privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

-

விஸ்வரூபம் படம், கமலஹாசன் சொல்லிக் கொள்வது போல ஒரு “ஸ்பை த்ரில்லர்” ஆக இருக்கப்போகிறதோ இல்லையோ, தற்போது தமிழகத்தில் அரங்கேறி வரும் கூத்துகள் கிட்டத்தட்ட அவ்வாறுதான் இருக்கின்றன.

படத்திற்கு 31 மாவட்ட ஆட்சியர்களும் விதித்திருந்த தடையை நீக்கி நேற்று இரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

“இப்போது தீர்ப்பை வெளியிட்டு விட்டால், நாளை காலை 5 மணிக்கே முதல் காட்சியை திரையரங்கில் போட்டு விடுவார்கள். எனவே நாளை காலை தீர்ப்பை வெளியிடுங்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து கொள்கிறோம்” என நேற்று உயர்நீதிமன்றத்தில் பதறியிருக்கிறார் அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன். நீதிபதி அதை ஏற்கவில்லை. எனவே இரவோடு இரவாக தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று, அவரைத் தட்டி எழுப்பி தடை உத்தரவு கேட்டிருக்கிறார்கள். ‘இன்று காலை நீதிமன்றத்தில் முதல் வழக்காக இதனை எடுத்துக் கொள்வதாக’ அவர் கூறியிருப்பதாக இன்றைய நாளேடுகள் கூறுகின்றன.

நேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு எடுத்து வைத்த வாதங்களைப் பார்த்தபோது, “வேறு ஏதோ நோக்கங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை ஜெயலலிதா அரசு நடத்துகிறது” என்பது பச்சையாகத் தெரிந்தது.

“இத்திரைப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை திரையிடுவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சுவதனால்தான் இதற்கு எதிராக 144 தடை விதிக்கப்பட்டிருப்பதாக” தமிழக அரசு கூறியிருந்தது.

“அளவற்ற அருளாளனாகிய அல்லாதான், அம்மாவை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறான்” என்று கூறி, இஸ்லாமிய மக்கள் மத்தியில் “புல்லரிப்பை” தூண்டி வருகின்றன இஸ்லாமிய அமைப்புகள். ஆனால் அம்மாவை சிந்திக்க வைத்த அல்லாவால், அட்வகேட் ஜெனரலை சிந்திக்க வைக்க முடியவில்லை போலும்! நேற்று நீதிமன்றத்தில் வாதிட்ட நவநீத கிருஷ்ணன், வண்டு முருகன் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்.

தடை விதிப்பதற்கான காரணம் என்று தமிழக அரசு கூறியிருப்பதை விட்டு விட்டு, “இந்த தணிக்கைக் குழு சான்றிதழே ஒரு ஊழல்” “தணிக்கைக் குழு உறுப்பினர்களின் நியமனம் ஊழல்” என்றார்.

“தணிக்கைக் குழுவே ஊழல் என்றால், எல்லாப் படங்களுக்கும் அல்லவா நீங்கள் தடை விதிக்க வேண்டும்?” என்று மடக்கினார் கமலஹாசனின் வக்கீல்.

“அப்படியானால், நீங்கள் இப்போது சொல்லும் இந்தக் காரணங்களுக்காகத்தான் தடை விதித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டவுடன், “உங்களுக்கு தெரியாத சட்டம் இல்லை, உரிய செக்சனில் தடை செய்யுங்கள் மை லார்ட்” என்ற பாணியில் ஜகா வாங்கிவிட்டார் வண்டு முருகன்.

அம்மாவின் அட்வகேட் ஜெனரல்தான் இப்படி என்றால், ஆட்சியர்கள் அவரை விஞ்சி விட்டார்கள்.

32 மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். யாராவது ஒரு புகார் கொடுத்தால் அதனை பரிசீலித்துப் பார்த்து, அதன் பின்னர் அப்பிரச்சினை குறித்த தனது சொந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு மாவட்ட ஆட்சியர்முடிவு எடுக்க வேண்டும். இப்படி சொந்த மூளையைப் பயன்படுத்தி யோசிப்பதையே Application Of Mind  என்று சட்ட மொழியில் கூறுவர். சொந்த மூளையைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அப்படி பயன்படுத்தித்தான் இந்த முடிவை எடுத்தோம் என்று உத்தரவில் எழுதுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்.

“முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருப்பதால், நாங்கள் தடை செய்கிறோம்” என்று “ரொம்ப வெள்ளந்தியாக” பல மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். “இது சட்டவிரோதமானது” என்று வாதிட்ட கமலஹாசனின் வழக்குரைஞர் ராமன், “32 மாவட்டத்திலுமா சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று கிண்டலும் அடித்தார். “எப்படியாவது இந்தப் படத்தை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறது” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அசிங்கமான முறையில் விவகாரம் அம்பலமாகிவிட்டது.

“இந்தத் தடைக்கு காரணமாக அமைந்த ‘புண்பட்ட மனம்’, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடையதே அன்றி, முஸ்லிம் உம்மாவினுடையது அல்ல. எங்கப்பன் குதிருக்குள் இல்லை, இல்லை இல்லவே இல்லை” என்று தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார் தலைமை வழக்குரைஞர்.

கிசுகிசு செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கும், ஜெயா டிவி மற்றும் ப.சிதம்பரம் விவகாரங்கள்தான் தடைக்கு காரணமா, அல்லது, மேலும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் சங்கராச்சாரி கைதுக்கு இணையான மர்மங்கள் நிச்சயம் இதில் உண்டு. தன்னுடைய தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்ள போலீசையும் அரசு எந்திரத்தையும் தன்னுடைய கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் ஜெயலலிதா என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பிள்ளை மீது போடப்பட்ட கஞ்சா கேசையும், பின்னர் சமீபத்தில் (சசிகலா) நடராசன் மற்றும் மன்னார்குடி கும்பல் மீது மீது போடப்பட்ட வழக்குகளையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம். அம்மாவின் கூலிப்படையாக செயல்படுவதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

பல இஸ்லாமிய அமைப்பினரும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே நடக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. தங்களுடைய தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ முஸ்லிம் மக்களை பகடைக்காயாக்கி, இவர்கள் நடத்தி வரும் இந்த நாடகம், பெரும்பான்மை தமிழக மக்களின் பொதுக்கருத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி வருகிறது.

நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், “பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஐ வளர்ப்பதற்கு இதை விட அற்புதமான ஒரு சூழலை வேறு யாரும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவே முடியாது. ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் போட்டுக் கொடுத்திருக்கும் இந்த ரோட்டின்மீது இந்து மதவெறியர்களின் ரதயாத்திரை தொடங்கப் போவது உறுதி. அந்த ரத யாத்திரையின் பயனையும் மோடியின் மதிப்புக்குரிய நண்பரான ஜெயலலிதாவே அறுவடை செய்வார் என்பதுதான் இந்த த்ரில்லரின் கிளைமாக்ஸ் திருப்பமாக இருக்கும்.

000

1980 களில் ஷா பானு என்ற மண விலக்கு செய்யப்பட்ட ஏழை இசுலாமியப் பெண்மணி, ‘ஷாரியத் சட்டத்தின் கீழ் தனக்கு மறுக்கப்பட்ட ஜீவனாம்சத்தை, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கவேண்டும்’ என்று கோரினார். ஷாபானுவுக்கு ஆதரவாக அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சையது சகாபுதீன் தலைமையில் இஸ்லாமிய மதவெறியர்கள் வட இந்தியாவெங்கும் சாமியாடினர். இதனைக்காட்டி, இந்து மதவெறியை மிகச் சுலபமாகத் தூண்டியது ஆர்.எஸ்.எஸ்.

உடனே அதனை சமாளிப்பதற்கும், இந்துக்களின் வாக்குகளைக் கவருவதற்கும், பாபர் மசூதியின் கதவுகளை இந்துக்களுக்கு திறந்து விட்டார் ராஜீவ் காந்தி. அதன் பின்னர்தான் அத்வானியின் ரத யாத்திரை தொடங்கியது.

“ஷா பானு விவகாரத்தில் முஸ்லிம் மதவெறியர்கள் வைத்த கொள்ளிதான், இந்து மதவெறியர்கள் அரசியலில் தலையெடுப்பதற்கு சாதகமாக அமைந்தது” என்பதை ஆய்வாளர் அஸ்கர் அலி எஞ்சினியர் தனது பல கட்டுரைகளில் விளக்கி கூறியிருக்கிறார்.

அதனை ஒத்த விபரீதம்தான் தமிழகத்தில் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

000

பின் குறிப்பு:

இதனைப் படித்தவுடன் “நீ விஸ்வரூபத்தை ஆதரிக்கிறாயா? கமலின் கைக்கூலியே” என்பன போன்ற வசைகளை இஸ்லாமிய மதவெறியர்கள் தொடங்குவார்கள் என்பதை அறிவோம்.

இதுவரை தெரியவந்துள்ள கதையின்படி விஸ்வரூபம் ஒரு அமெரிக்க அடிவருடித் திரைப்படம். அது மட்டுமல்ல, தெற்காசியாவில் அமெரிக்காவின் புதிய அடியாளாக இந்தியா நியமிக்கப் பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு “கலைப் படைப்பு” என்றும் தெரிகிறது. அதாவது இந்திய ராம்போ. இதுதான் இப்படத்தில் நாம் எதிர்க்க வேண்டிய முக்கியமான விடயமாகத் தெரிகிறது.

படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துக் காட்டியிருப்பதன் மூலம் தங்களை இழிவுபடுத்தியிருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன. ஒரு இந்திய முஸ்லிமை (கதாநாயகன் கமலஹாசன்) ரா உளவாளியாகவும், அமெரிக்க அடிவருடியாகவும் காட்டியிருப்பதுதான் முஸ்லிம்களுக்கு செய்யப்பட்டுள்ள பெருத்த அவமதிப்பு என்று எங்களுக்குத் தோன்றுகிறது. அமெரிக்காவின் அடியாளும், இசுரேலின் கையாளுமான சவூதி அரசுக்கு அடியாள் வேலை பார்க்கும் இஸ்லாமிய அமைப்பினருக்கு இப்படித் தோன்றாததில் வியப்பில்லை.

இப்போது  ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் பேசும் வசனங்கள், அவர்களுடைய சொந்த சரக்குகளா அல்லது மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப் பட்டவையா என்பதை மட்டும் அவர்கள் சொன்னால் போதும்.

மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளுவதை மறைமுகமாக நியாயப்படுத்தும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இந்த உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு யாரும் விஸ்வரூபம் படமெல்லாம் பார்க்கத் தேவையில்லை.

    • மிக நல்ல கட்டுரை! வினவின் சில உருப்படியான கட்டுரைகளில் இதுவும் ஒன்று! தொடரட்டும் உங்கள் பணி!

    • பலே..! பலே ! மதவாதிகள் எழுப்பும் விமர்சனக் கருத்துக்கள்..பதிலடி வீரர்களான வினவுத் தோழர்களையே அமைதியாக்கி விட்டதே ! என்னே..அவர்களின் வாதத்திறமை ! 🙂

      • Mr. Rammy, I am still a Christian with liberal views. I never accepted communism or Americanism (capitalism). I have only said that this article is nice as it is for free speech. I supported release of Da Vinci Code. I supported release of Dasavatharam which hindu groups opposed. Now I am supporting Viswaroopam. Even tomorrow, if you make a movie showing any religion or ideology as evil, I will support its release. So don’t think I have embraced red terror or safron terror.

        • Dear Friend ! I have mentioned the “Silence of Roarers (this social group followers..usually are very sound defenders) ….done by the fundamentalists ! Amazed about their debating attitude !

  1. /இப்போது ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் பேசும் வசனங்கள், அவர்களுடைய சொந்த சரக்குகளா அல்லது மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப் பட்டவையா என்பதை மட்டும் அவர்கள் சொன்னால் போதும்.

    மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை./

    நச்!

    செவிட்டில் அறையும் வார்த்தைகள்… வினவுக்காக இந்த கட்டுரையை எழுதினவரின் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

  2. எனக்கு தெரிஞ்சு ஓவர் பில்டப் இல்லாமல் நேர்மையாக வினவில் எழுதப்பட்ட விமர்சனம்
    வாழ்த்துக்கள்

  3. “ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?” என்பதை போல “விஸ்வரூபம் : ஜெயாவின் அடியாட்களா போலீசு ?” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதிருக்கலாம்.

    எங்க நாகப்பட்டினம் உள்பட தமிழகத்தின் பல திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை பாதியில் நிறுத்தி, ரசிகர்களை வெளியேற்றியது தமிழக அரசின் அடியாட்களான காவல்துறை!

    அணைய போற விளக்கு ரொம்ம்ப பிரகாசமா எரியும்ன்னு சொல்லுவாங்க. நல்லாவே எரியுது, போறபோக்கை பார்த்தால், வர எம்பி எலக்சன்ல பாதியை அணைச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன். மீதியை அடுத்த சட்டமன்ற எலக்சன்ல அணைச்சுடுவாங்கன்னு நினைக்கிறேன்.

    சில வருடங்களுக்கு முன் சென்னை சட்டக்கல்லூரியில், தேவர் இனத்தை சார்ந்த மாணவனை நூறு பேர் கொண்ட ரவுடி கும்பல், கல்லூரி வாசலிலேயே கொலைவெறி தாக்குதல் நடத்திய போது கைக்கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை, இப்போவரைக்கும் திருட்டு விசிடில விற்பனை செய்றவனையெல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கும் காவல்துறை, தியேட்டருக்கு தன்னோட காசை கொடுத்து படம் பார்க்க வந்தவனை அடிச்சு விரட்டுறதுக்கு பேருதான் வீரமா?

    இப்படி அடியாட்கள் மாதிரி ஓட்டுபோட்ட / ஓட்டு போடப்போகும் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதற்குதான் அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தருதா? எங்க வரியில தானே அந்த சம்பளம் உங்களுக்கு கிடைக்குது. அதே வரிப்பணத்திலிருந்து கிடைக்கும் பணத்தால், காவலர் குடியிருப்பு, அதுஇதுன்னு எல்லாவற்றுக்கும் சலுகைன்னு பேருல சுகபோகத்தை அனுபவிச்சுக்கிட்டு இருக்கிற நீங்க தானே, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். அதைவிட்டுட்டு இப்படி அடியாட்கள் மாதிரி செயல்படுறதுதுறது நியாயமா?

    காவல்துறை உங்கள் நண்பன்ன்னு சொல்லிக்கிட்டா மட்டும் போதாது, அதுமாதிரி நடக்கவும் பழகிக்கணும்.

  4. யோவ் என்னயா முஸ்லீம் தீவிரவாதி அது இதுன்னு திடீர்னு எழுதிப்புட்ட…

    • எல்லா முஸ்லீமும் தீவிரவாதியில்லை. மனிதத்துக்கு எதிரான எவராயினும் அவர்கள் பயங்கரவாதிகளே! அவர்கள் எந்த மதத்தில் இருந்தால் என்ன! அவர்களின் எண்ணங்கள் வேரறுக்கப்படவேண்டியவையே! வினவினை ஆழமாகப் புரிந்திராத பையாவைப் போன்றோர் இப்படி ஆச்சரியப்படுவதில் வியப்பேதுமில்லை.

  5. The irony of the current state of affairs is whether vishwaroopam may show the muslims in the bad light or not..the agitations against vishwaroopam put the muslims in very bad light and depicts all of them are intolerants and above crticism. Credit goes to PJ and few fundamental groups.

  6. விஸ்வரூபம் திரைப்படத்தினை பார்க்கலாமா வேண்டாமா என்கிற முடிவினை மக்கள் தாமாக எடுக்கட்டும். அத்திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுக்கிறவர்களின் உள்/வெளி நோக்கங்களை கடந்து, இத்தடையினை நிபந்தனைகளின்றி மிகக்கடுமையாக கண்டிக்கிறேன்…

    அதேவேளையில், திரைப்படம் பேசுகிற அரசியலில் எனக்கிருக்கிற முரண்பாட்டினை பேசாமலும் இருக்கமுடியாது. பல இடங்களில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ஆதரவு வசனங்களும்/காட்சிகளும், படம் முழுக்க வாய்ப்பிருந்தும் ஆப்கன் போர் குறித்த அரசியலை/உண்மைகளை மிகக்கவனமாக பேசாமல் தவிர்த்து அமைதிகாத்தும் எடுக்கப்பட்டிருக்கிற திரைப்படத்தை விமர்சிக்காமல் என்னால் இருக்கமுடியவில்லை…

    ஆப்கான் மக்களின் வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாமலும், அவர்களின் வரலாற்றை அரைகுறையாகக் கூட அறியமுற்படாமலும், அமெரிக்காவின் பென்டகனில் அமர்ந்துகொண்டு அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகளோடு கலந்துரையாடி உருவாக்கப்பட்ட திரைக்கதையைத்தான் கொண்டிருக்கிறது விஸ்வரூபம் திரைப்படம்.

    • படம் வெளிவந்தபின் நாம் தாராளமாக அதனைப் பற்றி விரிவாக விவாதிக்கலாம், கடுமையாக விமர்சிக்கலாம்.

    • I accept that every one has got freedom of speech and writing.But Kamal film Viswaroopam has been produced as per their masters in U.S.If he is realy interested in Afkan terrorism,first he should tell why they have opted for that? First Russian occupation,then American invasion.He should have shown American bombings on civilians.Iltreatment to dead bodies of taliban fighters.His motive should be neutral.I ask one question.Can he take a film on Gandhi asassination?Can he show safron terrorism ,Malegan,samjadha express,ajmeer bombing? Godse tatooed as Ismail in his hand and killed Gandhi so as to create fight between hindus and muslims.Now Kamal said that he will go to secular country.US is not a secular country.Obama took oath office by touching Bible: but they are not following the principals Bible which preaches PEACE.Castro told CIA has tried to kill him 63 times.Chaves told if he is killed ,it is only by US.The number of people killed in Iraq,Afkanistan and elsewhere by US and allied forces are more than the people killed by their rulers.This US sponsered terrorism for oil and selling of weapons.

  7. ஷா பானு வழக்கை பற்றி எழுதியமைக்கு நன்றி.இது இந்த தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை.ஆனால் இதுவே துவக்கமாக இருந்தது

  8. நல்ல கட்டுரை , சமூக நோக்கில் எழுதப்பட்டுள்ள கட்டுரை .. முஸ்லீம்கள் உண்மையை உணர்ந்து போலி மத வெறி கூச்சல்களின் பின் செல்லாமல் தங்கள் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக போராடுவதே சரியானதாகும்… முஸ்லீம்கள் மீதான வெறுப்புணர்வு தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகமாக்கப்பட்டு மதக்கலவரத்தை தூண்டவே வழிவகுக்கும்… பிறகு நாம் அடிப்படை தேவைகளுக்கு கூட போராடும் நிலை வந்துவிடும்….

  9. மிகமிகச் சரியான கருத்து. இப்படத்தின் மீதான தடைகளும் தடங்கல்களும் இஸ்லாமியர்களுக்கெதிரான மனநிலையை வளர்த்துவிடவே உதவுகின்றன.

  10. நடுநிலை கன்னோட்டதுடன் எழுதப்பட்ட பதிவு. வாழ்த்துக்கள்.

  11. மிகச் சிறப்பாய் வார்க்கப்பட்டிருக்கும் கட்டுரை. வினவுக்கு நன்றிகள்!
    வார்த்தைக்கு வார்த்தை கவனமாய் செதுக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் அறியாமையில் மூழ்கி மத போதையில் தள்ளாடும் முஸ்லீம் சகோதரர்களை நல்வழிப்படுத்தட்டும். முஸ்லீம் மக்கள் பகடைக்காய்களாய் பயன்படுத்தப்படுவவதை அவர்கள் உணர்ந்து தெளியட்டும்.

  12. I think zionist(Isreal,USA) sponserd kamal hasan to make movie which further alienate Muslim community which already marred in Mass media

    So I think your article should be the ‘Kamal hasan puppet of Zionist’

      • குட்டி சைத்தான் ஒன்றை கோடி இஸ்ரேலின் அப்பன் சைத்தான் அமேரிக்கா என்ற உலக ரவுடிக்கு ரசியா பணியுது ,சீனா பணியுது ,ஜப்பான் பணியுது ,ஜெர்மன் பணியுது .பிரான்ஸ் பணியுது ,

        • //குட்டி சைத்தான் ஒன்றை கோடி இஸ்ரேலின் அப்பன் சைத்தான் அமேரிக்கா என்ற உலக ரவுடிக்கு ரசியா பணியுது ,சீனா பணியுது ,ஜப்பான் பணியுது ,ஜெர்மன் பணியுது .பிரான்ஸ் பணியுது ,///

          @S.Ibrahim அட உங்க தமாத் இயக்கம் அம்மாவுக்கே அடிபணியிது…பின்ன அமெரிக்காவுக்கு கழுவிவிடாதா….

        • //‘மஸீஹ் அல்லாஹ்வின் மகன்’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். -9:30//

          ithu entha porin pothu sonnathu? ungal nambikkai ennavaga vendumaanalum irukkattum. neengal eppadi aduthavargal nambikkaiyai azhippaan ozhippaannu solla mudiyum? nalaikku nanum oru mathaththai niruvi athula muslimgalai billa ozhippaanu sonna ungalukku kovam varathu? ithu pira mathathinarin manathai punpaduthaatha? kurnai thadai panniralama?

  13. விஸ்வரூபம் பொறுத்த வரை முஸ்லிம் தலைவர்கள் இப்போது முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள், காரணம் அரசின் செயலபாடுகளில் சிக்கி முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், கமலஹாசனுடன், பேசி அவர் அமெரிக்காவிலிருந்து வந்த மறுநாளே சில் காட்சிகளை தவிர்த்து விட்டு வெளியிடிவதென முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால், வழக்கின் தீர்ப்பு சம்மந்தமாக காத்திருந்தார்கள். தீர்ப்பு வந்த மறு நிமிடமே, திரையிடட்டும் என்று சொல்லிவிட்டார்கள். இப்போது நடப்பது அரசியல் நாடகமே, பொதுமக்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் நாள் எடுக்கும்.

  14. சகோதர, சகோதரிகளே! இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுதவோ அல்லது மததுவேசம் எடுக்கவோ நான் எழுதவில்லை. இந்த படத்திற்கு இவ்வளவு எதிர்ப்புகளும், பரபரப்பும் முதலில் தேவையற்றதே! முஸ்லிம் அமைப்புகள் முதலில் செய்த தவறு, கமலிடம் ஆட்சேபனையைக் கூறி ஒரு சில காட்சிகளை நீக்க முயன்றிருக்கலாம். தாங்கள் சொல்வது போல் ஆர்.எஸ்.எஸ் ஈஸியாக உள்ளே நுழைய வழி, இதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தமிழக மக்கள் அப்படி பட்டவர்கள் அல்ல. நான் வெளி ஊருக்கு செல்லும் போது வழியில் தொழுகை நேரத்தை அடைந்தால், அங்கு தொழுகையை நிறைவேற்ற எத்தனையோ ஹிந்து சகோதரர்கள் தங்கள் இல்லங்களில் அனுமதி தந்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தங்கள் வீட்டில் உள்ள சாமி புகைப்படங்களை நான் தொழும் வரை திரைக்கூட போட்டிருக்கிறார்கள். தமிழன் மனம் பெரியது.

    இந்த நிகழ்வு விபத்து போல் வந்துவிட்டது என்பதே உண்மை. அரசியல் கட்சி தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு, தொண்டர்கள் எப்படி தலையசப்பார்களோ அதை போல்தான் இன்று இயக்க தலைவர்களின் முடிவும் உள்ளது. அது மட்டுமில்லை இயக்கத்தில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 10 % மட்டுமே. மற்ற முஸ்ஸிம்கள் யாரும் இதற்கு பொறுப்பக முடியாது. நான் கூட என் வீட்டில் ஏர்டெல் மூலமாக விஸ்வரூபம் பார்க்க 1000 டெபாசிட் செய்தவன்தான் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    கமலுக்கு ஏற்பட்ட இந்த நிலை கடுமையாக கண்டிக்க கூடியது, ஒரு மனிதனை சோதனையின் விளிம்பிற்கு தள்ளுவது, இயக்க தலைவர்கள் இஸ்லாத்தை புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

    விஸ்வரூபம் பொறுத்த வரை முஸ்லிம் தலைவர்கள் இப்போது முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள், காரணம் அரசின் செயலபாடுகளில் சிக்கி முடிவெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். ஆனால், கமலஹாசனுடன், பேசி அவர் அமெரிக்காவிலிருந்து வந்த மறுநாளே சில காட்சிகளை தவிர்த்து விட்டு வெளியிடிவதென முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால், வழக்கின் தீர்ப்பு வராமல் வெளியிட முடியாது என்பதாலேயே காத்திருந்தார்கள். தீர்ப்பு வந்த மறு நிமிடமே, திரையிடட்டும் என்று சொல்லிவிட்டார்கள். இப்போது நடப்பது அரசியல் நாடகமே, பொதுமக்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் நாள் எடுக்கும்.

    • அப்துல் உங்கள் நேர்மை எமக்கு மிகவும் பிடித்துள்ளது…ஆனால் அப்துல் என்ற பெயரில் விஷமிகள் யாரும் இதை பதிந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

  15. அன்பார்ந்த என் வினவு எழுத்தாளரே… எங்கோ ஒரு பெண் விபச்சாரம் செய்து விட்டால் அந்த பெண் மட்டும் தான் விபச்சாரி ஆவாள்.. அதற்காக ஒட்டுமொத்த பெண்களும் விபச்சாரி ஆக மாட்டார்கள்.. உங்கள் அம்மா ,மனைவி, மகள் அவர்களும் பெண் என்பதால் அவர்களும் விபச்சாரி ஆவார்களா…? அதை போல் தான் எவனோ ஒருவன் தீவிரவாதி அவன் மதம் இஸ்லாம் என்பதால் ஒட்டுமத்த இஸ்லாமியர்களும் எப்படி தீவிரவாதி ஆவார்கள்?

    • ///மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளுவதை மறைமுகமாக நியாயப்படுத்தும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.///

      என்று தானே உள்ளது

    • Brother, Than why you are worrying, if others are not thing your mother and sister as prostitue. If you are giving example for comments do not show stupid examples. In Tamil Nadu, Our Hindu and Christian brothers are living as brothers with the Muslims.

    • விபச்சாரம் செய்யும் பெண் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதி பாத்திரத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு என்ன அய்யா பொருள்?

    • @muslim tamilan அந்த TNTJ தமாத் அரசியல் கட்சி கூட்டத்தில் உள்ளதை அப்படியே சொல்லுரிங்க.. எப்படி??

      https://www.youtube.com/watch?feature=player_embedded&v=DQ_LsAbVsLA

      25% மூஸ்லீம்கள் உள்ள கேரளத்தில் தடையின்றி ஒடுகிறது..
      ஆனா ஆளுங்கட்சியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கும் தாமத் தலைவனை தட்டிக்கேட்டக உனக்கு நாதியில்லை.

    • அன்பின் முஸ்லிம்தமிழன் நீங்கள் கட்டுரையை மேலோட்டமாகப்படித்துவிட்டு விமர்சிக்கிறீர்கள் நீங்கள் நினைப்பது தவறு மீண்டும் ஆழ்ந்து படியுங்கள்

  16. பத்திரிக்கை துறை மக்களுக்கு பொதுவான கருத்துக்களை எடுத்துச் சொல்லும், இன்னும் பதட்டமான சூழ் நிலைகளிலெல்லாம் மக்களை அமைதிப்படுத்த பல நன்முயற்சிகளை செய்துக்காட்டி அமைதியை ஏற்படுத்திய வரலாறு உள்ளது. நீங்களே இப்படி சொல்வது உணர்ச்சிவசத்தின் தொகுப்பை காட்டுகிறது. தங்களின் கோபம் நியாயமானது, அந்த அளவிற்கு எங்கள் இயக்க தலைவர்கள் உங்களை புண்படுத்திவிட்டார்கள். தவறு எங்களுடையது. அதற்கு பிரயாச்சித்தம் தேடுவது எங்கள் பொறுப்பே!

  17. விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
    விஸ்வரூபத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள்:
    தொழுதுவிட்டு கொலை.
    தீவிரவாதிகளின் கையேடு அல்-குர்ஆன்.
    எதிரியின் கழுத்தை அறுப்பதை அப்படியே காண்பிப்பது.
    பள்ளிவாயல்கள் தீவிரவாதிகளின் புகழிடம்.
    அமைதியின் சின்னமான புறாக்களையும் கொல்லுதல்.
    தமிழ் பேசுபவர்களை இழிவுபடுத்தியுள்ளார்.

  18. விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்பட இருந்த தியேட்டர்களில் கண்ணாடிக்கதவுகள் நொறுக்கப்பட்டன.சில இடங்களில் பெட்ரோல் குண்டுகள்,etc.
    தேவையில்லாமல் முஸ்லீம்கள் மீது வெறுப்பு அடுத்தவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படுகிறது.அரசு உடன் முடிவு எடுக்க வேண்டும்.courtல நடப்பதை தவிர்க்கலாம்.கமலும் முஸ்லீம்களும் இனைந்து முடிவு தெரிவித்தபிறகு மேல் முறையீட்டை வாபஸ் வாங்காமல் இருப்பது தவறு.
    ஆனால் வண்டு முருகன் ஜோக்கு Top ஒ Top

  19. அன்பிற்குரிய ( விஸ்வரூபத்தால் மனவலிக்கு உள்ளாகியிருக்கும்) சகோதரர்களே,

    அஸ்சலாமு அலைக்கும் ( சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக )..
    விஸ்வரூபம் பிரச்சினையின் “உண்மைரூபத்தை” தற்போது அறிந்திருப்பீர்கள்.

    நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகளை கவனித்தவர்களுக்கு அரசின் உள் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்.

    விஸ்வரூபம் திரைப்படத்தை ஜெ தொலைக்காட்சி விலை பேசிய போது அரசின் தலைமைக்கு இந்தப் படத்தின் கருவும் காட்சியமைப்பும் தெரியாதா ?

    அரசின் தலைமை வேறு, ஜெ டிவியின் தலைமை வேறா ?

    அப்போதே தடை செய்யும் எண்ணம் வரவில்லையே, ஏன் ?

    திரையரங்க உரிமையாளர்களோடு கமலஹாசனுக்கு பிணக்கு ஏற்பட்ட போதும் அமைதி காத்தார்களே…

    டி.டி.ஹெச் மூலமாக வெளியிட முயற்சி நடந்த போது தானே பிரச்சினை வெடித்தது. காரணம், கை நழுவி போகும் என தானே ?

    அதற்கு பிறகு இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை லாகவாகமாக சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது யார் ?

    நீங்கள் போராடியதால் இந்த அரசு தடை விதித்ததா என சிந்தியுங்கள்….

    நீங்கள் போராடிய மற்ற எந்த விசயத்தில் இந்த அரசு காது கொடுத்து கேட்டது ?

    ” இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லிம்” என்ற ஆங்கில திரைப்படத்தை எதிர்த்து அண்ணா சாலையில் போராட்டம் நடத்திய போது இந்த அரசு எப்படி கையாண்டது ?

    நீங்கள் போராடியதற்காக இந்த அரசு தடை விதிக்கவில்லை.

    ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வெறுப்புகளின் வெளிப்பாடு அது.

    ஜெயா தொலைக்காட்சியின் லாப நட்டக் கணக்கு அது.

    நடந்தது உங்களுக்கும் கமலுக்குமான பிரச்சினை அல்ல,
    ஜெயா தொலைக்காட்சிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குமான பிரச்சினை.

    இதில் கருத்து தெரிவித்த எங்களையொத்த நண்பர்களின் கருத்தை நீங்கள் மதத்திற்கு எதிரான கருத்தாகக் கொண்டீர்கள்.

    இதை போன்ற பல படங்கள் ஏற்கனவே வந்துவிட்டன, இனியும் வரத்தான் செய்யும்.
    தன்னை மனிதனுக்குரிய அடையாளம் பெற வைத்த பெரியாரையே, விமர்சனம் செய்கிற புத்திசாலிகளும் நடமாடிக் கொண்டிருக்கின்ற காலம் இது.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என யாரும் கிடையாது.

    இது போன்ற படங்கள் வந்த போதும், கோவை போன்ற சம்பவங்கள் நடந்த பிறகும் சகோதரத்துவம் எங்கும் குலைந்து விடவில்லை.

    அனைவருக்கும் தெரியும், ஒரிருவர் செய்கிற காரியங்களுக்கு, ஒட்டுமொத்தமாக எல்லோரும் குற்றவாளியாகிவிடமாட்டார்கள்.

    அதேபோல ஒரு திரைப்படம் சொல்வதால், அனைவரையும் தீவிரவாதியாக பார்த்துவிடமாட்டார்கள்.

    இப்போதும் சொல்கிறோம், எப்போதும் சொல்வோம் நாங்கள் உங்களின் சகோதரர்கள்,
    உண்மையானவர்களை உணருங்கள். ஒரிரு இடத்திற்காக குரலை மாற்றி ஒலிக்க தயங்காதவர்களின் குரலை எதிரொலிக்காதீர்கள்.

    கலையின் பெயராலோ, கருத்து சுதந்திரத்தின் பெயராலோ காவி நுழைய இடம் கொடுத்துவிடாதீர்கள்.

    ஜெ, ஜெ-வாகத் தான் இருப்பார். கமல், கமலாகத் தான் இருப்பார். நாம் என்றும் நாமாக இருப்போம்.

    மீண்டும் சொல்கிறேன், எதிர் கருத்தை எதிர்க்கவில்லை. அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணருங்கள் எனத்தான் சொல்கிறோம்.

  20. ///இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
    விஸ்வரூபத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள்:
    தொழுதுவிட்டு கொலை.
    தீவிரவாதிகளின் கையேடு அல்-குரான்.
    எதிரியின் கழுத்தை அறுப்பதை அப்படியே காண்பிப்பது.
    பள்ளிவாயல்கள் தீவிரவாதிகளின் புகழிடம்.
    அமைதியின் சின்னமான புறாக்களையும் கொல்லுதல்.
    தமிழ் பேசுபவர்களை இழிவுபடுத்தியுள்ளார்///

    முஸ்லிம் தமிழன் அண்ணே அதான் கமல் அந்த காட்சிகளை நீகுறேனு சொல்லிடாரு ..அப்புறம் ஏன் ? இப்படியே குதிச்சுட்டு இருந்தா பாதிப்பு நாமுடைய முஸ்லிம் சகோதர்களுக்கு மட்டும்தான் … மிக பலமான அரசியல் காய்கள் திரைமறைவில் நகர்கின்றது புரிந்து கொள்ளுங்கள் மக்களே >>>>

  21. இந்த பதிவு ஒரு நகைச்சுவை இழையோடும் தொனியில் இருந்தாலும் சொல்லிய செய்தி தீவிரமானது. தமிழகத்தின் சில பகுதிகளில் அதிமுக வினர் திரை அரங்குகளில் கலாட்டாவில் இறங்குவதாக தெரிகிறது. அந்த கும்பலில் தெரிந்தோ, அறியாமலோ ஒரு சில இசுலமாமிய நண்பர்கள் தம்மை இணைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படின் அது பெரும்பான்மை சமூகத்தவர் மனதில் தீவிரமான சிந்தனைகளை உருவாக்க கூடும். அதன்பின் பெரியார் மண் என்று நாமெல்லாம் பெருமைபட்டுக் கொள்ள வாய்ப்பில்லாமல் போகலாம். ஷாபானு விவகாரம் ,விஷ்வரூபம் விவகாரம்,சயது சகாபுதின்,ஜெய்னுலாதின் இதெல்லாம் வேறுவேறென்று கூறிவிட முடியாதபடி ஆகிவிடக்கூடும். இசுலாமிய சமயத்தை சேர்ந்த மக்கள் ஜனநாயக சக்திகளோடு கை கோர்க்க வேண்டுமேயன்றி மதவாதிகளுடன் அல்ல. அது அவர்களுக்குநன்மை தராதுயென்பதை உணர்வது நல்லது.இந்த மோதலின் மையப்புள்ளி அரசைநடத்துபவர்கள் என்பதை மதநல்லிணக்கத்தின் மேல்நம்பிக்கையுள்ள ஊடகங்கள் தெளிவு படுத்திவிட வேண்டும். ஒரு கொளரவ மோதலில் தமிழகத்தில் மதச்சண்டை வந்தால் கூட பரவாயில்லை தனிமனிதன் நடுத்தெருவுக்கு வந்தால் போதும்னு நினைக்கும் ஆள்வோரின் அராஜகத்தை பெரியார் வழிவந்ததாக அரசியல் செய்வோரும்,ஜனநாயக இயக்கங்களும் வை கோ, வலது ,இடதுகள் அனைவரும் அம்பலப்படுத்தி கண்டிக்க முன் வர வேண்டும் . இன்றைய நிலையில் அந்த படம் வந்து செய்யும் தீமையை விட வராமல் செய்யும் தீமையே அதிகம் எனத்தோன்றுகிறது.இதனை சிந்தித்து இசுலாமிய நண்பர்கள் தமது கருத்துக்களை திறந்த மனதோடு வெளிப்படுத்த வேண்டும்

    • இன்றைய நிலையில் அந்த படம் வந்து செய்யும் தீமையை விட வராமல் செய்யும் தீமையே அதிகம் எனத்தோன்றுகிறது.

  22. நீ தாலிபான காட்டுங்கள் இல்ல லக்ஷ்ர்இதொய்பாவை காட்டுங்கள் எங்களுக்கு பிரச்சனையில்லை ஆனால் முஸ்லிம்கள் தன் உயிரைபோல மதிக்கும் குரான் வசனங்களை ஓதிக்கொண்டு கழுத்தைஅறுப்பது போல் காட்சியை வைக்கவேண்டுமா தொழுது முடித்தவுடன் கொலைசெய்வதுபோல் காட்சிவைப்பது சரியா ? இதைபார்க்கும் இந்துமக்கள் இஸ்லாமியர்களின் குரானும் தொழுகையும் தீவிரவாதம் செய்ய தூண்டுகிறது எனற தவறான எண்ணத்திற்கு வரமாட்டார்களா ? தமிழ் சினிமாக்களில், “பாகிஸ்தான்” முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருந்தவர்கள், இப்போது, இந்தியாவில் “உங்கள் ஊரில் – உங்கள் கடைகளுக்கு பக்கத்திலயே அவர்கள் “ஸ்லீப்பர்” செல்களாக இருக்கலாம், என முஸ்லிம்களை காட்சிப்படுத்தியது, விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி. இப்படியே ஒவ்வொரு படத்திலும் எங்களை தீவிரவாதிகளாக காட்டி காட்டி இந்து சகோதரர்களிடமிருந்து இப்பவே பாதி அந்நிய படுத்தி விட்டார்கள். இதற்கு ஒரு முடிவு வேண்டாமா அதற்காக போராடினால் ஒரு மததுவேஷமுள்ள ஆஸ்கர் விருதுக்குஆசைபட்டு அமெரிக்கனை தூக்கிபிடிக்கும் நடிகர் நஷ்டபடுவார் என்று கவலைபடுகிறார்கள் சிலஇந்து சகோதரர்கள். டேம்999 படத்துக்கு எதிராக பெருபான்மை மக்கள் போராடினால் அது போராட்டம். நாங்கள் போராடினால் அது தீவிரவாதம்.

    1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

    2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

    5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

    6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

    7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

    நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

    9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

    10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

    11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

    12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

    13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

    14) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தது இந்தியாவில ரத்த ஆற்றை ஓட்டியது யார் ?

    இதெல்லாம் கமல் போன்ற முற்போக்கு இயக்குனர்கள் கண்களுக்கு அஹிம்சை செயலாக தெரியும் போலருக்கு. இந்த ஆர்எஸ்எஸ் காவி தீவிரவாதத்தை பற்றி படம் எடுத்திருக்கிறார்களா ? எடுப்பார்களா ???

    • குண்டு வைப்பது மட்டும் தான் தீவிரவாதம் என்றா கருதுகிறீர்கள். அவர்கள் வைத்த குண்டையெல்லாம் உங்களைப் போன்றவர்கள் நாலு கூட்டம் போட்டால் ஒன்றுமில்லாமல் பண்ணி விடுவீர்கள் போலப் படுகிறது.

    • @அஹ்மத்,

      என்ன பாஸ் இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டுட்டிங்க…இதே கேள்வியை உங்களை கேளுங்க பாஸ்.குரான் படிச்சிட்டு இதுவரை தீவிரவாதிகள் யாரையும் கொல்லவில்லையா??பாகிஸ்தானில் பல இடங்களில் மசுதிக்கு உள்ளே குண்டு வெடிப்பது உங்களுக்கு தெரியாதா? சாதரணமாக உங்கள் மசூதிக்குள் வெளியாட்கள் செல்ல முடியுமா?? dam 999 படத்தையும் இதையும் ஒன்னா வச்சி பாக்காதிங்க..அது வேறு இது வேறு..ஆப்கானில் நடக்கும் கட்சியையும்,இந்தியாவையும் அதுவும் தமிழ் நாட்டையும் ஒன்றுபடுத்தி பார்க்க முடியுமா?? என்ன சீழ்கெட்ட சிந்தனை இது..

      இதுபோக உங்களுடைய மற்ற கேள்விகளில் இருக்கும் நியாயத்தை நாங்கள் மறுகவில்லை

      • சகோதரர் நெல்லைபாலாஜி அவர்களே தாங்கள் முதலில் கேட்ட கேள்வி குர்ரான்னை படித்துவிட்டு இதுவரை யாரும் கொள்ளவில்லையா என்று கேட்கிறீர்கள்.இதற்கு என்னுடைய பதில் எனாக்கு தெரிந்த வகையில் இதுவரை யாரும் அவாறு செய்ததாக தெரியவில்லை . ஒரு வேளை அவாறு அவர்கள் அநியாயமாக கொலை செய்திருந்தால் .அது கண்டிப்பான முறையில் பெரும் தவறு பெரும் பெரும் பாவம் அவர்கள் நரகம் தான் செல்வார்கள் . நான் தங்களிடம் ஒன்று கூற விரும்போகிறேன் . தாங்கள் ஒருமுறை குர்ரானை படித்துவிட்டு அதில் மற்றவர்களை அநியாயமாக கொல்ல சொல்லிருந்தால் தங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதில் அவ்வாறு ஒரு வார்த்தை கூட கிடையாது . இதிலிருந்து தன்னகளுக்கு தெரியும் குர்ரான் யாரையும் கொள்ளசொல்வதில்லை என்று . உதாரனத்திற்க்கு. ஹிந்து மத வாதிகளில் சிலர் விபச்சாரத்திலும் பலமோசடிகளிலும் ஈடுபடுகின்றனர் அதற்காக தங்கள் அவர்கள் பகவத்கீதை என்ற வேதத்தை படித்துவிட்டு தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று கூற மாட்டீர்கள் . அது அவருடைய தனிப்பட்ட தவறான செயல் .அதற்க்கு மதம் பொறுப்பாகாது . என்றே கூறுவீர்கள் . எனவே இது தான் சரியான கருத்தும் கூட.
        எனவே சற்று சிந்தித்து பாருங்கள் .

    • எத்தனை யார்…
      உச்ச பட்சமே இதுதான் “நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ”

      – கஷாப் , தாவூத் , அப்சல் குரு இந்துகள் என்று கேள்விப்பட்டேன் அதை மேற்கண்ட பின்னுட்டத்தில் முஸ்லீம் என்ற பெயரில் உறுதிப்படுத்திவிட்டார்.

    • அண்ணே..கோயமுத்தூர் குண்டு வெடிப்பை ஏன் விட்டுட்டீங்க..! அந்த கேஸையும் காவிங்க மேலேயே ஏத்துங்க அண்ணே!

    • எந்தவொரு மதத்தின் மறை நூல்களிலும் இல்லாத அளவிற்கு குரானில் மற்றைய மதத்தவர்களை ‘காபிர்கள்’ (infidels) என்று இழிவுபடுத்தும் விடயங்கள், எதிரிகளாகச் சித்தரிக்கும் விடயங்கள், அவர்களுக்கெதிரான வன்முறைகளை தூண்டும் விடயங்கள் எல்லாம் உள்ளனவே.
      அப்போ, குரானை தடைசெய்யும்படி நாங்களும் போராடலாமா?

      • காபிர்கள் என்றால் இஸ்லாம் அல்லாதவர்கள் என்று அர்த்தம். இதில் எங்கே இழிவுபடுத்தப்படுகிறது.

        • Author: Dr. Sami Alrabaa
          Publication: Family Security Matters
          Date: January 23, 2009
          URL: http://www.islam-watch.org/Sami/Saudi-Textbooks-Hatred-Violence.htm

          Ahmed Al-Sarraf cited in Al-Qabas (June 2, 2007) some passages from a Kuwaiti school textbook taught at the first secondary grade. Here is an English translation of passages from the book, “Jurisprudence”, page 38:

          Who is, or who is not, punished in a Muslim society:
          A Muslim who kills an apostate or someone who commits adultery against an infidel is not punished.
          If a Muslim kills an infidel or a slave, he is not punished.
          If a Muslim man, father, or grandfather kills someone from his offspring, he is not punished.

  23. மிக அருமையான கட்டுரை. மதத்தின் பெய்ரால் தீவிரவாதம் செய்யும் ஒரே மத வாதிகள் முஸ்லிம்கள்தான். எங்கும் எவரும் ஏதாவது ஒரு கொள்கைக்காக போராடுவார்கள் அல்லது தீவிரவாதம் செய்வார்கள் ஆனால் பச்சைக்குழந்தைபோல் யாராவது எது சொன்னாலும் உடனே அது தன்னப் பற்றி தான் என்று ஒரே ஒப்பாரி வைக்கும் முஸ்லிம் அமைப்பின் செய்னுலாபுதீன் போன்றவ்ர்க்ள் தான் இத்னைசெய்கின்றன்ர்.

  24. இஸ்லாமியர்கள் ஒருங்கிணைந்து போராடினால் அது ஹிந்துக்களை ஒன்று படுத்திவிடும் என்று சொல்வது ,காவிரிக்காக தமிழர்கள் ஒன்றிணைந்து போராடினால் கர்நாடகம் ஒன்று பட்டு விடும் ,முல்லை பெரியாருக்காக போராடினால் கேரளம் ஒன்று பட்டு விடும் ,பாலாருக்காக போராடினால் ஆந்திரம் ஒன்றுபட்டு விடும் ,தலித்துக்காக போராடினால் மேல் ஜாதியினர் அனைவரும் ஒன்றுபட்டு விடுவார்கள் ,என்னய்யா இது ? அப்படி என்றால் உரிமைக்காக யாரும் போராடவே கூடாதா ? காவிகொள்கையில் உள்ள அதே இஸ்லாமிய எதிர்ப்பு வெறி “விஸ்வரூபத்தில்” உள்ளது ,அதைத்தானே தடை செய்ய சொல்லி போராடுகிறோம் , காவிக்கள் இனி செய்யப்போகும் செயலைத்தான் இந்த படம் இன்று செய்ய வருகிறது ,நேற்று (உன்னைப்போல் ஒருவன்) செய்தது, “முஸ்லிமா நீ, என்ன செஞ்சாலும் போராடாதே அவன் ஒன்னு கூடிருவான் “என்று வினவு பயமுறுத்துவது ,அதன் மேல் ,அதன் கொள்கை மேல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது ,”நீ அவனைப்போல் ஒருவனோ ” என்று . இந்த போராட்டமாவது ஹிந்துக்களை ஒன்று படுத்தி ,ஜாதி ஏற்ற தாழ்வை நீக்கும் என்றால் ,அதை விட சந்தோசம் எங்களுக்கு வேறு என்ன இருக்கிறது ,அப்படியாவது இந்த சனியன் பிடித்த சாதி வேற்றுமை நீங்கட்டுமே ,போராடவே கூடாது என்று “வினவே” சொல்வது ….வினவுக்கு அழகல்ல ,

  25. முட்டாள்தனமான வாதம் முஸ்லிம் என்றால் தொழுது விட்டு தான் வருவான், இந்து என்றால் கோவிலுக்கும், கிறிச்தவன் என்றால் சர்ச்சுக்கும் சென்று விட்டு தான் வருவான். அதற்காக அவர்கள் செய்வது எல்லாம் சசரியாகிவிடுவமா? அல்லது தொழுது விட்டு வருகின்றான் என்பதற்காக அவன் செய்யும் செயல்களை கண்டு கொள்ளாமல் விட்டுவிடலாமா? முதலில் யார் அல்லாகு அக்பர் என்றும் குர் ஆன் வசனஙகளை ஓதியும், லாயிலாகா இல்லாH முகம்மது ரசூலுல்லாக் என்று பேனர் கட்டிகொண்டு கழுத்த்றுத்தது யார்? முஸ்லிம்கள் தான். இதனை எந்த முஸ்லிம் அமைப்பாவது கண்டிக்கவாவது செய்ததா? அனைவரும் காட்டுமிராண்டிகள்

    • யார் நீங்கள்தான் சொல்லுங்களேன்? ஜெய் காளி என்று சூலத்தால் குதறியது யார்? சொல்லுங்களேன்.

    • Search in YouTube about “Islamic terror attacks in Afghan.” You can see lot of real videos of Islamist terrorists’ activities and killings in the name of Allah. then only talk about Islamic terrorism.

  26. தோழரே இந்த ஷாஹ் பானு வழக்கு பற்றிய முழு விளக்கம் கொண்ட ஒரு பதிவை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்.என்னை போன்ற ஆங்கிலம் சரிவர தெரியாதவர்கள் இதைப்பற்றி படித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த கோரிக்கை

  27. அப்போ அவர்கள் எது வேண்டுமாலும் செய்யலாம், அதை இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு எதிற்தால், அதனால் ஆ எஸ் எஸ் உள்ளே வருவார்கள் என்று கூறுவது, சரியாக படவில்லை.

  28. Vinavu
    you have correctly predicted the future . i agree your views. now what is happening is a very dangerous game . The platform has been layed for the religious extremist groups .. future looks very dark for TN.

    One chance of escape is there.. that is all moderate minorities should join hands with forward thinking people .. and have an alliance. otherwise we have to face a lot of religious extremists in TN. it is time to awake and join together and fight against all sorts of religious in tolerance .

  29. மிகச் சிறப்பானதொரு கட்டுரை. இசுலாமிய சகோதர்களே! உங்கள் மத உணர்விலிருந்து சற்று விடுபட்டு சிந்தியுங்கள், அப்போது புரியும், உங்கள் எதிர்ப்பின் அபத்தத்தையும், ஆபத்தையும். ‘விசுவரூபம்’ படத்தை திரை கிழிப்போம் நமது கூர்மையான விமர்சன ஆயுதத்தால். வினவு அதற்குரிய கருத்தியல் ஆயுதத்தை நிறையவே வழங்கியிருக்கிறது. தயவு செய்து ஆர்.எஸ்.எஸ் விரிக்கும் வலையில் விழ வேண்டாம்.

    இந்த படத்தின் மூலம் ‘இந்துக்கள்’ மனதில் உருவாகும் வெறுப்பை விடவும், முட்டாள்தனமான உங்கள் தற்போதைய தெருப்போராட்டம் அதிக வெறுப்பை ‘இந்துக்கள்’ மனதில் ஏற்படுத்தும். ஆர்.எஸ்.எஸை எதிர்க்கின்ற ஆற்றல் எந்தவொரு இசுலாமிய அமைப்பிடமும் இல்லை. மிகவும் சிரமப்பட்டு ஜனநாயக சக்திகள் ஆர்.எஸ்.எஸை அம்பலப்படுத்தி, தனிமைப்படுத்தி வரும் வேளையில் குதர்க்கத்துடன் செயல்பட்டு ஆர்.எஸ்.எஸை அம்பலப்படுத்தும் முயற்சியை மீண்டும் இருபது வருடத்திற்கு பின்னோக்கி இழுத்து விடாதீர்கள்.

  30. இந்தப் பதிவில் ஆச்சரியமான நிகழ்வுகளை காணமுடிகிறது. இதற்கு முன் வினவுடன் முரண்பட்ட பலர் வினவின் கருத்தை ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளனர். காரணம் இந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் என்ற ஒரு சொல் தான். ஆக அந்த பலரின் உள் மனதில் கனன்று கொண்டிருக்கும் இஸ்லாமிய வெறுப்புதான் இப்போது வினவின் பக்கம் பேச வைத்துள்ளது. ஏதேனும் ஒரு வகையில் இஸ்லாம் என்பதுடன் தீவிரவாதம் என்ற சொல் இணைந்திருக்க வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். வினவும் அப்படி சொல்லிவிட்ட போது குதூகலம் அடைகிறார்கள். வினவும் அப்படி சொல்லிவிட்டது என்பது மற்றுமொரு ஆச்சர்யக் குறியீடு. நரேந்திர மோடி இருக்கும் பாஜகவினரை இந்துமத தீவிரவாதிகள் என்றோ, குஜராத் படுகொலை நடந்த சமயம் மத்திய அரசில் பங்குபெற்ற திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சியை இந்து தீவிவாத கட்சிகள் என்றோ, இன்றளவும் பல இந்து மத வெறியர்களை தண்டிக்காத நீதிபதிகளை இந்து மதவெறியர்கள் என்றோ ஏன் கமலைக் கூட இந்து மதவெறியன் என்றோ அடையாளமிட்டதில்லை. வினவில் இவர்களெல்லாம் பிழைப்புவாதிகளாகத்தான் அடையாளமிடப் படுகிறார்கள். இவ்வாறு சொல்வதற்காக என்னை, தாலிபான், ரிசானா மற்றும் ஷாபானு விவகாரத்தில் பீஜே போன்ற மதவெறியர்களின் நிலைப்பாட்டை ஆதரிப்பவனாக நினைத்துக் கொண்டால் அது என் தவறல்ல. என்னுடைய கேள்வியெல்லாம் ……..இதனாலே தமிழகத்தின் காமெடி பீசுகளாக இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமியத் தீவிரவாதிகளா? வினவிற்குள்ளும் அமெரிக்க ஆன்மா ஊடுருவிவிட்டதோ!

    • jayalalitha = fascist

      BJP/RSS/VHP= பார்ப்பன பாசிசம்

      பார்ப்பன பாசிசத்தின் செயல் தந்திரம்!
      https://www.vinavu.com/2008/10/20/btsouth/

      குஜராத் பாசிச மோடியை தேர்வு செய்தது ஏன்?
      https://www.vinavu.com/2012/11/19/why-gujarat-elected-narendra-modi/

      ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!
      https://www.vinavu.com/2011/01/09/saffron-terror-exposed/

      உன்னைப்போல் ஒருவன்: பாசிசத்தின் இலக்கியம்!!
      https://www.vinavu.com/2009/10/01/unnai-pol-oruvan/

      குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!
      https://www.vinavu.com/2010/08/17/hindu-terrorist/

      குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !
      https://www.vinavu.com/2008/09/04/orrissa/

    • கொலைகார மோடியை காப்பாற்றும் உச்சநீதிமன்றம்!
      https://www.vinavu.com/2011/09/14/modi-escapes/

      நீதித்துறையை ஆள்கிறது இந்து மனச்சாட்சி!
      https://www.vinavu.com/2010/06/09/brahmanical-judiciary/

      கோத்ரா தீர்ப்பு: ஆர்.எஸ்.எஸ் சதிக்கு வக்காலத்து! அப்பாவி முஸ்லீம்களுக்குத் தூக்கு!!
      https://www.vinavu.com/2011/04/19/godhra-injustice/

      மோடியின் குற்றத்தை மறைக்கும் ஒளிரும் குஜராத்! ஆனந்த் தெல்டும்டே!!
      https://www.vinavu.com/2012/11/19/why-gujarat-elected-narendra-modi/

      குஜராத்-இந்து மதவெறிப் படுகொலைகள்: மறுக்கப்படும் நீதி!
      https://www.vinavu.com/2012/03/19/gurarat-carnage/

      • நாகராஜ் கட்டுரைகளின் பெரும்பாலான இடங்களில் இந்து மதவெறியர்கள், இந்துமதப் பாசம், இந்து மதவெறியன் என்றுதான் வருகிறது. ஆனால் இஸ்லாமியர்களின் எதிர்வினையைக் குறிக்கும் இடங்களிலெல்லாம் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று அழுத்தமாக வினவு குறிப்பிடுகிறது.

        • ///நரேந்திர மோடி இருக்கும் பாஜகவினரை இந்துமத தீவிரவாதிகள் என்றோ, குஜராத் படுகொலை நடந்த சமயம் மத்திய அரசில் பங்குபெற்ற திமுக, மதிமுக, பாமக போன்ற கட்சியை இந்து தீவிவாத கட்சிகள் என்றோ, இன்றளவும் பல இந்து மத வெறியர்களை தண்டிக்காத நீதிபதிகளை இந்து மதவெறியர்கள் என்றோ ஏன் கமலைக் கூட இந்து மதவெறியன் என்றோ அடையாளமிட்டதில்லை. ///
          குண்டு வைக்கும் இந்து தீவிரவாதிகள் !!
          https://www.vinavu.com/2010/08/17/hindu-terrorist/

          குஜராத் ‘பயங்கரவாதமும்’, ஒரிசா பயங்கரவாதமும் !
          https://www.vinavu.com/2008/09/04/orrissa/
          ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதம்! அசீமானாந்தாவின் ஆதாரம்!!
          https://www.vinavu.com/2011/01/09/saffron-terror-exposed/

    • //இதனாலே தமிழகத்தின் காமெடி பீசுகளாக இருக்கும் இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமியத் தீவிரவாதிகளா?//

      ஐயா, யாரைக் காமெடி பீசு என்று கூறுகிறீர்கள்? இன்று அவர்களால்தானே இன்று இந்த படம் முடங்கிக் கிடக்கிறது? அப்படியெனில் அவர்கள் காமெடிப் பீசுகளா அல்லது கலவரக் கேசுகளா? தெளிவுபடுத்தவும்.

      • //ஐயா, யாரைக் காமெடி பீசு என்று கூறுகிறீர்கள்? இன்று அவர்களால்தானே இன்று இந்த படம் முடங்கிக் கிடக்கிறது? அப்படியெனில் அவர்கள் காமெடிப் பீசுகளா அல்லது கலவரக் கேசுகளா? தெளிவுபடுத்தவும்//

        ரிஷி, கிளிப்பிள்ளை போல பேசுகிறீர்களே. இந்தப் படம் இஸ்லாமிய அமைப்புகளால்தான் முடக்கப்பட்டது என்பதை ஒரு குழந்தையிடம் சொன்னால் கூட வாய் பொத்தி சிரிக்கும். இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை ஜெயா பயன்படுத்திக் கொண்டார் என்பதுதான் உண்மை. இஸ்லாமிய அமைப்புகளுக்கு பயந்து ஜெயா. அரசு தடை போட்டு விட்டது என்பதெல்லாம் நகைப்புக்குரியது. அப்படியாயின் இந்நேரம் பீஜே போலீசின் குண்டாந்தடியினால் வீழ்த்தப்ப்ட்டிருப்பார். நேற்று மாலையே கமலும், இஸ்லமிய அமைப்புகளும் சுமூக முடிவிற்கு வந்துள்ளன. அதற்குப் பிறகும் மண்டபத்தில் எழுதிக்கொடுப்பதாக வினவு வலிந்து திணிக்குமேயானால் வினவை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டிவரும்.

        • இல்லை, அபு.

          //நேற்று மாலையே கமலும், இஸ்லமிய அமைப்புகளும் சுமூக முடிவிற்கு வந்துள்ளன. //

          இந்த நிகழ்வினை நானும் டிவியில் பார்த்தேன். பிரச்சினை தீர்ந்தால் சரிதான் என்றுதான் நினைத்தேன்.

          அதன்பின் இரவு தந்தி டிவியில் முஸ்லீம் பிரதிநிதி என்று சொல்லிக்கொண்டு பக்ருதீன் என்பவர் கலந்து கொண்டார். ராதாரவி பேசும்போது முஸ்லீம்களுடன் கமல் சமரசம் செய்து கொண்டுவிட்டார்.. இன்று மாலையே அது பற்றிய செய்தி வந்தது என்று குறிப்பிட்டார்.ஆனால் அதை பக்ருதீன் மறுத்தார். அது ஒரு காங்கிரஸ் எம்பியின் (ஆருண் எம்பி) உள்நுழைவு என்றும் அதெல்லாம் சமரசம் அல்ல என்றும் குறிப்பிட்டார்.

          இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பை ஜெயா பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்.. அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள் என்றுதான் இக்கட்டுரையும் குறிப்பிடுகிறது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளிடையே கூட இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன என்பதும் புலப்படுகிறது.

          இந்தக்கட்டுரையும் கூட இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளைத்தான் தீவிரவாதிகள் எனக் குறிப்பிடுகிறதே ஒழிய அனைத்து முஸ்லீம்களையும், அமைப்புகளையும் அல்ல.

          //நேற்று மாலையே கமலும், இஸ்லமிய அமைப்புகளும் சுமூக முடிவிற்கு வந்துள்ளன. //

          மீண்டும் இந்த மேற்கோளையே எடுத்துக்கொள்கிறேன். இதில் குறிப்பிடும் இஸ்லாமிய அமைப்புகள் என்ற பொதுவான வார்த்தை யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறது என சொல்ல முடியுமா?

          • நேற்று இரவு சன் நியூஸ் தொலைக்காட்சியில் இந்தியன் முஸ்லீம் லீகைச் சேர்ந்த ஒருவர் (பெயர் தெரியவில்லை) இனி நடக்கும் நிகழ்வுகளுக்கு இஸ்லாமிய அமைப்புகளும் இஸ்லாமியர்களும் பொறுப்பல்ல என்பதனை நேரிடையாக தெளிவுபடுத்தியிருந்தார். மேலும், சர்ச்சைக்குரியதாக இஸ்லாமிய அமைப்புகளால் சுட்டிக்காட்டப்பட்ட காட்சிகளை நீக்குவதாக கமல் ஒத்துக் கொண்டுள்ளதால் அதன் பிறகு படம் வெளியாவதில் அவ்வமைப்புகளுக்கு ஆட்சேபனையில்லை என்று கூறியதாகவுமே செய்திகள் வாசிக்கப்பட்டன. இதன் காரணமாகவே இன்று ஜெயாவும் சட்டம் ஒழுங்கு என்ற சொத்தை வாதத்தை முன்னிலைப்படுத்தி இஸ்லாமியர்கள் வன்முறை செய்திருப்பார்கள் என்று இஸ்லாமியர்களை வன்முறையாளர்களாக சித்தரித்துக்கொண்டிருக்கிறார். அது இருக்கட்டும். மண்டபத்தில் எழுதிக் கொடுத்ததாக வினவு எழுதியது பொய்தானே. மேலும் வினவு மீதான எனது குற்றச்சாட்டு என்னவென்றால் வன்முறையில் ஈடுபடும் இரு பிரிவினரில் ஒருவரை மட்டும் தீவிரவாதிகள் எனவும் மற்றவரை மதவெறியரளாகவும் வினவு சித்தரிக்கிறது என்பதுதான். இங்கு ஆர் எஸ் எஸ்ஸின் மனசாட்சியை வினவும் பேசுகிறதா? தாலிபானை தீவிரவாதிகளாக (சொல்லவேண்டாம் என சொல்லவரவில்லை) சுலபமாக கடந்து செல்லும் வினவு விடுதலைப் புலிகளை (மக்களை கொன்ற கணக்கு இருக்கிறதா?) தீவிரவாதிகள் என எப்போதாவது கூறியிருக்கிறதா?

  31. இந்த படம் வரட்டும். கல்லூரியில், ‘இந்து’ மாணவர்களிடம் பேசுவோம். விவாதிப்போம். அவர்கள் தானே அதிகம் தியேட்டர் சென்று பார்ப்பவர்கள். வினவு தோழர்களுடன் இணைந்து அகமது ஜேன் போன்ற இசுலாமிய நண்பர்களும் வரட்டும். இசுலாமியர்களின் நியாயத்தை கம்யூநிஸ்ட்களை விடவும் நேர்மையாக முன்வைப்பவர்கள் எவரும் இருக்க முடியாது.

    ஜைனுலாப்தீன், ஜவாஹிருல்லா பிடியிலிருந்து வெளியே வாருங்கள். வினவின் முயற்சிக்கு இந்துக்களிடமிருந்து ஆதரவு மிக எளிதாக கிடைத்து விடும்; அதில் கவலையில்லை, உங்கள் ஆதரவும் கூட முறைப்படுத்தப்பட்டால் இந்துத்துவத்திற்கு தமிழகத்தில் கல்லறை கட்டலாம்.

    • இந்துத்துவத்திற்கு தமிழகத்தில் கல்லறை கட்டலாம் என்ற எண்ணம் உங்களிடம் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் இசுலாமும் கிறித்தவமும் தொடரலாம் என்பதாகப்படுகின்ற உங்களின் கம்மியூனிசம் தனித்துவமானது. கால்மார்க்சு பாவம், இப்படியெல்லாம் கம்மியூனிச்டுகள் முளைப்பார்கள் என்று எண்ணிப்பார்த்திருக்க மாட்டார்.

      • இனியன்,
        வெறித்தனமான இந்துத்தவத்திற்கும், வெறித்தனமான முஸ்லீம் அடிப்படைவாதங்களுக்கும் கல்லறை கட்ட வேண்டும் என்பதுதான் சுகதேவ் குறிப்பிடுவது. அதனால்தான் //ஜைனுலாப்தீன், ஜவாஹிருல்லா பிடியிலிருந்து வெளியே வாருங்கள். // இவ்வாறு கூறுகிறார்.

        இந்து மற்றும் முஸ்லீம் சகோதரர்கள் ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவதை தடுக்கும் வகையிலான தீய சக்திகள் ஒழிக்கப்பட்டால்தான், பொருளாதார விடுதலையை நோக்கிய அடுத்த பயணத்தை துவங்க முடியும் என்பதும் சுகதேவ் வாதமாக நான் புரிந்து கொண்டிருக்கிறேன். உங்களுக்குப் புரியவில்லையா?

        • நீங்கள் கூறியதுதான் நோக்கமென்றால் எனது பின்னூட்டம் தவறானதே. மன்னிக்கவும்.

          என்னைப்பொறுத்தவரை எந்தவொரு மதமும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதுமல்ல, 100% சரியானதுமல்ல. விமர்சனங்கள் நியாயமாக முன்வைக்கப்படவேண்டும், மதவெறி தவிர்த்து நடுநிலையாக விவாதிக்கப்படவேண்டும். எனது மதம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்று யாராவது கூறின் அவர்களை மதவெறி மூடர்கள் என்று அழைப்பதைத்தவிர வேறொன்றும் கூறமுடியாது.

  32. அரசியல் சூழ்ச்சிக்கு முஸ்லிம்கள் குர்பானி கொடுக்கப்பட்டனரா…?

  33. எல்லாவற்றுக்கும் ஆதாரம் வைத்துள்ளார்களாம் எதுய்யா அதாரம் afganishtan காரன் போய் அமெரிக்க மேல குண்ட போட்டானா, அவன் பாட்டுக்கு அவன் நாட்டுல இருக்கான் நீ பொய் அவமேல குண்ட போட்டா அவன் என்ன பூ செண்டு குடுத்து உன்னை வரவேர்பானா.இன்னொரு விஷயம் பின்லேடன் உன்னைவிட அமெரிக்காவுக்கு நெருங்கிய கூட்டாளியா இருந்தான் அவன் கதி என்ன ஆச்சு

    • பெண்கள் படிக்கும் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு வைக்கிறார்கள்

      -இதை சாய்சில் விட்டுவிட்டீர்கள்

    • @Shahibsha
      Funny comment! How ignorant people are…Or religion is not letting people think.
      You have no clue about the regime in Afgan. Americans have done a favor to Afgan people.
      But that is not free.

  34. எங்கள் உறவுகளை உயிரோடு எரித்தீர்கள் ,தாயின் வயிறை கிழித்து குழந்தையை எடுத்தீர்கள், சொத்துக்களை அளித்தீர்கள் நங்கள் பொறுமை காத்தோம் , அனால் எங்கள் மார்க்கத்தை இழிவு படுத்தினால் நங்கள் போருதுகொள்ளமட்டோம் ஏனென்றால் அது எங்கள் உயிரை,செல்வத்தை விட மேலானது, என்றேனும்ஒருநாள் சாகத்தான் போகிறோம் அது எங்கள் மார்கத்திற்காக இருந்தால் அதை விட பெரிய பாக்கியம் வேறு எதுவும் இல்லை .

    • அப்படியே மார்க்கம் மார்க்கம் என்று கூவிக்கொண்டே உன் கழுத்தை வெட்டிவிடு, நிச்சயம் சொர்க்கத்திற்குப் போய்விடுவாய். அப்படியும் சொர்க்கம் கிடைக்காதுவிடின் என்னை வந்து பார்.

    • // என்றேனும்ஒருநாள் சாகத்தான் போகிறோம் அது எங்கள் மார்கத்திற்காக இருந்தால் அதை விட பெரிய பாக்கியம் வேறு எதுவும் இல்லை .//

      @Shahibsha முகமது நபியை இழிவுபடித்திய நபரை உங்கள் இறைத்தூதர் அவர்களை இழிவுபடுத்தினாரா அல்லது அவர்களை அன்பு செய்தாரா….. குரானில் அந்த பக்கத்தை மேற்கோள் காட்டி விளக்கவும்..

  35. our priority must be in agri lands becoming plots, 40% grains stored in government stores goes waste, many poor people dying without food Prices of foods goes beyond unreachable, Within ten yrs prices of the essential living things will go hgh. Nobody thinks about that, air, water, organic foods become polluted, foods becoming poison now, because of pesticide. this is wat we r passing to our next generation.India will become worthless live because of our fight.

  36. ஏற்கனவே மதத்தை பயன்படுத்தி குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் லாபங்களுக்காக மதத்தை பயன்படுத்தும் தலைவர்களின் செயலுக்கு துணை நின்று மேலும் தங்கள் மீது குற்றம் சுமத்தப்படும் செயல்கள் நியாயம்தான் என எண்ண வைக்கின்றனர்.

  37. ஒரு கட்டப்ன்சாயத்து பிரச்னை, சட்டம் ஒழுஙுகு மற்றும் மதகலவரமாக மாற்றப்பட உள்ளது! ஏற்கெனவெ அமெரிக்க தூதுவரக முற்றுகையினால் கேவலப்பட்ட தமிழக காவல் துறை, இப்பொது ஆளும் கட்சியின் கட்டைபன்சாயத்திற்கு துணை போகும் ஏவல் துறையானதே!

  38. உலக அளவில் முஸ்லிம்களின் தீவிரவாதம் என்பது அமெரிக்க நடத்தும் உலக அரசியல் .
    இந்திய அளவில் முஸ்லிம்களின் தீவிரவாதம் என்பது பாஜக நடத்தும் அரசியல் .
    இந்த அரசியல் விவகாரத்தை இப்போது கமல் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன் .
    இப்போதுதான் அவருக்கு அரசியல் என்றால் என்ன என்பதையும் அந்த மற்றவர்களின் அரசியல் ஆதயத்திர்க்காக முஸ்லிம்கள் என்ன கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அந்த படத்தை அவராகவே திரும்ப பெற்றுக் கொள்வது அவரது மனிதாபிமானத்தை காட்டும்

    • கேவலம் எம்பி சீட்டுகளுக்காக தாமாத் இயக்கங்கள் அரசுக்கு அடிபடிந்துவிட்டன.. மதவாதிகளை கேள்வி கேட்டக முடியாமல் திணறும் பாவப்பட்ட S.Ibrahim

      பேய் ஆட்சி செய்தால் வேதங்களும் பிணம் தின்னுமோ.. என்ற பழமொழிக்கு அர்த்தம் இதுதானோ…

    • மதத்திடம் மூளையை அடகு வைத்துவிட்டு அல்லாவின் பெயரால்ன்னு சொல்லிக்கிட்டு குண்டு வச்சா, மட்டுனவன் மட்டும் இல்லாம மத்தவனும் பாதிக்க படத்தான் செய்வான். அதனால் முஸ்லிம் மக்கள் இந்த இஸ்லாமிய அமைப்புகளை புறம் தள்ளி விட்டு , முற்போக்கு – ஜனநாயக இயக்கங்களை துணை கொள்ள வேண்டும்.
      இப்ராஹிம் பாய்,
      முஸ்லிம்களுக்கு ஐந்தாவது கடமை யோடு ஆறாவது கடமையும் உண்டு என்று சொல்லும் இஸ்லாமிய அமைப்பு ஒன்று உண்டு தெரியுமா? அது என்ன கடமை என்று தெரியுமா.?

  39. இந்த கட்டுரையின் பின்னூட்டங்கள் தவறான பாதையில் செல்கின்றன.

    இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு பிரச்சனை குரான் பற்றி மட்டும்தான், அவர்களுக்கு இங்குள்ள ஏழை இஸ்லாமியர்களை மோடி எவ்வளவு பேரை வேண்டுமானாலும் கொலை செய்து கொள்ளட்டும், ஆனால் குரானை மதித்தால் போதுமா?

    அமெரிக்க பயங்கரவாதம் சில பத்து லட்சம் இஸ்லாமியர்களை ஈராகிலும், ஆப்கானிலும் படுகொலை செய்து வருகிறது, அதற்கு சவுதி, துபாய், சார்ஜா, அபுதாபி போன்றவைகள் காட்டி கொடுக்கும், கூட்டி கொடுக்கும் வேலையை செய்கிறது.

    ஆனால் இந்தியாவில் இருக்கும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மோடியின் கொலைகள் பற்றியோ, அமெரிக்க,இஸ்ரேல் செய்யும் படுகொலை பற்றியோ வாய் திறக்காமல், குரானை பிடித்து தொங்கி கொண்டுள்ளனர்.

  40. இந்தக் கட்டுரையை அனைத்து வழிகளிலும் இயன்றவரை பரப்புங்கள் இஸ்லாம் மக்களே…அரசியல் சூழ்ச்சியில் இஸ்லாம் மக்களின் பரிதாப நிலைப்புரிகிறது. அல்லாகு அக்பர் என்றும் குர் ஆன் வசனஙகளை ஓதியும் கழுத்தை அறுப்பது எத்தனையோ வீடியோக்களை இணையத்தில் பார்க்கலம்… அதை படத்தில் காட்டினால் என்ன தவறு..

    விஜயகாந்த் எத்தனையோ பாக்.தீவிரவாதிகளை இஸ்லாம் மக்களை கேவலமாக திட்டியிருக்கார்.. அதற்கு ஒரு எதிர்ப்பு இதுவரையில்லையே…..

    • சகோதரர் கல்நெஞ்சம் அவர்களே தாங்கள் கேட்ட கேள்வி குர்ரான்னை படித்துவிட்டு இதுவரை யாரும் கொள்ளவில்லையா என்று கேட்கிறீர்கள்.இதற்கு என்னுடைய பதில் எனாக்கு தெரிந்த வகையில் இதுவரை யாரும் அவாறு செய்ததாக தெரியவில்லை . ஒரு வேளை அவாறு அவர்கள் அநியாயமாக கொலை செய்திருந்தால் .அது கண்டிப்பான முறையில் பெரும் தவறு பெரும் பெரும் பாவம் அவர்கள் நரகம் தான் செல்வார்கள் . நான் தங்களிடம் ஒன்று கூற விரும்போகிறேன் . தாங்கள் ஒருமுறை குர்ரானை படித்துவிட்டு அதில் மற்றவர்களை அநியாயமாக கொல்ல சொல்லிருந்தால் தங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதில் அவ்வாறு ஒரு வார்த்தை கூட கிடையாது . இதிலிருந்து தன்னகளுக்கு தெரியும் குர்ரான் யாரையும் கொள்ளசொல்வதில்லை என்று . உதாரனத்திற்க்கு. ஹிந்து மத வாதிகளில் சிலர் விபச்சாரத்திலும் பலமோசடிகளிலும் ஈடுபடுகின்றனர் அதற்காக தங்கள் அவர்கள் பகவத்கீதை என்ற வேதத்தை படித்துவிட்டு தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று கூற மாட்டீர்கள் . அது அவருடைய தனிப்பட்ட தவறான செயல் .அதற்க்கு மதம் பொறுப்பாகாது . என்றே கூறுவீர்கள் . எனவே இது தான் சரியான கருத்தும் கூட.
      எனவே சற்று சிந்தித்து பாருங்கள் .

  41. வினவு,

    சினிமா ரூபத்தில் தான் எந்த மாற்றமும் தமிழகத்தில்நடைபெற வேண்டும் போலிருக்கிறது.
    தமிழர்,தர்மபுரி,முல்லைபெரியார்,காவிரி,விவசாயிதற்கொலை,கூடஙுளம் அனைத்து தமிழனின் வாழ்வு சார்ந்த பிரச்சினையும் இந்த போலி அரசுகளால் என்ன தீர்வு காணப்பட்டது,ஒன்றும் இல்லை தானே!

    அதை போல தான் இதுவும்.கமல் ஒன்றும் உத்தமன் இல்லை.முசுலீம்கள் யாரும்நபிகள் இல்லை.
    வரட்டு சிந்தனை வாதத்தை தொடரவேண்டாம்.
    >>>>மெய்தேடி

  42. இது வினவு தளம் தானா? வினவின் கட்டுரை தானா? ஒரு நிமிடம் சவுக்கு தளமோ என்று தோன்றியது!

  43. ஒரு திரைப்படமோ, தொலைக்காட்சியோ, வானொலியோ, நாளிதழோ, விளம்பரங்களோ, சுவர் எழுத்துக்களோ, ஃபிளக்ஸ் போர்டுகளோ அவற்றின் மீதான கருத்துக்களை சம்மந்தப்பட்ட ஊடகங்கள் சந்திக்கிற வெகுமக்கள் அத்தனை பேருக்கும் கொண்டு செல்லாது என்பது நாம் அறிந்ததாகும். ஒரு ஃபிளக்ஸ் போர்டு ஒரு நகரில் வாழும் இலட்சக்கணக்கான மக்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு செல்கிறது. ஆனால் அதன் மீதான நமது கருத்தை, நாம் சந்திக்கிற வெகு சிலரிடத்தில் மாத்திரமே கொண்டு செல்ல முடிகிறது.

    மேற்கண்ட ஊடகங்களின் வலிமையை நாம் சாதாரணமாக குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஒருமுறை உலகறிந்த சமூக சிந்தனையாளர் அருந்ததிராய் அவர்களிடம் உள்நாட்டு பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் எது? என்று செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, அவர் நீட்டி முழக்காமல், எளிமையாகச் சொன்ன பதில், “நடுத்தர மக்களின் பொதுப்புத்தி” என்பதுதான். அந்த நடுத்தர மக்களின் பொதுப்புத்தியை உருவாக்குகிற வேலையை மேற்கண்ட ஊடகங்கள் தான் உருவாக்குகின்றன என்பதும் மிகையாகாது.

    இத்தகைய வலிமையான ஊடகங்கள் பெரும்பாலும் ஒரு வழிப் பாதையாகத்தான் இருக்கின்றனவே தவிர, ஒரு சாதாரண குடிமகனின் கருத்தை சொல்ல வாய்ப்புகளை உருவாக்குகிற வெளியை மறுக்கின்றன. …………..

    – நீலவேந்தன்
    thanks
    keetru.com

  44. வினவில் வரும் கட்டுரைகள் வெறுப்புக் கட்டுரைகளாக மட்டுமே இருந்தது என்று நான் நினைத்த போது, இங்கே வருவதை நிறுத்திக்கொண்டேன். ஆனால் சமீபத்தில், கருத்துள்ள நிதானமான கட்டுரைகளைக் காண்கிறேன். வாழ்த்துக்கள்! இந்து மதத்தில் உள்ள மூடப்பழக்க வழக்கங்களை சாடுவதற்கு பலர் உள்ளனர். அது தேவையும் கூட. ஆனால், இஸ்லாத்தில் உள்ள காட்டுமிராண்டித்தனமான மூடப் பழக்கங்களுக்கு எதிர்க்குரலே அனேகமாக இல்லை. கிளிப்பிள்ளை போல சொன்னதையே திரும்பத் திரும்பச்சொல்லும், மூளைச் சலவை செய்யப்பட்ட இஸ்லாமிய நண்பர்கள் அதை ஒரு வெற்றியாக நினைத்த்துக்கொண்டார்கள். இந்தச் சூழ்நிலையில், வினவின் நேர் கொண்ட பார்வையும், தைரியமும் மரியாதைக்குரியவை. நன்றிகள்!

  45. “நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், “பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு”.

    I also saw that debate. what keyar said was different from what you have mentioned here.

    I strongly condemn your misrepresentation and your conclusion.

    please you can see the debate again.

    keyar just said we majority were patient . no muslim representative were forzen by shock as you concluded. Indeed they augmented very well

    So your conclusion and misrepresentation is shocking

    Dont write something like Dinamalr

    • நியாஸ் “பெரும்பான்மையினர் நாங்கள் பொறுமையாக இருக்கிறோம்” என்று சொல்வதன் பொருளே நாங்கள் நினைத்தால் தொலைத்து விடுவோம் என்பதுதானே, இது கூடவா தெரியவில்லை?

  46. ஜெயலலிதா ஆட்சியில் எதுவுமே நடக்கலாம். அந்த பேயின் சொந்த பிரச்சனையில் பகடைக்காய் முஸ்லிம்கள். இன்னும் உங்களை சகோதரர்களாக பார்ப்பது உங்கள் கைகளில்.. தயவு செய்து உங்களை நீங்களே தரம் தாழ்த வேண்டாம். இது ஒரு இன பிரச்னை அல்ல.

  47. ஒரு பலமிக்க மனிதன் ஒரு ஐந்து வயது சிறுவனை காட்டி இவன் என்னை அடிக்கிறான் எங்களை கொல்ல பார்கிறான் என்று கூச்சலி ட்டுக்கொண்டே அந்த சிறுவனை நாயடி பேயடி அடிக்கிறான். இப்படித்தான் உலகத்தில் இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.அசுர பலம் பொருந்திய அமெரிக்க மற்றும் அதன் அடிவருடி நாடுகள் இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை மறைத்து தங்களின் பலம் வாய்ந்த மீடியாக்களால் அவர்களின் போராட்டத்தை கொச்சை படுத்தி அவர்களை உலகத்தின் விரோதியாக சித்தரிக்கின்றன. இஸ்ரேலை எதிர்த்து பாலஸ்தீன மக்கள் போராடினால் அவன் இஸ்லாமிய தீவிரவாதி. ஆக்கிரமிப்பு ரசியர்களை எதிர்த்து போராடினால் அவனும் இஸ்லாமிய பயங்கரவாதி . காஷ்மீரிகள் அவர்களின் நியாத்திற்கு போராடினால் அவனும் இஸ்லாமிய பயங்கரவாதி.அவன் எதிர்ப்பை காட்ட ஒரு குண்டு வெடித்தால் அவன் நாட்டில் கூட்டமாக சேர்ந்து கொத்து கொத்தாக குண்டுகளை வீசுகிறார்கள் .அவன் பத்து பேரை கொன்றால் இவன் ஆயிரம் பேரை கொல்கிறார்கள் . இஸ்லாமிய நாடுகளின் கனிமவளங்கள் கொள்ளை அடிக்கப்படுகின்றன. இராக்கில் அணுகுண்டுகள் இருக்கென்று கூறி (பண்ணிகளை போன்று) கூட்டமாக அந்நாட்டை தாக்கி
    2 லட்சம் மக்களை கொன்று குவித்து ஒரு இரும்பு குண்டை கூட எடுக்காமல் திரும்பியவர்களை எவனாவது கண்டித்தானா ? எவனாவது அதை படம் எடுத்தானா ? ஆனால் இங்கே அடிவாங்கி பரிதாபநிலையில் இருப்பவன் தான் வில்லன்.அநீதி இழைக்கப்பட்டவன் தான் அயோக்கியன்.இப்படித்தான் படம் எடுக்கிறார்கள். இது எப்படி முடிகிறது? அவர்களின் பலமான ஊடகங்களால் தொடர்ந்து செய்யப்படும் பிரசாரத்தினால் தான். தொலைக்காட்சி, பத்திரிகை, ஹாலிவுட் திரைப்படங்கள், இணையதளங்கள் என்று தொடர்ந்து செய்யப்படும் பிரசாரமே. இங்கு ஊடகத்தால் நியாயங்கள் புதைக்கப்படுகிறது. இந்தியாவிலும் இதேதான் நடக்கிறது. 5 வருடங்கள் முன்புவரை இந்தியாவில் குண்டு வைப்பவர்கள் இஸ்லாமியர்கள் தான் என்று இஸ்லாமியர்களே நம்பினார்கள். இன்று அநேக குண்டு வெடிப்புகள் காவிக்கூட்டத்தின் நயவஞ்சகத்தால் நடத்தப்பட்டிருக்கும் உண்மை வெளிவந்துவிட்டது. எந்த அமைப்பாவது கண்டித்தார்களா? அதை யாராவது படம் எடுத்தார்களா ?அந்த நியாயத்தை பற்றி எல்லாம் கண்டுக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் உள்ளிருக்கும் மத வெறி. ஆனால் காட்டப்படுவது பாதிக்கப்பட்டவன் தான் மத வெறி பிடித்தவன் என்று. இன்று அப்படித்தான் விஸ்வரூப படப்பிரச்சனையில் மீடியாக்களில் முஸ்லீம்கள் சித்தரிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்

    • நீங்க கேக்கும் கேள்விக்கு எவனும் பதில் சொல்ல மாட்டான் , நீங்க காட்டு கத்து கத்திகிட்டே இருக்க வேண்டியதுதான் .

  48. .அஸ்லாமு அலைக்கும்.
    திண்ணமாக அல்லாஹ் வினவு,கமல்,மனுஷ்ய புத்திரன் மற்றும் இன்னபிற காபிர்களை கடுமையாக தண்டிப்பான்.இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.அந்த அல்லாஹ் இதை பார்த்துகொண்டிருக்கிறான்

    • சகோதரர் ரஹீம் அவர்களே தாங்கள் இவ்வாறு அவர்களை கண்டிப்பது. பெரும் தவறு நீங்கள் இவ்வாறு கூறுவது அவர்களிடத்தில் இஸ்லாத்தை பற்றி தவறான எண்ணத்தை ஏற்படுத்தும்.எனவே தங்கள் இனி இவ்வாறு கூறாதீர்கள்.

  49. படத்திற்கு மீண்டும் தடை விதித்திருப்பது ஏற்றுகோள்ள முடியாதது.இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கள். இந்த சதுரங்க ஆட்டத்தில் முஸ்லிம் மக்களின் “ஏக” பிரதிநிதிகளை பகடைக் காய்களாக பயன்படுத்தி பிழைப்பு நடத்த தமிழகஅரசு முயற்சிக்கின்றது. இவர்களும் நக்குகின்ற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கம் என்ன, என நக்கி பிழைப்பு நடத்துகிறார்கள். ஆட்டத்தின் வருணனையாளர்களாக சுப்பர்ஸ்டார், இயக்குனர் இமயம், சீமான், அமீர், “பெருந்தலைவர்” கலைஞர், சு. பாண்டியன் மற்றும் பலர் இருக்கின்றார்கள், இறுதியாக கப்டனும் வந்திருக்கிறார்.

    இந்த படத்தை பார்த்தவன் என்ற முறையில் இவர்கள் கூறுவது போல் இஸ்லாமை இழிவுபடுத்தும் காட்சிகள் ஏதும் இல்லை. படம் இடம் பெரும் சூழல் ஆப்கானிஸ்தானும், அமெரிக்காவாகவும் இருக்கின்றது.

    உண்மையில் தலிபானின் ஷரியாத் ஆப்கானிஸ்தான் எப்படி இருந்தது? காலையில் எழுந்து அபின் சாப்பிட்டுவிட்டு, வீட்டில் இருக்கும் பொண்கள் மற்றும் சிறுமிகள் மீது பெரிய சாக்கு பையை எடுத்து தலையில் போர்த்தி, வீட்டின் மூலையில் விட்டு வீட்டை பெரிய பூட்டால் பூட்டி , கட்ட பஞ்சாயத்துக்கு சென்று புனித குரானையும், ஹதீஸையும் பார்த்து யார் யாரின் தலையை வெட்ட வோண்டும், யார் யாரை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என தீர்ப்பு கூறி, எங்காவது பாடசலை திறந்திருந்தால் மாணவர்களை பிடித்து சவுக்கால் அடித்து விட்டு ,பாடசலைக்கு பெரிய வெடிகுண்டு வைத்துவிட்டு, பள்ளி சிறுமிகளை பிடித்துபோய் சாகபோகும் முல்லாவிடம் காசாக்கி கெண்டு தனக்கும் ஒண்றுடன் வீடு செல்வது தானே அவர்களுடைய சராசரி மார்க்க வாழக்கை. ஆனால் கமல் இந்த உண்மைகளை
    கூறாமல் வேறு ஏதே கூறுகிறார்.இதனை ஆப்கானிஸ்தானிய படங்களான
    OSAMA,KITE RUNNER போன்றவற்றில் ஆப்கானிஸ்தானிய இஸ்லாமிய இயக்குனர்கள் சிறப்பாக கூறுகிறார்கள்.

    படத்தில் ஒரு காட்சி வருகின்றது, அமெரிக்க பணய கைதியின் தலையை வெட்டி கொல்வது போன்று, புனித திருகுரான் வாசிக்கப்பட்டு கலால் (Halal)செய்து தலையை வெட்டுகிறார்கள், இது போன்ற காட்சிகள் அல் குவைதா இணையத்தில் நிறைய உண்டு.

    இன்னும் ஒரு காட்சியில் (செய்யாத) குற்றத்திற்காக தூக்கிலிடுவது போன்று காட்சி வருகிறது.ரிசானாவுக்கு சவுதி அரேபியா செய்தது மாதிரி புனித திருகுரான் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகிறது. ஷரியாத் சரியாக பின்பற்றப்படுகிறது. இதில் என்ன தவறு?

    இந்த மரண தண்டனை காட்சிக்காக இஸ்லாமியர்கள் யாரும் கமலை கண்டிக்க முடியாது. இதை கண்டித்தால் அது அல்லாவின் தேசமான சவுதியை அரேபியாவை அவமதிப்பதாகும்.

    • சவுதி விவகாரம்தான் ஊரெங்கும் நாறுதே…உண்மை எப்பவும் சுடத்தான் செய்யும்.அதான் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்.

    • அப்கானிஸ்தான் போய் பார்த்த மாறி நல்ல ரீல் உடுற தம்பி. சரி எப்படியோ இருந்துட்டு போகட்டும் தாலிபான்கள் தீவீர்வதிகளாக மீடியா உலக மக்கள் மனதில் பதித்து விட்டது. அதை ஏன் தம்பி கமல் படமாக வேண்டும் . தமிழ் நாட்டில் பெரும்பாலன் மக்கள் ஆப்கைச்தான் பற்றியோ , தாலிபான்கள் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை அவர்கள் இப்படத்தை பார்த்தல் கூட பழகும் இஸ்லாமியரை கூட தீவிரவாதியாக பார்க்கும் எண்ணம் தான் உருவாகும்.

      • படம் பார்த்தால் தான் அந்த எண்ணம் வருமா. தினமும் டி.வி யில காண்பிக்கிறங்களே அப்ப வராதா. பாகிஸ்தானில் தினமும் குண்டு வைத்து மக்கள் இறக்கிறார்களே. அதெல்லாம் யார் செய்கிறார்கள். இந்திய ராணுவத்தினரின் தலையை வெட்டியது யார்?

  50. அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! அல்லாஹ் அறிந்தவன்; செவியுறுபவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! -2:244

    உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் போர் செய்வது உங்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ளது. ஒன்றை நீங்கள் வெறுக்கலாம். அது உங்களுக்கு நன்மையானதாக இருக்கும். ஒன்றை நீங்கள் விரும்பலாம். அது உங்களுக்குக் கெட்டதாக இருக்கும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். -2:216

    இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ, வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியைப் பின்னர் வழங்குவோம் -4:74

    நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர். (ஏக இறைவனை) மறுப்போர் தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர். எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்கு எதிராகப் போரிடுங்கள்! ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது. -4:76

    அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களில் (எவரையும்) உற்ற நண்பர்களாக ஆக்காதீர் கள்! அவர்கள் புறக்கணித்தால் அவர்களைப் பிடியுங்கள்! அவர்களைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களில் எந்தப் பொறுப்பாளரையும், உதவியாளரையும் ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்! -4:89

    நம்பிக்கை கொண்டோரில் தக்க காரணமின்றி போருக்குச் செல்லாதோரும், தமது பொருட்கள் மற்றும் உயிர்களால் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் சமமாக மாட்டார்கள். தமது பொருட்களாலும், உயிர்களாலும் போரிடுவோருக்கு, போரிடாதோரை விட ஒரு தகுதியை அல்லாஹ் சிறப்பாக வழங்கியிருக்கிறான். அனைவருக்கும் அல்லாஹ் நல்லதையே வாக்களித்திருக்கிறான். போருக்குச் செல்லாதோரை விட போரிடுவோரை மகத்தான கூலியாலும், பல தகுதிகளாலும், தனது மன்னிப்பாலும், அருளாலும் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான் -4:95, 96

    மறுப்போரின் உள்ளங் களில் பயத்தை ஏற்படுத்துவேன். எனவே கழுத்துகளுக்கு மேலே வெட்டுங்கள்! அவர்களின் ஒவ்வொரு இணைப்பையும் வெட்டுங்கள்! 8:12

    கலகம் இல்லாதொழிந்து அதிகாரம் முழுவதும் அல்லாஹ்வுக்காக ஆகும் வரை அவர்களுடன் போரிடுங்கள்! -8:39

    எனவே போரில் அவர்களை நீர் வெற்றி கொண்டால் அவர்களுக்குப் பின்னால் உள்ளவர்களுடன் அவர்களை யும் ஓட ஓட விரட்டுவீராக! அப்போது தான் அவர்கள் பாடம் கற்பார்கள். -8:57

    இணை கற்பிப்போரைக் கண்ட இடத்தில் கொல்லுங்கள்! அவர்களைப் பிடியுங்கள்! அவர்களை முற்றுகையிடுங்கள்! ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களுக்காகக் காத்திருங்கள்! அவர்கள் திருந்திக் கொண்டு, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தும் கொடுத்தால் அவர்கள் வழியில் விட்டு விடுங்கள்! -9:5

    அவர்களுடன் போர் செய்யுங்கள்! உங்கள் கைகளால் அல்லாஹ் அவர் களைத் தண்டிப்பான். அவர்களை இழிவு படுத்துவான். அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான். -9:14

    நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர், அல்லாஹ்விடம் மகத்தான பதவிக்குரியவர் கள். -9:20

    அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாமல், அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாமல், உண்மையான மார்க்கத்தைக் கடைப் பிடிக்காமல் இருப்போர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிடுங்கள்! -9:29

    ‘மஸீஹ் அல்லாஹ்வின் மகன்’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். -9:30

    குறைவாக இருந்த போதும், அதிகமாக இருந்த போதும் புறப்படுங்கள்! உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! -9:41

    மாறாக இத்தூதரும், (முஹம்மதும்) அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் தமது செல்வங்களாலும், உயிர்களாலும் போரிடுகின்றனர். அவர்களுக்கே நன்மைகள் உண்டு. அவர்களே வெற்றி பெற்றோர். -9:89

    நம்பிக்கை கொண்டோரே! உங்களை அடுத்திருக்கும் (இறை) மறுப்போருடன் போரிடுங்கள்! உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும். -9:123

    முஹம்மது அல்லாஹ்வின் தூதராவார். அவருடன் இருப்போர் (ஏக இறைவனை) மறுப்போர் மீது கடுமையாகவும், தமக்கிடையே இரக்கம் மிகுந்தும் இருக்கின்றனர் -48:29

    தன் பாதையில் போரிடுவோரை அல்லாஹ் விரும்புகிறான் -61:4

    Can anyone prove these verses are not violent and spread peace in society? Are you not ashamed to call this as your “holy book”? What Kamal taken is wrong? Are they not reading Koran while cutting heads? Stop the stupidity of your stone age religion.

    • இருங்க பாஸ் பி ஜே தள இணைப்பை கொடுத்து ஹோம் வொர்க் செய்ய சொல்வார்கள்.அல்லது நேரில் விவாதிக்க வா என அழைப்பர்கள் வேறு பதில் இருக்க வாய்ப்பில்லை

    • Stop the ‘out of context’ bull shitting man. Fighting those who fight you, is the very normal rule every country follows in the world you live in. Why the hell India is spending billions in military infrastructure every year? To give food to the children of China and Bangladesh or what? What would you say if all the people around world cries directly or indirectly, “All Indians are barbaric killers. Their soldiers are shooting every body crossing border from china and pakistan. Its because of their violent nature or their vedas etc”. You are going to appreciate them by saying Oh! yes they are barbaric the whole indan community should be banished.

      Whats happening in afganisthan is a war between two countries? You were never there or Kamal was never there to tell the real situation. What Kamal (vomits)throws up is just whats fed into media by US.

      Why the heck Indian muslims should be asked to prove themselves as clean of US interpretation(for their war in Afghan) of Islam and Quran, by showing it in an indian cinema? Are you not brain washed to believe whatever shown in TV, without even questioning a dot, thats run by one side of the warring countries? Are you not going to be the one who’ll justify riots, killings and rapes of muslims as in gujarat after watching these kind of movies?

      So you are saying a ‘Holy Book’ should say “go show your neck/… and get killed when those who hate you and your holy book plot together to kill you and rape your daughters”? Thats the stone age you want people to go?

      • //‘மஸீஹ் அல்லாஹ்வின் மகன்’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். -9:30//

        ithu entha porin pothu sonnathu? ungal nambikkai ennavaga vendumaanalum irukkattum. neengal eppadi aduthavargal nambikkaiyai azhippaan ozhippaannu solla mudiyum? nalaikku nanum oru mathaththai niruvi athula muslimgalai billa ozhippaanu sonna ungalukku kovam varathu? ithu pira mathathinarin manathai punpaduthaatha? kurnai thadai panniralama?

        • தோழரே! கமல் ஆப்கானில் நடப்பதை காட்டுவதில் தவறில்லை என்று நீங்கள் சொன்னதால், தலைப்பிற்கு ஓரளவாவது அதில் சம்பந்தம் இருந்ததால் உங்கள் கருத்துக்கு எனது பதில் கருத்தை சொன்னேன். நீங்கள் மீண்டும் ஒரு கேள்வி கேட்கிறீர்கள், தலைப்பிற்கு அதிக சம்பந்தமில்லாமல்.

          லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்துவிட்டு அதற்க்கு வக்காலத்து வாங்க ஒரு சிறு வீடியோ கிளிப்பிங்(யாராவது அரபியில் பேசிகொண்டு யாரையாவது கழுத்தை அறுப்பார்கள் ) ஐ பரப்பும் அமெரிக்க மற்றும் ஆயிரக்கணக்கில் மக்களை கூட்டம் கூட்டமாக சேர்ந்து எரித்தும், குத்தியும், குதறியும், கற்பழித்தும் கொன்ற இந்து வெறியர்களின், ஊடக பரப்புரையின் தாக்கம் தான் உங்கள் கருத்துகளில் தெரிகிறது.

          இங்கு கருத்து பரிமாறும் யாரும் ஒரு போரை கண்டதுமில்லை அதனருகில் இருந்து அதன் வலிகளை உணர்ந்ததுமில்லை. ஆயினும் எப்படி நாம் சப்பை கட்டு கட்டி நேரில் பார்க்காத ஒன்றிற்காக 150 கோடி மக்கள் மதிக்கும் ஒரு விஷத்தை மிக சுலபமாக கல்லெறிய முடிகிறது. இது தான் விஸ்வரூபத்தை எதிர்க்க முதல் காரணம். இவர்களின் கற்பனைகளில் ஓடும் கொடுரதையெல்லம் காட்சியாக்கி அதற்க்கு பின்னால் குரானை ஓட விட்டால் சாதாரண மனிதன், குரானை நம்பும் என்னையும் என்னை போன்ற முஸ்லீம்களையும் குதறும் எண்ணத்துடன் தான் பார்பான்.

          நீங்கள் சொன்ன குரான் வசனத்துக்கு வருவோம். இதில் என்ன வன்முறையை நீங்கள் கண்டீர்கள்? இஸ்லாமிய நம்பிக்கையின் படி இறைவனை நம்பாதவர்களும் பாவம் செய்யும் முஸ்லீம்களும் கூட நரகத்தில் வீழ்ந்து அழிவார்கள். அதை அந்த மார்கத்தின் மூல நூலில் சொல்லாமல் வேறு எங்கு சொல்வார்களாம்?

          கிருத்தவ நம்பிக்கை படி இயேசுவை பாவங்களின் மீட்சியாகவும், இறைவனின் மகனாகவும் நம்பாத அனைவரும் நரகில் சென்று அழிவார்கள் என்பது தான் பைபிள் சொல்கிறது. அதனால் அதை அழித்து விட வேண்டுமா?

          இந்து மதத்தின் படி …நிறைய இருக்கிறது எதை தேர்தெடுத்து சொல்வது என்று தெரியவில்லை.

          கம்யுனிசம் படி சமூக கட்டமைப்பில் கீழ் தளமான பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் தராதவர்கள் அழிந்தார்கள். இந்த பதிவிலும் அதை நியாயப்படுத்தும் பின்னூட்டங்களிலும் இதை நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

          இப்படி தங்களின் நம்பிக்கைகளை நிலைபாடுகளை எடுத்து சொல்வது எல்லோரும் ஒத்துக்கொண்ட வழிமுறை தான். இதற்க்கு பெயர் தான் கருத்து சுதந்திரம் என்று ஒரு காலத்தில் சொன்னார்கள்.

          ஆயினும் கமல் போன்றவர்கள் செய்யும் False Propaganda, இல்லாததை மிகைப்படுத்தி அதற்க்கு குரானை நம்புபர்வர்களே சொல்லாத விளக்கங்களை ஏற்றி ஒரு சமூகத்தை குற்றப்பரம்பரையாக காட்ட நினைப்பது அயோக்கிய தனம். இதில் தேச பக்தி என்பதும், முஸ்லீம்களை நல்ல முறையில் காட்டும் படம் என்பதும் கமலின் வஞ்சக தன்மையை தான் காட்டுகிறது. இதில் எங்கிருந்து வந்தது கருத்து சுதந்திரம் ?

          விருமாண்டியில் வராத, மன்மதன் அம்பு படத்தின் பாடல் வரிகளை மாற்றும் பொழுது வராத, தெய்வத்திருமகள் தெய்வத்திருமகனான பொழுது வராத இன்னும் எத்தனையோ நேரங்களில் வராத கருத்து சுதந்திர கொக்கரிப்புகள் முஸ்லீம்களுக்கு எதிராக மட்டும் வருவதன் ரகசியம் என்ன?

          நீங்கள் குரானை முழுமையாக படித்தால் இது போன்ற வசனகளையும் படிக்கலாம்.

          2.256. இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது

          5.32. கொலைக்குப் பதிலாகவோ பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார் ஒரு மனிதனை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்.

          9.6. இணை கற்பிப்போரில் யாரும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் அல்லாஹ்வின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் அளிப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்ப்பீராக! அவர்கள் அறியாத
          கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

          60.8 மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை
          அல்லாஹ் விரும்புகிறான்.

          5:2 மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் உங்களைத் தடுத்த சமுதாயத்தார் மீதுள்ள பகைமை. வரம்பு மீறுவதற்கு உங்களைத் தூண்ட வேண்டாம். நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும். வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

          2.190. உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

          5.8 நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

          5.82. நம்பிக்கை கொண்டோருக்கு மனிதர்களிலேயே கடுமையான பகைவர்களாக யூதர்களையும் இணை கற்பிப்போரையும் (முஹம்மதே!) நீர் காண்பீர்! “நாங்கள் கிறித்தவர்கள்” எனக் கூறியோர் நம்பிக்கை கொண்டோருக்கு மிக நெருக்கமான
          நேசமுடையோராக இருப்பதையும் நீர் காண்பீர்! அவர்களில் பாதிரிகளும் துறவிகளும் இருப்பதும் அவர்கள் ஆணவம் கொள்ளாது இருப்பதுமே இதற்குக் காரணம்.

          3.42.மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்

          21.91. தனது கற்பைக் காத்துக் கொண்ட பெண்ணிடம்(மர்யமிடம்) நமக்குரிய உயிரை ஊதினோம்.அவரையும் அவரது புதல்வரையும்(ஈசா) அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.

          2.62. நம்பிக்கை கொண்டோர் யூதர்கள் கிறித்தவர்கள் மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள்.

      • பாஸ் குரான் வாசகங்கள் பற்றி கேட்டா நீங்க என்னமோ ஐநா சபையில் படிக்க வேண்டிய உரையை இங்கு போடுறீங்க…இட்ஸ் நாட் குட்…

    • Brother HisFeet, you are spreading wrong info. Above mentioned verses are talking about the Non-muslims people who were fighting (War) with Muslims at the time of prophet Mohammed. For the sake argument, If someone come to kill you, what will you do? Allow them to kill you or going to fight with them? And you not even provide entire verses. If you are quote any verses, please make it full. Don’t use excerpt. For example, you notify 9:89 but it is 9:88. To support my point, please read the verses from 9:86 to 9:95, these verses speaking about the war of that time. Again I insist one point, using excerpt don’t spread wrong message.

  51. எனதருமை இஸ்லாம் மாமா/மச்சாஙளே ( எங்களது ஊரில் அப்படித்தான் பழகி வர்ரோம்) இன்றோ அல்லது நாளையோ காட்சிகள் மாறலாம். பாகிஸ்த்தானில் தனது சொந்த சகோதர சகொதரிகளையே அனு தினமும் கொண்று கொண்டு இருப்பவர்கள் யார்? இந்திய இந்துவோ அமெரிக்க மனுசங்களோ இல்ல. இஸ்லாம் இயக்கம் தானே. பாகிஸ்த்தனில ஒரு பச்ச புள்ளய, இஸ்லாத் பெண் குழந்தைய சுட்டு போட்டானுகளே , அதுவும் யார் செஞ்சது? யோசிங்க. ஒரு எம்.பி சீட்டுக்கு ஆசப்பட்டு ஏதோநடக்குது. தயவு செஞ்சி புரிஞ்சிக்கோங்கோ.

  52. சந்தடி சாக்கிலே நீங்களும் உங்கள் இஸ்லாமிய விரோத போக்கை நடுநிலை என்ற போர்வை போர்த்தி காட்டியிருக்கிறீர்கள். இணையத்தில் பதிவாகட்டும் அல்லது செய்தி களமாகட்டும் , அதில் இடப்படும் பின்னூட்டங்களாகட்டும் எங்கும் நிறைந்திருக்கும் இந்த இஸ்லாமிய வெறுப்பு உங்களிடமும் வெளிபடுவது ஒன்றும் ஆச்சரியதிற்கில்லை.

    முஸ்லீம்கள் வாயை பொத்திக்கொண்டு இருக்கவேண்டும் அல்லது இந்து மத வெறி ரத யாத்திரைகள் அவர்களை காவு வாங்கும் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறீர்கள். இதற்கும் ஆர்.ஸ் .ஸ் பஜ்ரங் தல் போன்றவர்கள் சொல்வதற்கும் நிறைய வேறுபாடு இல்லை. நீங்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் இஸ்லாத்தை கைவிடுங்கள் எங்கள் கலாசாரத்தை பின்பற்றுங்கள் இல்லையேல் நடப்பது வேறு என்று கொக்கரித்து பயமுறுத்தும் இந்து வெறிக்கும் உங்களின் இந்த ‘முற்போக்கு’ வெறிக்கும் நிறைய வேறுபாடு இல்லை.

    முஸ்லீம்களை பொருத்தவரை அவர்களை வெறுப்பவர்கள் திட்டமிட்டு பூதாகரமாக உருவாக்கும் பிரச்சனைகளெல்லாம் ‘Hஎஅட் ஈ Wஇன் Tஐல் யொஉ லொச்ச்’ போன்ற விஷயங்கள் தான். இதில் எதை செய்தாலும் முஸ்லீம்கள் மீது தான் பழி என்றிருக்கும் பொழுது இஸ்லாமிய தலைவர்களுக்கு இருப்பது எது சமுதாயத்துக்கு குறைவான வலியை கொடுக்குமோ அந்த வழியை தேர்ந்தெடுப்பதே. அந்த விசயத்தில் முஸ்லிம் தலைவர்கள் (ஜெயினுலாபுதீன் உட்பட) தெளிவான முடிவையே எடுத்து இருக்கிறார்கள். அதனால் அவர்கள் தலை உருண்டாலும் பரவாயில்லை சமுதாய மக்கள் மீது மேலும் ஒரு சுமை விழக்கூடாது என்ற அவர்களின் ஆதங்கம் தான் இந்த பிரச்னையில் வெளிப்படுவதாக ஒரு சாதாரண முஸ்லிமாக நான் உணர்கிறேன்.

    விஸ்வரூபம் போன்ற படங்கள் முஸ்லீம்கள் மேல் ஏற்றும் சுமைகளில் முக்கியமானது அவர்கள் தங்களை தீவிரவாதிகள் அல்ல என்று வாழ்வின் ஒவ்வொரு அடியிலும் பிறருக்கு நிரூபிக்கும் சுமையாகும். வீடு வாடகைக்கு எடுக்கும் பொழுதிலிருந்து, வேலைக்கு செல்லும் இடத்திலும், கொடுக்கல் வாங்கல் செய்யும் இடத்திலும் அவர்கள் தங்களின் அடையாளங்களை மறைத்தோ அல்லது நான் ஸ்லேபெர் Cஎல்ல் இல்லை உன்னை போன்றவன் தான் என்று ஏதாவது ஒரு வழியில் நிரூபித்தோ தவிர வாழ முடியாது என்ற சூழ்நிலையே இது போன்ற திரைப்படங்கள் உருவாக்குகின்றன. அது மட்டுமல்லாது அப்படிப்பட்ட பரப்புரைகளுக்கும், முஸ்லீம்கள் மீதான ஊடக போருக்கும் அப்படிப்பட்ட காட்சியமைப்புகள பெரிதும் உதவுகின்றன. எங்காவது ஒரு பிரச்சனை ஏற்பட்டால் உடனே பல தொலைகாட்சி சானல்கள் அப்படிப்பட்ட காட்சிகளை மீண்டும் மீண்டும் போட்டு காட்டி மேலும் விஷம் விதைப்பது நிதர்சனம்.

    விச்வரூபதையும் அதை போன்ற படங்களையும் எதிர்ப்பது ஒரு வித வெறுப்பு அரசியலுக்கும், பரப்புரைகளுக்கும் வித்திட்டாலும் அதை எதிர்க்காமலிருப்பது முஸ்லீம்களுக்கு இன்னும் ஆபத்தான நிலையே உருவாக்கும். அந்த விதத்தில் முஸ்லிம் தலைவர்கள் உன்னை போல் ஒருவன் படம் வந்ததிலிருந்தே கமலிடம் இந்த வேண்டுகோளை வைத்து தான் இருக்கிறார்கள். ஏதோ ஜெயலலிதாவின் வெறுப்புக்கு கமல் ஆளான பின் தான் முஸ்லிம் தலைவர்களை அழைத்து இந்த பிரச்சனையை கிளப்புங்கள் என்று ஜெயலலிதா தூண்டி விட்டிருக்கிறார் எனபது லாஜிக் இல்லாத வரலாற்றுப் பிழை.

    ஒரு நாட்டின் தண்டனை சட்டப்படி அணைத்து மேல் முறையீடுகளும் போய் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கியதை மத வெறி இன வெறி என்று சாடும் பொழுது அது சரியல்ல இது நியாயமானதே என்று வாதிடுபவர்கள் தீவிரவாதிகள் செளடின் அடிவருடிகள் என்று நீங்கள் குதிப்பது சாதாரண பகுத்தறிவு சிந்தனை உள்ளவர்களுக்கு மர்மமான ஒன்றாகவே இருக்ககிறது. டெல்லி வண்புணர்வு வழக்கில் 17 வயது இளைஞன் தவரிழைத்தாலும் அவன் சிறுவன் என்று தீர்ப்பெழுதிய இந்திய நீதிமன்றங்களுக்கு எதிராக வாய் திறக்காமலும், இதற்கெல்லாம் காரணம் அம்பேத்கார் (இயற்றிய சட்டம்) தான் எனவே அம்பேத்கரும் அவரை நேசிப்பவர்களும் தீவிரவாதிகள், தேச விரோதிகள் என்று நீங்கள் இன்னும் குதிக்காதது அதை விட மர்மமான ஒன்றாகவே இருக்கிறது. அல்லது அது உங்கள் முற்போக்கு வேடத்தை கிழித்து தொங்கவிடுகிறது. உங்களுக்கும் இஸ்லாமிய வெறுப்பு இருப்பதையே அது உறுதி செய்கிறது.

    முஸ்லீம்களை பொருத்தவரை இந்து வெறியர்களும் உங்களை போன்று வேடமிடும் வெறுப்பு வாதிகளும் நாணயத்தின் இரு பக்கங்களே. அவர்களுக்கும் உங்களுக்கும் இருக்கும் பொதுவான குறிக்கோள் முஸ்லீம்கள் தங்களை இஸ்லாத்துடன் அடையாளப்படுத்தக்கூடாது என்பது தான்.

    மற்றபடி இந்து வெறியர்கள் இஸ்லாத்தின் மீதும் அதன் விழுமியங்களை தங்களின் வாழ்வில் அறிதேனும் காட்டிக்கொள்பவர்களையும் கொலை வெறி தாக்குதல் நடத்த ஒரு ஷாபானு வழக்கோ ஒரு ஜைனுலபுதீனோ தேவை இல்லை. வெறியேற்ற உண்மையான காரணமெல்லாம் தேவையில்லை. அவர்கள் பாபரிடமோ, ஔரங்கஜிபிடமோ, முஹம்மது நபியிடமோ அல்லது குரானிலோ தேடி தேடி காரணங்களை எடுத்துக்கொள்ளவே செய்வார்கள். இவை எதிலும் அவர்களுக்கு போதுமான சங்கதிகள் இல்லாத பட்சத்தில் இந்து சாச்திரதிலோ, ராம பக்தியிலோ, தேச பக்தியிலோ தேடிக்கொள்ளவே செய்வார்கள்.

    அன்பை போதித்த புத்த மதத்தை தீவிரவாதமாக காட்டி மக்களிடமும் அரசர்களிடமும் வெறியூட்டி புத்த மதம் தோன்றிய நாட்டிலேயே அதன் சிறு அடையாளமும் இல்லாமலாக்கி ஜாதியை போதித்து மனிதர்களை பிரித்து மேலும் கீழும் ஆக்கி அவர்களிடம் லாவகமாக தனக்கு வேண்டிய வேலைகளை சாதிதுக்கொண்டவர்களுக்கு இஸ்லாமோ ஷபனோ வழக்கோ ஜைனுலபுதீனோ தங்களது வெறிக்கு காரணங்களாக தேவை பட்டதே இல்லை.

    எனவே நீங்கள் முஸ்லீம்களுக்காக ஆதங்கப்படுகிறேன் பேர்வழியென்று இந்து மதவெறிக்கு ஒத்து ஊதி அவர்களுக்கு மேலும் சில காரணகளை எடுதுக்கூறாமல் இருந்தால் அது மிக நன்று. ஆயினும் நீங்கள் உண்மையிலேயே மனிதம் மீது அக்கறை உள்ளவராக இருந்தால் ஜாதி வேற்றுமையை வளர்க்க துடித்து அதற்க்கு நடைமுறை சவாலாக உள்ள இஸ்லாமிய அடையாளங்களையும் அவற்றை அணிந்துகொள்ளும் முஸ்லீம்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் கருவறுக்க காத்திருக்கும் அடாவடி சக்திகளுக்கு இடம் கொடாமல் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இடம் கொடுப்பதே மனிதத்துக்கும் உங்களுக்கும் நன்மை பயக்கும்.

    ஏனெனில் சகோதர பாசம் காட்டும் , (பிறப்பால்) ஏற்ற தாள்வற்ற வாழ்வை நடைமுறையில் வாழ்ந்து காட்டும் முஸ்லீம்கள் இல்லாது போனால், இந்தியாவில் மனு நீதியும் வர்ணாசிரமும் தளைத்தோங்கி கூனிக்குறுகி மனிதப்பீ அள்ளுவதே பலரின் வாழ்கையாக மாறிவிடும்.

    • முஸ்லீம்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் கருவறுக்க காத்திருக்கும் அடாவடி சக்திகளுக்கு

      செம காமெடி…உலகில் நீங்கள்தான் இரண்டாவது எண்ணிக்கையில் நூறு கோடிக்கும் மேல் உங்களை இல்லாமல் செய்ய போறாங்களா?இதெல்லாம் டூ த்ரீ மச்சா உங்களுக்கே தெரியலியா?அது சரி பி ஜே மாமா என்ன சொல்றாரோ அதை சொல்ல பழக்கப்பட்ட கிளிப்பிளைகளிடம் பேசி பயனில்லை

    • கீழே நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவும் ஷியா சன்னி பிரிவினர் குண்டு வைத்து கொண்டு சாகிறார்களே அப்போ இறைவன் யார் பக்கம் நிற்பான்?ஷியா பக்கமா சன்னி பக்கமா?
      மேலும் ஆண்கள் சொர்க்கம் சென்றால் சொர்க்கத்தில் எழுபத்திரண்டு இளம் கன்னிகள் மெல்லிய உடைகளுடன் மகிழ்விப்பார்கள் என்கிறார்களே சரி அப்போ ஒரு பெண் சொர்க்கம் சென்றால் அங்கு எழுபத்திரண்டு ஆண்கள் இருப்பாங்களா?

      • சகோதரர் மனிதன் அவர்களே மனித உயிர்களை கொள்ளுவது பெரும் பாவமாகும். அந்த பாவத்தை முஸ்லிம் செய்தாலும் முஸ்லிம் அல்லாதவர்கள் செய்தாலும் அது பாவம் தான் அவர்களுக்கு நரகம் தான்.
        சொர்கத்தில் ஆண்களுக்கு மனைவிமார்கள் உண்டே தவிர அது எழுபத்திரண்டு மனைவிகள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை அதே போல பெண்களுக்கும்கணவன்மார்கள் உண்டு.
        அவர்களும் மனிதர்கள் தானே . அவர்கலுக்கும் உணர்சிகள் இருக்கும் அல்லவா

        • ஐயா அப்துல்ரகுமான் அவர்களே!
          உங்கள் பதில் தெளிவான குழப்பத்தையே தருகின்றது.
          தயவுசெய்து பின்வரும் கேள்விகளுக்கு உங்கள் மதம் என்ன பதிலைக் கூறுகின்றது (உங்கள் தனிப்பட்ட கருத்தல்ல) என்பதை ஆம் அல்லது இல்லை என்று ஒற்றை வார்த்தைகளில் பதில் தர முடியுமா?
          1. அல்லாவை ஏற்றுக்கொள்ள மறுக்கும் காபிர்களைக் கொல்வது பாவமா? ஆம்/இல்லை
          2. சொர்க்கத்தில் ஒரு ஆணுக்கு பல மனைவிகள் இருக்கலாம்? ஆம்/இல்லை
          3. சொர்க்கத்தில் ஒரு பெண்ணுக்கு பல கண்வர்கள் இருக்கலாம்? ஆம்/இல்லை

          • என்ன இனியன் one mark questions கேட்டு கடுப்பேத்தாதீங்க..எப்படியும் அவுங்க essay style விடைதான் கொடுப்பாங்க….

            • சொர்க்கத்தில் எனக்கு திரிஷா ஐஸ்வர்யா நயன்தார போன்றோர் மனைவியை இருந்தால் தான் சொர்க்கத்தில் மகிளிசியாய் இருக்க முடியும். இல்லையென்றால் சொர்க்கத்தில் நான் சோகமாக தான் இருக்க முடியும். சோகமாக இருக்கும் இடம் சொர்கமாக முடியாது. அப்படியே எனக்கு அவர்கள் கிடைத்தால் நான் மகிழ்சியாய் இருப்பேன் ஆனால் திரிஷா ஆவி மகிழ்ச்சியாய் இருக்குமா ? மகிழ்ச்சி இல்லாத இடம் சொர்கமாகுமா ? சரி த்ரிஷாவிற்கு பத்தாவது கணவன் நான் என்றால் எனக்கு மகிழ்ச்சி பொய் விடுமே ? குழப்பமாக இருகிறதே !

              • திரிசாவை விட அழகான பெண் உங்களுக்கு மனைவியாக வந்தால் தாங்கள் அவர்களை விரும்ப மாட்டீர்களா. தாங்களுக்கு இறைவன் பூமி இல் உள்ளவர்களை விட அழகான பெண்களையே சொர்கத்தில் தருவான் .

              • ராமன்,

                பணிவிடை செய்ய மட்டுமே சொர்க்கத்தில் பெண்கள் (இது ஆணாதிக்க சிந்தனையாக இருக்கலாம் அது வேறு விஷயம்) மற்றபடி நீங்கள் நினைப்பது போல அங்கு கலவியெல்லாம் கிடையாதாம் 🙂

                • //இது ஆணாதிக்க சிந்தனையாக இருக்கலாம் அது வேறு விஷயம்//

                  athu enna veru vishayam? appo unga ponnugalukku 72 ambala vanthu panividai seivana?

                  Ok, Houris pathi kuran enna solluthu? thunai aakuvomna enna artham?

                  இப்படித் தான்! அவர்களுக்கு ஹூருல் ஈன்களைத் துணைகளாக்குவோம். -44:54

                  ஹூருல் ஈன்’களை அவர்களுக்குத் துணைவியராக்குவோம் -52:20

                  ingey ungal maarkamaana aringargal enna solgirargal endru paarkkavum!

                  en.wikipedia.org/wiki/Houri

                  • துணைவியர்கள் என்றால் மனைவிகள் என்று அர்த்தம் . மனைவியாக இருப்பது தவறு அல்ல .மாறாக சின்ன வீடாக இருப்பது தான் தவறு. அதை தங்களின் அறிவும் ஒத்துகொள்ளும் .

            • @v.abdulrahman அப்படியே கெஞ்சம் என் கேள்விகளுக்கும்.

              தயவுசெய்து பின்வரும் கேள்விகளுக்கு உங்கள் மதம் என்ன பதிலைக் கூறுகின்றது (உங்கள் தனிப்பட்ட கருத்தல்ல) என்பதை ஆம் அல்லது இல்லை என்று ஒற்றை வார்த்தைகளில் பதில் தர முடியுமா?

              1. தற்கொலை தாக்குதல் மனித வெடிகுண்டு நடத்தும் இஸ்லாம் தீவிரவாதிகள் சொர்க்கம் செல்வார்களா? ஆம்/இல்லை
              2. குரான் வாசகங்களை சொல்லி மூளை சலவை செய்து மனித வெடிகுண்டுகளாக மாற்றும் இஸ்லாம் தலைவர்களுக்கு செர்க்கம் செல்வார்களா? ஆம்/இல்லை
              3. பணைய கைதிகளை கழுத்து அறுக்கும் போது குரான் வாசகங்கள் வாசிக்கப்படும்? ஆம்/இல்லை

              • கல்நெஞ்சன் அவர்களே தங்களுக்கான பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது .
                1. ஒரு வேளை அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்கள் சுவர்க்கம் செல்ல மாட்டார்கள் மாறாக நரகம் தான் செல்வர்கள் இஸ்லாத்தின் பார்வையில் தற்கொலை செய்பவர்களும் நரகம் தான் செல்வார்கள் .(இல்லை)
                2.இல்லை
                3.இதற்கு என்னுடைய பதில் எனாக்கு தெரிந்த வகையில் இதுவரை யாரும் அவாறு செய்ததாக தெரியவில்லை . ஒரு வேளை அவாறு அவர்கள் அநியாயமாக கொலை செய்திருந்தால் .அது கண்டிப்பான முறையில் பெரும் தவறு பெரும் பெரும் பாவம் அவர்கள் நரகம் தான் செல்வார்கள் . நான் தங்களிடம் ஒன்று கூற விரும்போகிறேன் . தாங்கள் ஒருமுறை குர்ரானை படித்துவிட்டு அதில் மற்றவர்களை அநியாயமாக கொல்ல சொல்லிருந்தால் தங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதில் அவ்வாறு ஒரு வார்த்தை கூட கிடையாது . இதிலிருந்து தன்னகளுக்கு தெரியும் குர்ரான் யாரையும் கொள்ளசொல்வதில்லை என்று . உதாரனத்திற்க்கு. ஹிந்து மத வாதிகளில் சிலர் விபச்சாரத்திலும் பலமோசடிகளிலும் ஈடுபடுகின்றனர் அதற்காக தங்கள் அவர்கள் பகவத்கீதை என்ற வேதத்தை படித்துவிட்டு தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று கூற மாட்டீர்கள் . அது அவருடைய தனிப்பட்ட தவறான செயல் .அதற்க்கு மதம் பொறுப்பாகாது . என்றே கூறுவீர்கள் . எனவே இது தான் சரியான கருத்தும் கூட.
                எனவே சற்று சிந்தித்து பாருங்கள்

                • // ஹிந்து மத வாதிகளில் சிலர் விபச்சாரத்திலும் பலமோசடிகளிலும் ஈடுபடுகின்றனர் அதற்காக தங்கள் அவர்கள் பகவத்கீதை என்ற வேதத்தை படித்துவிட்டு தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று கூற மாட்டீர்கள் . அது அவருடைய தனிப்பட்ட தவறான செயல் .அதற்க்கு மதம் பொறுப்பாகாது . என்றே கூறுவீர்கள் ///

                  நீங்கள் சொல்லும் இந்துக்கள் மந்திரம் ஓதிக்கொண்டே விபச்சாரம் செய்வது இல்லை..அது அவருடைய தனிப்பட்ட தவறான செயல்… ஆனால் நீங்கள் குரான் ஓதி அல்லாகூ அக்பர் என சொல்லித்தானே பணையக்கைதிகைள குர்பானி கொடுக்கிரங்க..இதற்கு உங்கள் மதம் பெயரில் செய்கிற்கள்

                  • தாங்கள் சொல்வது போல ஒருவேளை நடந்திருந்தால். அதை நான் வன்மையாகவே எதிர்ப்பேன் .அது தவறும் கூட . நான் சொல்லவந்தது என்னவென்றால் .குர்ரான்னில் மற்றவர்களை அநியாயமாக கொல்லும்படி ஏதாவது ஒரு வசனத்தை எனக்கு காமிஉங்கல் அப்பொழுது நான் இஸ்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறது என ஏற்று கொள்கிறேன்.மாறாக குர்ரானில் அவ்வாறு ஒரு வசனம் கூட கிடையாது. எனவே இஸ்லாம் தீவிரவாதத்தை பரப்புகிறது என கூற முடியாது . அது அவருடைய தனிப்பட்ட செயல் என்றே கூறமுடியும் . இஸ்லாத்தை தவறு என்று கூற முடியாது.உதாரனத்திற்க்கு ஒருவன் ஒருவனை கொன்று விட்டு நீங்கள் தான் கொலை செய்ய சொன்னீர்கள் என்று உங்கள் மீது பலி போடுகிறான்உங்கள் முழு விபரத்தையும் கூறுகிறான். .எனவே உங்கள் மீது உள்ள குற்றசாட்டு சரியாகுமா? ஒருபோதும் சரியாகாது . குற்றத்தை தீரவிசாரிப்பதன் மூலமே நாம் கண்டறியமுடியும். எனவே தங்கள் குர்ரானை முழுமையாக ஆராயும் படி கேட்டு கொள்கிறேன் .

                  • குர்ரானை படித்துவிட்டு அதில் மற்றவர்களை அநியாயமாக கொல்ல சொல்லிருந்தால் தங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதில் அவ்வாறு ஒரு வார்த்தை கூட கிடையாது . இதிலிருந்து தன்னகளுக்கு தெரியும் குர்ரான் யாரையும் கொள்ளசொல்வதில்லை என்று .

                    • Sura 2, verse 256, it says “There is no compulsion in religion,” it urges Muslims to kill those Muslims who convert to other religions.

                      Sura 2, verse 191 “And KILL them (the unbelievers) wherever you find them, and drive them out from whence they drove you out, and persecution is severer than slaughter, and do not fight with them at the Sacred Mosque until they fight with you in it, but if they do fight you, then slay them; such is the recompense of the unbelievers.”.

                    • PLEASE SEE UNBELIVERS BROTHER
                      2.190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
                      2.191(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
                      2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
                      INTHA VASANATHILL UNGALAI ETHIRTHU POR PURIBAVARAI MATTUM THAAN KOLLA SOLLUGIRATHU MAARAAGA ANIYAAYAMAAGA APPAAVIGALAI KOLLA SOLLA VILLAI.UTHAARANATHIRKKU ORUVAR UNGALAI KOLLA VARUGIRAAR ENTRAL THAANGAL AVARAIKOLLATHAAN SEIVEERGAL MAARAAGA AVAR UNGALAI VETTATTUM ENTRU SOLLA MAATTEERGAL NEENGAL AVARAI KONNAALUM ATHU THAVARU ILLAI ENTRAY NEETHIMANTRANGAL KOORUGINRANA.ENENTRAAL ATHU THARKKAAPPIRKAAGA NADAKKUM ORU PORAATTAM . ITHILL THAVAU ONTRUM ILLAI.ENAVE THAANGAL ERNDAAVATHU ATHIYAAYATHAI MOLUMAYAAGA PADITHU VITTU VAARUNGAL . THAMILELAYYEA PATHIVU SEIYUNGAL ENKKU ENGLISH THAYRIYAATHU.

                    • PLEASE SEE UNBELIVERS BROTHER
                      2.190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
                      2.191(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
                      2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
                      INTHA VASANATHILL UNGALAI ETHIRTHU POR PURIBAVARAI MATTUM THAAN KOLLA SOLLUGIRATHU MAARAAGA ANIYAAYAMAAGA APPAAVIGALAI KOLLA SOLLA VILLAI.UTHAARANATHIRKKU ORUVAR UNGALAI KOLLA VARUGIRAAR ENTRAL THAANGAL AVARAIKOLLATHAAN SEIVEERGAL MAARAAGA AVAR UNGALAI VETTATTUM ENTRU SOLLA MAATTEERGAL NEENGAL AVARAI KONNAALUM ATHU THAVARU ILLAI ENTRAY NEETHIMANTRANGAL KOORUGINRANA.ENENTRAAL ATHU THARKKAAPPIRKAAGA NADAKKUM ORU PORAATTAM . ITHILL THAVAU ONTRUM ILLAI.ENAVE THAANGAL ERNDAAVATHU ATHIYAAYATHAI MOLUMAYAAGA PADITHU VITTU VAARUNGAL . THAMILELAYYEA PATHIVU SEIYUNGAL ENKKU ENGLISH THAYRIYAATHU.

                    • v.abdulrahman
                      நியமான முறையில் கொல்லவது பற்றி குரான் சொல்வது என்ன?

                      //குர்ரானை படித்துவிட்டு அதில் மற்றவர்களை அநியாயமாக கொல்ல சொல்லிருந்தால் தங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதில் அவ்வாறு ஒரு வார்த்தை கூட கிடையாது . இதிலிருந்து தன்னகளுக்கு தெரியும் குர்ரான் யாரையும் கொள்ளசொல்வதில்லை என்று .///

                    • கல்நெஞ்சன் அவர்களே குர்ரானில் கூறிருக்கும் சட்டங்கள் ஒரு தனி மனிதன் தன் கையில் எடுத்து தண்டனை கொடுக்கும் சட்டம் அல்ல மாறாக அந்த சட்டத்தை அந்த அரசாங்கம் கையில் எடுத்து தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் சட்டம் ஆகும். ஒருவன் திருடிவிட்டால் அவன்கையை வெட்டுங்கள் என்று குர்ரான் கூறுகிறது . அதற்காக தனி மனிதன் அந்த சட்டத்தை கையில் எடுத்து அவன் கையை வெட்ட கூடாது . அதை அரசாங்கம் தான் செய்ய வேண்டும் . அதே போல் தான் குர்ரானின் தண்டனை வசனங்கள் அரசாங்கதிர்ர்க்கு மட்டுமே தான் . ஒருவன் உங்களை கொள்ளவருகிறான் நீங்கள் அவனை கொல்லவில்லை என்றால் அவன் உங்களை கொன்று விடுவான் .அப்போளுதுநீங்கள் அவனை என்னசெய்வீர்கள் கொன்று விடுவீர்கள் . அதே போல் ஒருவன் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுகிறான் .அந்தப்பெண் அவனை கொன்று விடுகிறாள் . அதற்காக அவளை நீதிமன்றம் தண்டிக்காது மாராகவிடுதலை செய்யும் . நமது அறிவும் சொல்லும் இது தான் சரி என்று .
                      2.190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.
                      2.191(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள்; இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்; ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.
                      2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்); நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.
                      இன்னமும் தாங்கள் தெளிவு பெற திருக்குர்ரானின் இரண்டாவது அத்தியாயத்தை படிக்கவும் .

                    • v.abdulrahman

                      //ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுகிறான் .அந்தப்பெண் அவனை கொன்று விடுகிறாள் . அதற்காக அவளை நீதிமன்றம் தண்டிக்காது மாராகவிடுதலை செய்யும் . நமது அறிவும் சொல்லும் இது தான் சரி என்று .//

                      பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு கையடி உண்டாமே.. அப்படியா
                      ரத்தப்பணம் பற்றி வியாக்கியானம் செய்தால் நல்லது..

                      நான் ஓருவனைக் கொன்றால் எவ்வளவு ரத்தப்பணம் கொடுக்கவேண்டும்..

                    • கல்நெஞ்சன் நீங்கள் கேட்க்கும் கேள்வி என்னவென்று புரியவில்லை தெளிவாக கேட்கவும்.

                    • //அதே போல் ஒருவன் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்படுகிறான் .அந்தப்பெண் அவனை கொன்று விடுகிறாள் . அதற்காக அவளை நீதிமன்றம் தண்டிக்காது மாராகவிடுதலை செய்யும் . நமது அறிவும் சொல்லும் இது தான் சரி என்று .//

                      ஆனால் இஸ்லாம் மத நாடுகளில் பெண்கள் கற்பழிக்கப் பட்டால் அப்பெண்ணிற்கு மட்டும் கசையடி உண்டாமே.. அப்படி கற்பழித்தவர், இஸ்லம் சட்டப்படி ரத்தப்பணம் கொடுத்து விடுதலை வாங்கிவிடலாமமே…

                      உங்கள் குரான் படி நான் ஓருவனைக் கொன்றால் எவ்வளவு ரத்தப்பணம் கொடுக்கவேண்டும்..

                      http://www.kodangi.com/2013/02/muslim-sheikh-accuses-5-year-old-daughter-of-not-being-a-virgin-beats-her-to-death-gets-off-with-50000-fine.html

                    • கல்நெஞ்சம் அவர்களே நீங்கள் கேட்க்கும் கேள்வி தவறு என்று உங்களுக்கே தெரிய வேண்டாமா ? கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவள் அந்த பெண் அவளுக்கு எப்படி கசையடி கொடுப்பார்கள் சி9ந்திக்கமாட்டீர்கலா ? அதே போல கர்ப்பளித்தவர் பணம் கொடுத்துவிட்டு விடுதலையாகி விடலாமாமே என்று கூறுகிறீர்கள். அதுவும் தவறு !.இஸ்லாமிய சட்டாப்படி ஒருவர் இந்தமாதிரியான் தவறுகளை செய்தால் அவருக்கு இஸ்லாமிய சட்டப்படி மரணதண்டனை கொடுத்துவிடுவார்கள் . இதில் தாங்கள் // இஸ்லம் சட்டப்படி ரத்தப்பணம் கொடுத்து விடுதலை வாங்கிவிடலாமமே// என்று கூறுகிறீர்கள் இதை நான் வன்மையாகவே கண்டிக்கிறேன் . இஸ்லாமிய சட்டத்தை தாங்கள் சொல்வதற்கு முன்னால் இஸ்லாமிய சட்டம் தாங்கள் கூறியது போல தான் உள்ளதா என முழுமையாக தெரிந்து விட்டு பிறகு இஸ்லாமியச்சட்டம் இவ்வாறு கூறுகிறது என கூறுங்கள் . அதை விட்டு விட்டு உங்கள் மனதிற்கு தோன்றியபடி கூற வேண்டாம் .

                    • @v.abdulrahman

                      ஏம்பா அப்துல் நீங்க பூமியில இருக்கிங்களா அல்லது செவ்வாய் கிரகத்தில் இருக்கிங்களா…

                      ///கற்பழிக்கப்பட்டு பாதிக்கப்பட்டவள் அந்த பெண் அவளுக்கு எப்படி கசையடி கொடுப்பார்கள் சிந்திக்கமாட்டீர்கலா ? அதே போல கர்ப்பளித்தவர் பணம் கொடுத்துவிட்டு விடுதலையாகி விடலாமாமே என்று கூறுகிறீர்கள். அதுவும் தவறு !.//

                      இஸ்லாம் குரான் சட்டப்படி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கசையடி உண்டு.. அதற்கான ஆதார லிங்குகள்..

                      Raped Woman Gets 100 Lashes; Muslim Rapist Gets Off Free
                      https://actjonesboroar.wordpress.com/2012/12/27/raped-woman-gets-100-lashes-muslim-rapist-gets-off-free/

                      Same Ole’ Islam: Raped Muslim Girl, 14, Dies After Imam’s 101 Lashes Fatwa
                      http://www.debbieschlussel.com/35155/same-ole-islam-raped-muslim-girl-14-dies-after-imams-101-lashes-fatwa/

                      Bangladesh: Court Orders Protection for Muslim Girl Punished for Being Raped
                      http://www.wluml.org/node/5903

                      Islamic Law: Muslim Girl, 14, Lashed to Death for Rape
                      http://atlasshrugs2000.typepad.com/atlas_shrugs/2011/03/islamic-law-muslim-girl-14-lashed-to-death-for-rape.html

                      A 16-year-old girl was raped in Bangladesh has been given 101 lashes for becoming pregnant
                      http://www.muslimwomennews.com/n.php?nid=5654

                      Saudi Judge Sentences Pregnant Gang-rape Victim to 100 Lashes for Committing Adultery
                      http://www.intellectualtakeout.org/library/articles-commentary-blog/saudi-judge-sentences-pregnant-gang-rape-victim-100-lashes-committing-adultery

                      பாலியல் வன்கொடுமைக்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தண்டனை உங்கள் மார்க்கமும் மார்க்கவாதிகளால் மட்டுமே கொடுக்க இயலும்.. சமீபத்திய செய்து சவுதியில் மதத்தலைவர் ஓருவர் தான் பெத்த மகளை கற்பழித்து அங்கங்களை சூடு வைத்து கொன்றவர்.. ரத்தப்பணம் கொடுத்து விடுதலை ஆகியுள்ளார்..

                    • நான் சொல்வதை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை .இஸ்லாத்தின் முறைபடி மது அருந்துவது தவறு ஆனால் ஒரு இஸ்லாமியன் இந்த தவறை செய்துவிடுகிறான் .அதற்காக இஸ்லாம் அவர்களை மது அருந்த சொல்கிறது என்று கூறமுடியாது . மாறாக அது அவனுடைய தனிப்பட்ட செயல் என்றே கூற முடியும். முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள் . குர்ரான் இந்த மாதிரியான தவறுகளுக்கு என்ன தீர்வு சொல்கிறது என்று மட்டும் பாருங்கள் . குர்ரானின் சட்டங்கள் தவறு என்றால் நீங்கள் கூறுவது தவறு அல்ல முதலில் நீங்கள் குர்ரானில் உள்ள வசனங்களும் சட்டங்களும் தவறு என்று நிருபயுங்கள். . எனவே குர்ரானை ஆராய்ந்து விட்டு உங்களுடய்கேல்வியை கேளுங்கள் .(குறிப்பு : அணைத்து மக்களும் தவறு செய்பவர்களே; , எனவே இறை வேதங்கள் தவறானவற்றை கர்ப்பிக்கின்ற்னவா என பாருங்கள் .மனிதர்களைபார்த்து அவர்களுடைய செயல்களை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அணித்து மதங்களும் உங்களுக்கு தவறாகத்தான் தெரியும். எனவே முதலில் அணைத்து வேதங்களையும் ஆராயுங்கள் பிறகு உங்களுடைய கேள்வியை கேளுங்கள் ).

                    • v.abdulrahman
                      தாலிபான்களின் ஆட்சி இஸ்லாமின் வழியா அல்லது சாத்தானின் வழியா.. ஆம். அல்லது இல்லை..ONE word ans plz

                    • ஐந்து மதிப்பெண் கேள்வியை ஒரு சொல் பதிலில் கேட்டால் அந்தகேள்வி தகுதியற்றதாகி விடும்

                    • தாலிபான்களின் ஆட்சி இஸ்லாமின் வழியா அல்லது சாத்தானின் வழியா.. ஆம். அல்லது இல்லை..ONE word ans plz
                      ஆம் அல்லது இல்லை என்றால் இஸ்லாமின் வழி ஆம் இல்லையா?
                      சாத்தானின் வழி ஆம் இல்லையா?
                      இஸ்லாமிய வழியா?சாத்தானின் வழியா?என்று கேட்டிருக்க வேண்டும் கேள்வியே தவறு .
                      இஸ்லாமிய வழியும் சாத்தானின் வழியும் உள்ளடக்கிய தாலிபான் வழி என்பதே சரி

                    • ஏம்பா ,கல்நெஞ்சம் ,நீங்கள் பூம்யில்தான் இருக்கிறீர்கள்.அதற்காக லூசுத்தனமாக ஆதாரங்களை தருவது யோக்கியத்தனமாக இல்லையா?
                      ஏதோ சில அமெரிக்க பத்திரிக்கைகள் வெளியிடும் பொய்யான செய்திகளை இஸ்லாமியா ஷரியா வுக்கு எதிராக ஆதாரம் காட்டியிருப்பது வேடிக்கை .
                      அந்த நாட்டில் நடந்ததாக அந்நாட்டு செய்திகள் வெளியிடபடவில்லையா?
                      சவுதியில் அந்நபர் மத அறிஞர் இல்லை என்றும் கற்பழிப்பு நடக்கவில்லை என்றும் இஸ்லாம் கல்வி.காம் சுட்டியை காண்பித்துவிட்டு இங்கே மீண்டும் அதே குற்றச்சாட்டை கூறுவது சரியா?

                    • S.Ibrahim

                      சரிப்பா இப்ராகிம்,
                      rape செய்யப்பட்ட பெண்ணுக்கு ஏம்பா கசையடி?

                      சவுதியில் மட்டுமில்லை, பங்களாதேஸ் நாட்டிலும் இதே கதிதான்..

                    • //சவுதியில் அந்நபர் மத அறிஞர் இல்லை என்றும் கற்பழிப்பு நடக்கவில்லை என்றும் இஸ்லாம் கல்வி.காம் சுட்டியை காண்பித்துவிட்டு இங்கே மீண்டும் அதே குற்றச்சாட்டை கூறுவது சரியா?//

                      அராபு செய்தி https://www.youtube.com/watch?feature=player_embedded&v=rNlxdNFn7fU
                      Munhwa_Broadcasting_Corporation http://www.mbc.net/ar.html

                      S.Ibrahim

                      நாங்க பூமியில் தான் இருக்கிறோம்… முடிந்தால் அராபு TV மற்றும் newspaper வெளியிட்ட செய்திகளை தமிழில் மொழிபெயர்த்து விட்டால் நலமாயிருக்கும்.
                      இவை அமெரிக்கா வெளியிட்ட செய்தி அல்ல…உங்கள் மார்க்கத்தின் நல்லவர்கள் வெளியிட்ட செய்தி…

                      ///ஏதோ சில அமெரிக்க பத்திரிக்கைகள் வெளியிடும் பொய்யான செய்திகளை இஸ்லாமியா ஷரியா வுக்கு எதிராக ஆதாரம் காட்டியிருப்பது வேடிக்கை .
                      அந்த நாட்டில் நடந்ததாக அந்நாட்டு செய்திகள் வெளியிடபடவில்லையா?///

                      http://alwatan.com.sa/Nation/News_Detail.aspx?ArticleID=130624&CategoryID=3

                      சவுதி நாட்டு செய்தியில் வெளிவந்த lama என்ற சிறுமி பற்றி புகைப்படத்துடன்… இந்த தளம் .com.sa என இருக்கும் sa-saudi arabia…அராபி எனக்கு தெரியாது.. அந்த தளத்தை மொழி பெயர்ப்பை google உதவியுடன் செய்தபிறகு உண்மையை உணர்ந்தேன். அராபி உங்களுக்கு பரிச்சயம் தானே..

                      شهدت بداية هذا الأسبوع جلسة النطق بالحكم على والد المعنفة لمى، حيث حُكم على الأب بمبلغ الديّة لتسببه في إزهاق روح ابنته ذات الخمس سنوات. وقالت والدة الطفلة لـ”الوطن”: إنها قامت بالطعن في الحكم من خلال تقديمها معروضا لهيئة التحقيق والادعاء العام تطالب فيه بحقها الخاص، مضيفة أنها لن ترضى إلا بالقصاص من قاتل ابنتها، وعزت تأخرها في ذلك لجهلها بالقوانين والأنظمة المتبعة في مثل هذه القضايا، مضيفة أنها تسلمت من رئيس المحكمة العليا بحوطة بني تميم خالد الرشود تصريح الدفن الخاص بابنتها التي لا تزال منذ أربعة أشهر في ثلاجة الموتى بمستشفى الشميسي قسم الطب الشرعي بالرياض، حيث ستوارى الثرى صباح اليوم، وستكون الجلسة المقبلة يوم 22 ربيع الأول، وأشارت إلى أنها طلبت من عدة جهات مساعدتها في توكيل محام.
                      من جهته صرح المستشار القانوني والمشرف العام على هيئة حقوق الإنسان خالد الفاخري لـ”الوطن” بأن الهيئة تتابع قضية لمى منذ البداية وتسعى جاهدة لتوضيح الحقيقة، مشيراً إلى أن الهيئة نصحت أم الطفلة بالمطالبة بحقها الخاص، حيث إن حق التقاضي مكفول للجميع، مضيفاً أن الهيئة اطلعت على تقرير صادر من هيئة التحقيق والادعاء العام يثبت أن الطفلة لم تتعرض لأي اعتداء جنسي كما تردد في بعض وسائل الإعلام.
                      يذكر أن الطفلة توفيت قبل أربعة أشهر نتيجة تعرضها للعنف على يد أبيها، الذي مازال خلف القضبان في انتظار الحكم النهائي للقضية، ومازالت الأقاويل متضاربة حول حقيقة وفاتها، حيث كانت تعاني من كسر في الجمجمة وحروق متفرقة في جسدها.

                    • கல்நெஞ்சம் சரி நீங்கள் கூறியது போலவே ஒரு மதவாதியே அந்தபெண்ணை கற்பழித்து இருக்கிறார் .அவருக்கு அரபு நாடுகளில் மரணதண்டனை கொடுக்காமல் பணத்தை வாங்கிகொன்ன்டு விட்டு விட்டார்கள் என்றே வைத்து கொள்வோம் . இது வன்மையாக கண்டிக்கபடகூடிய விஷயம் தான் . ஒன்றை நீங்கள் இன்னாமும் புரிந்து கொள்ளவில்லை . அதாவது நீங்கள் தப்பு செய்யும் மனிதனையும் தப்பு செய்யும் அரசாங்கத்தையும் தான் பார்த்து குர்ரானிலும் இவாருதான் சட்டங்கள் உள்ளன என்று கருதி உங்களுடைய ஆதங்கத்தை வெளிபடுதுகிரீர்கள் . முதலில் தாங்கள் கூறும் சம்பவத்தில் வழங்கப்பட்டுள்ள சட்டம் குர்ரானில் உள்ளதா என பார்த்து அந்த குர்ரான் சட்டத்தின் வசனங்களை எனக்கு காமியுங்கள். அதைவிட்டு விட்டு மற்றதை கூறவேண்டாம் . குர்ரானில் உள்ள சட்டம் தவறு என்றால் எது தவறோ அந்த வசனங்களை முதலில் எனக்கு கூறுங்கள் .

                    • அப்போ சவூதிக்கு சொம்பு தூக்கும் பீஜேவையும் நீங்கள் கண்டிக்கிறீர்களா?

                    • தப்பு யார் செய்தாலும் தப்பு தான். தீரவிசாரிப்பதன் மூலமே உண்மை எது? பொய் எது? என்று நாம் கண்டுபிடிக்க முடியும். அந்த வகையில் பி.ஜே அவர்கள் சொன்ன கருத்தை நான் இதுவரை பார்க்கவும் இல்லை . கேட்கவும் இல்லை . நான் அவர்கருத்தை பார்த்த பிறகு அல்லது கேட்ட பிறகு நான் அவரை கண்டிக்கிறேனா என்று சொல்கிறேன் . இல்லை அவர் அதாரபூர்வமாகதான் கூறுகிறாரா என கூறுகிறேன்.

                    • கல் நெஞ்சம் .சவூதி போதகர்-மகள் விவகாரம் : புளுகுமூட்டை ஊடகங்கள்…

                      சில நாட்களுக்கு முன்பாக சவூதியை சேர்ந்த போதகர் (?) ஒருவர் தன் 5 வயது குழந்தையை வன்கொடுமை செய்து கொடுமைப்படுத்தியதாகவும், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட லுமா என்ற பெயருடைய அந்த குழந்தை சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததையும் உலக ஊடங்கங்கள் பெரிய அளவில் பேசின. பேசியதற்கு மற்றுமொரு முக்கிய காரணம், அந்த போதகர் (?) ரத்த பணம் கொடுத்து தப்பிவிட்டதாக அங்கலாய்த்தன மீடியாக்கள். இந்த விவகாரத்தில் தற்போது உண்மை நிலவரங்கள் தெரியவந்துள்ளன.

                      அந்த குழந்தை வன்கொடுமை செய்யப்படவும் இல்லை, கொலை செய்தவன் தண்டனையில் இருந்து தப்பவும் இல்லை. லுமாவின் தாய் ‘தன் மகள் வன்கொடுமை செய்யப்படவில்லை என்று மருத்துவமனை ஆதாரங்கள் மற்றும் போலிஸ் ஆதாரங்கள் தெரிவிக்கும்போது, இப்படியான குற்றச்சாட்டுகளை தன் மகளை அசிங்கப்படுத்தும் நிகழ்வாகவே தான் கருதுவதாக’ வருத்தத்துடன் கூறியுள்ளார். தன் மகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக ஊடகங்கள் பரப்பியதை இவர் நீண்ட நாட்களாகவே மறுத்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                      மேலும், இந்த கொலைகாரன் தற்போது சிறையில் தான் உள்ளதாகவும், இவர் மீதான வழக்கு விசாரனையில் உள்ளதாகவும் சவூதி நீதித்துறை தெளிவுப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் ஒரு செய்தியின் உண்மை நிலையை தெளிவாக ஆராய்ந்த பிறகு செய்தி வெளியிடுவது சிறந்தது என்று நீதித்துறை அறிவுறுத்தியுள்ளது.

                      நான் மேலே சொன்ன சவூதி அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தியை காண: http://gulfnews.com/news/gulf/saudi-arabia/killer-cleric-not-sentenced-yet-saudi-arabia-1.1143203

                      உண்மை அடுத்த தெருவுக்கு செல்வதற்குள் பொய் ஊரை சுற்றி வந்துவிடும் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது.

                      நன்றி: gulf news, முஹம்மது ஆஷிக்

            • 2, 3 இற்குரிய பதில்களை பார்க்கும்போது நீங்கள் கூறும் சொர்க்கம் ரொம்பவும் சிக்கலாயிருக்கும் போலுள்ளதே. ஆனால் ஆண்களைப் போலவே ஒரு பெண்ணுக்கும் ஒன்றிற்கு மேற்பட்ட கணவர்கள் இருக்கமுடியும் என இஸ்லாம் கூறுவது (என்று அப்துல்ரகுமான் கூறுகிறார்) மிகவும் ‘முற்போக்காகவே’ உள்ளது.

              • இனியவன் அவர்களே தாங்கள் கேட்க்கும் கேள்வி என்னவென்று எனக்கு புரியவில்லை தயவு செய்து மறுபடியும் உங்கள் கேள்வியை தெளிவாக கேட்கவும்.

    • //எனவே நீங்கள் முஸ்லீம்களுக்காக ஆதங்கப்படுகிறேன் பேர்வழியென்று இந்து மதவெறிக்கு ஒத்து ஊதி அவர்களுக்கு மேலும் சில காரணகளை எடுதுக்கூறாமல் இருந்தால் அது மிக நன்று. ஆயினும் நீங்கள் உண்மையிலேயே மனிதம் மீது அக்கறை உள்ளவராக இருந்தால் ஜாதி வேற்றுமையை வளர்க்க துடித்து அதற்க்கு நடைமுறை சவாலாக உள்ள இஸ்லாமிய அடையாளங்களையும் அவற்றை அணிந்துகொள்ளும் முஸ்லீம்களையும் வேரோடும் வேரடி மண்ணோடும் கருவறுக்க காத்திருக்கும் அடாவடி சக்திகளுக்கு இடம் கொடாமல் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இடம் கொடுப்பதே மனிதத்துக்கும் உங்களுக்கும் நன்மை பயக்கும்.//

      //இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு இடம் கொடுப்பதே மனிதத்துக்கும் உங்களுக்கும் நன்மை பயக்கும்.//

      மாற்று மதத்தவன் முட்டாள்ளா?? நீங்கள் மதம் பரப்புகிறீர்கள். நாம் அதை வெறுகிறோம்.

      that’s it simple..

    • // சந்தடி சாக்கிலே நீங்களும் உங்கள் இஸ்லாமிய விரோத போக்கை நடுநிலை என்ற போர்வை போர்த்தி காட்டியிருக்கிறீர்கள். //

      நேர்மையற்ற மதிப்பீடு. வினவு என்றும் நடுநிலை பேசியதே இல்லை. மத வெறியர்களுக்கும், மதப் பயங்கரவாதத்திற்கும் வினவு எப்போதும் எதிரிதான். மதங்களைப் பற்றிய வினவின் பார்வை மிகத் தெளிவாகவே உள்ளது. இதை வினவில் வெளி வந்துள்ள கட்டுரைகள் மூலம் நிச்சயம் உணரலாம்.

      இஸ்லாமிய பயங்கரவாதத்தைப் பற்றிய வினவின் பார்வை ஆர்.எஸ்.எஸ் இன் பார்வையைப் போன்றது அல்ல. ஆர்.எஸ்.எஸ் ஐப் பொறுத்தவரை ” இஸ்லாமியர்கள் என்றால் பயங்கரவாதிகள், பயங்கரவாதிகள் என்றால் இஸ்லாமியர்கள் “. ஆனால் வினவு போன்ற புரட்சிகர, சனநாயகச் சக்திகள் மேற்கண்ட பொய்ப்பிரச்சாரத்தை முறியடிக்கவே போராடுகின்றன.

      கட்டுரையில் மிகத் தெளிவாக
      // மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளுவதை மறைமுகமாக நியாயப்படுத்தும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. //

      என்று கூறியிருக்கிறார்கள். இதுதான் இஸ்லாமிய விரோதப் போக்கா?

      வினவு இஸ்லாமிய மக்களுக்கு என்றுமே நண்பன் தான். இஸ்லாமியர்கள் உள்ளிட்ட சிறும்பானமைக்கு எதிரான சங்க பரிவாரங்களின் பொய்ப் பிரச்சாரத்தை முறியக்கும் வகையில் ” கண்ணை மறைக்கும் காவிப் புழுதி- சிறும்பானமையினருக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ் இன் புரட்டு ” என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் வினவில் வெளி வந்திருக்கின்றன.

      பாகம் 1 – மதம் மாறினால் தேசிய உணர்வு மாறுமா?
      பாகம் 2 – பணம், வேலை, கல்விக்காக மதம் மாறுவது குற்றமா?
      பாகம் 3 – அம்பேத்கர் மதம் மாறியது ஏன்?
      பாகம் 4 – தீண்டாமையை ஏற்றுக்கொள்! இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்!!
      பாகம் 5 – கிறித்தவச் சீரழிவும், இசுலாமிய பயங்கரவாதமும், பார்ப்பனியத்தின் ‘சகிப்புத்தன்மை’யும்!
      பாகம் 6 – வந்தே மாதரம் பாடமறுப்பவன் தேச விரோதியா?
      பாகம் 7 – ஆண்டவனின் வறுமையா? ஆலயக் கொள்ளைக்கு உரிமையா?
      பாகம் 8 – கல்விக் கொள்ளையில் ஏகபோகம் கேட்கும் இந்து முன்னணி!
      பாகம் 9 – ஆவுரித்துத் தின்னும் புலையரும் உரிக்காமல் விழுங்கிய புனிதரும்!
      பாகம் 10- வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்?
      பாகம் 11 – ‘இந்து கடையிலேயே வாங்கு’ வாங்குபவனுக்கு இந்து உணர்வு, விற்பவனுக்கு?
      பாகம் 12 – சிறுபான்மையினர் தனிக்குடியிருப்பு , அக்கிரகாரம் பொதுக்குடியிருப்பா?
      பாகம் 13 – சிறுபான்மையினர் கமிசனைக் கலைக்கக் கோரும் ‘மனித உரிமை’ப் பற்றாளர்கள்!
      பாகம் 14 – கடத்தல்காரர்களெல்லாம் முஸ்லிம்களா?
      பாகம் 15 – ஜிகாத் – மதம் மாற்றும் புனிதப் போரா?
      பாகம் 16 – ‘நான்கு மனைவிகள் நாற்பதாயிரம் வைப்பாட்டிகள்’!
      பாகம் 17 – உருது முஸ்லிம்களின் மொழியா?
      பாகம் 18 – மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?
      பாகம் 19 – உயர்பதவிகளில் முஸ்லிம்கள் – பார்ப்பனியத்தின் கருணையா?
      பாகம் 20 – பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?
      பாகம் 21 – வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?
      பாகம் 22 – சதி… சதி….ஐ.எஸ்.ஐ சதி…
      பாகம் 23 – பண்டிகை விடுமுறைகள் எந்த மதத்திற்கு அதிகம்?
      பாகம் 24 – இந்திய இராணுவம் இன்னொரு பஜ்ரங்தள்!
      பாகம் 25 – இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
      பாகம் 26 – இந்தியாவில் கிறித்தவ மதமாற்றத்தின் வரலாறு?
      பாகம் 27 – செய்தி ஊடகம் இந்துமதத்தை இழிவுபடுத்துகிறதாம் !
      https://www.vinavu.com/2013/01/18/conversion-27/

      இதையெல்லாம் படித்துவிட்டு வினவை இஸ்லாமிய விரோதி என்று முத்திரை குத்துங்கள்.

      இஸ்லாமிய மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை அணுகும் முறையில் இஸ்லாமிய அமைப்புகளுக்கும், வினவிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன்வென்றால், இஸ்லாமிய அமைப்புகள் அப்பிரச்சனைகளை வெறும் இஸ்லாமிய மக்களுக்கான பிரச்சனையாகச் சுருக்கிப் பார்க்கிறது. ஆனால் வினவு அதை சமூகப் பிரச்சனையாகப் பார்க்கிறது.

      அதனால் தான் ம.க.இ.க வைப் போன்ற புரட்சிகர அமைப்புகள் இஸ்லாமிய மக்களின் மீதான அடுக்குமுறைகளுக்கெதிரான போராட்டத்தில் இந்து மதத்தில் உள்ள சனநாயகச் சக்திகளையும் திரட்ட முடிகிறது. ஆனால் இஸ்லாமிய அமைப்புகளால் அப்படித் திரட்ட முடிவதில்லை. இஸ்லாமிய அடையாளத்துடன் அப்பிரச்சனைகளை எதிர் கொள்வதன் மூலம் அவ்வப்பொழுது சில உரிமைகளையும், சலுகைகளையும் பெறலாம். ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளும் இஸ்லாமிய மக்களின் ஓட்டுக்காக அதை ஆதரிக்கலாம். ஆனால் நிரந்தரமாக இஸ்லாமிய மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால், இஸ்லாமிய எதிர்ப்பையே அரசியல் மூலதனமாகக் கொண்ட சங்க பரிவாரங்களை எழுத்திலும், களத்திலும் எதிர் கொண்டு அதை முறியடிக்க வேண்டும்.

      அப்படி முறியடிக்க வேண்டுமானால் அனைத்து சனநாயகச் சக்திகளையும் இந்து மதவெறிக்கெதிராக ஒன்று திரட்ட வேண்டும். அப்படித் திரட்ட முடியுமா உங்களால்?

      ம.க.இ.க. வின் ” பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு ” ( குஜராத் இஸ்லாமிய மக்களின் மீதான கொலை வெறியாட்டத்தை எதிர்த்து 2003-ல் தஞ்சையில் நடத்தப்பட்டது ) பற்றி கேள்விப் பட்டதுண்டா?

      பார்ப்பன இந்து மதவெறிக் கும்பலை அம்பலப்படுத்தும் ம.க.இ.க வின் ” அசுர கானம் ” , ” காவி இருள் ” போன்ற ஒலிப்பேழைகளைக் கேட்டதுண்டா?

      http://www.youtube.com/embed/FR7eUbce1BI?rel=0
      ” சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா !
      சொல்லிடு உன்னால் முடியுமா !
      நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா !
      சொல்லிடு உன்னால் முடியுமா ! ” இந்துக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வரிகள்.

      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1604:2008-05-18-13-11-24&catid=55:songs&Itemid=111
      பாபர் மசூதி இடிப்பைப் பற்றிய பாடலில்
      ” இடித்துவிட்டான மசூதியை இது சரிதானா?
      இந்து மக்கள் விருப்பம் என்றான் உன்னைக் கேட்டானா? ”

      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1964:therthal9&catid=55:songs&Itemid=111
      இந்து- இந்தி-இந்துஸ்தான் என்ற பாடலில்
      ” பரதனுக்காக ராமன் வனவாசம் போனானாம்
      ஆனால் பாபருக்காக பத்தடி நகரக் கூட மாட்டானாம் ”

      http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=1728:kaviirul5&catid=55:songs&Itemid=111
      “சொல்லாத சோகம் யாரும் வெல்லாத வீரம்” என்ற பாடலில் முஸ்லீம் என்ற ஒரே காரணத்திற்காக விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் போராளிகளின் தியாகம் இருட்டடிப்பு செய்ததை அம்பலப்படுத்தியிருப்பார்கள்.

      இஸ்லாமிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உண்மையாகப் போராடுகிறவர்கள் என்ற முறையில் இஸ்லாமியப் பிழைப்புவாத அமைப்புகளை விமர்சித்தால் உண்மையான இஸ்லாமிய மக்கள் நலம் விரும்பிகளுக்கு கோபம் வராது.

  53. சரி இங்காவது நாங்கள் சிறுபான்மையினர் என்பதால் பழிவாங்கபடுகிறோம் என சொல்கிறீர்கள்.நீங்கள் பெரும்பான்மையாக இருக்கும் இஸ்லாமிய நாடுகளில் நிலை என்ன?’ஷியா சன்னி பிரிவினர் மாறி மாறி தொழுகை செல்லும் வேளையில் குண்டு வைத்து பல நூறு பேர்களை கொள்கிறார்களே அதற்கு என்ன பதில்?அப்படி எதுவுமே நடக்கவில்லை என சப்பை கட்டு கட்ட வேண்டாம்.சரி ஷியா சன்னி பிரிவினர் மோதலில் இறக்கும் பல ஆயிரம் பேருக்காக நீதி வழங்க அல்லா யார் பக்கம் நிற்பார்?ஷியா பக்கமா சன்னி பக்கமா?

  54. அனைவரும் மதங்களையும் கடவுள்களையும், இறை தூதரையும் விட்டு விடுங்கள். மனிதர்களை மனிதர்களாய் மட்டும் பாருங்கள் அவன் என்ன மதம் எந்த கடவுளை ஏற்கிறான் என்றெல்லாம் பார்க்க வேண்டாம் அப்படி இருந்தால் யார் என்ன எந்த மதத்தை அல்லது கடவுளை பற்றி தவறாக சொன்னால் என்ன நமக்கு எந்த தொல்லையும் இல்லை. நாம் தான் எந்த மதத்தின் மீதும் சார்ந்தவர் இல்லையே. நான் எந்த மதத்தையும் சாராதவன் எந்த கடவுளையும் வழி படுவதில்லை. கொவில்லுக்கும் போவதில்லை….

  55. இவ்வுலகில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன அதற்கு தீர்வு காண போராடுவோம். கடவுளை/இறைவனை விட்டு விடுங்கள். வீண் வேலை…

  56. இந்த கட்டுரை நடுநிலையானதா இல்லையா? விஸ்வரூபம் திரைபடத்தை தடை செய்ததற்கு காரணம் – இஸ்லாம் மதத்தினரா அல்லது அரசியலா என்பதை எல்லாம் தாண்டி சில சந்தேகம் எழுகிறது…

    தமிழ் நாட்டில், தலைக்கு மேல் பிரச்னை இருக்கும்போது, தமிழக அரசு இப்படிப்பட்ட வேலைகளில் எப்படி ஈடுபடமுடிகிறது?

    அதேபோல், ஒரு திரைபடத்திற்கு தடை என்றதும், ஒன்று சேர்ந்து, வெப்சைட், facebook மற்றும் பல ரூபங்களில் நமது, கருத்தை பதிய முனைகிறோம். பலர் கமல் அவர்களக்கு cheque கூட அனுப்பி இருப்பதாக கேள்வி.

    ஆனால் தமிழ் நாட்டின் இன்றைய மிக முக்கியமான 18 மணி நேர மின்வெட்டு பிரச்சனைக்கு:

    ஏன் நாம் இவ்வளவு பேர் ஒன்று சேர்ந்து தமிழக அரசிடம் முறையிடவில்லை.
    ஏன் நாம் இவ்வளவு பேர் ஒன்று சேர்ந்து EB ஆபீஸ் முன் கூடி போராட்டம் நடத்தவில்லை.
    ஏன் நாம் இவ்வளவு பேர் ஒன்று சேர்ந்து facebook இன் மூலமாக ஒருமித்த கருத்தினை கொண்டு வந்து ஒரு தீர்வு காண முடியவில்லை..
    ஏன் நாம் இவ்வளவு பேர் ஒன்று சேர்ந்து நமது எதிர்ப்பை காட்ட வில்லை…..

    இது மாதிரி பல பிரச்சனைகள்….பட்டியல் இடலாம்….

  57. iraivanin oliyaai vaaikalaal oothi anaikka ninaikindranar marupor verutha pothum iraivan thanathu oliyai mulumai paduthiyae theeruvaan.

    neengal yenna vendumaanalum ularungal. ulahil irukum sithaathangalil comunisathai vida oru muttal thanamana sithaantham veru ondrum illa.

  58. மதமான பேய் என்னை பிடியாதிருக்கவேண்டும்- எவ்வள்வு தீர்க்கதரிசனம்! இப்போது நடப்பது அம்மையாரின் வெற்று வேட்டு ஸ்Tஊண்T ! இதுக்கு போய் உணர்ச்சி வசப்படலாமா? பாருஙகள்! மத்தியச்தம் செய்து வைக்க அம்மையார் ரெடி! நம்புஙக, இதில் அரசியல் இல்லவே இல்லை!

  59. எனத்தருமை முஸ்லிம் நண்பர்களே, மத வெறி எங்களுக்கு அல்ல உங்களுக்கே.. ஓர் உதாரணம்.. இங்கே பல முஸ்லிம்கள் அஸ்லாம் அழைக்கும் என்று ஆரம்பிப்பதன் காரணம் என்ன? இது பல மத அங்கதவர்கள் வாசிக்கும் விமர்சிக்கும் கட்டுரை. வேறு எந்த மதத்தவனும் ஏதாவது ஒரு மத அடையாளதுடன் இங்கு வரவில்லை. ஒரு இந்துவோ ஒரு கிறிஸ்தவனோ ஒரு நாத்திகனோ அவ்வாறு வரவில்லை. ஒரு மாற்று மதத்தவனுக்கு இது மத வெறி ஊட்டும் செயல். நீங்கள் அல்லவின் புகழ் பரப்பும் போது அதை ஏன் ஒரு நாத்திகன் எதிர்க்ககூடாது?

  60. இந்துத்துவ பயங்கரவாதிகளை தமிழ்நாட்டில் வினவைத்(ம.க.இ.க) தவிர வேறு யாரும் தீவிரமாக அம்பலப்படுத்தவில்லை, எதிர்க்கவும் இல்லை. அப்படி எதிர்ப்பதற்குக் காரணம் ஏதோ முஸ்லீம் அமைப்புகளும், மக்களும் சந்தோசப்படுவார்கள் என்பதற்காக அல்ல. இந்தியாவில் மார்க்சிய அடிப்படையில் உழைக்கும் மக்கள் விடுதலைக்காக இயங்கும் ஒரு புரட்சிகர அமைப்பு இந்து, முஸ்லீம், கிறித்தவம் ஆகிய மதங்களின் மீது என்ன பார்வை கொண்டிருக்க வேண்டுமோ, அந்தப் பார்வை வினவிடம் சரியாகவே இருக்கிறது. மார்க்சியம் எந்த மதத்தின் மீது போர் தொடுக்கவில்லை. ஏனென்றால் மதம் மேற்கட்டுமானமாக இருக்கிறது. அடிக்கட்டுமானமாக இருக்கின்ற உற்பத்தி முறை, உற்பத்தி உறவுகள் தகர்க்கபப்டும் போது மேற்கட்டுமானத்தில் இருக்கும் மதத்திலும் மாற்றம் ஏற்படும் என்பதே மார்க்சியம்.

    ஆனால் இந்தியச் சூழலைப் பொறுத்தவரையில் இந்து மதம் தொழில் பிரிவினையாக, உற்பத்தி முறையாகவே இருக்கிறது. ஆகவே வர்க்கப் போராட்டத்தின் ஒரு அங்கமாக, இந்து மதத்தை எதிர்த்துப் போர் தொடுப்பது அவசியமாகிறது. மற்ற மதங்கள் அப்படியில்லை. மேலும் இந்தியாவில் இந்து மதத்தைத் தவிர மற்ற மதங்கள் ஒடுக்கப்பட்ட மதங்களாக இருக்கின்ற காரணத்தினால் அம்மதத்தைச் சார்ந்த மக்களுக்காக வினவு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், சுரண்டல் நிறுவனமாக இருக்கின்ற மதத்திற்கு எதிராக, அறிவியல் கருத்துகளைப் பரப்ப வேண்டும் என்ற அடிப்படையில் மக்களின் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்துகிற அனைத்து மதங்களிலும் உள்ள அறிவியலுக்கெதிரான மூடக் கருத்துகளை, மக்களை அடிமைப்படுத்துகிற தவறான நடைமுறைகளை சமரசமின்றி எதிர்த்தும், அம்பலப்படுத்தியும் வருகிறது.

    அதனடிப்படையில் இந்து மதத்தைப் பற்றிய கட்டுரைகளே வினவில் அதிகம். மற்ற மதங்களைப் பற்றிய கட்டுரைகளும் கணிசமாக அளவில் இருக்கின்றன. தேவையின் அடிப்படையில் தொடர்ந்து எழுதுவார்கள்.

    இந்துமதத்தை அம்பலப்படுத்தும் பெரும்பாலான கட்டுரைகளில் பார்ப்பன இந்துமதத்தின் செம்பு தூக்கிகள் ” இந்து மதத்தைப் பற்றியே எழுதுறியே? மற்ற மதத்தைப் பற்றி எழுவதற்குத் தெம்பிருக்கிறதா? ” என்று கூறுவார்கள். அவர்கள், மற்ற மதங்களை அம்பலப்படுத்தி வினவில் எழுதப்பட்ட கட்டுரைகளைப் படிப்பதில்லை. படித்தாலும் நேர்மையாகப் பரிசீலிப்பதில்லை. மற்ற மதங்களை எவ்வளவு விமர்சித்தாலும் பத்தாது, நம் மதத்தை விமர்சிக்கக்கூடாது என்பதே அவர்களின் எண்ணம்.

    இதே எண்ணம்தான் இஸ்லாமிய மதவாதிகளிடமும் இருக்கிறது. இந்துத் தீவிரவாதத்தைப் பற்றி வினவில் எழுதப்பட்ட ஏராளமான கட்டுரைகளை மறந்து(மறைத்து) ” முஸ்லீம்களை மட்டும் பயங்கரவாதிகள் என்கிறீர்கள். இந்துக்களை ஏன் அப்படி அழைப்பதில்லை ? ” என்று அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்டு வினவை மடக்குகிறார்(?) அபுபக்கர் என்பவர். அதற்கு நாகராஜ் என்ற நண்பர் வினவில் இந்துத் தீவிரவாதிகளைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகளின் இணைப்பை அளிக்கிறார். அதையும் பொருட்படுத்தாமல் வினவைப் பற்றிய அவதூறைத் தொடர்கிறார் அபுபக்கர். வினவின் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருபவர் எவரும், வினவு எப்பொழுதுமே இஸ்லாமியர்களின் நண்பனாக. இஸ்லாமியர்கள் மீதான அடக்கு முறைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதும் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

    இஸ்லாமிய அமைப்புகள் இஸ்லாமிய மக்களின் அன்றாடப் வாழ்க்கைப் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுப்பதில்லை. அதைச் செய்பவர்கள் புரட்சிகர அமைப்புகள்தான். அதனடிப்படையில் இஸ்லாமிய மக்களைத் தவறான பாதையில் அழைத்துச் செல்லும் பீ.ஜெ, போன்ற மதவாதிகளின் பின்னால் செல்லாதீர்கள் என்று வினவு எச்சரிப்பதில் என்ன தவறு இருக்கிறது? முஸ்லீம் மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவரும், கர சேவைக்கு தமிழகத்தில் இருந்து ஆள் அனுப்பிய, முஸ்லீம் மக்களை நர வேட்டையாடும் மோடியின் பதவியேற்பு விழாவிற்குச் சென்று வாழ்த்துச் சொன்ன பாசிச ஜெயாவை, தனது தனிப்பட்ட பழிவாங்கல் நடவடிக்கைக்காக விஸ்வரூபம் படத்துக்கு தடைவிதித்ததை “அல்லாதான் ஜெயாவை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறார்” என்று கூறும் மூடத்தனத்தை வினவை அவதூறு செய்யும் முஸ்லீம் அறிவாளிகள் ஏன் கண்டிக்கவில்லை?. பாசிச ஜெயா மோடியுடன் நட்பாக இருக்கிறார் என்பது தெரிந்தும், ஜெயா ஒரு பெண் மோடிதான் என்பது தெரிந்த பிறகும்( கோவைக் கலவரத்தில் இந்து முண்ணனிக் காலிகளுடன் இணைந்து போலீசும் முஸ்லீம்களைக் குதறியதெல்லாம் மறந்திருப்பார்களோ? ) ஜெயாவுடன் கூட்டணி வைத்திருக்கும் முஸ்லீம் அமைப்புகளை மேற்சொன்ன முஸ்லீம் அறிவாளிகள் ஏன் கண்டிக்கவில்லை?. சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் தா.பாண்டியன், ராமதாசு உள்ளிட்டு பல பேரைப் பற்றிப் பேசிய பீ.ஜெ இப்பிரச்சனையின் மீதான வினவின் நிலைப்பாட்டைப் பற்றி ஏன் பேசவில்லை?

    ஆக முஸ்லீம் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறோம் என்று கூறும் பெரும்பாலான அமைப்புகள் முஸ்லீம்களை வைத்துப் பிழைப்புதான் நடத்துகின்றன ( தலித் மக்களின் ஆதிக்க சாதி எதிர்ப்புணர்ச்சியை தங்களது பிழைப்பிற்காகப் பயன்படுத்தும் தலித் பிழைப்புவாதிகள் போல).

    ஆதிக்க சாதிகளில் உள்ள ஜனநாயகச் சக்திகளின் துணையின்றி, ஜாதியாகத் திரண்டு எப்படி ஜாதியை ஒழிக்க முடியாதோ? அது போல முஸ்லீம் மக்கள், இந்து மதத்தில் உள்ள ஜனநாயக சக்திகளின் துணையின்றி, ஜாதி, மதமற்ற பாட்டாளி வர்க்கத்தின் துணையின்றி, இந்து மதவெறிப் பயங்கரவாததை எதிர்த்து வீழ்த்த முடியாது.

    இந்த நிதர்சனமான உண்மையை உணர்ந்த ஜனநாயக உணர்வுள்ள, நேர்மையான இஸ்லாமிய நண்பர்கள், இஸ்லாமிய மக்களுக்கு இதை உணர்த்த வேண்டும். இஸ்லாமிய மக்களை வைத்துப் பிழைப்பு நடத்தும் பீ.ஜெ. போன்ற மதப் பிழைப்புவாதிகளை இஸ்லாமிய மக்களிடம் அம்பலப்படுத்தித் தனிமைப் படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாமல், பீ.ஜெ வின் பேச்சுக்களால் உணர்ச்சிவசப்பட்டு அவர்களின் பின்னால் சென்றால், வரலாற்றுப் பிழை இழைத்தவர்கள் ஆவீர்கள்.

    • // முஸ்லீம்களை மட்டும் பயங்கரவாதிகள் என்கிறீர்கள். இந்துக்களை ஏன் அப்படி அழைப்பதில்லை ? ” என்று அறிவுப்பூர்வமாக கேள்வி கேட்டு வினவை மடக்குகிறார்(?) அபுபக்கர் என்பவர்.//

      அய்யா பகத்,

      நீங்கள் அனைவரும் என் கேள்வியை புரிந்துகொள்ளவில்லை அல்லது என் கேள்வியே நீங்கள் நகைப்பது போல் அறிவுப்பூர்வமானதாக(?)இருப்பதால்தான் உங்களுக்கெல்லாம் புரிந்துகொள்ள முடியவில்லையோ என என்னாலும் புரிந்துகொள்ள இயலவில்லை. இருந்தாலும் மீண்டும் முயற்சிக்கின்றென்.

      நண்பர் நாகராஜ் கூட பார்த்து படித்துக்கொள்ளுங்கள் என்று எனக்கு 11 லிங்குகளைத்தான் பதில்களாக அளித்தார்,(பின்னர் அந்த பதினொன்றும் கூட பின்னர் 3 ஆக குறைந்துபோய்விட்டது.) ஆனால் நீங்களோ பதில் எனும் போர்வையில் என்னை ஒரு மதவாதியாக முத்திரை குத்தி அவதூறு செய்திருக்கிறீர்கள். என்னுடைய தவறு அந்த லிஸ்டில் பாசகவை சேர்த்ததுதான். பாஜகவை நீக்கிவிட்டால் கூட என்னுடைய குற்றச்சாட்டு அப்படியே இருக்கிறது. வாஜ்பாயியை தவறான கட்சியில் இருக்கும் சரியான மனிதர் என பசப்பிவிட்டு வாஜ்பாயின் அமைச்சரவையில் பங்குகொண்ட கட்சிகளையாகட்டும் குஜராத் படுகொலைகள் நடந்த சமயத்தில் மௌனித்து கூட்டணியில் தொடர்ந்த ஆட்சிக்கு முட்டுக்கொடுத்த கட்சிகளையாகட்டும் அவர்களை தீவிரவாதிகள் என சாடியிருக்கிறீர்களா? இன்றைய தேதி வரையில் விடுதலைப் புலிகளை தீவிரவாதிகள் என சாடியிருக்கிறீர்களா? ஆனால் தாலிபான், ஷியா விவகாரம், ரிஹானா விவகாரம், ஆகியவற்றில் ஆதரவு கருத்து சொன்னதனால் மட்டுமே தமிழக இஸ்லாமிய அமைப்புகள் தீவிரவாதிகளாக சந்தேகமற உங்களால் சுடப்படுகிறதே அது ஏன்? என்றுதான் கேட்கின்றேன்.

      கட்டுரையின் தொடர்ச்சியாக இறுதியில் `இந்த உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு யாரும் விஸ்வரூபம் படமெல்லாம் பார்க்கத் தேவையில்லை` என்று வரும் வரிகளுக்கு என்ன பொருள். ~ அப்படியென்றால், விஸ்வரூபம் படத்தில் இந்த உண்மை பொதிந்துள்ளதா? குரான் ஓதும், தொழும் முஸ்லீம்கள் எல்லாம் இப்படித்தான் தீவிரவாதம் செய்பவர்கள் என கமல்ஹாசன் காட்டியிருந்தால் அது உண்மைதான் என்கிறதா வினவு? முன்னதில் இஸ்லாமிய அமைப்புகளை சாடியிருந்தீர்கள். பின்னதில் அனைத்து முஸ்லீம்களையும் அல்லவா சாடுகிறீர்கள்.

      முஸ்லீம்கள் மற்ற மதத்தவர்களுடனும் ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து போராடவேண்டும் என்பதையெல்லாம் மறுப்பதற்கில்லை. அதற்காக அந்த ஜனநாயக சக்திகளின் தவறை சுட்டிக்காட்டக் கூடாது என்பதெல்லாம் சரியாகாது. என்னைப் பொறுத்தவரையில் இந்தப் பதிவின் சில வரிகள் வினவு எதிரணியில் நின்று கொண்டு கல்லெறிவதைப் போலவே உள்ளது. ஒரு முஸ்லீமின் வலியை ஒரு முஸ்லீமால்தான் உணர்ந்துகொள்ள முடியும் என்று நான் கூறவரவில்லை. ஒரு கம்யூனிஸ்டால் அதை நிச்சயம் உணர்ந்துகொள்ளமுடியும். அதனாலே உங்களிடம் என் கோரிக்கையை வைக்கின்றேன். என் குற்றச்சாட்டை மறுத்து, நான் எதைப் பற்றி கேள்வி எழுப்பியிருக்கின்றேனோ அதிலிருந்து மட்டும் விளக்குங்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

      • தலிபான் ஐ புலிகளோடு ஒப்பிட்டு சொன்னீர்கள் . அதில் பாதி உண்மை . ரசியர்களை எதிர்த்து போரிடும் வரை! அதன் பிறகு ஒரு பாத்து வருடம் ஆட்சி நடத்தினார்கள் . அவர்களை வழி நடத்தியது எது ? சுடான் என்னும் நாடு இரண்டாக பிரிய காரணமாக அமைந்த மார்க்கம் எது ?
        சோமாலியா மக்கள் இன்றைக்கும் அரசாங்கம் இல்லாமல் அடித்து கொண்டிருக்க காரணம் எது ?

        என்னது ? …

        புரிந்தது எல்லாம் அமரிக்காவின் ஊடகங்கள் கிளப்பிய பொய் செய்திகள். அமைதி வழி வாழும் அன்பர்கள் மீது பழி போடுகிறார்கள் . அப்படிதானே ?

        • நான் எழுப்பிய கேள்வியின் அர்த்தம் உண்மையிலேயே புரியவில்லையா அல்லது புரியாதது போல நடிக்கிறீர்களா என்பதற்கு எல்லாம் அவரவர் மனங்கள்தான் சாட்சி.

          அய்யா ராமன்,

          ஆட்சியில் இருந்துகொண்டு பயங்கரவாதம் செய்தால்தான் தீவிரவாதிகள் என்பீர்களோ. அப்படியென்றால் அமெரிக்காவையும், இந்தியாவையும் இன்னபிற நாடுகளையும் தீவிரவாதிகள் லிஸ்டில் சேர்ப்பீர்களா 🙂 அமெரிகாவின் ஆட்சியாளர்கள் தீவிரவாதிகள் என்பதில் எப்படி உங்களுக்கு ஆட்சேபனை இல்லையோ :)அதேபோல் எனக்கும் அதில் இஸ்லாமிய நாடுகளும் இருப்பதில் எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை.

          தாலிபான் பாத்து வருடங்களும் (10 அல்ல 5) விடுதலைப் புலிகள் தங்களது கட்டுப்பாட்டில் சில பகுதிகளை சில வருடங்கள் வைத்திருந்ததும் அல்ல இங்கு பிரச்சினை. தாலிபானை ஆதரிப்பது என்பதினாலேயே இங்குள்ள இசுலாமிய அமைப்புகள் தீவிரவாதிகள் என்றால் ஏன் மதிமுக, நாம் தமிழர், திமுக, பாமக, அதிமுக விசி போன்ற கட்சிகளை தீவிரவாதிகள் என்று சொல்லக்கூடாது?

          மற்றபடி, சோமாலியா, சூடான், ஈராக், ஈரான், ஆப்கான், நைஜீரியா, லிபியா, பாலஸ்தீனம், சிரியா போன்ற நாடுகளில் நடப்பதெல்லாம் அந்ந்தந்த நாட்டுப் பிரச்சினைகள். அந்நாடுகளை ஆள்பவர்கள் எல்லாம் இசுலாமிய மதத்தவர்கள் என்பதற்காக ஒன்றுபட்டு இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம் இசுரேல் காணாமல் போயிருக்கும். அமெரிக்கா படுகுழியில் வீழ்ந்திருக்கும்.

          ராமன் எனக்கு ஒரு கேள்வி தோன்றுகிறது. அரசுகளை எதிர்த்து போராடுபவர்களின் மதத்தை மட்டும் வைத்து சிந்திக்கிறீர்களே. ஏன் அந்தந்த நாடுகளில் ஆள்பவர்களும் இஸ்லாமியர்கள்தானே என்ற கோணத்தில் சிந்திக்க மறுக்கிறீர்கள்? இதற்கு அமெரிக்க ஊடகங்கள் ஒரு காரணமோ 🙂

      • // இதனைப் படித்தவுடன் “நீ விஸ்வரூபத்தை ஆதரிக்கிறாயா? கமலின் கைக்கூலியே” என்பன போன்ற வசைகளை இஸ்லாமிய மதவெறியர்கள் தொடங்குவார்கள் என்பதை அறிவோம். //

        மேலே உள்ள இந்த வரிகளோடு இணைத்துதான்

        // மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளுவதை மறைமுகமாக நியாயப்படுத்தும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.//

        இதைப் பொருள் கொள்ள வேண்டும். “இவர்கள்” என்று இங்கே குறிப்பிட்டிருப்பது இஸ்லாமிய மதவெறியர்களைத்தான். இஸ்லாமிய மக்கள் அனைவரையும் அல்ல.

        // படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துக் காட்டியிருப்பதன் மூலம் தங்களை இழிவுபடுத்தியிருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன. ஒரு இந்திய முஸ்லிமை (கதாநாயகன் கமலஹாசன்) ரா உளவாளியாகவும், அமெரிக்க அடிவருடியாகவும் காட்டியிருப்பதுதான் முஸ்லிம்களுக்கு செய்யப்பட்டுள்ள பெருத்த அவமதிப்பு என்று எங்களுக்குத் தோன்றுகிறது. அமெரிக்காவின் அடியாளும், இசுரேலின் கையாளுமான சவூதி அரசுக்கு அடியாள் வேலை பார்க்கும் இஸ்லாமிய அமைப்பினருக்கு இப்படித் தோன்றாததில் வியப்பில்லை.//

        மேற்கண்ட வரிகளில் வினவு இஸ்லாமியர்களின் சுய மரியாதைக்காகப் பேசுவது தெரியவில்லையா?

        அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடும் ஈராக் மக்களும் இஸ்லாமியர்கள் தான்.

        காசுமீரில் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடுபவர்களும் இஸ்லாமியர்கள்தான்.

        தேசவிடுதலைக்காகப் போராடும் பாலஸ்தீன மக்களும் இஸ்லாமியர்கள்தான்.

        இவர்களின் போராட்டங்களையெல்லாம் ஆதரிக்கும் வினவு ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்களையும் எப்படி தீவிரவாதிகள் என்று கூறும்?

        கட்டுரையில் உள்ள குறிப்பிட்ட சில வரிகளைப் பிடித்து மட்டும் தொங்காதீர்கள். முழுமையாகக் கட்டுரை என்ன சொல்கிறது என்று பாருங்கள்.

        தமிழகத்தில் இந்துத்துவ பயங்கரவாதச் சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கின்ற வினவு சார்ந்த அமைப்பை ஆர்.எஸ்.எஸ் இன் மனசாட்சி ஆள்கிறது என்று வாய் கூசாமல் கூறிச்செல்கிறீர்கள்.

        இஸ்லாமியர்களுக்கான நியாயத்தை இஸ்லாமிய அமைப்புகளை விட நக்சல்பாரிகள் தான் சரியாகப் பேசுகிறார்கள். உணர்ச்சிவசப்படாமல் பரிசீலியுங்கள்.

        • மீண்டும்மீண்டும் உதாரணங்களை எடுத்து வைப்பதன் மூலம்…………

          மதவெறியனாக்கப்பட்டு விடுவேனோ என
          அச்சமாக இருக்கிறது.

          புரிந்துகொள்ளத் தக்க வகையினில் எழுத தெரியவில்லையோ என
          வெட்கமாகவும் இருக்கிறது.

          வளர்க்கப்பட்ட மதம் சார்ந்து சிந்திக்கின்றேனோ என
          கடுப்பாகவும் இருக்கிறது.

          `எது தீவிரவாதம்` பலமுறை படித்தும் புரிந்துகொள்ள முடியவில்லையோ என
          எரிச்சலாகவும் இருக்கிறது.

          ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடும் வினவுக்கே பாடம் எடுக்கிறோமோ என
          அசூயையாகவும் இருக்கிறது.

          ஒன்றிலிருந்து ஒன்றை பிரித்துப் பார்ப்பதுதான் மார்க்சியமோ என
          குழப்பமாகவும் இருக்கிறது

          புரட்சிகர கருத்திலிருந்து அந்நியப்பட்டு விட்டேனோ என
          தவிப்பாகவும் இருக்கிறது

          இருப்பினும் வினவுடன் நேர்மறையில் புரிந்துகொள்ள முடியவில்லையே ஏன்? என
          நெருடலாகவும் இருக்கிறது

          இருப்பினும் நிதானமாக பரிசீலனை செய்கின்றேன் பகத்

          நன்றி.

          • உங்கள் சந்தேகம் குறித்து வினவு ஏற்கனவே எழுதியது

            1. இசுலாமிய பயங்கரவாதத்தை இசுலாமிய மக்களில் பெரும்பான்மையினர் கண்டிக்கவே செய்கிறார்கள். ஆனால் அம்மக்களை மதவாதத்தில் மூழ்கடிக்கும் மதவாதிகள், அவர்கள் பயங்கரவாதத்தைக் கண்டிப்பவர்களாக இருந்தாலும் மதவாதம் என்ற முறையில் சித்தாந்தம் என்ற நிலையில் பயங்கரவாதிகளோடு ஒன்றுபடவே செய்கிறார்கள். உலகம் முழுவதும் இசுலாத்தின் ஆட்சி வரப்போவதாகவும், ஷரியத்தின் சட்ட ஒழுங்கில்தான் உலகம் அமைதி பெறமுடியுமென்றும், மனித குலத்திற்கு இசுலாம் மட்டுமே விடுதலை அளிக்கப் போவதாகவும் நம்புகிறார்கள். இதை காந்திய வழியில் செய்வதா, அல்கைதா வழியில் செய்வதா என்பதில்தான் வேறுபாடு. ஆனால் இந்த மதப்புனிதம் இசுலாம் தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை நிலவியதில்லை என்பதோடு இனியும் நிலவ முடியாது என்பதுதான் உண்மை.

            கட்டுரைக்கான இணைப்பு:
            பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!
            https://www.vinavu.com/2011/05/02/osama-obama/

            மேலும் கட்டுரையில் இருந்து…..

            2. ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்து அரேபிய பதூயின் இன நாடோடி மக்களை நல்வழிப்படுத்தும் நபிகள் நாயகத்தினுடைய போதனைகளின் தேவை அந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது. அதை வைத்து இருபத்தியோராம் நூற்றாண்டின் மனித குலப்பிரச்சினைக்கு தீர்வு காண நினைப்பது அடி முட்டாள்தனம். அது இசுலாமிய மக்களுக்கு எந்த விடுதலையையும் வழங்க முடியாது என்பதோடு அவர்களது அவல வாழ்க்கையை மதம் என்ற உணர்ச்சியில் மூழ்கடிப்பதற்குத்தான் பயன்படும். அதைத்தான அரபு ஷேக்குகளும், இசுலாமிய நாடுகளிலிருக்கும் ஆளும் வர்க்கங்களும் செய்து வருகிறார்கள். மதத்தின் பெயரால் விரிக்கப்பட்டிருக்கும் இந்த மாயவலையிலிருந்து இசுலாமிய மக்கள் வெளியேற வேண்டும். இதன் பொருள் இசுலாமிய மதத்தை துறப்பது என்பதல்ல. எந்த மதமும் ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்வில் மட்டும் பின்பற்றப்படவேண்டிய விசயம். அம்மதம் அவனது அரசியல், சமூகப், பொருளாதார வாழ்வில் இடம்பெறக்கூடாது என்பதைத்தான் இங்கு வலியுறுத்துகிறோம்.

            3. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் கம்யூனிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தேசியவாதிகள் என்று பலரும் இருக்கின்றனர். ஆனால் இசுலாமிய மக்கள் மட்டும்தான் மதத்தின் பெயராலும் எதிர்க்கின்றனர். இது நிச்சயமாக ஆரோக்கியமான போக்கல்ல, அதற்கான அடிப்படையை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியிருந்த போதும். ஏனெனில் பாலஸ்தீன், ஈராக், காஷ்மீர் போராட்டங்களெல்லாம் தேசிய இனப் போராட்டங்களாகத்தான் இன்னமும் இருந்து வருகிறது. அவற்றை மதம் என்று குறுகிய வட்டத்தில் அடைப்பதால் அந்தப் பலனை ஏகாதிபத்தியங்கள்தான் அடைகின்றனவே தவிர இசுலாமிய மக்களல்ல. மேலும் அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலினால் இசுலாம் மட்டுமல்ல பல மதங்களைச்சேர்ந்த மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்களை வர்க்க உணர்வுதான் இணைக்கவேண்டுமே ஒழிய மதம் அல்ல. அப்படி மதத்தால் பிரிக்கப்பட்டால் நாம் போராடுவதற்கான தோழமைகளை இழந்து போகிறோம் என்பதுதான் கண்ட பலன்.

  61. விஸ்வரூபமெடுத்தார் அம்மா!பதிவில் பின்னூட்டப் பெட்டி தவறுதலாக மூடப்பட்டுள்ளது.நாங்களும் விஸ்வரூபமெடுக்கனும் தோழர்.

  62. இஸ்லாமியர்களின் சகிப்புத்தனமைக்கு ஒரு உதாரணம்….
    அகதிகளாகவும், குடிபெயர்பவர்களாகவும் அவுஸ்திரேலியா போயிருக்கும் இஸ்லாமியர்கள் தங்கள் பெண்கள் பொது நீச்சல்குளங்களுக்கு செல்வதற்காக கிழமையில் ஒரு நாளை முஸ்லிம்களுக்கென்று மட்டும் ஒதுக்குமாறு போராடுகிறார்கள். மாற்று மதத்தவர்கள் பெண்களாயினும் தடை வேண்டுமாம். இப்பொழுது எழும் ஒரு நாள் தடை கோரிக்கை என்பது ஒரு ஆரம்பம் மட்டுமே, ஏனெனில் இன்னமும் அவர்களது சனத்தொகை சதவீதம் 1/7 இலும் குறைவு.
    இதற்குப்பதிலாக, காலம்காலமாக அந்நீச்சல் குளங்களைப் பயன்படுத்திய வெள்ளையர்கள், ‘வரிசெலுத்தும் நாங்கள் வருவதற்கு ஒரு நாள் தடையென்றால், மற்றைய நாட்களில் இஸ்லாமியர்களுக்கு தடைவிதிக்கலாமா?’ என்று கேட்டால், அதனை மனித உரிமை மீறல் என்று அதே இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.
    ஆக மொத்தத்தில் இஸ்லாமியர்களுக்கு ஒரு நியாயம், மற்றவர்களுக்கு வேறு நியாயம்.

  63. //அதற்காக தங்கள் அவர்கள் பகவத்கீதை என்ற வேதத்தை படித்துவிட்டு தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று கூற மாட்டீர்கள் . அது அவருடைய தனிப்பட்ட தவறான செயல் .அதற்க்கு மதம் பொறுப்பாகாது என்றே கூறுவீர்கள்.//

    See this video and clear you mind.

    http://www.youtube.com/watch?v=2BsBmAEpZ6g

    Description of the video: An Al-Qaeda terrorist READING A VERSE OF QURAN on his laptop computer, while other terrorist group members holding their American made M16 rifles, ready for execution of a kidnapped Syrian policeman.

    :-)))))

    • சகோதரர் மாக்கான் அவர்களே தங்கள் வீடியோ பார்தேன்.இதை நான் ஆதரிக்கவில்லை மாறாக தாங்கள் குர்ரான்(இஸ்லாம்) அதை ஆதரிக்கின்றது என்ற கருத்திலேயே கூறுகிறீர்கள் அதை தான் நான் தவறு என்று கூறுகிறேன். தாங்கள் ஒருமுறை குர்ரானை படித்துவிட்டு அதில் மற்றவர்களை அநியாயமாக கொல்ல சொல்லிருந்தால் தங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதில் அவ்வாறு ஒரு வார்த்தை கூட கிடையாது. அப்படி இருக்கும் பொலுது இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கின்றது என கூற முடியாது. இது தனிப்பட்ட ஒருவரின் செயல் என்றே கூர முடிஉம்.

  64. @பதிவாளர் மற்றும் @பகத்

    கடந்த வாரத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான கொலைவெறி கருத்தாடல்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்தது. கருத்து சுதந்திரத்தை தீவிரவதிகளாகிய முஸ்லீம்கள் பறிக்கிரார்கள் என்ற ஒப்பாரி ஓயாது கேட்டுக்கொண்டே இருந்தது. கேள்வி கேட்பவர்களும் சரி பதில் சொல்பவர்களும் சரி கமல் எத்தனை சிறந்த மனிதர்/கலைஞர் அவர் நட்டமடைந்தால் இந்தியாவுக்கு எத்தனை பெரிய இழுக்கு என்கிற ரீதியிலேயே பேச.

    கமல் வேறு அடிக்கடி தான் நிஜ வாழ்விலும் எதனை சிறந்த நடிகன் பாருங்கள் என்று அவ்வப்பொழுது பேட்டி கொடுத்து நிரூபித்தார். திரை அரங்கு வியாபாரிகள் இந்த படம் மட்டும் அல்ல கமலின் எந்த படத்தையும் வெளியிட விட மாட்டோம் என்று மிரட்டிய பொழுது ‘Trade Terrorists’ என்று கொதித்து எழாத கமல் முஸ்லீம்கள் எங்கள் வாழ்கையை பாதிக்கிறது கொஞ்சம் படத்தை திருத்தங்கள் என்றால் ‘கலாசார தீவிரவாதம்’ என்று சர்வ சாதரணமாக அவரால் முஸ்லீம்கள் மீது தீவிரவாத பட்டம் கட்ட முடிந்தது. அதை மறு கேள்வியில்லாமல் அணைத்து ஊடகங்களும் ஒத்து ஊதினார்கள்.

    போததற்கு நம் இந்து வெறி நண்பர்கள் கூட்டாகவோ தனியாகவோ கணினி முன் அமர்ந்து தன பெயரிலோ இன்னும் பிற பத்து பெயரிலோ, இந்த பூமி பந்தில் நடக்கும் எல்லா திருட்டு மொள்ளமாரிதனத்துக்கும், எல்லா அசம்பாவிதங்களுக்கும் இந்த முஸ்லீம்கள் தான் கரணம் எனேவ இந்த முஸ்லீம்கள் வாழவே கூடாது என்று வீரவசனம் பேச, ஏதடா இவர்கள் கலவரத்தை தூண்டாமல் விட மாட்டார்கள் போல, யாராவது அடுத்த கேந்திரத்தின் நியாயங்களை சொல்கிறார்களா என்று வினவுக்கு வந்தால். அங்கும் அதே கதி தான். அதிலும், முக்கியமாக, மிரட்டல் வேறு.

    சில வருடம் வேறு நாட்டில் வாழ்ந்து நிரந்தர குடியேற்ற வாய்ப்புகள் இருந்தும் அதை விட தமிழ் மண்ணும் அதிலிருக்கும் Simplicity யும் அன்யோன்யமும் என் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று (வேறு பல காரணங்களில் இதுவும் ஒன்று) இந்திய திரும்பிய எனக்கு சென்ற வாரம் தான் கொஞ்சம் வயிறு கலக்கியது. என்னடா இது வினவும் சேர்த்து கும்மியடிக்குதே என்று நின்று நிதானமாக யோசித்தால் ‘Really Wondered about the reach of fascists’. அதை ஊர்ஜிதம் செய்ய அத்தனை அதிகம் பின்னூட்டமிடாத நானும் பின்னூட்டமிட்டேன்.

    தங்களின் பதிலுக்கு நன்றி. நீங்கள் கொடுத்திருக்கிற பல பதிவுகளை நானும் படித்திருக்கிறேன். அதனால் தான் இப்பொழுதும் நான் வினவுக்கு வந்து பார்த்தேன். ஆயினும் ரிசனவுக்காகவும், விஷமரூபதுக்காகவும் தமிழகத்தின் முக்கால் கோடி முஸ்லீம்கள் தீவிரவதிகளாக்கப்பட்டதை கண்டு வியந்தேன்.

    நான் ஒரு சாமானிய முஸ்லிம். எந்த இயக்கத்திலோ எந்த கட்சியிலோ உறுப்பினர் இல்லை. எனக்கென்று தனியாக பதிவோ, வலை தளமோ இல்லை. எனக்கென்றிருக்கிற கருத்துக்கள் அநேக முஸ்லீம்களுக்கும் இருக்கும் என்பதே என் நிலை. அந்த வகையில் PJ வுக்கு முன் PJ வுக்கு பின் என்று நான் பார்த்தால் தமிழ் முஸ்லீம் சமுதாயம் PJ ன் வருகையால் நன்மை அடைந்தே இருக்கிறது.

    அவரிடம் முஸ்லீம்களுக்கே பிடிக்காத சில பல விசயங்கள் இருக்கலாம் ஆயினும் முஸ்லீம் சமுதாயம் அவரல் அரசியல், உலகியல் விழிப்புணர்ச்சி மற்றும் நன்மை பெற்றே இருக்கிறது. அதை நீங்கள் சிரத்தை எடுத்து மறுக்கவெல்லாம் வேண்டாம்.

    உங்களுக்கு பிடிக்காத சில விசயங்களை அவர் சொல்கிறார் என்பதற்காக அவரை நீங்கள் அறிவார்ந்த வகையில் சாடுங்கள். தவறில்லை. ஆயினும் தீவிரவாதி என்று சொல்வது அதிகமாகவே படுகிறது.

    அவரையும் அவரை போன்ற மற்ற தலைவர்களையும் பின்பற்றினால் முஸ்லீம்களுக்கு கேடு தான் என்று சொல்லும் நீங்கள் முஸ்லீம்கள் வேறு என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்? விஷமரூபதிற்கோ அலல்து அது போன்ற தொல்லைகளுக்கோ முக்கால் கோடி முஸ்லீம்களும் சேர்ந்து சென்று மனு கொடுத்து போராட வேண்டுமா?

    ஜனநாயக வாதிகளோடு சேர்ந்து போராடவேண்டும் என்று சொல்கிறீர்கள். நல்ல அறிவுரை தான். இல்லை என்பதர்கில்லை. ஆயினும் நீங்கள் ஜனநாயகவாதிகளுக்கு தரும் விளக்கம் தான் கொஞ்சம் கலக்கம் தருகிறது.

    நீ இஸ்லாமிய அடையாளங்களை விட்டு விட்டு வா அப்பொழுது தான் உன் பக்கம் நியாயம் இருந்தாலும் நான் உனக்காக போராடுவேன். நான் இஸ்லாமிய அடையாளங்களை விட்டால் போராடவே தேவை இல்லாமல் போய் விடுமே. அத்வானியும் மோடியும் முஸ்லீம்களும் ஒன்றாக இருந்து சமபந்தி உண்ணலாமே. அப்பாஸ் நக்வி போல. இதற்கும் இந்து வெறியர்கள் சொல்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இல்லை என்பது உண்மையே.

    ஜனநாயகம் என்பது எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் ஒருவருக்குஒருவர் மதித்து அவர் அவர் உரிமையை கொடுப்பதாகும். இல்லை இல்லை நீ எங்கள் போலவே ஆனால் தான் உனக்குள்ள உரிமையை நாங்கள் தருவோம் என்பது பாசிசம் ஆகும். அதை சொல்லும் ஒரு பதிவை போட்டது வினவின் அறியாமையினாலோ, அவசரத்தினாலொ சுற்றிலும் எல்லாரும் போடும் கூப்பாடோடு நாமும் சேர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆதங்கத்திலோ நடந்திருந்தால் என்னுடைய பின்னூ ட்டத்திர்க்கு வருந்துகிறேன்.

    இல்லையேல் உங்களிலும் இஸ்லாமிய வெறுப்பு சிந்தனை ஊடுருவல் இருக்கிறது என்பதையே இந்த பதிவு காட்டும். அது நிச்சயம் புதிய ஜனநாயகம் அன்று.

    • நான் கூறிய ‘இஸ்லாமிய அடையாளம்’ என்பதை நீங்கள் தனிப்பட்ட முறையில் இஸ்லாமிய அடையாளத்தைத் துறப்பது என்பதாகப் புரிந்து கொண்டீர்கள். நான் கூறியது, அமைப்பு ரீதியான இஸ்லாமிய அடையாளம். உண்மையில் இந்து மதவெறியர்களால் பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களுக்காக அதிகமாகக் குரல் கொடுத்தது இஸ்லாமிய அமைப்புகளை விட இஸ்லாம் சாராத சனநாயக அமைப்புகள்தான். மதம் சாராமல் மக்கள் பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுப்பவர்களைத் தான் சனநாயகவாதிகள் என்று குறிப்பிட்டேன்.

      இந்துமத வெறியர்கள், அமெரிக்க ஏகாதிபத்தியம் இவற்றை எதிர்ப்பதில் இஸ்லாமிய அமைப்புகள் சாதிப்பதை விட மதச்சார்பற்ற சனநாயக அமைப்புகள் அதிகமாக சாதிக்க முடியும். மேலும் இஸ்லாமிய அடையாளத்தை வைத்து இந்து மத வெறி அமைப்புகள் ” இஸ்லாமிய பயங்கரவாதம் ” என்று எளிமையாக முத்திரை குத்திவிட முடியும். அப்படித்தான் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகள் செய்கின்றன. அதில் வெற்றியும் பெறுகின்றன. அதனால் தான் சொல்கிறோம். இஸ்லாமிய அடையாளமில்லாத மதச்சார்பற்ற சனநாயக அமைப்புகளுடன் இணைந்து செயல்படுங்கள் என்று.

      மேலும் உங்கள் கேள்வி குறித்து வினவு பல முறை எழுதியிருக்கிறது.

      கீழ்க்காணும் கட்டுரையைப் பொறுமையாகப் படியுங்கள்.

      பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!
      https://www.vinavu.com/2011/05/02/osama-obama/

      மேலுள்ள கட்டுரையிலிருந்து …
      1. ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்து அரேபிய பதூயின் இன நாடோடி மக்களை நல்வழிப்படுத்தும் நபிகள் நாயகத்தினுடைய போதனைகளின் தேவை அந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது. அதை வைத்து இருபத்தியோராம் நூற்றாண்டின் மனித குலப்பிரச்சினைக்கு தீர்வு காண நினைப்பது அடி முட்டாள்தனம். அது இசுலாமிய மக்களுக்கு எந்த விடுதலையையும் வழங்க முடியாது என்பதோடு அவர்களது அவல வாழ்க்கையை மதம் என்ற உணர்ச்சியில் மூழ்கடிப்பதற்குத்தான் பயன்படும். அதைத்தான அரபு ஷேக்குகளும், இசுலாமிய நாடுகளிலிருக்கும் ஆளும் வர்க்கங்களும் செய்து வருகிறார்கள்.

      2. மதத்தின் பெயரால் விரிக்கப்பட்டிருக்கும் இந்த மாயவலையிலிருந்து இசுலாமிய மக்கள் வெளியேற வேண்டும். இதன் பொருள் இசுலாமிய மதத்தை துறப்பது என்பதல்ல. எந்த மதமும் ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்வில் மட்டும் பின்பற்றப்படவேண்டிய விசயம். அம்மதம் அவனது அரசியல், சமூகப், பொருளாதார வாழ்வில் இடம்பெறக்கூடாது என்பதைத்தான் இங்கு வலியுறுத்துகிறோம்.

      3. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் கம்யூனிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தேசியவாதிகள் என்று பலரும் இருக்கின்றனர். ஆனால் இசுலாமிய மக்கள் மட்டும்தான் மதத்தின் பெயராலும் எதிர்க்கின்றனர். இது நிச்சயமாக ஆரோக்கியமான போக்கல்ல, அதற்கான அடிப்படையை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியிருந்த போதும். ஏனெனில் பாலஸ்தீன், ஈராக், காஷ்மீர் போராட்டங்களெல்லாம் தேசிய இனப் போராட்டங்களாகத்தான் இன்னமும் இருந்து வருகிறது. அவற்றை மதம் என்று குறுகிய வட்டத்தில் அடைப்பதால் அந்தப் பலனை ஏகாதிபத்தியங்கள்தான் அடைகின்றனவே தவிர இசுலாமிய மக்களல்ல. மேலும் அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலினால் இசுலாம் மட்டுமல்ல பல மதங்களைச்சேர்ந்த மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்களை வர்க்க உணர்வுதான் இணைக்கவேண்டுமே ஒழிய மதம் அல்ல. அப்படி மதத்தால் பிரிக்கப்பட்டால் நாம் போராடுவதற்கான தோழமைகளை இழந்து போகிறோம் என்பதுதான் கண்ட பலன்.

      இரண்டாவது மற்றும் மூன்றாவது கருத்தைக் கவனியுங்கள். அதுதான் நாம் சொல்வது.

      அக்கட்டுரையை முழுமையாகப் படியுங்கள். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    • Syed,

      இஸ்லாமிய அடையாளம் குறித்து நான் கூறியதை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

      அது குறித்து வினவு பல முறை எழுதியுள்ளது.

      கீழ்க்காணும் கட்டுரையைப் பொறுமையாகப் படியுங்கள்.

      பின்லேடன்: அமெரிக்கா உருவாக்கிய பயங்கரவாதம்!
      https://www.vinavu.com/2011/05/02/osama-obama/

      மேலுள்ள கட்டுரையிலிருந்து……..
      1. ஐந்தாம் நூற்றாண்டில் காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து கொண்டிருந்து அரேபிய பதூயின் இன நாடோடி மக்களை நல்வழிப்படுத்தும் நபிகள் நாயகத்தினுடைய போதனைகளின் தேவை அந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்டது. அதை வைத்து இருபத்தியோராம் நூற்றாண்டின் மனித குலப்பிரச்சினைக்கு தீர்வு காண நினைப்பது அடி முட்டாள்தனம். அது இசுலாமிய மக்களுக்கு எந்த விடுதலையையும் வழங்க முடியாது என்பதோடு அவர்களது அவல வாழ்க்கையை மதம் என்ற உணர்ச்சியில் மூழ்கடிப்பதற்குத்தான் பயன்படும். அதைத்தான அரபு ஷேக்குகளும், இசுலாமிய நாடுகளிலிருக்கும் ஆளும் வர்க்கங்களும் செய்து வருகிறார்கள்.

      2. மதத்தின் பெயரால் விரிக்கப்பட்டிருக்கும் இந்த மாயவலையிலிருந்து இசுலாமிய மக்கள் வெளியேற வேண்டும். இதன் பொருள் இசுலாமிய மதத்தை துறப்பது என்பதல்ல. எந்த மதமும் ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்வில் மட்டும் பின்பற்றப்படவேண்டிய விசயம். அம்மதம் அவனது அரசியல், சமூகப், பொருளாதார வாழ்வில் இடம்பெறக்கூடாது என்பதைத்தான் இங்கு வலியுறுத்துகிறோம்.

      3. அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதில் கம்யூனிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தேசியவாதிகள் என்று பலரும் இருக்கின்றனர். ஆனால் இசுலாமிய மக்கள் மட்டும்தான் மதத்தின் பெயராலும் எதிர்க்கின்றனர். இது நிச்சயமாக ஆரோக்கியமான போக்கல்ல, அதற்கான அடிப்படையை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியிருந்த போதும். ஏனெனில் பாலஸ்தீன், ஈராக், காஷ்மீர் போராட்டங்களெல்லாம் தேசிய இனப் போராட்டங்களாகத்தான் இன்னமும் இருந்து வருகிறது. அவற்றை மதம் என்று குறுகிய வட்டத்தில் அடைப்பதால் அந்தப் பலனை ஏகாதிபத்தியங்கள்தான் அடைகின்றனவே தவிர இசுலாமிய மக்களல்ல. மேலும் அமெரிக்க ஏகாதிபத்திய சுரண்டலினால் இசுலாம் மட்டுமல்ல பல மதங்களைச்சேர்ந்த மக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த மக்களை வர்க்க உணர்வுதான் இணைக்கவேண்டுமே ஒழிய மதம் அல்ல. அப்படி மதத்தால் பிரிக்கப்பட்டால் நாம் போராடுவதற்கான தோழமைகளை இழந்து போகிறோம் என்பதுதான் கண்ட பலன்.

      இதில் குறிப்பாக இரண்டாவது மற்றும் மூன்றாவது கருத்தைப் பாருங்கள். நான் இஸ்லாமிய அடையாளம் தொடர்பான கூறிய கருத்து அதுதான்.

      கட்டுரையை முழுமையாகப் படியுங்கள். புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

      • தங்களின் தொடர் பகிர்விற்க்கும் விளக்கங்களுக்கும் நண்றி.

        ஒருவர் தன மதமோ அலல்து பிற கொள்கையோ அதை நம்பி பின்பற்றுவதால் ஏன் மற்றவர்கள் அவரின் நியாயத்துக்காக குரல் கொடுக்க கூடாது என்று தெரியவில்லை. நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்வதால் உங்களை ஒருவன் அத்துமீறி அடிக்க வரும் பொழுது கடவுளை நம்பும் நான் ஏன் அதை தடுக்க குரல் கொடுக்க கூடாது? நீங்கள் அது முடியாது சாத்தியப்படாது என்று கூறுகிறீர்கள். அது முடியும் சாத்தியம் என்றே நான் நம்புகிறேன்.

        மார்க்சிய, சோசியலிச மதங்களை பின்பற்றும் நீங்கள் மற்றவர்களை பார்த்து சரமாரியான குற்றச்சாட்டுகள் வைப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

        உலகமே பரிணாம வளர்ச்சி அதில் மனிதர்கள் சமூக மிருகங்கள். இதில் Survival of the Fittest தியரி படி ‘மிஞ்சியவன் விஞ்சுவான்’ எனவே நமக்கு வேண்டியதை நாம் பறித்துக் கொள்ளவேண்டும் என்ற சித்தாந்தத்தை ஊற்றாகக்கொண்டு ரஷ்யாவின் ஆட்சியை (மதம் சாரா ஜியோனிச) யூதர்களிடம் ஒப்படைக்க ஏற்படுத்தப்பட்டதே இந்த சோசியலிச மதம் மற்றும் அதன் புரட்சி. அதன் போதகரான Karl Marx ஒரு ஜெர்மானிய யூதரென்றும் அவருக்கு Fund செய்தது அமெரிக்க மற்றும் பிரித்தானிய யூத வங்கிகளும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதை தெரியாத அளவு எத்தகைய மூளை சலவைக்கு ஆளாகி இருக்கிறீர்கள்.

        மக்களை பரிணாம மிருகமாக மட்டும் பார்த்து அவர்களுக்கிருக்கும் பொருளாதார தேவைகள் தான் அணைத்து சிக்கல்களுக்கும் காரணம் என்பதே ஒரு மூடமான கொள்கை. மனிதர்களிடம் இருக்கும் பாசம், நேசம், காதல், நியாய உணர்வு, உண்மையாக இருக்க தூண்டும் மனசாட்சி ஆகிய எத்தனையோ பல அறிய விசயங்களுக்கு அந்த மதத்தில் எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படுவதில்லை. அத்தகைய கொள்கையின் வழியாக பார்க்கும் கண்களால் இஸ்லாமிய மதத்தை புரிய முடியாமல் இருப்பது ஆச்சரையதிர்கில்லை. உங்களின் இஸ்லாமிய அறிவை மேம்படுத்த பின்னூட்டங்கள் மட்டும் போதாது வரிக்கு வரி பதில் சொல்லும் தளம் தான் அமைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.

        இப்பொழுது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பில் இருக்கும் அநேக இஸ்லாமிய (முஸ்லீம்கள் அதிகம் வாழும்) நாடுகள் சோசியலிச தலைவர்களால் ஆளப்பட்டது என்பது தெரியுமா? அந்த தலைவர்களின் ஆகிரமப்பிலும் இப்பொழுது அமெரிக்க ஆகிரமப்பிலும் முஸ்லீம்கள் இஸ்லாத்தை தவிர வேறு எதை எதை எல்லமோ பின்பற்றி இழந்தவை தான் அதிகம்.

        • // உலகமே பரிணாம வளர்ச்சி அதில் மனிதர்கள் சமூக மிருகங்கள். இதில் Survival of the Fittest தியரி படி ‘மிஞ்சியவன் விஞ்சுவான்’ எனவே நமக்கு வேண்டியதை நாம் பறித்துக் கொள்ளவேண்டும் என்ற சித்தாந்தத்தை ஊற்றாகக்கொண்டு ரஷ்யாவின் ஆட்சியை (மதம் சாரா ஜியோனிச) யூதர்களிடம் ஒப்படைக்க ஏற்படுத்தப்பட்டதே இந்த சோசியலிச மதம் மற்றும் அதன் புரட்சி. அதன் போதகரான Karl Marx ஒரு ஜெர்மானிய யூதரென்றும் அவருக்கு Fund செய்தது அமெரிக்க மற்றும் பிரித்தானிய யூத வங்கிகளும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதை தெரியாத அளவு எத்தகைய மூளை சலவைக்கு ஆளாகி இருக்கிறீர்கள்.. //

          யப்பா! எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு!

          நான் கூறிய விசயத்தை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையா? இல்லை புரிந்துகொண்டு, ஏற்றுக்கொள்ள முடியாமல் கண்டதையும் பேசுகிறீர்களா? என்று தெரியவில்லை.

          மதவாதிகளுக்கு மார்க்சியம் என்றுமே எதிரி தான். நான் உங்களை மதவாதி என்று நினைக்கவில்லை. ஒரு ஜனநாயக உணர்வுள்ள இஸ்லாமியர் என்றுதான் நினைத்தேன். ஆனால் நீங்கள் மதவாதி போல் தான் பேசுகிறீர்கள்.

          உங்களுக்கு மார்க்சியம், திரிபுவாதம் , ஜனநாயகம் , சோஷலிசம் , கம்யூனிசம் இவை பற்றி வகுப்பெடுக்க எனக்கு நேரமில்லை.

          மதம் பற்றிய மார்க்சியப் பார்வை என்ன என்பதை பின்னூட்டம் 74-ல் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

          // மதத்தின் பெயரால் விரிக்கப்பட்டிருக்கும் இந்த மாயவலையிலிருந்து இசுலாமிய மக்கள் வெளியேற வேண்டும். இதன் பொருள் இசுலாமிய மதத்தை துறப்பது என்பதல்ல. எந்த மதமும் ஒரு மனிதனது தனிப்பட்ட வாழ்வில் மட்டும் பின்பற்றப்படவேண்டிய விசயம். அம்மதம் அவனது அரசியல், சமூகப், பொருளாதார வாழ்வில் இடம்பெறக்கூடாது என்பதைத்தான் இங்கு வலியுறுத்துகிறோம்.//

          மேற்கண்ட வரிகள் மதம் பற்றிய கம்யூனிஸ்டுகளின் பார்வையை மிகத் தெளிவாக விளக்குகிறது.

          இதைப் படித்துவிட்டும், இதற்கு விளக்கம் கூறாமல் ஒரு நாலாந்தர மதவாதியைப் போல் மார்க்ஸை அவதூறு செய்கிறீர்கள்.

          சரி அதை விடுங்கள்.

          அப்சல் குருவின் தூக்கை எதிர்த்து, இந்தியாவின் போலி மதச் சார்பின்மையைத் திரைகிழிக்கும் வகையில், இந்திய அரசின் இந்து மதவெறியினை அம்பலப்படுத்தும் வகையில் இஸ்லாமிய அமைப்புகள் ஏன் போராட்டம் நடத்தவில்லை?

          ஒருவேளை அவர்கள் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமை எதிர்த்து, அப்சல் குருவின் தூக்கை ஆதரிக்கிறார்களோ?

          நடைமுறையில் இஸ்லாமிய மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, என்னுடைய இஸ்லாத்தின் புரிதல்களைப் ப்ற்றிப் பேசுகிறீர்கள்.

          நடைமுறைப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போது, மதத்திற்குள் போய் ஒளிந்து கொள்வதென்பது மதவாதிகள் பயன்படுத்தும் குயுக்தி. அதை நீங்களும் பயன்படுத்துகிற போது, உங்களிடம் விவாதித்துப் பயனில்லை என்றே தோன்றுகிறது.

  65. @கல்நெஞ்சம், @Raman, @இனியன்,

    சொர்கத்தை எல்லாம் எந்த அறிவுள்ள மனிதன் நம்புவானா நான் நம்பவே மாட்டேன் என்று இருக்கும் உங்களுக்கு 72 கண்ணிகள் இருந்தால் என்ன 1008 கண்ணிகள் இருந்தால் என்ன அதை பற்றி சுவர்க்கம் செல்லப்போகும் நாங்களே கவலைப்படவில்லை.

    ஆயினும் நீங்கள் உண்மையிலேயே சந்தேகமாக கேலிக்காக இல்லாமல் கேட்பீர்களானால்:

    சொர்க்கத்தில் மனிதர்கள் கண்டிராத சிந்தித்திராத இன்பங்களை வைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான். அதில் ஆண்களுக்கு பெண்களும் பெண்களுக்கு ஆண்களும் உண்டு. ஒருவர் எப்படி பலருடன் கலவி செய்வார் என்றெல்லாம் கேள்வி கேட்டால், யாரும் பார்த்ததில்லை என்பதுதான் பதில். நீஙக பார்த்தே ஆகவேண்டும் என்று அடம் பிடித்தால் ‘gang bang’ பாருங்கள். இல்லை இல்லை எனக்கு நயந்தரதான் பிடிக்கும், ஓரினச்சேர்க்கை தான் பிடிக்கும் அதுவெல்லாம் சொர்க்கத்தில் இருக்குமா என்று கேட்டால். சொர்க்கத்தில் பரிசுத்தவான்கள் தான் அனுமதிக்கப்படுவார்கள்.சொர்கத்திற்கு ஒவ்வாத சிந்தனையுடனே இருப்பவர்கள் அங்கு இருக்கப்போவதில்லை. Good Luck.

    அல்லாஹு அக்பர் சொல்லி கழுத்தறுப்பது- எந்த channelல் பார்த்தீர்கள்? அந்த channel டைரக்டர் இடம் கேட்க வேண்டிய கேள்வி. அல்லது உலக நாயகனிடம் கேளுங்கள் அவர்தான் அருகிலிருந்து விளக்கு பிடித்து பார்த்து இருக்கிறார்.

    மற்றபடி கீழ் கண்ட கேள்விகளுக்கு பதில் சொல்லவும்
    1. காசுக்காக யாரோ வைக்க சொன்ன குண்டை எங்கோ தாடியுடன் முஸ்லீம் போல நயவஞ்சகமாக நடித்து வைத்து விட்டு சென்ற இந்துவை விட ஒரு ஊரையே திரட்டி, இருக்கும் ஒவ்வொரு வீடாக புகுந்து பெண்களை அவள் கணவன் தகப்பன் முன்னே புணர்வு செய்து, பின் குழந்தை உட்பட தீயிட்டு கொளுத்தி நாங்கள் பாரத மாதாவுக்காக செய்தோம் என்று சொல்லும் இந்துக்கள் கொடூரமானவர்கள் ? ஆம்/இல்லை

    2. கம்யுனிச ரஷ்ய ஆப்கானில் புகுந்து அங்குள்ள பெண்களை வண்புணர்வு செய்து அங்குள்ள அப்பாவிகளை கொன்றொழித்து இதை நாங்கள் மக்கள் நலனுக்காக தான் செய்கிரோம் என்று சொன்னது மத வெறியை விட்ச் கொடூரமான வெறி? ஆம்/இல்லை

    3. செய்வதை எல்லாம் செய்துவிட்டு ஒன்றுமே தெரியாத அப்பாவிபோல தேச பக்தி, முஸ்லிம் சகோதரத்துவம், நான் எல்லாம் இழந்துவிட்டேன் என்று ஒப்பாரி வைத்து பட்சாதாபம் தேடி கொள்ளும் கமல் ஒரு வஞ்சக கோளை? ஆம்/இல்லை

  66. விசுவரூபம் ஒரு விளக்கம் – கோவை அ,அப்துல் அஜீஸ் பாகவி *** திரு கமல்ஹாசன் மீது முஸ்லிம்களுக்கு தனிப்பட்ட எந்த வெறுப்பும் கிடையாது. அவரது திரைப்படத்தை அநியாயமாக தடுப்பதற்கு முஸ்லிம்களிடம் எந்த வஞ்சமும் இல்லை. சமீப ஆண்டுகளில் ஒரு தரப்பாக முஸ்லிம்களை தீவிரவாதிகளாக தொடர்ந்து ஊடகங்கள் சித்தரிப்பதால் பொதுவான முஸ்லிம்களின் வாழ்க்கை பெரும் சங்கட்த்திற்கு உள்ளாகியிருக்கிறது. எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தரப்பு மட்டுமே காரணமாக இருக்க முடியாது. ஆனால் ஊடகங்கள் ஒரு தரப்பாகவே காட்சிகளையும் செய்திகளையும் வெளியிடுகின்றன. அத்தோடு தங்களது கற்பனைக்கு தோன்றியதை உண்மை போல சித்தரிக்கின்றன, இதனால் பொது இடங்களில் கோடிக்கணகான முஸ்லிம்கள் அவமதிக்கப்படுகிற நிராகரிக்கப்படுகிற சூழல் அதிகரித்து வருகிறது. சாதாரண முஸ்லிம்கள் கல்விக் கூடம் தொடங்கி அரசு அலுவலம் வரை ஒரு வகை தீண்டாமைக்கு ஆளாகிவருகிறார்கள். முஸ்லிம் சமுதாயம் இதனால் கடுமையாக பாதிக்கப் பட்டு வருகிறது. கமல் ஹாசனது திரைப்படம் முஸ்லிம்களை ஒரு தரப்பாக மேலும் அதிகமாக புண்படுத்தியிருப்பதாக சொல்வதை திரு கமல் ஹாசன் புரிந்து கொள்ள வேண்டும். இது ஒரு கலைப்படைப்பு சம்பந்தப்பட்டது அல்ல. ஒரு சமூகத்தின் வாழ்வாதாரம் மற்றும் மரியாதை சம்பந்தப்பட்டது. அவருடை வருமானம் அவருக்கு முக்கியம் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் அதன் மூலம் ஒரு பெரும் சமுகத்தின் வாழ்வாதாரத்தை பாதிக்கப்படுவது எந்த வகைய்லும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தப்படத்தில் தாலிபான்களின் தலைவர் முல்லா உமர் கோவை போன்ற நகரங்களில் தங்கியிருந்த்தாக காட்டப்படுகிறது. பெரும் சோகத்திற்கு பிறகு சன்னம் சன்னமாக அமைதி நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிற கோவை போன்ற நகரங்களில் அவநம்பிக்கையையும் மத நல்லிணக்கத்தையும் பாதித்து விடக்கூடியது. கட்ட பொம்மன் என்றால் சிவாஜி கணேசனை நினைவு கூறுகிற அளவுக்கு நம்முடைய தமிழகத்து மக்கள் சினிமாவோடு ஒன்றிப்போனவர்கள். இத்தகைய மக்களிடையே கமல் ஹாசன் போன்ற மூத்த கலைஞர்கள் ஒரு சமூகத்திற்கு எதிரான வன்ம்மான கருத்துக்களை திணிப்பது நாட்டிலுள்ள முஸ்லிம்களின் நிலையை மேலும் சிரமப்படுத்தி விடும். ஏராளமான அப்பாவி பொதுமக்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். ஒரு தரப்பாக இந்த கொடுமையிலிருந்து அடுத்த தலைமுறையையாவது பாதுகாக்க வேண்டிய கடமை இன்றைய முஸ்லிம்களுக்கு இருக்கிறது. இதை கமல்ஹாசனும் கலைத்துறையினரும் புரிந்து கொள்ள வேண்டும். இனிமேல் இத்தகைய கொடூரம் தொடராமல் தடுப்பதற்காக முஸ்லிம் சமுதாயம் நடத்துகிற போராட்டம் தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்வதற்கான போராட்டம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

  67. இச்லாத்தில் எனெக்கு பிடித்தது அவர்களின் மனிதநேய உபதேசம்! கிருத்துவத்திற்கு பெருமை சேர்ப்பது, எதிரி ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு எனும் பணிவான அருளுரை! வேத மதத்தில் வரும் ‘ஜகத் பிரமம்’, ‘அகம் பிரமம்’ என்ற கோட்பாடுகள் ! இவற்றை யார் பின்பற்று கிரார்கள்? தஙகள் தஙகள் ஏகாதிபத்திய ஆசைகளுக்காகவே மத வெறியை கிளப்பிவிட்டு ஆதாயமடைகிரார்கள்! மக்களுக்கு மதஙகளால் எந்த பயனும் இல்லை, வன்முறை தவிர்க்கலாமே!

  68. //ஒரு இந்திய முஸ்லிமை (கதாநாயகன் கமலஹாசன்)
    ரா உளவாளியாகவும், அமெரிக்க அடிவருடியாகவும்
    காட்டியிருப்பதுதான் முஸ்லிம்களுக்கு செய்யப்பட்டுள்ள
    பெருத்த அவமதிப்பு என்று எங்களுக்குத் தோன்றுகிறது //

    வழிமொழிகிறேன்

    அன்புடன்
    அ.மு.அன்வர் சதாத்

  69. Amma made a small strategical error. She probably assumed that once you say ” Muslim issue” no political party would dare to oppose the ban. Once it became public knowledge that there was more to this ban than religious issues all political parties voiced their opinion against the ban.

    Things took a nastier turn when Kamal announced that he would end up losing the roof over his head it raised a whole lot of public sympathy. The spineless film fraternity that stood silent until then had no choice but to visit him personally to console Kamal. Electronic media had a field day. Every now and then they kept flashing one celebrity or the other . By now police reports would have indicated growing sympathy for the actor and public resentment against the government.The government had no choice but to climb down.The CM held a press meet after almost one full year. The ban is gone.

    Moral of the story is.. My dear Islamic friends Watch out .your love for religion is being misused by your own people. Your solidarity is being misused by politicians irrespective of their religion.

  70. @S.Ibrahim @v.abdulrahman

    அப்படியென்றால் ரத்தப்பணம் என்ற முறையே சவுதி மற்றும் பிற இஸ்லாம் நாடுகளில் கிடையவே கிடையாதா?

    • irukku sir,pakistanla kooda raymond davis caseula appadi thaan nadanthathu.

      so,ivunga ellam summa buruda thaan uduvaanga,make ur judgement soon and dont waste time.

  71. கல்நெஞ்சம் ///இவை அமெரிக்கா வெளியிட்ட செய்தி அல்ல…உங்கள் மார்க்கத்தின் நல்லவர்கள் வெளியிட்ட செய்தி…///
    உங்களுக்கு நல்லவர்கள் எல்லாம் எங்கள் மார்க்கத்தின் நல்லவர்கள் அல்ல .
    எங்கள் மார்க்கத்தின் நல்லவர்கள் வெளியிட்ட செய்தியை இங்கு பார்த்துக் கொள்ளுங்கள்
    http://www.onlinepj.com/

  72. kal///இவை அமெரிக்கா வெளியிட்ட செய்தி அல்ல…உங்கள் மார்க்கத்தின் நல்லவர்கள் வெளியிட்ட செய்தி…///
    உங்களுக்கு நல்லவர்கள் எல்லாம் எங்கள் மார்க்கத்தின் நல்லவர்கள் அல்ல .
    எங்கள் மார்க்கத்தின் நல்லவர்கள் வெளியிட்ட செய்தியை இங்கு பார்த்துக் கொள்ளுங்கள்
    http://www.onlinepj.com/

  73. விதை விதைத்தவன் அந்த பலனை அனுபவிக்க வேண்டும் இதுவே நன்மையான முறை.ஷரியா சட்டங்கள் சரியாக உள்ளதென்றால் உலகத்தில் எந்த இடத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? இஸ்லாமிய ஆட்சியில்?
    இவ்வளவு வக்காலத்து வாங்கும் நீங்கள் உங்கள் பதிவில் அனுதாபம் கூட தெரிவிக்காமல் ஷரியா சட்டம் சரி என்றே வக்காலத்து வாங்குகிறீர்கள்!//குற்ற முகாந்திரம் இல்லாமல் தவறுதலாகக் கொலை நடந்துவிட்டால் மரண தண்டனை கிடையாது என்று ஷரீஆ தெளிவாகச் சொல்கிறது// என்று ,.
    அப்படியானால் ஒரு வரியில் சவுதி அரசு செய்தது தவறு என்று கூறியுள்ள நீங்கள் மட்டுமுள்ள உங்களைபோன்ற அனுதாபிகள் கோடி பேர்கள் கூடினாலும் ரிசானாவை திருப்பி அவர்களுடைய பெற்றோர்களுக்கு உயிருடன் திருப்பி தர முடியுமா? ஒரு நிரபராதியை காப்பாற்ற கூட இறைவன் மனம் மாற்றும் உண்மை புரியும் வித்தையை சவுதி அரசாங்கத்துக்கு ர்ஹராதது ஏனோ?
    இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் யோக்கியதை எங்களைபோன்றவர்கள் குறிப்பாக வினவு போன்றவர்கள் ஆராயாமல் ஒதுக்கிதள்ளவில்லை! படித்து பாருங்கள் அப்பத்தான் உண்மை தெரியும் என்று நீங்கள் பிதற்றுவது , நினைப்பது தாவா செய்வதற்க்கான வாய்ப்புகளை உங்களின் மனம் ஏற்படுத்தி தரும் கற்பனை கூடாரம்! முதலில் நீங்கள் ரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாறுகளை நடுநிலையோடு படியுங்கள்!மீண்டு வருவீர்கள் !
    எங்களைப்போல!

    • சகோதரன் ///முதலில் நீங்கள் ரத்தக்கறை படிந்த இஸ்லாமிய வரலாறுகளை நடுநிலையோடு படியுங்கள்!மீண்டு வருவீர்கள் !
      எங்களைப்போல!////
      ///எங்களைபோன்றவர்கள் குறிப்பாக வினவு போன்றவர்கள் ///
      இஸ்லாத்தை மூர்க்கத்தனமாக எதிர்க்கும் நீங்களும் உங்களது வகையறாக்களையும் வினவுடன் ஒப்பிட வேண்டாம் .உங்களைவிட வினவுவின் பார்வையில் நடுநிலையை காணலாம் .
      இஸ்லாமிய ரத்தகரை படிந்த வரலாற்றை நீங்கள் நடுநிலையோடு படித்ததை சொல்லுங்கள் .உங்கள் உள்ளத்தில் கபட கரை படிந்துள்ளதை வெளிப்படுத்துகிறேன்

Leave a Reply to v.abdulrahman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க