privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஇன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?

இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?

-

திருநெல்வேலி, கீழவல்லநாடு பகுதியில் இயங்கிவரும் இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் கடந்த அக்டோபர் 10-ம் தேதி கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.

இன்பென்ட் ஜீசஸ்
இன்பென்ட் ஜீசஸ் (படம் : நன்றி தினகரன்)

“பேனா பிடிக்க வேண்டிய வயதில் கத்தியைப் பிடித்த மாணவர்கள்”, “படிக்கின்ற வயதில் பாதை மாறிய மாணவர்களின் வெறிச்செயல்”, “”மாணவர்களின் ரவுடி அவதாரம்”, “தவறான நடத்தையால் சஸ்பென்ட் ஆன மாணவர்கள் வெட்டி சரித்த கோரம்” என  ஊடகங்கள் கவலைப்படுகின்ற்ன. தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று ஊர்வலம் போகின்றனர் பேராசிரியர் பெருமக்களும் கல்லூரி முதல்வர்களும்.

“மாணவர்களின் கொலையை சரியென்று வாதிடுகிறீர்களா?, மாணவர்கள் என்பதற்காக அவர்களுடைய பொறுக்கித் தனங்களையும் ஆதரிக்க வேண்டுமா?, பொண்ணுங்க பின்னாடி சுத்துறவனையும், அரிவாளும் கையுமாக அலைபவனையும், தறுதலைப் பிள்ளைகளையும் கண்டிப்பதும் தண்டிப்பதும் கூடாதா?, மாணவனை நல்வழிப்படுத்துகிற குருவாகத் திகழும் பேராசிரியர்களுக்கு அந்த உரிமை கூட இல்லையா” என்று நீங்கள் கேட்பது புரிகிறது. உண்மைதான், உங்களின் கேள்வி நியாயமானதுதான்.

உங்களிடம் உரிமையுடன் எதிர்க் கேள்வி ஒன்றை எழுப்புகிறோம், மன சாட்சியுடன் பரிசீலித்து பதில் சொல்லுங்கள்.

மாணவர்கள் ரவுடித்தனம் பண்ணுவதாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகின்ற பத்திரிக்கைகள், இன்ஃபென்ட் ஜீசஸ் போன்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும் கல்லூரி நிர்வாகங்களின் 420 வேலைகளைப் பற்றியும் என்றைக்காவது எழுதியிருக்கின்றனவா? இல்லை, இப்பொழுதாவது அது பற்றிய விவாதத்தைத்தான் கிளப்பியிருக்கின்றனவா?

மாறாக, மாணவர்களையே குற்றஞ் சுமத்தி மாணவர்கள் ரவுடித்தனம் செய்கிறார்கள், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும்; கல்லூரியிலேயே உளவியல் ஆலோசனை மையங்களைத் திறக்க வேண்டுமென்றும் அல்லவா அவை பரிந்துரைக்கின்றன.

தமிழகத்தில் இயங்கும் அனைத்துத் தனியார் பொறியியல் கல்லூரிகளும் மாணவர் சேர்க்கைத் தொடங்கி, பருவத்தேர்வுகளின் முடிவுகள் வரையில் தினுசு தினுசாக பிராடு, 420 வேலைகளை மேற் கொள்கின்றன என்பது ஊரறிந்த உண்மை. பணம் பண்ணுவதற்காக எதையும் செய்யத் துடிக்கும் வாழ்வியல் நெறியற்ற பிழைப்புவாதிகளாக, காரியவாதிகளாக, மாணவர்களையும் பெற்றார்களையும் அச்சுறுத்தும் மாஃபியாக் கூட்டமாக பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பரிணமித்து நிற்கையில், அக்கல்லூரியில் பயிலும் மாணவன் மட்டும் நல்லொழுக்கம் உடையவனாக, நாட்டுப் பற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது எங்கனம்?

“பாளையங்கோட்டை சிறைச் சாலையை விடக் கொடுமையானது எங்களின் கல்லூரி வாழ்க்கை” என்று புலம்பும் பொறியியல் கல்லூரி மாணவனின் குரலுக்கு நீங்கள் என்றைக்காவது செவி மடுத்திருக்கிறீர்களா? செம்மறியாட்டுக் கூட்டம் போல, வீட்டுக்கும் கல்லூரிக்கும் அன்றாடம் மேய்ச்சலுக்கு ஓட்டிப் போகப்படும் அந்த மாணவர்களை இடைமறித்து விசாரித்துப் பாருங்கள். தனியார் பொறியியல் கல்லூரிகளின் “ஸ்ட்ரிக்ட்” என்பதற்கான பொருள் விளங்கும்.

இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் சிலரை சந்தித்து சேகரித்த தகவல்களுள் சிலவற்றை கீழே தொகுத்து தருகிறாம். அதிலிருந்து கல்லூரி முதல்வரின் கொலைக்கு காரணமான  கல்லூரி மாணவர்களை குற்றவாளிகளாக்கியவர்கள் யார் என்பதையும் பகுத்துப் பாருங்கள்.

***

  • கல்லூரிக்குள் இரு சக்கர வாகன அனுமதி கிடையாது. கல்லூரிப் பேருந்தில்தான் பயணிக்க வண்டும். (அப்பதான கம்பெனி கல்லா கட்ட முடியும்!) கல்லூரிப் பேருந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் கால்மணி நேரம் தாமதமாக வந்தாலும், வருகைப் பதிவு உண்டு. வெளிப் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் கால் நொடி தாமதித்தாலும் அடையாள அட்டை பிடுங்கப்படும். மன்னிப்புக் கடிதம் எழுதி வகுப்பு ஆசிரியர், துறைத் தலைவரிடம் கையொப்பம் பெற்று வர வண்டும்.
  • மாணவர்களின் வருகைப் பதிவேடு, இன்டெர்னல் மதிப்பெண் போன்றவற்றை கல்லூரிகளிலிருந்து அண்ணாப் பல்கலைக்கழகம் கேட்கிறது. இர்ரெகுலர் மாணவர்களுக்கு ஹால் டிக்கட் கொடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறது.
    இதையே துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தும் தனியார் பொறியியல் கல்லூரிகள், காலதாமதமாக வந்தாரா, சக மாணவியுடன் பேசினாரா, வகுப்பு பேராசிரியரிடம் முறைத்தாரா, அசைன்மெண்ட் எழுதவில்லையா, எதுவானாலும் முதலில் பிடுங்கப்படுவது, மாணவரது அடையாள அட்டைதான். அடையாள அட்டை இல்லையெனில், வாசலில் காவலாளியால் தடுத்து நிறுத்தப்படுவார். அடையாள அட்டையில்லையெனில் வகுப்பறைக்குள் அமர்ந்திருந்தாலும் வருகைப் பதிவு கிடையாது.
    75% வருகைப்பதிவு இல்லையெனில் தேர்வெழுத இயலாது. 1% முதல் 5% வருகைப்பதிவு குறைவு எனில், அதற்கேற்ப ரூ 10,000 கொடு ரூ 20,000 கொடு என பிடுங்குவதும், அதற்கு மேலும் குறைந்தால் ஓராண்டு பீஸ் கட்டச் சொல்வதும் நடக்கிறது.
  • நோ டியூ ஃபார்ம் சமர்ப்பித்தால்தான் ஹால் டிக்கட் கிடைக்கும். பேராசியர்களை முறைத்துக் கொண்டால் கையெழுத்திட மாட்டார்கள். பலமணி நேர கெஞ்சல்களுக்குப் பிறகு மனமிறங்கி, தேர்வெழுத அரை மணி நேரம் முன்னதாக போனால் போகிறதென்று கையெழுத்திட்டு வழங்குவார்கள், பேராசிரியர் பெருமக்கள். தேர்வெழுதுவதற்கு முன்பாக ஹால் டிக்கட்தான் கொடுத்தாயிற்றே என்று கூறலாம். ஹால் டிக்கட் கிடைத்தது அல்ல இங்கே பிரச்சினை. “”நாளை நோ டியூ ஃபார்ம் இல் கையெழுத்திடுவார்களா? ஹால் டிக்கட் பெற முடியுமா? தேர்வு எழுத முடியுமா?” என்ற நிலையில் முந்தைய இரவு வரையில் அந்த மாணவனால் நிம்மதியாக படித்திருக்க இயலுமா?’, அந்த மாணவனை மன நோயாளியாக்கிய நிர்வாகத்தின் அணுகுமுறைதான் இங்கு பிரச்சினை! அந்த மாணவனின் மனநிலையிலிருந்து அணுகிப் பாருங்கள், இதன் கொடூரம் புரியும்.
  • கல்லூரியில் பாடம் நடத்தும் பொழுது ஆசிரியர் குறிப்பிடும் நோட்ஸ்களை உடனுக்குடன் தனது பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர் சொன்ன நோட்ஸ் அவனது நோட்டில் இல்லையென்றால், அவனது அடையாள அட்டை பிடுங்கப்படும். வருகைப் பதிவு இல்லை. பெற்றோரை அழைத்து வரவண்டும்.
  • அசைன்மெண்ட் எழுதவில்லையென்றால் வருகைப் பதிவு கிடையாது. அடையாள அட்டையை பிடுங்கிக் கொள்வது. அடையாள அட்டை இல்லையெனில் செக்கியூரிட்டி கல்லூரிக்குள் விடுவதில்லை. அடையாள அட்டை இல்லையெனில் வருகைப் பதிவு கிடையாது. டெஸ்க் மேல் ஏறச் சொல்வது. தரையில் அமர வைப்பது. பெற்றோரை அழைத்து வரவண்டும். அவர்களை அழைத்து வந்தாலும் அவர்களுக்கு மரியாதை இருக்காது. மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டும்.
  • ஆயிரக்கணக்கில் கட்டும் பணத்துக்கு முறையான ரசீது இல்லை.
  • மாணவனை பேராசிரியர் அடித்து விட்டதற்காக மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தியுள்ளனர், ஒரு துறையைச் சேர்ந்த மாணவர்கள். இதற்குத் தண்டனையாக அத்துறையைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் நன்னடத்தைச் சான்றிதழ், அவர்கள் அக்கல்லூரியில் படித்த ஆண்டுகளில் எழுதிக் கொடுத்த மன்னிப்புக் கடிதங்கள் பற்றிய விவரம், அரியர் பற்றின விவரங்களைப் பதிவு செய்து வழங்கியிருக்கிறது நிர்வாகம். அவர்கள் வழங்கிய அந்த நன்னடத்தைச் சான்றை வைத்துக்கொண்டு, நாக்குதான் வழிக்க இயலும். வேலை வாய்ப்பு வழங்கும் நிறுவனத்தில் நன்னடத்தைச் சான்று சமர்ப்பிக்கா விட்டால் வேலை கிடையாது. இதை என்னவென்று சொல்வது. மாணவர்களை நல்வழிப் படுத்தும் செயல் என்பதா? “என்னைப் பகைத்துக் கொண்டவன் நாசமாகப் போகட்டும்” என்ற சாபத்தின் வெளிப்பாடென்பதா?
  • மூன்றாமாண்டு மாணவர் ஒருவர் தனது துறைத்தலைவருக்கு பிறந்தநாளுக்கு சாக்லெட் கொடுத்ததற்காக இடைநீக்க தண்டனை. (அந்த சாக்லட்டுக்குள்ள என்ன விஷத்தையா வச்சுக் கொடுத்துட்டான்?) பெற்றோரை அழைத்து வந்து முதல்வரை சந்தித்து மன்னிப்புக் கோரியுள்ளனர். அதன் பிறகே வகுப்புக்குள் அந்த மாணவன் அனுமதிக்கப்பட்டான்.
  • மூன்று மணி தேர்வைக் கூட முழுமையாக எழுத விடாமல், இரண்டு மணி நேரம் முடிந்தவுடனேயே, அவன் எவ்வாறு தேர்வு எழுதியிருக்கிறான் என்பதை கண்காணித்து, சரியாக எழுதவில்லையெனில் அடையாள அட்டையை பிடுங்கி வைத்துக் கொண்டு, தேர்வு அறையை விட்டு துரத்தி விடுவது. தாள் ஒன்றுக்கு ரூ 50.00 கட்டி மறு தேர்வு கட்டாயம் எழுத வேண்டுமென்று நிர்ப்பந்தித்து, கல்லா கட்டுவது.
  • பொதுவில், தேர்வில் பாஸ் ஆனால் தேர்வுத்தாள் கையில் கொடுக்கப்படும். பெயில் எனில் தூக்கி வீசிறியெறியப்படும்.
  • டபுள் பாக்கெட் சட்டை போட்டு வரக்கூடாது. எம்பிராய்டரி இருக்கக் கூடாது. இது போல ஏகப்பட்ட கூடாதுகள்.
  • இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றுகின்றவர்களில் பலர், அதே கல்லூரியில் எம்.இ. படிக்கின்றனர். எம்.இ. முடித்தவர்கள்தான் விரிவுரையாளராக நியமிக்கப்பட வேண்டுமென்ற விதியை மீறியது மட்டுமன்றி, எம்.இ. வகுப்புகளுக்கு போகாமலேயே பி.இ. மாணவர்களுக்கு பாடம் நடத்தும் இந்த விரிவுரையாளர்களுக்கு முழு வருகைப் பதிவு வழங்குகிறது கல்லூரி நிர்வாகம்.
  • ஆய்வகத்தில் கூட குச்சியை வைத்துக்கொண்டு பாடம் நடத்துகிறாரார்களாம், பேராசிரியர் பெருமக்கள்.

“என்ன காரணத்துக்காகவோ, பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர சொல்லியிருக்கின்றனர். நிர்வாகத்துக்குப் பயந்து, என் ஃபிரண்ட், இரண்டு மாதமாக கல்லூரிக்கு வருவதில்லை. கல்லூரிக்கு செல்வதில்லை என்பது அவன் வீட்டிற்கு தெரியாது. வருகைப்பதிவு குறைந்து கடிதம் வீட்டிற்கு அனுப்பப்படும் பொழுதுதான் பிரச்சினை வீட்டுக்குத் தெரிய வரும். அப்பொழுது, ஒன்று அவன் ஆத்திரத்தில் யாரையேனும் குத்தி சாகடிக்க வேண்டும். அல்லது அவன் தூக்கிட்டு சாக வேண்டும். இதைத் தவிர வேறென்ன வழி இருக்கிறது, அவனிடம்” என இறுதியாக கேள்வி எழுப்பினார், அந்த மாணவர்.

இப்பொழுது சொல்லுங்கள்,

  • கல்லூரி மாணவர்களை குற்றவாளிகளாக்கியவர்கள் யார்?

– இளங்கதிர்.

  1. முற்றிலும் உண்மை

    இது இன்பான்ட் ஜீசஸ் கல்லூரியில் மட்டுமில்ல தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் இது தான் நடக்கிறது…..

    கல்வி என்பது வியாபாரம் ஆன பிறகு…..கட்டமைப்பு வசதிகள் மற்ற வசதிகள் இல்லாத போது அண்ணா பல்கலை கழகத்தில் இருந்து வருபவர்களை கவனிக்க!!!!

    பண பேய் பிடித்த முதலாளிகள் ஒழுக்கம் என்ற பெயரில் பண வேட்டை நடத்துகின்றனர்

    நான் படித்த கல்லூரியில் பருவத் தேர்வில் தோல்வி அடைந்தால் ரூபாய் 50 ம்
    மாதிரி தேர்வில் தோல்வி அடைந்தால் ரூபாய் 100 ம் அபராதம் செலுத்த வேண்டும் அது மட்டுமில்லாமல் தீபவாளி போன்ற பண்டிகை காலங்களில் பண்டிகைக்கு முன் அல்லது பின் வரும் நாட்களில் விடுமுறை எடுத்துக் கொண்டால் ஒரு நாளைக்கு 200 ரூபாய் அபராதம் கட்ட வேண்டும்

    ஆனால் அதற்காக மாணவர்கள் தகுந்த முறையில் மாணவர்களை ஒன்றித்து போராடலாம்

    ஆனால் (இன்ஃபென்ட் ஜீசஸ் கல்லூரி: கொலையின் பின்னணி என்ன ?)

    என்று இது தான் கொலைக்கு பின்னணி என்றால் 500 கல்லூரில் உள்ள ஒரு முதல்வரும் உயிரோட இருக்க முடியாது………..

  2. தங்கள் கேள்விகள் அனைத்தும் சிந்திக்க வைக்கின்றன.சீர்தூக்கி ஆராய்ந்து பார்த்து தான் யார் குற்றவாளி என்ற முடிவுக்கு வரவேண்டும்.எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மாணவர்களை விமர்சிப்பது தவறு என்று நான் இப்போது உணர்கிறேன்.யார் மீது தவறு இருந்தாலும் மதுவை ஒழிக்காமல் எந்த பிரட்சனையும் தீராது.

  3. தனியார் கல்விக்கொடுமைக்கு எதிரான கொலைதான் ஆனால் அந்த 3 மாணவர்களின் எதிர்காலமும் அவரது குடும்ப மேன்மையும் நிர்மூலமாகிவிட்டதை தியாகம் எனச் சொல்லலாமா?

  4. Till Now I worked in ….
    0.Aptech in Miladuturai,Kumbakonam
    1.St.Peters Engineering College, Chennai
    2,MGR Arts & Science College, Hosur
    3.SRM Arts & Science College, Chennai
    4.Radiant Software Ltd, Chennai
    5.Dr.R.K.Shanmugam College, Kallakurichi
    6.Bharathi Arts & Science College, Kallakurichi
    7.Mahendra Arts & Science College, Kalippati, Namakkal Dt
    8.Kodikanal Cristian college,Kodikanal
    9.Vivekanandha College of Arts and Sciences for Women, Elayampalayam,Namakal
    10.Digitrati-A IT finishing school, Adyar
    11.Vidhya Sagar Women’s College, Chengalpattu
    12.T.S Narayanaswamy College of Arts and Science, Navalur, Chennai
    13.Prof. Dhanapalan College of Arts and Science ,Kelambakkam

    [I worked one academic year for each and every college]

    Now

    I (K.Senthil kumaran) resigned my lovable job Asst professor after working 14 years as a teacher.The reason is very simple..

    All self financing colleges are behaving like a Share Market. All college owners are behaving like a share brokers and The Universities are working like Share market Regulates SEBI !!!

    More over education is no more service to society and it is a unethical Business in Tamil Nadu. I am planning to go for any other physical or mind job except Teaching!!!

    Now My only little bit pain in my heart is …..

    ” I did not create a chance for working in south Tamil Nadu districts! like Tirunelveli,nagarkovil,siva ganga, and virudunagar and kanyakumari). I really missed my people”

    with regards,
    K.Senthil Kumaran

      • Dear Raman Sir,

        I am very much Thankful for u r advice.

        Recent Days, The Education system is a Unethical Business. If at least Education is a business then I can be happy.In a business we should follow some rules and standards for the services provided by the business.

        But What about education system in Tamil Nadu?…….

        It is a general opinion in this society that a Teacher knows only Teaching and a Teacher is not fit for any thing other than teaching.

        But I Know and I can get a job on…..

        1] Since I am good in preparing Chicken related foods,Parota and other foods so I will become a Cook [I am good in chettynadu style of foods]

        2] Since I am good in Java Technology I can be a S/w Engineer if i need

        3] Since I Know house keeping and baby care so I can care my new born baby S.V Sivakarthikeyan while his mom is in office.

        4] Since I know about Fundamental Analysis and Technical analysis very well using computer s/w for share market so I can be a Share Market consultant

        5. Since I am good in communication and interpersonal skills So I can be a Marketing Executive and sell products or concepts and earn More money

        7] This list is not limited…. As a man we can do any Job in this world ,Which is good for the society and me.

        This Teaching Job is the most lovable job for me. So I keep my days so far in teaching. But since I know other works and skills , so I need not worry about getting a new job

        With Regards,
        K.Senthil Kumaran

          • Friend,
            Thanks for your advice

            [1]Since I can do project using Java,Servlets, JSP,EJP,Struts,Hibernate,Springs and Ajax and scripting , so I tell u I can become a Java programmer.

            [2]One of my hobbies is writing java programs!!!!!.

            [3] Since I am helping my old students to upgrade Java Technology who r in ITES , I Confident about my skills

            with regards,
            K.Senthilkumaran

  5. Sir,

    All the reasons given as the reason for a student to stray is simply humbug. I have also studies in a private engineering college, few years back, and have faced all the above strict rules. But no one in my batch or seniors have indulged in such atrocities of killing a principal. Nowadays youngsters do not think about the consequence of their actions. If the start doing it, such incidents will not occur.

    This incident is solely the fault of the indisciplined students and the rules of the collge has nothing to do with it.

    • //and the rules of the collge has nothing to do with it.//

      everyone dont rebel. just one or two. explosion does not happen in all volcanoes. just one or two.

      how can u be sure that rules of the college has NOTHING to do with it?

      do all of us react in a same manner towards everything? no. right?

      fine, now you tell me, what could have been the reason for those students unlawful activity?

      is the principal their pangaalis?

      kadan vaanginaara?

      soththai pangu podavillaiya?

      ada… avar ponnu thara maattennu sollitaara?

      ennathaan kaaranama irukka mudiyum?

  6. அந்த கல்லூரி மாணவர்களின் நிலை மட்டும் அல்லாமல், ஆசிரியர்களின் நிலையம் மோசம் தான்.
    கட்டிடங்கள் கட்டுவதற்கும் கல்லூரி விளம்பரத்திற்கும் கோடிகளை செலவு செய்யும் நிர்வாகம் ஆசிரியர்களுக்கு எப்போதும் மூன்று நான்கு மாத சம்பளம் பாக்கி வைக்கிறது.

    மாணவர்களுக்கு ஹால் டிக்கட் மிரட்டல் என்றால் ஆசிரியர்களுக்கு அவர்களின் டிகிரி சர்டிபிகட் மிரட்டல்கள் உண்டு.

    இந்த கல்லூரியில் ஆட்சி சர்வாதிகார ஆட்சி தான். அனைத்து நிலைகளிலும் மேனேஜ்மண்ட் தான் ஆதிக்கம் செலுத்துகிறது. கல்லூரி முதல்வர் உட்பட அனைவரும் மேனேஜ்மண்ட்டுக்கு அடிமை தான்.

    பணம் – இந்த வார்த்தையை தவிர அவர்களுக்கு வேறொன்றும் தெரியாது. அதற்காக பல சிக்கன நடவடிக்கைகளும் உண்டு. கல்லூரிக்கு தேவைக்கு அதிகம் விடுமுறை விடுவது, மெயின் பொத்தானை அனைத்து மாணவர்களை வெயிலில் வேக வைப்பது போன்றவை சில உதாரணங்கள்.

    மாணவர்கள்/பெற்றோர்கள் நியாயம் கேட்க்க ஏதாவது ஏற்பாடு செய்யப்படாவிட்டால் பல கொலைகளையும் தற்கொலைகளையும் தமிழகம் சந்திக்கும் விபரீதம் ஏற்பட்டுவிடும்.

    மாணவர்களுக்கு அதீத மனஅழுத்தத்தை கொடுக்கும் இத்தகைய கல்வி முறை மாறாவிட்டால் அது சைக்கோவாக / மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக மாணவர்களை எதிர்கால இந்தியாவை மாற்றிவிடும்.

    கண்டு கொள்வார்களா?

  7. உன்னய மாதிரி ஒரு அறிவாளிய பாக்கவே முடியாது…. எல்லா இடத்துலேயும் பிரச்சனை இருக்கும்… அவன் துட்டு புடுங்குறான்னா அங்கே ஏன் போய் நக்கற?? ஆயிரம் பேர் படிக்கும் இடத்துல இந்த மூணு தே. பசங்களுக்கு ஏன் காலேஜ் தண்டனை தரனும்??? முதல்ல உன்னய மாதிரி காலி சட்டியெல்லாம் வெட்டிப்போடனும்….

    • //முதல்ல உன்னய மாதிரி காலி சட்டியெல்லாம் வெட்டிப்போடனும்….//

      Hello sudesi,

      u know what is the punishment for u in our Indian constitution for inducing the crime of killing others ?

      with regards,
      K.Senthilkumran

  8. Dear Vinavu,
    This Topic is incomplete!!!
    We need to analysis in a detailed manner!!!

    There are three important entities in a college

    [1] Management
    [2] Students
    [3] Teacher

    The relationship between them and the way of interaction between them need to be analysed!!!

    with regards,
    K.Senthilkumaran

  9. உனர்ஷிவசபட்டு தன்னிலை மரந்து சரியான முடிவு எடுகமுடியாத 22 வயது இலைஙன் செய்யும் தவரை தன்டிப்பதர்க்கு சட்டதில் இடம் உன்டு,
    ஆனால்
    கல்வி அரிவில் ,சமுக அரிவில் எல்லா தலதிலும் சிரந்து விலஙகும் கல்லுரி முத்ல்வர்கல் முதலாலிகல் சிந்திது செயல்படுதும் தவரை தன்டிபதர்கு சட்டதில் இடமும் இல்லை தன்டிபதர்கு அதிகாரிகலும் இல்லை …

  10. I think a fully impartial investigation by a Commission of Inquiry is a must. Only then justice would be possible. It is unfair to form any opinion without knowing what actually happened. Only an Independent Investigation by a Commision can reveal the truth.

  11. Dear Sir,
    My Name is David
    Civil Engineering 2nd, year,
    Channai.

    Nengal kuruvthu 100%, Unmai engineering collage sernthu vitalea nangal oaru adimaikkalaga nadatha paduhenrom.

    Sir nan TamilVakupo Padithavan Ennaku Sariyaaga English Varathu Nan Solluvathai Thayavo kornthu MEthu vaga Vasithu Parungal..

    nangal 18 vayathu valibargal engalai oru pallikudam polla nadathu henrarkal nangal ethavathu thavaru seithal athai engalitam muthalil solli poriya vaikka vendum apadi illaiyenral ammaa,appa vitam sollam But ipad Ingu nada pathellai,muthalil Ammaa,Appa ta solliya pinpu than engalugea thagaval varu henrathu, yengal Petroritamavathu mariyathai udan natapargal enral avarkkal Engalai oru Kotra valiku parinthurai seiya vantha vakilai par pathu polla kandu kolluvathellai Nangal apadi oonrum periya thavaru seithuruga maatom Record Note Late aavacherupom, apadi illty Clg Leave podurupom, (OR)Clg ku Konjam late aavanthuru pom . Icolo than nanga Paniru pom Athu ku avnga Engalai 3Days aavathu enga Ammaa,appaa va Clg ku alaya vachiru vanga Sir,
    Athu polla students nu engalai Silla Nerangalla Mathe pathe illa nga
    Nanga Indians Athulaum tamilans Engala kelthanamathan Engineeeing Clg la Natathuranga Sir,
    Engala Valipanu Yarum Pakurathu illa Namakku Ivan Oru adimai Namitam Kathuga Vantha vanuku Enna mariyathai koduganum nu avanga nenaipo,
    **
    ennota 12th Mark =957 Tamil Medyum
    Engaluku katru kodu pavargal Friendly ya Pallagu na Pesu na Thapillayea Sir, nagalum 4Years kaliche Oru Engineer Thanea Engaluku Oru Friend pola Padam Solli Thantha ennavam Sir
    Ithu Pola Inum Palla Koraikkal ullana Sir Oru Manavan Collage ku Padikanum Valkaila Setil Aaganumnuthan Varu van Sir Yarukum Adimai padu than Collage Padikka Vendum Enral Ithu Polla Manavanai Kollaikaranaga matara Engineering Collage Vali vakkum,
    NANKKAL PALLA KANVODU PADIKKA VANTHULOM sir ANNAL ENGINEERING COLLAGE VANTHA PIRAKU INTHA KODUMAIKKALAI YARITAM SOLLA VENRUTHARIYAMAL OVORU NALLUM YENNIKONDU VARUKENROM.

  12. KORIPO;
    Nangal Padikkathan Vanthulom Engaluku Vanmorai KAiyala Theriyathu Antha Soolnelaiyai Oruvaku Pavargal Engineering kalluri Principle Madum Than
    Staff Aium engalitan Natpakka palaga vidamal Matru kenrargal,
    Principle a Parthalea Students Nanga Payabadunumam apadi NAnga Avangala Parthu Baynthu Odurathu la Yenna Arutham Iruku YEnra thriya villaiga Ithu polla enga Manasula Volla tha Soli allakoda Ammaa,Appaata Modiyallaga Emmna Nanga Virupa padu Edutha Courcse Ithu athu nalla enga Ammmaa,Appaa taum naga Solla mudiyama irukorom

  13. தனியார் கொள்ளைக் கல்லூரிகளில் வெளிமாநில மாணவர்களை சேர்த்துவிட்டால் நிர்வாகம் கமிசன் தருகிறது..சீனியர் மாணவர்களில் பலர் லட்சக்கணக்கில் கமிஷன் சம்பாதிக்கின்றனர். இதனால் இந்த ஆள்சேர்க்கை தரகு வேலையில் போட்டி உருவாகி இதுவரை 3 கொலைகள் நடந்துள்ளன..வெளிமாநிலங்களில் இருந்து மார்க் குறைவாக இருந்தாலும் லட்சங்களைத் தந்தால் எவரையும் சுய நிதி, நிகர்நிலை நிறுவனங்கள் சேர்த்துக்கொள்கின்றன. தஞ்சையை ஒட்டியுள்ள அந்த நிகர்நிலைப் பல்கலைக்கு 5 ஆண்டுகளுக்கு முன் தன் மகளைச் சேர்க்க ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து அந்த அப்பா வந்திருந்தார்…அவரிடம் ட்யூசன் பீஸ், ஆஸ்டல் பீஸ், டொனேசன் என ஒட்டாகக் கறந்துவிட்டனர்..ஊருக்கு திரும்பிச் செல்ல மட்டுமே அவரிடம் பணம் இருந்தது..அப்பாடா தப்பிச்சிரலாம் எனக் கிளம்பியவரை ஆபீஸ் ஸ்டாப் மறித்தார்…’சார்…விடுதலை ஆயுள் சந்தா கட்டாமப் போறீங்க’…இவர் எவ்வளவோ சொல்லியும் எடுபடவில்லை…ஆயுள் சந்தாவுக்கு பதிலாக ஆண்டுசந்தா மட்டும் கட்டிவிட்டு கடன் வாங்கித்தான் ஜார்க்கண்ட் திரும்பினார்…பின்குறிப்பு: விடுதலை தமிழில் நடத்தப்படும் தினசரி..சந்தா கட்டுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டவர்: ஜார்க்கண்ட் வாசி…இந்த கொள்ளையை நடத்தியது: கி.வீரமணியின் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

  14. தங்கள் பதிவுகள் ஒரு உணர்ச்சி மிகுந்த பதின்வயது இளம் மாணவனது குரலாக ஒலிக்கிறது.ஒரு பொறுப்பு மிக்க தந்தை அல்லது கடமை உணர்வுள்ள பேராசிரியர் என்ற முறையில் நான் அக்கல்லூரியின் போக்கில் குறைகாண இயலவில்லை!நேரத்தோடு கல்லூரிக்குச் செல்வதும் ஒரு சாதாரணத் தேர்வில் வெல்வதும் கூட முடியாத மாணவன் பொறியியல் படிக்கத் தகுதி இல்லாதவன் என்பது என் தாழ்மையான கருத்து!

    • Sir,
      Nega Sollurathu Nan Ethu kolgiren Late aa Clg Povathu Thennamom Alla Enravathu Oru nall than,
      Mrg:8.30 Clg Aramikum Eve 4p.m Modium Ithula saturday Thotarnthu 7Weeks Clg Sir,Padikka kodiya Arvatha Ipadi L.K.G,U,K,G Scl Polla Nadathuna Epadiga Engaluku Padiga Thonum,
      Itha Vidung Sir,Oru Nall Late aa Clg POnna Kuda parents a Kopita Sonna Apa Naga padikurathu Scl aa Sir Nan Oru Engineering Stundent Sir NEga Sonna Nanga Ketga Matoma Ethuku Enga parents a Intha satharana Visayathuku Alaya viduringa Vidula Ipad Nega Panurathu Vidula Engala Nambi Oru Vilaium Solla Madukkanga Vidula Enna MAthega MAdukkanga Nan Etha Vathu Pesuna(Some Time Only)Ne engala Clg Kottidu Poei Asinga paduthunathu Pothum Pa engala thayavo seithu Nematheya vidu nu enta kaiyeduthu Kompuduranga
      Nan Apad onnum Thapu Seiyala Sir, ORu nall Clg late a ponen ipad than ennaku nadanthathu,
      negalea solluga Sir nega Clgku Ennaikathu Oru Nallaikathu Late poeirukkamala Irupinga Annaiku ungaluku Pement Cut nu Sonna Ungluku Kobam varum la Antha Mathiri than ennaku Irukuthu Sir,
      NAN Engineering Padiga Thakuthe illa thavan than Oru Stundent aathuvom Engineering Stundent orupakkurathukuthan Unga luku Vilai Sir atha Oru Friendly Sonna ,Subjects Poriyata Poriura Matheri Tamil a Solli Kodunga Athugaporam nan Pass Pannata Engineering na Padigga Maten Sir,
      ennota 12th Mark =957 Tamil Medyum , Summava Sir eduthuruken nanum Padichen teachers Poriya vachathunallathan Padichen
      athukga Nan Edutha Mark Than Bestnu Solla vrala Nan Padikura Paiyanthan Ennala Modium Engineering Clg la Ennala Steps Eduthu Vaikka Sariya Na AAlosagar Illa Ennaku.
      But 3yearsla Nan Engineering Mudichathum Nan Nalla Varuven Sir,ungata NEraya Pesu Ven Mail ID Matherathenga

    • உன்மைதான். ஹால் டிக்கெட் தராமல் இழுத்தடித்து மனவுளைச்சல் கொடுப்பது, தேர்வின் பாதியில் எழுதவிடாமல வெளியேற்றுவது, இன்டெர்னல் மதிப்பெண், நற்சான்று போன்றவற்றை வைத்து மாணவனை மிரட்டுவது, கல்லூரிக்கு கல்லூரி பேருந்தில் வந்தால் மட்டுமே வருகைப்பதிவின் சட்டத்தை தளர்த்துவது – இதையெல்லாம் வளர்ந்த முதிர்ந்த அனுபவமிக்க பெரியவர்களால் நடத்தப்படும் கல்லூரிகளில் வேலை செய்பவர்களால் மாணவர்மீது கட்டவிழ்க்கும்போது அதை எதிர்த்து உங்களின் தாழ்மையான கருத்து என்ன என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது….

      //பணம் பண்ணுவதற்காக எதையும் செய்யத் துடிக்கும் வாழ்வியல் நெறியற்ற பிழைப்புவாதிகளாக, காரியவாதிகளாக, மாணவர்களையும் பெற்றார்களையும் அச்சுறுத்தும் மாஃபியாக் கூட்டமாக பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பரிணமித்து நிற்கையில், அக்கல்லூரியில் பயிலும் மாணவன் மட்டும் நல்லொழுக்கம் உடையவனாக, நாட்டுப் பற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது எங்கனம்?// – இதற்கும் தங்களுடைய தாழ்மையான கருத்தை எதிர்பார்க்கிறேன்.

    • //தங்கள் பதிவுகள் ஒரு உணர்ச்சி மிகுந்த பதின்வயது இளம் மாணவனது குரலாக ஒலிக்கிறது.ஒரு பொறுப்பு மிக்க தந்தை அல்லது கடமை உணர்வுள்ள பேராசிரியர் என்ற முறையில் நான் அக்கல்லூரியின் போக்கில் குறைகாண இயலவில்லை!நேரத்தோடு கல்லூரிக்குச் செல்வதும் ஒரு சாதாரணத் தேர்வில் வெல்வதும் கூட முடியாத மாணவன் பொறியியல் படிக்கத் தகுதி இல்லாதவன் என்பது என் தாழ்மையான கருத்து!//

      உங்கள் கருத்தை படிக்கும் போது எனக்கும் ஒன்று தோணுகிறது. தொடர்ந்து மன உளைச்சலை கொடுக்கும் பேராசிரியர்களை நியாயமாக எதிர்க்க இயலாத காரணத்தால்(எதிர்ப்பு தெரிவித்தால் கல்லூரியை விட்டு நீக்கி விடுவீர்கள், அல்லது இன்டர்நல் மார்க் கை கொண்டு மிரட்டுவீர்கள்), அரிவாளை எடுத்து கொலை செய்த மாணவர்களின் போக்கு சரியாகத்தான் தெரிகிறது.

  15. each and every matter is true… i am 2012 pass out, same colg.. this murder should happen earlier but small delay, its ok.. now we all are happy.. surely we will help that 3 studs..

  16. கல்வியும் காசு பறிக்கும் தொழிலாக மாற்றப்பட்டுவிட்டதால்.இத்தகைய கொடுமைகள்.தனியார்மயமும் தாராளமயமும்தான் காரணம். இதை ஒழிக்காமல் எதையும் ஒழிக்க முடியாது. தனித்தனியாக எந்தப் பேராட்டம் நடத்தினாலும் வெற்றி கிடைப்பது கானல் நீரே…….

  17. இது நடந்ததுக்கு காரனம் காவல் துரை … கஞ்ஜா … விற்பதுக்கு துனை ……. so we cannot avoid this type of murder … since all the drugs sold with help of police … these murder happened due to only drugs….

  18. ம்ம்.. வினவுக்கு இதன் காரணத்தை ஆராய 5 முழு நாட்கள் தேவைப்பட்டுள்ளது.. பரவாயில்லை. ஆனாலும் கட்டுரை எழுதப்பட்டுள்ள விதத்தில் சுயவிமர்சனமே இல்லையே..
    அந்த மாணவர்களை ’எதிரியை பழிக்கு பழி வாங்குவது’ என்ற தனிநபர் தீர்வுக்கு இட்டு சென்றதன் காரணிகளை ஆராயாமல் இந்த கட்டுரை எப்படி முழுமையடையும்?
    முற்போக்கு-ஜனநாயக -புரட்சிகர இயக்க்கங்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் அமைப்புகள் தனியார் சுயநிதிக்கல்லூரிகளின் சட்டவிரோத சமூகவிரோத மானிட விரோத செயல்பாடுகளை கண்டித்து இயக்கம் எடுக்கவோ அதன் மூலம் இம்மாணவர்களை வர்க்க உணர்வுடன் அணிதிரட்டவோ, இப்பொறியியல் கல்லூரிகளில் தன் பிள்ளைகளுக்கு அட்மிஷன் வாங்கும் போதே சுய மரியாதையையும், பல வருட உழைப்பில் சேர்த்த பணத்தையும் சேர்த்து அடகு வைக்கும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவோ, தனியார் பொறியியல் கல்லூரிகளின் 420 வேலைகளுக்கு ஒத்தூதி அதன் வழி கல்லா கட்டும் அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு அப்பல்கலைக்கழகத்தை அடைத்து மூடவோ இதுவரை ஒரு போஸ்டர் கூடப் போடாமல் இருந்ததற்கு ஏன் சுயவிமர்சனம் ஏற்கவில்லை. 2006 லிருந்து இத்தகைய கல்லூரிகள் வருங்கால தலைமுறையை காயடிப்பது பற்றியும் இதன் சட்டவிரோத செயல்பாடுகளுக்கான அடித்தளத்தைப்பற்றியும் விரிவாக பல கட்டுரைகளை புஜ-புக-வினவு வில் வெளியிட்டும் இதன் தோழமை அமைப்புகள் உயர்கல்வி தனியார்மயமாக்கத்திற்கெதிராக எந்த ஒரு இயக்கமும் எடுக்காமல் வாளாவிருந்து மாணவர்கள் தனக்கென போராடத் தளமின்றி இப்படி தனிநபர் தீர்வை நோக்கி தள்ளிவிட்டதில் தமக்குள்ள பங்கை இப்போதாவது சுயவிமர்சனத்துடன் ஏற்றுக்கொண்டு மேற்கொண்டு காலந்தாழ்த்தாமல் (ஆறின கஞ்சி பழங்கஞ்சி) பரந்துபட்ட இயக்கத்தை எடுப்பீர்களா?

  19. இந்த கட்டுரையில் மட்டும் ஏன் வினவு “க்ரித்துவ அடக்குமுறை” என்று கூவவில்லை? இதுவே இந்து கல்லூரியாக இருந்தால் “பார்ப்பனிய இந்து மத அடக்குமுறை” என்று கூவி இருப்பீர்களே?

  20. கல்விக்கூடங்கள் கலைக்கூடங்களாக இருப்பின் மாணவர்கள் நாளைய மன்னர்களாக வருவார்கள்! கல்விக்கூடங்கள் கொள்ளையர்களின்கூடங்களாக அல்லவாஇருக்கின்றன! கல்வியின் தரம் வளர இல்லை! கல்விக்கூடங்கள் மட்டுமே அடுக்கடுக்காக வளர்கின்றன!யாருடைய தொகை? பெற்றோர்களின் வருமானம் கல்விக்கூடங்களின் அடுக்குமாடிக்கட்டிடங்கள்வளரப் பயன்படுத்தப் படுகின்றன என்பதே இன்றைய நிலை! நெறிப்படுத்த வேண்டிய மாணவர்களை வெறியர்களாக மாற்றுவதே பெரும்பாலும் இன்றைய கல்விச்சூழலும் கூடங்களும் தானே! கத்தி, அரிவாள், வெடிகுண்டு இவைகள் மாணவர்களிடம் இருக்கின்றன எனில்கல்லூரி நடத்தும் முதல்வர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் ஆகியோருக்குத் தெரியாமல் போனது ஏன்?

  21. தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி காசு பார்ப்பதற்காக தொழிலாளர்கள் மீது கெடுபிடி செலுத்தும் அதிகாரிகளை வைத்துக் கொள்கிறான் முதலாளி. முதலாளியின் கடைக்கண் பார்வை கிடைத்தால் பதவி உயர்வு – ஊதிய உயர்வு கிடைக்கும் என்பதால் அதிகாரிகள் முதலாளிகளுக்கு காவடி தூக்குகிறார்கள். அதே போலத்தான் மாணவர்கள் மீது கெடுபிடி செலுத்தும் ஆசிரியர்கள் – ஊழியர்களை வைத்துள்ளான் கல்லூரி முதலாளி். இங்கேயும் பதவி உயர்வு (பெரும்பாலும் இருக்கிற பதவியை தக்க வைத்துக்கொள்வதற்கும்) – ஊதிய உயர்வு கிடைக்கும் என்பதற்காக ஆசிரியர்களும் – ஊழியர்களும் கல்வி முதலாளிக்கு காவடி தூக்குகிறார்கள். இவ்விரு இடங்களிலும் சிக்கி தவிப்பவர்கள் தொழிலாளர்களும் – மாணவர்களும்தான். அதனால்தான் விரத்தியின் எல்லைக்கு தள்ளப்படுகிற தொழிலாளர்களும் மாணவர்களும் அதிகாரிகளை – ஆசிரியர்களை தாக்குகிறார்கள். இவை எல்லாம் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் எதிர்வினைகள். முதலாளித்தவ பயங்கரவாதம் நீடிக்கும் வரை எதிர்வினைகளும் நீடிக்கவே செய்யும். முதலாளித்துவ லாபவெறிகை்கு முடிவு கட்டாமல் உளவியல் வகுப்புகளாலும் அறநெறி போதனைகளாலும் இதுபோன்ற எதிர் வினைகளை முடிவுக்கு கொண்டு வர நினைப்பது வெறும் கானல் நீரே!

  22. tamilnatil 90% engineering kalurigal epadithan ulana ethai arasangam kavanathil kondu nalla thirvu edukavital manavargalin tharkolaigal athikarikum………orunalaiku ethanaio manavargal tharkolai seithukolkirargal athu ellam nam kangaluku therivathu ilai

  23. I’m a former student of Infant Jesus College.. nd even for me it happen all these things.. they wont give proper Bill for wat we pay the college fee… nd instead of killing principal.. ever y one should kill the Chairman… then only the principal’ll realise… i’ve to say thanks to my lecturer.. who gives support during my studies… but after i left the college… every thing changes… suddenly… its all bcos of the chairman nd their two sons…

  24. //மாணவர்கள் ரவுடித்தனம் பண்ணுவதாக பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகின்ற பத்திரிக்கைகள், இன்ஃபென்ட் ஜீசஸ் போன்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் பற்றியும் கல்லூரி நிர்வாகங்களின் 420 வேலைகளைப் பற்றியும் என்றைக்காவது எழுதியிருக்கின்றனவா? இல்லை, இப்பொழுதாவது அது பற்றிய விவாதத்தைத்தான் கிளப்பியிருக்கின்றனவா?//

    அந்த கருமத்த எழுதினா எந்த ‘கல்வி தந்தை’ய விளம்பரம் குடுப்பானுவோ?

  25. கல்வியை தனியாரிடம் இருந்து பறித்து பொது(அரசு)உடமை ஆக்கா விடில் இதை போன்ற காரணங்களும் ,மாணவர்களின் தற்கொலைகளும் ,கொலைகளும் தொடர்கதையாகிவிடும்

  26. Dear vinavu,
    This is one of the finest classic article about the students problem.
    Very rare to see these type of articles in main stream.
    We can simplify the things as below…

    There is a huge gap between learning and implementing the learned things.
    There is no PRACTICAL ethical practices preached by institutions.
    Example; Do not cheat others, do not pay bribe, do not betray the country or people etc .
    (No wonder , private institutions are silent about the word ETHICS itself.because they cannot teach abt ethics )
    Education, health care, natural resources are not to be maintained or owned by private sultanates.these are NATIONAL TREASURES.

  27. கொன்னவன் SC என்கிற காரணத்துல இப்படி எழுதி இருக்க. செத்தவன் SC யா இருந்தா வேற மாதிரி எழுதி இருப்ப.

  28. நான் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்சிடியூட் ஆப் டெக்னாலஜி(SRIT) மற்றும் பார்க் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி (PCET) ஆகிய கல்லூரிகளில் விரிவுரையாளராக பணியாற்றி உள்ளேன். அங்கு விரிவுரையாளராக பணியாற்ற எனது சான்றிதள்களை அடகு வைத்த பின்னரே பணிநியமன சான்றிதள்களை வழங்கினர். அங்கு முனைவர் பட்டத்துக்காக பயிலும் ஆசிரியர்கள் அதற்காக அந்த கல்லூரி நிர்வாகத்திடம் விண்ணப்பிக்கும் பொழுது அவர்கள் 5 ஆண்டு ஒப்பந்த பத்திரம் செய்தபிறகே அனுமதி வழங்குகிறார்கள், அதாவது அந்த ஒப்பந்தம் என்ன வென்றால் முனைவர் படிப்பை முடித்த பின் அந்த கல்லூரிக்காக 5 ஆண்டுகள் அவர்கள் கொடுக்கும் சம்பளத்தில் (எந்த ஊதிய, பதவி உயர்வும் இல்லாமல்) வேலைசெய்யவேண்டும் என்பதுதான். அதாவது முனைவர் படிப்பு 5 ஆண்டுகள் ஒப்பந்தம் 5 ஆண்டுகள் ஆக 10 ஆண்டுகள் எங்கள் வாழ்வையும், உழைப்பையும் அடமானம் வைக்கவேண்டும். ஒப்பந்தத்தை நீக்க 1.5 லட்சம் தண்டம் செலுத்தவேண்டும். சம்பளமும் அண்ணா பல்கலைகழகத்தின் பரிந்துரையின் படி கொடுப்பதில்லை, விரிவுரையாளர் பணியை தவிர அவர்கள் கல்லூரிக்காக அதிக நேரம் அதாவது பல நாள்களில் 12 மணிநேரத்திற்கும் மேலாக உழைக்க வேண்டும். தீவிர கண்காணிப்பு உண்டு, ஆட்காட்டிகள் ஒவ்வொரு மூலையிலும் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் பணியாற்றினால் ஆசிரியர்கள் என்ன மனநிலையில் இருப்பார்கள் என்று சிந்தித்துபாருங்கள். மாணவர்களை மாணவர்களை வாய்த்த கண்காணிப்பது, ஆட்காட்டிகளுக்கு (மாணவர்கள் & ஆசிரியர்கள்) பல சலுகைகள், உதிய உயர்வு, அதிக மதிப்பெண், பெயருக்கு தேர்வு எழுதினால் அல்லது ப்ராஜெக்ட் செய்தலும் நல்ல மதிப்பெண், ஆட்காட்டி ஆசிரியர்கள் பணிநேரத்தில் வேறு பல தொழில் செய்வது அதை கண்டுகொள்ளதது எல்லாம் உண்டு, பேருந்துகள் மிகமோசமான நிலையில் இருக்கும் ஒரு ஆள் சறுக்கி விழும் அளவிற்கு அதில் துளை இருக்கும், விடுதி கண்கானிப்பாளர்கள் ரவுடிககளாக தேர்வுசெய்து பணியமர்த்தி மாணவர்களை ஒடுக்குகிறார்கள். விடுதி சாப்பாடு கட்டிய பணத்திற்க்கு ஒப்பிடுக்கூட பார்க்கமுடியதவாறு இருக்கும். ஆக இந்த கல்வி கொள்ளை நிறுவனங்களில் பாதிக்கபடுவது மாணவர்கள் மட்டும் அல்ல ஆசிரியர்களும் தான்!

  29. இதில் குறிப்பிடப் பட்டிருக்கும் பலவை உண்மையாகப் படவில்லை.
    …
    …//கல்லூரிக்குள் இரு சக்கர வாகன அனுமதி கிடையாது. கல்லூரிப் பேருந்தில்தான் பயணிக்க வண்டும்.//
    …
    கல்லூரியில் வாகன காப்புப் பகுதி இருக்கும் பட்சத்தில் இது உண்மையாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
    …
    …//கால்மணி நேரம் தாமதமாக வந்தாலும், வருகைப் பதிவு உண்டு. வெளிப் பேருந்தில் பயணிக்கும் மாணவர்கள் கால் நொடி தாமதித்தாலும் அடையாள அட்டை பிடுங்கப்படும். மன்னிப்புக் கடிதம் எழுதி வகுப்பு ஆசிரியர், துறைத் தலைவரிடம் கையொப்பம் பெற்று வர வண்டும்.// இங்கு நாம் ஒன்றைக் கவனிக்க வேண்டும். தாமதாக வரும் மாணவன் பொய்யையும் சொல்லலாம். ஆனால் கல்லூரிப் பேருந்துத் தாமதாமாக வருகிறது என்பது ஐயத்திற்கு இடமில்லாத உண்மை. மேலும் இந்த கால்நொடி கால்மணி கதை மிகைப் படுத்தப் பட்டத் தகவல்களாகவேத் தெரிகின்றன.
    …
    …//அடையாள அட்டையில்லையெனில் வகுப்பறைக்குள் அமர்ந்திருந்தாலும் வருகைப் பதிவு கிடையாது.// கல்லூரியில் ஒவ்வொரு பாடவேளைக்கும் ஆசிரியர் வருகைப் பதிவைச் செய்வார். அடையாள அட்டையைப் பார்த்தா செய்வார்? இதை எப்படி நம்புவது??
    …
    …//75% வருகைப்பதிவு இல்லையெனில் தேர்வெழுத இயலாது. 1% முதல் 5% வருகைப்பதிவு குறைவு எனில், அதற்கேற்ப ரூ 10,000 கொடு ரூ 20,000 கொடு என பிடுங்குவதும், அதற்கு மேலும் குறைந்தால் ஓராண்டு பீஸ் கட்டச் சொல்வதும் நடக்கிறது.// பீஸ் கட்டினால் பில் கொடுப்பார்களே. யாராவது அப்படி பில் வைத்திருக்கிறார்களா??
    …
    …//ஹால் டிக்கட் பெற முடியுமா? தேர்வு எழுத முடியுமா?” என்ற நிலையில் முந்தைய இரவு வரையில் அந்த மாணவனால் நிம்மதியாக படித்திருக்க இயலுமா?’, அந்த மாணவனை மன நோயாளியாக்கிய நிர்வாகத்தின் அணுகுமுறைதான் இங்கு பிரச்சினை! அந்த மாணவனின் மனநிலையிலிருந்து அணுகிப் பாருங்கள், இதன் கொடூரம் புரியும்.// என்னுடைய கல்லூரிப் பருவத்திலும் இந்த அவதிகளைப் பட்டிருக்கிறேன் அதற்காக கொலை என்பதை எப்படி ஞாயப் படுத்துகிறீர்கள்??

    //கல்லூரியில் பாடம் நடத்தும் பொழுது ஆசிரியர் குறிப்பிடும் நோட்ஸ்களை உடனுக்குடன் தனது பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரியர் சொன்ன நோட்ஸ் அவனது நோட்டில் இல்லையென்றால், அவனது அடையாள அட்டை பிடுங்கப்படும்.//
    அதாவது ஆசிரியர் ஒரு வார்த்தை சொன்னதும் அனைவரது நோட்டுகளையும் சென்று பார்ப்பார்.. அப்படியானால் அவர் எத்தனை வார்த்தை தான் ஒரு வகுப்பில் சொல்லிவிட முடியும்??
    …
    …//டெஸ்க் மேல் ஏறச் சொல்வது. தரையில் அமர வைப்பது.// நம்பும் படியாக இருக்கிறதா?? கல்லூரிகளில் இருப்பது சாய்வு டெஸ்குகள் தானே??
    …
    …//மூன்றாமாண்டு மாணவர் ஒருவர் தனது துறைத்தலைவருக்கு பிறந்தநாளுக்கு சாக்லெட் கொடுத்ததற்காக// வேறு எந்த ஆசிரியர்களுக்கும் பிறந்த நாளே வரவில்லையா? ஏன் அந்தச் சம்பவங்கள் சொல்லப் படவில்லை. ஏன் பொதுமையாக இக்கருத்து குறிக்கப் படவில்லை?
    …
    …//மூன்று மணி தேர்வைக் கூட முழுமையாக எழுத விடாமல், இரண்டு மணி நேரம் முடிந்தவுடனேயே, அவன் எவ்வாறு தேர்வு எழுதியிருக்கிறான் என்பதை கண்காணித்து, சரியாக எழுதவில்லையெனில் அடையாள அட்டையை பிடுங்கி வைத்துக் கொண்டு, தேர்வு அறையை விட்டு துரத்தி விடுவது.// அதாவது இரண்டு மணி நேரத்தில் தேர்வுத் தாள் திருத்தம் இப்படி ஒரு கல்லூரியில் ஒரு துறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இருவரே இருப்பர். எத்தனை பேர்களின் விடைத் தாள்களை இவர்கள் பரிசோதித்து விட முடியும்??
    …
    …//டபுள் பாக்கெட் சட்டை போட்டு வரக்கூடாது. எம்பிராய்டரி இருக்கக் கூடாது. இது போல ஏகப்பட்ட கூடாதுகள்.// கொலை செய்வதற்குத் தகுந்த காரணங்கள் தானோ.. இனி பள்ளிகளுக்கும் சீருடைகள் சொல்லிவிடக் கூடாது. 🙁
    …
    …//ஆய்வகத்தில் கூட குச்சியை வைத்துக்கொண்டு பாடம் நடத்துகிறாரார்களாம், பேராசிரியர் பெருமக்கள்.// மேற்கண்ட அனைத்தையும் ஆராயும் போது இதன் நம்பகத் தன்மையும் போய்விட்டது.
    …
    …//“என்ன காரணத்துக்காகவோ, பெற்றோரை கல்லூரிக்கு அழைத்து வர சொல்லியிருக்கின்றனர். நிர்வாகத்துக்குப் பயந்து, என் ஃபிரண்ட், இரண்டு மாதமாக கல்லூரிக்கு வருவதில்லை.// தன்னிடம் குற்றமில்லை என்றால் ஏன் இன்னும் பெற்றோரை அழைத்து வரவில்லை??

    • John,

      (There is a problem vvith my keyboard. So kindly read it vvith some patience. )

      நான் அந்தக் கல்லூரியில் 2006 – 08 வர படித்தேன். மேற்கூறப் பட்ட எல்லா விடயங்களும் உண்ம. கொல நடந்தத யாரும் இங்கே சரியென்று சொல்லவில்ல. நடந்ததன் காரணங்கள் குறித்தே ஆராயப்பட்டுள்ளது. மாணவர்களின் கருத்துகளுக்கும் இங்கே இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கூறப்படும் அனத்தயும் அனவரும் அணுபவித்தும் மூவர் மட்டும்தான் கொலயில் ஈடுபட்டுள்ளனர். ஆகயால் யாரும் கொலய நியாயப்படுத்தவில்ல.

      1. நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அதுதான் உண்ம. கல்லூரிக்கு வெளியே வண்டிய வத்துவிட்டு வந்தாலும் மால வந்து பார்க்கயில் காற்று பிடிங்கி இறுக்கப் படும். கல்லூரி நிர்வாகத்தின் ஆணக்கிணங்க காவலர்கள் செய்து இருப்பார்கள். பிறகு அவர்களே நம்மிடம் அத சொல்லி வருத்தமும் படுவர். “சேர்மனே சொன்னார்ப்பா, நான் ஒன்னும் செய்ய முடியல… நீ இப்ப எப்படி தள்ளிட்டு போவியோ…”

      2. அந்தக் கல்லூரி வல்லநாட்டில் இருந்து 3-4 கி.மீ. தொலவில் உள்ளது. அதன் அருகே நிற்கும் பேருந்துகளும் கம்மிதான். 150 என்னும் ஒரேயொரு பேருந்து மட்டும்தான் நிற்கும். அதில் என்ன 500 பேரா வந்து விட முடியும்.?
      Moreover If anyone fails to attend the class in the first 10-15 minutes, s/he doesnt deserve to stay outside the college for the vvhole day. Even if being avvarded absent for the class, it can be attributed only for the first hour. Not the vvhole day.

      Agreed that the students may even lie. BUT it is only a MAY. VVe cant knovv that for sure. Moreover if a time is being fixed, the norm should stay fixed for all. VVhy is there an irrational justification on coming late? Isn’t that partial/discrimination? Can they be allovved to enter an university examination after 35 minutes, if they come in the college bus?

      3. Believe it or not they(lecturers) are made to take attendance in that manner.

      4. உங்கள் வாதமே, சிரிப்ப கொண்டு வருகிறது.
      “லஞ்சம் வாங்குன Traffic Police இரசீது கொடுத்திருப்பாரே… அது எங்கே..? ” Similarly the students vvant to attend the examination & further questions about the fees paid vvill only dravv contempt from the ADMINISTRATION staffs & they vvont issue the hall tickets. So no sane student paying the fine to vvrite the exam vvill be pressing for the receipt.

      5. The author didnt justify any of the actions of the students. The mental pressure/depression vvas just explained.

      6. Of course the lecturer cannot check all the notes but s/he does a random search. Of course it vvill be the same people vvho gets to be checked again & again.

      7. Your generalisation on the desks in the colleges is naive. Not all colleges have the same desks. Moreover even in my class, a couple of my friends vvere made to do so. In the end they hated the college so much & didnt come after some months. They didnt attend the semester exams as they knevv that they vvill be tortured a lot.

      8. …//மூன்றாமாண்டு மாணவர் ஒருவர் தனது துறைத்தலைவருக்கு பிறந்தநாளுக்கு சாக்லெட் கொடுத்ததற்காக// வேறு எந்த ஆசிரியர்களுக்கும் பிறந்த நாளே வரவில்லையா? ஏன் அந்தச் சம்பவங்கள் சொல்லப் படவில்லை. ஏன் பொதுமையாக இக்கருத்து குறிக்கப் படவில்லை?

      As you say this is an one off incident & even I dont knovv vvhy this has been mentioned in the article.

      9. “இப்படி ஒரு கல்லூரியில் ஒரு துறையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இருவரே இருப்பர். எத்தனை பேர்களின் விடைத் தாள்களை இவர்கள் பரிசோதித்து விட முடியும்??”

      Even if ONE student gets affected by their(lecturers) actions it is still an action vvorth condemning.

      10. CEG (Anna University) doesnt impose any such dress codes. This vvas in no vvay used as a justification for the murder. BUT an embroidered dress or the presence of tvvo packets cannot be justified for sending a student back to home vvhen one is supposed to attend an exam. (It happened once in my set.)

      11. நேரில் காணாத வர நம்ப முடியாதுதான். இருப்பினும் நீங்கள் நம்பாததால் உண்ம பொய்யாகாது.

      12. இதற்கு சற்று நகச்சுவயான பதில்தான் சொல்ல முடியும்.

      பிதாமகன் படத்தில் சூர்யா சொல்லுவது போல கொல பண்ணத கூட ஒத்துக்குவானுக, குசு விட்டத ஒத்துக்க மாட்டானுக.
      கல்லூரி சொல்லும் குற்றங்கள் எல்லாம் குற்றங்கள் தானா..? பெற்றோர அழத்து வர அவசியம் என்ன இருக்கிறது..? மாணவர்கள் செய்தது தவறு என்றால் அதற்கு செய்ய வேண்டியத, மாணவர்களே செய்து விடலாமே..? அவர்கள் ஒன்னும் கல்லூரியில் படிக்வில்லயே..?

      Anyvvay I have never justified the murder & no one did. It is just an introspection in to VVHY such a heinous act vvas committed vvithin the campus.

    • நம்பகத்தன்மை பற்றி நீங்கள் கேள்வி எழுப்பியது நல்ல விஷயம்தான்.

      இந்த கொலை, நேற்று நடந்த பிரச்சனைக்கு இன்று நடந்த விளைவு என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். நிச்சயம் ஏதேனும் ஒரு பின்புலம் இருந்திருக்கும் இல்லையா…. அது என்னவாக இருநிதிருக்க கூடும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

      உங்களின் ஒவ்வொரு நம்பகத்தன்மை கேள்வியையும் ஒப்புக்கொள்கிறேன். ஆனால்…. கீழ்கொடுக்கப்பட்டுள்ள வினவின் ஒரு கருத்திற்கு நீங்கள் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்புவீர்களா…?

      //பணம் பண்ணுவதற்காக எதையும் செய்யத் துடிக்கும் வாழ்வியல் நெறியற்ற பிழைப்புவாதிகளாக, காரியவாதிகளாக, மாணவர்களையும் பெற்றார்களையும் அச்சுறுத்தும் மாஃபியாக் கூட்டமாக பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பரிணமித்து நிற்கையில், அக்கல்லூரியில் பயிலும் மாணவன் மட்டும் நல்லொழுக்கம் உடையவனாக, நாட்டுப் பற்றுக் கொண்டவனாக இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது எங்கனம்?//

  30. கல்லூரி-பள்ளி ஆசிரியர்கள் பெரும்பாலும் மன நோயாளிகளாகவே இருக்கின்றனர். மாணவர்கள் என்றாலே இவர்களது அதிகாரத்தை செலுத்தும் பொருளாகவே நினைகின்றனர். இந்த மன நோயாளிகளை வெளிநாட்டில் எப்படி மாணவர்களை நடத்துகிறார்கள் என்று பாடம் எடுக்க வேண்டும். இக்காலூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களும் மன நோயாளிகளாகி விடுகின்றனர். கல்லூரி நிர்வாகத்தின் கொள்ளையை பற்றி கேள்வி கேட்க்க துப்பில்லாத, காசு கொடுப்பவனுக்கெல்லாம் கல்லூரி நடத்த அனுமதி கொடுக்கும் இந்த அரசுக்கும்,நீதி(?) துறைக்கும் இந்த மாணவர்களை தண்டிக்கும் அருகதை இல்லை.

  31. appudi paatha ella government officelaium bribe kuduka vendi irukudu.anga ellam kolai nadakula.en ivanunga matum kollai pannanum. ponungala kindal paneerkan.suspend pananga.un ponna kindal panna vitruvia? panam pidungurathu thappuna 40% govt employee iruka matanga.

    panam illamaiya nite saraku adichtu vanthu kolai panan?

  32. இறந்து போன முதல்வர் ஒரு இடைத்தரகர் அவர் ஒரு அடிமை அவரை கொலை செய்தது பாவம்.

    பொறியியல் கல்லூரிகளில், உண்டு உறைவிட பள்ளிகளில் நடக்கு செயல்கள் அனைத்தும் பெற்றோர் அறியவே நடக்கிறது. பெற்றவர்கள் எப்படியாவது தனது பிள்ளை 50,000 சம்பளத்துக்கு வேலைக்கு போக வேண்டும், மற்றவர்கள் வயிற்றெரிச்சலை வாங்க வேண்டும் என்ற ஆசை அடிமைத்தனத்துக்கு துணை போக சொல்கிறது. கட்டுபாடு விதிக்கப்படும் போதே அது ஏன் எதிர்க்கப்படுவதில்லை? ஏனென்றால் அதனை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை பெரும்பாலன மக்களிடம், மாணவர்களிடம் உள்ளது. அந்த சம்மதம் அதிகாரவர்கத்‌த்தை கட்டுக்கடங்காமல் ஆடச் செய்கிறது. அடிமைத்தனம் நாட்டின் எல்லா இடத்திலும் எல்லா நிலைகளிலும் உள்ளது. அவன் அடித்தாலும் பரவாஇல்லை காரியம் நடந்தால் போதும் என்ற மனப்போக்கு பெரும்பாலன மக்களிடம் பரவ ஆரம்பித்துவிட்டது. மேலும் பொறியியல் படிப்பவர்கள் அதற்கான முழு தகுதி உள்ளவர்களாக இருப்பதில்லை. பணம் கொடுத்தால் attempt போட்டு +2 பாஸ் ஆனாலும் சீட்டு என்ற கேவலமான நடைமுறை. மற்றும் படிப்பு முடிந்தும் அரியர்ஸ் போட்டு பாஸ் ஆகாமல் இருக்கும் மாணவர்கள் அநேகம். நாட்டின் வேலைவாய்ப்புக்கும் படித்து வெளியேறும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் வருடா வருடம் அதிகரிக்கிறது. பொறியியல் மீது உள்ள மோகம் அகற்ற படவேண்டும். கொலை நடந்த காரணம் நீங்கள் சொல்லும் காரணம் மட்டுமாக இருக்க வாய்ப்பில்லை அது விசாரிக்க படவேண்டியது. தமிழ் சினிமா, தொலைக்காட்சி,இன்டெர்நெட், கேம்ஸ், செல்போன் இவற்றின் வழியாக இந்த உலகை புரிந்து கொள்ள முயற்சிக்கும் இன்றைய தலைமுறை சிந்திக்க வேண்டும்.

  33. Dear Reader,

    I can show u lot of 420 actions by Colleges and College Controlling Universities!!!!

    [1] For example

    U Know a college which is affiliated as Women college under madras university is enrolling Boys!!!!!!!!!?
    //Prof. Dhanapalan College for Women,
    Kelambakkam,Thiruvallur Dist. -603103.
    Phone: 044-27474247, 27474718, 27474186
    Fax: 044-27475029
    Website: http://www.dhanapalancollege.edu.in
    Email: dhana_pugal@rediffmail.com //
    For evidence see the web site
    http://www.unom.ac.in/index.php?route=colleges/selffinance

    [2] But the college web site shows that it is co-ed college and name is!!!!
    See the following evidence!!!

    PROF. DHANAPALAN COLLEGE OF ARTS AND SCIENCE
    http://www.dhanapalancollege.com/Index.php

    [3] For the past two academic years the college management is admitting boys even in a Women college!!!!!!!!!!!!!!!!!

    [4] The 420 action by this college is not only done by itself!!! THE COLLEGE MANAGEMENT IS TRYING LOT LEGALLY AND ILLEGALLY TO CHANGE THE NAME FROM Prof. Dhanapalan College for Women TO PROF. DHANAPALAN COLLEGE OF ARTS AND SCIENCE. But the affiliating university “Madras university” is not changing the name.

    [5] What I am showing is only a sample!!!!!

    with regards,
    K.Senthilkumran

  34. Dear Vinavu Readers,

    [1] I was a college Teacher. My humble request here is that do not blame only students for all the educational related issues!!

    [2] Our students are more creative and knowledge full and fearless to learn new concepts

    [3] Just because of my students I keep on updating my subject knowledge continuously. Their questions and arguments related to my subject computer science keep me update.

    [4] Evan in year 2000 one of my student at Kallakurich asked me how to create a Web server? Finally we designed a simple web server using core JAva!!!
    So So… I increased My confidence level!!

    [5] One of my student in kallipatti Mahendra college asked me that Can we connect network server program(using Linux and C++) and client program (using Windows & Java)? Finally WE did it TCP as a base!!!
    so so… I added my experience just because of this kind of students.

    [6] One of my women students in Vidhyasakar college cengalpattu create a new type of algorithm for solving polyndrom problem and she assigned me to write a program for Lab practical using her algorithm.We did it !!!
    So So I added my creative thinking just because of her!!

    [7]In St.peters Eng college, While I was teaching the subject operating system ,memory management topic , A student stand up and tell me “we can teach this very practically sir” and I allowed him.He started teaching how windows os is implementing memory management practically.
    So So… I lean the practical method of teaching from him!!!

    [8]These are the very few example for proving that our students are good and knowledge full.
    If time allows I can give u my nice experiences with my students who keep me alive!!!!!!!!!!!!

    My poem is

    [Note: I mean bidirectional transfer of blood through palcanta between child and mom
    I mean bidirectional transfer of Knowledge between student and child]

    With Regards,

    K.Senthilkumaran

  35. Dear Vinavu Readers,

    My poem about our student-teacher is

    Student-Teacher Relation in this world is
    Like the PLACANTA between
    Child and mom

    [Note:
    I mean bidirectional transfer of blood through palcanta between child and mom
    I mean bidirectional transfer of Knowledge between student and child
    It is Not a emotional poem but scientific poem!!!!!
    ]

    With Regards,

    K.Senthilkumaran

  36. Dear Vinavu Readers,

    O God, I forgot to tell u my wonderful experience about my LITTLE GIRL!!!!!

    [1]While working in RKS college kallakurich,
    During my class hrs one of my girl student stand up and asked my permit for attending Chess Game competition held in my college.

    [2] Since I was planning to teach new topic in Digital Electronics I told her that Do not miss the today topic with angry but I permit her for competition.

    [3]Before I finished taking attendance She come back!!!!! HOW?

    [4] It is a matter of just 2 minutes She won her opponent in JUST 5 MOVES!!!!!!!

    [5]From this little girl I as a Teacher learn how solve problems quickly!!!

    with regards,
    K.Senthil kumaran

  37. Dear Vinavu Readers,

    I was a teacher in colleges.

    //திருநெல்வேலி, கீழவல்லநாடு பகுதியில் இயங்கிவரும் இன்ஃபென்ட் ஜீசஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் சுரேஷ், அந்த கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் பிச்சைக்கண்ணன், டேனிஷ், பிரபாகரன் ஆகியோரால் கடந்த அக்டோபர் 10-ம் தேதி கல்லூரி வளாகத்திலேயே வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார்.//

    [1]Based on this news now everyone is start blaming students for all the mistakes in our educational system!!! So that I am telling u all my wonderful experience with my students

    [2]While doing my Bioinformatics research , I was lagging in Biological science knowledge.During that time my friends who are Bio-science teachers try to teach me. But I can not understand the basics of cell and molecular biology. One of my known Bio tech Student Mr Govith teach me the topics of cell biology in my understanding level. After that I picked up and did my bioinformatics algorithms research successfully.

    [3] Even when I was having health problems ,Govinth only guide me for good medical care at kovi KMCH and make me to live healthy. Now he have finished his phd and working at Bangalore .

    with regards,
    K.Senthilkumaran

  38. Dear Readers,

    [1] I was a college Teacher. My humble request here is that do not blame only students for all the educational related issues!!

    [2] Our students are more creative and knowledge full and fearless to learn new concepts

    [3] Just because of my students I keep on updating my subject knowledge continuously. Their questions and arguments related to my subject computer science keep me update.

    [4] Evan in year 2000 one of my student at Kallakurich asked me how to create a Web server? Finally we designed a simple web server using core JAva!!!
    So So… I increased My confidence level!!

    [5] One of my student in kallipatti Mahendra college asked me that Can we connect network server program(using Linux and C++) and client program (using Windows & Java)? Finally WE did it TCP as a base!!!
    so so… I added my experience just because of this kind of students.

    [6] One of my women students in Vidhyasakar college cengalpattu create a new type of algorithm for solving polyndrom problem and she assigned me to write a program for Lab practical using her algorithm.We did it !!!
    So So I added my creative thinking just because of her!!

    [7]In St.peters Eng college, While I was teaching the subject operating system ,memory management topic , A student stand up and tell me “we can teach this very practically sir” and I allowed him.He started teaching how windows os is implementing memory management practically.
    So So… I lean the practical method of teaching from him!!!

    [8]These are the very few example for proving that our students are good and knowledge full.
    If time allows I can give u my nice experiences with my students who keep me alive!!!!!!!!!!!!

    With Regards,

    K.Senthilkumaran

  39. Dear Readers,

    O God, I forgot to tell u my wonderful experience about my LITTLE GIRL!!!!!

    [1]While working in RKS college kallakurich,
    During my class hrs one of my girl student stand up and asked my permit for attending Chess Game competition held in my college.

    [2] Since I was planning to teach new topic in Digital Electronics I told her that Do not miss the today topic with angry but I permit her for competition.

    [3]Before I finished taking attendance She come back!!!!! HOW?

    [4] It is a matter of just 2 minutes She won her opponent in JUST 5 MOVES!!!!!!!

    [5]From this little girl I as a Teacher learn how solve problems quickly!!!

    with regards,
    K.Senthil kumaran

    • You made a wise decision sire.

      வாழும் மனிதருக்கு வாழச் சந்தர்ப்பம் தர வேண்டியது நம் கடமையல்லவா!

  40. என் கவி

    மாணவன் ஆசிரியன் உறவு எ ன்பது
    தாய் சேய் தொப்புல் கொடி உறவு போன்றது !

    குறிப்பு :
    It is not a emotional poem but scientific poem
    I mean bidirectional transfer of blood through palcenta between child and mom
    I mean bidirectional transfer of Knowledge between student and Teacher

  41. என் அருமை தமிழ் கூறும் நண்பா !

    தமிழில் தவறு இன்றி தட்டுவது என்பது
    சிரமம் அல்லவா !
    எனவே நக்கல் கிண்டல் இன்றி
    மிகக் பொருள் உடன் அச்சு செய்யும் படி
    நட்புடன் கேட்டுக்கோள்கின்ரேன்.

  42. ஒரு காலத்தில் கீழ்கண்டவற்றை நம் தமிழ் நாட்டில் விற்க கூடாது என்ற நிலை இருந்தது.

    அவை :கல்வி, மருத்துவம் மற்றும் உணவு…

    இன்று முக்கிய வியாபாரமே இவற்றை கொண்டது தான்! மனிதன் வாழ்க்கையை தொலைத்து பணத்தை தேடத் துவங்கிய நாள் முதல் இந்த நிலையும் தொடங்கியது எனலாம்.

    இதற்கு அரசாங்கமோ, ஆட்சியாளர்களோ, சமுதாயமோ மட்டுமே பொறுப்பல்ல. ஒவ்வொரு பொறுப்பற்ற மனிதனும் இந்த கேவலமான நிலையின் பின்னால் உள்ளான். அது நானாகவோ அல்லது படிக்கும் நீங்களாகவோ இருக்க நாம் செய்யும் செயல்கள் மட்டுமே சான்று! நம் பாட்டனார் காலத்தில் கூட உணவு மற்றும் தண்ணீரை யாரும் விற்றது கிடையாது. இன்றோ நாம் அரசாங்கத்தின் கடைகளில் அளவு சாப்பாடும், சரவணபவனில் சைவ உணவும் சாப்பிட பணம் தேவைப்படுகிறது.

    நம் வரலாற்றை மறந்து, பெருமையை உடைத்து, பணம் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டு மனிதத்தை மறந்து நிற்கும் வரையிலும் நமக்கு விடிவில்லை. ஒரு தமிழனாக, மனிதனாக நாம் நம்முடைய பொறுப்பை உணர்ந்து நம் இளைய தலைமுறைக்கும், வாழும் தலைமுறைக்கும், பின்வரும் குழந்தைகளுக்கும் நல்ல உலகை அளிக்க முயற்சிப்போம். பொறுப்பை உணர்ந்து நடப்போம். ஏன், எதற்கு, எப்படி, எங்கே, எதனால் போன்ற கேள்விகளை ஒருமுறையாவது முயற்சி செய்வோம். காரணத்தை அறிந்து கொண்டு செயல்படத் துவங்கினாலேயே அங்கே அறிவு செயல்பட ஆரம்பித்து விடும்.

    வாழும் மனிதருக்கு வாழச் சந்தர்ப்பம் தர வேண்டியது நம் கடமையல்லவா!

    • அஸிஸ்டென்ட் ப்ரொஃபெஸர் ,

      ஊரான் அவர்களின் பின்னோட்டம் இது.
      //இவை எல்லாம் முதலாளித்துவ பயங்கரவாதத்தின் எதிர்வினைகள். முதலாளித்தவ பயங்கரவாதம் நீடிக்கும் வரை எதிர்வினைகளும் நீடிக்கவே செய்யும். முதலாளித்துவ லாபவெறிகை்கு முடிவு கட்டாமல் உளவியல் வகுப்புகளாலும் அறநெறி போதனைகளாலும் இதுபோன்ற எதிர் வினைகளை முடிவுக்கு கொண்டு வர நினைப்பது வெறும் கானல் நீரே!//

      வினவு வைக்கும் தீர்வும் இதுதான்.நாலு வருசமா படிக்கறீங்க இது கூடவா புரியல.
      இந்த மாதிரி மன உளைச்சலை கொடுக்கும் கல்லூரி பேராசிரியர்களை , நிர்வாகத்தை மாணவர்கள் எப்படி எதிர்க்க வேண்டும் என்று கூறுங்கள்.

  43. தந்தி டிவி யில் கடந்த 15 ம் தேதி இரவு 10.30 க்கு வழக்கு நிகழ்ச்சியில் இன்பண்ட் ஜீசஸ் கல்லூரி முதல்வர் சுரேஷ் கொலை குறித்த செய்தியை விரிவாக அலசி இருந்தார்கள். அதில் பேசிய மாணவர்கள் அந்த கல்லூரியில் கடந்த 6 மாதமாக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றார். அதோடு ஃபாரின் ஆதர்ஸ் என கூறி புத்தகங்களுக்கு 2000, 3000 என பிடுங்குவதாக சொன்னார்.5 நிமிடம் தாமதமாக வந்தால் 1000 அபராதம் என்றார்.

  44. நீங்க எத்தன நொண்டி காரணம் சொல்லி இந்த விஷயத்த அந்த _____ கொலைகார __ support ah பேசுனாலும்…., காலைல பள்ளிக்கூடத்துல இறக்கி விட்டுப்போன அப்பா திரும்ப கூப்ட வரவே மாட்டாரு அப்டின்னு ஏங்கி நொந்து நிக்குற 4th std குழந்தையோட கண்ணீருக்கு பதில் சொல்ல முடியுமாடா???… தப்போ? சரியோ?.. உங்கட்ட strict ஆ இருந்த பிரின்சிபால சாவடிக்கிறதாடா ஞாயம்…. ?…டேய் இந்த கொலைகாரனுகளுக்கு support ஆ பேசுற எல்லாரையும் கேக்குறேன்…உங்க அப்பாவ இப்டி ஒரு காரணுத்துக்காக எவனாது துடிக்க துடிக்க வெட்டி போட்டா, இப்டியாடா வெட்டுனவன support பண்ணி பேசுவிங்க……, எந்த காரனத்துகாகவும் ஒரு உயிரை கொல்றது தப்புடா… 3 _______ என்ன செய்யணு தெரியாம ______ ஒரு குடும்பஸ்தன வெட்டி ஒரு சின்ன குழந்தைய அநாதை ஆக்கிருகானுங்க, இத ஞாயப்படுதுரப்போ உங்களுக்கு உடம்பு கூசலயாடா?..சோறுதான தின்றிங்க??????

    • தம்பி ரொம்ப உணர்ச்சிவசப்படாதே உடம்புக்கு நல்லதில்லை! இங்கே யாருமே அந்த கொலையை சப்போர்ட் செஞ்சு பேசவில்லையே! அந்த கொலையை செய்ய தூண்டிய காரணிகளைப் பற்றிதானே விவாதமே!

Leave a Reply to Ashwin பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க