Friday, September 22, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

விஸ்வரூபம் : ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?

-

விஸ்வரூபம் படம், கமலஹாசன் சொல்லிக் கொள்வது போல ஒரு “ஸ்பை த்ரில்லர்” ஆக இருக்கப்போகிறதோ இல்லையோ, தற்போது தமிழகத்தில் அரங்கேறி வரும் கூத்துகள் கிட்டத்தட்ட அவ்வாறுதான் இருக்கின்றன.

படத்திற்கு 31 மாவட்ட ஆட்சியர்களும் விதித்திருந்த தடையை நீக்கி நேற்று இரவு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

“இப்போது தீர்ப்பை வெளியிட்டு விட்டால், நாளை காலை 5 மணிக்கே முதல் காட்சியை திரையரங்கில் போட்டு விடுவார்கள். எனவே நாளை காலை தீர்ப்பை வெளியிடுங்கள். நாங்கள் மேல் முறையீடு செய்து கொள்கிறோம்” என நேற்று உயர்நீதிமன்றத்தில் பதறியிருக்கிறார் அரசின் தலைமை வழக்குரைஞர் நவநீத கிருஷ்ணன். நீதிபதி அதை ஏற்கவில்லை. எனவே இரவோடு இரவாக தலைமை நீதிபதியின் வீட்டுக்குச் சென்று, அவரைத் தட்டி எழுப்பி தடை உத்தரவு கேட்டிருக்கிறார்கள். ‘இன்று காலை நீதிமன்றத்தில் முதல் வழக்காக இதனை எடுத்துக் கொள்வதாக’ அவர் கூறியிருப்பதாக இன்றைய நாளேடுகள் கூறுகின்றன.

நேற்று நீதிமன்றத்தில் அரசு தரப்பு எடுத்து வைத்த வாதங்களைப் பார்த்தபோது, “வேறு ஏதோ நோக்கங்களுக்காகத்தான் இந்த நாடகத்தை ஜெயலலிதா அரசு நடத்துகிறது” என்பது பச்சையாகத் தெரிந்தது.

“இத்திரைப்படம் இஸ்லாமியர்களை தவறாக சித்தரிப்பதாக முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், இதனை திரையிடுவதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று அஞ்சுவதனால்தான் இதற்கு எதிராக 144 தடை விதிக்கப்பட்டிருப்பதாக” தமிழக அரசு கூறியிருந்தது.

“அளவற்ற அருளாளனாகிய அல்லாதான், அம்மாவை இப்படி சிந்திக்க வைத்திருக்கிறான்” என்று கூறி, இஸ்லாமிய மக்கள் மத்தியில் “புல்லரிப்பை” தூண்டி வருகின்றன இஸ்லாமிய அமைப்புகள். ஆனால் அம்மாவை சிந்திக்க வைத்த அல்லாவால், அட்வகேட் ஜெனரலை சிந்திக்க வைக்க முடியவில்லை போலும்! நேற்று நீதிமன்றத்தில் வாதிட்ட நவநீத கிருஷ்ணன், வண்டு முருகன் ரேஞ்சுக்கு இறங்கி விட்டார்.

தடை விதிப்பதற்கான காரணம் என்று தமிழக அரசு கூறியிருப்பதை விட்டு விட்டு, “இந்த தணிக்கைக் குழு சான்றிதழே ஒரு ஊழல்” “தணிக்கைக் குழு உறுப்பினர்களின் நியமனம் ஊழல்” என்றார்.

“தணிக்கைக் குழுவே ஊழல் என்றால், எல்லாப் படங்களுக்கும் அல்லவா நீங்கள் தடை விதிக்க வேண்டும்?” என்று மடக்கினார் கமலஹாசனின் வக்கீல்.

“அப்படியானால், நீங்கள் இப்போது சொல்லும் இந்தக் காரணங்களுக்காகத்தான் தடை விதித்திருக்கிறீர்களா?” என்று நீதிபதி கேட்டவுடன், “உங்களுக்கு தெரியாத சட்டம் இல்லை, உரிய செக்சனில் தடை செய்யுங்கள் மை லார்ட்” என்ற பாணியில் ஜகா வாங்கிவிட்டார் வண்டு முருகன்.

அம்மாவின் அட்வகேட் ஜெனரல்தான் இப்படி என்றால், ஆட்சியர்கள் அவரை விஞ்சி விட்டார்கள்.

32 மாவட்டங்களிலும் முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருக்கிறார்கள். யாராவது ஒரு புகார் கொடுத்தால் அதனை பரிசீலித்துப் பார்த்து, அதன் பின்னர் அப்பிரச்சினை குறித்த தனது சொந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒரு மாவட்ட ஆட்சியர்முடிவு எடுக்க வேண்டும். இப்படி சொந்த மூளையைப் பயன்படுத்தி யோசிப்பதையே Application Of Mind  என்று சட்ட மொழியில் கூறுவர். சொந்த மூளையைப் பயன்படுத்துகிறார்களோ இல்லையோ, அப்படி பயன்படுத்தித்தான் இந்த முடிவை எடுத்தோம் என்று உத்தரவில் எழுதுவதற்காவது தெரிந்திருக்க வேண்டும்.

“முஸ்லிம் அமைப்புகள் புகார் கொடுத்திருப்பதால், நாங்கள் தடை செய்கிறோம்” என்று “ரொம்ப வெள்ளந்தியாக” பல மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருக்கிறார்கள். “இது சட்டவிரோதமானது” என்று வாதிட்ட கமலஹாசனின் வழக்குரைஞர் ராமன், “32 மாவட்டத்திலுமா சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று கிண்டலும் அடித்தார். “எப்படியாவது இந்தப் படத்தை முடக்க வேண்டும் என்ற உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறது” என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார்.

இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவுக்கு அசிங்கமான முறையில் விவகாரம் அம்பலமாகிவிட்டது.

“இந்தத் தடைக்கு காரணமாக அமைந்த ‘புண்பட்ட மனம்’, மாண்புமிகு இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவினுடையதே அன்றி, முஸ்லிம் உம்மாவினுடையது அல்ல. எங்கப்பன் குதிருக்குள் இல்லை, இல்லை இல்லவே இல்லை” என்று தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார் தலைமை வழக்குரைஞர்.

கிசுகிசு செய்திகளாக உலா வந்து கொண்டிருக்கும், ஜெயா டிவி மற்றும் ப.சிதம்பரம் விவகாரங்கள்தான் தடைக்கு காரணமா, அல்லது, மேலும் வேறு காரணங்கள் ஏதாவது இருக்கக் கூடுமா என்று நமக்குத் தெரியாது. ஆனால் சங்கராச்சாரி கைதுக்கு இணையான மர்மங்கள் நிச்சயம் இதில் உண்டு. தன்னுடைய தனிப்பட்ட விரோதங்களைத் தீர்த்துக் கொள்ள போலீசையும் அரசு எந்திரத்தையும் தன்னுடைய கூலிப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளத் தயங்காதவர் ஜெயலலிதா என்பது எல்லோரும் அறிந்ததுதான்.

முன்னர் உயர்நீதிமன்ற நீதிபதியின் பிள்ளை மீது போடப்பட்ட கஞ்சா கேசையும், பின்னர் சமீபத்தில் (சசிகலா) நடராசன் மற்றும் மன்னார்குடி கும்பல் மீது மீது போடப்பட்ட வழக்குகளையும் வாசகர்களுக்கு நினைவு படுத்துகிறோம். அம்மாவின் கூலிப்படையாக செயல்படுவதற்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தயாராக இருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியும்.

பல இஸ்லாமிய அமைப்பினரும் இதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதையே நடக்கின்ற சம்பவங்கள் காட்டுகின்றன. தங்களுடைய தனிப்பட்ட ஆதாயங்களுக்காகவோ, அரசியல் ஆதாயத்துக்காகவோ முஸ்லிம் மக்களை பகடைக்காயாக்கி, இவர்கள் நடத்தி வரும் இந்த நாடகம், பெரும்பான்மை தமிழக மக்களின் பொதுக்கருத்தை முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பி வருகிறது.

நேற்று இரவு சன் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில், “பெரும்பான்மையினரான நாங்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் தெரியுமா?” என்று கேட்டார் திரைப்படத்துறையைச் சேர்ந்த கேயார். முஸ்லிம் பிரதிநிதிகள் அதிர்ச்சியில் உறைந்து விட்டனர். இது ஒரு பானைச் சோறுக்கு ஒரு சோறு.

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஐ வளர்ப்பதற்கு இதை விட அற்புதமான ஒரு சூழலை வேறு யாரும் ஏற்படுத்திக் கொடுக்க முடியவே முடியாது. ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் போட்டுக் கொடுத்திருக்கும் இந்த ரோட்டின்மீது இந்து மதவெறியர்களின் ரதயாத்திரை தொடங்கப் போவது உறுதி. அந்த ரத யாத்திரையின் பயனையும் மோடியின் மதிப்புக்குரிய நண்பரான ஜெயலலிதாவே அறுவடை செய்வார் என்பதுதான் இந்த த்ரில்லரின் கிளைமாக்ஸ் திருப்பமாக இருக்கும்.

000

1980 களில் ஷா பானு என்ற மண விலக்கு செய்யப்பட்ட ஏழை இசுலாமியப் பெண்மணி, ‘ஷாரியத் சட்டத்தின் கீழ் தனக்கு மறுக்கப்பட்ட ஜீவனாம்சத்தை, இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வழங்கவேண்டும்’ என்று கோரினார். ஷாபானுவுக்கு ஆதரவாக அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சையது சகாபுதீன் தலைமையில் இஸ்லாமிய மதவெறியர்கள் வட இந்தியாவெங்கும் சாமியாடினர். இதனைக்காட்டி, இந்து மதவெறியை மிகச் சுலபமாகத் தூண்டியது ஆர்.எஸ்.எஸ்.

உடனே அதனை சமாளிப்பதற்கும், இந்துக்களின் வாக்குகளைக் கவருவதற்கும், பாபர் மசூதியின் கதவுகளை இந்துக்களுக்கு திறந்து விட்டார் ராஜீவ் காந்தி. அதன் பின்னர்தான் அத்வானியின் ரத யாத்திரை தொடங்கியது.

“ஷா பானு விவகாரத்தில் முஸ்லிம் மதவெறியர்கள் வைத்த கொள்ளிதான், இந்து மதவெறியர்கள் அரசியலில் தலையெடுப்பதற்கு சாதகமாக அமைந்தது” என்பதை ஆய்வாளர் அஸ்கர் அலி எஞ்சினியர் தனது பல கட்டுரைகளில் விளக்கி கூறியிருக்கிறார்.

அதனை ஒத்த விபரீதம்தான் தமிழகத்தில் இப்போது அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

000

பின் குறிப்பு:

இதனைப் படித்தவுடன் “நீ விஸ்வரூபத்தை ஆதரிக்கிறாயா? கமலின் கைக்கூலியே” என்பன போன்ற வசைகளை இஸ்லாமிய மதவெறியர்கள் தொடங்குவார்கள் என்பதை அறிவோம்.

இதுவரை தெரியவந்துள்ள கதையின்படி விஸ்வரூபம் ஒரு அமெரிக்க அடிவருடித் திரைப்படம். அது மட்டுமல்ல, தெற்காசியாவில் அமெரிக்காவின் புதிய அடியாளாக இந்தியா நியமிக்கப் பட்டுள்ளது என்பதை அறிவிக்கும் ஒரு “கலைப் படைப்பு” என்றும் தெரிகிறது. அதாவது இந்திய ராம்போ. இதுதான் இப்படத்தில் நாம் எதிர்க்க வேண்டிய முக்கியமான விடயமாகத் தெரிகிறது.

படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்துக் காட்டியிருப்பதன் மூலம் தங்களை இழிவுபடுத்தியிருப்பதாக முஸ்லிம் அமைப்புகள் கூறுகின்றன. ஒரு இந்திய முஸ்லிமை (கதாநாயகன் கமலஹாசன்) ரா உளவாளியாகவும், அமெரிக்க அடிவருடியாகவும் காட்டியிருப்பதுதான் முஸ்லிம்களுக்கு செய்யப்பட்டுள்ள பெருத்த அவமதிப்பு என்று எங்களுக்குத் தோன்றுகிறது. அமெரிக்காவின் அடியாளும், இசுரேலின் கையாளுமான சவூதி அரசுக்கு அடியாள் வேலை பார்க்கும் இஸ்லாமிய அமைப்பினருக்கு இப்படித் தோன்றாததில் வியப்பில்லை.

இப்போது  ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் பேசும் வசனங்கள், அவர்களுடைய சொந்த சரக்குகளா அல்லது மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப் பட்டவையா என்பதை மட்டும் அவர்கள் சொன்னால் போதும்.

மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளுவதை மறைமுகமாக நியாயப்படுத்தும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

இந்த உண்மையைக் கண்டு பிடிப்பதற்கு யாரும் விஸ்வரூபம் படமெல்லாம் பார்க்கத் தேவையில்லை.

    • மிக நல்ல கட்டுரை! வினவின் சில உருப்படியான கட்டுரைகளில் இதுவும் ஒன்று! தொடரட்டும் உங்கள் பணி!

    • பலே..! பலே ! மதவாதிகள் எழுப்பும் விமர்சனக் கருத்துக்கள்..பதிலடி வீரர்களான வினவுத் தோழர்களையே அமைதியாக்கி விட்டதே ! என்னே..அவர்களின் வாதத்திறமை ! 🙂

      • Mr. Rammy, I am still a Christian with liberal views. I never accepted communism or Americanism (capitalism). I have only said that this article is nice as it is for free speech. I supported release of Da Vinci Code. I supported release of Dasavatharam which hindu groups opposed. Now I am supporting Viswaroopam. Even tomorrow, if you make a movie showing any religion or ideology as evil, I will support its release. So don’t think I have embraced red terror or safron terror.

        • Dear Friend ! I have mentioned the “Silence of Roarers (this social group followers..usually are very sound defenders) ….done by the fundamentalists ! Amazed about their debating attitude !

  1. /இப்போது ஜெயினுலாபுதீன் வகையறாக்கள் பேசும் வசனங்கள், அவர்களுடைய சொந்த சரக்குகளா அல்லது மண்டபத்தில் எழுதிக் கொடுக்கப் பட்டவையா என்பதை மட்டும் அவர்கள் சொன்னால் போதும்.

    மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை./

    நச்!

    செவிட்டில் அறையும் வார்த்தைகள்… வினவுக்காக இந்த கட்டுரையை எழுதினவரின் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு.

  2. எனக்கு தெரிஞ்சு ஓவர் பில்டப் இல்லாமல் நேர்மையாக வினவில் எழுதப்பட்ட விமர்சனம்
    வாழ்த்துக்கள்

  3. “ஜெயாவின் கையாட்களா முஸ்லிம் அமைப்புக்கள் ?” என்பதை போல “விஸ்வரூபம் : ஜெயாவின் அடியாட்களா போலீசு ?” என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை எழுதிருக்கலாம்.

    எங்க நாகப்பட்டினம் உள்பட தமிழகத்தின் பல திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை பாதியில் நிறுத்தி, ரசிகர்களை வெளியேற்றியது தமிழக அரசின் அடியாட்களான காவல்துறை!

    அணைய போற விளக்கு ரொம்ம்ப பிரகாசமா எரியும்ன்னு சொல்லுவாங்க. நல்லாவே எரியுது, போறபோக்கை பார்த்தால், வர எம்பி எலக்சன்ல பாதியை அணைச்சிடுவாங்கன்னு நினைக்கிறேன். மீதியை அடுத்த சட்டமன்ற எலக்சன்ல அணைச்சுடுவாங்கன்னு நினைக்கிறேன்.

    சில வருடங்களுக்கு முன் சென்னை சட்டக்கல்லூரியில், தேவர் இனத்தை சார்ந்த மாணவனை நூறு பேர் கொண்ட ரவுடி கும்பல், கல்லூரி வாசலிலேயே கொலைவெறி தாக்குதல் நடத்திய போது கைக்கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை, இப்போவரைக்கும் திருட்டு விசிடில விற்பனை செய்றவனையெல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கும் காவல்துறை, தியேட்டருக்கு தன்னோட காசை கொடுத்து படம் பார்க்க வந்தவனை அடிச்சு விரட்டுறதுக்கு பேருதான் வீரமா?

    இப்படி அடியாட்கள் மாதிரி ஓட்டுபோட்ட / ஓட்டு போடப்போகும் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதற்குதான் அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தருதா? எங்க வரியில தானே அந்த சம்பளம் உங்களுக்கு கிடைக்குது. அதே வரிப்பணத்திலிருந்து கிடைக்கும் பணத்தால், காவலர் குடியிருப்பு, அதுஇதுன்னு எல்லாவற்றுக்கும் சலுகைன்னு பேருல சுகபோகத்தை அனுபவிச்சுக்கிட்டு இருக்கிற நீங்க தானே, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். அதைவிட்டுட்டு இப்படி அடியாட்கள் மாதிரி செயல்படுறதுதுறது நியாயமா?

    காவல்துறை உங்கள் நண்பன்ன்னு சொல்லிக்கிட்டா மட்டும் போதாது, அதுமாதிரி நடக்கவும் பழகிக்கணும்.

  4. யோவ் என்னயா முஸ்லீம் தீவிரவாதி அது இதுன்னு திடீர்னு எழுதிப்புட்ட…

    • எல்லா முஸ்லீமும் தீவிரவாதியில்லை. மனிதத்துக்கு எதிரான எவராயினும் அவர்கள் பயங்கரவாதிகளே! அவர்கள் எந்த மதத்தில் இருந்தால் என்ன! அவர்களின் எண்ணங்கள் வேரறுக்கப்படவேண்டியவையே! வினவினை ஆழமாகப் புரிந்திராத பையாவைப் போன்றோர் இப்படி ஆச்சரியப்படுவதில் வியப்பேதுமில்லை.

  5. The irony of the current state of affairs is whether vishwaroopam may show the muslims in the bad light or not..the agitations against vishwaroopam put the muslims in very bad light and depicts all of them are intolerants and above crticism. Credit goes to PJ and few fundamental groups.

  6. விஸ்வரூபம் திரைப்படத்தினை பார்க்கலாமா வேண்டாமா என்கிற முடிவினை மக்கள் தாமாக எடுக்கட்டும். அத்திரைப்படத்தை வெளியிடவிடாமல் தடுக்கிறவர்களின் உள்/வெளி நோக்கங்களை கடந்து, இத்தடையினை நிபந்தனைகளின்றி மிகக்கடுமையாக கண்டிக்கிறேன்…

    அதேவேளையில், திரைப்படம் பேசுகிற அரசியலில் எனக்கிருக்கிற முரண்பாட்டினை பேசாமலும் இருக்கமுடியாது. பல இடங்களில் வலிந்து திணிக்கப்பட்டிருக்கும் அமெரிக்க ஆதரவு வசனங்களும்/காட்சிகளும், படம் முழுக்க வாய்ப்பிருந்தும் ஆப்கன் போர் குறித்த அரசியலை/உண்மைகளை மிகக்கவனமாக பேசாமல் தவிர்த்து அமைதிகாத்தும் எடுக்கப்பட்டிருக்கிற திரைப்படத்தை விமர்சிக்காமல் என்னால் இருக்கமுடியவில்லை…

    ஆப்கான் மக்களின் வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாமலும், அவர்களின் வரலாற்றை அரைகுறையாகக் கூட அறியமுற்படாமலும், அமெரிக்காவின் பென்டகனில் அமர்ந்துகொண்டு அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகளோடு கலந்துரையாடி உருவாக்கப்பட்ட திரைக்கதையைத்தான் கொண்டிருக்கிறது விஸ்வரூபம் திரைப்படம்.

    • படம் வெளிவந்தபின் நாம் தாராளமாக அதனைப் பற்றி விரிவாக விவாதிக்கலாம், கடுமையாக விமர்சிக்கலாம்.

    • I accept that every one has got freedom of speech and writing.But Kamal film Viswaroopam has been produced as per their masters in U.S.If he is realy interested in Afkan terrorism,first he should tell why they have opted for that? First Russian occupation,then American invasion.He should have shown American bombings on civilians.Iltreatment to dead bodies of taliban fighters.His motive should be neutral.I ask one question.Can he take a film on Gandhi asassination?Can he show safron terrorism ,Malegan,samjadha express,ajmeer bombing? Godse tatooed as Ismail in his hand and killed Gandhi so as to create fight between hindus and muslims.Now Kamal said that he will go to secular country.US is not a secular country.Obama took oath office by touching Bible: but they are not following the principals Bible which preaches PEACE.Castro told CIA has tried to kill him 63 times.Chaves told if he is killed ,it is only by US.The number of people killed in Iraq,Afkanistan and elsewhere by US and allied forces are more than the people killed by their rulers.This US sponsered terrorism for oil and selling of weapons.

  7. ஷா பானு வழக்கை பற்றி எழுதியமைக்கு நன்றி.இது இந்த தலைமுறையினருக்கு தெரிய வாய்ப்பில்லை.ஆனால் இதுவே துவக்கமாக இருந்தது

  8. நல்ல கட்டுரை , சமூக நோக்கில் எழுதப்பட்டுள்ள கட்டுரை .. முஸ்லீம்கள் உண்மையை உணர்ந்து போலி மத வெறி கூச்சல்களின் பின் செல்லாமல் தங்கள் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக போராடுவதே சரியானதாகும்… முஸ்லீம்கள் மீதான வெறுப்புணர்வு தமிழகத்தில் மெல்ல மெல்ல அதிகமாக்கப்பட்டு மதக்கலவரத்தை தூண்டவே வழிவகுக்கும்… பிறகு நாம் அடிப்படை தேவைகளுக்கு கூட போராடும் நிலை வந்துவிடும்….

  9. மிகமிகச் சரியான கருத்து. இப்படத்தின் மீதான தடைகளும் தடங்கல்களும் இஸ்லாமியர்களுக்கெதிரான மனநிலையை வளர்த்துவிடவே உதவுகின்றன.

  10. நடுநிலை கன்னோட்டதுடன் எழுதப்பட்ட பதிவு. வாழ்த்துக்கள்.

  11. மிகச் சிறப்பாய் வார்க்கப்பட்டிருக்கும் கட்டுரை. வினவுக்கு நன்றிகள்!
    வார்த்தைக்கு வார்த்தை கவனமாய் செதுக்கப்பட்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைப் பிரயோகங்கள் அறியாமையில் மூழ்கி மத போதையில் தள்ளாடும் முஸ்லீம் சகோதரர்களை நல்வழிப்படுத்தட்டும். முஸ்லீம் மக்கள் பகடைக்காய்களாய் பயன்படுத்தப்படுவவதை அவர்கள் உணர்ந்து தெளியட்டும்.

  12. I think zionist(Isreal,USA) sponserd kamal hasan to make movie which further alienate Muslim community which already marred in Mass media

    So I think your article should be the ‘Kamal hasan puppet of Zionist’

      • குட்டி சைத்தான் ஒன்றை கோடி இஸ்ரேலின் அப்பன் சைத்தான் அமேரிக்கா என்ற உலக ரவுடிக்கு ரசியா பணியுது ,சீனா பணியுது ,ஜப்பான் பணியுது ,ஜெர்மன் பணியுது .பிரான்ஸ் பணியுது ,

        • //குட்டி சைத்தான் ஒன்றை கோடி இஸ்ரேலின் அப்பன் சைத்தான் அமேரிக்கா என்ற உலக ரவுடிக்கு ரசியா பணியுது ,சீனா பணியுது ,ஜப்பான் பணியுது ,ஜெர்மன் பணியுது .பிரான்ஸ் பணியுது ,///

          @S.Ibrahim அட உங்க தமாத் இயக்கம் அம்மாவுக்கே அடிபணியிது…பின்ன அமெரிக்காவுக்கு கழுவிவிடாதா….

        • //‘மஸீஹ் அல்லாஹ்வின் மகன்’ என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். -9:30//

          ithu entha porin pothu sonnathu? ungal nambikkai ennavaga vendumaanalum irukkattum. neengal eppadi aduthavargal nambikkaiyai azhippaan ozhippaannu solla mudiyum? nalaikku nanum oru mathaththai niruvi athula muslimgalai billa ozhippaanu sonna ungalukku kovam varathu? ithu pira mathathinarin manathai punpaduthaatha? kurnai thadai panniralama?

  13. விஸ்வரூபம் பொறுத்த வரை முஸ்லிம் தலைவர்கள் இப்போது முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள், காரணம் அரசின் செயலபாடுகளில் சிக்கி முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளனர். ஆனால், கமலஹாசனுடன், பேசி அவர் அமெரிக்காவிலிருந்து வந்த மறுநாளே சில் காட்சிகளை தவிர்த்து விட்டு வெளியிடிவதென முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால், வழக்கின் தீர்ப்பு சம்மந்தமாக காத்திருந்தார்கள். தீர்ப்பு வந்த மறு நிமிடமே, திரையிடட்டும் என்று சொல்லிவிட்டார்கள். இப்போது நடப்பது அரசியல் நாடகமே, பொதுமக்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் நாள் எடுக்கும்.

  14. சகோதர, சகோதரிகளே! இந்த கட்டுரைக்கு மறுப்பு எழுதவோ அல்லது மததுவேசம் எடுக்கவோ நான் எழுதவில்லை. இந்த படத்திற்கு இவ்வளவு எதிர்ப்புகளும், பரபரப்பும் முதலில் தேவையற்றதே! முஸ்லிம் அமைப்புகள் முதலில் செய்த தவறு, கமலிடம் ஆட்சேபனையைக் கூறி ஒரு சில காட்சிகளை நீக்க முயன்றிருக்கலாம். தாங்கள் சொல்வது போல் ஆர்.எஸ்.எஸ் ஈஸியாக உள்ளே நுழைய வழி, இதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தமிழக மக்கள் அப்படி பட்டவர்கள் அல்ல. நான் வெளி ஊருக்கு செல்லும் போது வழியில் தொழுகை நேரத்தை அடைந்தால், அங்கு தொழுகையை நிறைவேற்ற எத்தனையோ ஹிந்து சகோதரர்கள் தங்கள் இல்லங்களில் அனுமதி தந்து இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தங்கள் வீட்டில் உள்ள சாமி புகைப்படங்களை நான் தொழும் வரை திரைக்கூட போட்டிருக்கிறார்கள். தமிழன் மனம் பெரியது.

    இந்த நிகழ்வு விபத்து போல் வந்துவிட்டது என்பதே உண்மை. அரசியல் கட்சி தலைவர்கள் எடுக்கும் முடிவுக்கு, தொண்டர்கள் எப்படி தலையசப்பார்களோ அதை போல்தான் இன்று இயக்க தலைவர்களின் முடிவும் உள்ளது. அது மட்டுமில்லை இயக்கத்தில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை வெறும் 10 % மட்டுமே. மற்ற முஸ்ஸிம்கள் யாரும் இதற்கு பொறுப்பக முடியாது. நான் கூட என் வீட்டில் ஏர்டெல் மூலமாக விஸ்வரூபம் பார்க்க 1000 டெபாசிட் செய்தவன்தான் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

    கமலுக்கு ஏற்பட்ட இந்த நிலை கடுமையாக கண்டிக்க கூடியது, ஒரு மனிதனை சோதனையின் விளிம்பிற்கு தள்ளுவது, இயக்க தலைவர்கள் இஸ்லாத்தை புரிந்துகொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

    விஸ்வரூபம் பொறுத்த வரை முஸ்லிம் தலைவர்கள் இப்போது முடிவெடுக்க முடியாத நிலையில் உள்ளார்கள், காரணம் அரசின் செயலபாடுகளில் சிக்கி முடிவெடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். ஆனால், கமலஹாசனுடன், பேசி அவர் அமெரிக்காவிலிருந்து வந்த மறுநாளே சில காட்சிகளை தவிர்த்து விட்டு வெளியிடிவதென முடிவு செய்யப்பட்டு விட்டது. ஆனால், வழக்கின் தீர்ப்பு வராமல் வெளியிட முடியாது என்பதாலேயே காத்திருந்தார்கள். தீர்ப்பு வந்த மறு நிமிடமே, திரையிடட்டும் என்று சொல்லிவிட்டார்கள். இப்போது நடப்பது அரசியல் நாடகமே, பொதுமக்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் நாள் எடுக்கும்.

    • அப்துல் உங்கள் நேர்மை எமக்கு மிகவும் பிடித்துள்ளது…ஆனால் அப்துல் என்ற பெயரில் விஷமிகள் யாரும் இதை பதிந்திருக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

  15. அன்பார்ந்த என் வினவு எழுத்தாளரே… எங்கோ ஒரு பெண் விபச்சாரம் செய்து விட்டால் அந்த பெண் மட்டும் தான் விபச்சாரி ஆவாள்.. அதற்காக ஒட்டுமொத்த பெண்களும் விபச்சாரி ஆக மாட்டார்கள்.. உங்கள் அம்மா ,மனைவி, மகள் அவர்களும் பெண் என்பதால் அவர்களும் விபச்சாரி ஆவார்களா…? அதை போல் தான் எவனோ ஒருவன் தீவிரவாதி அவன் மதம் இஸ்லாம் என்பதால் ஒட்டுமத்த இஸ்லாமியர்களும் எப்படி தீவிரவாதி ஆவார்கள்?

    • ///மற்றப்படி மசூதிக்குள் புகுந்து தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் ஷியா முஸ்லிம்களைக் கொன்று தள்ளுவதை மறைமுகமாக நியாயப்படுத்தும் அளவுக்கு வெறியர்களும், ரிசானவின் படுகொலையை ஆதரிப்பவர்களும், தலிபான்களை வெறித்தனமாகவோ நாசூக்காகவோ நியாயப்படுத்துபவர்களுமான இவர்கள் இசுலாமிய தீவிரவாதிகள்தான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.///

      என்று தானே உள்ளது

    • Brother, Than why you are worrying, if others are not thing your mother and sister as prostitue. If you are giving example for comments do not show stupid examples. In Tamil Nadu, Our Hindu and Christian brothers are living as brothers with the Muslims.

    • விபச்சாரம் செய்யும் பெண் ஒட்டுமொத்த பெண்களின் பிரதிநிதி பாத்திரத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு என்ன அய்யா பொருள்?

    • @muslim tamilan அந்த TNTJ தமாத் அரசியல் கட்சி கூட்டத்தில் உள்ளதை அப்படியே சொல்லுரிங்க.. எப்படி??

      https://www.youtube.com/watch?feature=player_embedded&v=DQ_LsAbVsLA

      25% மூஸ்லீம்கள் உள்ள கேரளத்தில் தடையின்றி ஒடுகிறது..
      ஆனா ஆளுங்கட்சியின் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடக்கும் தாமத் தலைவனை தட்டிக்கேட்டக உனக்கு நாதியில்லை.

    • அன்பின் முஸ்லிம்தமிழன் நீங்கள் கட்டுரையை மேலோட்டமாகப்படித்துவிட்டு விமர்சிக்கிறீர்கள் நீங்கள் நினைப்பது தவறு மீண்டும் ஆழ்ந்து படியுங்கள்

  16. பத்திரிக்கை துறை மக்களுக்கு பொதுவான கருத்துக்களை எடுத்துச் சொல்லும், இன்னும் பதட்டமான சூழ் நிலைகளிலெல்லாம் மக்களை அமைதிப்படுத்த பல நன்முயற்சிகளை செய்துக்காட்டி அமைதியை ஏற்படுத்திய வரலாறு உள்ளது. நீங்களே இப்படி சொல்வது உணர்ச்சிவசத்தின் தொகுப்பை காட்டுகிறது. தங்களின் கோபம் நியாயமானது, அந்த அளவிற்கு எங்கள் இயக்க தலைவர்கள் உங்களை புண்படுத்திவிட்டார்கள். தவறு எங்களுடையது. அதற்கு பிரயாச்சித்தம் தேடுவது எங்கள் பொறுப்பே!

  17. விஸ்வரூபம் படத்தைப் பார்த்த இஸ்லாமிய அமைப்புகளின் பிரதிநிதிகள், இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
    விஸ்வரூபத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள்:
    தொழுதுவிட்டு கொலை.
    தீவிரவாதிகளின் கையேடு அல்-குர்ஆன்.
    எதிரியின் கழுத்தை அறுப்பதை அப்படியே காண்பிப்பது.
    பள்ளிவாயல்கள் தீவிரவாதிகளின் புகழிடம்.
    அமைதியின் சின்னமான புறாக்களையும் கொல்லுதல்.
    தமிழ் பேசுபவர்களை இழிவுபடுத்தியுள்ளார்.

  18. விஸ்வரூபம் திரைப்படம் வெளியிடப்பட இருந்த தியேட்டர்களில் கண்ணாடிக்கதவுகள் நொறுக்கப்பட்டன.சில இடங்களில் பெட்ரோல் குண்டுகள்,etc.
    தேவையில்லாமல் முஸ்லீம்கள் மீது வெறுப்பு அடுத்தவர்களுக்கு ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்படுகிறது.அரசு உடன் முடிவு எடுக்க வேண்டும்.courtல நடப்பதை தவிர்க்கலாம்.கமலும் முஸ்லீம்களும் இனைந்து முடிவு தெரிவித்தபிறகு மேல் முறையீட்டை வாபஸ் வாங்காமல் இருப்பது தவறு.
    ஆனால் வண்டு முருகன் ஜோக்கு Top ஒ Top

  19. அன்பிற்குரிய ( விஸ்வரூபத்தால் மனவலிக்கு உள்ளாகியிருக்கும்) சகோதரர்களே,

    அஸ்சலாமு அலைக்கும் ( சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக )..
    விஸ்வரூபம் பிரச்சினையின் “உண்மைரூபத்தை” தற்போது அறிந்திருப்பீர்கள்.

    நேற்றைய நீதிமன்ற நடவடிக்கைகளை கவனித்தவர்களுக்கு அரசின் உள் நோக்கம் புரிந்திருக்க வேண்டும்.

    விஸ்வரூபம் திரைப்படத்தை ஜெ தொலைக்காட்சி விலை பேசிய போது அரசின் தலைமைக்கு இந்தப் படத்தின் கருவும் காட்சியமைப்பும் தெரியாதா ?

    அரசின் தலைமை வேறு, ஜெ டிவியின் தலைமை வேறா ?

    அப்போதே தடை செய்யும் எண்ணம் வரவில்லையே, ஏன் ?

    திரையரங்க உரிமையாளர்களோடு கமலஹாசனுக்கு பிணக்கு ஏற்பட்ட போதும் அமைதி காத்தார்களே…

    டி.டி.ஹெச் மூலமாக வெளியிட முயற்சி நடந்த போது தானே பிரச்சினை வெடித்தது. காரணம், கை நழுவி போகும் என தானே ?

    அதற்கு பிறகு இஸ்லாமிய அமைப்புகளின் போராட்டத்தை லாகவாகமாக சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொண்டது யார் ?

    நீங்கள் போராடியதால் இந்த அரசு தடை விதித்ததா என சிந்தியுங்கள்….

    நீங்கள் போராடிய மற்ற எந்த விசயத்தில் இந்த அரசு காது கொடுத்து கேட்டது ?

    ” இன்னொஸன்ஸ் ஆப் முஸ்லிம்” என்ற ஆங்கில திரைப்படத்தை எதிர்த்து அண்ணா சாலையில் போராட்டம் நடத்திய போது இந்த அரசு எப்படி கையாண்டது ?

    நீங்கள் போராடியதற்காக இந்த அரசு தடை விதிக்கவில்லை.

    ஆட்சியாளர்களின் தனிப்பட்ட வெறுப்புகளின் வெளிப்பாடு அது.

    ஜெயா தொலைக்காட்சியின் லாப நட்டக் கணக்கு அது.

    நடந்தது உங்களுக்கும் கமலுக்குமான பிரச்சினை அல்ல,
    ஜெயா தொலைக்காட்சிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்திற்குமான பிரச்சினை.

    இதில் கருத்து தெரிவித்த எங்களையொத்த நண்பர்களின் கருத்தை நீங்கள் மதத்திற்கு எதிரான கருத்தாகக் கொண்டீர்கள்.

    இதை போன்ற பல படங்கள் ஏற்கனவே வந்துவிட்டன, இனியும் வரத்தான் செய்யும்.
    தன்னை மனிதனுக்குரிய அடையாளம் பெற வைத்த பெரியாரையே, விமர்சனம் செய்கிற புத்திசாலிகளும் நடமாடிக் கொண்டிருக்கின்ற காலம் இது.

    விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர்கள் என யாரும் கிடையாது.

    இது போன்ற படங்கள் வந்த போதும், கோவை போன்ற சம்பவங்கள் நடந்த பிறகும் சகோதரத்துவம் எங்கும் குலைந்து விடவில்லை.

    அனைவருக்கும் தெரியும், ஒரிருவர் செய்கிற காரியங்களுக்கு, ஒட்டுமொத்தமாக எல்லோரும் குற்றவாளியாகிவிடமாட்டார்கள்.

    அதேபோல ஒரு திரைப்படம் சொல்வதால், அனைவரையும் தீவிரவாதியாக பார்த்துவிடமாட்டார்கள்.

    இப்போதும் சொல்கிறோம், எப்போதும் சொல்வோம் நாங்கள் உங்களின் சகோதரர்கள்,
    உண்மையானவர்களை உணருங்கள். ஒரிரு இடத்திற்காக குரலை மாற்றி ஒலிக்க தயங்காதவர்களின் குரலை எதிரொலிக்காதீர்கள்.

    கலையின் பெயராலோ, கருத்து சுதந்திரத்தின் பெயராலோ காவி நுழைய இடம் கொடுத்துவிடாதீர்கள்.

    ஜெ, ஜெ-வாகத் தான் இருப்பார். கமல், கமலாகத் தான் இருப்பார். நாம் என்றும் நாமாக இருப்போம்.

    மீண்டும் சொல்கிறேன், எதிர் கருத்தை எதிர்க்கவில்லை. அதை யார் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை உணருங்கள் எனத்தான் சொல்கிறோம்.

  20. ///இப்படத்தில் இஸ்லாமியர்களை இதுவரை யாருமே இப்படி கேவலப்படுத்தியதில்லை என்றும் குமுறல் வெளியிட்டுள்ளனர்.
    விஸ்வரூபத்தை முஸ்லிம்கள் எதிர்ப்பதற்கான காரணங்கள்:
    தொழுதுவிட்டு கொலை.
    தீவிரவாதிகளின் கையேடு அல்-குரான்.
    எதிரியின் கழுத்தை அறுப்பதை அப்படியே காண்பிப்பது.
    பள்ளிவாயல்கள் தீவிரவாதிகளின் புகழிடம்.
    அமைதியின் சின்னமான புறாக்களையும் கொல்லுதல்.
    தமிழ் பேசுபவர்களை இழிவுபடுத்தியுள்ளார்///

    முஸ்லிம் தமிழன் அண்ணே அதான் கமல் அந்த காட்சிகளை நீகுறேனு சொல்லிடாரு ..அப்புறம் ஏன் ? இப்படியே குதிச்சுட்டு இருந்தா பாதிப்பு நாமுடைய முஸ்லிம் சகோதர்களுக்கு மட்டும்தான் … மிக பலமான அரசியல் காய்கள் திரைமறைவில் நகர்கின்றது புரிந்து கொள்ளுங்கள் மக்களே >>>>

  21. இந்த பதிவு ஒரு நகைச்சுவை இழையோடும் தொனியில் இருந்தாலும் சொல்லிய செய்தி தீவிரமானது. தமிழகத்தின் சில பகுதிகளில் அதிமுக வினர் திரை அரங்குகளில் கலாட்டாவில் இறங்குவதாக தெரிகிறது. அந்த கும்பலில் தெரிந்தோ, அறியாமலோ ஒரு சில இசுலமாமிய நண்பர்கள் தம்மை இணைத்துக் கொள்ளும் சூழல் ஏற்படின் அது பெரும்பான்மை சமூகத்தவர் மனதில் தீவிரமான சிந்தனைகளை உருவாக்க கூடும். அதன்பின் பெரியார் மண் என்று நாமெல்லாம் பெருமைபட்டுக் கொள்ள வாய்ப்பில்லாமல் போகலாம். ஷாபானு விவகாரம் ,விஷ்வரூபம் விவகாரம்,சயது சகாபுதின்,ஜெய்னுலாதின் இதெல்லாம் வேறுவேறென்று கூறிவிட முடியாதபடி ஆகிவிடக்கூடும். இசுலாமிய சமயத்தை சேர்ந்த மக்கள் ஜனநாயக சக்திகளோடு கை கோர்க்க வேண்டுமேயன்றி மதவாதிகளுடன் அல்ல. அது அவர்களுக்குநன்மை தராதுயென்பதை உணர்வது நல்லது.இந்த மோதலின் மையப்புள்ளி அரசைநடத்துபவர்கள் என்பதை மதநல்லிணக்கத்தின் மேல்நம்பிக்கையுள்ள ஊடகங்கள் தெளிவு படுத்திவிட வேண்டும். ஒரு கொளரவ மோதலில் தமிழகத்தில் மதச்சண்டை வந்தால் கூட பரவாயில்லை தனிமனிதன் நடுத்தெருவுக்கு வந்தால் போதும்னு நினைக்கும் ஆள்வோரின் அராஜகத்தை பெரியார் வழிவந்ததாக அரசியல் செய்வோரும்,ஜனநாயக இயக்கங்களும் வை கோ, வலது ,இடதுகள் அனைவரும் அம்பலப்படுத்தி கண்டிக்க முன் வர வேண்டும் . இன்றைய நிலையில் அந்த படம் வந்து செய்யும் தீமையை விட வராமல் செய்யும் தீமையே அதிகம் எனத்தோன்றுகிறது.இதனை சிந்தித்து இசுலாமிய நண்பர்கள் தமது கருத்துக்களை திறந்த மனதோடு வெளிப்படுத்த வேண்டும்

    • இன்றைய நிலையில் அந்த படம் வந்து செய்யும் தீமையை விட வராமல் செய்யும் தீமையே அதிகம் எனத்தோன்றுகிறது.

  22. நீ தாலிபான காட்டுங்கள் இல்ல லக்ஷ்ர்இதொய்பாவை காட்டுங்கள் எங்களுக்கு பிரச்சனையில்லை ஆனால் முஸ்லிம்கள் தன் உயிரைபோல மதிக்கும் குரான் வசனங்களை ஓதிக்கொண்டு கழுத்தைஅறுப்பது போல் காட்சியை வைக்கவேண்டுமா தொழுது முடித்தவுடன் கொலைசெய்வதுபோல் காட்சிவைப்பது சரியா ? இதைபார்க்கும் இந்துமக்கள் இஸ்லாமியர்களின் குரானும் தொழுகையும் தீவிரவாதம் செய்ய தூண்டுகிறது எனற தவறான எண்ணத்திற்கு வரமாட்டார்களா ? தமிழ் சினிமாக்களில், “பாகிஸ்தான்” முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்டிக்கொண்டிருந்தவர்கள், இப்போது, இந்தியாவில் “உங்கள் ஊரில் – உங்கள் கடைகளுக்கு பக்கத்திலயே அவர்கள் “ஸ்லீப்பர்” செல்களாக இருக்கலாம், என முஸ்லிம்களை காட்சிப்படுத்தியது, விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி. இப்படியே ஒவ்வொரு படத்திலும் எங்களை தீவிரவாதிகளாக காட்டி காட்டி இந்து சகோதரர்களிடமிருந்து இப்பவே பாதி அந்நிய படுத்தி விட்டார்கள். இதற்கு ஒரு முடிவு வேண்டாமா அதற்காக போராடினால் ஒரு மததுவேஷமுள்ள ஆஸ்கர் விருதுக்குஆசைபட்டு அமெரிக்கனை தூக்கிபிடிக்கும் நடிகர் நஷ்டபடுவார் என்று கவலைபடுகிறார்கள் சிலஇந்து சகோதரர்கள். டேம்999 படத்துக்கு எதிராக பெருபான்மை மக்கள் போராடினால் அது போராட்டம். நாங்கள் போராடினால் அது தீவிரவாதம்.

    1) தீவிரவாதத்தை இந்த நாட்டில் அரங்கேற்றுவது யார் ?

    2) சம்ஜயோதா எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    3) சபர்மதி எக்ஸ்ப்ரஸில் குண்டு வைத்தவன் யார் ?

    4) மக்கா மஸ்ஜிதில் குண்டு வைத்தவன் யார் ?

    5) அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தவன் யார் ?

    6) கோவாவில் குண்டு வெடிப்பு நடத்தியவன் யார் ?

    7) மாலேகானில் குண்டு வைத்தவன் யார் ?

    நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ?

    9) குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று குவித்தவன் யார் ?

    10) நாடு முழுவதும் கலவரத்தை நடத்துபவன் யார் ?

    11) நம் தேசத்தந்தை மகாத்மா அவர்களை கையில் இஸ்மாயில் என்று பச்சை குத்திக் கொண்டு காந்தியை கொன்றவன் யார் ?

    12) விநாயக சதுர்த்தி ஊர்வலத்தின் போது தலித்,மற்றும் முஸ்லிம் மக்கள் வாழும் பகுதியில் கலவரத்தை துண்டுபவன் யார் ?

    13) பெங்களூரில் பாகிஸ்த்தான் கொடியை ஏற்றி தேச துரோக செயலை செய்து விட்டு முஸ்லிம்கள் மீது பழியை போட்டு பிறகு மாட்டி கொண்டவன் யார் ?

    14) பாபர் மஸ்ஜித்தை இடித்து தரைமட்டமாக்கி உலக அரங்கில் இந்தியாவை தலை குனிய வைத்தது இந்தியாவில ரத்த ஆற்றை ஓட்டியது யார் ?

    இதெல்லாம் கமல் போன்ற முற்போக்கு இயக்குனர்கள் கண்களுக்கு அஹிம்சை செயலாக தெரியும் போலருக்கு. இந்த ஆர்எஸ்எஸ் காவி தீவிரவாதத்தை பற்றி படம் எடுத்திருக்கிறார்களா ? எடுப்பார்களா ???

    • குண்டு வைப்பது மட்டும் தான் தீவிரவாதம் என்றா கருதுகிறீர்கள். அவர்கள் வைத்த குண்டையெல்லாம் உங்களைப் போன்றவர்கள் நாலு கூட்டம் போட்டால் ஒன்றுமில்லாமல் பண்ணி விடுவீர்கள் போலப் படுகிறது.

    • @அஹ்மத்,

      என்ன பாஸ் இப்படி கேள்வி மேல கேள்வி கேட்டுட்டிங்க…இதே கேள்வியை உங்களை கேளுங்க பாஸ்.குரான் படிச்சிட்டு இதுவரை தீவிரவாதிகள் யாரையும் கொல்லவில்லையா??பாகிஸ்தானில் பல இடங்களில் மசுதிக்கு உள்ளே குண்டு வெடிப்பது உங்களுக்கு தெரியாதா? சாதரணமாக உங்கள் மசூதிக்குள் வெளியாட்கள் செல்ல முடியுமா?? dam 999 படத்தையும் இதையும் ஒன்னா வச்சி பாக்காதிங்க..அது வேறு இது வேறு..ஆப்கானில் நடக்கும் கட்சியையும்,இந்தியாவையும் அதுவும் தமிழ் நாட்டையும் ஒன்றுபடுத்தி பார்க்க முடியுமா?? என்ன சீழ்கெட்ட சிந்தனை இது..

      இதுபோக உங்களுடைய மற்ற கேள்விகளில் இருக்கும் நியாயத்தை நாங்கள் மறுகவில்லை

      • சகோதரர் நெல்லைபாலாஜி அவர்களே தாங்கள் முதலில் கேட்ட கேள்வி குர்ரான்னை படித்துவிட்டு இதுவரை யாரும் கொள்ளவில்லையா என்று கேட்கிறீர்கள்.இதற்கு என்னுடைய பதில் எனாக்கு தெரிந்த வகையில் இதுவரை யாரும் அவாறு செய்ததாக தெரியவில்லை . ஒரு வேளை அவாறு அவர்கள் அநியாயமாக கொலை செய்திருந்தால் .அது கண்டிப்பான முறையில் பெரும் தவறு பெரும் பெரும் பாவம் அவர்கள் நரகம் தான் செல்வார்கள் . நான் தங்களிடம் ஒன்று கூற விரும்போகிறேன் . தாங்கள் ஒருமுறை குர்ரானை படித்துவிட்டு அதில் மற்றவர்களை அநியாயமாக கொல்ல சொல்லிருந்தால் தங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.ஆனால் அதில் அவ்வாறு ஒரு வார்த்தை கூட கிடையாது . இதிலிருந்து தன்னகளுக்கு தெரியும் குர்ரான் யாரையும் கொள்ளசொல்வதில்லை என்று . உதாரனத்திற்க்கு. ஹிந்து மத வாதிகளில் சிலர் விபச்சாரத்திலும் பலமோசடிகளிலும் ஈடுபடுகின்றனர் அதற்காக தங்கள் அவர்கள் பகவத்கீதை என்ற வேதத்தை படித்துவிட்டு தான் இவ்வாறு செய்கிறார்கள் என்று கூற மாட்டீர்கள் . அது அவருடைய தனிப்பட்ட தவறான செயல் .அதற்க்கு மதம் பொறுப்பாகாது . என்றே கூறுவீர்கள் . எனவே இது தான் சரியான கருத்தும் கூட.
        எனவே சற்று சிந்தித்து பாருங்கள் .

    • எத்தனை யார்…
      உச்ச பட்சமே இதுதான் “நாடெங்கும் குண்டு வைத்து விட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போடுபவன் யார் ”

      – கஷாப் , தாவூத் , அப்சல் குரு இந்துகள் என்று கேள்விப்பட்டேன் அதை மேற்கண்ட பின்னுட்டத்தில் முஸ்லீம் என்ற பெயரில் உறுதிப்படுத்திவிட்டார்.

    • அண்ணே..கோயமுத்தூர் குண்டு வெடிப்பை ஏன் விட்டுட்டீங்க..! அந்த கேஸையும் காவிங்க மேலேயே ஏத்துங்க அண்ணே!

    • எந்தவொரு மதத்தின் மறை நூல்களிலும் இல்லாத அளவிற்கு குரானில் மற்றைய மதத்தவர்களை ‘காபிர்கள்’ (infidels) என்று இழிவுபடுத்தும் விடயங்கள், எதிரிகளாகச் சித்தரிக்கும் விடயங்கள், அவர்களுக்கெதிரான வன்முறைகளை தூண்டும் விடயங்கள் எல்லாம் உள்ளனவே.
      அப்போ, குரானை தடைசெய்யும்படி நாங்களும் போராடலாமா?

      • காபிர்கள் என்றால் இஸ்லாம் அல்லாதவர்கள் என்று அர்த்தம். இதில் எங்கே இழிவுபடுத்தப்படு