னு சுபைர் [ரலி] அவரகள் இரண்டு முத்ஆ விசயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர் என்று கூறினார் அப்போது ஜாபிர்ரலி அவர்கள் நாங்கள் அவ்விரண்டையும் ம் நபி[ஸல்] காலத்தில் செய்தோம் பின்னர் உமர்[ரலி] காலத்தில் அவ்விரண்டையும் செய்யக் கூடாது என்று எங்களுக்கு தடை விதித்தார்கள் .அதன் பின்னர் நாங்கள் அவ்வாறு செய்யவில்லை என்று விடையளித்தார்கள் .முஸ்லிம் 2726
      ஏன் உங்களது கொள்கை தங்கம் இன்குலாப் பற்றி மவுநியாகிவிட்டீர்களே ,
      அது மனுநீதி இல்லை எனது சொந்தநீதி .

      சௌதியிலிருந்து பணம் வந்ததாக நிருபித்தால் அவ்வளவும் எனக்கா? அப்படியானால் குறைந்தது மூன்று இலட்சத்தை தயாராக வைத்துக் கொள்ளுங்கள. வீடியோ ஆதாரமே தருகிறேன். நான் வெளியூரில் இருப்பதால் மூன்று நாட்கள் பொருத்துக்கொள்ளுங்கள்.
      தாருங்கள் .அதென்ன வீடியோ தர 3 நாட்களா?இனிதான் ஆதாரம் தயார் பணன்வேண்டுமா?
      ///பட்டம் விட்டுவதால் ஏற்படும் விபத்துகளுக்கு மூன்கூட்டிய கண்டறியப்பட்டு தடை செய்யப்பட்டதொன்று என்ற அடிப்படைக்காரம் உண்டு. இதுவும் ரிஸ்வானாவின் தண்டனையும் ஒன்றா?///
      ஏன் ஒன்றாகாது ? மஞ்சா நூல் கழுத்தில் சுற்றினால் கழுத்து அறுபட்டு ஒரு பாவமும் ஒரு குற்றமும் அறியாத அப்பாவிகளைவிட 17 வயது பெண் 23 வயது என்று ஏமாற்றி 4 மாத குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை ஏற்றது சரியான செயலா?

      ரிசானாவின் தண்டனை தப்பாகவே இருக்கட்டும் .ஆனால் தீபாவளிக்கு டூவீலரில் மனைவி குழந்தையுடன் சென்றவர் என்ன பாவம் செய்தார்? சட்டத்தை ஏட்டில் எழுதி வைத்து என்ன பயன் ?அதுவும் ஒரு உயிரை தனது பொழுது போக்குக்காக கொன்றவனுக்கு மரண தண்டனை கொடுத்தால் எத்தனையோ உயிர்கள் காப்பாற்றப்படும்

      • இப்ராஹிம் குறிப்பிடும் முஸ்லீம்2726 முஹம்மது நபி தடை செய்யவில்லை என்றேகூறுகிறது

  57. கொலை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை பற்றி கவலை பட மாட்டேன் என்கிறார்கள். கொலை புரிந்த குற்றவாளியை காப்பாற்ற துடியாய் துடிக்கிறார்கள். இவர்கள் அல்லவோ அறிவு ஜீவிகள். இவர்கள் வீட்டில் அந்த பாதிப்பு ஏற்பட்டால் அறிவு ஜீவி வட்டத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்.

    • ////கொலை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களை பற்றி கவலை பட மாட்டேன் என்கிறார்கள். கொலை புரிந்த குற்றவாளியை காப்பாற்ற துடியாய் துடிக்கிறார்கள்.//////

      ஆமா சிராஜ், அறிவுகெட்ட முட்டா பசங்க.. செய்யாத குற்றத்துக்காக அப்பாவி ரிசானாவை அநியாயமாக கொலை செய்த சவுதி மன்னனுக்கு அடியாள் வேலை பார்ப்பதற்கு பதில் பிச்சை எடுத்து திங்கலாம்.

      /////// இவர்கள் அல்லவோ அறிவு ஜீவிகள். இவர்கள் வீட்டில் அந்த பாதிப்பு ஏற்பட்டால் அறிவு ஜீவி வட்டத்திலிருந்து வெளியேறிவிடுவார்கள் என்று நினைக்கிறேன்./////

      என்ன இருந்தாலும் பீ.ஜெ கூட்டத்தை இப்படி எல்லாம் திட்டக்கூடாது.

  58. பொய்ய__ பிஜேவிற்கான வீடியோ சுட்டிகளை இணைத்தபோதும் அதனை பார்த்தோ பாரகாமலோ தொட்ரந்து நேரடியா வாடா மவனே என்று கச்சை கட்டும் பிஜேவின் ரௌடிப்பட்டாளங்களுக்கு சொந்த மூளையே கிடையாது
    பிஜே தனது அடிவருடிகளின் உணர்சியை தூண்டிவிட்டு குளிர் காய்பவர் என்பதை இந்த வீடியோவில் காணலாம்
    http://youtu.be/hxO_cY9tHEQ

      • அது எப்படி பாய் உங்களுக்கு மட்டும் பிலே ஆகமாட்டுது,,,அல்லா …உங்களுக்கு மட்டும் பி.ஜெவின் வீடியோவை பிலெ செய்யாமல் தடுக்கின்றான்

    • உன்னை போல தூங்குரவன் மாதிரி நடிப்பவனை தொளுரித்து தொங்க உட தாண் நேருல வாங்க என்று சொல்றோம் .

      • உஸ்மான் பாய்,

        க்யா பையா ?..,, இங்க விவாதிக்குறதுக்கு ஒரு இஸ்லாமியனுக்கு தெம்பு இல்லையேனு ஊரெல்லாம் இஸ்லாமியனை அசிங்கப் பட வைக்கிறீங்களே …

        இங்க மொதல்ல விவாதிங்க .. அப்புறம் நேர்ல பாத்து விவாதிக்கலாம்..

  59. நம் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு குறைந்தது சராசரியாக ஒரு 50 கொலைகளாவது நடக்கிறது. அதில் பாதி கொலைகள் எந்த முன்விரோதமும் இல்லாதவர்களை பணத்திற்காகவோ மற்ற காரணங்களுக்காகவோ கொல்லப்படுகிறார்கள். அப்போ மொத்த இந்தியாவில் எத்தன கொலைகள் விழும் என்பதை எண்ணிக்கொள்ளுங்கள். இதே சவுதியில் மொத்த நாட்டிலும் ஒரு நாளைக்கு ஒன்றோ இரண்டோ கொலைகள் நடப்பது கூட அதிகம். எதனால் இந்த நிலை அங்கு சரியத் சட்டம் அமல்படுத்தபடுவதினால் தான். சிந்திப்பவர்களுக்கு இது விளங்கும்

  60. அஸ்ல் செய்து பெண்களை விற்றதற்கான நபிமொழிக்கு காலம் சூழ்நிலையை பார்கவேண்டும் என்று உளறுகின்றனர். அப்படியானால் இந்த அதரப்பழசு பழிக்குப்பழி சட்டத்திற்கு காலச் சூழ்நிலையையும் பின்புலத்தையும் பார்க்கவேண்டும் என்று கூற முடியாமல் போவது மதவெறி கண்ணை மறைப்பதாலா?
    இசுலாத்தைப்பற்றி எல்லாம் தெரிந்ததுபோல் உதார்விடும் நாகூர்மீரீன், ஜமீல் போன்ற இங்கு பின்னூட்டமிடும் பிஜே பக்தர்களே அஸ்ல் செய்து பெண்களை விற்றதனை தடை செய்த தற்கான் ஏதாவது நபிமொழியை காட்டமுடியுமா உங்களால்? வெட்டியாக அது இது என்று உளராமல் ஆதாரத்தை இங்கே முன்வையுங்கள்.

    • நந்தன் ////பிஜே பக்தர்களே அஸ்ல் செய்து பெண்களை விற்றதனை தடை செய்த தற்கான் ஏதாவது நபிமொழியை காட்டமுடியுமா உங்களால்? வெட்டியாக அது இது என்று உளராமல் ஆதாரத்தை இங்கே முன்வையுங்கள்.///

      இப்போது போர் வந்தால் நீங்களும் நானும் வாளை எடுத்துக் கொண்டு குதிரையில் வாகா சென்று நாம் போரிட்டால் ,அந்த போரில் பாக்கிஸ்தான் தோல்வியுற்றால் அங்குள்ள உயிருடன் உள்ள ஆண்களையும் பெண்களையும் அரசு பொறுப்பில் வைத்து பாதுக்ககவும் பராமரிக்கவும் இந்தியாவில் சிறைகளே இல்லை என்றால் போரில் ஈடுபட்ட வீரர்களுக்கு சம்பளத்திற்கு பதிலாக கைப்பற்றப்பட்ட பொருட்களும் ஆண் ,பெண் அடிமைகளும் பங்கிட்டு தருவார்கள் .அந்த பெண்களின் சம்மதத்தோடு அவளோடு உடலுறவுகள் வைத்துக் கொள்ளலாம் .அதனால் குழந்தைகள் பிறந்தால் அவளை விடுதலை செய்து மணந்து கொள்ளவேண்டும் அல்லது அவளை விடுதலை செய்து திருமணம் செய்து வேண்டும்..இல்லைஎன்றால் அவளை சந்தையில் விற்றுவிடலாம் .கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை கொண்டுள்ள சிலர் ,வாகா வரை சென்றதால் மனைவியை அதிக நாள் பிரிந்த உம்மைப் போன்ற சிலர் இது போன்ற கேள்வியை கேட்கிறார் .
      நந்தா,இப்போது சொல்லுங்கள் இப்படி ஏற்பட இப்போது வாய்ப்புள்ளதா?
      ஆனால் முதல் காற்றாடி விட்டு அதனால் மஞ்சா நூல் சுத்தி இறந்த சமயத்தில் காற்றாடி விட்டவனுக்கு மரணதண்டனை கொடுத்தால் நூற்றுக்க்கனக்கான் அப்பாவிகள் ரிசானாவை விட நம் தமிழ்நாட்டு அப்பாவிகள் ,காப்பாற்றபட்டிருக்க மாட்டார்களா?அந்த தமிழச்சி சென்னை ரோட்டில் தனது கண்முன்னால் இறந்த கணவனை மடியில் போட்டு அழுத கோரகாட்சியை பற்றி கண்ணீர் விடாமல் ,இலங்கை பெண்ணை சவூதி காரன் மரண தனடனைக்கு கண்ணீரை சிந்தி வங்க கடலை நிறைப்பது சரியா?

      • Don’t you feel ashamed on this? How god can plan for wars and tell preparation about wars and explain how to handle those defeated people? Here it clearly proves he is not a god, he is normal human being. But very talented, otherwise he cannot get this much followers. But after seeing all these comments looks they these followers are losing their brain when it comes to religion.

  61. வாழ்நாள் முழுவதும் ஒழுங்காக வேலை செய்யாமல் அடுத்தவர்களின் உதவியால் தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும் காப்பாற்றிய, தொழிலாளர்களின் உணர்வுகளையும் வலிகளையும் புரிந்து கொள்ளாத கார்ல் மார்க்ஸ் எழுதிய மற்றும் பிதற்றிய அனைத்தும் தொழிலாளர்கள் மற்றும் சுரண்டப்படுவோரின் விடுதலைக்காக எழுதியது கூறியது என்று தூக்கிப் பிடித்து கொண்டாடும் வெறிப் பிடித்த உங்களிடம் இதைத் தவிர வேறெதையும் எதிர்ப் பார்க்க முடியாது என்பதால் ஆச்சரியப்படவோ அதிர்ச்சியடையவோ ஒன்றுமில்லை

    • அட பாருட அப்துல் ரசீத் பாய் கோவபடுராரு//

      கதிஜாவின் பல கோடி ரூபாய் சொத்துக்களை எப்படி அழித்தார் என்று தெரியாமல் …பிற்காலத்தில் சோற்றுக்கே பி.பி அடித்து..ஒரு வழியாக வாள்முனையில் இசுலாத்தை வளர்த்து..6 வயசு ஆயிசாவை கல்யாணம் பண்ணி,உமர் மகள் அப்சாவின் வீட்டில் பணிபென்னாக இருந்த மரியமுடன் கலவைவில் ஈடுப்பட்டு புள்ளபெற்ற மிக பெரிய மகான்னை பின் பற்றும் உங்களிடம் மனிதாவிமானததை எதிர்பாபது சரியில்லை தான் பாய்

      • ஆமாம், சிவப்புக் குதிரை உண்மையான பெயர் போட்டு பின்னூட்டமிடாத நீயெல்லாம் என்னைக் கேலி செய்வதை நினைத்து சிரிப்பதா அல்லது அழுவதா என்று தெரியவில்லை. இஸ்லாத்தைப் பற்றியும் அதன் தூதரைப் பற்றியும் அறியாத அரைவேக்காடுகளான நீயும் உன்னைப் போன்ற வினவையும் பகுத்தறிவுவாதிகள் என்று தன்னைத் தானே பீற்றிக் கொள்ளும் நீங்களெல்லாம் எங்களைப் பற்றிக் குறை கூற வந்துவிட்டீர்கள் என்ன செய்வது “ஆலை இல்லாத ஊரில் இலுப்பைப் பூ சர்க்கரையாம்” என்று நினைத்து மனதைத் தேற்றிக் கொள்வதைத் தவிர வேறு என்ன செய்ய இயலும்.வினவு,சிவப்பக் குதிரை மற்றும் உங்களைப் போன்ற காமாலைக் கண்கொண்ட அனைவரும் தயவு செய்து முழுவதும் அறிந்து கொண்டு எதைப் பற்றியும் பேசுமாறு அல்லது எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். சிவப்புக் குதிரை அடுத்த முறை பின்னூட்டமிடும்போது உண்மையான பெயரில் பின்னூட்டமிடவும்.

          • // சிவப்புக் குதிரை அடுத்த முறை பின்னூட்டமிடும்போது உண்மையான பெயரில் பின்னூட்டமிடவும்//

            ஆமா என் உண்மை பெயர் தெரிந்து என்ன பன்ன போரிங்க பாய்…மேல சொன்ன எல்லாதுக்கும் அதிஸ் ஆதாரங்கள் இருக்குனு உங்களுக்கு தெரியும், என்ன பன்னுரது எல்லாம் தெரிந்து தான் அங்க இருக்க வேண்டி இருக்கு பாய்.

            //வினவு,சிவப்பக் குதிரை மற்றும் உங்களைப் போன்ற காமாலைக் கண்கொண்ட அனைவரும் தயவு செய்து முழுவதும் அறிந்து கொண்டு எதைப் பற்றியும் பேசுமாறு அல்லது எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன்//

            இது எங்கள் தப்பு இல்லை பாய் ..அல்லா தான் எங்க இதயதை பூட்டு போட்டு இருக்கின்றாரெ (குரான் 47:24 )அப்பரம் எப்படி எங்களால் யோசிக்க முடியும்…..

            • என்ன அரிக்குமார் பன்னுரது ..பதில் இருந்த சொல்ல மாட்டாரா ரசீத் பாய்…நீங்க வருத்த படாதிங்க, மூஃமின்கள் எப்பயும் இப்படி தான் செய்வாங்க ..நானும் ஒரு காலத்துல இப்படி தான் சென்சுயிருக்கென்..

  62. //கசாப்பும் அந்த ஏழைப் பெண்ணும் ஒன்றா? உங்களுக்கெல்லாம் மனிதத்தன்மையே கிடையாதா?//ஹையோ மனித தன்மையை பற்றி பேசும் மகானே,நவீன காந்தியே என்ன சொல்வது உங்களுடைய மனிதாபி மானத்தை?ஆடு நனைகிறதேன்னு கண்ணீர் விடும் ஓநாய்கள் தான் இங்கே எத்தனை எத்தனை??ஷரியத் சட்டத்தை பற்றி என்ன உங்களுக்கு தெரியும்??எவெனோ முன்பு எழுதி வைத்த அதிகப் பட்ச்சம் ஒரு நூறு கேள்விகளைத்தான் இஸ்லாமிற்க்கு எதிராக ஆர் எஸ் எஸ் டவுஷர்கலும்,பகுத்தறிவு வெங்காயங்களும் சுற்றி சுற்றி வருகின்றன.அதாவது அரைத்த மாவையே அரைத்து கொண்டிருக்கிறது!!உங்களுடைய பொறாமைகளும் ,அவதூருகளும் மேலும் மேலும் இஸ்லாத்தை மாபெரும் சக்தியாக மாற்றி வருகிரதே தவிர,அசுர வளர்ச்சி அடைந்து வருகிறதே தவிர ஒரு குறையும் இந்த 1400 வருட காலங்களிலும் இல்லை!!போங்க ராஜா போங்க பொறாமையால உங்களுக்கெல்லம் அசிடிட்டி வந்துரப் போவுது!!!

  63. இந்து மதச் சட்டத்தில் ஒரு மனைவி இருக்கும் பொழுது இரன்டாவது திருமனம்
    முடிக்க தடை உன்டு. முச்லிம் தலாக் சொல்லிவிட்டு திருமன்ம் முடிக்கலாம்.இச்லாமிய சட்டம் இக்
    காலத்திர்கு உதவாது.

    • S.Govindarajan,அதனாலே இந்து மதத்தை சேர்ந்தவர்கள் மனைவிகளை கொலை செய்யும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன.ஈனும் பல பெண்கள் அவர்களது வீட்டுக்கு விரட்டப்படுகின்றனர் .கணவன்கள் ஆங்காங்கே வைப்பாட்டிகள் வைத்துக் கொள்கின்றனர் .
      அடுத்து நீங்கள் சர்வே செய்து பாருங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அதிகமாக செய்தவர்கள் முஸ்லிம்களா அல்லது ஹிந்துக்களா ?

  64. என்ன இருந்த்தாலும் இடிஅமீனுக்கே அடைக்கலம் குடுத்த சவுதி அரேபியா தானே????

  65. கோவிந்தராஜன் சார், மேலே விவாதிக்கப்படுபவை நன்றாக விவரங்கள் அறிந்து கொண்டு செய்யப்படுபவை. அதற்கே நுனி புல் மேய வேண்டாம் என பதில் வருகிறது. இஸ்லாமிய சட்டங்களை தெரிந்து கொண்டு பின்னூட்டம் இடலாமே..

  66. தற்கொலைத் தாக்குதல் நடத்தி இறக்கும் இஸ்லாம் தீவிரவாதிகள், சொர்க்கம் செல்வார்களா? அல்லது நரகம் செல்வார்களா?
    வாய்கிழிய வக்காலத்து கையெடிய essay எழுதும் இஸ்லாம் தோழர்கள் இரண்டு வரிகளில் மட்டும் பதில் அளிக்கவும்….

    • கல்நெஞ்சம் ,தற்கொலையும் தீவிரவாதமும் இஸ்லாம் இல்லை .அமைதியும் சமாதானமும் இஸ்லாம் .
      தற்கொலை செய்தவன் நரகம் செல்வான் .அவன் நோக்கம் அறிந்து இறைவன் மன்னிக்கவும் வாய்ப்பு உள்ளது .
      ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டினாலும் தப்பில்லை .ஒரு கன்னத்தில் அடித்தவனின் மறுகன்னத்தில் அடித்தாலும் தப்பில்லை .நீங்கள் தீவிரவாதிகள் என்ன்றால் அதை முடிவு எடுப்பது எப்படி? அமெரிக்காவின் கருத்து அடைப்படையிலா? அல்லது பீஜெபியின் கருத்து அடிப்படையிலா? அல்லது முஸ்லிம்களின் கருத்து அடிபடையிலா?

        • ??தற்கொலை செய்தவன் நரகம் செல்வான் அவன் நோக்கம் அறிந்து இறைவன் மன்னிக்கவும் வாய்ப்பு உள்ளது //

          suicide attack பண்ணி கொலை செய்பவனுக்கு என்ன என்ன நோக்கம் இருந்தால் அல்லா மன்னிப்பார் என கூற முடியுமா..

          பின்.குறிப்பு. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் அளிக்கவும். வழக்கம்போல வியாக்கியானம் செய்ய வேண்டாம்..

          • கல்நெஞ்சம் ,இராக்கில் அவனது குடும்ப பெண்களை அமெரிக்க ராணுவம் கற்பழித்து இருக்கலாம் .அவனது குடும்பத்தினரை அல்கிரைப் சிறையில் சித்ரவதைபடுத்தி கொன்றிருக்கலாம் .ஆப்கானில் அவனது சகோதரர்கள் பலரை கண்டெஇனரில் 600 க்கும் அதிகமானவர்களை அடைத்து கவுதிமாலவுக்கு கப்பலில் ஆடுமாடுகள் போல அழைத்து செள்ளப்படுகையிலோ அல்லது அதன் பின்னர் குனியவைத்து நிமிரமுடியாமல் சித்திரவதைப்படுத்தி அதில் இறந்திருக்கலாம் ,இது போன்ற காரணங்களுக்காக சூயிசைட் அட்டாக் பண்ணியிருப்பார்கள்

  67. ரிசானாவின் தந்தை தனது சொந்த வண்டில் மூலம் காட்டில் விறகு சேகரித்து அதனை விற்பதன் மூலம் தனது குடும்பத்தை பராமரித்து வந்தார். அவரின் மாடுகளையும் வண்டிலையும் புலிகள் தமது தேவைக்காக அவரிடமிருந்த துப்பாக்கி முனையில் அபகரித்ததால்தான் வேறு வழியின்றி ரிசானா தனது பள்ளிப்படிப்பை நிறுத்தி இரண்டு மாதங்களுக்குள் சவுதி அரேபியா செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது

  68. கெல்லொ
    வினவு சவ்தி அமெரிக்காவுக்கு அடிபனிவது உன்மைதான் அதர்க்காக மனுதர்மமபோல் சரியதும் ஒன்ருதான் என்பது வேடிக்கையாக உள்ளது.முஸ்லிம் என்ற பெயர் இருந்தால் மட்டும் போதும் இஸ்லமிய கடமைகள் எல்லாம் வேன்டியது இல்லை. முற்போக்கு வாதிகலிடம் கைகொர்துக்கொண்டு சங்பரிவார கும்பலை விரட்டுவொம் என்பது புரிகிரது.நாம் எல்லாம் ஒன்றாக ஆனபின் நடபது சொல்கிரேன் கேட்டுக்கொள்ளுங்கள். முஸ்லிம்பாய் கிடச்சிடான்டா பாய் டீ குடிகல,சாப்பிட பாய் என்று பாக்கெட்டை காலிசெய்துவிடிவிர்கள்.பெண் உரிமை இஸ்லாத்தில் இல்லை முஸ்லிம்கள் வெளிஆட்கலை வீடுகலில் சேர்பது இல்லை என்று சொல்லிக்கொன்று முஸ்லிம் தெருக்கலையும் ஊரையும் நொட்டம் விடுவிர்கள்.எவளாவது கேடுக்கெட்டவ இருப்பாள் அவளை கூட்டிகொண்டுபோய் வய்துக்கொன்டு களபுதிருமனத்தை பட்றி பேசுவிர்கள்.ஜமாத்கலில் எதவது பிரச்சனை வந்துயிருக்கும் உங்கலுக்கு தெரிந்த வக்கீள் இருக்கிறார்கள் என்று கூட்டிக்கொன்டுபோய் வலக்கை இலு இலு என்று இலுத்துவிடுவிர்கள்.தாங்கள் கட்டுரையை எப்படி முடிக்கிரிர்கள் றீஸாணா தீர்பை ஆதரிக்கும் முஸ்லிம் அமைப்பிகலுக்காக விஸ்வருபம் படதிர்காக னடக்கும் போரட்டதில் பங்கு கொல்லமட்டோம் என்பது வேடிக்கையக உள்ளது நாங்கள் உங்களை எதிர்பார்கயும் இல்லை உங்களுக்கு முஸ்லிம்களூக்கு எதிரன படம் என்ரால் விமர்சனத்தொடு மட்டுமே நிருதிக்கொள்விர்கள். கமல்கசனும் அமெரிக்கவில்பதக்கம் வாங்கவேண்டும் என்பர்க்காகவே அதிகமதிகம் மண்குடிசயில் வாலும் ஆப்கன் முஸ்லிம்கலை கொன்ருகுவிப்பதுபோல் கான்பிப்பதுதான் வேதனையாக உள்ளது

  69. அய்யா கணவான்களே? இங்கே பின்னூட்டமிடக்கூடிய அறிவாளிகளே? “மெத்தப்படித்த” மேதாவிகளே? இஸ்லாமியர்கள் யாரும் சவுதி அரேபியா செய்யக் கூடிய அனைத்தையும் ஆதரிப்பவர்கள் அல்ல. அவர்கள் செய்யும் தவறுகளையும் கண்டிக்கக் கூடியவர்கள் தான் நாங்கள் என்பதைத் தெளிவாகத் தேரிந்து கொண்டு உங்களுடைய “கணவான்” த்தனத்தையும்,”அறிவாளி”த்தனத்தையும்,”மேதாவி”த்தனத்தையும் காட்டுங்கள்.

  70. இன்றைய 21ஆம் நூற்றாண்டின் மனித சமுதாய வளர்ச்சிக்கும், முற்போக்கு சிந்தனைகளுக்கும் ஏற்றவாறு பலநூற்றாண்டுகளுக்கு முன்னர் மதங்களால் வகுக்கப்பட்ட நடைமுறைகளும், ‘நீதி’ (எனக் கருதப்பட்டு இயற்றப்பட்ட) போதனைகளும் ஒத்துவருகின்றதா எனும் கேள்வியை மூடத்தனமாக எதிர்ப்பவர்கள் அதிகம் உள்ள மதமாகவும், மற்றைய மதங்களை மதிக்காத மதமாகவும் இஸ்லாம் உள்ளது என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.
    உதாரணத்திற்கு சவூதி அரபியாவினுள் எடுத்துச்செல்லப்படும் ஒரு புத்தகத்தில் ஒரு இந்துக்கடவுளின் படம் இருந்தால் அதைக் கிழித்தெறிவார்கள். ஆனால் அமெரிக்கன் ஒருவன் குரானைக் கிழித்துவிட்டால் உலகெல்லாம் உள்ள இஸ்லாமியர்கள் கலகங்களில் ஈடுபடுவார்கள்.
    பாகிஸ்தானில் குரானை கிழித்துவிட்டார்கள் என்று சொன்னால் போதும் ஒரு வேற்று மதத்தினரை கொன்றுவிடலாம். அங்கெல்லாம் மாற்று மதத்தினரின் சாட்சிகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.
    என்னுடன் படித்த, தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ளும் பாகிஸ்தானைச் சேர்ந்த நண்பர் அவரது சொந்த ஊரிலேயே சட்டப்படி தான் ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொள்ள முடியாது, ஏனென்றால் அவர் அகமதியா பிரிவினைச் சார்ந்தவர். அவரது உறவினர்கள் பலர் மதத்தின் பெயரால் கொல்லப்பட்டுள்ளனர்.

  71. ஒவ்வொரு நாட்டிற்கும் சட்டம் என்று ஒன்று இல்லையென்றால் அந்நாடு சீரழிந்துவிடும். அது ஒரு நாட்டில் கடுமையாகவும் ஒரு நாட்டில் எளிமையாகவும் இருக்கும். சட்டப்படி தண்டனை வழங்குவது நீதியாகும். ஆனால் குற்றம் புரியாத ஒருவருக்கு தண்டணை வழங்கப்பட்டால் ,அந்த அநீதியை மனம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. ரிசானா விஷயத்தில் தண்டனை நீதமா… அநீதமா…? என்பது யாருக்கும் தெரியாது. இதில் நீதமோ அநீதமோ எதுவாக இருந்தாலும், அதற்கு முழுக்காரணம் குற்றம் சுமத்தியவர்கள் மீதும், வழக்கை சரியாக விசாரிக்காத நீதிபதி,வழக்கறிஞர்களுமே காரணம் ஆகும். இதற்கு சட்டத்தை குறைகூற முடியாது,கூடாது. ஒவ்வொரு நாட்டிலும் வசிதயாக இருக்கும் மக்கள் சட்டத்தின் பிடயிலிருந்து தப்புவது இயல்பான ஒரு விஷயம். இவ்வுலகில் நேர்மையான நீதிபதிகள் வெகுசெற்பமே. இதற்கு நம்நாடும் ஒரு மிகப்பெரிய உதாரணம். தண்டணை அதிகமானால் தவறுகள் குறையும் என்பது உண்மை. ஆனால் இவ்வுலகில் வாய்மையே வெல்லும் என்பது போலி்.

    சிந்திப்பவர்களுக்கு எனது எழுத்து புரியும்.

  72. அடிமைபெண்களை அஸ்ல் செய்து விற்றதுபற்றி பழையபடியே இபுராகிம் புழுக ஆரம்பித்துவிட்டார். போர்காலங்களில் மட்டும் என்றும் அடிமைகளிடம் அனுமதி வாங்கிக் கொண்டு புணரந்தார்கள் என்றும் புழுகுகிறார் ழ இது தொடரைபாக பிற கட்டுரைகளில் அடுத்தடுத்து ஆதாரங்களுடன் கேள்விகளை வைத்தபோது ஒடிப்போனவர் மீண்டும் ஆரம்பத்திற்கு வந்திருக்கிறார். இதற்குமேல் அவருக்கு பதில் எழுதுவது வெட்டிவைளை.

    • நந்தன்////இது தொடரைபாக பிற கட்டுரைகளில் அடுத்தடுத்து ஆதாரங்களுடன் கேள்விகளை வைத்தபோது ஒடிப்போனவர் மீண்டும் ஆரம்பத்திற்கு வந்திருக்கிறார். இதற்குமேல் அவருக்கு பதில் எழுதுவது வெட்டிவைளை.////

      நந்தன் பொய்யுரைப்பது யார்? ஓடிய ஆர்யா ஆனந்த் செத்தபாம்பாக வாய்திறக்காமல் மவ்நியாகி விட்டபிறகு நீர் இப்போது அப்பட்டமாக உளறி உள்ளீர்கள் .அடுத்தடுத்து ஆதரங்களுடன் என்ன கேள்விகளை வைத்தார் ? இந்த வாதத்துக்கு பதில் சொல்லாமல் வேறொன்றுக்கு ஓடினார் .அதிலிருந்து துண்டைகானோம் துணியை காணோம் என்று ஓடிவிட்டார் .நீர் நல்லவராக இருந்தால் அடுத்தடுத்து என்ன ஆதாரங்களை வைத்தார் சொல்லுங்கள் .பகடு தளம் உங்களுக்கு தெரியுமல்லவா?அவர் தந்த ஆதாரத்தின் தொடுப்பை தாருங்கள்

  73. புகாரி 6779: சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
    இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்திலும், அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியிலும், உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் தொடக்கத்திலும் எங்களிடம் மது அருந்தியவர் கொண்டுவரப்பட்டால் அவரை நாங்கள் கையாலும் காலணியாலும் மேலங்கியாலும் அடிப்போம்.
    உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் (குடிகாரருக்கு) நாற்பது சாட்டையடி வழங்கிடுமாறு அன்னார் உத்தரவிட்டார்கள். (மது அருந்தும் விஷயத்தில்) மக்கள் அத்துமீறி நடந்துகொண்டு கட்டுப்பட மறுத்தபோது (குடிகாரருக்கு) அன்னார் எண்பது சாட்டையடி வழங்கினார்கள்.

    கடுமையாக தண்டித்தால் குற்றம் குறையும் என்பதற்கு ஆதாரம் அவர்களிடம் கேட்கப்பட்டுள்ளது. ஆனால் பதிலில்லை. குற்றம் குறையாது என்பதற்கு அவர்களின் உத்தமர்கள் ஆட்சிக்காலத்திலேயே குறையவில்லை என்பதை மேலுள்ள ஹதீத் ஆதாரமாக உள்ளது. 40 கசையடிகள் 80 ஆக மாறியதைத் தவிர பலன் ஒன்றுமில்லை. இந்த லட்சனத்தில் மதுவை அவர்களது ஆட்சிக்காலத்தில் ஒழித்துவிட்டதாக புழுகுகள்வேறு.

    • மதுவை ஒழித்துவிட்டார்கள் என்றால் அனைத்து மக்களும் மதுஅருந்தி வந்த காலத்தில் 95 சதவீத மக்கள் மதுவை நிறுத்திவிட்டால் மதுவை ஒழித்ததாகவே அர்த்தம் அதையும் மீறி கள்ள சாராயம் குடிப்பவர்களை தண்டித்ததாக கூறுகிறது .மின்சாரம் இல்லாத திலிருந்து 4 மணிநேரம் மின்தடை இருந்தாலும் இருட்டிலிருந்து மக்களை காப்பாற்றி இஒப்பொது நாடு ஒளிர்கிறது என்றே கூறுவார்கள்

      • This point is correct, when there were 90% drunkard and Nabi able to make 95% non drunkard is really a good acheivement. this we have appreciate it. But this doesnt mean that we have accept all others. Even the method which he followed when even one was barbaric nature. Now it is different. so we have change it which is opt for the current generation.

  74. குண்டுவைத்து அப்பாவிகளை பழி எடுக்கும் ஜிஹாதிகளுக்கு சரியத் சட்டப்படி என்ன தண்டனை?

    • கோடிகணக்கான அப்பாவி இராக் ஆப்கான் ,ஜப்பான் மக்களை கொன்றவர்களுக்கு என்ன தண்டனையோ ,
      அதைவிட குறைவாகவே இருக்கவேண்டும் என்பது எனது நம்பிக்கை

        • Maakkaanஇங்கு குண்டு வைப்பவர்கள் இந்திய முஜாஹிதீன் என்ற மோடியின் கூலிப்படை மற்றும் பெண் சாமியாரின் ஆட்கள்

  75. ##!உங்களுடைய பொறாமைகளும் ,அவதூருகளும் மேலும் மேலும் இஸ்லாத்தை மாபெரும் சக்தியாக மாற்றி வருகிரதே தவிர,அசுர வளர்ச்சி அடைந்து வருகிறதே தவிர ஒரு குறையும் இந்த 1400 வருட காலங்களிலும் இல்லை!##
    தாயின் மணிக்கொடி.
    அசுர வளர்ச்சி விரலை ஆட்டும் கூட்டமாக வளருதா? இல்லை ஆட்டாத கூட்டமாக வளருதான்னு கொஞ்சம் சொன்னா தேவலை.

  76. சில நாட்களுக்கு மட்டும் திருமணம் செய்துவிட்டு கழற்றிவிடும் இசுலாமிய முத்ஆ திருமணம்பற்றி நிறைய விபரங்கள் கீழுள்ள சுட்டியில் உள்ளது.

    http://iraiyillaislam.blogspot.in/search?updated-max=2013-01-03T18:26:00%2B05:30&max-results=5&start=3&by-date=false

  77. வினவுவின் இந்த கட்டுரையைப் பார்த்ததும் எனக்கு ஒரே வியப்பு!!! வினவு கூட சில சமயங்களில் இஸ்லாமின் கொடுமையை எழுதுகிறது. இஸ்லாமின் பயங்கர வாதத்தால் உலகமக்கள் எல்லாம் பயந்து கொண்டு இருக்கிறார்கள். இஸ்லாமிய நாடுகளில் இது போன்ற கொடுமையான தண்டனைகள் தினசரி ஏராளமாக நடந்து வருகிறது. நமக்கு தெரியவில்லை அல்லது மறைக்கப்படுகிறது ___________! பயங்கர வாதிகளால் கொல்லப்படும் அப்பாவி மக்களையும் சற்று கவனியுங்கள்! இங்கு வசைபாடியுள்ள முஸ்லீம்கள் சுய அறிவு இல்லாதவர்கள்._____________! _____________உலகில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை யாராலும் இதுவரை நிருபிக்கப்படவில்லை!! இந்த நிலையில் அல்லா இருக்கிறார் என்று கூறி உலகத்தை பயமுறுத்துகிறார்கள்!!!!

    வினவுவின் இந்த கட்டுரை நன்றாக உள்ளது!! இருப்பினும் இந்த கொடுமையான செயலுக்கு மென்மையான அணுகுமுறையைத்தான் கொண்டுள்ளது!!! இஸ்லாமை விமர்ச்சனம் செய்ய தயங்குகிறது!!!! அதுதான் ஏன் என்று தெரியவில்லை!!!!

    • RSS போலவா…. இந்து தீவரவாதிகளால் சாதாரண முஸ்லிம் மக்களும் பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள். உஸ்ஸாமா = நரேந்திர மோடி, அத்வானி, முரளி ஜோசி, இன்னும் பலர்.

  78. இந்த கட்டுரைக்கும் அதன் பின் பதியவைக்கும் கருத்துக்களையும் பார்க்கும்போது இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதே புரியவில்லை. உங்களின் பிரச்னை என்ன ?
    1) ஒரு அடி அளவு உள்ள குழந்தையை கொன்றதுக்காக
    ஆறடி அளவு பெண்ணை கொன்றிருக்க கூடாது என்கிறீர்களா ?
    2)மரண தண்டனையே கூடாது என்கிறீர்களா ?
    3) தலையை வெட்டி கொன்றது தான் தவறு என்கிறீர்களா ?
    4) அந்த பெண்ணிற்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வில்லை என்று சொல்கிறீர்களா ?

    1) சைஸ் தான் பிரச்னை என்றால் கண்டிப்பாக நீங்கள் முட்டாள்கள் தான்.
    2) மரண தண்டனையே கூடாது என்றால் அமரிக்கா சிங்கபூர். சீனா, இந்தியா உள்ளிட்ட மரண தண்டனை சட்டங்கள் உள்ள ஏனைய நாடுகளையும் இதே போல் மூர்கத்தனமாக கண்டித்தது உண்டா ?
    3) தலையை வெட்டி கொன்றது தான் தவறு என்கிறீர்கள் என்றால் இதை விட கொடியது தூக்கில் தொங்கவிடுவது, துப்பாக்கியால் சுடுவது, மின்சார நாற்காலியில் நிறைவேற்றுவது போன்றது. தலையை வெட்டும் தண்டனை என்பது ஒரு செகண்டில் குற்றவாளி இறந்துவிடுவான். இரத்த ஓட்டம் இல்லாத மூளைக்கு வலியே தெரியாது.மேலும் சவுதியில் குற்றவாளிக்கு சுய சிந்தனையை இழக்க செய்துத்தான் தண்டனை நிறைவேற்றபடுகிறது. மற்ற முறைகள் மிக அனுபவித்து உணர்ந்துதான் சிறிது நேரம் கழித்துத்தான் இறக்க வேண்டும். இது விஞ்ஞான உண்மை.
    4)அந்த பெண்ணிற்கு நியாயமான தீர்ப்பு கிடைக்க வில்லை என்று சொல்கிறீர்கள் என்றால் உங்களைவிட அக்கறையுள்ள அந்த பெண்ணின் குடும்பத்தார்கள், உறவினர்கள், சுற்றத்தார்கள், அந்த பெண்ணின் நாட்டை சேர்ந்தவர்கள் இலங்கை அரசு என அந்த பெண்ணை சார்ந்தவர்கள் என அனைவரும் 4வருட காலம் வழக்கை கூர்ந்து கவனித்திருக்கின்றன. காழ்புனற்சியுடன் தண்டனை தந்திருக்குமாயின் எதற்கு 5 வருட விசாரணை ? அங்கேயும் மீடியாக்கள் இருக்கிறது. அங்குள்ள மக்களும் வழக்கை கவனித்து வந்திருப்பார்கள். (உங்கள் (வினவு உட்பட) பார்வையில் அங்குள்ள அத்தனை மக்களுமே கொடூரமானவர்கள்.ரத்த காட்டேரிகள்.அங்கு நியாயவாதிகளே கிடையாது.அது உங்கள் ரத்தத்திலே ஏற்றப்பட்டுவிட்டது. இந்த விளைவு எல்லாம் மீடியாக்களும் சேர்ந்து செய்த கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பலன் இது) அப்படி ஆதாரம் இல்லாமல் எல்லாம் தண்டனை கொடுத்துவிட முடியாது. மேலும் உங்களைவிட அக்கறையுள்ள அந்த பெண்ணை சார்ந்தவர்கள் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று கூறவே இல்லை. மனிதாபிமானம் கொண்டு கருணையோடு விடுதலை செய்யுங்கள் என்று (ராஜபக்சே உட்பட)தான் கோரியிருக்கிறார்கள். வினவும் அப்படித்தான் பதிவிட்டிருக்கிறது. உண்மை இப்படி இருக்க இங்குள்ள அறிவு ஜீவிகளோ இதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல் குதிக்கிறார்கள். மனிதாபிமானம் நிறைந்தவர்களாக வேஷம் கட்டுகிறார்கள். பல உண்மைகளை முழுங்கிவிட்டு அந்த குற்றவாளி பெண்ணை நிரபராதி என்றும், சிறுமி என்றும் (30 வயது பெண்ணை ) அப்பாவி என்றும், ஏழை என்றும், வக்காலத்து வாங்குகிறார்கள். எல்லாம் முஸ்லீம்களை பற்றியும், ஷரியத்தை பற்றியும் மீடியாக்களின் சித்தரிப்பினால் இவர்கள் மனதில் ஏற்றப்பட்டிருக்கும் விஷத்தின் வெளிபாடு. அதனால் மனமுரண்டாகவே நியாயங்களை ஒதுக்குகிறார்கள். சொத்தை காரணங்களை சொல்லி ஷரியத்தை தாக்குகிறார்கள். சிந்திப்போருக்கு விளங்கும்.

    • “மேலும் உங்களைவிட அக்கறையுள்ள அந்த பெண்ணை சார்ந்தவர்கள் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று கூறவே இல்லை” என்பது மிகப்பெரிய பொய். அப்பெண்ணின் தாய் ரிபானா நபீக் கொடுத்த பேட்டிகளைப் பார்த்திருக்கிறாயா?
      உனது இந்தக்கூற்றே தெளிவுபடுத்துகிறது அநீதிக்கும் உனக்கும் என்ன உறவென்பதை.

      • ஆட்டோ சங்கரை தூக்கில் போட்டபோது அவனுடைய தாயும் கதறி இருப்பாள். என் மகனை அநியாயமாக கொன்னுட்டாங்களே ன்னு தான். அந்த பெண்ணை சார்ந்தவர்கள் என்று சொன்னதற்கு உன் பதிலை பார்க்கும்பொழுது…. எதையுமே சிந்தாக்காத உங்களிடம் விவாதம் செய்வதே வேஸ்ட்.

        • இப்படி பிளேட்டை மாற்றுவாயென்று எனக்கு நன்றாகத் தெரியும்.
          ஆனாலும் முன்னுக்குப் பின் முரணாகப் பேசும் பொய்யன் ஒரு மதத்தைப் பற்றிப் பேசி அந்த மதத்தின் மீதிருக்கும் சிறிய நல்லபிப்பிராயத்தையும் கெடுக்காதே.

  79. கொஞ்சம் மனசாட்சியுடன் எழுதும் வினவு கூட இந்த விஷயத்தில் மூன்றாம் தரமாக ஆர் எஸ் எஸ் க்கு நிகராக வரிந்துக்கட்டி இறங்கி இருப்பதற்கு காரணம் இதுவென்று நினைக்கிறேன்… வினவுக்கு பிஜே மேல் எப்பவுமே வஞ்சம் உண்டு.பிஜே வும், அவரை சார்ந்தவர்களும் பல வருடங்களாக வினவை நேரடி விவாதத்திகு அழைப்பதும், அதை எதையாவது சொல்லி வழிந்துக்கொண்டே தட்டிக்கழிப்பதும் வாடிக்கையான ஒன்று. அந்த டாபிக் வந்தாலே வினவின் கருத்து நெளிவது போலவே இருக்கும். ஹி ஹீ ஹீ … இதை நான் பலமுறை இந்த தளத்தில் கண்டிருக்கிறேன். இந்த தருணத்தில் இப்படி ஒரு பொன்னான வாய்ப்பு வினவுக்கு கிடைக்க… விடுவார்களா பிஜே வை ? சும்மா படித்துறை பாண்டி போல அலப்பரை பண்ணிவிட்டார்கள்.

  80. வினவே….நீ கம்யுனிஸ்ட் பெயரில் ஒளிந்திருக்கும் காவி பயங்கரவாதி என்பதை உனது இந்த பதிவே நிரூபிக்கிறது.இஸ்லாம் மீது அவ்வளவு வெறுப்பு உனக்கு.ஜனநாயகம் என்ற பெயரில் கட்டுப்பாடு அற்ற வாழ்க்கையை கலாசார சீர்கேட்டை விதைக்கும் உன்னை போன்றவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்கும் இஸ்லாம் எட்டிக்காய் தான்.மனுஷ்ய புத்திரனை பீ.ஜே எதிர்கொண்ட முறை இஸ்லாம் கூறும் வழிமுறை அல்ல என்பதை முதலில் தெரிந்து கொள்.பீ.ஜே மனுஷ்ய புத்திரனை விமர்சித்தது வரம்பு மீறல் தான்.அதே சமயம் மனுஷ்ய புத்திரன் ஒன்றும் நடுநிளையானவரோ,நியாய மாணவரோ,அறிவு ஜீவியோ அல்ல.அவர் அறிவுக்கு சம்மந்தமில்லாதவர்.இஸ்லாத்தை பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது.இஸ்லாத்தை விமர்சிப்பவர்கள்,கர்ப்பப் பை சுதந்திரம் வேண்டும் எவன் வேண்டுமானாலும் வந்து ஏன் யோனியில் தன விந்தை செலுத்தலாம் என்று கருத்துரிமை பேசும் தஸ்லிமா நஸ்ரின்களை நீ தூக்கிப் பிடிப்பதில் நீ யார் என்றும் தெரிகிறது.இஸ்லாத்தை விமர்சிக்க வேண்டுமானால் குரானில் இருந்தும் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளிலிருந்தும் எடுத்து காட்டி விமர்சனம் பண்ணு.அதை விமர்சனமாக ஏற்று உனக்கு விளக்கம் தரப்படும்.அதை விடு விட்டு முஸ்லிம்களின் நடவடிக்கைகள் இஸ்லாம் ஆகாது என்பதை புரிந்து கொள்.
    இஸ்லாத்தின் சட்டங்கள் பழமையானது என்று மனுஷ்ய புத்திரன் கூறுகிறார் என்றால் அவர் விவாதம் செய்து அவரது கருத்தை நிரூபிக்க முன் வரட்டும்.அல்லது உனது இத்துப்போன கம்யூனிச சித்தாந்தம் சரியாய் இஸ்லாமிய சட்டம் சரியா என்பதை பொது அரங்கில் விவாதிக்க நீ முன் வர வேண்டும்.இது தான் ஆறு அறிவு படைத்தவனுக்கு அழகு.அதை விட்டுவிட்டு எங்கோ மூலையில் இருந்து கொண்டு சந்து முனை சிந்தாக நீ குரல் எழுப்புவது நீ கடைதெடுத்த கோழை என்பதற்கு சான்று.பீ.ஜே வை விமர்சனம் பண்ணும் நீ,அவர் அழைக்கும் விவாத அழைப்பை ஏற்க ஏன் மறுக்கிறாய்?உன் கம்யுனிச சித்தாந்தத்தின் கழிவு நீர் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடும் என்ற பயம் தானே?இந்த பதிவை படிக்கும் வாசகர்கள் பீ ஜே வின் விவாத அழைப்பை ஏற்றுக்கொள்ள மனுஷ்ய புத்திரனுக்கும்,வினாவுக்கும் நெருக்கடி கொடுங்கள்.ஒன்று விவாத அழைப்பை ஏற்று வினவு பகிரங்க விவாதத்திற்கு வரட்டும் அல்லது இனி வினவுவில் இஸ்லாம் குறித்து விமர்சிக்காமல் இருக்கட்டும்.இதில் எந்த ஒன்றையும் பின்பற்றாமல் தன போக்கிலேயே வினவு தொடருமானால்….வாசகர்கள் புரிந்து கொள்ளுங்கள்….வினவுவில் இருக்கும் ஆண்களுக்கு இரண்டு கால்களுக்கு இடையில் இருப்பது கம்யுனிச யோனி என்று.கம்யுனிச யோனி என்றால் புரிகிறதா?

    • “ஒழுக்கத்தை போதிக்கும் இஸ்லாம் எட்டிக்காய் தான்”

      ஹி!ஹி! ஹி!ஹி!………. ஒழுக்கம் இஸ்லாமியர்களிடம் இருக்கிறதாம்!!!அவரது நபி ஆறு மனைவிகளை மணந்து கொண்டு “ஒழுக்கமாக” வாழ்ந்தாராம்!!! என்ன கொடுமை பாருங்கள்! ஆறுவயது ஆயிசாவை மணந்து கொண்டாராம்!!!

    • பெரோஸ் கான், பீ.ஜே போன்றோர்தான் இஸ்லாமின் கோடாரிக்காம்புகள். உருப்பட்டுவிடும் போங்கள்.

    • எப்பா உன் காமெடிக்கு ஒரு அளவே இல்லையா… இல்ல , முஸ்லிம்கள் யாருக்கும் பேசவே தெரியாதா. ஆ ஊன்னா “நீங்கள் நேர்மையாளராக இருந்தால் பீஜே வுடன் விவாதிக்க தயாரா” (அப்படியே குர்ரான் நடையில்) டயலாக் விடுறது. பீஜே என்ன பெரிய புடிங்கியா. இந்த கட்டுரை பொதுவில் தானே இருக்கு. பீ ஜே வை இங்கு வந்து பேச சொல்.
      குரான் – நபி வழி நடை:
      அராபிய அல்லஹ் :நீங்கள் நேர்மையாளர்களாக இருந்தால் இந்த குர்ரானை போல் ஒரூ வசனத்தையாவது கொண்டு வரமுடியுமா –
      பகுத்தறிவாதி : இதோ கொண்டு வந்தாச்சு. படிச்சு பார்.
      அராபிய அல்லஹ் : நம் வசனங்களை மறுப்பவர் நரக நெருப்பில் போடப்படுவார்.
      பகுத்தறிவாதி : உன் சவாலை ஏற்று கொண்டு தான் வசனத்தை கொண்டு வந்தாச்சே. பிறகு ஏன் பதிலளிக்காமல் நரகம் சொர்க்கம் என்று புருடா.
      அராபிய அல்லஹ் : காபிர்களை கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களது கழுத்துக்களை வெட்டுங்கள். அல்லாவின் பாதையில் போரிடுவோருக்கு அல்லாஹ் நற்க்கூலி வழங்குவான்.
      பகுத்தறிவாதி : ???? என்னாடா , ஆல்லாஹ் சுத்த மெண்டலாக இருப்பான் போல.

      • excellent 🙂

        Not all muslims are like this. But who are all started thinking are questioning quran, then these people are threatening them and make them silent or silently killing them.

        May be manythings are right in quran. But at the same time, faulty things are also there. those things needs to be changed as per the current living state.

        • பாலாஜி ////But who are all started thinking are questioning quran, then these people are threatening them and make them silent or silently killing them.///
          உங்களது கருத்து முற்றிலும் தவறு.அனைவரும் விவாதத்துக்கு நாகரிகமான முறையில் அழைக்கப்படுகிறார்கள் .ஆனால் ருஷ்டி முதல் அளிசினா வரை இஸ்லாம் மீது அவதூறுகள் பரப்ப அவர்களுக்கு கொடுக்கப்பட்ட காசுகள் ,வழங்கிய எஜமான் விசுவாசமாக அவர்கள் வரவில்லை .அதனால் கொமெஇனி போன்றவர் வார்த்தைகளை வைத்து முடிவு எடுக்க வேண்டியதில்லை

      • அஸ்வின் மெண்டலாக உளருவதே வாடிக்கை ,காபிர்கள் என்பது இங்கே போர்களத்தில் எதிர அணியில் இருக்கும் முஸ்லிம் அல்லாதவர்களை கூறும் வசனம்.
        இந்தியா பாக்கிஸ்தான் போர்க்களத்தில் இந்திய கமானடர் ,பாக்கிஸ்தானிகளை எங்கு கண்டாலும் சுட்டுத் தள்ளுங்கள் என்றால் ,அமெரிக்காவில் லண்டனில் சிங்கப்பூரில் எங்கு பாக்கிஸ்தானிகளை கண்டாலும் சுட்டுத் தள்ளுங்கள் என்று பொருளா?
        அஸ்வின் உங்களது அர்த்தமற்ற வாதாங்களை குப்பைதொட்டியில் போடுங்கள் .

        • நீங்கதானப்பா சொல்லுறீங்க குர்ரான் எக்காலத்துக்கும் போருந்தும்ன்னு. ஏதோ முகமது நபி அராபிய நாட்ட காப்பாத்த வேறு நாட்டோட போரிட்ட மாதிரி இல்ல சொல்லுறீங்க. குர்ரான் என்பதே மற்ற மதத்தவரின் மீதான கடுமையான விமர்சனம் தான். அதனால் குர்ரானை இஸ்லாமை விமர்சிக்க எல்லோருக்கும் முழு உரிமை உள்ளது.
          பாலாஜி,
          எல்லா முஸ்லிம்களும் அப்படி கிடையாது ஏனென்றால் அவர்கள் இஸ்லாமை முழுமையாக அறியாதவர்கள். இந்த வஹாபிய வாதிகள் தான் இன்றைக்கு மக்களிடம் தீவிர வாதத்தை தூண்டுவது. வஹாபிய வாதிகள் – தாலிபான், தவ்கீத் ஜமாஅத் .

          • ////நீங்கதானப்பா சொல்லுறீங்க குர்ரான் எக்காலத்துக்கும் போருந்தும்ன்னு. ஏதோ முகமது நபி அராபிய நாட்ட காப்பாத்த வேறு நாட்டோட போரிட்ட மாதிரி இல்ல சொல்லுறீங்க. ////
            சவூதி அரேபியாவுக்கும் இஸ்ரேலுக்கும் போர் வந்தால் இக்காலத்துக்கும் அது பொருந்தும் .

            • வினவு ,,நியாயம் இல்லை ,தவுஹித் ஜமாஅத் அமைதியான்ஆர்பாட்டங்களைத்தான் இதுவரை நடத்தியுள்ளது உங்களுக்கும் தவ்ஹித் ஜமாத்துக்கும் லடாய் இருப்பதற்காக உண்மை மறைப்பது நன்றன்று. உங்களைப் பற்றி நல்ல விசயங்கள் இருந்தால் அதை நான் எழுதி அவர்கள் வெளியட மறுத்தால் உங்களுக்காக நியாயம் கேட்கவே செய்வேன்

          • அஸ்வின் ///வஹாபிய வாதிகள் தான் இன்றைக்கு மக்களிடம் தீவிர வாதத்தை தூண்டுவது. வஹாபிய வாதிகள் – தாலிபான், தவ்கீத் ஜமாஅத் .///
            உங்களுக்கு வஹ்ஹாபி என்றால் என்னவென்று தெரியாது.போகத்துக் தவ்ஹித் ஜமாஅத் கடந்த 10 ஆண்டுகளாக பல பிரச்னைகளுக்கு போராட்டங்கள் நடத்தியுள்ளது .அதைப் ஓன்று அமைதியான போராட்டம் இதுவரை எந்த அரசியல்கட்சிகளோ ,அமைப்புகளோ நடத்தி உள்ளதா என்று உளவுத்துறையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்

  81. ஐயா அப்துல் ரஷீத் எங்கே பார்க்கலாம்… சவுதிக்கு எதிராக ஒரு கண்டனம் விடுங்கள் பார்க்கலாம் அல்லது ஒரு ஊர்வலம் நடத்துங்கள் பார்க்கலாம் அப்பழுது நம்புறம் நீங்கள் முஸ்லீங்கள் என்று

  82. சாதிக் துபாய் பாய்,
    பாய்கள் புரட்சிகர அமைப்புகளுடன் அதாவது வினவு போன்றவர்களுடன் சேர்ந்தபிறகுதான் சங்பரிவார் கும்பலை அடிச்சி விரட்ட கிளம்பி இருக்கிறார்களாக்கும், வெரிகுட் வெரிகுட், வினவு புரிஞ்சிகிட்டா சரிதான்.

    • நந்தன் நீங்கள் சொல்வது புரியவில்லை. பாய்கள் வினவு போன்றவர்களுடன் சேரக்கூடாதா?

  83. Dear Vinavu
    Swamiji’s will travel in Toyota and check in at apollo and fly by boeing.
    Mullah’s will use all that given by science and split against it at appropriate times.
    Evangelist will use all the technology created by non believer scientists and saY that satans are the non believers .

    All funda-mentals are equal. Hindu,Muslim and Christian fundamentals are very smart in absorbing the technology like internet ,medicine,transport,etc etc.
    The point is there is a huge CONFLICT in their stand on science and technology and also implementing the laws of their religion. But moderate muslims,hindus and christians are there and they have this conflict very less .They have to raise their voice against the hard core religious fundamentals ..
    Now there is typewriter,steam engine,VCR,walkman ,concorde flight etc already went to museum.
    next in the line is fax machine,religious laws,etc etc.

    The days of the religious laws are ending…

  84. since when did hindus oppose science and technology?

    since when did they give opinions on abortion/pre marital/post marital sex or anything liberal.

    when did any swami give his opinion about cars/airplanes/hospitals?

  85. மறு மொழியில் வரும் கருத்து பிடித்து இருந்தால் / பிடிக்காமல் இருந்தால் தெரிவிக்க பேஸ் புகின் லைக், டிஸ் லைக் போல ஒரு ஏற்பாட்டை தர வேண்டுகிறேன்

  86. மனுஷ்யபுத்திரனை முழுமனதோடு ஆதரிக்கிறேன்.

    ரத்த வெறி பிடித்த –
    கயமை குணம் கொண்ட –
    வக்கிர மனம் படைத்த –
    கொடூர எண்ணங்கள் கொண்ட –
    விஷ சிந்தை உடைய –
    கேவலத்துக்கும் கேவலமான –
    அழுகி முட்டை நாற்றமெடுக்கும் மூளை கொண்ட –
    பிடிக்காத கருத்துடையோரை தசை காட்டி மிரட்டும் இழி பிறவியான –

    இந்த பீ.ஜெய்னுலாபுதீன் போன்ற கயவர்களை இனம் காட்டி தனிமைப்படுத்துவதே உண்மையான இஸ்லாமியர்கள் செய்யவேண்டிய முக்கியமான காரியம்.

    இவ்விஷயத்தில் வினவு தளத்தை பாராட்டுகிறேன்.

  87. பெரோஸ் கான்,
    ஹா..ஹா.. இசுலாம் குறித்து விவாதிப்பது என்பது ஒரு பிணத்தின் ஆவியுடன் உரையாடுவது போன்று. அவ்வளவு அருவருப்பானது. எடுத்த மாத்திரத்திலே அதன் மேம்போக்கான கருணையையும் உள்ளார்ந்து படிந்திருக்கும் மனித குல வெறுப்பையும் சொல்ல முடியும். அவிசுவாசிகள் குறித்து அவ்வளவு சாபம் அதில் உள்ளது. கம்யூனிஸ்டாக இல்லாத ஒருவர் கூட ஜனநாயக எண்ணத்தோடு நல்ல மனிதராக இருக்க முடியும். ஆனால் இசுலாம் அவிசுவாசிகளுக்கு இறைவன் எல்லையற்ற துன்பம் கொடுப்பான் என்று பேசுகிறது. இசுலாத்தை ஏற்காதவர்கள் நல்லவர்களாக இருக்க முடியாதா? கம்யூனிசத்தை ஏற்காதவர்களுக்கு கம்யூனிஸ்ட்கள் எந்த தண்டனையையும் வைத்திருக்கவில்லை.

    இசுலாத்தை முசிலிம்கள் வாழ்க்கையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டாம், என்கிறீர்கள். பி.ஜெ ஒரு காடுவெட்டி குரு. பி.ஜெ இசுலாத்தை ஒழுகாதவர் என்கிறீர்கள். பிறகு அவருடன் எப்படி உரையாட முடியும். இசுலாத்தை தூய வடிவில் ஒழுகும் ஒரு இசுலாமியரை அல்லவா நீங்கள் கைகாட்ட வேண்டும். உங்கள் லாஜிக் எங்கோ இடிக்கிறதே.

    • சுகதேவ் ///இசுலாத்தை முசிலிம்கள் வாழ்க்கையில் இருந்து புரிந்து கொள்ள வேண்டாம், என்கிறீர்கள். பி.ஜெ ஒரு காடுவெட்டி குரு. பி.ஜெ இசுலாத்தை ஒழுகாதவர் என்கிறீர்கள். ////
      அனைத்து மனிதர்களும் விமர்சனத்திற்கு உரியவர்களே .பீஜே யும் மனிதரே அவருக்கு ஒரு சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம் .
      ////இசுலாம் குறித்து விவாதிப்பது என்பது ஒரு பிணத்தின் ஆவியுடன் உரையாடுவது போன்று. அவ்வளவு அருவருப்பானது. எடுத்த மாத்திரத்திலே அதன் மேம்போக்கான கருணையையும் உள்ளார்ந்து படிந்திருக்கும் மனித குல வெறுப்பையும் சொல்ல முடியும். அவிசுவாசிகள் குறித்து அவ்வளவு சாபம் அதில் உள்ளது///

      ஆதலால் உங்களுக்கு பீஜெவுடன் விவாதிப்பது எளிது .விவாதிக்க அவர்களை அழைத்து வாருங்கள் வாருங்கள் .

      • “பீஜே யும் மனிதரே அவருக்கு ஒரு சில தவறுகள் ஏற்பட்டிருக்கலாம்.”

        மனுஷ்யபுத்திரனை – அவர் இந்த மரண தண்டனையை விமர்சனம் செய்தார் என்ற ஒரே காரணத்துக்காக அவரை மிருக புத்திரன் என்று ஆரம்பித்து குழாயடி சண்டையில் ஈடுபடும் பிறவிகளும் கூசும் நரகல் மொழியில் பொதுவில் வந்து வசை பாடும் ஒரு இழிபிறவியை மனிதன் என்று சொல்லிக்கொள்ள உமக்கு ஏதும் தேவைகள் இருக்கலாம். ஆனால் அந்த பிறவியோடு மற்றவரை உரையாட வேறு அழைக்கிறீர்கள் பாருங்கள் ….

  88. Dear vinavu,

    Please write an article criticizing the character and nature of muhammad and the religion he found. Please don’t be partial and criticize muslims alone. Also criticize Islam, the ideology behind insanity of muslims

    • மீண்டும் மீண்டும் 9 வயது ஆயிசா மற்றும் அடிமை இதைத்த தவிர முஹம்மது நபிசல்] அவர்கள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

  89. நல்ல கட்டுரை. இது போன்ற விசியங்களில் மத அடிப்படைவாதிகளின் சகிப்புதன்மையற்ற செயல்களை தொடர்ந்து வினவு எதிர்த்து போராடுவது பாராட்டிற்குரியது.

    இஸ்லாமிய நண்பர்கள் உணர்சிவசப்படாமல் அணுக வேண்டும். ஷாரியாத் சட்டம் இந்தியாவில் கிர்மினல் விசியங்களில் இல்லை. ஆனால் சிவில் விசியங்களில் இன்றும் இஸ்லாமிய மத சட்டங்கள் தான் இஸ்லாமிய மக்களுக்கு உள்ளது. திருமணம், விவாகரத்து, சொத்துரிமை போன்ற விசியங்களில். கிர்மினல் சட்டங்களில் பொது சட்டத்தை ஏற்று கொள்ளும் இஸ்லாமியர்கள், சிவில் விசியங்களில் மட்டும் பொது சிவில் சட்டங்களை ஏற்க மறுப்பது பெரும் முரண்பாடு, பிற்போக்குதனம் மற்றும் ஆணாதிக்கம்.

    • கே ஆர் அதியமான் ,பொது சிவில் சட்டம் முஸ்லிம்களை பாதிக்கும் .ஆனால் முஸ்லிம் சிவில் சட்டம் பாதிக்க வாய்ப்பில்லை .ஆதலால் முஸ்லிம் சிவில் சட்டத்தையே பொது சிவில் சட்டம் ஆக்கிவிட்டால் உங்களது கேள்விகளுக்கு தீர்வு கிடைத்து விடும் .
      அடுத்து முஸ்லிம்களுக்கு முஸ்லிம் கிரிமினல் சட்டத்தை ஏற்க தயார். அந்த சட்டங்களை வைத்து விசாரணை ,தீர்ப்புகள் வழங்க அந்த சட்டங்களை நன்குபடித்து அறிந்த முஸ்லிம் அறிஞர்களை கொண்ட தனி கோர்ட் அமைக்கப்பட்டால் நீங்கள் சொல்லுவது போல முஸ்லிம் கிரிமினல் சட்டத்தை ஏற்க தயாராக உள்ளோம்

      • ஒரு தேசத்தில் எல்லாருக்கும் ஒரு சட்டம் எனக்கு மட்டும் தனி சட்டம் என்ட்று கேட்பது என்ன தனம் ? ஒரு இஸ்லாமிய தேசத்தில் மற்ற மதத்தினர் இப்படி கேட்க இயலுமா ?

        • பொன் .முத்துகுமார் .அப்படி எனக்கு மட்டும் தனி சட்டம் கேட்கவில்லை ..முஸ்லிம்களுக்கு மட்டும் தனி சட்டம் கேட்கவில்லை ஏற்கனவே இருக்கிறது .எல்லோருக்கும் பொதுவாக ஒரே சட்டம் இருக்கவேண்டும் என்றால் முஸ்லிம் சட்டத்தையே பொது சட்டம் ஆக்கிவிட்டால் அப்புறம் தனி தனி சட்டம் தேவை இல்லை என்பதே எனது கருத்து

          • பொன்.முத்துக்குமார், இனிமே உங்க பெயர் முஹமத்துல்லா. என் பெயர் ரிஷி இல்ல.. ரிஷ்வான். நாம எல்லாரும் முஸ்லிம் சட்டத்தையே ஃபாலோ பண்ணுவோம். டீல் ஓகேவா..??!!
            ஒரு வார்த்தை சொல்லுங்க.. ஓஹோன்னு வாழலாம். டீலா.. நோ டீலா??

          • இப்ராகிம் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது.அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஒரு மத சட்டதை அனைவரும் ஏற்கசொல்வதை ஏற்கமுடியாது.நீஙகள் கூறும் சட்டம்(“முஸ்லிம் சட்டத்தை”)இதிலே மதமும் இனைந்து உள்ள்து.
            மததிற்காக சட்டம் இயற்றாமல் மனிதனுக்காக சட்டம் வேண்டும். இந்தியாவில் இருப்பவர்களுக்கு மதம் தேவையில்லை மனிதம் தான் தேவை. முஸ்லிம் சட்டம் வேண்டும் என்றால் (“ரிகானாவிற்கு அளித்த ஒருதலை பட்ச தண்டனைநியாயமா”)இதனை நீஙகள் ஏற்றுகொண்டாள்.
            உங்களை மனிதவிரோதி என்று தான் கூற வேண்டும்.

    • நல்ல விசயம். நீங்கள் கூறியிருப்பது உண்மை தான். ஆனால் இந்துமதவெறி பாசிஸ்டுகளை எதிர்க்கும் இதுபோன்ற கட்டுரைகளை நீங்கள் ஓடோடி வந்து பாராட்டுவதில்லை. அத்துடன் பாசிச மோடியையும் ஆதரிக்கிறீர்கள். உங்கள் கண்ணோட்டம் மதச்சார்பற்றதல்ல எனவே இந்த பதிவை ஆர்.எஸ்.எஸ் கண்ணோட்டத்திலிருந்து நீங்கள் பாராட்ட வேண்டாம்.

    • உங்களுக்கு வேண்டாம் என்றால் சிவில் சட்டத்தை பொறுத்த வரையில் பிரச்னை இல்லை .ஆனால் கிரிமினல் சட்டங்களில் உங்களை விட முடியாது

  90. “எல்லோருக்கும் பொதுவாக ஒரே சட்டம் இருக்கவேண்டும் என்றால் முஸ்லிம் சட்டத்தையே பொது சட்டம் ஆக்கிவிட்டால் அப்புறம் தனி தனி சட்டம் தேவை இல்லை என்பதே எனது கருத்து”

    எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் சட்டத்தையே முஸ்லிம்களும் ஏற்பதில் என்ன சிரமம் ?

    • ஏன்னெனில் அவர்களின் நினைப்பு தாங்கள் மட்டுமே இறைவன் காட்டிய வழியில் நடப்பதாகவும் பிறர் தற்குறித்தனமாக இருப்பதாகவும் எண்ணுகிறார்கள்.இஸ்லாமை யாரும் விமர்சிக்க கூடாது அப்படி விமர்சித்தால் அவர்களை ஆபாசமாக வசை பாடுவேன் என சொல்வது நகை முரண்.இஸ்லாம் சொல்வதின் படி வாழ்வதுதான் இஸ்லாமை வாழவைக்குமே ஒழிய இஸ்லாமை யாரும் விமர்சிக்காமல பார்த்துகொல்வதர்காக அதே இஸ்லாம் சொல்வதை மீறி ஆபாசமாக பேசுவது வன்முறை செய்வதும் இஸ்லாமின் இருப்பையே கேள்விக்குறி ஆக்கி விடும் என்பதை கூட இவர்கள உணர வில்லை.
      பி ஜே அவர்களுக்கு ஒரு கேள்வி:
      அய்யா நீங்கள் குரானை கரைத்து குடித்திருக்கலாம்..ஆனால் பிறரை ஆபாசமாக வசை பாடிவிட்டு ஐந்து வேலை தொழுதால் இறைவன் உங்கள் மீது அருள் புரிவான் என்று நினைக்கிறீர்கள் பாருங்கள்!அந்த நினைப்புதான் இஸ்லாமுக்கு எதிரி.மேலும் நீங்கள் பேசிய ஆபாச பேச்சுகள் உடல் குறைபாடுகளை நையாண்டி செய்தல் போன்ற செயல்களுக்காக இறைவன் உங்களை சீண்ட கூட மாட்டான் என்பதில் எந்த மதத்துக்காரனுக்கும் ஆட்சேபனை இருக்காது

    • சிவில் சட்டத்தில் சிரமம் இருக்கிறது ஆனால் எல்லோரும் முஸ்லிம் சட்டதை ஏற்பதில் யாருக்கும் சிரமம் இல்லை

      • How you conclude on that? This is what “மனிததுல்லா” pointing out “அவர்களின் நினைப்பு தாங்கள் மட்டுமே இறைவன் காட்டிய வழியில் நடப்பதாகவும் பிறர் தற்குறித்தனமாக இருப்பதாகவும் எண்ணுகிறார்கள்”

        • என்னா —-க்கு முஸ்லிம் சட்டத்தை எல்லோரும் ஏத்துக்கணும்.? இஸ்லாம் என்பதே பிற மத வெறுப்புணர்வின் மீது கட்டப்பட்டது.

          • பாலாஜி மற்றும் அஸ்வின் ,உங்களை ஏத்துக்க வேண்டும் என்று சொல்லவில்லை .எங்களை நீங்கள் பொது சிவில் சட்டத்தை ஏற்க வற்புறுத்துவதால் அங்ஙனம் சொன்னேன் .என்னை பொறுத்தவரை எங்கள் சட்டம் எங்களுக்கு உங்கள் சட்டம் உங்களுக்கு .எங்கள் தேவம் எங்களுக்கு உங்கள் தெய்வம் உங்களுக்கு என்பதே
            எங்களுக்கு தனி சிவில் சட்டம் என்பதால் உங்களுக்கு வேலை வைப்பிலோ இன்ன பிற நலனிலோ பாதிப்பு ள்ளதா?
            அல்லது இந்தியாவின் முன்னேற்றத்திற்கு அது ஒரு தடைக்கல்லாக இருக்கிறதா?

              • ஹரிகுமார் ,அந்த கருத்தை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள் அனைத்து ஹிந்துக்களும் உங்களைப் போன்றவர்கள் அல்லர் .ஹிந்துக்கள் வேறு ஹிந்துத்துவாக்கள் வேறு .ஹிந்த்த்துவாக்கள் உங்களது பாலிசியை பின்பற்றியே வருகிறார்கள் .மற்றபடி ஹிந்துக்களும் முஸ்லிம்களும் எங்கே தரமோ மலிவோ அங்கேயே தங்களது பொருட்களை வாங்குகிறர்கள் தங்கள் குழந்தைகளை கல்விக்கு அனுப்ப்கிரார்கள்

            • அது என்ன நியாயம், ஒரே நாட்டுல தான இருக்கீங்க. அப்போ எல்லோருக்கும் பொது சட்டம் தான் நியாயம். மத வழிபாடு குறித்த சட்டங்களில் மட்டும் விலக்கு அளிக்கப்படலாம். நீங்களே போதும் சாதாரண இந்துவையும் ஆர் எஸ் எஸ் சுக்கு அனுப்பி வச்சிடுவீங்க.

      • எப்படி முச்லிம் அல்லாதவர்களிடம் ஜிசியா வரி வசூலிப்பும் சேர்த்தா

        • நாகராஜ் ,இப்போது அவ்வாறு உள்ளதா? நான் கூறவருவது முஸ்லிம் தனியார் சட்டத்தினால் இந்த தேசத்திற்கு ஏதாவது பாதிப்பு வருமானால் அதை மாற்ற அதைப்பற்றி பரிசீலனை செய்யலாம் .குடும்ப கட்டுப்பாடு இஸ்லாத்திற்கு விரோதமானது இருப்பினும் இந்தியாவின் நலனுக்கு அது அவசியம் என்பதால் இஸ்லாமிய விதிகள் அனுமதித்த வழியில் குடும்ப கட்டுப்பாட்டை செயல்படுத்தி வருகிறோம் .ஹிந்துக்களைப் போலவே முஸ்லிம்களுக்கும் 2 அல்லது 3 குழந்தைகளுக்கு மேல் இப்பொது இல்லை .
          முஸ்லிம் தனியார் சட்டத்தினால் ஹிந்துக்களுக்கு ஏதாவது இழப்பு உண்டா ?
          மற்றபடி ,ஜிஸ்யா வரிக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கும் என்ன தொடர்பு? புரியவில்லை

          • //சிவில் சட்டத்தில் சிரமம் இருக்கிறது ஆனால் எல்லோரும் முஸ்லிம் சட்டதை ஏற்பதில் யாருக்கும் சிரமம் இல்லை// என்பதன் அர்த்தம் என்ன

  91. இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை இன்னும் பெருமை படுத்த இந்திய முஸ்லீம்களுக்கு
    சவூதியின் தண்டனைகளை நடைமுறைப் படுத்த வேண்டும் ஒரு பயலுக்கும் கையும்
    காலும் இருக்காது, தலையும் இருக்காது, அவ்வகையில் அவர்கள் இந்தியாவில் தப்பித்துக்
    கொள்ள இறைவன் இட்ட கட்டளை!

    • அருண்முல்லை
      இஸ்லாமிய சட்டத்தை பயன்படுத்தி முஸ்லிம்கள் அனைவருக்கும் கையும் காலும் இல்லாமல் ஆக்கிவிடுவேன் என்று சொல்லவருகிறார? ஆனால் இவரோ மோடியோ பிரதமர் ஆகிவிட்டால் அது உண்மையே .ஆனால் மோடி இஸ்லாமிய சட்டங்கள் இல்லாமலே காலும் கையுமில்லாமல் என்ன ஆளே இல்லாமல் தீயில் கருக்கிவிடுவாறே

        • Makkaan முஸ்லிம் கிரிமினல் சட்டத்தை ஏற்க ஆசைப்படுகிறோம் .அதன் மூலம் முஸ்லிம்கள் குற்றங்கள் குறைந்தால் அதை இந்தியத்திருநாடு பின்பற்றும் என்ற நம்பிக்கையில் அதை ஏற்கவே விரும்புகிறேன் .
          அந்தகிரிமினல் சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் செயல்படுத்தும் வரை அந்த சட்டத்தை செயல்படுத்த முஸ்லிம் அறிஞர்களை மட்டுமே நீதிபதியாக நியமிக்க வேண்டும் .

  92. சார் , சவூதிக்கு வக்காலத்து வாங்கும் உங்களிடம் கேள்விகள்…….பதில் தருவீர்களா……./
    ரிசான ஒரு இலங்கை தமிழ் தாய் மொழியுடைய பெண்..இப்போது கொலைக்குற்றம் சாட்டப்பட்டால்…
    கொலையை யார் கண்டது ??
    அப்படி ஒரு 04 மாத குழந்தையை கொலை செய்ய காரணம் என்ன ?
    விசாரனயில் மொழி பெயர்ப்புக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை ஏன் குறைந்தது ஒரு இலங்கை தமிழ் பேசும் முஸ்லிம் நபராவது இலங்கை , மற்றும் சவுதி யினால் நியமிக்கப்படவில்லை ?

    றிசான , கடைசியாக தன தாயாரை சந்தித்தபோது , ஏன் உம்மா நான் செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் ‘ என கூறி கதறியது இலங்கை நாடே அறியும்……. ஆனால் , POSTMORTEM படி கொலை என்றார்களா…..அப்படி எனில்,

    POSTMORTEM , நடக்கும்போது , சவுதி அரசாங்கம் சவுதி வைத்தியர்களுடன் சேர்ந்து ஏன் இலங்கை வைத்திய நிபுணர்கள் ஒருவராவது வைத்து POSTMORTEM செய்யவில்லை ?
    இவற்றுக்கு பதில் தந்தாள் தொடர்ந்து கேள்விக்கணை தொடரும்……… முடியுமா /?

      • சவூதி அரசு எதையும் எளிதில் வெளியிடாது என்பது உங்களுக்கு தெரியாதா ?போஸ்ட்மார்ட்டம் பணன்வில்லை என்பதற்கு உங்களிடம் சவூதி அரசு வெளியிட்ட தகவல் இருக்கிறதா?

    • ரிசான ஒரு இலங்கை தமிழ் தாய் மொழியுடைய பெண்..இப்போது கொலைக்குற்றம் சாட்டப்பட்டால்…
      கொலையை யார் கண்டது ??//
      ஒவ்வொரு கொலை குற்றத்துக்கும் கண்டவர்களை வைத்துத்தான் தீர்ப்புகள் வழங்கப்படுகிறதா? அவ்வாறெனில் இனி ஒவ்வொருவரும் கொலை செய்ய நினைத்தால் யாரும் காணாத இடத்தில் கொலை செய்யமாடடர்களா?

      அப்படி ஒரு 04 மாத குழந்தையை கொலை செய்ய காரணம் என்ன ?//
      15 வயது பையன் காரை ஒட்டி சென்றதில் விபத்தாகி எதிரே சென்ற இருவர் இறந்துவிட்டால் காரணத்தை தேடமாட்டார்கள் .அந்த இவர்களையும் அந்த பையன் கொலை செய்ய காரணம் என்ன என்ற ரீதியில் விசாரணை இருக்காது

      விசாரனயில் மொழி பெயர்ப்புக்கு ஆரம்பம் முதல் இறுதி வரை ஏன் குறைந்தது ஒரு இலங்கை தமிழ் பேசும் முஸ்லிம் நபராவது இலங்கை , மற்றும் சவுதி யினால் நியமிக்கப்படவில்லை ?
      இலங்கை மிசன் நியமித்த நபர்தான் மொழிபெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார் .

      றிசான , கடைசியாக தன தாயாரை சந்தித்தபோது , ஏன் உம்மா நான் செய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவிக்க வேண்டும் ‘ என கூறி கதறியது இலங்கை நாடே அறியும்……. ஆனால் , POSTMORTEM படி கொலை என்றார்களா…..அப்படி எனில்,////
      குற்றவாளிகள் பெரும்பாலும் தங்களது தவறுகளை ஏற்றுக் கொள்வதில்லை
      POSTMORTEM , நடக்கும்போது , சவுதி அரசாங்கம் சவுதி வைத்தியர்களுடன் சேர்ந்து ஏன் இலங்கை வைத்திய நிபுணர்கள் ஒருவராவது வைத்து POSTMORTEM செய்யவில்லை ?////
      இந்தியாவில் மும்பை தாக்குதல் நடத்த மூளையாக இருந்த அமெரிக்காவில் இருக்கும் ஹெட்லேயை இந்திய பாதுகாப்புத்துறை விசாரிக்க அமெரிக்க அனுமதிக்க மறுக்கிறது .அதைவிடவா இது முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு ?
      அப்புறம் தவறு சவ்தியிடம் இல்லை அது தனது சட்டப்படி அந்த பெற்றோர்களிடம் கேஞ்சியுள்ளது .ஈவு இரக்கமற்ற 4 மாத குழந்தையின் அரக்கத்தனமே கண்டிக்கத்தக்கது .4 மாத குழந்தைன் வலியைவிட அந்த ஏழை பெண்ணின் பெற்றோருக்கு ஏற்பட்டிருக்கும் வலியை அந்த அயோக்கிய பெற்றோர்கள் உணர தவறிவிட்டார்கள்

      • @@//அப்படி ஒரு 04 மாத குழந்தையை கொலை செய்ய காரணம் என்ன ?//

        15 வயது பையன் காரை ஒட்டி சென்றதில் விபத்தாகி எதிரே சென்ற இருவர் இறந்துவிட்டால் காரணத்தை தேடமாட்டார்கள் .அந்த இவர்களையும் அந்த பையன் கொலை செய்ய காரணம் என்ன என்ற ரீதியில் விசாரணை இருக்காது @@

        ஓ..அல்லாஹ்! பச்சிளங்குழந்தையை கொன்ற கயவாளி என்றுதானே ரிசானாவுக்கு இந்த கடுந்தண்டனை அளிக்கப்பட்டது. இப்ராஹிம் விபத்து என்கிறாரே!! இது விபத்து என்றுதானே இந்தக் கட்டுரையும் கூறுகிறது! அதையே இப்ராஹிமும் வழிமொழிகிறார்! ஆயினும் ரிசானா கழுத்தை நெறித்துக்கொன்ற கொலையாளி என்று பீஜே சொல்வதையும் உறுதிப்படுத்துகிறார். அழுவதா.. சிரிப்பதா…

      • Ebrahim,

        Just for your reference. please read the below news carefully and what action taken for the Arabic citizen on rape (nothing). This is Gulf. I want your feedback on this.

        This is Today news (2013-01-31).

        PROSECUTORS have dropped a rape case against a Bahraini sponsor because his alleged victim waited five months to file a complaint. The Nepali housemaid claimed she was repeatedly harassed by the retired school teacher, 64, and sexually
        assaulted twice.

        However, prosecutors said the rape charge had been dropped because she did not report the attack immediately.The maid stated she had been too scared to inform police, according to court documents.
        “My father was always coming on to the maid,” the sponsor’s 33-year-old son told prosecutors. “He then confessed to me once that he had raped her twice before.” The son said his father was in the maid’s room when his mother walked in and caught him as he was touching her body.

        “My mother entered the maid’s room and found her husband sexually harassing the victim,” he said.“She told the maid that her husband was not a good man and that she should stay away from him because he would hurt her.” The maid then told her sponsor’s wife, 62, that her husband had already raped her twice, according to court documents.

        “My mother became crazy when the maid told her my dad raped her twice,” said the son.“She went into the kitchen grabbed a big spatula and hit the maid on the head until she was bleeding heavily.“My father and my sister then came rushing and grabbed the maid and beat her up too.”All three suspects were released on bail and the trial was adjourned to February 12.

        for full reference please visit the below link:
        http://gulf-daily-news.com/source/XXXV/317/pdf/page07.pdf

  93. ரிகானா நிலைமை இனி எந்த பெண்ணுக்கும் வர அனுமதிக்க முடியாது . இந்த காட்டுமிராண்டி ஷரியத் சட்டம் இன்னும் இருபது மிக வேதனையாக உள்ளது.அல்லாவின் பெயரால்நிறைவேற்றபடும் இந்த தண்டனை அல்லாவ்வே மண்ணிக்கமாட்டார். மதசார்பாக சிந்தனை செய்யாமல் மணிதனாக மாறுகலள்.

  94. ரிசானா குறித்த உங்களின் பதிவைப் பார்த்தேன். சில கருத்துகளில் உங்களுடன் உடன்பட்டாலும் பல கருத்துகளில் உங்களுடன் வேறுபடுகிறேன். குறிப்பாக இஸ்லாமிய ஷரீஆவை மனுதர்மத்திற்கு ஒப்பிட்டது, காலத்திற்கு ஒவ்வாதது என்ற தங்களின் விமர்சனங்கள் சற்று கடுமையானவை. தயவு செய்து இஸ்லாத்தை, அதன் மூல ஆதாரங்களான திருக்குர்ஆன், நபிமொழி, இஸ்லாமியச் சட்டம் ஆகியவற்றை காய்தல் உவத்தல் இன்றி படித்துப் பார்த்துவிட்டு, அல்லது அது குறித்து இஸ்லாமிய அறிஞர்களிடம் உரையாடிவிட்டு நீங்கள் விமர்சித்து இருக்க வேண்டும்.

    குறைந்தபட்சம் டி.எம்.மணி, கொடிக்கால் செல்லப்பா, பேராசிரியர் பெரியார்தாசன் போன்றவர்களிடமாவது இஸ்லாத்தின் அடிப்படைகள் பற்றி உரையாடித் தகவல் பெற்றுக்கொண்டு நீங்கள் இந்த விமர்சனத்தை வெளியிட்டிருந்தால் அதில் இஸ்லாம் பற்றிய சாடல் இருந்திருக்காது. பெரியார் போன்ற சீர்திருத்தவாதிகள் மரியாதையோடு அணுகிய இஸ்லாமியச் சமயத்தின் அடிப்படைகளைத் தாங்கள் இவ்வளவு தூரம் இறங்கி இழிவுபடுத்தியிருப்பது வியப்பைத் தருகிறது.

    ரிசானா விவகாரத்தில் சவூதி அரசு நடந்துகொண்ட விதம் தவறு. ஆனால், ஷரீஅத் தவறு அல்ல. ஷரீஆவின்படி அந்த மரண தண்டனை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். குற்ற முகாந்திரம் இல்லாமல் தவறுதலாகக் கொலை நடந்துவிட்டால் மரண தண்டனை கிடையாது என்று ஷரீஆ தெளிவாகச் சொல்கிறது.

    தாங்கள் கட்டுரையில் குறிப்பிட்டிருந்த பி.ஜே. தொடர்பான விமர்சனங்களில் நியாயம் உள்ளது. மனுஷ்ய புத்திரனை அவர் அவ்வளவு கீழிறங்கிப் பேசியிருக்கத் தேவையில்லைதான். ஆனால், மனுஷ்ய புத்திரன் போன்ற அறிவு ஜீவிகள் இஸ்லாம் பற்றிய தெளிவு ஏதும் இல்லாமல் இஸ்லாத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவித்து அதை உங்கள் போன்றவர்கள் பெரிய சான்றாக எடுத்துப் பேசுகிற நிலை வருவதால் அவரை நாங்கள் விமர்சிக்க வேண்டியிருக்கிறது.

    இஸ்லாம் எல்லாக் காலத்திற்குமான சமயம் என்பதை நாங்கள் வலியுறுத்திப் பேசிவருகிறோம். பங்குச் சந்தை, உலகமயம், மின்சாரப் பற்றாக்குறை உள்ளிட்ட நீங்கள் சுட்டிக் காட்டியிருந்த எல்லாப் பிரச்சினைகளிலும் இஸ்லாத்தின் வழிகாட்டல் என்ன என்பதை அவ்வப்போது தேவைக்கேற்ப நாங்கள் மக்களிடையே வெள்ளிக்கிழமை உரையின் வாயிலாகத் தெரிவித்து வருகிறோம். இவற்றுக்கு இஸ்லாத்தில் தீர்வு இல்லை என்ற உங்களின் கருத்து விவாதத்திற்கு உரியது.

    ம.க.இ.க.வைச் சேர்ந்த ஒரு சகோதரர் எனக்கு மிகவும் பழக்கம். அவரும் நானும் பல கருத்துகளில் ஒன்றுபடுவோம். நம்மில் ஒனறுபட்ட கருத்துக்களைப் பற்றிப் பேசுவோம். உடன்படுவோம். ஒத்துழைப்போம். வேறுபட்ட கருத்துகளைப் பற்றிப் பேசும்போது அடுத்தவர் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொண்டு இழிவுபடுத்தலைத் தவிர்ப்போம்.

    • ஆனால், ஷரீஅத் தவறு அல்ல. ///.
      .
      .
      ஒரு கணவன் தனது மனைவியையோ பிள்ளைகளையோ கொன்றால் தண்டனை இல்லை வெறும் ரத்த இழப்பீடு என்ற பெயரில் துட்டு கொடுத்தால் போதும்…யப்பா என்னே ஒரு முற்போக்கு ஷிரியா?நீங்கதான் மெச்சிக்கணும்

  95. இந்துக்கள் இனியும் வாய் மூடி இருக்க கூடாது என உணர்த்தும் ஜவ்கீத் ஜமாதுக்கு நன்றி

  96. எச்.பீர் முஹம்மது:

    சவூதியில் தன் சொந்த மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற மத போதகருக்கு (பய்ஹான் அல் காமிதி) வெறும் நான்கு மாதங்கள் தண்டனை….. மனைவியை துன்புறுத்துபவர்களுக்கு சமாதான பேச்சு…. தன் குழந்தைக்கு பாலூட்டிக்கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை.. வேலைக்கார சிறுமிக்கு மரணதண்டனை ….இதனை நியாயப்படுத்த அப்துல் வஹ்ஹாப் நஜ்தியின் (19 ஆம் நூற்றாண்டில் வஹ்ஹாபிய கோட்பாட்டின் ஸ்தாபகர்)கல்லறையிலிருந்து தோண்டி எடுக்கப்பட்ட ஹதீஸ்கள்…. நல்லா இருக்குது… உங்களுக்கான ஷரீ அத்…… உங்கள் நீதி முறையே உலகின் முன் கேள்விக்குள்ளாகிறது… மிகப்பெரும் அநீதியின் உடைமையாளராக மாறி விட்டீர்கள்…. சவூதியை துதிப்போரே… தயாராகிக்கொள்ளுங்கள்… வண்ண போஸ்டர்கள் ஒட்டுவதற்கு…. இதற்காகவும் ஒரு பொதுக்கூட்டத்தை மண்ணடியில் ஏற்பாடு செய்யுங்கள்….

    • Sir, kindly backup your accusations/arguments with references/links for others to verify. It adds to the credibility of what you are saying and it may of useful for people who might read these in the future.

    • ellam sari,

      aana ore oru issue thaan.Athu enna namma ooru la parapatchamana thandanai,matha oorula illainnu.

      Pala GCC countriesla blood money is more if the victim is a muslim.

  97. சர், வினவு அன்ட் புருஷொ,

    (ன)காலதுக்கு யெர்ப மாட்ரி கொல்வது சட்டமல்ல, அனைதது காலதிலும் ஒரெ மாதிரி இருப்பது தான் உன்மயான சட்டம், அது தான் ஷரியத் சட்டம், ஷரியத் சட்டதை மாத்த யாருகும் உரிமையும், அதிகாரமும் இல்லை. ரிசான விஷயட்த்தில் தப்பான டிர்பு வழஙி இருக்கிரர்கல், ஷரியத் தவரில்லை. செளதி ஷெகு கலும் அமெரிக உடன் குடனி வைத்து தவ்ரு செகிரர்கல், அவர்கலும் தன்டிக பட வென்டியவர்கல்,நான் தயார் செளதிகு எதிராக குரல் குடப்பதர்கு, ஷர்யத் சட்டதிர்கு எதிராக அல்ல,

  98. கொலைக்கு தண்டனை கொலைதான் என்று (இஸ்லாமியமல்லாத நாடுகளில் வாழும்) முஸ்லிம்கள் பீற்றிக் கொள்வார்கள். குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடத்தில். கடந்த ஆண்டு டில்லி மாணவி வன்புணர்ச்சிக்கப்பட்டு கொலையுண்ட போதும்கூட இப்படித்தான் கூறிக் கொண்டார்கள். சில முஸ்லிமல்லாதவர்கள் கூட ‘இஸ்லாமிய நாடுகளில் உள்ளதைப் போல’ மரண தண்டனை வலியுறுத்தினார்கள்.

    ஆனால் இஸ்லாமிய சட்டத்தின் மற்றும் இஸ்லாமிய நாடுகளின் உன்மை நிலவரம் என்ன என்று முஸ்லிம்கள் அறிவார்கள். அதற்கான குரான் வாசகத்தைக் கேட்டால் பம்முவார்கள். அப்படிக் கொடுத்தாலும் அந்த வாசகம் பலருக்கும் புரியாது. விளக்கம் கேட்டால் சரியான விளக்கம் வராது.

    For full post, read,

    இதுதான் பழிக்குப்பழியா? http://questionstomuhamadhians.blogspot.com/2013/08/blog-post.html

  99. வினவு அவர்களே உங்கள் பதிவை முழுதாக படித்திவிட்டு ஒரு இசுலாமியன் என்ற அடிபடையில் இந்த மறுமொழியை பதிகிறேன் ..எனக்கு பி ஜே பற்றி எழுத எதுவும் இல்லை ..அவரை r s s ஓடு சம்பந்த படுத்தி எழுதியதில் எனக்கும் சில உடன்பாடு உண்டு …பிரிவினையை இசுலாமியர்களுக்கு மததியில் உருவாக்கி அதன் மூலம் தன்னை வளர்துகொல்பவர் அவர் அதனால் அவர் மேல் எனக்கு நல்ல மதிப்பு கிடையாது ..நானும் ஒரு தௌஹீத் வாதி தான் …ஆனால் ஷரீயத் பற்றி சில குறிப்புகள் உங்களுக்கு. இந்த தண்டனை விஷயத்தில் ஷரியத்தின் மேல் எந்த குற்றமும் இல்லை ..அங்கே ஷரியத் சட்டங்கள் உள்ளதால் தான் குற்றங்கள் குறைவு ஆனால் ஷரியத்தை நடைமுறை படுத்தியதில் தான் தவறே அன்றி சட்டங்கள் தவறல்ல …அந்த பெண் அக் குழந்தையை கொன்றிருக்க மாட்டார் என்று எந்த நிச்சயமும் இல்லை அதே போல் அந்த பெண் நீங்கள் எழுதியதை போன்று தெரியாமல் பால் புகற்றி இருக்காலாம் ..பெற்றோர்கள் கொலை செய்திருப்பாளோ என்ற கண்ணோட்டத்தில் பார்த்திருக்கலாம் ..மேலும் அந்த பெண்ணின் முன் பின் நடவடிக்கைகள் பற்றி வினவுக்கோ தெரியாது ..அவள் தவறான பெண் இல்லை என்று எப்படி ஆணித்தரமாக வினவு சொல்ல முடியாதோ அதேபோல் அவள் குற்றவாளி என்றும் சொல்ல முடியாது ..ஆதலால் இங்கே சட்டம் தவறல்ல ..நடை முறை படுத்தியே மனிதர்களே தவர் இளைதிருக்கலாம்

    • can you please elaborate about Islamic rules about witnessing. Why non-Muslim witness is considered half? Why women are considered half witness? What is blood money? Why there is death penalty for leaving Islam? Why crime rate is even lesser in some countries that have no sharia? Why there are inhuman punishments like stoning to death in this modern world?

      • Why non-Muslim witness is considered half?இறை நம்பிக்கை இல்லாததால் பொய்கள் சொல்ல வாய்ப்புகள் அதிகம்
        Why women are considered half witness?பலவீனமானவர்கள் .மிகைத்து பேசக் கூடிய இயல்பு அதிகம் என்பதால் .

        What is blood money?கொலை ,வெட்டு குத்து சசெய்தவனுக்கு பாதிக்கப் பட்டவர்கள் மன்னிப்பு நோக்கத்திற்காக Why there is death penalty for leaving Islam? எந்த நாட்டில் இருக்கிறது?Why crime rate is even lesser in some countries that have no sharia? உதாரணம் ?

        Why there are inhuman punishments like stoning to death in this modern world? மரணதண்டனை வழங்க வேண்டும் அவ்வளவே .கல்லெறிந்து கொல்வது அநாகரிகமாக தெரிந்தால் மாற்று முறைகளை கையாளலாம் ..

        • Ibrahim,

          //Why non-Muslim witness is considered half?இறை நம்பிக்கை இல்லாததால் பொய்கள் சொல்ல வாய்ப்புகள் அதிகம்//

          முஸ்லிமாக இல்லையென்றாலே இறை நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்கிறீர்கள். (You are indeed a Muhamadist.) இருக்கட்டும்.

          முஸ்லிம்கள் பொய் சொல்ல வாய்ப்புகள் இல்லையா?

          முஸ்லிமல்லாதவர்கள் உன்மை சொல்ல வாய்ப்புகள் இல்லையா?

          முஸ்லிம்களின் பொய்யையும் முஸ்லிமல்லாதவர்களின் உன்மையும் கணக்கில் எடுத்துக்கொள்ள ஷரியாவில் ஏன் இடம் இல்லை?

          //Why there is death penalty for leaving Islam? எந்த நாட்டில் இருக்கிறது?//

          ஷரியா என்ன சொல்கிறது?

    • Sadiq,

      //ஷரியத்தை நடைமுறை படுத்தியதில் தான் தவறே அன்றி சட்டங்கள் தவறல்ல//

      சட்டத்தை சரியான முறையில் நடை முறைப் படுத்த மனிதர்களுக்கு வழிகாட்டுதல் தராத சட்டத்திற்கு எதற்கு இறைப் பட்டம்? சானியை சந்தனம் என்று சாதிப்பதேன்?

  100. முட்டாள் உன்னக்கு எல்லாம் அறிவு இருக்கிறதா இல்லையா மடையனே ஒரு பச்சிளம் குழந்தையை கொன்றவலை நியாய படுத்துகிறாய் உன்னக்கு மனசில் ஈரம் இல்லையா கேவலமானவனே உன் அறிவை கொண்டு இஸ்லாமிய சட்டத்தை குறை சொல்லுகிறாய்

  101. ஒரு நாடு சொல்லும் திர்பை நி எப்படி எந்த ஆதாரமும் இல்லாமல் விமர்சனம் செய்வது சவூதி நாட்டில் உள்ளவர்களையும் ஆளுபவர்களையும் நாம் நியாய படுத்த மாட்டோம் ஆனால் இந்த சம்பவம் மிகவும் ஆராய்ந்து கொடுக்க பட்டது வேலை பளு என்றல் ஒருக்கு போக வேண்டியதுதானே அதை விட்டு விட்டு கொலை செய்வது எப்படி முறை அதுவும் பச்சிளம் குழந்தையை

  102. நீ மட்டும் நியாயவான ஒரு உயிர்ரை மட்டுமே நினைக்கிறாய் சிறு குழந்தையின் உயிர் இல்லையா மடையனே விர்மர்சனம் செய் சவூதி இன்னும் என்ன வேண்டுமானாலும் ஆனால் இஸ்லாமிய சட்டத்தை இல்லை…..

Leave a Reply to மருது பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க