மே 19 ஞாயிற்றுக்கிழமை அன்று துபாய் அதிர்ச்சியுடன் கண் விழித்தது. துபாயிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பிற பகுதிகளிலும் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருந்த அரப்டெக் கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர். முதலில் எமிரேட்ஸின் பிற பகுதிகளில் தொடங்கிய இந்தப் போராட்டம் மெல்ல பரவி துபாயிலும் சூடு பிடித்தது.
சம்பள உயர்வு, நல்ல தங்கும் வசதி, ஆண்டு விடுமுறை போன்றவற்றை கோரிக்கைகளாக வைத்து அரப்டெக் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்தனர். துபாயில் யூனியன் அமைப்பது அரசு விதிகளின்படி தண்டனைக்குரியது. அதையும் மீறி ஊழியர்கள் ஒன்றிணைந்து இந்த போரட்டத்தை அறிவித்தனர் என்பது தான் துபாய் மற்றும் எமிரேட்ஸ் அரசுகளுக்கு அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது.
துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான ஊழியர்கள் பங்களாதேஷ், இந்தியா, நேபாளம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். இவர்களுக்கு மாதத்திற்கு $160 முதல் $190 (சுமார் ரூ 6000 முதல் ரூ 9000 வரை) வரை சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஆனால் இவர்கள் பணியில் சேரும் போது ஒப்பந்தத்தில் காட்டப்படும் தொகையோ இதை விட இரண்டு மடங்கு. ஓவர் டைம் வேலை வாங்கி விட்டு அதற்கான ஊதியம் கொடுக்கப்படுவதில்லை என்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர்.
இவர்களுக்கு உணவு, தங்கும் வசதி இலவசம் என ஒப்பந்தங்களில் சொல்லப்பட்டாலும், பெரும்பாலும் இவர்களே கட்டணம் செலுத்தி தான் சாப்பிட வேண்டும், இலவசமாக தரப்படும் உணவை வாயில் வைக்க முடியாது. தங்குமிடத்தில் 50 பேர் வரை ஒரே அறையில் தங்க வேண்டும், 12 மணிநேரம் வரை உழைக்க வேண்டும். கடும் வெயிலில் உழைத்தபடியே இருக்க வேண்டும், சூட்டிற்கு சிறுநீர் கூட வராது.
துபாய் பற்றி வினவில் ஏற்கனவே வந்த கட்டுரை. துபாயில் கட்டிடத் தொழில் 2009-ம் ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடியால் முடங்கியது. விலைகள் உச்ச அளவுகளிலிருந்து 50 சதவீதத்துக்கும் அதிகம் வீழ்ச்சியடைந்தன. இப்போது 100க்கும் அதிகமான ஆடம்பர ஹோட்டல்களை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
தங்கள் நிலைமைகளில் சிறிது முன்னேற்றம் வேண்டி தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். ஆனால் எதற்கும் நிறுவனம் செவி சாய்க்கவில்லை. பல ஊழியர்களின் பாஸ்போர்ட், வேலை செய்வதற்கான அனுமதி சீட்டு முதலியவற்றை பதுக்கி வைத்திருக்கும் ஒப்பந்தக்காரர்களை எதிர்த்து ஊழியர்கள் ஒன்றும் செய்ய முடியாது. ஊழியர்கள் மிரட்டப்பட்டு வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டு விட்டது. வேலை நிறுத்தம் தவறானது என்று மிரட்டப்பட்டு திரும்பப்பெறப்பட்டதே ஒழிய, எந்த கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, இன்னும் சொல்லப் போனால், நிறுவனம் தரப்பில் பேச்சு வார்த்தைக்கு கூட யாரும் வரவில்லை. அரசு உதவியுடன் போலீஸ் படையை அனுப்பி ஊழியர்களை பணிய வைத்தது நிறுவனம்.
தொழிலாளர்கள் தமக்குள் ஒருங்கிணைந்து பேச்சு வார்த்தைக்கு செல்லவும், வேலை நிறுத்தத்தை ஒருங்கிணைக்கவும் சிலரை பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து இருந்தனர். இப்பொழுது அந்த பிரதிநிதிகளுக்கு ஒப்பந்த ரத்து அல்லது பணி நீக்க ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதைப் பற்றி அரசு தரப்பிலும் நிறுவனத்தின் தரப்பிலும் கூறும்போது, “நாங்கள் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி முறையான சம்பளத்தை வழங்குகிறோம், இங்கு தங்கும் வசதிகள் நன்றாக உள்ளன, மேலும் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களோ தங்கள் நாட்டை விட இங்கு அதிகம் சம்பாதிக்கவே வந்துள்ளனர் அப்படியிருக்க துபாய் நிலமைகளை பற்றி குறைகூறுவது தவறு” என்று கூறியுள்ளனர்.
“உங்கள் நாட்டில் பிழைக்க வழியில்லாமல் தான் இங்கு வந்துள்ளீர்கள், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்” என்பதுதான் இதன் சாரம். நிறுவனம் சொல்வதை வங்கதேசத்து ஊழியர்கள் மறுக்கின்றனர். “எங்கள் நாட்டில் வேலை செய்திருந்தால் இதை விட அதிகமாகவே சம்பாதித்திருபேன், இங்கு அதிக சம்பளம் என்று ஒப்பந்ததில் மாட்டிகொண்டுள்ளேன்” என்றார். இங்கு வேலை செய்யும் சிலருக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக விடுமுறையே அளிக்கவில்லை. துபாய் சட்டப்படி ஆண்டிற்கு ஒரு மாதம் விடுமுறை அளிக்க வேண்டும்.
துபாய் அரசு மீண்டும் இந்த மாதிரியான ஒரு வேலை நிறுத்தம் வராமல் இருக்க ஊழியர்களை மிரட்டுவது, அவர்களை கண்காணிப்பது, சிலரை பணி நீக்கம் செய்வது என தொடர்ந்து தொழிலாளருக்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.
இன்றைக்கு ஷேக்குகளின் அடக்குமுறை சட்டங்கள் மற்றும் அட்டூழியங்களால் இந்த வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்திருக்கலாம். ஆனால் அல்லாவின் மண்ணில் இதுவரை வாயே திறக்க கூடாது என்று சிறை வைக்கப்பட்டிருந்த தொழிலாளிகள் இன்று போராட துவங்கியிருக்கின்றனர். ஏழை நாடுகளைச் சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் மதத்தால் முசுலீம்கள் என்பதை விளக்கத் தேவையில்லை. ஆனால் மத்தை விட முக்கியமானது வர்க்கம் என்பது இந்த வேலை நிறுத்தத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இனி அமெரிக்க அடிவருடிகளான அரபு ஷேக்குகள் மதத்தை வைத்து எங்கள் தொழிலாளிகளை ஒடுக்க முடியாது என்பதற்கு இது ஒரு துவக்கம்.
மேலும் படிக்க
Dubai workers hold rare strike for more wages
உண்மை தான் சகோ..இந்த போராட்டம் நடந்தது நல்ல விடயம் தான்….இது தான் மாற்றம்…இன்னும் முதலாலித்துவத்தில் திலைக்கும் அரபு தேசங்கள் உழைத்தவனின் கூலியை காயும் முன் கொடுத்துவிடு என்ற இஸ்லமிய கோட்பாட்டை மீறி நடக்கும் நிறுவனங்களே அதிகம்…நானும் துபாயில் இருக்கும் ஒரு தமிழக நிறுவனத்தில் தான் வேலை செய்கிறேன்…எனக்குள் இருக்கும் ஆற்றாமை எப்பொழுதும் உண்டு..இந்த தொழிளாலிகளின் கஷ்டம் நம் நாடாய் இருந்தால் போராடியே வென்றிருக்கலாம்…..இதில் நாம் கவத்தில் எடுத்துக்கொள்ளவேண்டிய பல விடயங்கள் இருக்கிறது….மேலே குறிப்பிட்ட ஆர்டிக்களில் வந்திருப்பது உண்மையான நிகழ்வு….இதற்கு பின்னால் துபை அரசாங்கத்தை வெறுமனே சாடுவது தவறு….இங்கு தொழிளாலிகளீன் நலன் சார்ந்த சட்டங்கள் அதிகம் பாதுகாக்கவே நிறைவேற்றப்பட்டுள்ளது….ஒவ்வொறு விசாவின் தகுதிக்கு இவ்வல்வு சம்பளம் நிர்னயம் அரசாங்கமே செய்துள்ளது….எஞ்சினீர் 6000 திர்கம் மேல்…டிப்ள்மோ-4000 டிர்ஹம் மேல்….என்று டெக்னிகள் கோர்ஸ்கு சம்பளம் நிர்னயம் அரசாங்கம் செய்து இருக்கிறது..இது லீஸ்ட் சால்ரியாக இது இருக்க வேண்டும் என்பது…ஆனால்..இங்கு இருக்கும் அரசியல் மக்கள் தொகை ஆளுமை ஆகியவற்றை உற்று நோக்கியே செயல்படுத்தவேண்டும்…அமீரகத்தில் மொத்தம் 8.3மில்லியன் மக்கள் வாழ்கிறார்கள் ஆனால் இந்த நாட்டின் குடிமக்கள் வெறுமனே 13% தான்….மற்றயவர்கள் 59% இந்தியா பாகிஸ்தான் பங்களாதேசிகள் தான்…..ஏனய ஆசியகண்டத்தை சேர்ந்தவர்கள் 16 சதவிகிதம் மிச்சம் இருப்பவர்கள் மேறகத்திய தேசத்தவர்கள்… இந்த நாட்டில் எழுதப்பட்ட சட்டம் சங்கம் கூடாது என்பது ஆனால் சங்கம் வைத்து பெறவேண்டிய உரிமைகளை அரசாங்கம் சட்டப்படி செய்து வைத்து இருக்கிறது….இங்கு விசாஅடிக்கும் போது ஒரு எஞ்சினீர்க்கு சூப்பர்வைசர் என்ற விசா கொடுப்பார்கள்…சரியான விசா வழங்கமாட்டார்கள்..அதுபோக…சரியான விசா வழங்கும் கம்பெனிகள விசா விண்ணப்பிக்கும் போது அரசாங்கம் சொன்ன தொகையை மேற்கோள் காட்டி தான் விண்ணப்பிப்பார்கள் ஆனால் வேலை கிடைத்தால் மட்டும் போதும் என்று கார்ப்ரேட் முதலாலிகள் தரும் சம்பளத்தை ஒத்துகொண்டு தான் நாம் அந்த ஆஃப்ர் கடிததில் கையெழுத்து போடுகின்றோம்…அது தான்முதல் தவறு….பின்பு ஏமாற்றீவிட்டனர் என்றூ நாம் கூறுவது ஏற்புடையது அல்ல…..
அதுபோக கார்பொரேட் கம்பெனிகள் தஙக்ள் பணியாளர்களீன் வங்கி கணக்கின் சம்பளபரிவர்த்தனைகள் சென்றல் வங்கிக்கு வந்து தான் செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார்கள்…ஏனென்றால் இந்த சம்பளம் சரியான் தேதிக்கு செல்கிறதா…இல்லை சரியான் அசம்பளம் கொடுக்கிறார்களா என்பதை அறீயவே….இதுவெள்ளாம் பொருளாதார நெருக்கடிக்கு பின் இங்கு பணி செய்பவர்கள் கோர்டில் கம்பெனிக்களுக்கு எதிராக தொடுத்தவழக்கின் சாரமாக அரசாங்கம் இந்த நடைமுறையை செயல் படுத்தி உள்ளது…..அதுபோக 12 மணிநேரம் வேலை செய்வது அவரவர்பெறக்கூடிய இன்செண்டிவ்ஸ்காக் செய்கிறார்கள் கட்டுமான் பணிகளுக்காக…ஆனால் 4 வருடஙக்ளுக்கு முன்பெல்லாம் இன்செண்டிவ்ஸ் தான் பெறும் சம்பளத்தை விட 2 மடங்கு அதிகம் ஆனால் தற்பொழுது நெருக்கடியினால் கம்பெனிகள் இந்த் ஊக்கத்தொகையினை சரிவர கொடுப்பதில்லை ஆனால் வேலை மட்டும் பாங்கிகொள்கின்றன….அதன் காரனமாக தான் இந்தப்பிரச்சனை…அதுபோக 5 ,6 வருடமாக செல்லவில்லை என்று கூறுவது அவர்க்ள் தரப்பு குற்றம் அல்ல பனியாளர்கள் அவ்வாறு இருக்கிறார்கள்….விசா ரினிவல் 3 ஆண்டுகல் என்றூ இருப்பதை 2 ஆண்டாக குறைத்துள்ளது அமீரக அரசு…எதற்கு பல கம்பெனிகள் எஞ்சினீர் தகுதிய்ல் இருப்பவர்கல் கூட 11/2 வருடத்திற்கு ஒருமுறை தான் விடுமுறை செல்ல வேண்டும் என்று பணிக்கின்றனர்…என் நிறுவனத்திலும் அது தான்…பல் நிறுவனங்கல் 1 வருடத்திற்கு ஒரு முறை என்று செல்லத்தான் செய்கின்றனர்…..இதை அரசாஙகம் எதுவும் கேட்காது….அரசஙக்த்திற்கு இஙு சம்பாதிப்பதை இங்கு சில்வு செய்யவேண்டும் அவ்வளவே…ஆனால் தொழிளாலர்கள் வரும் போதே கன்பெனிகல் 2 வாருடத்திற்கு ஒரு முறைதான் விடுப்பு என்றூ கூறீ அக்ரிமெண்ட் போட்டு விடுகின்றனர்…இது அரசாங்கத்தை மீறிய தனி நபர் ஒப்பந்தம் அதனால் தொழிளாலர்கள் இவ்வாறு 2 ஆண்டுகள் அதை தாண்டினால் 4 அல்லடு 6 ஆண்டுகல் வரைஇஙு இருக்கின்றனர்…என்க்கு தெரிந்த வரை பங்களாதேசிகளை தவிர்த்து வேறு எந்த தேசத்தவரும் இவ்வாறு இருப்பது இல்லை..நான் பணியில் இருந்த siteல் கூட சீனியர் டெக்னீசியன் 3 பங்காளிகல் இருக்கின்றனர்…அதில் ஒருவன் சென்று 6 வருடம் இன்னொருவன் சென்று 9 ஆண்டுகல் என்று கூறுகின்றான் இன்னொறுவர் இருக்கிறார் அவர் 2 வருடத்திற்கு ஒருமுறை சென்று வந்து விடுவார்….ஆனால் அவர்கள் விடுப்பு செல்லாத காலத்தில் அவர்க்ள் பணீ செய்தால் அவர்கள் விடுப்பு செல்லும் போது வழஙக வேண்டிய 2 மாத ஊதியம் கொடுத்துவிடுவார்க்ள் அக்காளங்கலில் பணீசெய்தால் சம்பளமும் வழங்கப்ப்டும் …
அது போக ஒரு சாதாரண தொழிளாலி சாலையில் செல்லும் பாட்ரோல் பொலிஸிடம் வாய்மொழி கம்ப்ளெய்ண்ட் கொடுத்தால் கூட பொலீஸார் வந்து ஹெச்.ஆர் டீமை விசாரித்து தவறூ இருப்பின் சரி செய்திட ஒப்புதல் பெற்றபின்னரே செல்வார்கள்….இது 2 வாரங்களூக்கு முன் நடந்தது…என் கம்பெனியில்….அதுவும் சின்ன பிரச்சனை…அவருடைய் எஞ்சினீயருக்கும் இவருக்கும் பிரச்சனை உடனே இவர் நான் கான்சலில் செல்ல விரும்புகிறேன் என்னை அனுப்பிவிடுங்கள் என்றூ HRரிடம் முறையிட்டார்,,,உடனே அவர் நீ உன் project managerரிடம் கேன்ஸல் கடிதம் கொடுத்துவிடு அவர் மூலம் எங்கலூக்கு வரும் நாங்கள் உன் விசாவை காண்சல் செய்து அனுப்பி விடுகிறோம் என்று..கூறினார்…ஆனால் அவர் இப்பொழுதே என்னை அனுப்பிவிடுங்கள் என்றூ கூறினார்….இல்லை என்றூ அவரை சமாதானப்ப்டுத்தி சைட்டுக்கு போக செய்தார்கள் …ஆனால் அவர் என்ன செய்தால் போலீஸ்கு போன் போட்டு போலீஸுடன் வந்து விட்டார்….ஆபீஸில் வது PRO HR எல்லோரையும் விசாரித்து அவரை மிரட்டினீர்கள் என்று கூறுகின்றார் அப்படி நடந்ததா என்று விசாரித்து அப்படி ஒன்றும் இல்லை இப்படி நடந்தது என்றூ விள்க்கி கூறினார்….உடனே அந்த காவலதிகாரி அந்த தொழிலாளியிடன் தன் அழைப்பேசி நம்பரை வழங்கி ஒரு மாதம் காலம் சொல்லி இருக்கிறார்கல் அதன் படி நடக்கவில்லைஎன்றால் என்னை அழைத்து விடு நான் பார்த்துக்கொள்கிறேன்….என்று கூறி சென்றார்….இப்படியும் தொழிளாலிகள் விழிப்புணர்வுடன் செயல் படாமல் இருக்கும் வரை இப்படி குறைகள் தான் இருக்கும்
இங்கு இருக்கும் மக்கள் தொகையில் விட இந்திய தீபகற்பத்தை சேர்ந்தவர்கல் தான் அதிகம் இவர் ஒன்று சேர்ந்து கிளர்ந்தால் அதை கட்டுப்படுத்தக்கூட அவர்களீடம் போலிஸார் இல்லை என்பது உண்மை அது இந்த் அரசாங்கத்திற்கு தெரியும் அதனால் தான் இங்கு யூனியன் அமைக்க தடை…..அப்படி இருந்தும் தொழிளாலர்கள் வருகையை அவர்க்ள் க்ட்டுபடுத்துவது இல்லை….ஒவ்வொறு பிரச்சனை வரவ்ர அதை தீர்த்துக்கொண்டே இருக்கீறார்கள்…..ஒது பிரிடிஸார் எழுதிகொடுதத் சட்டம் அதை ஒத்தே நடைமுறை அரசியல் செய்து கொண்டு இருக்கின்றனர்….இந்த் அமீரகத்தில் படித்தவர்கள் என்னிக்கையே இப்பொழுத்துதான் இந்த தலைமுறைதான் சில விகிதாசாரங்கள் கண்டு இருக்கின்றார்கள்…அதலால் தவறுகள் மெல்ல மெல்ல களையப்பட்டு இருக்க்றது….இது ஒரு செக்யூலர் இஸ்லாமிச் ஸ்டேட் என்பது தான் உண்மை நீங்கள் மேற்குறிப்பிட்ட ஆர்டிகள் அல் ஜசீராவில் வந்த பதிவில் க்டைசியில் போராடியவர்கள் போன்று வேலை செய்யும் தொழிளாலர்கள் பலர் இங்கு நாங்கள் பெரும் ஊதியஙக்ள் எஙக்ள் குடும்பத்துக்கு சந்தோசங்களையு வழத்தையும் கொடுக்கிறது என்று குறிப்பட்ட செய்தியை ஏன் மறைத்திர்ர்கள் என்று தெரியவில்லை….
பரவாஇல்லை…எப்படியும் சரி செய்ய வேண்டிய விடயங்கள் சரி செய்யப்படத்தானே வேண்டும்…அனைபோட்டு தடுத்தாலும் ….உணர்வுகள் வெடித்துக் கிளம்பத்தான் செய்யும்….
இன்னும் குறிப்பிர்ட வேண்டிய விடயம் ..இங்கு ஒரு கம்பெனி நம்மை ஏமாற்றியது என்றால் நாம் நம் தமிழ பேசக்கூடிய வழக்கறிஞர்கல் கூட இருக்கீறார்கள் வழக்கை நடத்தி நம் மீது நியாயம் இருந்தால் நம் சார்பாக தீர்ப்பு வழஙக்ப்படும்…என் நண்பர் ஒருவர் 8 மாதம் வழக்காடி தனக்கு வர வேண்இய 8 மாத சம்பள பாக்கி வழக்கு நடத்திய தொகை மற்றும் பாஸ்போர்ட் எல்லாவற்றையும் பெற்று சென்றால் அடுத்த் வாரம் வேறு ஒரு கம்பெனிக்கு அதைவிட நல்ல சம்பளம் ஃபாமிலி ஸ்டெடஸுடன் மனைவியையும் அழைத்து வந்து விட்டார்…..கம்பெனிகலுக்கு அபராதமும் black points கொடுத்து சிறப்பு சலுகைகளை அரசாஙக்ம் குறைக்கும்…பெரும்பாலும் தொழிலார்கள் இதை பற்றிய அறிவு இருப்பதில்லை அதனால் அவர்கள் பயந்தே வாழவேண்டிய சூழல்…அது போக இங்கு அமைப்புகள் தொழிளாலர்கள் நலன் சார்ந்த அமைப்புகல் இருக்கீறது…அவர்கலுக்காக் வழக்காட….அரசாங்கத்துறையில் முறையிட…தமிழ அமைப்புகளுக் இருக்கிண்ரது, மனித உரிமை அமைப்புகளும் இருக்கின்றது….ஆனால் இதில் பெரும் பின்னடைவு என்னவெண்றால் அனுகவேண்டிய நபர்களை பற்றீ தெரியாமல் இருக்கிறார்கள் தொழிளால்ர்கள் இந்தியாவைச் சேர்ந்த எமிரேட்ஸ் ஃப்ரட்டானிட்டி ஃபோரம் என்ற் அமைப்பு சமீபத்தில் பொத் மன்னிப்பு கால்ம் வழக்கியது…அபொழுது பல் தொழிலாளர்கள் overstay தான் அதிகம் இருப்பார்கள்….அவர்கள் ஆயிரமாயிரம் பேர்கள் எண்ணிக்கையில் தலைமறைவி வாழ்க்கை எப்படி போலீஸிடம் மாட்டாமல் இருக்கும் ப்லே கெட்டி காரர்கள் …அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி அதை அவர்களூக்கு கடவுசீட்டு வழங்கி நாட்டிற்கு திருப்பி அனுஇப்பும் நிகழ்வு நடந்தது…அதில் இந்தியாவை சேர்ந்த இந்த் அமைப்பு பெரும் பங்காற்றியது….தலைமறைவு வாழக்கை பல வருடம்…இருப்பார்கள் …..
நல்ல விடயஙகள் பல நடந்து இருக்கிறது….அது என்றூமே வெளிவராது..அது போக 12 ம்ணிநேரம் தொடச்சியாக வேலைஎல்லாம் கிடையாது சகோ…சும்மா அடிச்சு விடக்கூடாது…..இங்கு எல்லோர் கைகளீலும் கைப்பெசி இருக்கிறது…ஒரு போன் சென்றால் project manager , concern engineer, and safty engineer 3 பேரையும் தூக்கி சிறையில் அடைத்து விடுவார்கள்….
அதுவும் வெயில் காலங்கலில் காலை 7 மணிமுதல் மதியம் 12 வரை தான் அதன் பின்பு 3 முதல் 6 மணீ வரை தான்…இந்த நேரங்களில் ஹெலிகாப்ட்ரில் சுத்தி கூட ரோந்து செல்வார்கள்…மகனே எவனாவது சைட்ல மேல வொர்க் பன்னிட்டு இருந்தான்னா அவ்வளவு தான் …பெனால்டி மற்றூம் மேற்சொன்ன நபர்கள் கைது செய்யப்படுவார்கள்….
இதை நீஙகள் அறீவீர்களா என்று எனக்கு தெரியாது…இல்லை என்றால் இது உபயோகமாக இருக்கும்….
நான் சங்கம் வைப்பதை ஏற்கிறேன்…தொழிலாளிகளீன் உரிமைக்காக போராடுவதையும் ஏற்கிறேன்..இருப்பினும் இருக்கும் உரிமையை பயண் படுத்தாமல் வெறுமனே குற்றம் சாட்டுவதும் சரியல்லவே…..மேற்சொன்ன எல்லான்…என்னால் சொந்த அனுபவதில் பெறபட்ட செய்திகள்…..
ithu allaavin boomi alla. Dajjaalin boomi
ALLHVIN BOOMI SIVANIN BOOMI ENRELLAM NENGAL PAKUPADU KAATI ELUTALAMAA?
ARAPUKALIN BOOMI ENRU SOLVATHUTHAN SARI..NANTRI
இங்கே மதம் எங்கிருந்து வந்தது.
ஒரு நல்ல கருத்தை சொல்ல வரும் இடத்தில் ஏன் அதை ஒரு நம்பிக்கையோடு தொடர்புப்படுத்தி குழப்பத்தை உண்டுபன்னுகிரீர்கள்.
துபாயை பற்றி எழுதும் போது அல்லாஹ்வின் மண் என்ரெல்லாம் அவியல் வைப்பது எதற்க்காக? விளம்பரத்திர்க்காகவா?
நல்ல மனநிலையில் உள்ளவர்கள் மட்டும் கட்டுரை எழுதவும். கிடைச்ச சாக்குல குழப்பத்தை ஏற்ப்படுத்த விரும்புபவர்களை எல்லாம் இந்த இணையதளம் ஆதரிக்கக் கூடாது. இது வினவு இணையதளத்திர்க்க்கு எனது வேண்டுகோள்.
கடைசியாக சொல்லிக் கொள்கிறேன். முஸ்லிம் தொழிலாளர்களுக்கு உங்கள் அனுதாபம் தேவையே இல்லை. நீங்கள் அவர்களுக்கு ஒன்றும் செய்து கிழிக்கப் போவதுமில்லை.
காவி துண்டுக்கு மேல கறுப்புச் சட்டை போர்த்தியது போல் உள்ளது இந்த கட்டுரை.
வர்க்க போராட்டம் வர்ணசிரமம் மண்ணிற்கு வேண்டுமனால் பொருந்தும்
வர்க்க போராட்டம் இஸ்லாத்திற்கு பொருந்தாது
தமிழ் நாட்டில் கடவுள் இல்லை என்று சொல்லுபவந்தான் உண்டயல் குலுக்குவது,வசுல் வெட்டை செய்வது,ஆட்சி, அதிகாரத்தை பிடிப்பது,பொய், தில்லுமுல்லு அதிகமாக உள்ளது அதில் வினவு என்ன விதி விலக்க
Sathik,thats not true,Please dont live in Dubai and deny the reality.
You are not emiraati and if you have a developed country passport,your salary would be double.
harikumar, am not working doing business
pls don’t advise me am getting more
what’s your opinion working labour statement
sathik,
so what if you are making more money?
are those things reality or not?
these guys cant do anything in that place,it ll be brutally repressed.
Thats the only language these guys understand.