privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமீட்டர் பொருத்திய மனங்களுக்கு...

மீட்டர் பொருத்திய மனங்களுக்கு…

-

சாதாரண மனிதர்களின் தவறுகள் ரோட்டில் நடக்கும் தவறுகளாக இருக்கின்றன. பளிச்சென தெரிந்து விடுகின்றன. தள்ளு வண்டி வியாபாரிகள், சிறுகடை வியாபாரிகள், எரிவாயு உருளை கொண்டு வந்து போடும் தொழிலாளர்கள் இவர்களின் தவறுகளும், ஒழுங்கீனங்களும் உடனே மக்களின் விவாதத்துக்கு வந்து இந்த வகையான வர்க்கங்கள் ஒட்டு மொத்தமாக ரொம்ப திமிர் பிடித்தவர்கள் என்ற புனைவுகளும் பரவி விடுகின்றன. அந்த வகையில் நகர்ப்புற மத்தியதர வர்க்கத்தின் மதிப்பீட்டில் ‘பெயரெடுத்தவர்கள்’ ஆட்டோ தொழிலாளர்கள். ஆட்டோ தொழிலாளர்களில் ஒரு சிறிய பகுதியினரின் அடாவடி, அதிக கட்டண வசூல் போன்ற செய்கைகளால் எரிச்சலடைந்த நடுத்தர வர்க்கத்தின் புழுக்கத்தை சேர்த்துக் கொண்டு அரசு ஆட்டோ தொழிலாளிகள் மீது கட்டுப்பாடு என்ற பெயரில் ஒரு திடீர் தாக்குதலையும், அதை விட அங்கங்கே செக்கிங், வண்டி பறிமுதல், சிக்னல்களில் அறிவிப்பு என ஏறக் குறைய ஆட்டோக்காரர்களை ஒரு சமூக விரோதிகள் போல சித்தரிக்கிறது அதிகார வர்க்கம்.

ஆட்டோநடக்கிற நிகழ்வுகளின் ஆதாயம் காரணமாக நடுத்தர வர்க்கத்திடமும் ஒரு குரூர மகிழ்ச்சி! அரசு வழக்கம்போல நடுத்தர வர்க்கத்தை தாக்கும் போது அடித்தள மக்கள் பக்கம் நின்று கொண்டு வயிற்றெரிச்சலை தூண்டுவது, அடித்தர மக்களைத் தாக்கும் போது நடுத்தர வர்க்கத்தின் பக்கம் நின்று கொண்டு ”வச்சான் பாரு ஆப்பு!” என தூண்டுவது என்பதை திறம்படச் செய்கிறது.

ஆட்டோக்காரர்கள் தவறே செய்யாதவர்கள் அல்ல, என்பது நமது வாதமல்ல. முறைபடுத்தப்படாத தொழிலாளர்களிடம் விளையும் தவறுகளுக்கு அவர்கள் தரப்பை தண்டிப்பதும், கண்டிப்பதும் இருக்க வேண்டும், ‘இல்லாவிட்டால் எப்படி சார்!’ என்று நியாயம் பேசுபவர்கள், இந்தத் தவறுகளுக்கான சமூகக் காரணங்களையும் நிதானமாகக் கண் கொண்டு பார்ப்பதுதான் சமூகப் பொறுப்பின் லட்சணமாகும். வாழ்வதற்கான எந்த சமூகப் பொருளாதார வரையறைகளையும், அடிப்படைகளையும் ஏற்படுத்தித் தருவது நமது வேலையல்ல, எனக்கு மட்டும் இஞ்ச் குறையாமல் முறையான சேவைகளை வழங்க வேண்டும் என்பதில் நியாயமுள்ளதா?

அதாவது முறைப்படுத்தப்படாத, உதிரித் தொழிலாளிகளுக்கு குறைந்தபட்ச சம்பளம், வாடகை, வீடு, மருத்துவம், பிள்ளைகள் கல்வி… போன்ற சமூகப் பாதுகாப்பு விசயங்களில் எனக்கு அக்கறையில்லை, இவைகளைப் பற்றியெல்லாம் பேசமாட்டேன், ஆனால் அந்தத் தொழிலாளிகள் மட்டும் எனது பொருளாதார நலனைப் பற்றி சிந்திப்பவர்களாக பணியாற்ற வேண்டும் என்பது எந்த வகை பொது நியாயம்? சுருங்கச் சொன்னால் வாழ்வதற்கு அடிப்படை இல்லாமல் சிலருக்கு சமூகத்தை விரோதியாக்கிவிட்டு, சமூக விரோதிகள் என்று கூச்சலிடுவது பிரச்சனையை தீர்க்குமா?

ஆட்டோ தொழிலாளர்கள் அரசிடம் கேட்பது என்ன? குறைந்தபட்ச மீட்டர் கட்டணம் 30 ரூபாய், கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் எனக் கேட்டனர். இன்றுள்ள விலைவாசி உயர்வு, நாள் தோறும் ஏறும் எரிவாயு, எரிபொருள் அடாவடி என்றச் சூழலில் இதை வழங்குவது நியாயமானதே. ஜெயலலிதாவிடம் சீட் நுனியில் வழுக்கி விழும் அதிகாரிகள் மத்தியில் ஆட்டோ தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு, எதார்த்த நிலைமைகளை விவரித்து / விவாதிக்கும் அளவுக்கு நடந்திருக்கும் என்பது நம்மால் யூகிக்கமுடியாத ஒன்றல்ல, குறைந்தபட்சம் ரூ 25, கிலோமீட்டருக்கு ரூ 12 என ஜெயா அரசு ‘சூடு’ வைத்து அனுப்பி விட்டது. ‘காசு பணம், துட்டு மணி’ என்று ஆயுத பூஜைக்கு செட்டு போட்டு கலக்கும் சி.ஐ.டி.யூ. போலி கம்யூனிஸ்டுகளின் சங்கத்திற்கு அம்மாவுக்கு ஓட்டு கேட்க தெம்பிருந்ததே ஒழிய, அம்மாவிடம் தொழிலாளிகளுக்காக உரிமை கேட்க, எதிர்த்து வாதாட வாயில்லை! ஆட்டோ தொழிலை முறைப்படுத்த அம்மாவிடம் போய், கடைசியில் ஆட்டோ தொழிலையே விட்டு ஓடும்படி ஆகி விட்டது தொழிலாளர்களின் நிலைமை.

உடனே, தொழிலாளர்கள் என்பதால், அவர்களின் அடாவடி, அதிக கட்டண வசூல் ஆகியவற்றை நியாயபடுத்த நாம் வரவில்லை. உண்மையாகவே இன்றைய சமூக, பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப முறைப்படுத்தப்படாத தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம், அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கு ஏற்றவாறு வழங்கப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும். அரசு ஊழியர் தொடங்கி ஆட்டோ தொழிலாளர்கள் வரை தங்களது நியாயமான கோரிக்கைகளுக்குப் போராடுவதைப் பல்வேறு வர்க்கங்களாக பிரிந்து நின்று வேடிக்கைப் பார்க்காமல் உழைக்கும் வர்க்கமாக முதலில் அங்கீகரிக்க வேண்டும். ஒருவர் தேவையை ஒருவர் உணர மறுக்கும் வேலியிட்ட பார்வைகளால் இன்று புலம்புவது ஆட்டோ தொழிலாளர்கள் மட்டுமல்ல, போதிய ஆட்டோ கிடைக்காமல் பயணிகளும்தான். ”நாள் வாடகை, வண்டி தேய்மானம், சாப்பாடு செலவு இத்தனைக்கும போக வீட்டுக்கு காசு தேறாமல் நான் எதுக்கு உனக்கு ஓட்டணும்” என்று ஆட்டோக்காரர்கள் பயணிகளை பகையாகப் பார்ப்பதும், ”எவ்வளோ காசு வாங்குன, இப்ப மீட்டர் போடுன்னா, வரமாட்டேன் வேற பக்கம் போறேன்னு போற, இன்னுமா திருந்தல” என்று பயணி நடுரோட்டில் புலம்புவதும்தான் நடக்கும்.

ஆட்டோ ஓட்டுநர்பொதுப் போக்குவரத்தின் தேவைகளுக்கு ஏற்ப பேருந்தை இயக்கச்சொல்லியும், நிறத்தையும், போர்வையும் மாத்திப் போட்டுக்கொண்டு அரசே அநியாய பஸ் கட்டணக் கொள்ளையடிப்பதை எதிர்த்துப் போர்க்குணமாகப் போராடி சாதிக்காமல், ஆட்டோக்காரனை அடக்கி விட்டதாக நடு ரோட்டில் நின்று மார்தட்ட முடியுமா?

வெறும், ஆட்டோ கட்டணத்தை முறைபடுத்து! என்ற நடுத்தர வர்க்கத்தின் கோரிக்கை, ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்க்கை மேம்பாட்டையும் முறைபடுத்தும் கோரிக்கைகளுக்கும் செவிசாய்க்க வேண்டும். அப்போதுதான் சமூகத்தை கொள்ளையடிக்கும் அரசு, அதிகாரவர்க்கம், ஆளும்வர்க்கம் ஆகிய இருவருக்குமான பொது எதிரி கண்ணுக்குத் தெரியும்.

சட்ட விதிகளுக்கு மாறாக ஓடும் ஆட்டோக்கள் பறிமுதல், தண்டனை என்பதை யாரும் மறுக்கவில்லை, ஆனால் அரசே F.C. க்கு லாயக்கில்லாத பேருந்தை பொதுப் பயன்பாட்டுக்கு விட்டு விபத்துக்குள்ளாக்குவதும், விபத்துக்குள்ளான பேருந்துகளின் ஆவணங்களையே எரித்து காணவில்லை என புளுகுவதும் எவ்வளவு பெரிய சமூக விரோதம். சமூகத்திற்கு விரோதமாக ஒரு அரசையும், அமைப்பையும் வைத்துக் கொண்டு அவ்வப்போது அதிலிருந்து உருவாகும் சமூக விரோதிகளை மட்டும் சட்டம் தண்டிக்கட்டும் என்பது முட்டாள்தனம். ஒரு வகையில் இங்கு குற்றங்களின் வர்க்க கொள்முதல்கள் தான் சட்டங்களே!

ஆட்டோ என்பதை ஏதோ ஒருவர் அவர் தேவைக்கு தொழில் செய்கிறார் என்று மட்டும் பார்க்க முடியுமா? எத்தனையோ மக்களின் அவசரத் தேவைகளுக்கு, ஒரு மழைக்கால மருத்துவமனைத் தவிப்புக்கு திடீர் அவசரத்திற்கு, நள்ளிரவில், நடு ரோட்டில் இப்படி தவித்திடும் பல தருணங்களில் நமது சமுதாய வாழ்வின் தேவைகளுக்கு தவிர்க்க இயலாமல் பயன்படும் ஒரு அவசியமான நம் தேவைக்குமான தொழில்தான் அது. போலீஸ்காரர்களும், அரசு உயர்ரக ஊழியர்களும், கட்சிக்காரர்களும் பினாமியாக ஆட்டோவை வைத்து இஷ்டத்துக்கு சம்பாதிக்க அனுமதித்து விட்டு, திடீரென எல்லா பழியையும் ஆட்டோ தொழிலாளி மேல் போட்டு, பிற பகுதி உண்மைகளை காணவும் நாம் மறுத்துவிடக்கூடாது. அரசு நிர்ணயித்திருக்கும் கட்டணப்படி ஒரு ஆட்டோக்காரர் அதிகப்படியாக ஒரு நாளைக்கு சராசரி ரூ 500-லிருந்து 600-வரைதான் வருமானமீட்ட முடியும். இது முப்பது நாளைக்கும் பொருந்தாது. ஒரு ஆட்டோக்காரர் ஒரு நாளைக்கு ரூ 500 சம்பாதித்தால் போதும் என்று வரம்பிடும் அரசுக்கு, இதே வரம்பை ஒரு முதலாளிக்கு பொருத்த முன்வருமா? தண்ணீர் கம்பெனி தொடங்கி, முதலாளிகளின் செல்போன் ரீ சார்ஜ் வரை ஒரு நாளைக்கு அவன் சந்தை தேவைக்கு ஏற்ற மாதிரி எவ்வளவு ரேட் வைத்து வேண்டுமானாலும் கொள்ளையடிக்கலாம், ஆட்டோக்காரன் மட்டும் 500 ஐ தாண்டக்கூடாது என்பது வர்க்க நியாயமின்றி வேறென்ன? எனவே அவர்களின் நியாயமான கோரிக்கையை பரிசீலித்து, விவாதித்து முடிவெடுக்க வேண்டும்.

அரசு கணக்குப்படி சவாரியை விட்ட அந்த இடத்திலேயே வேறு ஒரு சவாரி கிடைத்தால்தான் இந்த ஒரு நாள் பொழப்பும் கிடைக்கும். வெறும் ஆட்டோவாக குறைந்தது மூன்று கிலோமீட்டர், சவாரிக்காக சுற்றினால் ஆட்டோக்காரரின் நிலைமை கவலைக்கிடமாகும். வாரத்திற்கு வாரம், மாசத்துக்கு மாசம் தன் இஷ்டத்திற்கு உலகச் சந்தையைக் காரணம் காட்டி பொய் சொல்லி தாறுமாறாக விலையேற்றும் அம்பானியை மடக்கிப் பிடித்து ‘ரேட்’ பிக்ஸ் பண்ண துப்பின்றி, அரசு ஆட்டோக்காரனை மடக்கி, அடக்கி அவர்களின் நியாயமான கோரிக்கையை காலில் போட்டு மிதிப்பதை பயணிகளாகிய நாமும் கண்டிக்க கடமைப்பட்டுள்ளோம். உதிரித் தொழிலாளர்களின் தவறுகளை தட்டிக் கேட்க எல்லா உரிமையும் நடுத்தர வர்க்கத்திற்கு உண்டு, அதே நேரத்தில் உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணையாமல் உதிரிகளாகத் தன்னலம் மட்டும் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தை அரசியல்படுத்தி திருத்தும் உரிமை தொழிலாளர்களுக்கும் உண்டு!

– துரை. சண்முகம்

    • Porur to T.Nagar Town bus charge break up:

      1) Deluxe bus : Rs 11
      2) Express bus : Rs 8
      3) Ordinary bus : Rs 5

      I do not find any difference in quality among these buses. Can you advise me on this?
      Roughly, Deluxe stops in 8 stops, Express stops in 10 stops and Ordinary stops in 13 stops. But I do not find much difference in the travel time end to end. Can you advise me on this? If we don’t have separate roads / passages for these different type of buses, would there be any meaning in the cost difference?

      தன் குண்டியில் இருக்கும் புண்ணை சரிசெய்யாமல் அடுத்தவன் குண்டியில் இருக்கும் புண்ணை அரசாங்கம் சொறிந்து விடுவதேன்?

  1. //‘காசு பணம், துட்டு மணி’ என்று ஆயுத பூஜைக்கு செட்டு போட்டு கலக்கும் சி.ஐ.டி.யூ. போலி கம்யூனிஸ்டுகளின் சங்கத்திற்கு அம்மாவுக்கு ஓட்டு கேட்க தெம்பிருந்ததே ஒழிய, அம்மாவிடம் தொழிலாளிகளுக்காக உரிமை கேட்க, எதிர்த்து வாதாட வாயில்லை!//

  2. மற்ற முறைப்படுத்தாத தொழில்லாளர்களைவிட ஆட்டோ ஓட்டுனர்கள் சம்பாதிப்பது அதிகம்… துரை சண்முகத்துக்கு ஆர்வமும், அறிவும் இருந்தால் காலை 6 மணி முதல் இரவு 8 மணி முதல் ஒரு வாடகை ஆட்டோவை, ஓட்டுனருக்கு தெரியாமல் பின் தொடரட்டும்… வாரக்கடைசியில் மட்டும் ஒரு நாளைக்கு மூவாயிரம் வரைக்கும் ஓட்டும் ஆட்டோகாரன் ஆயிரம் பேர் இருக்கான்… சும்மாவா சென்னையில் மட்டும் 80 ஆயிரம் ஆட்டோகள் ஓடுது????? லாபம் இல்லாமல்லா இவ்வளவு ஆயிரம் பேர் ஆட்டோ ஓட்டுவார்?? ஒரு மாதத்துக்கு TVஸ் கம்பெனி மட்டும் 400 ஆட்டோ விற்ப்பனை செய்ய முடியுது என்றால் எப்படி??? அது மட்டும் அல்லாது மற்ற பல மாநிலங்களைவிட தமிழகத்தில் ஆட்டோவினால் வருமானமும், அட்டகாசமும், ஆட்டமும் ஒவர் தான்…. சும்மா யாரையாவது கவர் செய்ய வினவும், துரையும் முயலுவது, படிக்கவும், ஆராயவும்

    • வெறும் ரெண்டு லட்சம் பேர் இருக்கற சராசரி நகரத்துலயே ஐநூறுக்கும் குறையாமல் ஆட்டோ ஓடும்போது ஒரு கோடி பேர் இருக்கற சென்னைல எம்பதாயிரம் ஆட்டோ ஓடக்கூடாதா?

      நீ இவ்வளவுதான் சம்பாதிக்கணும்னு அரசாங்கம் இலக்க்கு எதுவும் வச்சிருக்கா? அரசாங்கம் சாராய விக்கிறதுக்கு வருஷ இலக்குன்னு ஒன்னு வச்சிருக்கும்போது ஆட்டோக்காரன் தன் குடும்பத்துக்குன்னு சொல்லி ஒரு இலக்கோட செயல்படக்கூடாதா? உனக்கு இஷ்டம்னா ஆட்டோல ஏறு, கஷ்டம்னா பஸ்ஸுல போ, குஷ்டம்னா கார்ல போ. யாரு வேணாம்னா?

    • ஆட்டோ மனோகரன் மதுரவாயல்!

      இந்தாப்பா, இந்தியா எதுக்கு உனக்கு எங்க மேல இவ்ளோ காண்ட்டு! முப்பது வருசமா ஆட்டோ ஓட்டி இடுப்பு வலி, கழுத்துவலி, மணிக்கட்டு, வெரலு நரம்பெல்லாம் வலி, உனக்கு பரவால்ல என்ன பாத்து வயுத்துல மட்டுந்தான் வலி… எனக்கு மதுரவயலு வீடு, தெனம் மேலு வலி பாக்காம காலில நாலு மணிக்கு எழுந்துருச்சு கோயம்பேடு சவாரி பாக்க போயிடுவேன். எட்டு மணிக்குள்ள ரெண்டு டீ, ஏழேழும் பதினாலு, பத்து மணிக்கு ரோட்டுக்கட இட்லி ஒரு இட்லி 5 ரூபா, மத்தியானம் அளவு சாப்பாடு 40 ரூபா, நைட்டுக்குள்ள ரெண்டு டீ, சிகரெட் செலவ சேக்குல, அதான் உனக்கு வெட்டி செலவு ஆவுது! உடனே ஏன் ஆறு இட்லி துன்றேன்னு கேட்டு வைக்காத… பசிக்குதுப்பா? கணக்கு போடு! வீட்ல சாப்புட முடியாம, நாளைக்கு 98 ரூபா ஆறது, வண்டி வாடகை 200, வழியில ‘மாமா செலவு’ எல்லாம் போக, கைல நானூறு சில நாள் 500 கொண்டுபோறேன். செல நாளு உன்ன மாதிரி கிராக்கி கூட மாட்டாது, கத அம்பேல்தான்! ரெண்டு புள்ள, பொண்டாட்டி, என்ன பெத்த ஆயா, எல்லாமே இதுக்குள்ளதான், ஒரு துக்குணுண்டு அடுப்படி, பத்துக்கு, பதினைஞ்சுல ஒரே ரூமு, இதுலதான் இத்தன பேரும் தெனம் 500, 600 கிடைச்சா போச்சு… இல்லாக்காட்டி தவனை வாங்கிதான் பொழப்பு போவுது! இத பாத்து அநியாயம்னு கூவுறியே, தப்பு செய்யுறவன தட்டிக்கேட்க துப்பு இல்லாம, எல்லா ஆட்டோக்காரங்களயும் அவன், இவன்னு பாய்ற! ஒரு அவருக்கு மொள மொளன்னு ஓதிட்டு கல்யாணம், கருமாதின்னு 5,000 -த்த புடுங்கிட்டு போறான் அய்ரு, போய், உன் இந்தியன் வேலய காட்டு பாக்கலாம்! எம் பொழப்பு! நான் ஏத்திக் கொடுன்னு போராடுறேன் உனக்கு அதிகமா பட்டா, வா, வந்து பேசு, முத்தரப்ப கூட்டி பேசுன்னு தானே ஆட்டோக்காரன் கேக்குறான், என்ன தப்பு!

      ஐ. டி. கம்பெனில ஓ. சி காரும், ஓ. சி சோரும் கட் பண்ணாலே, என்னனா ஆத்து ஆத்துற! நான் திடீர்னு புட்டுகிட்டா கூட குடும்பத்த காப்பாத்த அரசாங்கம் இருக்கா? யார் இருக்கா? தனியார்னாலும் கேசு போடுவ காசு கேப்ப! ஆட்டோக்காரன் கை, கால் நல்லா இருக்குற வரைக்கும்தான், மழைல வண்டி நின்னாலே நீ பாட்டுக்கும் என்ன வுட்டுட்டு உன் பொழப்ப பாக்க ஓடுற ஆளு நீ! என்னபத்தி எங் குடும்ப நிலவரம் பத்தி, உனக்கு தெரியுமா? இந்த ஓட்டு ஓட்டுற… பேசாம வந்து ஆட்டோ ஓட்டி உன் குடும்பத்த காப்பாத்து, அடுத்தவன் கஷ்டம் புரியும்! தோ பாரு, உன்னால இது வேற தெண்ட செலவு! உன்ன மாதிரி ஸ்டைட்டா அடிக்க எனக்கு வழியல்ல, ஆள வுட்டு அடிக்கிறேன், அதான் பா கம்யூட்டர சொல்றன்! அந்த ஃபிரண்டுக்கு வேற டீ செலவு, நெட் செலவு, சும்மா மொறைக்கற எங்க போவனும் வா வந்து ஏறிக்க!

  3. /////////ஆட்டோ தொழிலாளர்கள் அரசிடம் கேட்பது என்ன? குறைந்தபட்ச மீட்டர் கட்டணம் 30 ரூபாய், கிலோ மீட்டருக்கு 15 ரூபாய் எனக் கேட்டனர். இன்றுள்ள விலைவாசி உயர்வு, நாள் தோறும் ஏறும் எரிவாயு, எரிபொருள் அடாவடி என்றச் சூழலில் இதை வழங்குவது நியாயமானதே…………///////////…………ithil enna niyaayammoo me not understand…….call taxis run @ rs 13/km in the same chennai city………..

  4. தொழிலாளி எங்கேயோ அங்கே வினவின் முத்திரை இருக்கும்…ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிலாளிகள் அல்லவே.அவர்கள் லைசென்ஸ் கொள்ளையர்கள்.மும்பை நகரில் நான் 10 வருடத்திற்கு மேல் இருந்துள்ளேன்.மீட்டார் கட்டணம் தான்..டீஸல்/பெட்ரோல் விலை ஏறினாலும் அதற்க்கு ஏற்ப கட்டணம் மாறுகின்றது.(உ.ம்) அந்தேரி ரயில்வே ஸ்டேஷன் முதல் ஜெபி நகர் வரை எந்த ஆட்டோவில் ஏறினாலும் ஒரே கட்டணம் தான்.பணத்தை முன் கூட்டியே எடுத்து வைத்து கொள்ளலாம்.அந்த அளவு நேர்மை.இங்கே அப்படியா…! அடையார் முதல் எக்மோரே வரை மீட்டார் கட்டணம் Rs.230….. Rs.300 கொடுத்தேன்..மீதி 50 ரூபாய் தருகின்றான்.என் பணத்தை என் முன்னே களவாடி கொள்கின்றான்.நான் சும்மா இருக்க வேண்டியுள்ளது.இது போல பல தடவை.ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ஆட்டோவை அணுகினால் மீட்டார் போட்ட 200/மீட்டர் போடலேன்னா 175 என்று சொல்லவும்…சரி 25ரூபாய் மிச்சம் ஆகின்றதே என்று நினைத்தால் மீட்டார் போட்டு 130 தான் வந்தது….எவ்வளவு பெரிய திருட்டு/ஏமாற்று/கொள்ளை/…..?! அவனுக்கு மட்டும் தான் பெட்ரோல்/டீஸல் விலை ஏற்றபட்டுளாதா?எனக்கும் அதே சுமை தானே…!வினவு சும்மா எல்லாத்துக்கும் கட்டூரை வடிக்காதே….உண்மை நிலவரம் தெரிய ஆட்டோவில் பயணித்து பார்.
    ஆனால் இவனுங்க பண்ணுற அநியாத்திற்கு call taxi /share auto முடிவு கட்ட வந்தது….!தொழிலாளி எங்கேயோ அங்கே வினவின் முத்திரை இருக்கும்…ஆனால் ஆட்டோ ஓட்டுனர்கள் தொழிலாளிகள் அல்லவே.அவர்கள் லைசென்ஸ் கொள்ளையர்கள்.மும்பை நகரில் நான் 10 வருடத்திற்கு மேல் இருந்துள்ளேன்.மீட்டார் கட்டணம் தான்..டீஸல்/பெட்ரோல் விலை ஏறினாலும் அதற்க்கு ஏற்ப கட்டணம் மாறுகின்றது.(உ.ம்) அந்தேரி ரயில்வே ஸ்டேஷன் முதல் ஜெபி நகர் வரை எந்த ஆட்டோவில் ஏறினாலும் ஒரே கட்டணம் தான்.பணத்தை முன் கூட்டியே எடுத்து வைத்து கொள்ளலாம்.அந்த அளவு நேர்மை.இங்கே அப்படியா…! அடையார் முதல் எக்மோரே வரை மீட்டார் கட்டணம் Rs.230….. Rs.300 கொடுத்தேன்..மீதி 50 ரூபாய் தருகின்றான்.என் பணத்தை என் முன்னே களவாடி கொள்கின்றான்.நான் சும்மா இருக்க வேண்டியுள்ளது.இது போல பல தடவை.ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல ஆட்டோவை அணுகினால் மீட்டார் போட்ட 200/மீட்டர் போடலேன்னா 175 என்று சொல்லவும்…சரி 25ரூபாய் மிச்சம் ஆகின்றதே என்று நினைத்தால் மீட்டார் போட்டு 130 தான் வந்தது….எவ்வளவு பெரிய திருட்டு/ஏமாற்று/கொள்ளை/…..?! அவனுக்கு மட்டும் தான் பெட்ரோல்/டீஸல் விலை ஏற்றபட்டுளாதா?எனக்கும் அதே சுமை தானே…!வினவு சும்மா எல்லாத்துக்கும் கட்டூரை வடிக்காதே….உண்மை நிலவரம் தெரிய ஆட்டோவில் பயணித்து பார்.
    ஆனால் இவனுங்க பண்ணுற அநியாத்திற்கு call taxi /share auto முடிவு கட்ட வந்தது….!

  5. The cost of living and petrol in Bangalore is more than Chennai. How come Bangalore auto drivers charge as per meters? BTW auto fares are less than Chennai. When all autos in all major cities charge as per meter, what is the problem with Chennai autos?

    Do not blindly support auto drivers. Do you know one can travel by Fast Track air-conditioned taxi and still pay less than auto fares in Chennai? Auto drivers are losing their business due to their greed and stupidity.

    jas

    • Hi Jas, I hope that you aware that we are in Globalization era. So called “FREE MARKET” rules the world and India now. Why you people don’t apply that logic to Auto drivers? (I am saying about both Chennai and Bangalore auto drivers) Why you are imposing and compelling auto drivers to do that? Why Auto drivers should not earn more and build “Apartments and Bungalows?” Ask you heart and answer me.

      I am not advocating for Auto drivers in specific and I don’t have any point of view about the charges. My QUESTION HERE is very simple. Why FREE MARKET THEORY is not applicable for Auto Drivers? (Autos including Chennai, Delhi, Bangalore, Mysore, Udumalaipettai, Sangaralingapuram, Athipatti, Kolkata, Urapakkam, Uthiramerur, etc. Whatever Village or City or State or Country!!)

  6. நாற்பது லட்ச ரூபாய்க்கு வீடு வாங்குறேன்னு வச்சிக்கோ. அரசாங்கம் நிர்ணயிச்ச படி பத்திரச் செலவு நாலு லட்ச ரூபா வருதுன்னா நாலு லட்சம் கட்டி வாங்குவியா? அல்லது இருபது லட்ச ரூபாய்க்கு வாங்கினதா சொல்லி அதிகார வர்க்கத்துக்காரன்கிட்ட பத்தாயிரத்த தள்ளிவிட்டு ரெண்டு லட்சத்த மிச்சம் புடிப்பியா? அந்தக் கணக்க யாரு கேட்குறது? நீ செய்றது உன்னளவில இன்டெலிஜென்டுன்னா ஆட்டோக்காரன் அவனளவுல இன்டெலிஜென்டா இருக்க நெனக்க மாட்டானா? ஓரமா ஒளிச்ச வச்சிருக்கற மனசாட்சிட்ட கேட்டுச் சொல்லு கண்ணு.

  7. Please try to understand the real situation, just compare the chennai with Bangalore, mumbail even kolkata, but 25rs is lower than other states, still am seeing in chennai lot of autos are running without meter, Do not support everyone Vinavu, i think this article is just came from some auto union and real people, just think about people are fighting for everywhere for evrything( including Qualtiy education at free of cost, Natural lobbery )
    But why no one comes for auto drivers in chennai… Think about that. atleast one person has to come. but in this situation no one , When did they work as auto driver ( work is worship )…… Please do not support evry thing Vinavu

  8. While I agree that the reasonable demands of Chennai auto-workers must be collectively met by the society, the approach, most auto drivers follow in Chennai is unacceptable;
    The following may be the root causes:
    1. Most autos not owned by drivers – paying hire charges, fuel, spares/repair cost, mamul makes the model un viable.
    2. Police more interested in Mamuls than disciplining erring drivers. In Mumbai, there is fear among drivers to commit anything wrong
    3. Most drivers who are complaining lack of income, spend their time idle refusing to play / demanding excess fare from people with luggage, elderly people who needs the service desperately. If they create confidence among users more business will automatically come. the maintenance costs etc will then only breakeven
    4. Government must introduce CNG autos and adequate vending infrastructure like New Delhi
    5. Frequent Petrol price rise.
    6. No formal training / orientation to these entrepreneurs to run the business successfully. They can think of cooperative model for their needs become a unified power (no political party affiliation should be there) anti-socials in this profession should not be given membership).
    The auto workers must realize that the lower middle class also suffering from the same problems as that of auto drivers. There is no point in complaining how others are earning in other professions. The profession is chosen by them. nobody compelled them to become auto driver. if karma/ talent was there they could have become online share broker or pawnbroker or supreme court lawyer.

    Manmathan

    • //The auto workers must realize that the lower middle class also suffering from the same problems as that of auto drivers. There is no point in complaining how others are earning in other professions. The profession is chosen by them. nobody compelled them to become auto driver. if karma/ talent was there they could have become online share broker or pawnbroker or supreme court lawyer. //

      அய்ய்ய்யோ சாமீ! எங்க போயி முட்டிக்கறது. அதத்தான்யா நானும் சொல்லுதேன். எல்லோரும் அவங்க தொழிலை இஷ்டப்பட்டோ கஷ்டப்பட்டோ தேர்ந்தெடுக்கறாங்கதான். அவங்கள ஒழுங்கா தொழில் செய்ய விடுங்கன்னுதான் ரொம்ப கெஞ்சிக்கேட்கறேன். மிடில் கிளாஸ் வாயிலயும் வயித்துலயும் அடிச்சிக்கிதுல்ல. அதேமாரித்தான் ஆட்டோக்காரங்களுக்கும் இருக்கும்னு நெனைச்சு கொஞ்சம் மனசு வைங்களென். இதே மிடில் கிளாஸுக்கு சினிமா கொட்டகைக்கு அளவுக்கு மிஞ்சின காசு கொடுக்கறதுக்கு வக்கு இருக்கு. அதிகார வர்க்கம், அரசியல் வர்க்கம் எல்லா வகையிலயும் இந்த மிடில் கிளாஸ் கோவணத்தை உருவுவான். ஆனா ஒரு பய அத கேக்க மாட்டான். ஆனா ஆட்டோக்காரனப் பாத்தாமட்டும் ரொம்ப வவுரு எரியுது. எந்த ஊரு நியாய்ம்டா இது?

  9. ஆட்டோ ஓட்டுபவர்கள் சமூக விரோதி போல அரசும், சமூகத்தில் சில சாரரும் சித்தரிக்கின்றனர். ஒரு சில ஓட்டுநர்கள் அடாவடித்தனமாக நடக்கலாம். அரசு மூலைக்கு மூலை டிஜிட்டல் போர்டு வைத்து ஆட்டோ கட்டணத்தை விளம்பரப்படுத்துகிறது. அத்துடன் புகார் செய்ய போன் நம்பர் வேறு. தனியார் கல்வி நிறுவனங்கள் இவ்வளவு தான் மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு கமிட்டி மூலம் நிர்ணயம் செய்துள்ளது அதை ஏன் டிஜிட்டல் போர்டு மூலம் விளம்பரம் செய்யவில்லை? புகாருக்கு போன் நம்பர் கொடுக்கவில்லை? இது தான் அரசு என்பது வர்க்கம் சார்ந்தது என்பதற்கான நிரூபணம்.

    வர்க்கத்தமிழன்

  10. ஆட்டோவிற்கு முறைப்படுத்தப்பட்ட கட்டணம் எப்பொழுது நியாயமாகும் என்றால் அதே போன்ற முறைப்படுத்தப்பட்ட கட்டணம் மருத்துவர்களுக்கும், பொறியாளர்களுக்கும், வக்கில்களுக்கும், இது போன்ற மற்ற எல்லோருக்கும் அமலாகும் போதும், பொருள்களின் விலைகள், வீடு வாடகை போன்றவை முறைப்படுத்தப்படும் போதும் தான்.

    அதுவரை ஆட்டோவிற்கு முறைப்படுத்தப்பட்ட கட்டணம் என்பது எளியவா்களை சுரண்டலே. சுரண்டலுக்கு எதிரானவர்கள் ஆட்டோ மீட்டரை ஏற்றுக் கொள்ளக்கூடாது.

  11. Selva, Indian, kumar, kingsly, jas – எல்லாரும் எங்கயா போணீங்க கேட்ட கேள்வுகளுக்கு பதில் சொல்லாம..

    • ///////////When NAMMA AUTO is able to do it why others don”t////////////////,,,,,,,,,,,,,,,MR SARVEDI SIR, YOUR VIEW POINT PLEASE?

      ///////// mr .சரவெடி 20லட்ச ரூபா வீடு…40 லட்ச ரூபா மனை இது….விவாதத்தில் ஒவ்வாத வாக்கியம்.நேர் பதில் இல்லாது எங்கோ சுற்றுவது….!வியாபாரம் ஆட்டோவிர்ற்கு மாத்திரமல்ல தொழில் நடத்தும் அனைவருக்கும் பொருந்தும்…ஒரு நாள் அதிகபடியான வியாபாரம்….மற்றொரு நாள் மந்தம்….அது மளிகை கடை/பெட்டிக்கடை/நகைக்கடை/பள்ளி/கோடிகளில் நடக்கும் தொழில் எல்லாவற்றிலும் ஏற்றம் இறக்கம் உண்டு///////////////…………

      ANNEY NEENGAA ENNANANEY ITHUKKU BATHIL SOLREENGAAAA????????????

  12. இந்த கேப்மாரிங்களாம் மினுக்மினுக்கா கையில செல்போனு வச்சிருக்குறானுவளே அதோட கம்பெனி லாபம் என்னான்னு தெரியுமா இவனுங்களுக்கு.

  13. நல்ல கட்டுரை.

    இதே பொருளில் முன்பு பேஸ்புக்கில் நான் பங்கெடுத்த விவாதம் ஒன்றை சுருக்கி கீழே கொடுத்துள்ளேன். மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் ரிபீட் ஆவதற்கு மன்னிக்கவும்!

    பீட்சா முன்னூறு ரூபாய். ஐநாக்ஸ் டிக்கட் நூறு ரூபாய். அங்கே ஒரு சின்ன பாப்கார்ன் பொட்டலம் ஐம்பது ரூபாய். ஐந்து ருபாய் அடக்க விலையுள்ள தோசை சரவண பவனில் ஐம்பது ரூபாய். ஐநூறு ரூபாய் சாப்பாடு விற்கும் இடங்கள் உண்டு. அங்கே, இங்கே ஸ்டெதாஸ்கோப் வைத்து விட்டு டாக்டர் கேட்கும் பீஸ் முன்னூறு ரூபாய். மெஷின் வாங்கிப் போட்டபின், அதிக செலவு பிடிக்காத ECG ஐநூறு ரூபாய். echo எடுத்தால் மூவாயிரம். ஒரு சட்டை ஐநூறு, ஆயிரம். எங்கும் பேரம் கிடையாது. ஆனால், தெருவில் காய்கறி விற்பவரிடம் ஐந்து ருபாய் குறைக்க சொல்லி வாக்குவாதம். பத்து ரூபாய்க்காக ஆட்டோகாரரிடம் “இதென்ன கொள்ளை” என பேச்சு. குனிய குனிய குட்டும் செயல்.

    தரத்துக்கு தகுந்தவாறு பைசா வசூல் என ஒரு வாதம். என்ன தரம்? ஐநூறு ருபாய் சாப்பாடு சகிக்கவில்லை. வீட்டில் கிடைக்கும் புளியோதரை அமிர்தம். சரி, போகட்டும். தரமானவை என்றே கொள்வோம். மேலே சொன்னவருக்கெல்லாம் தமது தரம் என்ன, விலை என்ன நிர்ணயிக்க அதிகாரம் உண்டு. ஆட்டோக்காரருக்கு அந்த உரிமை கிடையாதா? அங்கே ஒப்புக்கொள்ளப்படும் மார்கெட் டைனமிக்ஸ் எல்லாம் இங்கே கிடையாதா?

    பல்லிருக்கிரவன் பக்கோடா தின்கிறான் என்பர் சிலர். மேலே ஒரு நண்பர் சொன்னது போல, ஆட்டோவுக்கு மட்டும் இது பொருந்தாதா? அவன் ஆட்டோ. இஷ்டப்பட்ட கூலி கேட்பான். பல்லிருந்தால் பக்கோடா தின்னு. இல்லாவிட்டால், பல்லவன், நடராஜா சர்வீஸ், ஷேர் ஆட்டோ, டாக்சி என ஓடிப்போ.

    பீட்சா ஒரு அத்தியாவசிய பண்டமல்ல. ஆட்டோ முக்கியம் என்றொரு வாதம். அப்படியா? எனில், ஆட்டோக்காரன் அல்லவா நல்ல வாழ்க்கை வாழ வேண்டும். முக்கிய சேவை செய்பவனை நடத்தும் விதமா இது?

    ரெஸ்டாரென்ட், ஆஸ்பித்திரி எல்லாம் தரம் வேறுபாடும் இடங்கள். சாதா ஓட்டல், ஸ்பெஷல் ஓட்டல் என உண்டு. முறைப்படுத்த முடியாது. ஆட்டோ அப்படி அல்ல. எல்லோ ஆட்டோவும் ஒன்றுதான் என்றொரு கருத்து.Commodity. எனவே, ஆட்டோவை கட்டுப்படுத்த வேண்டும் என்றொரு வாதம்.

    சரி ஒழிந்து போகட்டும். மக்கள் நலன் என்ற பெயரில் அரசு முறைப்படுத்தட்டும். ஆனால், இவர்கள் நிர்ணயிக்கும் கட்டணத்தில் ஆட்டோ ஓட்டுபவனால், தனது குடும்பத்திற்கு அடிப்படை வசதிகள் செய்து தர முடியுமா? இங்கே ஒரு நாள் கூலி ஐநூறு என சொல்லப்பட்டது. மாதம் 25 நாள் வேலை செய்தால் 12500 வரும். சர்வே எல்லாம் எடுத்து ஆராய்ந்து எழுதப்பட்ட ஒரு கட்டுரையிலும் இதை ஒத்த தகவல் படித்தேன் (சுட்டி கைவசம் இல்லை). இந்த வருமானத்தில் சென்னையில் உயிர்வாழ முடியுமா? சொல்லிக் கொள்ளும்படியான வீடு வாடகை குறைந்தது 10000 ஆகும். பிள்ளைகள் பள்ளிச் செலவு. மருத்துவம். உணவு, உடை. நீ மட்டும் வாரம் ஒருமுறை ஐநாக்ஸில் குளு, குளு சினிமா பார்க்கிறாயே. அவனும், அவன் குழந்தைகளும் பார்க்க வேண்டாமா? பார்க்கு, பீச்சு என கூட்டி செல்ல வேண்டாமா?

    இதற்கு பதிலாக, “நான் படித்தேன். நான் சம்பாதிக்கிறேன். அவனும் செய்ய வேண்டியது தானே. அவன் நல்வாழ்கை பற்றி நான் என்ன செய்ய முடியும்” என்பர் சிலர். எனில், அவனது தொழிலை முறைப்படுத்தும் அதிகாரம் மட்டும் உனக்கு எங்கிருந்து வருகிறது?

    முதலில், அடிப்படை வசதிகள் பெற ஒருவனுக்கு எவ்வளவு வருமானம் தேவை என்பது நேர்மையாக கண்டறியப்பட வேண்டும். அதை ஒட்டி ஆட்டோ கட்டணம் போன்றவற்றை நிர்ணயித்தால் ஏற்க முடியும்.
    மாறாக, அரசு நிர்ணயிக்கும் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு உழைப்பவனால், அடிப்படை வசதிகள் அடைய முடியாது என்றால், அந்த விதிமுறைகள் அரக்கத்தனமன்றி வேறென்ன?

    • வெங்கடேசன் அவர்களே,

      “நம்ம ஆட்டோ” என்கின்ற அமைப்பு கிலோமீட்டருக்கு 10 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டினார்கள் இல்லையா? அவர்கள் ஒரு நாளைக்கு 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வீட்டுக்கு கொண்டு சென்றார்கள் இல்லையா? இப்போது தான் அவர்கள் கிலோமீட்டருக்கு 12 ரூபாய் அரசு நிர்ணயித்த கட்டணம் வசூலிக்கிறார்கள். அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது?

      கால் டாக்ஸி கிலோமீட்டருக்கு 17 ரூபாய்க்கு வருகிறார்களே. அவர்களால் மட்டும் எப்படி முடிகின்றது? எண்ணிப்பார்த்தீர்களா? இதெற்கெல்லாம் தான் நெட்வர்க் தேவை. 1000 ஆட்டோக்கள் ஒன்றாக இணைந்து கால் டாக்ஸி எப்படி இயங்குகின்றதோ அதே முறையில் ஃபோன் செய்தால் பிக் அப் என்கின்ற முறையில் இயங்கினால் கண்டிப்பாக ஆட்டோ தொழிலாளி சராசரி 1000 ரூபாய் சம்பாதிக்க முடியும். அதற்கான நடவடிக்கை ஏன் யாரும் எடுக்க மாட்டேன் என்கின்றீர்கள்? ஆட்டோ தொழிற்சங்கங்கள் இந்த முறைக்கான முயற்ச்சியில் ஈடுப்படவேண்டும். அப்போது ஆட்டோ தொழிலாளி பிழைப்பான்.

      இப்படி நெட்வர்க் அமைத்து ஆட்டோ ஓட்டினால் இப்போது நிர்ணயித்துள்ள கட்டணமே போதுமானது. அப்படி இல்லாவிட்டால் ஆட்டோ தொழில் நசிந்துப்போவதை யாராளும் தடுக்க முடியாது. ஷேர் ஆட்டோக்களும், மினி பஸ்களும், மெட்ரோ ட்ரைன்களும், கால் டாக்ஸிகளும் இயங்கும் காலத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டு உணமையான ரோட்டின் ராஜாவாக திகழவேண்டும் என்பது தான் என்னைப் போன்றோரின் விருப்பம்.

      • // அவர்கள் ஒரு நாளைக்கு 800 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வீட்டுக்கு கொண்டு சென்றார்கள் இல்லையா? //

        சார், ஆதாரம் கொடுங்க.

        • பாஸ்!

          கீழே கொடுத்திருக்கிற லிங்கை பிடிச்சிப் போய் படிச்சிப் பாருங்க. உங்களுக்கே உண்மை புரியும். நேர்மையாக மீட்டர் போட்டு ஓட்டும் ஆட்டோ டிரைவர்கள் எவ்வளவு சம்பாதிக்கிறார்கள் என்பது நன்றாக புரியும்படி உள்ளது

          http://www.thehindu.com/news/cities/chennai/for-this-chennai-auto-driver-meter-ticks-and-money-pours-in/article5138991.ece

          இது “நம்ம ஆட்டோ” அவர்களின் Facebook பக்கம். போய் பார்த்து படித்து உண்மையை புரிந்துக் கொள்ளுங்கள் தோழரே!

          https://www.facebook.com/pages/Namma-Auto/481244135248370

          • நீங்கள் கொடுத்த facebook பக்கம் படித்துப் பார்க்கிறேன். நன்றி.

            ‘நம்ம ஆட்டோ’ செயல் அதிகாரியும், அதன் ஒருங்கிணைப்பாளரும் இணைந்து ஆழம் இதழுக்கு அளித்த நேர்காணல் சுட்டி கீழே. அதில் இப்படி சொல்லப்பட்டுள்ளது.

            // நாங்கள் மூன்று வகையான செயல் திட்டங்கள் வைத்திருக்கிறோம். டிரைவர்களுக்கு மாத வருமானம் ரூ.4,500 பெறுபவருக்கு தினசரி படி, அவர் ஈட்டும் வருமானத்தில் 30 விழுக்காடும், மாத வருமானம் 12,000 பெறுபவருக்கு படி 10 விழுக்காடும், மாத வருமானம் 15,000 பெறுபவருக்கு படி 5 விழுக்காடும் தருகிறோம். மாத வருமானம் 18,000 பெறுபவருக்கு தினசரி படி இல்லை. மேற்படி செயல் திட்டங்களுக்கேற்ப டிரைவர்களின் காண்டிராக்ட் காலம் முடிவடைந்த பின் அவர்களின் தகுதி, செயல்திறன்களின் அடிப்படையில் அவர்களுக்குச் சொந்தமாக ஆட்டோ கொடுத்து அவர்களையும் முதலாளி ஆக்குகிறோம். //

            மேலே உள்ளதை படித்தால், எல்லா ஆட்டோக்காரர்களும் நீங்கள் சொல்லும் தினப்படி 1000 ரூபாய் சம்பாதிப்பதில்லை என்பது எனது புரிதல். 4500 இல் இருந்து 18000 வரை பெறுகின்றனர். புரிதலில் தவறு இருந்தால் விளக்குங்கள்.

            ஆட்டோ தொழில் பற்றி விரிவாக ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரை ஒன்று முன்பு படித்தேன். தேடிப்பார்த்து, சுட்டி கிடைத்தால் கொடுக்கிறேன்.

            http://www.aazham.in/?p=3583/

          • நான் குறிப்பிட்ட நீண்ட ஆராய்ச்சி கட்டுரை கீழே. புதிய கட்டணம் நிர்ணயிக்கப் படும் முன்பு 2011 செய்யப்பட்டது. ஆகப் பெரும்பான்மையோர் 12000 ரூபாய்க்கு கீழே சம்பாதித்துக் கொண்டு இருக்கின்றனர். சென்னையின் மோசமான வாகன நெரிசலில் 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்கின்றனர். சாப்ட்வேர் ஆசாமிகளின் மன அழுத்தம் பற்றி கட்டுரைகள் படிக்கிறோம். இவர்கள் மன அழுத்தம் பற்றி எதுவும் பேசப்படுவதில்லை. பெரும்பான்மையோர் மாத வீட்டு வாடகையாக வெறும் 2000 ரூபாய் தான் செலவு செய்கின்றனர். இதற்கு என்ன வீடு கிடைக்கும், சென்னையில்? வெறும் 4% பேருக்குத்தான் ஆயுள் காப்பீடு உள்ளது. விபத்தில் அடிபட்டு செத்தால் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்? இப்படிப் பட்ட நிலையில் வாழ்பவர்களைத்தான் பணப் பேய்கள் போலவும், நேர்மை அற்றோர் என்றும் பொதுக் கருத்து கொண்டிருக்கிறோம்.

            http://chennaicityconnect.com/wp-content/uploads/2011/03/Auto-Study-Chennai.pdf

            இவர்களுக்கு நல்வாழ்வு தர வக்கற்ற சமூகத்துக்கு கூலியை நிர்ணயிக்கும் அதிகாரம் மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது?

    • From IIT Student and IBM researcher….. , There is a grate support to auto drivers.
      Really it is a grate attitude. Keep it up Veenkeeee![Venkat Chakaravarthy] [with out any reason our Indian Nobel price winner is flashing in my mind. Why?]

      //முதலில், அடிப்படை வசதிகள் பெற ஒருவனுக்கு எவ்வளவு வருமானம் தேவை என்பது நேர்மையாக கண்டறியப்பட வேண்டும்.

  14. //சாதா ஓட்டல், ஸ்பெஷல் ஓட்டல் என உண்டு. முறைப்படுத்த முடியாது. ஆட்டோ அப்படி அல்ல. எல்லோ ஆட்டோவும் ஒன்றுதான் என்றொரு கருத்து.Commodity. எனவே, ஆட்டோவை கட்டுப்படுத்த வேண்டும் என்றொரு வாதம்.//

    தவறான வாதம்.

    ஆட்டோக்கள் ஓடும் சாலைகள் வேறு வேறு, சந்துகள் வேறு வேறு, போக்கு வரத்து நெரிசல்கள் வேறு வேறு, குண்டும்குழிகள் வேறு வேறு, ஏற்ற இறக்கம் வேறு வேறு, சவாரி கிடைக்கும் வாய்ப்புகள் வேறு வேறு, இன்னும் பல பாதை நிலவரங்கள் வேறு வேறு.

  15. சரவெடி….என்கிட்டே இவ்வளவு கேள்வி கேட்கின்ற….ஒரு பொருளின் MRP ரேட் 10rs என்றால் கடைக்காரன் 15 ரூபாய் உன்னிடம் வாங்கினால் நீ “ஆமாப்பா…எல்லோரும் கொள்ளை அடிகின்றான்…நீ என்ன செய்வாய்..15ரூபா வச்சிக்கோ”என்று கொடுத்து விட்டு வருவாய் என்றால் நான் உன் வீடு தேடி வந்து உன் ஆட்டோவை ஒரு வாரத்திற்கு கழுவி கொடுகின்றேன்…..!…நீ தவறு செய்வதனால் தான் ‘மாமா’விற்கு தண்டம் அழ வேண்டியுள்ளது…நான் ஹெல்மெட் போடவில்லை என்றால் fine கட்டதான் வேண்டும்…எங்களிடம் இந்த புடுங்கு புடுங்குவதனால் தான் உன் உழைப்பும் வேறு ஒருவனால் சுரண்டபடுகின்றது……நீ எங்கள் உழைப்பை கொள்ளை அடிகின்றாய்…கத்தி…ரத்தம் இல்லாமல்.!…போலீஸ் உன்னிடம் அதிகாரத்தை வைத்து கொள்ளை அடிகின்றான்….!கால் டாக்சியில் rs.340 என்றால் மீதி பணத்தை ஒரு ரூபாய் குறைவு இல்லாமல் தருகின்றான்…போட்டு கொடு…அல்லது சில்லறை இல்லை என்று அமுக்கி கொள்ளவது போன்ற களவாணிதனத்தை செய்வதில்லை…..மும்பை சென்று பார்க்கவும்….ஆட்டோகாரன் என்றால் அவ்வளவு மரியாதை..எந்த ஆட்டோவும் ”சார் ஆட்டோ…”என்று கூவுவதை பார்க்க முடியாது……!

    • /////…நீ தவறு செய்வதனால் தான் ‘மாமா’விற்கு தண்டம் அழ வேண்டியுள்ளது…நான் ஹெல்மெட் போடவில்லை என்றால் fine கட்டதான் வேண்டும்………//// sorry sir, i m not agreeing with u u…..if u wear helmet,next “mama” ask licence…if u show it…he ask insurence……if u show it, he say ur number plate not as specification….anyway maamaa collect wat he want by saying some reason/rules/regulations….they r well trained….so not bring them for this matter…..now its not the matter…..matter is tamilnadu auto drivers collect/demand abnormal rate which is higher than any other state rates…….

      OK….NOW MR. SARVEDI….YOU TAKE FURTHER LEAD ON THIS…………

    • Hello kingsly…,

      [1]Can u tell me how much u are paying for purchasing Green and Blue color 500ml Avin Milk from stores like More ,Reliance or anywhere else? can u tell me? pls!!

    • //நீ எங்கள் உழைப்பை கொள்ளை அடிகின்றாய்…கத்தி…ரத்தம் இல்லாமல்.!…போலீஸ் உன்னிடம் அதிகாரத்தை வைத்து கொள்ளை அடிகின்றான்….!//

      What a very bad logical thinking and attitude you have!. By telling this u r supporting the scandal of police and all other gov depts.

      பதில் உண்டா…….?

  16. Dear Vinavu,when auto drivers in kerala,Mumbai.Kolkatta.hydrabad.bangalore.Delhibhuvaneswar,are charging according to meter why Chennai auto drivers are asking more?cost of living is more or less same everywhere.When NAMMA AUTO is able to do it why others don”t.Moreover their behaviour very arrogant and rude.Any CHENNAI WOMAN wd think twice before boarding AN auto.I know one young share auto Idriver ANNADURAI, he is wellknown 4 his very good behaviour, he says he gets around 15000 after all expenses.First Govt shd abolish all stands, they r the people creating all problems,

  17. ….அங்கே அவ்வளவு கொடுகின்றாய்..இங்கே இவ்வளவு கொடுகின்றாய் எங்களுக்கு கொடு என்று எந்த நியாத்தில் கேட்கின்றாய்….என் தகுதிக்கு நான் 50-70 மீல்ஸ் தான் சாப்பிட செலவு செய்ய இயலும்…நான் leela -வில் போய் உட்கார்ந்து 70ரூபா தாரேன்…அந்த கோட்டு சூட்டு ஆசாமி சாப்புடற 2500 ரூபா சாப்பாட எனக்கும் கொடு….அவன மாதிரி ஆளுங்க கிட்ட வாங்கிக்கோ எனக்கும் கொடு…என்று சொல்ல முடியுமா? mr .சரவெடி 20லட்ச ரூபா வீடு…40 லட்ச ரூபா மனை இது….விவாதத்தில் ஒவ்வாத வாக்கியம்.நேர் பதில் இல்லாது எங்கோ சுற்றுவது….!வியாபாரம் ஆட்டோவிர்ற்கு மாத்திரமல்ல தொழில் நடத்தும் அனைவருக்கும் பொருந்தும்…ஒரு நாள் அதிகபடியான வியாபாரம்….மற்றொரு நாள் மந்தம்….அது மளிகை கடை/பெட்டிக்கடை/நகைக்கடை/பள்ளி/கோடிகளில் நடக்கும் தொழில் எல்லாவற்றிலும் ஏற்றம் இறக்கம் உண்டு…!எல்லாம் சரி நாங்கள் காலையில் அலுவலகம் சென்றால் மாலை தான் வீடு திரும்ப வேண்டும்….இடையில் tea time /lunch break எல்லாத்துக்கும் டைமுக்கு தான் செய்ய வேண்டும்…1 hr permission வேண்டும் என்றால் மேலுள்ள அதிகாரத்திடம் எப்படி பேச வேண்டும் என்று ஆயிரம் முறை ஒத்திகை பார்க்க வேண்டும்….லேட்டுக்கும்/லீவுக்கும் அப்படியே…ஆனால் உங்களுக்கு எவனிடமும் permission வாங்க வேண்டாம்….எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்கு போகலாம்…நண்பர்கோடு பேசலாம்..பாட்டு கேட்க்கலாம்…சொல்ல போனால் லீவில் வேலை பார்கின்ற அனுபவம்….இன்னும் இப்படியே சொல்லலாம்.
    எங்களுக்கு மாத சம்பளம் இவ்வளவு தான் என்று fix பண்ணபட்டுளாது….but உங்களுக்கு எல்லையே இல்லை…!

    • //எங்களுக்கு மாத சம்பளம் இவ்வளவு தான் என்று fix பண்ணபட்டுளாது….but உங்களுக்கு எல்லையே இல்லை…!//

      I accept and support that the gov employee’s struggle for getting salary hike. But u r not accepting the real and needy requests of auto drivers . why?

    • //ஆனால் உங்களுக்கு எவனிடமும் permission வாங்க வேண்டாம்….எப்ப வேண்டுமானாலும் வீட்டுக்கு போகலாம்…நண்பர்கோடு பேசலாம்..பாட்டு கேட்க்கலாம்…சொல்ல போனால் லீவில் வேலை பார்கின்ற அனுபவம்….இன்னும் இப்படியே சொல்லலாம்.//

      [1]See Mr kingsly, A auto driver who is really working from 6 am to 8pm and beyond. If he work like this long hours then only he can get 10 to 20 travelers per day.

      [2]Who will feed his family if he is sitting at home,chatting with friends and hearing music?

      பதில் உண்டா…….?

  18. Venkatesan….தியேடரில் 50 ரூபா பொருளை 100 ரூபாய்க்கு விற்கின்றான்….படம் பார்க்க செல்லும் அனைவருமா அப்படி வாங்குவார்கள்…பர்சின் கணத்திற்கு ஏற்ப/தேவை எனில்/முடியும் எனில்/அவசியம் எனில் வாங்குவார்கள்…அங்கே கொடுப்பதனால் எனக்கும் கொடு…நான் குண்டு குழியில்…சந்து பொந்தில் ஓட்டுகின்றேன்..எனவே இன்னும் கொஞ்சம் போட்டு கொடு…நீ எப்படி எல்லாம் ஓட்டுகின்றயோ அதற்கு ஏற்ப மீட்டரில் காண்பிக்கும் தொகை வாங்க மறுப்பது ஏன்….?மொத்தத்தில் நியாமான பணத்தை வாங்கமாட்டேன்….அவன் அப்படி வாங்குகின்றான்…நானும் அப்படி தான் வாங்க வேண்டும்..அதற்க்கு யாரும் மறுப்பு சொல்ல கூடாது என்று தான் நினைப்பது….ஆரோக்கியமானது அல்ல.நான் உழைகின்றேன்…சும்மாவே ஒரு நாள் சுற்றுகின்றேன்…போலீஸ் வருகின்றான்…due இருகின்றது….குழந்தை படிப்பு இருக்கின்றது…ஆயாவும் கூட இருக்கின்றாள்….என் கதை முடிந்தால் என் குடும்பத்தை அரசாங்கமா கவனிக்கும்…என்று பிதற்றுவது….வெட்டி பேச்சு!….ஒரு IAS /IT/ENGG/Doctor/ மறைந்தாலும் அவன் குடும்பத்தை அரசாங்கமா சுமகின்றது.?….PF இருந்தால் ஏதோ கிடைக்கும் அதை வைத்து வாழ் நாள் முழுவது அந்த குடும்பம் சாப்பிட்டு விடுமா?…பதில் உண்டா…….?????????????????

    • //.ஒரு IAS /IT/ENGG/Doctor/ மறைந்தாலும் அவன் குடும்பத்தை அரசாங்கமா சுமகின்றது.?….PF இருந்தால் ஏதோ கிடைக்கும் அதை வைத்து வாழ் நாள் முழுவது அந்த குடும்பம் சாப்பிட்டு விடுமா?…//

      So you r accepting that like IAS /IT/ENGG/Doctor/ auto drivers are not getting PF and Pension.

      பதில் உண்டா…….???

  19. ஏர்போர்ட்டிலிருந்து கோயம்பேடு செல்ல எத்தனை கிலோமீட்டர் ? அதற்க்கு என் 500 ரூபாய்க்கு மேல் கேட்கிறார்கள் ? கேட்டால் ஒரு தடவை தானே சார் வரீங்க. நண்பர்கள் ஆட்டோகாரனுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கு அப்படின்னு புலம்பினாலும் லாபம் இருக்குரதனாலதான இன்னும் தொழிலுல இருக்குறீங்க… இன்னும் மாச சம்பளம் 5000 வாங்குற ஆட்களும் சிட்டியில இருக்காங்க அதுக்காக அவங்களுக்கு மட்டும் காச குறைச்சா வாங்கிகிறீங்க ? உழுரவனுக்கு நிலம் சொந்தம் அப்படிங்கிரமாதிரி இருந்தா நீங்க சொல்றத ஒப்புக்கலாம்… இங்க பல ஆட்டோக்கள் பினாமி பெயருள ஓடிக்கிட்டுருக்கு.. மொதல்ல அதை முறைப்படுத்துநீங்கன்ன்னா பிரச்சனையை முடிவுக்கு வரும். மற்ற மாநிலங்களை விட வாடகை ஏற்றும் அளவிற்கு தமிழகத்தில் அப்படி என்ன பிரச்சினை இருக்கிறது ?

    • //அப்படின்னு புலம்பினாலும் லாபம் இருக்குரதனாலதான இன்னும் தொழிலுல இருக்குறீங்க…

      Why do not you think about…..

      [1]“hospital fees with out any standard”,”Gold house’s fraud in the name of making and wasting charge”,”Self financing edu institutions fees structure with out following any norms” along with “auto meter issue”

      [2]Like us[gas subsidy]… are they getting any petrol subsidy for their autos?

      [3]Like us[gov employess]… are they getting any free medical insurance?

    • கட்டுரையில் குறிப்பிட்டுள்ளவாறு இவை கண்ணுக்குத் தெரியும் தவறுகள்தான்! மறுக்கவில்லை, மீட்டரைத் திருத்துவது என்பதில் மகிழ்ச்சியடையும் நடுத்தரவர்க்கம், சமூகத்தை திருத்தும் வரை விவாதித்தால் சங்கடப்படுவதேன்! இது பட்டிமன்றத் தலைப்பல்ல நாமும் உழைக்கும் வர்க்கமாக சேர்ந்து சிந்திக்கத்தான் கட்டுரை வலியுறுத்துகிறது. IAS/டாக்டர்களும், ஆட்டோக்காரர்களும் ஒன்றா? தெர்மாமீட்டரில் சூடு வைத்து அடுத்த தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் டாக்டர்களும் வண்டி மீட்டரில் சூடு வைத்து பொதுமக்களிடம் மீட்டருக்கு மேலே காசு பார்க்கும் ஆட்டோக்காரர்களையும் சமமான குற்றவாளிகள் என்று சொல்லமுடியுமா? படித்த படிப்புக்கு கண்சல்டிங் பீசே 300, 400 என வாங்கும் மருத்துவர்கள் போல, பத்திரமாக உங்களை வீடு போய் சேர்க்க ஆட்டோ பழகியதற்கு லேர்னிங் பீஸ் கேட்டால் தருவீர்களா? நாம் சொல்ல வருவது அதிக கட்டண விலையை கண்டிக்கும் அதே வேலையில், அவர்களை முறைப்படுத்தவும், அவர்களின் கோரிக்கையை பரிசீலிக்கும் ஒரு விவாதமே இல்லாமல், இதுதான் உனக்கு என்று அடாவடியாக பிக்சிங் செய்வதைத் தவிர்த்து அவர்களின் குறைகளை கேட்டு நிகழ்கால விலைவாசி உயர்வுக்கு ஏற்ற மாதிரி கட்டணம் நிர்ணயுங்கள் என்பதைத்தான்! எனக்கும் கூடத்தான் பிரச்சனை என்பவர்கள் போராடுங்கள், யார் வேண்டாம் என்றது?! உலக அநியாயம் எல்லாம் ஆண்டவன் கேட்பான், ஆட்டோக்காரன் அநியாயத்தை மட்டும் நான் கேட்பேன் என்ற நடுத்தர வர்க்கத்தின் தார்மீக எழுச்சியை சமூம் முழுவதிலும் கொஞ்சம் நீட்டிக்கச் சொல்வதே எமது வேண்டுகோள்!

      • Dear sanmugam,

        Suppose if u compared the “hospital fees with out any standard”,”Gold house’s fraud in the name of making and wasting charge”,”Self financing edu institutions fees structure with out following any norms” with auto meter issue THEN most of the question in the feed back can not be asked by our middle class justice![people].

        with regards,
        K.Senthil kumaran

  20. ////////////IAS/டாக்டர்களும், ஆட்டோக்காரர்களும் ஒன்றா? ///////////// to my knoweledge, communism /socialism says both r same………..capitalism says they r not same………….whats your confusion???

    /////////////அடாவடியாக பிக்சிங் செய்வதைத் தவிர்த்து அவர்களின் குறைகளை கேட்டு நிகழ்கால விலைவாசி உயர்வுக்கு ஏற்ற மாதிரி கட்டணம் நிர்ணயுங்கள் என்பதைத்தான்! ////////// if the metre rates / cost of living are almost same in all/other major nearby states fixed by the respective state governments, and the auto rickshaw drivers agrees and collecting money accordingly from public (including union strong kerala) ,how it is not enough & not acceptable by only tamil nadu auto unions?????

    ///////////When NAMMA AUTO is able to do it cheep as equal to govt fixed metre rate, why not by others auto’s in the same chennai city ////////////////,,,,,,,,,,,,,,, MR துரை.சண்முகம் SIR, WHATS YOUR VIEW POINT PLEASE?

    • //how it is not enough & not acceptable by only tamil nadu auto unions?????

      But The middle class people is paying the making charge and wastage change for purchasing GOLD with out any question.Why?

      • instead establish straight forward reply, you all supporters of auto’s r just making dry arguments only thorough out this comments by bringing out other professionals also without any logic………

        my point is y so much difference between tamil nadu & other states in this auto rickshaw issue ……….there in other states this same middle class not complaing this auto rikshaws………..but here only in tamilnadu its a big issue among all classes of public…..we better limit our discussions & compare auto rickshaws /meter charges between tamil nadu & other states.

      • ///////////// But The middle class people is paying the making charge and wastage change for purchasing GOLD /////////////// b’cos in all states its the practise ……..not only in tamil nadu like what our autos asking an abnormal meter rate here only

        • if u want to standardize only the auto fare then u should also think about other issues what i raised!! people are suffering from all other issues as i mentioned in my comment.

  21. durai sanmugam புரியாமல் பேசுகின்றீர்களா இல்லை நடிக்கின்றீர்களா…தெரியவில்லை!…நங்கள் கேட்பது மீட்டரில் 150 ரூபாய் காட்டினால் அதை ஏன் பெற்று கொள்ள மறுகின்றீர்கள்?….எதற்கு நான் மேலே 10…20 போட்டு கொடுக்க வேண்டும்?…..துரைக்கும் அதே பதில்…..நீங்கள் mrp ரேட்-ய் விட 1 ரூபா அதிகம் கொடுத்து வாங்குவீர்களா….இது தான் என் கேள்வி?…அதை விட்டு விட்டு பத்திரமாய் போய் சேர்கின்றான்…என்றால் பஸ் டிரைவருக்கு இறங்கும்போது தனியா 10 ரூபா கொடுத்து விட்டு வாங்கள்…சும்மா நடுத்தரம்..மிடில் தரம் என்று குழப்ப வேண்டாம்….! மற்ற கடைகளில் காட்டிலும் 2-3 ருபாய் குறைவு ஒவ்வொரு மசாலா-சோப்பு மற்றும் பல வகைகளில் குறைவு என்பதால் அரகோனத்தில் இருந்து சென்னை வந்து சரவணா ஸ்டோர்ஸ்-இல் மளிகை பொருள் வாங்கும் கூட்டமே இதற்க்கு சாட்சி. இன்னும் இதுவரை மீட்டார் போட்டு ஓட்டாத ஆட்டோகள் எத்தனை என்று தெரியுமா?சேவை பண்னுகின்றான் என்று சொல்வது ஏன் என்று புரியவில்லை?….கைல காசு கொடுத்தால் சொல்லுற இடத்திற்கு கொண்டு விடுகின்றான்..இங்கு என்ன சேவை வருகின்றது?….

    • ஐந்து நிமிடம் செலவிடும் டாக்டர் பத்து ரூபாய் தான் வாங்க வேண்டும் என நீங்கள் கட்டாயப் படுத்துவதில்லை. ஓட்டலில் பத்து ரூபாய்க்கு தோசை கொடு என சண்டை போடுவதில்லை. கேட்பதை கொடுக்கிறீர்கள். அல்லது அங்கு போவதை நிறுத்துகிறீர்கள். ஏன் ஆட்டோக்காரர் மட்டும் நீங்கள்/அரசு சொல்லும் விலைக்கு உங்களுக்கு பணிபுரிய வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்? அவரது பணிக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை அவருக்கு ஏன் மறுக்கப்படுகிறது?

      “அடிமட்ட” வேலை செய்வோர் தங்கள் சொல்படி கேட்டு, கொடுப்பதை வாங்கிக்கொண்டு சமர்த்தாக இருக்க வேண்டும் என்ற மனநிலை பலருக்கும் மனதில் பதிந்து விட்டது.

      • /////////////// கேட்பதை கொடுக்கிறீர்கள். அல்லது அங்கு போவதை நிறுத்துகிறீர்கள்………………..///////////////// EXACTLY………ITS STARTED HAPPENNING ALREADY HERE IN CHENNAI………NOWADAYS PUBLIC MOSTLY PREFARE AND TRAVEL IN SHARE AUTO / MAGIC AUTO/SMALL BUSSES/AC BUSSES FOR LONG TRIPS CHEEPLY ……….ONLY 75% AUTOS NOW PLYING ON ROAD MOSTLY……….STILL IT WILL COME DOWN FURTHER ONCE MONO /METRO ARRIVES IN CITY…
        THEREAFTER THE REASONABLE AUTOS ONLY SURVIVE …..OTHERS VANISH IN EXTERNAL COMPETITION………

    • //கைல காசு கொடுத்தால் சொல்லுற இடத்திற்கு கொண்டு விடுகின்றான்..இங்கு என்ன சேவை வருகின்றது?….//
      //எதற்கு நான் மேலே 10…20 போட்டு கொடுக்க வேண்டும்?…..

      But The middle class people is paying college capitation fees and school fees with out any question to private institutes.Why?

    • // நீங்கள் mrp ரேட்-ய் விட 1 ரூபா அதிகம் கொடுத்து வாங்குவீர்களா….இது தான் என் கேள்வி?…//

      பெரும்பாலான பொருட்களின் MRP ரேட் என்பதே ஒரு ஏமாற்று.. எல்லாச் செலவுகளையும், பெரும்பாலான வரிகளையும் அதில் ஏற்றிய பின்னும் கணிசமான லாபத்தை ஈட்டித்தருபவை.. 50 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு 100 ரூபாய் MRP பார்த்து (1 ரூபாய் கூட ‘அதிகம்’ கொடுக்காமல்!) கொடுத்து வாங்குவதை, ஆட்டோக்காரருக்கு 5, 10 கூடுதலாக கொடுக்கவேண்டியிருப்பதுடன் ஒப்பிட முடியுமா..?! ஏழைகள் குறைபட்டுக் கொள்வதில் நியாயம் உண்டு.. நடுத்தரவர்க்கதினரான நாம் இதற்கு மட்டும் கொதித்தெழுவது ஏன்..?!

    • tamil nattu auttokaraann mattum than sevaai seiyuraan………..matha state autokaran ellamm office porrapolaa jallyaa autto ottituu varaaan sir………adda neenga veraa..vivaram puriyama ivangaloda pesikittu……mullichukittu thoonguraapola act seiyura ivangullaa neengalum naanummm elluppavey muddiyaathuuuu…………YENNAA AVANGA THOONGAVEY ILLAAA

    • கிங்க்ஸ்லி……. 100% உண்மை தாங்கள் கூறியது….. தங்களின் இந்த ஒரு பதில் போதும்….சும்மான்னா மத்தவங்க நேரம் வினடிச்சு பக்கம் பக்கமா பதில் எழுதுறது விட…இதப் படிச்சா போதும்…. இங்கே பதில் தெரிவித்த அனைவர்களில் “திரு:கிங்க்ஸ்லி” உண்மை நிலைவரத்தை யாரும் புரிந்து கொள்வதாக தெரியவில்லை…..இவரின் உண்மையான பதிலே போதுமான சான்று….. “திரு:கிங்க்ஸ்லி” புரிந்தவர்கள் புரிந்துக்கொள்ளட்டும் இல்லையென்றால் உங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என் தாழ்மையான வேண்டுகோள்….

    • Kingsly,

      //பத்திரமாய் போய் சேர்கின்றான்//
      //சேவை பண்னுகின்றான் //
      //சொல்லுற இடத்திற்கு கொண்டு விடுகின்றான்.//

      ன் ன் என்று ஒருமையில் எழதுவது பேசுவது மரியாதையில்லை. மாற்றிக் கொள்ளவும். நன்றி.

      Vinavu,

      Please change such uncivilities towards the working people to civilities. It will be a worthwhile effort to bring in civility in common interaction. Thanks.

    • வர்க்கத் தமிழன்!

      Kingsly

      வந்துட்டார்யா… வந்துட்டாரு… சூனா பானா! இவர் சொல்வது போல துரை சண்முகம் ஒன்னும் புரியாமல் பேசவில்லை! ”ஆட்டோக்காரனும் ஒரு தொழிலாளி, அவனுக்கு கிலோ மீட்டருக்கு நியாயமான விலை வைக்க வேண்டும் என்றும், உலக அநியாயம் எல்லாம் ஆண்டவன் கேட்பான், ஆட்டோக்காரன் அநியாயத்தை மட்டும் நான் கேட்பேன் என்று புயல் போல் கிளம்பும் உங்களை சமூம் முழுவதிலும் கொஞ்சம் நீட்டிக்கச் சொல்வதே எமது வேண்டுகோள்!” இதற்கு அர்த்தம் புரியவில்லை போலும்! உழைக்கும் வர்க்கத்தோடு நடுத்தர வர்க்கம் இணைந்து போராடினால் அனைத்து சமுக பிரச்சனைக்கும் ஒரு தீர்வு காணமுடியும்! பாவம் Kingsly!

      அவர் சொல்வது போல மீட்டரில் 150 ரூபாய் காட்டினால் அதை ஏன் பெற்றுக் கொள்ள மறுக்கின்றீர்கள்? எதற்கு நான் மேலே 10,20 போட்டுக் கொடுக்க வேண்டும்? நல்ல கேள்வி சூனா பானா அவர்களே! ஆட்டோக்காரன் உங்கள் சொத்தையா எழுதிக் கேட்டான். தனது குடும்ப பிழைப்புக்கும் , வட்டி கட்டவும், கடன் அடைக்கவும், மேலும் ஒரு 10,20 கிடைத்தால் எதாவது கடனை அடைக்கலாம்! என கருதும் அவனையே… உங்கள் குரூரப் புத்தியால் அதிகம் கேட்கிறான்… கொள்ளையடிக்கிறான் எனக் கூறும் நீங்கள்…. முதலாளிகள் நம் தேசத்தின் வளங்களை ( தண்ணீர், இயற்கைவளங்கள், மின்சாரம், பொதுத் துறை நிறுவனங்கள், மருத்துவம்……. ) கொள்ளையடிக்கின்றனர். இதை என்றைக்காவது ‘மிடில் கிளாஸ்’ கேட்டதுண்டா? நமக்கு ஏன் வம்பு என வாலை சுருட்டிக் கொண்டதுதான் உண்டு! mrp யை விட 1ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குவீங்களா? தோ… பார் வாத்தியாரே! அந்நியன் பட அம்பி டயலாக் போல, 1ரூபாய் அதிகம் கொடுத்து வாங்குறோமா இல்லையா என்பது இல்ல இங்கு பிரச்சனை? பாவப்பட்ட ஆட்டோ ஒட்டுனர்கள் கூடுதலாக கேட்கும் 10 ம், 20ம் முதலாளிகள் நிர்ணயிக்கும் mrpயும் எப்படி ஒன்றாகும். mrp என்பது முதலாளிகளின் சுரண்டலுக்கு ‘போனசாக’ கிடைக்கும் கொள்ளையே. ஆட்டோ ஓட்டுவதில் உத்தரவாதமான வருவாய் கிடையாது. மேலும் போலீஸ், rto அடிக்கும் கொள்ளை, மழை-வெள்ளம் போன்ற தொல்லை. சந்தை பொருளாதார விதிக்கேற்ற கழுத்தறுப்பு போட்டி வேறு. சந்தை ஜனநாயகத்தின் விலை உயர்வு போன்ற நேரடி தாக்குதல்கள். mrpஐ நிர்ணயிக்கும் முதலாளிகளுக்கு அரசு அள்ளிக்கொடுக்கும் சலுகைகளும், குறைந்த விலை நிலங்களும் எத்தனை எத்தனை தெரியுமா? தெரிந்து பின் சதிராடவும்.

      சேவை பண்ணுகிறான் என்று வேறு உங்களுக்கு சந்தேகம்! சந்தேகமே வேண்டாம் ஆட்டோக்காரன் உண்மையில் சேவைதான் செய்கிறான்! சக்கரம் போல் ஓடும் வாழ்க்கையில் நாம் இயந்திரமாய் ஓடுகிறோம். நம் குழந்தைகளை பள்ளிக்கு கூட கொண்டுபோய் சேர்க்க முடியாமல் முதலாளித்துவ சுரண்டலின் பிடியில் புழுவாய் உழல்கிறோம்! இப்படியிருக்கும் நிலையில், குழந்தைகளை பத்திரமாக பள்ளிக்கும், வீட்டிற்கும் கொண்டு போய் சேர்க்கும் ஆட்டோக்காரன்! ”கைல காசு கொடுத்தால் சொல்லுற இடத்திற்கு கொண்டு வருகின்றான்…! இதில் என்ன சேவை இருக்கிறது”? மனசாட்சி இருந்தால் சிந்தியுங்கள்!

  22. My experience with Auto drivers in all my travels are relay heart touching events.

    Recently I get down from the train at mambalam railway station and planning to go to a place near Vasant and co at nort ussman road. I think it is near T.Nagar bus stand. So I like to go by walk.But do to little doubt in my mind…..
    I approached a auto driver who’s auto has a picture of ADMK leader! He asked me that there are two Vasant and co and where will u like to go?
    I told that is in T.nagar nort usman road.
    He relayed gently that it is on the way to Kodampakkam.
    Due to shortage of time I asked for rent for auto. He told me that Rs 40. I accept and travel in his auto.
    During my travel he request me that if any autaraty would ask u pls tell them that METER IS ON.
    I told him that it is not a matter but u put the meter on.
    During travel he started telling auto driver’s problems.He told me like this…!
    ” When he come back Mostly he can not get the passenger.Now police Traffic police and all other department people are interfering us and monitoring. do not mistaken ”
    When I get down the Auto I see the meter .It is showing that Rs 27.” But as I accept already I gave Rs 40.

    Now my logical questions and points are….

    [1] Who will give the auto travel fare to him when he is going back to his auto stand suppose if i am paying only Rs 27 as shown by meter reading?

    [2] In case if he is waiting for some other travelers …,Who will pay the waiting time?

    [3] Most of the auto and share auto drivers are very friendly not only with native people of Tamil Nadu and also even with migrated North Indian working class.[I have seen this

    [4]while traveling trough share auto from Maraimalai nagar to Singaperumal kovil.]

    [5] The share autos are having “stops” at any place. can we expect this kind of user friendly approach in any travel other travel??

    [6]May be…. the auto and share auto drivers are earning between Rs 300 to Rs 800 per day after all expenditures.BUT WHO WILL PAY FOR DEPRECIATION AMOUNT and REPAIRING AMOUNT FOR THEIR AUTOS?[So from their earnings the depreciation amount AND repair amount approximately RS 150 should be detected.]

    [7]The middle class people who is paying the making charge and wastage change for purchasing GOLD with out any question should think about economical problems of the lower middle class auto drivers.

    [8] May be… We can compel the auto drives for meter reading only when the government will take care of and improving the living standards of auto drivers [I mean giving fee medical insurance,low price petrol and diesel fare ,etc to auto drivers. Now a rich man and auto drivers are paying the equal amount for Petrol and diesel fare]

    [8]The middle class people who is paying college capitation fees and school fees to private institutes have no rights to blame auto drivers.

    • [1] Who will give the auto travel fare to him when he is going back to his auto stand suppose if i am paying only Rs 27 as shown by meter reading?

      THE AMOUNT OF RS 27 INCLUDES 25% OF HIS RETURN FARE AND A WAITING TIME FARE FOR 15 MIN.

      [2] In case if he is waiting for some other travelers …,Who will pay the waiting time?

      REF ANS 1

      [3] Most of the auto and share auto drivers are very friendly not only with native people of Tamil Nadu and also even with migrated North Indian working class.[I have seen this

      MOST CHENNAITIES R ALSO NOT ORIGINATED FROM CHENNAI….80% PEOPLE MIGRATED FROM OTHER STATES/DISTRICTS ONLY.

      [4]while traveling trough share auto from Maraimalai nagar to Singaperumal kovil.]

      QUESTION INCOMPLETE

      [5] The share autos are having “stops” at any place. can we expect this kind of user friendly approach in any travel other travel??

      OUR TOPIC IS ON PURELY SINGLE TRAVELLER PUBLIC AUTO RICKSHAWS WHO CHARGES ABNORMALLY , I HOPE.(share autos having a fixed rates for different destinations/ routs, which is not complained by any public/MIDDLE CLASS)

      [6]May be…. the auto and share auto drivers are earning between Rs 300 to Rs 800 per day after all expenditures.BUT WHO WILL PAY FOR DEPRECIATION AMOUNT and REPAIRING AMOUNT FOR THEIR AUTOS?[So from their earnings the depreciation amount AND repair amount approximately RS 150 should be detected.]

      KEEPING ALL DEPRICIATION/HIRE CHARGES/OWNING COST/RUNNING COST/MAINTANCE CHARGES/INCIDENTALS/INSURENCE COST., ONLY THE PRESENT METER RATE FIXED. SO ALL YOU SAID ABOVE IS INCLUDED ALREADY.

      [7]The middle class people who is paying the making charge and wastage change for purchasing GOLD with out any question should think about economical problems of the lower middle class auto drivers.

      YES THEY PAY ALL WASTAGE MAKING CHARGES B’COS ITS APPLICABLE ALL OVER INDIA UNIFORMLY AND COMMONLY BY ALL OF THE JEWELLERY DECOITS/THIEFS ….

      SO SIMILARLY ANY ONE DO ARROGANTLY ANY BUSINESS ON ALL OVER INDIA / PAN INDIA BASIS, INDIAN PUBLIC/CITIZEN NOT RAISE QUESTIONS/ARGUMENTS….BUT, IF ONE PART OF THE SAME AUTOWALA GROUP ASK MORE MONEY IN TAMILNADU ONLY THAN THE OTHER PART OF THE SAME GROUP IN OTHER STATE AUTOWALLAS , THEN PUBLIC AGGREVATE. SO TAMIL NADU AUTOS EITHER FIGHT TO RAISE OTHER STATE AUTO METER RATES AS THEY DESIRE OR THEY TO AGREE THE METER RATES APPLICABLE IN OTHER STATES AUTOS

      [8] May be… We can compel the auto drives for meter reading only when the government will take care of and improving the living standards of auto drivers [I mean giving fee medical insurance,low price petrol and diesel fare ,etc to auto drivers. Now a rich man and auto drivers are paying the equal amount for Petrol and diesel fare]

      YA SIMILARLY WE MAY COMPEL THE GOVERNMENT ,THE MLA/MPS/MINISTERS TO BE COMPESNATED FOR THEIR ELECTION EXPENSES/LOSS IN BUSINESS/BENZ CAR /BUNGALOW RUNNING EXPENSES AND SUGGESTS SALARY INCREASE TO RS 10LAKHS PER MONTH TO ALL OUR MLA/MPS/MINISTERS TO PREVENT CORRUPTIONS

      [8]The middle class people who is paying college capitation fees and school fees to private institutes have no rights to blame auto drivers.

      HERE IN COLLEGES ALSO LOT OF VARIATION IN CAPITAL FEES COLLECTION….SRM PACHAPUTHU COLLECTS RS 10L DONATION FOR B TECH….BUT VIT VISWANATHAN COLLECTS RS 7L….JPIARR COLLECTS RS 6 LAKS…..WHEREAS ANGAMUTHU COLLEGE OWNER ASKS NO DONATION….B’COS HIS WHOLE COLLEGE SEATS R NOT FILLED UP LAST YEAR….EVEN FOR GOVT FIXED RATES,NONE JOINS WITH HIM….SO BETTER SUGGEST GOVERNMENT TO COLLECT PVT COLLEGE DONATION EQUALLY /SIMILLARLY ONE ANOTHER OF RS, 5L.

      SO EVERYWHERE THE COMMUNALISM/SOCIALISM APPLIES………………..

  23. ஆட்டோ ஓட்டுவதை ஆஸ்பத்திரி மற்றும் ஓட்டல் விலையோடு compare செய்து பல கருத்துக்கள் வந்துள்ளன.
    பல தரப்பட்ட மக்களுக்கு பல தரப்பட்ட வகையில் ஆஸ்பத்திரி, ஓட்டல்கள் உள்ளன. ஒரு அப்போல்லோ ஆஸ்பத்திரி இல்லேன்னா ஒரு குப்பொலோ ஆஸ்பத்திரி இருக்கு. ஒரு சரவணாபவன் இல்லனா ஒரு கையேந்திபவன் இருக்கு.
    பணக்காரன் ஆட்டோ பக்கமே வரமாட்டான். அவன் கார்ல போயிருவான். நடுத்தரம் மற்றும் அடிதரம் மக்கள் அவசரத்துக்கு ஆட்டோ வேணும்னா அவ்ளோதான்.
    அன்றாடம் ஆட்டோ என்பதை மக்கள் அவசரத்துக்கு கூட வேணாம்னு மாறினதுக்கு யார் காரணம்? ஆட்டோ ஓட்டிகள் தான?
    இப்பவும் பல ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் விலை நிர்ணயம் செய்த பின் முதல் இருந்ததை விட அதிகம் சம்பாதிப்பதாக தான் சொல்கிறார்கள்.
    ஆனா மீட்டர் போட்டு ஓட்டினா நிறைய சவாரி போக வேண்டியிருக்கும். மொதோமாதிரி ஒன்று அல்லது இரண்டு சவாரியில் நாளுக்கான சம்பாத்தியத்தை பெற்றுவிட்டு முகாவீசம் சும்மாவே பொழுது ஓட்ட முடியாது.
    மேலும் பழைய petrol ஆட்டோ இல்லாமல் இப்போ நிறைய LPG வண்டிகள் ஓடுது.
    இப்போ நிர்ணயம் செய்த மீட்டர் கட்டணம் கட்டுபிடி ஆவலன்னு சொல்றதெல்லாம் பம்மாத்து.

  24. [1] Who will give the auto travel fare to him when he is going back to his auto stand suppose if i am paying only Rs 27 as shown by meter reading?
    திரும்பி வரும் செலவும் மீட்டர் கட்டணத்தில் அடக்கம்.

    [2] In case if he is waiting for some other travelers …,Who will pay the waiting time?
    எந்த waiting time சொல்லுதீய? ஒரு மணி நேர waiting charge Rs.42.

    [3] Most of the auto and share auto drivers are very friendly not only with native people of Tamil Nadu and also even with migrated North Indian working class.[I have seen this
    மீட்டர் திருத்தறக்கு முன்ன சென்ட்ரல் எக்மோர் கோயம்பேடுல ஆட்டோ பேரம் பேசவே பயப்படுவாக. friendship எல்லாம் கேட்ட ரேட் குடுத்தா மட்டும்தான்.

    [4]while traveling trough share auto from Maraimalai nagar to Singaperumal kovil.]
    ?
    [5] The share autos are having “stops” at any place. can we expect this kind of user friendly approach in any travel other travel??
    இது சேவ இல்ல பிரச்னை. கண்ட எடத்துல left ஓடிகறது, திடீர்னு நிறுத்தறது எல்லாம் ரோட்ல போற two wheelersகு எமன்.

    [6]May be…. the auto and share auto drivers are earning between Rs 300 to Rs 800 per day after all expenditures.BUT WHO WILL PAY FOR DEPRECIATION AMOUNT and REPAIRING AMOUNT FOR THEIR AUTOS?[So from their earnings the depreciation amount AND repair amount approximately RS 150 should be detected.]
    வாடக ஆட்டோல எது depreciation? ownerக்குதான்.
    சொந்த ஆடோனா நிறையவே சம்பாதிக்கலாம். Depreciation ஜுஜுபி.

    [7]The middle class people who is paying the making charge and wastage change for purchasing GOLD with out any question should think about economical problems of the lower middle class auto drivers.
    நகை கடை ஒன்னு இல்லனா இன்னொன்னு. எதுல கம்மியோ அதுக்கு தான் மக்கள் போவாக. ஆடோவுல ஒரு ஆட்டோ விட்டு அடுத்த ஆட்டோ கேட்டா முந்தின ஆட்டோ கேட்டதே மேல்னு இல்ல சொல்லி வெச்சு வேல பாக்கறீய.

    [8] May be… We can compel the auto drives for meter reading only when the government will take care of and improving the living standards of auto drivers [I mean giving fee medical insurance,low price petrol and diesel fare ,etc to auto drivers. Now a rich man and auto drivers are paying the equal amount for Petrol and diesel fare]
    சரி தான். முதல் படியா ஆட்டோ ஒடுனருக்கே permitனு மாத்தனும்.
    ஆட்டோ ஓட்டுனர்கள் சொந்த ஆட்டோ வாங்க குறைந்த வட்டி அல்லது வட்டியில்லாத தவணை திட்டம் தொடங்கலாம். ஆனா இதுக்கு Govt மட்டும் நம்பாம வேற வழிகளும் யோசிக்கணும்.

    [8]The middle class people who is paying college capitation fees and school fees to private institutes have no rights to blame auto drivers.
    Comparison எல்லாம் தப்பு தப்பா இருக்கே. தமிழ்நாட்டு ஆட்டோ ஓட்டுனரையும் பிற மாநில ஆட்டோ ஓட்டுனரையும் compare செய்வதை ஒத்துக்க மாற்றீய ஆனா இந்த மொட்டை தsலை – மொழங்கால் Comparison ஒத்துக்க சொல்றீய. என்னத்த சொல்ல?

  25. ஆட்டோ காரர்கள் சும்மாவது ஸ்டாண்டில் இருப்பார்கள், ஆனால் பொதுமக்கள் யாராவது அவசர தேவைக்கு குறிப்பாக “மருத்துவமனை” செல்வதற்கு என்னமாதிரி அடாவடி பிடிப்பார்கள்…..நான் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக இந்த “மனசாட்சியற்ற ஆட்டோ” ஓட்டுனர்கள்ப் பற்றித்தான் கூறுகிறேன். என் விட்டில் இருந்து கிட்டத்தட்ட 1முதல்2 , 2கிலோமீட்டர் குறைவான தொலைவு இவர்கள் கேட்பது எவ்வளவு தெரியுமா???? குறைந்தபட்சம் 100 ரூபாய் நான் சொல்வது இப்பொழுது அல்ல நேற்று நிகழ்ந்ததோ அல்ல காலம் காலமாக இவர்கள் இப்படித்தான் பொது மக்களிடம் அடாவடியாக கேட்க்கிறார்கள்… இந்த 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் அதுவும் 2/3 கிலோமீட்டர் இவர்கள் வசூலிப்பது….. இங்கே ஆட்டோ காரர்களுக்கு வக்காலத்து மற்றும் நியாயம் பேசுகின்ற தோழர்கள் ஒரு முறை அம்பத்தூர் ரயில்வே நிலையம்,அம்பத்தூர் பேருந்து நிலையம் மற்றும் அம்பத்தூர்,திருமுல்லைவாயில், அம்பத்தூர் ஒட்டிய ஓரகடம்,புதூர் மற்றும் கள்ளிக்குப்பம் மற்றும் அம்பத்தூர் எஸ்டேட், பாடி,கொரட்டூர் மற்றும் ஆவடி சுற்றப்புற இடங்களில் பயணம் செய்யட்டும், எப்படி ஆட்டோ காரர்கள் உள்ளார்கள் அவர்கள் மக்களை எப்படி நடத்துக்கின்றார்கள் என்று புரியும்…..இது எதோ பொத்தம் பொதுவாக ஆட்டோ காரர்கள் / ஓட்டுனர்களை குறைசொல்வதற்ககாக இல்லை, முடிந்தால் உண்மை நிலவரம் கண்டறிய மேலே நான் குறிப்பிட்ட பகுதிகளில் ஆட்டோவில் பயணம் செய்யுங்கள்…அவர்கள் எவ்வளவு கேட்கிறார்கள் அவர்களின் நடத்தை எப்புடி உள்ளது என்று புரியும்… சென்னை (பாடி முதல் திருநின்றவூர் அதற்கு மேலும்) இதே நிலைமைதான் …… ஆட்டோ ஓட்டுனர்கள் சரியான மீட்டர் கட்டணம் பெற்றால் இங்குள்ள கிட்டத்தட்ட 2 லட்சத்திற்கு மேற்பட்ட சாதாரண நடுத்தர மக்கள் நிம்மதி பெருமூச்சுடன் வாழ்வார்கள்… மீண்டும் பதிவு செய்ய விரும்புவது “இங்கே ஆட்டோ காரர்களுக்கு / ஓட்டுனர்களுக்கு வக்காலத்து மற்றும் நியாயம் பேசுகின்ற தோழர்கள் ஒரு முறை ” நான் மேலே குறிப்பட்ட இடங்களில் பயணம் செய்யும்போது தான் தெரியும் கிட்டத்தட்ட 30 வருடங்களா இங்குள்ள மக்கள் படும் பாடு இன்னல்கள் …

    • சமுகம் அவர்களின் கருத்துகளுக்கு நான் முழுமையாக உடன்படுகிறேன். எந்த ஒரு தொழிலும் ஏக போகமாக இருக்கும் வரை கொன்டாட்டம்தான். தற்போது எற்பட்டிருக்கும் போட்டியை சமாளிக்க (Share auto, call taxi, mini bus, city bus stands inside Railway station etc) கொஞச்ம மாற்றி யோசியுngal நண்பர்களே!
      Come out of comfort zones. Every human being wants and prays God to continue eternally with their respective comfort zones
      This is true for human in every profession! Change is must for survival.
      Create confidence and friendliness in the minds of users; then see the growth in volumes you will get and see how the business grows every hour/day/month !! atleast test for one month by charging as per meter (all of you on a given week/month) see the results and then decide.

      Manmathan

    • // திருமுல்லைவாயில்

      இரண்டு வருடங்களுக்கு முன் ஏற்பட்ட அனுபவம். திருமுல்லைவாயில் ரயில் நிலையத்திலிருந்து, தேவார பாடல் பெற்ற ஈசன் கோவிலுக்கு சென்று, அங்கு நான் கோவிலை தரிசித்து விட்டு வெளியே வரும்வரை 1/2 மணி நேரம் காத்திருந்து, மீண்டும் ரயில் நிலையம் கொண்டு வந்து விட்டார் ஓர் ஆட்டோக்காரர். நூறு ரூபாய் கேட்டார். என்னுடைய வேலைக்காக சுமார் ஒரு மணி நேரம் செலவழித்துள்ளார். அதற்கு கட்டணம் நூறு மட்டுமே. குறைவாக கேட்பதாகவே எனக்கு தோன்றியது.

  26. Vinavu,

    What is the use of moderation when you don’t correct the uncivilities towards the working people that you are supposed to represent and speak for? Please be rigourous in this aspect. Till you are sure of no uncivilities towards working people, you dont publish the comment. Debate is less important than the people’s respect.

    Thanks for your understanding.

  27. summa iruntha petrol micham savari pona selavu atharkkana kuliyoda avanga uzhaippukkana kuliyaiyim serthu kekuranga samugam avargale neenga innaikkulla multiflex theataruko shopingiko poningina anga summa niruthura bykuko,,caruko parking charg 20 thula irunthu 50 varaikum uzhaikkama vangidaranga theatar onars or dendar edukkuravanga idhukku enna solringa

  28. Kumar,
    //y so much difference between tamil nadu & other states in this auto rickshaw issue//
    I don’t know how much the difference is. But it is better to go towards lesser exploitation than towards more exploitation.

    //in other states this same middle class not complaing this auto rikshaws//
    Why would the middle class in other states complain when they have a well-oiled mechanism of exploitation in place?

    //we better limit our discussions & compare auto rickshaws /meter charges between tamil nadu & other states.//
    This post is not about the differences between states. It is on the unjust mechanism of fixing charges for autos. If you want to discuss only the difference between states you are debating in a wrong place.

  29. என்னமோ போடா சரவெடி! இந்த உலகத்து மனுஷாளை உன்னால புரிஞ்சிக்கவே முடியல! 🙂 🙂

  30. மதிப்பிற்குரிய A.B.SAN அவர்களே…. தாங்கள் கூறுவது போல சும்மா இருந்தா பெட்ரோல் மிச்சம்ன்னா
    அப்ப ஏன் வீண் வெட்டிப் பேச்சு..அப்படியே இருக்க வேண்டியது தானே??? இதுல எங்க நீங்க சொல்றமாதிரி உழைப்பு / கூலின்னு சும்மா வியாக்கினம் வேற…. நான் சொல்ல வரது இதுதான்… அப்படி உண்மையிலே உழைப்பு, கூலின்னு நீங்க சொல்றமாதிரி எல்லா நுகர்வோர் பொருட்கள் மற்றும் பொது இடங்களுக்கு பொருந்தும்…அங்க எல்லாம் நீங்க இப்படித்தான் சொல்லுவிங்களா??? உங்க வேலை காரியம் முடிந்ததும் அப்படியே போய்டுவிங்க…. அப்படியே உண்மையா ஒவ்வொருத்தரும் தினமும் அடாவடி பண்ணாம அவங்க வேலைய செஞ்சா அதுவே போதும்…நீங்க சொல்ற மாதிரி 100%ல எத்தனை சதவிதம் % நீங்க சொல்ற மாதிரி “multiflex” “theataruko shopingiko” போறது ???? சும்மா உண்மை நிலவரம் தெரியாம பொத்தம் பொதுவா பேசக்கூடாது… நாங்கள் குறிப்பிடகிறது என்னவெனில் சமுகத்தில் உள்ள 95% நடுத்தர மற்றும் சாதாரண பொது மக்களைப் பற்றி… அவர்களின் பொதுவான ஆட்டோ உபயோகிக்கும் காரணத்தை பார்த்தால் உங்களுக்கே புரிந்துவிடும் அப்பறம் இப்படி தேவை இல்லாமல் பேச மாட்டிர்கள்…
    1) மருத்துவமனைக்கு அவரச நேரங்களில் செல்வது
    2)அருகில் உள்ள பேருந்து நிறுத்தம் மற்றும் ரயில் நிலையம்
    3)வயதானவர்கள் / பெண்கள்
    4)ஏதேனும் அவரச காரணக்களுக்காக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு உரிய நேரத்தில் செல்ல வேண்டிய கட்டாயம் இதுப் போன்ற நியாமான காரணக்களுக்காக “நாம் இங்கே குறிப்பிடுவது கிட்டத்தட்ட 90% நடுத்தர மற்றும் சாதாரண பொதுமக்களைப் பற்றிதான்”…. இப்படி மேலே நான் குறிப்பட்ட சில காரணத்திற்காக நாம் ஆட்டோவை பயன் படுத்த வேண்டிய சூழ்நிலை மற்றும் கட்டாயம் ஏற்படுகிறது இந்த சந்தர்ப்பத்தை நம் ஆட்டோ ஓட்டுனர்கள் வரம்பு மீறி அடாவடியாகத் தான் பொதுமக்களிடம் பணம் பெறுகிறார்கள்…அவர்கள் எப்பொழுதும் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை முறையாக பயன்படுத்துகின்றார்களோ அன்று தான் அனைத்து பொது மக்களின் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் பிரச்சினை முடிவுக்கு வரும்…

  31. இங்கு ஆட்டோ ஓட்டுனருக்கு ஆதரவாய் கமெண்ட் செய்தவர்கள் அனைவரும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லது….நீ school fees கொடுக்குற….மொபைல் வாங்குற…நிலம் வாங்குற…டாக்டர் fees கொடுக்குற….அவனுக்கு 10 ரூபா ஏன் கொடுக்க மாட்டங்குற…..என்று விளங்காமல் பேசுபவர்கள் போல் பதிவு செய்துள்ளார்கள்….mrp ரேட் என்றால் அதற்கும் ஒரு விளக்கம்….!…நான் கேட்ட கேள்வி இது தான்….ஏன் 6
    மும்பை மும்பையில் போல் உங்களால் இங்கும் மீட்டார் கட்டணத்தை ஏற்று கொள்ளவில்லை….அடாவடி தான் காரணமா?….இதே சென்னையில் 10 வருடத்திற்கு முன் 5 km தூரம் உள்ள திருவான்மியூர் to அடையாறு 100 ரூபாய் வாங்கினவன்…..அதே நாளில் மும்பையில் 12 ரூபா தன 5 kms -க்கு கொடுத்தேன்….நான் முன்பே சொன்னது போல் ‘சார் ஆட்டோ’ என்று இங்கு மட்டும் தான் கூவுகின்றான்….மும்பை ஸ்டேஷன் விட்டு வெளியே வந்து பாருங்கள்…இந்த dialogue யாரவது சொல்கின்றார்களா என்று….!…இங்கே பதிவிட்டவர்கள் அனைவருமே ஆட்டோவில் பேரம் பேசாமல் ஏறி…சொன்ன பணத்தை கொடுபவர்களா? ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு செல்ல என்னிடம் 100…இன்னொருவனிடம் 150..இன்னொருவனிடம் 75….இப்படி செய்வது இந்த தொழில் மட்டுமே….அதனால் தான் கட்டண முறைமையை வேண்டும் என்று சொல்வது என்ன தவறு.
    டாக்டர் தொழிலும் ஆட்டோ தொழிலும் ஒன்றா…?கைராசி டாக்டர் எனில் எவ்வளவு நேரம் என்றாலும்..எவ்வளவு என்றாலும் கொடு தான் வருவோம்…ஏன்?…call taxi & share auto வெற்றி பெற்றது இவர்களின் அடாவடி…நியாமற்ற rate என்பதால் தான்சென்ட்ரல்,எக்மோர்…காலை நேரம் சென்று பாருங்கள்..ஆட்டோகரன் ஒருத்தனுக்கு ஒருத்தன் அடித்து கொள்வான் சவாரிக்காக…என்னென்றால் நியாமற்ற கூலியை ஏற்றி இறக்கி கேட்பதனால்…!அதனால் தான் வேண்டும் முறை படுத்தபட்ட கட்டணம்.

    • ரொம்ப சரியாச் சொன்னீங்க சார். இந்த ஆட்டோக்காரனைப் புடிச்சி ஜெயில்ல போடுங்க சார்! என்ன ஆட்டம் பாருங்க

  32. பொத்தாம் பொதுவாக சொல்லலை சமுகம் அவர்களே நீங்கெள்ளா ஆட்டோக்காரங்ககிட்டயிம்,தள்ளூவண்டி,தரைக்கடை வியாபாரிங்க்கிட்ட தான் உங்க பேரம் பேசுர திரமைய காட்டுவிங்க….அவங்க 5,10 அதிகமா வாங்கிட்டாங்கனா என்னமோ உலகமே இரண்டாயிட்ட மாதிரி பேசுவிங்க ஆனா ரிலையன்ஷ்,பிக் பசார் இன்னும் பல பெரிய கடைகளூக்கு போனிங்காகானா அந்த கடை முதலாளீ என்ன விலைய லேபில ஒட்டியிருக்கனோ அந்த விலைய கொடுத்து வாய மூடிட்டு வாங்கிட்டு வந்துடுரிங்க அங்க உங்க பேரம் பேசுர திரமைய காட்ட மாட்ரிங்க முதலாளீ கோடிகோடியா கொல்லை அடிச்சினு போரான்…………

  33. பாஸ் நீங்க பத்து நாள்களூக்கு ஆட்டோ ஓட்டுனர் கூட போய் பாருங்க அப்போ தெரியிம் அவங்களோட கஷ்டம் என்னனு..கிங்ஸ்லி அவர்களே……

  34. ….பதிவின் கருத்துக்கு சமந்தம் இல்லாது கருத்து கூறியவர்களுக்கு….!மும்பையும் இந்தியாவில் தான் உள்ளது…பெட்ரோல் டீசல் விலை ஏறினால் அவர்களுக்கும் ஏறும்….மும்பை ஆட்டோகாரனுக்கும் குடும்பம் குட்டி ஆயா,school fees,medical,house rent…etc..செலவுகள் உண்டு…..பொது மக்கள் ஆட்டோ ஓட்டுனரிடம் தகராறு செய்வதில்லை…இன்னும் நிறைய சொல்லலாம்…! முன்பு சென்னை central,airport,egmore -இல் மஞ்சள் நிறத்தில் இருந்த டாக்ஸி -களை இப்போது காண முடிவதில்லை…காரணம் தொழில் நேர்மை இல்லாது…அடாவடி…!இதே நிலைமை ஆட்டோ தொழிலுக்கும் நேர வேண்டாமெனில் முறைபடுத்த பட்ட கட்டணத்தை பெற்றால் போதும்.!இப்போதே நிறைய பேர் கால் டாக்ஸி-க்கு மாறிவிட்டனர்….நீங்கள் மாறவில்லை என்றால் நாங்கள் மாறிகொள்வோம்….!…இனி என் பதிவின் கருத்துக்கு முரணாய் பேசும் அன்பர்கள் அனைவருக்கும், இங்கு உள்ள ஆட்டோ ஓட்டுனருக்கு support செய்பவர்கள் மும்பைக்கு ஒரு தடவை சென்று ஆட்டோவில் பயணித்து பின் கருத்து வைக்கவும்….நிறைவு செய்கின்றேன்.

    • Mumbai is at least 3 times more thickly populated than Chennai. The autos of Mumbai can hope for continuous supply of clients, resulting in no loss of time and miles without clients. Does this explain you the difference?

Leave a Reply to varkatamizhan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க