
வரலாற்றுச் சுவடுகளில் நந்தனார்
“மாடு தின்னும் புலையா உனக்கு மார்கழி திருநாளோ
ஆடு தின்னும் புலையா உனக்கு ஆனி திருமஞ்சனமோ”
“பார்ப்பார தெய்வமது பலிக்காது பறையரைக்
காப்பாற்ற மாட்டாது கைவிடுவீரென்றார்”
– நந்தனார்சரித்திர கீர்த்தனைகள்
“திருநாளைப் போவார் தொழுததால் புகழ் பெற்ற தில்லை”
– வள்ளலார்
உண்மைச் சமய உணர்வுள்ள மெய்யடியார்க்குள்ளே உயர்சாதி, புற சாதி எனும் வேற்றுமைகள், எதிர் நிற்க வலிமையற்றவை என்பதற்கு நந்தனார் கதை எடுத்துக்காட்டாக உள்ளது.
– டாக்டர் ராதா கிருஷ்ணன்
“தீண்டப்படாதோரிடையே பிறந்து தமது பக்தியாலும், ஒழுக்க நலன்களாலும் அனைவரின் பெருமதிப்பை பெற்று புகழ் மிக்க செல்வர்களாக திகழ்ந்த நந்தனார், ரவிதாசர், சோகாமேளர் ஆகிய மூவன் நினைவுக்கு காணிக்கையாக்குகிறேன்.
– தீண்டப்படாதவர் யார் ? என்ற நூலில் டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்
சுவாமி சகஜாநந்தர் சிதம்பரத்தில் நந்தனார் பள்ளியையும், நந்தனார் மடத்தையும், கோயிலையும் நிறுவினார்.
“1935-ல் சிதம்பரம் நடராசர் கோவில் தெற்கு சன்னதியில் கும்பிடும் கோலத்தில் ஆளுயரக் கற்சிலையாக நந்தனார் சிலை வழிபாட்டில் இருந்தது”.
-பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன், முன்னாள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை.
“தெற்கு சுவரோரமாக உள்ள நந்தனார் உருவத்துக்கு அருகில் இருந்து பாடிக் கொண்டிருப்பார். நடராஜ மூர்த்திக்கு நேரே அம்மூர்த்தியை தரிசித்த வண்ணமாக அத்திருவுருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. அவ்வுருவத்தின் கையில் கடப்பாரையும், தோளில் மண் வெட்டியும் உள்ளன. பாரதியார், நந்தனாருடைய சிறந்த பக்தியை நினைந்து நினைந்து உருகுவதற்கு அந்த உருவம் ஒரு தூண்டுகோலாக இருந்தது”
– நந்தனார் சரித்திர கீர்த்தனைகளை இயற்றிய கோபாலகிருஷ்ண பாரதியாரை பற்றி டாக்டர் உ.வே.சா.
- தில்லைச் சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்கினோம்…
- தீட்சிதப் பார்ப்பனர்களிடமிருந்து கோவிலை மீட்டோம்…
- தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
- தெற்கு வாயில் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம் வாரீர் ! ..
டிசம்பர் – 25 வெண்மணி தியாகிகளின்
நினைவை நெஞ்சிலேந்துவோம் !
சிதம்பரம் நடராசர் கோவிலில்
நமது முப்பாட்டன் நந்தனார் நுழைந்த
தெற்கு வாயிலை அடைத்து
தீட்சிதர்கள் எழுப்பியிருக்கும்
தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிவோம் !
ஆர்ப்பாட்டம் – முற்றுகை
நாள் : 25-12-13 புதன், காலை 10-00 மணி
இடம் : காந்தி சிலை, சிதம்பரம்
- தெற்கு சன்னதியில் இருந்து தீண்டாமையின் காரணமாக
தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் ! - தில்லைக் கோவிலை தீட்சிதர்கள் கொள்ளையடிக்க, மீண்டும் கைப்பற்ற அனுமதியோம் !
- சிதம்பரம் நடராசர்கோவிலில் தமிழ் மக்களின் உரிமைக்கும் தமிழ் வழிபாட்டிற்கும் குரல் கொடுப்போம் !
[போஸ்டர்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
இவண்
விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கடலூர், விழுப்புரம், புதுச்சேரி.
தொடர்பு – 9965097801, 9791776709, 9597789801
புரட்சியாளர் அம்பேத்கர் கொள்கைகளும், போராட்டங்களும், செயல்பாடுகளும் தீண்டாமைக்கு எதிரானவை, அடிமை முறைக்கு எதிரானவை. எங்கெல்லாம் உரிமை மறுக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் அதை மீட்டெடுக்கும் ஆயுதங்களாக அவை அமைந்தன. இத்தகைய கொடுமைக்கு அடிப்படைக் காரணம் சாதியம். இது ஒழிய வேண்டும் என்று முழங்கினார். இந்தச் சாதியம் ஒழிய அதன் ஆணிவேரான இந்து மதம் ஒழிக்கப்பட வேண்டும்.
டாடி……….! எனக்கு ஒரு டவுட்டு….? டாடி……….! எனக்கு ஒரு டவுட்டு….?
……………………………………………………………………..
சன் : டாடி டாடி நாமெல்லாம் எப்படி டாடி இந்த பூமிக்கு வந்தோம்…?
டாடி : நம்மல்ல கடவுள் தாண்ட படைச்சாரு…
சன் : அப்போ நாம எல்லோரும் கடவுளின் பிள்ளை தானே டாடி… கடவுளுக்கு முன்னாடி நாம எல்லோரும் சமம் தானே டாடி?
டாடி : ஆமா… சன் :
டாடி……….! எனக்கு ஒரு டவுட்டு….?
டாடி : என்ன…?
சன் : நாம எல்லோரும் கடவுளின் பிள்ளைனா, அர்ச்சகராகும் உரிமை பார்பானுக்கு மட்டும் ஏன் டாடி…? சொல்லுங்க டாடி… டாடி : ….!?
“முந்தி பிறந்தவன் நான்/முதல் பூணூல் தரித்தவன் நான்/சங்குப் பறையன் நான்/சாதியில் மூத்தவன் நான்”/-பூசை செய்வதில் முதல் உரிமை யாருக்கு? பார்ப்பனருக்கா?பறையருக்கா?
நான் நாளை சிதம்பரம் செல்கின்றேன்.தாங்கள் வருவிர்களா ?
//தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
தெற்கு வாயில் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம் வாரீர் ! ..//
நான் வர்ரேன்ணே அந்த கூட்டத்துல உங்கள எப்படி கண்டுபிடிக்குறதுண்ணே? கூட்டத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாம தனியா இங்கிலிஸ்ல பேசிகிட்டு நிப்பீங்களா? அதுதான் நீங்களா? இல்ல ஏ.சி.அறையில உக்காந்துதான் உங்க புரட்சியே நடக்குதா?
நீங்கள் என்னை ஏன் அங்கு பார்க்க வேண்டும் ?
நாம் அங்கு சென்று நம் நோக்கதிற்காக போராடினாலே போதுமே !
[1]தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
[2]தெற்கு வாயில் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம் வாரீர்
//நான் வர்ரேன்ணே அந்த கூட்டத்துல உங்கள எப்படி கண்டுபிடிக்குறதுண்ணே? கூட்டத்துக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லாம தனியா இங்கிலிஸ்ல பேசிகிட்டு நிப்பீங்களா? அதுதான் நீங்களா? இல்ல ஏ.சி.அறையில உக்காந்துதான் உங்க புரட்சியே நடக்குதா?//
திரு.கி.செந்தில் குமரன் அவர்களே!நீங்கள் முதலில் கேலியாகதான் என்னை சிதம்பரத்திற்கு அழைத்தீர்கள்,என் பதில் பின்னுட்டத்தை பார்த்துவிட்டு உண்மையாக அழைத்ததை போல் பாசாங்கு செய்கிறிர்கள் பராவாயில்லை விடுங்கள்.எனது கருத்துக்கு நான் எப்பொழுதும் உண்மையாக இருப்பவன்.நன்றி.
“யார் குத்தினாலும் அரிசியானால் சரி”, தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட வேண்டும். அத்துடன் நந்தனார் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு அதே வாயிலூடாகச் சென்று, சிற்றம்பல மேடையிலேறி ஆடவல்லானைத் தரிசிக்கச் செய்ய வேண்டும். இது உலகத்தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டிய மானப்பிரச்சனை.
http://viyaasan.blogspot.ca/2013/12/blog-post_15.html
நன்றி வியாசன்.நான் நாளை சிதம்பரம் செல்கின்றேன். தாங்கள் வருவிர்களா ?
//இது உலகத்தமிழர்கள் அனைவரும் ஆதரவளிக்க வேண்டிய மானப்பிரச்சனை.//
//நன்றி வியாசன்.நான் நாளை சிதம்பரம் செல்கின்றேன்.//
அண்ணே! குமரன் அண்ணே! வேண்டாம் அண்ணா இந்த விபரீத ஆசை. இங்கேயே எல்லோரையும் குழப்புகிறீர்கள். அங்கு நீங்கள் போய் நிலைமையை இன்னும் மோசமாக்கி விடலாம். அதனால் நீங்கள் அங்கே போகாமல், போராடுபவர்களுக்கு பின்னணியில் இருந்து உங்களின் முழு ஆதரவையும் கொடுக்க வேண்டுமென்பது என்னுடைய அன்பான வேண்டுகோள். 🙂
திருப்புங்கூர் நந்தனை பொண்ணார்மேனியனாக
சுட்டுப் பொசுக்கிய தீட்சதர்களை இன்னமும் நாம்
சகித்துக் கொண்டிருப்பது,நமது பலவீனம்
நான் நாளை சிதம்பரம் செல்கின்றேன்.தாங்கள் வருவிர்களா ?
[1]தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
[2]தெற்கு வாயில் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம் வாரீர்
நான் நாளை சிதம்பரம் செல்கின்றேன்.தாங்கள் வருவிர்களா ?
[1]தீட்சிதர்களால் அகற்றப்பட்ட நந்தனார் சிலையை மீண்டும் நிறுவுவோம் !
[2]தெற்கு வாயில் தீண்டாமைச் சுவரை அகற்றுவோம் வாரீர்