privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகாதல் – பாலியல்திவ்யாவை காப்பாற்றக் கோரி HRPC வழக்கு - நீதிமன்றம் உத்தரவு !

திவ்யாவை காப்பாற்றக் கோரி HRPC வழக்கு – நீதிமன்றம் உத்தரவு !

-

ளவரசன் மரணத்தை அடுத்து, திவ்யா மற்றும் இளவரசனின் உறவினர்களின் உரிமைகள் பாதுகாப்பதற்காக மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மூத்த வழக்கறிஞர் வைகை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் ஆஜரானார்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை 5-ம் தேதி பிற்பகல் நடைபெற்றது.

chennaihighcourt

பிரதான மனுவில், இளவரசன் மரணம் குறித்தும், திவ்யா மீது சாதிய வாதிகளின் ஆதிக்கம் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இதைத் தவிர இடைக்கால நிவாரணம் கோரி பின்வரும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.

1. திவ்யாவுக்கு உடனடியாக முறையான கவுன்சலிங், பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.  அவரது பாதுகாப்பு, நலவாழ்வு, மனித உரிமைகளை உறுதி செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

2. இளவரசனுடைய இறுதி நிகழ்வுகளில் திவ்யா பங்கேற்க விருப்பப்பட்டால் அதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து கொடுத்து, தகுந்த  பாதுகாப்பையும் வழங்குவதற்கு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

3. தருமபுரியில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடையுத்தரவின் காரணமாக இளவரசனுடைய உறவினர்களும், நண்பர்களும் அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது.

4. தமிழ்நாடு மனித உரிமை ஆணையம், திவ்யாவின் மீது செலுத்தப்பட்ட சாதீய அமைப்புகளின் தாக்கத்தை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

காலையில் வழக்கறிஞர் சங்கரசுப்பு சார்பில் தாக்கல் செய்த மனுவில், இளவரசன் உடலின் போஸ்ட்மார்ட்டத்தை காலையில் 7-9 மணிக்கே முடித்து விட்டதாகவும், அந்த அறிக்கையை தருவதாகவும், அதில் திருப்தி இல்லை என்றால் மறு பரிசோதனை செய்யலாம் என்றும் அது வரை உடலை பாதுகாத்து வைத்திருப்பதாகவும் அரசு தரப்பில் சொல்லப்பட்டது. அதை ஏற்றுக் கொண்டு உடலை செவ்வாய் கிழமை வரை அடக்கம் செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது.

திவ்யா-இளவரசன் காதலை முன் வைத்து ஏற்கனவே திவ்யாவின் தந்தை, இளவரசன் என்று 2 உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளன. திவ்யாவும் கௌரவக் கொலை செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இந்த உயிர்ப்பலியை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திவ்யாவை உடனடியாக அரசு பாதுகாப்பில் அழைத்து வந்து சென்னையில் பெண்கள் விடுதி ஒன்றில் தங்க வைத்து உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று வாதாடப்பட்டது.  அரசு அதிகாரிகளும், மன நல மருத்துவர்களும், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினரும்  திவ்யாவை சந்தித்து பேசுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது.

அரசுத் தரப்பில் அட்வகேட் ஜெனரல் அரசே அதிகாரியையும் மனநல மருத்துவரையும் அனுப்பி அறிக்கை சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.

அதை அடுத்து, இது குறித்து திவ்யாவின் விருப்பத்தை தெரிந்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அரசின் பொறுப்பான அதிகாரியை இதற்காக நியமித்து, அரசு மனநல மருத்துவருடன் அவர் திவ்யாவை சந்தித்து, அவருக்கு போதிய பாதுகாப்பு இருக்கிறதா, அச்சுறுத்தல்கள் எதுவும் இருக்கிறதா என்று விசாரிக்க வேண்டும். அவருக்கு மனநல கவுன்சலிங் வேண்டுமா, இது குறித்து பேசுவதற்கு நீதிமன்றத்தில் ஆஜராக விருப்பம் இருக்கிறதா என்றும் திவ்யாவிடம் கேட்டு திங்கள் கிழமை நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டனர்.

தகவல் : மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு