privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅண்ட சராசரம் கண்டு நடுங்கிட இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா.. - பாடல்

அண்ட சராசரம் கண்டு நடுங்கிட இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா.. – பாடல்

-

ச்சம் வரிஞ்சு கட்டி… உச்சிக் குடுமி தட்டி… அக்கிரகாரம் வந்ததே…! ஏ ஜெய ஜெய சங்கர அவதாரம் போட்டு வந்ததே…! – 1992-ம் ஆண்டு வெளியான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இருண்ட காலம் ஒலிப்பேழையில் இடம் பெற்ற பாடல்.

மிழ்நாட்டில் எப்பேற்பட்ட ஆட்சி நடக்கிறது தெரியுமா? புரட்சி தலைவியின் பொற்கால ஆட்சி. குப்தர் காலம் பொற்காலம், பல்லவர் காலம் பெற்காலம், சோழர் காலம் பொற்காலம், இப்போ அம்மா காலமும் பொற்காலம்.

பொற்காலம் என்றால்?

உழைக்காமல் உட்கார்ந்து தின்கிறவர்களின் காலம் பொற்காலம். கஞ்சிக்கிலாத ஏழைகளை கசக்கி பிழிகிற ‘கருணா மூர்த்திகளின்’ காலம் பொற்காலம். நாலு வர்ணம், நாலாயிரம் சாதி, நான் உசந்தவன், நீ தாழ்ந்தவன், நான் பாப்பான், நீ பறையன் இப்படி ‘சகோதர பாசத்தோடு’ வாழ்ந்த சனாதனிகளின் காலம் தான் பொற்காலம். இந்த அம்மாவின் காலமும் அப்பேற்பட்ட பொற்காலம் தான். பச்சையாக சொன்னால் இது பார்ப்பன கும்பலுக்கும் பணக்கார கும்பலுக்கும் பொற்காலம். பாட்டாளி மக்களுக்கோ இருண்டகாலம்.

தொகையறா

திராவிட தமிழ் நாட்டிலே…
மாறுவேடம் பூண்டு வந்து..
ஆட்சியை அபகரித்த பாஞ்சாலி… ஆமா..!
அக்கிரகாரம்..
ஆடுகின்ற ஆட்டமதை காண்க..! காண்க..

பல்லவி

கச்சம் வரிஞ்சு கட்டி
உச்சி குடுமி தட்டி
அக்கிரகாரம் வந்ததே!
ஏ! ஜெய ஜெய சங்கர..
அக்கிரகாரம் வந்ததே!
ஏ! ஜெய ஜெய சங்கர..
அவதாரம் போட்டு வந்ததே!
ஏ ஹரஹர சங்கர!

அண்ட சராசரம்
கண்டு நடுங்கிட
இந்து தினமணி
ஜிங்சக்க ஜிஞ்சா
அவதாரம் போட்டு வந்ததே!
ஏ! ஜெய ஜெய சங்கர!
அவதாரம் போட்டு வந்ததே!

ஏ! அரகர சங்கர!

வசனம்

அங்க வங்க சுங்க கலிங்காதி சக்கரவர்த்திகளும்
கேகய, கோசல, மகத விஜயாதி ராஜாக்களும்
சேர சோழ பாண்டிய மன்னர்களும்
படை கட்டி ஆண்ட காலத்திலே / லே
கொடி கட்டி ஆண்ட அவாள் / அவாள்
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலே / லே
கொடியிழந்து, படையிழந்து, முடியிழந்து / முடியிழந்து
கப்பம் கட்டி வாழ்ந்த காலத்திலே
டர்பன் கட்டி ஆண்ட அவாள்…

ஈவெரா பெரியாரும், அம்பேத்காரும், பூலேயும்
பிடித்த பிடியிலே பிதுங்கி அடித்த அடியிலே அரண்டு
ஒழிந்து மறைந்து அடக்கி வாசித்த அவாள்…

இன்று…

கச்சம் வரிஞ்சு கட்டி
உச்சி குடுமி தட்டி
அக்கிரகாரம் வந்ததே!
ஏ! ஜெய ஜெய சங்கர..

சரணம்

காஞ்சிதான் தலைநகரம்
காலடியில் காவல் தெய்வம்
ஓய்ந்திருந்த காலம் போனதே!
ஏ! ஜெய ஜெய சங்கர!
பாஞ்சிடுதே பார்ப்பன கூட்டம்!
ஏ! அரகர சங்கர!

அண்ட சராசரம் கண்டு நடுங்கிட
இந்து தினமணி ஜிஞ்சக்க.. ஜிஞ்சா..
அவதாரம் போட்டு வந்ததே! (2)

ஏ! அரகர சங்கர!
(கச்சம் வரிஞ்சி)

ஆறு கோடி தமிழர் கூட்டம்
ஆலாய் பறக்கையிலே
காஞ்சி மடத்து ஆண்டிக்கு!
ஏ! ஜெய ஜெய சங்கர
ஆசிரமம் அஞ்சு கோடிக்கு (2)
ஏ! அரகர சங்கர

(கோரஸ்)
(அண்டசராசரம்)
(கச்சம் வரிஞ்சி)

கோவில் பூசை ஆறு காலம்
தமிழனுக்கு நாச காலம் (2)
கல்லுக்கும் வாழ்வு வந்ததே!
ஏ! ஜெய ஜெய சங்கர! – ஏழை
கஞ்சிக்கும் கேடு வந்ததே!
ஏ! அரகர சங்கர! (2)

(அண்டசராசரம்)

பெரியாரின் கொள்கை – சுய
மரியாதை பாசறையை (2)
காப்பாத்த வந்தேனென்றாளே!
ஏ! ஜெய ஜெய சங்கர!
பாப்பாத்தி வந்தேனென்றாளே!
ஏ! அரகர சங்கர!
பாப்பாத்தி வந்தேனென்றாளே!

(கோரஸ்)
(அண்டசராசரம்)
(கச்சம் வரிஞ்சி)

டெல்லியிலே அத்துவானி!
சென்னையிலே அல்லிராணி! (2)
ஆர்.எஸ்.எஸ் ஆட்டம் போடுதே!
ஏ! ஜெய ஜெய சங்கர!
போயசு தூபம் போடுதே! (2)
ஏ! அரகர சங்கர!

(கோரஸ்)
(அண்டசராசரம்)
(கச்சம் வரிஞ்சி)

அரகர சங்கர! ஜெய ஜெய சங்கர!
அரகர சங்கர! ஜெய ஜெய சங்கர!
அரகர சங்கர! ஜெய ஜெய சங்கர!