privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஸ்ரீரங்கம்: பார்ப்பனியத் தீண்டாமைக்கு இடைக்காலத் தடை!

ஸ்ரீரங்கம்: பார்ப்பனியத் தீண்டாமைக்கு இடைக்காலத் தடை!

-

மிழக அரசு சட்டமான ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும்’ என்பதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணையில் உள்ள நிலையில், தமிழக அரசு இந்து அறநிலையத்துறை திருவரங்கம் கோவிலில் 4 விதமான பணி நியமனத்திற்கு இந்து பிராமணர் அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும் எனவும் 15-3-2013 அன்று விண்ணப்பிக்க இறுதி நாள் என பொறுப்பாகவும் விளம்பரம் கொடுத்திருந்தது.

படம் : பி.பி.சி.
படம் : பி.பி.சி.

அர்ச்சகர் உட்பட கோவில் பணியாளர் அனைவரையும் நியமிக்கும் அதிகாரம் அரசு அதிகாரத்திற்கு உட்பட்டது; முறைகேட்டில் ஈடுபடும் அர்ச்சகர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம் என பிற அரசு ஊழியர்களுக்கு உள்ள விதிமுறைகள் இவர்களுக்கும் உள்ளது; அரசு வேலைவாய்ப்பில் பிறப்பை வைத்து சாதிபாகுபாடு பார்க்கக் கூடாது; தீண்டாமை எந்த வடிவத்தில் அமுல்படுத்தினாலும் தண்டனைக்கு உரிய குற்றம் எனவும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனவும் அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது; வாரிசுரிமைப்படி அர்ச்சகர் நியமனம் ஒழிக்கப்பட்டு விட்டது. இவை எல்லாம் ஏட்டளவில்தான் உள்ளன. சட்டப்படியே தீண்டாமை கடைப்பிடிக்கப் படுவதற்கு மீண்டும் ஒரு சாட்சிதான் திருவரங்கம் கோவில் விளம்பரம்.

பிப்ரவரி – 13 ஆம் தேதியிட்டு, சிறீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் வேலை வாய்ப்பு அறிவிப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கீழ்குறிப்பிடப்பட்டுள்ள காலி பணியிடங்களுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த, தகுதியான வர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்து இந்து சமய அறநிலைய சட்ட விதிகளுக்கு உட்பட்டு 15.03.2013 மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு கீழே காலி பணியிடங்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டிருந்தன, அதாவது

1. பதவி பெயர் – இளநிலை உதவியாளர்
ஊதிய விகிதம் – ரூ. 5,200 – 15,900+ தர ஊதியம் – ரூ. 2,400
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 3
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு மற்றும் கணினி – தட்டச்சுத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண் – பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.

2. பதவி பெயர் – பிரதான ஆலயக் காவலர்
ஊதிய விகிதம் – ரூ. 4,000 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 10
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

3. பதவி பெயர் – பிரதான ஆலய சிறீபாதம்
(சிலையைத் தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் – ரூ. 4,100 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 4
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

4. பதவி பெயர் – உபகோயில் சிறீபாதம்
(சுற்றுப் பிரகார சிலையை தூக்குகிறவர்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் மட்டும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

5. பதவி பெயர் – உபகோயில் காவலர்
(சுற்றுப் பிரகார கோயில் காவலர்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 7
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

6. பதவி பெயர் – சன்னதி வாசல்
(சுற்றுப் பிரகார கோயிலின் அர்ச்சகர்)
ஊதிய விகிதம் – ரூ. 4,100 – 10,000+ தர ஊதியம் – ரூ. 1,400,
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 2
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

7. பதவி பெயர் – உபகோயில் பரிசாரகர்
(உதவி வேலைகள்)
ஊதிய விகிதம் – ரூ. 2,800 – 8,400+ தர ஊதியம் – ரூ. 1,200
காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை – 1
இதற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி: இதற்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இந்து பிராமணர் அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

மேற்கண்ட ஏழு வகையான பணியிடங்களுக்கும் இணை ஆணையரிடம் – செயல் அலுவலர் எஸ்.கல்யாணி அவர்களின் பெயரிலும், இரா.சேஷாயி (தலைவர்) எஸ்.பி.ரங்காச்சாரி, கே.என்.சீனிவாசன், ஏ.டி.கஸ்தூரி, பராசர.ஆர். சிறீவெங்கட பட்டர் (சுழல் முறை அறங்காவலர்) ஆகிய அறங்காவல் குழுவினர் பெயரிலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறநிலையத்துறை வெளியிட்ட விளம்பரங்களும் விண்ணப்ப படிவமும் (படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)

இப்படி அதிமுக்கியமான அணுஆயுத பணிக்குதான் இந்து பிராமண அய்யங்கார் மட்டும் விண்ணப்பிக்கவும் என அறமே இல்லாத அறநிலையத்துறை விளம்பரம் கொடுத்திருந்தது. பிற அரசுப் பணிகள் போல் கோவில் பணி நியமணங்களிலும் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வேண்டும் என்பதுதான் சட்டப்படியானது.கேள்விக்கு இடமில்லாமல் புனித போர்வையில் ஆலயத்தில் நடக்கும் அநீதிகள் அரசின் அரவணைப்பில் இது வரை அரங்கேற்றபட்டு வந்தன. இனி ஆதினங்களானாலும் ஆலயமானாலும் அதன் வரவு செலவுகள், ஊழியர்களின் பணி நியமணம் அனைத்திலும் பொது மக்கள் தலையிட வேண்டும். அவையும் நமது சொத்துக்கள்தான் என்பதை மக்கள் உணரவேண்டும்.

ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்தின் விளம்பரத்திற்கு எதிராக அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தின் தலைவர் அரங்கநாதன் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடை கோரி வழக்கு தாக்கல் செய்யபட்டது.

அவரது மனுவில், “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டு, மாணவர்களுக்கு அர்ச்சகர் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆனால், இந்து கோயில்களின் கருவறைக்குள் பிராமணர்கள் தவிர மற்ற ஜாதியினர் நுழைந்தால் தீட்டாகிவிடும் என்று கூறி, தமிழக அரசின் இந்த முடிவுக்கு எதிராக சிவாச்சாரியார்களுக்கான அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் தடை வாங்கிவிட்டார்கள்”, என்று தெரிவித்திருந்தார்.

“ஆனால் தற்போது ஸ்ரீரங்கம் கோயிலில் அறிவிக்கப்பட்டுள்ள ஏழு வகையான பணியிடங்கள் எவையும் கோவிலின் கருவறைக்குள் செல்லும் பணிகள் அல்ல. கருவறைக்கு வெளியே செய்கிற பணிகளுக்குக்கூட பிராமண ஐயங்கார் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று அரசின் விளம்பரத்தில் கூறப்பட்டிருப்பது இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிரானது. பொதுப் பணித்துறை, வருவாய்த் துறைபோல இந்து அறநிலையத் துறையும் தமிழக அரசின் மற்றும் ஒரு துறைதான். இந்த வேலைகளுக்கு இந்துக்கள் விண்ணப்பிக்கலாம் என்று சொல்லலாமே தவிர, இந்து ஐயங்கார்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று கூறுவது தவறு. எனவே கோயில் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டும்’’ என்று ரெங்கநாதனின் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஹரிபரந்தாமன், ஸ்ரீரங்கம் கோயில் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளார்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம்.
பி.பி.சி. செய்தி