privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபுதுச்சேரி தோழர்கள் மீது அதிமுக வெறிநாய் ஓம்சக்தி சேகர் கும்பல் தாக்குதல் !

புதுச்சேரி தோழர்கள் மீது அதிமுக வெறிநாய் ஓம்சக்தி சேகர் கும்பல் தாக்குதல் !

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே !

கரையான் கட்டிய புத்துக்குள் கருநாகம் புகுந்ததைப்போல தமிழ் நாட்டில் தமிழ் மக்களால் கட்டப்பட்ட சிதம்பரம் நடராசர் கோயிலில் பார்ப்பன தீட்சிதர்கள் புகுந்துக்கொண்டு இந்த கோயில் தங்களுக்குத்தான் சொந்தம்! இங்கு தமிழர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது, கோயிலில் தமிழில் பாடக்கூடாது என்றும், தமிழ் மொழி வேசி மொழி என்றும், தமிழில் பாடினால் தீட்டு என்றும், தமிழன் வேசி மகன் என்றும் இழிவுப்படுத்தி பல நூற்றாண்டுகளாக கொட்டம் அடித்து வந்தார்கள்.

நந்தனாரையும், வள்ளலாரையும் சாதிவெறி பிடித்துஎரித்து சாம்பலாக்கி விட்டு ஜோதியாகி விட்டார்கள் என்று வரலாற்று உண்மையை மறைத்த கொலைகார கிரிமினல்கள். கோயிலின் ஆண்டு வருமானம் 30,000 ரூபாய்தான் என்று தில்லை நடராசன் தலையிலும், உயர் நீதிமன்ற நீதிபதி தலையிலும் அடித்து சத்தியம் செய்து ஆண்டு வருமானம் 1 கோடி ரூபாயை ஆட்டையை போட்டும், கோயிலின் தங்க ஆபரணங்களை திருடியும் ஏமாற்றும் திருடர்கள். இந்த சாதிவெறி பிடித்த, இனவெறி பிடித்த, கொலைவெறி பிடித்த அரக்கர்களின் கொட்டத்தை அடக்கியது 2008 மார்ச்-2 ல் எமது தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் பு.ஜ.தொ.மு , வி.வி.மு, பு.மா.இ.மு ஆகிய அமைப்புகள்.

எந்த மொழியை வேசி மொழி என்றார்களோ அந்த மொழியால், எந்த தமிழனை வேசி மகன் என்றார்களோ அந்த தமிழனால் தில்லை நடராசன் சன்னதியில், சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் முழங்கப்பட்டது. வெண்தாடி வேந்தன் பெரியாருக்கு பிறகு வீழ்ந்த முதல் அடி. அடுத்து கோயிலின் மீது தீட்சிதர்கள் செலுத்தி வந்த ஆதிக்கத்தை ஒழித்து அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இது பார்ப்பன கும்பலுக்கு விழுந்த இரண்டாவது அடி.

இவ்வாறு தொடர்ச்சியாக விழுந்த அடியால் நிலை குலைந்து போன பார்ப்பன தீட்சித கும்பல் வெறி கொண்டு பார்ப்பன பாசிச ஜெயாவையும், சு.சாமி, சோ மற்றும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்து பரிவார கும்பலை நாடி தனது அதிகாரத்தை மீண்டும் கோயிலில் நிறுவிக் கொள்ள,  தமிழக ஜெயலலிதா அரசு முதற்கொண்டு, உச்ச நீதி மன்றம் வரை தனது பூணூல் அதிகாரத்தை கொண்டு, கோயிலில் தமிழர்களின் வழிபாட்டு உரிமையை மீண்டும் நசுக்கிவிட முயல்கிறது. எந்த தமிழர்களின் ஓட்டை பெற்றுக்கொண்டு முதலமைச்சராக இருக்கிறாரோ அந்த தமிழர்களின் கோயில் வழிபாட்டு உரிமையை நசுக்கவும், கோயிலை தீட்சிதர்களுக்கு சொந்தமாக்கவும் உதவி வருகிறார் பார்ப்பன பாசிச ஜெயா. ஆகையால்தான் ஆண்டுக்கு 1 கோடிக்கு மேல் வருவாய் வருவதையும் பார்க்காமல், இவர் ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு காரணமான மக்களை இழிவு படுத்துவதையும் அவர்களது வழிப்பாட்டு உரிமை பறிக்கப்படுவதையும் பார்க்காமல் தீட்சிதர்களின் வழக்குக்கு எதிராக ஒரு சிறு துரும்பு எதிர்ப்பைக் கூட காட்டாமல் தீட்சிதர்கள் வெற்றி பெறும் வகையில் சட்ட ரீதியாக அனைத்து வாய்ப்புகளையும் மறைமுகமாக செய்து வருகிறார்.

இதை அம்பலப்படுத்திய பிரசுரத்தை மக்களிடம் வினியோகித்து, ஜெயாவை கண்டித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட எமது பு.ஜ.தொ.மு தோழர்களை புதுச்சேரி சட்டமன்ற அ.தி.மு.க எம்.எல்.எ வெறிநாய் ஓம் சக்தி சேகர் தனது ரவுடிகளுடன் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கே வந்து மூன்று தோழர்களை சட்டையை பிடித்து கிழித்து கடுமையாக அடித்து தோழர்கள் மக்கள் மத்தியில் நிதி திரட்டி வைத்திருந்த உண்டியலை பிடிங்கிக் கொண்டும் போலிஸ் நிலையத்தில், எங்களது அம்மாவை எப்படி விமர்சிக்கலாம்? என்றும் இவர்கள் மக்களிடம் மிரட்டி காசு வாங்குகிறார்கள் என்றும்  புகார் கொடுத்து விட்டு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்து விட்டு சென்று விட்டனர்.

தோழர்கள் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலையறிந்து மற்ற தோழர்கள் காவல் நிலையத்துக்கு சென்றவுடன் இன்ஸ்பெக்டர், “நமது தோழர்களை பார்த்து உங்களை பற்றி எனக்கு தெரியும் நீங்கள் மக்களிடம் கட்டாயப்படுத்தி வங்கமாட்டீர்கள், 1 ரூபாய் கொடுத்தாக் கூட வாங்கிகிட்டு செல்வீங்க, அவர்களுக்கு உங்களை பற்றி தெரியவில்லை. நீங்கள் உங்கள் தோழர்களை அழைத்துச் செல்லுங்கள்” என்று அனுப்பி வைத்தார்.

நமது சார்பாக ஓம் சக்தி சேகரை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டு பொறுக்கும் போது மக்களின் காலில் விழுந்து ஓட்டு பொறுக்குவது, பிறகு மக்களை காலில் போட்டு மிதிப்பது இதுதான் ஓட்டு சீட்டு அரசியலின் ரவுடித்தனமான ஜனநாயகம். இந்த போலி ஜனநாயகதத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமிழர்களின் ஓட்டு வாங்கி காசு சம்பாரிக்கும் அ.தி.மு.க ஜெயா கும்பல் தமிழர்களின் குடலையே அறுக்கும் சதிகார கும்பல் என்பதை பார்ப்பன ஜெயா மட்டும்மல்ல இவரின் அடிமை ரவுடி ஓம் சக்தி சேகர் எம்.எல்.எ வும் நிரூபித்து காட்டி விட்டான்.

இந்த சம்பவத்தை நிறைவேற்றுவதற்கு ஓம்சக்தி சேகர் பத்திரிக்கையாளர்களை கூடவே அழைத்து வந்துதான் தனது காலித்தனத்தை அரங்கேற்றியுள்ளான். பத்திரிகை ஊடகங்களோ அதாவது தினத்தந்தி, தினகரன், தினமலர் ஆகிய பத்திரிகைகள் பிரசுரத்தில் உள்ள கோரிக்கைகளையும் தோழர்களின் பிரச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் பார்க்காமல் பத்திரிகையின் நாணயத்திற்கு விரோதமாக ”மக்களிடம் பணம் வசூல் செய்தார்கள்” என்றும் தோழர்கள் “தாக்கப்பட்டவுடன் தோழர்களில் சிலர் ஓடிவிட்டார்கள்” என்றும் கொச்சையாக கம்யூனிஸ்டுகளின் பிரச்சார வடிவத்தை இழிவுபடுத்தும் வகையிலும் ஓம் சக்தி சேகர் சொன்னதை அப்படியே வாந்தி எடுத்தும் எழுதியுள்ளார்கள்.

மேலும், தமிழர்களின் உரிமையான தில்லைக் கோயிலை தீட்சிதர்களுக்கு சொந்தமாக்க முயலும் அதிமுக ஜெயாவை விமர்சித்து எழுத துப்பில்லாமல், ஒரு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி (எம்எல்ஏ) காலித்தனமாக நடுரோட்டில் ஜனநாயகத்திற்கு உட்பட்டு பிரச்சாரம் செய்த தோழர்களை ஜனநாயத்திற்கு விரோதமாக, தோழர்களைத் தாக்கி நடந்து கொண்டதை பற்றி எழுத துணிவில்லாமல் கயமைத்தனமாக பார்ப்பனியத்திற்கு ஆதரவாக மக்கள் விரோத ரவுடிக் கும்பலுக்கு ஆதரவாக செயல் படும் போக்கில் நடந்து கொண்ட இப்பத்திரிகைகளை எங்கள் அமைப்பின் சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.

மக்கள்தான் இந்த உண்மையை புரிந்து கொண்டு இந்த பார்ப்பன பரிவார ஜெயா கும்பலை விரட்டியடிக்க வேண்டும். தில்லை கோயிலை மீட்டெடுத்து தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என உங்களை அறைகூவி அழைக்கிறோம். அதிமுக வெறிநாய் ஓம்சக்தி சேகர் ரவுடி கும்பலுக்கு புதுச்சேரி உழைக்கும் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்  :
பு.ஜ.தொ.மு – புதுச்சேரி