privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்ஆரம்பம் – வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தியின் மரணக் குறிப்புகள்

ஆரம்பம் – வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தியின் மரணக் குறிப்புகள்

-

புனைவின் முன் நியாயக் குறிப்பு: முகநூலில் அறிவால் ஜீவிக்க கூடிய வாளிகள் சிலர் மக்களை அச்சுறுத்தும் ‘பயங்கரவாத’ குறிப்புகளை அவ்வப்போது முன்வைக்கிறார்கள். வாளிகள் லிஸ்ட்டில் இடம் பிடிப்பதை இலட்சியமாகவும், பிழைப்பை காரியமாகவும் கொண்ட சிறுவாளிகள் பலர் இதை மார்கெட் செய்கிறார்கள். நாலும் இரண்டும் எட்டு என்பதைக் கூட நாலில் ஒன்றைக் கழித்து, மூன்றைக் கூட்டி, இரண்டால் வகுத்து, ஒன்றால் வகுத்து, நாலால் பெருக்கி, மூன்றைக் கழித்து………..(ஸ்ப்பஃபா முடியல), கடைசியில் எட்டு என்பதைக் கூட கிசுகிசு குரலில் கீச்சி விட்டு படுத்தி எடுக்கிறார்கள். அதை உங்களுக்கு எடுத்துக் காட்டி எச்சரிக்கவே இந்த புனைவு வினவால் விடப்படுகிறது. புனைவு நனவை மீட்டினால் கம்பெனி பொறுப்பல்ல.

முகநூல் ஃபார்மெட்டில் படிக்க…
______________

அறிவுஜீவி

about Wastesh Kosuwarthi – உலக சினிமாக்களில் கிளாப் ஃபோர்டு குறித்த வரலாறும், அந்த ஃபோர்டுகள் என்னென்ன மரத்தில் செய்யப்படுகின்றன, அந்த மரங்கள் குறித்து நகர்ப்புறங்களில் பேசப்படும் நாட்டுப்புறக் கதைகள் குறித்தும் மார்ட்டின் டப்ளர் பல்கலைக் கழகத்தில் முனைவர் படிப்பு முடித்தவர்.

Works in – Don at Koma naidu cinema university

333 friends, 1111 followers

_______________

Notes by kosuwarthi

ஆரம்பம் – மீண்டும் ஒரு மரண வாசிப்பு (வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தி) – பாகம் 1
November 18, 2013 at 1:55pm

இந்த விமரிசனத்தை நான் விரும்பி எழுதுவதாக விரும்பாமலேயே நீங்கள் புரிந்து கொள்ள முயன்றாலும், அதை நான் விரும்பியே புரியாது என்று ஒதுக்கினாலும் இந்த குறிப்பின் நியாயத் தேவை இருக்கவே செய்கிறது என்பதை நான் விரும்பியே சொல்லிக் கொள்ள விரும்பவில்லை.

ஆரம்பம் படம் குறித்து ஆயிரமாயிரம் விட்டை விமரிசனங்கள் பேசியிருக்கும் கழுதை கருத்துக்களை என் குறிப்பு எப்போதும் பேசாது என்றுதான் நீங்கள் என் பக்கம் வந்து படிப்பதற்கு காரணம். சிலர் கோமா நாயுடுவிடம் ஆட்டையைப் போட்டு நான் டான் ஆனது போல ஏதேனும் ஒரு சில சினிமாக்களை எடுத்து நாயுடுவிடம் ஆட்டையைப் போடலாம் என்றும் வருகிறார்கள். அது எனக்கு தெரியாதது அல்ல. உட்கார்வது ஆய் போய் விட்டு எழுந்திருக்கவே என்ற உலக தத்துவம் அறியாதவன் அல்ல இந்த கொசுவர்த்தி. ஆரம்பத்தில் கொசு அடிக்க மட்டும் பயன்பட்ட இந்த வர்த்தி இப்போது கோப்ராக்களையும் சுருட்டி போடுவதால் சுண்டெலிகளின் நோக்கம் அறியாதவன் என்று எண்ணுவது எஸ்கேப்பிசம்.

ஆக்சன் படங்கள் வேறு, அண்ட்ராயர் படங்கள் வேறு என்று சிலர் கருதுகிறார்கள். ஓசி விக்கிபீடியா முதல் காசு என்சைக்ளோபீடியா வரை அப்படித்தான் விளக்கமளிக்கிறார்கள். என் வரைக்கும் நான் ஓசி, காசு இரண்டையும் மதிப்பவனல்ல. மார்ட்டின் டப்ளரில் படிக்கும் போது நானே ஒரு நூலகம் அளவுக்கு கோட்பாடுகளையும், கோக்குமாக்குகளையும் எழுதி தள்ளியவன். இந்த உலகை அறிவதற்கு எனது கிட்னியையே சார்ந்திருக்கிறேன். அடை மழை வருமா எனும் வானிலையைக் படித்தறிவது கூட பக்கத்து சீட்காரன் மூலம் கூடாது என்று டிசிப்பிளினோடு வாழ்பவன்.

ஆக்சன் படங்களில் காமம் கவர்ச்சிக்காவும், அண்ட்ராயர் படங்களில் கதையேயாகவும் வருகின்றன. ஒன்றில் சைட் டிஷ், மற்றொன்றில் மெயின் டிஷ். இரண்டும் டிஷ்ஷையே சார்ந்து இயங்குகின்றன என்பதறியும் போது மெயினில் பன் இருந்தாலென்னா, பலகாரம் இருந்தாலென்ன? எனர்ஜி பாக்கெட்டை கேப்சர் செய்தால் மின்சாரம், ரிலீஸ் செய்தால் அணு குண்டு. ஆனால் அணு அணுதானே மிஸ்டர்?

என்னைப் பொறுத்தவரை வெளியாடைகளை துறப்பது கவர்ச்சி, உள்ளாடைகளை துறந்தால் காமம், என்றால் இதில் எந்த உடை என்பதில் ஏன் விளக்கங்களும், விவாதங்களும்? பம்பாய் படத்தில் மார்பு குலுங்க கடற்கரையில் ஓடி வரும் மனிஷா கொய்ராலவும், குருதிப்புனலில் கவுதமியை ஆழமாக முத்தமிடும் கமலஹாசனும்தான் பார்வையாளர்களின் மனதில் கதையை கிளறிவிட்ட குறியீடுகள். இதை சில கடிவாய் கம்யூனிஸ்டுகள் லூசுத்தனமாய் மதச்சார்பின்மை, மதவெறி, தீவிரவாதம், முதலாளித்துவம் என்று உளறுகிறார்கள். காமமும் இறுதியல் ஒரு ஆக்சன் எனும் போது ஆக்சனையும், அண்டர்வாயரையும் பிரிக்க முடியுமா?

சண்டையில் கட்டிப் புரள்கிறார்கள். சரசத்திலும் கட்டிப் புரள்கிறார்கள். இரண்டிலும் உடம்பின் எல்லையற்ற சாத்தியங்களோடு கட்டிப் புரள்கிறார்கள். ஒன்றில் அணைத்தல், இன்னொன்றில் அடித்தல், ஒன்றில் இன்பக்காயம், மற்றொன்றில் துன்பக் காயம், என்றாலும் மருத்துவமும் டாக்டரும் ஒன்றுதானே? சிலர் சேலம் சிவராஜ் வைத்தியர் இருப்பதற்கு என்ன பொருள் என்று கேட்கலாம். எலும்பு முறிவுக்கு ஆர்த்தோ டாக்டர் வைத்தியம் செய்வது போல காமம் முறித்த குற்ற உணர்வுகளுக்கு சேலம் வைத்தியர் டிரீட்மெண்ட் கொடுக்கிறார். எனவே அதுவா இதுவா என்ற பேதமும் வாதமும் ஆதிசங்கரன் காலம் முதல் ஆய்வாளர் அனாடினோ முறுவலினா வரை உள்ள பிரச்சினை.

ஆரம்பம் படத்தில் தல போட்ட கோட்டு சூட்டுக்களின் விலையும், தயாரிப்புச் செலவும் அதிகம் என்றாலும், நயன்தாரா போட்ட செலவில்லாத நீச்சல் உடையையும் பாருங்கள். பார்வையாளன் எந்த உடைக்கு அதிகம் செலவு என்று யோசித்து காட்சிகளை நினைவுபடுத்திக் கொள்வதில்லை. எந்த உடம்பில் குறைவு என்பதுதான் அவனைக் கிளப்பி விடும் மர்மம். இதனால் தலயின் ரசிகர்களை விட நயன்தாரா ரசிகர்கள் அதிகம் இருக்க வேண்டுமல்லவா என்று நீங்கள் கேட்கலாம்.

அங்குதான் நல்லது கெட்டது இருமை முரண்களின் சதுரங்க ஆட்டம் வேலை செய்கிறது. ஒரு வியப்பூட்டும் உதாரணத்தை எம்ஜிஆர் படங்களில் இருந்து சொல்கிறேன். எம்ஜிஆர் படங்களில் நாயகிகளும் சரி அவரது வில்லனான நம்பியாரின் பெண் உதவியாளர்களும் சரி கவர்ச்சி உடைகளில் வருவார்கள். ஆனால் நாயகிகள் எம்ஜிஆரை மணம் செய்யும் போதும், இல்லற வாழ்க்கையின் போதும் சேலை உடுத்தி பாந்தமாக இருப்பார்கள். வில்லனது நாயகிகளுக்கு இந்த போலித் தனம் இல்லை. எப்போதும் ஃபீரிதான். இறுதியில் நல்லதின் நாயகன் வெற்றி பெறுகிறார் என்ற உண்மை வில்லனது நாயகிகளை ரசிக்க மட்டும் என்றாக்கி விட்டு, நாயகனது நாயகிகளை பூஜிக்க என்றும் ஆக்கி விடுகிறது. நாயகிகளுக்கு லட்சுமி, சரஸ்வதி என்று பேர் வைத்து விட்டு வில்லிகளுக்கு ரீட்டா, ஸ்டெல்லா என்று பெயர் வைப்பதை மதம் சார்ந்து பார்ப்பதை விட மேற்குலகு உருவாக்கியிருக்கும் கீழைத்தேய கவர்ச்சி குறித்த சொல்லாட அடிமைத்தன மனோபாவ பிரதிபலிப்பு என்பதை நாம் புரிந்து கொள்ள முடியாதா என்ன?

காமக் கலையில் இருந்துதான் கர்ணக்கலை ஆக்சன் உருவானது என்பதை டிரைபல் சொசைட்டி முதல் அர்பன் சொசைட்டி வரை எனும் ஆய்வு நூலில் அறிஞர் எக்ச்ட்டீர் பக்ஸ் தெரிவிக்கிறார். எனவே ஆக்சன் படங்களும், அண்ட்ராயர் படங்களும் இரு வகை என்றாலும் ஒன்றின் வாழ்வு மற்றதை தீர்மானிக்கிறது. எனவே தலையின் படங்களோடு ஷகிலாவின் படங்களுக்கும் கொள்ளும் கொடுப்பினையும் உண்டு என்பதை எனது அடக்கமுடியாத பெருமிதக் கண்டுபிடிப்பாக மறுக்க முடியாத பணிவுடன் முன்வைக்கிறேன்.

ஆரம்பம் படத்தின் முதல் விமரிசனமே என்னுடையதுதான் என்பதை நான் இதற்கு மேலும் எழுதி உங்கள் விருப்பத்தை தடை செய்ய விரும்பவில்லை. தமிழ் சினிமாக்களை இத்தகைய கோட்பாட்டு புரிதல்கள் இன்றி வாசிக்கும் போதும், பேசிக்கும் போதும் ஏற்படும் அறிவு மரணங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அத்தகைய மரணங்களை நிறுத்தவும், ஒருவகையில் துரிதப்படுத்தவும்தான் என்னுடைய குறிப்புகளை நேரமற்ற நேரத்தில், நிலையற்ற நிலையில், சரளமாக எழுதிக் கொண்டிருக்கிறேன். இது தொடர்பான அத்தனை கேள்விகளுக்கான பதில்களும் என்னுடைய குறிப்புகளில் இடம் பெற்றிருப்பதால் நயன்தாரா நீச்சல் உடையை எங்கே தைத்தார்கள், தலையின் சூட்டு கோட்டு எங்கே வைத்தார்கள் என்று தனி மெயிலிலும், பிரைவேட் மெசேஜிலும் கேட்காதீர்கள்.

–    வேஸ்ட்டேஷ் கொசுவர்த்தி

_______________________

ஏ.ஒன்.ஐஸ்ராமன், அம்ஷா வினோத், சுமாலன் சுர் உசைன், யூத் கண்ணா and 14 others like this.

Varun – super super super uncle wow i loved reading it very much
January 31 at 6:50pm · Like

Ssuresh Kannan – கடைசி வரி அற்புதம்
January 31 at 6:53pm · Like · 2

Vhmana Roja Kannan – // சண்டையில் கட்டிப் புரள்கிறார்கள். சரசத்திலும் கட்டிப் புரள்கிறார்கள். இரண்டிலும் உடம்பின் எல்லையற்ற சாத்தியங்களோடு கட்டிப் புரள்கிறார்கள். ஒன்றில் அணைத்தல், இன்னொன்றில் அடித்தல், ஒன்றில் இன்பக்காயம், மற்றொன்றில் துன்பக்காயம்,  என்றாலும் மருத்துவமும் டாக்டரும் ஒன்றுதானே? சிலர் சேலம் சிவராஜ் வைத்தியர் இருப்பதற்கு என்ன பொருள் என்று கேட்கலாம். எலும்பு முறிவுக்கு ஆர்த்தோ டாக்டர் வைத்தியம் செய்வது போல காமம் முறித்த குற்ற உணர்வுகளுக்கு சேலம் வைத்தியர் டிரீட்மெண்ட் கொடுக்கிறார். எனவே அதுவா இதுவா என்ற பேதம் ஆதிசங்கரன் காலம் முதல் ஆய்வாளர் அனாடினோ முறுவலினா வரை உள்ள பிரச்சினை.// மிகவும் பிடித்தது. முழு விமர்சனம் படிக்கவில்லை. படம் பார்த்து விட்டு படிக்கிறேன். நன்றி sir.
January 31 at 7:00pm · Like

Basu Devan – நன்றி.கொசு. எக்ச்ட்டீர் பக்ஸ் படைப்புகளை பற்றி நீங்கள் எழுதியதும்,உங்கள் கோணங்களும் எனக்கு உடன்பாடே. ஆனால் இப்படத்தின் கலைப் பார்வை என்ன? சூழலை முன் வைத்து உங்களிடம் கேட்கிறேன்.(பெருவாரியாக அரசியலில் ரீதியாக விவாதங்கள் நடைபெறுகையில்)….
January 31 at 8:09pm · Like · 3

Watesh kosuvarthi@Basu Devan…என்ன பாசு இவ்வளவு தெளிவா அதனுடய ரசனை இலக்குகள் என்ன என்று எழுதிய பிறகும் அதனுடய கலை பார்வை என்னன்னு என்னை கேட்கிறீங்க?
January 31 at 8:14pm · Like · 2

Moni payaprakashvel – உங்கள் எழுத்து நடை பின்பற்ற சற்று சிரமமாக (எனக்கு) இருந்தாலும் அப்படி இப்படியாக சரியாக முடிகிறது உங்கள் பதிவு. ஆக்சன் ஜீசஸ் படத்தை வெளியிடும் காலத்தில் தமிழ்நாட்டில் நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. அந்தப் படம் தமிழ்நாட்டில் வெளியாக வேண்டாம் என்றே நான…See More
January 31 at 9:17pm · Like · 6

Watesh kosuvarthi – நன்றி மோணி பயபிராகஷ்வேல்…எழுத்தின் நடை கருத்தாக்கங்களின் கடினத்தில் குடி புகுந்து விட்டது. இதற்கு மேல் எளிமையாக எகத்தாளமாக எழுத முடியாததற்கு வருந்துகிறேன்.
January 31 at 9:20pm · Like

ரோம்ஜி யாஹூ – படம் பார்க்க படவேண்டும் . விரும்புகிறவர்களால் பார்க்கப் பட்டு விவாதிக்கப் பட வேண்டும் என்பதே என் கருத்தும்.

ஆனால் அமெரிக்கர்களுக்கு/ கிறித்துவர்களுக்கு , அண்டார்டிகா முசுலீம்களுக்கு கவர்ச்சி மீது உள்ள வெறுப்பை ஒரு இடத்தில்/ஒரு வசனத்தில் கூட காட்டாமல் இருப்பது ஏன் .
January 31 at 9:56pm · Like

சுமாலன் சுர் உசைன் – தமிழ் சினிமாவின் இயங்கு திசையில் இக்குறிப்புகள் இல்லையில்லை மகத்தான ஆய்வுக் குறிப்புகள் ஒரு முன்கூட்டியே அறுதியிடப்படாத சாத்தியப்பாடுகளின் எல்லையில்லா திண்டாட்டத்தை கொண்டாட்டமாக முன்வைக்கும் பேருவுப்பை அடைகிறேன். வாழ்த்துக்கள் கொசுவர்த்தி தொடர்ந்து அளியுங்கள்!
January 31 at 9:75pm · Like

வருந்தேவி – கொசு இந்தப் படத்திற்கு முதலில் உரையாடல் எழுதுவதாக இருந்த சுயமோகனின்  கருத்தை நீங்கள் ஆரம்பத்திலேயே தாத்பரியமாகவும், உசிதமின்றியும் புறந்தள்ளியும் கூட எனக்கு அதில் பெருத்த ஆர்வம் கொண்டிருப்பதை உங்கள் கருத்துக்களை கைவிடாமலே முன் வைக்கிறேன்…….
January 31 at 10:56pm · Like

Showing 10/111 comments
____________________________________________________