privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇசைமறையாது மடியாது நக்சல்பரி.... பாடல்!

மறையாது மடியாது நக்சல்பரி…. பாடல்!

-

பாடலில் வரும் உரை:

இது ஜனநாயகம் இல்லை, தரகு முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் நடத்தும் சர்வாதிகாரம் என்று நாம் சொன்னோம்.

‘இல்லை, இந்தியாதான் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு’ என்று மார்தட்டியவர்கள் ‘ஐயோ, கிரிமினல்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறக்கிறதே’ என்று இப்பொழுது மார்பில் அடித்துக் கொள்கிறார்கள். ‘இந்திய ஜனநாயகத்தை சுத்திகரித்து விடலாம்’ என்றும் ஆசை காட்டுகிறார்கள்.

பேசுபவர்கள் எல்லாம் பெரிய அறிவாளிகள், அதாவது பெரிய பெரிய முதலாளிகளின் கையாள்கள். புதிய பொருளாதாரக் கொள்கையை, நாட்டை மீண்டும் காலனியாக்கும் காட் ஒப்பந்தத்ததை ஆதரிப்பவர்களும் இந்த அறிவாளிகள்தான். திடீர் பணக்கார அரசியல் ரௌடிகள் பாசிச ஆட்சிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் குண்டர் படையாக இருந்து மக்களைத் தாக்கும் போது இவர்கள் தொண்டர் படையாக இருந்து அதை ஆதரிப்பார்கள்.

நக்சல்பரி

ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் இந்த அமைப்பையே தகர்த்தெரியாமல் கிரிமினல்களின் ஆதிக்கத்தைத் தகர்க்க முடியாது. கட்சிகளை மாற்றுவதால் காரியம் நடக்காது என்பதை நம் சொந்த அனுபவமே நிரூபித்துள்ளது. மிஞ்சியிருப்பது ஒரே பாதை, அது புரட்சிப் பாதை. அன்னிய ஆதிக்கம், பண்ணை ஆதிக்கம், கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம், அனைத்திலிருந்தும் இந்த மண்ணையும் மக்களையும் விடுவிக்க வல்ல பாதை. அந்தப் பாதையில் மக்கள் அதிகாரத்தை நிறுவும் வரையில், புதிய ஜனநாயக இந்தியாவை படைக்கும் வரையில் நக்சல்பாரிகளின் முழக்கம் ஓயாது.

இருபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னால் இமயத்தின் அடிவாரத்தில் எழும்பிய அந்த போர் முழக்கம் நாடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டுதான் இருக்கும். மீண்டும் மீண்டும், மீண்டும் மீண்டும்.

பாடல்:

ஏ… தன்னே னான னன்னே, தன்னானே னான னன்னே னானே னன்னே…
நக்சல்பரி, நக்சல்பரி
கோரஸ் : நக்சல்பரி, நக்சல்பரி
மறையாது மடியாது

கோரஸ் :
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

உழவன் வடித்திட்ட கண்ணீரில் தோன்றி
கோரஸ்: கண்ணீரில் தோன்றி, கண்ணீரில் தோன்றி
உயிருக்கு நிகரான செங்கொடி ஏந்தி
கோரஸ்: செங்கொடி ஏந்தி, செங்கொடி ஏந்தி
திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை
கோரஸ்: திமிரில் கொழுத்த சுரண்டலின் மார்பை
இடியாய் பிளந்ததே நக்சல் பரி – மக்கள்
இசையாய்ப் பொழிந்ததே நக்சல்பரி

கோரஸ்: நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

மிட்டார் மிராசுகளின் கொட்டம் அடக்கி – அவன்
பட்டாக்களைப் பிடுங்கி நெருப்பில் எரித்து
கோரஸ்:
மிட்டார் மிராசுகளின் கொட்டம் அடக்கி – அவன்
பட்டாக்களைப் பிடுங்கி நெருப்பில் எரித்து

பறை தட்டி… உழவர் படை கட்டி …
கோரஸ் : பறை தட்டி… உழவர் படை கட்டி …
இந்த பாரெங்கும் பண்ணைகள் மடிகின்ற வரையில்

கோரஸ் :
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

அன்னியன் ஆணைக்கு ஆடும் அரசாங்கம்
கோரஸ் : ஆடும் அரசாங்கம், ஆடும் அரசாங்கம்
மண்டியிடும் தரகர்க்கு நாற்காலி மோகம்
கோரஸ் : நாற்காலி மோகம், நாற்காலி மோகம்
அடிமைக்கெதற்கு சுதந்திர வேடம்
கோரஸ் : அடிமைக்கெதற்கு சுதந்திர வேடம்
அலையாய் எழுந்ததே நக்சல்பரி – அரி
தாரம் கலைத்ததே நக்சல்பரி

கோரஸ்:
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

வங்கம் அரபிக் கடல் எங்கும் வலை விரித்து
கோரஸ்: வங்கம் அரபிக் கடல் எங்கும் வலை விரித்து
எங்கும் விழுங்க வரும் கொள்ளை வல்லரசு
கோரஸ்: புவி எங்கும் விழுங்க வரும் கொள்ளை வல்லரசு
இனம் கண்டு.. போரில் எதிர் கொண்டு..
கோரஸ்: இனம் கண்டு.. போரில் எதிர் கொண்டு..
அடி வேரோடு பூவோடு பிடுங்கிடும் வரையில்

கோரஸ் :
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

அரசாளும் வர்க்கத்தை திரைபோடும் மன்றம்
கோரஸ் : நாடாளுமன்றம், நாடாளுமன்றம்
பொது நீதி எனும் பெயரில் சதி செய்யும் மன்றம்
கோரஸ் : அது நீதி மன்றம், அது நீதி மன்றம்
வதை செய்து வெறியாடும் எதிரியின் படையை
கோரஸ் : வதை செய்து வெறியாடும் எதிரியின் படையை
எதிர்கொண்டு நின்றதே நக்சல் பரி – மக்கள்
இதயத்தை வென்றதே நக்சல் பரி

கோரஸ் :
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி

எங்கே நீதி என்று ஏங்கும் நிலை முடிக்க
கோரஸ் : எங்கே நீதி என்று ஏங்கும் நிலை முடிக்க
விடை இங்கே என்று அதிகாரம் பறித்தெடுக்க
கோரஸ் : விடை இங்கே என்று அதிகாரம் பறித்தெடுக்க
தடை எங்கே? மக்கள் படை அங்கே…!
கோரஸ் : தடை எங்கே? மக்கள் படை அங்கே…!
அது முன்னேறும் முன்னேறும் விடிகின்ற வரையில்.

கோரஸ்
மறையாது மடியாது நக்சல்பரி
மரணத்தை வென்று எழும் நக்சல்பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி
நக்சல் பரி, நக்சல் பரி
____________________

க்கள் கலை இலக்கிய கழகத்தின்’அண்ணன் வர்றாரு’ பாடல் ஒலிப்பேழையில் இடம் பெற்ற ‘மறையாது மடியாது நக்சல்பரி’ என்ற பாடல். ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

புதிய கலாச்சாரம்,
16, முல்லை நகர் வணிக வளாகம்,
2வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083.
தொலைபேசி: 044-23718706
செல்பேசி: அலுவலக நிர்வாகி தோழர் பாண்டியன் – 99411 75876

___________

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை, சென்னை – 600 002.
தொலைபேசி: 044-2841 2367