ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, தமிழ்நாடு
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை போலீசார் தாக்கியதைக் கண்டித்தும், சென்னை போரூர் டிரங்க் ரோடு , போரூர் சிக்னல் எதிரில் மாணவர்களின் ஆர்ப்பாட்டம்!
நாள்:01.04.2013 ,
நேரம்: காலை 11.00 மணி
அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் ஒரு ஏமாற்று!
இனப்படுகொலை நிகழ்த்திய ராஜபக்சே கும்பலை தண்டிக்க நூரம்பர்க் போன்ற ஒரு விசாரணையே சரியான மாற்று!
ஈழத்தமிழின மக்களின் தன்னுரிமைக்காக பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்!
என்ற அடிப்படையில் 80-களின் மாணவர் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்க தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் தலைமையில் அப்பகுதி மக்களையும் இணைத்துக் கொண்டு மாணவர்களின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தகவல் :
கணேசன், ஒருங்கிணைப்பாளர்.
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி
9566149374